7/7/2026 முதல் கேரளத்திரையரங்குகளில் வெளியாகி பி,சி செண்ட்டர்களில் ஹிட் ஆன இந்த லோ பட்ஜெட் படம் இப்போது அமேசான் பிரைம்,சிம்ப்ளி சவுத் ஆகிய இரு ஓடிடி தளங்களில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.
அதிதி பாலன் நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் ,2017ம் ஆண்டு வெளியான சமூக விழிப்புணர்வுப்படமான அரூபி என்ற தமிழ்ப்படத்தின் கதைக்கும் ,இந்த மலையாளப்படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை.இரண்டும் வேறு வேறு கதைகள்.
ஸ்பாய்லர் அலெர்ட்
மெயின் கதைக்குப்போகும் முன் நாயகன் சிறுவனாக இருந்தபோது அம்மா சொன்ன ஒரு வட்டார வழக்குக்கதையைப்பார்ப்போம்.இது மாதிரி கதைகள் பல கிராமங்களில் சொல்லப்படுவதுண்டு.நிஜமாகவே நடந்த கதையா?புனைவுக்கதையா?தெரியாது. ஆனால் சுவராஸ்யமாக இருக்கும்.இந்தக்கதை படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை விரிவாகப்பார்த்து விடுவோம்.
180 வருடங்களுக்கு முன் நடந்ததாக சொல்லப்படும் கதை இது.பத்மினி என்று ஒரு பேரழகி இருந்தாள்.அவளுக்கு ஒரு காதலனும் இருந்தான்.ஒரு முறைப்பையனும் இருந்தான்.பத்மினியின் காதல் விவகாரம் முறைப்பையனுக்குப்பிடிக்கவில்லை .காதலனுடன் பத்மினி ஊர் சுற்றுவதைப்பார்த்துக்கடுங்கோ பம் கொண்டு பலமுறை அவளைக்கண்டித்திருக்கிறான்.ஆனா ல் பத்மினி அவனை சட்டை செய்யவில்லை.
பொறுத்துப்பொறுத்துப்பார்த்த முறைப்பையன் ஒரு நாள் பத்மினியை பலாத்காரமாக அடைய முயன்று தோற்கிறான்.இந்தக்களேபரத்தில் பத்மினியை அவன் கொலை செய்து விடுகிறான்.
கன்னி கழியாமலேயே இறந்து விட்ட பத்மினி பேயாக மாறி அந்த ஏரியாவில் தனியாக இரவில் சுற்றும் இளைஞர்களை ஒவ்வொருவராக பலாத்காரமாக உறவு கொண்டு கொன்று விடுகிறது.
இதனால் கலவரம் அடைந்த ஊர் மக்கள் ஒரு சாமியார் துணையுடன் பத்மினிப்பேயை ஒரு சாமி சிலைக்குள் அடக்கி ஒரு பெட்டியில் வைத்துப்பூட்டி விடுகிறார்கள்.பத்மினிப்பேய் வெளியே வந்தால் ஆண்களுக்கு மீண்டும் ஆபத்து வரலாம்.
இது தான் நாயகனின் அம்மா நாயகனுக்கு சொன்ன கதை.
இப்போது நாயகன் வளர்ந்து விட்டான்.ஒரு கம்பெனியில் முக்கியப்பொறுப்பில் இருக்கிறான்.சக ஊழியரைக்காதலிக்கிறான்.காதலி தான் படத்தின் நாயகி
மயக்கம் என்ன படத்தில் தனுஷ் க்கு மண்டைக்குள் ஒரு குரல் கேட்குமே?பை போலார் டிஸ் ஆர்டர் என்று டாக்டர் சொல்வார்களே?மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா எழுதிய நில்லுங்கள் ராஜாவே நாவலில் நாயகனின் மண்டைக்குள் ஒரு குரல் கேட்குமே? அது போல் நாயகனுக்கு அடிக்கடி மண்டைக்குள் அம்மா சொன்ன சில விஷயங்கள் எதிரொலிக்கிறது.இதனால் நாயகன் ரொம்ப டிஸ்டர்ப் ஆகிறான்.நாயகியுடன் சரியாகப்பேசுவது இல்லை.
இரண்டு திருடர்கள் தெரியாத்தனமாக பெட்டிக்குள் ,சிலைக்குள் இருக்கும் பத்மினிப்பேயை ரிலீஸ் செய்து விடுகிறார்கள்.
ஒரு முறை நாயகன் நாயகியிடம் இவள் தான் அந்த பத்மினி என அறிமுகம் செய்து வைக்கிறான். ஆனால் அவன் அருகில் யாரும் இல்லை.இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.
நாயகனாக வைசாக் ரவி கச்சிதமாக நடித்திருக்கிறார்.குழப்பமான மன நிலையைப்பிரதிபலிக்கிறார்.
நாயகியாக நேகா சாவ்லா திறம்பட நடித்திருக்கிறார்.காதகன் தன்னைக்கண்டு கொள்வதில்லையே என ஆதங்கப்படுவது கச்சிதம்.
மெயின் கேரக்டர்கள் போக சாக்ஷி படாலா,ஜாய் மேத்யூ ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
கோபி சுந்தர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசையில் இன்னமுமே மிரட்டி இருக்கலாம்.
ஒளிப்பதிவு ,எடிட்டிங் ,சவுண்ட் டிசைனிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கச்சிதம்.கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அபிலாஷ் வாரியர்.
சபாஷ் டைரக்டர்
1 ஓப்பனிங்கில் வரும் அந்த பத்மினிப்பேய்க்கதையை அனிமேஷனில் சொன்ன விதம் அருமை.மொத்தப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை விட பத்மினிப்பேய் போர்சன் நன்கு மனதில் பதிந்தது.
2. லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் போஸ்டர் டிசைன் ,ஸ்டில்ஸ் எல்லாம் ரிச்சாக இருந்தன.
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம்.ஆனால் அது சிலருக்குப்புரியாமல் போகலாம் குடைக்குள் மழை ,ராட்சசன் ,மயக்கம் என்ன? ஆகிய படங்கள் பார்த்திருந்தால் எளிதில் புரியும்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 அனிமேஷனில் வரும் முதல் 20 நிமிடக்கதை ,க்ளைமாக்சில் வரும் அந்த 10 நிமிட ட்விஸ்ட் சீன் இந்த இரண்டைத்தவிர படத்தில் வரும் இடைப்பட்ட 2 மணி நேரம் போர்தான்.சுவராஸ்யம் இல்லை.
2 பத்மினிப்பேய் கன்னி கழியாமல் இறந்து விட்டதால் பேயாகத்தன் காதலன் கூடக்கூடாமல் கண்டவன்களுடன் கூடுவது ஏன் ?
3 பாலியல் வன் கொடுமை என்பது ஆண் பெண்ணுக்கு செய்வது.பெண் விரும்பினால் வரத்தயாராக ஒரு லட்சம் ஆண்கள் தயாராக இருப்பார்களே? எதற்காக பத்மினிப்பேய் ஆண்களை பலாத்காரம் செய்யனும் ?
4 நாயகனுக்கு அடுத்த இடத்தில் நல்ல பொசிஷனில் இருக்கும் நாயகியை நாயகன் தன் இடத்தைப்பிடித்து விடுவாளோ ?என்று பொறாமைப்பட்டு அவளுடன் சண்டை போடுவது அர்த்தமற்றது.திரைக்கதையில் சரக்கு இல்லாததால் என்னன்ன கம்பி கட்ற கதை எல்லாம் சொல்றாங்க?
அடல்ட் கண்ட்டெண்ட். வார்னிங். 16+
CPS கமெண்ட் - பேய்க்கதை என்பதால் ஜம்ப்ஸ்கேர் ,திகில் ,படபடப்பு ஊட்டும் காட்சிகளை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்.கிளாமர் உண்டு.திகில் இல்லை.ஆண்களுக்குப்பிடிக்கும். ரேட்டிங் 2.5 / 5