Tuesday, May 21, 2024

ரத்னம் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா ) @ ஜீ 5 , ஜீ திரை , ஜீ தமிழ்


புரட்டாசித்தளபதி  சாரி  புரட்சித்தளபதி  விஷாலின்  34  வது  படம்  இது . ஜெயிலர் , லியோ  போன்ற  மசாலாப்படங்கள்  ஓவர்  வன்முறை  என்பதால் தான்  ஓடியது  என்ற  செண்ட்டிமெண்ட்டில்  விஷால்  நாமும்  ஓவர்  வயலன்சில்  ஒரு  மசாலாக்குப்பையைக்கொடுத்து  கல்லா  கட்டலாம்  என  நினைத்து   சொந்தமாக  டிஸ்ட்ரிபியூசன்  செய்து  கையைச்சுட்டுக்கொண்ட  படம்  இது . மசாலாக்குப்பைகளை  எடுக்க  நினைக்கும்  ஆட்களுக்கு  இது  ஒரு  எச்சரிக்கை     


லோ  பட்ஜெட்டில்  எடுக்கப்படும்  தரமான  திரைப்படங்கள்  வெற்றி  பெறும்போது  எந்த  அளவு  மகிழ்ச்சி  ஏற்படுகிறதோ  அதே  அளவு  மகிழ்ச்சி  பிரம்மாண்டமாகத்தயார்  ஆகும்  மசாலாக்குப்பைகள்  டப்பா  ஆகி  அடி  வாங்கும்போது  நமக்கு  மகிழ்ச்சி  ஏற்படுகிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அம்மா  30  வயதாக  இருக்கும்போது  போலீசால்  கைது  செய்யப்பட்டு  விபச்சாரம்  செய்ததாக  பொய்யாக  குற்றம்  சாட்டப்பட்டு  சிறையில்  அடைக்கப்படுகிறார்.மீடியாக்களில்  ஃபோடோ  உடன்  இந்த  செய்தி  வந்ததால்  மனம்  உடைந்த  அம்மா  தற்கொலை  செய்து  கொள்கிறாள்


நாயகன்  வளர்ந்து  பெரிய  ஆள்  ஆனதும்  தன்  அம்மாவின்  முக சாயலில்  இருக்கும்  நாயகியை  சந்திக்கிறான்.  என்ன  என  சொல்ல  முடியாத ஒரு  வகை  பாசம்  நாயகி  மீது  அவருக்கு  உண்டாகிறது . ஆனால்  அது  காதல்  அல்ல 


 நாயகிக்கு  ஒரு  பிரச்சனை , அவர்  பூர்வீக  இடத்தை  அரசியல்வாதி  ஒருவன்  ஆட்டையைப்போட  நினைக்கிறான். அதை  நாயகன்  எப்படித்தடுக்கிறான்  என்பதே  மீதி  திரைக்கதை  


 நாயகன்  ஆக   விஷால்.  மிடுக்கான  தோற்றம் , ஜிம்  பாடி  உடன்  வந்தாலும்  முகத்தில்  வயோதிகம்  தெரிகிறது .  ஓப்பனிங்  காட்சிகளில்  நாயகி  உடன்  காதலோ  என  எண்ன  வைத்து  பின்  வரும்  காட்சிகளில்  அப்படி  இல்லை , அம்மா  சாயல்  என்ற  நிலை  வந்த  பின்   அவரது  நடிப்பு  கச்சிதம் 


 நாயகி  அக  ப்ரியா  பவானி  சங்கர் அமைதியான  நடிப்பு ,அ டக்கமான  அழகு , கண்ணியமான  உடை . இரு  வேடங்களிலும்  அருமையான  நடிப்பு 


எம் எல் ஏ  ஆக  வரும் சமுத்திரக்கனி  கச்சிதமான  நடிப்பு , உடல்  மொழி 

வில்லன்களாக  வரும்  முரளி  சர்மா , ஹரீஷ்  பெரேடி , வேட்டை  முத்துக்குமார்  மூவரும்  கேரக்டர்  டிசைன்  சரியாக  வடிவமைக்கப்படாததால்  தடுமாறுகிறார்கள் . இன்னும்  வலிமையாகக்காட்டி  இருக்க  வேண்டும்


யோகி  பாபு  காமெடியன்  என  சொல்லிக்கொண்டு  பாவம்  ரொம்ப  சிரமப்படுகிறார்


  இயக்குநர்  கவுதம்  வாசுதேவ்  மேனன்  ஒரு  கெஸ்ட்  ரோலில்  வந்து  போகிறார். அவரது  உடல் மொழி ,குரல்  அபாரம் 


இசை  தேவி  ஸ்ரீ பிரசாத் . 3  பாடல்கள்  ஓக்கே  ரகம் , பின்னணி  இசை கச்சிதம் 


ஒளிப்பதிவு  சுகுமார் . ஹரி   படம்  என்றாலே  கேமராவை  ஆட்டிக்கொண்டே  இருக்க  வேண்டும்  என்ற  விதியை  ஃபாலோ  பண்றார்  எடிட்டிங்  டிஎஸ்  ஜெ.  இரண்டரை  மணி  நேரம்  படம்  ஓடுகிறது


 மொத்தம்  100  லிட்டர்  ரத்தம்  ஆறாக ஓடுகிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஹரி 


சபாஷ்  டைரக்டர்


1   விஜய்  நடித்த  தரணி  இயக்கிய  கில்லி  படத்தின்  கதையையே  பட்டி  டிஙக்ரிங்  பண்ணிய  சாமார்த்திய,ம்


2    திரைக்கதை  எழுதும்  ஆளுக்கு  சம்பளம் கொடுக்க  முடைப்பட்டு ஸ்டண்ட்  மாஸ்டருக்கு  டபுள்  பேமண்ட்  கொடுத்த  சாமார்த்தியம் 


3   நாயகி  நாயகனின்  அம்மா  சாயல்  என்று  கொண்டு  போகும்  பாணி  புதுசு 



செம  ஹிட்  சாங்க்ஸ்


1  டோண்ட்  ஒர்ரி  டோண்ட் ஒர்ரி டா  மச்சி 


2  எதனால்  என்  மேல  அக்கறை ? 


3  போறாளே  போறாளே  சொந்த  மண்ணை  விட்டுப்போறாளே 


  ரசித்த  வசனங்கள் 


1  ஓட்டுக்குக்காசு  வாங்க  மக்கள்  தயாரா  இருக்கும்  வரை  ஒரு  நாயை  நிக்க  வெச்சாலும்  ஜெயிக்கும் 


2  குடிகாரன்கள்  எதை  வேஸ்ட்  பண்ணாலும்  தான்  அடிக்கும்  சரக்கை  மட்டும்  வேஸ்ட் பண்ணவே  மாட்டாங்க 


3  போலீசும் , ரவுடியும்  ஒரு  அண்டர்ஸ்டேண்டிங்கில்  இருந்தால்  தான்  ஊர்  உருப்படும் 


4   என்  பொண்டாட்டி  மேலயே  கை  வெச்சுட்டியா?


 வாயை  மூடுறா  மூடி  இல்லாத  டிஃபன்  பாக்ஸ் தலையா? 


5   என்ன  தான்  பேயைக்குளிப்பாட்டி  நடு  வீட்டில்  வைத்தாலும்  நடு  ராத்திரில  அது  சுடுகாட்டுக்குத்தான்  போகும் 


6  ஊறுகாயைக்கண்டு  பிடிச்சது  யாரா  இருக்கும் ?


 சரக்கை  சப்பிக்குடிக்கும்போது  சைடு  டிஷ்க்கு  தேடுனவனாத்தான்  இருக்கும் 


7  நல்லவங்க , கெட்டவங்க  என்பது  அவங்க  பண்ற  செயல்ல  இல்லை , நாம  பார்க்கும்  பார்வைல  இருக்கு


8  லஞ்சம்  வாங்கும்போது  கூட  அதுக்கு  ஜிஎஸ்டி   வசூல்  பண்ற  ஒரே  ஆள்  நீதான் 


9  உனக்கும்  , எனக்கும்  ஒரே  குரல்  நான்  சின்ன  வயசுல  கோலிக்குண்டை  முழுங்கிட்டேன்


 நான்  சின்ன  வயசுல  சேவலை  முழுங்கிட்டேன் 


10   எவ்ளோ  பெரிய  ரவுடியா  இருந்தாலும்  பொண்ணுங்க  விஷயத்துல  வீக்காதான்  இருக்கானுங்க 


11  நம்ம  மேல  தப்பு  இருந்தா  தோக்கலாம்,  அல்லது  நான்  செத்துப்போனா  தோற்கலாம் 


12   என்னைப்பற்றியே  கவலைபப்டறீங்களே?உங்க  வாழ்க்கையைப்பற்றியும்  யோசிங்க 


   என்  வாழ்க்கையே  நீ  தானே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  பொண்ணோட  அப்பா  முன்  பின்  அறிமுகம்  இல்லாத  ஆள்  கிட்டே  வயசுக்கு  வந்த  தன்  பெண்ணை  அனுப்பி  அவளை  டிராப்  பண்ணிடுங்கனு  சொல்வாரா? 


2   வில்லனின்  அடியாட்கள்  50  பேர்  அரிவாள் , கத்தி  உடன்  எதிரே  இருக்காங்க . நாயகனின்  ஜீப்  தீப்பற்றி  எரிகிறது . நெருப்பை  அணைக்க  நாயகன்  போரிங்  பைப்பில்  தண்ணீர்  அடித்து  குடத்தை  நிரப்பி  அணைக்கும்  வரை  ரவுடிகள்  வேடிக்கை  பார்த்துக்கொண்டு  இருப்பார்களா?  அவர்  அணைத்த  பின்  தான்  ரவுடிகள்  ஃபைட்டுக்கு  ரெடி  ஆகிறார்கள் 


3  நாயகியின்  அப்பா  போலீஸ்  ஸ்டேஷனில்  இந்த  பத்திரம்  செல்லாது . யாருக்கும்  விற்கும்  உரிமை  இல்லை  என  சொல்வதோடு  நிறுத்தி  இருக்கலாமே?  எதுக்கு  லூஸ்  மாதிரி  என்  பொண்ணு  தான்  65  வது   தலைமுறை . அவளுக்குத்தான்  விற்கும்  உரிமை  உண்டு ? என  அவராக  சிக்கலில்  சிக்குகிறார் ? 


4    நாயகனின்  அம்மாவின்  குடும்பம் , நாயகியின்  குடும்பம்  இரண்டும்  ஒரே  ஊரில்  இருந்தும்  இருவருக்குமான  உருவ  ஒற்றுமை    இரண்டு  குடும்பத்துக்கும்  தெரியாமல்  இருப்பது  எப்படி ? 


5  நாயகனின்  அப்பா  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் .அவரது  தம்பி  ஒரு  திருடன் கொள்ளை    அடித்த  நகை , பணத்தை  போலீஸ்  ஆஃபீசர்  வீட்டிலேயே  பங்கு  பிரிக்க  அவன்  என்ன  கேனையா?  வேறு  இடமா  இல்லை ? 


6  சமுத்திரக்கனி  ஒரு சாதா  எம்  எல்  ஏ  தான்  , என்னமோ சி எம்  ரேஞ்சுக்கு  அவருக்கு  பவர்  இருப்பது  போலக்காட்டுவது  ஓவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - ஓவர்  வயலன்ஸ்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மசாலாக்குப்பைகளை  ரசிப்பவர்கள்  பார்க்கலாம் . ஆல்ரெடி  கண்  வலி  , காது  வலி  உள்ளவர்கள்  தவிர்க்கவும் , கேம்ராவை  ஆட்டிக்கொண்டே  இருப்பதால் ,சவுண்ட்  ஜாஸ்தியாக  இருப்பதால்  தவிர்க்கவும்  .ரேட்டிங்   2 / 5 


Rathnam
Theatrical release poster
Directed byHari
Written byHari
Produced byKaarthekeyan Santhanam
Alankar Pandian
Starring
CinematographyM. Sukumar
Edited byT. S. Jay
Music byDevi Sri Prasad
Production
companies
Distributed byAyngaran International
Big Films
Release date
  • 26 April 2024
Running time
156 minutes[1]
CountryIndia
LanguageTamil

Monday, May 20, 2024

LAAPATAA LADIES (2024) - ஹிந்தி - சினிமா விமர்சனம் (காமெடி டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்


  லாபட்டா  லேடீஸ்  என்ற  ஹிந்தி  சொல்லுக்கு  தொலைந்த பெண்கள்  என்று  பொருள்.5  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட  இப்படம்  ரூ 200 கோடி  வசூலை  பாக்ஸ்  ஆஃபீசில்  வாரிக்குவித்தது . காமெடி  டிராமா  என்ற  ஜனரில்  ரிலீஸ்  ஆனாலும்  இது  ஒரு  ஃபீல்  குட்  மூவி . கூடவே  பெண்  கல்வி , பெண்  சுதந்திரம்  போன்ற முக்கிய  விஷயங்களைப்போகிற  போக்கில் அசால்ட்டாக  சொல்லும்  படம் . டோரண்ட்டோ  ஃபிலிம்  ஃபெஸ்ட்டிவலில்  2023 ஆம்  ஆண்டே  திரை  இடப்பட்டாலும்  திரை  அரங்குகளில்  1/3/2024  முதல்  ரிலீஸ்  ஆகி  அமோக  வரவேற்பைப்பெற்றது . இப்போது  26/4/2024  முதல்  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


ஸ்க்ரிப்ட்  ரைட்டிங்க்  காம்ப்பெட்டிஷனில்  “ டூ  பிரைட்ஸ்  ( இரு  மணப்பெண்கள் )  என்ற  கதையை  இணைத்தயாரிப்பாளர்  ஆன  அமீர்கான்  தான்  இதை  முதலில்  கண்டறிந்தார் . படம்  எடுக்க  முனைந்ததும்  அவர்  தான்/ இதன் இயக்குநர்  கிரண்  ராவ்க்கு  இது இரண்டாவது  படம் , முதல்  படம்  2010ல்  ரிலீஸ்  ஆன  DHOBI GUTS ( MUMBAI  DIARIES). இதன்  படப்பிடிப்பு  மத்தியப்பிரதேச  மாநிலத்தில் சில  கிராமங்களில்  படமாக்கப்பட்டது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகி  வசதியான  குடும்பத்தில்  பிறந்தவர்.இவர்  படிக்கும்  பள்ளியில் 900  பேர்  படித்தாலும்  இவர்  தான்  முதல்  ரேங்க் . எனவே  நாயகியின் கனவு  மேல்  படிப்புப்படிக்க  வேண்டும்  , மேலும்  இயற்கை  முறையில்  விவசாயம்  செய்ய  வேண்டும்  என்பதே , ஆனால்  அவளது  பெற்றோர் அவள்  விருப்பத்துக்கு  முட்டுக்கட்டை  போடுகிறார்கள் .  திருமணம்  செய்து  வைக்கிறோம், கணவன்  அனுமதித்தால்  படி  என்கிறார்க:ள்’’


  நாயகிக்குப்பார்த்த  மாப்பிள்ளை  ஆல்ரெடி  திருமணம்  ஆனவன்  .அவன்  மனைவி மர்மமான  முறையில்  இறந்தவள்  , அது  இயற்கை  மரணமா? கொலையா?  என்பதே   தெரியாது . அதனால்  நாயகிக்கு  விருப்பமே  இல்லை . வேறு  வழி  இல்லாமல்  திருமணம்  நடக்கிறது. திருமணம்  முடிந்ததும்  நாயகி  தன்  கணவனுடன்  ரயிலில்  போகிறாள் 

இதே  ரயிலில்  புதுசாகத்திருமணம்  ஆன  நாயகனும்  தன்  மனைவியுடன்  ரயிலில்  போகிறான்

அந்தக்காலத்தில்  எல்லாம்  மணப்பெண்கள்  முக்காடு  போட்டிருப்பார்கள் . பெரும்பாலும்  சிகப்பு  நிற  சேலை  தான்  மணப்பெண்ணுக்கு 

அதே  கம்ப்பார்ட்மெண்ட்டில்  மூன்று  சிவப்பு  சேலை  முக்காடு  அணிந்த  மணப்பெண்கள்  , மாப்பிள்ளைகள்  பயணிக்கிறார்கள் 

 நாயகன்  தூங்கி  விட்டான் , திடீர்  என  கண்  விழித்தால்  அவன்  இறங்க  வேண்டிய  ஸ்டேஷன் 

டக்  என  தன்  மனைவியை  அழைப்பதாக  நினைத்து  தவறுதலாக  நாயகியை  வா  போலாம்  என  அழைக்கிறான்

நாயகியின் கணவன்  தூங்கிக்கொண்டிருக்கிறான் . நாயகிக்கு  தப்பிக்க  இது ஒரு  நல்ல    வாய்ப்பு . அவள்  நாயகனுடன்  கிளம்பி  விடுகிறாள்  

நாயகன்  வீட்டுக்கு  வந்து  மணப்பெண்ணுக்கு ஆரத்தி  எடுக்கும்போது   மணமகள்  மாறியது  தெரிய  வருகிறது 

அந்த  ஊர்  போலீஸ்  ஸ்டெஷனில்  புகார்  கொடுக்கிறார்கள் போலீஸ்  ஆஃபீசர்   மணப்பெண்ணின்  நகைகளை  ஆட்டையைப்போடலாம்  என  திட்டம்  போடுகிறார் . இதற்குப்பின்  நடக்கும்  சம்பவங்களே  மீதி  திரைக்கதை 


நாயகி  ஆக பிரதிபா  ரந்தா  பிரமாதமாக  நடித்திருக்ககிறார். புரட்சிகரமான  வசனங்களை  சாதார்ணமாகப்பேசும்  கேரக்டர் .  சிரித்த  முகம், கண்ணிய  உடை . கச்சிதமான  உடல்  மொழி 


நாயகன்  ஆக  ஸ்பார்ஷ் ஸ்ரீ வஸ்தவ்  அடக்கி  வாசித்திருக்கிறார். காதல்  கோட்டை  அஜித்  முகச்சாயலில்  இருக்கிறார் , நிறைவான  நடிப்பு 


நாயகனின்  மனைவியாக  நிதான்சி  கோயல் அப்பாவித்தனமான  கேரக்டரில்  வருகிறார். கண்கள்  இவரது  பிளஸ்  பாயிண்ட் 


ரவி  கிஷன்  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  ஆக  ஆரம்பத்தில்  வில்லத்தனம்  காட்டி  பின் நல்லவர்  ஆகிறார். நல்ல  நடிப்பு 


முக்கியமான  பாத்திரங்கள்  போக  நாயகனின்  மனைவிக்கு  அடைக்கலம்  கொடுக்கும்  டீக்கடை  ஓனர்  அம்மாவாக  வரும்  பாட்டி  , அந்த  சிறுவன்  என  எல்லோர்  நடிப்பும்  நிறைவு 


ஜபீன்  மர்ச்செண்ட்  எடிட்டிங்  அருமை . 120  நிமிடங்கள்  தான்  படம் ,  ஷார்ப்  ட்ரிம்மிங் 


ராம்  சம்பத்  இசையில்  நான்கு  பாடல்கள்  அருமை . பின்னணி  இசையும்  குட் 


சினேகா  தெசாயின்  திரைக்கதைக்கு  உயிர்  கொடுத்து  இயக்கி  இருப்பவர்  கிரண்  ராவ்


சபாஷ்  டைரக்டர்


1  கல்யாணப்பெண் கள்  மிஸ்  ஆகும்  சீரியசான  கதையில்  ஆஙகாங்கே  காமெடி  கலந்து  எழுதியது 


2    பெண்ணியம்  பெசும்  வசனங்கள்  அதிகம்  என்பதால்  வசனத்திற்கு  இரண்டு  பெண்களை  நியமித்தது 


3   நாயகியின் கேரக்டரை  சஸ்பென்சாக  காட்டியது 


4  பெண்  கல்வி , பெண்  விடுதலை , பெண்  உரிமை  போன்றவற்றை  பிரச்சார  நெடி  இல்லாமல்  யதார்த்தமாக   காட்டிய  விதம் 



ரசித்த  வசனங்கள்   (  சினேகா  தேசாய்  + திவ்ய  நிதி  ஷர்மா  ) 


1    உன்  பேர்  என்னம்மா?

 புஷ்பா 


உன்  புருசன்  பேரு ?


 சும்மா  இரேம்மா , கவுரவமான  குடும்பத்தைச்சேர்ந்த  எந்தப்பெண்ணாவது  தன்  புருசன்  பேரைச்சொல்லுமா? 


பங்கஜ் .. அதான்  புருசன்  பேரு 


2   மணப்பெண்  மிஸ்  ஆனா  என்ன?வரதட்சணையா  தந்த  பைக்  ஆல்ரெடி  டெலிவரி  ஆகிடுச்சே? 


3   நீ  எங்கிருந்தம்மா  வர்றே?


 எங்க  வீட்ல  இருந்து 

  சுத்தம்  , உன்  ஊர்  பேரு  என்ன? 


கங்காபூர் 


4   உனக்கு  அறிவு  இருக்கா? போலீஸ்  ஸ்டேஷன்  போகும்போது  இப்படித்தான்  புது டிரஸ் , புது  வாட்ச்  எல்லாம்  போட்டுட்டுப்போவாங்களா?  போலீஸ்  எல்லாத்தையும்  உருவிட  மாட்டாங்களா ?


5   மேடம் , உங்க  குரல்  அருமை , உங்க  பாட்டுக்காக  மாமூல் ல  ஒரு  பத்தாயிரம்  ரூபா  குறைச்சுக்கறேன் 

  அப்டியா? அப்போ  இன்னொரு  பாட்டு  பாடிடறேன், இன்னும் ஒரு  பத்தாயிரம்  குறைச்சுக்குங்க 


6    இன்ஸ்பெக்டர் , என்  சம்சாரம்  காணாமப்போயிட்டா 


  அது  எப்டிடா? நான்  கூட  15  வருசமா    என சம்சாரத்தை  தொலைக்க  முயற்சி  பண்றேன், என்னாலயே  முடியலை , நீ  மட்டும்  எப்டி ? 


7    நான்  உன்  கிட்டே  லஞ்சமா  15,000  ரூபா  கேட்டேன் , நீ  வெறும்  5000  தான்  கொடுத்திருக்கே?  மீதி  ரூ  10,000  எங்கே? 


8    நீ  சொல்றதைப்பார்த்தா  நீ  உன்  சம்சாரத்தை  மட்டும்  தொலைக்கலை ,  அடுத்தவன்  சம்சாரம்  அதுவும்  புதுப்பொண்ணு   கிடைச்சிருக்கு  லக்கி  தான் 


9    யோவ் , ரெண்டு  சமோசா வாங்கிட்டு  நாலு  தடவை  சாம்பார்  வாங்கறியே? அது  சும்மா  தொட்டுக்கத்தான் , குடிச்சிடுவே  போலயே? 


10  அவன்  இதுவரை  சல்மான்  கான்  வீட்டுக்குப்போனது இல்லை , ஆனா  சல்மான்  கான்  வீட்டு  அட்ரஸ்  தெரியும் , ஆனா  பல  வருசமா  குடி  இருந்த  உன்  வீட்டு  அட்ரஸ்  தெரியாதுங்கறியே?


11  முட்டாளா  இருப்பது  அவமானகரமான  விஷயம்  இல்லை , ஆனால்  அதைக்கூட  பெருமையா  நினைக்கறதுதான்  அவமானம் 


12   உன்  பெற்றோர்  உன்னை  ஒழுங்கா  வளர்க்கலை

 இல்லையே?  நல்லா  சமைக்கச்சொல்லிக்கொடுத்தாங்க , வீட்டைக்கிளீன்  பண்ணுவென்


 ஆனா    உன் ஊருக்கு  எப்படிப்போகனும்னே  உனக்குத்தெரியலையே?


13    எங்க  குடும்பத்துலயே  நான்  தான்  அதிகம்  படிச்சிருக்கேன் ., இங்க்லீஷ்ல  ஒரு  ஃபுல்  லைன்  சொல்லவா?


 சொல்லுங்க 


 ஐ லவ்  யூ 


14   இந்த  உலகம்  ரொம்பப்புதுமயானது . எப்படி  நீ  அதைப்பார்க்கறியோ  அப்படி  அது  இருக்காது 


15   உன் புருசன்  ஒரு  தியாகி , ஒரு  ஊமையைக்கல்யாணம்  பண்ணிக்கிட்டானே?


 நான்  ஒண்ணும் ஊமை  இல்லை 


  அப்புறம்  ஏன்  அமைதியாவே  இருக்கே?


16 புருசன்  பேரை  சத்தம்  போட்டு  சொன்னா  பொண்ணோட  பேரு  கெடும் 


நல்ல   பேரு  வைப்பதே  கூப்பிடத்தானே?


17    என்ன? உன்  ஊர்  பேரைக்கேட்டா  மாத்தி  மாத்தி  சொல்ரே?


 நான்  என்ன  செய்ய ?  கவர்மெண்ட்  அடிக்கடி  மாறும்போது  ஊர்  பேரையும்  அடிக்கடி  மாத்திடுது 


18  உன்னை  யார்  லவ்  பண்றாங்களோ  அவங்களுக்கு  உன்னை  அடிக்க  உரிமை  இருக்குனு  சொன்னாங்க , அப்ப  இருந்து  பொண்ணான  நானும்  அடிக்க  ஆரம்பிச்ட்டேன் 


19   பர்தா  போட்டிருக்கும்  பெண்ணோட  ஃபோட்டோ  காட்டி  பார்த்திருக்கியா?னு  கேட்கறியெ? முகம் தானே  பொண்ணோட  ஐடெண்ட்டிட்டி?


 அது  சரி , உங்க  சம்சாரம்  ஏன்  முக்காடு  போட்டு  இருக்கு ? 


20 இந்திய  விவசாயிகளிடம்  இரண்டே  குணங்கள்  தான்  1  உண்மை /நேர்மை   2  கடின  உழைப்பு 


21  இரண்டு  பொண்ணுங்க  தொழிகளா  இருப்பதே  அபூர்வம்  தான் 


22   எளிமையான  உண்மையை  யாரும்  விரும்புவதில்லை , ஆனால்  அலங்காரமான  பொய்யை  விரும்புகிறார்கள் 


23  நான்  சொல்றேன் , ஞாபகம்  வெச்சுக்கோ , இந்தப்பொண்ணு  வாழ்க்கைல  ரொம்ப  தூரம்  ப்[ஓகப்போகுது 


 ஆமா  , ஊருக்குப்போக  800  கிமீ  இருக்காம் 


 யோவ்  நான்  அந்த  அர்த்தத்துல  சொல்லலை .அவ  எங்கெயோ  போயிடுவானு  உயர்வு  நவிர்சிஅ  சொன்னேன் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வசதியான  குடும்பத்தில்  பிறந்த  நாயகியை  ஏன்  இரண்டாம்  தாரமாகக்கட்டிக்கொடுக்க  பெற்றோர்  முன்  வரனும் ?


2   தன்  லொக்கேஷனை  யாரும்  மொபைல்  ஃபோன்  வைத்துக்கண்டு  பிடிக்கக்கூடாது  என  நாயகி  சிம்  கார்டை  எரிக்கிறாள் . இது  தேவையே  இல்லை. சிம் கார்டு  ஃபோனில் இருந்தால்  தான்  அது  ஆன்  பண்ணினால்  தான்  லொக்கேஷனை  சைபர்  க்ரைமால்  கண்டு  பிடிக்க  முடியும், வெறும்  சிம்  கார்டை  வைத்துக்கண்டு  பிடிக்க  முடியாது 


3  நாயகியின் நகைக்கு  ஆசைப்படும்  போலீஸ்  ஆஃபீசர்  அதை  ஆட்டையைப்போட  திட்டம்  போடும்  ஆஃபீசர்  திடீர்  என  நல்லவன்  ஆக  மாறுவது  ஏன் ? 


4  முக்காடு  போட்டால்  வேறு  யாரும்  முகம் பார்க்க  முடியாதபடி  பர்தா  போட்டிருக்கும்  மணப்பெண்கள்   சொந்தக்காரங்களோடு  இருக்கும்போது  அப்படி  பர்தாவோடு  இருப்பது  ஓக்கே . ஆனால்  ரயிலில்  த்னிமையில்  இருக்கும்போது  முக்காடு  எதற்கு ? 


5 நாயகன்  மிடில்  கிளாஸ் , நாயகி  செம  வசதி . நாயகனின்  மனைவியும்  ஓரளவு  வசதி . நாயகியின்  கணவன்  செம  வசதி . யாரும்  ஏழை  இல்லை . ஏன்  எல்லோரும்  அன்  ரிசர்வ்ட்  கம்ப்பார்ட்மெண்ட்டில்  வரனும் ?>  அதுவும்  திருமணம்  ஆன  புது  ஜோடி  கூட்ட  நெரிசலில்  பயணம்  செய்ய  விரும்புவார்களா? 


6   இரு  நாயகிகளும்   தலா  100  பவுன்  நகையுடன்  இருக்கிறார்கள் . இப்படித்தான்  மடத்தனமாக   அன்  ரிசர்வ்ட்  கம்ப்பார்ட்மெண்ட்டில்  பயணிப்பார்களா? 


7  நாயகி  தப்பிப்பதாக  இருந்தால்  தூங்கும்  கணவனை விட்டு  அவள்  பாட்டுக்கு  தனியாக  சென்றிருக்கலாம் /. நாயகன்  கூட  செல்வதால்  நாயகனின்  மனைவி  மிஸ்  ஆக  அவளும்  ஒரு  காரணம்  ஆகிறாளே?  அந்த  குற்ற  உணர்ச்சி  அவர்க்கு  இருக்காதா?   


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   அனைவருக்கும்  பிடிக்கும்  ஒரு அருமையான  ஃபீல்  குட்  மூவி . பார்க்கலாம் , ரசிக்கலாம்  ரேட்டிங்  3.5 / 5 


Laapataa Ladies
Theatrical release poster
Directed byKiran Rao
Written by
  • Original Story:
  • Biplab Goswami[1]
  • Screenplay and Dialogues:
  • Sneha Desai
  • Additional Dialogues:
  • Divyanidhi Sharma
Produced by
Starring
CinematographyVikash Nowlakha
Edited byJabeen Merchant
Music byRam Sampath
Production
companies
Distributed byYash Raj Films
Release dates
  • 8 September 2023 (TIFF)[2]
  • 1 March 2024
Running time
124 minutes[3]
CountryIndia
LanguageHindi
Budgetest.₹4−5 crore[4]
Box office₹200.10crore[5]

Sunday, May 19, 2024

ராஜ பார்வை (1981) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

 


     எம் ஜி ஆர் -ன்  100  வது  பட,ம்  ஒளிவிளக்கு  பிரம்மாண்ட  வெற்றி  பெறவில்லை. அவரது  டாப் 3 லிஸ்ட்  1  உலகம்  சுற்றும்  வாலிபன் 2  நாடோடி மன்னன் 3  அடிமைப்பெண். இந்த  மூன்றும்  அவரது  சொந்தத்தயாரிப்பு . .சிவாஜியின்     100  வது  பட,ம்   நவராத்திரி வெற்றிப்பட்ம்  தான்  என்றாலும்      பிரம்மாண்ட  வெற்றி  பெறவில்லை..  அவரது  டாப் 3 லிஸ்ட்   1 முதல்  மரியாதை 2 பராசக்தி 3 திருவிளையாடல். 

ரஜினியின் 100  வது  பட,ம்   ஸ்ரீ ராகவேந்திரர். இது  தோல்விப்படம். பரீட்சார்த்த  முயற்சி. ஆத்ம  திருப்திக்காக  எடுத்த  படம். இவரது  டாப் 3  .   1  பாட்ஷா  2  படையப்பா  3  சந்திரமுகி .கமலின்  100  வது  பட,ம்  ராஜ  பார்வை.இது  இவரது  முதல்  சொந்தப்படம். தோல்விப்படம். இயக்குநர்  சிங்கீதம்  சீனிவாசராவ்  + கமல் காம்ப்போ  வில்   அனைத்துப்படங்களும்  கமர்ஷியல்  சக்சஸ்.  இது  மட்டும்  விதிவிலக்கு 


சத்யராஜின்  100வது  படம்  வாத்தியார்  வீட்டுப்பிள்ளை .   சுமார்  ரகம். இவரது  டாப் 3  லிஸ்ட்   1  அமைதிப்படை  2 முதல்  வசந்தம்  3  நடிகன் 

 .பிரபுவின்  100வது  படம்  ராஜகுமாரன். தோல்விப்படம்.இவரது  டாப் 3  லிஸ்ட்   1  சின்னத்தம்பி   2   அக்னி நட்சத்திரம்  3  குரு  சிஷ்யன் . கார்த்திக்கின்  100வது  படம்  உன்னிடத்தில்  என்னைக்கொடுத்தேன்  வெற்றிப்படம் , இவரது  டாப் 3  லிஸ்ட்   1  உள்ளத்தை  அள்ளித்தா  2 பொன்னுமணி 3  கிழக்கு வாசல் 


விஜயகாந்த்தின்  100வது  படம்  கேப்டன்  பிரபாகரன். பிரம்மாண்ட  வெற்றி. இவரது  டாப் 3  லிஸ்ட்  1 கேப்டன்  பிரபாகரன்.   2 புலன்  விசாரணை  3  செந்தூரப்பூவே


எம்ஜிஆர் , சிவாஜி , ரஜினி , கமல், சத்யராஜ் , பிரபு  , கார்த்திக்  போன்ற  நட்சத்திரங்கள்  செய்யாத  சாதனையை  விஜய்காந்த்  மட்டுமே  செய்திருக்கிறார். அதாவது  ஒரு  நடிகரின்  100  வது  படம்  பிரம்மாண்ட  வெற்றி  +  டாப் 1  வசூல் படம்  என்ற  பெருமை 


தமிழ்  சினிமா  ரசிகர்கள்  வித்தியாசமானவர்கள். கதாநாயகி  விழி  ஒளி இழந்தவராக  நடித்த  பல  படங்கள்  ஹிட்  ஆகி  உள்ளன. ஆனால்  கதாநாயகன் விழி  ஒளி இழந்தவராக  நடித்த  அனைத்துப்படங்களும்  தோல்வியே. .முரளி  நடித்த  இரவு சூரியன் , விக்ரம்  நடித்த  தாண்டவம் , காசி , பாரதிராஜாவின்  காதல்  ஓவியம் , ஆர்  பார்த்திபன்  நடித்த  சபாஷ்   என  பட்டியல் நீள்கிறது 


சிறந்த  நடிகருக்கான  ஃபிலிம்ஃபேர்  விருதை கமல்  பெற்றார்.இப்படம்  தெலுங்கில்  அமாவாசய  சந்துருடு என்ற  டைட்டிலில்  வெளியானது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  விழி  ஒளி  இழந்தவர் . சிறு  வயதில்  அம்மாவை  இழந்தவர் . அப்பா  இரண்டாம்  தாரமாக  ஒரு  பெண்ணைக்கட்டிக்கொண்டாலும்  அவரை  அம்மாவாகவோ , சித்தியாகவோ  அவரால்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை .சித்தியும்  ஒரு  கட்டத்தில் நாயகனை  அனாதை  ஆசிரமத்தில்  அதாவது  விழி  ஒளி  இழந்த மனிதர்கள்  பராமரிப்பு  நிலையத்தில்  அவரை  சேர்த்து  விடுகிறார்


 வளர்ந்த  பின்  நாயகன்  சொத்துக்களை  எதிர்பாராமல்  சொந்தக்காலில்  நிற்க  வயலின்  வாசிப்பவர்  ஆக  தன்  வாழ்க்கையைத்தொடங்குகிறார்


 நாயகி  வசதி  மிக்க  கிறிஸ்துவக்குடும்பத்தில்  பிறந்தவர் . சிறுகதைகள்  எழுதுவதில்  ஆர்வம்  உடையவர் . விழி ஒளி  இழந்த  நபர்  பற்றி  ஒரு  கதை  எழுதிக்கொண்டு  இருக்கிறார்


 நாயகன் - நாயகி  சந்திப்பு  ஒரு  மோதலில்  ஆரம்பித்து  பின்  நட்பாகி  காதல்  ஆகிறது 


 வழக்கமாக  காதலுக்கு  மதம், ஜாதி , அந்தஸ்து  பேதம்  தானே  தடையாக  இருக்கும் ?  இருவருமே  வசதி  என்றாலும்  நாயகனின்  பார்வைக்குறைபாடு  வில்லன்  ஆக  ஆகிறது 


 நாயகனின்  வீட்டில்  வேறு  பெண்  பார்க்கிறார்கள் . நாயகி  யின்  வீட்டில்  அவருக்கு  வேறு  மாப்பிள்ளை  பார்த்து  திருமணமும்  நிச்சயம்  ஆகிறது . இருவரும்  இணைந்தார்களா? இல்லையா? என்பது  க்ளைமாக்ஸ் 


 நாயகன்  ஆக  கமல்  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். வழக்கமாக  தமிழ்  சினிமாவில்  நாயகனுக்கு  கண்  தெரியாது  என்றால்  ஒரு கூலிங்க்  கிளாசைப்போட்டு  விட்டால்  மேட்டர்  ஓவர் . ஆனால்  இதில்  கண்களை  இமைக்காமல்  நடித்திருக்கிறார். நாயகி  வீட்டில்  நாயகனைப்பற்றி  திட்டுவதை  எதேச்சையாகக்கேட்கும்போது  அவரது  குமுறல்  அருமை 


நாயகி  ஆக  மாதவி .  அகண்ட  விழி  கொண்ட  இவரை  விழி  ஒளி  இழந்தவருக்கு  ஜோடியாக  ஃபிக்ஸ்  செய்தது  சூப்பர் . வழக்கமாக  கமல் + மாதவி  காம்போ  படங்கள்  எல்லாவற்றிலும்  இருவரும்  ஆரம்பத்தில்  மோதிக்கொள்வார்கள் , பின்  காதல்  ஆகும்.  (  காக்கிச்சட்டை , டிக்டிக் டிக் , சட்டம் , மங்கம்மா  சபதம் ) இதிலும்  அதே  பாணி , ஆனால்  ரசிக்க  வைக்கிறது . பல  இடங்களில்  கமலை  ஓவர்  டேக்  செய்யும்  நடிப்பு 


மூன்றாம்  பிறையில்  படம்  முழுக்க  ஸ்ரீதேவி  ராஜ்ஜியம்  தான்., க்ளைமாக்சில் மட்டும்  கமல்  கலக்கி இருப்பார் .  அது  போல  இதில்  மாதவியின் நடிப்பு  படம்  முழுக்கவே  பிரமாதம் 


நாயகனின்  நண்பன்  ஆக  ஒய்  ஜி  மகேந்திரன்  மொக்கைக்காமெடி  போடுகிறார். நாயகியின்  தாத்தா  ஆக  எல் வி  பிரசாத்  இளமைத்துள்ளல்  ஆன  நடிப்பு 


நாயகனின்  அப்பாவாக  சந்திரஹாசன் , சித்தி  ஆக  லலிதா  இருவரும்  சிறப்பான  நடிப்பு 


நாயகியின்  அப்பா  ஆக  தனுஷ்  கோடி  கச்சிதம் 

கெஸ்ட்  ரோலில்  கங்கை  அமரன், எஸ் பி பி .  சந்தான  பாரதி  வருகிறார்கள் 


இசை  இளைய ராஜா . பின்னணி  இசையில்  ஒரு  ராஜாங்கமே  நடத்தி  இருக்கிறார்  3  பாடல்களில்  இரண்டு  மெகா  ஹிட்டு 


ஒளிப்பதிவு  பருன்  முகர்ஜி , இவர்  வங்காள ஒளிப்பதிவாளர்.  காட்சிகள்  கண்களில் ஒற்றிக்கொள்வது  போல்  இருக்கிறது , குறிப்பாக  மாதவியின்  கண்களை  க்ளோசப்களில்  காட்டும்  காட்சி கள் அருமை 


 கமல்  , மாதவி  இருவருக்குமான  காஸ்ட்யூம்  டிசைன்  அருமை 


வி ஆர்  கோட்டகிரி  யின்  எடிட்டிங்கில்  படம்  இரண்டரை  மணி  நேரம்  ஓடுகிறது 


 கே  பாலச்சந்தரின்  ஆஸ்தான  உதவியாளர்  அனந்து  திரைக்கதை  எழுத  இயக்கி  இருப்பவர்  சிங்கீதம்  சீனிஆசராவ்


ஆர்ட்  டைரக்சன்  தோட்டா  தரணி 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகன்  ஆன  கமல்  படம்  முழுக்க   ஒரு  சீனில்  கூட கண்களை  ஒரு  முறை  கூட  இமைக்காமல்  ( சிமிட்டாமல் )  நடித்த  விதம் . அந்த  ஐடியா 


2  விழி  ஒளி  இழந்த  நாயகனின்  கதைக்கு  டைட்டில்  ராஜ  பார்வை  என  வைத்தது . அதற்கான  விளக்கத்தை  நாயகி  மூலம்  வசனமாக  படத்தில்  சொன்னது 


3  அந்தி  மழை  பொழிகிறது  பாடலின்  காட்சிகள்  ஒளிப்பதிவு  செய்யபப்ட்ட  விதம்  செல்லுலாய்ட்  கவிதை 


4  ஒரு  காட்சியின்  முடிவில்  என்ன  சீன்  வருதோ  அடுத்த  காட்சியின்  ஆரம்பம்  அதுவாகவே பெரும்பாலும்  அமைவது . இதே  யுக்தியை  கே  எஸ்  ரவிக்குமார்  புரியாத  புதிர்  படத்தில்  கையாண்டிருப்பார் 


5  நாயகியின்  தாத்தா  ரோலில்  பிரபல  தயாரிப்பாளர்   எல் வி  பிரசாத்தை  அருமையாக  நடிக்க  வைத்த  பாங்கு 


6 கமலின்  குடும்பத்தை  நடிக்க  வைத்தது . நாயகனின்  அப்பா  ரோலில்  சந்திரஹாசன் , சர்ச்  ஃபாதர்  ஆக  சாருஹாசன்  ஆகியோரை  நடிக்க  வைத்தது 

7  மாறுபட்ட  டைட்டில்  டிசைன். வழக்கமாக  இன்ன  இன்ன  துறை  இன்னார்  தான்  கையாண்டார்  என  திரையில்  ஓடும்  விதமாக  டைட்டில்  அமையும், ஆனால்  இதில்  பெயர்கள்  மட்டுமே  இடம்  பெறும்,நாமாக  யூகித்துக்கொள்ள  வேண்டியதுதான்


8  இப்போது  பான்  இண்டியா  படங்களில்  ஒவ்வொரு  மாநிலத்தைச்சேர்ந்த  பிரபலத்தை  நடிக்க  வைத்து  டிமாண்ட்  ஏற்படுத்துவது  போல  அந்தக்காலத்திலேயே  அதை  செய்தது .. நாயகனின்  சித்தியாக  மலையாள  நடிகை  ஆன  கே  பி  ஏ  சி  லலிதாவை நடிக்க  வைத்தது , தெலுங்கு  சினிமா  தயாரிப்பாளர்  ஆன  எல் வி  பிரசாத்தை  நாயகியின்  தாத்தாவாக  நடிக்க  வைத்தது 


9  நாயகி  நாயகனை சந்திக்கக்கிளம்பும்போது  அவருக்கு  மட்டுமே  நேரம்  மிக  மெதுவாக  நகர்வது  போல  கடிகார  முள்  மெதுவாக  நகர்வது . அவரை  சுற்றி  இருக்கும்  மனிதர்கள்  ஸ்லோ மோஷனில்  நடப்பது  போன்ற  காட்சிகள் 


10   நாயகனுக்கு  திருமணம்செய்ய  ஒரு  பெண்னை  அழைத்து  வர  இருவருக்குமான  சந்திப்பு  , உரையாடல்  ஒரு  கவிதை  , அந்தக்காட்சியில்  சித்ராவின்  நடிப்பு,ம்  அட்டகாசம் . வி  கே  ராமசாமியின்  பங்களிப்பும்  அருமை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  அந்தி  மழை  பொழிகிறது , ஒவ்வொரு  துளியிலும்  உன்  முகம்  தெரிகிறது 


2  அழகே  அழகு  தேவதை 


3 விழி  ஓரத்துக்கனவு 


  ரசித்த  வசனங்கள்  ( பால குமாரன் + அனந்து + சந்தான  பாரதி )


1  என்  லைஃப்  பற்றி  தெரிஞ்சுக்கனும்னு  ஆசைப்பட்டீங்க  இல்ல?  எங்க  பகல்  கூட  உங்க  ராத்திரியை  விட  இருட்டா  இருக்கும்


2  நீங்க  அழக்கூடாது .உங்களை  ஏமாற்றிய  இயற்கையை  தோற்கடிக்க  இருப்பவர்  நீங்கள் 


3  உங்கள்  பார்வை  அந்தகப்பார்வை  அல்ல , அந்தரப்பார்வை 


4   என்  அப்பாவால  இன்னொரு  பெண்ணை  மனைவியா  ஏத்துக்க  முடிஞ்சுது , ஆனா  என்னால  இன்னொரு பெண்ணை  அம்மாவா  ஏத்துக்க  முடியலை 


5    இவன்  இதுவரை  12  1//2  பெண்களின்  வாழ்க்கையைக்கெடுத்திருக்கான்


 அதென்ன  அரைக்கணக்கு ?


  ஆக்சுவலா  13  தான். ஆனா  13  வது  பெண்ணைக்கெடுக்க  முயற்சிக்கும்போது  நான்  உள்ளே  வந்து  காரியத்தைக்கெடுத்துட்டேன் 


6   இந்த  விக்ஸ்  வாசனையை  விட  உன்  கிட்டே  விஸ்கி  வசனை  ஜாஸ்தி 


7  கொலை  நடந்தாலே  நம்மூர்ல  பஞ்சாயத்தைத்தான்  கூட்டுவோம், ஆனா  இங்கே  வெறும்  கார்  மோதலுக்கே  போலீசைக்கூப்பிடறாங்க 


8  இந்தக்குழந்தைகளுக்கு  இருக்கும்  மனசு  பெரியவங்க  கிட்டே  இல்லை 


9   உன்  கதை  எழுதும்  வேலை  எந்த  லெவல்ல  இப்போ  இருக்கு ?


 என்னை  மேரேஜ்  பண்ணிக்குவீங்களா?


 அருமையான  முடிவு 


10  ரகுவுக்கு  கால்  கட்டு  போடலம்னு  இருக்கோம்


 ஏன் ?அவனுக்கு  கால்ல  அடியா?


11   புளித்தண்ணி  என்  மேல  கொட்டிடுச்சு ‘’


  ச்சீ  ச்சீ  இந்தப்பழம்  புளிக்கும் 


12   எனக்கும்  கண்  தெரியாது , உனக்கும்  கண்  தெரியாது  , நாம  ரெண்டு  பேரும்  கல்யாணம்  பண்ணிக்கிட்டா  குடும்பம்  நடத்த  முடியாது , கண்ணாமூச்சி  தான்  ஆட  முடியும் 


13 எருமை  மாட்டுக்கு  முன்னால  போய்  புல்லாங்குழல்  வாசிச்சா  அதுக்கு  என்ன  தெரியும் ?


14 பொண்ணுங்க  எப்பவுமே  அப்படித்தான்,,,  தகறாருன்னா  ஒதுங்கிடுவாங்க 


15  இந்த்க்கதையை  எப்படி  வேணாலும்  முடிச்சுக்கோ, ஆனா  சோகமான  முடிவு  மட்டும்  வேணாம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  டைட்டிலில்  கதை  = கமல்  என  போட்டுக்கொண்டாலும்  இதன்  ஒரிஜினல்  வெர்சன்  ஆன  ஹாலிவுட்  படமான  பட்டர்ஃபிளைஸ்  ஆர்  ஃப்ரீ (BUTTERFLIES ARE  FREE -1972  படத்துக்கு  க்ரெடிட்  தராதது 


2  படத்தின்  க்ளைமாக்ஸ்  காட்சி  THE GRADUATE(1967) என்ற  படத்தில்   இருந்து  உருவப்பட்டிருக்கிறது 


3   நாயகன்  தன்  அப்பாவின்  இரண்டாம்  தாரத்தை  சித்தியாக  தன்னால்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை  என்கிறார். ஆனால்  சில  இடங்களில்  அம்மா  என  அழைக்கிறார்.பல  இடங்களில்  சித்தி  என்கிறார்


4  நாயகனின்  சித்தி  கேரக்டர்  டிசைனில்  தெளிவில்லை .அவருக்கு  கமல்  மீது  பாசம்  எல்லாம்  இல்லை . சொத்துக்காகத்தான்  என்பதாக  சொல்கிறார்கள் . ஆனால்  கமலுக்கு  உடல்   நிலை  சரி  இல்லாத  போது  அவரை  நன்கு  கவனித்துக்கொள்கிறார். உடல்  நலனில் அக்கறை  செலுத்துகிறார்


5   நாயகன்  நாயகி  இருவரும்  காலையில்  சந்திக்கிறார்கள் . அப்போதே  நாயகி  வீட்டுக்குப்போகிறார்கள் .அங்கே  பிரச்சனை. நாயகன்  நாயகி  வீட்டை  விட்டுக்கிளம்புகிறார். இத்தனை  சம்பவங்களும்  காலை  10  மணி  முதல்  மதியம்  1  மணிக்குள்  முடிந்து  விடுகிறது , ஆனால்  அடுத்த  காட்சியில்  நாயகன்  அனாதை  ஆசிரமத்துக்கு லேட்டாக  மிட்  நைட்டில்  வருகிறார்., அடடா  . பர்த்டே  கொண்டாட  முடியலையே  . எல்லாரும்  தூங்கிட்டாங்களே  என்கிறார்.   மதியம்  1  டூ  மிட்  நைட்  12   எங்கே  போனார்  ? 


6  நாயகியின்  வீட்டு  வாசல்  முன்  நாயகன்  உட்பட  ஐந்து  பேர்  குடித்து  விட்டு  தகறாரு  செய்கிறார்கள் . டெல்லி  கணேஷ்  தனி  ஆளாக  என்ன  தைரியத்தில்  அவர்களை  மிரட்டப்போகிறார் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தரமான  படம் , காதல்  கதைகளை  ரசிப்பவர்கள்  மிஸ்  பண்ணக்கூடாத  படம் . ஆனால்  யூ  ட்யூப் , ஓடிடி  யில்  கிடைப்பதில்லை .தியேட்டரில் , டி வி  யில்  பார்த்தால்  தான்  உண்டு  . ரேட்டிங்  3 /. 5 


ராஜ பார்வை
தமிழில் தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்சிங்கீதம் சீனிவாச ராவ்
எழுதியவர்அனந்து
கமல்ஹாசன்
பாலகுமாரன்
சந்தான பாரதி
உற்பத்திசந்திரஹாசன்
சாருஹாசன்
கமல்ஹாசன்
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுபருண் முகர்ஜி [1]
திருத்தியவர்வி.ஆர்.கோத்தகிரி
இசைஇளையராஜா
தயாரிப்பு
நிறுவனம்
வெளியீட்டு தேதிகள்
  • 10 ஏப்ரல் 1981 (தமிழ்)
  • 29 ஆகஸ்ட் 1981 (தெலுங்கு)
நேரம் இயங்கும்
144 நிமிடங்கள் [1]
நாடுஇந்தியா
மொழிகள்
  • தமிழ்
  • தெலுங்கு

Saturday, May 18, 2024

சர்வம் தாள மயம் (2019) - தமிழ் - சினிமா விமர்சன,ம் ( மியூசிக்கல் மோட்டிவேஷனல் டிராமா )

   


  கர்நாடக  சங்கீதம், மிருதங்கம்  இவற்றில்  ஏதாவது  ஒன்றை  அடிப்படையாக வைத்துத்திரைக்கதை  அமைக்கப்பட்ட  படங்களான  மிருதங்க  சக்கரவர்த்தி   (1983) , சிந்து  பைரவி (1985) , உன்னால்  முடியும்  தம்பி ( 1988) ஆகிய  மூன்றுமே  வெற்றிப்படங்கள் தான்  என்றாலும்  ஏனோ  இசை சம்பந்தப்பட்ட  அது  மாதிரி  படங்கள்  அதிகம்  வரவில்லை . சங்கரா பரணம் (1979) , சலங்கை  ஒலி ( சாகர சங்கமம்) -1983  இவை  இரண்டிலும்  கர்நாடக  சங்கீதத்துக்கு  முக்கியத்துவம்  கொடுத்து  எடுக்கப்பட்டாலும்  கதைக்களம்  மாறுபட்டவை . இவை  இரண்டுமே  பிரம்மாண்ட  வெற்றி  பெற்ற  படங்கள் 


ஒளிப்பதிவாளர்  ராஜீவ் மேணன் சைதன்யா (1991)  என்ற  தெலுங்குப்படத்தில்  ஒளிப்பதிவாளராக  அறிமுகம்  ஆகி  மணிரத்னம்  படங்களான  பம்பாய் (1995) குரு -ஹிந்தி (2007) , கடல் (2013)  போன்ற  படங்களில்  சிறந்த  ஒளிப்பதிவை  வழங்கி  இருந்தார். 1997 ல் இவரது  இயக்கத்தில்  வந்த  முதல்  படமான  மின்சாரக்கனவே  வெற்றி  பெற்ற  படம்..2000 ல்  வெளியான  கண்டு  கொண்டேன் கண்டு  கொண்டேன்  தரமான  காதல்  கதை  என்றாலும் சரியாகப்போகவில்லை. 19  வருடங்கள் கழித்து  அவர்  இயக்கிய  தமிழ்ப்படம்  தான் சர்வம் தாள மயம்.கொஞ்சம்  ரிஸ்க்  ஆன  கதை  தான் . ஆனாலும்  தரமான  மேக்கிங்  மூலம்  வசூல்  ரீதியாகவும்  வெற்றி பெற்ற  படம்  இது இவரது   லதா  மேனன்  தான்  தயாரிப்பாளர் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


நாயகனின்  அப்பா  மிருதங்கம்  தயாரித்து  விற்பனை  செய்யும்  தொழிலில்  இருப்பவர். நாயகன்  பிளஸ்  2  பரீட்சை  கூட  ஒழுங்காக  எழுதாமல்  சினிமா , ஊர்  சுற்றல்  என்று  இருப்பவன் . ஒரு  நாள்  பிரபலமான  விதவான்  ஆன  பாலகாட்டு  வேம்பு  ஐயர்  என்பவருக்கு  மத்தளம்  ஒன்றை  டெலிவரி  செய்ய  ஒரு  கச்சேரி  நிகழ்ச்சிக்குப்போகும்  நாயகன்  அங்கே   வேம்பு  ஐயருக்குக்கிடைக்கும்  மரியாதை , புகழ்  போன்றவற்றைக்கண்டு  பிரமித்து  தானும்  அதே  போல்  மிருதங்க  வித்வான்  ஆக  நினைக்கிறார்


வேம்பு  ஐயரிட்மே  தன்  ஆசையைத்தெரிவித்து  தன்னை  சீடனாக  ஏற்றுக்கொள்ளும்படி  வேண்டுகிறார். ஆனால்  பிரமணர்  ஆன  தான்  பிற்படுத்தப்பட்ட  சமூகத்தைச்சேர்ந்த  நாயகனுக்கு தொழில்  கற்றுத்தருவதா? என்ற  எண்ணத்தில்  ஆரம்பத்தில்  தவிர்க்கிறார். பிறகு  நாயகனுக்கு  இருக்கும்  இசைப்புலமை , இசை  ஆர்வம்  கண்டு  அவனை  சீடனாக  ஏற்றுக்கொள்கிறார்


வில்லன்  வேம்பு  ஐயரிடம்  சீடன் கம்  உதவியாளராக  இருக்கிறான் . அவனுக்கு  நாயகனைப்பிடிக்கவில்லை. அவனை  மட்டம்  தட்ட  சமயம்  பார்த்து  இருக்கிறார். ஒரு  கட்டத்தில்  வேம்பு  ஐயர்  நாயகனுக்கு  ஆதரவாகப்பேசி  வில்லனை  வீட்டை  விட்டு , தன்னை  விட்டு  வெளியேற்றி  விடுகிறார்


இதனால  நாயகனை , வேம்பு  ஐயரைபப்பழி  வாங்க  சமயம்  பார்த்துக்காத்திருக்கிறான்  வில்லன்

வில்லனின்  திட்டம்  நிறைவேறியதா? நாயகன்  மிருதங்கம்  கற்று  சாதித்தானா?  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஜி வி  பிரகாஷ்  மிக  கண்ணியமான  கதபாத்திரத்தில்  வருகிறார். நான்  பார்த்தவரை  இவர்  ரவுடி , பொறுக்கி , பொம்பள  பொறுக்கி  போன்ற  மட்ட  ரகமான  கேரக்டர்களில்  தான்  நடித்து  வ்ந்தார் .முதல்  முறையாக   சாதிக்கத்துடிக்கும்  இளைஞன்  கதாபாத்திரத்தில்  அருமையாக  நடித்துள்ளார் . இந்த  கேரக்டருக்காக  ஒரு  வருடம்  நிஜமாலுமே  மிருதங்கம்  கற்றாராம். 


நாயகி  ஆக  அபர்ணா  பாலமுரளி  அழகிய முகம்,  வாட்டசாட்டமான  உடல்  அமைப்பு , பொங்கும் இளமை  என  ஆர்ப்பரிக்கிறார்


 வேம்பு ஐயர்  ஆக  நெடுமுடி  வேணு   வித்யா  கர்வத்தை  வெளிப்படுத்தும்  விதம்  அபாரம். படம்  முழுக்க இவரது  கேரக்டர்  டிசைன்  கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது , அனுபவம்  மிக்க  நடிப்பு 


  நாயகனின்  அப்பாவாக  இளங்கோ  குமாரவேல்  நல்ல  குணச்சித்திர  பாத்திர வடிவமைப்பு .  அருமையான  நடிப்பு 


 வில்லன்  ஆக  வினீத். கச்சிதம் . டி வி  தொகுப்பாளராகவே  வரும்  திவ்ய  தர்ஷினி    அழகு 

ஏ ஆர்    ரஹ்மானின்  இசையில்  ஆறு  பாடல்கள், அவற்றில்  நான்கு  பாடல்கள்  அருமை .  இவரது  இசையில்  வந்த  சங்கமம்  படத்தின்  பாடல்கள்  அளவுக்கு  இல்லை    என்றாலும்  திரைக்கதை  அமைப்பில்  சங்கமம்  ஒரு  டப்பாப்படம் . இது  நல்ல  படம் 


ரவி  யாதவின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  பிரம்மாண்டமாய்  கண்  முன்  விரிகின்றன


அந்தோணியின்  எடிட்டிங்கில்  130  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ராஜீவ் மேனன் 



சபாஷ்  டைரக்டர்


1   தனிப்பட்ட  ஒரு வித்வானின்  வாழ்க்கையை  சொல்லும்  சிந்து  பைரவி  யை  விட  வாழ்வில்  முன்னேறத்துடிக்கும்  ஒரு  மனிதனின்  கதையைச்சொன்ன  விதத்தில்  இது  ஒரு  மோட்டிவேஷனல்  டிராமாவாக  உயர்ந்து  நிற்கிறது 


2    நெடுமுடி  வேணு , இளங்கோ  குமாரவேல் , ஜி வி பிர்காஷ்  மூவரின்  நடிப்பும்  அருமை 


3  ரியாலிட்டி  ஷோக்களில்  நடக்கும்  அரசியல் , டிஆர்  பி  ரேட்டிங்  வெறி  போன்றவற்றைப்படம்  பிடித்துக்காட்டிய  விதம் 


4 க்ளைமாக்ஸ்  போட்டிப்பாட்டில்  ஏ ஆர்  ரஹ்மானின்  டேஸ்ட்க்கு  ஏற்ப  பாடலை  வடிவமைத்த  விதம். கர்நாடக  சங்கீதம்  மட்டுமல்லாமல் உலகில்  உள்ள  பல  தரபப்ட்ட  இசைகளையும் மிக்ஸ்  செய்து  தந்த  விதம்




  ரசித்த  வசனங்கள் 


1  உன்  அம்மாவுக்கு என் மேல  கோபம் இல்லை , என்  தொழில்  மூலம் வர்ற  வருமானம்  மேல  கோபம் 


2  அடி மரத்துல  மிருதங்கம்  செஞ்சா  அது  ரெண்டு  தலைமுறைக்கு  வரும், மேல்  மரத்துல  செஞ்சா  ரெண்டு  வருசத்துக்குக்கூட  வராது 


3   நான்  எந்த  ஃபீல்டுக்குப்போனாலும் நம்ப்ர்  ஒன்னா  இருக்கனும்னு  ஆசைப்படுவேன்


4  மிருதங்கத்துக்கு  மூணு  விதமான  தோல்  தேவை ,ஆட்டுத்தோல் , மாட்டுத்தோல்  எருமைத்தோல், மூணுமே  பெண்  இனமா இருக்கனும்,  அதுவும்  பிரசவிச்ச பின்


5 ஸ்கைப்பா? எந்த  வித்தையா  இருந்தாலும்  குரு  கிட்டே  நேரில்  வந்து  கத்துக்கனும்


6  ''நீ ஒரு வேம்பு ஐயரோட வெற்றியைப் பார்த்துட்டுப் பேசுற, நான் நூறு வாத்தியக்காரனோட வறுமையைப் பார்த்துப் பேசுறேன்''


7  மிருதங்கம்  வாசிப்பதில்  உலகிலேயே  நான்  தான்  நெம்பர்  ஒன்னா  வரனும்


 அது  முடியாது , நான்  தான்  நெம்பர் ஒன்


7 கல்லில்  இருந்து  சிற்பம் வரனும்னா  சிற்பிக்குப்பொறுமை  வேணும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  ஒரு  விஜய்  ரசிகன் , பொறுப்பில்லாதவன் , படிப்பு  வராது  போன்ற  ஓப்பனிங்  காட்சிகள்  எல்லாம்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை 


2  நாயகி  நாயகனை  விட  உயரம்  அதிகம்,  உடல்  வாகும்  அவரை  விட  கூடுதல் . பார்க்க  நாயகனுக்கு  பெரிய,ம்மா  பொண்ணு  போல  அக்கா  போல  இருக்கிறார்


3   நாயகி  நாயகனின்  காதலை  ஆரம்பித்தில்  மறுத்தவர்  பின்  அவரை  ஏற்றுக்கொள்வதில்  வலு  இல்லை 


4   ஒவ்வொரு  மனிதனுக்கு ம்  தன்  அப்பா  தான்  முதல்  ஹீரோ . நாயகன்  தன்  அப்பாவிடமே  மிருதங்கம்  கற்றுக்கொள்ளாமல்  வேறு  யார்  யாரிடமோ  கெஞ்சி  கூத்தாடி  கலை  கற்பது  ஏனோ ? அப்பாவிடமே  கற்று  இருக்கலாமே? 


5  நாயகன்  -  நாயகி  திருமணத்துக்கு  முன்பே  இணையும்  செல்வராகவன்  தனமான  காட்சி  எதுக்கு ? ராஜீவ்மேனன்  படங்களில்  வழக்கமாக  இப்படி  இருக்காதே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கர்நாடக  சங்கீதம்  என்றால்  அலர்ஜி  என்பவர்கள்  கூட  பார்க்கும்படி  ஒரு  மோட்டிவேஷனல்  டிராமாவாக  இருக்கும்  படம் , பார்க்கலாம் . ரேட்டிங்  3 /. 5 


சர்வம் தாள மயம்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ராஜீவ் மேனன்
எழுதியவர்ராஜீவ் மேனன்
உற்பத்திலதா மேனன்
நடிக்கிறார்கள்ஜி.வி.பிரகாஷ் குமார்
நெடுமுடி வேணு
அபர்ணா பாலமுரளி
வினீத்
குமரவேல்
ஒளிப்பதிவுரவி யாதவ்
திருத்தியவர்அந்தோணி
இசைஅசல் பாடல்கள்:
ஏ.ஆர்.ரஹ்மான்
ராஜீவ் மேனன் (ஒரு பாடல்)
பின்னணி இசை:
ஏ.ஆர்.ரஹ்மான்
குதுப்-இ-கிருபா
தயாரிப்பு
நிறுவனம்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஜியோ ஸ்டுடியோஸ்
சக்தி திரைப்படத் தொழிற்சாலை
வெளிவரும் தேதி
  • 1 பிப்ரவரி 2019
நேரம் இயங்கும்
130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்