தாய் கிழவி (2026)-தமிழ்-சினிமா விமர்சனம் (பேமிலி மெலோ டிராமா)
கடந்த 10 நாட்களாகவே இந்தப்படத்தின் பிரமோஷன்கள் சோசியல் மீடியா வில் அளவுக்கு அதிகமாகவே கொடுக்கப்பட்டு வருவதால் இது மாதிரி ஓவர் ஹைப் கொடுத்த படங்கள் எல்லாம் அதீத எதிர்பார்ப்பை ஈடு கட்டமுடியாமல் தோல்வியைத்தழுவி இருக்கிறதே ?என்ற கவலையுடன் தான் படம் பார்த்தேன்.நல்ல வேளை,இயக்குநர் ஏமாற்றவில்லை.
ஒரு பாரதிராஜாவோ,பருத்தி வீரன் அமீரோ,வாழை மாரி செல்வராஜோ காட்டுகின்ற அச்சு அசல் கிராமியக்கதையை பிரமாதமான திரைக்கதை மூலம் தந்து படத்தில் நடித்த அனைத்துக்கேரக்டர்களுக்கும் சம அளவில் வாய்ப்புத்தந்து ஒரு மறக்க முடியாத படத்தைத்தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன்.இவர் விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆகப்பணியாற்றியவர்
கதை சாதாரண பீர்பால் டைப் நீதிக்கதை தான்.ஆனால் அதை சொன்ன விதத்தில் கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்த விதத்தில் தனித்து நிற்கிறார் இயக்குநர்
மதுரை -உசிலம்பட்டி அருகே காடுபட்டி என்று ஒரு கிராமம்.அதில் 75 வயதான பாட்டி நாயகி பவுனுத்தாயி வாழ்ந்து வருகிறார்.வைதேகி காத்திருந்தாள் படத்தில் வெள்ளிக்கிழமை ராமசாமி ஆக வரும் ராதா ரவி தெருவில் இறஙகினாலே ஊர் மக்கள் பயப்படுவது மாதிரி நாயகி பவுனுத்தாயி வட்டி வசூல் பண்ணக்கிளம்பினாலே ஊரில் ஆளாளுக்கு நடுங்க ஆரம்பித்து விடுவார்கள்.ஏன் எனில் பவுனுத்தாயி ஒரு பெண் என்றாலும் 10 ஆண்களுக்கு சமம்.அடாவடியாக நடந்து கொள்வாள்.
நாயகிக்கு 3 மகன்கள்,ஒரு மகள்.ஒரு மகனுக்கு 35 வயது கடந்தும் முதிர்கண்ணனாகவே சுற்றி வருகிறார் (முதிர் கன்னிக்கு ஆண்பால் முதிர் கண்ணன் தானே?) மற்ற இரு மகன்களுக்கும் திருமணம் ஆகி தனியே இருக்கின்றனர்.மகளுக்குத்திருமணம் ஆனாலும் வரதட்சணையில் பாக்கி இருப்பதால் நாயகி உடனேயே தனியே இருக்கிறாள்.
நாயகி பவுனுத்தாயியை யாருக்கும் பிடிக்காது.ஊர் மக்களுக்கும் சரி,குடும்ப உறவுகளுக்கும் சரி உறவினர்களுக்கும் சரி சுத்தமாக இவரைப்பிடிக்காது.இவர் சீக்கிரம் போய்ச்சேர மாட்டாரா?என்று ஏங்குபவர்கள் தான் அதிகம்.
இப்படி இருக்கும் தருணத்தில் நாயகி பவுனுத்தாயி திடீர் என படுத்த படுக்கை ஆகிறாள்.கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜ்.ஆனால் ஒரு கை மட்டும் அசைகிறது.ஏதோ சொல்ல வருகிறது.ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார்?என்பது யாருக்கும் புரியவில்லை.
உறவினர்கள் பலரும் நாயகியைப்பார்த்து விட்டுப்போக வந்த வண்ணம் இருக்கிறார்கள்.வாரிசுகள் நினைப்போ நாயகி இறந்து விட்டால் அவரது நகைகளைப்பங்கு போட்டுக்கொள்ளலாம் என்றே இருக்கிறது. அவரின் சாவுக்காகக்காத்திருக்கிறார்கள்.
இப்போது தான் கதையில் ஒரு ட்விஸ்ட்.நாயகியைப்பார்க்க வந்த ஒரு நபர் பவுனுத்தாயி நல்லா இருக்கனும்.நான் ஒரு பொற்கொல்லன்.என்னிடம் தான் 190 பவுன் நகை ஆர்டர் செய்து வாங்கிப்போனார் எனக்கொளுத்திப்போடுகிறார்.
ஒரு பவுன் சுமாராக ஒண்ணே கால் லட்சம்.அப்போ மொத்த மதிப்பு கிட்டத்தட்ட இரண்டே கால் கோடி ரூபாய்.
அவ்வளவு தான்,வாரிசுகளுக்குப்பொறுக்கவில்லை.மொத்த நகைகள் ஒரு புதையல் போல.எங்கே வைத்திருப்பார்?எனத்தேட ஆரம்பிக்கின்றனர்.
இதற்குப்பின் என்ன நிகழ்ந்தது?நாயகி உயிர் பிழைத்தாரா?நகைகளின் கதி என்ன?யாருக்குக்கிடைத்தது?இவை எல்லாம் மீதித்திரைக்கதையின் சுவராஸ்யமான அம்சங்கள்.
நாயகி பவுனுத்தாயி ஆக ராதிகா பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஒவ்வொரு முறை ஒப்பனை இடும்போது 4 மணி நேரம் ஆனதாம்.தேசிய விருது கிடைக்க வாழ்த்துகள்.
அவ்வை சண்முகி,இந்தியன் ஆகிய படஙகளில் கமலுக்குப்போட்ட மேக்கப் மாதிரி தான்,ஆனால் ஒரு குறை.இந்தியன் படத்தில் சுகன் யாவுக்கான மேக்கப் சரி இருக்காது.துருத்திக்கொண்டு இருக்கும்.அது போல் க்ளோசப் காட்சிகளில் ஒப்பனை எடுபடவில்லை.முகத்துக்கு மட்டும் மேக்கப் போட்டு விட்டு கை,கால்களை விட்டு விட்டார்கள்.
ஆனால் ராதிகாவின் நடிப்பில் குறை எதுவும் இல்லை.பசும்பொன்,கிழக்குச்சீமையிலே படங்களில் நடித்தது போல் இது அவருக்கு ஒரு வாழ்நாள் சாதனைப்படம்.
நாயகியின் மகன்களாக சிங்கம்புலி,அருள் தாஸ்,பால சரவணன் மூவரும் செய்யும் அலப்பறைகள் அருமை.
கமல் ரசிகராக சிங்கம் புலி செய்யும் காமெடிகள் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.ஆட்டோ டிரைவர் ஆக வரும் அருள் தாஸ் அந்த கேரக்டருடன் ஒன்றி நடித்திருக்கிறார்.பால சரவணனின் காமெடி ஒன் லைனர்கள் சரவெடி.
நாயகியின் மகளாக வரும் ரேச்சல் ரெபாக்கா வசனமே அதிகம் பேசாமல் ஒரு பார்வை ,ஒரு அசைவு ,உடல் மொழி மூலமாகவே கவனம் ஈர்க்கிறார்.
நாயகியின் மருமகனாக வரும் முத்துக்குமார் வந்த சீனில் இருந்து கடைசி சீன் வரை முத்திரை பதிக்கிறார்.
நாயகி வரும் காட்சிகள் என்று பார்த்தால் முதல் 15 நிமிடஙகள் ,கடைசி 20 நிமிடஙகள் மட்டும் தான்.மொத்தப்படத்தையும் தோளில் தாங்கி நிற்பது படததின் அனைத்துக்கேரக்டர்களும் தான்.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓக்கே ரகம் ஆக இருக்கின்றன.சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடி இருக்கிறார்.
நாயகிக்குப்போட்ட மேக்கப் பிராஸ்தடிக் மேக்கப் என சொல்லப்படுகிறது. ஆலங்குடி செல்லத்துரை தான் ஒப்பனையாளர்.
ஒளிப்பதிவு விவேக் விஜயகுமார்.கிராமிய அழகைக்கண் முன் நிறுத்துகிறார்.
சான் லோகேசின் எடிட்டிஙகில் படம் முதல் பாதி சுமாராகவும்,பின் பாதி பிரமாதமாகவும் ரசிக்க வைக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 மதுரை ஏரியாவில் தட்டுவாணி என்ற வசைச்சொல் உண்டு.அதைப்படத்தில் பயன்படுத்திய விதம்.இது தமிழ் சொல்லே இல்லை,அடஙகாத குதிரை என்பதைக்குறிக்கும் மராட்டிய சொல்.இது மாதிரி வழக்குத்தமிழ் சொல்லாடல்களை பயன் படுத்திய விதம் அருமை
2 கமல் ரசிகராக வரும் ஒரு கேரக்டர் தன் கையில் பச்சை குத்தி இருக்கும் கமல் உருவத்தைப்பார்த்து இவரும் ஆண்டவர் தான்,பட்டையை இவருக்கும் போட்ருவோம் என திருநீறு பூசுவது செம
3 இயக்குநர் ஒரு கமல் ரசிகர் என்பதால் படம் முழுக்க கமல் ரெப்ரன்ஸ் ,,கமல் பாடல்கள் என தியேட்டரில் ஆரவாரம்.இது லப்பர் பந்து படத்தில் கேப்டன் விஜய்காந்த் படப்பாடல்களைப்பயன்படுத்தியது போல
,4 இத்தனை வருடங்களாக நான் சேர்த்து வைத்த பாண்டித்யம் இது தான் என நாயகி வாரிசுகளுக்கு உணர்த்தும் காட்சி அருமை.
5 நகைச்சுவை ,செண்ட்டிமெண்ட் எமோஷனல் சீன்ஸ் என்று கலந்து கட்டி காட்சிகளைக்கோர்த்த விதம்
6 ஒரே ஒரு சீனில் வந்தாலும் இளவரசு செய்யும் அலப்பறை
7 கடைசி 20 நிமிடங்களில் வரும் செண்ட்டிமெண்ட் சீன்ஸ், பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்னும் கருத்து சொல்லப்பட்ட விதம்
8 ஒரு திருமணத்தை நான் எப்படிப்பார்க்கிறேன் என்று முனீஷ் காந்த் உருக்கமாகப்பேசும் சீக்வன்ஸ் டச்சிஙக்.
,9 விஸ்வரூபம் டைட்டில் பிஜி எம் மைப்பயன்படுத்திய விதம் ,இடம் அருமை
10 கங்காரு அடிகள் கேரக்டரில் வரும் குடிகார சாமியார் செய்யும் அலப்பறை யில் தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ்.
11 ஜார்ஜ் மரியன் கேரக்டர் சிறியதாக இருந்தாலும் பயன் படுத்திய விதம் பிரமாதம்..
12 பல்லாஙகுழி மேட்டர் ஸ்மார்ட் ஆன ஐடியா
13 ரஜினி படம் பாட்டுப்போடு என சொன்னபோது தேடிக்கொண்டிருப்பவரும் டேய்,தலைவர் 170 படம் நடிச்சிருக்கார்.அப்பாஸ் படத்தைத்தேடற மாதிரி தேடிட்டு இருக்கே? என்று கவுண்ட்டர் கொடுக்கும் சீனில் தியேட்டர் வெடித்துச்சிரித்தது.
ரசித்த வசனங்கள்
1 நம் எதிரே இருப்பவருக்குப்புரியாத மொழியில் பேசுவதால் என்ன பெருமை?
2 பொழுது மட்டுமல்ல,பொண்ணும் போனாத்திரும்பி வராது
3 மனுசன் சந்தோஷமா வாழப்பணம் தேவையா?என்பது தெரியல.ஆனா மரியாதையா வாழப்பணம் தேவை
4 பணம் எல்லாம் வேணாம் ,காசு தேவை இல்லை என்று ஒருவன் சொன்னால் அவன் 3 தலைமுறைக்கு சொத்து சேர்த்தவன் ஆக இருப்பான்.
5 தைரியத்துக்கும் ,வீரத்துக்கும் ஆண் கடவுள் தான் என்றாலும் கல்விக்கடவுள்,செல்வத்துக்கான கடவுள் பெண் கடவுள்கள் தானே?
6 எந்தப்பெத்தவங்களுமே காசில்லை என்பதற்காக தான் பெத்த குழந்தைகளைக்கொல்வதில்லை.
லாஜிக் மிஸ்டேக்ஸ்,திரைக்கதையில் சில நெருடல்கள்
1 படத்தின் டைட்டில் ஆக நாயகியின் பெயர் ஆன பவுனுத்தாயி என்பதையே வைத்திருக்கலாம்.பெண்மைக்குப்பெருமை சேர்ப்பதாக இருந்திருக்கும்.சிவகார்த்திகேயன் படத்தில் ஹிட் ஆன பாடல் வரி என்பதால் தாய்க்கிழவி என்று வைத்தது என்னமோ மாதிரி இருக்கு.(அதிலும் ஒரு பிழை.செண்ட்டிமெண்ட் கருதி தாய் கிழவி.க் கட்)
2 சின்னக்கவுண்டர் படத்தில் நாயகனின் கேரக்டர் டிசைனை விளக்க ஓப்பனிஙகில் ஒரே ஒரு சீன் வைத்திருப்பார்கள்.கெத்தான சீன் அது.ஓப்பனிஙக் சாங்கில் நாயகி கேரக்டர் டிசைனை விளக்க ஏகப்பட்ட காட்சிகளை வைத்து மொத்தமாக ஒரு பாட்டிலேயே முடித்து விட்டார்கள்.அதனால் அந்தக்கேரக்டரின் சுவராஸ்யம் குறைவு.( மைக்கேல் மதன காமராஜன் படத்தில் டைட்டில் சாங்க் ஆன கதை கேளு பாடலில் மொத்தக்கதையும் சொன்ன மாதிரி)
3 குஷி ரெப்ரன்ஸ் காமெடி எடுபடவில்லை.
4 பின் பாதியில் வரும் பி ஜி எம் காந்தாரா பி ஜி எம் மை நினைவு படுத்துகிறது
5 நாயகி ராதிகாவின் கேரக்டர் ஸ்கெட்ச் புதிதாக இருந்தாலும் சில சீன்களில் அவரது நடிப்பு ஜீன்ஸ் படத்தில் வரும் ராதிகாவின் சுந்தராம்பாள் கேரக்டரை நினைவுபடுத்துகிறது.
6 சீக்கிரமாப்போய் சேரு சீயானுக்குத்துணையா என்ற பாடல் வரும்போது படத்தில் வரும் கேரக்டர்கள் போலவே ஆடியன்சுக்கும் ராதிகா செத்தால் என்ன?பிழைத்தால் என்ன?என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதால் ஒரு எமோஷனல் கனெக்ட் இல்லை.
அடல்ட் கண்டெண்ட் வார்னிங் - 13+ குடும்பத்துடன் பார்க்கலாம் (கிராமீய வசவுச்சொற்கள் சில வரும்)
பைனல் கமெண்ட்..அருமையான கிராமத்துக்கதை.முதல் பாதி சுமார் ரகம்,பின் பாதி சுவராஸ்யம்.பெண்களுக்கான படம்.கமர்சியல் ,காமெடி,செண்டிமெண்ட்ஸ் என கலந்து கட்டி அடித்த படம்.ரேட்டிங்க் 3.5 /5. ஏ செண்ட்டர்களில் சுமாராகவும் ,பி & சி செண்ட்டர்களில் பிரமாதமாகவும் ஓடும்
