Friday, September 30, 2022

பொன்னியின் செல்வன் பாகம் 1 (2022) - சினிமா விமர்சனம்


 ஸ்பாய்லர்  அலெர்ட்

எல்லாருக்கும்  புரியற  மாதிரி  அதாவது  நாவல்  படிக்காத  பாமரர்களுக்கும்  புரியற  மாதிரி  கதையை  சொல்லிடறேன்


தமிழ்  இனத்தலைவர் டாக்டர்  கலைஞர்  தான்  சுந்தரசோழன். இவருக்கு அழகிரி, ஸ்டாலின்  அப்டினு  ரெண்டு  பசங்க  இருக்கற  மாதிரி  சுந்தர சோழனுக்கு ஆதித்த  கரிகாலன், அருண்(ள்)மொழிவர்மன்  என  ரெண்டு  பசங்க. கனிமொழி  மகள்  மாதிரி  குந்தவைனு  ஒரு  மக. பெரியப்பா  மகன்   மதுராந்தகர்  பதவிக்குப்போட்டி  இடுகிறார். இவரை  மு க  முத்துனு  வெச்சுக்குவோம். இந்த  பதவிப்போட்டியில்  யார்  ஜெயித்தார்கள்  என்பதே  முதல்  பாகத்தின்  கதை 


சுந்தர  சோழனாக  பிரகாஷ் ராஜ். படுத்த  படுக்கைல  இருப்பதால்  இவருக்கு  அதிக  வாய்ப்பில்லை .ஆனாலும்  கம்பீரமான  நடிப்பு . 


மேலே  சொன்ன  கேரக்டர்களில்  அல்லாத  வந்தியத்தேவன்  எனும்  ஒற்றன்  கேரக்டரில்  ஹீரோவா  கார்த்தி . மொத்தமா  3  மணி  நேரம்  ஓடும்  படத்தில் ரெண்டே  கால்  மணி  நேரம்  இவருக்குதான்  அதிக  காட்சிகள் . துறுதுறுப்பு  , சுறுசுறுப்பு , குறும்பு  என  இவர்  துள்ளலான  நடிப்பில்  கலக்கி  இருக்கார் .  படத்தில்  வரும்  3  முக்கியமான  பெண்  கேரக்டர்களிடமும்  வழிவதும்  பம்முவதும்  அருமை 


ஆதித்த  கரிகாலனாக  வரும்  விக்ரம் நடிப்பு  கனகச்சிதம்.ஓப்பனிங்கில்  நிராயுதபாணியாய்  இருப்பவனை  நாங்கள்  கொல்வதில்லை  என  கெத்து  காட்டும்போது  அப்ளாஸ்  அள்ளுறார்.


அருள்  மொழிவர்மராக  பொன்னியின்  செல்வனாக  வரும்  ஜெயம்  ரவி  ஷாக்  சர்ப்பரைஸ்  ஆக்டிங். இவருக்கும்  கார்த்திக்கும்  வரும்  ஒரு  ஃபைட்  சீன்  செம 


குந்தவையாக வரும்  த்ரிஷா  கெட்டப் , மேக்கப்  நடிப்பு  எல்லாம்  அழகு 


 வில்லியாக, பெரிய  பழுவேட்டரையரின்  மனைவியாக, நந்தினியாக   வரும்  ஐஸ்வர்யாராய்  செம  ஆக்டிங் . 


பெரிய  பழுவேட்டரையrஆக  சரத்குமார் , சின்ன   பழுவேட்டரையராக  இரா  பார்த்திபன்  கச்சிதமான  நடிப்பு 


மதுராந்தகராக  ரகுமான்  அதிக  வாய்ப்பில்லை . வந்தவரை  ஓக்கே , அம்மாவை  எதிர்த்துப்பேசும்  காட்சி  அனல்  பறக்குது 


நந்தினியாக  வரும்  ஐஸ்வர்யாராய்  தன்  முதல்  கணவரான   வீர  பாண்டியனைக்கொன்ற  ஆதித்த  கரிகாலனை  பழிக்குப்பழி  வாங்கத்தான்   சோழ  தேசத்துக்கு  வருகிறாள். இது  போக  ஆல்ரெடி  ஆதித்த  கரிகாலனுடன்  ஒரு  காதல்  வேற  இருக்கு 


 ஆக  மொத்தம்  இவருக்கு  3  ஜோடி 


ஆதித்த  கரிகாலன்  போர்க்களத்தில்  இருக்கிறார்.  அருள்  மொழி  வர்மன்  இலங்கையில்  இருக்கிறார். சுந்தர  சோழன்  தஞ்சையில்  இருக்கிறார்.  அனைவரையும்  தஞ்சை  வர  வைக்கனும்,  அதுதான்  ஹீரோ  கார்த்தியின்  பணி 


படத்தின்  முதல்  ஹீரோ  ஆர்ட்  டைரக்டர்  தோட்டா தரணிதான் . பிரம்மாண்டமான  செட்கள்  அரண்மனைக்காட்சிகள்  எல்லாமே  தத்ரூபம். வில்லன்  யார்  எனில்  கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ்  காட்சிகளும்  விஎஃப் எக்ஸ்  ஒர்க்கும். சரியா  செட்  ஆகலை 


ஜெயம்  ரவிக்கும் , கார்த்தி  க்கும்  இடையே  நடக்கும்  ஃபைட்  செமயா  படமாக்கப்பட்டு  இருக்கு


 ஆனா  மற்ற  போர்க்காட்சிகள்  எல்லாம்  கூட்டத்தோட  கோவிந்தா  போட்ட  மாதிரி  ஏனோதானோனு  தான்  இருக்கு 


பாகுபலில  போர்க்காட்சிகள்  லாங்க்  ஷாட்டில்  ரசிக்கும்படி  படமாக்கி  இருந்தாங்க . இதில  க்ளோசப்  ஷாட்ல  50  பேரை  வெச்சு முடிச்ட்டாங்க 


 சபாஷ்  டைரக்டர்


1  ரைட்டர்  ஜெயமோகனுடன்  இணைந்து  இயக்குநர்  மணிரத்னம்  திரைக்கதை  அமைத்த  விதம். ஆனானப்பட்ட  எம் ஜி ஆர் , கமல்  உட்பட  பலர்  முயற்சித்தும்  முடியாததை  முடிச்சுக்காட்டியமைக்கு  ஒரு  ஷொட்டு . நாடக அனுபவம்  உள்ள  குமரவேல்  திரைக்கதை  அமைப்பில்  உதவி   இருப்பது  அருமை 


2   விக்ரம் , த்ரிஷா , ஐஸ்வர்யா ராய்  மூவருக்குமான  ஓப்பனிங்  சீன், த்ரிஷா - ஐஸ்  காம்போ  சீன்   எல்லாம்  டைரக்சன் டச்


3  பாடல்  காட்சிகளில்  திருடா  திருடா  படத்தில்  வரும் வீரபாண்டிக்கோட்டையிலே  ரெஃப்ரென்ஸ்  இருப்பது  லைட்டிங்  எல்லாம்  செம 


4  கடல்  காட்சிகள்  பாய்மரக்கப்பல்  காட்சிகள்  எல்லாம்  பிரம்மாண்டம் 


5  கார்த்தி  பேசும்  காமெடி  சீக்வன்சில்  ரைட்டர்  ஜெயமோகன்  வசனம்  பளிச்


6  அதிகம்  எதிர்பார்க்காத  விவேக்  கேரக்டர்  பூங்குழலியாக  வரும் படகோட்டி  ஐஸ்வர்யா  லட்சுமி  கேரக்டர்  குட் 


7  ஏ ஆர்  ரஹ்மான்  இசையில்  பாடல்கள்  ஹிட்  பிஜிஎம்  செம . தோட்டாதரணியின்  ஆர்ட்  டைரக்சன்  சூப்பர் 


8  ரவிவர்மனின்  ஒளிப்பதிவு  கனகச்சிதம்


படத்தின்  மைனஸ்


1  ஹீரோவுக்கு  காதல்  காட்சிகளே  இல்லை . அவ்வளவு  ஏன்? சரித்திரப்படத்தில்  யாருக்குமே  லவ்  போர்சனே  இல்லாதது  மைனஸ்  தான்


2  போர்க்காட்சிகளை  பாகுபலி  மாதிரி  பிரம்மாண்டமாக  எடுக்கவில்லை  அல்லது  அப்படிக்காட்டவில்லை 


3   சி ஜி  ஒர்க்கும்  விஎஃப் எக்ஸ்  ஒர்க்கும்  ரொம்ப  சுமார்தான்


ரசித்த  வசனங்கள்


1  சுரங்கப்பாதைல  போற  வழில   கருவூலம்  இருக்கும், அதுல  தங்கம்  இருக்கும், மயங்கிடாத 


 வைரச்சுரங்கத்தையே  இங்கே  பாத்துட்டேனே?


 மயங்கிட்டாயா?


 கொஞ்சமா


2  பேரழகிகளை  விட  ஆசை  காட்டுவது  மணிமுடி


சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் - அனைத்துத்தர  ரசிகர்களையும்  கவரும்    ஜனரஞ்சகமான  படம்  தான் 


பொன்னியின் செல்வன்-1 (2022)- மணிரத்னம் பிரமாதமான மேக்கிங்கில் கலக்கிட்டார். கடல் காட்சிகள் பிரம்மாண்டம். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி நடிப்பு அருமை , த்ரிஷா-ஐஸ் காம்போ காட்சி செம . நாவல் படித்தவர்களுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கும், பாகுபலி போல இந்தியா முழுக்க ஹிட் ஆவது கடினம், தமிழகத்தில் ஏ செண்ட்டரில் ஹிட் ஆகும். விகடன் 50 , ரேட்டிங் 3.5 / 5


 

Thursday, September 29, 2022

நானே வருவேன் (2022) - சினிமா விமர்சனம் ( சூப்பர் நேச்சுரல் ஹாரர் & சைக்கோ க்ரைம் த்ரில்லர்)


நேமாலஜிப்படி தாணு  தனுஷ் இருவ்ருக்கும்  ராசி  உண்டு.  DHANUSH   என்ற  சொல்லுக்குள்  அடங்கிடுது.DHANU  சோ  ஹீரோ  &  புரொடியூசர்  பிராப்ளம்  வராது. 


 ஆளவந்தான்  பட்ம்  அட்டர்  ஃபிளாப்  ஆனதில்  கமல்  மீது   கலைப்புலி எஸ்  தாணுக்கு  ஒரு  வ்ருத்தம்  உண்டு. அதே  கதை  ஒன்லைனை  வேற  பாணில   வேற்  திரைகக்தைல ந் லோ பட்ஜெட்ல  எடுத்து  ஜெயிச்சுக்காட்டறேன்  பார்  என  மானசீகமாக  சவால்  விட்டு  எடுத்த  மாதிரியே  இருக்கு 


 ப்டத்தின்  முதல்  பாதி    சூப்பர்  நேச்சுரல்  ஹாரர்  ஃபிலிம்  அல்லது  கோஸ்ட்  த்ரில்ல்ர்  மோட்ல  எடுத்துட்டு  பின்  பாதி  சைக்கோ  க்ரைம்  த்ரில்லரா  போனாலும்  டோட்டலா  படம்  ஸ்லோ வாதான்  போகும்,  அதனால  ஆடியன்ஸ்  தியேட்டருக்கு  பொறுமையான  திரைக்கதையை  எதிர்பார்த்து  வரனும் 


செல்வராகவன்  +  தனுஷ் +  யுவன்  ஷங்கர்  ராஜா  காம்போ  நீண்ட  இடைவெளிக்குப்பின்  இனையுது 


 ஸ்பாய்லர்  அலெர்ட் 


நான்- லீனியர்  கட்ல  கதை  சொல்லப்ப்ட்டாலும்   நம்ம  விமர்சனத்துல  ரிவர்ஸ்  பேட்டர்ன்ல  கதை  சொல்றேன்

 சம்பவம் 1 - பொதுவாவே  இந்த  சம்சாரம்ங்க  வாயைத்திறந்தாலே  நமக்கு  பக்னு  இருக்கும், என்ன  கோரிக்கை? என்ன  ஆர்டர்? என்ன  ஷாப்பிங்?னு... ஆனா  வில்லன்  கொடுத்து  வெச்சவர். ஒரு பேச்சு  வராத  சாந்தியை  லவ்  மேரேஜ்  பண்ணிக்கறாரு . அவருக்கு  2  பசங்க.  ஃபேமிலியோட  வெளில   போகும்போது  ஒரு  ரவுடி  கும்பல்   வில்லனை      வம்படியா  கலாய்க்குது .  வில்லன்  அமைதியா  வர்றார். ஆனா  பச்ங்க  சலிச்சுக்கறாங்க, அவங்களை  ஒரு  காட்டு  காட்டி  இருக்கலாமில்ல?  என  அங்கலாய்க்கறாங்க . 


அன்னைக்கு  நைட்  காட்டுக்கு  வேட்டையாடப்போறேன்னு வில்லன்  கிளம்பறார்.  மகன்  ஒருத்தன்  அப்பா  வேட்டையாடுவதை  வீடியோ  எடுக்கலாம்னு  அவருக்கே  தெரியாம  ஜீப்ல  ஏறிக்கறான்.அன்னைக்கு  நைட்  நடக்கும்  சம்பவங்கள்  அவனுக்கு  அதிர்ச்சி .. 


 வில்லன்  மகன்  ஜீப்ல  இருந்ததை  ஒரு  கட்டத்தில்  வில்லன் பார்த்துடறார். இந்த  விஷயத்தை  இங்கே  நடந்ததை  அம்மா  கிட்டயோ  வேற  யார்  கிட்டேயோ  சொன்னே  தொலைச்சிடுவேன்னு  மிர்ட்றார்


அவன்  அம்மா கிட்டே  அப்பா  பற்றிய  ரகசியங்களை  சொன்னானா?  பின்  விளைவுகள்  என்ன  ஆச்சு ?   இது  சஸ்பென்ஸ்


சம்பவம் 2  - ஹீரோக்கு  ஒரு  சம்சாரம்  ஒரு  பெண்  குழந்தை . பாப்பாவுக்கு  12  வயசு  ஆனதும்   அவர்  கிட்டே  ஒரு  மாற்றம்  வருது. ரூம்ல  தனியா  இருக்கறப்போ  வேற  யார்  கிட்டேயோ  பேசற  மாதிரி  தெரியுது .  யார்னு  கேட்டா  அதெல்லாம்  ஒண்ணும்  இல்லைனு  சமாளிக்கறா.  ஒரு  கட்டத்தில்  இது  ஓவர்  ஆகவே  சைக்யாட்ரிஸ்ட்டிடம்  கூட்டிட்டுப்போறாங்க.    ஹீரோ  மகளை  ஒரு  ஆவி  பிடிச்சிருக்கு அந்த  ஆவி  ஒரு  கொலை  பண்ணனும்னு  டிமாண்ட்  வைக்குது . அதை  அந்தக்கொலையை  ஹீரோ  பண்ணாலும்  சரி  ஹீரோ  மகள்  உடம்பில் இருந்து  ஆவியை  பண்ண  விட்டாலும்  சரி .. இஅந்தக்கொலை  எதுக்காக  ப்ண்ணனும்?  யாரைப்ப்ண்னனும்  என்பது  சஸ்பென்ஸ் .  ஆவியின் கோரிக்கையை  ஹீரோ  நிறைவேற்றினாரா? இல்லையா?  அது சஸ்பென்ஸ் 


 சம்பவம்  3  -  ஒரு  மிடில்  கிளாஸ்  ஃபேமிலி  ,அவங்களுக்கு  ரெண்டு  பசங்க. 2  பேரும்  ட்வின்ஸ் . ஒருத்தன்  நல்லவன், இன்னொருவன்  கெட்டவன் .  சைக்கோ  மாதிரி , அவன்  பார்வையே  சரி இல்லை ., ஏண்டா  இப்டி  இருக்கே?னு  கேட்டதுக்கு  அப்பாவையே  போட்டுத்தள்ளிட்டான் . அரண்டு  போன  அம்மா  ஜோசியரிடம்  போக  அந்தக்குழந்தையால  ஆபத்து .  விரட்டி  விட்டுடுங்க  என்கிறார்/. அம்மா  நைசா  அந்தப்பையனை  கழட்டி  விட்டுட்டு  எஸ்  ஆகிறார் 


 மேலே  சொன்ன  3    வெவ்வேற  சம்பவங்களும்  எப்படி  ஒரு   நேர்கோட்டில் இனையுது  என்பதே  திரைகக்தை 


 ஹீரோவா  தனுஷ் , அமைதியான  நடிப்பு . கெட்ட்ப்பும்  நார்மல் . அவருக்கு  மனைவியாக  இந்துஜா   அதிக  வாய்ப்பில்லை  வந்தவ்ரை  ஓக்கே 


 தனுஷின்  மகளாக  வரும் ஹியா  தவே  கலக்கலான  நடிப்பு . படத்தில்  தனுஷ்க்கு  அடுத்து  இவருக்குதான்  அதிக  காட்சிகள் ., குறிப்பாக இண்ட்டர்வெல்  பிளாக்கில்  அவரது  பேய்ச்சிரிப்பு   பிரமாதம் 


வில்லன்  தனுஷ்க்கு  தியேட்டரில்  அப்ளாஸ்  அள்ளுது .,அனாயசமான  நடிப்பு 


சிறுவர்கலாக  வரும்  இரட்டையர்கள்  ந்டிப்பு  அபாரம் 


வில்லனின்  மனைவியாக  வருபவர்  நடிப்பு  குட் . சைக்யாட்ரிஸ்டாக  வரு ம்  பிரபு  குட்  ஆக்டிங்  . யோகிபாபுவுக்கு  அதிக  வேலை  இல்லை 


  ஒளிப்பதிவு  இசை  படத்தின்  பெரிய  பலம் 



  சபாஷ்  டைரக்டர்


1    த  காஞ்சூரிங் படத்தில்   வருவது  போல  திகில்  காட்சிகளை   இதில்  எதிர்பார்க்கவில்லை . ஒரு  சீனில்  கூட  பேயைக்காட்டாமல்யே  திகிலை  வரவழைக்கிறார்கள்:


2   ரொம்ப  லோ  பட்ஜெட்டில்  இரு  வீடுகளிலேயே  ஷூட்டிங்கை  முடித்த  சாமார்த்தியம்  சபாஷ் 


3    வில்லன்  வரும்போது  ஒலிக்கும் பிஜிஎம்  அந்தப்பாட்டு  கொலை  மாஸ் 


திரைக்கதையில் சில  ஆலோசனைகள்,  லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  பொதுவா   இந்தியக்குடும்பங்களில்  அம்மா  அப்பா  மகள்  எல்லாம்  ஒரே  பெட்ரூமில்  படுப்பதுதான்  வ்ழக்கம்,  ஃபாரீன்  படத்தில்  இருந்து  சீன்  உருவும்போது  அப்படியே  வைக்கனும்னு  இல்லை , நம்ம  கலாச்சாரத்துக்குத்தகுந்த  மாதிரி மாத்திக்கனும், இந்த  விஷயத்தில்  அட்லீ  கெட்டி 


2   ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  படுத்திருக்கும்  கட்டில்  கிட்டத்தட்ட 10  பேர்  படுக்கும்  அளவு  அகலமாத்தான்  இருக்கு ., மகள்  நைட்  வந்து  இன்னைக்கு  நான்  உங்க  கூடப்படுத்துக்கறேன்  என  சொல்லும்போது  அப்பா  ஓகேங்கறார். அம்மா  கோவிச்ட்டு எனக்கு  கட்டில்ல  இடம்  போதாதுனு  கோவிச்ட்டு  வெளில  போறார். இந்த  சீன்  எதுக்கு ? 


3    மகளுக்கு  ஏதோ  பிரச்சனை  என்று  தெரிந்த  பின்னும்  மக்ளை  தனி  அறையில்   ப்டுக்க  வைப்பது  ஏன் ? 


4  மகள்  ரூமில்  கேமரா  செட்  பண்ணுவது  இன்ன  பிற  டெக்னிக்கல்  அம்சங்கள்  ஃபிட்  பண்ணுவது  எல்லாம்  மகள்  ஸ்கூலுக்குப்போனபின் அவளுக்கு  தெரியாமலேயே  ப்ண்ணலாமே? 

5  பொதுவா  தம்பதிக்கு  2  வது  குழந்தை  வேணும்னா  முதல்  குழந்தை  பிறந்து   5   வருடத்துக்குள்ள் தான்  கேட்பாங்க, அதான்   உலக  வழக்கம் , இந்த  ஹீரோயின்  மகளுக்கு  12    வயசு  ஆனபின்  இவளுக்கு  மேரேஜ்  ஆகிட்டா  நாம  தனியா  இருப்போம்  இன்னொரு  குழந்தை  பெத்துக்கலாம்னு  சொல்லுது . காலம் கடந்த  ஞானம்   


6  வில்லனுக்கு  வேலை  வெட்டி  எதும்  இருப்பதாத்தெரில. பூவாவுக்கு என்ன  பண்றாரு ? 


7 பொதுவா  ஒரு  கொலையைப்பார்த்த  சாட்சியை  விட்டு  வைப்பது  அபாயம்  தான், ஆனா  தன்  சொந்தக்குழந்தை தான்  சாட்சி  எனும்போது  யாராவது  கொல்வாங்களா? எல்லாரையும்  கொன்னுட்டு  அவர்  எங்கே  போகப்போறார்? 


8  வில்ல்ன்  35  வய்சுல  தான்  ஏன்  சைக்கோ  ஆ னேன்னு  காரணம்  சொல்வது  ஓக்கே  ஆனா  சின்னப்பையனா  இருய்க்கும்போதே  அவர்  ஏன்  சைக்கோவா  ஆனார்  என்பதற்கு  பட்த்தில்  விளக்கம்  இல்லை . வ்ழக்கமா  அனாதை , அன்பு  இல்லைனு  சப்பைக்கட்டு  கட்டுவாங்க  இதில்  அது  கூட  இல்லை 



9 வில்லனின்  கேரக்டர்  ஸ்கெட்ச்  இன்னும்    ஸ்ட்ராங்கா  டிசைன்  பண்ணி  இருக்கலாம்


10  க்ளைமாக்சில்  200  அடி  பள்ளத்தாக்கில்  மேலே  இருந்து  விழும்  ஹீரோ  வில்லன்  இருவருமே  உயிர்  பிழைப்பது  காதில் பூ .  கீழே  தண்ணி  ஓடுதுனு  காட்டியாவது  சமாலிச்சிருகலாம்


11  நீ  என்னை  விட  மோசமானவன்  என  செல்வராகவன்  சொல்லும்போது    அப்றம்  ஏப்பா  அவரை  கூட  வெச்சுக்க்றேனு  கேட்கத்தோணுது 


12  இவ்ளோ  க்ளேபரங்கள்  கதைல  நடக்குது  . ஒரு  மருந்து , மாத்திரை , டானிக்குக்கூட  போலீஸ்  கேரக்டரே  இல்லை 

 ரசித்த  வசனங்கள்


1     என்னை  விட  நீ  ஏன்  பலசாலி  இல்லைனு  தெரிய்மா? ஏன்னா  நான்  அனுபவிச்ச  வலி  எனக்கு  நிகழ்ந்த  நிராகரிப்புகள்  இதெல்லாம்  உனக்கு  நிகழ்லை 


2   உலகத்தோட  எந்த  மூலைக்கு  நீ  போனாலும்  அப்பாவா  உன்னைப்பாதுகாக்க  அங்கே  வருவேன் 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  ஃபேமிலியோடு  பார்க்கத்தகுந்த  ஒரு த்ரில்லர்  படம் தான் . ரெண்டு  மணி  நேரம்  தான்  ஓடுது  .  பார்க்கலாம்  

நானே வருவேன் (2022)-முதல் பாதி கோஸ்ட் த்ரில்லர்.பின் பாதி சைக்கோ க்ரைம் த்ரில்லர்.யுவன் பிஜிஎம் பட்டாசு.சைக்கோ தனுஷ் நடிப்பு செம.லோ பட்ஜெட்ல ஒரு ஹிட் படம்.விகடன் 43. ரேட்டிங். 2.75 / 5. #NaaneVaruvean

Wednesday, September 28, 2022

பலே பாண்டியா (1962) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா)

 திரிசூலம் , தெய்வ  மகன், சந்திப்பு  என  பல  பட்ங்களில்  சிவாஜி  3  வேடங்களில்  நடித்திருந்தாலும்  முதன்முதலாக  3  மாறுபட்ட  வேடங்களில்  நடித்தது  இதில்  தான். ஹீரோ  சிவாஜி   3  வேடங்கள் , வில்லன்  எம் ஆர்  ராதா  2  வேடங்கள்  . இப்படி  ஒரு காம்போ  இதுக்குப்பின்  எந்தத்தமிழ்ப்படத்திலும்  அமையலை . இந்த காமெடி பட்ம்  செம   ஹிட்  ஆச்சு., பாடல்கள்  எல்லாம்  செம  ஹிட்டு .   கமலின்  மைக்கேல்  மதனகாமராஜன்  ஆள்  மாறாட்டக்காமெடி , பிரபுவின்  சின்ன  வாத்தியார்  ஹீரோ  கெட்டப்  எல்லாம் இங்கே  இருந்து  உருவுனதுதான் 

ஸ்பாய்லர்  அலெர்ட் 

ஓப்பனிங்  சீன்லயே  ஹீரோ  தற்கொலை  முயற்சியில்  இறங்கறார். காரணம்  வேலை  வாய்ப்பின்மை , அவரை  வில்லன்  காப்பாத்தி  அவர்  வீட்டுக்குக்கூட்டிட்டு  வந்து  சாப்பாடு  எல்லாம்  போட்டு  அங்கேயே  தங்க  வைக்கிறார்

 வில்லன்  கிட்டே  ஹீரோ  மாதிரியே  உருவத்தோற்றம்  உள்ள ஆள்  இருக்கான். அதனால  வில்லன்  பிளான்  என்னான்னா   தன்  பணியாள்  பேரில்  இன்சூரன்ஸ்  பாலிசி  எடுத்து   பின்  ஹீரோவை  தற்கொலை செய்ய  விட்டு  பின்  அந்த  இன்சூரன்ஸ்  பணத்தை  ஆட்டையைப்போட்டுடலாம்னு  ஐடியா 

அப்போ  ஹீரோயின்  இண்ட்ரோ. அவர்  கிட்டே  இருந்த  பர்சை  திருடன்  பறிச்சுட்டு  ஓட  ஹீரோ  அதைக்கைப்பற்றித்தர்றார். நிஜ  வாழ்க்கைல  5  ரூபா  அல்லது  10  ரூபா  டிப்ஸ்  தருவாங்க  இந்த  உதவிக்கு , ஆனா  சினிமால  உடனே  இருவருக்கும்  லவ் 

 ஒரு  எஸ்டேட்  ஓனரோட  பொண்ணு  மனநிலை  பாதிக்கபப்ட்டு  இருக்கு  அதை  ஹீரோ  காப்பாத்தறார். அந்த  நன்றிக்கடனுக்காக  ஹீரோவை  தன்  வளர்ப்பு  மகனாக  அறிவிக்கிறார்  ஓனர்

  வில்லன்  ஒரு  சூழ்ச்சி  செஞ்சு  தன்  அடியாள்  செஞ்ச  தப்புக்கு  ஹீரோவை  ஜெயிலுக்குப்போவ்து  போல  செய்கிறார்

 ஹீரோக்கு  எஸ்டேட்  சொத்து  எல்லாம்  வருதுனு  தெரிஞ்சதும்  ஹீரோவோட  அண்ணன்  சம்சாரம்  அண்ணி  ஒரு  சதித்திட்டம்  தீட்றா

 அதன்படி  தன்  கணவர்  வெச்சிருக்கும்  லேப்  தீப்பற்றி    எரிந்ததாகவும் அதுல  கணவர்  இறந்ததாகவும்  நாடகம்  ஆடி  ஹீரோ  இடத்துக்கு  கணவனை  அனுப்பி  ஆள்  மாறாட்டம்  பண்ணலாம்னு  பிளான் 

இப்போ வில்லி  அண்ணியின்  பிளான்    ஜெயிச்சுதா? வில்லன்  பிளான்   ஜெயிச்சுதா?  ஹீரோ  ஜெயிச்சாரா? 

 இதை  எல்லாம்  ஜாலியான  திரைக்கதையில்  கண்டு  மகிழவும் 

 
சிவாஜி  ஆக்டிங்  பற்றி  சொல்லவும்  வேண்டுமா?  3  வேடங்கள்  ஒரே  கெட்டப்  ஒரே டிரஸ்  ஆனா  க்ளைமாக்ஸில்  மாறுபட்ட  3  விதமான  நடிப்பு  தரனும்,  பாடி லேங்க்வேஜில்  கலக்கி  இருக்கார் 

ஒரு  ஜோடி  சந்தியா  ( ஜெ வின்  அம்மா )   இன்னொரு ஜோடி  தேவிகா 

எம் ஆர்  ராதாவின்  இரு  மாறுபட்ட  கெட்டப்  அண்ட்  உடல்  மொழி  எல்லாம்  பட்டாசா  இருக்கும் 

  இதில்  வரும்  மாமா  -  மாப்ளே  பாட்டு  பட்டி தொட்டி  எல்லாம்  ஹிட்டு   ஆர்கெஸ்ட்ரா  வில்  நிச்சயம்  பாடியே  தீருவார்கள் 

பி  ஆர்  பந்துலு  திரைக்கதை  இயக்கம்  கலக்கல்  ரகம் 

 ரசித்த  வசனங்கள் 

1   அரசியலுக்கும்  , எனக்கும் ராசி  இல்லை , இனி  அரசியல்  பக்கமே  எட்டிப்பார்க்க  மாட்டேன் , தேர்தல்ல தான்  ஜெயிக்க  முடியலையே ? 

2 குறிக்கோள்  இல்லாமல்   கோட்டு  வாய்  கூட  விடமாட்டேன் 

3   நாம்  நினைப்பதெல்லாம்  நடக்கா  விட்டால்  , நாம்   நினைக்காதது  எதிர்பாராதது  கூட   நடக்கலாம்  இல்லையா? 


4  தங்கள்  இதயம்  என்ன  கல்லா?  வாயில்  இருந்து  வருவது  என்ன  சொல்லா?    இந்த  மருமகனோடு  மல்லா ?  (  மல்லுக்கட்டுதல் )

5  எத்தனை  ஜென்மம்  எடுத்தாலும்  அவர்  தான்  என்  கணவர் 

  ஏம்மா, நாளைக்கு  என்ன  நடக்கும்னே  யாருக்கும்  தெரியாது , நீ  ஜென்மக்கணக்குக்கு  பிளான்  போடறியா? 


  படப்பிடிப்பில்  நடந்த  ரசமான  சம்பவம்

  மாமா    மாப்ளே  பாடல்  காட்சியில்  ந்டிக்கும்போது  எம் ஆர்  ராதா  ஒரு  சீனில்  பாகவ்தர்  போல  கையை  காதுக்குப்பக்கத்தில்  வைத்து  பாடுவது  போல  அபிநயம்  பிடித்தாராம்.  ஷாட்  ஓக்கே  ஆன  பிறகு  டைரக்டர்  அவரிட,ம்  அந்த  மாதிரி  சீனே  இல்லையே? என  கேட்க   அ0ந்த   சீனில்  சோபாவில்  அமர்ந்தபடி  குலுங்கும்போது பாடியை  ஓவரா  அலட்டிட்டேன்  போல  விக்  கழண்டுடுச்சு. அது  விழாமல்  பிடிக்க  பாகவதர்  மாதிரி  பாவ்லா  பண்ணேன்  என்றாராம்.  ஃபிலிம்  ரோல்  வேஸ்ட்  ஆகாம  காப்பாத்துனேன்  பாரு  என்றாராம்.   இந்த  சீனை  ரசிக்க  அந்த  மாமா  மாப்ளே  பாட்டை  கேட்டுப்பாருங்கள் 

  செம  ஹிட்டுபாட்டு   லிஸ்ட்  (  படத்தில்  வரும்  வரிசைப்படி  இல்லாமல்  ஹிட்  பேசிஸ்)

1    வாழ  நினைத்தால்  வாழலாம்  வ்ழியா  இல்லை  பூமியில் 

2  அத்திக்காய்  காய்  (  இதுல  கொஞ்சம்  டபுள்  மீனிங்  வரும் )

3   ஆதி  மனிதன் 

4  நீயே  உனக்கு  என்றும்  

5   யாரை  எங்கே  வைபப்து  யாருக்கும்  தெரியல 

6  நான்  என்ன  சொல்லி  விட்டேன் 

-லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1   இன்சூரன்ஸ்  கம்பெனி  ரூல்ஸ்  எல்லாம்  தெரியுமா? தெரியாதா? பாலிசி  போட்டு  ஒரு  மாதத்துக்குள்  ஒருவர்  தற்கொலை  செய்து  கொண்டால்  பணம்  கிடைக்காது 

2  தன்  கணவனின்  தம்பி  போல்  ஆள்  மாறாட்டம்  செய்ய  தன்  கணவனை  தூண்டும்  மனைவிக்கு  தன்  தம்பியின்  காதலி  தன்  க்ணவனுடன்  நெருக்கமாவார்  என  யூகிக்க  முடியாதா? பொதுவா  தமிழகப்பெண்கள்  பொசசிவ்னெஸ்  ஜாஸ்தி. எப்படி  இதுக்கு  ஒத்துக்கறாங்க ? 

3  தற்கொலைக்கு  முயல்வது  ச்ட்டப்படி  தவறு . படம்  முழுக்க  ஆங்காங்கே  தற்கொலை  ,முயற்சியில்  ஈடுபடும்  ஹீரோவை  போலீஸ்  கண்டுக்கவே  இல்லையே? 


4   ஆள்  மாறாட்டம்  செய்யும்  எல்லாப்படங்களிலும்  ஒரு  லாஜிக்  இடிக்கும்.  முகச்சாயல்  ஒன்றாக  இருக்கலாம், ஆனா  கை  ரேகை  வேற  வேற . ஆள்  இறந்தால்  ரேகையை  வெச்சுக்கண்டுபிடிக்கலாமே? 


 சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  சிவாஜி  ரசிகர்கள்  ,மட்டுமல்ல  ஜாலி  காமெடி  ரசிக்ர்களும்  அவசியம்  காண  வேண்டிய  ப்டம்  எம் ஆர்  ராதா  நடிப்புக்காகவே  பார்க்கலா,ம்  ரேட்டிங்  3 / 5 

மன்னாதி மன்னன் (1960) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( டூயல் சிம் ரொமாண்டிக் டிராமா)


 ஸ்பாய்லர்  அலெர்ட் 


  எம் ஜி ஆர்  ரசிகர்கள்  இப்பதிவைப்படிக்காமல்  கடக்கவும்


  எம் ஜி ஆருக்கு  மனசாட்சினு  ஒண்ணு  இருக்கா?இல்லையா?னு  தெரியல. நாட்டியப்பேரொளி  பத்மினி  எப்படிப்பட்ட நடன  தாரகைனு  உலகத்துக்கே  தெரியும் . அப்பேர்ப்பட்ட  பிரமாதமான  நாட்டியக்காரி  கிட்டே  போட்டி  நடனம்  ஆடி  இவரு  ஜெயிக்கற  ,மாதிரியும்  அதனால  அவங்க  இவர்  கிட்டே  மாணவியா   சேர்ந்து  நாட்டியம்  பயில்வது  மாதிரியும்  ஓப்பனிங்  சீன். இவரு  எக்சசைஸ்  பண்ற  மாதிரி  கையைக்காலை  ஆட்றாரு , அந்தம்மா  பிரமாதமா  ஆடுது , ஆனா  அவங்க  தோத்துட்டாங்களாம், இப்படி  ஒரு  சீன்  எடுக்க  எப்படி  மனசு  வந்ததோ  டைரக்டருக்கு /


இதே  மாதிரி  ரஜினி  நடிச்ச  தங்க  மகன்  படத்துல  ஹீரோக்கும்  ஹீரோயினுக்கும்  டான்ஸ்  போட்டி  நடக்கும். அதுல  சமமா  2  பேரும்  ஆடிட்டு  வருவாங்க, கடைசில  ஹீரோ  தன்  சட்டையைக்கழட்டிட்டு  ஆடுவாரு. ஹீரோயின்  திகைப்பாங்க., ஹீரோ  ஜெயிச்ட்டேன்பாரு, என்ன  கொடுமை  சரவணா  இது ?


எது  எப்படியோ  முதல்  40  நிமிடங்கள்  செம  ஜாலியா  ஆட்டம்  பாட்டம்  கொண்டாட்டம்னு  படம்  ஜனரஞ்சகமாப்போகுது,


 ஓப்பனிங்  சாங்  ல  கதைக்கு  சம்ப்ந்தமே  இல்லாம   அச்சம்  என்பது  மடமையடா  அஞ்சாமை திராவிடர்  உடமையடானு  பாடறார். எனர்ஜெடிக்  சாங்  அது  விஸ்வநாதன்  ராமமூர்த்தி  இசைல  கண்ணதாசன்  வரிகளில்  கலக்கலான  பாட்டு 


ஒரு  நாட்டின்  இளவரசர்  ஹீரோ . அந்த  நாட்டில்  உள்ள  சாதாரண  நடன  மங்கையைக்காதலிக்கிறார். அவரும்  தான். இருவர்  காதலும்  வீட்டுக்குத்தெரியாது 


 அப்போ  ஹீரோ  வோட  அப்பாவான  மன்னர்  பக்கத்து  நாட்டு  இளவரசியை  பொண்ணு  கேட்டு  தூது  அனுப்பறார். அந்த  ஆகாவளி  மன்னன்  பொண்ணு  தர்றேன்  தர்லைனு  ஏதோ  ஒரு  பதிலை  சொல்லி  இருக்கனும். அதை  விட்டுட்டு   இளவரச்ர்   மகாராணிக்குப்பிறந்தவர்  இல்லை ., மன்னரின்  சின்ன  வீட்டுக்குப்பிறந்தவர் அவர்  கீழ்  சாதியை  சேர்ந்த  பெண் அந்தப்பெண்ணுக்குபிறந்த  மகனுக்கு  எப்படி  என்  பொண்ணைத்தர்றது?னு  கேட்டு  ஓலை  அனுப்பறார்


 இந்த  விஷயம்  ஹீரோவுக்குத்தெரிஞ்சதும்  நியாயமா  என்ன  சொல்லி  இருக்கனும்? அதை  விடு  கழுதை  போய்ட்டுப்போகுது . நான்  வேற  ஒரு  பொண்ணைக்காதலிக்கிறேன். அவளையே கல்யாணம்  பண்ணிக்கறென்னா  வேலை  முடிஞ்சது 


 அதை  விட்டுட்டு  அப்படியா  மன்னர்  சொனார்? என்  தாயைப்பழித்தானா? அதற்குப்பழி  வாங்க  இப்பவே  அந்த  நாட்டு  இளவரசியை  சிறை  எடுக்கிறேன்னு கிளம்பறாரு 


அந்த  நாட்டுக்கு  ஹீரோ  போறாரு. அங்கே  அந்நாட்டின் இளவரசி  தடாகத்தில்  குளிச்ட்டு  இருக்கு . அப்போ  ஒரு  காட்டெருமை  முட்ட  வருது . இளவர்சின்னா  பாதுகாவல்  படையோடுதானே  வருவாங்க . ஆனா  அப்டி யாரையும்  காணோம். 


 ஹீரோ  காப்பாத்த்றார். உடனே  அந்த  இளவரசிக்கு  இவரு  மேல  லவ்வு . ஆனா  வெளில  சொல்லலை ., தன்  தந்தையிடம்  அழைத்துச்சென்று  அறீமுகப்படுத்தறார். அவருக்கு  நடனம்  சொல்லித்தரும்  ஆசிரியரா  ஹீரோவை  நியமிக்கறாங்க 


மொத்தம்  3  மணி  நேரப்படம், இழுக்கனுமே? அதனால  இந்த  இளவரசியோட  டைம்  பாஸ்  பண்ணிட்டு  இருக்காரு  ஹீரோ 


அப்றம்   ஹீரோ  அந்நாட்டு  இளவரசியை  தன்  நாட்டுக்கு  அழைச்ட்டு  வந்துடறாரு 


 அப்போ சாதா  நடனப்பெண்ணை  இளவரசர்  காதலிப்பது  தெரிந்து  ஒரு ச்தித்திட்டம்  தீட்டி  அந்தப்பெண்ணை  வேற  நாட்டுக்கு  அனுப்பி  வைக்கறாங்க . ஹீரோ  கிட்டே  ஒரு  பொய்யைச்சொல்றாங்க


 ஹீரோ  அந்தப்பொய்யை  நம்பி  அந்நாட்டு  இளவரசியை  கல்யாணம்  பண்ணிக்கறார்


 இப்போ  அவர்  காதலிச்ச  மங்கை  திரும்பி  வர்றா/ இப்போ  ஹீரோ  என்ன  முடிவு  எடுத்தாரு ?  என்பதே  மிச்ச  மீதிக்கதை 


ஹீரோவா  இளவரசரா  எம் ஜி ஆர் . அட்டகாசமான  கெட்டப் . அருமையான  விக்.  எடுப்பான  அரசர்  உடை /வசீகரிக்கும்  சிரிப்பு  என  எம் ஜி ஆர்  செமயா  ஸ்கோர்  ப்ண்றார்


அம்மாவை  பழித்துப்பேசிட்டாங்க  எனும்போது  அவர்  காட்டும்  ரீ  ஆக்சன்  கொஞ்சம்  ஓவர்  டோசோத்தான்  இருக்கு ., பாமர  மக்களின்  பல்ஸ்  தெரிஞ்சு  இவர்  நடிக்கும்  கேரக்டர்  அம்மா  பாசம்  உள்ளவராக  நாட்டின்  நன்மைக்கு  பாடுபடும்  வீரராக  காட்டிக்கொண்டார்  போல 


  நடன  மங்கையா  பத்மினி . செம  நடிப்பு, செம  டான்ஸ்  . முக  பாவனைகள்  எல்லாம்  அள்ளுது 


 இளவர்சி  கற்பக வல்லியாக  அஞ்சலி  தேவி . ஆர்ப்பாட்டமான  நடிப்பு  மன்னன்  விஜயசாந்தி  போல . தனக்கு  வரப்போகும்  மாப்பிள்ளை  நாட்டோட  மாப்பிள்ளையா  வீட்டோட  மாப்பிள்ளையா  இருக்கனும்  என  அப்பாவிடம்  கோருவது  செம 


 பத்மினி  மீது  ஆசைபப்டும்  மன்னராக  பி எஸ்  வீரப்பா . ஆக்சுவலா  பட்த்துல  வில்லனா  இவரைக்காட்றாங்க,   ஆனா  இவரு  எந்தத்தப்பும்  பண்ணலை . இவரு  ஒரு  பெண்  மேல  ஆசைப்பட்றாரு  அவ்ளோ  தான்  பலவந்தம்  பண்ணலை , கெடுதல்  ப்ண்ணலை 


 இதை  எல்லாம்  பண்றது    ஹீரோதான் 


 லவ்  பண்றது  ஒரு  பெண்ணை  , மேரேஜ்  பண்ணிக்கறது  இன்னொரு  பெண்ணை , மேரேஜ்  ஆன்பின்  பழைய  காதலியைப்பார்த்ததும்  அவ்ருக்காக  உருகுவது  என  இவர்தான்  2  பெண்களுக்கும்  துரோகம்  பண்றார்


 இதை  எப்படி  ஜனங்க  கவனிக்காம  விட்டாங்கனு  தெரியலை 


 நாடோடி  மன்னன்  அளவுக்கு  மெகா  ஹிட்  ஆகாவிட்டாலும்  இது  ஒரு  ஹிட்  படமே 

குல்  தெய்வம்  ராஜகோபால்  , ஜி  சகுந்தலா  இருவரின்  காமெடி  டிராக்கும்  குட் 


செம  பாட்டு  ஹிட்டு 


1  அச்சம்  என்பது  மடமைய்டா  அஞ்சாமை  திராவிடர்  உடமையடா


2   ஆடாத  மனமும்  உண்டோ கலை  அலங்காரமும் அழகு  சிங்காரமும்


3  கண்கள்  இரண்டும்  இங்கு  உன்னைக்கண்டு  பேசுமோ   காலம்  இனிமேல்  நம்மை  ஒன்றாய்க்கொண்டு  சேர்க்குமோ ? 


4  கனியக்கனிய  ம்ழலை  பேசும்  கண்மணி 


இது  போக  சுமார்  ரகப்பாடல்கள்  4  அக  மொத்தம்  எட்டுப்பாட்டு . 


சபாஷ்  டைரக்டர் 


1 ஆர்ட்  டைரக்சன்  பிரமாதம் .   அதே  போல்  ஹீரோ , ஹீரோயின்கள்  இருவருக்கான  ஆடை  வடிவ்மைப்பு  நகைகள்  எல்லாம்  பக்கா 


2  பாடல்களுக்கான  சிச்சுவேஷன் , அதன்   படமாக்கம், பாடல்  வரிகள்  எல்லாமே  பிரமாதம் எம்  ஜி ஆரின்  அரசியல்  வெற்றிக்கு  பாடல்  வரிகள்  முக்கிய  அங்கம் 


3  மூன்று  மணி  நேரப்படத்தில்  கொஞ்சம்  கூட  போர்  அடிக்காத  திரைக்கதை .  திரைக்கதை  எழுதியவர்  கண்ணதாசன்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில  நெருடல்கள் 


1   ஹீரோ  கூட  எந்நேரமும்  இருக்கும்  அவர்  தோழர்க்கு  ஹீரோவுக்கு  நீச்சல்  தெரியுமா? தெரியாதா?னு  கூடத்தெரியாதா? ஒரு  சீன்ல  அவனுக்கு  நீச்சல்  தெரியுமா? தெரியாதா?ன்னே  எனக்குத்தெரியலயே?னு  டயலாக்  வருது (இதே  டயலாக்கை  பின்னாளில்  வெற்றி  விழா  படத்தில்  கமல்  சொல்வார். எனக்கு  பழசெல்லாம்  மறந்துடுச்சு, எனக்கு  டிரைவிங்  தெரியுமா? தெரியாதா?ன்னே  எனக்குத்தெரியல 


2  இளவர்ச்ர்  மன்னர்  இருவரும்  தோழமையோடு  பழகுபவர்க்ளே., ஏன்  ஹீரோ  தன்  அப்பாவிடம்  தன்  காதலைப்பற்றி  சொல்லலை ?  பக்கத்து  நாட்டுக்கு  பெண்  கேட்டு  தூது  ஓலை  அனுப்பிய  பிறகாவது  லவ்  மேட்டரை  ஓப்பன்  செய்திருக்கலாமே? 


3  ஹீரோவுக்கு  மேரேஜ்  ஆனது  தெரிஞ்சதும்  பத்மினி  புத்த  ம்தத்தைத்தழுவி  துறவி  ஆகிறார். ஆனா  துறவி  ஆன்பின்பும்  மேக்கப்  என்ன?  கொண்டை  டிசைன் என்ன? அதுல  எட்டு முழம்  பூ  என்ன?  எதுக்கு  துறவி  தலைல  பூ  (  மலர்  வாசனை  காதல் உணர்வைத்தூண்டும்  என்பதால்  துறவிகள்  பூச்சூட  அனுமதி  இல்லையே ? 


4  ஹீரோ  பக்கத்து  நாட்டு  இளவரசியைப்பார்க்கப்போறது  அங்கே  டேரா  அடிப்பது  இளவர்சிக்கு  டான்ஸ்  சொல்லித்தருவது  எல்லாம்  ஓக்கே, ஆனா  ஒரு  வார்த்தை  எனக்கு  ஆல்ரெடி  காதலி  உண்டு   நீ  வீணா  மனசில்  கற்பனைகளை  வளர்த்துக்காதனு  சொல்லவே  இல்லை யே? 


5  மேரேஜ்  ஆனபின்பு  ஹீரோ ஆற்றில்  குதித்தவர்  ஆளைக்காணோம்,  ஆள் அவுட்னு  முடிவு  பண்ணிடறாங்க , டெட்  பாடி  கிடைக்காமல்   அனைவரும்  அவர்  இறந்ததாக  நம்புவது  எப்படி ? 


6  டைட்டிலுக்கும்  கதைக்கும்  என்ன  சம்பந்தம் ? ஹீரோ மன்னரே  இல்லை  இளவர்சர்  தான். இர்ண்டு  பெண்களை  ஏமாத்திட்டு  சுத்திட்டு  இருக்கார் இவர்  எப்படி  மன்னாதி  மன்னன்  ஆவார் ? 


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   போர்  அடிக்காம  பாட்டு  ஆட்டம்  பாட்டம்  கொண்டாட்டம், காமெடினு  டைம்  பாஸ்  மூவி  பார்க்கலாம் , யூ  ட்யூப்ல  கிடைக்குது  கலர்   படம்  ரேட்டிங்  2.75  / 5 




Mannathi Mannan
Mannathi Mannan.jpg
Theatrical release poster
Directed byM. Natesan
Story byKannadasan
Produced byM. Natesan
StarringM. G. Ramachandran
Anjali Devi
Padmini
CinematographyG. K. Ramu
C. J. Mohan
Edited byC. P. Jambulingam
S. Krishnamoorthy
Rajan
Music byViswanathan–Ramamoorthy
Production
company
Natesh Art Pictures
Release date
  • 19 October 1960
Running time
178 minutes
CountryIndia
LanguageTamil

Monday, September 26, 2022

மர்ம யோகி (1951) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர்)


திகில்  காட்சிகளுக்காக  ஏ  சர்ட்டிஃபிகேட்  வாங்கிய  முதல்  தமிழ்ப்படம்  இதுதான்.நிறையப்பேரு  நினைப்பு  என்னான்னா  பாட்ஷா  படம்தான்  பஞ்ச்  டயலாக் ஹிட்  ஆன  முதல்பட்ம்.. ஆனா  குறி வைத்தால்  தவற  விட  மாட்டேன், தவறுமானால்  குறி  வைக்க  மாட்டேன்  என  பஞ்ச்  டயலாக்   அன்றே  ஹீரோ  பேசிய  படம்.  ஆக்சுவலா  படத்தின்  வசனகர்த்தா  கலைஞர்  தான், ஆனா  டைட்டில்ல  அவர்  பேரு  வராது . அது  என்ன  பாலிடிக்ஸ்னு  தெரியல

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  நாட்டின்  மன்னன்.  சாமான்யனுக்கும்  செல்வந்தன், ஜமீந்தார் , மன்னன்  இவங்களுக்கும்  என்ன  வித்தியாசம்னா  சாமான்யன்  ஒரே  ஒரு  சம்சாரம்  கட்டிட்டு  அதுக்கு  எடுபுடி  வேலை  செய்யறது , புடவை  நகை  வாங்கித்தர்றது  இதுக்காகவே  காலம்  பூரா  உழைப்பவன், ஆனா   மன்னர்  பரம்பரை  ஜமீன்  பரம்பரைல  இருக்கறவங்க   ஏகப்பட்ட  சம்சாரம்  வெச்சிருப்பாங்க. தசரத  சக்ரவர்த்திக்கு  60,000  சம்சாரமாம், அடேங்கப்பா   டெய்லி  ஒரு  சம்சாரம்னாக்கூட  167    வருசம்  ஆகும்  அடுத்த  ஷிஃப்ட்  வர 


மன்னர்  அரண்மனைல  நாட்டு  மக்களுக்காக  ஏதாவது  நல்லது  பண்ணுவார்னு  பார்த்தா  அவர்  பாட்டுக்கு  நாட்டிய  நிகழ்ச்சி  பார்த்துட்டு  இருக்காரு. எங்க  ஊர்ல  தேர்த்திருவிழா  அப்போ  ஒரு  கூட்டம்  கரகாட்டம்  பார்க்கறேன் , ஒயிலாட்டம்  பார்க்கறேனு  கோயிலுக்குக்கிளம்பிடுவாங்க, ஆனா  ஆவங்க ஆட்டத்தை  ரசிக்கற  மாதிரி  தெரியல. ஆட்டக்காரியை  ரசிக்கத்தான்  வந்ததா  தோணும் ( ஆக்சுவலா நான்  போறது  ஆட்டத்தையோ  ஆட்டக்காரியையோ  பார்க்க  அல்ல. ஊர்ல  இருக்கற  எந்த  எந்த  பெரிய  மனுசன்  எல்லாம்  முக்காடு  போட்டுட்டு  வர்றான்னு  பார்க்க ) 


ஒரு  நாட்டியக்காரியின்  ஆடலில்  மயங்கி  மன்னர்  உன்னை இந்த  அந்தப்புரத்துலயே  வெச்சுக்கறேன்கறார்.  அந்த  பொண்ணுக்கு  ஒரு  அண்ணன்  இருக்கான். அவனை  என்ன  பண்ண?னு  கேட்டா  இனிமே  அவன் தான்  எனக்கு  பாடி  கார்டு  அப்டிங்கறார். பாடிக்கு  மசாஜ்  பண்ண   தங்கச்சி . பாடிகார்டா  மச்சின்ன். வடிவேலு  ஒரு  படத்துல   அக்கா  உனக்கு  பேக்கரி  எனக்கு  டீலிங்  பேசுவாரே  அப்டி ஆகிப்போச்சு 


கொஞ்ச  நாள்  போனதும்  ஆட்டக்காரி  மகாராணி  ஆகிடறா.
 மகாராணி  ஆனதும்  சொந்த  அண்ணனையே  விஷம்  வெச்சு  கொன்னுடறா.மன்னரை  ஏரில  பரிசல்ல  போகும்போது  தள்ளி விட்டுடறா.  ஆட்களை  வெச்சு  மன்னன்  வாரிசுகள்  இருக்கும்  மாளிகையை   தீக்கு  இரையாக்கிடறா

  என்ன  இது ? ஹீரோவுக்கு  என்னதான்  வேலை ?னு  கேட்கறிங்களா?

  20  வருடங்கள் போகுது 

  ஊரில்  ஒரு  புரட்சி இளைஞர்  தோன்றுகிறார். நாட்டு  மக்களுக்கு  விதிக்கப்படும்  அநியாய  வரியை  எதிர்க்கிறார். தீவிரவாதி  என  முத்திரை  குத்தப்பட்டு   அரசாங்கத்தால்  தேடப்டும்   நபர்  ஆகறார்


 இப்போ  மகாராணி  கூட  ஒரு  யோகி  இருக்கார் . தளபதி  இருக்கார் . தளபதிக்கு  ஒரு  தங்கை .  மகாராணி (  முன்னாள்  ஆட்டக்காரி )  அந்த  தங்கயை  காட்டுக்கு  அனுப்பி  புர்ட்சி  இளைஞனை  மயக்கி  அழிக்க  கட்ட்ளை  இடுகிறார்


 இது  ஒரு  பக்கம்  போய்க்கிட்டு இருக்கும்போது  அர்ண்மனை  ல  அப்பப்ப  ஒரு  பேய்  மாதிரி  உருவம்  மகாராணியை  மிரட்டிட்டு  இருக்கு . வேற  யார்  கண்ணுக்கும்  அது  தெரியல . மகாராணி  கிட்டே  நீ  செஞ்ச  தப்பை  எல்லாம்  ஒத்துக்க , இல்லை  உன்னை  விட  மாட்டேன்னு  மிரட்டுது 

 புரட்சி  இளைஞன்  பிடிபட்டாரா?  மகாராணி  அனுப்பிய  பெண்  என்ன  செய்தார் ? அந்த  மர்ம  யோகி  யார் ?  அந்தப்பேய்  யார்?  இவை  எல்லாம்  யூ  ட்யூப்ல  காண்க 


 கிட்டத்தட்ட 71  வருடங்களுக்கு  முன்  வந்த  படத்தை  இப்பவும்  பார்க்க  முடிகிறது  போர்  அடிக்கல  என்பது  ஆச்சரியம்  தான் 


புரட்சி  இளைஞராக  எம்  ஜி ஆர்  வழக்கம்  போல் அனாயசமான  நடிப்பு  வாள்  சண்டை  உண்டு .    ஒரு  ஆச்சரியமான  விஷயம்  நம்பியார்  எம் ஜிஆர்ன்  நண்பராக  வர்றார்

நாயகியின்  பேரு  மாதுரியாம்  நல்ல  தமிழ்  உச்சரிப்பு. அஞ்சலி  தேவி  நடிப்பு  அருமை 

 ஜாவர்  சீதாராமன்  எம்  ஜி ஆருடன்  இணைந்து  நடித்த  ஒரே   படம்  இதுதான்

 இந்தப்படத்தின்  கதை   வில்லியம்  ஷேக்ஸ்பியர்   எழுதிய  வெஞ்ச்ன்ஸ் , மெகாபத் , ராபின்  ஹூட்  நாவலின்  தழுவல்  இது 

 பாடலக்ள் 

1  அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்

2  இரவின் அமைதியிலே
தென்றல் இனிமையிலே

3  கண்ணின் கருமணியே கலாவதி
இசைசேர் காவியம் நீ,
கவிஞனும் நானே
\


 சபாஷ்  டைரக்டர்

1  அந்தப்பேய்  வரும்  காட்சிகள்  அந்தக்காலத்தில்  செம  திகிலா  இருந்துச்சாம்,  குழந்தைகள்  பார்த்தா  பயந்துக்குவாங்கனு  ஏ சர்ட்டிஃபிகேட்  குடுத்திருக்காங்க 

2   க்ளைமாக்ஸ்    ட்விஸ்ட்    நல்லாருந்தது 

3  பிளான்  பண்ணி  கேரக்டர்  டிசைன்  பண்ணாங்களா? எதேச்சையா  அமைஞ்சுதா  தெரில  அதுலயே  எம்  ஜி ஆர்  ஏழைகளுக்கு  உதவுபராக   மக்களை  வசீகரிப்பவராக  காட்டிக்கொண்டது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1    அந்தக்காலத்தில்  இளவரசர்கள்  குருகுலத்தில்  வாள்  பயிற்சி  வில்    பயிற்சி  பெறுவது  போல  நீச்சல்  பயிற்சி  இருக்காதா? ஒரு  மன்னருக்கு  நீச்சல்  தெரியாதா?  அகழி  யில் எல்லாம்  நீந்த  வேண்டி  இருக்குமே?  எதை  வைத்து    மன்னர்  ஏரியில்  மூழ்கினார்னு  சொல்றாங்க ?   (  ட்விஸ்ட்ல  ஒரு  சமாளிப்பு  இருக்கும் ஆனா  என்  கேள்வி  மன்னர்  நீரில்  மூழ்கினார்  என்ப்தை  எப்படி  நம்பறாங்க ? ) 

2  அந்தப்புரத்தில்  , சமையல்  அறையில்  அதிகாரம்  உள்ள  மகாராணி  உணவில்  விஷம்  வைத்து  மன்னரைக்கொல்வதுதானே  சேஃப்டி ?  பல்லி விழுந்தது  டைனோசர்  விழுந்ததுனு  கதை  விட்டுக்கலாம்.  அவுட்டோர்  கூட்டிட்டுப்போய்  கொல்வது  ரிஸ்க்  ஆச்சே? 

3   இறந்ததாக  கருதப்படும்  மன்னர்  20  வ்ருடங்களாக  அந்த  அரணமனைல  மாறு  வேஷத்துல  இருக்கார்னு  காட்றாங்க / அந்தாளு  லூசா?   எதுக்கு  தண்டமா  20  வருடங்கள்  வேஸ்ட்  பண்ணாரு ? ஆட்டக்காரி  என்ற  தனி  நபரை  எதிர்க்க  முடியாதா?  அதுக்கு  விளக்கம்  பட்த்தில்  இல்லை 


4   புரட்சி  இளைஞர்  படம்  போட்ட  45  வது  நிமிசத்தில்  அரண்மனைக்கே  வந்து  மகாராணியை  பணயமா  பிடிச்சுக்கறார் . அப்பவே  போட்டுத்தள்ளி  இருந்தா  படம்  அப்பவே  முடிஞ்சிருக்கும் . 10  பக்கத்துக்கு  வசனம்  பேசிட்டு  சரி  நான் போய்ட்டு  வரேன்  பாய்  பாய்  சொல்றாரு 


5  ஆட்டக்காரி  ஆகிய  மகாராணி  சொந்த்  அண்னனை யும் புருசனையும் கொன்னுட்டு யாருக்காக  வாழனும் ??  அதுல  என்ன  யூஸ்? அதிகார  போதை  தவிர ... 


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  ப்ழைய  படம்தானேனு  அசால்ட்டா  விட்றாதீங்க , இண்ட்ரெஸ்ட்டா   போகுது , பார்க்கலாம்  ரேட்டிங்  3 /.5 

மர்மயோகி திரைப்பட விளம்பரம்
இயக்கம்கே. ராம்நாத்
தயாரிப்புஜூபிடர் பிக்சர்ஸ் எம். சோமசுந்தரம்
திரைக்கதைஏ. எஸ். ஏ. சாமி
இசைசி. ஆர். சுப்பராமன்
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புஎம். ஜி. ஆர்
செருகளத்தூர் சாமா
நம்பியார்
எஸ். ஏ. நடராஜன்
ஜாவர் சீதாராமன்
அஞ்சலி தேவி
மாதுரி தேவி
பண்டரிபாய்
எம். எஸ். எஸ். பாக்கியம்
ஒளிப்பதிவுஎம்.மஸ்தான் \ டபிள்யூ.ஆர்.சுப்பாராவ்[ தந்திரக்காட்சிகள் மட்டும்].
படத்தொகுப்புஎம். ஏ. திருமுகம்
வெளியீடுபெப்ரவரி 21951
ஓட்டம்.
நீளம்15760 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்



Sunday, September 25, 2022

RAY(HINDI) 2021) - வெப் சீரிஸ் விமர்சனம் ( சத்யஜித்ரே சிறுகதைகள் 4) @ நெட் ஃபிளிக்ஸ்


 ஒரு  மணி  நேரம்  ஓடக்கூடிய 4  வெவ்வேறு  சிறுகதைகள்  , ஆக  மொத்தம்  4  ம்ணி  நேரம்.


1  FORGET ME NOT  - (  சைக்கோ  க்ரைம்  த்ரில்லர்) 

ஹீரோ  ஒரு  பெரிய  கம்ப்பெனில  பெரிய  பொறுப்பில்  இருக்கார். மல்ட்டி  டேலண்ட்டட்  பர்சன். ஒரே  சமயத்துல  3  வேலைகள்  செய்வாரு.  நானெல்லாம்  அதிக பட்சம்  3  வேலை  செய்யறதுன்னா  சாப்ட்டுட்டே  டி வி  பார்த்துட்டே   ரோட்ல  வேடிக்கை  பார்க்கறதோட  சரி ., ஆனா  ஹீரோ  அதுக்கும்  மேல  , இவருக்கு  அபாரமான  மெம்மரி  பவர் .  கம்பெனி  மேட்டர்ல  எல்லாம்   டீட்டெய்ல்சை  ஃபிங்கர்  டிப்ல  வெச்சிருக்கார் . எனக்கு  ஃபிங்கர்  டிப் ல  நகம் தான் இருக்கு  இவருக்கு  ஒரு  மனைவி .  ஒரு  குழந்தை  பிறக்கப்போகுது 


 இப்போதான்  இவருக்கு  ஒரு  சோதனை  வருது . ஒரு  பொண்ணு  அவர்  கிட்டே  வந்து  என்னை  ஞாபகம்  இருக்கா?  எல்லோரா , அஜந்தா  குகைல  நாம  மீட்  பண்ணோமே? எக்செட்ரா  எக்சட்ரா  அப்டினு  குண்டைத்தூக்கிப்போடுது . ஹீரோக்கு  ஞாபகமே இல்லை


 எனக்கெல்லாம்  +2  படிக்கறப்ப  மேத்ஸ் க்ரூப்  ரத்னம் , ஃபர்ஸ்ட் க்ரூப்  தமிழ்  மீடியம்  அங்கயற்கண்ணி , ஹிஸ்டரி  க்ரூப் மீனாட்சி , அக்கவுண்ட்ஸ்  க்ரூப்  தேன்மொழி  முதற்கொண்டு  எல்லாரையும்  ஞாபகம்  இருக்கு , ஆனா  பெரிய  அப்பாடக்கர்  மெம்மரி  பவர்  மேன்னு  சிலாகிக்கப்படும்  ஹீரோக்கு  அந்தப்பெண்ணை   நினைவில்லை 


 இந்த  சம்பவத்துக்குப்பின்  ஹீரோ  பல  விஷயங்களில்  தடுமாறுகிறார்.  இவ்ர்  வீட்டுக்குப்போறதுக்குப்பதிலா  பக்கத்து  அபார்ட்மெண்ட்  போய்  பெல்  அடிக்கிறார்


இதுக்குப்பின் இவர்  வாழ்க்கைல  நட்ந்த  திருப்பங்கள் , கம்ப்பெனில  கண்ட  வீழ்ச்சிகள் ,  ஒரு  சஸ்பென்ஸ்  ட்விஸ்ட்  நிகழ்வு  அப்டினு  படம்  போகுது 



2 BAHURUPERIYA  ( ஃபேண்ட்டசி  த்ரில்லர் )  -  ஹீரோ  ஒரு  மேக்கப்  மேன்,  பிரமாதமா    மேக்கப்  போடுவார் . புதிய  முகம்  பட்த்துல  ஹீரோ  பிளாஸ்டிக்  ச்ர்ஜரி பண்ணி  தன்  முகத்தை  மாத்திக்கறது  மாதிரி ,  முகம்  படத்துல  நாசர்  தன்  உருவத்தை  மாத்திக்கற  மாதிரி   இவர்  த்ன்  மேக்கப்பால  வேற  ஒரு  உருவமா  மாறி கலக்குவார் 


 ஒரு  டைம்  இவரு  ஒரு  சாமியாரைப்பற்றிக்கேள்விப்பட்றார் .  சாமியார்னா  நித்யானந்தா , பிரேமானந்தா  மாதிரி  டுபாக்கூர்  இல்ல , சக்தி  வாய்ந்த  சாமியார் . அவர்  தன்னைத்தேடி  வரும்  பக்தர்களின்  குறைகளை  தீர்த்து  வைப்பதா  ஃபேம்ஸ்  ஆனவர்

  ஹீரோ  வேற  ஒரு  முகம்  வேற  ஒரு  பேரு  உடன்  சாமியாரை  ச்ந்தித்து  சாமி  என்  பேரு  இது , எனக்கு  என்  குறைகள்  எப்போ  சரி  ஆகும? அப்டினு     கேட்க  சாமியாருக்கு  ஹீரோ  பொய்  முகம்  பொய் பேருடன்  வந்தது  தெரிஞ்சிடுது 


 உன்  பேரென்னபா?  என  திரும்ப  திரும்ப  கேட்கறார். ஹீரோ  அச்ராம  அதான்  இப்போ  சொன்னேனே? என  பிடிவாதமா  இருக்க  அந்த  பொய்  முகமே  பர்மணண்ட்டா  மாறிடுது.    ஹீரோ  ஜெர்க்  ஆகறார். இதுக்குப்பின்  அவர்  என்ன  முடிவெடுத்தார்  என்பது  கதை 


 வின் சி  டா  எனும்  கன்னட  த்ரில்லர்  படம்  பார்த்திருப்பீங்க.  செம  ஹிட்  அது  ., இந்தக்கதையின்  டெவல்ப்டு  ஸ்க்ரீன்ப்ளே  தான்  அது . 

 கொஞ்சம்  ஸ்லோ வாதான்  போகுது


 கடைசி  வரை டைட்டிலில்  வரும்  ப்ரியாவைக்காட்டவே  இல்லை 


3  HUNGAMA HAI KYON BARPA  மெலோடிராமா

 ஹீரோ  ஒரு  ப்கழ் பெற்ற கஜ்ல்  பாடகர் ,  கஜோலை  மட்டுமே  புகழ்ந்து  பாடுபவ்ர்தான் கஜல்  பாடகர்னு  ஒரு  மொக்கை  ஜோக்  எழுதி  தினமலர்    வாரமலர்ல 1000  ரூபா  சன்மானம்  வாங்குன  ஞாபகம்    வருது  ( இப்படி  கேப்  கிடைக்கும்போதெல்லாம்  செல்ஃப்  ப்ரமோ  பண்ணிக்கனும்)


ஹீரொவுக்கு  ஒரு  வித்தியாசமான  வியாதி  இருக்கு ., க்ளப்டோமேனியா .  அடிக்க்டி  நைட்  கிளப்க்கு  போய்  டான்ஸ்  பார்க்கற  மேனியானு  நான்  சின்னப்பையனா  இருக்கும்போது  நினைச்சிருந்தேன். ஆனா  வச்தி  இருந்தும்  சும்மா   ஆர்வத்துல  உன்னை  ஏமாத்திட்டேன்  பாருனு  காட்டிக்க  சின்ன்ச்சின்னப்பொருளை  திருடுவதுதான்  க்ளப்டோ மேனியா


 ஒரு  டைம்  ரயில்ல  ட்ராவல்  பண்ணும்போது  எதிர்  சீட்ல  இருப்பவர். அவர்  பெட்டில  இருந்து  ஒரு  அதிர்ஷ்ட  கடிகாரம்  எடுத்துக்காட்றார். இது  தன்  வாழ்வில்  வந்த  பின்  தான்  தனக்கு  அதிர்ஷட  லட்சுமி  சந்தான  லட்சுமி , அங்கு ல்ட்சுமி   என  லட்சுமியின்  அனைத்து  அவதாரங்களும்  வீட்டுக்கு  வந்ததா  நம்பறாராம்


 அவ்ரு  பாத்ரூம்  போன  கேப்ல  ஹீரோ  அதை  ஆட்டையைப்போட்றாரு

\

  சில  வருடங்கள்  க்ழித்து  மீண்டும்  அவரை  மீட்  பண்றாரு. அவருக்கு  ஹீரோவை  அடையாளம்  தெரியல  . ஆனா  ஹீரோ  தன்னைத்தானே  இண்ட்ரோ  பண்ணி  தான்  திருடுன  மேட்டரை  சொல்றாரு


 க்ளைமாக்ஸ்  என்ன  ஆச்சு  ?  என்பது  சஸ்பென்ஸ் 


 இது  நான்  எட்டாம்  கிளாஸ்  படிக்கும்போது  நீதிக்கதைகள்  , சிறுகதைத்திரட்டு  ல  படிச்ச  மாதிரி   ஃபீலிங்,, ஆனா  ரே  அட்லீயா  இருக்க  மாட்டாருனு  நம்புவோம்

 ரெண்டே  ரெண்டு  ஆண்  கேரக்டர்கள்  உள்ள  ஒரு  கதையை  ஒரு  மணி  நேரம்  சுவராஸ்யமா  கொண்டு  போனது  ஆச்சரியம்


 நீங்க  நல்லா  நோட்  பண்ணிப்பார்த்தா  சிறுகதை, நாவல்  திரைப்படம்  எல்லாத்துலயும்  ஒரு  பெண்    கேரக்டரால்தான்  சுவராஸ்யம்  வரும்  என்பதை  க்வனிக்கலாம், ஆனா  இந்தக்கதை  ஒரு  விதி  விலக்கு 



4 SPOT LIGHT  ஜாலி  எண்ட்டஎர்டெய்ன்,மெண்ட்- ஹீரோ  ஒரு  சினிமாபட  ஹீரோ . ஏகபப்ட்ட  புகழ். அவர்  ஒரு  ஸ்டார்  ஹோட்டல்ல  தங்கறார். மடோனா  ரூம்னு  ஒரு  ஸ்பெஷல்  ரூம்  இருக்கு அதுல  தான்  புக்  பண்ணி  இருக்கார் 


 அப்போ  ஒரு  லேடி  சாமியார்  அந்த  ஹோட்டலுக்கு  வர்றார். அதுவரை  ஹீரோவை  பிரமிப்பா  பார்த்துட்டு  இருந்தவங்க  அபப்டியே  யு  டர்ன்  அடிச்சு  அந்த  லேடி  சாமியாரை[ப்பத்தி  சிலாகிக்கறாங்க


 இவரை  யாரும்  கண்டுக்கவே  இல்லை . இது  ஹீரோவின் ஈகோக்கு  கிடைச்ச  பெரிய  அடி அவருக்கு  அலாட்  ஆன  ரூமும்  லேடி  சாமியாருக்குப்போய்டுது 


 இப்போ  ஹீரோ  சாமியாரினியை  மீட்  பண்ண  நினைக்கறாரு . இதுக்குப்பின்  நிக்ழும்   திருப்பங்கள்  தான்  கதை 


 சி பி  எஸ் ஃபைனல்  கமெண்ட் - மேலே  கண்ட  4  க்தைல  முதல்  கதையும்  கடைசிக்கதையும்  கமர்ஷியலா  போச்சு .  2  வது  கதை  ஆர்ட்  ஃபிலிம்  போல்  ஸ்லோவா  போச்சு  3 வது  கதை  நீதி  போதனைக்கதையா  இருந்தாலும்  நல்லாதான்  இருக்கு ஓவராலா  பார்த்தா  4  கதைகளுமே 50  மார்க்குக்கு  மேல  தரலாம் ஒர்த்  டூ  வாட்ச் 

நெட்  ஃபிளிக்ஸ்  என்பதால் அடல்ட்  கண்ட்டென்ட்    இருக்குமோ?னு  பயப்படத்தேவை  இல்லை   ஃபேமிலியோட  பார்க்கத்தகுந்த  படமே 

ரேட்டிங்  2.75 / 5 

Saturday, September 24, 2022

மற்றவை நேரில் (1980) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( முக்”கேன”க்கள்ளக்காதல் கதை )

இயக்குநர்  மவுலியை  நடிகரா  பலருக்கும்  பிடிச்சிருக்கும், ஆனா  அவர்  காமெடில , டயலாக்ஸ் ல  கலக்குவார். மவுலியின்  இயக்கத்தில்  பி சி  ஸ்ரீராம்  ஒளிப்பதிவில்  ஒரு  படம்னு  சொன்னதும்  எனக்கு ஆச்சரியம்  ஆகிடுச்சு. இது  கேள்விப்ப்டாத  காம்பினேஷனா  இருக்கே? பார்த்துடுவோம்னு  களம்  -இறங்குனேன். ஆனா  டைட்டில்ல  வி  பிரபாகரன்  ஒளிப்பதிவுனு தான்  வருது 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோயின் வாய்  பேச  முடியாத  காது கேட்காத  நபர். அவருக்கு  கார்டியன்  அவரோட  அக்கா. . மேரேஜ்  ஆகியும்  கணவரை  விட்டுப்பிரிந்து  வாழ்கிறார். காரண்ம்   கணவர்  ம்னைவி  இல்லாத  டைமில்  மச்சினியை பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாக்கிடறார். அந்த  அதிர்ச்சில  தான்  ஹீரோயினுக்கு  பேச  முடியாம   ஆகிடுது . இதை    சரி  பண்ணிடலாம்னு  டாக்டர்  சொல்றாங்க 


ஹீரோ ஒரு  வெட்டாஃபீஸ். வேலை  எதும்  கிடைக்கலை  . அலைஞ்சுட்டு  இருக்காரு . நடைமுறை  வாழ்க்கைல  ஒழுக்கமா  வேலைக்கு  போறவனையே  இந்தப்பொண்ணுங்க  கண்டுக்கற்தில்லை .,, ஆனா  சினிமாவில்  மட்டும்  தான்  பொறுக்கி , ரவுடி   , கஞ்சா  கேஸ் ,  மொள்ள  மாரி , வெட்டியா  ஊரைச்சுத்தறவனை  லவ்  பணறாங்க 


 ஹீரோயின்  ஒரு  தலையா  ஹீரோவை  லவ்  பண்றது  தறுதலையா  சுத்தற  ஹீரோவுக்கு  தெரியாது 


இப்போ  அந்த  ஊருக்கு  ஒரு  மேரேஜ்  ஆன  தம்பதி  வருது  (  டேய்  , மேரேஜ்  ஆனாத்தான்  தம்பதி )  சோப்  பவுடர்  கம்பெனி  ஆரம்பிக்கறாங்க , ஹீரோவுக்கு  அதுல  வேலை  கிடைக்குது 


அந்த  ஓனர்  ஓனரம்மா  இருவர்ல  ஓனர்  டம்மி . ஓனர்  அம்மா தான்  டாமினேசன் 


ஓனரம்மா  அடிக்கடி  ஹீரோ  கிட்டே  தன்  புருசனைப்பத்திக்குறை  சொல்லுது .  நீ  வ்ந்த  பின்  தான்  என் வாழ்க்கைல  வசந்தம்  வந்ததுங்குது 


 ஹீரோ  இதை  அவனோட  ஃபிரண்ட்  கிட்டே  சொல்றான், அவன்  உசுப்பேத்தி  விடறான்.  முதலாளிய்ம்மா  உன்னை  லவ்  பண்ணுது  போல,  நீ  ப்ரப்போஸ்  பண்ணுங்கறான் 


20  வய்சே  ஆன  ஹீரோ 35 +  வயசான  ஆண்ட்டியை  ப்ரப்போஸ்  பண்ணாரா? இல்லையா?  யார்  கூட  ஜோடி  சேர்ந்தார்  என்பதை  திரையில்  காண்க


  இது  பத்தாதுனு  ஸ்கூல்  லவ்  ஜோடி  ஒண்ணு  குறுக்க  மடுக்க  ஓடிட்டு  இருக்கு . அந்த  கேனங்க  யாரு? மெயின்  கதைக்கும்  அவங்களுக்கும்  என்ன  சம்பந்தம்னு  தெரியல 


  ஹீரோவா  புதுமுகம்  பாஸ்கர் .   இவரைப்பார்த்த  பின்  தான்  பாஸ்கர்  ஒருய்  ராஸ்கல்னு  டைட்டில்  வெச்சு  ஒரு  படம்  ரெடி  பண்ணி  இருப்பாங்க  போல 


ஹீரோயினா  புதுமுகம்  ராணி பத்மினி .  வாய்  பேச  முடியாத  கேரக்டர்  என்பதால்  வசனம்  பேசற  வேலை  இல்லை 

ஓனரா  விஜயன் . கண்ணியமான  நடிப்பு . அவர்  ம்னைவியா  ஜெயதேவி . கச்சிதமான  நடிப்பு 


 இசை  ஷ்யாம் .

நினைத்திருந்தது  நடந்து  விட்டது 

 நினைத்த  மந்திரம்  பலித்து  விட்டது  

இன்று  ஆடி மாதக்காற்று  வந்து  மோதும்

நம்மைக்கூடி  நின்று  மேகம்

செம  ஹிட்  மெலோடி  சாங்.படம் ப்டம்  பார்க்க  விருப்பம்  இல்லாதவங்க  கூட  இந்த  பாட்டை  மட்டும்  கேளுங்க  யு  ட்யூப்ல  கிடைக்குது படத்துல 1.38 டியுரேசன்ல  பாட்டு 







 ரசித்த  வசனங்கள்


1  எக்ஸ்க்யூஸ்மீ, செப்பல்  அறுந்துடுச்சு..  பின்  இருக்குமா?


 நான்  எதுக்கும்  பின்  வாங்கறதில்லை 


2  மிஸ்! நான்  ரொம்ப  கஷ்டத்துல  இருக்கேன்,  தனியாதான்  இருக்கேன், நிங்க தான்  ஹெல்ப்  பண்ணனும்.. 


 சரி  என்ன  ஹெல்ப் ?


 நீங்க  என்னை  லவ்  பண்ணனும்


 ஓ  எத்தனைநாளைக்கு?


 உங்களுக்கு  ஒரு  இடத்துல  எனக்கு ஒரு  இடத்துல  கல்யாணம்  ஆகும்  வரை


3  என்ன  சார்?  பொம்ப்ளை  கேட்க  வேண்டிய  கேள்வி  எல்லாம்  நீங்க  கேட்கறீங்க, ஆம்பளை  கேட்க  வேண்டிய  கேள்வி  எல்லாம்  அவங்க  கேட்கறாங்க ?


  அவங்களுக்கு  உயரம்  கம்மி,  இல்லைன்னா  அவங்க  தான்  எனக்கு  தாலி  கட்டி இருப்பாங்க 


4  ஃபேனுக்கு  அடில  டை  கட்டிட்டு  ஒயிட்  காலர்  ஜாப்  வேணும்னு  எல்லாரும்  நினைக்கறதாலதான்  நாட்டில்  வேலை  இல்லாத்திண்டாட்டம்  பெருகிடுது 


5 சேமிப்பது  கூட  ஒரு  சம்பாதிப்புதான்


6  சுமை  கூலி  மிச்சமாகிடும்னு  ஒருத்தன்  சுடுகாட்ல  வீடு  கட்டினானாம்


7   மரியாதை  தர்றது  நல்ல  பழக்கம், ஒருத்தர்  கிட்டே  டைம் என்ன?னு  கேட்டா  7னு  சொல்வாரு ., அதே  சார்  டைம் என்ன?னு  மரியாதையா  கேட்டா  அக்குரேட்  டைம் 6 57னு  சொல்வார் 


8  ஆடை  என்பது  நம்ம  சவுகர்யத்துக்காக  போடறது 


 புருசன்  தான்  பாத்துட்டானேனு  யாரும்  நடுக்கூடத்துல  குளிக்கறது  இல்லை \


9  ஒரு  முறை  உணர்ச்சிவசப்பட்டு  தப்பு  ப்ண்ணிட்டேன். அது   தப்பா?


என்  புருசன்  வித்தியாசமானவன் , உணர்ச்சி வசப்பட்டா  தன்  சம்சாரம்  அவன்  கண்ணுக்கு தெரியாது , ஊர்ல  இருக்கற  பொண்ணுங்க  தான்  தெரியும் 


10   மேடம், உங்க  வீட்டுக்காரர்  வெளியூர்  போய்  இருக்காரே? லெட்டர்  போடுவாரா?


 அவருக்கு  அதெல்லாம்  தெரியாதுங்க , வெளியூர்  போனா  லெட்ட்ர்  போடனும், வெளியூர்ல  இருந்து  வீட்டுக்கு  வர்றப்போ  பொண்டாட்டிக்கு  எதுனா  வாங்க்ட்டுப்போகனும்..  அவர்  த்னி  கேரக்டர்


11  மறுபடி  எப்போ  இந்த  ஊருக்கு  வருவீங்க ?


 பையனுக்கு  மொட்டை  போட  இங்கே  வந்துதானே  ஆகனும் ?


 பிறக்கப்போறது  பையன் தான்னு  எப்படி  சொல்றீங்க ?

 சபாஷ்  டைரக்டர் ( மவுலி)


 1  பொண்டாட்டிஒரு  ஆளை  இண்ட்டர்வ்யூ  எடுக்கறா. புருசன்  அவளுக்குப்பின்னால  நின்னு  சில  க்ளூ  கொடுக்கறான், இந்த  சீன்  ர்சிக்கற  மாதிரி  அமைஞ்சு இருந்த்து 


2  புருசனை  முதலாளி மேடம் டைவர்ஸ்  பண்ண  வக்கீல்  ஆஃபீஸ்க்கு  வந்த ஹீரோ  அங்கே  அதே  மேடத்தின்  புருசன்  வேற  விஷயமா  வக்கீலைப்பார்க்க  வரும்போது  பம்முவது   செம  காமெடி 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1    ஒரு  சீன்ல  ஸ்டூடண்ட்ஸ்  டீச்சர்  கிட்டே   ஃபீஸ்  தர்றாங்க . ம்றந்துடாதீங்க  டீச்சர்னு  சொல்றாங்க . ஏன்? நோட்ல  நோட்  பண்ண  மாட்டாங்களா? அனாமத்து  டொனேசன்  கலெக்சனா  அது ?


2   அவளோட  ராவுகள் அப்டினு ஒரு  மாதிரியான  மலையாளப்படத்துக்கு  ஸ்கூல்  ஸ்டூடண்ட்ஸ் 2  பேரு  போறாங்க. பையனுக்கு  மீசையே  இல்லை .   18  வயசு  ஆள்  இல்லைனு  உள்ளே  விடலை , ஆனா  அந்தப்பொண்ணை  விட்டுட்டாங்க . எந்த  ஊர்ல  1980 ல  அந்த  மாதிரி  படத்துக்கு  லேடீசை  அலோ  பண்ணுனாங்க ? ( 2005 க்குப்பின்  இப்போ  வரை  நிலை  மாறிடுச்சு )


3  உலகத்துல  எந்த  மாங்கா  மடையனாவது  தன்  சொந்த  சம்சாரம்  சினிமாக்கு  கூப்பிடும்போது  எனக்கு  இண்ட்ரஸ்ட்  இல்லை ,   நீ  வேணா   இவன்  கூட  போய்ட்டுவா  அப்டினு  தன்  கம்பெனில  வேலை  செய்யற  ஆள்  கூட  அனுப்ப  ரெடி  ஆவானா? 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - நல்ல  ஒளிப்ப்திவு , விஜ்யன் -ஜெயதேவி  நடிப்பு , ஒரே  ஒரு  பாட்டு பார்க்கலாம்னா  பாருங்க , யூ  ட்யூப்ல  கிடைக்குது , ரேட்டிங்  2 / 5 . இவர்கள்  வித்தியாசமானவர்கள்  எனும்  படம்  தான்  இயக்குநர்  மவுலியின்  முதல்  படம் . இது  இரண்டாவது  படம். கடைசி  2  படங்கள்  பம்மல்  கே  சம்பந்தம் , நள  தமயந்தி 


மற்றவை நேரில்
இயக்கம்மௌலி
தயாரிப்புடி. ஆர். எம். சுகுமாரன்
பொன்மலர் ஆர்ட்ஸ்
தமிழரசி
இசைஷியாம்
நடிப்புவிஜயன்
ஜெயதேவி
வெளியீடுஅக்டோபர் 31980
நீளம்3636 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்