Sunday, April 30, 2023

KISS KISS (2023) -GORZKO GORZKO- (POLISH) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி) @ நெட் ஃபிளிக்ஸ்

 


ஏற்கனவே  வேறு  ஒருவருடன்  திருமணம்  நிச்சயிக்கப்பட்ட   பெண்ணைக்காதலிக்கும் நாயகனின்  கதை  யை சொல்லும்  தமிழ்  சினிமா  பட்டியல்  என்ன?அஜித்தின்  காதல்  ,மன்னன் ., மாதவனின்  மின்னலே , விஜயின்  வசீக்ரா, யூத் , தனுஷின்  யாரடி  நீ  மோகினி . சிவகார்த்திகேயனின்  ரெமோ  என  பட்டியல்  நீளுகிறது .  இந்த  மாதிரி  கதை  அம்சம்  உள்ள  ஃபாரீன்  படம்  தான்  இது . நமக்குப்பழகிய  திரைக்கதை.. காமெடி  மெலோ டிராமா 


    ஸ்பாய்லர்  அலெர்ட்

 பார்க்கும்  பெண்களை  எல்லாம்  வளைத்து  விடும்  வல்லமை  கொண்ட  மன்மதன், வல்லவன்  தான்  பெண்  பித்தன்  ஆன  நாயகன் .அவனுக்கு  ஒரு  சகோதரன் .சகோதரனுக்கு  பூக்கடையில்  பணி  புரியும்  பெண்  மீது  காதல், ஆனால்  அதை  வெளிப்படுத்ததெரியவில்லை.  தமிழ்  சினிமாக்களில்  வருவது  போல  பல  டிராமாக்கள்  போட்டு  சகோதரனின்  காதல்  வெற்றி  பெற  நாயகன்  உதவுகிறான் .. இது  ஒரு  டிராக் ல  போகிறது 


 நாயகி க்கு  திருமணம்  நிச்சயம்  ஆகி  உள்ளது . நிச்சயிக்கப்பட்ட  இடம்  மிகப்பெரிய  இடம் . மாப்பிள்ளையின்  அப்பா  ஒரு  மினிஸ்டர் .மாப்பிள்ளை  துபாயில்  இருக்கிறார். அவர்  வரும்  முன்   திருமண்  நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளின்   ரிகர்சல்  நடக்கிறது . அதில்  நாயகனின் சகோதரன்  தான்  கேமராமேன். தனக்கு  ஒரு  அசிஸ்டெண்ட்  வேண்டும்  என  நாயகனையும்  உடன்  அழைத்துச்செல்கிறான்


நாயகனுக்கு  நாயகி  மீது காதல் நாயகியின்  தந்தை  ஒரு  பிரபல  கேங்க்ஸ்டர். நாயகனை  கடத்தி  மிரட்டி  என்   மக்ள்  வாழ்வில்  தலையிடாதே  என எச்சரித்து  விடுவிக்கிறார்.

 இதற்குப்பின்  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  தான்  திரைக்கதை 


நாயகன்  ஆக  மேத்யூஸ்  கோசிக்விஸ்   அட்டகாசமாக  நடித்திருக்கிறார். அவரது  உடல்  மொழியில்  தெரியும்  தன்னம்பிக்கை  அபாரம். தன்  சகோதரனுக்கு  லவ்  ஐடியாக்கள்  கொடுக்கும்  இடம்  எல்லாம்  ரகளையான  காட்சிகள் 


நாயகி ஆக ஜோஃபியா  டொமாலிக். அழகுப்பதுமை. ஆரம்பத்தில்  நாயகனை  லெஃப்ட்  ஹேண்டில்  டீல்  செய்யும் நபராக  இருந்து  அவர் தான்  இனி  நம்ம  ரைட்  ஹார்ட்  என  மாறும்  இடங்கள்  எல்லாம்   நல்ல  கெமிஸ்ட்ரி 

நாயகனின்  சகோதரனாக , சகோதரனின்  காதலியாக  வருபவர்  நடிப்பும்  அருமை. எளிமையான  மனதைத்தொடும்  காதல்  க்தை  அவர்களுடையது 


 நாயகியின்  வருங்கால  மாமியாராக   வருபவர்  நாயகனை  வளைத்துப்போட  எடுக்கும்  முயற்சிகள்  காமெடி  கலாட்டாக்கள் எனில்    ரிகர்சல்  ஹாலில்  நாயகன்  நாயகியைக்கவர  எடுக்கும் முயற்சிகள்  எல்லாமே  ரசிக்க  வைப்பவை 


 



சபாஷ்  டைரக்டர் ( டோமாஸ்  கோனக்கி ) 

1   முக்கியமான  மீட்டிங்கில்  கலந்து  கொள்ள  இருக்கும்  நாயகன்  நாயகியை  முதல்  முறை  பார்த்ததுமே  அவர்  பின்னாலேயே  போய்  பஸ்சில்  டிக்கெட்  செக்கரிடம்  மாட்டிக்கொள்ளு ம் காட்சி  காமெடி


2   நாயகனின்  சகோதரனின் காதல்  போர்ஷன்  கவித்துவம்  வாய்ந்தவை . மெயின்  கதையை  விட  இவர்களைது  சைடு  டிராக் லவ்  ஸ்டோரி  அபாரம் 


3  நாயகியின்  வருங்கால  மாமியார்  நாயகனை  வளைத்துப்போட  முய்ற்சிக்கும் இடமும்  அப்போது  நாயகன்  உங்க  புருசன்  மினிஸ்டர்  எதுவும்  என்னை  பண்ணிடுவாரா? என  பயத்துடன்  கேட்கும்போது  அவர்  என்னையே  சரியா  பண்ணலை  என  டைமிங்  ஜோக்  அடிக்கும்  இடம்  கலக்கல்  ரகம்  

 ரசித்த  வசனங்கள் 

1   மிஸ்!  உங்களுக்கு  மேரேஜ் ஆகப்போகுதா? என்  ஆழந்த  அனுதாபங்கள் 


2  யோவ், திடீர்னு  என்னை  கிஸ் பண்ணின  உனக்கு  பளார்னு  ஒண்ணு  குடுத்தேன்  கன்னத்துல , ஆனா  கொஞ்சம்  கூட  சுரணை  இல்லாம  சிரிக்கறே?


 எல்லாக்காதல்  கதைகளும்  இப்படி  மோதலில்  தான்  ஆரம்பிக்கும், அதை  நினைச்சேன் சிரிச்சேன் 


3   நீ  செஞ்ச  தப்பை  நினைச்சு  எத்தனை  நாட்களுக்குத்தான்  கவலையோடயே  இருப்பே? அவளுக்காகப்போராடு .  சந்தோஷம்  வேணும்னா  போராடனும் 


4  அந்தப்பொண்ணுக்கு  மேரேஜ்  ஆகப்போகுது. நீ  என்னடான்னா  அவளை  லவ்  பண்ண  ட்ரை  பண்ணிட்டு  இருக்கே?


  மேரேஜ்   ஃபிக்ஸ்  ஆன  பொண்ணுங்களை  லவ்  பண்ணக்கூடாதுனு  சட்டம்  இருக்கா? என்ன? 


5   நான்  அவளை  லவ்  பண்றேன், டிராமா  போட்டு  ஏமாத்த  விரும்பலை 


 ஏமாத்தனும்னு சொல்லலை . உன்  மேல  ஒரு  பொறாமையை  அவளுக்கு  வர வைக்கனும், அது  போதும்  லவ்  பண்ண 


6  உன்  டிரஸ்சிங்   எல்லாம்  ஹாலிவுட்  ஸ்டைல்ல  இருக்கு , குறிப்பா  டைட்டானிக்  ஹீரோ  டி  காப்ரியோ  மாதிரி  இருக்கே?


 எம்மா  மின்னல் , நீ என்னை  பாராட்றியா? கலாய்க்கறியா? 


7 காதல்  ஒரு  மனுசனை , அவன்  கேரக்டரை  மாத்தும்னு  நான்  நம்பறேன்


8 காதலிக்கும்போது  முன்  இருந்ததை  விட  நாம்  சிறந்தவர்கள்  ஆவோம், இந்த  உலகம்  முன்பிருந்ததை  விட  அழகாகத்தோன்று,ம் 


9  மேரேஜ்  பற்றி  நீங்க  என்ன  நினைக்கறீங்க?


 முன்  பின்  அறிமுகம்  இல்லாத  நபருடன்  பயணிக்கப்போகும்  உல்லாச  காதல்  பயணம்


10  காதல்  என்பது  பெறுவதல்ல , அளிப்பது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   மேரேஜ்  ரிகர்சல்  ஹாலில்   நாயகிக்கு  மாப்பிள்ளையாகப்போகிறவர்  இன்னும்  வரவில்லை , அதற்காக  டான்ஸ்  ரிகர்சலுக்கு  நாயகியின்  வருங்கால  மாமியார்  நாயகனை  நாயகியுடம்  டான்ஸ்  ஆடச்சொல்லும்  காட்சி  எல்லாம்  ஒவர்.


2  நாயகியின்  அப்பவான  கேங்க்ஸ்டர்  டாண்  நாயகனை  கடத்தி  வைத்து  பயப்படாதே , மேரேஜ்   முடிந்ததும்   உன்னை  ரிலீஸ்  பண்ணிடுவேன்  என்கிறார். ஆனால்  நாயகி  அவரிடம்  வந்து  அவரை  எதும்  செய்ய  வேண்டாம், ரிலீஸ்  பண்ணிடுங்க  எனும்போது  நாயகனிடம்  சொன்ன  அதே  பதிலை  சொல்லாமல்  ரிலீஸ்  செய்ய  ஒத்துக்கொள்வது  ஏன் ? 


3  நாயகன் - நாயகி  திருமணம்  நடைபெற  வேண்டும்  என்பதற்காக    நிச்சயிக்கப்பட்ட  மாப்பிள்ளைக்கு  ஒரு  ஹோமோ  லவ்  இருக்கிற்து  என  ஒரு  சமாளிஃபிகேஷன்  ஸ்டோரி  சொல்வது  படு  செயற்கை  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  ஒரே  ஒரு  இடத்தில்    அடல்ட்  கண்ட்டெண்ட்  இருக்கிறது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மொழியே  தேவை  இல்லாமல்  ஒரு  தமிழ்ப்படம்  பார்ப்பது  போலவே  இருக்கும்  திரைக்கதை  அமைப்பு  படத்தின்  பலம் 105  நிமிடங்கள்  ஓடும்  இந்தப்படத்தின்  எடிட்டிங்  கனகச்சிதம், நெட்  ஃபிளிக்ஸ்  ஓ டி டி யில்  காணக்கிடைக்கிறது . அடல்ட்  கண்ட்டெண்ட்  ஒரு  இடத்தில்  இருக்கிறது 

Saturday, April 29, 2023

DASARA (2023) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா ) @ நெட் ஃபிளிக்ஸ்


   நான்  ஈ (  ஈகா) படம்  மூலம்   அனைத்து  ர்சிகர்களின்  மனம்  கவர்ந்தவர்  நானி. நேச்சுரல்  ஆக்டர்  என  டைட்டிலில் பட்டப்பெயர்  போடும்  அளவுக்கு  வளர்ந்தவர். எல்லா  நல்ல  நடிகர்களுக்கும்  ஒரு  சறுக்கல்  படம்  அமையும், அப்படிப்பட்ட  ஒரு  சறுக்கல்  தான்  இந்தப்படம் . 65  கோடி  செலவில்  எடுக்கப்பட்ட   இப்படம்  முதல்  வார  வசூல்  மட்டும் 115  கோடி  வசூலித்தது .30/3/2023  அன்று திரை  அரங்குகளில் ரிலீஸ்  ஆன  இப்படம் 27/4/2023   அன்று  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது


  ஸ்பாய்லர்  அலெர்ட்

நண்பனுக்காக  எதையும்  விட்டுக்கொடுக்கத்தயார்  ஆக  இருக்கும் நாயகன்  சின்னப்பையனா  இருக்கும்போது  சக  மாணவியைக்காதலிக்கிறான். அந்த  மாணவிக்கு  லவ்  லெட்டரும்  புக்கில்  வைக்கிறான், ஆனால்  தன்  நண்பன்  அதே  பெண்ணைக்காதலிப்பது  அறிந்ததும்  தன்  காதலை  வெளிப்படுத்தாமல்  மறைக்கிறான்.


 ஃபிளாஸ்பேக்  முடிந்து  இப்போ  எல்லோருக்கும்  திருமண  வயது. நாயகனின்  நண்பனுக்கும், நாயகிக்கும்  திருமணம்  ஆகிறது. அதே பகுதியில்  வசிக்கும்  வில்லன்  ஒரு  பெண்  பித்தன். 13  வருடங்களாக  நாயகியை  ஒரு  தலையாய்  காதலித்து  வரும்  தறுதலை. அவன்  நாயகனின்  நண்பனைக்கொலை  செய்து  விடுகிறான்


 நாயகியை  அடைய  வில்லன்  போடும்   திட்டத்தை  நாயகன்  முறியடித்து  நாயகியைக்கரம்  பிடிப்பதே  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  நானி . பரட்டைத்தலை , தாடி அழுக்கு  உடை  என  ஆளே  மாறி விட்டார் . அவர் மெனக்கெட்ட  ஆளவுக்கு  இயக்குநர்  திரைக்கதையில்  மெனக்கெடவில்லை 


நாயகியாக  கீர்த்தி  சுரெஷ்.  டல்  மேக்கப்பில்  சில  கோணங்களில்  நந்திதா  தாஸ்  போலவும்  சில கோணங்களில்  அ[பிராமி  போலவும்  இருக்கிறார். நடிக்க  நல்ல  வாய்ப்பு 


நண்பனாக  தீக்‌ஷித்  ஷெட்டி  பிரமாதமாக  நடித்திருக்கிறார். வில்லனாக  மலையாள  நடிகர்  ஷைன்  டாம்  சாக்கோ  கலக்கி  இருக்கிறார். அனால் அவரது  கேரக்டர்  டிசைன்  சரியாக  வடிவமைக்கப்படவில்லை 


சமுத்திரக்கனி  மாறுபட்ட  கெட்டப்பில்  ஆளே  அடையாளம்  தெரியாத  கல்யாண  ராமனாக  வில்லனின்  அப்பா  ரோலில்  வருகிறார்


ஊர்  பெரிய  மனிதராக  சாய்  குமார்  கச்சிதமான  நடிப்பு   வில்லனின்  மனைவியாக  வரும்  பூர்ணா  அழகு 

சத்யன்  சூர்யனின்  ஒளிப்பதிவில்  தசரா  விழாக்காட்சிகளும்  , ரயில்  காட்சிகளும்  அருமை  சந்தோஷ்  நாராயணன்  இசை  அமைப்பில்  2  பாட்டு  செம  ஹிட்டு , கபாலி  பிஜிஎம்  மை  ஆங்காங்கே  உருவி  இருக்கிறார் 


சில்க்  ஸ்மிதா  பெயிண்ட்டிங்  கட்  அவுட்  காட்சியில்  ஆர்ட்  டைரக்டர்  உள்ளேன்  ஐயா  என்கிறார்


நவீன்  நூலியின்  எடிட்டிங்கில்  156  நிமிடங்களில்  கட்  செய்து  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் 


நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர்


1  மாறுபட்ட  வெடங்களில்  தொடர்ந்து  நடித்து  வரும்  ம்லையாள  நடிகர்  ஷைன்  டாம்  சாக்கோ வின்  கேரக்டரி  டிசைன்  மாங்கா  மடையன்  போல  டிசைன்  செய்யப்பட்டு  இருந்தாலும்  சாமார்த்தியமாக  அவரை  நடிக்க  ஒப்புக்கொள்ள  வைத்தது 


2  கவுரவமான , கண்ணியமான  படங்களில்  நடித்து  வந்த  நானியை  மசாலாக்குப்பைப்படத்தில்  நடிக்க  ஒத்துக்கொள்ள  வைத்தது 


3  அழகாக  இருக்கும்  நாயகி  கீர்த்தி  சுரேஷை  டல்  ,மேக்கப்  போட்டால்  எங்கேயோ  போய்டுவீங்க  என  நம்ப  வைத்து  அவரைக்கண்டம்  பண்ணியது 


4  மெயின்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாத  ஒரு  கேரக்டரை  வலுக்கட்டாயமாக  திணித்து  நீங்கதான்  படத்துல  டர்னிங்  பாயிண்ட்  என  நம்பவைத்து  சாய்  குமாரை  புக்  பண்ணியது 




செம  ஹிட்  சாங்க்ஸ்


1   போட்டா  வைகுந்தம், போடாட்டி  அசமஞ்சம்... பறையைக்கொட்டு  பறையைகொட்டு - தூம்  தாம்  கூத்து  உனக்கும்  எனக்கும்  வேட்டு 


2  தீக்காரி , தீய வெச்சுப்பார்க்கறியாடி 


3  ரா ராரிராரோ   பிஞ்சு  மனசா பறந்து  போனோம், நெஞ்சில்  கனவு  நிறைஞ்சு  போனோம்


4  மைனரு  வேட்டிக்கட்டி  மச்சினி  மனசுல  அம்பு  விட்டான்


  ரசித்த  வசனங்கள் 

1  எங்க  ஊரில்  காத்துக்கூட  கறுப்பாதான்  வீசும் 

2  எல்லாரும்  குடிப்பது  ஒரே  சரக்கு  என்றாலும்  யார்  வெளில  குடிக்கனும் ? யார்  உள்ளே  குடிக்கனும்?  என்பதை  அவங்க  சாதிதான்  தீர்மானிக்கும் 


3  பாட்டி, நீ  ஏன்  எப்போப்பாரு  சரக்கு  அடிச்சுக்கிட்டே  இருக்கே?


 ஒரு  தெகிரியம்  ( தைரியம் )  வேணும்னு  தான்   


4  ஒருத்தனுக்கு  நல்லது  பண்ணினா  நல்லவன்பாங்க ,  ஊருக்கே  நல்லது  பண்ணினா  தலைவன்பாங்க 


5  குடிச்சுட்டு  மறந்து  போறது  தப்பில்லை , தப்பு  பண்ணிட்டு  அதை  மறந்து  போறது  தப்பு


6 தட்டிகேட்க  அவன்  ராமனும்  இல்லை , கட்டிக்கொள்ள  அவள்  சீதையும்  இல்லை , ஆனா  நான்  ராவணன்  தான்


7  அரசியல்ல  இருந்தாலும்  தப்பு  பண்ணி  இருக்கேனே  தவிர  பாவம்  செஞ்சதில்லை 


8  பெண் மேல  ஆசைப்பட்டு  பத்து  தல  இருந்தும் ஒத்தைத்தலை  இருக்கறவனால  உயிரை இழந்தான்  ராவணன்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகன்  சின்னப்பையனா  இருக்கும்போது  சின்னப்பொண்ணா  இருக்கும்  நாயகி முள்  குத்திடுச்சா?னு  கேக்குது , ஆமானு  பையன்  சொன்னதும்  க்ளோசப்ல  உள்ளங்கையைக்காமிக்கறாங்க. பெரிய  ஆணியை  வெச்சுக்கீறி  விட்ட  மாதிரி  அவ்ளோ  பெரிய  காயம். எம்ப்பா  முள்  குத்துனா  எந்த  ஊருல  இவ்ளோ  பெரிய காயம்  ஆகும் ?


2  நாயகி  படிக்கும்  புக்கில்  லவ்  லெட்டர்  வைத்த  நாயகன்  தன்  நண்பன்  நாயகியை  லவ்வுவதாகச்சொன்னதும்  பதறி  ஓடி  வந்து  நாயகி  புக்கைப்பிடுக்கி  தாறு மாறா  கிழிக்கறாரு. ஏன்  புக்கை  வேஸ்ட்  பண்ணனும், பிடுங்கி  ஓடிப்போய்  மறைவிடதில்  லெட்ட்ரை  மட்டும்  எடுத்துட்டு  புக்கை  திருப்பித்தந்திருக்கலாமே?


3  ரயிலில்    வரும்  கருங்கற்களை ஒரு  சாக்குப்பைல  போட்டுக்கட்டி  இணையாக  வரும்    வேன்ல  இருக்கற  தன்  ஆளுக்கு  வீச்  அவன்  என்னமோ  கிரிக்கெட்  பாலை  கேட்ச்  பண்ற  மாதிரி  25  கிலோ  கல்  மூட்டையை  அசால்ட்டாப்பிடிக்கறான்


4  தூம்  தாம்  கூத்து  உனக்கும்  எனக்கும்  வேட்டு   பாட்டை ஆஸ்கார்  விருது  பெற்ற நாட்டு  நாட்டுபாட்டு  ஸ்டைலில்  எடுத்திருக்காங்க . சொந்தமா  யோசிச்சு  வேற  கொரியோ  கிராஃபில  பண்ணி  இருக்கலாம், அந்தப்பாட்டு  முடியறப்ப  ஒருபோலீஸ்  கான்ஸ்ட்பிளை  பளார்னு  அடிக்கறார்  ஹீரோ. எதுக்குனு  தெரியல , போலீஸை  அடிச்சா  என்ன  ஆகும்/ஆனா  ஒண்ணும் ஆகலை 


5  எந்த  ஊர்ல  கிரிக்கெட்  மேட்ச்  நடக்கும்போது  பேட்ஸ்மேன்  கூலிங்க்  கிளாஸ்  போட்டுகறாரு? ஒவ்வொரு ஷாட்  அடிச்சதும்  அதே  கிரவுண்ட்ல  தண்டால்  எல்லாம்  எடுக்கறாரு?  என்னதான்  மசாலாப்படம்னாலும்  மன்சாட்சி  வேண்டாமா? 


6   படம்  பூரா ஹீரோ , வில்லன்  எல்லாருமே கேன்சர்  பேஷண்ட்  மாதிரி , கல்லீரல்  டேமேஜ்  பார்ட்டிங்க  மாதிரி  தம், சரக்கு  அடிச்சுக்கிட்டே  இருக்காங்க , கஷ்ட  காலம் 


7  மது  விலக்கு  அமல்படுத்த்றேன்னு  வாக்கு  கொடுத்து  தேர்தலில் ஜெயிக்கும்  சாய்  குமார்  நன்றி  அறிவிப்புக்கு மக்களிடம்  வரும்போது  தம்  அடிச்சுக்கிட்டே  வர்றாரு


8கொலைக்கு பயன்பட்ட  ஆயுதமான  அரிவாளைக்கைப்பற்ற  ஹீரோ  நடு  ராத்திரில  கிணத்துக்குள்ளே  குதிக்கறாரு. அந்த  நடு  ராத்திரில  கிணத்தடில  20  அடி  ஆழத்துல  பிரமாதமான  வெளிச்சமா  இருக்கே ? எப்படி ? பவுர்ணமினு  சமாளிச்சாலும்  நிலா  ஒளி  20  அடி  ஆழம்  ஊடுருவுமா? 


9  அரிவாளைக்கைப்பற்றும்  ஹீரோ  கைப்பிடியைப்பிடிச்சு  எடுக்கறாரு. கொலைகாரன்  ரேகை  எப்படி  கண்டு  பிடிக்க  முடியும் ? 


10 வில்லன்  பண  பலம்  மிக்கவன், அரசியல்  செல்வாக்கு  உள்ளவன்,அவன்  வீட்டுக்கு  எதிர்  வீட்டில்  குடி  இருக்கும்  நாயகியை  அவன்  பலவந்தமா அ டைய  நினைச்சா  ஈசியா  அடைந்திருக்கலாம், அதை  விட்டுட்டு  நாயகியின்  கணவனை, கணவனின்  ந்ண்பர்கள்  நான்கு  பேரை  கொலை  செய்வது  எல்லாம்  தேவை  இல்லாத  ஆணி 


11   பாலகம்  தெலுங்குப்படத்தில்  வரும்  காக்கா   படையல்  சாப்பாடு  சாப்பிடாத  காட்சியை  சுட்டிருக்காங்க 


12  தாலி  இழந்த  நாயகிக்கு  நாயகன்  தாலி  கட்டும்போது  வேடிக்கை  பார்த்துட்டு  பின்  அவன்  கை  கோர்த்து  வீட்டுக்கு  அழைக்கும்போது  கூடவே  போய்ட்டு 10  நாட்கள்  கழிச்சு  சாவகாசமா  நாயகி  கேட்குது “ என்  சம்மதம்  இல்லாம  எதுக்குடா  எனக்கு  தாலி  கட்டுனே?


13  நாயகியை  சைக்கிளில்  அழைத்து  வரும்  நாயகன்  கேனம்  மாதிரி  குட்டைக்குள்  சைக்கிளை  விட்டு  ஏன்  கீழே  விழறாரு. சுத்தி  அவ்ளோ  இடம்  இருக்கே?  ஒதுங்கிப்போலாமில்ல?


14  தாலி  இறங்கின  பின்  11  நாள்  ஆகட்டும்னு  காத்திருந்தேன்னு  வில்லன்  நாயகி  கிட்டே  க்ளைமாக்ஸ்ல சொல்ர்றான். இவன்  என்ன  தெய்வீகக்காதலா  பண்றான் ?  பண்ணப்போறது  ரேப்பு . இதுல     சாஸ்திர  சம்பிரதாயம்  எல்ல்லாம்  எதுக்கு  மாப்பு ? 


15  வில்லன் நாயகி  கிட்டே  12  வருசமா  உன்னை  அடையனும்னு  காத்திருந்தேன்னு  ட்யலாக்  பேசறான். ஆனா  தண்டமா  எதுக்கு  காத்திருந்தான்னு  சொல்லலை 


16  வில்லன்  வந்தமா  நாயகியை  ரேப்  பண்ணுனமா?னு  இல்லாம  நாயகி  கிட்டே நாயகனோட  புகழ்  பாடிட்டு  இருக்கான், அந்தக்கால்  எம் ஜி ஆர்  படங்களில்  இப்படித்தான்  நம்பியார் , பிஎஸ்  வீரப்பா  வகையறாக்கள்  அவ்ரை புகழ்வாங்க 

17  நாயகன்  க்ளைமாக்ஸ்ல  அரிவாளை  பல்லால  கடிச்சுக்கிட்டே  தன்  கையை  அரிவாளால்  கீறி  தன்  நெத்தில  ரத்தத்திலகம்  வைக்கறாரு , பக்கத்துலயே  பத்து  ரூபாக்கு  குங்குமம்  வித்திட்டு  வியாபாரி  இருக்காரு , அதை  வாங்கி  திலகம்  வெச்சிருந்தா  சேதாரம்  இல்லை 


18  முதுகில்  கத்தியால்  அரைஅடி  ஆழம் குத்தப்பட்ட  ஹீரோ  க்ளைமாக்ஸ்ல  அரிவாளுடன்  வரும்  126  பேர்  கூட  ஃபைட்  போட்டு  எல்லாரையும்  கொல்றாரு , கின்னஸ்  ரெக்கார்டு  இது 

19  க்ளைமாக்ஸ்ல ஹீரோ  ஆவேசமா  அத்தனை பேரை  வெட்றதைப்பார்த்து  வில்லன்  எஸ்  ஆகி  இருக்கலாம், கிறுக்கன்  மாதிரி  ஒரு  சேர்  எடுத்து  நடுவில்  போட்டு  உக்காந்து  போஸ்  கொடுத்து  மாட்டிக்கறான்


20   ஹீரோ   ஆகாயத்தில்  1  கிமீ  உயரத்தில்  இருந்து  பறந்து வந்து  வெட்டும்  வரை  வில்லன்  வாயைப்பிளந்து  ஆ -னு  பார்த்துட்டே  இருக்கான், ஓடிப்போலாமில்ல?


21    க்ளைமாக்சில்  125  பேரைக்கொலை  செய்த  நாயகனுக்கு  7  வருடம்  தான்  சிறை  தண்டனையா? என்ன  கொடுமை  சார் இது ?


22   சிறைக்கதைகளுக்கு  க்ளோஸ்  கட்டிங்  மாதா மாதம்  பண்ணி  விடுவார்கள். இதை  அறிய  மகாநதி  படம்  பார்க்கவும், க்ளைமாக்ஸ்ல  ஹீரோ  ஜெயில்ல  இருந்து  ரிலீஸ்  ஆகும்  போது  புட்டபர்த்தி பாபா  மாதிரி பரடைத்தலையோட  வர்றாரு .


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - ஏ  படம்னு  சென்சார்  சர்ட்டிஃபிகேட், அது  வன்முறைக்காக 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   நானி  மேல்  நல்ல  அபிப்ராயம்  வைத்திருக்கும்  ரசிகர்கள்  இந்த  டப்பாப்படத்தைப்பார்க்காமல்  தவிர்க்கவும் . இது  போன்ற்  ப்டஙகள்  சுமாராக  ஓடினால்  கூட  அது  ஆரோக்யமான  சினிமாக்களுக்கு  ஆபத்து  . ரேட்டிங்  1.5 / 5 


Dasara
Dasara Film.jpg
Promotional poster
Directed bySrikanth Odela
Written by
  • Srikanth Odela
  • Jella Srinath
  • Arjuna Paturi
  • Vamsi Krishna P.
Produced bySudhakar Cherukuri
Starring
CinematographySathyan Sooryan
Edited byNaveen Nooli
Music bySanthosh Narayanan
Production
company
Sri Lakshmi Venkateswara Cinemas
Distributed by
Release date
  • 30 March 2023[1]
Running time
156 minutes
CountryIndia
LanguageTelugu
Budget₹65 crore[a][2]
Box officeest. ₹115.5 crore[3]

Friday, April 28, 2023

அயோத்தி (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( எ ஃபீல் குட் மூவி) @ ஜீ 5,

   


நூறாவது  நாள்  என்ற  க்ரைம் த்ரில்லர்  படத்தைப்பார்த்த  ஆட்டோ  சங்கர்  தான்  செய்த  பல  குற்றங்களுக்கு  வழிகாட்டியாக  அந்தப்படம்  அமைந்தது  என  பேட்டி  அளித்தான்.  ஸ்பைடர் மேன்  படத்தைப்பார்த்து  மொட்டை  மாடியிலிருந்து  குதித்து  சாகசம்  செய்ய  முயற்சித்து  காயம்  அடைந்தவர்  பலர் . கமல்  நடித்த   விக்ரம்  பாகம் 1  படம்  பார்த்து  1989ல்  சிக்கய்ய  நாயகர்  காலேஜ் , ஈரோடு  மாணவன்  பாபு  உயரமான  இடத்தில்  இருந்து  குதித்து  தன்  இடது  காலை  முறித்துக்கொண்டார். பொதுவாக  சினிமா  என்பது  நமக்கு  ஒரு  தாக்கத்தை  ஏற்படுத்தும்  ஊடகமாகவே  பார்க்கப்படுகிறது. படத்தின்  நாயகன்  போல்  சாகசம்  செய்ய  பலருக்கும்  ஆசை


நமக்கு  அறிமுகமான, பழக்கமான  நண்பர்கள்  அல்லது  உறவினர்களுக்கு  உதவி  செய்வது  எல்லோரும்  செய்வது , ஆனால்  நமக்கு  அறிமுகம்  இல்லாத  புதியவர்களுக்கு  எந்த  விதமான  பிரதிபலனும்  எதிர்பாராமல்  உதவுவதுதான்  மனைத  நேயத்தின்  மகத்தான  சிறப்பு  என்னும்  பிரமாதமான  கருத்தை  உள்ளடக்கி  நிகழந்த  ஒரு  உண்மை  சம்பவத்தின்  அடிப்படையில்  எழுதப்பட்ட  ஒரு  திரைக்கதை  இது . இந்த  ஆண்டின் சிறந்த  திரைக்கதை , சிறந்த  படம், சிறந்த  வசனம்  என  பல  விருதுகளைக்குவிக்க  தகுதி  உள்ள  அற்புதமான  படம் இது 


இந்தப்படத்தைப்பார்த்த  மக்களில்  10 %  பேராவது  தங்கள்  வாழ்க்கையில்  யாருக்காவது  ஏதாவது  உதவி  செய்ய  வேண்டும்  என  முடிவு  எடுத்தால்  அதுவே  இயகுநருக்குக்கிடைக்கும்  வெற்றி


ஸ்பாய்லர்  அலெர்ட்


தீபாவளி  அன்று  கதை  துவங்குகிறது . அயோத்தியைச்சேர்ந்த  ஒரு  குடும்பம்  அப்பா , அம்மா,  மகள் , மகன்  என  நால்வர்  புனித  யாத்திரையாக  தமிழகம்  ராமேஸ்வரம்  வருகிறார்கள் 


 மதுரை  டூ  ராமேஸ்வரம்  டாக்சியில்   பயணிக்கும்போது  முன்  கோபியான  அப்பா  டிரைவருடன்  தேவையற்ற  வாக்குவாதத்தில்  ஈடுபட  கார்  விபத்துக்கு  உள்ளாகிறது .மற்றவர்களுக்கு  லேசான  காயம். அம்மாவுக்கு  மட்டும்  படுகாயம்.  ஆஸ்பத்திரிக்கு  அழைத்துச்செல்லும்  வழியில்   இறந்து  விடுகிறார்.


 இறந்த  அம்மாவின்  உடலை  விமானத்தில்  கொண்டு  செல்ல  பல  சிக்கல்கள்  இருக்கின்றன .  டாக்சி  டிரைவரின்  நண்பனான  நாயகன்  இந்த  குடும்பத்திற்கு  உதவி  செய்து  எப்படி  அவர்க்ளை  ஊருக்கு  அனுப்பி  வைக்கிறான்  என்பதே  மீதி  திரைக்கதை 


அப்பாவாக  ஹிந்தி  நடிகர்  யஷ்பால்  சர்மா  கிட்டத்தட்ட வில்லன்  ரோல் .  பெண்களை  மதிக்காத ஆனால்  மத  நம்பிக்கைகள்  கொண்ட  மூர்க்கத்தனம்  நிரம்பிய  மூடன்  கேரக்டர்  டிசைன்  அருமையாக  வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எல்லோரிடமும்  சண்டை  போடும்  கேரக்டரை  அசால்ட்டாக  செய்து  ஆடியன்சின்  வெறுப்பை  சம்பாதிக்கறார்


அம்மாவாக  அஞ்சு  அஸ்ராணி  அந்தக்கால  அம்மாவாக  கணவனுக்கு  கட்டுப்பட்டவராக  பாந்தமாக  வந்து  போகிறார்.  பல  காட்சிகளில்  பார்வையாலேயே  நடித்திருக்கிறார்


மகளாக , நாயகியாக  ப்ரீத்தி அஸ்ராணி புது  வரவு . அப்பாவிடம்  வெடித்து எழும்போது  அப்ளாஸ்  அள்ளுகிறார். நாயகனிடம்  மொழி  தெரியாமல் கும்பிடு  போட்டே  பரிதாபத்தை  சம்பாதிக்கிறார். மகானக்  அத்வைத்  பரிதாபம்  ஏற்படுத்தும்  பால்  வடியும்  முகம் 



கதையின்  நாயகனாக  சசிகுமார் . நாடோடிகள் , சுப்ரமணியபுரம்  படங்களில்  வருவது  போல  இதிலும்  உதவும்  கதாபாத்திரம்  தான், ஆனால்  மிகை  இல்லாமல்  சினிமாத்தனம்  இல்லாமல்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்

விமான நிலைய  அதிகாரியாக  சேத்தன் , சவப்பெட்டி  தயாரிப்பவராக  போஸ்  வெங்கட்  என  சின்ன  சின்ன  கதாபாத்திரங்கள்  கூட  விக்ரமன்  படங்களில்  வருவது  போல  பாசிட்டிவ்  வைப்ரேஷனில்  வருவது  சிறப்பு 

முதல்  20  நிமிட்ங்கள்  ஸ்லோவாக  செல்லும்  திரைக்கதை  பிறகு  ஒரு  த்ரில்லர்  கதைக்கே  உரிய  வேகத்துடன்  பயணிக்கிறது ஒளிப்பதிவு  மாதேஷ்  மாணிக்கம் . அயொத்தி , ராமேஸ்வரக்காட்சிகள்  சிறப்பு . இசை  என்  ஆர்  ரகுநந்தன். மெலோடி  பாடலக்ள்  இவருக்கு  கை  வந்த  கலை  போல . பின்னணி  இசை  இன்னும்  பிரமாதப்படுத்தி  இருக்கலாம் 

எடிட்டிங்  சான்  லோகேஷ் . 2  மணி  நேரத்துக்கு  2  நிமிடம்  குறைவு ., கச்சிதமான  ட்ரிம்மிங்  

 


சபாஷ்  டைரக்டர்  (  மந்திர மூர்த்தி ) 


1  நண்பன்  கேட்டான்  என்பதற்காக  தன்  பைக்கை  வைத்து  பணம்  ஏற்பாடு  செய்து  தரும்  கேரக்டர்  நெகிழ  வைக்கிறது 


2  நாயகன் - நாயகி  இருவருக்கும்  காதல்  என்று  ஜல்லி  அடிக்காமல்  மனிதாபிமானம்  என்ற  ஒரே  நேர்கோட்டில்  பயணிக்கும்  திரைக்கதை 


3  சர்ட்டிஃபிகேட்  வாங்குவதற்காக  ஆஃபீசர்  வீட்டு  வாசலில்  ஆம்புலன்ஸ்  சைரனை  ஒலிக்க  விட்டு  நாயகன்  செய்யும்  அடாவடித்தனம்  அருமை 


4  போஸ்ட்மார்ட்டம்  செய்த  ஊழியர்களுக்கான  கூலி  தர  சிறுவன்  தன்  உண்டியலை  உடைத்து  காசு  தரும்  காட்சி 


5 படத்தின்  பெரும்பாலான  சம்பவங்கள்  ஒரே  நாளில்  நடப்பது  போல  காட்டியது , காஸ்ட்யூம்  செலவை  மிச்சம்  செய்தது 

6  ஃபீல்  குட்  மூவியில்  கூட  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  வைக்க  முடியும்  என்று  உணர்த்திய  இடம்  அருமை 


  ரசித்த  வசனங்கள்  ( எஸ்  ராமகிருஷ்ணன்) 


1 உசுரோட  இருக்கறவங்க  வேணா  செஞ்ச  உதவியை  மறக்கலாம், ஆனா  ஆத்மா  மறக்காது 

2  உனக்குப்பிடிச்சவங்களோட  மரணம்  ஏற்படும்போது   மொழி  அறியாத  ஊரில் தனியா  மாட்டிகிட்டா   என்ன  செய்ய  முடியும்??


3  நம்ம  ஊர்ல  ரேஷன்  கார்ட்ல  இனிஷியல்  மாத்தவே  30  நாட்கள்  ஆகும். இதுளா  7  சர்ட்டிஃபிகேட்  வாங்கனுமா?


4  நீ  வெள்ளை  சட்டை  மேல  கையை  வெச்சே , அவன்  காக்கி  சட்டை  கிட்டே  கால்  பண்ணிட்டான் 


5   இப்படி  எல்லாம்  செஞ்சா  யார்  உதவி  செய்வாங்க ? ஒதுங்கிதான்  போவாங்க 

6  இருக்கறவங்க  கிட்டே  தான்  பிராப்ளம்  பண்றீங்க, இறந்தவங்க  கிட்டெயுமா? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கல்லூரி  மாணவியான  நாயகிக்கு  ஆங்கிலம்  தெரிந்திருந்தும்  எல்லா  காட்சிகளிலும்  ஹிந்தியில்  பேசுவது  ஏன் ?


2  பிரமாதமான  கதைக்கரு , திரைக்கதை   என  பலமான  அஸ்திரம்  இருந்தும்  ஓப்பனிங்  ஹீரோ  ஃபைட்  சீன்,  போலீஸ்  ஸ்டேஷன்  கானா  பாட்டு  என  கமர்ஷியல் குப்பைகள்  எதற்கு? ஒரு  தரமான  படத்தில்   தரம்  இல்லாத  காட்சிகள் 


3  க்ளைமாக்சில்  ஃபிளைட்டில்  பயணம்  செய்ய  இருக்கும்  இருவர்   விட்டுக்கொடுக்க  முன்  வரும்  காட்சிகள்  பார்க்க  நன்றாக  இருந்தாலும்  நடைமுறைக்கு  ஒவ்வாதவை , ரயில் , விமானம்  ஆகியவற்றில்  பயணம் செய்யும் போது  யார்  பெயரில்  டிக்கெட்  இருக்கிறதோ  அவர்கள்  தான்  பயணம்  செய்ய  முடியும் 


4  மதுரை  டூ  ராமேஸ்வரம்  போக பஸ் , ரயில்  என  பொது  போக்குவரத்து  இருக்க  எதற்கும்  முயலாமல்  கஞ்சனான  வில்லன்  டாக்சியில்  பயணிக்க  முடிவெடுத்தது  ஏன் ? 


5  காரில்  பயணிக்கும்போது  விபத்து  ஏற்பட்டால்  முன்  சீட்டில்  இருப்பவர்களுக்குத்தான்  அதிக  காயங்கள்  ஏற்படும், ஆனால்  வில்லன் காயங்கள்  ஏதும்  இல்லாமல்  தப்பிப்பதும்  , அவன்  மனைவி படு  காயம்  அடைவதும்  எப்படி ? மனைவி  பின்  சீட்டில்  தானே  வந்தார்? மனைவியுடன்  பயணித்த  மகன் , மகள்  இருவருக்கும்  பெரிய  காயங்கள்  இல்லை 


6   மரணத்தில்  சந்தேகம்  இருக்கு , எல்லாரையும்  தனித்தனியா  விசாரிங்க  என  போலீஸ்  ஆஃபீசர்  சொல்கிறார், ஆனால்  நாயகன், அவர்  நண்பன்  இருவரையும்  ஒன்றாகத்தான்  விசாரிக்கிறார்கள் . முன்னுக்குப்பின்  முரணான  தகவல்  வருகிறதா  என  செக்  பண்ணத்தானே  தனித்தனி  விசார்ணை ?  அதை  ஏன்  செய்யவில்லை ?





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மசாலாக்குப்பைகளையே  பார்த்து  சலித்த  நம்  கண்களுக்கு  அருமையான  கருத்தை  நாடகத்தனம்  இல்லாமல்  சொன்ன  ஒரு  நல்ல  படம்  அவசியம்  அனைவரும்  காண  வேண்டிய  படம் , ஆனந்த  விகடன்  மார்க்  50   அட்ரா  சக்க  ரேட்டிங்  4 / 5 


அயோத்தி
அயோத்தி போஸ்டர்.jpeg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ஆர்.மந்திர மூர்த்தி
எழுதியவர்ஆர்.மந்திர மூர்த்தி
உற்பத்திஆர்.ரவீந்திரன்
நடித்துள்ளார்M. சசிகுமார்
ப்ரீத்தி அஸ்ராணி
யாஷ்பால் சர்மா
புகழ்
ஒளிப்பதிவுமாதேஷ் மாணிக்கம்
திருத்தியவர்சான் லோகேஷ்
இசைஎன்.ஆர்.ரகுநந்தன்
தயாரிப்பு
நிறுவனம்
வெளிவரும் தேதி
  • 3 மார்ச் 2023
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Thursday, April 27, 2023

பத்து தல ( 2023) - தமிழ் -சினிமா விமர்சனம் ( கேங்க்ஸ்டர் மசாலா ) @ அமெசான் பிரைம் , ஜீ தமிழ்

 


   2017ம்  ஆண்டு  கன்னடத்தில்  ரிலீஸ்  ஆன  மஃப்டி  என்ற  படத்தின்  அஃபிஷியல்  ரீமேக்  இது . நம்ம  தமிழ்  சினிமாவில்  இதுவரை  காணாத  கதை  எல்லாம்  இல்லை , ஆல்ரெடி  நாயகன், தளபதி  என  மணிரத்னம்  அடிச்சுத்துவைச்சுக்காயப்போட்ட  அதே  கதையில்  தற்போதைய  தமிழக  அரசியல்  நிலவரத்தைகலந்து  கட்டிக்கொடுத்த  படம்  தான் . . மார்ச் 31  2023  அன்று  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆகி  சுமாராக  ஓடிய  படம்  இப்போது  ஏப்ரல் 27  முதல்  அமேசான்  பிரைம், ஜீ  தமிழ்  ஆகியவற்றில்  காணக்கிடைக்கிறது 


சூர்யா - ஜோதிகா  நடிப்பில்  2006ல்  ரிலீஸ்  ஆன   சில்லுனு  ஒரு  காதல்  படத்தை   இயக்கிய  என்  கிருஷ்ணா  8  வ்ருடங்கள்  கழித்து நெடுஞ்சாலை  என்னும்  படத்தை 2014ல்  இயக்கி வெளியிட்டார். மீண்டும்  எட்டு  வ்ருடங்கள்  கழித்து 2022  டிசம்பரில்  இது  ரிலீஸ்  ஆவதாக  இருந்தது . சில  பிரச்சனைகளால்  தள்ளிபோனது / 40  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இந்தப்படம்  முதல்  வார  முடிவில்  55  கோடி  ரூபாய்  வசூலித்தது


ஸ்பாய்லர்  அலெர்ட்


தமிழகத்தின்  முதல்வர்  திடீர்  என  கடத்தப்படுகிறார். இதனால்  துணை  முதல்வருக்குக்கொண்டாட்ட,ம். ஆட்சியைப்பிடிக்கத்திட்டம்  போடுகிறார்.


நாயகன்  ஒரு  கேங்க்ஸ்டர்  +  மணல்  கொள்ளையன் + குவாரி  ஒனர்  என  த்ரீ இன் ஒன் முதல்வரின்  கடத்தலுக்கும்,  நாயகனுக்கும்  சம்பந்தம்  இருக்கலாம்  என  போலீஸ்  துறை  சந்தேகிக்கிறது , அதனால்  அண்டர்  கவர்  ஆபரேஷன்  நடத்த  ஒரு  ஆஃபீசரை  அனுப்புகிறது . அந்த  ஆஃபீசர்   நாயகனான  தாதாவின்  கோட்டைக்கு:ள்  அவரது  அடியாளாக  வேலைக்கு  சேர்ந்து  நம்பிக்கையைப்பெற்று  உண்மையைக்கண்டு  பிடிக்கிறார்


 நாயகன்  ஏன்  முதல்வரைக்கடத்தினார்? உண்மை  தெரிந்தும்  அந்த  அண்டர்  கவர்  ஆஃபீசர்  நாயகனை  ஏன்  போலீசில்  மாட்டி  விடவில்லை ? நாயகனின்  தங்கைக்கும்  நாயகனுக்கும்  என்ன  பிரச்சனை ? எல்லாவற்றுக்கும் விடை  திரைக்கதையில்  சொல்லப்பட்டிருக்கிறது 


 நாயகனாக  எஸ் டி ஆர்  என்னும்  சிலம்பரசன்..   கொடி  பறக்குது  படத்தில் ரஜினி  தாதா  கேரக்டரில்  கறுப்பு   டிரசில்  வருவது  போல , காலா  படத்தில்  ரஜினி  நடக்கும்  நடை  போல  சிம்புவின்  நடிப்பில் , கேரக்டர்  டிசைனில்  படம்  முழுக்க  ரஜினி  ரெஃப்ரன்ஸ்.  தாதா  கெட்டப்க்காக  அவருக்கு  தாடி , மீசை  எல்லாம்  கலரிங்  கொடுத்தது  ஓக்கே , ஆனால்  பார்க்கும்போது  பயம்  வரவில்லை ,  சிரிப்பு தான்  வருகிறது .


 அண்டர்  கவர்  ஆஃபீசராக  கவுதம்  கார்த்திக். இதுவரை இவர்  ஏற்று  நடித்த  கேரக்டர்களி;லேயே  ஓரளவு  கவுரவமான  ரோல்  இதுதான்,  நாயகன்  சிம்புவை  விட  இவருக்குத்தான்  அதிக  காட்சிகள் . முறைப்படி  இவர் தான்  நாயகன்  என்றும்  சொல்லலாம். ஆனால்  தாத்தா  முத்துராமனிடம்  இருந்த  முக  மலர்ச்சியோ , அப்பா  கார்த்திக்கிட ம்  இருந்த  துறுதுறுப்பு சுறுசுறுப்போ  மருந்துக்குக்கூட இவரிடம்  இல்லை , செத்தவன்  கையில்  வெத்தலை  பாக்கு  கொடுத்தது  போல  தேமே  என்று  இருக்கிறார். முதலில்  அவரது  ஹேர்  ஸ்டைலும் , தாடியுமே சகிக்கவில்லை , கஞ்சா  கேஸ்  போல  இருக்கிறார்.


வில்லனாக  துணை  முதல்வராக  இயக்குநர்  கவுதம்  வாசுதேவ்  மேனன் ,மிரட்டல்  ஆன  நடிப்பு  என  சொல்லி  விட  முடியாது , அதே  சமயம்   அலட்டல்  இல்லாத  கம்பீர  நடிப்பு 


நேர்மையான  தாசில்தார்  ஆக  ப்ரியா  பவானி  சங்கர் . இவரது  ஹேர்  ஸ்டைலும் , கண்ணிய  ஆடை  வடிவமைப்பும்  தமிழ்  சினிமாவில்  கவனிக்க  வைக்கும்  நபர் . இந்தக்கால  நடிகைகளில்  கண்ணியமாக , கவுரவமாக  உடை  அணிவதில்  இவருக்கு  முதல்  இடம்,  நடிக்க  அதிக  வாய்ப்பில்லை , ஸ்க்ரீன்  ஸ்பேஸ்  குறைவே 


 நாயகனின்  தங்கையாக  கேரளத்துக்கனவுக்கன்னி    அனு  சித்தாரா. செண்ட்டிமெண்ட் காட்சிகளில்  ஓக்கே  ரகம் 


ரெடின்  கிங்க்ஸ்லீ  காமெடிக்கு . 3  இடங்களில்  சிரிப்பு  வருகிறது , மனுஷ்ய புத்திரன்  ஒரு  ரோலில்  வருகிறார், இயல்பான  நடிப்பு, கலையரசன்   கெஸ்ட்  ரோல்.  ஓக்கே  ரகம் அனுசித்தாராவின்  மக்ளாக  வரும்  அந்த  குட்டிப்பெண்  அழகு


 இசை  ஏ  ஆர்  ரஹ்மான். 2  பாடல்கள்  செம  ஹிட் . பிஜிஎம்  சுமார்  தான்  ஒளிப்பதிவு  ஃபரூக்  பாஷா. கேங்க்ஸ்டர்  படங்களுக்கே  உரித்தான்  டரர்க்  கலர்  டோனில்  படம்  பிடித்தது  சிறப்பு 


சபாஷ்  டைரக்டர்  (என்  கிருஷ்ணா )


1  கமலின்  விக்ரம் படம்  மெகா  ஹிட்  ஆனதுக்கு  முக்கியக்காரணம்  முதல்  பாதி  முழுக்க  நாயகன்  ஆப்செண்ட், இன்னொரு  நாயகன்   போலீஸ்  என்கொயரிங்  என்ற  ஃபார்முலாதான்  என  யாரோ  சொல்லக்கேட்டு  அதே  ஃபார்முலாவில்  திரைக்கதை  அமைத்தது 


2  எழுத்தாளர்  எஸ்  ராமகிருஷ்ணனை  வசனம்  எழுத  நியமித்தது


3  ஏ ஆர்  ரஹ்மானை  இசைக்கு  நியமித்து  படத்துக்கு ஒரு கிரேடு  &, மார்க்கெட்டிங்  ஏற்படுத்தித்தந்தது 


4  குருதிப்புனல்  க்ளைமாக்சை  நினைவுபடுத்தினாலும்  இந்தக்கிளைமாக்சில்  கவுதம்  கார்த்திக்கிடம்  அந்த  போலீஸ்  ஆஃபீசர்  ஷூட்  ஷூட் மீ  என  தானாக  முன்  வந்து  வீணா  மேலே  போகும்  இடம் 


5  நாயகனின்  தங்கை  குழந்தையுடன்  நாயகனுக்குண்டான  பாண்டிங் 


6   ஒரிஜினல் கதையில்  இல்லாத  முதல்வர் - துணை  முதல்வர்  கான்செப்டை  தமிழக  அரசியலுடன்  லிங்க்  பண்ணி  காட்சிகள்  அமைத்த  புத்திசாலித்தனம்


  ரசித்த  வசனங்கள்  ( எஸ்  ராமகிருஷ்ணன்) 


1   ஜெயிச்சவனை  விட ஜெயிக்கப்போறவனுக்குத்தான்  வேகம்  அதிகமா  இருக்கும் 

2  எப்பவும்  எல்லாராலும்   எல்லா  முடிவுகளையும்  கனகச்சிதமா  எடுத்துட  முடியாது 


3   தோற்று  திரும்பி  வருபவனை  விட   வீரமா  சாகறவனைத்தான்  போலிஸ்  டிபார்ட்மெண்ட்  விரும்பும் 


4   இங்கே  நல்லது  பண்றதுக்கே  ஒரு  கெட்ட  முகம்  தேவைப்படுது


5  இங்கே  யார்  ஆளனும்? யார்  வாழனும் ? என்பதை  நாந்தான்  முடிவு  பண்ணுவேன்


6   நான்  நன்றியை  எதிர்பார்க்கறவன்  இல்லை , நன்றி  மறந்தவங்களை விட்டு  வைப்பவனும்  இல்லை 


7  நான்    படியெறி  வந்தவன்  இல்லை , எதிரிகளை  மிதிச்சு  மேலே  வந்தவன் 


8  ஏழு  கோடி  மக்கள்  வாயை  அடைப்பதை  விட   ஏழு  பேரின்  வாயை  அடக்குவது  சுலபம்,  ஐ  மீன்  மீடியா  வாயை  அடைக்கனும்


9  துப்பாக்கி    எடுத்தா  சும்மா  வெச்சுட்டு  இருக்கக்கூடாது  , எவனாவது  சாகனும் 


10  மீன்  கிட்டே  போராடிக்கொண்டு  இருந்தா  முதலை  கிட்டே  ஜெயிக்க  முடியுமா?


11   மண்ணை  ஆள்றவங்களுக்குத்தான் இது  எல்லை 

 இந்த மண்ணை  அள்ளற  எனக்கு  அது  இல்லை 


12    நான்  மன்னர்  பரம்பரைடா

‘ நான்  உன்னை அழிக்க  வந்த  பரம்பரைடா


13  அதிகாரிகள்  எல்லாரும்  அரசியல்வாதிகள்  ஆகும்  காலம்  இது  ( சகாயம்  ஐ ஏ எஸ் , அண்ணாமலை  ஐ ஏ எஸ்  உள்குத்து  ) 


14  தோல்விக்கு  வருத்தப்படாத , முதல்  வாட்டியே  ஜெய்ச்சுட்டா  அரசியல்வாதிக்கும், நமக்கும்  வித்தியாசம்  இல்லைனு  ஆகிடும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   எல்லாருக்கும்  நல்லதுதான்  பண்றேன்  என  சொல்லும்  நாயகன்  அவர்  கோட்டைக்குள்  புகுந்த  போலீஸ்  ஆஃபீசரை  ஏன்  கொல்கிறார்? அவரை  எச்சரித்து  அனுப்பி  இருக்கலாமே? 


2  முதல்வர்  கடத்தப்படும்  காட்சி  என்னமோ   தள்ளுவண்டிக்காரனை  அசால்ட்டா  தூக்கிட்டுப்போவது  போல  காட்டப்படுகிறது 


3   யார்  ஆளனும்னு  நாந்தான்  முடிவு பண்ணுவேன்  என கெத்தாக  சொல்லும்  நாயகன்  முதல்வராக  தன்  தங்கை  கணவரை  உருவாக்குவது  என்? ஒரு  கடை  நிலை அல்லது  ஷாப்பிங்  நிலை  ஆளை  முதல்வர்  ஆக்கி  இருக்கலாமே?


4  நாயகனை  போலீஸ்  பிடித்து  மாஜிஸ்ட்ரேட்  முன்  நிறுத்தாமல்  போதிய  ஆதாரம்  இல்லை  என  அவர்களாகவே  ரிலீஸ்  செய்வது காதில்  பூ 


5  டண்டணக்கா  ஹேய்   டண்டணக்கா  என்பது  டி ஆர்  போட்ட  மெட்டு ., அது  பெரும்பாலும்  டி ஆரை  பகடி  செய்யப்பயன்படுத்துகிறார்கள் . நாயகன்  வரும்போது  ஒலிக்கும்  பிஜிஎம்  ஆக  அந்த  டண்டணக்கா  வருவது  செம  காமெடி . இதை  ஏன்  ஏ ஆர்  ஆர்  யூகிக்க வில்லை? அல்லது  வேறு  யாரும்  இது  ஒர்க்  அவுட்  ஆகாது  என  சொல்லவில்லை 

?6  க்ளைமாக்சில்  க்வுதம்  கார்த்திக்  தலையில்  அடிபட்டு  இருப்பதால்  தனக்கு  பழசெல்லா,ம் நினைவில்லை  என  சுலபமாக  சமாளித்திருக்கலாம், அதை  விட்டு  விட்டு  ஆதாரம்  தர  மாட்டேன்  என  தன்  உயர்  அதிகாரியிடம்  சொல்வது  காமெடி


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - வன்முறைக்காட்சிகள்  மட்டுமே  இருக்கு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சிம்பு , ப்ரியாபவானிசங்கர் , அனுசித்தாரா  ரசிகர்கள்  பார்க்கலாம், பொது  ரசிகர்கள்  டி வி  ல  போடும்போது  பார்த்துக்கலாம், சுமார்  ரகம்  தான்  ., ரேட்டிங் 2.25 / 5 



Pathu Thala
Pathu Thala.jpg
Theatrical release poster
Directed byObeli N. Krishna
Screenplay byObeli N. Krishna
Dialogue by
  • R. S. Ramakrishnan
Story byNarthan
Based onMufti
Produced byJayantilal Gada
K. E. Gnanavel Raja
StarringSilambarasan
Gautham Karthik
Priya Bhavani Shankar
Gautham Vasudev Menon
Kalaiyarasan
Teejay Arunasalam
Anu Sithara
CinematographyFarook J. Basha
Edited byPraveen K. L.
Music byA. R. Rahman
Production
companies
Release date
  • 30 March 2023 (India)
Running time
152 minutes
CountryIndia
LanguageTamil
Box office₹65 crore[1]

Wednesday, April 26, 2023

OTTU (2022)-மலையாளம் - ரெண்டகம் ( தமிழ்) - (DOUBLE CROSS)- சினிமா விமர்சனம் ( ஆக்சன் கேங்ஸ்டர் த்ரில்லர்) @ அமேசான் பிரைம், ஆஹா ஓடிடி

   


 1997ல்  அர்விந்த்சாமி  நடிப்பில்  தேவராகம்  எனும்  மலையாளப்படம்  ரிலீஸ்  ஆனது, மிக  நீண்ட  இடைவெளிக்குப்பின்  கேரள  தேசத்துக்கு  அர்விந்த்சாமியின்  கம்  பேக்  படமாக  இது  அமைகிறது . மலையாள  நடிகர்  குஞ்சக்கா  போபன்  நடிப்பில்  வெளியாகும்  முதல்  தமிழ்ப்படம்  இது. அதாவது  மலையாளம்,  தமிழ்  என  இரு  மொழிகளில்  தயாரான  படம்  உண்ட  வீட்டுக்கு  ரெண்டகம்  செய்பவனின்  கதைதான்  இது . ஒரு  வித்தியாசமான  முயற்சியாக  சேப்டர் 2  தான்  இப்போது  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது. சேப்டர் 1  சேபடர் 3  இனிமேல்  தான்  ரிலீஸ்  ஆகும். 2  வது  பாகத்தை  தனியாகப்பார்த்தாலும்  புரியும்படிதான்  திரைக்கதை  அமைக்கப்பட்டிருக்கிறது

.மலையாளத்தில்  சுமாராகப்போன  படம்  தமிழில்  படு  சுமாராகத்தான்  ஓடியது  தெலுங்கு  நடிகையான  ஈஷா  ரேபா  தான்  படத்தின் நாயகி , ஹிந்தி  நாயகனான  ஜாக்கி  ஷெராப் தான் வில்லன். தமிழ் , தெலுங்கு , மலையாளம், ஹிந்தி  என  பான்  இந்தியா  மூவியாக  எடுக்க  திட்டம்  இட்டிருக்கிறார்கள்  போல , நடிகர்  ஆர்யா  வின்  சொந்தப்படம்  இது 


2022  செப்டம்பர் 8  அன்று   கேரளாவிலும், 2022  செபடம்பர் 22  தமிழகத்திலும்  ரிலீஸ்  ஆனது இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி யில்  காணக்கிடைக்கிறது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஃபாரீன்  போக  ஆசைப்படுபவன், அதற்கு 25  லட்ச  ருபாய்  பணம்  தெவைப்படுகிறது , நாயகனின்  மாமா  ஒரு  கும்பலிடம்  கோர்த்து  விடுகிறார். அந்த  கும்பல்  நாயகனுக்கு  ஒரு  அசைன்மெண்ட்  தருகிறது . அதை  செய்து  முடித்தால்  அவர்  விரும்பிய   பணம்  கிடைக்கும்


அந்த  கும்பல்  சொல்லும்  ஃபிளாஸ்பேக்  இது -மும்பை  கேங்க்ஸ்டர்  ஒருவனின்  வலதுகரமாக  செயல்பட்டவன்  அசைனர்  என்ற  தாதா   இந்த  அசைனர்க்கு  வலது  கரமாக    கம் கார்  டிரைவராக  செயல்பட்டவன் தாவூத்  என்பவன் . 30 கோடி  ரூபாய்  மதிப்புள்ள  தங்கத்தை  கடத்தி  வரும்போது  ஒரு  விபத்து  நடந்தது  , அதில்   அசைனர்  இறந்து  விடுகிறான். பலத்த  காயங்களுடன்  உயிர்  பிழைத்த  தாவூத்  இப்போது  பழைய  நினைவுகளை  இழந்து  ஒரு  நடைப்பிணமாக  வாழ்கிறான்


 நாயகனுக்குக்கொடுக்கப்பட்ட  அசைன்மெண்ட்  நாயகன்  அந்த  தாவூத்  உடன்  பழக  வேண்டும், அவனுக்கு  பழைய  நினைவுகளைக்கொண்டு  வர  வேண்டும், அந்த  தங்கம்  இருக்கும்  இடம்   அறிய  வேண்டும் 


நாயகன்  ஒத்துக்கொள்கிறான், நாயகனுக்கு  ஒரு  காதலி  உண்டு . அவள்  சொல்லை  மீறி  இந்த  அசைன்மெண்ட்டில்  நாயகன்  இறங்குகிறான். அந்த  தாவூத்  இப்போது  ஒரு  தியேட்டர்  கேண்ட்டீனில்  வேலை  பார்க்கிறான் 


 அவனுடன்  சினேகமாகி  கொடுக்கப்பட்ட  அசைன்மெண்ட்டை  நிறைவேற்றினாரா? என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக  குஞ்சாக்கா  போபன். மிக  இயல்பான  நடிப்பு . மிக  நல்லவராக  முதல்  பாதியில்  வருபவர்  பின்  பாதியில்  ஆக்சன்  காட்சிகளில்  தூள்  கிளப்புகிறார்


 இன்னொரு  நாயகனாக  அர்விந்த்சாமி .  பாட்ஷா  படத்தில்  மாணிக்கம்  கேரக்டர்  போல  அமைதியாக  முதல்  பாதியில்  வருபவர்  பின்  பாதியில்  கேங்க்ஸ்டர்  நினைவு  வந்ததும்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சியில்  கலக்குகிறார்


நாயகனுக்கு  ஜோடியாக  , காதலியாக  ஈஷா  ரேபா . அதிக  வாய்ப்பில்லை , ஆனால்  லட்சணமான  முகம், கண்ணியமான்  உடைகள் 


 வில்லனாக  ஜாக்கி ஷெராப்  க்ளைமாக்சில்  10  நிமிடங்கள்  மட்டுமே  வருகிறார். மிரட்டல்  நடிப்பு 

நாயகனின்   மாமாவாக  ஆடுகளம் நரேன்  சில  காட்சிகள்  வந்தாலும்  மனதில்  தங்குகிறார்


க்வுதம்  ஷங்கரின்  ஒளிப்பதிவு  வெளிப்புறக்காட்சிகளை  குளிர்ச்சியாக  படம்  ஆக்கி  இருக்கிறது  அருள்  ராக்   கென்னடியின்  இசையில்  ஆறு  பாடல்கள் . 2  பாட்டு  செம  ஹிட்டு .  பிஜிஎம்  சில  காட்சிகளில்  மிரட்டுகிறது 


கேங்க்ஸ்டர்  ஆக்சன்  மசாலா  படங்களில்  இது  தனித்துத்தெரிகிறது. ரோடு  சைடு  ட்ராவல்  படமாக  முதல்  பாதியும் , ஆக்சன்  த்ரில்லராக  பின்  பாதியும்  டேக்  ஆஃப்  ஆகிறது 

இரண்டு  மணி  நேரம்  ஓடும்  படமாக  ட்ரிம்  செய்யப்பட்ட  இந்தப்படம்  அமேசான்  பிரைம் ல  கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர்  (  பெல்லினி ) 


1  வெற்றி  விழா  படத்தில்  கமல்  ஒரு  டயலாக்  சொல்வார். எனக்கு  கார்  ஓட்டத்தெரியுமா?  தெரியாதா? என்பதே  எனகு  தெரியலை.. இது  செம  ஹிட்  ஆன  டயலாக். அதே  போல்  காட்சியமைப்பை  சாமார்த்தியமாக  அமைத்த  விதம் 

2     பின்  பாதியில்  வரும்  அட்டகாசமான , யாராலும்  யூகிக்க  முடியாத  இரண்டு  திருப்பங்கள் 


3    அர்விந்த்சாமி    அந்த  ரெஸ்டாரண்ட்டில்  போடும்  அதகளமான  அந்த  ஃபைட்  சீக்வன்ஸ் 


4   க்ளைமாக்ஸ்  காட்சியில்  நாயகன்  குஞ்சக்கா  போபன்  ட்ரான்ஸ்ஃபர் மேஷன்  சீனில்  நிகழ்த்தும்  ஆக்சன்  அதிரடி

  ரசித்த  வசனங்கள் 


1  கஷ்டமோ , பயமோ  தரும்  எந்த  ஒரு  விஷயமும்  அவன்  மனசுல  நிக்காது 


2  படம் படு  மொக்கை ,ஆனா  நம்மூர்  படங்களுக்கு  இது  தேவலை 


 எல்லாத்தையும்  இண்டர்வெல்  வரை  பார்த்துட்டு  கருத்து  சொல்றது 


3  யாருமே  எப்பவுமெ  நாம  நினைச்ச  மாதிரி  இல்லை 


4  எவ்வளவு  விபரங்கள்  தெரியாம  இருக்கோ  அவ்வளவு  நல்லது 


5இதெல்லாம்  தப்பான  ரூட்டா? தப்பெல்லாம்  நடக்கற  ரூட்டா?


6  குடிச்சுட்டு  கடலுக்குப்போகாதே 

 சரி , அப்போ நான்  கடலுக்குப்போய்  குடிக்கறேன்


7 ஒரு  மனுசன்  எதை  மறந்தாலும்  ஒண்ணை  மட்டும்  மறக்க  முடியாது , உயிரா  பழகியவன்  செஞ்ச  நம்பிக்கை  துரோகம்  , உண்ட  வீட்டுக்கு  பண்ணின  ரெண்டகம் 


8  ஒருத்தன்  கண்ணைப்பார்த்துக்கொல்றதுலதான்  தில்  இருக்கு 

9  உயிரா  வளர்த்த  உன்னை  விட்டுட்டு  எபோ  என்னைத்தேடி  இவன்   வந்தானோ  அப்பவே  நான்  ஜெயிச்சுட்டேன்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   க்ளைமாக்சில்  நாயகர்கள்  இருவரும்  வில்லனின்  பங்களாவில்  நுழைந்து  பண்ணும்  அதகள  ஆக்சன்  காட்சிகள்  நம்ப  முடியாதவை . நூற்றுக்கணக்கான  பேர்களை  அசால்ட்டாக  போட்டுத்தள்ளுவது  ஓவர் 


2   தனியாக  மாட்டிகொண்ட  வில்லன்  பதட்டமே  படாமல்  நாயகர்கள்  இருவரையும்  உபசரிக்கும்  காட்சி  நம்ப  முடியாத  காட்சி 


3  க்ளைமாக்சில்  திடிர்  என  அர்விந்த் சாமி  ஆள்  அட்ரசையே  காணவில்லை .  நாயகன்  குஞ்சக்கா  போபன்  சோலோ  பர்ஃபார்மென்ஸ்  நடத்திக்கொண்டு  இருக்கிறார்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18 +  காட்சிகள்  இல்லை , வன்முறை  இருக்கிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எதிர்பாராத  அந்த  இரண்டு  செம  ட்விஸ்ட்  சீன்களுக்காகவே  படம்  பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 5 


Ottu
Ottu (film).jpeg
Theatrical release poster
Directed byFellini T. P.
Written byS. Sanjeev
Produced byArya
Shaji Nadesan
Starring
CinematographyGautham Sankar
Music byArulRaj Kennady
Production
companies
Release dates
  • 8 September 2022 (Malayalam)[1]
  • 23 September 2022 (Tamil)[2]
CountryIndia
LanguagesMalayalam
Tamil