ஏ ஆர் ரஹ்மான் இசையில் வரும் ஒரு சரித்திரப்படம் என்பதும் நாவலின் தழுவல் என்பதும் , சத்ரபதி சிவாஜி யின் மறைவுக்குப்பின் நிகழ்ந்த அவரது மகனின் ஆட் சியில் நிகழ்ந்த சம்பவங்கள் தான் கதை என்பதும் இந்தப்படத்தைப்பார்க்க தூண்டுகோலாக அமைபவை
130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளான 14/2/2025 அன்றே ரூ 49 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது .1999ம் ஆண்டில் ரிலீஸ் ஆன தாள் என்ற ஹிந்திப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் அக்சய் கண்ணா நாயகன் ஆக நடித்தார் .இன்று அதே ஏ ஆர் ரஹ்மான் இசையில் அக்சய் கண்ணா வில்லன் ஆக நடித்திருக்கிறார்
டைட்டில் ஆன சாவா என்ற மராத்திய சொல்லுக்கு சிங்கக்குருளை என்று அர்த்தம் .நம்ம ஊர்ல ஜீன்ஸ் போட்ட சிங்கம் என பஞ்ச் டயலாக் பேசுவது போல
சிவாஜி சாவந்த் எழுதிய மராத்திய நாவல் ஆன சாவா வைத்தழுவி திரைக்கதை எழுதப்பட்ட படம் இது .சத்ரபதி சிவாஜியை அறிந்த அளவுக்கு அவரது மகன் ஆன சம்பாஜி யை பலருக்கும் தெரியாது . அதனால் தான் அந்தக்கதையை எடுத்தேன் என்கிறார் இயக்குனர் லக்ஷ்மன் ( எல்லாருக்கும் தெரிஞ்ச கதைல நம்ம இஷ்டத்துக்கு அடிச்சு விட முடியாது . தெரியாத கதைன்னா குறுக்கு சால் ஓட்டலாம் ? )
ஸ்பாய்லர் அலெர்ட்
17ம் நூற்றாண்டில் அவுரங்கசீப்பின் ஆட்சி நடக்கிறது .மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மரணத்துக்குப்பின் அவரது மகன் சம்பாஜி 1680 ம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பேற்கிறார் . ராமர் இருக்கும்போது பரதனை அரியணை ஏற்ற கைகேயி சதி செய்தது போல சம்பாஜியின் சித்தி சோயறா பாய் தன மகனை (ராஜாராமை ) மன்னர் ஆக்கத்துடிக்கிறார்
அவுரங்கசீப்பின் மகன் அக்பர சிவாஜியின் மகன் சம்பாஜி யுடன் இணைந்து தன அப்பா அவுரங்கசீப்பை வீழ்த்தி விட்டு அரியணை அமரத்துடிக்கிறான் .சம்பாஜியின் சித்தி செய்றா பாய் அவுரங்கசீப்பின் மகன் அக்பரஉடன் இணைந்து சிவாஜியின் மகன் சம்பாஜி யை வீழ்த்தி விட்டு தன மகனை அரியணை ஏற்ற நினைக்கிறாள்
அவுரங்கசீப்பின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை சம்பாஜி கைப்பற்றிய செய்தி கேட்டு அவுரங்கசீப் ஒரு சபதம் எடுக்கிறார் . .சம்பாஜியை வீழ்த்தி விட்டுத்தான் மகுடம் அணிவேன் . அதுவரை மகுடம் அணிய மாட்டேன் என்கிறார் .அவுரங்கசீப்பின் படைகள் தானிக்கு தீனி என பழி வாங்க சம்பாஜி யின் ஆளுகைக்கு உட்பட் ட பகுதிகளைக்கைப்பற்றுகிறது . இந்தத்தகவல் கேட்ட சம்பாஜி அவுரங்கசீப்பை ஒழிக்கும் வரை ஓய மாட்டே ன் என சபதம் எடுக்கிறார் . நாயகன் சம்பாஜி , வில்லன் அவுரங்கசீப் இருவரில் யார் வெற்றி பெறறார்கள் ? என்ன என்ன சம்பவங்கள் நடந்தது ?என்பதுதான் மீதி திரைக்கதை
நாயகன் சிவாஜியின் மகன் சம்பாஜி ஆக விக்கி கவுசால் மிரட்டி இருக்கிறார் . அருமையான நடிப்பு ன். ஆக்சன் காட் சிகளிலும் அதகளம் செய்திருக்கிறார் . வில்லன் ஆக அவுரங்கசீப் ஆக அக்சய் கண்ணா வெறும் பார்வையாலேயே மிரட்டுகிறார் .இவருக்கு அதிக வசனங்கள் இல்லை .ரகுவரன் மாதிரி பேஸ் வாய்ஸில் பேசுகிறார் .
நாயகி ஆக ராஷ்மிகா மந்தனா பவ்யமாக நடித்திருக்கிறார் . புஷ்பா பட பாதிப்பில் இவருக்கு ஒரு குத்தாடடம் எல்லாம் இயக்குனர் வைக்கவில்லை . நல்ல வேளை
ஏ ஆர் ரஹ்மான் இசையில் 7 பாடல்கள் பொறுமையை சோதிக்கின்றன . பின்னணி இசையில் சைன் செய்திருக்கிறார் . போர்க்களக் காட் சிகளின் பிஜிஎம் மிரட்டுகிறது
ஆர்ட் டைரக்ட்டரின் உழைப்பு தெரிகிறது . வசனங்களை இருவர் எழுத திரைக்கதையை ஐவர் எழுத இயக்கி இருப்பவர் லக்ஷ்மன் உடேகர்
சபாஷ் டைரக்டர்
1 ஹீரோ ஓப்பனிங் சீனை விட வில்லனின் ஓப்பனிங் சீன கலக்கல் ரகம்
2 போர்க்களக்காடசிகளில் பிரம்மாண்டம்
3 நாம் அதிகம் அறியாத சரித்திரத்தின் பக்கங்களைப்புரட்டி கதை சொன்ன விதம்
ரசித்த வசனங்கள்
1 எப்போதெல்லாம் அக்கிரமம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் ஒரு யுக புருஷனின் அவதாரம் நிகழ்கிறது
2 நாங்கள் சிங்கம் போல் கர்ஜிப்பதில்லை .ஆனால் சத்தம் வராமல் காரியத்தை முடிப்போம்
3 போரி ல் இருந்து ராஜாக்கள் திரும்பி வரும்போது ராணிகள் கோபம் கொண்டது போல் நடிப்பர்கள், அது ஊடல்
4 என்னை விட உனக்குத்தான் என்னைப்பற்றி அதிகம் தெரிந்து இருக்கிறது
5 நான் உப்பு மாதிரி .உங்கள் தேவைக்கு ஏற்ப என்னை உபயோகபடுத்திக்கொள்ளலாம்
6 ஒரு போரில் இருந்து திரும்பி வந்ததும் அடுத்த போரைப்பற்றி சிந்திப்பதுதான் மன்னர்களின் வழக்கம்
7 நெருப்புடன் விளையாடுவது எனக்கு ரொம்பப்பிடிக்கும்
8 எதிரியின் மகனான அக்பரை நான் தனிமையில் சந்திப்பதைக்கண்டு உனக்கு பயமா?
ஆம் , ஆனால் பயம் உங்களை நினைத்து அல்ல, அக்பரை நினைத்து
9 குற்றவாளிகளை மன்னிப்பதும் ஒரு குற்றமே
10 எதிரி எப்படி இருப்பான் ?அவனை எப்படி நான் அறிந்து கொள்ள?
எதிரியின் முகத்தை நீ பார்க்கவே முடியாது . அவன் நேருக்கு நேராக மொத மாட் டான் , முதுகில் தான் குத்துவான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வன்முறை மிக அதிகம் . வெட்டுவது . தலையை சீவுவது எல்லாம் கொடூரம்
2 ஜெய் பவானி என்ற டயலாக் மட்டும் 167 தடவை வருகிறது . காட்டுக்கத்தல் வேற . காது வலிக்குது
3 வில்லனின் மகனின் உதவியை நாயகன் ஏற்க மறுத்தது சாணக்கியத்தனம் அல்ல
4 ஆடு மேய்க்கும் சாதா பெண்ணின் உடலை உயிரோடு தீக்கிரையாக்கும் கொடுரம் வேற
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்-18+ .கிளாமர் எதுவும் இல்லை , ஆனால் பயங்கர வன்முறை .கர்ப்பிணிப்பெண்கள் , இளகிய மனம் கொண்ட ஆண்கள் பார்க்க வேண்டாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சரித்திரப்படங்களைப்பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டும் பார்க்கலாம் . சராசரிப்படங்களைப்பார்ப்பவர்கள் தவிர்க்கலாம் ரேட்டிங்க் 2.5 / 5
Chhaava | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Laxman Utekar |
Screenplay by | Laxman Utekar Rishi Virmani Kaustubh Savarkar Unman Bankar Omkar Mahajan |
Dialogues by | Rishi Virmani Irshad Kamil |
Based on | Chhava by Shivaji Sawant[1] |
Produced by | Dinesh Vijan |
Starring | |
Narrated by | Ajay Devgn |
Cinematography | Saurabh Goswami |
Edited by | Manish Pradhan |
Music by | A. R. Rahman |
Production company | |
Distributed by |
|
Release date |
|
Running time | 161 minutes[2] |
Country | India |
Language | Hindi |
Budget | ₹130 crore[3] |
Box office | est. ₹49.37 crore[4] |