ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகியின் அப்பா மிகப்பெரிய வக்கீல்.புகழ் பெற்ற கேஸ்களில் ஜெயித்த அவர் ஒரு கேசில் ஆஜர் ஆக ஒரு சிட்டிங்க்க்கு (ஒரு நாள் ஆஜர் ஆக) லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் பிரபல வக்கீல்.அவர் ஆஜர் ஆகித்தோற்றதாக சரித்திரம் இல்லை.இதனாலேயே பல கோடீஸ்வரர்கள் ,லட்சாதிபதிகள் அவரை வக்கீல் ஆக நியமிக்க லைன் கட்டிக்காத்திருக்கிறார்கள்.
நாயகியும் வக்கீல் தான்.ஆனால் புதியவர் .நாயகியின் அப்பா நாயகியிடம் தெளிவாக சொல்லி விடுகிறார்.நீ தனியாக வாதாடி தொடர்ந்து 10 கேஸ்களில் ஜெயித்துக்காட்டு.அப்புறம் என் சாம்ராஜ்யத்தில் உன்னை ராணி ஆக்கி விட்டு நான் ஒதுங்கிக் கொள்கிறேன் என்கிறார்.நாயகியும் அதற்கு சம்மதித்துத்தனியாகக்கேஸ்களில் வாதாடுகிறார்.
வில்லி அதே கோர்ட்டில் ஒரு ஸ்டெனோ.ஜட்ஜ் தீர்ப்பை வாசிக்கும்போது அதை டைப் பண்ணுபவர்.இவர் மிக்க அனுபவம் மிக்கவர்.பல சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்.இவரது கணவர் ஒரு விபத்தில் சிக்கி கால்களை இழந்து சக்கர நாற்காலியில் காலத்தைக்கழிப்பவர்.ஒரு மகளும் உண்டு.மகள் ,கணவன் இருவரையும் பராமரிக்கும் பொறுப்பு வில்லிக்கு உண்டு
நாயகி வில்லியிடம் ஒரு உதவி கோருகிறார்.அப்பாவிடம் போட்ட சவாலில் ஜெயிக்க 10 கேஸ்களை வெற்றிகரமாக முடிக்க வில்லி ஒவ்வொரு கேசிலும் உதவ வேண்டும்.ஆரம்பத்தில் மறுத்த வில்லி பின் சம்மதிக்கிறார்.ஒரு கேஸ்க்கு ஐடியா சொல்ல ரூ 20,000 சார்ஜ்.
வில்லியின் உதவியுடன் நாயகி வரிசையாக 9 கேஸ்கள் ஜெயித்து விடுகிறார்.10 வதாக ஒரு கேஸ் வருகிறது.
மிகப்பெரிய தொழில் அதிபர் ஒரு இளம்பெண்ணைக்கொலை செய்ததாகக்கேஸ்.அந்தப்பெண்ணும் ,தொழில் அதிபரும் நெருக்கமாக இருந்ததை அந்தப்பெண் போட்டோ ,வீடியோ எடுத்து அந்தத்தொழில் அதிபரை மிரட்டியதால் அவர் அந்தப்பெண்ணைக்கொலை செய்து தற்கொலை போல செட் பண்ணி விட்டார்.
இந்தக்கேசில் நாயகியின் அப்பா அந்தத்தொழில் அதிபரின் சார்பாக ஆஜர் ஆகிறார்.நாயகி அதை எதிர்த்து வாதாடுகிறார்.
இந்தக்கேசில் யார் ஜெயித்தது?நாயகியா?நாயகியின் அப்பாவா?நாயகிக்கு உதவியவர் எப்படி வில்லி ஆனார்?வில்லிக்கும் இந்தக்கதையில் வரும் ட்விஸ்ட்க்கும் என்ன சம்பந்தம் ?இதை எல்லாம் விளக்குவதே மீதித்திரைக்கதை.
நாயகி நேஹாவாக சோனாக்சி சின்ஹா பிரமாதமான உடல் மொழி ,கம்பீரத்துடன் நடித்திருக்கிறர்.
வில்லி சாரிகா ஆக ஜோதிகா நெகடிவ் ஷேடு உள்ள கதாப்பாத்திரத்தில் துணிச்சல் ஆக நடித்திருக்கிறார்.
நாயகியின் அப்பாவாக பிரபல வக்கீல் ஆக அஷூத்தோஷ் கௌவாரிக்கர் நடித்திருக்கிறார்.
முக்கியமான இந்த மூன்று கேரக்டர்கள் போக மீதி நடித்திருக்கும் அனைவரும் அவரவர்க்குக்கொடுத்திருக்கும் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ,இசை ,பின்னணி இசை,எடிட்டிங்க் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பு.படத்தின் ரன்னிங்க் டைம் 120 நிமிடங்கள்
Bareilly ki Barfi , Nil Battery Sannata ஆகிய படங்களை இயக்கிய அஸ்வினி அய்யர் திவாரி என்பவர் தான் இயக்கி இருக்கிறார்
ஹர்மான் பவேஜா ,அக்சத் ஜில்டியல்,தஸ்னீம் லோகன்வாலா ஆகிய மூவரும் இணைந்து திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்.
சபாஷ் டைரக்டர்
1 நாயகி சவாலில் ஜெயிக்கும் முதல் 2 கேஸ்களில் அவர் எப்படி ஜெயிக்கிறார் ,வில்லி எப்படி உதவுகிறார் என்று விளக்கமாகக்காட்டிய விதம் அருமை
2 நாயகிக்கும் ,அப்பாவுக்கும் இடையே ஆன எமோஷனல் பாண்டிங், வாத விவாதங்கள் சிறப்பு
3 முதல் பாதி முழுக்க கேரக்டர் அறிமுகங்கள் ,பின் பாதி சவால் கேஸ் கோர்ட் ரூம் டிராமா எனப்பிரித்துக்கொண்ட விதம் கச்சிதம்.
4 வில்லிக்கும் இந்தக்கதைக்கும் என்ன சம்பந்தம்? என நாம் யோசிக்கும் சமயத்தில் வில்லி தான் நாயகியோ என ட்விஸ்ட் கொடுத்த விதம் அருமை.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 படத்தின் முக்கிய அம்சமே அந்த பிரபல தொழில் அதிபரால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கேரக்டர் தான்.ஆனால் அந்தக்கேரக்டர் டிசைன் சரியாக வடிவமைக்கப்படவில்லை.அதனால் எமோஷனல் கனெக்ட் கிடைக்கவில்லை.
2 நாயகியின் அண்ணன் கேரக்டர் ,வில்லியின் கள்ளக்காதலன் கேரக்டர் இரண்டும் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை.
3 நாயகி அந்த தொழிலதிபர் கேசில் ஜெயிப்பது எப்படி?என்பதற்கான பிராப்பர் எவிடென்ஸ் விஷூவலாக நமக்குக்காட்டவே இல்லை.
4 தொழில் அதிபர் செய்த தப்புக்கு தண்டனை இல்லை ,ஆனால் செய்யாத தப்புக்கு தண்டனை பெறுகிறான் என்ற ட்விஸ்ட் எல்லாம் சிவாஜி கணேசன் காலத்து டெக்னிக்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கோர்ட் ரூம் ட்ராமா ப்ரியர்கள் ,ஜோதிகா ரசிகர்கள் பார்க்கலாம்.பிரமாதம் எல்லாம் இல்லை.சராசரி கோர்ட் ரூம் லீகல் டிராமா.ரேட்டிங். 2.5/5
