Friday, May 31, 2019

NGK -சினிமா விமர்சனம்

ngk hd images માટે છબી પરિણામ

எம் ஜி ஆர் , என் டி ஆர் மாதிரி அரசியலில் 3 எழுத்து இனிஷியல் ஹிட் ஆவதால் படமும் அதே ராசிப்படி ஹிட் ஆகட்டும் என இப்டி டைட்டில் வெச்சிருக்காங்க போல , ஆனா ஹீரோ முழுப்பெயரையும் (அழகான தமிழ்ப்பெயர் என்பதால் )அப்டியே வெச்சிருக்கலாம்


 ஹீரோ ஒரு சமூக சேவகர் , கம்ன்யூனிச சித்தாந்தம் கொண்டவர் . ஊருக்கே நல்லது பண்றார், தமிழருவி மணியன் ரஜினியை உசுப்பி விடற மாதிரி ஒரு ஆள் சாதாரணமாவே நீ இவ்ளோ நல்லது பண்றே ,அரசியலுக்கு வந்தா எவ்ளோ  நல்லது பண்ணுவே என உசுப்பேற்றி விட நம்ம தளபதி  எப்படி  2 வருசமா பகல்  கனவு காண்கிறாரே இதோ ஆட்சி கலைஞ்சிடும், நாம முதல்வர் ஆகிடலாம்னு அதே போல் ஹீரோவும் அர்சியலில் இறங்க முடிவு பண்றார்

 ஒரு அரசியல்வாதி கிட்டே எடுபுடியா சேர்றார், கிட்டத்தட்ட அமைதிப்படை அமாவாசை மாதிரி , அவர் எப்படி படிப்ப்டியா முன்னேறி சி எம் ஆகறார் என்பதே கதை ( கொஞ்சம் காதுல பூ ரகம் தான்)


ஹீரோவா சூர்யா , அவரோட பாடி லேங்க் வேஜ் பிரமாதம் , விரைப்பா நிற்பது , எடுபுடியா ஆக கூச்சப்படுவது , நண்பனை கொலை செய்ய நேர்வது , குற்ற உணர்ச்சி என படம் முழுக்க அவர் நடிப்புக்குத்திஒஇனிதான்


நாயகியா சாய் பல்லவி . புருஷன் மேல சந்தேகப்படுவது , பொசசிவ்னெஸ் என கலந்து கட்டி ஓவர் ஆக்டிங் பண்றார்


 இன்னொரு ரம்பாவின் தொடை அழகு வாரிசு ரகுல் ப்ரீத்தி சிங்  கலக்கறார். அவரோட திமிர்த்தனம் , ஹீரோவைப்பார்த்ததும் ஏற்படும் உடல் மன மாற்றங்கள் , வாசம் பிடிப்பது என ஸ்கோர் பண்றார்.ஒரு டூயட்டில் டான்சில் கலக்கறார்

இளவர்சு குட் ஆக்டிங் 


இடைவேளை வரை வேகமாகப்போகும் திரைக்கதை பின் தடுமாறுது , ஏகப்பட்ட அசிஸ்டெண்ட் டைரக்டரகள் ஆளாளூக்கு ஒரு ஐடியா கொடுத்து கொழப்பி இருக்காங்க போல 


பி ஜி எம் பட்டாசு , பாடல்கள்  ஓக்கே ரகம் 





நச் டயலாக்ஸ்


எனக்கு உன் கிட்ட பிடிச்சதே உன் உடம்புல வர்ற வாசனைதான்

நான் பர்ப்யும் எதுவும் யூஸ் பண்ணலையே?
விவசாயி உடம்புல வர்ற மண்வாசனை ,ஹ்ம்ம்


2 தோற்கும் நேரத்துல உடையாதே!
ஜெயிக்கும் நேரத்தில் உளறாதே


3 இந்த நாட்டுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வித பைத்தியம் ,என் மகனுக்கு நாட்டு மேலயே பைத்தியம்


4 ஆயுதம் வாங்கறதுல இந்தியா முதலிடமா?அங்கங்க கக்கூஸ் போகவே தண்ணி இல்ல


5 தகுதி ,தராதரம் பார்த்து செய்யறது உதவி இல்லை,தேவைக்கு செய்யறதுதான் உதவி


6 அரசியல் ங்கறது சுடுகாடு மாதிரி,உள்ளே போனவன் பிணமாதான் திரும்பி வருவான்

7 கரை வேட்டி ன்னாலே (அரசியல்வாதி)மக்கள் கேவலமாதானே பாக்கறாங்க?


8 படிச்ச புள்ள நீ,இதை முதல்ல புரிஞ்சுக்கோ,அரசியலோ ,எதுவோ எந்த வேலையா இருந்தாலும் படிப்படியாதான் முன்னுக்கு வர முடியும்


9 எந்த ஒரு மிகப்பெரிய விஷயமா இருந்தாலும் அதோட ஆணிவேர்ல இருந்து ஆரம்பிக்கனும்


10 இந்திய நாட்டின் பண்பாட்டை அயல் நாட்டினன் வாங்கிட்டான்


11 என் பொன்மொழிகளை எனக்கே சொல்லிட்டுப்போறான் ,அபாயகரமானவன்


12 எதையாவது பத்த வைக்கனும்னா மேல இருந்தும் பத்த வைக்கக்கூடாது,கீழே இருந்தும் பத்த வைக்கக்கூடாது ,நடுவுல இருந்து பத்த வைக்கனும் ,அப்ப தான் மேலயும் பத்திக்கும் ,கீழேயும் பத்திக்கும்

13 ட்விட்டர் ,FB ல ட்ரெண்ட் ஆகறதை ஜனங்க 2 நாட்கள்ல மறந்துடுவாங்க


14  அதென்னாங்கடி,மாடர்ன் பொண்ணுங்க அடுத்தவ புருசனை கரெக்ட் பண்ண ரெடியா இருக்கீங்க?







தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

கேரளா திருவனந்தபுரம் ஸ்ரீ கிருபா ல 31/5/2019 9.30 am ஷோ சூர்யா ரசிகைகளுக்கான ஸ்பெஷல் ஷோ வாம்,அடேங்கப்பா ,மம்முட்டி ,மோகன்லாலுக்குக்கூட அப்டி நடந்ததா தெரில


கேரளா கோட்டயம் சங்கணாச்சேரி தன்யா ரசிகர் ஷோ 7 am. ஹவுஸ்புல்

தன்யா ரம்யா அப்சரா 3 தியேட்டர்கள்

a






3  போராடறது தப்புன்னா போராடற மாதிரி சூழ்நிலையை உருவாக்கறதும் தப்புதானே? தியேட்டரிக்கல் ட்ரெய்லர் (கே வி ஆனந்த் + சூர்யா + மோகன்லால் )

4 ஹீரோக்கு புரட்சிகர இளைஞர் ,கம்யூனிச சித்தாந்தம் பேசுகிற ,இயற்கை விவசாயி கேரக்டர் ,சூர்யாக்கு சுலபமா செட் ஆகிடுச்சு,இயக்குனர் செல்வராகவன் லைட்டா தடுமாறுகிற மாதிரி தோணுது.காதல்,த்ரில்லர் ,பேன்ட்டசி படங்களில் காட்டிய செய்நேர்த்தி இதுல காட்ட முடியல


5  அரசியல்வாதிக்கு எடுபுடியா வந்து ஹீரோ பண்ற வேலைகளை அவரது ரசிகர்கள் ஜீரணிக்க சிரமப்படலாம்


சூர்யா,ரகுல் ப்ரீத்திசிங்,இளவரசு பங்கேற்ற அந்த ஹால் சீன் அருமை.செ.ரா டச் ,அப்ளாஸ் அள்ளிடுச்சு

7  அதிமுக அமைச்சர் மாட்டிய பாலியல் குற்றச்சாட்டு ,ஆடியோ வெளியீடு பற்றிய முக்கிய காட்சி

8  இடைவேளை வரை படம் குட்.திரைக்கதை அமைப்பு அமைதிப்படையின் சாயல் வராமல் பார்த்துக்கொள்ள இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார் ,பிஜிஎம் பட்டாசு

ஹீரோ இன்ட்ரோக்கள்ல ரசிகர்கள் பேப்பர் துண்டுகளை,லாட்டரி டிக்கெட்களை திரை முன் வீசறாங்க.படம் முடிஞ்சதும் அவங்களையே சுத்தம் பண்ண வெச்சிடனும்


10 இரு நாயகிகளையும் ஓவர் ஆக்டிங்க் பண்ண வைத்திருப்பது செல்வராகவன் கேரியரில் புதுசு,பின்னடைவு.ஆனால் ரகுல் ப்ரீத்தி சிங் சாய் பல்லவிய ஓவர்டேக் கறார் ,அபாரம்


11 கல்யாண மண்டப சீனில் சிஎம் மும் ,எ.க.தலைவரும் பேசும் காட்சியில் எம்ஜியார் கலைஞர் இருவரையும் தாக்கிட்டாரு இயக்குநர்


12 திமுக ,அதிமுக 2 கட்சிகளையும் போட்டுத்தாக்கறாரு − இப்டிப்பேசிப்பேசியே ஜனங்களை ஏமாத்தறாங்க குறியீடு டயலாக்


13 விஜய் ரசிகர்களுக்கு செல்வராகவன் மேல காண்டா?சூர்யா மேலயா? காலைல இருந்து அனத்திட்டே இருக்காங்க?


14 செல்வராகவன் + விஜய் காம்போல வரவேண்டிய படமாம்,சூர்யா கைக்கு கை மாறிடுச்சாம்.இப்பதான் தெரியுது



சபாஷ் டைரக்டர்

 1  வழக்கமா செ. ரா படங்களில் ஒரு பெட்ரூம் சீனும் 4 கிஸ் சீன்களும் இருக்கும், அவை இதில் இல்லை. டீசண்ட்டா இருக்கு படம் 


2  பாட்ஷா படத்தில் ஹீரோ மெடிக்கல் ஷீட் வாங்கும்போது என பேரு மாணிக்கம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற ,மெகா ஹிட் சீனுக்கு நிகரான ஒரு ஹீரோ பில்டப் சீன் இருக்கு , கலக்கல் ரகம், ஆடியன்ஸ் அப்ளாஸ் அள்ளிடுச்சு


3   ரகுல் ப்ரீத்தி கேர்கடர் வடிவமைப்பு





லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)


1  லாஜிக் மிஸ்டேக் 1 − to வசனகர்த்தா செ.ரா

அரசியல் ங்கறது சுடுகாடு மாதிரி,உள்ளே போனவன் பிணமாதான் திரும்பி வருவான்
1 சுடுகாட்ல பிணத்தைப்புதைக்கறப்ப கூட வர்றவங்க உயிரோடதானே வர்றாங்க?
2 பிணமா எப்படி திரும்ப வர முடியும்?அதான் உயிர் இல்லையே?



2 ஒரு மாநில முதல்வரை பப்ளிக் ப்ளேஸ் ல ஜனங்க வேன் ல தீ வெச்சு கொளுத்துவது ஓவர் பூ சுற்றல்


3 சாய் பல்லவியின் ஓவர் ஆக்டிங் பல இடங்களில் எரிச்சல் ., அவருக்கு டூயட் சீனே வழங்காதது பெரிய பின்னடைவு ( படத்துக்கு இல்ல சாய் பல்லவி ரசிகர்களுக்கு)


4 ஒரு கட்சியின் தலைவர் செத்துட்டா அவரது வாரிசு அல்லது அவருக்கு அடுத்த இடத்தில் இருப்ப்பவர் தானே அந்த இடத்துக்கு வர முடியும் ?



சி.பி கமெண்ட்-NGK - முதல் பாதி பரபரப்பு ,விறுவிறுப்பு 2 வது பாதியில் இல்லாதது பெரிய"பின்னடைவு,க்ளைமாக்ஸ் நம்ப முடியல,சூர்யா வுக்கு வெற்றி,செல்வராகவனுக்கு தோல்வி ,பிஜிஎம் ,ரகுல்,குட் .விகடன் 41 ,ரேட்டிங்க் 2.75 / 5

Wednesday, May 29, 2019

கோதா”வரி” பேர்லயே வரி இருக்கே?

1    பா.ஜ., அரசு இரண்டாவது முறை, ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த அரசு, எப்படி ஆட்சி செய்யப் போகிறது என்பதை தான், நாம் பார்க்க வேண்டும்.=டி.கே.ரங்கராஜன்

வேடிக்கை பார்ப்பதுதான் நம் வாடிக்கை ஆச்சே? பாத்துடுவோம், வேற வழி?

============

2 பாஜகவின் , ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தையும் கைவிட வேண்டும்=டி.கே.ரங்கராஜன்

ஆர் எஸ் எஸ் க்கு நோ சொல்லனும்?

============
3 லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். - தினகரன்  

ஏன்? ஏத்துக்காம தான் இருந்து பாருங்களேன், என்ன ஆகப்போகுதுன்னு பார்ப்போம்

===========
4 வெற்றியை எதிர்பார்த்தோம்; கிடைக்கவில்லை.-  தினகரன்   

அப்போ அடுத்த தேர்தலில் தோல்வியை எதிர்பாருங்க, எதிர்பார்த்ததே கிடைக்க அதுதான் வழி

=============

 5 எங்கள் கட்சியின் செல்வாக்கு, போக போகத் தெரியும்- தினகரன்  

செல்வாக்கா? செல்லா வாக்கா?

==========

6 . 300 ஓட்டுச் சாவடிகளில், அ.ம.மு.க.,வுக்கான ஓட்டுகள் பூஜ்யம் காட்டியுள்ளன. எங்கள் முகவர்கள் அளித்த ஓட்டுகள் எங்கே. தேர்தல் ஆணையம் உரிய பதிலை சொல்ல வேண்டும்.'- தினகரன்  

உங்க முகவர்களே ஓட்டு உங்களுக்குப்போடலை-தேர்தல் ஆணையம்

===========

சுயேச்சை வேட்பாளராக இருந்ததால், மக்களுக்கும், எனக்கும் இடைவெளி நிலவுவதாக சொல்கின்றனர்.எனவே, புதிய கட்சியை துவங்க திட்டமிட்டுள்ளேன். =- பிரகாஷ்ராஜ் 

தனிக்கட்சியா? பிரCASHஇல்லா ராஜ் ஆகிடப்போறீங்க 


சுயேச்சையா நின்னே ஜெயிக்க முடியல, கட்சி ஆரம்பிச்சா மட்டும் ஜெயிக்க முடியு மா?
============

8  குதிரை பேரம் போன்ற செயல்களில், பா.ஜ.,வுக்கு நம்பிக்கையில்லை. - சிவராஜ் சிங் சவுகான்

நம்ம ரேஞ்சுக்கு யானை பேரம் ஓக்கேவா?

=============

9 மத்திய பிரதேச மாநில, காங்., அரசைக் கவிழ்க்க, எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், மாநில காங்கிரஸ் அரசு, தானாக கவிழ்ந்தால், எங்களால் எதுவும் செய்ய இயலாது- சிவராஜ் சிங் சவுகான்

என்னமோ சிக்னல் கொடுக்கற மாதிரி இருக்கே?
============


10 . மாநில அரசைக் கவிழ்க்க விரும்பியிருந்தால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமையவே விட்டிருக்க மாட்டோம்.- சிவராஜ் சிங் சவுகான்

அப்போ உங்க சம்மதத்தின் பேரில்தான் காங் அரசு அமைஞ்சுதா?
==============
11  சட்டசபை இடைத்தேர்தலில், சில தொகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெற்று இருந்தாலும், இந்த அரசு, அதிகாரப் பொறுப்பில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. எனவே, இ.பி.எஸ்., தலைமையிலான அரசு, உடனே பதவி விலகவேண்டும்.-வைகோ

ஜூன் 3 ந்தேதி புதிய அரசு அமையும் , பழைய அரசு கவிழும்னு யாரோ முழக்கம் இட்டாங்களே?:

============

12 , தேர்தல் போரில் தோற்றாலும், பா.ம.க., களத்தை இழக்கவில்லை. -ராமதாஸ்: 

டெபாசிட் = களம்?

=============

13 தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, சரி செய்து, அடுத்து வரும் தேர்தலில், வெற்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.-ராமதாஸ்: 

அப்போ அடுத்த தேர்தலில் திமுக கூட கூட்டணியா?


============


14 முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய, நான் முன்வந்தேன். ஆனால், கட்சி அதை நிராகரித்துவிட்டது.-மம்தா பானர்ஜி: 

அப்போ உங்க கட்சி ஆளுங்களே உங்க பேச்சை கேட்கறதில்லை>?

============


15  நான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூரு மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.-பிரகாஷ்ராஜ்  

டப்பிங் வாய்ஸ் சங்கத்துல பேர் குடுத்து பதிவு பண்ணிக்குங்க 

===========
16  இன்னும், ஒரு ஆண்டில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வருகிறது. அதில், எங்களது வேட்பாளர்களை களம் இறக்கி, பெரிய அளவில் ஆதரவை பெறப் போகிறேன்- பிரகாஷ்ராஜ் 

 இவரு தோற்றது பத்தாதுனு இன்னும் ஏகப்பட்ட பேரை தோற்கடுக்கப்போறாரு

=============
17  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, எம்.பி.,க்களில், 43 சதவீதம் பேர் மீது, கிரிமினல் வழக்குகள் உள்ளன' =ஏ.டி.ஆர்., எனப்படும்-
ஜனநாயக சீரமைப்பிற்கான சங்கம் என்ற, தனியார் அமைப்பு 

மீதி 57% பேரு கமுக்கமா தப்பு பண்ணி இருப்பாங்க போல 


================

18 தமிழகத்தில் நடந்த, லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், கட்சி தாவிய பலர், வெற்றி பெற்றுள்ளனர்-செய்தி

 பச்சோந்தியா மாறுவதற்க்கு ஜனங்க க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாங்க?

===============


கோதா”வரி” பேர்லயே வரி இருக்கே? அதான் பயமா இருக்கு

==============


20 தேர்தல் முடிவுகள் குறித்து, ஆத்ம பரிசோதனை செய்வோம்' -, ராமதாஸ் 

இந்த டெஸ்ட்டை எல்லாம் கூட்டணி வைக்கும்போதே கட்சிக்காரங்க கிட்டே ஆலோசனை கேட்டு நடந்திருக்கலாமில?

==================

Tuesday, May 28, 2019

திருடர்கள் முன்னேற்றக்கழகம் = மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்கலஸ்

1  எதிரி உதிரி


==============


சம்பளம் வருதுல்ல ,அது"லாபம்தானே?





=============


காமராஜர் திருடலை
அடுத்தவன் சொத்தை ஆட்டையைப்போடலை வாரிசு அரசியல் பண்ணலை. அரசியல்வாதிக்கான தகுதியே இல்லை,எப்படி ஜெயிப்பாரு?



--------------

4  38 திருடர்கள் ஜாக்கிரதை
ஆரம்பிச்சிட்டான் ஜாமீன்காரன்.





=================

2ஜி வழக்கு மறுபடி வருது
திருடனுங்களுக்கு ஆப்பு ரெடி






================

நாங்க,பயப்படலை,
ஆனா லைட்டா பயம் தான்




=============

7  திருடர்கள் முன்னேற்றக்கழகம் = திமுக




==============

8  நம்ம ஜாதகத்துல"கடைசி"வரை அந்த"யோகம்"மட்டும் இல்லீங்க்ணா





==============

9 மாப்பு,எப்படி நம்ம மேப்பு?
அடப்பாவிகளா 😦😧





==================
10 வட நாடுன்னா வட சுடறது நம்ம பழக்கம்







செயல் தலைவர் செயலாற்றல் தலைவரா இல்லைங்கறீங்களா?

 1  நாங்கள், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை எதிர்க்கிறோம். கூட்டணியில் இருந்தாலும், எங்களது கொள்கைகளில் மாற்றமில்லை- அன்புமணி:

 நம்ம கொள்கையே கூட்டணில இருக்கனும், அதுக்கு எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதுன்னுதானே? அதனாலதானே சட்டமனறத்தேர்தல், ஊராட்சித்தேர்தல்லயும் கூட்டணி தொடரும்னீங்க? 


=============
2   : மக்கள் அளித்துள்ள தீர்ப்பை, மாற்றுவதற்கு முயற்சி நடக்கிறது.- சந்திரபாபு நாயுடு

அப்படிப்பட்ட முயற்சி உடையார் இகழ்ச்சி அடைவார், கவலை வேண்டாம்

=============


: ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், முறைகேடு செய்வதற்கு முன்னோட்டமாகவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக வெளியிடப்பட்டுள்ளன - குலாம்நபி ஆசாத்

 எல்லா மீடியாக்களும் விலைபோய் விட்டன அப்டீங்கறீங்களா? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் PAY

============
4 ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில உணர்வு இன்று அதிகரித்து வருகிறது. அகில இந்தியக் கட்சிகள், அந்தந்த மாநில நலன்களைக் கருத்தில் கொள்வதில்லை என்ற எண்ணமும், வலுப்பெற்று வருகிறது. ஆகையால், மாநிலக் கட்சிகள் செல்வாக்குப் பெற்று, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற சூழலை நோக்கி, இந்தியா காலடி எடுத்து வைக்க, இத்தேர்தல் வழிவகுக்கும்.-
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்   


மாநில உணர்வு பிரிவினைக்குதானே வழி  வகுக்கும்?


===========


 
5   தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியான பின், சிலர் அந்த முடிவுகளை ஏற்க மறுத்து, வீண் சண்டையிட்டு, கருத்துக் கணிப்பு தவறானது என, கூறிக் கொள்கின்றனர். ஆனால், பலதரப்பட்ட கருத்துக் கணிப்புகளும், ஒரே மாதிரியான முடிவுகளையே வெளியிட்டுள்ளன. எனவே, ஓட்டு கணிப்பை ஒட்டியே இம்முறை, தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கும் என்பது, ஊர்ஜிதமாகி உள்ளது.- அருண் ஜெட்லி 


ஷேர் மார்க்கெட்  குப்னு ஏறுவதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்டதுனு சொல்றாங்களே?


============ 
ஓட்டு கணிப்பு முடிவுகளை, நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஓட்டு கணிப்பில் ஈடுபட்ட பெரும்பாலான நிறுவனங்களும், செய்தி தொலைக்காட்சி சேனல்களும், பா.ஜ.,வுக்கு ஆதரவானவை. இதுவும், பா.ஜ.,வின் ஒரு தேர்தல் உத்தி தான். -எஸ்.சுதாகர் ரெட்டி  


 தேர்தலே முடிஞ்சிடுச்சு , இதுல என்ன தேர்தல் உத்தி?


==============

7   என் கணிப்புப்படி, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, 200க்கும் குறைவான இடங்களில் தான், வெற்றி கிடைக்கும்.-எஸ்.சுதாகர் ரெட்டி  


ஒரு 100  சீட் கம்மியா கணக்கு போட்டுடீங்க


=============
8  ,கருணாநிதி அளவுக்கு, ஸ்டாலின், நம்பகமான, செயலாற்றல் மிக்க தலைவராக, மக்களிடத்தில் தன்னை நிறுவிக் கொள்ளவில்லை.-கே.பாலு  

செயல் தலைவர் செயலாற்றல் தலைவரா இல்லைங்கறீங்களா?


===========


9   தற்போது நடக்கும் ஆட்சியே போதும் என்ற மனநிலையே, மக்களிடம் இருக்கிறது. =கே.பாலு  

 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து?

=============

10 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது, நம்பகம் இல்லாத தன்மையை ஏற்படுத்த, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்கின்றன. ஆனால், ஒருமுறை கூட, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான புகார் எதையும், அவர்களால் நிரூபணம் செய்ய முடியவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக, அவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்கின்றனர். ஆனால், நாட்டு மக்கள், அந்தப் பிரசாரத்தை ஏற்க மாட்டார்கள்.-

முக்தார் அப்பாஸ் நக்வி : 

 தேர்தல் கமிஷனே ஏத்துக்கலை.


============

11  இருபது ஆண்டு பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்ற வேண்டுகோளுடன், துாத்துக்குடி மக்களிடம் ஓட்டுகள் கேட்டேன்.- தமிழிசை

நாங்க உப்பு உற்பத்தி பண்ற இடத்துல இருக்கறவங்க ரோஷம் ஜாஸ்தின்னுட்டாங்களா? 

============

12   கருணாநிதி அளவுக்கு, ஸ்டாலின், நம்பகமான, செயலாற்றல்மிக்க தலைவராக, மக்களிடத்தில் தன்னை நிறுவிக் கொள்ளவில்லை -கே.பாலு

 ராமதாஸ் அளவுக்கு அன்புமணி வளராத மாதிரியா?

=============

13 ,  ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில உணர்வு அதிகரித்து வருகிறது. அகில இந்தியக் கட்சிகள், அந்தந்த மாநில நலன்களைக் கருத்தில் கொள்வதில்லை என்ற எண்ணமும், வலுப்பெற்று வருகிறது-கே.எஸ்.ராதாகிருஷ்ணன்:

 தமிழகம் , கேரளா வில் மட்டும்தானே அப்படி?


============



==============

14 :துாத்துக்குடியில் மட்டுமின்றி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, மோடி அரசு உரிமம் வழங்கியுள்ளது. இது, ஒட்டுமொத்த தமிழக மக்களையும், கேவலப்படுத்துவதாக உள்ளது. பல வேதி நச்சு திட்டங்களின் மூலம், தமிழகத்தையே நாசமாக்கும் முயற்சியில், மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் இருந்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே பாதுகாக்க வேண்டிய நெருக்கடி உருவாகி உள்ளது.-திருமாவளவன் 

 தமிழ்நாடுதான் பாஜகவுக்கு ஓட்டுப்போடலையே? பழி வாங்கும் நடவடிக்கைனு யாரும் இன்னும் கிளம்பலையா? 

================
15   கூட்டணிக்காக, பா.ம.க., கொள்கையை விட்டுக் கொடுக்காது என்றால், அ.தி.மு.க.,வும் கூட்டணிக்காக, கொள்கையை விட்டுக் கொடுக்காது. =ராஜேந்திர பாலாஜி


 அப்போ அதிமுக பாமக பிளவு உறுதியா? 

==============
'16  அ.தி.மு.க.,வில் தற்போது, சின்ன சிதறல் ஏற்பட்டுள்ளது' என, எம்.எல்.ஏ., கருணாஸ் கூறியுள்ளார். அ.தி.மு.க.,வைப் பற்றி கருத்து சொல்ல, கருணாஸ் அரசியல் மேதை இல்லை. அவர், அ.தி.மு.க.,வில் மாவட்டச் செயலரோ, உயர்மட்டக் குழு உறுப்பினரோ இல்லை. அவருக்கும், அ.தி.மு.க., கட்சிக்கும், எந்தத் தொடர்பும் இல்லை.-ராஜேந்திர பாலாஜி

 கருணாஸ்க்கு எதிராக அதிமுக வின் தர்ணாஸ் இருக்குமா?


============
17 சிறுபான்மை மக்களுக்கு, பாதுகாப்பு அரணாக எப்போதும், த.மா.கா., இருக்கும். சிறுபான்மையினரின் உரிமைக்காக, மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்துவேன். மூப்பனார் வழியில், சிறுபான்மையினர் வளர்ச்சிக்காக, த.மா.கா., தொடர்ந்து பாடுபடும்.-  வாசன்


சிறுபான்மை , பெரும்பான்மைனு ஏன் பிரிச்சுப்பேசறீங்க? அனைத்துத்தரப்பினருக்கும் ஒரே மாதிரி இருப்போம்னா வேலை முடிஞ்சது


=================

18 தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், நீர் மேலாண்மை குறித்து பேசுவதற்கு, பா.ம.க., தான் காரணம். - அன்புமணி 


 மதுவிலக்கு, புகையிலை எதிர்ப்பு , வரிசையில் நீர் மேலாண்மை, விவசாய நலன் , எல்லாம் நல்லதுதான், ஆனா இந்த  ஜாதிக்கட்சி அடையாளம் தான் பின்னடைவு

================


19   காவிரி - கோதாவரி திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும். - அன்புமணி 

1/39  ஐ வெச்சுக்கிட்டு என்ன அழுத்தம் தர முடியும்?, போன தடவை 30+ எம் பி சீட்ஸ் ஜெயிச்சே ஒரு அழுத்தமும் தர முடியல

================


20  'சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில், சட்டத்தை மதித்து தான் அடுத்த பணியை மேற்கொள்வோம்' என, முதல்வர் தெளிவாகக் கூறியுள்ளார்.- அன்புமணி 


சட்டத்தை மீறி செய்வோம்னு முதல்வர் கூற முடியுமா? 


===================

================