Sunday, July 31, 2011

டென்ஷன் பார்ட்டிங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா...நர்ஸ் நளினா சொல்றதை கேளுங்கப்பா

http://thavorngrandplaza.com/phuket-travel/wp-content/uploads/2010/05/tb_Clinics_450x300.jpg

உளைச்சலைப் போக்க உணவே மருந்து!

 ஆரோக்கியப் பக்கம்!
ன வலிமையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதே நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில்தான் இருக்கிறது. உடலையும், மனதையும் உற்சாகமாக இயங்க வைக்க, ஆரோக்கியமான சரிவிகித உணவை  கடைப்பிடித்தாலே போதும், மனஅழுத்தத்தை முற்றிலும் குறைக்கலாம்.  நாம் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் குறித்து மதுரை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உணவியல் நிபுணர் வி.சுகன்யா இங்கே விரிவாக சொல்கிறார்.


'எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்ற தூண்டுதல் தேவைதான். ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாகும்போதுதான் மன அழுத்தம் என்கிற 'ஸ்ட்ரெஸ்’ நம்மை இறுக்கிப் பிடிக்கத் தொடங்குகிறது. உதாரணத்திற்கு... இன்றைக்கு நாம் 10 வேலைகளை முடித்திருக்கிறோம் என்றால், நாளைக்கு அதை 12 அல்லது 13 என்பதுபோல் அதிகரித்துக் கொள்ளலாம்.  அதுவே, ஒரே நாளில் 20 வேலைகள் என இலக்கு நிர்ணயிப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.


நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் போன்ற பல்வேறு அடிப்படை சத்துக்களைக் கொண்டதுதான் ஆரோக்கியமான உணவு.  இவை சாப்பிடும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


தொடர்ச்சியான வேலையால்,  பெரும்பாலானோர், காலை உணவை தியாகம் செய்துவிடுவதுண்டு. இது தவறு! இரவு உணவுக்கும் காலை உணவுக்கும்,  உள்ள இடைவெளி அதிகம். காலை உணவை தவிர்க்கும்போது உடலில் போதிய சக்தி இல்லாமல் போய்விடும். இதனால், சிறிய மன அழுத்தம் ஏற்பட்டாலும், அது அதிகமாகி விடும்.  தலைவலி, தலைசுற்றல், கவனக் குறைவு போன்ற கூடுதல் பிரச்னைகள் தலைதூக்கும்.'' என்றவர், மன அழுத்தம் குறைவதற்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினார்.

http://www.odt.co.nz/files/story/2009/11/youth_health_clinic_nurse_kate_balfour_takes_the_b_1449208845.JPG

'மன அழுத்தத்தைக் குறைப்பதில், நார்ச்சத்து நிறைந்த தானியங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவை 'செரடோனின்’ என்கிற ஹார்மோனை சுரக்க வைக்கிறது. இது மூளையை அமைதியாக வைத்திருக்க உதவும். ஆரஞ்சுப் பழத்தில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால், அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். பசலைக் கீரை மன உளைச்சலை குறைக்கச் செய்யும். மேலும், மீன் உணவில் அதிகமாக இருக்கும் ஒமேகா-3 என்கிற கொழுப்புச் சத்தும் மனஅழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காபியை தவிர்ப்பதாலும், டென்ஷன், ஸ்ட்ரெஸிலிருந்து பெருமளவு விடுபடலாம். மன அழுத்தம் இருப்பவர்கள், காபிக்குப் பதிலாக பால் சேர்க்காத பிளாக் டீ ஒரு நாளைக்கு இருமுறை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். தினசரி உணவில் கேரட், வெள்ளரி போன்ற பச்சைக் காய்கறிகள், பழ வகைகளை சேர்த்து சாலட்டாக சாப்பிடவேண்டும். எண்ணெய், நெய், டால்டா, தேங்காயின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். 

மன அழுத்தம் இருப்பவர்கள், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை வாரத்துக்கு மூன்று முறை 15 கிராம் உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், ரத்தத்தில் சர்க்கரை,  கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், இவற்றை குறைவாக எடுத்துக் கொள்ளவேண்டும். பெரும்பாலும் எண்ணெய் வகைகள் மற்றும் இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

உடலில் தண்ணீர் அளவு குறைந்தாலும், போதிய தூக்கமின்மையாலும் மன அழுத்தம் ஏற்படக்கூடும். தினசரி குறைந்தது இரண்டரை லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். டென்ஷன் இருக்கும்போது தண்ணீர் குடித்தால் நல்லபலன் கிடைக்கும். ஏழு மணிநேர தூக்கம் மிக அவசியம். தவிர்க்கமுடியாமல், இரவு விழிக்க வேண்டி இருந்தால், மறுநாள் சீக்கிரமாகத் தூங்கிவிடுவது நல்லது.
மன அழுத்தத்துக்கு செலவே இல்லாத மருத்துவம் நடைப்பயிற்சிதான். தினசரி குறைந்தது அரை மணி நேரம் மிதமான வேகத்தில் தொடர்ந்து நடப்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது.

http://www.spraguephoto.com/stock-photos/9935-Nursing-students-in-class,-Nursing-school-at-Muttuchira,-Kerala,-India.%7C9186.jpg
சிகரெட், மதுப் பழக்கம்,  மன அழுத்தத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரித்து விடும்,  ஜாக்கிரதை! தொடர் மன அழுத்தம் இருந்தால் நீரிழிவு, இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது.’ என்றார் சுகன்யா அக்கறையுடன்


நன்றி - டாக்டர் விகடன்


டிஸ்கி - ஈரோட்டில் புத்தகத்திருவிழா நடக்கிறது.. ட்விட்டர் நாயகர்கள் கம் ஈரோடு, கோவை,திருப்பூர் ட்விட்டர்ஸ் கம் பதிவர்கள் சிலர் ஈரோடு வர்றாங்க.. ஜஸ்ட் எ ஃபார்மல் மீட் .. வர்றவங்க எல்லாம் வாங்க.. இதுவரை வர்றதா சொன்னவங்க

1. அவினாசி ராஜன் லீக்ஸ் ( ஆல் இன் ஆல் அழகு ராஜாக்கடை )

2. திருப்பூர்  கே பி கிருஷ்ணகுமார் ( பரிசல்காரன் )

3. கோபி செல்வா ( கோமாளி செல்வா)

4. ஷர்புதீன் ( ரசிகன்)

5. கே தீபக் குமார்

Saturday, July 30, 2011

கண்ணன் ஏமாந்தான் இளம் கன்னிகையாலே.. (ஆன்மீகம்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwEBdYyJBnojIM5MS5DwwgNhkHmr3J6cjEkdvLR3X67t8OH6dFeD_r7kY999mxAn8HjLPzXnbd-BwkK79rwAGrUAJxBrKf8KbIj2_hksiijBtqoGnTzYqkgQdfLdNAmb7yHP5baMXy3XA/s1600/Lord_Krishna_1.jpgகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!


ரு குடும்பத்தின் மிகப் பெரிய சொத்து எது தெரியுமா? காசு- பணமோ, வீடு- வாசலோ, நகை நட்டுகளோ, வண்டி- வாகனங்களோ... எதுவுமில்லை. மிகப் பெரிய சொத்து, குழந்தைகள்தான்; வாரிசுகள்தான்!


ஒரு குழந்தை இந்த உலகில் ஜனித்திருக்கிறது; அதாவது, தாய்க்குப் பிரசவ வலி அதிகமெடுத்து, ஆஸ்பத்திரியில் சேர்த்து, மருத்துவர்களின் உதவியுடன் குழந்தை பிறந்திருக்கிறது என்றால், உடனே அந்தக் குழந்தையின் தகப்பன் என்ன செய்வான்? நாமெல்லாம் என்ன செய்தோம்? விறுவிறுவென ஓடிப் போய், குழந்தையைப் பார்ப்போம்; பரவசமாவோம். 

ஊருக்கும் உறவுக்கும் போன் போட்டுத் தகவல்கள் சொல்வோம். எதிர்ப்படுகிற தெரிந்தவர் அறிந்தவர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்வோம். அது கல்கண்டாகவும் இருக்கலாம்; சாக்லெட்டாகவும் இருக்கலாம்; மைசூர்பாகும் தரலாம்! ஏனெனில், குழந்தை என்பது குதூகலம் சம்பந்தப்பட்டது; சந்தோஷத்துக்கு உரியது; இனிமையானதொரு உறவு!


ஆனால், குழந்தை பிறந்ததும், சுற்றியுள்ளவர்களுக்கும் சுற்றத்தாருக்கும் சின்ன கல்கண்டு கொடுத்துக்கூட மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளாதவர் யார் தெரியுமா? வசுதேவர்தான்! பாவம் அவர். சந்தோஷம் மொத்தத்தையும் உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்துக்கொண்டார்.

http://1.bp.blogspot.com/_Mb0xoLXa_kU/TH1FmsEOr5I/AAAAAAAAAW8/DipS8nnBMSk/s1600/Krishna_family.jpg

அதுமட்டுமா? இன்னொரு விஷயம். ஸ்ரீராமருக்கும் ஸ்ரீகண்ணனுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வித்தியாசத்தையும் இங்கே பார்க்கவேண்டும். சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராமர்; ஒரு பகல் பொழுதில், அரண் மனையில், விளக்குகள் அணி திரண்டு ஒளியைத் தந்துகொண்டிருக்க... ஸ்ரீராமர் அவதரித்தார். இங்கே... சந்திர குலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்ண பிரான். இருள் கவிந்திருக்கும் இரவு வேளையில், இருட்டு சூழ்ந்திருக்கிற சிறைச்சாலையில் பிறந்தார் ஸ்ரீகண்ணன். 
சரி... இத்தனை இருட்டுக்கு நடுவில், குழந்தையை எப்படிப் பார்த்தா ராம் வசுதேவர்? கண்ணனின் 32 பற்களும், சந்திரனுக்கு நிகராக ஜொலித்தனவாம்! அந்த ஜொலிப்பின் வெளிச்சத்தில், குழந்தையின் திருமுகத்தைப் பார்த்து ரசித்தார் வசுதேவர்.

என்னடா இது... பிறந்ததுமே பல் முளைத்துவிட்டதா என்ன என்று வியக்கிறீர்கள்தானே? பற்கள் மட்டுமில்லை; நான்கு தோள்களும் சங்கு- சக்கரமும் திகழப் பிறந்தவன், அவன்! அதைப் பார்த்துப் பதறிவிட்டனர், வசுதேவரும் தேவகியும்! பின்னே... நான்கு தோள்கள்; நான்கு திருக்கரங்கள் எனக் குழந்தை பிறந்திருக் கிறான் என்கிற விஷயம் கம்சனுக்குத் தெரிந்தால், அலறிப் பதறிக்கொண்டு, குழந்தையை அழிக்க ஓடிவந்து விடுவானே எனப் பயந்தனர்.

பிறகு, அவர்களின் வேண்டுகோளின்படி, அந்தப் பராபரன், நம்மைப் போல இரண்டு தோள்களுடன், இரண்டு கைகளுடன் காட்சி தந்தான்.

http://img.dinamalar.com/data/images_news/tblanmegamnews_60067385436.jpg
இன்னொரு சுவாரஸ்யம்... குழந்தை பிறந்ததும், அந்த மகிழ்ச்சியை இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதுடன் மட்டுமின்றி, அந்தணர்களுக்குத் தானம் அளித்தும் குதூகலிப்பார்கள், அல்லவா?

தனக்கு ஸ்ரீகண்ணன் பிறந்ததும், 'ஆயிரமாயிரம் அந்தணர்களை அழைத்து, அவர்களுக்கு ஆயிரமாயிரம் பசுக்களையும், அவர்கள் அணிந்துகொள்வதற்கு ஆயிரமாயிரம் தங்கப் பூண்களையும் (தங்கப் பூணூல்), போர்த்திக்கொள்வதற்கு ஆயிரமாயிரம் ரத்தினக் கம்பளங் களையும், ஆயிரமாயிரம் தங்கத் தட்டுகளையும், அந்தத் தட்டுகளில் ஆயிரமாயிரம் பொற்காசுகளையும் வழங்கு கிறேன்’ என்றாராம் வசுதேவர்.


சுக்கிராச்சார்யருக்குக் குழப்பம். 'சிறைச்சாலைக்குள் இருக்கிற வசுதேவர், அத்தனை அந்தணர்களையும் எப்படி, எங்கே அழைப்பார்? அவர்களுக்கு வழங்குவதாகச் சொல்கிற பசுக்களை எங்கிருந்து பிடித்து வருவார்?’ என்று தவிப்பு!


ஆனால், வசுதேவர் என்ன சொன்னார் தெரியுமா? 'ஒன்றைக்கூட கொடுக்க முடியாதபடிக்கு, சிறையில் இருக்கிறேன்தான்! ஆனாலும் மனதார, வாயாரச் சொல்லி மகிழலாமே என்பதால்தான் இப்படிச் சொன்னேன்’ என்கிறார். 'சரி... ஒன்றோ இரண்டோ, ஒருவருக்கோ இரண்டு பேருக்கோ தருவதாகச் சொல்லிக் கொள்ளவேண்டியதுதானே?’ என்று கேட்டதற்கு, 'கொடுக்கவே முடியாது என்று இருக்கிற நிலையில், ஒன்று என்று சொன்னால் என்ன... ஆயிரம் என்று தாராளமாகத்தான் சொன்னால் என்ன?’ என்று சொல்லிப் பூரிக்கிறார் வசுதேவர்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBmewvM-saAmIIbF-j87E-0Uoj5jQ5M9hGV3zBG_9cc7w5EbpxeUOIA_soZyOUdFGdZAZCivX1W4KtzITARIN39kwtzpql-Ar8vA9qthBPVkgp60Q58MS2JCsywchiR6OzK10wOdkHcXY/s400/Krishna2.jpg

பகவானுக்கு உள்ள திருநாமங்களில் வாசுதேவன் எனும் நாமமும் ஒன்று. வாசுதேவன் என்றால்... எங்கும், எப்போதும் வசிக்கிறவன் என்று அர்த்தமாம்! ஆனால், இங்கே வசுதேவனின் மைந்தன் வாசுதேவன் என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது! அதுதான் வசுதேவருக்கு தரப்பட்டிருக்கிற மரியாதை. நந்தகோபனுக்கு மட்டும் என்ன குறைச்சல்? 

அவருக்கு தந்தைக்கு உரிய மரியாதையும் சந்தோஷமும் எப்படியெல்லாம் கிடைத்தது தெரியுமா?


குழந்தையில் அழகு, அழகில்லாதது என்கிற வித்தியாசங்கள் கிடையாது. குழந்தை என்றாலே அழகுதான்! அதிலும் குழந்தை கொழுகொழுவென்று இருந்தால், கொள்ளை அழகு. பகவான் ஸ்ரீகண்ணன் சிறுவயதில், குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்தான் தெரியுமா? இளங்களிறு போல இருந்தானாம்! அதாவது, குட்டி யானையைப் போல் மிடுக்குடன் திகழ்ந்தான். வெண்ணெய், பால், தயிர் என்று சாப்பிட்டுச் சாப்பிட்டு வளர்ந்தவன் அல்லவா, அவன்?!


இன்றைக்கு மருத்துவர்கள் சொல்கிற அட்வைஸ், 'ஒயிட்டா இருக்கிற உணவை கட் பண்ணுங்க’ என்பதுதான்! அதாவது பால், தயிர், வெண்ணெய், சாதம் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். நம்மில் பலரும், 'வெண்ணெய், தயிர், பால்’ என்றெல்லாம் ஒரு பேப்பரில் எழுதி, வீட்டில் வைத்திருந்தால்கூட, உபத்திரவம் வந்துவிடும் எனப் பயப்படுகின்றனர். 

ஆனால், பகவானுக்கு இந்தப் பிரிவினைகள் ஏதுமில்லை. குடித்ததே தயிர், கண்டதே பால், உண்டதே வெண்ணெய் என வளர்ந்தவன், கண்ணபிரான்! அவன், குட்டி யானையாக வலம் வரத்தான் செய்வான்.


குமரனாக நந்தகோபனிடமும், இளம் சிங்கமாக யசோதையிடமும் வளர்ந்தான் கண்ணன் என்கிறாள் 'மார்கழித் திங்கள்’ பாடிய ஸ்ரீஆண்டாள். அதாவது, நந்தகோபனைக் கண்டால் பவ்யமாக இருப்பான் கண்ணன். அதுவே, தாயார் யசோதையிடம் சண்டித்தனம் செய்து, ஏகத்துக்கும் சேட்டைகள் செய்வான் அவன்.


பிறந்ததுமே யமுனையைக் கடந்து, அக்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டான் அல்லவா, கண்ணன்? அப்படிக் கண்ணன் அங்கே போனதும் ஊரே கூடியதாம்; குதூகலித்ததாம். 'நான்தான் முதல்ல பாப்பேன்; நான்தான் முதல்ல பாப்பேன்’ என்று நந்தகோபன் வீட்டு வாசலில் பெரிய கூட்டமே நின்றது. இதைக் கண்டு கிடுகிடுத்துப் போனாளாம் யசோதை. 

'இங்கே பஞ்ச லட்சம் பெண்கள் இருக்கிறார்களே... அவர்கள் அனைவரும் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்; தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்கிறார்கள்; மடியில் கிடத்தி மகிழ வேண்டும் என்கிறார்கள். அத்தனை லட்சம் பெண்களும், குழந்தையை மடியில் கிடத்தி மகிழ்வதற்கு, என்ன செய்வது?’ என கைபிசைந்து தவித்தாள்.

கடைசியாக... வீட்டு வாசலில், 'முதலில் இவள், அடுத்தது அவள், மூன்றாவது இவள், நான்காவது, ஐந்தாவது...’ என்று மிகப் பெரிய பட்டியல் போட்டு, அதன்படி சட்சட்டென்று அவர்கள் குழந்தையை வாங்கி, மடியில் போட்டுக் கொஞ்சிவிட்டு, அடுத்தவரிடம் கொடுத்துவிட... அவர்கள் கொஞ்சிக் குதூகலித்து அடுத்தவரிடம் குழந்தையைத் தர... என்று அந்த ஊரே கொஞ்சி மகிழ்ந்ததாம்!


இவை அனைத்தையும் பார்க்கின்ற பேறு, பாக்கியம் எல்லாம் நந்தகோபனுக்குத்தான் கிடைத்தது. அதிலும் குறிப்பாக, மடியில் கண்ணனைக் கிடத்தி, அவனது கன்னத்தை வருடியபடியே பெண்ணொருத்தி, 'உங்க அப்பா யாருப்பா?’ என்று கேட்டாள்.

குழந்தைக்கு பேச்சு வருகிறதோ இல்லியோ, அப்படியே வராவிட்டால் கூட, அது ஏதோ சொல்ல... 'அட... குழந்தை அப்பான்னு கூப்பிடறதே... தாத்தாங்கறதே... அத்தையைக் கூப்பிடறது’ என்றெல்லாம் சொல்லிக் குதூகலிக்கிறவர்கள்தானே, நாம்?!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJZIndPLnfk5WgBNxE4iw61NsVqDgZsyuZOdbMCmVVQh1ZjCfb8FCvawUD97gEWFdIMlgDKyTBt-8j0_81u9YAqaczJm-fKkUCRtJkGofL0xiKr-a2DYmQNCccXVQgJ1osuTOQ0mC7OQ8/s1600/Krishna.jpg
அந்தப் பெண்மணி கேட்டதும், வசுதேவர் என்று தந்தையின் பெயரைச் சொல்ல... கண்ணபிரான் சட்டென்று 'வ’ என்று சொல்லிவிட்டு உடனே நிறுத்திக்கொண்டார். 'இப்போதுதான் பிறந்திருக்கிறோம்; இன்னும் பாடசாலைக்கே போகவில்லை; பேச்சே வரவில்லை. அப்படியிருக்க... இதற்கு எப்படி பதில் சொல்வது!’ என்று யோசித்த கண்ணன், தாமரை இதழ்கள் போன்ற தன் விரலை மெள்ள நீட்டி, தன்னுடைய கடைக்கண்ணால், ஓரக்கண்ணால் நந்தகோபனைப் பார்க்க... 'அட... அப்பா யாருன்னு காட்டிருச்சே குழந்தை’ என்று ஒருத்தி சொல்ல... உடனே இன்னொருத்தி, 'குழந்தை அவங்க அப்பாவைப் போலவே, அவர் ஜாடையிலேயே இருக்கு’ என்று சொல்ல... களுக்கென்று சிரித்துக்கொண்டாராம் ஸ்ரீகிருஷ்ணர். 

அங்கிருந்தவர்கள் அனைவரும், குழந்தையின் சிரிப்பைக் கண்டு பூரித்துப் போனார்களாம்! ஆக, அத்தனை சந்தோஷங்களையும் பெருமைகளையும் நந்தகோபனுக்குக் கொடுத்தாலும், வசுதேவரைப் போற்றத் தவறவில்லை ஸ்ரீகண்ணனின் அடியவர்கள். அதனால்தான் வசுதேவனின் மைந்தனுக்கு வாசுதேவன் என்கிற திருநாமமே அமைந்தது.


வாசுதேவன் என்று சொன்னால், அந்தக் கண்ணன் மகிழ்வான். குளிர்ந்த மனத்துடன், நாம் கேட்பவற்றையெல்லாம் வாரி வழங்குவான். 'உங்க அப்பா அவர்தானே...?’ என்று ஒருவர் சொல்லும்போது, மகனுக்கு பெருமிதம் பிடிபடாது என்பது அந்த பகவானுக்கும் பொருந்தும்.


வாசுதேவா, வாசுதேவா, வாசுதேவா... என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருங்கள். குழந்தைக் கண்ணன், குதூகலத்தில் மகிழட்டுமே!


நன்றி - விகடன்

30 வகை ஊறுகாய் ரெ சிபி ! ( பெண்களே!அட்லீஸ்ட் இதையாவது சமைங்க )

30 வகை ஊறுகாய் ரெ சிபி !

'ஊறுகாய்' என்றதுமே... பசிக்காத வயிற்றுக்கும் பசி எடுக்கும்; ருசிக்காத உணவும்... ருசிக்கும். அதனால்தான் பெரும்பாலானவர்களின் வீட்டு சமையல் அறையில் ஜம்மென்று இடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறது ஊறுகாய் ஜாடி!
 வெயில் 'சுள்'ளென்று சுட்டெரிக்கும்போதே.... வடாம், ஊறுகாய் என்றெல்லாம் தயாரித்து வைத்துக் கொண்டால், அடுத்து வரும் அடை மழைக் காலத்தை அட்டகாசமாக சமாளித்துவிடலாம், சமையல் சிம்பிளாக இருந்தாலும்!
அதற்காகவே இங்கே 30 வகை ஊறுகாய்களை சூப்பராக தயாரித்து வழங்கியிருக்கும் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். கூடவே அசத்தல் டிப்ஸ்களையும் தந்தார். அவை -
''ஊறுகாய் ரொம்ப நாள் கெடாம இருக்கணும்னா, கட்டாயம் கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்துக்கணும். அதேபோல், தூள் உப்புக்குப் பதிலா... கல் உப்பு சேர்த்தா, காலமெல்லாம் சுவையும் மாறாம இருக்கும். அப்புறம்... தாளிக்கறதுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினா, டேஸ்ட் சூப்பரோ... சூப்பர்தான்!''

இங்கே இடம் பெற்றிருக்கும் அத்தனை அயிட்டங்களையும் தனது கற்பனை வளத்தில், மிக அழகாக அலங்கரித்திருக்கிறார் 'செஃப்’ ரஜினி!
ச்ச்ச்சப்புக் கொட்டி... என்ஜாய் பண்ணுங்கோ!!! 

'மீல் மேக்கர் 65’ செய்ய முடியுமா..?
உப்புக் கலந்த தண்ணீரில் மீல் மேக்கரை பத்து நிமிடம் ஊற வைத்து... பிறகு, அவற்றைத் தனியாக எடுத்து நன்றாகப் பிழிந்து கொள்ளவும். கலந்து வைத்துள்ள மசாலாத்தூளில் மீல் மேக்கரைத் தோய்த்து எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்தால்... 'மீல் மேக்கர் 65’ எனும் சூப்பர் டிஷ் ரெடி! தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

பலாக்கொட்டை ரோஸ்ட் சாப்பிட்டிருக்கிறீர்களா? 
பலாக்கொட்டைகளை வேக வைத்து தோல் நீக்குங்கள். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகப் பிசறிக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, பிசறிய பலாக்கொட்டைகளைச் சேர்த்து வறுத்தெடுங்கள். அபாரமான டேஸ்ட்டுடன் அசத்தல் ரோஸ்ட் ரெடி!

சுவையான மோர்க் குழம்பு தயாரிக்க வேண்டுமா?
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து... அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து இந்தக் கலவையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியதும், அடுப்பை அணைக்கவும். உடனே, மோரைச் சேர்த்து நன்கு கலக்கி விட, ருசியான மோர்க்குழம்பு தயார். தேவைப்பட்டால்... வெண்டைக்காய், பரங்கிக்காய் என்று சேர்த்தும் தயாரிக்கலாம்.

1,   தக்காளி ஊறுகாய் 
தேவையானவை : தக்காளி - ஒரு கிலோ, காய்ந்த மிளகாய் - 150 கிராம், வெந்தயம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு.
தாளிக்க : கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :  தக்காளியை நன்றாகக் கழுவி, துடைத்து... நான்காக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, ஒருநாள் மூடி வைக்கவும். அடுத்த நாள், அதனை வெயிலில் வைத்து எடுக்கவும். அடுத்தடுத்த நாட்களில், நறுக்கிய தக்காளியை 'பிளாஸ்டிக்’ பேப்பர் மேலே பரப்பிக் காய வைக்கவும். பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரையும் வெயிலில் வைக்கவும். தக்காளியில் உள்ள தண்ணீர் உலர்ந்ததும், பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை தக்காளியின் மேல் தெளித்துக் காய விடவும். பாத்திரத்தில் இருக்கும் மொத்த தண்ணீரும் தீரும் வரை இதேபோல் செய்து, தக்காளியை நன்கு உலர்த்தி, காயவைத்து எடுக்கவும். 
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். கடுகையும் வெந்தயத்தையும் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும். காய வைத்த தக்காளியுடன் வறுத்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை அதில் சேர்த்து... மஞ்சள்தூள், பொடித்த கடுகு, வெந்தயத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி ஆறவைக்கவும். பிறகு, ஈரமில்லாத பாட்டிலில் போட்டு காற்று புகாதபடி சேமித்து வைக்கவும்.
இந்த ஊறுகாய் 3 மாதம் வரையிலும் கெடாது.
 2.  காய்கறி ஊறுகாய் 
தேவையானவை : நறுக்கிய கேரட் - அரை கப், பாகற்காய் - கால் கப், பீன்ஸ் - கால் கப், பஜ்ஜி மிளகாய் - கால் கப், பச்சை மிளகாய் - 100 கிராம், பெங்களூர் கத்திரிக்காய் - கால் கப், காய்ந்த மிளகாய் - 100 கிராம், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், வினிகர் - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : காய்ந்த மிளகாய், கடுகு இரண்டையும் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும்.  நறுக்கிய காய்கறிகளுடன் பொடித்த கடுகு, பொடித்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை பெரிய பாட்டிலில் சேர்த்து நன்கு குலுக்கிக் கலந்து கொள்ளவும்.  பிறகு அவற்றுடன் எலுமிச்சம் பழச் சாறு, வினிகர் விட்டுக் கலந்து கொள்ளவும். பின்னர் பெருங்காயத் தூள், கடுகு எண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ளவும். காய்கறிகள் அந்தக் கலவையில் நன்கு கலக்கும் வரை ஊறவிட்டு, பிறகு ஊறுகாயைப் பயன்படுத்தலாம். 
இதனை காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
3. புளி - இஞ்சி ஊறுகாய் 
தேவையானவை: நார் இல்லாத இஞ்சி - கால் கிலோ, பச்சை மிளகாய் - 50 கிராம், புளி, பொடித்த வெல்லம் - தலா 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். இஞ்சியை நன்றாகக் கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், புளிக்கரைசல் சேர்த்து, நன்றாகக் கொதிக்க விடவும். இஞ்சி நன்கு வெந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி இறக்கி ஆறவிட... புளி - இஞ்சி ஊறுகாய் 'கமகம’வென ரெடி
4.பிளம்ஸ் ஊறுகாய் 
தேவையானவை:  நறுக்கிய பிளம்ஸ் பழம் - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கடுகு, வெந்தயப்பொடி - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய பிளம்ஸ் பழங்களை அதில் சேர்க்கவும். லேசாக வதங்கியதும்... உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து நன்கு வதக்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி, ஆறவிடவும்.
இரண்டு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
5. மாங்காய் திடீர்    ஊறுகாய்
தேவையானவை : தோலுடன் சேர்த்து பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - ஒரு கப், பச்சை மிளகாய் - 5, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய மாங்காயுடன் பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து மாங்காய்க் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
இந்த திடீர் ஊறுகாய் இரண்டு, மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
6.பச்சை மிளகாய் - எலுமிச்சை ஊறுகாய்
தேவையானவை: எலுமிச்சம்பழம் - 10, இஞ்சி - 100 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைக் கழுவி, நீளமானத் துண்டுகளாக நறுக்கவும். கண்ணாடி பாட்டிலில் நறுக்கிய எலுமிச்சம் பழத்துண்டுகள், நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாயுடன் உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பாட்டிலை நன்கு குலுக்கவும்.  ஒரு வாரம் வரை, இரண்டு மூன்று முறை பாட்டிலைக் குலுக்கவும். அப்போதுதான் எல்லாப் பொருட்களும் ஒன்றாகக் கலந்து நன்றாக ஊறி, ஊறுகாய் சுவையாக இருக்கும்.
இதை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
7. நெல்லிக்காய் ஊறுகாய்
தேவையானவை: நெல்லிக்காய் - 20, வறுத்துப் பொடித்த மிளகாய்த்தூள் - 50 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெல்லிக்காயை நன்றாகக் கழுவி, ஆவியில் இரண்டு நிமிடம் வேக வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... அதில் வேக வைத்த நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு, வெந்தயப்பொடி சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். 5 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி எடுக்கவும். ஆறியதும், அந்தக் கலவையில் எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்கு கலந்துகொள்ள... விட்டமின் 'சி’ நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி!
இந்த ஊறுகாய் ஒரு வாரம் வரைதான் கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்தால், கூடுதலாக சில நாட்கள் இருக்கும்.
 8.நாரத்தங்காய் ஊறுகாய்
தேவையானவை : நாரத்தங்காய் - 10, பொடித்த மிளகாய்த்தூள் - 50 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை : நாரத்தங்காயை கழுவி, துடைத்து சுருள் சுருளாக நறுக்கி... அதனுள் கல் உப்பை அடைத்து ஊறுகாய் ஜாடியில் வைக்கவும். நாரத்தங்காயின் தோல் தடிமனாக இருப்பதால் நன்கு ஊறுவதற்கு 3 நாட்கள் ஆகும். நன்கு ஊறியதும், அதை தனியாக எடுத்து வெயிலில் காய வைக்கவும். ஈரம் போகக் காய்ந்ததும் மீண்டும் பாத்திரத் தில் இருக்கும் உப்புத் தண்ணீரிலேயே போடவும்; மீண்டும் காயவைக்கவும். தோல் நன்றாக ஊறும்வரை இதேபோல் செய்யவும்.
பிறகு வெந்தயத்தை வறுத்து, மிளகாய்த்தூளுடன் சேர்த்து... ஊறவைத்த நாரத்தங்காயில் பிசறி நன்றாகக் கலந்து வைக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வாசம் வந்ததும் பயன்படுத்தலாம்.
ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
9. மாகாளி ஊறுகாய் 
தேவையானவை: மாகாளிக் கிழங்கு - அரை கிலோ, விரலி மஞ்சள் - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 10, வறுத்த வெந்தயம் - அரை டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாகாளிக் கிழங்கினை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி... நடுவில் இருக்கும் வேரை எடுத்துவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். காய்ந்த மிளகாயுடன் விரலி மஞ்சள், வறுத்த வெந்தயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் தண்ணீர் விட்டு அரைத்து, அந்த விழுதினை நறுக்கிய மாகாளிக் கிழங்குடன் சேர்ந்து நன்கு கலந்து கொள்ளவும். இறுதியாக, எலுமிச்சம்பழச் சாற்றை சேர்த்துக் கலந்து சில நாட்கள் ஊறவிட்டால்... ஊறுகாய் ரெடி!
இதனை ஒன்றிரண்டு மாதங்கள் வரை  வைத்திருந்து பயன்படுத்தலாம்.
10. ஓமம் - மாங்காய்    ஊறுகாய்
தேவையானவை: நீளவாக்கில் மெல் லியதாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - 15 அல்லது 20, கீறிய பச்சை மிளகாய் - 4, ஓமம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் (அல்லது) கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நறுக்கிய மாங்காயுடன் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு ஓமம் சேர்த்துப் பொரிக்கவும். அதனுடன் கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி மாங்காய் - உப்புக் கலவையில் சேர்த்து நன்கு கிளற... ஓமம் - மாங்காய் ஊறுகாய் உடனடியாக சுவைக்க ரெடி!
இதனை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
11. மாங்காய் இஞ்சி ஊறுகாய்
தேவையானவை: மாங்காய் இஞ்சி - 200 கிராம், பச்சை மிளகாய் - 5, எலுமிச்சம்பழம் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை: மாங்காய் இஞ்சியை மண் போகக் கழுவி, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை நறுக்கிய இஞ்சியுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு எலுமிச்சம் பழத்திலிருந்து சாறு பிழிந்து, அதையும் சேர்த்து நன்கு கலந்து, ஒருநாள் முழுக்க ஊறவிட... சிம்பிள் மாங்காய் இஞ்சி ஊறுகாய் ரெடி!
தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
இரண்டு வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.
12.  பச்சை மிளகு ஊறுகாய்            
      
தேவையானவை : பச்சை மிளகு - 250 கிராம், எலுமிச்சம்பழம் - 10, உப்பு - தேவையான அளவு.
செய்முறை : பச்சை மிளகினை காம்பிலிருந்து உதிர்த்துக் கழுவி... ஈரம் போகக் காய விடவும். எலுமிச்சம் பழத்தை நறுக்கிச் சாறு எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழச்சாற்றில் பச்சை மிளகு, உப்பு சேர்த்து நன்கு குலுக்கி வைக்கவும். மிளகில் எலுமிச்சை சாறு ஊறி, ருசியாக இருக்கும்.
இது தயிர்சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சூப்பர் ஊறுகாய்! இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
13.மாங்காய் தோல் ஊறுகாய்
தேவையானவை : மாங்காய் தோல் - அரை கப், வறுத்துப் பொடித்த மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தோல் தடிமனாய் உள்ள 7-8 மாங்காய்களை துண்டுகளாக நறுக்கி,  கல் உப்பு சேர்த்து குலுக்கி வைக்கவும். அது, இரண்டு நாட்கள் ஊறியதும்... வெயிலில் காயவைத்து எடுத்து வைக்க... மாங்காய் தோல் ரெடி! சரியான அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் மாங்காய் தோலைப் போட்டு வேக விடவும். வெந்ததும், தண்ணீரை வடிகட்டி விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அதில் சேர்த்துக் கலந்த பிறகு, பொடித்த மிளகாயையும்  சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து கொள்ளவும்.
மாங்காய்த் தோலை பூஞ்சணம் பிடிக்காமல் 'ஸ்டாக்’கில் 6 மாதம் வரை வைத்திருக்க... இந்த திடீர் ஊறுகாயை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
14. துருவிய மாங்காய் ஊறுகாய் 
தேவையானவை: புளிப்பு மாங்காய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 50 கிராம், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாங்காயை தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து மாங்காய்த் துருவலைச் சேர்க்கவும். சிறிது வதங்கியதும்... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கிக் கிளறவும். கடைசியாக, பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இரண்டு வாரங்கள் கெடாமல் நன்றாக இருக்கும்.
15. பூண்டு ஊறுகாய்
தேவையானவை : தோல் உரித்த பூண்டு - ஒரு கப், கடுகுப்பொடி - 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய். உப்பு - தேவையான அளவு
செய்முறை : தோலுரித்த பூண்டுடன் மிளகாய்த்தூள், கடுகுப்பொடி, உப்பு, மஞ்சள் தூள், வெந்தயப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு, நல்லெண்ணெய் விட்டு, மீண் டும் ஒருமுறை எண்ணெய் சீராக பரவுமாறு கலந்து வைக்கவும். பூண்டு அந்தக் கலவையில் ஊற ஊற, ஊறுகாய் சுவையுடன் இருக்கும்.
ஒரு மாதம் கெடாமல் இருக்கும் இந்த ஊறுகாய்.
16. ஊறவைத்த எலுமிச்சை ஊறுகாய்
தேவையானவை :  எலுமிச்சம் பழம் - 25, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை :  எலுமிச்சம்பழத்தை எட்டுத் துண்டுகளாக நறுக்கி,  உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குலுக்கி வைக்கவும்.  இப்படி, தினமும் குலுக்க... அவை உப்பில் நன்கு ஊறி மிருதுவாக மாறும். இதற்கு, எலுமிச்சம் பழம் அதிக சாறு உள்ள பழமாக இருப்பது அவசியம்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து ஊறவைத்த எலுமிச்சம்பழம் சேர்த்துக் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கவும்.
எலுமிச்சம் பழம் நன்கு ஊறிஇருப்பதால், அதிக நேரம் அடுப் பில் வைத்திருக்கத் தேவையில்லை.
இந்த ஊறுகாயை மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும்.
17. மாவடு ஊறுகாய்
தேவையானவை : மாவடு - ஒரு கிலோ (கீழே விழுந்த மாவடு கூடாது), கடுகுத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், விளக்கெண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மாவடுவை நன்றாகக் கழுவி, தண்ணீர் இல்லாமல் துடைத்து துணியில் பரப்பி 2 மணி நேரம் காய விடவும். ஊறுகாய் ஜாடியில் மாவடுக்களைப் போட்டு, விளக்கெண்ணெய் விட்டுக் குலுக்கவும். பிறகு, கல் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு குலுக்கவும். இதேபோல் நான்கு நாட்களுக்குத் திரும்பத் திரும்பக் குலுக்கவும். அப்போது மாங்காயுடன் உப்பு சேர்வதால், ஜாடிக்குள் நிறைய தண்ணீர் பிரிந்து வந்திருக்கும்.
ஜாடியில் உள்ள மாவடுக்களை வெளியே எடுத்து வேறொரு ஜாடியில் போடவும். மாவடு ஊறிய  ஜாடியிலிருக்கும் தண்ணீரை வடிகட்ட வேண்டும். இன்னொரு ஜாடியில் உள்ள மாவடு உடன் கடுகுத்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து... வடிகட்டி வைத்துள்ள உப்பு நீரையும் விட்டு நன்கு குலுக்கி வைத்து விட்டால் மாவடு ஊறுகாய் உங்கள் நாவில் எச்சில் ஊறவைக்கும்.
இது மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
18. ஆவக்காய் ஊறுகாய்
தேவையானவை : முற்றிய புளிப்பு மாங்காய் - 10, வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 கப், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : புளிப்பு மாங்காயை நடுவில் இருக்கும் ஓட்டுடன் சேர்த்து நறுக்கி, ஒவ்வொரு துண்டையும் நன்றாகத் துடைத்துக் கொள்ள வேண்டும். கடுகு, உப்பு இரண்டையும் சில மணி நேரம் வெயிலில் காயவைத்து, தனித்தனியாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். மாங்காய் தவிர, மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக்  கலந்து கொள்ளவும்.
வாயகன்ற ஒரு ஜாடியில் மாங்காய் துண்டுகளை ஒரு கை போடவும். கலந்து வைத்திருக்கும் பொடிக் கலவையை அதன்மீது ஒரு 'லேயர்’ தூவவும். மீண்டும் மாங்காய் துண்டுகள் ஒரு 'லேயர்’, பொடிக்கலவை ஒரு 'லேயர்’ என மாற்றிமாற்றிப் போடவும். கடைசியில், நல்லெண்ணெய் விட்டு மூடி வைக்கவும். அடுத்த நாள் கிளறி விடவும். ஜாடியின் வாய்ப்பகுதியை வெள்ளைத் துணியால் மூடி இறுகக் கட்டிவிட வேண்டும். ஒரு வாரம் கழித்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 2-3 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
19. மா இஞ்சி - மாங்காய் ஊறுகாய்
தேவையானவை : தோல் சீவிப் பொடியாக நறுக்கிய மாங்காய் இஞ்சித் துண்டுகள் - அரை கப், மாங்காய் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 10, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மாங்காய் இஞ்சியுடன், மாங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து... அரைத்த மாங்காய் - இஞ்சி விழுதையும் சேர்த்துக் கிளறினால், சுவையான மா இஞ்சி - மாங்காய் ஊறுகாய் ரெடி!
இதனை, ஒரு மாதம் வரையிலும் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
20. வெங்காய ஊறுகாய்
தேவையானவை : சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, புளி - 25 கிராம், கடுகு - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து, கழுவி எண்ணெய் விட்டு வதக்கவும். ஆறியதும், அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் போது, இறக்கி ஆறவைத்து, ஈரமில்லாத பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
21. ஸ்டஃப்டு மிளகாய் ஊறுகாய்
தேவையானவை : இளம் பச்சை நிற மிளகாய் (பெரியது) - 20, கடுகு - 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மிளகாயின் காம்பு நீக்கி, இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடுகைப் பொடித்து, அதனுடன் உப்பு, சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒவ்வொரு மிளகாயின் உள்ளே வைத்து அடைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு ஜாடியில் போட்டு, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலந்து, குலுக்கி வைக்கவும். அவையெல்லாம் ஒன்றாகக் கலந்து, நன்றாக ஊற... மிளகாயின் காரமும் எலுமிச்சையின் புளிப்பும் கலந்து மிகுந்த சுவையுடன் இருக்கும்.
காற்றுப்புகாத, ஈரமில்லாத ஜாடியில் வைத்திருந்தால், ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
22.புளியங்காய் ஊறுகாய்
தேவையானவை : இளம் புளியங்காய் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 15, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வறுத்த வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : புளியங்காயைக் கழுவித் துடைத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இடித்து, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.தேவைப்படும்போது, இதில்இருந்து சிறிது எடுத்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கி, வெந்தயப்பொடியைச் சேர்த்து நன்கு கிளறவும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி சேமிக்கவும். ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
23. காய் - கனி ஊறுகாய் 
தேவையானவை: துருவிய ஆப்பிள் - கால் கப், துருவிய கேரட் - கால் கப், துருவிய பரங்கிக்காய் - கால் கப், புளி - 25 கிராம், காய்ந்த மிளகாய் - 10, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய கேரட், பரங்கிக்காய், காய்ந்த மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து துருவி வைத்துள்ள ஆப்பிள் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... அரைத்த காய்கறி விழுதைச் சேர்த்து மீண்டும் சுருள வதக்கி இறக்கவும்.
இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்று சுவை கலந்து இருப்பதால் வித்தியாசமாக இருக்கும். இதனை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
24. எலுமிச்சை திடீர் ஊறுகாய்
தேவையானவை : எலுமிச்சம் பழம் - 10, நறுக்கிய பச்சை மிளகாய் - கால் கப், நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : எலுமிச்சை பழத்தைக் கழுவி, கொதிநீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு, வெளியே எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி... கால் கப் தண்ணீர் விடவும். நறுக்கிய எலுமிச்சம் பழம் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, இறக்கவும்.
இந்த திடீர் ஊறுகாயை அதிக பட்சம் ஒரு வாரம்  வைத்திருந்து பயன்படுத்தலாம்.
25. பச்சை மிளகாய்  ஊறுகாய்
தேவையானவை: பச்சை மிளகாய் - 200 கிராம், கடுகுத்தூள், ஆம்சூர்பொடி (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன்,   மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாயை வட்ட வடிவில் கொஞ்சம் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் கடுகுப்பொடி, மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கடைசியாக, கடுகு எண்ணெய் விட்டுக் கலந்து... ஈரமில்லாத பாட்டிலில் போட்டு, தினமும் குலுக்கி விட வித்தியாசமான சுவையில் பச்சை மிளகாய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள தயார்.
இந்த ஊறுகாய் இரண்டு, மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.
26. மிளகாய் வடை ஊறுகாய்
தேவையானவை : பச்சை மிளகாய் - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 100 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : காய்ந்த மிளகாயை அரை மணிநேரம் ஊறவைக்கவும். கறுப்பு உளுந்து, வெந்தயம் இரண்டையும் தனியாக அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு பச்சை மிளகாய் ஊறவைத்த காய்ந்த மிளகாய், உளுந்து, வெந்தயம், உப்பு, தயிர் இவற்றுடன் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இந்த விழுதை சிறிய கரண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து 'பிளாஸ்டிக் ஷீட்’டில் இடவும். ஈரம் போக வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்தவுடன், ஈரமில்லாத, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கலாம்.
தேவைப்படும்போது எண்ணெயில் இட்டுப் பொரித்து... சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
மிளகாய் வடையை இரண்டு, மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
27. கதுப்பு மாங்காய் ஊறுகாய்
தேவையானவை : சதைப்பற்றுள்ள புளிப்பு மாங்காய் - 2, காய்ந்த மிளகாய் - 50 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கடுகு - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மாங்காயை தோல் நீக்காமல் பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து 2 நாட்கள் ஊறவிடவும். அவ்வப்போது நன்றாக குலுக்கி விடவும். அதில் தண்ணீர் பிரிந்து வந்ததும், மாங்காய் கதுப்புகளை மட்டும் எடுத்து... வெயிலில் காயவைக்கவும். இதே போன்று 2 நாட்கள் செய்யவும். (மாங்காயில் சிறிது ஈரம் இருக்க வேண்டும்; மொட மொடப்பாக காய வைக்கக்கூடாது.)
வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும். கடுகையும், மிளகாயையும் வெயிலில் காயவைத்து தனித்தனியாக பொடிக்கவும். காய வைத்துள்ள மாங்காயில் கடுகுப்பொடி, வெந்தயப்பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். இந்த ஊறுகாய்க்கு எண்ணெய் தேவை இல்லை. இரண்டு, மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
28. வெந்தய மாங்காய்     ஊறுகாய்
தேவையானவை : மாங்காய் - 2, வறுத்துப் பொடித்த வெந்தயம் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
உடனடியாக செய்யக்கூடிய இந்த ஊறுகாயை அதிகபட்சம் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.
29. மாம்பழ ஊறுகாய்
தேவையானவை : மாம்பழம் - 3, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை : மாம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், தாளித்து மாம்பழத்தில் சேர்க்கவும். இறுதியாக, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள மாம்பழ ஊறுகாய் ரெடி!
சாம்பாருக்கும், தயிர் சாதத் துக்கும் சரியான ஜோடி, இந்த ஊறுகாய்!
30. கிடாரங்காய் ஊறுகாய்
தேவையானவை : பழுத்த கிடாரங்காய் - 2, மிளகாய்த்தூள் - 50 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை : கிடாரங்காயை பொடிப்பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய கிடாரங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். பாதிக்குப் பாதியாக வதங்கியதும் மிளகாய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறி இறக்கவும்.
இது, ஒன்றிரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


டிஸ்கி -  டைட்டில் சும்மா அட்ராக்‌ஷனுக்காகவும், காமெடிக்காகவும் வைக்கப்பட்டது, அதைப்பார்த்து யாராவது பொங்கி எழுந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.. ஹி ஹி

நன்றி - விகடன்

Friday, July 29, 2011

கவுதம் வாசுதேவ் மேனன் - ன் சிஷ்யை அஞ்சனா வின் வெப்பம் - சினிமா விமர்சனம்

http://www.cinehour.com/gallery/actresses/movieposters/movieposters/Veppam%20Movie%20Wallpapers/19665910Veppam-Movie-Wallpapers-5.jpg 

ஒரு பெண் இயக்குநர் என்றால் மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அன்பு, உறவு , காதல் ஆகிய உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் படமாக ,மனித நேயத்தை வளர்த்தும் விதமாக பிரமாதமான ட்ரீட்மெண்ட்டுடன் படம் எடுப்பார் என்று நம்பி போனால்........

ஆரண்ய காண்டம் படத்தில் வருவது போல் இதிலும் 2 தாதா கும்பல் ,கஞ்சா சரக்கு , கை மாறுது, சேசிங்க் தட் துரோகி.. ஆள், அடி தடி வெட்டு குத்து , ரத்தம் ரண களம்.. உஷ் அப்பா.. சாமி முடியலப்பா..

கார்த்திக் குமார்,நானி,நித்யா மேணன் ( 180 பட  ஹீரோயின் ), பிந்து மாதவி ( 2 பேர் அல்ல ஒரு ஃபிகர் தான்) என 2 லவ் ஜோடிகள் இருந்தும் படத்துல ரொம்னான்ஸூக்கெல்லாம் நேரம் ரொம்ப கம்மிதான்.. 

http://searchandhra.com/english/wp-content/uploads/2010/09/Bindu-Madhavi-Hot-Photo-Gallery-1-2.jpg

பொறுப்பில்லாத அப்பா,எப்போதும் நோய்வாய்ப்பட்ட நிலையில் அம்மா,அவர்களுக்கு 2 பசங்க .பெரிய பையன் ஏம்மா எப்போ பாரு படுக்கைலயே கிடக்கே?எப்போ உனக்கு சரி ஆகும்? என கேட்க அம்மா விஷம் சாப்பிடுகிறாள் ( ரெடியா பீரோல ஸ்டாக் வெச்சிருக்கா.. அதுல விஷம்னு லேபிள் வேற ) 

அம்மா சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்குனதும் அண்ணன் தம்பி 2 பேரும் கடத்தல், தாதா கும்பல்ல எப்டி மாட்றாங்க.. எப்டி அப்பாவையே போட்டுத்தள்ளறாங்க என்பதே கதை.. தில்லு இருக்கறவங்க தியேட்டர்ல போய் பாருங்கப்பா.

ஓபனிங்க் ஷாட்ல ஏரியல் வியூல ஹீரோயின் கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கற மாதிரி பில்டப்பு.. நல்ல ஒளிப்பதிவு. ஆனா கடைசில பார்த்தா கஞ்சா பொட்டணத்தை கரைக்கவாம்.. போடாங்க்.... அந்த அரைக்கிலோ கஞ்சாவை கடற்கரைல கரைச்சா கரையாதா? மெனக்கெட்டு கடல்ல அரை கிலோ மீட்டர் போகனுமா? சஸ்பென்ஸாம்.. அவ்வ்வ்வ்

ஆனா ஒரு பிளஸ் இருக்கறதை ஒத்துக்கனும்.. இயக்குநர் அஞ்சனா மணி ரத்னம், அல்லது ஸ்ரீராமின் ரசிகை போல . பாடல் காட்சிகளில் கேமரா கோணங்களில் கலக்கறார்.ஹீரோயின்க்கு தரப்பட்ட தனிப்பாடலில் ஹஸ்கி வாய்சில் செம கிக் பாட்டு . அந்தப்பாடலில் ரசித்த வரிகள் - தேகம் இருக்கும் வரை தாகம் இருக்குமடா.. ( என்னே ஒரு அரிய கண்டு பிடிப்பு?!!)


ஜெராக்ஸ் கடைல வேலை பார்க்கும் ஃபிகராக வரும் நித்யாமேணன் நல்ல நடிப்பு.. ஆனால் 180 படத்தில் இருந்த ஃபிரஸ்நெஸ், இளமைத்துடிப்பு இதில் மிஸ்ஸிங்க் ( துடிப்பு கம்மிங்கறியே? ஸ்டெதஸ்கோப் வெச்சு பார்த்தியா? ராஸ்கல்ல்.ஸ். )

பிந்து மாதவி அந்த மாதிரி பெண்ணாக வந்தாலும் நல்ல காதலுக்காக ஏங்குபவராக நடிக்கிறார். ஆனால் அவர் காதலனிடம் கூட உதட்டை கடித்து மடக்கி, கண்ணை ஒரு மாதிரி பண்ணி ஏன் அவரும் கஷ்டப்பட்டு நம்மையும் கஷ்டப்படுத்துகிறார்னு புரியல,. அனா அவரோட அங்க லட்சணம், வளைவுகள் அழகு.. ( அதானே பார்த்தேன் )

2 ஹீரோக்களும் பாஸ் மார்க் வாங்க கூடிய நடிப்பு ( அடப்பாவி.. ஒரே லைன் தானா? ஆம்பளைங்களுக்கு?)




http://chennaionline.com/film/Photofeature/images/Veppam-Movie/07-Veppam-Movie-Stills.jpg

அஞ்சனாவின் வசனங்கள் நெஞ்சில் நின்றவை

1. அம்மா இறந்த பிறகு என் வாழ்க்கை கல்லை கட்டி கிணற்றில் விட்டது போல் ஆகிடுச்சு. 

2. ஜெயிக்கனும்னா நெஞ்சை நிமிர்த்து மோதனும்,பயத்தை விட்டுடனும்.

3. டேய்.. ஃபிகரைப்பார்த்து சாப்டாச்சா?ன்னு கேட்கற ஆளை பார்த்திருக்கேன். நீ என்னடா குளிச்சிட்டியா?ன்னு கேட்கறே? ( முழுகாம இருக்காளோ?ன்னு செக்கிங்கோ என்னவோ? )

4.  எதுக்காக என் மனைவிக்கு பூவை வீசிப்போட்டே?

யோவ்.. உன் மனைவின்னு எனக்கு தெரியாதுய்யா. முதல்ல தாலி கட்டுய்யா.. 



5. உங்கண்ணனுக்கு அடிக்கடி கோபம் வருது. அவருக்கு ஒரு மேரேஜ் பண்ணி வெச்சுட்டா எல்லாம் சரி ஆகிடும்னு நினைக்கிறேன்.. ( அப்புறம் மேரேஜ் பண்ணி வெச்சவன் மேல கோபம் வருமே பரவால்லியா? )

6. எவரு செத்தாலும் தொழில் செத்துடக்கூடாதுய்யா.. ( வெட்டியானா இருப்பார் போல. )

7. என்னை கொலை செய்ய ஆள் ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம்.விஜி சொன்னா.. 



அய்யய்யோ. உடனே ஜோதிக்கு போனை போடு.. 

ஏற்பாடு பண்ணுனதே  ஜோதி தானாம்..



http://c563066.r66.cf2.rackcdn.com/wp-content/uploads/2011/06/South-Indian-Actress-Bindu-Madhavi-In-Telugu-film-Veppam-Movie-stills-5-580x866.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. அழுகின்ற காதலியின் கண்ணீரை தன் உதடு ஒத்தடத்தால் துடைக்கும் காதலன், அதை படமாக்கிய விதம்.. செம 

2. படத்தின் 'மழை வரும் மழைத்துளி எனது விழிகளில் தெரியுதே' என்ற பாடல்கள் காதலர்களிடமும், 'ஏய் ராணி நான் மகாராணி நீ தான் என் அடிமை ' என்ற குத்துப்பாடல் இளைஞர்களிடமும் வரவேற்பை பெறும் விதத்தில் படம் ஆக்கியது.. 

3. படத்தின் தன்மையை கருதி தேவையற்ற காமெடி டிராக் சேர்த்தாமல் விட்டது.. 

http://www.indianactressphotos.net/photo.axd?t=n&fy=n&fx=n&s=&r=0&f=743cb0ef-75f1-49f1-9b8d-8c10011a76f9

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்


1. ஒயின் ஷாப்பில் அப்பா மப்பில் பயங்கி கிடக்கிறார் என்ற தகவல் வந்ததும் ஏன் அப்படி ஒரு பதட்டம்? மப்பில் இருப்பவர்கள் மயங்கி விழுவதும்,பாத்டப்பில் இருப்பவர்கள் நனைந்து கிடப்பதும் காலம் காலமாக நடப்பது தானே?ரொம்ப ஓவர் பில்டப் அந்த சீன்.. 

2. என்னதான் அந்நியோன்யமான ஃபிரண்ட்ஸ் என்றாலும் இப்படியா நண்பர் எதிரிலேயே காதலியுடன் ரொமான்ஸ் பண்ணுவாங்க?பார்க்கற நமக்குதான் கூச்சம் இருக்கு.. அவங்களுக்கு? ம்ஹூம்.

3. ஹீரோக்கள் 2 பேரையும் காட்டும்போது ஒண்ணா அவங்க தண்ணி அடிக்கறாங்க, இல்லை தம் அடிக்கறாங்க. 2 பேருக்கும் வேற வேலையே கிடையாதா? ( ஒரு பெண் இயக்குநர் கூட அப்படி எடுக்கனுமா?)

4. சொர்ணாக்கா மாதிரி வர்ற ரவுடி பொம்பள கேரக்டர் வலியனா திணிக்கப்பட்ட கேரக்டர்.. பிம்ப்பை அவர் மாமாப்பயலே என திட்டும்போதே  அவன் இருடி ஒரு நாள் உனக்கு ஆப்பு இருக்கு என கறுவுகிறான்.. அப்பவே தெரிஞ்சிடுது இவன் தான் அவளை கொலைபண்ணப்போறான்னு. அப்புறம் என்ன சஸ்பென்ஸ் ஏண்டிக்கிடக்கு?

5. ஹீரோ காதலியை சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து மீட்டு வருவதற்காகத்தான் கடத்தல் தொழில் செய்யறான் என்பது தெளிவாக சொல்லப்படவில்லை

இந்தப்படம் ஏ, பி சி , டி ஈ எஃப் என எல்லா செண்டர்களிலும் 7 நாட்கள் தான் ஓடும்..

ஈரோட்டில் ஆனூர், வி எஸ் பி ஆகிய 2 தியேட்டர்களில் படம் ஓடுது. நான் ஆனூர்ல பார்த்தேன்

எதிர்பார்க்கப்படும் விகடன் விமர்சனம் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - வேணாங்கோ, விட்டுடுங்கோ
http://www.cinemagupshup.com/wp-content/uploads/2011/04/nitya-menon.jpg

டிஸ்கி - தயாரிப்பாளரான கெளதம் இப்படத்தை பார்த்துவிட்டு " இப்படம் ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படம் மாதிரி தெரியவில்லை. படம் ரொம்ப ROUGH ஆக இருக்கிறது " என சொன்னாராம். பட ரிசல்ட்டும் அப்படித்தான் ரஃப் & டஃப்.

இயக்குநராக நடு நிசி நாய்களில் அடி வாங்கிய வர் தயாரிப்பளராக மீண்டும் சறுக்கி இருக்கிறார்..

DR, என் கணவருக்கு தூக்கத்துல மடக்கற வியாதி இருக்கு. ...ஹி ஹி ஹி



1. சிநேகிதியே சிநேகிதியே கில்மா சினேகிதியே , சின்ன சின்னதாய் ஐடியாக்கள் அப்பப்போ தருவாயே,,இதே நட்பு இதே மப்பு வாழ்வின் எல்லை வரை வேண்டும்



--------------------

2. ஒரு வார்த்தையில் உயிர் வாழ்வதும், ஒரு வார்த்தைக்காக உயிர் விடுவதும் காதலில் மட்டும் தான்

-----------------------

3. தலைவரு டிவி ஷோ பார்த்து கெட்டுப்போயிட்டாரா!ஏன்?

கோர்ட்ல ஜட்ஜை பார்த்ததும்”என்னது? ஆம்பள ஜட்ஜா?ன்னு வேண்டா வெறுப்பா கேட்கறாரே!?”

---------------------

4. அன்பு தோற்றுப்போனதாக வரலாறு இல்லை,ஆனால் அன்பிடம், அன்பு கொண்ட நெஞ்சங்களிடம் நாம் விரும்பித்தோற்கிறோம்

-------------------

5. அந்த கூல் டிரிங்க்ஸ் கடைல  மட்டும் கூட்டம் அலை மோதுதே ,ஏன்?

அமலாபால் ரோஸ்மில்க் கிடைக்கும்னு போர்டு வெச்சிருக்காங்களே?

-----------------------
 





6. அன்பே, உன் மீது வைத்திருக்கும் காதல் பர்ஃபக்‌ஷன் இல்லாமல் போகலாம், ஆனால் அஃபக்‌ஷன் இல்லாமல் இல்லை #லவ் ரிஃப்ளெக்‌ஷன்

------------------------

7. என்னம்மா சொல்றே?உன்னை ரேப் பண்ணுனவன் யார்னு ஈஸியா கண்டு பிடிச்சிடுவியா?எப்படி?

இன்ஸ்பெக்டர் சார்,கூகுள்சர்ச்ல தேடிப்பார்க்கறேன்

-------------------

8. PURITY OF HEART AND CLARITY OF MIND IS SURITY TO SUCCESS

---------------------

9. நடிகை - DR, என் இடுப்புல டயர் விழுந்துடுச்சு,டயட்ல இருந்தா சரி ஆகிடுமா?

“ ரிட்’டயர்ட்” ஆகற வயசுல இதெல்லாம் தேவையா மேடம்?

---------------------

10. எனது 99%  பிரச்சனைகளுக்கு  1% கவனக்குறைவே காரணம் - ஹிட்லர்


--------------------------






11. DR,என் கணவருக்கு தூக்கத்துல மடக்கற வியாதி இருக்கு.

காலை மடக்கிட்டே தூங்கறாரா?

நான் தூக்கத்துல இருக்கறப்ப என் தங்கச்சியை மடக்கிடறாரு DR


------------------

12. கோயில்ல சுண்டல் சாப்பிடறப்ப தவறி என் ஜாக்கெட்ல விழுந்துடுச்சுடி.

அடிப்பாவி, இப்படி பிரசாதத்தை பிரா சாதம் ஆக்கிட்டு நிக்குறியே!

----------------

13. க்ரைம் நாவல் படிக்கும்போது க்ளைமாக்சை முன் கூட்டியே படிப்பவர்கள் சுவராஸ்யமான பல முடிச்சுகளை இழப்பது போல மரணதேதி தெரிந்தாலும் போர்தான்


-----------------

14. மேனேஜர் சார், உங்க பி ஏ வை பார்த்து நீங்களே ஏன் பயப்படறீங்க?

அவ என் மனைவி சாயல்ல இருக்காளே?

-------------------

15. ஜெர்மன்ல டாக்ஸி ஓட்டறவங்க பயணிகளிடம் பேசக்கூடாதாம்.

அப்போ நாம கூட ஃபிகர்ங்களை கிண்டல் பண்றோம்,அவங்களை ஓட்டறோம், பேசக்கூடாதா?

-----------------------







16. 5 கி.மீ., ஆழத்தில் நீர்மூழ்கி: சீனாசாதனை #இதென்ன  பிரமாதம்?தமிழ்நாட்ல ஒரு பெரிய கட்சி அதள பாதாளத்துல மூழ்கி சாதனை பண்ணீட்டு இருக்கே?


--------------------------

17. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது  அஃபக்‌ஷன் அல்ல, ஒருவர் நிராகரிக்கும்போதும் அவர் மீது நாம் கொண்டிருக்கும் மாறாத அன்பே அஃபக்‌ஷன்

---------------------

18. தலைவர்தான் படிக்கவே இல்லையே,ஏன் பேருக்குப்பின்னால டிகிரி போட்டுக்கறாரு?

விடு, பட்டம் வாங்காதவங்க எல்லாம் தம்பட்டம் அடிச்சுக்கறது சகஜம்தானே?


-----------------

19.  தலைவருக்கு எஸ் இ எக்ஸ்னு இனிஷியல் வெச்ச டாக்டர் பட்டம் குடுத்திருக்காங்களாமே?

அட நீ வேற ,அவருக்கு செக்ஸ் டாக்டர் பட்டம் கொடுத்திருக்காங்க.

----------------------

20. தலைவர் 70 வயசாகியும் பொண்ணுங்க கிட்டே சில்மிஷம் பண்றாரே?

சீனியர் சிட்டிசன் ஏஜ்ல சீனியர் லூட்டிசன் ஆகிட்டாரா?

--------------------------