Sunday, February 16, 2025

NARAYANEENTA MOONNAANMAKKAL (2025) -நாராயிணியின் மூன்று ஆண் வாரிசுகள் - மலையாளம் - சினிமா விமர்சனம் (பேமிலி டிராமா )

 

                       

மிகவும்  பொறுமை காக்கும் பெண்கள் ,ஆண்களுக்கு மட்டும் இந்தப்படம் பிடிக்கும்,மிக மெதுவாக செல்லும் திரைக்கதை .அதனால்  மாமூல் ஆக்சன்  மசாலாப்படங்களை ரசிப்பவர்வைகள் ,காமெடி ,டூயட்  போன்ற  கமர்ஷியல் அம்சங்களை எதிர்பார்ப்பவர்கள் தவிர்க்கவும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாராயணி   என்ற  அம்மா  சீரியஸ் ஆக  இருக்கிறார் . அவருக்கு மூன்று மகன்கள் .இரு மகன்கள்  அம்மாவுடன் கூட்டுக்குடும்பமாக  வசிக்கின்றனர் . முதல் மகனுக்கு திருமணம் ஆகி  19 வயதில் ஒரு மகள் உண்டு . இரண்டாவது   மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை  மூன்றாவது  மகன்  வீடடை  எதிர்த்து ஒரு முஸ்லீம் பெண்ணைத்திருமணம் செய்து கொண்டு பாரினில் செட்டில் ஆகி விட்டான் .அவனுக்கு  18 வயதில் ஒரு மகன் உண்டு 

 டாக்டர்  கை  விரித்து விட் டார்  எந்த நேரமும் மரணம் நிகழலாம் .பாரினில்  இருந்து மூன்றாவது  மகன் தன குடும்பத்துடன் வந்து விட் டான் . ஆனால்  அவன் வந்து  ஒரு வாரம் ஆகியும் மரணம் நிகழவில்லை .. ஒரு வாரத்தில் வெளிநாடு போக வேண்டும்  


இந்த  சூழலில்   முயன்று முக்கிய சம்பவங்கள்  அந்த வீட்டில்  நிகழ்கின்றன 


சம்பவம் 1 - நாராயினியின்  கணவர்   இடம்  தன்  நிலத்தை அடமானம் வைத்து 2 லட்ச ரூபாய்  கடன் வாங்கியவர் இப்போது 40 லட்ச ரூபாய்   தந்து  நிலத்தை     மீட்க   தயாராக இருக்கிறார் .ஆனால் மூத்த  மகன்    தர  மறுக்கிறார் .80 லட்ச ம்   கேட்கிறார் 


சம்பவம் 2  - உங்க   உறவும் வேண்டாம் , சொத்தும் வேண்டாம் என  வீட்டை விட்டு  வெளியேறி  காதலியுடன்  பாரீன் போன கடைசி மகன்  இப்போது  பாகப்பிரிவினை  கோருகிறான் . மூத்த அண்ணன்  தர  மறுக்கிறார் .  இத்தனை வருடங்களாக  , அம்மா , அப்பாவைப் பராமரித்தவன் நான் .   பொறுப்பில்லாமல்  ஊரை விட்டு  ஓடியவன் நீ . இப்போ  சொத்து மட்டும் வேண்டுமா? என்கிறார் 


சம்பவம் 3  - நாராயினியின்  முதல்  மகனின்  19 வயது   மகள் +  நாராயினியின்  கடைசி மகன் உடைய 18 வயது   மகன் இருவரும்  நெருக்கமாக ப்பழகுகிறார்கள் . அதாவது  பெரியப்பா  மகள் , சித்தப்பா  மகன்   உடன் நெருக்கம் காட்டுகிறாள் .அக்கா , தம்பி முறை    ஆகும்  இவர்களது  இன்செஸ்ட்  லவ்  இருவரது பெற்றோ ருக்கும் தெரியவருகிறது 


இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள்  தான் மீதித் திரைக்கதை 

மூன்று  மகன்களாக   முறையே அலென்ஸியர் , ஜோஜூ  ஜார்ஜ் , சுராஜ்  வெஞ்சாரமூடு  ஆகிய மூவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள் .அந்தந்த  கேரக்ட்டர்கள்  ஆகவே  வாழ்ந்திருக்கிறார்கள் என சொல்லலாம் 

முதல்  மருமகள் , மூன்றாவது மருமகள்    ஆக  முறையே  சஜிதா  மடத்தில் , ஷெல்லி   கிஷோர்  இருவரும்  குடும்பப்பாங்கான முகத்துடன் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள் இன்செஸ்ட்  லவ்  ஜோடி ஆக   தாமஸ் மேத்யூ+ கார்கி ஆனந்தன் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அதிலும்  டீன் ஏஜ் கேர்ள் ஆக  வரும் கார்கி ஆனந்தன்  அம்மாவிடம்  சிடுமூஞ்சி  ஆக இருப்பது , காதலனிடம்   குழைவது , அப்பாவிடம் நார்மல் ஆக இருப்பது , தோழியுடன்  கல கலப்பாக கலாய்ப்பது  என நுட்பமாக  முக   உணர்வுகளை  வெளிப்படுத்தி  இருக்கிறார் . இவர் வருங்காலத்தில்  ஒரு த்ரிஷா  அல்லது  நயன் தாரா  போல  புகழ்  பெறுவது உறுதி 


ராகுல் ராஜ் தான் இசை . ஒரு மெலோடி சாங்க்  நன்றாக இருக்கிறது .பின்னணி  இசை  ஓகே ரகம் ஜியோதி ஸ்வரூப் பாண்ட்  தான்  எடிட்டிங்க்  107  நிமிடங்கள்  படம் ஓடுகிறது . இரண்டரை மணி  நேரம்  ஓடியது போல பிரமை அப்பு  பிரபாகரின் ஒளிப்பதிவு  அருமை . ஊர்த்திருவிழா , குளக்கரை , நாயகியின்  க்ளோஸப்  ஷாட் என கலக்கி இருக்கிறார் சரண்  வேணுகோபாலின் வசனத்தில்  பல இடங்கள்  பாராட்டும்படி இருக்கிறது . கதை திரைக்கதை  எழுதி .இயக்கி  இருப்பவரும் இவரே 

சபாஷ்  டைரக்டர்


1  ஒரு ஊரில்  நடக்கும் சம்பவத்தை நாம் நேரில் கண்டு களிப்பது போல மனதுக்கு நெருக்கமாக காட்சிகளை அமைத்தது 


2  அனைவரது  கேரக்ட்டர்  டிசைன் . நடிப்பு உயிரோட்டம் 


3  இரண்டு  மகன்களும்  சாகாமல்  இழுத்துக்கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தில்  தலையணை வைத்து அழுத்தி கொன்று  விடலாமா?என முயன்று  பின் முடிவை மாற்றி விடும் சீன்  உருக்கம் 


4   அக்கா - தம்பி முறை உள்ள  இருவரும்  காதலிப்பதை  நெருடல்  இல்லாமல் காட் சிகளை அமைத்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1  சோஷியல்  ஒர்க் ,  சோஷியல்  சரவீஸ்  இரண்டுக்கும் வித்தியாசம்  இருக்கா? அதுவே எனக்குத்தெரியாது 


2  இழவு காண வந்தவர்  = அம்மா இறந்துட் டாங்களாப்பா 


   இன்னும்  இல்லை 


 அடடா , செய்தி கேட்ட்தும்  அவசரமா  சாப்பிடாம  கூட  வந்துட்டென்  


 உள்ளே  தோசை  இருக்கு 


3  இஞ்சினியரிங்க்  படிச்சது  ஒரு பயனும்  இல்லை . சாதா   டிகிரி போதும் 


4  ஏம்மா , நீ இன்னும் முஸ்லிமா தான் இருக்கியா? 


 இன்னும் மதம் மாறலை 


5  எதனால   சோகமா இருக்கே? 


 அம்மாவின் மரணத்துக்காக காத்துக்கிட்டு இருக்கேன் 


 பெத்த அம்மா எப்போ சாவா என  எதிர்பார்த்துட்டு இருக்கோமே ? இது பாவம் இல்லையா?


6 டாகடர் , எங்க அம்மா  எதனால இன்னும் சாகலை ?


 தேவையான ஊட் டச்சத்து  கிடை ச்சிடுச்சு போல 


அப்போ  உணவு  கொடுப்பதை  நிறுத்திடவா? 


 அடப்பாவமே . போகும்போது  நிம்மதியாப்போகட்டும் 



7  எல்லா உறவிலும் ஒரு எல்லை தேவை 


8      மே     ஐ  கம்  இன்  ?


 நோ . இன்விடேஷன்  வெச்சா கூப்பிடுவாங்க . வா 


9 நீ  கோபமா  இருக்கும்போது ரொம்ப அழகா இருக்கே 


 சும்மா என்னை சமாதானப்படுத்த எதையாவது சொல்லாத 


10   உன் கிட்டே    நிறைய   சொல்லணும் .ஆனா எல்லாம் மெஸ்  ஆகி ஜாம் ஆகி இருக்கு . அப்புறமா மெயில் பன்றே ன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  தனது அண்ணன்  மகளும் , , தம்பி மகனும்  தனி  அறையில்  தம் அடிப்பதைக்கண்டிக்காமல்  அவர்ளுடன் சேர்ந்து ஜோஜு ஜார்ஜ்  தம் அடிப்பது நெருடல் 


2   அக்கா , தம்பி   முறை என்றாலும்  இருவரும்  அடிக்கடி  ஜோடி சேர்ந்து  சுற்றும்போது  யாரும் கண்டுக்கவே இல்லை 


3   2017 ஆண்டு வெளிவந்த ஸ்பானிஷ் படமான  பிளாக் ஸ்னோ  என்ற  படத்தின் படி டிங்கரிங்க்  அட்லிவெர்சன் தான் இது .டைட்டிலில்   க்ரெடிட்  கொடுக்கவில்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-


சென்சார்  சர்ட்டிபிகேட்  படி  யு/ஏ  தான் .ஆனால்   லிப் லாக் சீன்கள் இரண்டு உண்டு .18+ தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஒரிஜினல்  ஆன 2017 ஆண்டு வெளிவந்த ஸ்பானிஷ் படமான  பிளாக் ஸ்னோ பார்க்காதவர்கள்  இதைப்பார்க்கலாம் . ரேட்டிங்க்  3 / 5 


Saturday, February 15, 2025

CHHAAVA (2025) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ஹிஸ்டாரிக்கல் ஆக்சன் டிராமா)

                          


ஏ ஆர் ரஹ்மான்  இசையில் வரும்  ஒரு சரித்திரப்படம்  என்பதும்  நாவலின் தழுவல் என்பதும் , சத்ரபதி  சிவாஜி யின் மறைவுக்குப்பின் நிகழ்ந்த அவரது மகனின் ஆட் சியில்  நிகழ்ந்த  சம்பவங்கள் தான்  கதை என்பதும் இந்தப்படத்தைப்பார்க்க  தூண்டுகோலாக அமைபவை 


130 கோடி ரூபாய் பட்ஜெட்டில்  உருவான  இந்தப்படம்  ரிலீஸ் ஆன முதல் நாளான  14/2/2025 அன்றே  ரூ  49 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது .1999ம்  ஆண்டில்  ரிலீஸ் ஆன தாள்  என்ற ஹிந்திப்படத்தில்  ஏ  ஆர் ரஹ்மான் இசையில் அக்சய்  கண்ணா  நாயகன் ஆக நடித்தார் .இன்று  அதே ஏ  ஆர் ரஹ்மான் இசையில் அக்சய்  கண்ணா வில்லன் ஆக நடித்திருக்கிறார் 


டைட்டில்  ஆன சாவா  என்ற  மராத்திய   சொல்லுக்கு  சிங்கக்குருளை என்று அர்த்தம் .நம்ம ஊர்ல ஜீன்ஸ் போட்ட சிங்கம்  என பஞ்ச்  டயலாக்  பேசுவது போல 


சிவாஜி சாவந்த்  எழுதிய  மராத்திய நாவல் ஆன சாவா  வைத்தழுவி  திரைக்கதை எழுதப்பட்ட படம் இது .சத்ரபதி  சிவாஜியை அறிந்த அளவுக்கு  அவரது  மகன் ஆன சம்பாஜி யை  பலருக்கும்  தெரியாது . அதனால் தான்  அந்தக்கதையை  எடுத்தேன்  என்கிறார்  இயக்குனர் லக்ஷ்மன் ( எல்லாருக்கும் தெரிஞ்ச கதைல  நம்ம இஷ்டத்துக்கு அடிச்சு விட முடியாது . தெரியாத  கதைன்னா குறுக்கு சால் ஓட்டலாம் ? )


ஸ்பாய்லர்  அலெர்ட்

17ம்  நூற்றாண்டில்  அவுரங்கசீப்பின் ஆட்சி  நடக்கிறது .மராட்டிய  மன்னர் சத்ரபதி சிவாஜியின் மரணத்துக்குப்பின் அவரது மகன் சம்பாஜி  1680 ம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பேற்கிறார் . ராமர்  இருக்கும்போது  பரதனை  அரியணை  ஏற்ற  கைகேயி  சதி  செய்தது  போல  சம்பாஜியின்  சித்தி சோயறா பாய்  தன மகனை (ராஜாராமை ) மன்னர் ஆக்கத்துடிக்கிறார் 

அவுரங்கசீப்பின் மகன்  அக்பர சிவாஜியின் மகன் சம்பாஜி யுடன் இணைந்து  தன அப்பா அவுரங்கசீப்பை  வீழ்த்தி விட்டு   அரியணை  அமரத்துடிக்கிறான் .சம்பாஜியின்  சித்தி செய்றா பாய் அவுரங்கசீப்பின் மகன்  அக்பரஉடன் இணைந்து  சிவாஜியின் மகன் சம்பாஜி யை வீழ்த்தி  விட்டு தன மகனை அரியணை ஏற்ற  நினைக்கிறாள் 


அவுரங்கசீப்பின் ஆளுகைக்கு  உட்பட்ட  பகுதிகளை சம்பாஜி கைப்பற்றிய  செய்தி கேட்டு அவுரங்கசீப் ஒரு சபதம் எடுக்கிறார் . .சம்பாஜியை  வீழ்த்தி  விட்டுத்தான்  மகுடம் அணிவேன் . அதுவரை  மகுடம் அணிய மாட்டேன்  என்கிறார் .அவுரங்கசீப்பின் படைகள்  தானிக்கு  தீனி  என பழி வாங்க சம்பாஜி யின் ஆளுகைக்கு உட்பட் ட  பகுதிகளைக்கைப்பற்றுகிறது .  இந்தத்தகவல் கேட்ட சம்பாஜி  அவுரங்கசீப்பை  ஒழிக்கும் வரை ஓய மாட்டே ன் என  சபதம் எடுக்கிறார் . நாயகன் சம்பாஜி , வில்லன் அவுரங்கசீப்  இருவரில்  யார் வெற்றி  பெறறார்கள் ? என்ன என்ன  சம்பவங்கள்  நடந்தது ?என்பதுதான்  மீதி திரைக்கதை 


நாயகன்  சிவாஜியின் மகன் சம்பாஜி ஆக விக்கி  கவுசால்  மிரட்டி இருக்கிறார் . அருமையான நடிப்பு ன். ஆக்சன் காட் சிகளிலும்  அதகளம்  செய்திருக்கிறார் . வில்லன் ஆக அவுரங்கசீப்  ஆக அக்சய் கண்ணா  வெறும் பார்வையாலேயே  மிரட்டுகிறார் .இவருக்கு அதிக வசனங்கள்  இல்லை .ரகுவரன் மாதிரி  பேஸ்  வாய்ஸில்  பேசுகிறார் .


நாயகி ஆக ராஷ்மிகா  மந்தனா  பவ்யமாக  நடித்திருக்கிறார் . புஷ்பா  பட பாதிப்பில்  இவருக்கு ஒரு குத்தாடடம் எல்லாம் இயக்குனர் வைக்கவில்லை . நல்ல வேளை  


ஏ ஆர்  ரஹ்மான்  இசையில் 7 பாடல்கள்  பொறுமையை சோதிக்கின்றன . பின்னணி இசையில்  சைன் செய்திருக்கிறார் . போர்க்களக் காட் சிகளின் பிஜிஎம் மிரட்டுகிறது 

 ஆர்ட் டைரக்ட்டரின்  உழைப்பு தெரிகிறது . வசனங்களை  இருவர் எழுத  திரைக்கதையை  ஐவர் எழுத  இயக்கி இருப்பவர் லக்ஷ்மன்  உடேகர் 


சபாஷ்  டைரக்டர்


1   ஹீரோ  ஓப்பனிங்  சீனை விட  வில்லனின் ஓப்பனிங்  சீன கலக்கல் ரகம் 


2  போர்க்களக்காடசிகளில் பிரம்மாண்டம் 


3 நாம் அதிகம்  அறியாத  சரித்திரத்தின் பக்கங்களைப்புரட்டி  கதை சொன்ன விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  எப்போதெல்லாம் அக்கிரமம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம்  ஒரு யுக  புருஷனின் அவதாரம்  நிகழ்கிறது 


2  நாங்கள்  சிங்கம் போல்  கர்ஜிப்பதில்லை .ஆனால் சத்தம் வராமல் காரியத்தை முடிப்போம் 


3   போரி ல் இருந்து  ராஜாக்கள் திரும்பி வரும்போது  ராணிகள் கோபம் கொண்டது போல் நடிப்பர்கள், அது ஊடல் 


4 என்னை விட உனக்குத்தான் என்னைப்பற்றி அதிகம் தெரிந்து இருக்கிறது 


5 நான் உப்பு மாதிரி .உங்கள்  தேவைக்கு ஏற்ப என்னை உபயோகபடுத்திக்கொள்ளலாம் 


6  ஒரு போரில் இருந்து திரும்பி வந்ததும் அடுத்த போரைப்பற்றி சிந்திப்பதுதான் மன்னர்களின் வழக்கம் 


7  நெருப்புடன்  விளையாடுவது எனக்கு ரொம்பப்பிடிக்கும் 


8 எதிரியின் மகனான அக்பரை நான் தனிமையில் சந்திப்பதைக்கண்டு உனக்கு பயமா? 


ஆம் , ஆனால் பயம் உங்களை நினைத்து அல்ல, அக்பரை நினைத்து 


9 குற்றவாளிகளை மன்னிப்பதும் ஒரு குற்றமே 


10  எதிரி எப்படி இருப்பான் ?அவனை எப்படி நான் அறிந்து கொள்ள? 


 எதிரியின் முகத்தை நீ பார்க்கவே  முடியாது . அவன்  நேருக்கு  நேராக  மொத மாட் டான் , முதுகில் தான் குத்துவான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   வன்முறை  மிக  அதிகம் . வெட்டுவது . தலையை  சீவுவது எல்லாம் கொடூரம் 


2  ஜெய்  பவானி என்ற  டயலாக் மட்டும் 167 தடவை வருகிறது . காட்டுக்கத்தல்  வேற . காது  வலிக்குது 


3   வில்லனின்  மகனின்  உதவியை நாயகன் ஏற்க மறுத்தது  சாணக்கியத்தனம் அல்ல 


4 ஆடு மேய்க்கும்  சாதா பெண்ணின்  உடலை உயிரோடு தீக்கிரையாக்கும் கொடுரம் வேற 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-18+ .கிளாமர்  எதுவும்  இல்லை , ஆனால் பயங்கர   வன்முறை .கர்ப்பிணிப்பெண்கள் , இளகிய  மனம்  கொண்ட ஆண்கள் பார்க்க வேண்டாம் 




சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சரித்திரப்படங்களைப்பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டும் பார்க்கலாம் . சராசரிப்படங்களைப்பார்ப்பவர்கள் தவிர்க்கலாம் ரேட்டிங்க்   2.5 / 5 


Chhaava
Theatrical release poster
Directed byLaxman Utekar
Screenplay byLaxman Utekar
Rishi Virmani
Kaustubh Savarkar
Unman Bankar
Omkar Mahajan
Dialogues byRishi Virmani
Irshad Kamil
Based onChhava
by Shivaji Sawant[1]
Produced byDinesh Vijan
Starring
Narrated byAjay Devgn
CinematographySaurabh Goswami
Edited byManish Pradhan
Music byA. R. Rahman
Production
company
Distributed by(International)
Release date
  • 14 February 2025
Running time
161 minutes[2]
CountryIndia
LanguageHindi
Budget₹130 crore[3]
Box officeest. ₹49.37 crore[4]

Friday, February 14, 2025

MURPHY (2024) -கன்னடம் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் பிக்சன் ரொமாண்டிக் டிராமா ) @ அமேசான் பிரைம்

           

              

18/10/2024   அன்று  திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆன இப்படம்  இப்போது அமேசான் பிரைம்  ஓ  டி டி  யில்  காணக்கிடைக்கிறது .தமிழ்  டப்பிங்க் இல்லை .ஆங்கில  சப் டைட்டில் உண்டு. இப்படத்தின்  பெரும்பான்மையான பகுதிகள்  கோவாவில் உள்ள  400 வருடங்கள்  பழமையான   ஒரு வீட்டில்  ஷூட்டிங்  நடத்தப்பட்டது .டைம்  டிராவல்  காதல் கதையாக  வித்தியாசமாக  திரைக்கதை  அமைக்கப்பட் ட  படம்  இது 

ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகன்   தன தாத்தாவின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறான் .  ஆனால் இருவருக்கும் எப்போதும் ஆகாது . நாயகனின் அப்பா  இறந்து விட்டார்  .அவர் உயிரோடு  இருந்த போது  எப்போப்பாரு  ஒரு ரேடியோவை வைத்து  ஆராய்ச்சி பண்ணிக்கொண்டே இருப்பார் . அதை சிறுவனாக இருந்தபோது நாயகன் கவனித்து இருக்கிறான் 


 அந்த  ரேடியோ  டைம் டிராவல்  மிஷின் போல  செயல்படுமா?    என்பதுதான்  அந்த  ஆராய்ச்சி . நாயகன்  தன் அப்பாவின்  லட் சியத்தை   நிறைவேற்ற  நினைக்கிறான் .


அப்பாவின்  நண்பரிடம்  அதைத்தந்து  ரிப்பேர்  பார்க்கிறான் . செட்  ஆகவில்லை 


எதேச்சையாக ஒரு நாள்  அந்த  ரேடியோ ஆட்டொமேட் டிக்காக  கடந்த காலத்துடன் கனெக்ட்  ஆகிறது .நாயகியுடன் நாயகன் அந்த ரேடியோ மூலம் தொடர்பு கொண்டு  தினசரி பேசி  நட் பை   வளர்க்கிறான் .


 நாயகனுக்கு  ஒரு காதலி உண்டு . அவள்  நாயகன்  இப்படி  ஒரு பெண்ணுடன் கடலை போடுவதைக்கண்டு கடுப்பாகி பிரேக்கப் செய்யும் நிலையில்  இருக்கிறாள் 


 இப்போதுதான்  ஒரு திருப்பம் . நாயகன்  இத்தனை நாட்களாகபேசிக்கொண்டிருந்த பெண் வேறு யாரும் அல்ல .நாயகனின் அப்பாவின் காதலி தான் . இந்த உண்மை  தெரிந்த பின்  நாயகன்  நாயகியிடம்  அதை சொன்னபோது  நாயகி  நாயகனை  தன மகன் என்று  நினைக்கிறார் . ஆனால்  நாயகன்  அதை மறுக்கிறான் .


 நாயகனின்  திட் டம்  என்ன  எனில்  நாயகியைப்பயன்படுத்தி  கடந்த காலத்தில்  அப்பாவுக்கு நிகழ்ந்த  விபத்து  நடக்கும் நாளில்  அவரை  எச்சரித்து  அவரைக் காப்பாற்றுவதே 


 நாயகனின் திட் டம்  நிறைவேறியதா?  நாயகனின் அம்மா தான்   அவரா?  என்பது மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக பிரபு முண்ட்கர்  அற்புதமாக  நடித்து இருக்கிறார் . தாத்தவுடனான  சண்டை ,  ரேடியோவில் பேசும் பெண்ணுடனான கனிவு   என   அவர் காட்டும்   முக பாவனைகள் அருமை .நாயகி  ஆக  அதாவது  நாயகனின் அப்பாவின் காதலி ஆக  ரோஷினி பிரகாஷ்  கவிதை  போல்    போகிறார்     .நாயகனின்  காதலி ஆக லா   வீரமல்லா  நடித்திருக்கிறார் . இரு நாயகிகள்  நடிப்பும் , முக வெட்டும்  கச்சிதம் 


படத்துக்கான  பின்னணி   இசையை சில்வஸ்டர் பிரதீப்  அமைத்திருக்கிறார் .மெலடியை  அதிகம் நம்பி இருக்கிறார் . படத்தில்  மூன்று பாடல்கள் .பாடல்களுக்கான  இசையை சில்வஸ்டர் பிரதீப்  , அர்ஜுன்  ஜானியா .,, ராஜாட்  ஹெக்டே , கீர்த்தன்  ஹோலா  ஆகிய   நால்வர்  கவனித்து இருக்கிறார்கள் . 

எடிட்டிங்கை  மகேஷ் & கவின் ஆகிய இருவரும்  செய்திருக்கிறார்கள் . 136  நிமிடங்கள்  படம் ஓடுகிறது 

ஒளிப்பதிவு  ஆர் ஆதரிஷா . இவருக்கு சவாலான பணி . நிகழ்காலம் , கடந்த காலம்   கலர் டான் கரெக்ட்  ஆக செட்  செய்ய வேண்டும் . சரியாக  செய்து  இருக்கிறார் 

  நவீன் ஜி ரெட்டி , தயாரிப்பாளர் ஆன பிஸ் பி  வர்மா , நாயகன் ஆன  பிரபு முண்ட்கர்  ஆகிய  மூவரும் இணைந்து வசனம் எழுதி இருக்கிறார்கள் 

இயக்கி இருப்பவர் தயாரிப்பாளர் ஆன பிஸ் பி  வர்மா 



தயாரிப்பாளர் ஆன பிஸ் பி  வர்மா , நாயகன் ஆன  பிரபு முண்ட்கர்  ஆகிய  இருவரும்  இணைந்து  திரைக்கதை  எழுதி இருக்கிறார்கள் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகியின் அற்புதமான நடிப்பு , சோகக்காட் சிகளில்  கூட  அவர் முகம் காட்டும்  பாவங்கள்  பிரமாதம் .  அடர்த்தியான கூந்தல் மயில் தோகை மாதிரி .. க்ளோசப்  சீன்களை  பிரமாதமாக்கப்படமாக்கிய ஒளிப்பதிவாளர் ,க்கு ஒரு ஷொட்டு 


2   டைம்  டிராவல்  செய்து  நாயகன் நாயகியுடன் நடத்தும் உரையாடல்கள்  த்ரில்லிங்க்  எபக்ட்  உடன்  சொன்ன   விதம் 


3  நாயகன் - நாயகி   இருவரும்  காதலர்கள் என  ஆடியன்ஸை  என்ன    வைத்து  திடீர்   என  ஒரு டிவிஸ்ட்   வைத்த விதம் அருமை 


4   தாத்தா , பேரன்  இருவரும்  நிகழ்  காலத்தில்  இருந்து கடந்த  காலத்தில்  அப்பாவின் குரலை  கேட்டுக்கண்ணீர் விடும் சென்ட்டிமென்ட்  சீன் 


  ரசித்த  வசனங்கள் 

1  ஐன்ஸடீன்  சொல்லி இருக்காரு , காலம் என்பது கற்பனை 


2  நிகழ் காலம் , எதிர் காலம் , இறந்த காலம்  இந்த மூன்றையும் யாராலும்  மாற்ற  முடியாது 


3 விதியை மாற்றி எழுதும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை 


4   பெரிய  மனிதனிடம் ,நம்மை விடப்பெரிய ஆளிடம்  மன்னிப்புக்கேட் கத் தயங்கக்கூடாது  


5  இன்ஸ்டா   என்றால்  என்ன?னு தெரியுமா? 


இன்ஸ்டால் மென்ட்  லோன் ? 


6 நதி மூலம், ரிஷி மூலம்  கேட்கக்கூடாது 


7 எனக்காக   இதுவரை  ஒரு கவிதையாவது  எழுதி  இருக்கியா? 


 சரி , பேப்பர்ல எழுதலை, ஆனா உன் இதயத்தில் எழுதி இருக்கேனே? 


8 பிசிக்ஸ்  ஒத்து வருது ,  கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட் ஆகுது , இது ஒரு மிஸ்ட்ரி தான் . ஹிஸ்ட்டரில  இடம் பிடிக்கப்போறோம் 

9   எதிர்பாராமல் பெய்யும் மழை  மாதிரி என் அருகாமையில் வரும் உன் நிகழ்வுகள் 


10   ஒரு சின்ன  நிகழ்வு  ஒரு பெரிய நிகழ்வுக்குக்காரணி ஆவதை  டாமினோ  எபக்ட் என்பார்கள் . வரிசையாக அடுக்கப்பட் ட  சீட்டுக்கட்டு  ஒரே ஒரு  சீட் டால்  கவிழ்வது போல 

11   ஒரு நல்ல   அப்பா எப்படி  இருக்கணும் என்பதற்கு சிறந்த  உதாரணம்  என் அப்பா 


12  எனக்கு டேவிட்  ரொம்பப்பிடிக்கும். நீ என் கூடவே இருந்தா உனக்கும் பிடிக்கும், இருப்பியா?


எனக்கு  வேற ஆப்சன்  இருக்கா? 


13   எல்லா   பெற்றோரும்  குழந்தைகளுக்காக தியாகம்  செய்கிறார்கள்.ஆனால்   அதைப்பற்றி  அவர்கள் நினைத்துக்கொள்வதில்லை 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நிகழ் காலம் , எதிர் காலம் , இறந்த காலம்  இந்த மூன்றையும் யாராலும்  மாற்ற  முடியாது   என இவங்களே  படத்தில் ஒரு டயலாக்  வைத்து விட்டு   அந்த விதியை மீறியது 


2    டைம் டிராவல்  கான்செப்ட்டில்  நாயகன் - நாயகி   இருவர் மட்டும் தான்  உரையாட முடிகிறது . வே று யாரும் உடன் இல்லை .இது எதனால் ? தாத்தா , மகன்,  இருவரும்   அப்பாவிடம்   டைரக்ட்  ஆக  பேச முடியாதது எதனால் ? 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மனதைத்தொடும்  காதல்   கதை .அப்பா, மகன் , தாத்தா சென்ட்டிமெண்ட்  சீன்களும் உண்டு . பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்,ஆண்கள் பொறுமைசாலி ஆக இருந்தால் ரசிக்கலாம் . ரேட்டிங்க்

   3 / 5 


Murphy
Theatrical release poster
Directed byBSP Varma
Written by
Dialogues by
  • Naveen G. Reddy
  • BSP Varma
  • Prabhu Mundkur
Produced by
  • Ramco Somanna
  • BSP Varma
Starring
CinematographyAdarsha R
Edited by
  • Mahesh Thogata
  • Kevin Mascarenhas
Music by
  • Songs:
  • Arjun Janya
  • Sylvester Pradeep
  • Rajat Hegde
  • Keerthan Holla
  • Score:
  • Sylvester Pradeep
Production
companies
  • Somanna Talkies
  • VarnaSindhu Studios
Distributed byGoldie Films
Release date
  • 18 October 2024
Running time
136 minutes[1]
CountryIndia
LanguagesKannada
Konkani

Thursday, February 13, 2025

WALLACE AND GROMIT; VENGENCE MOST FOUL (2024) -ஆங்கிலம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி ஆக்சன் டிராமா ) @நெட் பிளிக்ஸ்

             


            இது குழந்தைகளுக்கான  படம் .அனிமேஷன்  படம் . பெரியவர்களும்  பார்க்கலாம் . மன  அழுத்தம்  மன பதட் டம்  குறைய  அல்லது நீங்க  குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும்  அல்லது  குழந்தைகள்  பார்க்கும்  கார்ட்டூன்களைப்பார்த்து மனம் மகிழ வேண்டும் என மனோ தத்துவ  நிபுணர்கள்  பரிந்துரைக்கிறார்கள் 


த கர்ஸ்   ஆப்  த  வேர் ரேபிட் (2005)  பட த்தின்  பிரம்மாண்ட  வெற்றிக்குப்பின்  அதே யூனிட் , அதே  கதாபாத்த்திரங்களுடன் களம் இறங்கி இருக்கு .   ஷங்கர்  இயக்கிய  எந்திரன்  படமே  பாரீன் படமான  ஐ ரோபோட்  படத்தின்  தழுவல், தான் .,,அந்தக்கதையை  ,நினைவுபடுத்துகிறது . ஆனால்   செம  ஜாலியான  படம், ,தமிழ்  டப்பிங்கில் இருக்கிறது .தமிழ்  டப்பிங்கில் இருக்கிறது .படம்  ஓடும் நேரம்  79 நிமிடங்கள் மட்டுமே  என்பதால்   இதை ஒரு குயிக்  வாட்ச்  ஆகவே பார்த்து விடலாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 


 நாயகன் ,, நாயகி  இருவரும்  தம்பதி . சகிதமாக  ஒரு வீட்டில்  வசிக்கிறார்கள் . நாயகன்  பெரிய  அறிவாளி . புதுப்புது  அறிவியல் கண்டுபிடிப்புகளைக்கண்டு பிடிக்கிறார் .தோட்ட  வேலை  செய்ய  ஒரு  ரோபோ வை  உருவாக்குகிறார் . அது  பிரமாதமாக வேலை  செய்கிறது . அக்கம் ,பக்கம் இருப்பவர்கள் எல்லாம்  போட்டி போட்டுக்கொண்டு  அதை வாடகைக்கு எடுத்து தங்கள் வேலைகளை முடிக்க ஆசைப்படுகிறார்கள் . இதனால்  நாயகன் தான்  உருவாக்கிய ரோபோ  போலவே  பல ரோபோக்களை  உருவாக்க   முடிவு 

 செய்கிறார்  


 வில்லன்  ஒரு கொள்ளைக்காரன் . அபூர்வமான   வைரம் ஒன்றைக்கொள்ளை  அடிக்க  முயலும்போது  நாயகனிடம் மாட்டிக்கொள்கிறான் , நாயகன்  வில்லனை போலீசில்  பிடித்துக்கொடுக்கிறான் . ஜெயிலு க்குப்போன வில்லன்  நாயகனைப்பழி  வாங்க   நினைக்கிறான் .ஜெயிலில்   இருந்தபடியே  நாயகனின்  ரோபோவை இயக்கி   தீய  ரோபோவாக மாற்றுகிறான் 


  வில்லனின்  ஆணைப்படி  கெட்ட  ரோபோ  கண்டபடி  வேலை செய்து     குட்டையைக்குழப்புகிறது . அண்டை வீட்டார்  அளித்த   புகாரின்படி  நாயகனை போலீஸ்  கைது செய்கிறது . நாயகி இந்த சிக்கலில் இருந்து நாயகனை  எப்படி  காப்பாற்றுகிறாள் ? வில்லனை எப்படி  மாட்ட   வைக்கிறாள் ? என்பது மீதி திரைக்கதை 


 நாயகன் ,, நாயகி ,வில்லன்  , ரோபோ , போலீஸ்  ஆபீசர் , அவரது அஸிஸ்டெண்ட்   என   ஆறே ஆறு முக்கியக்கேரக்டர்கள் . அனைத்தும் அனிமேஷன்  கேரக்டர்கள்   தான் .பார்க்கக்காமெடியாக இருக்கிறது


சபாஷ்  டைரக்டர்


1   ரோபோ  செய்யும்  அதிவேக  வேலைகள்  அலாவுதீன்  பூதத்தை  நினைவுபடுத்துகிறது . குழந்தைங்களுக்குக்கொண்டாட்டமான கேரக்ட்டர் 


2  மனைவியாக  வரும் கேரக்ட்டர்  ஒரு டயலாக் கூட பேசவில்லை  . பெண்கள் அமைதியானவர்கள்  என்பதை நம்ப மனம் மறுக் கிறது . ஆனால்   நாயகி செய்யும்  சாகசங்கள்   அபாரம் 


3  ஓப்பனிங்  சீனில்  நாயகன்  எப்படி   தயார் ஆகிறான் ?  என்பதை காமெடியாக விளக்கிய விதம் அருமை 


4   வில்லனின் கேரக்ட்டர்  டிசைன்   அருமை .எதற்கும் அலட்டிக்கொள்ளாத பாங்கு 


5  போலீஸ்  ஆபீசர் , அவரது அஸிஸ்டெண்ட்    என   இருவரும்  அடிக்கும் லூட்டிகள் கல கல 


  ரசித்த  வசனங்கள் 



1  கண்டுபிடிப்புகளை மலிவாக செய்து விட முடியாது 

   

2   எந்த  வேலையும் சின்னதல்ல


3   நமக்கு என்ன  தேவை என்பதை  நம்மை விட இந்த ரோபோ   நல்லா   தெரிஞ்சு வெச்சிருக்கு 


4  உங்க   பன்னிக்குட்டியை யாரோ  கிள்ளீட்டாங்களா? ஓ , தண்ணித்தொட்டியை தள்ளி விட்டுட் டாங்களா? 


5   அன் - இன் பார்ம்டு போலீஸ் ஆபீசரின் சேவை  இந்த நாட்டுக்குத்தேவை 


ஐயோ   ராமா , அது யூனிபார்ம்டு போலீஸ் ஆபீசரின் சேவை  இந்த நாட்டுக்குத்தேவை   என வரணும் 


6  நைட்  தூங்கும்   முன்   இப்பப் பாதில விட் டதை  அதாவது   தூக்கத்தை  இப்போ  முடிச்சு டேலி பண்ணிட் டேன் 


7 அந்தப் படகு   என் படகு  போலவே அழகா இருக்கில்ல? 


 சுத்தம் , உங்க படகைத்தாங்க வில்லன் அபேஸ் பண்ணிக்கொண்டு போறான் 


8  தேவை தான் எல்லாக்கண்டுபிடிப்புகளுக்கும் மாமியார் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

சுட்டி  டி வி பார்க்கும்போது , கார்ட்டூன்  சேனல்   பார்க்கும்போது  லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - குழந்தைகள்  மட்டுமல்லாமல்  பெரியவர்களும்   ஜாலியாகப்பார்த்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம் . ரேட்டிங்  3 / 5 


Wallace & Gromit: Vengeance Most Fowl
Official Netflix release poster
Directed by
Screenplay byMark Burton
Story by
  • Nick Park
  • Mark Burton
Based onWallace & Gromit
by Nick Park
Produced byRichard Beek
Starring
CinematographyDave Alex Riddett
Edited byDan Hembery
Music byLorne Balfe
Julian Nott
Production
company
Distributed by
Release dates
  • 27 October 2024 (AFI)
  • 25 December 2024 (BBC)
  • 3 January 2025 (Netflix)
Running time
79 minutes[1]
CountryUnited Kingdom
LanguageEnglish

Wednesday, February 12, 2025

தருணம் (2025) - தமிழ்- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் க்ரைம் த்ரில்லர் )

       

                 தேஜாவு (2022)  என்ற  வெற்றிப்படத்தைக்கொடுத்த  இயக்குனர் அரவிந்த்  சீனிவாசனின் இரண்டாவது படம் இது . தனது முதல் படத்தை  த இன்விசிபிள் கெஸ்ட் (2016) என்ற ஸ்பானிஷ்  படத்தை  பட் டி டிங்கரிங்க்  பண்ணி   உருவாக்கி இருந்தாலும்  விமர்சகர்களின் பாராட்டைப்பெற்றவர் .முதல் நீ  முடிவும் நீ  என்ற  சுமார்  ரகப்படத்தில் நாயகன் ஆக நடித்த  கிஷன் தாஸ்  நடிப்பில் உருவான படம் இது .15/1/2025  அன்று  திரை அரங்குகளில்  வெளியான இப்படம்  சரியான  மெயின் தியேட்டர்கள்  அமையாததால் மீண்டும்  ரி  ரிலீஸ் ஆக 31/1/2025 அன்று  வெளியாகி உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு போலீஸ் ஆபீசர் . இப்போது சஸ்பென்ஷனில் இருக்கிறார் . ஒரு திருமண  விழாவில்  நாயகியை சந்திக்கிறார் .நாயகனுக்கு ஆல்ரெடி  ஒரு காதலி  இருந்தாள் .ஆனால்  போலீஸ்  வேலை  அவளுக்குப்பிடிக்காததால் பிரேக்கப் ஆகி விட்ட்து .முன்னாள்  காதலியின் திருமணம் தான் இது 


 நாயகிக்கும்  ஒரு முன்னாள் காதல் உண்டு . காதலன் தன்னை நம்ப வில்லை .சந்தேகப்பிராணியாகவும் மடச்சாம்பிராணியாகவும் இருக்கிறான் என நாயகி விலகி விடடாள் . முன்னாள்  காதலனின்  திருமணத்துக்குத்தான் நாயகி இப்போது  வந்திருக்கிறாள் 


நாயகன் , நாயகி அறிமுகம்  பின் நட்பாகி , காதல் ஆகி  திருமணம்  வரை  வந்து  விட்டது 


நாயகிக்கு ஒரு பாய்பெஸ்ட்டி  இருக்கிறான் . பொதுவாக  மாடர்ன் பெண்கள்  உலகில் பாய்பெஸ்ட்டி   என்றால் எடுபுடி  , வேலைக்காரன் என்று தான் அர்த்தம் . யூஸ் அண்ட்  த்ரோ  மாதிரி  உபயோகப்படுத்திக்கொள்வார்கள் . இது தெரியாத  வில்லன்  நாயகியை அடைய நினைக்கிறான் 



 ஒரு சந்தர்ப்பத்தில்  நாயகி வில்லனைப்போட்டுத்தள்ளி விடுகிறாள் .வீட்டில்  வில்லனின் பிணம் .நாயகனுக்கு  போன் செய்கிறாள் . நாயகன்  வந்து  நிலைமையை எப்படி சமாளித்தான் ? என்ன என்ன  பிரச்சனைகளை  எதிர் கொண்டான் ? என்பது மீதித்திரைக்கதை 


நாயகன் ஆக   கிஷன் தாஸ்  யதார்த்தமாக   நடித்திருக்கிறார் .அலட்டிக்கொள்ளவே  இல்லை . ரொமாண்டிக்  சீன்களிலும் சரி ,காமெடி சீன்களிலும் சரி  கச்சிதமாக நடித்திருக்கிறார் 

நாயகி ஆக  ஸ்ம்ருதி  வெங்கட்  கொழுக்  மொழுக் என இருக்கிறார் . நடிப்பும்  பரவாயில்லை 


 நாயகனின் நண்பனாக  பால சரவணன் கச்சிதமாக நடித்திருக்கிறார் 


வில்லன் ஆக ராஜ் அய்யப்பா   நடித்திருக்கிறார் .சுமார் ரகம் 


தற்புகா  சிவாவின் இசையில்  இரண்டு பாடல்களுமே  நன்றாகஇருக்கின்றன .பின்னணி இசை  சராசரி ரகம் .ஒளிப்பதிவு  ராஜா படடாச்சார்யா  சுமார் ரகம் .நாயகிக்கு க்ளோசப்  சீன்கள்   அதிகம் வைக்கவில்லை . வைத்தவரையில்  பெரியதாக சைன் செய்யவில்லை 


சபாஷ்  டைரக்டர்

1   பொதுவாக க்ரைம் திரில்லர்  படங்களில்  ரொமான்ஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் . ஆனால்  வழக்கத்திற்கு மாறாக  இதில்  ரொமாண்டிக் போர்சன் ரசிக்கும்படி இருக்கிறது . . பெண்களின்  சைக்காலஜியும் அலசப்பட்டிருக்கிறது 


2 முதல்  பாதி  ரொமான்ஸ் , பின் பாதி  க்ரைம் என  பிரித்து  திரைக்கதை அமைத்த  விதம் 


3  போர் அடிக்காமல் முழுப்படத்தையும்  ரசிக்கும்படி எடுத்த விதம் 


4   வில்லனின் அம்மாவாக நடித்தவரின் உடல் மொழி , நடிப்பு அனைத்தும் அருமை 



  ரசித்த  வசனங்கள் 


1   கடவுளுக்கே  அவனை ரொம்பப்பிடிச்சுப்போய் சீக்கிரமாகவே  தன்  கூட அழைச்சுக்கிட் டார்  போல 


2   வேலை  முக்கியமா? பொண்ணு முக்கியமா? எனக்கேட் டா  எனக்கு வேலை தான் முக்கியம் 


3  நான் வருசா வருஷம் ஜிம் மெம்பர்ஷிப்புக்குப்பணம் கட்டுனதுக்கு சொந்தமா  ஒரு ஜிம்மே   ஓப்பன் பண்ணி இருக்கலாம் 


4    மேனேஜெர்  ஆகிட்டியாமே? வாழ்த்துகள் .சரி . இதை வாங்க எவ்ளோ  செலவு ஆச்சு ? 


5  என்  பியான்சியும்  இவ தான் , இந்த பார்ட்டிக்கு பைனான்சியரும் இவ தான் 


6   லவ்ல   நம்மகூடஇருக்கறப்ப  மட்டும் தான்  அவ சந்தோஷமாயிருக்கணும்னு இல்லை , நம்மை விட்டுப்பிரிஞ்ச்சு போனபின்பும் எங்கிருந்தாலும் அவ நல்லாருக்கணும் 


7  ரொமாண்டிக்  & டிராமாட்டிக் ஆக  பிரப்போஸ்  பண்ணினா  பெண்களுக்குப்பிடிக்கும் 


8   என்னைக்கொஞ்சி  எழுப்பி விடுடா 


செல்லம் எந்திரி 


 இதுதான் கொஞ்சலா?  அட்லீஸ்ட்  ஒரு முத்தமாவது கொடுடா 


 இச் 


 இதுதான் முத்தமா? கன்னத்தில் கொடுப்பதெல்லாம் கணக்கில் வராது 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகனின்  நண்பன்  உடல் எடை 80 கிலோ  இருக்கும் .உயரம்  5அடி 4 அங்குலம்  இருக்கும் . வில்லனின்  உடல் எடை  65 கிலோ தான் இருக்கும் .உயரம்  அஞ்சே  முக்கால் அடி   இருக்கும் .சி சி டி வி கேமராவில் ஆள் மாறாட் டக்குழப்படி பண்ண நாயகன் செய்யும் டிரிக் எடுபட   இருவரும்  ஒரே  உயரம் , உடல் எடை  இருக்க வேண்டும் .அது போக  வில்லன் சிவப்பு . நாயகனின்  நண்பன்   மாநிறம் 


2  சிசிடிவி  கேமரா  பற்றி  விசாரிக்கும்போது  அபார்ட்மெண்ட் வாசிகளின் பிரைவசி  கருதி  காரிடாரில் சிசிடிவி  கேமரா  வைக்கவில்லை  என்பது செமக்காமெடி . . பெடரூமில் , பாத்ரூமில்   வைக்காமல் இருப்பதுதான்  பிரைவசி  கருதி... காரிடாரில் சிசிடிவி  கேமரா   வைத்தால் எப்படி  பிரைவசி பாதிக்கப்படும் ?


3   பக்கத்து ரூமில் டெட் பாடியை வைத்துக்கொண்டு நாயகியால்   எப்படி அசால்ட் ஆக தூங்கமுடிகிறது ? 


4  நாயகியின்  கேரக்ட்டர்  டிசைன் சரி இல்லை . வில்லனை  எப்படி  அவ்ளோ  தூரம் அனுமதிக்கிறாள்/?  தன் தோழிகளை பதம் பார்த்தவன் என்று  தெரிந்தபின் கட் பண்ணி இருக்க வேண்டாமா? 


5  இது ஆக்சிடெண்டல்  டெத்  என்கிறாள் நாயகி . பிறகு  நான் தான் கொலை  செய்தேன்  என்கிறாள் . பதட் டத்தில் ஆம்புலன்சுக்கு கால்   பண்ணிட் டேன்   என்கிறாள் . எல்லாம் முன்னுக்குப்பின் முரண் 


6  வில்லன்  பல பெண்களை அடைந்தவன் . நாயகியும் வில்லனும்  பல முறை  வீட்டில்  தனிமையில்  இருக்கிறார்கள் . மயக்கமருந்து  கொடுத்து சுலபமாக  அவளை அடைந்திருக்கலாம் .அதை செய்யவில்லை . நாயகி மறுத்தபின்   அவளை   வில்லன் கொலை செய்ய முயற்சிப்பது எதனால் ? வில்லனின் டார்கெட்  நாயகியை அடைவது தானே? 


7 வில்லனின் அம்மா  நாயகியின் வீட்டுக்கு வந்து   தன மகனுக்கு கால் பண்ணும்போது  மகனின் செல்போனில்  ரிங்க்  அடிக்கும் சத்தம் தெளிவா  கேட் கிறது . ஆனால்   நாயகன் தன போனை அட்டென்ட் செய்வது போல நடித்து சமாளிப்பது  எப்;படி ? இன்னொரு முறை கால் பண்ண மாடடாளா? 


8   வில்லனின்   டெட் பாடியை  நாயகன்  அபார்ட்மெண்ட் டில்   இடம் மாற்றுவது எல்லாம் சாத்தியமே இல்லாதது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பின் பாதி  க்ரைம்  திரில்லர்  போர்சனில்   வில்லனின் அம்மாவின் நடிப்புக்காகவும் , முதல் பாதியில் ரொமாண்டிக் போர்சனுக்காகவும் பார்க்கலாம் . விகடன் மார்க்  41 .ரேட்டிங்  2.5 / 5 



தருணம்
நாடக வெளியீட்டு சுவரொட்டி
இயக்கியவர்அரவிந்த் ஸ்ரீனிவாசன்
எழுதியவர்அரவிந்த் ஸ்ரீனிவாசன்
தயாரித்தவர்
  • புகழ்
  • ஈடன்
நடிப்பு
ஒளிப்பதிவுராஜா பட்டாச்சார்ஜி
இசையமைத்தவர்
தயாரிப்பு
நிறுவனம்
  • ஜென் ஸ்டுடியோஸ்
வெளியீட்டு தேதி
  • 31 ஜனவரி 2025
இயக்க நேரம்
137 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Tuesday, February 11, 2025

THE BUCKINGHAM MURDERS (2024)- ஹிந்தி - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ நெட் பிளிக்ஸ்

           

    2020 ஆம் ஆண்டு வெளியான  ஸ்கேம்  1992 த ஹர்சத்  மேத்தா  ஸ்டோரி  படத்தை இயக்கிய  இயக்குனர்  ஹன்ஸத்  மேத்தா  இயக்கிய படம் இது . கதைக்களம்  அமெரிக்காவில்  நடப்பதாகக்காட்டப்படுவதால் இது ஒரு ஹாலிவுட்  படம் போலவே  இருக்கும் படத்தின் ஒளிப்பதிவாளர்  எம்மா டால்ஸ்மின்   என்ற  பெண்  பிரமாதமான  போட்டோகிராபியில்  டெக்னிக்கல் அம்சங்கள்   தரமாக   அமைந்த  ஒரு க்ரைம் த்ரில்லர்  அல்லது க்ரைம்  இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் இது 


13/9/2024 அன்று  திரை அரங்குகளில்  வெளியாகி  பாசிட்டிவ்  விமர்சனங்களைப்பெற்று  கமர்ஷியலாக வெற்றி பெற்ற படம் இது 14/10/2023 ல்  67 வது  லண்டன்  பிலிம் பெஸ்டிவலில்  திரை  இடப்பட்டு  பெரும் வரவேற்பைப்பெற்ற படம்         


இது  கரீனாகபூரின் சொந்தப்படம் .கேட்  வின்ஸ்லெட்  நடித்த   மினி  சீரிஸ் ஆன   மேர்  ஆப்  ஈஸ்ட்  டவுன்  ல  வரும் நாயகியின்  கேரக்டர்  டிசைன்  போல  இருந்ததால்  கவரப்பட்டு  நடிக்க  சம்மதித்தேன் என்கிறார்   


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு பிரிட்டிஷ் -இந்தியன்  டிடெக்டிவ்  ஆபிசர் . தனது  மகன்  ஒரு போதை ஆசாமியால் சுடப்பட் ட  சம்பவத்தால் மனம்  பாதிக்கப்பட்டு பக்கிங்க்ஹாம் டிரான்ஸ்பர்  வாங்கிக்கொண்டு வருகிறார்.  . வந்த இடத்தில்  அவரது  மகன் வயதை ஒத்த  ஒரு சிறுவன் மிஸ்ஸிங்க்  கேஸ்  டீல்  செய்ய வேண்டிய  கட் டாயம் 



ஆரம்ப கட்ட   விசாரணையில்   அந்த சிறுவன்  போதை மருந்து சப்ளை  செய்பவன் எனவும்  அப்படி  டீலிங்க் நடக்கும்போது உருவான தகராறில்  ஒரு இளைஞன்    ஏரியின்  தண்ணீரில்  மூழ்கடித்துக்கொலை செய்து விட் டான் எனவும்  கொலைகாரனின் நண்பன்  சாட் சி   சொல்கிறான் 


 படம் ஆரம்பித்த   20 வது  நிமிட த்திலேயே  கேஸ்   க்ளோஸ் . ஆனால்   நாயகிக்கு  ஒரு டவுட்  வருகிறது . சக போலீஸ் ஆபீசர்   அந்தக்கேஸை  முடிப்பதில்  காட்டும்   அவசரம் . கொலை செய்யப்பட் ட   சிறுவனின்   அப்பாவுக்கு ஒரு கள்ளக்காதல் இருப்பது   ஆகிய   இரண்டு   விஷயங்கள்  நாயகிக்கு உறுத்துகிறது 


 வேறு ஒரு கோணத்தில்  கேசை   மீண்டும்   விசாரிக்க  துப்பு துலங்குகிறது .அந்த  இன்வெஸ்டிகேஷன் போர்சன் தான் மொத்தப்படமும்  


நாயகி    ஆக   கரீனா கபூர் கான் ஒரு பிரிட்டிஷ் -இந்தியன்  டிடெக்டிவ்  ஆபிசர்  எப்படி  இருப்பாரோ  அதே தோரணை , உடல்  மொழி , ஆடை  வடிவமைப்பு  அனைத்திலும் கவனம்   செலுத்தி  அந்த கேரக்ட்டருக்கு  உயிர் கொடுத்து இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்

1  போதை மருந்துக்கடத்தல் , இரண்டு  வெவ்வேறு  கள்ளக்காதல்  கதைகள் ,  ஒரு போலீஸ் ஆபீசரின் துரோகம்  என படத்தில்   நான்கு  ட்வீஸ்ட்கள்  இருக்கின்றன .தரம் 


2  ஒளிப்பதிவு  , காஸ்ட்யூம் டிசைன்  இரண்டும் பிரமாதம் . ஹாலிவுட்  படங்களுக்கு இணையான தரம் 


  ரசித்த  வசனங்கள் 

1   ஐ  ஹேட்  பேப்பர்  ஒர்க்ஸ்


நானும்  தான் .இந்த  உலகத்துலயே ரொம்ப போராண, கஷ்டமான விஷயம் பேப்பர்  ஒர்க்ஸ்  தான் 

2  குழந்தையை  இழப்பதை விட பெரிய சோகம் எதுவும் இல்லை 


3  இந்த மிஸ்ஸிங்க்  கேஸை  எடுக்கமாட்டேன்   என  நீங்க தான் சொன்னீங்க .இப்போ  இந்தக்கேஸை  முடிக்காம  விட மாட்டேன் என  நீங்க தான் சொல்றீங்க 


4  அப்பா , நான் ஒன்னும் சின்னக்குழந்தை   கிடையாது . சிச்சுவேஷனை ஹேண்டில் பண்ணத்தெரியும் 



எல்லாக்குழந்தைகளும்  தனக்கு மெச்சூரிட்டி  இருக்குன்னு தான் சொல்லும் . ஆனா  ஆள்   வளர்ந்த  பின் குழந்தைத்தனமா  நடந்துக்குவாங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மொத்தபபடமும்  90 நிமிடங்கள்  ஓடுகிறது  எனில் நாயகியின்  பர்சனல் லாஸ் , அவரது மகனின் நினைவுகள் , அப்பா வந்து சமாதானப்படுத்துவது  இவை எல்லாம் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை .அரை மணி நேரம் விழுங்கி விடுகிறது 


2  போதை மருந்து  உபயோகிக்கும் காட் சிகள்  இவ்வளவு  விபரமாகக்காட்ட வேண்டுமா? 


3   தனது  மனைவியை  பலாத்காரம் செய்ய  முயலும்  நபரை ஒரு ஆள்  அடித்தே   கொல்வது  சரி , ஆனால்   அவன் எப்படி பெட் ரூமுக்குள் வந்தான் என்ற  சந்தேகம் எழவில்லையே? எதனால் ? 


4  கேஸ்  விசாரணையில்  இருக்கு . போலீஸ்  நம்மைக்கண்காணிக்கிறது   என்பது   தெரிந்தும்  அவர் அசால்ட் ஆக தனது  கள்ளக்காதலியை பப்ளிக்கா சந்தித்து மாட்டிக்கொள்வாரா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பரபரப்பான  யூகிக்கமுடியாத  திருப்பங்கள் கொண்ட க்ரைம்  த்ரில்லர் படம்  இது .பார்க்கலாம். ரேட்டிங்க் 2.75 / 5 


The Buckingham Murders
Theatrical release poster
Directed byHansal Mehta
Screenplay by
  • Aseem Arrora
  • Raghav Raj Kakker
  • Kashyap Kapoor
Story byAseem Arrora
Produced by
Starring
CinematographyEmma Dalesman
Edited byAmitesh Mukherjee
Music byScore:
Ketan Sodha
Night Song Records
Songs:
Bally Sagoo
Payal Dev
Karan Kulkarni
Production
companies
Distributed byPen Marudhar Entertainment
Release dates
  • 14 October 2023 (London)
  • 13 September 2024 (India)
Running time
107 minutes[1]
CountryIndia
LanguagesEnglish
Hindi
Box officeest. 14.56 crore[2]