Sunday, January 17, 2016

புலிய பாத்து பூனை ஏன் சூடு போட்டுகிச்சு?

பெற்றோர் சொல்
பெரியோர் சொல் பின்பற்றி நடந்தால் சனீஸ்வரன் உன்னை நெருங்க யோசிப்பான்


=============

2 உன் குடும்பத்துடன் இருக்க செலவிடப்படும் நேரம் நிம்மதிக்கணக்கில் வரவு வைக்கப்படும்


=============

3 ஒரு அஜித் ரசிகன் ஒரு விஜய் ரசிகையைக்காதலித்தால் அதுவும் ஒரு தலைக்காதல் பிரிவில் வரும்.பிரிவு வரும்

==========

4 பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 3 டூ 5 ,அது தான் படைப்பாளிகளுக்கான நல்ல நேரம். # மழலை,கவிதை,கதை


============

5 அதிகாலையில் எந்நேரத்தில் நீ எழுந்துகொண்டாலும் அது நல்ல நேரம் தான்.


=============


6 மனைவி சொல்லே மந்திரம் என்று நாம் நினைப்பதாய் மனைவியை நம்ப வைப்பதே கூட்டுக்குடும்ப வாழ்வில் நாம் பிழைக்கும் தந்திரம்"


============

7 இருக்கின்ற பணியில் பிரச்சனை வந்தால் பணியிடம் மாற்றாதீர்.எல்லாக்கோயில்களிலும் சனீஸ்வரன் உண்டு.எல்லா கம்பெனியிலும் மேனேஜர் உண்டு


============

8 மஞ்சு வை.விரட்டி விரட்டி லவ் பண்ண ஒரு அரிய வாய்ப்பு.மஞ்சுளாவோட அப்பா கேட்டாக்கூட ம.அரசே மஞ்சு விரட்டுக்கு அனுமதி தந்தாச்சுனு சொல்லலாம்்



============



9 ஒரு மனைவிக்கு நல்ல கணவனா இருக்க முடியாத பல ஆண்கள் தன் குழந்தைக்கு நல்ல அப்பாவாக இருக்கத்தவறியதே இல்லை




==============



10 நேரில் வெளிப்படுத்த முடியாத உன் மீதான என் அன்பு கடிதம் எழுதும்போது முழுமையாக.வெளிப்பட்டு விடுகிறது.அதுதான் எழுத்தின் வலிமை.




===============



11 ஒரு படைப்பாளியின் எல்லாப்படைப்புகளும் மிகச்சிறந்த படைப்பு ஆகிவிடாது.படைப்பாளியின் பலவீனமும் அதுதான்.படைப்பின் பலமும் அதுதான்



================



12 மலையாள ஹீரோ பிருத்விராஜ் இளைய தளபதி விஜய்-ன் தீவிர ரசிகர்



பிருத்விராஜ்-ன் பொங்கல் ரிலீஸ் படம் = பாவாடை

# இரண்டும் வெறு வேறு தகவல்கள்


==================

13  எந்த ஃபிகரையும்  நம்ம கைக்கு ராக்கி கட்ட விடக்கூடாது என்பதே நம்ம முக்கிய வை”ராக்கி”யம்


====================


14  தலைவரே! உங்க பேருக்குப்பக்கத்துல 4 செமீ-னு போட்டிருக்கே? எதுனா குறியீடா?

யோவ், FOR CM என்பதன் சுருக் = 4CM


==================


15 என்ன பாலோ பண்றவங்க எல்லாரும் அதிகம் நைட்ல தான் பாலோ பண்றாங்க ,ஏன்?

மேடம், அப்போ நைட் வாட்ச்மேன் -கதான் உங்க மேக்சிமம் ஃபாலோயர்ஸ்



====================


16  முத நாள் ஒத்தைப்படை நெம்பர் பிளேட் கார், அடுத்த நாள் இரட்டைப்படைக்கார்,இதான் சட்டம்

அப்போ செக்ண்ட் ஷோ போனா காரை எடுக்கவே முடியாதே?

===============


17 திருடனைப்பத்தி தகவல் கிடைச்சா உடனே போலீசுக்கு தகவல் கொடுங்க.


கொடுத்தா?


மாமூல் கொடுக்காம டபாய்ச்சவனை முட்டிக்கு முட்டி தட்டி வசூல் பண்வாங்க

================


18 நாங்க எல்லாம் பொண்ணைப்பார்த்தா மண்ணைப்பார்ப்போர் சங்கம்.
ஓஹோ அப்போ பொண்ணோட அம்மாவைப்பார்த்தா பாறாங்கல்லைப்பார்ப்பீங்களா?



===============


19 சார் .நீங்க கதை கவிதை எழுதுவீங்களாமே?
ஆமா.குடுத்தா பாத்து எழுதுவேன்



==================


20 புலிய பாத்து பூனை சூடு
போட்டுகிச்சாம். ஏன்?
இனிமே இப்டி மொக்கைப்படத்தைப்பார்க்கக்கூடாதுன்னுதான்்



==================

0 comments: