ஆக்சன் கிங்க் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகியாக நடிக்க கதை , திரைக்கதை , இயக்கம் , தயாரிப்பு என களம் இறங்கி இருக்கும் படம் . ஆக்சன் மசாலாவாக இல்லாமல் ஒரு ரொமாண்டிக் டிராமாவாக , ஒரு பீல் குட் மூவியாக எடுக்க முயன்று இருக்கிறார் , அவரது முயற்சி வெற்றி பெற்றதா? என்பதைப்பார்ப்போம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகள் . சிறந்த சமையல் கலை நிபுணி ஆக பட்டம் பெற்றவர்.. அம்மா இல்லை , சின்ன வயதில் அம்மா இறந்ததால் அப்பா தான் அவருக்கு எல்லாமே . அப்பாவை விட்டுப்பிரியக்கூடாது என்பதால் காதல் , கல்யாணம் இவற்றில் எல்லாம் விருப்பம் இல்லாமல் இருக்கிறார் . எப்போது கல்யாணப்பேச்சை எடுத்தாலும் அப்போதே அந்த இடத்தைக்காலி செய்து விடுவார் .
வேறு ஒரு நகரில் நடக்கும் சமையல் கலை சம்பந்தமான கான்பரன்ஸ்க்காக காரில் பயணிக்கிறார் . அப்போது முன் பின் தெரியாத ஒருவன் லிப்ட் கேட் கிறான் . கொஞ்சம் சந்தேகத்துடன் தான் நாயகி அவனுக்கு லிப்ட் தருகிறாள் . வழியில் அங்கங்கே அவள் பயணம் தடை படுகிறது . இதனால் செல்ல வேண்டிய இடத்துக்குக்கொஞ்சசம் தாமதமாகத்தான் செல்கிறாள் .ஆனால் போன உடன் தான் தெரிகிறது . தாமதமாக வந்தது நல்லதாகப்போயிற்று என .. ஏன் எனில் அந்த ஹோட்டல் மிகப்பபெரிய தீ விபத்தில் கருகி விட்டது . தான் உயிர் தப்பியதற்கு தனது பயணத்தில் குறுக்கீடாக வந்தவர்கள் தான் என நினைக்கிறார் . அவர்களுக்கு ஒரு நன்றி தெரிவிக்கலாம் என நினைக்கிறார் .அந்த நன்றி தெரிவிக்கும் படலத்தில் லிப்ட் கொடுத்த இளைஞனிடம் காதல் மலர்கிறது
ஆனால் ஒரு கட்டத்தில் தன காதலனும் , அப்பாவும் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆனவர்கள் என்பதை உணர்கிறார் . எல்லாமே அப்பா வின் செட்டப்போ என சந்தேகிக்கிறார் , இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகி ஐஸ்வர்யா அர்ஜூன் = தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா + ஜோதிகா + சோனியா அகர்வால் மூவரின் முகச்சாயல் இருக்கிறது , சில காமரா கோணங்களில் மூவரையும் தனித்தனியே நினைவுபடுத்துகிறார்
சிரித்த முகம் , நல்ல நடிப்புத்திறன் ஒருங்கே கொண்டவர் . நல்ல எதிர் காலம் உண்டு . நாயகன் ஆக நிரஞ்சன் என்பவர் . எடுபடவில்லை . நாயகியின் அப்பாவாக சத்யராஜ் , நாயகனின் அப்பாவாக பிரகாஷ் ராஜ் இருவரும் குணச்சித்திர நடிப்பில் மிளிர்கிறார்கள் . கோவை சரளா கெஸ்ட் ரோலில் வருகிறார் . மற்ற அனைவர் நடிப்பும் சிறப்பு . ஆக்சன் கிங்க் அர்ஜூனும் ஒரு ரோலில் நடித்து இருக்கிறார்
ஜி பாலமுருகனின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம் . அனூப் ரூபன்சின் இசையில் 4 பாடல்கள் சுமார் ரகம் , பின்னணி இசை பரவாயில்லை ரகம் .
சண்டைக்காட் சிகளை அர்ஜுனே வடிவமைத்து இருக்கிறார் . படம் ரன்னிங்க் டைம் இரண்டரை மணி நேரம் , இன்னமும் அரை மணி நேரம் கத்திரி போட்டிருக்கலாம்
சபாஷ் டைரக்டர்
1 நாயகனின் நண்பன் தன காதலியிடம் காதலை சொல்வது எப்படி ? என ஐடியா கேட்க அவனுக்கு ஐடியா கொடுப்பது போல அருகில் இருக்கும் நாயகியிடம் காதலை வெளிப்படுத்தும் சீன் கவிதை
2 சைக்காலஜி டாக்டர் , சைக்கலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் , அவரது அணுகுமுறை எல்லாம் தமிழ் சினிமாவுக்குக்கொஞ்சம் புதுசு
3 ஏற்கனவே வெளிவந்த பயணக்கதைகளான வானம் , பையா , திருடா திருடா படக்கதைகளிலிருந்து வேறுபட்டு வித்தியாசமான கதைக்கரு வை எடுத்துக்கொண்டு திரைக்கதை அமைத்தது பாராட்டுக்குரிய விஷயம்
ரசித்த வசனங்கள்
1 நாம எப்பவும் கத்துக்கிட்டே இருக்கணும் , அப்போதான் முன்னேற முடியும்
2 ஊருக்குள்ளே கோயில் இருந்தாத்தான் கலாச்சாரம் வளரும் ,ஊருக்குள்ளே பள்ளிக்கூடம் இருந்தாதான் பகுத்தறிவு வளரும்
3 நாம மட்டும் இல்லை , நம்மை சுத்தி இருக்கும் எல்லா ஜீவராசிகளும் நல்லா இருக்கணும்னு நாம நினைக்கனும்
4 கெட்டதிலும் நல்லது இருக்கு , நெகடிவ்ல யும் சில பாசிட்டிவ்ஸ் இருக்கு
5 பணக்காரர்களாகிய நாம் 10 ரூபாய்க்குக்கூட யாரையும் நம்ப மாட் டோம் , ஆனால் ஏழையாக இருந்தும் அவ 100 ரூபாய் வாங்காம நம்மை நம்பறாளே?
6 லவ் பண்ண , பிரப்போசல் அவசியம் இல்லை , அதுதான் மேஜிக் ஆப் லவ்
7 மவுனமா இருப்பது எப்பவும் ஒரு முடிவைக்கொடுக்காது , மனம் விட்டுப்பேசனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 தமிழ் , தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி , மலையாளம் என 5 மொழிகளில் உருவான படம் என பிரமோ செய்திருந்தாலும் தெலுங்கில் எடுத்து அனைத்து மொழிகளிலும் டப் செய்து இருக்கிறார்கள் , லிப் சிங்க் சரியாக வரவில்லை
2 மெயின் கதைக்கு முக்கியமான காட்சி ஆகிய பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு தீ விபத்து ஏற்படுவது சி ஜி ஒர்க் சரியாக அமையவில்லை
3 நாயகனின் முகம் நமக்கு சரியாக செட் ஆகவில்லை . நாயகி அளவுக்கு மனதில் நெருக்கம் உண்டாகவில்லை
4 படத்தின் தயாரிப்பாளர் என்பதால் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லா விட்டாலும் அர்ஜூனின் கேரக்ட்டருக்கு தந்த முக்கியத்துவம், அவருக்கான ஆக்சன் சீக்வன்ஸ் வலியத்திணிக்கப்பட்டது
5 ரவுடியாகவே வாழ்ந்து பல கொலைகள் செய்த ஆள் நாயகியின் ஒரே ஒரு நன்றியில் மனம் மாறி திருந்துவது காதில் பூ
6 நாயகியின் பெயர் சீதா , நாயகனின் சொந்த ஊர் பெயர் சீதா புரம் , எதேச்சயாக அமைந்த இந்த ஒற்றுமை பற்றி நாயகனோ , நாயகியோ வியந்து சிலாகித்துக்கொள்ளவே இல்லையே ?
7 க்ளைமாக்ஸ் சீன் காதலுக்கு மரியாதை படத்தையும் , க்ளைமாக்ஸ் வசனங்கள் பூவே உனக்காக பட வசனத்தையும் நினைவு படுத்துகிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வித்தியாசமான ஒரு கதைக்களம் . பார்க்கலாம் , ஆனால் 2 கே கிட்ஸுக்குப்பிடிக்காது . சென்ட்டிமென்ட் சீன்கள் அதிகம் . ரேட்டிங்க் 2.5 / 5
