Wednesday, January 20, 2016

AALROOPANGAL - சினிமா விமர்சனம் 38+ ( மலையாளம்)

ஓப்பனிங்  சீன்ல பாலாவின் நான் கடவுள் ரேஞ்சுக்கு  ஒரு பிச்சைக்காரனைக்காட்றாங்க.ஒரு வயசான ஆளு கம்யூனிசம் பேசறாரு.நாட்டில் நடக்கும் தேவை அற்ற வேலை நிறுத்தங்கள் பொது மக்களின் வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்குது? என்பது மாதிரி புரட்சிகரமான வசனங்கள் ஒரு பக்கம் ஓடிட்டு இருக்கு.அப்புறம் பார்த்தா அந்த வயசான பிச்சைக்காரன் தான் ஹீரோவாம், எண்டே பகவதி  அம்மே,எண்டே மதுர அம்மே , எண்டே தெறி அம்மே.இதுல அந்த பிச்சைக்காரனுக்கு ஒரு ஃபிளாஸ்பேக். வேற.ஃபிளாஸ்பேக்ல ஒரு கில்மாக்கதை.


இதுவரைக்கும் ஏனோ தானோனு படிச்ட்டு இருந்த நெட் தமிழன் எப்படி நிமிர்ந்து உட்கார்ந்தானோ அதே மாதிரி தியேட்டர்ல ஆடியன்ஸ் வெச்ச கண் வாங்காம திரையைப்பார்க்கறான். இந்த லட்சணத்துல  இதுக்கு லேடீஸ் ஆடியன்ஸ் வேற.


கையேந்திபவன் வெச்சு காலத்தை ஓட்டிட்டு இருக்காரு ஹீரோ ( அந்த பிச்சைக்காரன் தான் )அவருக்கு ஒரு சம்சாரம் , 2 குழந்தைங்க. 2 பேரும்  ஸ்கூலுக்குப்போறவங்க. சம்சாரம்  விட்ல தனியாதான் இருக்கு. ஹீரோ கிட்டே கேட்குது. நானும் உங்க கூட கடைக்கு வந்து கூட மாட உதவி செய்யட்டுமா?ன்னு


அதுக்கு ஹீரோ ஆரம்பத்துல ஒத்துக்கலை. கண்ட நாய் எல்லாம் உன்னை ரசிப்பான். நீ வீட்டோடயே இருங்கறார். ஒரு நாள் எதேச்சையா சம்சாரத்த கடைக்குக்கூட்டிட்டுப்போறாரு. அன்னைக்குன்னு பார்த்து செம சேல்ஸ்.ரோட்டுல 4 கையேந்தி பவன் இருந்தா எதுல  லேடி இருக்கோ அதுல போய் சாப்டற கேடிங்க தானே நாட்ல அதிகம்?




 அன்னைக்கு நல்ல சேல்ஸ்னு அடுத்த நாளும் சம்சாரம் கடைக்கு வருது. அப்போ பார்த்து கடை வேலை நிறுத்தம் ஏதோ காலணாப்பொறாத காரணத்துக்காக ஸ்ட்ரைக். சம்சாரம் முதல்ல ஆட்டோல ஏறிப்போய்டுது. கடையை எடுத்து வெச்ட்டு வர்றதுக்குள் ஹீரோவை கட்சி ஆளுங்க அடிச்சு கடையை நொறுக்கிடறாங்க


 ஹீரோ ஹாஸ்பிடல்ல. சம்பாத்யத்துக்கு வழி இல்லை. ஹீரோவோட ஃபிரண்ட் தான் வீட்டுக்குத்தேவையான சாமானங்கள் எல்லாம் வாங்கிட்டு வர்றாரு. இப்டி  ரெண்டு மூணு வாரம் ஓடிடுது. ஒரு நாள் எதார்த்தமா ஹீரோயின் சாயங்காலம் பாத்ரூம்ல குளிச்ட்டு ( பாத்ரூம்ல குளிக்காம நடு ஹால்லயா குளிப்பாங்கம் வார்த்தை விரயம் எதுக்கு?) ஹாலுக்கு வரும்போது ஹீரோவோட  ஃபிரண்ட் கரெக்டா வர்றாரு


ஹீரோயினுக்கும், வில்லனுக்கும் கசமுசா ஆகிடுது. சரி ஒரு டைம் தெரியாம ஆகிடுச்சுன்னு விட்டிருக்கலாம். என்னமோ தியேட்ட்ர்ல படம் ஓட்ற மாதிரி டெய்லி வில்லன் ஹீரோ வீட்டுக்கே வந்து ஹீரோயின் கூட  பல்லாங்குழி விளையாடிட்டுப்போறாரு


 ஹீரோவுக்கு இது தெரிஞ்சதும் என்ன நடக்குது  என்பதே மிச்ச மீதிக்கதை

 ஹீரோவா, வில்லனா வர்றவங்களைப்பத்தி யார் கவலைப்பட்டா? நாம ஹீரோயினைப்பார்ப்போம்


ஹீரோயின் மாயா விஸ்வநாத்.  செம கட்டைன்னு சொல்ல முடியாட்டாலும்  மீடியம் கட்டைன்னு சொல்லலாம். அந்த  குளியல் சீன் முடிச்ட்டு வெளில வர்ற சீன்ல நல்லா திறமை காட்டி நடிச்சிருக்காப்ல ...

ஹீரோவுக்கு 2 பொண்ணுங்கள்ல ஒரு பொண்ணு  நல்லாருக்கு

மற்றபடி மனசுல யாரும் நிக்கலை, உக்காரலை


இயக்குநர் சரியான தத்தி போல, ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ்



மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  போராட்டம் நடத்தறது  எப்பவும் சாதா ஜனங்களுக்காகத்தான், ஆனா அந்த மக்களுக்கே அந்தப்போராட்டம் இடைஞ்சலா இருந்தா என்ன பண்ண? 



ஒவ்வொரு அரசாங்கமும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்ததும் முதல் வேலையா நட்டக்கணக்கு தான் காட்டும்  



3  தமிழன் டூ கேரளன்=எங்க  நாட்டில் எப்போதும் வேலை பாட்டுக்கு நடந்துட்டே இருக்கும், உங்க நாட்டில் அர்த்தால்தான் அனுதினமும் நடக்கு  


உடல்நிலை சரிஇல்லாமல் , கவனிக்கஆளில்லாமல் படுக்கையில் வீழ்ந்து கிடக்கும்போதுதான் மனிதனுக்கு மிதமிஞ்சிய மனோபலம் தேவைப்படுது  


காசு சம்பாதிப்பதுதான் இன்றைய மனிதனின் முக்கியமான சந்தோஷம் 


அம்மிக்கல்லில் அரைச்ச பதார்த்தம் சமையலுக்கு தனி ருசி கூட்டும், அரைச்சது அழகிய பெண் எனில் இன்னும் விசேஷம் 


7  வாழ்வதற்காக நாம் எல்லாரும் பல வேஷங்கள் போட வேண்டியதிருக்கு ,நெருக்கமானவங்க கிட்டேக்கூட 


சமையல் ருசி நல்லாருந்தாப்போதும் , ஹோட்டல், மெஸ் எங்கே இருந்தாலும் ஜனங்க தேடி வருவாங்க 



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  கில்மாப்படம்னு கேவலமா யாரும் சொல்லிடக்குடாதுன்னு கம்யூனிச வசனங்கள் எல்லாம் சேர்த்து இது ஒரு நல்ல படம்கற மாதிரி முலாம் பூசுனது



2  ஹீரோயினை எதார்த்தமா பதார்த்தமா படத்துல யூஸ் பண்ணிகிட்டது




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 பிச்சைக்காரனை நாங்க பார்த்ததே இல்லையா? எதுக்கு க்ளோசப்ல அந்த தாடி மூஞ்சியை 10 நிமிசம் காட்டிட்டே இருக்கீங்க? பரிதாபம்  வர்லை ., லைட்டா வாமிட்டிங்  ஃபீலிங்



2  ஓப்பனிங்ல ஹீரோ ஒரு கடை வாசல்ல நைட் படுத்து இருக்காரு. அடுத்த நாள் காலைல  கடை  ஓனர் வரும்வரை தூங்கிட்டே இருக்காரு. காலைல 8 மணிக்குக்கூடவா ஒருத்தன் எந்திரிக்க மாட்டான்?கடை ஓனர் வந்து  ஹீரோவைத்திட்டுவது , அடிப்பது  இதெல்லாம் அனுதாப  ஓட்டு வாங்கவா?


3  கதைப்படி  ஹீரோயின்  தூரமா ஆனதால  சம்பவம் நடந்த அன்னைக்கு குளிச்ட்டு வருது. அப்போ  வில்லன் வந்ததும் எப்டி சம்பவம் நடக்கும்? அதான் ஹீரோயின் தூரமா இருக்கே?


4 எந்த  சம்சாரமாவது  வீட்ல  ஹால்ல புருசனை வெச்ட்டே    கொல்லைப்பக்கம் கள்ளக்காதலன் கூட  கில்மா பண்ணுமா? இதுல 2 பெண் குழந்தைகள் வேற. திடீர்னு யாராவது வந்துட்டா கேவலம்னு  நினைக்காதா?



5 ஹீரோயின் வில்ல்ன் கூட கில்மாப்பண்றதை ஹீரோ பார்த்துடறாரு. அப்பவே ஏதாவது  முடிவு எடுக்கனும், அதை விட்டுட்டு அடுத்த நாள் கண்ணை மூடிக்கிட்டு தூங்குனா  மாதிரி நடிப்பாராம்,  2வது  டைம் ஹீரோயின் வில்லன் கூட தப்பு பண்றதையும்  வேடிக்கை பார்ப்பாரம். என்ன கேவலமான ஃபேமிலியா இருக்கு ?


6 எந்தப்பொண்ணும்  குழந்தைகளை அம்போன்னு விட்டுட்டு கள்ளக்காதலன் கூட ஓடாது. அப்டீயே ஓடுனாலும் 10 நாள் கழிச்சு வந்து குழந்தையை நான் கூட்டிட்டுப்போறேன்னு ஊர் முன் சத்தம் போடாது. அதுக்குத்தானே  கேவலம்?




சி  பி  கமெண்ட் = AALROOPANGAL - கம்யூனிச போர்வையில் ஒரு கிளுகிளு மலையாளப்படம்,மாயா விஸ்வநாத் ரசிகர்கள் பார்க்கலாம்- ரேட்டிங் = 1.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - இந்தப்படத்துக்கு எல்லாம் விகடன் மார்க் போட்டா அவ்ளவ் தான். ஒரு பேச்சுக்கு வெச்சுக்க்கிட்டா வேணா 35



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  = சுமார்



 ரேட்டிங் = 1.5 / 5




0 comments: