2017ம் ஆண்டு கோவையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்துத்திரைக்கதை அமைக்கப்பட்ட படம்.9/1/2026 அன்று திரை அரங்கு களில் வெளியான இந்தப்படம் இப்போது 2/5/2026 முதல் சிம்ப்ளி சவுத் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகியும்,தோழி ஜெனியும் பள்ளித்தோழிகள்.நீட் தேர்வு எழுதி விட்டு ரிசல்ட்டுக்க்சகக்காத்திருக்கி
ஒரு நாள் ஜெனி வீட்டில் பெற்றோர் இல்லாத ஒரு இரவில் தன் நண்பனுக்கு போன் செய்து வீட்டுக்கு வரச்சொல்கிறாள்.நண்பன் வீட்டுக்கு வந்து கதவைத்தட்ட ஜெனி கதவைத்திறக்கவில்லை.
போலீஸ் வந்து செக் செய்ததில் ஜெனி யாரோ ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறாள்.
போலீஸ் விசாரிக்கிறது.ஜெனியின் நண்பர்கள் ,தோழிகள் அனைவரையும் விசாரித்தும். தடயம் எதுவும் கிடைக்கவில்லை.
அந்த கேஸ் அப்படியே நிலுவையில் விட்டு விடுகிறது போலீஸ்.
நாயகி மருத்துவக்கல்லூரி மாணவி ஆக வேண்டியவள் ,நீட் தேர்வில் வெற்றி பெற்றும் ஆகாமல் சட்டப்படிப்புப்படித்து வக்கீல் ஆகிறாள்
ஜெனி கொலை செய்யப்பட்டு 5 வருடங்கள் கழித்து கோர்ட்டில் இந்தக்கேஸ் பற்றிப்புகார் தருகிறார்.
கோர்ட் ஆர்டரின்படி இந்தக்கேஸ் தூசு தட்டி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.
முதல் பாதி இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஆகவும் ,பின் பாதி கோர்ட் ரூம் டிராமாவாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.
நாயகி ஆக ,வக்கீல் ஆக சந்திரா அனில் திறம் பட நடித்திருக்கிறார்.ஓப்பனிங்க் சீனில் ஜெனியுடன் தோழி ஆக வருவது,போலீஸ் விசாரணையை எதிர்கொளவது ஆகியவற்றில் பயந்த சுபாவம் கொண்டவர் ஆகவும்,பின் பாதியில் வக்கீல் ஆக கோர்ட்டில் வாதிடும்போது பெண் புலி ஆக ஆக்ரோசமாகவும் மாறுபட்ட இரு வித நடிப்பை வழங்கி இருக்கிறார்.
ஜெனி ஆக ஆஷிகா அசோகன் கெஸ்ட் ரோலில் வருகிறார்.அழகு முகம்.நடிக்க அதிக வாய்ப்பில்லை.
லேடி போலீஸ் ஆபீசர் ஆஜ கே எஸ் ஐஸ்வர்யா மிடுக்குடன் நடித்திருக்கிறார்.
ஜட்ஜ் ஆக வரும் கடலோரக்கவிதைகள் ரேகாவுக்கு ஓவர் மேக்கப்.குறைத்திருக்கலாம்.
வக்கீல் ஆக நிழல்கள் ரவி சும்மா வந்து போகிறார்.
நாயகியின் அப்பாவாக ,போலீஸ் கமிஷனர் ஆக ஹரீஷ் பெராடி அலடிக்கொள்ளாமல் அளவாய் நடித்திருக்கிறார்.
சைக்கோக்கில்லர் ஆக வரும் சினன் கெட்டப் தான் மிரட்டுகிறதே தவிர நடிப்பில் பெரிய அளவில் மிரட்டவில்லை.
இது ஒரு லோ பட்ஜெட் படம் என்பதால் ஒளிப்பதிவு,பின்னணி இசை ,எடிட்டிங் அனைத்தும் பிரமாதம் லெவல் எல்லாம் இல்லை. 2 பாடல்களும் சுமார் ரகமே.
திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரியான்
சபாஷ் டைரக்டர்
1 ஓப்பனிஙகில் நடக்கும் கொலைக்குப்பின் இடை வேளை வரை போலீஸ் விசாரணை பரபரப்பு கச்சிதம்
2 தனிமையில் இருக்கும் பெண்ணை டார்கெட் பண்ணும் சைக்கோ வில்லன் தன் வேலை முடிந்ததும் ஒரு சின்ன அடிதடிக்கேசில் தானாக முன் வந்து மாட்டிக்கொண்டு ஜெயிலுக்குப்போகும் ஐடியா புதுசு
ரசித்த வசனங்கள்
1 பொதுவா ஒரு பெரிய தப்பு பண்ணியதும் போலீஸ்ல மாட்டிக்காம இருக்க ஒரு சின்னத்தப்பு பண்ணிட்டு ஜெயிலுக்குப்போயிடுவேன்.ஏன்னா போலீஸ் ஜெயிலில் குற்றவாளியைத்தேடாது.
2 பெண்களின் உடை கவனத்தை ஈர்க்காத விதமாய் இருக்கனும்
3 பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக்கண்காணிக்கனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கோர்ட்டில் ஜட்ஜ் வக்கீலைப்பாராட்டியதும் மற்ற வக்கீல்கள் கை தட்டிப்பாராட்டுவது எல்லாம் ஓவர்.
2 சைக்கோக்கொலைகாரன் பிடிபட்டு போலீசால் ஜட்ஜ் முன் ஆஜர்படுத்தப்படும்போது ஜட்ஜ் கொலைகாரனிடம் "ஏம்ப்பா ,இந்த மாதிரி எல்லாம் செஞ்சே?எனக்கேட்பதும் செயற்கை
3 சைக்கோ வில்லனைக்கண்டுபிடிக்க போலீஸ் எந்த முயற்சியும் எடுக்காதது ஏனோ?
4 போலீஸ் அடிதடி விசாரணை எதுவும் இன்றி சைக்கோக்கொலைகாரன் தன் குற்றஙகளை வரிசையாக ஒப்பிப்பதும் செயற்கை
5 கோர்ட் காட்சிகள் ஓக்கே ரகம் தான்.பொறி பறக்கும் வசனங்கள் மிஸ்சிங்க்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் கோர்ட் ரூம் டிராமா என்ற வகையில் பார்க்கலாம்.சுமார் ரகம் தான் .ரேட்டிங் 2/5