Monday, August 31, 2015

தனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சி.பி)

ஒரு கமர்ஷியல் ஆக்சன் படம்  மெகா ஹிட் ஆக வேணும்னா வில்லன் கேரக்டர்  மிக பிரமாதமா வடிவைமைச்ட்டா போதும், அந்த வில்லனை  ஹீரோ எப்படி மடக்கறார்? என்பதை திரைக்கதையில்  சாமார்த்தியமாக்காட்டிட்டா மேட்டர்  ஒவர் , இப்படி வில்லன்  கேரக்டரை முன்னிலைப்படுத்திய  படங்கள் தமிழ்  சினிமாவில்  சூப்பர்  ஹிட் ஆகி  இருக்கின்றன. உதா  கேப்டன் பிரபாகரன் , முதல் வசந்தம் , அமைதிப்படை,
இந்த  லிஸ்ட்டில் தனி    ஒருவன்  தனி இடம் பிடிச்சு கமர்ஷியல்  ஹிட் ஆகி இருக்கு, வாழ்த்துகள்  டூ   மோகன் ராஜா டீம்


ஹீரோ & கோ  போலீஸ் ட்ரெய்னிங்க் ல  இருக்காங்க.எடுபுடியா இருக்கும்போதே அரசியல்வாதி பி ஏ  ஊழல்  செய்யத்துவங்குவ்து  போல  இவங்க  ட்ரெய்னிங்ல இருக்கும்போதே  நைட்  டைம்ல  ராபின்  ஹூட் போல குற்றவாளிகளை  நைட்  டைம்ல களை  எடுக்கறாங்க.பகலில்  போலீஸ் ட்யூட்டி , நைட்டில் ராபின்  ஹூட்  ட்யூட்டி ( இவங்க  எப்போதான்  தூங்குவாங்கன்னு எடக்கு மடக்கா கேட்கக்கூடாது)


 வில்லன்  சின்ன  வயசுலயே  கலைஞரை  விட  சாணக்கியத்தனமா  யோசிச்சவன். சி எம்  ஒரு  கொலைக்குற்றத்தில்  ஈடுபட்டு  சிக்கலில்  இருக்கும்போது  தன்னோட  தொண்டன் கிட்டே  இந்தக்கொலைப்பழியை ஏத்துக்கிட்டா  தொண்டனோட குடும்பத்தை  நல்ல  விதமா  கவனிச்சுக்கறேன்னு  வாக்கு  தர்றார். அப்போ  தொண்டனோட  பையன், நானே  கொலைக்குற்றத்தை  ஏத்துக்கறேன், சிறார்  பள்ளியில் சில வருசம்  இருந்தாப்போதும், ரிலீஸ் ஆகிடலாம், அப்பாவுக்கு  எம் எல் ஏ  சீட்  தர்றியா?ன்னு சி எம் கிட்டேயே  கேட்டு  ஜெயிச்ச மூளைக்காரன்


இந்த  ஜாம்பவான்  வில்லன்  கிட்டே  ஹீரோ  அண்ட்  டீம்  எப்படி  மோதி  ஜெயிக்குது? என்பதே  திரைக்கதை.


ஹீரோவா இந்தப்படத்தில்  களை கட்டும் அநாயசமான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருப்பது  அர்விந்த் சாமிதான். சமீபத்தில் வந்த  தமிழ்  சினிமாவில் இவ்வளவு ஸ்டைலிஷான  வில்லனைப்பார்த்ததே  இல்லை.அவர்  பாடி லேங்குவேஜும், அசால்ல்டான   டயலாக்  டெலிவரியும் , டிரஸ்சிங்  சென்சும் அபாரம்


இன்னொரு  ஹீரோவா ஜெயம்  ரவி , இவரும்  போலீஸ்  கெட்டப்பில் , ஜிம் பாடியில்  தன்  முத்திரை  பதிக்கிறார், ஜெயம்  ரவியின்  லைஃப்  டைம் கேரக்டர்  இது  

ஹீரோயினா   நயன்  தாரா, வழக்கமா  லூசுத்தனமான  ஹீரோயின்  கேரக்டர்களை  வடிவமைக்கும்  தமிழ்  சினிமாவுக்கு  ஒரு மாறுதலான  நாயகி  கேரக்டர்.


காமெடி  கம்  கேரக்டர்  ரோலுக்கு  தம்பி  ராமய்யா அசலாட்டா  நடிச்சிருக்கார்.பின் பாதியில் இவருக்கு  வாய்ப்பு  அதிகம் 


பிரமாதமா  திரைக்கதை   அமைத்த  மோகன்  ராஜா & திரைக்கதை , வசனத்தில்  உதவிய  சுபாவுக்கு  ஒரு  பெரிய  பூங்கொத்து





மனதைக் கவர்ந்த  வசனங்கள்


மக்களோட தலை எழுத்தைத்தீர்மானிப்பது  அரசியல்வாதிகளா இருக்கலாம், ஆனா அந்த அரசியல்வாதிகள் தலை எழுத்தைத்தீர்மானிப்பது  வியாபாரிகள் தான்# த ஒ 


உன்  நண்பன்   யார்னு  தெரிஞ்சா  உன் கேரக்டர் தெரிஞ்சிடும், ஆனா உன்  எதிரி  யார்?னு தெரிஞ்சாதான்  உன் கெப்பாசிட்டி என்ன?னு தெரியும் # த ஒ




இருட்டை  விரட்றதுக்கு  சூரியன் தேவை இல்லை, ஒரே ஒரு தீக்குச்சி போதும் # த ஒ ஹீரோ பஞ்ச்



நல்லதை மட்டுமே  பண்றதுக்கு  கடவுளால கூட முடியாது, நாமெல்லாம் எம்மாத்திரம்? # த ஒ  வில்லன் பஞ்ச்



வாழ்க்கை  பூரா  பணம்  எங்கே  இருக்கு?னு  தேடிப்போறவன்  அவன், வாழ்க்கை  பூரா  குற்றம் எங்கே  இருக்கு?னு  தேடிப்போறவன்  நான் #  த ஒ




6  என்னைக்கும் ஆசைக்கும், பேராசைக்கும் இடையில்  நடக்கும் போரில்  பேராசை தான் ஜெயிக்கும், மத்தவங்களுக்கு  நல்லது பண்ணனும்கற  பேராசை எனக்கு#  த ஒ




இல்லாத ஒரு வாய்ப்பை  உருவாக்கவும்  எனக்குத்தெரியும், கை நழுவிப்போன  வாய்ப்பை  தக்க வெச்சுக்கவும் தெரியும் # த ஒ  வில்லன் பஞ்ச்



கெட்டது  செய்ய  நேரம் , சமயம்  யாரும் பார்க்கறதில்லை,ஆனா  நல்லது  செய்ய  எல்லாருமே  நேரம் காலம்  பார்ப்பாங்க # த ஒ


9  ஆண்  செய்யும் தப்பை  தானும் வரிஞ்சு கட்டிட்டு செய்வது பெண் சுதந்தரம் அல்ல # த ஒ


10  ஒரு உண்மையானவன்  பொய்யான  கேஸ்ல இருந்து  தப்பிக்க  40 வருசம் ஆகுது, ஆனா  ஒரு பொய்யானவன் உண்மையான கேஸ்ல இருந்து 4 நாள்ல  தப்பிடறான்#த ஒ


11 நம்ம   எல்லார்க்கும்   மீடியா   காட்டும் செய்திகள்  தான் உலகமே # த ஒ


12 எவன்  ஒருவனை  அழிச்சா 100  கெட்டவங்க அழிவாங்களோ  அவனை  முதல்ல  தேடி ஒழிக்கனும்  ஒ


13 அதிக  பணம் இருக்கும் இடத்தில் தான் அதிக குற்றமும் இருக்கும் # த ஒ (  அறிவாலயம், போயஸ்)



14 வாழ்க்கைல   ஒரே ஒரு ஐடியாவை  எடு, அந்த ஐடியாவையே  உன் லைஃப் ஆக்கிடு # த ஒ


15 நீங்க  எனக்குக்குடுத்தது  வேலை இல்லை, வாய்ப்பு # த ஒ



16 ஆசைப்பட்டுப்பார், எதுவுமே தப்பில்லை # த ஒ


17  இந்தியா  பின்னால  எல்லாரும் வரனும்னு நீ ஆசைப்படறே, ஒரு இந்தியன் பின்னால  அவங்க வரனும்னு நான் ஆசைப்படறேன்,அவ்வளவுதான் வித்தியாசம் # த ஒ


18 நிதானத்தை  இழந்துட்டா  எல்லாத்தையும்  இழந்த மாதிரி # த ஒ


19  எதிரியும் வாழனும், நாமும் வாழனும், எதிரி முன்னால  வாழ்ந்து காட்டனும், அதுதான் வீரம் # த ஒ




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  துப்பாக்கி ,ரமணா பட பாணியில் புத்திசாலித்தனமான திரைக்கதை + ஆக்சன் காட்சிகள் அள்ளுது # தனி ஒருவன்



2 காட்சி அமைப்பில் ஏ ஆர் முருகதாஸ் டச் பல இடங்களில் ஒத்துப்போகுது # தனி ஒருவன்




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   ஓப்பனிங்  சீனில்  சி எம் இடம்   அந்தபையன்  எம் எல் ஏ  சீட்  பேரம்  பேசும்  சீன்  டாப் ரகம்.  அந்தக்கொலைக்காட்சியும்  நல்ல  பதட்டத்தைத்தரும்  ரியல்  சீன்


2 நாயகன்  - நாயகி  காதல்  காட்சிகள்  இதம். நாயகியின்  காதலை  நாயகன்  மறுக்கும் காரணம், அதுக்குப்பின்பும் நாயகி மாறாத காதல்  வைத்திருப்பது  அழகு


3   ஹீரோ  உடம்பில்  ஒட்டுக்கேட்கும்  கருவியை  ஒளிய  வெச்சு  அவர்  திட்டங்களை  வில்லன் அறிந்து  கொண்டு  ஒவ்வொரு    மூவாகச்செய்வது , ஜெயிப்பது  எல்லாம்  ஒரு  கொரியன்  மூவியில்  இருந்து  சுட்டது  என்றாலும்  அபராமான  படமாக்கம்


4  ஒட்டுக்கேட்கும் கருவி  தன்னில்  இருப்பதை  ஹீரோ  உணர்ந்த  பின்  ஹீரோ  ஹீரோயின்  மவுனமாக  காதலை  வெளிப்படுத்தும்  காட்சி  கிளாஸ்


5   வில்லனை  திசை  திருப்பி அந்த  உலக அழ்கி கொலையை , நயன் தாரா  கொலையை  தடுப்பது சாணக்கியத்தனம்


6   திரைக்கதை  , வசனம்  டாப்  ரகம். வில்லனின்  டாமினேஷன்  கலக்கல்  ரகம்   இறக்கும்போது  கூட  வில்லன்  காட்டும்  கெத்து  செம


7   ஏஞ்சலீனா  கேரக்டருக்குப்பதிலாக  நாயகி நயன் தாராவை  பலிகடா ஆக்க  நாயகன்  முயல்வது  துப்பாக்கி  படத்தில் விஜய்  தன் தங்கயை  பணயமாக  வைப்பதை  நினைவு  படுத்தினாலும்  அந்த  சீனில்  நயன்  பேசும்  வசனம் , நடிப்பு  செம



இயக்குநரிடம்  சில கேள்விகள்

1 30 க்கும்  மேற்பட்ட  களப்பணிகளில்  இரவில்  ஈடுபட்டு  குற்றவாளிகளை  பிடிக்கும்  ஹீரோ  ஒரு முறை  கூட  போலீசில்  சிக்காமல்  இருப்பது  எப்படி?


2 எடுத்த  எடுப்பிலேயே  எந்த  ஊரில்  போலீஸ்  கண்காணிப்பாளர்  வேலை  கிடைக்குது?


3  நாயகி  ஒரு சீனில் கூட  போலீஸ்  யூனிஃபார்மில்  வராதது ஏன்? செம கிளுகிளுப்பா  டைட்  டிரஸ் ல  காட்டி  இருக்கலாமே?


4  நண்பர்கள்  5  பேரும்  ஹீரோவும்  ஒரே  ரேங்க்கில்  இருக்கும்போது  ஹீரோ மட்டும்  எல்லோருக்கும்   ஆர்டர்  போடுவது  எப்படி?


5  பல  கோடி மதிப்புள்ள  ஒ ரு  டாக்குமெண்ட்டில்  சைன்  பண்ண வரும்  ஏஞ்சலீனாவுக்கு ஏன்  இவ்வளவு  கேவலமான  பாதுகாப்பு  வசதி?


6  கோடீஸ்வரனான  வில்லன்  ஒரு கார்  டிரைவர்  கூட வெச்சுக்காம  அவரே செல்ஃப்  டிரைவிங்க்லயே  படம்  முழுக்க  வருவது  ஏனோ?


7   கோர்ட்டில்   வீடியோ  ஆதாரத்தை  ஹீரோ  எடிட்  செய்து  கொடுப்பது தவறாச்சே. அப்படி செஞ்சா  கோர்ட்  ஏத்துக்காதே





சி  பி  கமெண்ட் =தனி ஒருவன் = விறுவிறுப்பான ஆக்சன் த்ரில்லர் ,ஆல் சென்டர் சூப்பர் ஹிட் பிலிம் ,விகடன் மார்க் =46 .ரேட்டிங் = 3.5 / 5 வில்லன் நடிப்பு பட்டாசு


ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 46



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= நன்று



 ரேட்டிங் =3.5 / 5


மதுரை பிக் சினிமாஸ் ஜாஸ் ல படம் பார்த்தேன்




என் பொண்ணு அழகா இருக்கில்ல?னு ஒரு பொண்ணு கேட்டா என்ன அர்த்தம்?

1  பொதுவாவே பொண்ணுங்களைப்பார்ப்பதே கண்ணுக்குக்குளுமை தான், ஆனாலும்  கேரள நன்னாட்டிளம்பெண்களைப்பார்ப்பது இன்னும்  ஸ்பெஷல் # ஓணம்



===============




2  நெட்தமிழன்கிட்டே  உங்க வாழ்க்கையின்  லட்சியம் என்ன?னு  கேட்டா ஓணம் பண்டிகைக்கு  மினிமம் 1000  கேரளா ஃபிகர்சுக்காவது வாழ்த்து சொல்லனும்கறான்




=================



சென்றிடுவீர் எட்டுத்திக்கும்.கேரளா பிகர்ஸ் கண்ணுக்குத்தட்டுப்பட்டால் டபக்னு உள்ளங்கையைக்குலுக்கி ஓணம் வாழ்த்து சொல்லவும்



==============



4 மலையாள மங்கையுடன் மொழி தெரியாமல் சம்சாரி ப்பது சால(க்குடி)ச்சிறந்தது

==============



5 ஓணம் விழா!

ஓ! நம் விழா


============

6 நீச்சல் கத்துக்கொடுக்கறேன் கற போர்வைல என் பார்வைல ஒருத்தன் ஒரு பொண்ணுக்கு என்னென்னமோ கோச்சிங் கொடுத்துட்டிருக்கான்.அடேய்;-)

=============

7 கேரளக்கப்பக்கிழங்குகளை நேரில் பார்த்தாலோ ,சமூக வலைத்தளங்களில் கண்டாலோ பாலோ பண்ணக்காத்திருக்கும் அனைவருக்கும் ஓணம் வாழ்த்து
==============
8 நெட் தமிழன் FB/ ட்விட்டர் வரமுடியலைன்னா இன்னைக்கு நான் FB/ட்்விட்டர்க்கு வரபோவது இல்லை"னு.நோட்டீஸ் ஒட்டிடறான்


=============

9 378 பெண் ட்வீட்டர்கள் தமிழ் நாட்டில் இருக்காங்க.அவங்க தலா.2 கேரளா பிகர்சை இன்ட்ரோ பண்ணா 756 மலையாளி பாலோயர்ஸ் கிடைக்கும்.

=============

10 புற்றுநோயை தோற்றுவிக்கும் காரணிகள் அடங்கியுள்ள ஊதுபத்திகள்: சிகரெட்டைக் காட்டிலும் ஆபத்தானவை..# அய்யய்யோ ஊதுபத்தி இனி ஆபத்தில்


============

11 ஒவ்வொரு தமிழனும் ஏதேனும் ஒரு கேரளா/ஆந்திரா/கர்நாடகா பிகரை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிட்டா 4 மாநிலங்களிலும் அமைதி நிலவும்

===========

12 தனி ஒருவன் வில்லன் அர்விந்த்சாமி நடிப்பு கலக்கல் ,ஜெயம் ரவி வசனங்கள் டாப் ,முன் பாதி செம ஸ்பீடு என தகவல்
==========

13 பழகப்பழக பாலும் புளிக்கும் - பழமொழி
பழகப்பழக அமலா பாலும் சிரிக்கும்-புதுமொழி


=============


14 வருபவை அனைத்தும் பாசிட்டிவ் ரிப்போர்ட்ஸ்.ரைட்டர் சுபா ,ஜெயம் ரவி அனைவர்க்கும் வாழ்த்து.தனி ஒருவன் ஆல் சென்ட்டர் ஹிட்

============

15 எதிரி நாடான பாகிஸ்தான் கிட்டே வெங்காயம் வாங்கறமே,இதில ஏதாவது எதிர்கால ஆபத்து ஏற்படுமா? பாய்சன் ,வைரஸ் கிருமி இப்டி

==============

16 பொண்ணுங்க யாராவது மீன் குழம்பு ன்னு ஸ்டேட்டஸ் போட்டா நெட் தமிழன் சும்மா விடறதில்லை. மீனோட பேர் என்ன?னு கேட்கறான் #,விடமாட்டான் வீராச்சாமி

================

17 பணிபுரிபவர்களை எப்போதும் ஏதேனும் ஒரு குறை சொல்லிக்கொண்டே இருப்பவன் நல்ல டீம் லீடராகவோ ,மேனேஜராகவோ பரிமளிக்க முடியாது

================

18 டைம் லைன் க்கு வானு காதலனைக்கூப்பிடும் டி ஆர் ரசிகை =

சந்துரு

சந்துக்கு சீக்கிரம்
வந்துரு


============

19 என் பொண்ணு அழகா இருக்கில்ல?னு ஒரு பொண்ணு கேட்டா தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை னு நாம பாராட்டனும்னு எதிர்பார்க்கறாங்கனு அர்த்தம்

================


20 நேத்து செகண்ட் ஷோ முடிஞ்சு கிளம்பும்போது FB ஓப்பன் பண்ணா ஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணுகிட்டே சாப்டாச்சா?னு நலம் விசாரிச்ட்டு இருக்கான்.நடு ஜாமத்துல கூட நலங்கு வைப்போர் சங்கம் போல

=============

Sunday, August 30, 2015

தனி ஒருவன் -திரை விமர்சனம்: ( THE HINDU)

குற்றவாளி யார்? அவனுக்கு பின்னால் இருக்கும் தீய சக்திகள் என்ன? என்பதை கண்டுபிடித்தப் பிறகு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்று அவனை வீழ்த்த ஜெயம் ரவி நடத்தும் த்ரில்லர் யுத்தம்தான் ‘தனி ஒருவன்’.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று ஐபிஎஸ் பயிற்சி வகுப்பில் இருக்கும் மித்ரன் (ஜெயம் ரவி), உடனிருக்கும் 3 நண்பர்களுடன் சேர்ந்து போலீஸ் அதிகாரியாக பதவி ஏற்பதற்கு முன்பே குற்றங்களுக்கு எதிராக களத்தில் இறங்கி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருகிறார். குழந்தை கடத்தல், செயின் பறிப்பு என்று ஒவ்வொரு குற்றங்களுக்குப் பின்னாலும் மிகப்பெரிய அள வில் வணிகம் நடப்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது. அதற்குக் காரணமாக இருக்கும் பல்வேறு குற்றவாளிகளைப் பட்டியலிட்டு, அதில் பெரிய அளவில் குற்றங்களில் ஈடு படும் 3 நபர்களைத் தேர்வு செய்து தண்டனை பெற்றுத்தர திட்டமிடுகிறார், மித்ரன்.
இந்தச் சூழலில் மருத் துவத்துறை வழியாக சமூகத்துக்கு எதிராக பெரிய குற்றங்களை செய்துகொண்டிருக்கும் விஞ்ஞானி சித்தார்த் அபிமன்யூவின் (அரவிந்த்சாமி) செயல்கள் மித்ரனுக்கு தெரிய வருகிறது. தான் குறிவைத்த 3 குற்றவாளிகளுக்கும் அவன்தான் முன்னோடி என்பதையும் கண்டுபிடிக்கிறார். அதன்பிறகு அந்த எதிரியை அவர் வேட்டையாடினாரா என்பதுதான் கதை.
குப்பத்தைச் சேர்ந்த செங்கல் வராயன் (தம்பி ராமையா) எப்படி எம்.எல்.ஏ ஆகிறார் என்ற முன்கதை திருப்பத்தோடு திரைக்கதை விரிகிறது. செங்கல் வராயனின் மகனான பழனிதான் வில்லன் சித்தார்த் என்று அறிமுக மாகும் இடத்திலேயே கைதட்டல் வாங்கத் தொடங்குகிறார் அரவிந்த் சாமி. கிளைமாக்ஸ் காட்சியில் நாயகனிடம், ‘உனக் காக மட்டும் எல்லாத்தையும் சொல்கிறேன்’ என்று அரவிந்த்சாமி கூறும் இடம் வரைக்கும் அந்த கைதட்டல் நீள்கிறது. குறிப்பாக தம்பி ராமையாவுடன் அவர் வரும் காட்சிகளில் இருவருமே ரசிக்க வைக்கிறார்கள்.
நாயகி நயன்தாரா நடிப்பிலும், பார்வையிலும் மிளிர்கிறார். ஹீரோவைப் போலவே சிவில் சர்வீஸ் பயிற்சி, பார்த்ததும் காதல் என்று அறிமுகமாகும் சில காட்சிகள் சினிமாத்தனமாக இருந்தாலும், அடுத்தடுத்து அவர் எடுத்து வைக்கும் அடிகளால் அழகாக மனதில் அமர்ந்துவிடுகிறார். ஜெயம் ரவி, நயன்தாரா இருவரும் முதன்முதலாக காதலை வெளிப் படுத்திக் கொள்ளும் இடம் அழகு!
ஒவ்வொரு காட்சியும் பரபரப் பாக நகர்கிறது. கதாபாத் திரங்களுக்கு இயக்குநர் கொடுத் திருக்கும் முக்கியத்துவம்தான் இதற்குக் காரணம்.
படத்துக்கு வசனமும் பெரிய பலம். இயக்குநர் மோகன் ராஜா, எழுத்தாளர் சுபா எழுதியிருக் கிறார்கள். ‘நல்லது மட்டுமே செய் யணும்னா அது கடவுளாலகூட முடியாது’, ‘நான் செய்ற குற்றத் துல மிச்சம் வைக்கிறத கண்டு பிடிக்கிறதே அவன்தான்’ என்று அரவிந்த்சாமி பேசும் இடம், ‘உனக்காக உயிரைக் கொடுப் பேன்னு ஒரு பேச்சுக்கு சொன் னேன்’ என்று ஜெயம் ரவியிடம் நயன்தாரா பேசும் இடம் என்று பல இடங்களில் வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகின்றன.
இசை ‘ஹிப் ஆப்’ தமிழா. கச்சிதமான பின்னணி இசை. பாடல்கள் தனி ஆல்பமாகவே ஹிட். ஒளிப்பதிவு ராம்ஜி, படத்தொகுப்பு கோபி கிருஷ்ணா, கலை இயக்குநர் வி.செல்வகுமார் என்று சிறப்பான கூட்டணியை சேர்த்துக்கொண்டு இயக்குநர் பயணித்திருக்கிறார். அறையில் வில்லன் சித்தார்த்தின் கை ரேகையைக் கண்டுபிடிக்கும் இடங்களில் எடிட்டர், கேமராமேன் இருவரும் பெரிய உதவியாக இருந்திருக்கிறார்கள்.
வில்லன் அரவிந்த்சாமி சிறுவனாக இருந்து வளர்வது, படிப்பு, தொழில் என்று அவரது முழு புரொஃபைலை படத்தில் காட்டியிருப்பது வித்தியாசம். தன் உடலில் ‘டிராக்கிங் டிவைஸ்’ கருவி பொருத்தப்பட்டிருப்பதை ஜெயம் ரவி அறியும் இடம் படத்தில் மிரட்டுகிறது. ‘இப்படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் யாவும் கற்பனையே. நிஜத்தின் அளவுக்கு கொடூரமானவை அல்ல!’ என்று திரைப்படம் தொடங்கும் இடத்தில் வரும் வாசகத்தின் உணர்வை படத்தின் ஒவ்வொரு காட்சியும் உணர்த்துகிறது.
மருத்துவத்துறைக்கு எதிராக சித்தார்த் செய்யும் குற்றத்தை வீடியோ ஆதாரமாக வைத்திருந்த மணிமேகலை (அபிநயா) பேசிய ஆடியோ அடங்கிய ‘மெமரி ஜிப்’பை போலீஸ் பயன்படுத்தும் லத்தியில் வைத்திருப்பது எல்லாம் அப்பப்பா ‘முடியல’ சார்? அழகி சில்பாவாக நடித்திருக்கும் முக்தா கோட்ஸேயின் அப்பாவை திட்டமிட்டுக் கொன்ற விஷயம் ஜெயம் ரவிக்கு எப்படி தெரியும்? இப்படி இங்கும் அங்கும் சின்னச் சின்ன ‘ஏன்? எதற்கு?’ கேள்விகள் கேட்கத் தோன்றினாலும் முழுமையாக மனதை த்ரில்லர் மழையில் நனைய வைக்கிறது படம்.



நன்றி -த இந்து

Saturday, August 29, 2015

தனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)

நடிகர் : ஜெயம் ரவி
நடிகை :நயன்தாரா
இயக்குனர் :ஜெயம் ராஜா
இசை :ஹிப் ஹாப் தமிழா ஆதி
ஓளிப்பதிவு :ராம்ஜி
நன்றி = மாலைமலர்
நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐ.பி.எஸ் பயிற்சி பெற்று வருகிறார் ஜெயம் ரவி. இவரை அதே பயிற்சியில் இருக்கும் நயன்தாரா, காதல் கொள்கிறார். ஆனால், ஜெயம் ரவியோ தனது லட்சியத்தில் தீவிரமாக இருப்பதால் நயன்தாராவின் காதலை ஏற்க மறுக்கிறார்.

ஐ.பி.எஸ். பயிற்சியில் ஜெயம்ரவியுடன், கணேஷ் வெங்கட் ராம், வம்சி கிருஷ்ணன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்கள் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று வெளியுலகத்தில் நடக்கும் தவறுகளை பின் தொடர்ந்து வருகிறார்கள். மேலும் குழந்தை கடத்தல் செய்பவர்கள், வழிப்பறி திருடர்களை கண்டுபிடித்து கொடுக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் பிடித்துக் கொடுத்தவர்கள் எல்லாம் ஜெயிலில் இல்லாமல் சுதந்திரமாக வெளியில் இருக்கிறார்கள். இந்த விஷயம் ஜெயம் ரவிக்கு தெரிய வருகிறது. சின்னச் சின்ன குற்றங்களுக்குப் பின்னணியில் இருக்கும் பெரிய பெரிய ஆட்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஐ.பி.எஸ். அதிகாரியாக மாறுகிறார் ஜெயம் ரவி.

இந்த குற்றங்களுக்கு எல்லாம் தலைவனாக சமூகத்தில் பெரும் புள்ளியாக அரவிந்த் சாமி இருக்கிறார் என்று ஜெயம்ரவிக்கு தெரிய வருகிறது. இந்த இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனர். அதன்பிறகு தீமைக்கும், நன்மைக்கும் இடையே யுத்தம் ஆரம்பமாகிறது. இந்த யுத்தத்தின் இறுதியில் யார் வென்றார்கள்? என்பதே தனி ஒருவன் படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஜெயம் ரவி நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்திருக்கிறார். மித்ரன் கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் களைகட்டியிருக்கிறார். வில்லனை நெருங்க திட்டம் தீட்டுவது, குற்றவாளிகளை பிடிக்க திட்டங்கள் போடுவது என ஒவ்வொரு இடத்திலும் நடிப்பால் பளிச்சிடுகிறார்.

நயன்தாரா வெறும் ஹீரோயினாக இல்லாமல் படத்தில் முக்கிய கேரக்டராக வந்து நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். காதலன் மீது உரிமை கொண்டாடுவது, காதல் கொள்வது என ஒவ்வொரு காட்சியிலும் சபாஷ் பெறுகிறார். நாசர், தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட மற்றும் பலரும் அவரவர் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ரசிகர்களை மொத்தமாக தன் வசீகர நடிப்பால் அள்ளி சென்றிருக்கிறார் அரவிந்த் சாமி. இவர் பிறக்கும் காட்சி, எந்தவொரு வில்லனுக்கும் கிடைக்காத அறிமுக காட்சி. படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நம் கண்முன் நிற்கிறார். சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கதாநாயகன்களுக்கு இணையாக ஒரு ஸ்மார்ட்டான வில்லன் கிடைத்து விட்டார். குறிப்பாக ரசிகைகளுக்கு ரொம்ப பிடித்த வில்லனாக அரவிந்த்சாமி இருப்பார் என நம்பலாம். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் புதிய ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா. இந்தியாவில் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் பின்னணியில் நிகழும் கொலைகள், வழிப்பறி சம்பவங்கள், ஆள் கடத்தல்கள் என புதிய கோணத்தில் கொஞ்சம் விலாவாரியாக திரைக்கதை அமைத்திருக்கிறார். ஓர் அசலான புத்திசாலி வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கி, மொத்த படத்தையும் சாதுரியமாக அரவிந்த் சாமி தோளில் வைத்திருக்கிறார்.

ஆதி இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பராக அமைந்துள்ளது. பின்னணி இசையில் படம் முழுக்க ‘தீமைதான் வெல்லும்’ பாடலையே பயன்படுத்தியிருக்கிறார். ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். இவருடைய ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கிறது. சேசிங் காட்சிகளில் இவரது கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது. 

மொத்தத்தில் ‘தனி ஒருவன்’ தனியாக வென்றான்.

மாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ - சினிமா விமர்சனம் ( ஹிந்தி , ராதிகா ஆப்தே)

இருப்பவர்களில் சிலரும், இறந்துபோனவர்களில் சிலரும் வரலாறாக ஆக முடியும். அவர்கள் வரலாற்றை செல்லுலாயிடில் செதுக்கவும் முடியும் என்பது தற்போதைய பாலிவுட்டின் நம்பிக்கை. அந்த வகையில், 2011-ல்‘ தி டர்ட்டி பிக்சர்’ தொடங்கி 'பாக் மில்கா பாக்' ‘பான் சிங் தோமர்’, ‘ரங் ரசியா’ ‘மேரி கோம்’ என கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘பயோபிக்' வகை படங்கள் வரிசைகட்டி வந்துகொண்டிருக்கின்றன.
ஒருகாலத்தில் ‘பயோபிக்’ என்றாலே நாட்டு விடுதலைக்குப் போராடியவர்களின் வாழ்க்கைக் கதை என்பதுதான் இந்திய சினிமாவின் நிலை. ஆனால், 1994-ல் வெளிவந்த சேகர் கபூரின் 'பண்டிட் குயின்' பூலான் தேவியின் வாழ்க்கையை வெற்றிப் படமாக ஆக்கித்தந்தது. எனினும் இந்தவகை ‘பயோபிக்’ ஒரு ‘ட்ரெண்ட்'டாக மாறியது 2013-ல் இருந்துதான்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மட்டும் அல்லாமல் சம்பல் கொள்ளைக்காரர்கள் (பான் சிங் தோமர்), விளையாட்டு வீரர்கள் (பாக் மில்கா பாக், மேரி கோம்), மனித உரிமைப் போராளிகள் (ஷாஹித்), திரைப்படக் கலைஞர்கள் (டர்ட்டி பிக்சர்) எனப் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள் பாலிவுட்டில் படமாக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இன்னும் விளையாட்டுப் பயிற்சியாளர்கள், இசை மேதைகள், அரசியல் தலைவர்கள், நிழல் உலக தாதாக்கள், கார்கில் வீரர்கள் எனப் பலரது வாழ்க்கைக் கதைகள் படமாக்கப்பட்டுவருகின்றன. தோனி, அசாருதீன், மோடி, கிஷோர் குமார், எம்.எஸ். சுப்புலட்சுமி, சார்லஸ் சோப்ராஜ் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைக்கு வருவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
வாழ்க்கை வரலாற்றுப் படங்களின் மீதான பாலிவுட்டின் மோகத்தில் பிறந்த இன்னொரு படமாக ‘மாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ திரைப்படத்தை எடுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம், ‘தஷரத் மாஞ்சி’ என்னும் எளிய மனிதனின் வாழ்க்கை அவ்வளவு எளிதாகக் கடக்கக்கூடியதல்ல. வர்க்கம், சாதி, அரசு, சுரண்டல் போன்றவை குறித்த சமூகப் பொருளாதாரப் பாடமாக இந்தப் படம் விளங்குகிறது என்றால் அதற்குக் காரணம் மாஞ்சியின் அசாத்தியமான வாழ்க்கை.
பிஹாரின் கயா மாவட்டத்தைச் சேர்ந்த கஹலவுர் கிராமத்திலுள்ள மலையைத் தனியாளாகக் குடைந்து பாதை உருவாக்கியிருக்கிறார் தஷரத் மாஞ்சி. சுத்தி, உளியை மட்டும் வைத்துத் தன் கையாலேயே இந்த மலைப் பாதையை உருவாக்குவதற்கு அவருக்கு இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்த அசாத்தியமான மனிதனின் வாழ்க்கையைத் திரையில் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் கேத்தன் மேத்தா. வாழ்க்கை வரலாற்றைப் பேசும் படங்களை எடுப்பதில் இவருக்கு அனுபவம் அதிகம். பாலிவுட்டில் ‘சர்தார்’, ‘மங்கல் பாண்டே’, ‘ரங் ரசியா’ போன்ற படங்கள் இவர் இயக்கியவை.
‘மாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ படத்தில் ‘தஷரத் மாஞ்சி’ கதாபாத்திரத்தில் நவாஸுத்தீன் சித்திக்கி நடித்திருக்கிறார். மாஞ்சியின் மனைவி ‘பகுனியா’வாக ராதிகா ஆப்தே. 1950களில் சுதந்திர இந்தியாவில் தலைவிரித்தாடிய சாதியப் பாகுபாடுகளையும், வறுமையையும் பின்னணியாகக் கொண்டு நகர்கிறது திரைக்கதை. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தஷரத் மாஞ்சிக்கும், பகுனியாவுக்கும் குழந்தைத் திருமணம் நடக்கிறது. ஊரின் ஜமின்தாரிடமும் (திக்மான்ஷு தூளியா), அவரது மகனிடமும் (பங்கஜ் திரிபாதி) அடிமையாக வேலை செய்வதிலிருந்து தப்பிப்பதற்காக ஊரைவிட்டே ஓடிவிடுகிறான் தஷரத்.
ஏழு ஆண்டுகள் கழித்து ஊருக்குத் திரும்பி வரும் தஷரத், போராடி தன் மனைவி பகுனியாவிடம் சேர்கிறான். ஆனால், அந்த ஏழு ஆண்டுகளில் ஊரில் எந்த மாற்றமும் நடக்கவில்லை. ஆதிக்கச் சாதியினரின் அடக்குமுறையாலும், சுரண்டலாலும் தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இதனால் தஷ்ரத்தும் பாதிக்கப்படுகிறான். அந்த ஊரில் இருக்கும் மலை, மக்களுக்கு அடிப்படை வசதிகளான மருத்துவமனை, பள்ளி போன்ற எதுவும் கிடைக்கவிடாமல் செய்கிறது.
அந்த மலைமீது நடந்து வரும்போது கால்தவறி விழுந்து இறந்துவிடுகிறாள் பகுனியா. மனைவி இறப்பதற்குக் காரணமாக இருந்த மலையைக் குடைந்து பாதை அமைப்பதைத் தன் வாழ்க்கையின் லட்சியமாக ஆக்கிக்கொள்கிறான் தஷ்ரத். ஊரே பைத்தியக்காரன் என்று சொன்னாலும், இருபத்திரண்டு ஆண்டுகள் போராடித் தன் லட்சியத்தில் வெற்றியடைகிறான் தஷ்ரத் மாஞ்சி.
நவாஸுத்தீன் சித்திக்கின் நடிப்புத் திறமைக்கு மற்றுமொரு சாட்சியாக தஷ்ரத் மாஞ்சியின் கதாபாத்திரம் எப்போதும் விளங்கும். இந்தக் கதாபாத்திரம் அவரது திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். திரைக்கதை ஆங்காங்கே அலுப்பை ஏற்படுத்தினாலும் அதைத் தன் நடிப்பால் ஈடுகட்டிவிடுகிறார் நவாஸுத்தீன்.
பகுனியா கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவின் நடிப்பைவிட அழகுப் பதுமை பிம்பத்தையே அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ‘127 அவர்ஸ்’ படத்தின் சாயல் அவ்வப்போது காட்சிகளில் எட்டிப் பார்க்கிறது. நேர்த்தியான வசனங்களும், உறுத்தாத ஒளிப்பதிவும் படத்திற்கு மிடுக்கையும் அழகையும் கொடுத்தாலும் திரைமொழியோடு இசையாத இசையும், படத்தொகுப்பும் திரைக்கதையில் சற்றுத் தொய்வை ஏற்படுத்துகின்றன.
படம் எப்படியிருந்தாலும் அரசாங்கம் எனும் அதிகார இயந்திரம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொட்டில் அறைந்தாற்போல் தெரிவித்து ஒடுக்கப்பட்டவன் ஒருவனின் உயர்ந்த வாழ்க்கையை எல்லோருக்கும் புரியும் இயல்பான திரைமொழியில் பதிவுசெய்ததற்காகவே கேத்தன் மேத்தா பாராட்டுக்குரியவர்.
சாதியப் படிநிலைகள், வறுமை, உழைப்புச் சுரண்டல், செயல்படாத அரசு இயந்திரம் போன்றவற்றின் கோர முகத்தையும், அவற்றுக்கு எதிரான ஒரு எளிய மனிதனின் வெற்றியையும் வலுவாகப் பதிவுசெய்கிறது ‘மாஞ்சி -தி மவுண்டேன் மேன்’.


நன்றி - த இந்து
என். கௌரி

தாக்க தாக்க - சினிமா விமர்சனம்

நன்றி = மாலை மலர்

நடிகர் : விக்ராந்த்
நடிகை :அபிநயா ஆனந்த்
இயக்குனர் :சஞ்சீவ்
இசை :ஜாக்ஸ் பிசாய்
ஓளிப்பதிவு :சுஜீத் சராங்
விக்ராந்தின் அம்மா சிறு வயதிலேயே விபச்சாரத்தில் தள்ளப்பட்டு விட்டவர். சிறுவயதிலிருந்தே தனது அம்மா அனுபவித்த கொடுமைகளையும், தன் கண்முன்னே விபச்சார கும்பலின் தலைவன் அருள்தாஸால் தனது அம்மா கொல்லப்பட்டதையும் எண்ணி சோகத்துடனே வலம் வருகிறார்.

விபச்சார கும்பலிடமிருந்து தப்பி சென்னைக்கு வரும் சிறுவயது விக்ராந்துக்கு, அரவிந்த் சிங் நண்பராகிறார். இருவரும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். விக்ராந்த் யாருடனும் கலகலப்பில்லாமல் இருந்து வருகிறார். அரவிந்த் சிங்கும், நர்சாக பணிபுரியும் அபிநயாவும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். ஆனால், அபிநயாவை திருமணம் செய்வதில் அவரது மாமன் ஆசைப்படுகிறார். அவர், சென்னையில் பெரிய தாதாவாக இருக்கும் அருள்தாசின் தம்பி ராகுல் வெங்கட்டிடம் பணிபுரிகிறார். அவரிடமே போஸ் வெங்கட்டும் பணிபுரிந்து வருகிறார். பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் தொழிலில் கொடிகட்டி பறந்து வருகிறார் ராகுல் வெங்கட்.

இந்நிலையில், காதலித்து வரும் அரவிந்த் சிங்கும், அபிநயாவும் ஒருநாள் ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்களது ரகசிய திருமணத்தை அறிந்த அபிநயாவின் மாமன் அபிநயாவை விபச்சாரத்தில் தள்ளி, அவளை சீரழிக்க பார்க்கிறான். அவளை மீட்க அரவிந்த் சிங், போஸ் வெங்கட்டின் உதவியை நாடுகிறான். 

மறுமுனையில், இதையெல்லாம் அறியாத விக்ராந்த், ஒருநாள் தனது அம்மாவை கொன்று வாழ்க்கையை சீரழித்த அருள்தாஸை சென்னையில் பார்க்கிறார். அவரை பழிவாங்க துடிக்கிறார். அதேபோல், அருள்தாஸ் கும்பலிடம்தான் தனது நண்பனின் காதலியும் இருக்கிறாள் என்பதையும் விக்ராந்த் அறிகிறார். 

இறுதியில், தனது நண்பனின் காதலியை அந்த கும்பலிடமிருந்து விக்ராந்த் மீட்டாரா? தனது வாழ்க்கையின் சீரழிவுக்கு காரணமான அருள்தாஸை பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு, விக்ராந்த் இந்த படத்தில் ஹீரோ வேடமேற்றிருக்கிறார். இதில் ரொம்பவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லுமளவிற்கு இவருடைய நடிப்பு பிரமாதம். குறிப்பாக, தனது அம்மாவை நினைத்து வாடும் காட்சிகளிலும், தனது நண்பனை இழந்து கதறி அழும் காட்சிகளிலும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

அதேபோல், அரவிந்த் சிங்கின் காதலியாக வரும் அபிநயாவும் ரொம்பவும் திறமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒருசில காட்சிகளில் இவரது நடிப்பு நம்மையை கண்கலங்க வைத்துவிடுகிறது. அருள்தாஸ் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இவர் வரும் 10 நிமிட காட்சிகளும் மிரட்டியிருக்கிறார்.

படத்தில் இன்னொரு நாயகியாக வரும் லீமா பாபுவுக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. விக்ராந்துக்கு ஜோடியாக வரும் இவருக்கு, அவருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் குறைவு. அதேபோல், இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் பாடலும் வைக்காதது மிகப்பெரிய குறைவே. மேலும், போஸ் வெங்கட், ராகுல் வெங்கட், விக்ராந்தின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து செவ்வனே நடித்திருக்கிறார்கள். 

படத்தின் ஆரம்ப கட்ட காட்சியிலேயே ரசிகர்களை இயக்குனர் சஞ்சீவ் கவர்ந்துவிடுகிறார். சிறு வயதில் பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் கும்பலிடம், பெண்கள் படும் துயரத்தை யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அந்த காட்சிகள் வரும் 10 நிமிடங்கள் தியேட்டரில் நிசப்தமே மேலோங்கியிருக்கிறது. படத்தில் ரொமான்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், ஆக்க்ஷன் மற்றும் செண்டிமென்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு. 

சுஜீத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். அவருடைய பெரும்பாலான காட்சிகள் நம்மை கதையோடு ஒன்றி பார்க்க வைத்திருக்கிறது. அனைத்து காட்சிகளும் நேரடியாக நடப்பதுபோன்றே படமாக்கியிருப்பது மேலும் சிறப்பு. ஜேக்ஸ் பிசாய்யின் பின்னணி இசை படத்திற்கு மேலும் ஒரு பக்கபலமாய் இருக்கிறது. நடிகர் விஷால், ஆர்யா, விஷ்ணு விஷால் ஆகியோருடன் விக்ராந்த் இணைந்து வரும் பாடல் ரசிக்கும்படி இருக்கிறது. 

மொத்தத்தில் ‘தாக்க தாக்க’ ரசிக்க ரசிக்க.