Wednesday, October 21, 2020

UNARU (1984) -மலையாளம்- சினிமா விமர்சனம் ( எ மணிரத்னம் ஃபிலிம்)

 



மணிரத்னம்  இயக்கிய  முதல்  படமான   பல்லவி அனுபல்லவி சிறந்த  திரைக்கதைக்கான  விருது  வாங்கியதும்  கேரளாவைத்தேர்ந்த  திரு  ஜான்  மலையாளத்தில்   ஒரு படம்  இயக்கக்கேட்டுக்கொண்டார்.  1982ல்  ரிலீஸ்  மெகா ஹிட்டான ஈநாடு மலையாளப்பட தயாரிப்பாளர் இவர் ஆனா திவ்யா   என்ற டைட்டிலில்  ஒரு காதல்  கதையை  ரெடி பண்ணி  வெச்சிருந்ததால்  மலையாளப்பட வாய்ப்பை  ஏற்க  தயங்கினார். ( அதுதான் பின்னாளில்  மவுனராகம்.) ஆனால்  அவரை  சம்மதிக்க வைத்து  ஒரு கம்யூனிசம்  பேசும்  பொலிட்டிக்கல்  டிராமாவாக  படம்  எடுக்க  முன் வந்தார் 


1984 ல் ரிலீஸ்  ஆன கொம்பேறி மூக்கன் என்ற  படத்தில்  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் எனும் சூப்பர்  ஹிட் பாடல்   இளையாராஜா  இசை   அமைத்தாரே  அதே  மெட்டில்  அப்படியே இந்தப்படத்திலும்  இளையராஜா  மெட்டமைத்திருப்பார்  ஒரு பாடலுக்கு 


ஹீரோ   வேலை  தேடி வர்றார். தொழிற்சங்கம் ல மெம்பரா  இருந்தாதான் இங்கே வேலைனு சொல்றாங்க . அந்த  காலகட்டத்துல கேரளாவில் தொழிற்சங்கம்  2  பிரிவுக்ளாக  இயங்கி வந்தது.  அந்த 2 ல்  ஏதோ ஒன்றில் மெம்பராக  இருந்தால்  தான் வேலை  கிடைக்கும்


ப்ல  பக்கம்  போராடியும்  ஹீரோவுக்கு வேலை  கிடைக்கலை . 5000  ரூபா  பணம்  கேட்கறாங்க .  பவுன் விலையோடு ஒப்பிடும்போது இது 1 லட்சம் ரூபாய்க்கு சமம் , ஹீரோ  தனக்குத்தெரிந்தவர்களிடம்  முறையிட   சிலர்  ஒண்ணு  கூடி  தனியா  ஒரு சங்கம்  ஆரம்பிக்கறாங்க 


அந்த  சங்கத்துக்கு  ஒரு தலைவர்  தேர்ந்தெடுக்கப்படறார். அவர்  ஜட்ஜ் ஐய்யா குமாரசாமி மாதிரி  பணத்துக்கு விலை போகிறார். பணத்தை வாங்கிக்கிட்டு தொழிலாளர்களுக்கு எதிரா  நடந்துக்கறார். இது தெரியாத  ஹீரோ தலைவன் மேல் ரொம்ப மரியாதை வெச்சிருக்கார் ( பின்னாளில்  இதே கேரக்டரை  மணிரத்னம்  தனது  பகல்  நிலவு படத்தில் அப்பாவியாக ஏமாறும் நாயகனாக முரளியையும், வஞ்சக  தலைவனாக சத்யராஜையும் படைத்தார் )


இந்த  கம்யூனிச  புரட்சி   போராட்ட்டங்கள்  ஒரு   பக்கம்  போய்க்கிட்டு இருக்க ஹீரோ ஒரு பெண்ணை லவ்வறார். சக  தொழிலாளியின் தங்கை. ஆனா  எப்போப்பாரு போராட்டம்,அடிதடி , சண்டை   என இருக்கும் ஹீரோவுக்கு பொண்ணு தர  அவருக்கு விருப்ப்ம் இல்லை 


இதுக்குப்பின் என்ன ஆச்சு?  என்பதை  யூ ட்யூப்பில் கண்டு மகிழ்க 



ஹீரொவா மோகன் லால் . ஹீரோவா  படத்தில் வராம கதையின் நாயகனா  வந்திருப்பார். திரைக்கதை  இவரைச்சுற்றி வராது. அண்டர் ப்ளே ஆக்டிங்


 ஹீரோயினாக சபீதா  ஆனந்த். இவர்  ஒரு பாவமான  முகத்துக்கு  சொந்தக்காரர் . பொதுவா  நாயகிகளைப்பார்த்தா  நமக்கு சைட் அடிக்கும் ஆசை வரும், ஆனா இவரைப்பார்த்தா  மட்டும்  பரிதாபமா  இருக்கும் , ஏன்னு தெரியல 


படம் பூரா  யாராவது ஏதாவது பேசிக்கிட்டே  இருக்காங்க , லியாகத் அலிகான் கூட இவ்ளோ வசனம் எழுதலை


இது  பெண்களுக்குப்பிடிப்பது மிக சிரமம், மணிரத்னம்  ரசிகர்கள்  அவரது  வழக்கமான  பாணி  படத்தை  எதிர்பார்த்து ஏமாற வேண்டாம், மழை , குதிரை , ரயில்  எல்லாம்  இதில் கிடையாது 


சி.பி ஃபைனல் கமெண்ட் - . இளையராஜாவின் பின்னணி  இசை  படத்துக்கு பிளஸ்  தான்  என்றாலும் மணிரத்ன மேஜிக் இல்லாதது  ஏமாற்றம்.  இந்தப்படத்தை  அந்தக்கால  வாகை சந்திரசேகர் , விஜயகாந்த்  வகையறாக்களை   வைத்து  தமிழில்  எடுத்திருந்தால்  சுமாரா  போய் இருக்கும்,  ஆனா மலையாளத்தில் இது ஃபெய்லியர் படம் , ரேட்டிங்  2 / 5 


Unaru
Unaru poster.jpg
Theatrical release poster
Directed byMani Ratnam
Produced byN. G. John
Written byT. Damodaran
StarringMohanlal
Sukumaran
Ratheesh
Sabitha Anand
Music byIlaiyaraaja
CinematographyRamachandra Babu
Edited byB. Lenin
Production
company
Geo Movie Production
Release date
  • 14 April 1984
Running time
150 minutes[1]
CountryIndia
LanguageMalayalam

Tuesday, October 20, 2020

9 - NINE - (2019) - (மலையாளம்) சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் )

 


9 மலையாளம்)   சினிமா விமர்சனம்  ( சைக்கலாஜிக்கல்  த்ரில்லர் )

 

இந்தப்பட  ப்ரமோஷன்லயும் சரி , விளம்பரங்கள் , ட்ரெய்லர்லயும்  சரி , ஒரு சயின்ஸ்  ஃபிக்சன்  த்ரில்லர்  மாதிரிதான்  ப்ரமோட் பண்ணாங்க . விமர்சனங்களை  மேலோட்டமா  படிச்ட்டு  எனக்குப்பிடிக்காததால்  இதை  தியேட்டர்ல  பார்க்காம  விட்டுட்டேன். பிறகு ஒரு நண்பரின் மூலமாதான்  இது சயின்ஸ்  ஃபிக்சன்  போர்வைல  வந்த  சைக்கோ  த்ரில்லர்னு  தெரிய  வந்தது

 

படத்தோட  விமர்சனத்துக்குள்ளே  போகும்  முன் இதை  எப்படி  ப்ரமோட் பண்ணாங்க, அல்லது  விமர்சனங்கள்ல  கதையோட  ஒன்லைனை  எப்படி  சொன்னாங்கன்னு பார்த்துடுவோம்

 

ஹீரோ  ஒரு வான இயல் ஆராய்ச்சியாளர். வானத்துல  ஒரு எரிநட்சத்திரம் கிராஸ்  ஆகுது . அதன் பக்க  விளைவுகளா   பூமியில் 9 நாட்களுக்கு  எந்தவித  எல்க்ட்ரிசிட்டியும்  இயங்காது , அலை பேசி  சிக்னல் கிடைக்காது, கரண்ட்  இருக்காது . எலக்ட்ரானிக்  சாதனங்கள்  இயங்காது , அவ்ளோ ஏன்  வாட்ச்  கூட ஓடாது .

 

கொரோனா  லாக்டவுன்   சமயத்துல  நம்மாளுங்க  வெளில  எங்கேயும் போகாம  வீட்டுக்குள்ளேயே  டைம் பாஸ்  பண்ண  முடிஞ்சதுன்னா  அதுக்கு  முக்கியமான  காரணங்கள்  2.   ஒண்ணு  டி வி  பார்க்கலாம், இன்னொண்ணு  நெட்  யூஸ்  பண்ணி  லேப்டாப்ல  ஓ டி டி ல படம் பார்க்கலாம். ஆனா   இப்போ  நிலைமை  என்னான்னா  டிவி , நெட் , செல் ஃபோன்  எதுவும்  9 நாட்களுக்கு  இல்லை என்பதால்  எப்படி தான்  டைம் பாஸ்  பண்ணுவாங்கனு  தெரில

 

 இப்படிப்பட்ட  சூழல்ல  ஹீரோவோட  ஹையர்  ஆஃபீசர்  கூப்பிட்டு  ஹிமாச்சல்  பிரதேசம்  போ.,  அங்கே  என் பங்களா  இருக்கு அங்கே  9 நாட்கள்  தங்கி  ஆராய்ச்சி பண்ணி  ரிசல்ட் டை  கொண்டு வா...  அதன்படி  ஹீரோ  அங்கே  பயணப்படறார். அந்த  9 நாட்களை  எப்படி  கடந்தார்  என்பதே  கதை

 

 இதுதான்  நான் படிச்ச  விஷயம்.  இதைப்படிச்சதும் எனக்கு பெருசா  ஆர்வம் இல்லை , ஏன்னா  பிருத்விராஜ் படம்னா  நடிப்பு , திரைக்கதை  ல வெரைட்டி இருக்கும், இதுல  என்னத்த  சொல்லிடப்போறாங்க , சின்னப்பசங்க  மாயாஜாலக்கதை  மாதிரி  இல்லைன்னா ஹாரிபாட்டர்  கதை  மாதிரி  இருக்கும்ப்னு   அசால்ல்டா  விட்டுட்டேன்

 

ஆக்சுவலா  கதையே  வேற.. மேலே  சொன்னதெல்;லாம்  ஓப்பனிங்க்ல  கரெக்ட்டீட்டெய்லா  பார்ப்போம்

 

 ஹீரோவுக்கு  ஒரு பையன், ஹீரோவோட  மனைவி  இல்லை , இறந்துட்டாங்க. அம்மா இல்லாததால  அப்பாவின் கண்காணிப்பில் மகன்  வளர்றான். என்னதான்  தங்கம்  தங்கமா  பார்த்துக்கிட்டாலும்  ஒரு அம்மாவின் அரவணைப்பில்  வளரும் பையனுக்கும்  அப்பாவின்  கண்காணிப்பில்  வளர்பவப்னுக்கும்  வித்தியாசம்  உண்டு

 

 ஆஃபீஸ்  டென்சன் ,  மேலிட பிர்சர்னு 1008  பிரச்சனைகள்  ஆண்களுக்கு  இருக்கும்,  தன்னோட முழுமையான அன்பை  குழந்தையிடம்  காட்ட  முடியாது , டைமும்  இருக்காது

 

இது  போக  இன்னொரு பிரச்சனையும்  இருக்கு , மனைவி  வீட்டு  சொந்தங்கள்  அந்த  மகனை  கரிச்சுக்கொட்டறாங்க . இவன்  பொறந்த   வேளையே  சரி இல்லை , அம்மாவை முழுங்கிட்டான், ராசி  இல்லாதவன், ஒரு நாள்  இல்லாட்டி ஒரு நாள்  பாருங்க , இவனால  உங்களுக்கும் ஆபத்து  வரப்போகுதுனு  ஹீரோவை எச்சரிக்கறாங்க

 

அம்மா  இல்லாததால்  மனோ ரீதியா  பாதிக்கப்பட்ட  மகன் , சயிண்ட்டிஸ்ட்டா  இருப்பதால்  ஏராளமான  ஒர்க் பிரஷர்  உள்ள  அப்பா இவங்க  2  பேர்   வாழ்க்கைலயும்  நடக்கும்  திடுக்கிடும்  சம்பவங்கள்  தான்  அந்த  9 நாட்கள் திரைக்கதை

 

ஹீரோவா  பிருத்விராஜ். தமிழ் ல  கமல்  படம்னா  ( நாயகனுக்குப்பின்)   கண்ணை  மூடிக்கிட்டு  படம்  பார்க்க  தியேட்டருக்குப்போய்டலாம்,  ஏதாவ்து  ஒரு புதுமை  அவர்  படத்தில்  இருக்கும், கதை, டெக்னிக் அம்சங்கள்  ஏதோ ஒண்ணு  மாறுபட்டதா  இருக்கும் , அந்த  மாதிரி  மலையாளத்துல  பிருத்விராஜ்  ஹீரோன்னா  அந்தப்படத்தை  ரிசல்ட்டே  கேட்காம  தைரியமா  பார்க்கலாம், ஏன்னா  அவர்  திரைக்கதை  கேட்டு  வித்தியாசமா இருந்தா  மட்டும்  தான்  ஓக்கே  சொல்வாராம்

 


இந்தப்படத்தில்  மாறுபட்ட  நடிப்பை  தந்திருக்கார். இவருக்கு  இணையா  அந்தப்பையனும்  நல்லா  நடிச்சிருக்கான், இவர்  கூட   வரும் ஆராய்ச்சிக்குழுவில்  உள்ள  ஒரு பெண்  நாயகன்  கண் எதிரே  உயரமான  ஒரு இடத்தில்  இருந்து  கீழே  விழுவதும் , இன்னும் சில  அமானுஷயமான விஷயங்களும்   நிகழுது . அதெல்லாம்  ஏலியன்சின் வேலையா?  அமானுஷ்ய  சக்தியின் வேலையா?  இறந்த  மனைவியின்  ஆவி  வேலையா?  என்பதை  ஹாட்  ஸ்டார்ல கண்டு மகிழுங்கள் , யூ  ட்யூப்லயும்  இருக்கு

 

படத்தின்  திரைக்கதை  ஹிமாச்சல்  பிரதேசத்தில்  நடப்பதால்  வசனங்கள்  பெரும்பாலும்  ஹிந்தியில்  வரும். அதுக்கான  சப்டைட்டில்  மலையாளத்தில்  வரும். அதனால்  யூ ட்யூப்ல பார்த்து  புரிஞ்சுக்கனும்னா இரண்டில்  ஏதோ  ஒரு மொழி  தெரிஞ்சிருக்கனும். ஹாட்  ஸ்டார்ல  சப் டைட்டில்  உண்டுனு  நினைக்கிறேன்

 

இந்தப்படத்தில்   முக்கியமான  அம்சங்கள்  பின்னணி  இசையும், ஒளிப்பதிவும்,  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டும்

‘’ படம்  பூரா  இரவு  சீக்வன்சில்  காட்ட்ப்படுவதால்  லைட்டிங்  எல்லாமே தீப்பந்தம் வழியாதான், ஏன்னா  கரண்ட்  கிடையாதே? பிரமாதமான  ஒளிப்பதிவு .  மிரட்டலான  பின்னணி  இசை  எல்லாம்  அருமை

 

பிரகாஷ்  ராஜ்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  ஓப்பன்  பண்ணும்  கேரக்டர்

 

நாயகியாக  வரும் மம்தா  பொதுவா  கிளாமரான  முகம்  என்றாலும் இந்தக்கதைக்கு  அவரைக்கண்டாலே  பயம்  தான் ,  கீழே  விழுந்து விபத்தில்  சீரியஸ்  ஆகும்  ஆராய்ச்சி  யாளர்  பெண்  இன்னும்  சில  சீன்கள்  கொடுத்திருக்கலாம். மனைவியா  வருபவர் அதிக  வாய்ப்பில்லை 

 

சி.பி ஃபைனல்  கமெண்ட் – இந்தப்படம்  யாருக்கெல்லாம்  பிடிக்கும்?  குடைக்குள்  மழை ,  மயக்க்ம் என்ன?, காளிதாஸ்  இந்த  3  படங்களில்  ஏதோ ஒரு படத்தையாவது  ஆல்ரெடி  ரசிச்சவரா  இருந்தா  பிடிக்கும், புரியும் ,  ரேட்டிங்  3 / 5 

Monday, October 19, 2020

இதய கோயில் (1985) -சினிமா விமர்சனம் ( எ மணி ரத்னம் ஃபிலிம்)

மதர்லேண்ட் பிக்சர்ஸ்  கோவைத்தம்பிக்கு  தமிழ்  சினிமா  வரலாற்றில்  முக்கிய  இடம் உண்டு. தொடர்ந்து  5 வெள்ளி விழாப்படங்களைக்கொடுத்தவர்  1 பயணங்கள்  முடிவதில்லை (1982) - ஆர்  சுந்தர்ராஜன்  , இளமைக்காலங்கள் (1983) - மணிவண்ணன், நான்  பாடும் பாடல் (1984).ஆர்  சுந்தர்ராஜன்  , உன்னை  நான்  சந்தித்தேன் (1984) - கே ரங்கராஜ்  , உதயகீதம் (1985)-கே ரங்கராஜ் . இந்த  5 படங்களிலும்  மோகன்  நாயகன் , இசை  இளையராஜா

 

மணிரத்னம்  இயக்கிய  முதல்  படம்  பல்லவி அனுபல்லவி ( கன்னடம்) , 2வது  படம்  உணரு (மலையாளம்இந்த  2  படங்களிலும்  பிரபல  ஹீரோ  இருந்தும்  கமர்ஷியலா  தோல்வி . அப்படிப்பட்டவருக்கு    தமிழ்ல முதல்  படமா  வாய்ப்பு  தரவும் ஒரு மனம் வேணும், தைர்யம்  வேணும்

 

 

 படத்தோட  விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னால  சில  சுவராஸ்யமான  நிகழ்வுகளைப்பார்ப்போம். இந்தப்படத்தோட  க்ளைமாக்ஸ்  காட்சியை பிரம்மாண்டமா  படம்  ஆக்கனும்னு  இயக்குநர்  விரும்ப ஏற்கனவே  பட்ஜெட்  கை மீறிப்போய்டுச்சு  என்பதாலும்  இயக்குநர்  பர்ஃபெர்க்சனுக்காக  ஃபிலிமை  வேஸ்ட்  பண்றார்  என்ற  அதிருப்தியும்  தயாரிப்பாளருக்கு  இருக்கவே  கொஞ்சம்  லடாய். இளையராஜா  கோவைத்தம்பி  படத்துக்கு  எப்போதும்  முதுகெலும்பு. தொடர்ந்து  6  படங்கள் எல்லாப்படங்களிலும் பாட்டு  செம  ஹிட்டு . இந்தப்படத்தோட  இளையராஜா  பிரியறார்

 மணிரத்னம் இயக்குய இப்படம்   மதர்லேண்ட்  பிக்சர்சின்   6 வது  படம், தோல்விப்படம்என்ன  காரணம்னு பார்ப்போம் 

 

நாயகி  ஒரு கல்லூரி  மாணவி . காலேஜ்ல நடக்கற  எலெக்சன்ல  பிரபல  பாடகர்  ஒருவரை  பாட  வைக்கறதா  சொல்றார். ஆனா விழாவுக்கு அந்த  பாடகர்  வர்லை நாயகி  பாடகரோட  வீட்டுக்குப்போய்  அவரைப்பார்த்து  அவரோட  மோசமான, சோகமான  நிலைமையைப்பார்த்து   அவரோட  ஃபிளாஸ்பேக்கை  சொல்ல  வைக்கிறார்

 

ஒரு கிராமத்தில் ஹீரோ     வெட்டியா  இருக்கார் , வேலைக்கு  எங்கயும்  போறதில்லை . முறைப்பெண்ணை  கலாட்டா  பண்ணிட்டு  டைம் பாஸ்  பண்றார். பொண்ணோட  அப்பா  இவங்க  காதலுக்கு  எதிரி . வேற  பக்கம்    மாப்ளை  பார்க்க  ஆரம்பிக்கறார்ஹீரோயின்  ஹீரோவை பட்டணம்  அனுப்பி நீ நினைச்சபடி  பெரிய  பாடகனா  வரனும்னு  அனுப்பறார். ஹீரோ  பட்டணம்  வந்ததும்  அவருக்கு  சினிமால  பாட  வாய்ப்பு  கிடைக்குது

 

இந்த  சந்தோஷமான  விஷயத்தை  தன்  முறைப்பெண்ணுக்கு  தெரிவிக்கிறார். வீட்ல கல்யாண  ஏற்பாடுகள்  நடப்பதால்  அவசர அவசரமாக  முறைப்பெண்  பட்டணம்  வந்துடறார்பட்டணத்தில்  அவரு அட்ரஸ்  விசாரிக்கும்போது  சில  ரவுடிப்பசங்க  அவரை  துரத்திட்டு வர்றாங்க . அவங்க  கிட்டே இருந்து  தப்பிக்க  வேற  வழி  இல்லாம  தற்கொலை  பண்ணிக்கறார்

 

  இறந்த  காதலி  நினைவா  ஹீரோ  தாடி விட்டுட்டு  சரக்கு  அடிச்ட்டு  இருக்கார் 

 

 ஃபிளாஸ்பேக்  முடியுது. நாயகி  ஹீரோ  மனசை  மாத்த  முயற்சிக்கிறார். இந்த  முயற்சில  அவரையும் அறியாம  அவர்  நாயகன்  மேல்க் காதல்  வசப்படுக்கிறார். இருவரும்  இணைந்தார்களா? இல்லையா? என்பது  க்ளைமாக்ஸ்

 

ஹீரோவா  மோகன். அந்தக்காலத்தில் கமல் , கார்த்திக் இவர்களுக்குப்பின் அதிக  இளம்பெண்களைக்கவர்ந்தவர் , இவரது  தெத்துப்பல்  சிரிப்பு ஒரு பிளஸ் , இவரது  கோவைத்தம்பி  காம்போ   படங்களில்  5  படங்களில்  ஹீரோவாக  நடித்ததில்  கடைசி  3  படங்களிலும் பாடகராக  வந்ததால்  இதிலும்  ஹீரோ பாடக்ர்  மாதிரி  கதை  அமைக்கப்பட்டிருக்கனும்  என  கண்டிசன் போடப்பட்டதாம்  தயாரிப்பு தரப்பில்

 

 ஹீரோயினாக  அம்பிகா, ராதா  இருவரும் , கமல்  நடிச்ச  காதல்  பரிசு  படம்  கூட இவங்க  2 பேரும்தான்  ஜோடி அதுவும்  ஓடலை . அம்பிகாவின்  ஹேர் ஸ்டைல்  அந்தக்காலத்தில்  பெரிதும்  பேசப்பட்டது    தலையின் முன் பக்கம் இருபுறமும் ஒரு  அலை வந்தது  போல்  முடியை  ஒதுக்கி  இருப்பார் , இவருக்கு  கீழ் உதடு ஒரு பிளஸ்  பாய்ண்ட்   நடிப்பு  குட்

 

 ராதா   எப்பவும்  கண்  இமைகளுக்கு  மேக்கப் போடுவதில்  அதிக  கவனம்  செலுத்துவார் இவரது  மகள்  கார்த்திகாவை  கோ விலும் துளசியை  கடல் படத்துலயும்  கவனிச்சா  அந்த  இமை மேக்கப்  தொடர்வது  தெரியும்

 

 கவுண்டமணி  காமெடி  டிராக்  வழக்கம்  போல  ஹிட் . செட்டப்  பண்ணி  பாம்பை மேடைக்கு வரவைப்பது  அந்தக்காலத்தில்  பரப்ரப்பாக  பேசப்பட்டது

 

பாடலகள் , இசை  படத்திற்கு பெரிய  பலம் . படத்தின்  முதல்  பாதி  பூரா  பாட்டுக்கள் தான்

 

1  இதயம்  ஒரு கோயில்   அதில் உதயம் ஒரு பாடல்  (  2  முறை)

2  வானுயர்ந்த  சோலையிலே  நீ நடந்த  பாதை எல்லாம்

3  கூட்டத்துல  கோயில் புறா  யாரை  இங்கு  தேடுதம்மா

 

4  நான்  பாடும்  மவுன  ராகம்  கேட்கவில்லையா?


5  ஊரோரமா  ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு 


6   பாட்டுத்தலைவன்  பாடினான்  பாட்டுத்தான்


7  யார்  வீட்டு ரோஜா  பூ  பூத்ததோ 

   

நச்  வசனங்கள்:

 

1        ஃபோட்டோ  எடுத்துக்கிட்டா ஆயுள் குறையுமாமே?

 நெருக்கம் தான் அதிகம் ஆகும்

 

2        உன் நினைப்புல ஒரு ஜென்மத்தையே ஓட்டிடுவேன்

3        என்ன வேலை  பண்றே?

பாட்டுபாடரேன்

 

 சாப்பாட்டுக்கு என்ன பண்றே/

 

4        ராமனை  ஜானகிராமன்னு  சொல்ற  மாதிரி  சங்கரான  என்னை கவுரிசங்கரா மாத்த  நினைக்கறேன்

5         சாபங்களே  வரங்கள்  ஆனால் இங்கே   தவங்கள்  எதற்காக?

 

6 சிந்தனை செய் மனமே…

பாகவதரே , கல்யாணி  ராகத்துல  ஒரு பாட்டு பாடுங்க

 

 யோவ், இப்ப பாடுனதே அந்த  ராகம் தான்யா

7        உலகத்தை  விட்டே  போனவ என் உள்ளத்தை  விட்டு  போயிடக்கூடாதுனுதான் குடிக்க்றேன்

8        நீ அவன் பாட்டை ரசிக்கிறியா? பார்த்து ரசிக்கிறயா?

9        பாடகன்  மேல  ரசிகைக்கு இருக்கும் அக்கறை மாதிரி  தெரியல , காதலன்  மேல காதலிக்கு  இருக்கும் அக்கறை மாதிரி  தெர்யுது

10    கலைஞனும், வெத்தலையும் ஒண்ணு  , அப்பப்ப தண்ணில இருக்கனும்

11    எல்லாம் கொடுப்பினைதான்

 குடிப்பினை  இல்லையே?

 

12    காதல்ல  வெற்றி அடைஞ்சவங்களை  விட தோல்வி  அடைஞ்சவங்க தான்  காதலைக்கொண்டாடிட்டு இருக்காங்க . அதிகம்  காதலை  அனுபவிப்பவர்களும்  தோல்வி அடைஞ்சவங்க தான்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில  நெருடல்கள்

 

1   அம்பிகா  பிராப்பரான  அட்ரஸ்  இல்லாம  சென்னை  வந்து  மோகன்  ஃபோட்டோவைக்காட்டி    அட்ரஸ்  கேட்பது  ந்கைக்க  வைக்கிறது , பட்டப்பகலில்  கோயிலுக்குள்  அவரை  ரவுடிகள்    சூழ்வது  தற்கொலை  செய்வது  நம்ப முடியல

 

2   மோகனின்  பாட்டியை  மாடு முட்டிடுச்சுனு  ஒரு ஆள்  மோகன் கிட்டே சொன்னது,ம்  அவர்  ஓடி வர்றார்.  அப்போ பாட்டி  பாடைல அலங்கரிக்கப்பட்டு  இருக்கார் . மாடு முட்டி ஹாஸ்பிடல்  போய்  பின்  இறந்த பின் பாடியை கொண்டு வந்து  ஆளுங்களுக்கு  சொல்லி  அனுப்பி  அலங்காரம்  பண்ண  எவ்ளோ நேரம் ஆகும்?

 

3   மோகன் – அம்பிகா  ஸ்டூடியோவில்  ஜோடியா  எடுக்கும் ஃபோட்டோவை  எதுக்கு  ரெண்டா  கட்  பண்ணி  ஆளுக்கு  பாதி  எடுத்துக்கறாங்க . 2  காபி  போட்டு வாங்கி  இருக்கலாமே?

 

4  கிராமத்தில்  வளர்ந்த  ஹீரோ  பட்டணத்தில்  நாயைப்பார்த்து  பயந்து  ஓடுவது  எப்படி? பொதுவா  கிராமத்தான்கள்  நாய்களுக்கு  பயப்பட  மாட்டாங்க

 

5      5   காமெடி  டிராக்கில்  கவுண்டமணியும் , பின்னால்  அமர்ந்து  வருபவரும்  ஹெல்மெட்  போல் சட்டியில்  பெயிண்ட்  அடிச்சு  ஸ்கூட்டர்ல  வர்றாங்க , பின்னால் வருபவர் ஹெல்மெட்  கீழே  விழுந்து  உடையுது , கவுண்டமணி  அவர்  ஹெல்மெட்டை அவரே  கழ்ட்டி  வீசி  உடைக்கிறார்

6   வானுயர்ந்த  சோலையிலே   பாட்டு சீனில்  அம்பிகா  தலையில்  பானை யுடன் போவது போலவும்   மோகன்  கவண்ல  கல்லால்  அடித்துப்பானையை  உடைப்பது  போலவும்  சீன்,  அதில்  அம்பிகா  பானையை  தலையிலிருந்து  அவரே கீழே  போட்டு உடைக்கிறார்

 

7  க்ளைமாக்ஸ்    ட்ராஜடியா  முடிச்சது  தான்  படம்  ஃபெய்லியர்  ஆக  முக்கியக்காரணம்  , பின் பாதி  திரைக்கதை  இழுவை


8  மோகனின்  ஒட்டு தாடி  கெட்ட்ப்  எடுபடலை

 

 சி.பி ஃபைனல்  கமெண்ட்  - பாடல்களுக்காகவே  பட ம்  பார்க்கலாம்,  மணிரதனம்  படங்களிலேயே  வெளிச்சத்தில்  முழுப்படமும் இது  ஒண்ணுகான்  எடுக்கப்பட்டிருக்கு  அதுக்காகவும் பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 

 

 

Idaya KovilIdaya Kovil.jpg
Poster
Directed byMani RatnamProduced byKovaithambiScreenplay byM. G. VallabhanStory byR. SelvarajStarringMohan
Radha
AmbikaMusic byIlaiyaraajaCinematographyRaja RajanEdited byB. Lenin
V. T. Vijayan
Production
company
Motherland Pictures
Release date
14 September 1985
Running time
160 minutes[1]CountryIndiaLanguageTamil