Tuesday, November 30, 2010

எகத்தாளமான பதிவர்கள் லிஸ்ட்டும்,லேடீஸ் மேட்டரில் அவர்கள் பேடு டேஸ்ட்டும்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/09/Anakha.jpg
1.  சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - மச்சான்,தென்னை மரத்துல ஏறி நின்னு பார்த்தா ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்களா தெரியறாங்க..

டெரர் பாண்டியன் - மாம்ஸ்,கையை விட்டுப்பாரு,மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்களா தெரிவாங்க.

---------------------------------

2. ஃபிகரு - என் கிட்ட அழகு இல்லையா? அறிவு இல்லையா?  ஏன் என்னை வேணாம்கறீங்க?

ராம்சாமி - உனக்கு ஒரு தங்கச்சி கூட  இல்லையே?

--------------------------------


3. இம்சை அரசன் பாபு - என்ன மங்குனி ?கார் டேங்க்கை ஓப்பன் பண்ணி விட்டு சிரிக்கறீங்க?

மங்குனி - ஒண்ணுமில்லை,மனசு விட்டு சிரிச்சா OIL  கூடும்னாங்க.

ஹய்யோ ஹய்யோ அது ஆயில் இல்லை,ஆயுள்.

-------------------------


4. நல்ல நேரம் சதீஷ் - வளர்ந்த  செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை விட,வளரும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவோம்,அதுதான் சிறந்தது,எனவே யாரும் காலேஜ் ஃபிகர்ஸை சைட் அடிக்க வேண்டாம்,ஸ்கூல் பொண்ணுங்களா பார்த்து சைட் அடிங்க...எனக்கு 25 வயசு இருக்கறப்ப அப்படித்தான் செஞ்சேன்.

-------------------------------


5.  கோமாளி செல்வா - ஸ்டூடண்ட்ஸ்ஸோட சக்சஸ்,ஃபெயிலியர்க்கு என்ன காரணம்?

சவுந்தர் - சக்சஸ்க்கு காரணம் பிரில்லியண்ட் டீச்சர்,  ஃபெயிலியர்க்கு காரணம் பியூட்டிஃபுல் டீச்சர்.

-------------------------


6. பெரியப்பா எல் கே - மனசுக்குள்ள நிறைய இருக்கும் ,ஆனா எழுத வராது,அது லவ் லெட்டர்,மனசுல ஒண்ணுமே இருக்காது,ஆனா பக்கம் பக்கமா எழுதுவோம்.. அது செமெஸ்டர்.

----------------------
http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/vaaranam_aayiram.jpg
7. திருப்பூர் கார்த்திக்குமார் -   ஹாய் சார் ,நான் இதை சொல்லியே ஆகனும்,கொஸ்டின் பேப்பர் அவ்வளவு கஷ்டம்.இங்கே எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு கொஸ்டின் பேப்பரை பார்த்திருக்கவே மாட்டான்.. ஐ திங்க்  இந்த டைமும் எக்சாம் ஊத்திக்குச்சு..

முன்தினம் படிச்சேனே, படிச்சதும் மறந்தேனே,சல்லடைக்கண்ணாக உள்ளமும் புண் ஆனதே...

இத்தனை நாளாக புக்கையே பாராமல் விளையாடி இருந்தேனோ..
ஹாலிடேஸ்ஸூம் வீணானதே...

-----------------------

8. கோகுலத்தில் சூரியன் வெங்கட் (அவருக்கு 8 ராசியான எண்)

நான் ரெண்டாங்க்கிளாஸ் படிக்கறப்ப என் ஆளு (அப்பவே ஆரம்பிச்சிட்டாரா?)
பிரேயர்ல லீடர் ஸ்பீச் குடுக்கறப்ப நான் காதை  பொத்திக்குவேன் ஏன்னு சொல் பார்ப்போம்?

பட்டாபட்டி -- யாருக்கு தெரியும்?சொல்லுய்யா தெரிஞ்சுக்கறோம்.

அவ எப்பவும் பேச்சை “ டியர் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் அப்படின்னு ஆரம்பிப்பா..அவ வாயால என்னை அண்ணானு கூப்பிடறதை என் மனசு தாங்காதே...

-----------------------------

9.  பட்டாபட்டி - காயப்படுத்தி காணாமல் போகும் காதலை விட காரித்துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது..பை - நண்பேண்டா ....

---------------------


10.கலியுகம் தினேஷ் - உங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் இல்லையா?நோ சைட்ஸ்?நோ சேட்டிங்க்?நோ என் ஜாயிண்ட்மெண்ட்? நோ டென்ஷன்?நோ லவ்வர்?

பிளீஸ் விசிட் திஸ் வெப்சைட் - WWW.அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வாழனும்?,COM.

---------------------

Monday, November 29, 2010

தண்ணி அடிச்சுட்டு தகராறு செஞ்ச தன்னிகரற்ற பதிவர்

http://www.newsonweb.com/newsimages/June2009/64c008cc-15b7-4561-8751-8d67193b61f11.jpg
1.என் பேரு சஞ்சய் சரக்கு சாமி,என் பொழுதுபோக்கு ,தொழில் ரெண்டுமே குடிதான்,என்னோட லட்சியம் எல்லா சரக்கும் அடிக்கனும்,முடியாதுன்னு நினைக்கறீங்களா?தன்னம்பிக்கைக்கும்,தலைக்கனத்துக்கும் ஒரு கட்டிங்க் அளவுதான் வித்தியாசம்,என்னால எல்லா சரக்கையும் ராவா அடிக்க முடியும்னு சொல்றது தன்னம்பிக்கை.என்னால மட்டும்தான் ராவா அடிக்கனும்னு சொல்றது தலைக்கனம்,கஷ்டப்பட்டு குடிச்சா வாமிட் வரும்,இஷ்டப்பட்டு அடிச்சா போதை வரும்..

2. தண்ணி அடிச்சுட்டு ரகளை பண்ற தண்ணி வண்டி கேஸூங்க....பொதுவா சொல்ற டயலாக்ஸ்----


1. மாப்ளே,நீ என் தம்பி மாதிரிடா....

2.நான் வண்டி ஓட்டறேண்டா...

3. எனக்கு எவ்வளவு அடிச்சாலும் ஏர்றது இல்லையே...(மப்பு)

4.நான் போதைல உளர்றேன்ன்னு நினைக்காதே...(எப்பவும் அவரு உளறுவாய்தான்)

5.இன்னொரு பெக் அடிச்சா செமயா இருக்கும் .

6.என்ன வேணும்னு சொல்லு,உனக்காக நான் உயிரையே குடுப்பேன்.

7. மச்சி,நாளைல இருந்து நான் சரக்கு அடிக்க மாட்டேன்.

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataT/tamilsong/images/restricted/25-11-2008/ghajini_hindi_movie_stills_1.jpg

3. எக்சாம் என்பது காலேஜ் ஃபிகர் மாதிரி,காலேஜ் முடியற வரை இருக்கும்,ஆனா அரியர் என்பது நம்ம மாமா பொண்ணு மாதிரி,பாவி மக நம்மையே சுத்தி சுத்தி வருவா...

4. MANAGEMENT STUDENT KISSES A GIRL.

GIRL - WHAT IS THIS?

BOY - IT IS CALLED DIRECT MARKETTING,

GIRL SLAPS THE BOY.( பளார்னு விட்டா பாரு ஒரு அறை)

BOY - WHAT IS THIS?

GIRL- THIS IS CALLED CUSTOMER FEED BACK.

டிஸ்கி 1 - இந்தப்பதிவு வடக்குப்பட்டி  ராமசாமியின் போதைக்கதை,இதற்கும் பன்னிக்குட்டி ராமசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ராம்சாமியின் நண்பர்கள்,உறவினர்கள்,சொந்தபந்தங்கள் இப்பதிவைக்கண்டு என் மேல் கோபித்துக்கொண்டால் அதற்கு.....

ஒண்ணும் பண்ண முடியாது.

டிஸ்கி 2 - ஆங்கில ஜோக்கை தமிழில் மாற்றிப்பார்த்தேன் ,சரியான எஃப்க்ட் கிடைக்கவில்லை.எனவே தமிழில் தர முடியல.தமிழுக்கே துரோகம் பண்ணீட்டதா யாரும் குதிச்சிடாதீங்க.

Sunday, November 28, 2010

நந்தலாலா - கலக்கல் லாலா - சினிமா விமர்சனம்





சித்திரம் பேசுதடி,அஞ்சாதே என தொடர்ந்து கமர்சியல் ஹிட்ஸ் அடித்த மிஷ்கின் ஆர்ட் ஃபிலிம் டைப்பில் ஒரு ஜப்பானியப்படத்தை தழுவி எடுத்திருக்கிறார்.பல டப்பா படங்களையும்,ஹீரோயிச படங்களையும் பார்த்து சலித்த நமக்கு இது  ஒரு வித்தியாசமான அனுபவத்தையே தருகிறது.

அன்பே சிவம்.திருடா திருடா,காதல் சொல்ல வந்தேன்,மைனா வரிசையில் இதுவும் ஒரு பயணக்கதைதான்.ஆனால் சொன்ன விதத்தில் மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

தனிமையில் இருந்து தாயின் அன்புக்கு ஏங்கி வெளியூரில் இருக்கும் தன் தாயை சந்திக்க தனியாகக் கிளம்பும் சிறுவன்,பைத்தியக்கார விடுதியில் தன்னை இங்கே சேர்த்துவிட்டு போய் விட்டாளே என்ற ஆத்திரத்தில் அவளை கோபமாக சந்திக்கத்துடிக்கும் மன நலம் குன்றிய ஆள் இருவரும் ஒரு புள்ளியில் இணைந்து ஒன்றாக பயணிக்கையில் ஏற்படும் அனுபவங்களும் ,சந்திக்கும் மனிதர்களும்தான் கதை.

ஆற்றின் போக்கில் வளைந்து கொடுக்கும் நாணல் மாதிரி மனிதர்கள் அனுசரித்துப்போக வேண்டும் என்ற குறியீட்டுக்காட்சியுடன் (FLEXIBILITY) டைட்டில் தொடங்குகிறது.

ஒரு படத்துக்கு ஒளிப்பதிவும் ,இசையும்,பின்னணி இசையும்  எப்படி உயிர்நாடியாக விளங்குகிறது என ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு பாடமாக வைக்கும் அளவுக்கு இந்தப்படத்தில் 2 தொழில் நுட்பங்களும் பிரமாதமாகக்கையாளப்பட்டிருக்கிறது.

பாலுமகேந்திரா,மணிரத்னம் வரிசையில் வசனத்துக்கான முக்கியத்துவத்தை குறைத்து காட்சிகளின் மூலமே பார்வையாளனை கட்டிப்போட முடியும் என நிரூபித்திருக்கிறார், இயக்குநர்.

சிறுவனாக வரும் அந்த சின்னப்பையனின் நடிப்பு கிளாஸ் ரகம்.தலையை குனிந்து நிற்பதில் கோபம்,ஏக்கம் ,பாசம் என விதம் விதமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறான்.சபாஷ்..தம்பி.


சில இடங்களில் மனநலம் குன்றியவராகவும்,சில இடங்களில்  நார்மல் மனிதராகவும்,பல இடங்களில் சராசரிக்கும் அதிகமான அறிவுடனும் நடந்து கொள்ளும் விநோதமான ஒரு மனிதனை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மிஷ்கின். இரண்டு இடங்களில் மட்டுமே ஓவர் ஆக்டிங்க்கோ என யோசிக்க வைத்து மற்ற அனைத்து இடங்களிலும் பண்பட்ட நடிகனாக தன்னை வெளிப்படுத்திய மிஷ்கினுக்கு  ஒரு ஷொட்டு.

படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் மனதில் பதிந்து போகும் அனைத்து கேரக்டர்அளுக்கும் ஒரு சபாஷ்.

மனித நேயத்தையும்,இயக்குநரின் தொழில் நுட்ப நயத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகள் -

1.காலில் அடிபட்டு சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவியின் பாவாடையை முழங்கால் வரை தூக்கும் ஹீரோவை தவறாகப்புரிந்து கொண்டு பளார் என அறையும் மாணவி ஹீரோ  “வலிக்குதா?” எனக்கேட்கும்போது குபுக்கென கண்ணில் கண்ணீர் வரக்கலங்கும் இடம். (இந்த இடத்தில் வரும் பின்னணி இசை அபாரம்)

2.  இளநி வெட்டு ம் ஆள் 3 இளநியை திருடி விட்டார்கள் என்பதற்காக ஹீரோவைத்துரத்தி பின் கீழே விழுந்து அடி பட்டதும் ஹீரோவே அவரை கவனிக்கையில் கண்கலங்குவது.

3.ஹார்னை சுட்டு செல்லும் ஹீரோவை லாரி டிரைவர் அடிப்பதும் ,பின் அவனின் குண நலன் தெரிந்து சினெகம் ஆவதும்.

4. விலை மாதுவாக வரும் சினிக்தா  தனது சோகக்கதையை சொல்லி நான் அழுக்கானவ என கதறும்போது பெய்யும் மழையில் அவளை நனையச்சொல்லி  “நீ குளி சுத்தம் ஆகிடுவே” என வெள்ளந்தியாக ஹீரோ சொல்வதும் ,அப்போது சினிக்தாவின் கண்களில் வெளிப்படும்  நன்றி,புத்துணர்ச்சி கிளாசிக் ரகம்.

5. சிறுவனின் தாயைக்கண்டு பிடித்த ஹீரோ அவளிடம் விளக்கம் கேட்பதை வசனமே இல்லாமல் லாங்க் ஷாட்டில் தெளிவாக பார்வையாளனுக்கு புரிய வைத்த விதம். ( இந்த சீனை ஒரு விசுவோ , டி ஆரோ எடுத்திருந்தால் 4 பகத்துக்கு வசனம் வைத்திருப்பார்கள்) படத்துக்கும் கதைக்கும் மிக முக்கியமான இந்த சீனில் வசனமே இல்லாமல் எடுத்த இயக்குநர் மிக கவனிக்கப்பட வேண்டியவர்.

பின்னணி இசையில் இசைஞானி கலக்கிய இடங்கள்

1.ஹாஸ்பிடலில் இருந்து ஹீரோ தப்பிக்கும் காட்சியில் மத்தளம்,முரசு என கலக்கல் காக்டெயில் இசையை அளீத்தது..

2. கூட வந்த சிறுவனே தன்னை மெண்ட்டலா என கேட்கும்போது ஒல்லிக்கும் பின்னணி இசை.

3. பைத்தியமாக கிடக்கும் தன் அம்மா ராகினியை ஹீரோ சந்திக்கும் காட்சியிலும்,அதைத்தொடர்ந்து 15 நிமிடங்கள் பின்னணி இசை மூலமே கதை சொன்ன விதம்.

4.எல்லாவற்றையும் விட பல இடங்களில் அமைதி,நிசப்தம் ,மவுனம்  இவற்றை வெளிப்படுத்துவது கூட நல்ல இசை தான் என நிரூபிப்பது.


ஒண்டர்ஃபுல் ஒளிப்பதிவு  என சொல்ல வைத்த இடங்கள்

1.டைட்டில் போடும் சீனில் ஆற்று நீர் காண்பிக்கப்பட்ட விதம்.

2. சிறுவனின் தாய் சந்திப்பு சீனில் கேமரா கோணம்

3.சினிக்தா காரில் வரும் இளைஞர்களால் ரேப்புக்கு ட்ரை பண்ணப்படும்போது வைக்கப்பட்ட லாங்க்‌ஷாட்

4,க்ளைமாக்ஸில் ராகினியை சந்திக்கும்போது அவருக்கு க்ளோஷப் காட்சி வைக்காமல் லாங்க் ஷாட்டிலேயே வலியை உணர்த்துவது.

வசனகர்த்தா ஜொலித்த இடங்கள்

1.  நீ வேலைக்காரி.என் கூட ஸ்கூலுக்கு வர வேணாம்,வந்தா எல்லாரும் நீதான் என் அம்மான்னு நினைப்பாங்க.

2.  இந்த பஸ் மெயின்ல போகுதா? பைபாஸ்ல போகுதா?

ம், ரோட்ல


3.  எங்கப்பா நான் சின்னப்பையனா இருந்தப்பவே ஓடிப்போயிட்டாரு..உங்கப்பா?

நான் பிறந்ததுமே ஓடிட்டாரு.

எல்லா அப்பாக்களும் இப்படித்தான் ஓடிப்போவாங்களா?

4. அம்மாவைப்பார்த்ததும் நீயும் என்னை மாதிரியே அவளை அடிக்கப்போறியா?

ம்ஹூம்,கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கப்போறேன்.

5.  ரோட்ல போறவங்கிட்டே எதுக்கு தண்ணீர் கேக்குறே?

ம்,லிஃப்ட் கேக்கறேன்.

அது எதுக்கு நமக்கு..?

6.  நான் ஒரு நொண்டி,நான் எங்கம்மா வயிற்றுல இருக்கறப்பவே செத்திருக்கலாம்.

7.  உன் பேரன்ன?      மெண்ட்டல் .   ஆத்தாடி ,அப்படி ஒரு பேரா?

8.  கொஞ்சம் வேகமாத்தான் போங்களேன்

       .நோ நோ எங்கம்மா 40 கி மீ ஸ்பீடுலதான் போகச்சொல்லி இருக்காங்க.

ஹனிமூனுக்கு வந்த இடத்திலும் அம்மா ஞாபகமா?

9.  ப்ளீஸ் கொஞ்சம் பேசாம வர்றியா?

அய்யய்யோ பேசாம வந்தா நான் ஊமை ஆகிடுவேன்.

10. இதுதான் உங்கம்மா என யார் உனக்கு சொன்னது?       என் பாட்டி.

பாட்டியை உனக்கு அடையாளம் காட்டுனது யாரு? உனக்கு அம்மாவும் இல்லை,-பாட்டியும் இல்லை.

11. விலைமாது - முத்தம் மட்டும் எனக்கு பிடிக்காதுகுடிகாரன்,கிழவன்,சீக்காளி அப்படி ஆளாளுக்குகிட்டே வரும்போது எனக்கு நாறும்,எங்கம்மா பொணம் கூட அப்படி நாறலை.. என்னை சுத்தி ஒட்டடை ...புது சரக்குன்னு சொல்லி..... 3 நாள்ல 36 பேரு  /...... முடியல ...என்னால முடியல.. வலி.. வலி...

12. அம்மா இல்லைன்னா எல்லாரும் கஷ்டப்படுவாங்களா?

கஷ்டம்னா என்னன்னு இப்போ உங்களைப்பார்த்துதான் தெரிஞ்சுது..

13. நரிப்பல்லு வாங்கிக்க..தம்பி..அதிர்ஷ்டம் தேடி வரும்.

அம்மா தேடி வருவாளா?

14. உன்னை மெண்ட்டல்னு சொன்னப்போ உனக்கு எப்படி கோபம் வந்தது?அதே மாதிரிதானே எனக்கும் எங்கம்மா செத்துட்டா அப்படினு நீ சொன்னப்பவும் இருந்திருக்கும்?

டைட்டிலில் துணை ,இணை இயக்குநர்கள் என 17பேர் அறிமுகம் ஆகிறார்கள் அனைவருக்கும் செம வேலை இருந்திருக்கும்.ஒரு படத்துக்கு கண்ட்டினியூட்டி எவ்வளவு முக்கியம் என்பதை சிலாகிக்கவைக்கும் அளவு உபயோகிக்க வைத்திருக்கிறார் மிஷ்கின்.

கோபிசெட்டிபாளையம் கள்ளீபட்டி என ஈரோடு மாவட்டத்தில் பல இடங்கள் காட்டப்படுவது அழகு.

நெம்பர் டூ போக 3 விரலை ஹீரோ காண்பிப்பது,போகும் இடம் இருட்டு என்பதால் கோயிலில் இருந்து அகல் விளக்கை அபேஸ் செய்து வரும் ஹீரோ கடவுள் சிலையை காட்டி பாவம் அவங்க இருட்டுல இருப்பாங்க என்பது.,லிஃப்ட் தர மறுத்த லாரிக்காரனிடம் இருந்து ஹாரனை அபேஸ்
செய்வது, பைத்தியமாக வரும் ஹீரோ எங்கே போனாலும் சுவரின் ஓரத்தில் விரலால் கோலம் போட்டுக்கொண்டே போவது   என ரசிப்புத்தன்மையை அதிகரிக்கும் சீன்கள் அதிகம்.

தாலாட்டு கேக்கலாமா? பாட்டு, ஒண்ணூக்கு ஒண்ணு துணை இருக்கும் உலகத்துலே அன்பு ஒண்ணுதான் அனாதையா என பாடல்கள் கலக்கல் ரகம்.

இந்தப்படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை.ஆனால் இந்தப்படத்துக்கு எல்லாம் குறை சொல்லிகொண்டிருந்தால் நல்ல சினிமா பார்க்கவே லாயக்கு இல்லை.

இந்தப்படத்தில் கமல் நடித்திருந்தால் படத்தின் மார்க்கெட் கூடி இருக்கும் (மிஷ்கினின் முதல் சாய்ஸ் கமல்தான்,சம்பள விஷயம் காரணமாக கமல் நடிக்க மறுத்து விட்டாராம்).

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 50

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சூப்பர்

இந்தப்படம் ஜனரஞ்சகமாக சூப்பர் ஹிட் ஆகி ஓடவில்லை என்றால் நட்டம் இயக்குநருக்கு அல்ல.தனது ரசனையை மேம்படுத்திக்கொள்ளாமல் இன்னும் குண்டுச்சட்டியில்தான் குதிரை ஓட்டுவேன் என அடம் பிடிக்கும் தமிழ் ரசிகனுக்குத்தான்.

Saturday, November 27, 2010

கனிமொழி Vs கவுண்டமணி - சினிமா விமர்சனம்

அட

கவுண்டமணி - அய்யா ,ராசா,புது டைரக்டரு,இந்தப்படம் பத்திரிக்கையாளர் சந்திப்புல படத்தோட டைட்டில் பற்றி என்ன ராசா பேட்டி குடுத்தீஙக?ஞாபகமிருக்கா?

டைரக்டர் - அண்ணே,அது வந்து....கனி மொழி என்று டைட்டில் வைத்த்துக்கு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை,படத்தின் கதைக்கு அந்த டைட்டில் தேவைப்படுகிறதுன்னு பேட்டி குடுத்திருந்தேண்ணே...

கவுண்டமணி - மேலே மெலே....


டைரக்டர் - அப்புறம் .. ம் ம் இந்தப்படத்தை பார்த்தா இந்த டைட்டிலை விட பொருத்தமான வேற டைட்டில் இந்த படத்துக்கு வைக்கவே முடியாதுன்னு பேட்டி குடுத்திருந்தேன்...ஏண்ணே?பொருத்தமா இல்லையா?

கவுண்டமணி -  வருத்தமா இருக்கு.அந்தம்மா பேரை இப்படி எல்லாம் கெடுக்கறியேன்னு...இந்த டைட்டில் வைக்க அனுமதி வாங்க ஒரு மாசம் செலவு பண்ணி அலையோ அலைன்னு அலைஞ்ச நேரத்துக்கு நல்ல கதையை
ரெடி பண்ணி  இருக்கலாம்..

டைரக்டர் - ஏண்ணே,படத்தோட கதைக்கு என்ன குறைச்சல்?

கவுண்டமணி - ஹீரோ ஹீரோயினை ஒரு தலையா காதலிக்கறான்,கடைசி வரை காதலை அவ கிட்டே சொல்லவே இல்லை,கிளைமாக்ஸ்ல வேற ஒருத்தன் ஹீரோயினை தட்டிட்டு (கல்யாணம் பண்ணிட்டு ) போயிடறான்..இதுல என்ன புதுமை இருக்கு?இந்த மாதிரி ஓராயிரம் படம் பார்த்தாச்சு...

அட

டைரக்டர் - சரி,அதை விடுங்கண்ணே...ஹீரோவும்,ஹீரோயினும் சந்திக்கற முத சீன்ல 2 பேருமே மஞ்சள் கலர் டிரஸ் போட்டுட்டு வந்து கலக்கி இருப்பாங்களே,அதைப்பத்தி ஆடியன்ஸ் என்ன பேசிக்கறாங்க?

 கவுண்டமணி -  ஏதோ மஞ்ச மாக்கான் படத்துக்கு வந்துட்டமோன்னு பேசிக்கிட்டாங்க...

டைரக்டர் - சரி..ஹீரோயின் எப்படிண்ணே?

கவுண்டமணி - அது சும்மா சொல்லக்கூடாது..நல்ல ஃபிரிட்ஜ்ல வெச்ச லெமனா,18 வயசு தமனா மாதிரி தளதளன்னு தான் இருக்கு..ஆனா படத்தோட கதை,திரைக்கதை உனக்கு எமனா அமைஞ்சிடுச்சே?

டைரக்டர் - காமனா (COMMON) படத்தை பத்தி என்ன தாண்ணே சொல்ல வர்றீங்க?

கவுண்டமணி - படத்துக்கு தலை வலின்னு டைட்டில் வெச்சு இருக்கலாம்.

சி பி - அண்ணே,ஒரு நிமிஷம்....

கவுண்டமணி - வந்துட்டாண்டா வீங்குன வாயன்....டேய்.. இப்போ எதுக்கு வந்திருக்கே?படத்துல நீ கேட்ட நல்ல வசனத்தை பற்றி சொல்றக்காக்கும்?பரங்கிமலை ஜோதில பிட்டு படம் பாக்கற நாய் நீ இந்தப்படத்துக்கு எல்லாம் விமர்சனம் எழுதலைன்னு யார் அழுதா..?நீ தலையே சீவ மாட்டியா?

சி பி - அண்ணே,பட விமர்சனம் இனிமே எழுதுனா உன் தலையை சீவிடுவோம்னு ஆளாளுக்கு மிரட்டறாங்க..அவங்க வந்து சீவட்டும்னு நான் சீவாம இருக்கேன்.

கவுண்டமணி - அட விளங்காதவனே.. அவங்க அரிவாளோட வருவாங்க,சீப்போட வருவாங்கன்னு நினைச்சியா?சரி சரி சொல்லித்தொலை...
அட

ரசிக்க முடியாத படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்-

1.யோவ்,தியேட்டர்ல எல்லா லைட்டையும் ஆஃப் பண்ணுங்கய்யா.. சின்னஞ்சிறுசுக  ஏதோ சில்மிஷம் பண்ணுவாங்க..ஈங்க பாட்டுக்கு எல்லா லைட்டையும் போட்டு வெச்சா?


2.காலேஜ்க்கு படிக்கத்தானே வர்றே?எங்கே புக்,பேனா,நோட் எல்லாம்?

 எல்லாம் டெஸ்க்குல வெச்சுட்டு போயிடுவேன் சார்...

அடப்பாவி,அப்புறம் எதை படிப்பே?   நான் எங்கே சார் படிக்கறேன்?


3. முதல்ல இந்த மாதிரி அட்வைஸ் பண்ற லெக்சரரை டைவர்ஸ் பண்ணனும்.

4  நமக்குள்ள  இருக்கற டேலண்ட்டை அடிக்கடி யூஸ் பண்ணனும்,பெரிய வாய்ப்பு கிடைக்கறப்ப பார்த்துக்கலாம்னு வெயிட் பண்ணக்கூடாது..

5. டேய். உனக்கு எல்லா வேலையும் செஞ்சு செஞ்சு என் காலெல்லாம் தேஞ்சு போச்சு.

அம்மா.பேசாம எனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி  வெச்சுடு. உனக்கு ரெஸ்ட் எனக்கு பெஸ்ட்.


6. கமபைன் ஸ்டடி பண்றேன்னு வெளில போறவனை நம்பிடலாம்,ஆனா தனியா படிக்கறேன்னு கதவை தாழ் போட்டுட்டு படிக்கறவனை நம்ப முடியாது..

7.  டேய் மாப்ளே.. இவளா உன் ஆளு?சூப்பரா இருக்கா.. இவளை மட்டும் நீ கல்யாணம் பண்ணிட்டே என் வயித்தெரிச்சல் உன்னை சும்மா விடாதுடா..

நல்ல ஃபிரண்டுடா...

8. என் பந்தை எவனும் தொடக்கூடாதுடா,தொட்டா அவன் ஃபெயில் ஆகிடுவான்..

அடப்பாவி..எப்படி எல்லாம் மிரட்டறான்..நீயே தனியா வலிபால் விளையாடு..

9.எது கத்துக்கறதா இருந்தாலும் இன்ட்ரஸ்ட் ரொம்ப முக்கியம்.

10.  சார் எனக்கு பட சான்ஸ் வேணும்.

எனக்கு தெரிஞ்ச புது டைரக்டர் ஒருத்தர் இருக்காரு,போறியா?

சார்... மணிரத்னம்,ஷங்கர் இப்படி இருந்தா சொல்லுங்க...

11.  மாமா ,உங்களுக்கு லவ் பிடிக்காதா.. ஏன்? லவ் ஃபெயிலரா?

இல்ல,லவ் பண்ணுனவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..அதான்..

12. போலீஸ் மாதிரியே கேள்வி கேக்கறியே அது ஏன்?

திருடன் மாதிரியே பதில் சொல்றியே அது ஏன்?

13.  காதலியின் ஃபோட்டோவை தொட்டுப்பார்க்க முயலும் நண்பனிடம் ஹீரோ-   டேய்.. அவ என் ஆளு கை வைக்காதே..



அடப்பாவி.. வெறும் ஃபோட்டோடா..

கூப்பிட்டுப்பாரு,திரும்பிப்பார்ப்பா..

14. நான் உன் ஃபோன் நெம்பரை சத்தம் போட்டு  அவ முன்னால சொல்றேன்,அவ உனக்கு கால் பண்ணுனா  அவ உன்னை லவ் பண்றான்னு அர்த்தம்.

சப்போஸ் அவளுக்கு நீ சொன்ந்து கேக்கலைன்னா?

காது கேகாதவனு கழட்டி விட்டுடு..

15.  என்னடா ஸ்வெட் ட்ரீம்ஸ் (SWEAT DREAMS) னு மெசேஜ் அனுப்பி இருக்கே..ஸ்வீட் ட்ரீம்ஸ்டா (SWEET DREAMS)

அடடா இத்த்னை நாளா ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோடதான் எல்லாருக்கும் அனுப்பினேனா?

அதான் எவளும் உனக்கு செட் ஆகலை


16.  இங்கே வெச்சிருந்த பாட்டில்ல இருந்த மீதி சரக்கு எங்கே?


விடுடா,சிந்தி இருக்கும்

  எங்கே,சிந்துன இடத்தை காமி..      என் வாய்ல...


17. உங்கம்மாவுக்கு ஃபோன் பண்ணி என் கூட இருக்கறதா ஏண்டா சொன்னே?

மாட்டுனா எல்லாரும் மாட்டனும்னுதான்

18. அம்மா ஒரு 200 ரூபா குடு.

எதுக்கு?

உன் பர்ஸ்ல 500 ரூபா  நோட்டுதான் இருந்துச்சு அதான்   200 குடு,500 எடு.

19. அப்பா இந்த இங்கிலீஷ் படத்துல கிஸ் சீனே வர்ல?

5 வயசுப்பையன் கேக்குற கேள்வியைப்பாரு.. எல்லா இங்கிலீஷ் படத்துலயும் கிஸ் சீன் வரும்னு யார் சொன்னது உனக்கு?

கவுண்டமணி - அப்பாடா,முடிச்சுட்டான்,நாயே நீ ஓடிப்போயிடு,தம்பி நீ நில்லு,நீ இதுக்கு முன்னால ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் ல வேலை செஞ்சியா?

டைரக்டர் - ஆமாண்ணே,எப்படி கண்டு பிடிச்சீங்க?

கவுண்டமணி - படத்துல பர்ச்சேஸ் பண்ற சீன் ஏகப்பட்டது வருதே..

1. ஹீரோ செல்ஃபோன் வாங்கும் சீன் 20 நிமிஷம்

2. ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் டிராவல் பேக் வாங்கும் சீன் 5 நிமிஷம்

3.ஹீரோவின் அண்ணன் பைக் வாங்கும் சீன் 3 நிமிஷம்

4.ஹீரோயின் கிஃப்ட் வாங்கும் சீன் 7 நிமிஷம்

எதுக்கு இப்படி சாவடிக்கறே?

டைரக்டர் - அண்ணே ,படத்துல சம்பவங்கள் வேணும்னே...ரசிக்கற மாதிரி சீன்ஸ் நான் சொல்றேன்

1.ஹீரோயின் எங்கே இருந்து எந்த ரூட்ல வருவானு ஹீரோவுக்கு மேப் போட்டு விவரிக்கும் சீன்.

2. ஏரியா விட்டு ஏரியா போய் அந்த ஏரியா ஆளுங்க கிட்டே அடி வாங்கும் சீன்

3.யோகா கிளாஸ்க்கு முதன் முதலா போற ஹீரோ ஜீன்ஸ்,டி சர்ட் ,கூலிங்க் கிளாஸ் சகிதம் போற சீன்

4.உள்ளங்கை மாடலில் ஒரு சோபாவை அலங்கரித்து வைத்திருந்த  சீன்

கவுண்டமணி - தம்பி நீ ஹிட்ஸ் ஆன படங்கள் நிறைய பாரு.அதுல 60 சீன்ஸ் ரசிக்கற மாதிரி இருக்கும்.நீ பண்ணுன கூத்துக்களை நான் வரிசைப்படுத்தறேன் பாரு.

1.ஹீரோயின் காலடில ஹீரோ விளையாடும் வாலிபால் போய் விழுது,தை ஹீரோயின் எடுத்து தர்றா உடனே ஒரு டூயட்

2.நடக்காததை எல்லாம் நடந்ததாக கற்பனை பண்ணிக்கொள்ளும் ஹீரோ (இப்போதான் மந்திரப்புன்னகை,குடைக்குள் மழை வந்தது)

3.க்ளை மாக்ஸ்ல ஹீரோயின் டபுள் ஆக்ட்னு ஒரு ட்விஸ்ட் தந்து பேக் அடிச்சு அது ஹீரோவின் கற்பனைனு ஜகா வாங்குனது..

4. ......

டைரக்டர் - அண்ணே,நிறுத்துங்க...படம் ஓடுமா ஓடாதா?அதை மட்டும் சொல்லுங்க..

கவுண்டமணி - ஏ செண்ட்டர்ல 7 நாள்   பி செண்ட்டர்ல 5 நால்,  சி செண்ட்டர்ல 3 நாள் ஓடும்

டைரக்டர் -  பத்திரிக்கை விமர்சனம்?

கவுண்டமணி - ஆனந்த் விகடன்-34 மார்க்

குமுதம் - சுமார்

நாடகம் மாதிரி படம் எடுக்கறவங்களுக்கெல்லாம் இந்தப்படத்தோட ரிசல்ட் ஒரு பாடமா இருக்கட்டும்.

Friday, November 26, 2010

கரு.பழனியப்பன் விருந்து - காமெடி கும்மி

http://4.bp.blogspot.com/_f0nRbfd5SW4/TO5dK8hrBQI/AAAAAAAAAMU/M7YMmgX2-ps/s1600/mandhira_punnagai_movie_stills_04.jpg
கரு பழனியப்பன் அவர்கள் நமது பதிவர்களை விருந்துக்கு அழைத்தது பதிவுலகிலும்,கோடம்பாக்கத்திலும் பரபரப்பாக பேசப்பட்டும் ,விவாதிக்கப்பட்டும் வருகிறது.இது ஒரு நல்ல தொடக்கம் என சிலரும்,நடுநிலை விமர்சனத்துக்கு பாதிப்பு வரும் எனவும் கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

அதை எல்லாம் ஒதுக்கி விட்டு  கும்மி அடிக்கும் வேலையை மட்டும் நாம் செய்யலாம்.இந்த விருந்தில் கலந்து கொண்ட உண்மைத்தமிழன் அண்ணன்,பிரபா உட்பட அனைவரும் என் நண்பர்களே,இந்த நகைச்சுவை பொதுவாக எழுதப்பட்டது,யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.எல்லாம் தமாஷ்தான்.


1 .டைரக்டர் சார்,சினிமா விமர்சகர்கள் அனைவரையும் கூப்பிட்டு விருந்து வெச்சது தப்பா போச்சு.

ஏன்?

இப்போ படத்தை யாரும் விமர்சனம் பண்ணலை.விருந்து எப்படி இருந்துதுன்னு விமர்சனம் பண்ணீட்டு இருக்காங்க...


2. எதுக்காக எப்போதும் இல்லாத புது பழக்கமா விமர்சகர்களுக்கு விருந்து வெச்சுருக்கீங்க?

அவங்க நம்ம படத்துக்கு மருந்து வெச்சுடக்கூடாதுன்னுதான்.

3.பிளாக் ஸ்பாட்ல எழுதற ஆளுங்க எல்லாருக்கும் விருந்து உண்டுன்னு சொன்னாங்களே?

யோவ்,அது சினிமா விமர்சனம் எழுதறவங்களுக்கு மட்டும் தான்,பின்னூட்டம் போடறவங்களுக்கெல்லாம் கிடையாது...

4.சினிமா விமர்சனம் பண்ண வந்த விமர்சகர்களுக்கு இப்போ தர்ம சங்கடமான நிலைன்னு எப்படி சொல்றீங்க?

காலைல 11 மணிக்கு படத்தை போட்டு,  2 மணிக்கு முடிச்சு பசியோட இருக்கறவங்க கிட்டே இப்போ படத்தோட விமர்சனத்தை பாசிட்டீவ்வா எழுதுனாத்தான் விருந்துன்னு சொல்லீட்டாங்களாம்.

5.டைரக்டர் சார்,அவசரப்பட்டுட்டீங்க,மொத்தம் 2000 பேர் விருந்து வேணும்னு வந்திருக்காங்க. இப்போ எப்படி சமாளிக்கப்போறீங்க?

பேசாம பழைய விருந்து புக் 10 கிலோ வாங்கி ஆளுக்கு ஒண்ணு குடுத்து அனுப்பி விட்டுடலாமா?


6.டைரக்டர் சார்,சினிமா விமர்சனத்தை டைப் பண்ணிட்டேன்,பிளாக்ல போடலாமா?

இருங்க,நான்,தயாரிப்பாளர்,டிஸ்ட்ட்ரிபியூட்டர், ஹீரோ,ஹீரோயின் எல்லாரும் படிச்சுப்பார்த்து கரெக்‌ஷன் சொல்வோம்,அதுக்குப்பிறகு ஃபைனல் அப்ரூவல் தியேட்டர் ஓனர் சங்கத்தலைவர் தருவாரு,அப்புறமா ரிலீஸ் பண்ணுங்க.

7.சினிமா விமர்சகர்கள் குடும்பத்தையும் விருந்துக்கு கூப்பிட்டு இருக்காரே டைரக்டரு... அது ஏன்?

கொஞ்ச நஞ்ச மனசாட்சியோட எழுதறங்க கூட பக்கத்துல அவங்கவங்க மனைவி தர்ற டோஸ்சால படத்துக்கு சாதகமா விமர்சனம் எழுதத்தான்.


8.திடீர்னு பிளாக் உலகத்துல சினிமா விமர்சனம் எழுதறவங்க எண்ணிக்கை 250 மடங்கா பெருகிடுச்சே? ஏன்?

நல்லா விருந்து வைக்கலைன்னா படம் ஊத்திக்கிச்சுன்னு விமர்சனம் எழுதிடுவோம்னு மிரட்டத்தான்.

9. சி .பி செந்தில்குமாரும்,அவரோட சொந்தக்காரங்களும் விருந்து சாப்பிட லைன்ல நின்னும் டைரக்டர் துரத்தி விட்டுட்டாரே,ஏன்?

பிளாக்கர்ஸ் (BLOGGERS)க்குத்தான் விருந்து,இப்படி பிளாக்கா (BLOCK)  இருக்கறவங்களுக்கெல்லாம் விருந்து கிடையாதாம்.

10.யோவ் சிரிப்புப்போலீசு,படம் தான் நல்லாருக்குன்னு விமர்சனம் எழுதி இருக்கேனே,அப்புறம் ஏய்யா படம் எனக்குப்பிடிக்கலைன்னு பின்னூட்டம் போடறீங்க?

அப்படிப்போட்டாத்தான் எதிர்காலத்துல பின்னூட்டம் போடறவங்களுக்கும் விருந்து வைக்கலாம்னு நினைப்பாங்க.

11.தமிழனுக்கு செஞ்சோற்றுக்கடன் உணர்வு நிறைய இருக்குன்னு எல்லாரும் புரூஃப் பண்ணீட்டாங்க.

எப்படி சொல்றீங்க ராம்சாமி?

சுமாரான படத்தைக்கூட தமிழ் சினிமாவின் விடிவெள்ளி,பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்,இந்த மாதிரி ஒரு படம் இதுவரை வந்ததே இல்லை.மைல்கல் படம்னு ஆளாளுக்கு அள்ளி விடறாங்களே?

12. என்னய்யா இது ?தியேட்டர் வாசல்ல 50 பேர் நின்னுக்கிட்டு  படம் நல்லாலை,படம் ஓடாது அப்படின்னு சொல்லீட்டு இருக்காங்க?

அவங்க எல்லாருமே  சி பி  மாதிரி வேலை வெட்டி இல்லாத பசங்க,மக்களோட மவுத் டாக் தான் உண்மையான விமர்சனம்னு சொல்லப்படறதால படத்தோட டைரக்டரை ,புரொடியூசரை மிரட்டறதுக்காக அப்படி நெகடிவ் விமர்சனம் சொல்றாங்க?ஏதோ விருந்தும்,குவாட்டர் மருந்தும் கிடைச்சா போதுமாம்.

டிஸ்கி - இந்த ஜோக்ஸ் எல்லாமே பட்டாபட்டி அவர்களின் கட்டுரையை நான் படிக்கும்போது தோன்றியவை,எனவே இந்தப்பதிவின் திட்டுக்கள் அனைத்தும் அவருக்கே உரித்தாகும்.

கொலைக்கேசில் மாட்டிய ஆளுங்கட்சித்தலைவர்


1. “மன்னா!  மற்போர்  புரியலாமா,  விற்போர்  புரியலாமா  என்று  எதிரிநாட்டு மன்னன்  அறைகூவல்  விடுக்கிறான்!”

“தளபதி!  சொற்போர்  புரியலாம்  என்று  கூறு.  அப்போதுதான்  நமக்கு  எந்தச்  சேதாரமும்  இருக்காது!”



2. “நம்ம  தலைவர்,  கொலை  கேஸ்ல  கோர்ட்  விசாரணையின்போது  ஏதோ கோக்குமாக்கா  குறுக்குக்  கேள்வி  கேட்டாராமே?”

“ஆமா,  சின்னப்  பசங்க  கொலை  செஞ்சா,  சிறுவர்  சீர்திருத்த்ப்  பள்ளியில  போடறீங்க.  ஆனா,  பெரியவங்க  கொலை  செஞ்சா  மட்டும்  ஏன்  முதியோர்  சீர்திருத்தப்  பள்ளியில  சேர்க்காம,  ஜெயில்ல  போடறீங்கனு  கேட்டாரு!”



3. “சொத்துக்  குவிப்பு  வழக்குல  உங்களை  கோர்ட்  ரிலீஸ்  பண்ணிடுச்சே...  இதைப்  பத்தி  என்ன  நினைக்கறீங்க  த்லைவரே?”

“இந்த  மாதிரி  சாட்சி  கிடைக்காம  கேஸ்  தடுமாறும்னு  தெரிஞ்சிருந்தா,  இன்னும்  அதிகமா  சொத்து  சேர்த்திருக்கலாமேன்னுதான்!”



4. “மந்திரியாரே,  எதிரி  மன்னன்  தகவலை  புறா  மூலம்  அனுப்பாமல்,  மைனா  மூலம்  அனுப்பியுள்ளானே,  ஏன்?”

“புரியவில்லையா  மன்னா! உங்களுடையது  மைனாரிடி  அரசு  என்று  சுட்டிக்காட்டுகிறான்!”



5. “ம்ன்னர்  சேடிப்  பெண்ணைப்  பார்த்து  ‘உன்னை  எல்லாம்  வைக்க  வேண்டிய  இடத்தில்  வைக்க  வேண்டும்’  என்கிறாரே...  அவளிடம்  அப்படி என்ன  தவறு  கண்டார்?”

“நீ  வேற!  மன்னர்  சேடிப்  பெண்ணின்  அழகில்  மயங்கி,  அந்தப்புரத்தில் வைக்கத்  திட்டம்  போடுகிறார்!”



6. “அமைச்சரே!  அண்டை  நாட்டு  அரசர்கள்  என்  மீது  என்ன  அபிப்ராயம்  வைத்திருக்கிறார்கள்?”

“மன்னா!  உங்களிடம்  பொது  வாழ்வில்  நேர்மையும்  இல்லை...  போர்  வாழ்வில்  கூர்மையும்  இல்லை  என்றுதான்  அபிப்ராயப்படுகிறார்கள்!”



7. “என்னதான்  கெட்ட  செய்தியாக  இருக்கட்டும்...  தூது  வந்த  புறாவின்  முதுகில்  நீங்கள்  அப்படி  ஓங்கி  அடித்திருக்கக்  கூடாது  மன்னா!”

“அதனால்  என்ன  அமைச்சரே!”

புற  முதுகிட்டவர்  என்ற  அவப்  பெயரோடு  புறா  முதுகில்  இட்டவர்  என்ற  அவப்  பெயரும்  சேர்ந்துகொண்டதே!”



8. “தலைவர்  கார்ல  போறப்ப  குழியில  விழுந்து,  படுகாயம்  அடைஞ்சுட்டாரு!”

“அதுக்காக  பள்ள  நிவாரண  நிதி  வசூல்  பண்ணக்கிளம்பிடறதா?”



9. “தலைவரோட  தமிழ்ப்  பற்றுக்கு  ஒரு  அளவே  இல்லாமப்போச்சு!”

“எப்படிச்  சொல்றே?”

“உதட்டில்  வரும்  உமிழ்  நீர் கூட  தமிழ்  நீராக  வர  ஆசைப்படுகிறேன்னு ஏகத்துக்கும்  உதார்  விடறாரே!”

Thursday, November 25, 2010

நல்ல சினிமா vs நொள்ள சினிமா

http://tamildigitalcinema.com/wp-content/gallery/manmathan_ambu/manmathan-ambu-1.jpg
எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும் என பார்ப்பதற்கு முன் எப்படிப்பட்ட் சினிமா வந்து கொண்டு இருக்கு என்பதை பார்ப்போம்.

1.மதுரை தான் கதைக்களன் - ஹீரோ,வில்லன் அனைவருக்கும் வேலையே யாரையாவது வெட்டுவதுதான்,எப்போதும் கையில் அரிவாளோடு அலையனும்.படம் ஃபுல்லா ரத்தம் தெறிக்கோனும்.இடை இடையே ஒரு பாட்டு,ஒரு குத்துப்பாட்டு,ஒரு ரீ மிக்ஸ் பாட்டு.

2.காதல் கோட்டை ஹிட் ஆனாலும் ஆனது,அந்த படம் வந்த சமயத்தில் காதல் என்ற வார்த்தையை வைத்து 47 படங்கள் வெளியானது.நம்ம ஆட்களிடம் உள்ள கெட்ட பழக்கமே “போல செய்தல்”.  அதாவது ஒரு படம் ஹிட் ஆனால் அதே போல் தொடர்ந்து படம் தருவது.அகத்தியனே மறுபடி அதே ஃபார்முலாவில் காதல் கவிதை த்ந்தாரே?

3.சமீப காலமாக க்ளைமாக்சில் ஹீரோவை சாகடிப்பது தொடர்கிறது.ராவணன்,காதல் சொல்ல வந்தேன்,பாணா காத்தாடி.. என நீள்கிறது பட்டியல்.எதற்கு இந்த போலியான அனுதாப ஒட்டு வரவழைக்கும் போக்கு?கதை அனுமதித்தால் மட்டுமே ஹீரோ சாக வேண்டும்.வலுக்கட்டாயமா சாகடிக்ககூடாது.

4.ஹீரோ ஒரு ஊரில் இருப்பார்,ஏதோ வேலையாகவோ அல்லது வேலை வெட்டி இல்லாமலோ வேற ஒரு ஊருக்கு போவார்,அங்கே ஒரு ரவுடி அல்லது தாதாவின் கொட்டத்தை அடக்குவார்.இந்த ஃபார்முலாவில் விஜய்,விஷால் உட்பட பலரும் பல படங்களில் நடித்து விட்டார்கள்.


எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும்?

1.இலக்கியத்துல இருந்து கதை எடுக்கனும்.ஏராளமான நாவல்கள் இருக்கு.அதற்கு திரைக்கதை எழுதி படம் எடுக்கனும்.எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் ,அவர்களிடம் இருந்து கதை வாங்கனும்.அவர்களுடன் அமர்ந்து திரைக்கதை உருவ்வாக்கனும்.

2.நிறைய இயக்குநர்கள் கதை ,திரைக்கதை உட்பட அனைத்து பொறுப்புகளையும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.அதெல்லாம் டி ஆர் கே பாக்கியராஜ் காலத்தோடு சரி.இனிமே ஒவ்வொரு இலாகாவுக்கும் ஒரு ஆள் தனியா செயல்படனும்.திரைக்கதை அமைக்க பெரிய டீம் வேணும்,அவஙக் பேரை டைட்டில்ல போடனும் (அப்போதான் அவங்க ஒழுங்கா ஒர்க் பண்ணூவாங்க)

3.விகடன் வார இதழில் கரையெல்லாம் செண்பகப்பூ எனும் தொடர் சூப்பர்ஹிட் ஆனது,அது சுஜாதாவின் சம்மதத்தின் பேரில் பிரதாப்போத்தன் ஹீரோவாக நடிக்க அதே டைட்டிலில் படமாக்கப்பட்டு தோல்வி அடைந்தது,காரணம் ஹீரோ செலெக்‌ஷன்.கணெஷ் மாதிரி ஒரு புத்திசாலி கேரக்டர் பிரதாப் மாதிரி ஒரு லூஸ் தனமான (மீண்டும் ஒரு காதல் கதை)ஆள் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.எனவே ஹீரோ செலக்‌ஷனில் கவனம் வேண்டும்.இவர் கால்ஷீட் கிடைச்சுடுச்சு படம் பண்ணிடலாம்னு இருக்கக்கூடாது.

4.மோகமுள் (தி.ஜானகிராமன்) அதே பெயரில் படமாக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வியாபார ரீதியில் தோல்வி.இதற்குக்காரணம் படத்துக்கு விளம்பரம் இல்லாமையும் ,புதுமுக நடிகர்களை போட்டதும்தான்.இந்த மாதிரி ரிஸ்க் உள்ள கதைக்கு ஃபேமஸ் ஹீரோவே சரி.படம் தயாரிக்க ஆகும் செலவில் 40% விளம்பரத்துக்கும் செலவு செய்ய வேண்டும்.

5.அதே போல் காயத்ரி,ப்ரியா, 2ம் ரஜினி படங்கள் சுஜாதா கதை .இதில் 2 படங்களும் ஹிட் தான் என்றாலும் சூப்பர்ஹிட் இல்லை.அதற்குக்காரணம் ஒரிஜினல் கதையில் கை வைத்தது.நாவல் ஆசிரியர் என்ன எழுதி இருக்காரோ அதை அப்படியே படம் எடுக்க முடியாதுதான்,அதற்காக 75% மாத்தினா இப்படித்தான் ஆகும்.

6..சுஜாதாவின் சூப்பர்ஹிட் நாவலான பிரிவோம் சந்திப்போம் கதையில் வந்த மதுமிதா,ரத்னா கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பை தமனாவோ,ருக்மணியோ,டைரக்டரோ ஏற்படுத்தமுடியவில்லை.அதனால் படம் வந்த சுவடே தெரியாமல் போனது.அந்தப்படத்தின் இயக்குநர் அந்த நாவலைப்படித்தே பார்த்திருக்க மாட்டார்,மேலோட்டமாக கதை கேட்டிருப்பார்.நாவலை படித்தால்தான் அந்த உணர்வுகளைஉள் வாங்க முடியும்.எனவே நாவலைப்படம் எடுக்கு இயக்குநர்கள் முதலில் முழுசாக நாவலைப்படிக்க வேண்டும்.

7..தங்கர் பச்சானின் கல்வெட்டு கதை  (அழகி)ஹிட்.மண் சார்ந்த பதிவாக அப்படி எடுக்கனும்.

8. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.அது போல் ஈடுபாட்டுடன் மொத்த டீமே உழைக்கனும்.

9.ஜேயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் கதை படமாகி ஹிட்.சம்பந்தப்பட்டா கதாசிரியரே ஆல் இன் ஆல் வேலை பார்த்தார்.

10.எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய சிறை கதை அதே பெயரில் படமாகி ஹிட்.ஆர் சி சக்தி மிக திறமையாக படம் பிடித்தார்.

11.

பாக்யராஜின் பவுனு பவுனுதான் தொடராக பாக்யாவில் வந்து பாராட்டை அள்ளினாலும் படம் படுதோல்வி.திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இதில் சறுக்கியது ஏன்?ஹீரோயின் மார்பில் மாமனின் பெயரை பச்சை குத்தியதைப்போல வரும் சீன் ஏற்க இயலாததாக இருந்தது.நாவலில் ஏற்படுத்தாத நெகடிவ் பாதிப்பை சினிமா ஏற்படுத்தியது.

12.அப்புறம் ரெண்டரை மணி நேரம் எடுத்தே ஆகனும்னு ரசிகர்களை கொன்னெடுக்க தேவை இல்லை.சினேகா பிரசன்னா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு,பிரசாந்த் நடித்த ஷாக்,போன்ற படங்கள் ஒன்றரை மணீ நேர படங்களே,வித்தியாசமாக கொடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்பார்கள்

டிஸ்கி 1 - முதல்வன் படத்தில் வருவதுபோல் ஒரு நாள் டைம் குடுத்து ஒரு படத்தை டைரக்ட் பண்ணி ஹிட் பண்ணு பாக்கலாம் என யாராவது அழைத்தால் சாரி என்னால் முடியாது.அந்த அளவு நாலெட்ஜூம் இல்லை,அனுபவமும் இல்லை.எனக்கு விமர்சனம் மட்டுமே தெரியும்.

டிஸ்கி 2 - சில அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அடிக்கடி ஃபோன் பண்ணி என்னை மிரட்டுகிறார்கள்.அவர்கள் காலை 10 டூ 11 மணீக்கும்,இரவு 8 டூ 9 மணீக்கும் கூப்பிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.ஏன் எனில் காலை ஆஃபீஸ் மேனேஜர் அந்த டைமில் என்னை திட்டுவார்.மாலை அம்மா,அல்லது அக்கா திட்டுவார்.ஒரே சமயத்தில் 2 இடங்களில் திட்டு வாங்க முடியறது இல்லை

டிஸ்கி 3 - என்னை டீசண்ட்டாக திட்டுபவர்கள் 9842713441 என்ற எண்ணிலும்,இண்டீசண்ட்டாக திட்டுபவர்கள் 0424 2213095 என்ற எண்ணிலும் திட்டவும்.ஏன் எனில் லேண்ட் லைன் ஃபோனை அட்டெண்ட் பண்ணி திட்டு வாங்கவே ரூ 750 சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வைத்திருக்கிறேன்.

டிஸ்கி 4 - சாரி டூ சே,மறந்துடுச்சு,அந்தப்பெண்ணை வேலைக்கு வைத்திருக்கிறேன்,டபுள் மீனிங்கில் புரிந்து கொண்டு யாரும் சண்டைக்கு வர வேண்டாம்.

டிஸ்கி 5 - சிலர் மிஸ்டு கால் விடுகிறார்கள்.யாரோ என்னவோ என கூப்பிட்டால் கண்டபடி திட்டுகிறார்கள்.அவர்கள் சொந்தக்காசிலோ,கடன் வாங்கி டாப் அப் பண்ணியோ திட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, November 24, 2010

ஆக்சிடெண்ட்டில் மாட்டிக்கிட்ட தலைவர்



1. கண்டதும்  காதலில்  விழுந்தேன்; அவளோட  அப்பா  இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும்,  ‘பொத்’ தென  காலில்  விழுந்தேன்!



2. “தலைவரே,  ஆள்  இல்லாத  ரயில்வே  கிராஸிங்ல  அடிக்கடி  ஆக்சிடென்ட் நடக்குதே...  இது  பத்தி  என்ன  நினைக்கறீங்க?”

“அதான்  எனக்கும்  புரியல.  ஆளே  இல்ல;  எப்படி  ஆக்சிடென்ட்  நடக்குது?”



3. “தலைவலின்னு  ஒரு  நாள்  லீவ்  எடுத்தே...  ஓ.கே!  கால்  வலிக்கு  ஏன் ரெண்டு  நாள்  லீவ்  கேக்கறே?”

“தலை  ஒண்ணுதான்  இருக்கு;  ஆனா  கால்  ரெண்டு  இருக்கே...”

“சரி  சரி... பல்  வலி  வராம  பார்த்துக்கோ!”



4. “இந்த  ஒற்றன்  வேலைக்குப்  புதுசா...?”

“எப்படி  மன்னா  கண்டுபிடித்தீர்...?”

“ ‘போர்  அபாயம்...  ஓடுங்கள்’  என்று  குரல்  தராமல்,  ‘கிளம்புங்கள் போர்க்களத்திற்கு’ என்று  உளறுகிறானே...”



5. “போர்களத்தில்  முள்  குத்தியதால்  மன்னர்  துடிக்கிறார்!”

“யாரிடமாவது  குண்டூசி  வாங்கி  முள்ளை  எடுப்பதுதானே?”

“வேண்டாம்.  போர்க்களத்தில்  பின்வாங்கினோம்  என்ற  அவப்பெயர்  வந்துவிடும்!”



6. “மாறுவேடத்தில்  மன்னர்  நகர்வலம்  வந்தது  வேஸ்ட்  ஆகிவிட்டதா?”

“ஆமாம!  ‘மன்னர்  மாறுவேடத்தில்  வருகிறார்...  பராக்...  பராக்...!’  என்று  ஒரு  சேவகன்  கத்தித்  தொலைத்துவிட்டான்!”



7. “அமைச்சரே!  நாட்டு  மக்கள்  என்னைப்  பற்றி  என்ன  பேசிக்கொள்கிறார்கள்?”

“போர்க்களத்தில்  மண்ணையும்,  அந்தப்புரத்தில்  பெண்ணையும்  அசராமல்  கவ்வும்  அசகாய  சூரர்  என்று  பேசிக்கொள்கிறார்கள்,  மன்னா!”



8. “மன்னா!  உடனடியாக  உங்கள்  எடையைக்  குறையுங்கள்!”

“ஏன்?”

“180-ம்  கிலோத்துங்க  சோழன்  என்று  அழைக்கிறார்கள்!”



9. “அரண்மனைக்குள்  இருப்பதற்கு  நேர்  எதிராக  மன்னர்  வெளியில்  இருக்கும்போது  நடந்துகொள்வார்.”

“எப்படி?”

“அரண்மனையில்  ‘யாரங்கே’ என்று  அதிகாரமாக  கேட்பார்.  நகர்வலம்  போக  வெளியே  வந்தால்  ‘அங்கே  யாரு’ என்று  பம்முவார்!”



10. “புறமுதுகிட்டு  ஓடிவரும்போது  மன்னர்  தனியாக  ஓடி  வராமல்  வீரர்களுடன்  சேர்ந்தே  ஓடி  வருகிறாரே?”

“ஒன்றுபட்டால்  உண்டு  வாழ்வு  என்பதைக்  கடைபிடிக்கறாராம்!”

Monday, November 22, 2010

பிரபல பதிவர்களின் பர்சனல் சேட்டிங்க்ஸை அம்பலமாக்கிய இணைய தளம்

















மெயிலில் மெசேஜ் அனுப்புவது,மின் அரட்டையில் ஈடுபடுவது எல்லாம் சேஃப் ,பர்சனல் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் ஒரு இணைய தளம் பிரபல பதிவர்களின் லவ் சேட்டிங்க்கை அம்பலப்படுத்தி உள்ளது.

1. உண்மைத்தமிழன் -

ஃபிகரு - சார்,என் கிட்டே ஒரு லாங்க் சைஸ் 2 குயர் நோட்டு குடுத்து விட்டு இருக்கீங்களே..எதுக்கு?அதை ரெக்கார்டு நோட்டா யூஸ் பண்ணிக்கவா?

உண்மைத்தமிழன் - அடிப்பாவி ,அது என் லவ் லெட்டர்.

ஃபிகரு - லவ் லெட்டர்னா 2 பக்கம் தானே எழுதுவாங்க?


உண்மைத்தமிழன் - நான்  ரெண்டரை மணி நேரம் ஓடற சினிமா  விமர்சனத்தையே 20 பக்கம் எழுதற ஆளு,25 வருஷம் ஒண்ணா வாழப்போற பொண்ணுக்கு அட்லீஸ்ட் 400 பக்கங்களாவது லெட்டர் எழுத வேணாம்?

2.கேபிள் சங்கர்

ஃபிகரு - சங்கர்,வழக்கமா எல்லா காதலர்களும் பீச்லயோ,கோயில்லயோதானே மீட் பண்ணுவாங்க?நீங்க மட்டும் ஏன் ஏதாவது ஹோட்டல்ல மீட் பண்ணலாம்னு சொல்றீங்க?

கேபிள் சங்கர்  - ஏன்னா எனக்கும் சாப்பாட்டுக்கடைக்கும் ராசி அதிகம்.நான் ஒண்ணு மட்டும் முதல்லியே சொல்லிடறேன்,உங்கப்பா மட்டும் நம்ம காதலை எதிர்த்தா அவரை கொத்துபுரோட்டா பண்ணிடுவேன்.

ஃபிகரு - உங்களுக்கு எப்போ ஃபோன் பண்ணுனாலும் ஒரு லேடி ஃபோனை எடுத்து “சார் ஸ்டோரி டிஸ்கஷன்ல இருக்காரு”அப்படினு சொல்றாங்களே..அவங்க உங்க பி ஏ வா?

கேபிள் சங்கர்  - சுத்தம் ,அது என் செல் ஃபோன் ரிங்க் டோன்,சும்மா என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணீட்டு இருந்தா எனக்கு பிடிக்காது.

ஃபிகரு - சரி,சினிமா விமர்சனம் பண்றதுல நீங்க தான் நெம்பர் ஒன் அப்படினு சொல்றாங்களே?என் அழகை பற்றி விமர்சனம் பண்ணுங்க பாக்கலாம்?

கேபிள் சங்கர்  - என் எண்டர் கவிதைகள் படி.எல்லாமே எண்ட்டர்டெயின்மெண்ட் கவிதைகளாவும் இருக்கும்,அழகை வர்ணிக்கறமாதிரியும் இருக்கும்.உன் முகத்தை க்ளோசப்ல பார்க்கறப்ப பயமா இருக்கு.ஜூம் பண்ணி லாங்க் ஷாட்ல பார்த்தா பாஸ் மார்க் போடலாம்.


3.மங்குனி அமைச்சர்

ங்கொய்யால,உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு தமிழ்மணத்துல ஓட்டுப்போடு,பிடிக்கலைன்னா இண்ட்லில ஓட்டுப்போடு..மொத்தத்துல எனக்கு ஓட்டு விழுந்தா சரி..அட ச்சே பதிவு ஞாபகத்துலயே பேசிட்டேன். டியர் உனக்கு என்னை பிடிச்சிருந்தா என் வலது கன்னத்துல முத்தம் குடு,பிடிக்கலைன்னா இடது கன்னத்துல முத்தம் குடு.மொத்தத்துல எனக்கு முத்தம் கிடைச்சா சரி.வாரா வாரம் டாப் 20 ல நான் வந்தே ஆகனும்.பாக்கறவனுங்க எல்லாம் நொந்தே போகனும்.


4.பன்னிக்குட்டி ராமசாமி

என்னம்மா முறைக்கிறே?பெரிய பருப்பா நீ?நான் ஒரு பதிவு போட்டா 200 கமெண்ட்ஸ் 20 நிமிஷத்துல விழும்.நீ என்னடான்னா என் அழகைப்பற்றி ஒரு கமெண்ட் கூட அடிக்க மாட்டேங்கறே..எனக்கு மினி கட்டிங்க்னா பிடிக்கும்கறது உண்மைதான்,அதுக்காக இப்படி மினி ஸ்கர்ட் எல்லாம் போட்டுட்டு அலையக்கூடாது.இது ஆவறதில்லை.ஆனா இந்த மடம்  ஆகாட்டி சந்தை மடம்.. நான் சவுதி அரேபியா... அதனால அரேபியன் குதிரை மாதிரி நமீதா மாதிரி பொண்ணு தான் வேணும்.நீ என்னமோ பென்சில்ல கோடு போட்ட பல்பம் மாதிரி இவ்வளவு ஒல்லியா இருக்கறே?


5. சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - ஸாரி டியர்,என்னால நைட் 7 மணிக்கு எல்லாம் பீச்க்கு வர முடியாது.ஆஃபீஸ் டைம் ல ஆஃபீஸ்க்கே வந்துடு.அங்கேயே எல்லாம் பண்ணிக்கலாம்.நான் பதிவு போடறது,கமெண்ட்ஸ் போடறது எல்லாமே ஆஃபீஸ் டைம் தான்.அவ்வளவு ஏன் நான் குளிக்கறது,சாப்பிடறது  எல்லாமே ஆஃபீஸ்டைம்லதான்.இதுல என்ன காமெடின்னா என்னை நம்பி எனக்கு டேமேஜர் அட ச்சே மேனேஜர்  போஸ்ட்டிங்க் குடுத்திருக்காரே எங்க முதலாளி  அவர நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.


6. பட்டாபட்டி - இங்கே பாரம்மா,நான் ஒரு ஃபாரீன் பதிவர்,இப்படி நீ தாவணியோட வந்தா என்னால லாவணி பாட முடியாது.நீ பீச்சுக்கு மிடியோட வா,நான் அண்டர் டிராயரோட வந்துடறேன்,ஜாலியா லவ் பண்ணலாம்..கேள்வி.நெட்ல எனக்கு 34வது ரேங்க்,அதுக்காக 34 வயசுப்பொண்ணை எல்லாம் லவ் பண்ண முடியாது.உன் தங்கச்சி இருந்தா கூட்டிட்டு வா..த்ரீ வே லவ் படத்துல வர்ற மாதிரி 3 பேரும் லவ் பண்ணுவோம்.

7.நல்ல நேரம் சதீஷ்

உன் ஜாதகப்படி உனக்கு இப்போதைக்கு மேரேஜ் ஆகற யோகம் இல்லை.அப்போ தைரியமா உன்னை லவ் பண்ணலாம்.இந்தா இந்த ராசிக்கல் மோதிரத்தை போட்டுக்கொ,நல்ல நேரம் நம்ம ரெண்டு பேருக்கும் எப்பவுமே நைட் 8 டூ 9 தான். சித்தோடு வாய்க்காமேட்டுக்கு தனியா வந்துடு.உன் பேரே மோஹனா அப்படினு கும்முனு இருக்கு,எனக்கு டைட்டில் ரொம்ப முக்கியம்.

8.கோகுலத்தில் சூரியன் வெங்கட்

இங்கே பாரம்மா ,நீ சொல்றதை எல்லாம் அப்படியே என்னால் ஏத்துக்கவே முடியாது.என் சொந்த பிளாக்லயே கமெண்ட்ஸ்சுக்கு மாடரேஷன் வெச்சு இருக்கேன்.அவனவன் பிளாக்ல கமெண்ட்ஸ் வராதான்னு ஏங்கறான்.ஆனா எனக்கு கமெண்ட்ஸ்ல கூட டீசண்ட்சி முக்கியம்.இந்த மாதிரி எல்லாம் முழங்கை தெரியறமாதிரி ஜாக்கெட் போடாதே,ஃபுல் ஹேண்ட் ஜாக்கெட் வாங்கித்தர்றேன்,அதை போட்டுக்கோ,எல்லாம் கவர் ஆகிடும்,எனக்கு டீசண்ட்தான் முக்கியம்.எட்டாம் நெம்பர் பஸ்ல  வழக்கம் போல மீட் பண்ணுவோம்.எல்லாருக்கும் அஷ்டமத்துல சனி.ஆனா எனக்கு மட்டும் ஏறுமுகம்.எட்டு எனக்கு ராசியான நெம்பர்,தமிழ்மணத்துல தொடர்ந்து 2 வாரமா 8வது இடம்,இந்த பதிவுல கூட எனக்கு 8வது இடம்,அவ்வளவு ஏன்? நீ கூட எனக்கு 8வது ஆள் தான்.

9. ம தி சுதா

டியர், வாங்க சினிமாவுக்கு போகலாம்

இரம்மா,சுடு சோறு சாப்பிட்டுட்டு வந்துடறேன்.

யோவ்,பதிவுலகுலதான் சுடுசோறுக்கு சீட் போட்டுடறீங்க..இங்கேயுமா?

10.இம்சை அரசன் பாபு

டியர் பாபு,எதுக்கு என் ஆள் காட்டி விரலை ஆராயறீங்க?வழக்கமா லவ்வர்ஸ்னா கண்ணை,உதட்டை,கன்னத்தை பார்ப்பாங்க..நீங்க டிஃப்ரெண்ட்டா இருக்கீங்களே...

இந்த டகால்டி வேலை எல்லாம் வேணாம்.முதல்ல என் பதிவுக்கு ஓட்டு போட்டுட்டு வா,மத்ததை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.ஓட்டு போட்டிருந்தா விரல்ல மை இருக்குமே..என்னை யாராலயும் ஏமாத்த முடியாது..நானே ஏமாந்தாதான் உண்டு.

டிஸ்கி 1- மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனையே.இந்த மின் அரட்டையை வெளியிட்ட அந்த கேவலமான இணைய தளம் அட்ராசக்க தான்.எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்.பிரபல பதிவர்கள் அனைவரும் என நண்பர்கள் என்பதால் அவர்கள் யாரும் இதை சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.அவர்களது ரசிகர்கள்,நண்பர்கள் யாராவது மனம் புண்பட்டால் அதற்கு சாரி.இந்தப்பதிவு ஹிட் ஆனால் பாகம் 2 வெளி வரும் ,ஊத்திக்கிச்சுன்னா கமுக்கமா இருந்துக்குவேன்.(வேற என்ன பண்ண முடியும்?)

டிஸ்கி 2 - எனது சேட்டிங்க் ஏன் வரவில்லை?என கேட்பவர்களுக்கு

1.சொந்த செலவில் யாராவது சூன்யம் வெச்சுக்குவாங்களா?

2. டைட்டிலை நன்கு கவனிக்கவும்.இது பிரபல பதிவர்களுக்கு மட்டும்,ஓட்டு பெறுவதில்,கமெண்ட்ஸ் பெறுவதில்,ஹிட்ஸ் கிடைப்பதில்,பதிவின் தரத்தில் இப்படி ஏதோ ஒரு வகையில் அவர்கள் என்னை விட முன்னணியில் உள்ளதால் நான் இதில் இடம் பெறவில்லை.

3.மேலும் நான் ஃபிகர்களுடன் கடலை போடுவதில்லை...எனக்கு வயசு இன்னும் அந்த அளவு ஆகலை.(ஜஸ்ட் 18)

Sunday, November 21, 2010

நகரம் - டப்பா படத்தை விமர்சனம் பண்ணுனா தப்பா?

 
கவுண்டமணி - வாப்பா சுந்தர் சி, சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிட்டே போல?

சுந்தர் சி - ஏண்ணே ,படம் சரி இல்லையா?என் சொந்தப்படம்னே...

கவுண்டமணி - நாங்க எல்லாம் பார்த்து நொந்த படம்னு சொல்லு..

சுந்தர் சி - படத்துல பாட்டு,ஃபைட்டு,காமெடி,லவ்,ஆக்‌ஷன் அப்படினு எல்லா ஐட்டமும் இருக்கேண்ணே?

கவுண்டமணி - எந்தத்தமிழ்ப்படத்துல இதெல்லாம் இல்லாம இருக்கு.எல்லாருமே இதே மிக்சிங்க் தான் பண்றாங்க.அதெல்லாம் இருக்கட்டும்.நீ ஏன் தலை சீவறதே இல்லை?புறாக்கூட்டுத்த்லையன் மாதிரி சுத்திட்டு இருக்கே?எந்த கேரக்டர் குடுத்தாலும் தாடியோட சுத்தறே?

சுந்தர் சி - அண்ணே,அதெல்லாம் ஒரு ஸ்டைலுண்ணே...

கவுண்டமணி - ஸ்டைலா...மரியாதை கெட்டுப்போயிடும் பார்த்துக்கோ..அது இருக்கட்டும்,டூயட் சீன் எடுக்கறப்போ பக்கத்துலயே குஷ்பூ பொண்ணும் இருந்துச்சாக்கும்?



சுந்தர் சி - எப்படிண்ணே கரெக்ட்டா சொன்னீங்க?

கவுண்டமணி - பின்னே, டூயட் சீன்ல கூட மூஞ்சியை உம்முன்னே வெச்சுக்கிட்டிருந்தியே...ரவுடி கேரக்டர்னா எப்பவும் உர்ருன்னே வெச்சிருக்கனும்னு உனக்கு எவன் சொல்லிக்குடுத்தான்?

சுந்தர் சி - அண்ணே,படத்தோட கதையைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கண்ணே...


கவுண்டமணி - நாஸ்தி

சுந்தர் சி - என்னண்ணே இப்படி சொல்லுறீங்க?

கவுண்டமணி - நீதானே ஒரு வார்த்தை சொல்லச்சொன்னே...

அட

சுந்தர் சி - திருந்தி வாழனும்னு நினைக்கற ஒரு ரவுடியை போலீஸ் விடறதில்லை ,ஏமாத்தி மறுபடி அதே வேலையை செய்ய வைக்குது,அதுல ஆதாயமும் அடையுது..ஹீரோயினோட அம்மாவை வெச்சுக்கிட்டிருந்த வில்லன் இப்போ ஹீரோயினையும் வெச்சுக்கனும்னு நினைக்கறான்..ஹீரோயின் அம்மாவுக்கு ஆப்பரேஷன்..பணம் வேணும்...ஹீரோயின் கிட்டே காசில்லை... இங்கே தான் வில்லன் கொக்கி போடறான்.ஹீரோயின் ஓக்கே சொன்னா பணம் கட்டப்படும்.ஹீரோ வர்றாரு...




கவுண்டமணி - போதும் நிறுத்து...இந்த  மாதிரி 487 கதை வந்துடுச்சு.தமிழை விடு ,எத்தனை மலையாளப்படத்துல இந்த மாதிரி கேவலமான ட்விஸ்ட் வந்திருக்கும்?


சுந்தர் சி - சரிண்ணே,வடிவேலு காமெடி படத்துல ஹை லைட் ஆச்சே,செம காமெடியா இருக்கே அதை பத்தி சொல்லுங்க...


சி.பி. - அண்ணே ஒரு நிமிஷம்...


கவுண்டமணி - டேய், யார்டா நீ .,2 பெரிய மனுஷங்க பேசறப்ப குறுக்கே பேசறது?முதல்ல உன் கூலிங்க் கிளாசை கழட்டு,மனசுக்குள்ள பெரிய அஜித்குமார்னு நினைப்பா..?


சி.பி. - அதைக்கழட்டுனா இன்னும் கேவலமா இருக்கும்னே ,பரவால்லியா?


கவுண்டமணி - ஓ இது வேறயா?சரி,இருந்துட்டு போகட்டும் வந்த மேட்டரை சொல்லிட்டு ஓடிப்போயிடு

சி.பி. - அண்ணே,படத்துல ரசிக்கற மாதிரி காமெடி டயலாக்ஸ் நிறைய இருக்கு,எனக்கு ஞாபகம் இருக்கறவரை சொல்றேன்..

கவுண்டமணி - ஆமா ,இவரு பெரிய வல்லாரை  லேகியம் வரதராஜன் அப்படியே நினைவாற்றலை கசக்கிப்பிழிஞ்சு வசனத்தை ஒப்பிக்குது நாயி,எட்டாங்கிளாஸ்ல எட்டு தடவ ஃபெயில் ஆகிட்டு பேச்சைப்பாரு,இந்த அக்கறையை படிக்கறப்ப காட்டி இருந்தா 10ங்கிளாஸ் முடிச்சிருப்பே இல்ல?சரி சரி சொல்லித்தொலை..
 
படத்தின் ஹைலைட்ஸ் காமெடி வசனங்கள்


1.தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வந்து பாரு.


உன் ஏரியா எதுன்னு சொல்லீட்டு போ.


ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியா வம்பு வளர்க்கறது?


2. மணி என்ன இப்போ?    ஏன் உனக்கு மணீ பார்க்கத்தெரியாதா?


இப்போ மணி 3 ,லஞ்ச் டைம்,நாங்க அன்னத்துல கை வைக்கற டைம், யார் கன்னத்துலயும்  கை வைக்க மாட்டோம்


3.  எனக்கு முக்கிய வேலை இருக்குன்னு தெரிஞ்சு வம்புக்கு இழுக்கறியே?


சரி ,வேலையை முடி ,நான் வெயிட் பண்றேன்..


4. மாமியிடம் வடிவேல் - இரு இரு உன்னை வெச்சுக்கறேன்...


மாமி -ஏற்கனவே 2 பேரை வெச்சுத்தான் இருக்கேன்.


5. நாங்க எல்லாம் ஜெயில்ல இருந்து வி ஆர் எஸ் வாங்கிட்டு வந்தவங்க தெரியுமில்ல?


ஆமா,பெரிய ஜெயிலர் இவரு..கைதிக்கு லொள்ளப்பாரு.

6. இந்தாங்க புளீயோதரை சாப்பாடு.

என்னது? ஒரு புலிக்கே புளீயோதரை சாப்பாடா?

7.லவ்வுக்காக கண்ட கண்ட நாய் வாய்ல எல்லாம் வாய் வைக்க வேண்டியதா இருக்கு.

ஆமா,நாய் காட்டிக்குடுக்கலைன்னாலும் என் வாய் காட்டிக்குடுத்துடும் போல?

8. அங்கே என்ன பண்றே?ஆண்ட்டியை கரெக்ட் பண்ணச்சொன்னா டி வி ஆன்ட்டனாவை கரெக்ட் பண்ணீட்டு இருக்கே.?


9.நான் எல்லாம் அழ ஆரம்பிச்சா மாசக்கணக்குல அழ ஆரம்பிப்போம்,அத்தனை அழுகையை மனசுக்குள்ள அடக்கி வெச்சிருக்கோம்.


10. என் கிட்டே யாரும் சீரியஸா பேசாதீங்க,எனக்கு சிரிப்பு வந்துடும்.


11.என் ஃபேஸ்கட்டைப்பார்த்து யாரும் சிரிச்சு என்னை நோஸ்கட் பண்ணீடாதீங்க.


12.  ஏதோ அக்ரஹாரத்துல மாட்டுனதால வெறும் அடியோட விட்டாங்க..வேற எங்காவது சிக்கி இருந்தா குஸ்கா போட்டிருப்பாங்க.


13. இந்த ஒத்தை தம்பியை காப்பாத்த இந்த ஏரியாவுல இருக்கற மொத்தத்தம்பிகளும் வரனும் போல இருக்கே?


14. வீட்டுக்கு வாடகை தான் தர்றது இல்லை.ஹவுஸ் ஓனர் பொண்ணுக்கு....


யோவ்....


பர்த்டே ஃபங்க்‌ஷன்,வந்து கொட்டீட்டு போன்னு சொல்ல வந்தேன்


15. சில லேடீஸ்க்கு ஆணோட ஃபேஸ்கட்டை விட இப்படி ஃபேர் பாடியோட இருந்தாதான் பிடிக்குது..
அட

கவுண்டமணி - முடிச்சிட்டே இல்ல,நீ ஓடிப்போயிடு.சுந்தர் நம்ம மேட்டருக்கு வருவோம்.உனக்கு ஆக்‌ஷன் ஹீரோ ஆகனும்னு ஆசை இருக்க வேண்டியதுதான்,அதுக்காக...

சுந்தர் சி - ஏண்ணே,ஃபைட் சீன்ல எல்லாம் பட்டையை கிளப்பி இருப்பேனே?

கவுண்டமணி - சொதப்பி இருக்கே,நிறைய ஆடியன்ஸை  தியேட்டரை விட்டு கிளப்பி இருக்கே..ஒரு ஃபைட் சீன்ல பட்டத்துக்கு விடற நூல் கண்டு மீறி மீறிப்போனா 20 கிராம் வெயிட் இருக்கும் ,அதை ஒரு அடியாள் மேல வீசி எரியறே,அவன் 108 கிலோ வெயிட் இருப்பான்,2 கி மீ தள்ளிப்போய் விழறான்...இதெல்லாம் என்ன?




சுந்தர் சி - அண்ணே ,ஃபைட் சீன் ல எல்லாம் லாஜிக் பாக்கக்கூடாது..


கவுண்டமணி - கதைலயும் லாஜிக் பாக்கக்கூடாது,காமெடியிலயும் லாஜிக் கூடாது,டூயட்ல ஏன் திடீர்னு கூடுவாஞ்சேரில இருந்து சிங்கப்பூர் போறீங்கன்னு கேக்கக்கூடாது,,அப்புறம் எதுல தான் லாஜிக் பாக்கறது..?


சுந்தர் சி - சரி விடுங்க,ஹீரோயினுக்கும் எனக்கும் பாடி கெமிஸ்ட்ரி எப்படி?


கவுண்டமணி - சிவா மனசுல சக்தி படத்துல அந்தப்பொண்ணு ஜீவா கூட நல்ல ரொமான்ஸ் பண்ணுச்சு,பாக்க முடிஞ்சுது.இதுல அந்தப்பொண்ணு உனக்கு ஜோடியா நினைக்கவே நாராசமா இருக்கு,நீ அந்தப்பொண்ணுக்கு பெரியப்பா மாதிரி இருக்கே...


சுந்தர் சி - படத்துல ஒரு ஐட்டம் சாங்க் இருந்துதே பார்த்தீங்களா?


கவுண்டமணி - ம்ம் ,ம்ம் ,பார்த்தேன் பார்த்தேன்,ஏய்யா லைட்டிங்க் அடிக்கறப்ப அப்படியா மஞ்சள் லைட் அடிப்பீங்க.தக தகனு அந்தப்பார்ட்டிக்கு இடுப்பு ஜொலிக்கறதைப்பார்த்து அவனவன் தியேட்டர்ல ஜொள்ளு விடறான்.

சுந்தர் சி - தலை நகரம் படத்துக்குப்பிறகு வடிவேல் காமெடி இந்தப்படத்துல ஒரு மைல்கல்னு எல்லாரும் பேசிக்கறாங்கண்ணே..


கவுண்டமணி - ம் ம் பார்ப்போம் பார்ப்போம்,வெறும் வடிவேல் காமெடியை மட்டும் வெச்சுக்கிட்டு நீ இன்னும் எத்தனை நாள் குப்பை கொட்டப்போறேன்னு?நகரம்னு டைட்டில் வெச்சதுக்குப்பேசாம நரகம்னு வெச்சு இருக்கலாம் கிரகம்டா சாமி.

Saturday, November 20, 2010

மந்திரப்புன்னகை - சினிமா விமர்சனம்





குடைக்குள் மழை ஆர் பார்த்திபன் மாதிரி மனச்சிதைவு நோய்க்கு ஆளான ஹீரோ  மீது கல்கி ஹீரோயின் மாதிரி முற்போக்கு எண்ணம் உள்ள பெண் காதலிப்பதே  கதை.தான் அன்பு வைத்த அம்மா அப்பாவுக்கு துரோகம் செய்து ஓடி விடுவதால் தன் மேல் அன்பு வைக்கும் பெண்ணும் அதே போல் தனக்கு துரோகம் செய்து விடுவாள் என கற்பனை பண்ணிக்கொள்ளும் இளைஞன்,அந்த பெண்ணுடன் நடத்தும் நாடகம் தான் திரைக்கதை

கரு பழனியப்பன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார்.மக்கள் அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்விக்குப்போகும் முன் இந்தப்படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஹீரோவுக்கு ஏன் அப்படி ஒரு நோய் வந்தது என்பதற்கு இயக்குநர் படத்தின் பின் பாதியில் ஒரு ஃபிளாஷ்பேக் வைத்திருக்கிறார் பாருங்கள்.. அது சுந்தர ராமசாமியின் கதை போல் அழகிய சிறுகதை.அப்பா,அம்மா வாக வரும் கேரக்டர்கள் மனதில் பதிந்து போகும் அளவுக்கு இயற்கையான நடிப்பு.

ஹீரோயின் செலக்‌ஷன் சுமார்தான்.கோகுலத்தில் சீதை கார்த்திக் மாதிரி குடி,கூத்தி என அலையும் ஒரு ஆணை ஒரு பெண் விரும்புகிறாள் என்பதை ஜீரணிக்கவே மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது..ஹீரோயின் முக சாயலில் மீனா மாதிரியும்,நடிப்பில் பூஜா மாதிரியும் முயன்று இருக்கிறார்.


மனதை தொட்ட செண்ட்டிமெண்ட் வசனங்கள் -

1. பிள்ளைகளால பெத்தவங்க வயிறு நிறையாட்டி பரவால்ல,மனசு நிறைஞ்சா போதும்

2. பொலைட்டா( POLITE ) கும்புடு போட்டு பணிஞ்சு நடக்கறவன் ஒழுங்கா வேலை செய்ய மாட்டான்.நல்லா வேலை செய்யறவன் கூழைக்கும்புடு போட மாட்டான்.

3. பொம்பள பாக்கற வேலையை அவரு பாக்கறாரு,அவரு பாக்கற வேலையை நீ பாக்கறே ,ஏன்?

வேலைல பொம்பள என்ன? ஆம்பள என்ன? திங்கள் டூ புதன் அவர் சமைப்பாரு.வியாழன் டூ சனி நான் சமைப்பேன்,ஞாயிறு 2 பேருக்கும் லீவ்,ஹோட்டல் சாப்பாடு.

4. சீரியஸா இருக்கற பாட்டியை போய்ப்பாக்க ஏன் மாட்டேங்கறே?

நான் போய் பார்த்தா அவங்களுக்கு வாழனும்கற ஆசை வந்துடும்.அவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க.சாக வேண்டிய தருணம் இது.சாவுதான் ஒரு மனுஷனுக்கு பூரண விடுதலை.

5. காரணமே இல்லாம பிடிச்சிருந்தா அது குழந்தைகளைத்தான்.

6. உன் ஆளு குடுத்த கிஃப்ட் பார்சலை ஏன் பிரிச்சு பாக்கலை?

பிரிச்சுப்பார்த்துட்டா என்ன இருக்குன்னு தெரிஞ்சிடும்.பிரிக்காம இருந்து என்ன குடுத்திருப்பான்னு ஏங்கறதுல ஒரு கிக் இருக்கு.

7.ஒரு அரசியல்வாதியை புரிஞ்சுக்க நாம அரசியல்வாதியா இருக்கனும்னு அவசியம் இல்லை.ஒரு நடிகனை புரிஞ்சுக்க நாம நடிகனா இருக்கனும்னு அவசியம் இல்லை.ஆனா ஒரு அப்பாவைப்புரிஞ்சுக்க நாம அப்பாவா இருந்து பாக்கனும்.அப்போதான் புரியும்.

8.வெளில நாம் எங்காவது போறப்ப கண்ணாடில ஒரு தடவை நம்மை பார்த்துட்டு போகனும்,நம்மையே நமக்கு பிடிச்சாதானே மத்தவ்ங்களுக்கு நம்மளை பிடிக்கும்.

9. எந்தப்புருஷனும் தன் மனைவியை தினம் பாராட்டிட்டு  இருக்க மாட்டான்.

10.நாம எப்படி இருந்தாலும் நமக்கு வரப்போற மனைவி ஒழுக்கமானவளா அமையனும்கறதுதான் ஆம்பளையோட புத்தி.

11. ஏன் தாலியை கழட்டி வெச்சுட்டே?தப்பு பண்ணும்போது உறுத்துச்சா?

12. எல்லாப்புருஷனும் தன் மனைவியை கொன்னுடலாமான்னு வாழ்நாள்ல ஒரு தடவையாவது நினைச்சுப்பார்ப்பான்.

13.காதலிக்கறவங்களை நிப்பாட்டி ஏன் காதலிக்கறீங்கனு கேட்டுப்பாருங்க,யாராலும் பதில் சொல்ல முடியாது.அதுதான் காதல்.

14.கொடுமையைத்தாங்க முடியாதவங்க இருக்கலாம்,கோபத்தை தாங்க முடியாதவங்க இருக்கலாம்,அன்பைத்தாங்க முடியாதவங்க இருக்க முடியுமா?உன்னால அதை தாங்க முடியலை,அதனால தான் உன்னை காதலிக்கறேன்.

15, நீ நல்லவன் கிடையாது,உனக்கு நல்ல பொண்ணு கிடைக்க மாட்டா,உன்னை மாதிரி ஆளுக்கு எல்லாம் நல்ல பொண்ணு கிடைச்சுட்டா அப்புறம் நல்லவனுக்கு எல்லாம் பொண்ணு எங்கே கிடைக்கும்?

16. என்னை ஆண்டவன் தப்பா படைச்சுட்டான்,மேனுஃபேக்சரிங்க் டிஃபக்ட்,மாத்த முடியாது..




நினைவில் நின்ற காமெடி வசனங்கள்

1.மாமி,ஆத்துல உங்க வீட்டுக்காரர் இல்லியா?      எப்படி கண்டு பிடிச்சேள்?

அதுதான் தழைய தழைய புடவை கட்டி ,தலை நிறைய மல்லிகைப்பூ வெச்சி கும்முன்னு இருக்கீங்களே...

2.உனக்கு புரியாது,அவர் இருக்கறப்ப இப்படி இருந்தா அட்டாக் பண்ணிடுவாரு.

3.ஒரு மேரேஜ் கூட இன்னும் பண்ணலை,எதுக்கு மன்மத நாயுடுன்னு பேரு,முதல்ல அதை மாத்தனும்.

4.டே,நாயே  நில்லு எங்கே போறே?     கோமணம் கட்ட மறந்துட்டு வந்துட்டேன்,போய் கட்டிட்டு வர்றேன்.

செத்துப்போன கிளி பறந்து போகவா போகுது?

5.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதா....இதையே எத்தனை நாளுக்கு சொல்லீட்டே இருப்பீங்க,நங்க இன்ஸ்பெக்டர் சுரைக்காயை வெச்சு சாம்பார் வெச்சுக்குவோம்ல?


6.உங்க குழந்தைக்கு இன்னுமா சீட் கிடைக்கல?

ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சதும் கியூல நின்னு பார்த்தாச்சு,ம்ஹூம்,பிரயோஜனம் இல்ல.

7.இந்த ஸ்கூல்ல என் பையனை சேர்த்துட்டேன்,நான் 25 வயசுல கத்துக்கிட்டதை எல்லாம் இந்த ஸ்கூல்ல 8 வயசுலயே கத்து தர்றாங்க..
நீ அந்த வயசுல தண்ணி அடிச்சே,,,,,அப்போ உன் பையன் இந்த வயசுல தண்ணி அடிப்பானா?இவ்வளவு கஷ்டப்பட்டு ஸ்கூல்ல சேர்த்தறியே பையன் படிக்கலைன்னா என்ன செய்வே?

8.அந்தாளு உன்னை எங்கெல்லாம் பார்த்தான் தெரியுமாடி?

தெரியும்,அப்படிப்பார்த்தா என் கற்பு ஒன்னும் கெட்டுப்போயிடாது..

9.எல்லோருமே இப்போ டிஃப்ரெண்ட்டாதான் திங்க் பண்றாங்க..நாம நார்மலா திங்க் பண்ணுனாலே அது டிஃப்ரெண்ட் ஆகிடும்..

10.நைட் 10 மணீ ஆனாலும் பரவால்ல... உடனே இப்போ ஆஃபீஸ் வா,..

பாஸ்,, அது வந்து ... நான் என் ஒயிஃப் கூட ஒரு முக்கியமான வேலைல இருக்கேன்.

அத வேற யாராவது பண்ண சொல்லீட்டு நீ உடனே வா.    அது முடியாது...



11.அடியே,ஆன்னா ஊன்னா உங்கப்பனுக்கு ஃபோன் போடறியே, அவர் என்ன கஸ்டமர் கேரா?

12, மாப்ளை,எந்த வேலைக்குப்போறதா இருந்தாலும் நைட் 10 மணீக்கு வீட்டுக்கு வர்ற மாதிரி வேலையா பார்த்து போங்க.

மாமா,நான் போறது நைட் டியூட்டி ....

சரி நட் 10 மணீக்குள்ள வரப்பாருங்க.

13.நான் ஒரு குடிகாரன்னு உன் மனைவி கிட்டே ஃபோன் போட்டு இப்பவே சொல்லு.

ஆமா,என்னமோ குடியரசுத்தலைவர் மாதிரி பெருமையா சொல்லிக்கறான் பாரு.

14.வழக்கமா எல்லாரும் சம்பளம் வாங்குன பிறகுதான் சரக்கு அடிக்கப்போவாங்க,நீ சரக்கு வாங்கி பாக்கெட்ல வெச்சுக்கிட்டுத்தான் வேலைக்கே  கிளம்புவே போல.

15  உடம்புக்கு கெடுதல் பண்ற கோக் ,பெப்சி இதை எல்லாம் சத்தம் போட்டு கேட்டு வாங்கறோம்,ஆனா உடம்புக்கு நல்லது பண்ற காண்டம் வாங்க மட்டும் ஏன் கூச்சப்பட்டு நிக்கறோம்?

16  இந்தாங்க என் விசிட்டிங்க கார்டு..

அடடா,பதிலுக்கு தர என் கிட்டே விசிட்டிங்க கார்டு இல்லையே..?

17. குடிக்கற நான் இவ்வளவு தெளிவா இருக்கேன்,குடிக்காத நீங்க இவ்வளவு குழப்பத்துல இருக்கீங்களே?

18. அட்டு ஃபிகரா இருந்தாலும் இந்தக்காலத்துல 1008 கண்டிஷன் போடுவாங்க..எந்த கண்டிஷனுமே போடாத நந்தினியை நீ மிஸ் பண்ணிடக்கூடாது..

19.அய்யய்யோ,ஆம்னி பஸ்ல இருந்து மாயாண்டி குடும்பம் வருதே ,அழுதே இவன் ஆஸ்கார் அவார்டு வாங்கறவனாச்சே..

20. ராத்திரி ஏன் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றீங்க?

அதுவா,,பகல்ல குடிச்சிட்டு ஆஃபீஸ் போக முடியாதே,... அதான்

21.. டே நாயே உன் வாய் ஏன் இப்படி கப்பு அடிக்குது,உன் மூக்குக்கு கீழே ஆணி அடிச்சு மல்லிகைப்பூ தொங்க விட்டாதான் வாசம் போகும் போல..நீ உயிரோட இருக்கறப்பவே பொண நாத்தம். அடிக்குதே நீ செத்துட்டா ..எப்படி நாறப்போறியோ?

22. உங்க வீட்டுக்கு பின்னால பலூனா கிடக்குதே..?

வீட்ல குழந்தைங்க விளையாடி இருக்கும்..

எனக்கென்னவோ குழந்தை வேண்டாம்னு நீங்க விளையாடுன மாதிரி தோணுது..

இயக்குநருக்கு தனிப்பட்ட முறையில் ஆர்ட் டைரக்‌ஷனில் செம இன்ட்ரஸ்ட் போல.அதற்கு தீனி போடும் விதமாக தனது கேரக்டரை டிசைனிங்க் இஞ்சினியராக வடிவமைத்துக்கொண்டது அவரது புத்திசாலித்தனம்.

படத்தின் ஓப்பனிங்கலயே ஹீரோ அந்த மாதிரி பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளவர் என காண்பித்து அழகிய தவறு என்ற நாவல் டைட்டிலை காண்பிப்பது கே பாலச்சந்தர் டைப் முத்திரை.


கார் ஷோ ரூமில் வேலை பார்க்கும் ஹீரோயின் கஸ்டமரிடம் டெமோ காண்பிக்கும் சீனில் அவர் காட்டும் கிளாமர் செம கில்மா.கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது.

வீட்டில் அகல் விளக்குகள் நூற்றுக்கணக்கில் இருக்க சிகரெட் பற்ற வைக்க ஹீரோ மக்கர் பண்ணும் சிகரெட் லைட்டரையே ட்றை பண்ணும் சீனில்  அவர்து கேரக்டர் தெளிவாக விளக்கப்படுகிறது.

படத்துக்கு தூண் மாதிரி சந்தானம்,விவேக்குக்கு பிறகு டிரஸ்ஸிங்க சென்ஸில் கலக்கும் காமெடியன் இவர்தான்.ஹீரோவை விட சூப்பராக டிரஸ் பண்ணீ வருகிறார்.மெடிக்கல் ஷாப்பில் காண்டம் கேட்க கூச்சப்படும் காட்சியில் பின்னிப்பெடல் எடுக்கிறார்.அதே சீனில் புத்திசாலித்தனமாக ஹீரோயின் - ஹீரோவை லிங்க் பண்ணி சீன் வைத்தது டைரக்டரின் சாமார்த்தியம்.

தண்ணி போட்ட பாப்பா நீ எனும் ஓப்பனிங்க குடி பாட்டில் டான்ச் மூவ்மெண்ட் ஏழையின் சிரிப்பில் பட பிரபு தேவா பாணி.

ஒரு காதல் பாட்டில் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஸ்லோ மோஷனில் சிதறுவது,மழையில் சிறுவர்கள் நனைவது,சோப்புக்குமிழிகள் பறப்பது என கேமரா விளையாடி இருக்கு.

டூயட்டில் ஹீரோ ஹீரோயின் கட்டிப்பிடிப்பது மாதிரி காண்பித்து விட்டதால் இருவரும் பிறகு முதன் முதலாக கைகளை இணைப்பது மாதிரி காண்பிக்கும் சீனில் டைரக்டர் எதிர்பார்த்த எஃபக்ட் கிடைக்கவில்லை.

ஒரு சீனில் ஹீரோ 4 நாட்களாக ஏன் ஆஃபீஸ் வர்லை? என கேள்வி கேட்கப்படுகிறது,அடுத்த சீனிலேயே ஏன் 2 நாளா வர்லை? என்கிறார்கள்.கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்.

குணா,மனசுக்குள் மத்தாப்பு,ஆளவந்தான்,குடைக்குள் மழை, கற்றது தமிழ் போன்ற மன நலம் பாதிக்கப்பட்ட ஹீரோக்கள் கதை வெற்றி பெறவில்லை.அந்த லிஸ்ட்டில் இந்தப்படமும் சேரும். சேது,காதல் கொண்டேன், படங்கள் விதி விலக்கு.

பி ,சி செண்ட்டரில் 10 நாட்கள் .ஏ செண்ட்டரில் 25 நாட்கள் ஓடலாம்


.

Friday, November 19, 2010

புது ராசா வரப்போறாரு......அசின் கவனத்தை ஈர்க்கப்போறாரு...



Image





















1. “குற்றம்  என்ன  செய்தேன்  கொற்றவனே?”

“போரில்  இருந்து  திரும்பி  வரும்போது  தோற்றவனே  என்று  அழைத்தீரே!”



2. “மன்னா!  இந்த  அர்த்த  ஜாமத்தில்  கூட  ஏதாவது  யோசித்துக்கொண்டு  இருக்கிறீரே! என்னது?”


“ஜாமம்  என்றால்  என்ன  அர்த்தம்  என்றுதான்  ராணி!”






3. “எதுக்காக  நடிகை  அசின்  வீட்டுக்கு  முன்னாடி  மறியல்  போராட்டம்  நடத்துறாங்க?”


அரசின்  கவனத்தை  ஈர்க்கும்  வகையில்  போராட்டம்  நடத்துவோம்னு  மேடையில  பேசுறப்ப,  நம்ம  தலைவருக்கு  நாக்கு  தடுமாறி  ‘அசின் கவனத்தை’னு  பேசிட்டாரு!”






4. “மேடம்...  நீங்க  சேலை  கட்டி  ஃபுல்லா  கவர் பண்ணி  ஒரு  ஸ்டில்  பார்த்தோமே?”


“ஐயையோ...  நம்பாதீங்க...!  அது  கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ்!”






5. “மூல  நோயால்  பாதிக்கப்பட்டவர்களை  மன்னர்  ஏன்  நாடு  கடத்துகிறார்?”


“ஆண்  மூலம்  அரசாளும்னு  யாரோ  சொன்னாங்களாம்,  தன்னோட  பதவிக்கு  ஆபத்து  வந்துடுமோனு  பயப்படறார்  மன்னர்!”






6. “போர்க்களத்துக்குச்  செல்ல  மன்னர்  தயங்குகிறாரே...  அவரோட  ‘மூப்பு’தான்  காரணமா?”


“இல்லை.  ஏற்கெனவே  ஒருமுறை  எதிரி  நாட்டு  மன்னன்  இவருக்கு  வைத்த  ‘ஆப்பு’தான்  காரணம்!”






7. “அவ்வப்போது  நகர்வலம்  செல்கையில்  பிச்சைக்காரன்  வேடத்தில்  சென்றது,  போர்க்களத்தில்  உபயோகமாக  இருக்கிறது!”


“எப்படி  மன்னா?”


“உயிர்  பிச்சை  கேட்க  உதவியாக  இருந்தது!”






8. “ஸ்கோப்  இல்லைனு  சொல்றீங்களே  டாக்டர்...  இனி  என்  மாமியார்  பிழைக்க  மாட்டாங்களா?”


“அவசரப்படாதீங்க!  ஸ்டெதஸ்கோப்  இல்லை,  மறந்துட்டு  வந்துட்டேன்னு  சொல்ல  வந்தேன்!”



Asin faints in Vijay film shooting spot



















9. “போர்  செய்தி 
கே ட்டதும்  மன்னர்  பதறுகிறார்.  மகாராணி  பரவசப்படுகிறார்...  ஏன்?”


“இரண்டுக்கும்  ஒரே  காரணம்...  புது  ராஜா  வரப்  போறதுதான்!”



10. “போலி  டாக்டர்னு  தெரிஞ்சும்  அதே  க்ளினிக்குக்கு  ஏன்  போனே?”


“டாக்டர்  போலியா  இருந்தா  என்ன...  நர்ஸ்  ஜாலியா  இருக்காங்களே!”






11. “மன்னா! தகவல்  அறியும்  உரிமைச்  சட்டத்தை  பலர்  தவறாக  புரிந்துகொண்டு  உள்ளனர்!”


“எப்படி?”


“அந்தப்புரத்தில்  உள்ள  பெண்களின்  இடுப்பளவு  எவ்வளவு  என்ற  தகவல்  வேணுமாம்!”






12. “மன்னர்  புலவர்  மேல்  ஏன்  கடுப்பாக  உள்ளார்?”


“ஏற்கெனவே  வேறு  ஒரு  புலவர்  10  வருடம்  முன்பு  பாடிய  பாடலை  இவர்  ரீ-மிக்ஸ்  செய்து  பாடினாராம்!”






13. “மன்னா!  உங்கள்  வாளுக்கு  வேலை  வந்துவிட்டது.”


“என்ன,  போர்  அறிவிப்பா?”


“ம்ஹும்...  சாணை  பிடிப்பவர்  வந்துள்ளார்.”






14. ஒரு  வீட்டில்  விருந்தாளியும்  குழந்தையும்...

“உனக்கு  அம்மா  புடிக்குமா,  அப்பா  புடிக்குமா?”

“எனக்கு  இந்தியன்  கிரிக்கெட்  டீமைத்தான்  புடிக்கும்.  ஏன்னா,  அவங்கதான்  அடிக்கவே  மாட்டாங்க!”






15. ஒரு  பூங்காவில்  காதல்  ஜோடி...


“ரமேஷ்!  எனக்கு  சாப்பிடும்  போதெல்லாம்கூட  உன்  ஞாபகமாவே  இருக்கு...”


“அப்படியா...  எனக்குக்  கைகழுவும்போதுதான்  உன்  நெனப்பு  வருது!”






16. “புடவை,  புருஷன்  என்ன  வித்தியாசம்?”


“புடவை  எடுக்கறப்ப  புரட்டிப்  புரட்டி  பார்த்து  எடுத்து  கட்டிக்குவாங்க.  புருஷனை  கட்டிட்டு  அப்புறமாதான்  புரட்டி  புரட்டி  எடுப்பாங்க.”

Wednesday, November 17, 2010

மார்க்கட் போன நடிகையும்,தலைவரும்.....
























1. “தலைவர்  ரொம்ப  நேர்மையானவர்னு  எப்படி  சொல்றே?”

“கோர்ட்ல  சத்தியப்  பிரமாணம்  எடுக்கறப்ப  நான்  சொல்வதெல்லாம்  பொய்; பொய்யைத்  தவிர  வேறில்லைன்னு  சொன்னாரே?”



2. “கேஸ் (GAS) கம்பெனி  இண்டர்வ்யூல  ஏன்  செலக்ட்  ஆகலை?”

“என்னைப்  பற்றி  ஸ்பெஷலா  ஏதாவது  சொல்லச்  சொன்னப்ப  எனக்கு  கற்பூரபுத்தின்னு  சொன்னேன்.  அய்யய்யோ!  கம்பெனி  பத்திக்குமோனு  பயந்துட்டாங்க”



3. “இப்போதெல்லாம்  தெருக்கூத்துக்  கலை  முற்றிலும்  அழிந்து  விட்டது.  இதைக்  காப்பாற்ற  நமது  தலைவர்  முன்  வர  வேண்டும்னு  தலைவர்கிட்ட  சொன்னது  தப்பா  போச்சு”

“ஏன்?”

“எங்க  கட்சில  செயற்குழு  கூட்டம்  நடக்கறப்ப  வாங்க.  ஏகப்பட்ட  கூத்து  நடக்கும்னு  சொல்றார்!”



4. “ம்ன்னர்  எப்படி  எதிரிப்படையை  பின்  வாங்க  செய்தார்?”

“நம்  நாட்டில்  அனைவருக்கும்  சிக்குன்குன்யா.  இங்கு  வந்தால்  உடனே  பரவிக்  கொள்ளும்  என்று  புரளி  கிளப்பினார்”



5. “பெரிய  கட்சித்  தலைவரா  வரப்போறான்னு  இப்பவே  எப்படி  ஆரூடம்  சொல்றீங்க?”

“100/100னு ( நூத்துக்கு நூறு) சிலேட்ல  இவனே  மார்க்  போட்டுக்கிட்டானே?”



6. “நைட்  10.30  மணிக்கு  தலைவரோட  மேடை  பேச்சு  லைவ்-லேபோடுறாங்க”

“அது  காமெடி  டைமாச்சே?”

“இது  மட்டும்  என்ன?”



7. “என்  மனைவி  சமையல்  பண்ணினா  வாசம்  கமகமன்னு  ஆளையே தூக்கிடும்”

“இல்லையே!  அதைச்  சாப்பிட்டாத்தான்  ஆளைத்  தூக்க  வேண்டிவரும்னு  சொன்னாங்க”



8. “மன்னா!  தங்கள்  மெய்க்காப்பாளர்  கல்யாண  மண்டபத்தில்  மொய்  எழுதுற  இடத்துல  எதுக்கு  நிற்கறாரு?”

“அமைச்சரே!  அவர்தான்  இப்போதைய  மொய்க்காப்பாளர்



9. “நண்பர்களாகப்  பிரிகிறோம்னு  அறிக்கை  விட்டது  தப்பாப்  போச்சு”

“ஏன்  தலைவரே?”

“அப்போ...  இத்தனை  நாளா  எதிரிகளா  சேர்ந்து  இருந்தீங்களா?ன்னு  நிருபர்கள்  கேட்கறாக்க!”



10. “தலைவரே!  மேடைல  பேசறப்ப  ‘அன்புக்கு  நான்  அடிமை’ன்னு  சொன்னீங்களே?”

“ஆமா...  அதுக்கென்ன?”

“உங்க  சம்சாரம்  பேரு  அம்புஜம்தானே?  அன்பு-ன்னு  பேரை  மாத்திட்டாங்களா?”



11. “காமெடி  படத்தைப்  பார்த்து  ஏன்  அவர்  அழறாரு?”

“அவரு  அந்தப்  படத்தின்  புரொடியூஸர்”



12. “அரசு  விழாவில்  அரசியல்  பேச  மாட்டேன்னு  அறிக்கை  விட்டேன்!”

“என்ன  ஆச்சு  தலைவரே?”

“பிரஸ்காரங்க  அதை  எடிட்  பண்ணி,  இனி  விழாவில்  பேச  மாட்டேன்னு  சொன்னதா  போட்டுட்டாங்க!”



13. “நீயும்,  உன்  ஆள்  மோஹனாவும்  டெய்லி  பீச்சுல  3  மணி  நேரம்  இருக்கீங்க.  அப்படி  என்னதான்  பேசுவீக்க?”

“நாங்க  பேசுறோம்னு  யார்  சொன்னது?”



14. “என்  மனைவி  கோபமா  இருக்கறப்ப,  ஒரு  வரி  பேசுனா  போதும்.  அடங்கிடுவா.”

“வாயை  மூடுனு  சொல்வியா?”

“ம்ஹூம்.  பேசாம  இருந்தா  ஒரு  நெக்லஸ்  வாங்கித்  தர்றேன்  என்பேன்.”



15. “வரும்  முன்  காப்போம்  திட்டத்தை  தலைவர்  ஆதரிக்கறாராமே?”

“ஆமாம்!  இன்கம்  டாக்ஸ்  ரெய்டு  வரும்முன்  சொத்துக்களைக்  காப்போம்  திட்டமாம்  அது!”



16. நடிகை   - “காய்கறியை  என்  கையால  வாங்கலாம்னு  மார்க்கெட்  போனேன். ஆட்டோகிராஃப்  வேணும்னு  யாரும்  என்கிட்டே  கேட்கலை.  யாரும்  கண்டுக்கலை.”

மார்க்கெட்  போனா  கண்டுக்க  மாட்டாங்க.”

டிஸ்கி 1  - டைட்டிலில் மார்க்கட் என்பது ஆங்கில MARKET டை குறிக்கும்,தமிழ் ஆர்வலர்கள் மார் கட்டு என டபுள் மீனிங்க்கில் பொருள் புரிந்து கொண்டு கண்டனம் தெரிவித்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி 2- மார்க்கட் போன நடிகை ஜோக் தனி,தலைவர் ஜோக் தனி.ரெண்டையும் சேர்த்து  ஏதோ கிசு கிசு என வந்து ஏமாந்து கோபப்பட்டாலும் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. ( டேய்,பருப்பு,எதுக்குமே நீ பொறுப்பு இல்லைன்னா எதுக்கு உனக்கு அந்த பொறுப்பு?)