Sunday, June 27, 2021

மேதகு - புரட்சி வீரன் பிரபாகரனின் வாழ்க்கை சரித்திரம் பாகம்1



 விடுதலைப்புலிகளின்  தலைவர்  பிரபாகரன்  வாழ்வில்  நிகழ்ந்த  உண்மை  சம்பவங்களின்  தொகுப்புதான்  இந்தப்படம்.எந்த  வித  எதிர்பார்ப்பும்,  பில்டப்பும்  இல்லாமல்  ரிலீஸ்  ஆகி  பலரை  ஆச்சரியப்படுத்தி  இருக்கும்  படம்.


முதலில்  நம்மை  ஆச்சரியப்படுத்துவது  நடிகர்  நடிகைகள்  தேர்வு .  பிரமாதம்.அடுத்ததாக  நம்  மனம்  கவர்வது  அட்டகாசமான  வசனங்கள் .பின்னணி  இசை , ஒளிப்பதிவு , ஏடிட்டிங்  எல்லாமே  கனகச்சிதம்.  ஒரு  மாஸ்  ஹீரோவின்  படங்களில்  வருவது  போல்  கூஸ்  பம்ப்  காட்சிகளும்  உண்டு 


ஒரே  குறை  , இது  மினிமம்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  படம்,  வெறும்  50  லட்சம்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டிருக்கு . இலங்கையில்  நடக்கும்  தமிழர்  விழா   வில்  நடனக்கலைஞர்கள்  5  பெண்கள்  5  ஆண்கள்  மட்டுமே  பங்கேற்று  இருப்பது ஒரு  பின்னடைவே ,  ஆனா  வேற  வழி  இல்லை 


திரைக்கதை  ,  காட்சி  அமைப்புகள்:  எல்லாம்  இயக்குநர்  கிட்டியின்  திறமையை  பறை  சாற்றும் 


  வில்லுப்பாட்டு  மூலமாக  கதை  சொல்லும்  உத்தி  ஓக்கே  தான்..  உத்தம  வில்லன்  படத்தில்  இதே  உத்தி  கையாளப்பட்டபோது  போர்  அடிக்கும்  காட்சிகள்  இருந்தது ,  ஆனா  இதில்  போர்  அடிக்கலை 


சபாஷ்  டைரக்டர் 


1    பிரபாகரனின்  இளமைப்பருவ  உருவத்தோற்றத்துடன்  நடித்திருப்பவர்  பாடி  லேங்க்வேஜ் ,  பார்வை  ,  வசனம்  பேசும்  லாவகம்  எல்லாமே  அற்புதம் 


2   புத்த  பிட்சு  இலங்கையில்  ஒரு  முக்கிய  பிரமுகரை  கொலை  செய்யும்  காட்சி  படமாக்கபப்ட்ட  விதம்


3   ஹீரோவின்  அப்பாவுடன்  ஹீரோ  பேசும்  உரையாடல்  காட்சி  அவ்ளோ  யதார்த்தம் ,  வலிமையான  வாக்குவாதம் 


4   ஹீரோ  முதன்  முதலாக  அரங்கேற்றும்  கொலை  காட்சி 

 

5   ஹீரோவின்  சகோதரியை   சீண்டும்  போலீசை  சகோதரியே  தாக்கும்  காட்சி



நச்  வசனங்கள்

 

1   இனி யாரும் அழவேண்டாம் எனக்கூறி ஒருவன் பிறந்தான்

 

2  அப்பா நாம ஏன் திருப்பி அடிக்கல ?

 

3   ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்..! 

 

4   பிறந்தான்  பிறந்தான்  சமரசம்  இல்லா  ஒரு  மாவீரன்  

 

5    இனி  அதிகாரம்  அவங்க  கையில்  இருக்காது , வெறும்  பயம்  மட்டுமே  பையில்  இருக்கும் 

 

6  அமைதி  வழிப்போராட்டம்  பயன்  தராது   அமைதியாப்போராடுனா  பலன்  கிடைக்கும்  என்று  நம்புவது  உலகின் மிகப்பெரிய  மூட நம்பிக்கை 

 

7 எந்த  ஆயுதத்தால  எதிரி  தாக்கறானோ  அதே  ஆயுதத்தை  கையில்  நாம  எடுக்கனும் 

 

8  பயம்  ஒன்று மட்டுமே இன்னொருவர்  மனதில் அடிமைத்தனத்தை   ஆழமா  விதைக்கும் 

 

9  முதல்ல  பதட்டத்தை  உருவாக்குவோம், பயம்  தானா  உருவாகும்

 

10  விடியலை  தள்ளிப்போட  இயலாது 

 

11  சுவாசிக்க  கத்துக்கிட்டு  இருக்கும்போது  ஏன்  நுரையீரல்ல  கத்தி  பாய்ச்சறாங்க ? 

 

12  உரிமையைக்கேட்கறோம்,அதற்கு  விலை  உயிரா?  

 

 

சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -   மேதகு − விடுதலைப்புலி பிரபாகரனின் வாழ்க்கை சரித்திர சம்பவங்களின் தொகுப்பு,பாகம் 1. இது 100 நிமிடங்கள், வசனம் ,பிஜிஎம் பட்டாசு .இளவயது பிரபாகரன் நடிப்பு பாடிலேங்குவேஜ் அருமை..அனைத்து தமிழர்களும் அறிய"வேண்டிய வரலாறு என்பதால் ரேட்டிங் தேவை இல்லை 

Friday, June 18, 2021

ஜெகமே தந்திரம் - சினிமா விமர்சனம்



 ஹீரோ  ஒரு  லோக்கல்  ரவுடி ,  அவரோட   வாழ்க்கைல  ஒரு  சம்பவம்  நடக்குது .  ஃபாரீன்  போறார் . அங்கே  இரு  தரப்பு  டாண்கள்  மோதிக்கறாங்க .  ஹீரோ  ஒரு  தரப்புக்கு  ஆதரவா  இருக்கார் , இன்னொரு  தரப்பை  தந்திரமா  இன்ஃபார்மர்  மாதிரி  இருந்து  கழுத்தை  அறுக்கறார்.


 அங்கே தான்  ஒரு  ட்விஸ்ட்  யாரை  போட்டுத்தள்ள  உதவினாரோ  அந்த  டாண்  ஹீரோயினோட  கார்டியன்.  இப்போ  ஹீரோ  யூ  டர்ன்  அடிக்க  வேண்டிய  கட்டாயம்  .  வை  கோ   எப்படி  ம  ந  கூ  ஒர்க்  அவுட்  ஆகலைனு  தன்னை  துரோகினு  சொன்னவங்க  கூடவே  சேர்ந்தாரோ  அப்படி  ஒரு  அந்தர்பல்டி  அடிக்கறாரு 

 

  ஹீரோயின்  லேசுப்பட்ட  ஆளில்லை  , சசிகலா  மாதிரியே கிரிமினல்  வேலை  எல்லாம்  பண்றாப்டி  .  இறுதியில்  ஹீரோ  ஹீரோயினை  வென்றாரா?   துரோகம்  செஞ்சதுக்கு  பரிகாரம்  தேடிக்கிட்டாரா?  என்பதை  நெட்  ஃபிளீக்சில்  காண்க

 

 

 ஹீரோவா  தென்னக  ப்ரூஸ்லீ  தனுஷ் .  இவருக்கு  கேரக்டர்  படி  புதுப்பேட்டை ,  வட  சென்னை  ரோல்.  கெட்டப் படி  பேட்ட  ரஜினி     மாதிரி .,.  புகுந்து  விளையாடி  இருக்கார் .  ஆனா  என்ன  தான்  ஹீரோயிசம்  காட்டுனாலும்   ஈர்க்குச்சி  மாதிரி  இருந்துட்டு  ஒரே  ஷாட்டில்  25  பேரை  அடிப்பதெல்லாம்  ஓவர் . சரி  தமிழ்  சினிமா  தலைஎழுத்து  அவ்ளோ  தான்னு  சகிச்சுக்கலாம் 


  ஹீரோயினா  ஐஸ்வர்யா  லட்சுமி .  இலங்கைத்தமிழில்  சமாளிக்கிறார்.  சுமாரான  50  மார்க்  ஃபிகரான  இவருக்காக  ஹீரோ  90  மார்க்  ஃபிகரைக்கண்டது  போல்  உருகுவது  எல்லாம்,  ஓவரோ  ஒவர் .  ஹீரோயின்   வில்லி  ஆகப்போறார்  என்ற   அந்தக்கால  சஸ்பென்ஸ்  எல்லாம்  பெருசா  எடுபடலை.  முதல்லியே  தெரிஞ்சிடுது . அந்த  இன்ண்டர்வெல்  சஸ்பென்சை   ரொம்பவே  நம்பி  இருக்காங்க 


  வில்லனா  2  பேரு .  அந்த  லோக்கல்  டாண்  நடிப்பு  குட்  


 ஃபாரீன்  வெள்ளைக்காரன்  கெட்டப்  சைக்காலஜிக்கல்  த்ரில்லரான    த  ஆக்குபண்ட்  வில்லன்  கெட்டப் .  இடை  வேளை  வரை  ஓக்கே .  கடைசில  எடுபடலை 


  ஒரு  சீன்ல  சாமார்த்தியமா  ஒரு  டயலாக்  வெச்சிருக்காங்க .  வெள்ளைக்காரனான  வில்லன்  ஏன்  இந்தியனான  தனுஷ்  மேல  அவ்ளோ  நம்பிக்கை  வெச்சான்?  அதுக்கு  பதில்   கடைசி  வரை  இல்லை  நாம  யாரும்  கேள்வி  கேட்டுடக்கூடாதுனு  அவங்களே  கேட்டுக்கிட்டாங்க  போல 


 தமிழ்  மட்டுமே  தேரிஞ்ச  ஹீரோ ,  இங்க்லீஷ்  மட்டுமே  தெரிஞ்ச  வில்லன்  இருவர்  சந்திப்பு  காட்சிகள்  எல்லாம்   ஸ்டாலின்  மோடி  சந்திப்பு  மாதிரி  செம  காமெடி .  அவருக்கு  தமிழ்  தெரியாது  , நம்மாளுக்கு  இங்க்லீஷ்  ஹிந்தி  எதுவுமே  தெரியாது .  என்னத்தைப்பேசி  இருப்பாரோ ? 

கலையரசனுக்கு   டாணின்  தம்பி  ரோல்  பரவால்லை 


 வசனங்கள்  எல்லாம்  பரவால்லை .  இலங்கை  தமிழ்  அகதி  மேட்டரை  வலுக்கட்டாயமா  திணிச்சிருக்காங்க .  த  ஃபேமிலிமேன்  2  பாதிப்போ ? 


 இசை  சந்தோஷ்  நாராயணன்..  தர   லோக்கல்  இசை .   2  பாட்டு  தேவல 


ஒளிப்பதிவு  , எடிட்டிங்  பரவால்ல 


 இயக்கம்  கார்த்திக்  சுப்புராஜ் . அக்மார்க்  அதே  பாணி  இயக்கம் .  நாட்  பேடு  நாட்  சூப்பர்  , பராவல்லை  ரகம்

 

நச்  டயலாக்ஸ்

 


உண்மையை உண்மையா சொன்னா மட்டும் போதாது , அவங்களுக்குப்பிடிக்கற மாதிரி கதையாவும் சொல்லனும
 
2  சுருளி ,  வேணாம்,  அண்ணனுக்குத்தெரிஞ்சா...
 
உங்கொண்ணனுக்குத்தெரியனும்கறதுக்காகத்தான்  உன்னைப்போடறோம் 
 
 
3   தாம்பத்யம் ,  தாம்பூலம்  என்ன  வித்தியாசம்?
 
  தாம்பூலம்கறது  எங்கப்பா  பார்க்கற  டிவி  சீரியல்.. தாம்பத்யம்கறது  அதே  டி வி ல   நான்  பார்க்கற   கில்மா  கேள்வி பதில்  ப்ரோகிராம் 
 
 4    போய்  அவனைத்தூக்குனு  சொல்றியே?  அவன்  என்ன  அன்னாசிப்பழமா  வித்துட்டு  இருக்கான்?  அணுகுண்டு  வீசிட்டு  இருக்கான்பா  

5   அடுத்து  என்ன  எழவு  ?  எழவு  தான் ..  ரெடி  பண்றோம்

6    அஞ்சு  நிமிசம்  பேசுனா  என்னைப்பத்தி  தெரிஞ்சிடுமா?

அப்போ  அஞ்சு  மணி  நேரம்  பேசுனா  புரியுமா? 5  நாள்  பேசுனா  புரியுமா? அதான்  அன்னைக்கே  சொல்லி  வெச்சிருக்காங்க  அஞ்சுல  விளங்காதது  அம்பதுல  விளங்குமா? 

7    நான்  கல்யாணம்  பண்ணிக்கப்போற  பொண்ணு  இதுதான்
 
  காதலை  சொல்லிட்டியா?

 அதெல்லாம்  இனிமேதான், ஆனா  மேரேஜ்  மட்டும்  கன்ஃபர்ம் 

8   காசு  கொடுத்தா   என்ன  வேணா  செய்வியா?

  என்ன  வேணா  யாருக்கு  வேணா  செய்வேன் 

9   அதிகப்பணம்   நிம்மதிக்குக்கேடுனு  சொல்றவன்  எல்லாம்  பணக்காரனாத்தான்  இருக்காங்க 

10    பீட்டர்   கிட்டேயே  இரு, எனக்கு  இன்ஃபார்மரா  இரு

 எது  வரை ?  பீட்டர்  என்னைக்கண்டு  பிடிச்சு  போட்டுத்தள்ளும்,  வரையா?

  இல்ல , நான்  பீட்டரைப்போடும்  வரை 

11   எனக்கு  என்னமோ  நீங்க  பெரிய  தப்பு  பண்றீங்களோ?னு  தோணுது \\

  தப்பு  பண்றோம், அவ்ளோ தான்.  பெருசு  ,  சிறுசுனு  அளவெல்லாம்  கிடையாது 
 
12   தமிழ்  நாட்ல  நீங்க  அகதியா ?  புரியலையே?
 
  எங்களுக்கே  அது  புரியலையே?
 
13  முதல்  டேட்டிங்  என்பது  மொத  ராத்திரி  மாதிரி  ,  ரொம்ப  ஆராயவும்  கூடாது  ,  பயப்படவும்  கூடாது  , அனுபவிச்சுடனும்
 
      நெர்வசா  இருக்கு 
 
 பயப்படாதீங்க ,  கிஸ்  எல்லாம்  அடிக்க  மாட்டேன் ...   ஏன்னா  வாழ்க்கை  பூரா  அதானே   பண்ணப்போறோம்?  சும்மா  சைட்  மட்டும்  அடிச்சுக்கறேன்   

15   இந்தியா  மாதிரி  நிறைய  நாடுகள்  அகதிகளை  ஏத்துக்கறாங்க , ஆனா    அவங்களை   நிஜமா விரும்பறதில்லை 


16  யாரா  இருந்தாலும்  போரை  தொடங்கதான்  முடியும் ,  முடிக்க  முடியாது 

17    கெட்டவனா  ,  திருடனா  வாழலாம்,  ஆனா  துரோகியா  வாழக்கூடாது. துரோகியா  வாழ்வது  செத்ததுக்கு சமம் 

18   சுதந்திரம்  ரொம்ப  கா012ச்ட்லியா  இருக்கும்  போல  தெரிதே?

19     அவர்   கிட்டே  மத்தவங்களை  நம்பி   ஏமாந்து  போற  மைனஸ்  இருக்கு 

20  போராடறதுக்கு  பெரிய  பெரிய  விஷயம்  எல்லாம்  இருக்கு 

21      அய்யோ , சிரிக்கறீங்க ,    ரொம்ப  நாள்  கழிச்சு  கேப்  விட்டு  தலைவர்  படம்  பார்க்கற மாதிரி  இருக்கு

22   நேர்ந்து  விட்ட  கிடாவைத்தான்  போடப்பார்ப்பாங்க 


23   பூர்வீகம்  பூர்வீகம்னு  சொல்லிட்டு  இருக்கறவன்  முதல்ல  எங்கிருந்தோ  வந்தவன் தான் 

24    சிவராசன்  மாதிரி  இத்தனை  துப்பாக்கிகளை
  எதுக்கு   வெச்சிருக்கீங்க ?

 தலைவன்  மீண்டும்  வருவான்,  நாட்டு  மக்களுக்காகப்போராடுவான்னு  ஒரு  நம்பிக்கை  தான் 

25    வெயிட்  காட்றே...  வெள்லைக்காரனே  உன்னைக்கண்டு  பயப்படறான்

 நாம  எல்லாருமே  வெயிட்  தான் 

26    இவனுக்கு வெறும்  சாவை  மட்டும்  காட்டுனா  பத்தாதுனு ந் தோணுது



 
 
   ட்வீட்ஸ்\\
 
  வந்தா  ராஜாவாத்தான்  வருவேன்  சிம்புக்கு  பஞ்ச்  வைக்கறார்   தனுஷ் .. எனக்கு  ராஜா  எல்லாம்  வேணாம்,,   நானே  ஒரு  ராஜா  தான்
 
 
லாஜிக்  மிஸ்டேக்ஸ்  ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 
 
1  பல  வருடங்களாக   டாணாக  இருப்பவன்  ஒரு  துப்பாக்கியைக்கையில்  தூக்கியதும்  அதுல  புல்லட்  இருக்கா?  இல்லையா?  என்பதை  வெயிட்  வெச்சே  கண்டுபிடிக்க  முடியாதா? 
 
 
2   ஹீரோ  ஒரு  சமயம்  ஃபாரீனர்  ,  லொக்கல்  ஆள்  இருவரில்  ஒருவருக்கு  விசுவாசமாக  இருக்க  ஒரு  முடிவு  எடுக்கிறார்.  அது  எந்த  அடிப்படையில் ? விசுவாசம்?  வசதி  ?   அதில்  தெளிவில்லை 
 
3     க்ளைமாக்ஸ்ல  வெள்ளைக்கார  வில்லன்  அடியாளுக்கு   ஃபோன்  போட்டு  ஸ்டேட்டஸ்  கேட்கும்போது  கன்  பாயிண்ட்ல  அடியாள்  பொய்  சொல்றான் . ஆனா  அதே  வீடியோ  கால்  போட்டிருந்தா  வில்லனுக்கு  பொசிஷன்  தெரிஞ்சிருக்குமே? 
 
4    இடைவேளை  ட்விஸ்ட்  வரும்போது  ஹீரோவை   வில்லன்  ஆட்கள்  8   துப்பாக்கிக்குண்டுகள்  நெஞ்சில் ,  தோளி ல்   ஷூட்  பண்ணி  தாக்கறாங்க . அசால்ட்டா  அவர்  தப்பிப்பது  எப்படி?
 
5   இலங்கை    அகதியா   வர்ற  ஒரு  லேடி   ஹீரோவை  ஹாஸ்பிடல்  ல   க்ளுக்கோஸ்  பாட்டில்ல  விஷ  ஊசி  போடறா. அதுக்கு  டைரக்டாவே  ஹீரோ  கைல  போட்டு  இருக்கலாமே? 
 
 
6   ஹீரோவை  ஹீரோவோட  அம்மா  துரோகினு  சொல்ற  சீனும்.. அந்த  பாவக்கறையைக்கழுவிட்டு  வா  என  சொல்வதும்  சரியா  ஒட்டலை . குருதிப்புனல்ல   ஹீரோ  துரோகியா  வர்றார்னா  அதுக்கு  சரியான  காரணம்  சொல்லப்பட்டிருக்கும்,  ஆனா  இதுல  எதேச்சையா  ஹீரோ  துரோகி  ஆவது  ஏத்துக்கற  மாதிரி  இல்லையே ?     
 
  சி.பி   ஃபைனல்  கமெண்ட்   ஜெகமே தந்திரம் - வழக்கமான இரு தரப்பு டாண்கள் மோதல் கதை, அதுல எக்ஸ்ட்ரா பிட்டா இலங்கை அகதிகள் மேட்டர் . பின் பாதி நீளம் அதிகம், சுமார் ரகம், ஆனந்த விகடன் மார்க் - 41 ரேட்டிங் 2.5 / 5 தனுஷ் பாதி கார்த்திக் சுப்புராஜ் மீதி #JagameThandhiram

Friday, June 11, 2021

அவனா இவன் ? 1962 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 வீணை  எஸ்  பாலச்சந்தர்  இயக்கிய   அந்த  நாள் பாடல்களே  இல்லாமல்  ரிலீஸ்  ஆகி  செம  ஹிட்  ஆன  க்ரைம் த்ரில்லர். அதில்  சிவாஜி கணேசன்  ஆண்ட்டி  ஹீரோவாக  கலக்கி  இருப்பார்.ரோஸ்மான்  எஃபக்டில்  எடுத்த  படம். அதாவது  விருமாண்டி  படத்தில்  வருவது  போல்  படத்தில்  வரும்  கேரக்டர்கள்  அவரவர்  மன  ஓட்டத்தின்படி  என்ன  நடந்திருக்கும்  என்ற  கற்பனையை  சொல்ல  காட்சியாக  முன்னிறுத்தும்  உத்தி 


நடு  இரவில்  , பொம்மை  என   இவர்  இயக்கிய  படங்கள்  எல்லாம்  க்ரைம்  த்ரில்லராக  இருக்கும்,  ஏதாவது  ஃபாரீன்  படத்தின்  அஃபிசியல்  ரீமேக்காகவோ  தழுவலாகவோ இருக்கும் 


AN AMERICAN TRAGEDY  நாவலின்  தழுவலான  , A PLACE IN THE SUN  ஹாலிவுட்  படத்தின்  தழுவல்  இது 


ஹீரோ  ஒரு  கார்மெண்ட்ஸ்  நிறூவனத்தின்  ஓனர்.  காதலி  கர்ப்பம்,  அந்த  டைமில்  ஒரு  செல்வச்சீமாட்டியின்  குடும்பத்துடன்  ஹீரோவுக்கு  சம்பந்தம்  நடக்கிறது .இந்த  மாதிரி  நேரத்தில்  காதலியால்  பிரச்சனை  வரக்கூடாது  என  நினைத்து  ஒரு  டூர்  ஸ்பாட்க்கு கூட்டிட்டுப்போய்  ஹீரோ  காதலியை  போட்டுத்தள்ளி  விடுகிறான்


ஸ்கூல் எக்ஸ்கர்சன்  வந்த  பஸ்  ஒன்று  பஞ்சர்  ஆகி  அந்த  இடத்தில்  நிற்க அதில்  இருக்கும்  இரு குழந்தைகள்  கொலையை  பார்த்து  விடுகின்றன


ஆனா  அவங்க  பேச்சை  யாரும்  நம்புவதாக  இல்லை . போலீஸ்   ஸ்டேஷனில்  கூட  போய்  புகார்  சொல்லியாச்சு .  ஆனா  நோ  யூஸ்


இப்போ கல்யாண  ஏற்பாடுகள்  துரிதமாக  நடக்கின்றன. அந்த  கொலையைப்பார்த்த  சாட்சிகளான  இரு  குழந்தைகளும்   என்ன  திட்டம்  போட்டு  ஹீரோவை  மாட்டி  விடுகின்றன  என்பதே  மிச்ச  மீதிக்கதை 


வீணை  எஸ்  பாலச்சந்தர்  இயக்கிய  4  படங்களில்  வசூல்  ரீதியாக  பெரிய  வெற்றி  பெறாத  ஒரே  படம்  இது  தான்.


ஓப்பனிங்  சீனில்  செல்வச்சீமாட்டி  வீட்டில்  வசிக்கும்  ஒரு  சிறுமி   அவளுடன்  நட்பு  பாராட்டும்  வேலைக்காரி  மகன் ஆக  ஒரு  சிறுவன்

இவர்கள்  இருவருக்கும்  இடையே  இருக்கும்  வர்க்க  பேதம்  பற்றி  கொஞ்சம்  சொல்லி முதல்  30 நிமிடங்கள்  இழுவை  போட்டதுதான்  படத்தின்  பெரிய  மைனஸ் 


குட்டி பத்மினி  முக்கியமான  ரோலில்  வருகிறார்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஹீரோ  தன்  காதலியை  நீர்  நிலை  அருகே  அழைத்து  வந்து  கட்டையால்  அடித்துக்கொலை  செய்து  பின்  நீர்  நிலையில்  டெட்  பாடியை  தள்ளி  விடுவது  ரிஸ்க்  தான்.  டெட்  பாடி  போலீஸ்  கையில்  கிடைத்தால்  அது  கொலை  என  தெரிந்து விடும்.  அதுக்குப்பேசாம  அவன்  காதலியை  தண்ணீரில்  மூழ்கடித்தே   சாகடித்து  இருக்கலாம்


2  கொலை  செய்யும்  யாரும்  கொலை  நடந்து  முடிந்த  பின்  சுற்றிலும்  ஒரு  பார்வை  பார்த்து  யாராவது  நம்மைப்பார்க்கிறார்களா? என  நோட்டம்  விடுவர். ஆனா  ஹீரோ  அதெல்லாம்  கண்டுக்கவே  இல்லை . அப்படி  நோட்டம்  விட்டிருந்தால்  சாட்சிகளைப்பார்த்திருக்கலாம்


3  குழந்தைகள்  போலீசில்  புகார்  கொடுத்ததும்  போலீஸ்  அவங்க  சொன்ன  ஸ்பாட்டில்  டெட்  பாடி இருக்கா?  என  தேடச்சொல்லி  ஆர்டர்  போட்டிருக்கலாம்,  ஆனா  அதை  செய்யவில்லை 


4  க்ளைமாக்சில்  மக்கள்  அந்த  கொலை  நடந்த  இடத்தில்  டெட் பாடியைத்தேடும்  இடத்தில்  வில்லன்  பதட்டப்படுவது  தேவையே  இல்லாதது . அங்கே  தேடாதீங்க  , இங்கே  தேடுங்க  என  லொக்கேஷன்  மிஸ்கெய்டு  பண்ணுவதும்  அமெச்சூர்த்தனமான  முயற்சியே 


5   நீரில்  மூழ்கிய  டெட் பாடி  மீன்களுக்கு  இரையாகி  அழுகிய  நிலையில் தான் இருக்கும், ஆனா  பல  நாட்களுக்குப்பின்  தண்ணீருக்கு  உள்ளே  இருந்த  டெட்  பாடி  ஃபிரெஷ்  ஆக  இருப்பது  எப்படி  ? 



சி.பி  ஃபைனல்  கமெண்ட் - வீணை எஸ்  பாலச்சந்தர்  ரசிகர்களைப்பொறுத்தவரை  இது  ஒரு  நல்ல  படம், சராசரி  சினிமா  ரசிகர்களுக்கு  இது  சுமார்  ரக  படம்,  பார்க்கறவங்க  பாருங்க . யூ  ட்யூப்ல  கிடைக்குது 

Wednesday, June 09, 2021

பொம்மை 1964 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 வீணை  எஸ்  பாலச்சந்தர்  தமிழில்  3  படங்கள்  தான்  எடுத்தார்.  மூணுமே  க்ரைம்  த்ரில்லர்கள், எல்லாமே  அதிரி  புதிரி  ஹிட். பெரிய  ஹீரோவை  நம்பாமல்  திரைக்கதையை  நம்பி  எடுக்கப்பட்ட  படங்கள் 


  ஈரோடு  மாவட்டம்  சென்னிமலை  தேவகிரி  தியேட்டரில்  1986  ம்  வருடம்  செகண்ட்  ஷோ  பார்த்த  நினைவு  இருக்கு,  விமர்சனத்துக்காக  யூ  ட்யூப்ல  ஒரு  வாட்டி  பார்த்துட்டேன்


ஹீரோ  பெரிய  தொழில்  அதிபர் .  கம்பெனி  ஓனர் . அவரோட  பார்ட்னர்  தான்  வில்லன். ஹீரோவுக்கு  பார்ட்னர்  மேல  ரொம்ப  நம்பிக்கை . ஆனா  பார்ட்னர்  சிங்கப்பூர்  போய்  இருந்தப்போ   ஒரு  கொலை  பண்ணி   எஸ்  ஆகிட்டதா  ஒரு  தகவல்  வருது.  அது  உண்மையா?னு  விசாரிக்க  சிங்கப்பூர்  போலாம்னு  பிளான்  போடறார்



 அவர்  சிங்கப்பூர்  போய்  விசாரிச்சா  தான்  மாட்டிக்குவோம்னு வில்லன்  ஹீரோவைக்கொலை  பண்ண  பிளான்  போடறான்  ஒரு  சின்ன  பொம்மைல  டைம்பாம்  செட்  பண்ணி   கிஃப்ட்  பார்சல்  மாதிரி  ரெடி  பண்ணி  அவர்  கிட்டே  தந்து  சிங்கப்பூர்ல  ஒரு  நபர்ட்ட  இது  கிஃப்டா  தரனும்னு  சொல்லலாம்னு  பிளான்  போட்டு  தன்  உதவியாளர்களிடம்  கொடுத்து  விடறார்



 அது  டாக்சில  கை  மாறி  மிஸ்  ஆகிடுது.  ஃபிளைட்ல  ஹீரோ  கிளம்பிடறார்.  இவங்க  அந்த  பொம்மையைத்தேடி  ரவுண்ட்  அடிக்கறாங்க . அந்த  பொம்மை  டாக்சி  டிரைவர் ,  பிச்சைக்காரன்,  பணக்கார  வீட்டுப்பெண்  என  பல  கை  மாறி   சுத்திட்டு  இருக்கு 


முதல்  அரை  மணி  நேரத்தில்   இந்த  சம்பவங்கள்  எல்லாம்  நடந்துடுது ,  அடுத்த  ஒரு  மணி  நேரம்  பர பரப்பான  சேசிங்  காட்சிகள் 


 சிங்கப்பூர் போற  ஃபிளைட்  ரிப்பேர்  ஆகி  ரிட்டர்ன்  வருது.  அரை  மணி  நேரம்  கழிச்சு  மறுபடி  கிளம்புது. அதுக்குள்ள  இன்னொரு  பாம்  செட்  பண்ணி  கொண்டு  போய்  கொடுக்கறாங்க 


  இதுக்குப்பின்  என்ன  நடந்தது  என்பதே  திரைக்கதை 


 இவரோட மற்ற  இரு  படங்களில்  யார்  கொலையாளி ?  என்பதை  க்ளைமாக்ஸ்  வரை  சஸ்பென்ஸாக  கொண்டு  போனவர்  இந்த  முறை  சம்பவம்  எப்போ  நடக்கும்?  என்பதை   பர  பரப்பாக  சொல்லி  இருக்கார் 


ஹீரோவா  வழக்கம்  போல   டைரக்டரே  நடிச்சிருக்கார்.  குட் .படம்  பூரா  ஏகப்பட்ட  கேரக்டர்கள். . எல்லாத்தையும்  ஈசியா  டீல்  பண்ணி  இருக்கார் 


 படத்தில்  மொத்தம்    6  பாட்டுக்கள் ,  நீயும்  பொம்மை  நானும்  பொம்மை  நினைச்சுப்பார்த்தா  எல்லாம்  பொம்மை  செம  ஹிட்  பாட்டு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    பொம்மை  ஹீரோ  கைக்கு  போகல,  மிஸ்  ஆகிடுச்சு  என்றதும் அது  பற்றிக்கவலைப்படாம   பொம்மையை  ட்ரேஸ்  அவுட்  பண்ணனும்,  அது  எங்காவது  வெடிச்சா  நாம  மாட்டிக்குவோம்  என  டயலாக்  வருது . அப்போ  வில்லன்  தர  இருந்த  பொம்மை  ஹீரோ  கைக்குப்போய்   வெடிச்சிருந்தா  அப்போ  டவுட்  வராதா?


2   ஹீரோ  போன    ஃபிளைட்   திரும்பி  வந்து  அரை  மணி  நேரம்  கழிச்சு  கிளம்பும்னு  அறிவிக்கறாங்க . அந்த  அரை  மணி  நேரத்துல  ஹீரோ  ஏர்போர்ட்ல  இருந்து  அவர்  கம்பெனிக்கு  வந்துட்டுப்போறார். இதுக்கு  ஏர்போர்ட்  ரூல்ஸ்  ஒத்துக்காதே? 


3  க்ளைமாக்ஸ்ல  போலீஸ்  ஜிப்ல  வில்லன்  க்ரூப்பை  சேஸ்  பண்ணறப்போ  போலீஸ்  கூட  இருக்கற  சாமான்யன்  சொல்ற  ஐடியாப்படி  போலீஸ்  செயல்படுது/ அவரா  முடிவு  எடுக்க  மாட்டாரா? 


4   வில்லன்  கம்பெனில  2  வெவ்வேற  ரூம்ல  2  பேரை  அடைச்சு  வைக்கறான்.  வாய்ல  பிளாஸ்திரி  ஒட்ட  மாட்டாங்களா? 


சபாஷ்  டைரக்டர்


1  தி9ரைக்கதை ,  விறுவிறுப்பான  காட்சிகள்  இதை  எல்லாம்  சிலாகிபதை  விட  முக்கிய  விஷயம்  க்ளைமாக்ஸ்ல  டைரக்டர்  படத்தில்  பணி  ஆற்றிய  அனைத்து  நடிகர்கள் ,  தொழில்  நுட்பக்கலைஞர்கள்   அறிமுகப்படுத்தும்  காட்சி 



 சி.பி  ஃபைனல்  கமெண்ட் -  ரெண்டரை  மணி  நேரம்  ஓடும்  படத்துல்  6  பாட்டை  ஸ்கிப்  பண்ணிட்டா  2  மணி  நேரப்படம்,  இந்தக்கால  ரசிகர்களும்  பார்க்கலாம்.  யூ  ட்யூப்லயே  கிடைக்குது

Tuesday, June 08, 2021

நடு இரவில் 1970 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 spoiler  alert


ஹீரோ ஒரு  கோடீஸ்வரர், இவர்  இளைஞரா  இருந்தப்போ  ஒரு  பிற்படுத்தப்பட்ட  பெண்ணை  காதல்  திருமணம்  செஞ்சதால  அவரோட  அண்ணன்,  தம்பி  உட்பட  பல  சொந்தக்காரங்களால்  கரிச்சுக்கொட்டப்பட்டு  விலக்கி  வைக்கப்படுகிறார் .பிறகு  தன்  சொந்த திறமையாலும்  ,  உழைப்பாலும்  முன்னேறி  பணக்காரர்  ஆகிடறார்.


இப்போ    வெளி  உலகோடு  தொடர்பே  இல்லாத  கைலாசா  மாதிரி  ஒரு  தீவில்  தங்கி  இருக்கார். அங்கே  போலீஸோ தகவல்  தொடர்பு  சாதனங்களோ  எதுவுமே  இல்லை .இவருக்கு  ஒரு  ஃபிரண்ட்  , இவர் ஒரு  டாக்டர் 


  இப்போ  மேலே  சொன்னவை  எல்லாம்  ஃபிளாஸ்பேக்  சீன்களாக  இல்லாமல்  வசனம்  மூலமே  புரிய  வைக்கப்படுது


  படத்தோட  ஓப்பனிங்  சீன்லயெ  கதைக்கு  நேரடியா  வந்துடறாங்க 


 இப்போ  டாக்டர்  ஹீரோவிடம்  ஒரு  உண்மையை  சொல்றார். அதாவது  ஹீரோவுக்கு  பிளட்  கேன்சர் .  அவரது  நாட்கள்  எண்ணப்படுகின்றன. அதனால  உன் சொந்தம் பந்தங்களை  எல்லாம்  வர  வெச்சு  கடைசி  காலத்தை  அவங்களோட  செலவளிங்க்றார்


 ஆனா  ஹீரோவுக்கு  அதில்  உடன்பாடு  இல்லை  அவருக்கு  இன்னும்  அவங்க  மேல  உள்ள  கோபம்  தீரலை.  எப்படியோ  ஒரு  வழியா  ஹீரோவை  சம்மதிக்க  வைக்கறார்



இப்போ  சொந்தக்காரங்களுக்கு  எல்லாம்  லெட்டர்  போகுது . இந்த  மாதிரி  ஹீரோ  மரணத்தின்  விளிம்பில்  இருக்கார். நீங்க  வந்து  இங்கே தங்கி  இருந்தா  உங்களுக்கு  சொத்து  கிடைக்கும்


உடனே  எல்லாரும்  சிட்டு  மாதிரி பறந்து  வந்துடறாங்க . 


 ஹீரோ ,  மனைவி , நண்பர் ,  வேலைக்காரங்க , தோட்டக்காரங்க ,  சொந்தக்காரங்க  ஆக  மொத்தம் 24  பேர்  இப்போ  இந்த  பங்களாவில்  இருக்காங்க 


இந்த  பங்களாவில்  ஒரு  கொலை  நடக்குது.  இது  ஒரு  தொடர் கதைனு  வரிசையா  கொலைகள்  நடக்குது


இப்போ   நமக்கும்,  சொந்தக்காரங்களுக்கும்  எழும்  சந்தேகங்கள்  என்னன்னா


1   இந்த  சொந்தக்காரங்களைப்பழி  வாங்கத்தான்  ஹீரோ  பிளான்  பண்ணி  எல்லாரையும்,  வர  வெச்சு  போட்டுத்தள்ளறார்


2  ஹீரோ  இறந்துட்டா  சொத்தெல்லாம்  டாக்டருக்கே  சேரும். அப்போ  சொந்தக்காரங்க  வாரிசுரிமை  நடத்த  வந்துடக்கூடாதுனு  அவர்தான்  பிளான்  பண்ணி  வர  வெச்சு  கொலை  பண்றார்


3    வந்த  சொந்தக்காரங்கள்ள   யாரோ  ஒருத்தர்தான்  பங்கு  போட  ஆட்கள்  இருக்கக்கூடாதுனு   போட்டுத்தள்ளிட்டு  இருக்கான்

  மேலே  சொன்ன  3  பேர்களில்  யார்  கொலையாளி  என்பதுதான்  படத்தின்  க்ளைமாக்ஸ் 



இதுல  ஹீரோவா  மேஜர்  சுந்தர்ராஜன். இவரோட  ஃபேவரைட்  டயலாக்  ஆன  இங்க்லீஷ்ல  ஒருக்கா  தமிழ்ல  ஒருக்கா  வசனம்  பேசும்  பாணி  இதில்  இல்லாதது  ஏமாற்றமே


டாக்டராக  படத்தின்  இயக்குநரான  வீணை  எஸ்  பாலச்சந்தர் .  சிகரெட்  பிடித்துக்கொண்டே  இவர்  வசனம்  பேசும்  ஸ்டைல்  எல்லாம்  ஓக்கே 


துக்ளக்  சோ  வேலைக்காரராக  ஒரு  டம்மி  ரோல்


  ராகவன்  முக்கியமான  ரோல்,  விழி  ஒளி  இழந்த  மாற்றுத்திறனாளியா  வர்றார்


 எல்லாரும்  நல்லா  பண்ணி  இருக்காங்க 


அந்தக்காலத்தில்  எல்லாம்    ஒரு  ரீலுக்கு ஒரு  பாட்டு  ஃபார்முலாவில்  சினிமா   இருந்தது.  அப்பவே  மிக  தைரியமாக  பாட்டே  இல்லாமல்  எடுத்திருக்காங்க



பண்டாரி  பாய்  , சவுகார்  ஜானகி  போன்ற   அந்தக்கால  கலைஞர்கள்  நடிச்சிருக்காங்க   148  நிமிடங்கள்  ஓடும்  இந்தப்படம்  ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காமல்  இந்தக்கால  ரசிகர்களும்  ரசிக்கும்  வகையில்  எடுக்கப்பட்டிருக்கும்   யூ  ட்யூப்  ல  கிடைக்குது


 அகதா  கிறிஸ்டி  எழுதிய  And Then There Were None  என்ற  நாவலை  தழுவி  எடுகப்பட்ட  படம்


சி  பி  ஃபைனல்  கமெண்ட்  -  தமிழ்  சினிமாவின்  முக்கியமான  க்ரைம்  த்ரில்லர்கள்  லிஸ்ட்  எடுத்தால்  அதில்  வீணை  எஸ்  பாலச்சந்தர்  எடுத்த  படங்கள்  அனைத்தும்  இடம்  பெறும்.,  இந்தப்படம்  அவர்  இயக்கிய  கடைசி  படமாம் .  செம  படம்  மிஸ்  பண்ணிடாதீங்க 

Nadu Iravil.jpg
Poster
Directed byS. Balachander
Produced byS. Balachander
Based onAnd Then There Were None
by Agatha Christie
StarringS. Balachander
Major Sundarrajan
Pandari Bai
Sowcar Janaki
Music bySundaram Balachandar
CinematographyK. V. S. Reddy
Edited byK. Govindasamy
Production
company
S. B. Creations
Distributed byS. B. Creations
Release date
1970
Running time
148 minutes
CountryIndia
LanguageTamil

Monday, June 07, 2021

அதே கண்கள் 1967 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 ஹீரோயினோட அப்பா  கூடப்பிறந்தவங்க  3  பேரு ,  எல்லாரும்  ஒரு  பங்களாவில்  வசித்து  வருகிறார்கள் .முதல்  அண்ணன்  அதாவது  ஹீரோயினோட அப்பா  மைசூர்  போனப்ப  ஒரு  விபத்துல  இறக்கிறார். ஆக்சுவலா  அது  விபத்து  இல்லைனு  பின்னாளில்  தெரிய  வருது 


 படத்தோட  ஓப்பனிங்  சீன்ல   ஹீரோயினோட  சித்தப்பா  தூக்கில்  தொங்கிய  நிலையில்  இருக்கார் .  அதுவும்  தற்கொலை  இல்லை   கொலை அந்தக்கொலையை  நேரில்  பார்த்த  சித்தியையும்  கொலைகாரன் கொலை  பண்ண  ட்ரை  பண்றான், ஆனா  சித்தி  தப்பிடறா . அந்தக்கொலையைப்பார்த்த  அதிர்ச்சில  அவ  சித்தப்பிரமை  அடைஞ்ச  மாதிரி  ஆகிடறா.


போலீஸ்  வருது  ,  விசாரிக்குது.   அடுத்தடுத்து  சித்தி ,  இன்னொரு  சித்தப்பா  கொலை  ஆகறாங்க 


இது  ஒரு  டிராக் , சஸ்பென்ஸ்   டிராக்


  இன்னொரு  டிராக் . காமெடி  டிராக்


  ஹீரோயினை  லவ்  பண்ற  ஹீரோ  வாடகைக்குடி இருக்க  வீடு  தேடி  வர்றார்.  அங்கே  பிரம்மச்ச்சாரிக்கு  வீடு  இல்லைனு  சொல்றாங்க , அதனால  தன்  நண்பனுக்கு  பெண்  வேடம்  போட  வைத்து  தன் மனைவி  என  பொய்  சொல்லி  வீட்டில்  குடி  வர்றார்  ஹீரோ 


ஹவுஸ்  ஓனர்  பெண் வேடத்தில்  இருக்கும்  நண்பனைக்கண்டு  ஜொள்  விடுவது   தனி  காமெடி  டிராக்


ஹீரோ    எப்படி  கொலைகாரனைக்கண்டு  பிடிக்கறார்  என்பதே  மிச்ச  மீதிக்கதை 


 ஹீரோவா  ரவிச்சந்திரன்.  ஊமை  விழிகள்  படத்தின்  வில்லன். லிப்ஸ்டிக்  எல்லாம்  பூசி  ராமராஜனுக்கே  முன்னோடியா  இருக்கார்

ஹீரோவின்  நண்பனா  நாகேஷ்  செம  ஆக்டிங்.  பெண்  வேடத்தில்  செய்யும்  லூட்டிகள்  கலக்கல்  காமெடி 


 3  சித்தப்பாக்களில்  அசோகன்  தான்  கொலைகாரன்  என்பது  போல  காட்சிகளை  சாமார்த்தியமா  நகர்த்திக்கொண்டு  போனாலும் க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  குட்  


  அந்தக்காலத்துலயே  பாடல் காட்சிகளை  படமாக்குவதில்  பிரம்மாண்டம் காட்டி  இருக்காங்க 





நச்  டயலாக்ஸ்


1    நான்  குக்கிங்க்  எக்ஸ்க்யூட்டிவ்  ஆஃபீசரா  இருக்கேன்


  ஓஹோ , சமையல்காரனா?


2   மேடம், வீடு  காலினு  வெளில  போர்டு  இருக்கு ,  உள்ளே  வந்தா  நீங்க  இருக்கீங்க்ளே?


 அதாவது  மேலே  காலி 


 ஓ. உங்களுக்கு  மேல்  மாடி  காலியா? 


3   உங்களுக்கு  எத்தனை  குழந்தைங்க ?


 விட்டா  எனக்கு  எத்தனை  ஒயிஃப்ங்கனு கேட்பீங்க  போலயே?



4    வீட்ல  பெரியவங்க  யாராவது  இருந்தா  கூப்பிடுங்க 


 ஏன் ? என்னைப்பார்த்தா  பெரியவங்க  மாதிரி  தெரியலையா?


  ச்சே  ச்சே  சின்ன  பாப்பா  மாதிரி  இருக்கீங்க 


5  என்னது ?    தண்டர்  கேக்கா?அப்டீன்னா?


 இடி  ஆப்பம்


6   இந்தாங்க  லட்டு ,  உங்க  சிஸ்டரைக்கொஞ்சம்  வரச்சொல்லுங்க 


 இந்த    ஒரு  லட்டைக்கொடுத்துட்டா?  அவ்ளோ  சீப்பாவா?




பாடல்கள் 


1   பூம்  பூ  மாட்டுக்காரன்  தெருவில்  வந்தாண்டி 


2 கண்ணுக்குத்தெரியாதா?  பெண்ணுக்குப்புரியாதா? 


3   ஓ  ஓ  எத்தனை  அழகு  20  வயதினிலே? 

4  வா  அருகில்  வா  தா  உயிரைத்தா 


5  பொம்பளை  ஒருத்தி  இருந்தாளாம்

6   என்னென்னெவோ  நான் நினைத்தேன்  (  இந்த  ஒரு  பாட்டுதான்  சுமார்  ரகம், மற்றவை  அனைத்தும்  செம  ஹிட் )



லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  கொலைகாரன்  ஹீரோயினைக்கொலை  பண்ண  பல  சான்ஸ்  கிடைச்சும்  அதை  எல்லாம்  யூஸ்  பண்ணாம  பர்த் டே  பார்ட்டியில்  அவ்ளோ  கூட்டத்தில்  குறி  மிஸ்  பண்ணி  சுடுவது  காமெடி .  ஹீரோயின்  தனிமையில்  இருக்கும்போதே  சுடலாமே? 


2  கொலைகாரனைக்கண்டுபிடிக்கறேன்னு  சவால்  விடும்  ஹீரோ  லவ்  பண்ற  வேலையைத்தான்  மெயின் ஜாப்பா  பண்ணிட்டு  இருக்காரு 


3  ஜமீன்  வாரசுகள்  5  பேரைக்கொலை  பண்ண  நினைக்கும்  கொலைகாரன்  அவங்க  எல்லாரும்  ஒரே  கார்ல  டிராவல்  பண்றப்ப  போட்டுத்தள்ளுவதுதான்  ஈசி , விபத்துனு  ஃபிரேம்  பண்ணி  இருக்கலாம்.  அதை  விட்டுட்டு  ஒவ்வொரு  ஆளா  கொலை  பண்ணுவது  காதில்  பூச்சுற்றல் 


4     அதுவரை  நடந்த  கொலைகளை  எல்லாம்  விபத்து  மாதிரி  அல்லது  தற்கொலை  மாதிரி  ஃபிரேம்  பண்ணூம்  கொலைகாரன்  ஹீரோயினைக்கொலை  செய்யும்போது  மட்டும்  அந்த  ஃபார்மெட்டில்  செய்யாமல்  கொலை  மாதிரி  தெரிஞ்சாலும்  பரவாயில்லை  என  துப்பாக்கியில்  சுட  முயற்சிப்பது  ஏன்? 


  சி.பி  கமெண்ட்  -   அந்தக்கால  படமாக  இருந்தாலும்  ஜாலி  எண்ட்டர்டெய்ன்மெண்ட்  +  க்ரைம்  த்ரில்லர்  வரிசைல  இன்றைய  ரசிகர்களும்  பார்த்து  ரசிக்கும்  அளவில்  படம் இருக்கு .  செம  ஹிட்  பாட்டு

 படம்  அமேசான்  பிரைம்ல  இருக்கு 

DILEMMA SOME ADULTS STORIES - 2021 - சினிமா விமர்சனம்

 3  நண்பர்கள்  அவங்களுக்கு  இடையேயான  நட்பு ,  கோப தாபங்கள் ,  உரையாடல்கள்  அப்டி  ஸ்லோவா  போய்க்கிட்டு  இருக்கும்  திரைக்கதை ஒரு  நண்பனின்  மனைவியை  இன்னொரு  நண்பன்   கள்ளத்தொடர்பு  வெச்சிருக்கான்  என்பது  தெரிந்தபின்  சூடு  பிடிக்கிறது . இறுதியில்  என்ன  ஆச்சு  என்பதை   திரையில்  காண்க 


மொத்தமே  நாலே  கேரக்டர்கள்.  100  நிமிடங்கள்  தான்  படம். ஒயிட்  அண்ட்  பிளாக்கில்  எடுக்கப்பட்ட  படம்  என்பது  பிளஸ்


நடிப்புன்னு  பார்த்தா  ஹீரோவா  நடிச்சவர்  பாஸ்  மார்க்  என்றால்  மீதி  2  நண்பர்கள்  நடிப்பில்  ,  வசன  உச்சரிப்பில்  பின்னிப்பெடல்  எடுத்துட்டாங்க 


ஹீரோ  கிட்டே  பணம்  இருக்கு ,ரூம்  மேட்டான  நண்பன்  வந்தா  காசு  கேட்பான்னு  கைவசம்  இருந்த  பணத்தை  ஒளிச்சு  வைக்கும்  சீனும்  சரி . சரக்கு  அடிக  100  ரூபா  கேட்டு  போராடும்  நண்பனின்  நடிப்பும்  சரி  செம 


மிட்  நைட் ல  ஹீரோ  பேக்கை  செக்  பண்ணி  பணம் இருப்பதைக்கண்டு பிடிக்கும்  நண்பன்  அப்பவே  ஹீரோவை  எழுப்பி  நியாயம்  கேட்கும்  சீன்  எல்லாம்  அதகளம்


நண்பனின்  மனைவி  ஹீரோவுக்கு  மிஸ்டு  கால்  கொடுக்கும்போது , அதைப்பார்த்த  நண்பன்  இவ  எதுக்கு  உனக்கு  மிஸ்டு  கால்  கொடுக்கறா?  என  கேட்பதும்     இப்போ  அவளுக்கு  கால்  பண்ணி  பேசு ,   ஸ்பீக்கர்  ஆன்  பண்ணு  என  கேட்பதும், அதை  ஹீரோ  சமாளிக்கும்  விதமும்  குட் 



வழக்கமாக  இது  போன்ற  கள்ளக்காதல்  கதையில்  குறிப்பிட்ட  இருவரும்  உறவு  கொள்வதை  புருசன்  நேரில்  பார்த்து  காண்டு  ஆகி  கொலை  செய்வதுதான்  நார்மலா  எல்லாப்படத்திலும்  நாம்  பார்க்கும்  சீன்


  ஆனா  அந்த  லேடி  கேரக்டரை  கெஸ்ட்  ரோல்  மாதிரி  ரெண்டு  சீன்ல  மட்டும்   காட்டிட்டு    வெறும்  கான் வோ  மூலமே  திரைக்கதையை  நகர்த்துவது  அபாரம்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் ,  இயக்குநரிடம்  சில  ஆலோசனைகள் 


1   இந்தப்படம்  100  நிமிடங்கள்  ஓடுது. இதை  ஷார்ப்பாக  1  மணி  நேரப்படமாக  எடுத்திருக்கலாம்.  ஹிரோவும்  ,நண்பர்களும்  பேசும்  கெட்ட வார்த்தை  காட்சிகள்  மட்டும்  87  தடவை  வருது . அதில்  ஒரே  வார்த்தையை  60  டைம்  பேசறாங்க .  என்னதான்  யதார்த்தமாக  எடுப்பது  என்றாலும்  இப்படியா?


2    குடிகார  நண்பன்  வீட்டுக்கதவை  திறக்கச்சொல்லி  ரகளை  பண்ணும்போது  பக்கத்து  வீட்டில்  இருந்து  வெளி  வரும்  வயதான  தம்பதி  போடும்  வாக்குவாதம்  செயற்கை,  சொன்ன  டயலாக்கையெ  ரிப்பீட்  மோடில்  வைப்பதை  தவிர்த்திருக்கலாம்


3   நண்பனின்  மனைவி   வீட்டுக்கே  போய்  ஹீரோ ஜாலியாக  இருந்ததாக  வசனம்  வருது   அக்கம்  பக்கம்    வீடுகளில்  பார்க்க  மாட்டாங்களா?  அவங்க  புருசனிடம்  போட்டுக்கொடுக்க மாட்டாங்களா?  அது  ரிஸ்க்  ஆச்செ?


4     ஹீரோவின்  நண்பன்  காலை  9  மணி க்கு  ட்யூட்டிக்கு  போய்ட்டு  மாலை 6  மணிக்கு  தான்  வீட்டுக்கு  வர்றான்.  ஹீரோ  இந்த  கேப்ல  வீட்டுக்குப்போவதுதான்  சேஃப்டி . ஆனா  நண்பனை   ஹீரோ  ரூமுக்கு  வரச்சொல்லி  சரக்கு  வாங்கி  ஊத்திக்கொடுத்து  அவன்  மட்டை   ஆனதும்  ஹீரோ  நண்பனின்  வீட்டுக்குப்போய்  மனைவியை  சந்திப்பது  எல்லாம்  செம  ரிஸ்க் .  ஹீரோவும்தானே  குடிச்சிருக்கான்?>  ட்ரங்கக்கன்  டிரைவிங்  கேசில்  மாட்டிக்க  மாட்டானா? 


5   நண்பன்,  ஹீரோ  வாக்குவாதத்தில்  இப்பவே  போய்  மனைவியை

கொலை  பண்றேன்  என  ஆவேசமாக  சொல்பவன்  பின்  சிடி  யில்  கில்மாப்படம்  பார்த்துட்டு  சாவகாசமாக  இருப்பது  அயர்ச்சியைத்தருகிறது


6  ஹீரோ  பல்  துலக்குவது , வாய்  கொப்பளிப்பது , தாடியை  ட்ரிம்  பண்ணுவது ,  யோசிப்பது  இந்த  சீன்களை  எல்லாம்  கட்  பண்ணாலே  30  நிமிசம்  மிச்சமாகும்


7   ஒரு  சம்பவத்தை  யதார்த்தமாக  அப்படியே  நேரில்  பார்ப்பது  போல  கொடுப்பதில்  வெற்றி , ஆனா  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என  எதுவும்  இல்லை 


8    மனைவிக்கு  புதுசா  ஒரு  கள்ளக்காதலன்  கிடைச்ட்டான் .  அதனால வேணும்னே  பிளான்  பண்ணி  கணவன்   -  கள்ளக்காதலன்  மோதலை  உருவாக்குகிறாள்  என்ற  திருப்பத்தை  எதிர்பார்த்தேன்



  நச்  வசனங்கள் 


1  !@#$%^&*()_)(*&^%%$##@!


2  !@#$%^&*()_)(*&^%%$##@!


 (  கெட்ட  வார்த்தைகள்  தான் )

சி.பி  ஃபைனல்  கமெண்ட் -  இது  பெண்களைக்கவர்வது  சிரமம், தர  லோக்கல்  சி  செண்ட்டர்  ரசிகர்களுக்கான  படம் , குறிப்பா  சென்னைவாசிகள்  ரசிக்கலாம். மூவிவுட்  ஓடிடி தளத்தில்  இது  வெளியாகி உள்ளது .  கேபிள்  சங்கர்  ,  ரமேஷ்  இருவரும்  இணைந்து  உருவாக்கி  இருக்கும்  இந்த  ஓ டி டி  தளம்  முதல்  3  மாதம்  இலவசம்  தான்.


 https://play.google.com/store/apps/details?id=in.onandgo.moviewud

www.moviewud.in


Sunday, June 06, 2021

யார் நீ ( 1966) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 ஹீரோ  ஒரு  டாக்டர் , அவருக்கு  ஒரு  அம்மா , பங்களா வில்  வேற  யாரும்  இல்லை , ஹீரோக்கு சாப்பிடக்கூட  நேரம்  இல்லை.  ஹாஸ்பிடலை  விட்டு  வீட்டுக்கு  சாப்பிட  வந்தா  உடனே  ஹாஸ்பிடல்ல  இருந்து  கால்  வரும், உடனே  போய்டுவார்.இவரோட  வாழ்க்கைல  4  வித்தியாசமான  சம்பவங்கள்  நடக்குது 


சம்பவம் 1  -  ஹீரோ ஒரு  ராத்திரி  நேரத்துல  மழை  நாளில்  காரில்  போய்க்கிட்டு இருக்காரு .  அப்போ நடு  ரோட்ல  அமைச்சர்  ஜெயக்குமார்  மாதிரி   மெயின்  ரோடு  க்யூன்  மாதிரி  ஒரு பொண்ணு  நிக்குது, இவரு  காரை  நிறுத்தி  அந்தப்பொண்ணுக்கு லிஃப்ட்  தர்றாரு .  அந்தப்பொண்ணு  சுடுகாட்டு  வாசலில்  காரை  நிறுத்தச்சொல்லி  இறங்கிக்குது.  சுடுகாட்டு  கேட்  ஆட்டோமெடிக்கா  ஓப்பன்  ஆக  அது  உள்ளே  போய்  மறைஞ்சிடுது , ஹீரோக்கு  அல்லு  இல்ல .


சம்பவம்  2   ஹீரோக்கு  ஒரு  ஃபோன்  வருது . பெண்ணின்  குரல். அந்தப்பெண்ணின்  வழிகாட்டல்  படி  அந்த  பங்களாவுக்குப்போனா  அங்கே அந்தப்பொண்ணு  டெட்பாடியா  கிடக்குது. அது  வேற  யாருமில்ல . அந்த சுடுகாட்டுப்பொண்ணுதான். அப்போ  போலீஸ்  கேங்  அங்கே  வருது . இந்த  மாதிரி  சம்பவம்  அடிக்கடி  இங்கே நடக்கறதாவும் நாங்க  தகவல்  தெரிஞ்சு  ஸ்பாட்டுக்கு  வந்தா  டெட்  பாடி  இங்கே  இருக்கறதில்லை  எனவும்  சொல்லுது,  ஹீரோ  பார்த்த  டெட் பாடியை  இப்போக்காணோம்


சம்பவம் -3   ஹீரோக்கு  ஒரு  காதலி  இருக்கா .  திடீர்னு  ஒரு  விபத்துல  இறந்து  போறா ,அந்த  சோகத்துல  ஹீரோ  வேலைல  கவனம்  இல்லாம  இருந்தப்போ  அம்மாவோட  வற்புறுததலால அம்மாவோட  சொந்தத்துல்  இருக்கும்  ஒரு  பொண்ணை  மேரெஜ்  பண்ணிக்கறார். அவ  முகத்தைக்கூட  பாக்கலை , சாந்தி  முகூர்த்த  அறைல  முதன்  முதலா  அவ  முகத்தை  பார்த்ததும்  ஜெர்க்  ஆகறார்.  சம்பவம்  1  , சம்பவம் 2  ல  அவர்  சுடுகாட்டு    லேடியா  ,  டெட்பாடியா  பார்த்தாரே   அந்த  லேடிதான்  இந்த  புது  மனைவி 


சம்பவம்  4  .  ஹீரோ  தன்  மனைவியை  தொடக்கூட  இல்லை .  பேய்  , பிசாசுனு  நம்பறார். .  போன  ஜென்மத்துல  அவங்க  2  பேரும்  காதலிச்சதாவும் ஒரு  விபத்துல  அந்தப்பொண்ணு  இறந்துட்டதாவும்  இப்போ  ஹீரோவும்  தற்கொலை  பண்ணிக்கிட்டா   2  ஆத்மாவும்  ஒண்ணு  சேரலம்னும்  அந்த  மனைவி  சொல்றாப்டி 


 ஹாரர்  த்ரில்லர்  மாதிரி  போற  இந்தக்கதை  கடைசி ல  எப்படி  க்ரைம்  த்ரில்லரா  மாறுது  என்பதுதான்  மிச்ச  மீதிக்கதை 


 ஹீரோவா  ஜெய்  சங்கர் .  ஆள்  ஜம்முனு  இருக்கார் .   டிரஸ்ஸிங்  எல்லாம்  செம ,  எம்ஜியாரையே  பொறாமை  கொள்ள  வைத்தவர்னா  சும்மாவா ? க்ளைமாக்ஸில்  ஒரு ஃபைட்  சீன்  இருக்கு குட்  ஆக்சன் 


 ஹீரோயினா ,  மாண்புமிகு  இதய  தெய்வம்  புரட்சித்தலைவி  ஜெ  ஜெ  . பேயாக  டெட் பாடியாக  மனைவியாக  3  வேவ்வேறு  நிலைல  அசத்தல்  நடிப்பு  (  விமர்சனத்துக்கு  சம்பந்தம்  இல்லாத  தகவல்  , இந்தப்பட  ஷூட்டிங்க் ல  இருந்துதான்  ஜெய் - ஜெ ஜெ  நெருக்கம்  அதிகம்  ஆனதாவும், எம்ஜியார்  செம  காண்ட்  ஆனதாகவும்  அதிரை  புகாரி  தகவல் 


மனோரமா  வேலைக்காரியா  காமெடி  டிராக்ல  வர்றாப்டி 


நச்  வசனங்கள் 


1  அதிர்ஷ்டம்  நமக்காக   காத்திருக்கலாம் ,  ஆனா  நம்மைப்பார்க்க  நம்மைத்தேடி  வந்தவங்களை   நாம  காக்க  வைக்கக்கூடாது 


2   என்னை  விட்டுட்டு  வேற ஒருத்தியை  மேரேஜ்  பண்ணி பண்ணிக்கப்போறீங்களா? 


 சரி  ,  உன்னை  மேரேஜ்  பண்ணிக்கறேன், வேற  ஒருத்தியை லவ்  பண்ணிக்கறேன் 


3   அய்யா  ஏதாவது  வேலை  இருந்தா  போட்டுக்குடுங்க 



 ஒயிஃப்  வேலை  காலியா  இருக்கு   செய்யறியா?


 வாட்?


 டாக்டருக்கு , நர்சுக்கு  ஹெல்ப் பண்றா மிட்  ஒயிஃப்  வேலை 



4  பதில்  பேசாம  பாதிலயே போனா  பாதி  சம்மதம்னு  அர்த்தம் 


5   வாழ்க்கைல  சிலர்   எதிர்காலத்தைப்பற்றியே  நினைச்சுட்டு  இருப்பாங்க , சிலர்   கடந்த  கால  வாழ்க்கையைப்பற்றி  நினைச்ட்டு  இருப்பாங்க 



ஒயிட்  அண்ட்  பிளாக்  படம்  தான்   6  பாட்டு  இருக்கு அதுல  நானே  வருவேன்னு  ஒரு  பாட்டு  3  டைம்  வரும் .  எல்லா  பாட்டையும்  ஓட  விட்டு  பார்த்தா   போதும் . மொத்த  ட்யூரேசன்  2.36  மணி  நேரம்  6  பாட்டு  ,  மனோரமா  காமெடி  டிராக் ,  க்ளைமாக்ஸ்  ஃபைட்  இதை  எல்லாம்   ஓட  விட்டு  பார்த்தா  ஒண்ணே  முக்கால்  மணி  நேரப்படம்  தான் .  யூ  ட்யூப்  ல   அவெய்லபிள் 


சி.பி  கமெண்ட் -  க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  ஹாரர்  த்ரில்லர்  ரசிகர்கள்  எல்லாருமே  பார்க்கலாம், .  ரேட்டிங்  2.75  / 5 

Friday, June 04, 2021

COMPLIANCE 2012 -சினிமா விமர்சனம் ( த்ரில்லர் ) 18+

ஃபாஸ்ட்  ஃபுட்  கடைல  ஹீரோயின்  ஒர்க்  பண்றா. அந்த  கடைல  மேனேஜர்  ஒரு லேடி .ஒரு  நாள்  எல்லாரும்  வேலை  செஞ்சுக்கிட்டே  பேசிக்கிட்டு  இருக்காங்க . அப்போ  லேடி  மேனேஜருக்கு ஒரு  ஃபோன்  கால்  வருது. பேசுனவன்  அந்த  ஃபாஸ்ட்  ஃபுட்  கடை  ரீஜனல்  மேனேஜரோட  ஃபிரண்டு  எனவும் , தான்  ஒரு போலீஸ்  ஆஃபீசர்னும்  சொல்றான்


அந்த கடைக்கு  வந்த  ஒரு கஸ்டமர்  ஹீரோயின்  மேல  புகார்  கொடுத்திருக்கான்.  ஏதோ  பணம்  திருடு  போய்டுச்சு, அதை  செக் பண்ணனும்  , கண்டு  பிடிக்கனும்,   அப்டிங்கறான்


ஃபோன்லயே நம்ம  ஜி  மாநில  சி எம் களுக்கு  இன்ஸ்ட்ரக்சன்  கொடுக்கற  மாதிரி  அவன்  மேனேஜருக்கு  சில  இன்ஸ்ட்ரக்சன்  எல்லாம்  தர்றான்


 அந்த  லேடி  மேனேஜர்  மம்தா பேனர்ஜி மாதிரி  ஏதாவது  எதிர்த்துப்பேசுவாங்கனு   பார்த்தா  ஓபிஎஸ்  மாதிரி  பம்மிக்கிட்டே  அவன்  சொல்றபடி  கேட்கறா


 ஹீரொயினை  செக்கப்  பண்றா ,  ஹேண்ட் பேக்கை  ஓப்பன்  பண்ணிப்பார்க்கறா.  எதுவும்  சிக்கலை. 


 அதுக்குள்ளே  ஃபாஸ்ட்  ஃபுட்  கடைல  நிறைய  கஸ்டமர்ஸ்  வந்துடறதல  மேனேஜர்  அவர்  வேலைல  பிசி  ஆகிடறார். ஹீரோயினை  வேற  ஒரு  ஆள்  கிட்டே  ஹேண்ட்  ஓவர்  பண்ணீடறார்.


இப்போ  அந்த  ஆளுக்கு  வர்ற  இன்ஸ்ட்ரக்சன்  படி  ஹீரோயினை   எல்லா  டிரசையும்  ரிமுவ்  பண்ணி  செக் பண்ணச்சொல்றான்.

ஹிரோயின்  அதுக்கு  எதிர்ப்பு  தெரிவிக்கறா



இதுக்குப்பிறகு  நடக்கும்  திடுக்கிடும்  திருப்பங்கள்  தான்  கதை 


பெண்களுக்கு  எதிராக  நடக்கும்கொடுமைகளை  அவருக்கு  இழைக்கபடும்  அநீதிகளைப்பற்றி படம் பேசுது


 இது  உண்மையில்  நடந்த  சமபவமாம்,  இது  போல  70  சம்பவங்கள் ஒரே  வருடத்தில்  நடந்ததா  க்ளைமாக்ஸ்ல   போடறாங்க 


படம்  ரொம்ப  ஸ்லோதான். கரெக்டா  ஒன்றரை  மணி  நேரம்  ஓடுது  , அமேசான்  பிரைம்ல  கிடைக்குது.  அடலட் கண்ட்டெண்ட்  இருப்பதால்  ஃபேமிலியோட  பார்க்க  முடியாது


ஹீரோயினா  நடிச்சவர்   நல்ல  நடிப்பு , இந்தப்படத்தை  தமிழ்ல  ரீமேக் பண்ணுனா  எடுபடும். ஏன்னா  தமிழ்நாட்டில்  பெண்ணை  மானபங்கப்படுத்துதல்  ஒரு  சென்சேஷனல் மேட்டர்.  அதையே  ஃபாரினல  பார்க்கும்போது  நமக்கு பெரிய  பதட்டம்  வர்லை . அங்கெல்லாம்  இது  சகஜம்  தானே  அப்டிங்கற  எண்ணம்  வருது


  லேடி  மேனேஜரா  நடிச்சவர்  கச்சிதம்.  வில்லன்  மிரட்டி  இருக்கார்



சி.பி  ஃபைனல்  கமெண்ட் -  பரபரப்பான  , விறுவிறுப்பான  த்ரில்லர்  விரும்பிகளுக்கு  இது  செட்  ஆகாது. ஸ்லோவா  போனாலும் பரவால்லைனு  நினைக்கறவங்க  பார்க்கலாம்., இது பாக்ஸ்  ஆஃபீசில்  592  மில்லியன்  டாலர்  வசூலை  குவிச்சிருக்கு. இது  ஒரு  லோ  பட்ஜெட் படம். ஒரே  ஒரு  ரெஸ்ட்டாரண்ட்ல முழுப்படமும். மொத்த  கேரக்டர்களே  7  பேர்தான்