Friday, May 23, 2025

FRED AND ROSE WEST : A BRITISH HORROR STORY (2025) -ஆங்கிலம் / தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் டிராமா டாக்குமெண்டரி ) @ நெட் பிளிக்ஸ்

   

            1994 ல்   கைது  செய்யப்பட்ட  சீரியல்  மில்லரின்   கேஸ்  பற்றிய   டாக்குமெண்டரி  இது . தமிழ்  டப்பிங்கில் இருக்கு . 3 எபிசோடுகள் , ஒவ்வொரு எபிசோடும் 52 நிமிடங்கள் . ஒரு தமிழ்  சினிமா   டைம் டியூரேசன் தான் .இரண்டரை மணி நேரம் . இது ஒரு  யு  சர்ட்டிபிகேட்  படம் .அதனால் அனைவரும் பார்க்கலாம்         


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் 1941ல்  பிறந்தவன் . முதல்   மனைவி  யுடன் காதல்  திருமணம் . ஒரு மகள்  .  முதல்   மனைவி   இறந்த பிறகு  27 வயதான  வில்லன் 15 வயதான வில்லியை சந்திக்கிறான் . டீன்  ஏஜில் இருப்பதால் வில்லி க்கு எந்த விபரமும் தெரியாது  வில்லனின் ஆசை   வார்த்தைகளில்   மயங்கி   திருமணம்   செய்து  கொள்கிறாள் 



 இருவருக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங்க் . இவர்கள்   காதல்   வாழ்க்கை நன்றாகப்போய்க்கொண்டு இருக்கிறது . ஒரு சின்ன திருட்டுக்கேஸில் வில்லன் ஜெயிலுக்குப்போகிறான் .அந்த   கால கட்டத்தில்   வில்லி   வில்லனின்   முதல்  தாரத்தின்  மகளை  அடிக்கடி  அடித்துத்துன்புறுத்துகிறாள் .அது பற்றி வில்லனுக்குக்கடிதமும் எழுதுகிறாள் . நான் ரிலீஸ்   ஆகி வரும் வரை    அவளை  சகித்துக்கொள். பார்த்துக்கொள் என பதில் கடிதம் எழுதுகிறான் வில்லன் 


வில்லன்   ரிலீஸ்   ஆகி வருகிறான் . வில்லியை  பணத்துக்காக   விலைமகள்   ஆக்குகிறான் .  வீட்டுக்கே   கஸ்ட்மர்ஸ்  வருகிறார்கள் .வில்லன் வில்லி   தம்பதிக்கு மொத்தம்   10 குழந்தைகள் .இந்த  பத்தில்  இவர்கள்   இருவருக்கும் பிறந்தது எத்தனை ? கஸ்ட்மர்சுக்குப்பிறந்தது எத்தனை ? என்ற  விபரம் ( அவர்களுக்கே ) தெரியவில்லை 


கிட்டத்தட் ட   20    வருடங்கள்  வில்லனும், வில்லியும்   எந்த பிரச்சனையிலும் சிக்காமல் வாழ்ந்து வருகின்றனர் . ஸ்கூலில்  இவர்களது  குழந்தைகள்   விளையாட்டாகப்பேசியது  மாட் ட   வைக்கிறது . அதாவது  நாம் எல்லோரும் அம்மா,அப்பா பேச்சைக்கேட்டு ஒழுங்காக நடந்துக்கணும் , இல்லை எனில்  ஹெதர் க்கு நடந்தது போல  நமக்கும் நடக்கும், நம்மைக்கொன்று   வீட்டுக்குள் புதைத்தது விடுவார்கள்   என பேசிக்கொள்கிறார்கள். இதைக்கேட்ட சக மாணவர்கள் வெளியில்  பரப்ப  போலீஸ்   வில்லனைக்கைது   செய்கிறது 



விசாரணையில்   ஆரம்பத்தில் வில்லன் வாயைத்திறக்கவில்லை . ஆனால்  7 வயதான குழந்தை  ஹெதரின்  டெட் பாடி கண்டெடுக்கப்படுகிறது . அதற்குப்பின்  கொஞ்சம்    கொஞ்சமாக உண்மைகளை வில்லன் வாக்குமூலமாகக்கொடுக்கிறான் 

 அந்தக்குழந்தை  போக   வேறு இரு டீன் ஏஜ் பெண்களின்  சடலங்கள்   கிடைக்கின்றன .. அதில் ஒரு பெண்  நிறை மாத கர்ப்பிணி  என்பது    தெரிய   வருகிறது .விசாரிக்கும்போது ஒரு பெண்ணை நானாகக்கரெக்ட்  பண்ணினேன் . இன்னொருத்தி   அவளின்   தோழி .  ஆரம்பத்தில் எனக்கு இணக்கமாக இருந்தார்கள் , என்னை எதிர்த்ததால் கொலை செய்து புதைத்து விடட்டேன்  என   கூலாக பதில்   சொல்கிறான் வில்லன் 

  போலீஸ்   உஷார்  ஆகி  அந்த ஏரியாவில்  மிஸ்ஸிங்க்  கேஸ்  யார் யார்  என  விசாரிக்கிறது ..மொத்தம்  9 பெண்கள்  மேலும்   சடலமாகக்கிடைக்கிறார்கள் .    ஆக  மொத்தம்  1+ 2+ 9 = 12   கொலைகள்   செய்து   இருக்கிறான் 

 இப்போது  போலீசுக்கு   சந்தேகம்   வந்து   முதல் மனைவி  , மகள்  இருவருக்கும் என்ன ஆனது என விசாரிக்கும்போது   வில்லன்  முதல் மனைவியைத்தான் தான் கொன்றதாக வாக்கு மூலம் தருகிறான் 

முதல்    மனைவியின்  மகளை   வில்லி தான் கொன்று   இருக்க வேண்டும் . ஆனால்   வில்லி அதை ஒத்துக்கொள்ளவில்லை . வில்லனும்   வில்லியைக்காப்பாற்ற   எல்லாக்கொலைகளையும் செய்தது நான் தான்  என சொல்கிறான் 

நாங்கள்   இருவரும் காரில் போவோம் .யாராவது   பெண்  லிப்ட் கேட் டால்   அவளை  காரில் ஏற்றிக்கொண்டு  வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன் கொடுமை செய்து தொழிலுக்கு  யூஸ்   செய்வோம் . அடம் பிடித்தால்  கொலை தான்    என்கிறான் 

இவர்கள்    வீட்டில்   வேலைக்காரி ஆக  பணி  புரிந்த  பெண் தான்   சாட் சி .அவளையும்  விட்டு  வைக்க   வில்லை . பாலியல் வன்கொடுமைக்குப்பின் அவள்   தப்பி விடுகிறாள் 


வில்லியும்   கைது  செய்யபப்டுகிறாள் . விசாரணையில்   வில்லனைப்போல வில்லி ஒத்துக்கொள்ளவில்லை . இவர்களுக்கு எதிராக எந்த சாடசியும் இல்லை , தடயமும் இல்லை . தீர்ப்பு    என்ன ஆனது ? வில்லி   சிக்கினாளா ? தப்பினாளா ? என்பதை   நெட் பிளிக்சில் காண்க  

இந்த   வெப்  சீரிஸ்  ல நடிகர் நடிகைகள்   யாரும் கிடையாது .  கொலையாளிகள்  இருவர் , போலீஸ்  ஆபீசர்ஸ் , கொலை ஆனவர்களின் உறவினர்களின் பேட்டிகள்  தொகுப்புதான் 


சபாஷ்  டைரக்டர்


1     கொலைகள் ,பாலியல்  வன்கொடுமைகள்  நடந்திருந்தாலும்  அனைவரும் பார்க்கும் வண்ணம்  அடல்ட்  கண்ட் டென்ட்  இல்லாமல்   கண்ணியமாக  தந்த   விதம் 


2  டாகுமெண்டரி  பார்க்கும்   போர்   உணர்வே   இல்லாமல்   க்ரைம் த்ரில்லர்   பார்ப்பது போல ஒரு விறுவிறுப்பு , பரபரப்பு  கொண்டு   உருவாக்கிய விதம் 


3  சம்பவம் நடந்த லைவ் லொக்கேசன் , மீடியா ரிப்போர்ட்   எல்லாம் அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1 சாதாரண வழக்குகளில் ஆதாரங்களை குற்றவாளியிடம்  காட்டி  விளக்கம் கேட்போம் . ஆனால்   இந்தக்கேஸில் ஆதாரங்களை  இனி தான் சேகரிக்க வேண்டும் . ஆனால்   குற்றவாளியி டம்  உண்மைகளைக்கறக்க வேண்டும்., இது ஒரு சவால் 


2  லாயர்  லேங்க் வேஜில்  இதை பிஷ்ஸிங்க்  எக்சசைஸ் என சொல்வோம் 


3  ஒரு   வக்கீல்   கிளையண்ட் சொல்வதைத்தான் நம்ப முடியும் 



4  நாம்    நிறைய பி ஆபத்துக்களை எதிர்கொள்கிறோம் , ஆனால் அது நமக்குத்தெரிவதில்லை 


5  பதில்   சொல்றவங்களுக்கு எவ்ளோ பவர் கொடுக்கிறோம் என்பதுதான்   இன்டடர்வியூவுக்கான  வியூகம்.


6  க்ரைம்  இன்வெஸ்டிக்கேஷன்ல  ரொம்ப முக்கியம் சம்பவ இடத்துக்குப்போவது 


7 எல்லோருக்கும் முன்னால   கதையைக்கண்டுபிடிப்பது  பிரஸ் சோட வேலை .பிரத்யேகமா எதுனா கண்டுபிடிப்பாங்க 


8  ஆதாரங்களைக்கொடுப்பதால் ஏற்படும்  பயன்களை  க்ளையண்ட்டுக்கு  சொல்வது லாயரின் வேலை  ஆனா முடிவு எடுப்பது க்ளையண்ட்  தான் 



9 கேஸ்   நடந்துட்டு இருக்கும்போது  சாட் சிக்குப்பணம் கொடுக்கக்கூடாது , ஆனா  தீர்ப்பு வந்த பின் தரலாம் . அப்படித்தருவோம் என வாக்குறுதியும் தரலாம் 


10   எந்த உணர்ச்சியையும்   வெளிக்காட்டாம இருக்கணும் 


11  ஒவ்வொரு  முறை   நாம் குட்  நைட்   சொல்லும்போதும் குட் பை சொல்லும்போதும்   ஐ லவ் யூ   சொல்லணும் . ஏன்னா   எது   கடைசி குட்  நைட்    என்பது நமக்குத்தெரியாது 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   சம்பவம்  நடந்து  அதாவது   கொலை நடந்து  25 வருட ங்கள்   கழித்து  கொலையானவர்களின்   உறவினர்களின்  பேட்டி  எடுக்கப்படும்போது  அவர்கள்  கண்ணீரே   வராமல்  செயற்கையான   சோ கத்தைக்காட்டுகிறார்கள் .இயல்பாக இருக்க விட்டிருக்கலாம்  விஜய்  டி வி ல  அழ   வைப்பது போல  செய்திருக்க வேண்டாம் 


2    வில்லியை சிக்க   வைக்க  போலீஸ்  ரகசிய  டெலி போன்  ஒட்டுக்கேக்கும்  கருவி  வில்லி யின் வீட்டில் பொரு த்துகிறார்கள் .அது கூடவா வில்லியால் யூகிக்க முடியாது ? சாமார்க்தி யமாக  தப்பிக்கிறாள் 


3  கோர்ட்டில்  ஆஜர் ஆகும்போது   வில்லனும் , வில்லியும் நீண்ட இடைவெளிக்குப்பின்  சந்திக்கிறார்கள் .அப்போது   வில்லி  நடந்து  கொண்ட விதம் தான்   வில்லனை   புதிய முடிவு  எடுக்க வைக்கிறது .அதை வில்லி யூகிக்க மாட் டாளா ? எதனால்   அப்படி  நடந்து  கொண்டாள் ?


4  வில்லன்   தனது இரண்டாம் மனைவிக்கு  கஸ்ட்மர்கள்   மூலம் பிறந்த   பெண் குழந்தைகளை   பாலியல் வான் கொடுமை  செய்ததை   வில்லி எதனால் கண்டிக்கவில்லை ?  

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - க்ரைம்  த்ரில்லர்   ரசிகர்கள்   குடும்பத்துடன் பார்க்கலாம் .  ரேட்டிங்  3 / 5 


Fred West
Fred and Rose West in the mid-1980s
Born
Frederick Walter Stephen West

29 September 1941
Died1 January 1995 (aged 53)
Cause of deathSuicide by asphyxiation
Spouses
Catherine Costello
(m. 1962; murdered 1971)
 
(m. 1972)
ConvictionsEarlier convictions for:
Criminal penaltyDied by suicide prior to murder conviction
Details
Victims12–13+
Span of crimes
1967–1987
CountryEngland
Date apprehended
24 February 1994; 31 years ago

Thursday, May 22, 2025

THE UGLY STEPSISTER (2025) - நார்வே , ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( பாடி ஹாரர் பிலிம் )

         

 பெர்லின் இன்ட் டர்நெஷனல்   பிலிம்   பெஸ்டிவலில்  சிறந்த  படம்  என்ற  பிரிவுக்காக நாமினேட் செய்யப்பட் ட படம் இது .7/3/2025   அன்று  நார்வே யில்  ரிலீஸ்  ஆன இந்தப்படம்  884 கோடி டாலர்   வசூலித்து உள்ளது . சிறந்த  ஒளிப்பதிவு ,  சிறந்த  ஆர்ட்  டைரக்சன் , சிறந்த    காஸ்ட்யூம் டிசைன் ,  சிறந்த  மேக்கப்  என்று   நான்கு  விருதுகளை ஆஸ்காரில்  அடித்து  விடும் என  விமர்சகர்களால்  கணிக்கப்படுகிறது                


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகிக்கு  ஒரு தங்கை , ஒரு அம்மா  ... அப்பா இல்லை . நாயகியின்  அம்மா   ஒரு   பெரிய  பணக்காரனைப்பார்த்துக்கல்யாணம் பண்ணிட்டா வாழ்க்கைல   செட்டிலாகிடலாம் னு நினைக்கறாங்க . மனைவியை  இழந்த  ஆனால் ஒரு மகள் உள்ள  பணக்காரனைக்கல்யாணம்  பண்ணிக்கறாங்க    .ஆனா   அந்த  ஆள்  திடீர்   என இறந்து  விடுகிறார் . சொத்து  சல்லிப்பைசா கூட இல்லை .  சும்மா ஏமாத்தி  இருக்கார் . இப்போது   நாயகியின் அம்மாவுக்கு   என்ன செய்வது என  தெரியவில்லை 



இனிமேல்  ஒரு ஆளைப்பார்த்துக்கல்யாணம்  பண்ண   தனக்கு   வயசு  இல்லை .அதனால  நாட்டின் இளவரசரை  மயக்கி   தன  மகள்களில்  யாராவது   ஒருவரை   ரெடி  பண்ணி    வாழ்க்கைல   செட்டிலாகிடலாம் னு நினைக்கறாங்க . .


நாயகியின்  தங்கை  இன்னும் பூப்பெய்தவில்லை . அதனால்   நாயகியை  ரெடி பண்ண  அவளது அம்மா முடிவு செய்கிறார் . அழகில்  ஒரு படி  குறைவாக இருப்பதால்  நாயகிக்கு பழங்கால  பிளாஸ் டிக் சர்ஜரி  செய்து  நாயகியை அழகாக்க முயல்கிறார் .. நாயகியின் அக்கா  அ தாவது  நாயகியின் அம்மாவின் 2வது கணவருக்குப்பிறந்த பெண்  உடல்  எடை அதிகமாக இருப்பதால்  வெயிட் லாஸ்க்காக  நாடாப்புழுவை சாப்பிடுகிறார் ( உவ்வேக் ) 


 இளவரசரை மயக்குவதற்காகத்தயார்  செய்யப்பட் ட  நாயகியின் அக்கா  ஒரு சாதா  வாலிபனைக்காதலிக்க   அதை நாயகி தன அம்மாவிடம்சொல்கிறாள் . இதனால்   கடுப்பான  அம்மா   தன  சக்களத்தி  மகளை   அரண்மனையில் வேலைக்காரி ஆக்குகிறாள் . அவளை  அனைவரும்   சிண்ட்ரெல்லா  என அழைக்கிறார்கள் 


அழகிய பெண்களின் சுயம்வர அணிவகுப்பில்  இளவரசன்   முதலில் நாயகியைத்தான் தேர்வு செய்து ஆவலுடன் நடனம் ஆடுகிறான் . திடீர்   என   சிண்ட்ரெல்லாவைப்பார்த்ததும் அவளுடன்  நடனம் ஆடுகிறான் 


 இதற்குப்பின் நாயகி என்ன செய்தாள் ? என்பது மீதி திரைக்கதை 

நாயகி  ஆக  லியா மைரன்  நடிப்பு அருமை . கண் இமை  முடிகளை  புதிதாக  செயற்கையாக  வைப்பது எல்லாம் கொடூரம் . நாயகியின் அக்காவாக தியா சோபி லோச்னாஸ்  அழகான முகம் , அமைதியான தோற்றம் என கவர்கிறார் . நாயகியின்  தங்கை ஆக ப்ளோ  பேகரிலி  பருவம் அடையாத பெண்ணாக  வந்து போகிறார் , அதிக வாய்ப்பில்லை நாயகியின் அம்மாவாக  ஆனே  டால் டோர்ப்  வில்லி ரோல்  போல   நடித்திருக்கிறார் 


  ஒளிப்பதிவு மார்செல் , ஜிஸ்கைன்ட்     ஆகிய இருவரும்  செய்திருக்கிறார்கள் .  பிரமாதமான கேமரா ஒர்க் . நாயகி , நாயகியின் அக்கா   இருவரையும் க்ளோசப் .,லாங்க் ஷாட் களில் அழகாககாட்டி உள்ளார்கள் .இசை  காடா  வில்டே  டூர் .அரச   கால இசையை மெலோடியா பின்னணி இசை அமைத்திருக்கிறார் ஒலிவியா   தான் எடிட்டிங்க்  . டைம்   டியூரேசன்  105 நிமிடங்கள் .படம் ரொம்ப ஸ்லோ 

சகோதரர்கள்   கிம் எழுதிய அஸ்செ ன்படெல்   என்ற  புத்தகத்தைத்தழுவி  எமிலி பிளிச்பெ ல்ட  திரைக்கதை   அமைத்து இருக்கிறார் .இயக்கமும் இவரே 

சபாஷ்  டைரக்டர்

1    அட்டென்சன்  சீக்கிங்க்கிற்காக  நெகடிவ் டைட்டில் வைத்தது 


2 மெயின் கதைக்கு  சம்பந்தம் இல்லை என்றாலும் வேண்டும் என்றே  ஒரு அடல்ட் கண்ட்டென்ட்  சீனைத்திணித்தது 


3  ஆர்ட்   டைரக்சன் , ஒளிப்பதிவு  போன்ற   வலுவான டெக்கினிக்கல் டீமை நிர்வகித்தது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  சிண்ட்ரெல்லாவின்  செருப்பு சைசுக்கு  ஏற்றபடி  நாயகி  தன கால் பாதத்தை  வெட்டிக்கொள்ளும் கொடூரமான  மடத்தனமான காட் சி 


2   உடல்   எடைக்குறைப்புக்கு  ஆரோக்கியமான  வழி   அளவான  ஆரோக்கியமான சாப்பாடும், உடல் பயிற் சியு ம், யோகாவும்  , வாக்கிங்க் ஜாகிங்கும் . இவற்றை  எல்லாம் விட்டுட்டு  லூஸ் தனமாக   நாடாப்புழு வை சாப்பிடுவது  கேவலம் 


3  ஸ்ரீதேவி  தன மூக்கை பிளாஸ்டிக்  சர்ஜரி  செய்து கொண்டது போல   நாயகி  செய்வது , அதை விலாவாரியாகக்காட்டுவது கொடூரம் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சிண்ட்ரெல்லா  என  கவிதையான  கதையை  , கேரக்டரை  கேவலப்படுத்தி கர்ண கொடூரமாக சிதைத்து வைத்திருக்கிறார்கள் . ஆஸ்கார்   அவார்டே வாங்கினாலும் இது ஒரு டப்பாப்படமே . ரேட் டிங்  1.75 / 5 



Wednesday, May 21, 2025

ELEVEN- லெவன் (2025) -தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

         

               

சுந்தர் சி இடம் அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஆக  கலகலப்பு (2018) , வந்தா ராஜாவாத்தான் வருவேன் ( 2019), ஆக்சன் (2019) ஆகிய படங்களில் பணி புரிந்த லோகேஷ்  அஜீஸ்  அறிமுக இயக்குனர்   ஆக இயக்கும்  முதல் படம் இது . தெலுங்கு , தமிழ் ஆகிய  இரு மொழிகளிலும்  வெளியாகி உள்ளது .திரைக்கதையை நம்பி களம் இறங்கி இருக்கும் இவர்  பரபரப்பான  க்ரைம் த்ரில்லர் படத்தைத்தந்திருக்கிறார் என்று  சொல்லலாம் 



ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ்  படம் தான்   தமிழ் சினிமா வில்  அதிக இரட்டையர்கள்  கதாப்பாத்திரங்களாக  வந்த படம் .நாசர் ,பிரசாந்த் ,ஐஸ்வர்யா ராய் என மூன்று பேர்  ட்வின்ஸ் ஆக  வந்தார்கள் . ஆனால்  இந்தக்கதையில் 11  பேர்  ட்வின்ஸ் ஆக வந்து   ஜீன்ஸ்   சாதனையை   முறியடித்து இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


சென்னையில்  அடுத்தடுத்து ஆறு  கொலைகள்  ஒரே பேட்டர்னில் நடக்கிறது . ஆனால்  எந்த வித  தடயமும் இல்லை , சி சி டி வி  காட்சிகளும்  இல்லை .வில்லன்  கொலை செய்ய இடத்தைத் தேர்வு செய்யும்போதே அங்கே இருக்கும்  சி சி டி வி  கேமராவை முடித்துக்கட்டி விட்டுத் தான் ஆளை முடிக்கிறான் .இந்தக்கேஸை  விசாரிக்கும்  போலீஸ் ஆபீசர்  ஒரு  விபத்தில்  சிக்கி  கோமா ஸ்டேஜுக்குப்போகிறார் .


 நாயகன்  அஸிஸ்டெண்ட்  கமிஷனர் ஆப் போலீஸ் . சிங்கிள் ஆக இருக்கும் சிங்கம் .அவரிடம்  இந்தக்கேஸ்   வருகிறது .இதற்குப்பின்   நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை 


வில்லன்  உடன்  பிறந்த  தம்பி  இருவரும் டிவின்ஸ்.வில்லன்  சிறுவனாக இருக்கும்போதே செஸ் சாம்பியன் . படிப்பில் இருவரும் சுட்டி . வில்லனின் தம்பி  கொஞ்சம் மன நிலை பாதிக்கப்பட்டவன்  . இருட் டைக்கண்டால் அலறுவான். பள்ளியி ல் வில்லனும் அவன்  தம்பியும் படிக்கும் வகுப்பில்  இருவருமே  நல்ல மார்க் எடுப்பதும் , ஆசிரியர்களிடம்  நல்ல பெயர் எடுப்பதும் மற்ற மாணவர்கள், மாணவிகளுக்குப்பிடிக்கவில்லை  . அவர்கள்  ஒரு நாள்   விளையாட்டாக  வில்லனின்   தம்பியை  பிசிக்ஸ்  லேபிள்  வைத்து  லைட் டை  ஆப்   பண்ணி  இருட் டாக்கி  விளையாடுகிறார்கள் , விளையாட்டு வினை ஆகி  அவன்  இறக்கிறான் .15  வருடங்கள்   கழித்து  தன தம்பி யின்  சாவுக்குக்காரணமானவர்களைப்பழி வாங்குகிறான்  வில்லன் 



 வில்லன் எப்படி  போலீசிடம் பிடிபடுகிறான் என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக      நவீன் சந்திரா  சிறப்பான  நடிப்பு .  இறுகிய முகம் , கடு கடு பேச்சு  என  அந்த கேரக்டருக்கு   நியாயம்  செய்து இருக்கிறார் .நாயகி  ஆக ரேயா  ஹரி ,முகப்பொலிவும்  இல்லை , நடிப்புத்திறமையும் இல்லை . மெயின் கதைக்கு இவர் தேவையே இல்லை  என   யாரும் சொல்லிவிடக்கூடாது என க்ளைமாக்சில் இயக்குனர்  நாயகியைக்கோர்த்து விடும் ஐடியா செம 


நாயகனுக்கு உதவி  ஆக திலீபன் கச்சிதம் ஆக நடித்து  இருக்கிறார் .  ஆனால்  ஹேர் ஸ்டைலை போலீஸ் கட்டிங்க்   ஆக   மாற்றாமல்   இருப்பது   ஏனோ ? ஹையர் ஆபீசர் ஆக வரும் நாயகன் பக்கா போலீஸ்  கட்டிங்க் 


வில்லன் படிக்கும் ஸ்கூல் உரிமையாளர் ஆக  அபிராமி  சிறப்பான நடிப்பு .நான் உங்களை   அம்மா   என  அழைக்கலாமா?  என வில்லன்  கேட் கும்போது , முகத்தில் வரும் பூரிப்பு  செம 


டி இமானின்  இசையில்  3 பாடல் கள்  பரவாயில்லை ரகம் , பின்னணி   இசை  செம்ம  த்ரில்லிங்க் கார்த்திக்  அசோகனின் ஒளிப்பதிவு கச்சிதம் . குறிப்பாக  வில்லனின்  கருப்புக்கார் வரும்  போதெல்லாம் ஒலிக்கும் பிஜிஎம் உடன்   கேமராவும்   சேர்ந்து பயமுறுத்துகிறது 

. ஸ்ரீகாந்த்தின்  எடிட்டிங்கில்  படம்  131   நிமிடங்கள்   ஓடுகிறது . முதல்   பாதியில்    திரைக்கதை . இன்னமும் க்ரிஸ்ப் ஆக ட்ரிம்  பண்ணி இருக்கலாம் 


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  அறிமுக இயக்குனர் லோகேஷ்  அஜீஸ்  அறிமுக இயக்குனர்


சபாஷ்  டைரக்டர்

1   நாயகி தான்   தயாரிப்பாளர்  என்றதும்  மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு கேரக்டரை உருவாக்கி  அதை  புத்திசாலித்தனமாக  க்ளைமாக்சில் முக்கிய கேரக்டர்   ஆக வடிவமைத்த சாமர்த்தியம் 


2  வில்லன்  ஆட்களைக்கொலை செய்யும்போது  நேரடியாகத் தான் கொல்லாமல்   உடன்பிறப்பை  வைத்துக்கொலை   செய்யும் யுக்தி  அபாரம் 


3   கொலையாளி   இவர் தான்  என ஆடியன்ஸை  நம்ப வைத்து  பின் க்ளைமாக்சில் ஒரு டிவிஸ்ட் கொடுத்த விதம்  



  ரசித்த  வசனங்கள் 


1 நாம  எல்லாரும் பிளான் ஏ ,பிளான் பி என 2 திட் ட்ங்கள்  வைத்திருப்போம் ,   ஆனா  அவன்  பிளான் ஏ ,பிளான் பி , ,பிளான்  சி   என  3 திட் ட்ங்கள்  வைத்திருப்பான் ,கேம்  முடியும்போதுதான் அது நமக்குத் தெரி யும் 


 2  யானைக்கு வேணா   அடி சறுக்கலாம், ஆனா எனக்கு இல்லை 


3   ஒரு  பொண்ணு        தானா முன்   வந்து   தன  ஆசையை சொன்னா அவ தப்பானவ இல்லை 


4   லிப்ட்   கேட்டீங்க ? 


 நீங்கன்னு தெரியாம கே ட்டுடடேன் 



 நீங்கன்னு தெரிந்துதான்  வண்டியை நான் நிறுத்தினேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நாயகன்   அறிமுகக்காட் சி , நாயகியுடன்  ஹோட் டலில்  இருக்கும்   இடம்  ஆகிய   இரு   சமயங்களில்  இரு சண்டைக்காட் சிகள்   தேவையே இல்லை 


2  அபாரமான   பின் பாதி  திரைக்கதையுடன்  ஒப்பிடும்போது    முதல் பாதி   ரொம்ப ஸ்லோ 


3    30பேர்  இருக்கும் ரவுடி கேங்கைப்பிடிக்கப்போகும் நாயகன் போலீஸ் பட் டாளத்துடன் போகாமல்  ஒத்தைல எதுக்குப்போறார்? பைட் போடவா? 


4 கேஸை  முதலில் விசாரித்த  போலீஸ்  ஆபீசர்  வீ ட்டுக்குப்போய்  அவர்     என்ன  தகவல்  சேகரித்திருக்கிறார் என்பதை அறிந்து இருக்கலாம். ஹாஸ்ப்பிடலில் மனைவியிடம் பார்மாலிட்டியாக விசாரிப்பது  வேஸ்ட்  


5  கேசில்  முதல் பிடிமானம்   ஆக  வரும்   ஆள்  தன்னுடைய    ட்வின்ஸ்    பாதத்தி ல்   ஆ க்சிடெண்ட் ஆகி     தழும்பு  இருப்பதால்   தன்னுடைய  காலில்      கத்தியால்  கிழித்து  காயம்    உண்டாக்குவது எதுக்கு ?   முகம் என்றால்   அடையாளம்  ஒரே மாதிரி  இருக்கணும் என்பதில்  ஓகே .காலில்  தானே ?   யார்  பார்க்கப்போறாங்க ?


6  வில்லனின்  தம்பியின்  மரணத்துக்குக்காரணமானவர்களைக்கொல்லா மல்   அவர்களின் ட்வின்ஸை  கொல் வது    என்ன  லாஜிக் ?அதற்கு   வில்லன் சொல்லும் சால்ஜாப்பு சரி இல்லை 


7 ஸ்கூல்  எரிந்தால்  இன்சூரன்ஸ்  க்ளெய்ம்  பண்ணலாமே?


8  அபிராமியின்  கணவரைக்கொன்றது   வில்லன் தான் எனக்காட்டி இருக்கலாம் 


9 க்ளைமாக்சில்   அஞ்சனா  கண்களை மூடிக்கொண்டு  சஞ்சனாவை ஷூட்     செய்வது   நம்ப முடியலை .வில்லனா? என  கன்பார்ம்  பண்ண  மாட் டாரா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி  ஸ்லோ , பின் பாதி  செம விறு விறு ப்பு , க்ரைம் த்ரில்ல  ரசிகர் கள்  பார்க்கலாம் . விகடன்  மார்க் யூகம் 43 . ஆனா   அவங்க  போட்டிருப்பது 41 . ரேட்டிங்க்  3 / 5 


Eleven
Theatrical release poster
Directed byLokkesh Ajls
Written byLokkesh Ajls
Produced by
  • Ajmal Khan
  • Reyaa Hari
Starring
CinematographyKarthik Ashokan
Edited byN. B. Srikanth
Music byD. Imman
Production
company
AR Entertainment
Release date
  • 16 May 2025
Running time
135 minutes[1]
CountryIndia
LanguagesTamil
Telugu

Tuesday, May 20, 2025

மாமன் (2025) -தமிழ் - சினிமா விமர்சனம் ( பேமிலி டிராமா )

             


           ஜி வி  பிரகாஷ்  குமார் நடித்த புரூஸ்லீ ( 2017) , விமல் நடித்த விலங்கு (2022)  வெப் சீரிஸ்  இரண்டையும்  இயக்கிய  பிரசாந்த்  பாண்டியராஜ்  தான் இந்தப்படத்தை இயக்கி உள்ளார் .விடுதலை , கருடன் ,கொட்டுக்காளி  ஆகிய  படங்களில்;  கதையின் நாயகன் ஆக  நடித்த  புரோட்டா   சூரிதான்  படத்தின்  கதையை எழுதி  நாயகன் ஆக நடித்துள்ளார் .பெண்ககளின்  மனதை மிகவும்  கவரும்  இந்தப்படத்தின்  விமர்சனத்தைப்பார்ப்போம்  


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகனுக்கு தன அக்கா என்றால் மிகவும் உயிர் .மிகவும் பாசம் வைத்து இருக்கிறார் . ஆனால் அக்காவுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகளாகியும்  குழந்தை இல்லை .இதனால்  அக்காவுக்கு மிகுந்த மன வேதனை , மன உளைச்சல் .மாமியார்  சொல்லடி ,உறவினர் தூற்றல்  அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழ்கிறாள் . ஒரு கட்டத்தில் அக்காவுக்குக்குழந்தை  பிறக்கிறது  . நாயகன்  அக்காவின் குழந்தை மீது  அக்காவை விட அதீத  பாசம் வைக்கிறான் 


 குழந்தை  வளர்ந்து  சிறுவன் ஆகிறான் .அவனும் மாமன் என்றால் அட் டாச்மெண்ட் ஆக இருக்கிறான் . ஸ்கூலுக்குப்போக வர மாமனின்  வண்டியில் தான் போகிறான் . நைட் படுக்கும்போது கூட மாமனுடன் தான் உறங்குகிறான் 


 நாயகனின் அக்காவுக்குப்பிரசவம்  பார்த்த   லேடி டாக்டர்  தான் நாயகி . அக்காவையும் , அக்கா மகனையும்  இந்தளவு தாங்குகிறான் என்றால் இவனைக்கல்யாணம் பண்ணிக்கிட் டா  நம்மை எப்படித்தாங்குவான் என நினைத்து நாயகி நாயகனை லவ்வுகிறாள்,  நாயகனும் தான் 


நாயகன் , நாயகி இருவருக்கும் திருமணம்  நடக்கிறது .முதல்  இரவு அறையில்  கட்டிலில்  நாயகன் , நாயகி இருவருக்கும் இடையே   அக்கா மகன்  வந்து  அட்டூழியம் செய்கிறான் .ஹனிமூன் போகலாம்  எனக்கிளம்பினால் நானும் உடன் வருவேன் என அடம் பிடிக்கிறான் 



இந்தக்கதையில்   வில்லன்   அக்கா மகன் தான் . அடிஷனல்   வில்லன்கள்  அவனை ஒழுங்காக வளர்த்தாத பெற்றோர் 


நாயகன் , நாயகி இருவரையும்   வில்லன் ஆன அக்கா பையன்  பிரிக்கிறான் . இருவரும் இணைந்தார்களா?இல்லையா?என்பது மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக   சூரி   அருமையாக நடித்து இருக்கிறார் . இதுவரை   அவர் கதையின் நாயகன் ஆக நடித்த  படங்களில் ஆண்களை மட்டும் தான் அதிகம் கவர்ந்திருப்பார் .   ஆனால்  இதில் அசால்ட்  ஆக  பெண்களின் கவனத்தைக்கவர்கிறார் . சோகம் ,பாசம் ,  காதல் , ஊடல்   என  எல்லா ஏரியாக்களிலும்  சிக்ஸர் அடிக்கிறார் 


  நாயகி ஆக  ஐஸ்வர்யா   லட் சுமி  அபாரமாக   நடித்து இருக்கிறார்  .ரொமான்ஸ்  சீன்களில்  , கோபம் வந்து  பொங்கும்  சீன்களில்   கலக்கி இருக்கிறார் 


நாயகனின்  அக்காவாக ஸ்வாசிகா  உணர்ச்சி  போங்க நடித்திருக்கிறார் . நாயகியை  விட இவருக்குத்தான் சீன்கள் அதிகம் , நாயகனை விட இவருக்குத்தான் க்ளோசப் ஷாட்கள் அதிகம் . பார்வையாலேயே நடித்து இருக்கிறார் 


நாயகனின் தாத்தா , பாடடி ஆக   ராஜ் கிரண் , விஜி    சந்திர  சேகர்  பாந்தமான   நடிப்பு 


நாயகனின்  அம்மாவாக  கீதா   கைலாசம்  கச்சிதம் நாயகனின்   நண்பன் ஆக    பால சரவணன்  அதிக வேலை இல்லை .கெஸ்ட்   ரோலில் விமல் 

  வில்லன் ஆக   வரும் சிறுவனின் நடிப்பு பரவாயில்லை ரகம் 


ஹிஷாம் அப்துல் வகாப் தான் இசை 6 பாடல்கள்   சுமார் ரகம்,  பின்னணி இசை பரவாயில்லை ரகம் தினேஷ்  புருஷோத்தமனின் ஒளிப்பதிவு அருமை , நாயகன் , நாயகி , நாயகனின் அக்கா   மூவரையும்  அழகாகக்காட்டி இருக்கிறார் .கணேஷ்   சிவாவின் எடிட்டிங்கில்  படம் 151  நிமிடங்கள்   ஓடுகின்றது . பின் பாதி அநியாய  இழுவை 

சூரியின் கதைக்கு  திரைக்கதை  அமைத்து   இயக்கி இருப்பவர்  பிரசாந்த்  பாண்டியராஜ் 


சபாஷ்  டைரக்டர்

1  நாயகன் , நாயகி   இருவரும்  திருமணம்  ஆன பின்பு  ஒரு பிரிவில் எஸ் எம் எஸ்   மூலம்  ஜாலி சண்டை போடும் சீன செம  ஜாலி 


2  நாயகன் , நாயகி   , நாயகனின் அக்கா   மூவரின்   நடிப்பும் அருமை .உடை வடிவமைப்பு கன  கச்சிதம் 


3  முதல்  பாதி திரைக்கதை   அனைவரையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமாக அமைத்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1 கல்யாணம் ஆன ஒரு ஆண்  எப்படி கலகலப்பாக இருக்க முடியும் ? 


2 ஒரு வீட்டில் ஆம்பளை  உடல் நிலை சரி இல்லாம படுத்துட் டா  வீடு   வீடா இருக்கும், ஆனா  ஒரு பொண்ணு உடல் நிலை சரி இல்லாம படுத்துட் டா  வீடு   வீடா இருக்காது 


3  யார்  யார் கிட் டயோ  எதெதுக்கோ  பணிந்து  போகிறோம் , மனைவி கிட் ட    பணிந்து  போனால்   என்ன ? 


4 சாமிக்கு அடுத்து பொண்டாட்டி  இல்லை , பொண்டாட்டியே   சாமி தான் 


5  பிள்ளை ( வாரிசு ) இல்லையா? என ஆம்பளையைப்பார்த்து  வாய் விட்டு யாரும் கேட்க மாட் டாங்க , ஆனா  ஒரு பார்வை பார்ப்பாங்க, நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? என அது கேட்கும் 


6 எப்போ  எப்போ எந்த விஷயம் நடக்கணுமோ அப்போ  அப்போ  அந்த விஷயம் நடக்கணும் 


7   தனியா   வாழும்போது   சேர்ந்து   வாழ  ஆசைப்படறீங்க , ஆனா  சேர்ந்து வாழ  ஆரம்பிக்கும்போது தனித்தனியா இருக்கீங்க 


8  ஏண்டி   மூஞ்சியை   உம்முனு வெச்சிருக்கே ?


 நீங்க  சிரிக்கும்போது நான் சிரிக்க , நீங்க சோகமா இருக்கும்போது நானு ம்  சோகமா  இருக்க பொம்மை இல்லை 



9 பாத்ரூம்ல  பல்லி க்குப்பயப்படுவதை இன்னமுமா இந்தபொம்பளைங்க விடலை ? 


10  பெண்களுக்கு மரியாதை தருவதில் இ ந்த உலகிலேயே என் அப்பா தான் முதல் இடம் , ஆனா நீ  அவரையும் தாண்டிட் டே 


11  நீங்க எப்போ  ஸ் வீட் தரப்போறீங்க ? 


 நீங்க ஓகே சொன்னா மூணே மாசத்துல 



12   குழந்தை  மாலை சுத்திப்பிறந்தா தாய் மாமனுக்கு ஆகாது    என சொல்றாங்களே? 



 டயட் ல இருக்கணும் , டெய்லி எக்சசைஸ் பண்ணனும்னு சொல்றோம் , யார் அதை பாலோ பன்றாங்க ?அது மாதிரி தான் 


13  யோவ் , தயவு செய்து   தொடையை  மட்டும் காட் டாத 


14  எல்லோருக்கும்   நல்லவனா   இருந்துட்டு   உனக்கு மட்டும்   சுயநலமா இருந்திருக்கேன் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   எட் டாம் கிளாஸ்  பெயில் ஆன பொண்ணுங்க கூட இப்போ கவர்மெண்ட் ஜாப் உள்ள மாப்பிளை வேணும் , சொந்த வீடு இருக்கணும்னு கேக்குதுங்க.கவர்மெண்ட்  ஹாஸ் பிடல்   டாக்டர்   ஆக  இருக்கும் நாயகி  வேலை வெட்டி இல்லாத , படிக்காத நாயகனை லவ்வுவது எப்படி ? 


2  வீட்டின் மொ ட்டை  மாடில நைட் டைம்ல சரக்கு அடிக்கும்போ து ராஜ்கிரண் எதுக்கு கூலிங்க் க்ளாஸ் போட்டிருக்காரு ? 



3 நாயகனின்   அக்கா  ஈகோ  உள்ளவர் என காட்டி விட்டு க்ளைமாக்சில்  திடீர் என அனைவரின் காலிலும் விழுவது  நாடகத்தனம் 


4  நாயகனின் தாத்தா ,பாட்டி கேரக்டர்கள்  மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை .அந்த போர்சனை தூக்கி இருந்தால் 30 நிமிடங்கள்  மிச்சம் 


5 நாயகனின் அக்கா  செக்கப்புக்காக ஹாஸ் பிடல் வருகிறார் , உடன் கணவரும்  இருக்கிறார் . செக் பண்ண டாகடர்  முயலும்போது   தம்பி   ஆன நாயகன்  அக்காவின்  சேலையை இடையில்  இருந்து நகர்த்த   வருகிறார் , கணவர் அதை செய்ய மாட் டாரா?   நரஸ்   எதுக்கு இருக்காங்க ?ஓவர் அலப்பறை 


6   பின் பாதியில்   நாயகனின்    அக்கா மகனுக்கு   விபத்து நடப்பது ,  தாத்தா , பாட்டி     மரணம்  எல்லாம் 

வலியத்திணிக்கப்பட் ட சோகங்கள் 


7  படத்தில்   நாயகன் நாயகியை  இரு முறை பளார்  பளார்  கொடுக்கிறார் .நிஜ வாழ்வில்  டொமெஸ் டிக்  வயலன்ஸ் கேசில் உள்ளே  போக வேண்டி வரும் 


8 கதைப்படி  அக்கா மகன் தான் வில்லன், ஆனால் நாயகியை வில்லி போல காட்டுகிறார்கள்  


9  கவர்மெண்ட்  டாக் டர்  டிரான்ஸ்பர்  கேட் டால்   அடுத்த நாளே   கிடைக்காது .ஆறு மாதங்கள் ஆகும் 


10    வேலை   வெட் டி இல்லாத  மாப்பிள்ளையை  மாமனார்   மதிக்க மாட் டார் . ஆனால் இதில் பம்முகிறார் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அடிதடி , வெட் டு , குத்து , வன்முறை இல்லாத நல்ல   படம்   குடும்பத்துடன்  படம் பார்த்து நீண்ட நாள் ஆச்சு ,முதல் பாதி அருமை , பின் பாதி அழுகை + இழுவை . ஆனந்த   விகடன் மார்க்  யூகம்  42 . ரேட்டிங்க்   2.75 / 5 


Maaman
Theatrical release poster
Directed byPrasanth Pandiyaraj
Screenplay byPrasanth Pandiyaraj
Story bySoori
Produced byK. Kumar
Starring
CinematographyDinesh Purushothaman
Edited byGanesh Siva
Music byHesham Abdul Wahab
Production
company
Lark Studios
Distributed bySri Kumaran Films
Release date
  • 16 May 2025
Running time
151 minutes[1]
CountryIndia
LanguageTamil

Monday, May 19, 2025

DD NEXT LEVEL (2025)-டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் காமெடி டிராமா )

           

  இயக்குனர்  எஸ்  பிரேம் ஆனந்த்தின்  டிடி  ரிட்டர்ன்ஸ் (2023)  நல்ல  ஹிட் படம் , காமெடி  ஒர்க் அவுட் ஆகி இருந்தது . மிகப்பெரிய  காமெடி  நடிகர்களின் பட் டாளத்துடன்  களம்   இறங்கி  இருக்கும் அவர்  இந்த முறையும்  வெற்றி  பெற்றாரா?  என்பதைப் பார்ப்போம்            


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லனுக்கு சினிமா  விமர்சகர்களைக்கண்டால் பிடிக்காது . ஒவ்வொரு சினிமா விமர்சகர் ஆக டார்கெட் வைத்து  ஸ்பெஷல்  ஷோ  இருக்கு , குடும்பத்துடன்  வரவும் என  அழைத்து  அவங்களைக்காலி  பண்ணும் கேரக்ட்டர் 


நாயகன்  ஒரு சினிமா விமர்சகர் . யு  ட்யூபில் சினிமா விமர்சனம்  செய்பவர் . இவருக்கும்  அதே  போல அழைப்பு வருகிறது .. இவரும்  குடும்பத்துடன்  போய்  தியேட்டரில்  மாட்டிக்கொள்கிறார் .அவர்  தன குடும்பத்தை எப்படிக்காப்பாற்றினார் என்பது மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக சந்தானம்  , மாறுபட்ட  கெட்டப்  ரசிக்க   வைக்கிறது . ஆனால்  படம் முழுக்க அவர் ;ப்ரோ  ப்ரோ எனப்பேசுவது சகிக்கவில்லை .. சில   ஒன்  லைனர் , சில   காமெடி  ஸீக்வன்ஸ்  அவரைக்காப்பாற்றி 

 இருக்கிறது 


 நாயகி  ஆக கீர்த்திகா திவாரி  டூயல் ரோல் . நாயகனுக்கு  ஜோடியாக ஒரு ரோல் , ஜெசிகா என்னும் பேய் ரோல்  இரண்டிலும் அதிக வாய்ப்பில்லை 


வில்லன் ஆக செல்வ ராகவன் .ஸ்கூல்  பசங்க  மாதிரி  மேக்கப் போட்டு கடுப்பேற்றுகிறார் 


போலீஸ் ஆபீசர்  ஆக கவுதம் வாசுதேவ் மேனன்  ஓகே  ரகம் . அவர் இயக்கிய படங்களில்  வரும் டூயட்டை  அவருக்கே  கொடுத்து  நடிக்க வைத்த ஐடியா குட் 


மொட் டை  ராஜேந்திரன் தான் படத்தின் ஒரே ஆறுதல் . பல இடங்களில்   சிரிக்க வைக்கிறார் 


நாயகனின் அம்மாவாக வரும் கஸ்தூரி  தெலுங்கில்  பேசி  காமெடி  பண்ண   முயற்சிக்கிறார் ., ம்ஹூம் .எடுபடலை 


நாயகனின் அப்பாவாக வரும்  நிழல்கள்  ரவி  காமெடி பண்ணுகிறேன் பேர் வழி என   நம்மை கோபப்படுத்துகிறார் . மை  டியர் மார்த்தாண்டன்  படத்தில்  கேவலமாக  ஒரு சிரிப்பு சிரிப்பாரே  அதே  சிரிப்பை அதை விடக்கேவலமாக  டெலிவரி செய்கிறார் 

ரெடின்  கிங்க்ஸ்லி  சுமார்  ரகம் .லொள்ளு சபா மாறன்  அதிக   வாய்ப்பில்லை 

தீபக் குமார் பதி யின்   ஒளிப்பதிவு   அருமை .நிஜ உலகம் , பேய் உலகம் என கலர் டோனில்  வெரைட்டி காட்டுகிறார்ரோஹித்  ஆப்ரஹாம் தான் இசை . பாடல்கள்  சுமார் ரகம் . பின்னணி இசை பரவாயில்லை பரத்  விக்ரமனின் எடிட்டிங்கில்  133  நிமிடங்கள்  படம் ஓடுகிறது .பின் பாதியில்  20  நிமிடங்கள் ட்ரிம் பண்ணி இருக்கலாம் 

திரைக்கதை , வசனம் எழுதி  இயக்கி இருக்கிறார் எஸ்  பிரேம் ஆனந்த்


சபாஷ்  டைரக்டர்


1  உயிரின் உயிரே  பாட்டுக்கு  கவுதம்  வாசுதேவ்  மேனன்  நாயகனின் தங்கை  காலைப்பிடிக்க  அவரது காலை நாயகன் பிடிக்கும் சீன்  நல்ல ஐடியா 


2  லொள்ளு சபா மாறன்  குளிருது  என பதறுவதும்  அந்த லேடி  அரக்க பறக்க   பொருட்களை சிதறடிப்பதும் காமெடி 


3 மஞ்சு மேல்  பாய்ஸ்   மலையாளப்பபடத்தை  நக்கல்   அடிக்கும்  சீன செம .ஜட்டி  பாய்ஸ்  என விளிப்பது  லொள்  ரகம் 


4  படத்துக்கு  ஜெசிக்காவின் டைரி  என டைட்டில் வைத்திருக்கலாம் .மேட்ச்சிங்காக இருந்திருக்கும் .அந்த டைரியை கைப்பற்ற  செய்யும்  காமெடி  அலப்பறைகள்  அருமை 


5  லொள்ளு சபா மாறன்  டி வி செய்தி வாசிப்பாளராக நடித்து  தப்பிக்க முயற்சிக்கும் சீன்  அருமை 


6   சினிமா விமர்சகர்கள் ஆன இட்  ஈஸ்  பிரசாந்த் , பிலிமி கிராப்ட்  அருண்  ஆகியோரை  நடிக் க வைத்தது புத்திசாலித்தனம் 


7  மொட்டை  ராஜேந்திரனின் எலி காமெடி  குழந்தைகளைக்கவரும் 


8  ஆர்ட்   டைரக்ஸன்  ஒர்க் அபாரம் . வி எப் எக்ஸ்  சில கப்பல்  சீன்கள்  செம 


9 இயக்குனரிடம்   பல  வித்தியாசமான    ஐடியாக்கள் கொட்டிக்கிடப்பது கண்கூடு 


  ரசித்த  வசனங்கள் 


1  இதுதான் உன் முதல் படமா? ரொம்ப ஓவரா நடிக்கறே? 


2  ஒவ்வொரு படத்தையும் கழுவி ஊத்தும்போது அப்படியே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே 


3  லில்லி  ...... டோன்ட் பி சில்லி 


4  யோவ்  கிங்க்ஸ்லி, நெல்சன் சொல்லிக்கொடுத்த ஒரே  ஒரு மாடுலேஷன்  வெச்சு எல்லாப்படத்துலயும் நீ நடிச்சுட்டு இருக்கே 


5  எதனால  கீழே  பார்த்து பார்த்து  வசனம்  சொல்றே? 


 கீழே  தானே    சப்டைட்டில் ஓடுது ?


6 இதுல  எதோ ஒரு மேஸ்திரி இருக்கு 


யோவ் அது மிஸ்ட்ரி 


7   அந்தப்பொண்ணு  கிட்டே   அவரு என்ன பன்றாரு ? இங்க்லிஷ் ட்யூஷன் எடுக்கறாரோ ? 


8   இதுவரை இங்க்லிஷ்  ல பேசுனேனே  எதுனா புரிஞ்சுதா? 


புரிஞ்சுதா?  எனக்கேட்டது  வேணா புரிஞ்சுது 


9    கிங்க்ஸ்லி , புரூஸ்லீ , மூக்கு சளி 


10  சமையல்   செய்த  கை விரல்களுக்கு  மோதிரம் தான்  போடணும் , என்னது ? மோதிரம்  ஆல்ரெடி  சாப்பாட்டில் இருக்கு ? போட்டு விட்டுட் டாங்களா? 



11  அவ  உயிரோட  இருந்தா செம பீஸ் , செத்துட் டா ரெஸ்ட் இன்  பீஸ் 


12   ரேஷன்  கடைல 2000 ரூபா தர்ற  மாதிரி எல்லாரும் இங்கேயே  எதனால வர்றாங்க ? 


13   இந்தக்குழி  எவ்ளோ ஆழம்  இருக்கும்னு தெரியலையே? 


 நான் வேணா உன்னை தள்ளி விடறேன் , பார்த்துட்டு வர்றியா? 


14  அதுவரை  நான் என்ன செய்ய ?


 நிலாவை கிரகணம் பிடிக்காம பார்த்துட்டு இரு 


15  அந்த ஆப்  ஷேவ்டு  மண்டை ஆண்ட்டி இருக்கே ,,,,,,



16  போன  நியூ இயருக்கு வந்த  பத்து , பதினைந்து டைரிகளே  என் கிட் டே  சும்மா தான் இருக்கு . உன் டைரியை எடுத்து நான் என்னம்மா பண்ணப்போறேன் ?


17   எந்த லூசுன்னு  தெரியல ,  இத்துப்போன  இந்தக்கார் ல  இண்டிக்கேட் டரை ஆன்   பண்ணிட்டு போய் இருக்கு 


18   சாகப்போற நேரத்துல சாரி  வேற 


19  எனக்கு  2 அம்பு குத்திடுச்சு , உனக்கு 3 அம்பு குத்திடுச்சு 


 அது என்ன முட் டை  புரோட் டாவா? கணக்கு வைத்து அங்கலாய்க்க 



20    ஆட்டுக்கல்  பாயாவை  குக்கரில் வைத்த மாதிரி உஸ்னு ஒரு சவுண்டு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  காமெ டி நடிகர்கள்  திரையில்    வந்தாலே ஆடியன்ஸ் சிரிக்க மாட் டார்கள் .ஸ்க்ரிப்ட்டில் காமெடி இருக்கணும் 


2 பாத்ரூம்  , டாய்லெட்  சீன்கள்  தமிழ்  திரையில்  அதிகம் வந்தது  கமல் படங்களில் தான் .  . இயக்குனர் கமல் ரசிகர் போல . பாத்ரூம்  , டாய்லெட்  சீன்கள்   ஓவர் .அதை வைத்து  செய்த   காமெடி எடுபடவில்லை  ,  உவ்வே  ரகம் 


3  பின் பாதி  ரொம்பவே இழுவை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - எல்லோருக்கும்  படம் பிடிக்காது .குழந்தைகள்  ரசிக்கலாம் .முதல் பாகம் ,2 ம் பாகத்தை விட  இதில் காமெடி  குறைவு . விகடன்  மார்க் யூகம் 40 . ரேட்டிங்க்  2.5 / 5 



Devil's Double Next Level
Theatrical release poster
Directed byS. Prem Anand
Written byS. Prem Anand
Produced by
  • Venkat Boyanapalli
  • Arya
Starring
CinematographyDeepak Kumar Padhy
Edited byBharath Vikraman
Music byOfRo
Production
company
Release date
  • 16 May 2025
Running time
133 minutes[1]
CountryIndia
LanguageTamil

Wednesday, May 14, 2025

A DEADLY AMERICAN MARRIAGE (2025)- சினிமா விமர்சனம் ( க்ரைம் டிராமா டாக்குமெண்டரி ) @ நெட் பிளிக்ஸ்

                   

   இது  உண்மையில் நடந்த சம்பவம் .அயர்லாந்து  மீ டியாவில் பரபரப்பாகப்பேசப்பட்ட கொலை வழக்கு . கணவனைக்கொன்றதாக  மனைவி  மற்றும் , மாமனார்   கைது  செய்யப்பட்டு  25 வருடங்கள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டு  பிறகு  அப்பீலில்  7 ஆண்டுகளாகக்குறைக்கப்பட்டு  குற்றவாளிகள்  இருவரும்  இப்போது   விடுதலை ஆன நிலையில்  அந்த கொலை வழக்கு .  பற்றிய   விபரங்கள்  ஓர் டாக்குமெண்டரி ஆக எடுக்கப்பட்டிருக்கிறது . சுவராஸ்யமான  இந்த வழக்கைப்பற்றிப்பார்ப்போம்  


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  மிகப்பெரிய  கோடீஸ்வரன் கம் தொழில் அதிபர் . தனது  முதல் மனைவியுடன் காதல் திருமணம்  புரிந்தவருக்கு  3 வயதில் ஒரு மகனும் , ஒரு வயதில் ஒரு மகளும் உண்டு . குழந்தைகள் மேல்  அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர் . 2006 ம் ஆண்டு  முதல் மனைவி க்கு ஆஸ்துமா அட்டாக் ஏற்பட்டு மரணம் அடைகிறார் .இப்போது  குழந்தைகள்  இருவரைப்பார்த்துக்கொள்ள ஆள் தேவை 


  நாயகன்   பேப்பரில் விளம்பரம் கொடுத்து  நாயகியை  நர்ஸ் ஆக நியமிக்கிறார் . குழந்தைகள்  இருவரைப்பார்த்துக்கொள்வதுதான்  நாயகியின் வேலை . நாயகி குழந்தைகள்  இருவரையம் நன்றாகக்கவனித்துக்கொள்வதோடு அவர்களிடம் பாசமாகவும் நடந்து கொள்கிறார் . இரு குழந்தைகளும்  நாயகியிடம் ரொம்ப அட்டாச்மெண்ட் ஆக   இருக்கின்றனர் 


 ஒரு கட்டத்தில்  நாயகன்   நாயகியைத்திருமணம் செய்து கொள்கிறார் . அதற்கு வரதட்சணையாக நாயகியின் அப்பாவுக்கு மிகப்பெரிய தொகை ஒன்றைக்கொடுக்கிறார் .


நாயகன் , நாயகி இருவரது திருமண வாழ்க்கை இனிமையாகப்போய் க்கொண்டிருக்கிறது .இருவருக்கும் குழந்தை இல்லை . முதல்  மனைவிக்குப்பிறந்த குழந்தைகளையே தன்  குழந்தைகளாகப்பார்த்துக்கொள்கிறார் நாயகி , அந்தக்குழந்தைகளும் நாயகியை அம்மா என்றே அழைக்கின்றனர் 


சில சட்ட   சிக்கல்களைக்களைய , பாஸ்போர்ட்  எடுக்க  அந்தக்குழந்தைகளை சட்டப்படி தத்து எடுத்துக்கொள்ள நாயகி ஆசைப்படுகிறார் . இது நாயகனுக்குப்பிடிக்கவில்லை . நாயகி எதோ சதித்திட்டம்  தீட்டுவதாக நாயகன் சந்தேகப்படுகிறார் 


இரு குழந்தைகளும்    தங்கள்   அப்பாவை நெருங்க , பழக   நாயகி அனுமதிப்பதில்லை . எப்போதும்   தன கட்டுப்பாட்டுக்குள்  வைத்துக்கொள்கிறார் . இதுதான் நாயகனுக்கு சந்தேகம் வரக்காரணம் .அதாவது  சட்டப்படி  நாயகி அந்தக்குழந்தைகளை  தத்து   எடுத்துக்கொண்டால்  ஒருவேளை  டைவர்ஸ்   அப்ளை  செய்தால் குழந்தைகளை   பராமரிக்க   மிகப்பெரிய  தொகையை   நாயகன்  நாயகிக்குத்தர வேண்டி இருக்கும் 


சம்பவம்   நடந்த  2015 ஆம்   ஆண்டு  நாயகி யின் அப்பா  நாயகி + நாயகன்   வீட்டில் தான் கெஸ்ட் ஆக வந்து இருக்கிறார் . நாயகன் , நாயகி    இருவருக்கும் எதோ சண்டை .பலத்த   வாக்குவாதம் .சத்தம் கேட்டு  நாயகியின்  தந்தை  மேலே   வந்து பார்த்த போது  நாயகியின் கழுத்தை   நாயகன் பிடித்து  நெறிப்பதைப்பார்த்ததாக கோர்ட்டில் தகவல் சொல்கிறார் 


 தற்காப்புக்காக  நாயகி  ஒரு செங்கல்லால் நாயகனைத்தாக்கியதாகவும் . தன்  மகளைக்காப்பாற்ற  ஒரு பேட்டா ல்   நாயகனின்   தலையை   அடித்ததாகவும்  வாக்குமூலம் தருகிறார்கள் .நாயகன் ஆள்  அவுட் 

ஒரு  கை கலப்பு , சண்டை நடந்தால் இரு தரப்புக்கும் காயம் இருக்க வேண்டும் . ஆனால்  நாயகிக்கோ  , நாயகியின் அப்பாவுக்கோ காயங்கள் ஏதும் இல்லை .போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட்படி  நாயகனின்  தலை மிக பலமாக தாக்கப்பட்டிருக்கிறது . அது தற்காப்புக்காக தாக்குதல் அல்ல, வெறி கொண்ட வன்முறைத்தாக்குதல் என ரிப்போர்ட கூறுகிறது 


குழந்தைகள் இருவரும்   நாயகிக்கு ஆதரவாக வாக்குமூலம் தருகிறார்கள் 


  கொலைக்குற்றத்திற்காக   நாயகி , நாயகியின் அப்பா   இருவருக்கு 25 ஆண்டுகள்   சிறை  தண்டனை  விதிக்கபப்டுகிறது .குழந்தைகள்   இருவரும்   நாயகனின்  தங்கை குடும்பத்தாரால் பார்த்துக்கொள்ளப்படுகிறது . நாயகன்  இதை உயிலிலே  எழுதி   வைத்திருக்கிறார்


சில      ஆண்டுகள்   கழித்து  குழந்தைகள் இருவரும் வளர்ந்து  டீன் ஏஜ்  அடைகிறார்கள் . இப்போது  நாயகனின் தங்கை  ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார் . மீண்டும் கொலை வழக்கு விசாரணைக்கு வருகிறது . இரு குழந்தைகளும்  பொய் சாட் சி  அளித்ததாகவும்  அப்போது  நாயகி தான்   அப்படி சொல்லச்சொன்னதாகவும்  கூறுகிறார்கள் 


 இப்போது  நாயகி      தரப்பு   வக்கீல்  நாயகனின் முதல்   மனைவி  யின் மரணமே  இயற்கையானது  அல்ல .அதில் மர்மம் இருக்கிறது  என அந்த போஸ்ட்  மார்ட் டம்  ரிப்போர்ட்டை   சமர்ப்பிக்கிறார் . அந்த ரிப்போர்ட்டில்  முதல்  மனைவி  மூச்சு திணறி  இறந்ததாக இருக்கிறது  . கழுத்தை   நெரித்தும்  கொன்றிருக்கலாம் 

முதல் மனைவி   இருக்கும்போது +.இறக்கும்போது  முதல் மனைவியின் தங்கை  அங்கே  இருந்திருக்கிறாள் . ஒருவேளை  நாயகன் , தனது   மச்சினியுடன்   சேர்ந்து  அந்தக்கொலையை செய்திருக்கலாம் .அல்லது   நிஜமாகவே   அது ஒரு இயற்கை    மரணமாக  இருக்கலாம் 

கோர்ட்  தீர்ப்பிலேயே  முதல் மனைவியின்  மரணம்  மர்மம் நிறைந்தது   என சொல்லி இருக்கிறார்   ஜ்ட்ஜ் 

நாயகி  யின் அப்பீலில்  25 ஆண்டுகள் தண்டனை  7 ஆண்டுகளாகக்குறைக்கப்பட்டு  2024ம் ஆண்டு   நாயகி , நாயகியின்  அப்பா    இருவரும்     ரிலீஸ்  ஆகி விட் டார்கள் 


சபாஷ்  டைரக்டர்


1   வழக்கில்  சம்பந்தப்பட் டவர்கள்  மட்டுமே  இதில்  தோன்றி இருக்கிறார்கள் .எல்லாம் லைவ் லொக்கேஷன் 


2    சிறப்பான , படமாக்கம் , எடிட்டிங்க் , ஒளிப்பதிவு 



  ரசித்த  வசனங்கள் 


1   குற்றவாளி   தரும் ஸ்டேட்மெண்ட்டை  100% அப்படியே  நாம் நம்பினால்; எங்கேயோ   நாம் தப்பு செய்கி றோம்  என்று  அர்த்தம் 


2  குழந்தைகளை     என்னிடம்  இருந்து நீ  பிரிக்க நினைத்தால்  உன்னிடம் இருந்து குழந்தைகளை    நான் பிரித்து விடுவேன் 


3  என்ன   சொல்லணும் என  குழந்தைக்கு சொல்லித்தருவது வேறு . , பொய் சொல்ல  சொல்லிக்கொடுப்பது வேறு 


4   வெளில   இருந்து பார்ப்பவர்களுக்கு இது சந்தோஷமான பேமிலி போலத்தோன்றும் 


5  இது   அழுவதற்கான நேரம் இல்லை , கோபப்படுவதற்கான நேரம் 


6 சித்தி மேல   அன்பு வெச்சிருந்தது   உண்மை , ஆனா   அதுக்காக   அவங்க   சொல்படி   எல்லாம்   கேட்க முடியாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1    நாயகனின்   முதல்   மனைவியின்   தங்கையிடம்  கோர்ட்  விசாரணை  செய்யவே  இல்லை  அது எதனால் ? 



2  நாயகியின்  அப்பா ஒரு முன்னாள்  அரசு  அதிகாரி , எப் பி ஐ  ஏஜென்ட்  ஆகத்திறன்படப்பணிப்புரிந்தவர்   என்பதால் அவருக்கு தண்டனைக்காலம் குறைக்கப்படுகிறது என தீர்ப்பில் இருக்கு.சட்டத்தின் முன் அனைவரும்   சமம்   இல்லையா ?


3   எப் பி ஐ  ஏஜென்ட்  ஆகபணி  புரிந்தவர்   என்பதால்  போலீஸ்   எப்படி எல்லாம் விசாரிக்கும் ? எப்படி பதில் சொல்ல வேண்டும்  என மகளுக்குப்  பயிற்சி கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறதே? 


4  நாயகி   நாயகனை மாட்டி  விட   அவர்கள்   இருவருக்கும் வாக்குவாதம் நடை பெறும்போதெல்லாம் ரகசிய டேப் ரெக்கார்டிங்  செய்திருக்கிறார் . அதை  கோர்ட்   கண்டு கொள்ளவில்லை 


5  நாயகன்   தனது   தங்கைக்கு   அனுப்பிய  மெயிலில் ஏதோ    தப்பு நடக்கிறது , திருமண   வாழ்க்கை திருப்தியாக இல்லை   என  கூறி   இருக்கிறார் .அது நாயகிக்கு எதிரான ஒரு பாயிண்ட் .அதையும் கோர்ட்   கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை 

6  அவ்வளவு   பெரிய கோடீ ஸ்வரன்   முதல் மனைவி   இறந்ததும்   வசதிக்குத்தக்கபடி  இரண்டாம்   திருமணமே  புரிந்திருக்கலாம்,   எதற்கு   நர்ஸ்   தேவை விளம்பரம் ?என தலையை சுற்றி மூக்கைத்தொட வேண்டும் ?


7   நாயகி  தன சக்களத்தியின்   குழந்தைகளை   வைத்து  சொத்துக்களை அடைய  திட்டம்  போட்டதற்குப்பதிலாக  தன மூலம் ஒரு குழந்தையை  பிறக்க வைத்து  இன்னமும்   வலிமையாகப்போராடி இருக்கலாமே? எதற்காக  கர்ப்பத்தைக்கலைத்தார் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - கிளீன்  யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  விறுவிறுப்பான  சினிமா பார்ப்பது போல உள்ளது .அனைவரும் பார்க்கலாம், பெண்களும் ரசிக்கும்படியான குழந்தை  அம்மா சென்ட்டிமென்ட்  சீன்களும் உண்டு , ரேட்டிங் 3 / 5 

Tuesday, May 13, 2025

CHITHAMBARAM (1985) - சிதம்பரம் -( மலையாளம் ) - சினிமா விமர்சனம்(மெலோ டிராமா) @ YOU TUBE ( தேசிய விருது பெற்ற படம் )




மலையாள இயக்குனர் ஜி அரவிந்தன்  இதற்கு முன்னெடுத்த படங்களெல்லாம்  விருது  பெற்றிருக்கின்றன .மக்களின் பாராட்டுதல்களை அள்ளிக்குவித்து இருக்கிறது .ஆனால் இதுதான் கமர்ஷியல் சக்ஸஸ் பெற்ற படம் . சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற படம்.கேரளா  அரசின் மாநில விருதுகள்  நான்கினை  வென்ற  படம் . சிறந்த  படம் , சிறந்த இயக்குனர் , சிறந்த  நடிகர் , சிறந்த  இசை  அமைப்பாளர்   என நான்கு மாநில அரசின் விருதுகளை  வென்ற  படம் .


இந்தப்படம் பற்றி இதன் இயக்குனர் ஜி அரவிந்தன்  கூறுகையில்  "இது ஒரு சாதாரண  படம்   தான் .இதை என் மக்கள்  இந்த  அளவுக்குக்கொண்டாடினார்கள் என்பது தெரியவில்லை " என்கிறார் 


சி வி  ஸ்ரீராமன் எழுதிய  சிறுகதையை  மையமாக வைத்துத்திரைக்கதை அமைக்கப்பட்டது .இந்தக்கதையை  படமாக்க நினைத்ததும்  இதன்  இயக்குனர்  இதற்காக  பல தயாரிப்பாளர்களிடம் கதை  சொன்னார் . ஆனால் யாரும் தயாரிக்க முன் வரவில்லை .அதனால்  தானே  தயாரிக்க  முடிவு எடுத்தார் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  திருமண வயது கடந்த  பிரம்மச்சாரி . கேரளா - தமிழ் நாடு  பார்டரில்  உள்ள  அரசு பண்ணையில்  ஆபீஸ்  சூப்பிரண்ட்டண்ட்   ஆகப்பணி புரிகிறார் .வில்லன்  பீல்டு சூப்பர்வைசர்  ஆகப்பணிபுரிபவர் .வில்லனுக்கு எப்போதும்  வேலை வேலை  என  ஒர்க் அடிக்ட்  ஆக இருப்பவர் . தனக்குக்கீழ்  பணியாற்றும் பணியாளர்களிடம் கண்டிப்பாக இருப்பவர் . ஆனால்   நாயகன்  சகஜமாக எல்லோரிடமும்  பழகுபவர் 


இப்போது பண்ணையில்  வேலை செய்யும் சாதா பணியாள் முனியாண்டிக்கு திருமணம் நிச்சயம் ஆகி விட்டது . 15 நாட்கள் லீவ் கேட் கிறான் . நாயகன்  லீவ் தந்து விடுகிறார் .ஆனால்   வில்லன்  2  நாட்களில்  ட்யூட்டியில் ஜாயின் பண்ண வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்கிறார் 



 திருமண  விழாவில் நாயகன் தான் ஸ்டில் போட்டோகிராபர் .,திருமணம்  ஆகி தன்  மனைவியுடன்  முனியாண்டி  வருகிறான் .. வில்லனுக்கு  அவள்  மேல் ஒரு கண் 



முனியாண்டி யின்   மனைவிக்கு  தனிமையில் இருக்க போர் அடிக்கிறது . தனக்கும் ஒரு வேலை  வேண்டும் என்கிறாள், ஆனால் கணவன் அவள் வேலைக்குப் போக சம்மதிக்கவில்லை 



முனியாண்டியின் மனைவிக்கு வில்லன் ஒரு வேலை  ரெடி பண்ணுகிறான் . ஆனால்   முனியாண்டி  நாசூக்காக வேண்டாம் என மறுத்து விடுகிறான் . இதனால் கடுப்பான வில்லன்  

முனியாண்டி க்கு இனிமேல் நைட்  ஷிப்ட்  ஒர்க் தான் என சொல்லி விடுகிறான் .


 வேறு வழி இல்லாமல்  நைட் ஷிப்ட்  பார்க்கும் முனியாண்டி ஒரு நாள்   நள்ளிரவில்  வில்லனின்   பைக்  சத்தம் கேட்டு  சந்தேகப்பட்டு  தன வீட்டுக்குப்போய்ப்பார்க்கிறான் 


அடுத்த நாள்  முனியாண்டி  தூக்குப்போட்டு   தற்கொலை   செய்த   நிலையில்   இருக்கிறான் 


 இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 

 முனியாண்டியாக   சீனிவாசன் நடித்திருக்கிறார் . ரஜினி நடித்த   குசேலன் (2008)  படத்தின்  ஒரிஜினல்  வீரன் ஆன கத பரயும்போழ் (2007) படத்தின்  கதாசிரியரும் , நாயகரும் இவரே . . அருமையான நடிப்பு .  பல  சீன்களில் அடக்கி வாசித்து இருக்கிறார் 


 நாயகன் ஆக பரத் கோபி   நடித்திருக்கிறார் .இவர் கேரளாவின் சிறந்த நடிகர்  மட்டும் அல்ல .இயக்குனர்   மற்றும் தயாரிப்பாளரும் கூட 


 நாயகி ஆக ஸ்மீதா படேல்  பிரமாதமாக நடித்திருக்கிறார் .இவர் ஒரு மராத்தி நடிகை 


வில்லன் ஆக   டாக்டர் மோகன் தாஸ்   நடித்திருக்கிறார் .இவருக்கு அதிக வாய்ப்பில்லை .சில சீன்கள் தான் வருகிறார் 

ஜி  தேவராஜன் இசையில் 6  பாடல்கள் , பெரும்பாலும் கோயில் களில்  வரும் பக்திப்பாடல்கள் தான் .பின்னணி இசை இதம் .ஆனால்  மாநில அரசின் விருது   வாங்கும் அளவுக்கு இசை இல்லை . ஒரு வேளை  அந்த ஆண்டின் ரிலீஸ்  படங்களில்  போட்டி இல்லையோ என்னவோ ? 


ஒளிப்பதிவு  ஷாஜி என் கருண்  ,பிரமாதம் .பாலு மகேந்திராவுக்கு இணையான தரம் .ஒவ்வொரு பிரேமும் கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போல  இருந்தது . எடிட்டிங்க்   ஓகே   ரகம் .டைம் டியூரேஷன்  100 நிமிடங்கள் .40 நிமிடங்களில்  முடிக்க வேண்டிய கதை ,இழுத்து விட் டார்கள் 


 திரைக்கதை   எழுதி   இயக்கி இருப்பவர் ஜி அரவிந்தன் 


சபாஷ்  டைரக்டர்

1  தமிழகம் - கேரளா பார்டரில்  கதை நடப்பதாலும் , கதைப்படி நாயகி தமிழச்சி   என்பதாலும் பெரும்பாலான வசனங்கள் தமிழில் தான் 


2  கதையில்   கள்ளக்காதல்  சம்பவம்  இருந்தாலும்  ஒரு சீன்  கூட நேரடியாக  அதைக்காட் டாமல்  குறிப்பால் உணர்த்திய விதம் 


3  கணவன் , நாயகி முகத்தில்  சூடு போட் டான்   என்பது   சிறுகதையில்  சொல்லப்பட்டிருக்கு , ஆனால் படத்தில்  நாம் தான்    யூகித்துக்கொள்ள வேண்டும் . பல இடங்கள் நாசூக்காயத்தான் சொல்லப்பட்டிருக்கு 


4  நாயகன் ,நாயகி இருவரது கேரக்ட்டர்  டிசைனும்  கனகச்சிதம் 


5  ஒரு மனிதன் செய்யும் தவறால் ஏற்படும் குற்ற உணர்ச்சி  அவன் சாகும் வரை அவனைத்துரத்திக்கொண்டே இருக்கும் என்பதுதான் கதையின் மைய இழை 

ரசித்த  வசனங்கள் 

1  சரக்கு அடிக்கும்போது  எல்லா மனிதர்களும் சமம் 


2 திருமணங்கள்   சொர்க்கத்தில்  நிச்சயிக்கப்படுகின்றன  என்பது அந்தக்காலம், இப்போது பணம் தான்  பிரதானம் 


3  உலகில்  அனைவருக்குமே அவங்கவங்க பண்ணுவதில் அவங்கவங்க நியாயங்கள் இருக்கும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1     100 நிமிடங்கள்   ஓடும் படத்தில்  நாயகன் , வில்லன், கொலீக்ஸ்  அனைவரும் தண்ணி அடிக்கும் சீன்கள் , சரக்கில் தண்ணீர் மிக்ஸ் செய்யும் சீன்கள் , தம் அடிக்கும் சீன்கள் , இவற்றை  நீக்கி விட் டால்   25 நிமிடங்கள்   மிச்சம் ஆகும் 



2  நாயகியின்  கணவன்   தற்கொலை  செய்து கொண்டதும்  ஒழுக்கமான  கள்ளக்காதலன்  நாயகியை திருமணம் செய்திருப்பான் , விட்டு விட்டு ஓட  மாட் டான் 


3   சிவபெருமான்  சிதம்பரம் என்ற  ஊரில்  எப்படி எதற்கு வந்தார் என்ற ஸ்தல புராணம்  க்ளைமாக்சில்  நாயகன் - நாயகி இணைந்தார்களா?   என்பதன்  விளக்கம்  ஆகிய இரண்டுக்கும் தொடர்பு உண்டு என்பது ஏ செண்ட் டர்   ஆடியன்ஸுக்கு மட்டும் தான் புரியும் .இன்னமும் தெளிவாக சொல்லி இருக்கலாம் 


4 ஒரு கள்ளக்காதல் கதைக்கு தேசிய விருது ,மாநில விருது எல்லாம் கொடுத்தால்  ஆளாளுக்கு   அதே டைப் கதைகளை எடுக்க மாட் டார்களா? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தேசிய விருது  பெற்ற  படம் என்ற  ஒரே  காரணத்துக்காகப்பார்த்தேன் .ரொம்பப்பொறுமை  வேண்டும் .மகேந்திரன் , பாலுமகேந்திரா  படங்கள்   பார்ப்பபவர்கள் பார்க்கலாம் . ரேட்டிங்  2/ 5 


Chidambaram
Promotional poster
Directed byG. Aravindan
Screenplay byG. Aravindan
Story byC. V. Sreeraman
Produced byG. Aravindan
StarringBharath Gopi
Smita Patil
Sreenivasan
Mohan Das
CinematographyShaji N. Karun
Music byG. Devarajan
Production
company
Sooryakanthi
Distributed bySaj Movies
Release date
  • 8 March 1985
Running time
100 min
CountryIndia
LanguageMalayalam