Sunday, March 31, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை - திடீர்த்திருப்பம்

3. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி பணியாளர்கள் போராட்டம் ! ( படங்கள் ) 
 
 
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில்,‘ஆலையை தொடர்ந்து இயக்கவேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலையின் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

‘ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தரப்பிலிருந்து போராட்டங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, ஆலையை மூடிவிடுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் உத்தரவிட்டது.

இப்போது ‘ஆலையை தொடர்ந்து இயக்கவேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலையின் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் கடந்த 1994 ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதிலிருந்தே அந்த ஆலைக்கு எதிரான போராட்டங்களும் துவங்கின. அத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்த அந்த ஆலை நிர்வாகம், கடந்த 23 ஆம் தேதி, சல்பர்டை ஆக்ஸைடு அதிகமாக வெளியேறியதை கட்டுப்படுத்த தவறியது.

அதனைத்தொடந்து ஆலைக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்தது.வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதன் பாதிப்பு தெரியும் என்கிற உளவுத்துறையின் தகவல் அரசு கவனத்துக்கு சென்றது.

அதனைத்தொடர்ந்து எப்பொழுதுமே கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பிலிருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தவறவிட்டு விழித்துக் கொண்டதுபோல் ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதனிடையே  ஸ்டெர்லைட் ஆலையில் வேலைபார்த்து வரும் பணியாளர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

இந்நிலையில், இன்று பணியாளர்கள் குடும்பத்தார் உட்பட இரண்டாயிரம் பணியாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில்,"ஆலையின் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அந்த பாதிப்பை அகற்றுவது எப்படி என்று பார்க்க வேண்டும்? அதற்கென்று உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை முடுக்கிவிட்டு கண்காணிக்க செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக மூடிவிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?.

ஸ்டெர்லைட் ஆலையை நம்பியிருக்கும் சுமார் இருபதாயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் என்னாகும்? எனவே ஆலையை மூடாமல் தொடர்ந்து இயங்க செய்யவேண்டும். சட்டவிதிமுறைப்படி இயக்க கடுமையாக கண்கானிக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆலைக்கு எதிராகவும் ஆலைக்கு ஆதரவாகவும் நடந்துவரும் போராட்டங்களை பார்த்து சிரிக்கவா அழுகவா என விழித்துக் கொண்டிருக்கிறார்கள் தூத்துக்குடி பொதுமக்கள்.

- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்  
 
நன்றி - விகடன்
 

 
 
. தூத்துக்குடி: ரசாயனவாயு கசிந்து, பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரச்னையில், தொடர் போராட்டங்கள் நடந்ததையடுத்து, காற்று மற்றும் நீரை மாசுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை, நேற்று மூடப்பட்டது.

தூத்துக்குடியிலிருந்து, 15 கி.மீ., தூரத்தில், மதுரை பை-பாஸ் ரோட்டில், "வேதாந்தா' என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து, தாமிர தாதுவை இறக்குமதி செய்து, அதை உருக்கி, தாமிர பிளேட்டுகள், அதைச்சார்ந்த பொருட்களாக மாற்றி, இங்கிருந்து, வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது.
 
 
 கடந்த, 1993ல், இந்த ஆலைக்கு, முதல்வராக இருந்த ஜெ., அடிக்கல் நாட்டினார். 1996ல், இங்கு, உற்பத்தி துவங்கப்பட்டது. இந்த ஆலை, 5,000 பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கிறது. இங்கு, கந்தக அமிலம் உற்பத்தி உள்ளிட்ட பல பிளான்ட்டுகள் உள்ளன. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த ஆலையை மூடவேண்டும் என, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ மற்றும் போராட்டக் குழுவினர், 17 ஆண்டாக, தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 
 
 வைகோ, சமூக அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக்கூறி, இந்த ஆலை இயங்க, 2010 செப்., 28ல், சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. அதை எதிர்த்து ஆலை நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதையேற்று, 2010 அக்., 18ல், ஐகோர்ட் உத்தரவிற்கு, இடைக்கால தடைவிதித்த சுப்ரீம் கோர்ட், ஆலை இயங்க அனுமதியளித்தது. 2012 நவ., 6ல், ஆலை தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியை, சுப்ரீம் கோர்ட் நீடித்தது. இந்த ஆலையை மூடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில், வைகோ தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிந்த நிலையில், ஏப்., 2ல், தீர்ப்பு கூறப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

திடீர் வாயு கசிவு: இதனிடையே, மார்ச் 23ம் தேதி அதிகாலை, இந்த ஆலையின், கந்தக அமில முதல் பிளான்ட், பழுது சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டபோது, அதிலிருந்து, கந்தக-டை-ஆக்சைடு வாயு கசிந்து காற்றில் கலந்தது. அந்த காற்றை சுவாசித்த, தூத்துக்குடி நகர், புறநகர் பொதுமக்கள் பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், இருமல் போன்ற உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆலையை மூட வேண்டுமென, பொதுமக்கள், கலெக்டர் ஆஷிஷ்குமாருக்கு மனு அனுப்பினர். கந்தக-டை-ஆக்சைடு வாயு கசிந்த, பிளான்டை ஏன் மூடக்கூடாது என, ஆர்.டி.ஓ., லதா, ஆலை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆலையை ஆய்வு செய்த, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், உறுப்பினர் செயலர், விளக்கம்கேட்டு, தனியாக நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, வைகோ தலைமையில், போராட்டக் குழுவினர், மார்ச் 25ல், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடவும், மார்ச் 28ல், ஆலையை முற்றுகையிடவும் முயன்றனர். கடைகள் அடைக்கப்பட்டன. பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராடின. இதனிடையே, ஆலை தரப்பினர் தந்த விளக்கம் திருப்தி இல்லாததாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கந்தக-டை-ஆக்சைடு அதிகளவு கசிந்து, பொதுமக்களின் உடல்நலம் பாதித்து, காற்று, நீரை மாசுபடுத்தியதாக குற்றம் சாட்டிய, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கார்த்திகேயன், பொதுமக்களின் புகார், கலெக்டர் அறிக்கை அடிப்படையில், காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்ட படி, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட, நேற்று முன்தினம் இரவு, ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

அதன் நகல், கலெக்டர், மின் வாரியம், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. அதை ஏற்று, ஆலைக்கான மின் இணைப்பை, மின் வாரியத்தினர் துண்டித்தனர். கலெக்டர் உத்தரவுப்படி, நேற்று காலை, ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்ற ஆர்.டி.ஓ., லதா, தாசில்தார் ஆழ்வாரம்மாள், மாசு கட்டுப்பாடு வாரியத்தினர், ஆலையை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். அதன்படி, ஆலையிலுள்ள அனைத்து பிளான்ட்டுகளிலும், உற்பத்தி நிறுத்தப்பட்டு, அவை படிப்படியாக மூடப்பட்டன. தொழில்நுட்ப காரணங்களால், ஆலையை முற்றிலும் மூட, 30 மணி நேரத்திற்கும் மேலாகுமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொண்டாட்டம்: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு, வரவேற்பு தெரிவித்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், பொதுமக்கள், வியாபாரிகள், போராட்டக் குழுவினர், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது, மக்களின், 17 ஆண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என, அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். இதனிடையே, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், இந்த உத்தரவை எதிர்த்து, ஆலை தரப்பில், ஐகோர்ட்டில், ஓரிரு நாளில், மேல்முறையீடு செய்யப்படுமென, எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வருக்கு வைகோ பாராட்டு: "ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதற்கு, தமிழக முதல்வருக்கு பாராட்டுகள்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள, தாமிர உருக்கு ஆலையான, ஸ்டெர்லைட் ஆலையால், நிலம், நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியன நஞ்சாக மாறி வருகிறது. கடல்வாழ் உயிரினங்களும், விவசாய நிலமும் வெகுவாக பாதித்துள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என, 17 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 23ம் தேதி, ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையால், தூத்துக்குடி பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
 
 
 
 பல இடங்களில், மரம், செடி, கொடிகள் நிறம் மாறி கருகிப் போயின. இதையடுத்து, ஆலையை மூடக் கோரி, கடந்த மூன்று நாட்களாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் சரியான நடவடிக்கையை, முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளதற்கு, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆலை மூடப்பட்டதால், தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவும், அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 

ஆலையை திறக்கக்கோரி மனு: மூடப்பட்ட, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை, மீண்டும் திறக்க வேண்டுமென வலியுறுத்தி, அதன் பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளர் கோகுல் தாசிடம், மனு கொடுத்தனர். ஆலை மூடப்பட்டதால், தாங்கள் வேலையிழந்து, தங்களின் குடும்ப வாழ்வாதாரம், கடுமையாக பாதிக்கப்படுமென, அதில் குறிப்பிட்டுள்ளனர். அது போல, தொழிலதிபர்களின் கூட்டமைப்பும், இந்த ஆலையை திறக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
 
நன்றி - தினமலர்


கண்பேசும் வார்த்தைகள் -- சினிமா விமர்சனம் ( தினமலர் )

தினமலர் விமர்சனம்



விஜய் டி.வியின், "மதுரை, "சரவணன் மீனாட்சி மெகா தொடர்களின் நாயகர் மிர்ச்சி செந்தில் கதாநாயகராக அதுவும், வாகைசூட வா இனியா ஜோடியாக தமிழ் சினிமா நாயகராக அடியெடுத்து வைத்திருக்கும் படம் தான் "கண்பேசும் வார்த்தைகள்".

திருவாரூரில் இருந்து சொந்த ஊர் வெறுத்துபோய் சிங்கப்பூர் சிட்டிசன் ஆகும் முடிவில், சிங்கப்பூரில் வேலை பார்க்கும் நண்பனைத் தேடி, நாடி போகிறார். அங்கு நண்பர் முருகதாஸின் உதவியால் தன் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடிக் கொள்ளும் செந்தில், சிங்கப்பூர் சிட்டிசன்னாகும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார். வெளிநாட்டினர் சிங்கப்பூர் குடியுரிமை பெறுவது அவ்வளவு எளிதல்ல... அதற்கு ஈஸியான ஒரே வழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற பெண்ணை காதலித்து கரம்பிடிப்பது தான் என்பதை ஆரம்பத்திலேயே உணரவும் செய்கிறார். அதன் விளைவு சிங்கப்பூரில் ஒரு ஆடை அலங்கார கடையில் வாழ்க்கை வாழும் இனியாவை, சிங்கப்பூர் சிட்டிசன் என கருதி காதலிக்க தொடங்குகிறார். கிட்டத்தட்ட ஹீரோ செந்திலின் எண்ணத்திலேயே தன் முரட்டு அக்கா புருஷனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கை படாமல் தப்பிக்க, சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இனியாவும் ஒன்றிரண்டு சந்திப்புகளில் செந்திலுடன் காதல் வயப்படுகிறார். இவர்களது காதலுக்கு ஆடுகளம் காமெடியன் முருகதாஸும், ஒரு கல் ஒரு கண்ணாடி ஜாங்கிரி மதுமிதாவும் உதவுகின்றனர். செந்திலுக்கு சிங்கப்பூர் சிட்டிசன் கிடைத்ததா.? இனியா முரட்டு மாமனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கை படாமல் தப்பித்தாரா...?! என்பது "கண்பேசும் வார்த்தைகள்" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!






திருவாரூரில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இளைஞனாகவே யதார்த்தமாக பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார் மிர்ச்சி செந்தில்! இவரும், முருகதாஸும் சிங்கப்பூர் எம்பஸியில், சிங்கப்பூர் சிட்டிசனாக வாழ விரும்புவதற்காக... "எங்க ஊரில் கோயிலுக்கு போனா செருப்பு கா‌ணோம், ஹாஸ்பிட்டலுக்கு போனா உறுப்பு காணோம், ஆசிரமத்திற்கு போனா கற்பு காணோம்..." என்று பேசும் காமெடி பன்ச்சுகள் கலக்கல்!

மார்டன் கெட்டப்பில் வாகைசூட வா இனியா கொஞ்சம் செயற்கையாக தெரிகிறார். ஒரு பாடல் காட்சியில் கிளாமர் தூக்கலாக மிர்ச்சி செந்திலுடன் ஒட்டி உரசுவது கவர்ச்சி பிரியர்களுக்கு செம விருந்து. இனியா - செந்தில் காதலும், இனியாவின் மார்டன் கெட்-அப் மாதிரியே செயற்கையாக தெரிவது "கண்பேசும் வார்த்தைகள்" படத்தின் பலவீனங்களில் ஒன்று!

ஜாங்கிரி மதுமிதா, முருகதாஸ், லிவிங்ஸ்டன், நான் கடவுள் ராஜேந்திரன், கதிரவன், கந்தவேலு உள்ளிட்டவர்கள் படத்திற்கும் தங்கள் பாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கின்றனர்.

புதியவர் ஷாமன்த்தின் இசை, நாககிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஆர்.சரவணக்குமாரின் கதை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், ஆர்.பாலாஜியின் எழுத்து - இயக்கத்தில் ஏதோ ஒன்று இல்லாத குறை!

ஆக மொத்தத்தில், "கண்பேசும் வார்த்தைகள்" - "பேசுவதும், பேசாததும்" ரசிகர்களின் கையில் இருக்கிறது!


கலைஞரைப்போல் ஜெ வும் ஈழ விஷயத்தில் நாடகமாடுகிறாரா?

ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பம்!
கொதிக்கும் மாணவர்கள்
மக்களுக்கான மாணவர்களின் போராட்டத்தைத் தேர்வும் விடுமுறையும் மட்டுப்படுத்திவிடும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். அது தவறு என்று உறுதிப்படுத்துகிறது மாணவர்களின் எழுச்சி. 


சென்னை மெரினா தபால் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் பங்குகொண்டு இருந்த மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திவ்யா, ''எக்ஸாம், இன்டர்னல் மார்க், எதிர்காலம் என எங்களை மறைமுகமாக மிரட்டி, போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம் என, சில அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. அவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்.


 எங்கள் போராட்டம் தொடரும். இது, முழுக்க முழுக்கத் தமிழக மாணவர்களின் உணர்ச்சிப் போராட்டம். 'இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். ராஜபக்ஷேவை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை பெற்றுத் தர வேண்டும். வரும் ஜூன் மாதம் ஐ.நா-வில் நடக்கும் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டுவந்து அங்கு நடந்தது இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ - இதுதான் எங்கள் கோரிக்கை.


அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஓட்டு வங்கியை நிரப்புவதற்காக. இவர்கள் நாடகங்களாலும் வார்த்தை ஜாலங்களாலும் ஒரு தலைமுறையே அழிந்துவிட்டது.  தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில் கூடங்குளத்துக்குச் சென்று, 'எங்களுக்கு வாக்களித்தால் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் நான் உங்களில் ஒருத்தியாக இருப்பேன்’ என்றார்.


 தேர்தலில் வென்றதும் அந்த மக்களின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தினார். இது, பச்சைத்துரோகம் இல்லையா? இதே துரோகத்தைத்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் செய்கிறார். கருணாநிதியின் கபட நாடகம் முடிந்து இப்போது ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது. இதற்கு முன்னர்தான் இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என இதே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்தத் தீர்மானம் என்ன ஆனது?


இலங்கையில் வாழும் நம் மக்கள் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், 'சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்காவிட்டால், தமிழகத்தில் இருந்து எந்த வரியும் செலுத்த மாட்டோம். மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவோம்’ என, மத்திய அரசுக்கு கெடு விதிக்கட்டும்.


 இரண்டு கேரள மீனவர்களைக் கொன்றதற்காகக் கொதிக்கும் பிரதமர் மன்மோகன், தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கையை நட்பு நாடு என்கிறார். தமிழ் மக்களைக் கோமாளிகள் என அரசியல் சக்திகள் நினைக்கின்றன. இலங்கையில் இனப்படுகொலை செய்யப்​பட்டதற்கும் தமிழ்ப் பெண்களின் கற்பு சூறை​யாடப்​பட்டதற்​கும்காரணம், தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிசெய்த கட்சிகளின் துரோகம்தான். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்.


எங்கள் போராட்டம் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இனி, போராட்டத்தின் வடிவை மாற்றிக்கொள்வோம். ரயில் நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் துண்டுப் பிரசுரம் கொடுப்போம். சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் இருக்கும் கடைக்கோடி தமிழன் வரை சென்று ஈழத் தமிழரின் அவலத்தைச் சொல்வோம். '' என்றார் உறுதியான குரலில்.


முதன் முதலில் போராட்டத்தைத் தொடங்கிய சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், மேலும் எழுச்சியோடு தொடர்ந்து போராடிவருகிறார்கள். அண்ணா நகர் ரவுண்டானாவை முற்றுகையிட்ட அனைத்துக் கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து குரல்கொடுக்க ஆரம்பித்த லயோலா மாணவர்களைக் கைதுசெய்து செனாய் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்தது காவல் துறை. மாலையில் விடுதலையாகி வெளியே வந்த செம்பியன், ''மாணவர்கள் தொடங்கிய இந்தப் போ​ராட்டம், இப்போது மக்கள் போராட்டமாக மாறிவருகிறது. எங்கள் போராட்டம் எப்போதும் அற வழியைப் பின்பற்றும். இலங்கையில் விடியல் பிறக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.



தொடர்ந்து பேசிய ஜோ.பிரிட்டோ, ''எங்​களுக்குக் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றோ, எங்கள் சொந்த நலனுக்காக​வோ போராடவில்லை. நம் இன மக்களுக்காகப் போராடுகிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, மாணவர்களின் போராட்டத்தில் வன்முறையைக் கலக்க நினைக்கிறது. திருச்சியில் அத்தனை மீடியாவுக்கும் முன்னால் அரிவாள், கம்பு கட்டை​களுடன் வந்த காங்கிரஸ்காரர்கள் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்தனர். கைகட்டி வேடிக்கை பார்த்தது காவல் துறை. அற வழியில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது வன்​முறையை அவிழ்த்துவிடுவது நியாயமா?'' என்றார் ஆவேசமாக.



மாணவர்களின் தன்னலமற்றப் போராட்​டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.


- நா.சிபிச்சக்கரவர்த்தி 

படங்கள்: வி.விஷ்ணு

 readers view"

1. இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் மத்திய அரசில் ஆட்சியில் இல்லாத கட்சி, மற்றும் இந்த பிரச்சனையில் எப்போதும் ஒரே கொள்கை உள்ள கட்சிகள், அமைப்புகள் இவற்றின் ஆதரவு தேவை. அவர்கள் ஆதரவின்றி மத்திய அரசுக்கு "அழுத்தம்" தர இயலாது. மொத்த போராட்டமும் இந்த விஷயத்தில் செயலாற்றக் கூடிய மத்திய அரசை நோக்கி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அனைத்து தரப்பினரையும் எதிர்த்து தனிமையில் போராடும் நிலை ஏற்பட கூடாது. மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம். 



2.  தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்."

இது 100% உண்மை. மாணவர்கள் ரொம்ப தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தால்தான் மத்திய அரசில் இருந்து தி.மு.க வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. அதேபோல மம்மியையும் சட்ட மன்றத்தில் தீர்மானம் போட வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தாத்தா செய்த துரோகம் வெளிப்படையாக தெரிந்தது. இனிமேல் மம்மி போடும் வேஷமும் ஒன்னு ஒண்ணா தெரியவரும். 



3.  ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது..... நடுநிலை என்று காமிக்கரதுக்க்காக மாணவர்கள் ஜே. பேரையும் இதுல சேர்க்க வேண்டியதா போச்சு. தனி ஈழம் வேண்டும் என்பதை 2009 தேர்தல் அறிக்கைல ஜே. வாக்குருதி குடுத்திருக்காங்க - இது வரைக்கும் எந்த தலைவரும் குடுக்காத வாக்குறுதி. ஆனால் மக்கள் 2009ல துரோக கும்பலுக்கில்ல ஓட்டு போட்டு டெல்லிக்கு அமைச்சு வைச்சாங்க 



4. அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒரு அமைப்பின் கீழ் வர வேண்டும், அபோதுதான் இந்த போராட்டம் வெற்றி பெரும்....இல்லை என்றால் சிங்கம் 5 மாடு கதைதான் !!1

Saturday, March 30, 2013

அடுத்த பிரதமர் யார் ?நரேந்திர மோடியா? ஜெ வா? - ஜூ வி சர்வே - கலைஞர் பதட்டம்

ஜூ.வி. நிருபர் பட்டாளம் நடத்திய, 'மக்கள் மனசு’ என்ற தலைப்பிலான சர்வேயின் முதல் பகுதி கடந்த இதழில் வெளியானது. வாசகர்களிடம் இருந்து சர்வேவுக்கு ஏகோபித்த வரவேற்பு. அரசியல் வட்டாரத்தில் இந்த சர்வே அதிர்வலைகளை உண்டாக்கியது. 5,369 நபர்கள் பங்கேற்ற அந்த சர்வேயின் தொடர்ச்சி இது. 


காதலை எதிர்க்கும் ராமதாஸின் நடவடிக்கை சாதி அரசியலே என்பது பலரும் டிக் அடித்திருக்கும் பதில். கலப்புத் திருமணங்களை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆரோக்கியமானது.  நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு சரிசமமான போட்டியிருக்கும் என 49 சதவிகிதம் பேரும் மகத்தான வெற்றி பெறும் என 30 சதவிகிதம் பேரும் கருத்து சொன்னார்கள்.


அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு நரேந்திர மோடியை 58 சதவிகிதம் பேர் ஆதரித்தனர். அவருக்கு அடுத்தபடியாக, ஜெயலலிதா இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது அதிகப்படியானவர்களின் கருத்து. எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த்தின் செயல்பாட்டுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இல்லை.


சர்வே முடிவுகளைப் பாருங்கள் உங்களுக்கே தெரியும்...


 
மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல், ஜெயலலிதாவைத் தவிர அ.தி.மு.க-வில் தலைமை ஏற்கும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? மதுவிலக்கு சாத்தியமா? தமிழக அமைச்சர்களின் செயல்பாடு என விறுவிறுப்பான கேள்விகளின் முடிவுகள், அடுத்த இதழில்...


thanx - vikatan 


readers views 


1.
அடுத்த பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும். அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி ஏற்படலாம் - ஆனால் அதில் பா.ம.க. இருக்காது. தேமுதிக நீர்த்துப்போவது - பாதி ஆளுங்கட்சியின் சதிச்செயலால்; மீதி செயல்படாத, குடும்ப ஆதிக்கத்தைத் திணிக்கும், கட்சியினரை மதிக்காத விஜயகாந்தால்! அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், தேமுதிக தனித்து போட்டியிட்டாலும், மற்றவர்களுடன் கூட்டணி சேர்ந்தாலும் கரையேற வாய்ப்பில்லை.



2. பாமக ராமதாஸ் ,இப்போ திடீர் என்று ஈழ பிரச்சினை முன்னிறுத்தி உள்ளார். வரும் தேர்தலில் ஈழ பிரச்சினையைத்தான் இவை கையில் எடுப்பாராம். மக்கள் டிவியில் ஈழ பிரச்சினை பற்றி தினமும் தொடர் செய்தி வருகிறது.இந்த ஆள் என்ன செய்தாலும் , மக்கள் இவரை மறந்து விட்டார்கள் என்று தெறியாது போல் இருக்கிறது.இவர் குண்டு சட்டியில் குதிரை விட்டுக்கொண்டிருக்கிறார். முகவை விட இவர் குடும்ப பாசம் உள்ளவர். சுயனலத்திளிவர் முகவை மஞ்சி விட்டார். ஏழை வன்னியர்களை இவர் ஏமாற்றலாம் தமிழர்களை ஏமாற்ற முடியுமா?.



3. மோடி ....மோடி ............இப்படி எழுதி எழுதி .....எதோ மோடியை இந்தியாவை காக்க வந்த ரட்சகன் மாதிரி ஆக்கியதில் இந்த தரம் கேட்ட மீடியாக்கள் முக்கிய பங்கு.....................



4. ஜூவியின் சர்வேக்களை ஜூவி தான் பாரட்டிக்கொள்ளவேண்டும் . இதற்க்கு முந்தய தேர்தல் நேர சர்வேக்கள் பிசுபிசுத்து போனது ஞபகம் இருக்கிறது . அதிலும் ஜூவியின் சர்வேக்களை ஜுவியே பாராட்டிக்கொல்வதேல்லாம் ரொம்ப ஓவர்

கேடி பில்லா கில்லாடி ரங்கா - சினிமா விமர்சனம்



பசங்க படத்தின் மூலம் ஏ செண்ட்டர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற  இயக்குநர் பாண்டிராஜ் அடுத்து மெரீனா வில் பி செண்ட்டருக்கு இறங்கினார் , இப்போ இன்னும் சறுக்கி சி செண்ட்டர் ரேஞ்சுக்கு  இறங்கி மொக்கை காமெடிப்படம் கொடுத்து வர வர மாமியா கழுதை போல் ஆனா ந்ன நிரூபிக்கிறார் . ( போகப்போக சரி ஆகிடும்? )

இதுவரை வந்த 1008 தமிழ் சினிமாக்களின் ஹீரோக்கள் போல் இதிலும் வேலை வெட்டி இல்லாத 2  ஃபிரண்ட்ஸ் , அப்பா கிட்டே திட்டு வாங்கி சூடு சுரணை இல்லாம ஆளுக்கு தலா ஒரு மொக்கை ஃபிகரை லவ் பண்ணி  எப்படி வாழ்க்கைல செட்டில் ஆகறாங்க அப்டிங்கறதுதான் கதை .


ஹீரோ விமல் ( அப்டினு அவரா நினைச்சுக்கிட்டார், அல்லது இயக்குநர் அப்படி நம்ப வெச்சிருக்கார்) . இவரது கேவலமான  குரல் , டயலாக் டெலிவரியை மாத்திக்காட்டி 1000 நமீதாக்கள் சப்போர்ட் பண்ணினாலும் முன்னணி நடிகர் ஆக முடியாது .ஒவ்வொரு சீனிலும் எரிச்சலைக்கிளப்புகிறார், இதுல என்ன சோகம்னா அவர் பாடி லேங்குவேஜில் தான் எல்லாரையும் கலாய்க்கிறோம் என்ற மிதப்பு வேற .. முடியல



 


 உண்மையான ஹீரோ சிவகார்த்திகேயன் தான்.  தர்மத்தின் தலைவன் ரஜினி கெட்டப்பை அப்பட்டமா காப்பி அடிச்சாலும் அவரது சென்ஸ் ஆஃப் ஹியூமர் , கலாய்ப்பு அவரைக்காப்பாத்திடுது . ஆனா நல்ல பர்சனாலிட்டியான அவரு ஒரு 50 மார்க் கூட வாங்காத மொக்கை ஃபிகருடன்  ஜோடி சேர்ந்தது ஆச்சரியம் . இதனால் அவருக்கு இருக்கும் ரசிகைகள் மனதில் ஒரு மாற்று குறைந்த மதிப்பைப்பெறுவார் ( ஐ ஜாலி ) 


பிந்து மாதவி  மிக கண்ணியமான ஆடை வடிவமைப்பில் தோன்றுவது ஆச்சரியமே இல்லை , வழக்கமா பாண்டிராஜ் நாயகிகள் கவுரமாத்தான் காட்டப்படுவாங்க , அதுக்காக சுடிதார் ஃபுல் ஸ்லீவ் எல்லாம் ரொம்ப ஓவர். அப்புறம் நாங்க எதைத்தான் ரசிப்பது ? பிந்து மாதவிக்கு கண் , புருவம் , கன்னம் , முகப்பரப்பளவு  எல்லாமே ரொம்ப சின்னது  ( பரப்பளவுக்கு ஃபார்முலா பை ஆர் ஸ்கொயர்டுதானே? ) இவர் இடது கண்ணை மட்டும் அடிக்கும் வைட்டமின் சி குறை பாடுடன் வரும் ஓப்பனிங்க் காட்சிகள் கல கலப்பு . ( நம்ம கண்ணுக்கு இப்படி கண் அடிக்கற ஃபிகர் ஏதும் சிக்க மாட்டேங்குது, நம்மைத்தான் அடிக்குது ) 


ஹீரோயின் நெம்பர் டூ அஜினோ மோட்டோ ஸாரி  ரெஜினா  கேசண்ட்ரா .கண்டநாள் முதல் படத்தில் ஹீரோயின் ோழியா வந்தும் ,சிவா மனசுல சக்தி தெலுங்கு பதிப்பில் நடித்தவருமானொம்ப ம்புமார் ஃபிகரான ரெஜினஓப்பிங்க் சீன்லட்டும் குண்டும் குழியுமானாலையில் ஸ்கூட்டியில் வந்து குலங்கைக்கிறார். அவர் வம் பேசும்ு வாயை ஒரு மிரி கிப்பு , கண்ணை சுருக்கிக்கொள்வு எல்லாம் மேனிசம்னு பாப்பா நினைச்சுக்கு போல . முடிய . உடல் வாளிப்பு இல்லை . 


ுரோட்டா சூரி காமெடிக்கு உி பண்ணி இருக்கார் , அவர் டச் ும் இல்லை , இயக்குநர் சொன்ு சொன்னி .. மற்றி பத்ில் ஏகப்பட்டேரக்டர்கள் , எல்லாரும் டிராமாவில் நிப்பு போலந்துட்டுப்போறங்க 


 



 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்   




1.  அரியல் ைவா வர்றர் ஆடியன்ஸ் ப்பில் 2 பேரன் அடிபொடிகிடம் காட்டி அவங்கேர் என்ன?னு விசாரிச்சு மேடையில் அவங்கேர் சொல்லிக்கூப்பிட்டு  அவங்கை புளங்கிப்பத்ுவு சால அரியல்விகை நக்கல் அடித்ிம் அழு 



2.  பம் பூரா கிட்டத்தட்ட  75% மொக்கை ோக்குகால் நிரப்பி டைம் பாஸ் பண்ணெச்சு 


3. போஸ்டர்கில் , ஸ்டில்ஸ்கில் , டி வி விளம்பங்கில் இு ஒரு நல்லொழு போக்குக்காமெடிப்பம் என்றிரையஏற்பத்ியு 



 



 இயக்குநிடம்ிலேள்விகள்  



1.  ிவார்த்ிகேயிடம் காமெடி  ோர்ை ஒப்பைச்சஓக்கே , ஆனா  அவர் டாக்சை நங்க ஒரு டைம் எடிட் பண்ணி மாடிஃபை பண்ணேணாமா? டி வி டிராமா மிரி இருக்கு , சீன்கள் எல்லாம் பெயற்கை 



2 . 98 % பத்ை மொக்கைக்காமெடியா எடத்ுட்டு க்ளைமாக்ஸ்ல ஓவர் சண்ட்டிமண்ட்டை புகத்ிட்டா அாய்மார்கைக்கர்ந்திும்னு யார் உங்குக்கு சொன்னு? 



3. கர்மெண்ட் ஆஃபீசர் டியூட்டி டைம்லத்ுட்டா அவர் வாரிசுக்கு  க்கு அந்தப்பி உண்டு என்பு உண்மான், அை இப்பியா கேவப்பத்ும். இான ாக்கத்ை , முன்னாரத்ஏற்பத்ா?



4. என்னான் கோபம் என்றாலும் விமல் ன் அப்பா டெல்லி கை அடிப்பு,   உைப்பு எல்லாம் ரொம்ப ஓவர் , கஞ்சம் கூடில் ஒட்டே இல்லை. அந்த ீன் பத்ில் ேவையே இல்லை 


5.  ன் மன் பொறுப்பில்லாமல் இருக்கான் என்பற்காக ான் டியூட்டி டைமில் ற்கொலை செய்ு அந்தேலையை வங்கித்ுவு எல்லாம் ஓவர் , அைக்கண்டு ஹீரோவுக்கு குற்ற உணர்ச்சியே இல்லாமல் மொக்கையத்ொடர்ு மா எரிச்சல் 


6.  இடைவேளை வை 2 ஹீரோயின்கும் 2 ஹீரக்கை அலையிடுவு , ஒரு பி மேலே போய் ஹீரோவையே அடிப்பு  எல்லாம் பண்ணிட்டு இடைவேளைக்குப்பிறொபுக்கீர்னு பல்டி அடிச்சு லவ்வுவிழ் இனத்ைவின்  ல்டிையே மிஞ்சி விடும் காமெடி 



 


ம் கர்ந்தசனங்கள் ங்கள்  (  படத்துல இருக்கிற 75% டயலாக் ட்விட்டர் TL ல சுட்டதுதான். 25% வார இதழ் ஜோக்ஸ் ல இருந்து சுட்டது )


1. பொண்ணுங்களை காதலிக்க வைக்கறது கூட சுலபம்.ஆனா அதை ஒத்துக்க வைக்கறது தான்கஷ்டம்



2. பிரபலம் ஆகனும்னா எல்லா பிராப்ளத்தையும் சந்திச்சுத்தான் ஆகனும்



3. கடல் ல சேர்ந்த ஆறும் பொண்ணுங்க கிட்டே குடுத்த பணமும் திரும்ப வராது



4. காசு இல்லாதவனை விட காதலி இல்லாதவனே பிச்சைக்காரன்



5. மிஸ்.உன் பேரு என்ன?


பாப்பா.


என்ன ப்பா?


 பாப்பா


 உன் பேர்ல ஒரு படம் வந்திருக்கே.பாப்பா போட்ட தா(ழ்)ப்பா



6. குடி குடியைக்கெடுக்கும்.ஆனா கவர்மென்ட்டை வாழ வைக்கும்





7. கட்சிக்காக கோஷம் போடறதும் வாழ்க்கைல மோசம் போறதும் 1 தான்



8. தமிழ்நாட்ல 1 1/2 லட்சம் கோடி கடன் இருக்காம்.அதை அடைக்கப்போறேன்.



டேய்.முதல்ல நீ குடிச்ச சரக்கு கடனை அடைடா



9. வருசா வருசம் குடியை விடனும்னு சத்தியம் பண்ணிட்டுதான் இருக்கோம்.ஆனா சரக்கைத்தான் உள்ளே விட்டுட்டு இருக்கோம்





10. மிஸ்.5 காபி போடு.


 யோவ்.


ஜெராக்ஸ் காபிம்மா



11. கொலையை விடக்கொடுமையானது காதல்



12. அட்ரஸ் கேட்க வந்த பிகருங்க எல்லாம் ஐ லவ் யூ சொல்ல வந்தவங்கனு பசங்களுக்கு ஒரு நினப்பு




13. மிஸ்.உனக்கு கோயில் கட்டலாம்னு இருக்கேன். எங்கப்பா உனக்கு சமாதி கட்டப்போறார் # KBKR (குமுதம் இதழில் வந்த ஜோக்கை சுட்டுட்டாரு)




14. மீசை முளைச்ச பின்னும் அப்பா காசைத்திருடறது பிச்சை எடுக்கறதுக்கு சமம்




15. ஹலோ! நான் பசியா இருக்கேன்.அப்புறமா கூப்பிடறேன்


 




16. உனக்கு வேலை இருக்குன்னு சொல்றதே ஓவர்.முக்கியமான வேலை இருக்குன்னு சொல்றதெல்லாம் ரொம்பவே ஓவர்



17. செத்துப்போனாலும் கெத்துப்போகாம வாழனும்



18.  ஜெயிச்சவனே தொகுதிக்குப்போக மாட்டேங்கறான், இவன் ஏன் போறான்?




19.  ஹூம் , நானும் தான் ஒரு நாய் வளர்த்தேன், நான் சாப்பிட்டு செக் பண்ணின பின் தான் அது சாப்பிடுது



20.  டேய், பொண்ணு வீட்ல 7 லட்சம் டவுரி பேசி ஒரு லட்சம் அட்வான்ஸ் வாங்கிட்டேன்



21. டேய், நமக்கு லட்சம் பெருசா? லட்சியம் பெருசா?


 இதென்ன கேள்வி ? லட்சம் தான்



22.  டேய், பயப்படாதடா, உன்னை குழிக்குள்ள தள்ளிட மாட்டேன்


 எப்போ பசங்க பொண்ணுங்க பின்னால சுத்த ஆரம்பிக்கறாங்களோ அப்பவே அவங்க படு குழில விழுந்துட்டாங்கன்னு தான் அர்த்தம்



23.  ஒரிஜினலை விட நகல் நல்லாருக்கு , நக்கலாவும் இருக்கு



24.  என் ஆள் டாக்டரும் இல்லை , நர்சும் இல்லை , ஜஸ்ட் டோக்கன் போடும் பார்ட்டி போல, அதுக்கே இந்த பில்டப்பா?



25. என்னங்க? எனக்கு டோக்கன் நெம்பர் 9 குடுத்துட்டீங்க?


 நீங்க 9 வதாத்தானே வந்தீங்க?



26.  ஒருத்தனைக்கலாய்க்கனும் , நக்கல் அடிக்கனும்னா எங்கே இருந்துதான் உங்களுக்கு இந்த ஹியூமர் சென்ஸ் வருமோ ?




27. ஹீரோயின் அப்பா - தம்பியை அடிக்கடி கடைப்பக்கம் பார்க்க முடியுதே , என்ன விசேஷம்?

 ஜெராக்ஸ் எடுக்கனும்னா  ஜெயிலுக்கா போவது?



28.  உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்  ரோஷம் இல்லை  ரோஷம் இல்லை ரோஷம் இல்லை ரோஷம் என்பதில்லையே




29.  மிஸ்! உங்க கிட்டே ஏதோ பேசனும்கறான்

 ஏண்டா , கிராஸ் பண்ணிப்போன பஸ்சுக்கு ஏண்டா கையைக்காட்றே?



30.  ஹீரோயின் - ஏண்டா ,  நெத்தில பட்டையைப்போட்டு என்னை ஆட்டையைப்போடலாம்னு பார்த்தியா?

 


31. ஓவராப்பேசும் வாயும், தெருவுல சுத்தும் நாயும்  எப்போ வேனாலும் அடி வாங்கும்



32.  நாம எல்லாம் அழப்பிறந்தவங்க இல்லை , அழ வைக்கப்பிறந்த்வங்க



33.  அவங்க தான் நம்மை அடிப்பாங்களா? நாமளும் அடிப்போம்ல? சரக்கு



34. ஒருத்தன் சோகமான விஷயத்தை எவ்ளவ் ஃபீலிங்கோட சொல்லிட்டு இருக்கான்?  கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இப்படி சரக்கு அடிச்சுட்டு இருக்கியே?



35. பொண்ணுங்க எல்லா விஷயத்தையும் டக்னு மறந்துடுவிங்க, ஆண்கள் எதையும் , யாரையும் மறக்கவே மாட்டோம்



36.  என்னைப்பிடிக்கலைன்னா அப்டியே போயிடு . பிடிச்சிருந்தா ஒற்றை ரோஜாவோட வா


 சரி , டேய், 5 ரூபா கடன் குடுடா 



37.     இந்தக்காலத்துல 5 ரூபா குடுத்து லவ் பண்ணிட முடியுது , ஆனா அதைக்கொண்டாட ஃபிரண்ட்சுக்கு 500 ரூபாக்கு சரக்கு வாங்கித்தர வேண்டி இருக்கு , அதையும் நீ தான் தரனும் ஹி ஹி



38 . டேய் , உனக்கு பின்னால உதவற மாதிரி  2 லட்சம் பணம் பேங்க்ல போட்டு வெச்சிருக்கேன்
‘’

 பின்னாலன்னா பைல்ஸ் வந்தாவா?


39.  இங்கே பாரு , சுவத்துல அவ சின்ன வயசுல கிறுக்குனது கூட அப்படியே இருக்கு


 சுண்ணாம்பு அடிக்க வக்கில்லை , வாய் பாரு



40.  மாமா , அத்தை எப்படி?


 எப்டின்னா?


 அய்யய்யோ , அந்த அர்த்தத்துல இல்லை  ஹி ஹி




41.  மாமா மாதிரி பேசாம தலாய் லாமா மாதிரி பேசறாரே?



42. நான் டென் த் படிக்கும்போதே கொஸ்டீன் பேப்பர்ல மார்க் போட்டுப்பார்த்தேன், அதே மார்க் தான் வாங்கினேன்


 அப்புறம் ஏன் ஃபெயில் ஆனே?

 நான் மார்க் போட்டுப்பார்க்கும்போதே ஃபெயில் மார்க் தான் வந்துச்சு ஹி ஹி



43.  நமக்குத்தேவை ஃபர்ஸ்ட் மார்க் இல்லை , பாஸ் மார்க்


 இப்போ டாஸ் மாக் தான் வா





44.  நகையை அடமானம் வைக்கனுமா?

 அவனவன் கட்சியையே அடமானம் வைக்கிறான்


45. தகப்பனின் கண்ணீரைக்கண்டவர் யாரும் இல்லை , தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ( பாடல் வரி )



 



சி.பி கமெண்ட் - கேடி பில்லா கில்லாடி ரங்கா - மொக்கை காமெடி - பாண்டிராஜ்க்கு சறுக்கல் - டைம் பாஸ் ஆகும் .10 வருட இடைவெளிக்குப்பின் சொந்த ஊரான சென்னிமலை அண்ணமார் ல் செகன்ட் ஷோ -


விகடன் மார்க் மே பி -40


 குமுதம் ரேங்க் - ஓக்கே


 ரேட்டிங்க் - 2.5  /5 




டிஸ்கி -

மாணவர்கள் இனி என்ன செய்யனும்? - தமிழருவி மணியன் -ன் வழிகாட்டல் கட்டுரை @ ஜூ வி


http://www.adrasaka.com/2013/03/blog-post_30.html