Saturday, April 18, 2026

53 SUNDAYS (2026)- ஸ்பானிஷ்/ஆங்கிலம்/தமிழ்-சினிமா விமர்சனம் (மெலோ டிராமா)@நெட் பிளிக்ஸ்



53 SUNDAYS (2026)- ஸ்பானிஷ்/ஆங்கிலம்/தமிழ்-சினிமா விமர்சனம் 

செஸ்க் கே என்பவர் எழுதிய 53 SUNDAYS என்ற ஸ்பானிஷ் நாவலைத்தழுவி எழுதப்பட்ட திரைக்கதை இது.நாவல் ஆசிரியரும் இவரே!படத்தின் திரைக்கதை ஆசிரியர்+இயக்குநர்  கூட இவர் தான்.

இது ஒரு லோ பட்ஜெட் படம்.ஒரே ஒரு வீடு ,நான்கே கேரக்டர்கள்  வைத்துத்தயாரிக்கப்பட்ட படம்.அமரர் விசு அவர்கள்  நெட் பிளிக்ஸ் கம்பெனிக்கு ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அதே போன்ற ஒரு குடும்பப்படம்.க்ளைமாக்சில் கண் கலங்க வைத்து விடுவார்கள்.

இந்தப்படம் ஆண்களுக்குப்பிடிக்காது.பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.நெட்பிளிக்சில் தமிழ் டப்பிங்கில் 27/3/2026 முதல் காணக்கிடைக்கிறது.

--                              


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு குடும்பத்தில் 86 வயதான அப்பா தனிமையில் இருக்கிறார்.அவருக்கு 3 வாரிசுகள்.மூவரும் தனித்தனியே வசிக்கிறார்கள்.

முதல் மகன் விக்டர் ஒரு பணக்கார வீட்டில் பெண்ணைத்திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளை ஆக இருப்பவன்.அவனை மாமனார் வீட்டில் யாரும் மதிப்பதில்லை.மனைவிக்கு எடுபுடி வேலை செய்யும் வேலைக்காரனாக ,மாமனாருக்கு டிரைவராக இருக்கிறான்.ஆனால் வெளியில் தான் வசதியாக இருப்பதாகக்காட்டிக்கொள்வான்.

இரண்டாவதாகப்பிறந்த மகள் நடாலியா வுக்கு அமைந்த கணவன் சரி இல்லை.அவனைப்பிரிந்து தனியாக வாழ்கிறாள்.வேலைக்குப்போவதால் செலவுக்குப்பிரச்சனை இல்லை.


மூன்றாவது மகன்  ஜூலியன் டி வி விளம்பரப்படங்களில் நடிக்கிறான்.பெரிய வருமானம் இல்லை.மனைவி வேலைக்குப்போவதால் வண்டி ஓடுகிறது

மூன்றாவது மகனின் மனைவி கரோல்  அம்மா,அப்பா இல்லாத அனாதை என்பதால் குடும்பத்துடன் நெருக்கமாகப்பழக விரும்புபவள்.


வயதான அப்பாவைத்தனி வீட்டில் தங்க வைத்து ஆள் வைத்துப்பராமரிக்கிறார்கள்.இதற்கு ஆகும் செலவை மூத்த மகனும்,மகளும் தான் கொடுக்கிறார்கள்.கடைசி மகன் வறுமையில் இருப்பதால் அவனிடம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.


அப்பா வசிக்கும் அபார்ட்மெண்ட்டில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் அவர் மேல் புகார் கூறுகிறார்கள்.அப்பா அவருக்கு இருக்கும் ஒரு பிரச்சனையை சொல்லி அதை சரி செய்ய மூவரையும் அழைக்கிறார்.அவர் மேல் பக்கத்து வீட்டுக்காரர்கள் வைத்த புகார் என்ன? அவருக்கு இருக்கும் பிரச்சனை?என்ன?இதை எப்படி சரி செய்வது?யார் பொறுப்பேற்பது என்பது பற்றிப்பேச கடைசி மகன் வீட்டில் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள்.அவர்கள் பேசுவதுதான் மொத்தப்படமுமே!

முதல் மகன் விக்டர் ஆக  ஜேவியர் கட்டிரேஜ் குறும்புத்தனமாகப்பேசி மனம் கவர்கிறார்.தான் எழுதிய நாவலைப்பற்றிய கருத்துக்களைத்தன் தங்கையிடமும்,தம்பியிடமும் அறிந்து கொள்ள அவர் காட்டும் ஆர்வம் அருமை.


இரண்டாவது மகளாக ,நடாலியாவாக கார்மென் மேக்கி சிரித்த முகத்துடன் தம்பி மனைவியுடன் பேசுவது சிறப்பு.உன் நாவலை எனக்கு சுத்தமாகப்பிடிக்கவில்லை என அண்ணனிடம் ஓப்பனாகப்பேசுவது கலகலப்பு.


கடைசி மகன் ஜூலியன் ஆக ஜேவியர் கமரா கச்சிதமான நடிப்பு.அதிகம் படிக்காத இவர் அண்ணனின் நாவலை ஆர்வமுடன் இரு முறை வாசித்ததாகக்கூறும் காட்சி மனதில் நிற்கிறது.


கடைசி மகனின் மனைவி கரோல்  ஆக அலெக்சாண்ட்ரா ஜிமேனேஜ் கலகலப்பாக பழகும் சுபாவம் உள்ளவராக நம் மனதில் இடம் பிடிக்கிறார்.இவர் ஆடியன்சைப்பார்த்துக்கதை சொல்வது போல் படம் ஆரம்பித்தாலும் பின் நால்வரும் உரையாடும் டிராமா மாதிரி போகிறது.

ஒளிப்பதிவு,பின்னணி இசை  போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் எல்லாம் கச்சிதம்.ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும் ஒளிப்பதிவாளருக்கு சவாலான வேலை தான்.


தான் எழுதிய நாவலைத்தழுவித்திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் செஸ்க் கே.


சபாஷ்  டைரக்டர்

1  படத்தின் மொத்த ரன்னிங்க் டைம் 78 நிமிடஙகள் தான்.ஒரு குறு நாவலை வாசித்த அனுபவம் கிடைக்கும்.அசோகமித்திரன் பாணியில் திரைக்கதை பயணிக்கிறது.

2. நால்வரின் உரையாடல் மூலமாகவே யார் யார் என்ன செய்கிறார்கள்,அவர்கள் ஹாபி என்ன?என்பது உள்பட எல்லா விபரங்களை யும் ஆடியன்சுக்கு சொன்ன  விதம் அருமை

3. மூத்த மகன் எழுத்தாளராக இருப்பதும் 53 வாரங்கள் டைம் எடுத்துக்கொண்டு ஒரு நாவலை எழுதி முடித்ததாகவும் கூறும் அவரால் ஒரு வாரம் கூட ஒதுக்கி சொந்த அப்பாவைப்பார்க்க வர முடியவில்லை என்பதைக்குத்திக்காட்டும் விதமாக டைட்டில் 53 சண்டேஸ் என வைத்த ஐடியா செம.

4 எல்லோருக்கும் அப்பா மீது பாசம் இருந்தும் அவரவர் வாழ்க்கையைப்பார்க்க வேண்டி இருப்பதால் அப்பாவுக்கு நேரம் ஒதுக்க முடியாமை பற்றி நமக்கு உணர்த்துவது கச்சிதம்

5 யாரும் எதிர் பாராத க்ளைமேக்ஸ் நம்மை அப்படியே ஒரு நிமிடம் உறைய வைக்கும்.ஒரு சிறுகதை படித்த உணர்வு


  ரசித்த வசனங்கள்


1 லவ்வர்,லைப் பார்ட்னர் நம்மை எப்போ வேணா விட்டுட்டுப்போகலாம்,ஆனால் கூடப்பிறந்தவர்கள் ,சொந்த பந்தம் தான் எப்பவும் நம் கூட இருப்பார்கள்.

2  திமிரா இருக்கறவங்க எப்பவும் ஜெயிக்கக்கூடாது.

3  எனக்கு இன்னும் நிறைய வேணும்னு நான் ஆசைப்படறேன்.இருப்பதே போதும் என நீ. நினைக்கிறே.

4  எழுத்தாளர்களுக்கு எப்பவும் ஞாபக மறதி இருக்கும்.

5  நம்ம கனவு நனவாகலைன்னா நாம் அதை விட்டுட்டு அடுத்த கட்டத்துக்குப்போகனும்.

6 விமர்சனம் என்பது யாருக்கும் புரியாது.

7 எல்லா விஷயங்களுக்கும் கவலைப்பட்டுட்டே இருந்தா  வாழ்க்கை சீரியஸ் ஆகிடும்.

8 ஏழைகளைப்பார்த்தால் சிலருக்கு அலர்ஜி.


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 படத்தின் மெயின் கேரக்டரே அப்பா தான்.அவரைக்காட்டவே இல்லை.பிளாஸ்பேக் சீனில் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டுப்பிள்ளைக்ளை ஆளாக்கினார் என்பதைக்காட்டி இருக்கலாம்.

2 அப்பா பிள்ளைகளுக்கு இடையே ஆன பாண்டிங்க் விஷூவலாகக்காட்டப்படவில்லை.வசனமாக மட்டும் வருகிறது.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்கள் இந்தப்படத்தை மிகவும் விரும்பிப்பார்ப்பார்கள்.அவர்களைப்போலவே பொறுமை குணம் இருக்கும் ஆண்களும் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3.5/5


53 Sundays
Promotional release poster
Spanish53 domingos
Directed byCesc Gay
Screenplay byCesc Gay
Based on53 diumenges
by Cesc Gay
Starring
CinematographyAndreu Rebés
Music byArnau Bataller
Production
company
Imposible Films
Distributed byNetflix
Release date
  • 27 March 2026
CountrySpain
LanguageSpanish

Friday, April 17, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17/4/2026. ஏப்ரல் 3 ம் வாரம் ரிலீஸ் படங்கள் ஒரு பார்வை

 இந்த வாரம் 4 படங்கள்

ஒரு பிரம்மாண்டமான தமிழ்ப்படம்,ஒரு லோ பட்ஜெட் தமிழ்ப்படம்,ஒரு தெலுங்கு டப்பிங்க் தமிழ்ப்படம்,ஒரு ஹாலிவுட் டப்பிங்க் தமிழ்ப்படம் என 4 வித்தியாசமான படங்கள் வருகின்றன.




1 மிஸ்டர் எக்ஸ். (தமிழ்).  ஸ்பை ஆக்சன் திரில்லர்.

ஆர்யா ,கவுதம் கார்த்திக் ,சரத்குமார் ,மஞ்சு வாரியர்,அதுல்யா ரவி,அனகா,ரைசா வில்சன்,ஜெயப்பிரகாஷ்,காளிவெங்கட் ஆகியோர் முக்கியப்பாத்திரங்களில் நடிக்க வெளி வர இருக்கும் ஸ்பை ஆக்சன்  திரில்லர் இது .


FIR (2022) என்ற படத்தை இயக்கி 24 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இயக்குநர்  மனு ஆனந்த் இயக்கத்தில் வெளி வரும் அடுத்த படம் இது.போன வருடமே இதன் டீசர். வெளி வந்து விட்டது.

துரந்தர் என்ற ஹிந்திப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதால் அதே டைப் ஸ்பை ஆக்சன் கதையை இந்த சந்தர்ப்பத்தில் வெளியிட்டால் நல்லது என்று நினைத்திருப்பார்கள் போல.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் 3 நாட்களுக்கு முன் வெளியானது.அதைப்பார்த்த போது யூகிக்கும் கதை இது தான்.

மஞ்சு வாரியர் இந்திய உளவுத்துறையில் ஒரு உயர் அதிகாரி.அவர் ஒரு மீட்டிங்கில் ஒரு திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்துகிறார். நியூக்ளியர் வெப்பன் ஒன்று கடத்தப்பட்டு விட்டது.அதை மீட்கா விடில் இந்தியாவுக்குப்பெரிய ஆபத்து.

ஆர்யா ,கவுதம் கார்த்திக் உட்பட சிலர் பங்கு பெறும் ஒரு டீம் ரெடி ஆகி றது.அவர்கள் இறங்கி அடிக்கும் ஆக்சன் அதகளம் தான் படம்

 ஹாலிவுட் படத்துக்கு இணையான படப்பிடிப்பு கண்களைக்கவர்கிறது.ஆர்யா சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் ஜம்மென்று இருக்கிறார்.கவுதம் கார்த்திக் கூட மெச்சூர்டான தோற்றத்தில் அழகாக இருக்கிறார்.சரத் குமார் ஓல்டு கெட்டப்பில் வருகிறார்.

எல்லோரையும் விட மஞ்சு வாரியார் தான் டாப் கம்பீரம்.

ரசித்த வசனங்கள்

1. நாட்டைப்பாதுகாப்பது நம் வேலை இல்லை ,அது நம் கடமை
2  நாட்டைக்காக்க நாட்டுக்கே தெரியாம போராடுபவர்கள் தான் இந்த எக்ஸ் போர்ஸ் வீரர்கள்

3 சீக்ரெட் ஏஜெண்ட்ஸ் விசுவாசமாக இருப்பார்கள் என்பதற்கு என்ன கேரண்டி ?

4 இந்த நியூக்ளியர் வெப்பனைக்கண்டு பிடிக்க முடியாம போனா நாம் உலகப்போரை சந்திக்க வேண்டி இருக்கும்.

ரன்னிங் டைம் 153 நிமிடங்கள்


இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2024ல் முடிந்து விட்டது.2023 ம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கிய படம் ஒரு ஆண்டில் ஷூட்டிங் முடிந்தாலும் துரந்தர் ஹிட் ஆனதால் சரியான நேரம் என இப்போது ரிலீஸ் ஆகிறது 






2. ஆதாரம்.   தமிழ்  க்ரைம்  மிஸ்ட்ரி திரில்லர்


ராதாரவி ,ஒய் ஜி மகேந்திரன்  ஆகியோர் முக்கியப்பாத்திரங்களில் நடிக்க ஒரு லோ பட்ஜெட் மிஸ்ட்ரி க்ரைம் திரில்லர் படமாக வந்துள்ளது.





3. விருஷகர்மா.  தெலுங்கு/தமிழ்  மிஸ்ட்ரி ஹாரர் திரில்லர்

நாக சைதன்யா,ஜெயராம் ,மீனாக்சி சவுத்ரி. ஆகியோர் நடிக்க பிரம்மாணடமாகத்தயார் ஆகி இருக்கும் படம் இது.கார்த்திக் வர்மா டாண்டு இயக்கி இருக்கும் படம் இது.

இதன் ட்ரெய்லர் கட்டைப்பார்த்தபோது ஹாலிவுட் படத்துக்கு இணையான ஒரு பிரம்மாண்டத்தைக்காண முடிகிறது.

99 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த வ்ருபக்சா (2023) படத்தின் இயக்குநரின் அடுத்த படம்  இது என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

நாடோடி மன்னன் படத்தில் சந்திரபாபு வாயில் இருந்து கோழிக்குஞ்சு வெளி வரும் காமெடி சீன் பெரிதும் பேசப்பட்டது போல வில்லனின் வாயில் இருந்து வவ்வால் உயிருடன் வரும் சீன் செம திகிலாக இருந்தது.

தீய சக்தி ஒன்று உருவாகும்போது அதை அழிக்க  விருஷகர்மா வை ஆண்டவன் அனுப்பி வைப்பான் என்ற முன்னுரையுடன் ட்ரெய்லர் தொடங்கி அசத்தலான ,மிரட்டலான காட்சிகளுடன் முடிகிறது.



4 லீ கிரானின்ஸ் த மம்மி.  ஆங்கிலம் /தமிழ்.  சூப்பர் நேச்சுரல் ஹாரர் பிலிம்


த மம்மி என்ற பிரம்மாண்டமான ஹிட் கொடுத்த வார்னர் பிரதர்ஸ் அதில் இதுவரை 4 பாகங்கள் எடுத்துள்ளது.


ஒரு பத்திரிக்கையாளரின் மகள் பாலைவனத்தில் காணாமல் போகிறாள்.எந்தத்தடயமும்  கிடைக்கவில்லை.அவளைக்கண்டு பிடிக்கவும் முடியவில்லை. எட்டு வருடங்களுக்குப்பின் அவள் திரும்பி வருகிறாள்.
இனி குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பும் என்று பார்த்தால் அதிர்ச்சி தான் கிடைக்கிறது.என்ன நடந்தது ?என்பது தான் மீதிக்கதை.

ரன்னிங் டைம் 133 நிமிடங்கள்

MARDAANI 3(2026)-ஹிந்தி-சினிமா விமர்சனம் (மெடிக்கல் க்ரைம் ஆக்சன் திரில்லர் )@நெட் பிளிக்ஸ்


MARDAANI 3(2026)-ஹிந்தி-சினிமா விமர்சனம் (மெடிக்கல் க்ரைம் ஆக்சன் திரில்லர் )@நெட் பிளிக்ஸ்                                   

30/1/2026 அன்று வெளியான இந்தப்படம் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 78 கோடி ரூபாய் வசூல் செய்தது.இப்போது 27/3/2026 முதல் நெட் பிளிக்ஸ் ஓடிடி யில் வெளியாகி இருக்கிறது.தமிழ் டப்பிங்க் இல்லை.ஆங்கில சப் டைட்டில் உண்டு.27/4/2026 முதல் தமிழ் டப்பிங்கில் கிடைக்கும்.


இந்தப்படத்தின் முதல் பாகமோ,இரண்டாம் பாகமோ பார்க்காதவர்கள் கூட இதை ரசிக்க முடியும்.காரணம் மூன்று பாகங்களும் வேறு வேறு கதைகள்.ஒரே ஒரு கேரக்டர் அதாவது நாயகி மட்டும் மூன்று பாகங்களிலும் மெயின் ரோலில் வருவது மட்டும் தான் ஒரே ஒற்றுமை.


ஆண் போலீஸ் ஆபீசர் ஹீரோவாக நடித்த படங்கள் பல பாகங்கள் ஏற்கனவே வந்திருக்கிறது.சூர்யா நடித்த சிங்கம் 1 சிங்கம் 2 சிங்கம் 3  ,விக்ரம் நடித்த சாமி 1 ,சாமி 2 ஆகியவை உதாரணங்கள்.ஆனால் பெண் போலீஸ் ஆபீசர் படங்கள் இப்படி 3 பாகங்களாக வருவது இது முதல் முறை.விஜயசாந்தி நடித்த வைஜயந்தி ஐ பி எஸ் மெகா ஹிட் ஆனாலும் என்ன காரணத்தாலோ அதன் அடுத்த பாகம் வரவில்லை.ராணி முகர்ஜிக்குத்தான் இந்திய அளவில் அந்தப்பெருமை கிடைத்திருக்கிறது.

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லி ஒரு அமைப்புக்குத்தலைவி.பல அடியாட்கள் அவள் அமைப்பில்  வேலை செய்கிறார்கள்.ஏழைக்குழந்தைகளை,அனாதைக்குழந்தைகளைக்கடத்தி வருவதுதான் அடியாட்களுக்குத்தரப்படும் டாஸ்க்.ஒரு குழந்தைக்கு ஒரு லட்சம் சன்மானம் அடியாளுக்கு உண்டு.


கடத்தி வரப்பட்ட குழந்தைகளை வில்லி பாலா இயக்கிய நான் கடவுள் பட வில்லன் மொட்டை ராஜேந்திரன் போல  பிச்சை எடுக்கப்பழக்கி விடுகிறாள்.

இந்தியாவின் முக்கியமான அம்பாசிடர் ஒருவரின் மகளைக்காணவில்லை.யாரோ கடத்தி விட்டார்கள்.அந்த மகளைத்தேடும் பணி நாயகிக்குத்தரப்படுகிறது.


நாயகி கடத்தல்காரனை ட்ரிக்கர் செய்ய அம்பாசிடரின் குழந்தை போட்டோவை மீடியாவில் காட்டி இந்தக்குழந்தையைக்கண்டு பிடித்தால் ,ஒப்படைத்தால் ரூ 2 கோடி பரிசு என அறிவிப்பு செய்ய உத்தரவிடுகிறார்.


வில்லியின் அடியாள் தான் அம்பாசிடர் குழந்தையைக்கடத்தியவன்.ஆனால் பெரிய இடத்துக்குழந்தை எனத்தெரியாது.தெரியாமல் கடத்தி வில்லியிடம் குழந்தையை  ஒப்படைத்தவன் இப்போது டி வி விளம்பரம் பார்த்து அடடா,ஒரு லட்சத்துக்கு ஆசைப்பட்டு 2 கோடி பரிசை விட்டு விட்டோமே என்று நினைத்து  வில்லியிடம் ஒப்படைத்த குழந்தையை மீண்டும் தன் வசம் கொண்டு வருகிறான்.

நாயகி ,வில்லி ,வில்லியின் அடியாள் இவர்கள் மூவருக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் கதை.


நாயகி ஆக சீனியர் சூப்பரிண்டண்ட் ஆப் போலீஸ் ஆபீசர்  ஆக ராணி முகர்ஜி கம்பீரமாக நடித்திருக்கிறார்.அவரது உடல் மொழி,போலீஸ் கம்பீரம் எல்லாம் பிரமாதம்.


வில்லி ஆக மல்லிகா பிரசாத் நல்ல நடிப்பு,தெனாவெட்டான உடல் மொழி,அவரின் கொடூரமான பார்வையே மிரட்டல் ரகம்.


வில்லியின் வளர்ப்பு மகன் ஆக பிரஜேஸ் காஷ்யாப்க்கு நடிக்க நல்ல வாய்ப்பு.வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார்.


போலீஸ் கான்ஸ்டபிள்  பாத்திமா ஆக வரும்  ஜானகி போதிவாலா அப்ளாஸ் அள்ளும் நடிப்பு.


மேலே சொன்ன இந்த நான்கு முக்கியமான கேரக்டர்கள் தவிர படத்தில் வரும் மற்ற அனைவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

பாடலுக்கான இசையை சார்த்தக் கல்யாணியும்,பின்னணி இசையை ஜான் ஸ்டீவர்ட் யதூரியும் கவனித்து இருக்கிறார்கள்.பிஜிஎம் நல்ல விறுவிறுப்பு.

ஒளிப்பதிவு,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் தரம்.129 நிமிடங்கள் ரன்னிங் டைம்.


ஆயுஷ் குப்தா கதை,திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் அபிராஜ் மினவாலா.ஆதித்யாசோப்ராவின் தயாரிப்பு இது.


சபாஷ்  டைரக்டர்

1 வில்லியாக நடித்தவர்  நிஜ வாழ்வில் முன்னாள் எம் எல் ஏ என்பதால் அந்த கேரக்டரை அனாயசமாக டீல் செய்திருந்தார்.


2 படத்தில் பாடல்கள் இல்லாதது படத்தின்  விறுவிறுப்பைக்கூட்ட உதவி ஆக இருந்தது.(ஒரே ஒரு சின்னப்பாட்டு மட்டும்)


3 ஹியூமன் டிராபிக் + குழந்தைக்கடத்தல் பற்றிய விழிப்புணர்வுப்பதிவாகக்கொடுத்த விதம் அருமை.

4. பிச்சை எடுக்க வைப்பது மட்டும் அல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை எடுத்து விற்பது என்ற ஐடியா ,அந்த தாட் பிராசஸ் அருமை (உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இதை இணைத்திருக்கிறார்கள் )

5 தொடர்ந்து 3 பாகங்களிலும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாகத்திரைக்கதை அமைத்த விதம்

6 உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்ததால் காட்சிகளில் நம்பகத்தன்மை அதிகம்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகியின் இண்ட்ரோ சீன். அருமை என்றாலும் அந்த சாக்குப்பை மேட்டர்  ஏற்கனவே புஷ்பா (தெலுங்கு) படத்தில் வந்த காட்சி தான்.

2 வில்லி கேரக்டர் க்ளைமாக்சுக்கு முன்பே இறந்து விடுவதால் ஒரு எதிர்பார்ப்பு ,விறுவிறுப்பு இல்லை

3 படத்தின் இரு பெரிய ட்விஸ்ட் என இவர்கள் நினைத்து வைத்த அந்த மேட்டர் நாம் சுலபமாக யூகிக்கக்கூடியதாக இருந்தது பின்னடைவு.

4 நாயகியின் ஆள் வில்லி கேங்கில் உளவு பார்ப்பது ,வில்லியின் ஆள் நாயகி கேங்கில் இருந்து உளவு பார்ப்பது இரண்டிலும் சஸ்பென்ஸ் இல்லை


5 கடத்தப்பட்ட குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என ஒரு போலீஸ் ஆபீசரே குழந்தையின் பெற்றோரிடம் சொல்லலாமா?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+

மன உளைச்சலைத்தரக்கூடிய சில காட்சிகள் இருப்பதால் குழந்தைகள் ,சிறுவர்கள் தவிர்க்கவும்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -     க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ரசிகர்கள்,ராணி முகர்ஜி ரசிகர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5         


விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு சுவராஸ்யத்தகவல்.


இப்படத்தின் ஷூட்டிங்க் டெல்லியில்  நடந்தபோது 800 குழந்தைகளை போலீஸ் மீட்கும் காட்சியைப்பார்த்து பொது மக்கள் அது ஒரு நிஜ சம்பவம் என நினைத்து பீதி அடைந்தார்கள்.டெல்லி போலீஸ்  தயாரிப்பாளரிடம் நட்ட ஈடு கேட்டது.தயாரிப்புத்தரப்பு நட்ட ஈடு தர மறுத்தது.

Thursday, April 16, 2026

அனோமி (2026) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர் )

     

                       

அனோமி (2026) - மலையாளம் /தமிழ்  - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர் ) 


 6/2/2026  அன்று  கேரளாவில்  ரிலீஸ் ஆன இந்தப்படம்  இப்போது தமிழ் டப்பிங்கில்  தமிழகத்  திரையரங்குகளில்  வெளியாகி இருக்கிறது . அனோமி என்ற   சொல்லுக்கு தனிமையில்  இருத்தல் , உளவியல் ரீதியாக  பாதிக்கப்பட்ட   நெறிமுறை அற்ற  சமூக நிலை   என்று அர்த்தம் . லோ  பட்ஜெட்டில்  தயாரான  இந்தப்படம்  ரிலீஸ்  ஆன முதல்  இரண்டு நாட்களில்  48 லட் சம்   ரூபாய்  வசூல்  செய்து  இருக்கிறது .


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு தடயவியல்  நிபுணர் .  இவருக்கு  ஒரு தம்பி  உண்டு . நாயகியின்  பெற்றோர்  ஒரு கார்   விபத்தில்  இறக்கிறார்கள் . அந்த விபத்துக்குத் தான் தான்  காரணம்  என்ற குற்ற உணர்வு  நாயகியின்   தம்பிக்கு  இருக்கிறது . தற்கொலைக்கு  முயல்கிறான் . நாயகி  அவனைக்காப்பாற்றிப் பேணி பாதுகாக்கிறார் . .


நாயகன்  ஒரு போலீஸ் ஆபீசர் அவரிடம்  அடைக்கலம்  கேட்டு  வந்த  ஒரு காதல் ஜோடி யில்  ஒருவர் ஆணவக்கொலை  செய்யப்பட  இன்னொருவர்  மனமுடைந்து  தற்கொலை   செய்து  கொள்ள  அவர்களைப்பாதுக்காக்க முடியாமல் போய் விட்டதே  .  என்ற   மன வருத்தத்தில்   இருக்கிறார் .டியூட்டியில்  கவனம்  இல்லாமல் ஏனோ தானோ   என்று  இருப்பவரை  உயர் அதிகாரி  கண்டித்து   தற்கொலை  போல்  ஜோடிக்கப்பட்ட  இரு வழக்குகளை  அவர் வசம்  தந்து  விசாரணை  செய்யச்சொல்கிறார் 



 நாயகியின்   தம்பி  தற்கொலை செய்து  கொள்கிறார் . ஆனால்  அது கொலை  என  நாயகி சந்தேகிக்கிறார் . நாயகியே அந்தக்கேஸை  டீல்  செய்கிறார் .


நாயகனிடம்  இப்போது  மூன்றாவதாக   நாயகியின்   தம்பி  கொலைக் கேஸ்   சேர்கிறது . அவர்   ஒரு பக்கம் விசாரிக்கிறார்   


 நாயகிக்கு   ஒரு காதலன்   உண்டு . அவன் மர்மமான   முறையில்  கொலை செய்யப்படுகிறான் . ஆனால்  இந்த பேட்டர்ன்  வேறு   மாதிரி   இருக்கிறது . 


 மற்ற   மூன்று  கேஸ்களும்  கொலை   செய்து   தற்கொலை  போல  ஜோடிக்கப்பட்டவை . நாயகியின்   காதலன்  கொலை  தற்கொலை  போல  ஜோடிக்கப்படாமல்  இருப்பது . இந்த நான்கு கேஸ்களிலும்  உள்ள  ஒரே ஒற்றுமை  நான்கு பேருமே  மனதளவில்   பாதிக்கப்பட்டு  தற்கொலைக்கு  முயன்றவர்கள்  தான் . இந்தக்கேஸில்  இருக்கும்  மர்மத்தை   நாயகன்  கண்டுபிடிப்பதுதான்  மீதி திரைக்கதை 

நாயகி ஆக  பாவனா . இது  இவரது  சொந்தப்படம் . தயாரிப்பாளர்   என்பதால்   போட்ட   காசு   திரும்ப  வருமோ ?  வராதோ  ? என்ற  மன வருத்தத்தில்  இருந்தார்   போல , படம் முழுக்க   டல்   முகமாகவே   வருகிறார் . அது அந்த கேரக்ட்டருக்கு  வலு  சேர்க்கிறது . அவரது   ஆடை  வடிவமைப்பும்   அருமை .

நாயகன் ஆக  ரகுமான்  என்கிற  ரகு  .  போலீஸ்    ஆபீசரின் கம்பீரம்,மிடுக்கு அந்த உடல் மொழி எல்லாம் பிரமாதம்.நாயகியுடன் வரும் மோதல் காட்சியில் கச்சிதமான நடிப்பு

நாயகியின் தம்பி ஆக வரும் ஷெபின் ,நாயகியின் காதலன் ஆக வரும் அர்ஜூன் (ஆக்சன் கிங்க் அர்ஜூன் அல்ல) இருவரும் குறைவான நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பு.


முக்கியக்கேரக்டர்கள் போக   அந்த டாக்டர் கேரக்டர் ,போலீஸ் அதிகாரி கேரக்டர் இருவரது கதாப்பாத்திர வடிவமைப்பும் அருமை.

ஹர்சவர்தன் தான் இசை.இவரது பின்னணி இசை படம் முழுக்க ஒரு டெம்ப்போவை ஏற்றுகிறது.ஒளிப்பதிவு சுஜித்சாரங்க்.நாயகியின் க்ளோசப் ஷாட்களைக்கையாண்ட விதம் அருமை.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர். ரியாஸ் மராத்

சபாஷ்  டைரக்டர்

1 சீரியல் கில்லர் கதை என்பது போல் போக்குக்காட்டி அதை க்ளைமாக்சில் மெடிக்கல் க்ரைம் திரில்லர் ஆக கொண்டு போன விதம் அருமை.

2 நாயகன்,நாயகி இருவருக்கும் காதல் என்று ஜல்லி அடிக்காமல் ,டூயட் வைக்காமல் கதை சொன்ன விதம் குட்.

3  நிகழ்காலக்கொலைகள் மூன்றில் 11 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு கொலை இதே பேட்டர்னில் இருப்பதைக்கண்டு பிடிக்கும் ட்விஸ்ட் சீன் செம.

4  டைட்டிலில் வரும் அனோமி - த ஈக்வேசன் ஆப் டெத் என்ற வாசகத்துக்கு மெனக்கெட்டு. விளக்கம் சொல்ல இயக்குநர் உபயோகித்த ஐடியா பிரமாதம்.

5  கொலையாளி யார் என்பதில் வரும் ஒரு  ட்விஸ்ட் ,நாயகியின் காதலனைக்கொன்ற நபர் பற்றிய ட்விஸ்ட் (இருவரும் வேறு வேறு) அட்டகாசம்.

6 மரணம். பற்றிய ஆராய்ச்சி,ஒருவர் இறந்த பின்பும் மூளை கொஞ்ச நேரம் செயல்படும் என்ற தகவல் இவை எல்லாம் இதுவரை சொல்லப்படாதவை

7 வில்லனுக்கான ஓப்பனிங்க் சீன்,கேரக்டர் டிசைன் அருமை.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1.  தற்கொலை என காட்டப்படும் மரணங்களில் போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட் உடலில் ஒரு வித கெமிக்கல் கலந்திருப்பதாக வருகிறது.கொலை காரன் இதை யூகிக்கவில்லையா?

2 படத்தில் வரும் பெரும்பாலான கேரக்டர்கள் மன நலன் பாதிக்கப்பட்டவராக ,சோக முகஙகளாகவே வருவது பின்னடைவு.யார் முகத்திலும் சந்தோஷமே இல்லை.பாசிட்டிவ் வைப் இல்லை.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம் திரில்லர் ரசிகர்கள் அவசியம் பார்க்கலாம்.ஒர்த்.ரேட்டிங்க் 3 /5

Wednesday, April 15, 2026

PENNUM PORATTUM (2026) -பெண்ணும் பொரட்டும் -மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ நெட் பிளிக்ஸ்

               

      PENNUM PORATTUM  (2026) -பெண்ணும்  பொரட்டும் -மலையாளம் /தமிழ் - சினிமா  விமர்சனம் ( காமெடி டிராமா ) @ நெட் பிளிக்ஸ் 


        அறிமுக  இயக்குனர் ராஜேஷ்  மாதவன் இயக்கத்தில்  உருவான  இந்த லோ பட்ஜெட்  படம் முழுக்க  முழுக்க  புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டு பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம் , படத்தைப்பற்றிப்பேசும் முன் பட இயக்குனர்    கடந்து வந்த பாதை பற்றிப்பார்த்து விடலாம்


பகத்  பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் (2016) படத்தில்   துணை நடிகராக அறிமுகம் ஆனார் ,தொண்டி முதலும் திரிசாக்ஷியும் (2017) படத்தில்  உதவி இயக்குனர் ஆகப்பணி ஆற்றினார் .நா  தான்  கேஸ் கொடு (2022)  படத்தில்  முக்கிய வேடம் ஏற்ற  இவர்  மரணமாஸ் (2025) படத்த்தில்  சைக்கோ  வில்லன் ஆக நடித்து கலக்கியவர் . நம்ம  ஊர்   வடிவேலு வின்  ஆரம்ப கட்ட     ஒல்லி   உருவத்துடன்  இருக்கும்  இவர்   தன உடல் மொழியாலேயே  பிரமாதமாக காமெடி செய்யக்கூடியவர் . இந்தப்படத்தில்  ஒரு  சின்ன ரோலிலும்  நடித்து  படத்தையும் இயக்கி இருக்கிறார் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு கிராமத்தில் வசிக்கிறாள் இவள் செல்லமாக ஒரு நாய் வளர்த்து வருகிறாள் அந்த நாய்க்கு  ரேபிஸ்  நோய்  தொற்று ஏற்பட்டு விட்டது என்ற வதந்தி  பரவி அந்த கிராமமே  நாயைத்துரத்தி விட  முயற்சிக்கிறது அந்த நாயை  கிராமத்து  மனிதர்கள்  துரத்துவது   காமெடியாக  ஒரு டிராக்கில் காட்டப்பட்டுக்கொண்டே வருகிறது. இது  ஒரு டிராக் 



 நாயகனுக்கு காதல் , கல்யாணம்  இவற்றில் எல்லாம்  கொஞ்சம்  கூட நம்பிக்கை இல்லை , ஆனால்  திருமணத்துக்குப்பின் நிகழ இருக்கும்  சம்பவம்  மட்டும் தனக்கு நிகழ  வேண்டும் என்று ஆசைப்படுகிறான் . தனது   ஆசையை   நாயகன் , நாயகிக்கு  வாட்சப்பில்  வாய்ஸ்  மெசேஜ்  மூலம்   சொல்கிறான் . நாயகி அந்த மெஸேஜைக்கேட்டதும்  செம  கடுப்பாகி நாயகனை லெஃப்ட்   அண்ட்   ரைட்   வாங்கி  விடுகிறாள் . இந்த மாதிரி என் கிட்டே  பேசும்   வேலை எல்லாம்  வெச்சுக்க வேண்டாம் என எச்சரித்து    வாய்ஸ்   மெசேஜ் அனுப்புகிறாள் 

இந்த  விஷயம்  கிராமம்  முழுக்கப்பறவி விடுகிறது 

நாயகனின் அம்மா  ஒரு மொய்  விருந்துக்கு  கிராம மக்களை அழைத்திருக்கிறாள் . விஜயகாந்த்  நடித்த சின்னக்கவுண்டர் படத்தில்  மொய்  விருந்து  பற்றி  தமிழ்  சினிமாவில் முதன் முதலாக ஒரு விளக்கம் வைத்து இருப்பார்கள் . வீட்டில்  திருமணம்  போன்ற நல்ல காரியங்கள் செய்யும் முன்  செலவுக்குப்பணம்  திரட்ட   கிராமங்களில்   மொய் விருந்து  வைப்பார்கள் . விருந்துக்கு  வரும் சொந்த  பந்தங்கள்  சாப்பிட்டு விட்டு  மொய்  வைத்து  விட்டு  செல்வார்கள் .


தன் மகனுக்கு இப்போதைக்குத்திருமணம்  நடக்காது  என்பதை  உணர்ந்த  நாயகனின் அம்மா  தனது  பழைய வீட்டைப்புதுப்பிக்க  ஊர்  மக்களை அழைத்து  மொய் விருந்து     வைக்கிறாள் , இந்த  விருந்தில்  கலந்து  கொள்ளும் ஊர்  மக்கள் செய்யும் காமெடி கலாட்டாக்கள்   ஒரு டிராக் .

நாயகியின்  அம்மா  விடம்  பலர்   வந்து  அந்த  வாட்ஸப்  மெசேஜை பற்றி  வத்தி  வைக்க  தன சொந்த பந்தங்களை எல்லாம்  அழைத்துக்கொண்டு  நாயகனின்  அம்மா  வீட்டுக்கு  வந்து  அந்த  மொய்  விருந்து  நடக்கும்போதே   நாயகியின்  அம்மா  கலாட்டா   செய்கிறாள் 


இதற்குப்பின்  நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான்   மீதித்திரைக்கதை 


நாயகன் , நாயகி  இருவரும்  புதுமுகங்கள் . இவர்கள்  படத்தில்   வரும்  நேரம்  கொஞ்ச  நேரம் தான் . கிராம மக்கள் செய்யும் அழிச்சியாட்டங்கள்தான் மொத்தத்திரைக்கதையுமே 

 நாயகி ஆக  ரைனா ராதா கிருஷ்ணன்  நடித்திருக்கிறார் . சந்தன  சிலை  போல   இருக்கிறார் . குறைவான  நேரமே   இவர்  திரையில்  வந்தாலும்   நிறைவான நடிப்பு 

 வைசக்த்   சுகுணன்  பாடல்கள்  எழுதி  இருக்கிறார் . கதை , திரைக்கதையை  ரவி சங்கர் எழுதி  இருக்கிறார் . சாபின் உரலிகண்டி    ஒளிப்பதிவு  செய்திருக்கிறார் . கிராமிய அழகைக்கண்  முன்   நிறுத்தி இருக்கிறார் , சாமன் சாக்கோ   எடிட்டிங்க்  செய்து இருக்கிறார் . படத்தின் ரன்னிங்க் டைம்  2 மணி நேரம் 


சபாஷ்  டைரக்டர்

1   நாயகன் , நாயகி  இருவரும்   பெயரளவிற்குத்தான் . மொத்தமே  20 நிமிடங்கள்  தான்  வருகிறார்கள் .படத்தில்  டூயட்   இல்லை . லவ் போர்சன்  எதுவும்   இல்லை . முழுக்க  முழுக்க  காமெடி தான் 

2  மொய்  விருந்தில்  கட்டு கட்டிச்செல்லும்   பெண்  குறைவான மொய் வைக்க  அதை ஒட்டி   நாயகனின் அம்மா செய்யும் அலப்பறைகள்  காமெடி கலாட்டா 

 3    நாயகனின்   அம்மா  தரப்பு ஆட்கள் , நாயகியின் அம்மா   தரப்பு ஆட்கள்  இரு தரப்பும்  சண்டை  இட்டுக்கொள்ளும்  காட்சி   காமெடி அதகளம்   என்றால்  சண்டை  முடிந்தபின்  திடீர்  என  சம்பந்தம்  செய்து கொள்வது  கலக்கல் காமெடி 

4    கிராமத்து   மக்களின் வெள்ளந்தித்தனம்,முட்டாள்த்தனம் அனைத்தையும் நையாண்டி செய்த விதம்.முகமது பின் துக்ளக் படத்தில் துக்ளக் சோ அரசியல் நையாண்டி செய்தது போல இதில் கிராமத்து மக்களின் அப்பாவித்தனம்,அறியாமையை நையாண்டி செய்த விதம்

,5 விருப்பம் இல்லாத இடத்தில் இருந்து தப்பி ஓடத்தான் இந்த உலகமே படைக்கப்பட்டிருக்கிறது என்ற வசனத்தை ஓப்பனிங்க் சீனிலும்,க்ளைமாக்சிலும் வைத்து சொல்ல வந்த கதைக்கருவை முன்னிலைப்படுத்திய விதம்


6 ஒரு நாயின் பார்வையில் மனிதர்களை ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்கும் ஐடியா ,தாட் பிராசஸ் அருமை.நாய்க்குக்குரல் கொடுத்திருப்பவர் டொவினோ தாமஸ் (தமிழ் டப்பிங் கில் வேறு ஒருவர்)

7  சகித்துக்கொள்வதற்குக்கத்துக்கறோம்,மறக்கறதுக்கும் கத்துக்கனும்

எமோசன்ஸ் வேற வாழ்க்கை வேற

இந்த இரண்டு கருத்துக்களையும் முன்னிறுத்திய விதம்.

8  நடிக ,நடிகையரின் டிராமாடிக் ஆக்டிங்கைப்பார்த்துப்பழகிய நமக்கு அச்சு அசல் கிராமிய மக்களின் யதார்த்த நடிப்பு பாரதி ராஜா படங்களை நினைவுபடுத்துகிறது.

9 கிராமத்தில் கொல்லைப்புறத்தில் இருக்கும் மனைவிக்கு கணவன் மைக் எடுத்து குரல் கொடுப்பது கலக்கல் காமெடி

10. இங்கே என்ன நடக்குது?எனக்கேட்டவரிடம் அதான் டி வி ல பார்த்துட்டு இருக்கேன் என கிராமத்து ஆள் சிசிடிவி காமராவில் பார்க்கும் சீன் செம.

11 நாயகன் நாயகியிடம் ரூம் எடுத்துத்தங்கலாம் என்று ஏன் சொன்னான் என சண்டை நிகழும்போது அதுதான் இவ்ளோ பெரிய வீடு இருக்கே?எதுக்கு ரூம் எனக்கேட்கும் சீன் வெடிச்சிரிப்பு.

12 நாய் கடிச்ச கோழிக்கு தொப்புளை சுத்தி ஊசி போடனும்.கோழிக்கு தொப்புள் எங்கே?காட்டு எனக்கேட்கும் சீன்.

13 வேகமாகப்போகும் காரில் இருக்கும் மாஸ்டர் வண்டியைத்திருப்பு என்றதும் சடன் பிரேக் அடித்துத்திருப்பும் சீனில் மாஸ்டர் அடிக்கும் கவுண்ட்டர் அட்டாக் ரகளை.

14 கிரேசி மோகன் டைப் வார்த்தை ஜாலக்காமெடி அசத்தல்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் உதா-

அவ உன் கிட்டே என்ன சொன்னா?

என்னைக்கட்டாயப்படுத்த வேணாம்.

படுத்தலை.நீ சொல்லு.


அதான் இப்போ சொன்னேனே.என்னைக்கட்டாயப்படுத்த வேணாம்னு அவ சொன்னா.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 கதை சொல்லும் பாணி புதிது என்றாலும் சிலருக்குப்பிடிக்காமல் போகலாம்.நாயகன்,நாயகி வரும் நேரம் மிகக்குறைவே என்பது சிலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

2 ஆர் பாண்டியராஜனின் நெத்தி அடி படத்தில் முதல் 14 நிமிடங்கள் கிராமத்து மக்களின் காமெடி சேசிங் சீன் தான்.அதே சீன் படம் முழுக்க வந்தால் எப்படி இருக்கும்? பலரும் என்ன இது?,கதையே இல்லை? எனக்கேள்வி எழுப்பக்கூடும்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு.ஆனால் கிராமிய வசைச்சொற்கள் இருக்கும்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான ,கலகலப்பான மாறுபட்ட நகைச்சுவைப்படம்.ரேட்டிங் 3/5


இந்தப்படம் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.பட விழாவில் டைட்டில் Girl And Fools 




Tuesday, April 14, 2026

BHARTHA MAHASAYULAKU WIGNYAPTHI (2026) (கணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்) -தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா )@ஜீ 5

                     

        பர்தா மஹாசாயுலகு  விக்யாப்தி  என்ற  தெலுங்குப்படம் 13/1/2026   அன்று  திரை அரங்குகளில்  வெளியாகி  ஹிட் ஆன படம் . இப்போது 13/3/2026 முதல் தமிழ் டப்பிங்கில்  ஜீ 5 ல்  காணக்கிடைக்கிறது 


ரஜினிகாந்த்  நடித்த வீரா,  பாலுமகேந்திரா இயக்கத்தில் மோகன் நடித்த இரட்டை  வால்  குருவி , விஜய்சேதுபதி -நயன் தாரா  நடித்த  காத்து வாக்குல ரெண்டு காதல்  உட்பட  நாம் பல படங்களில்  பார்த்த  ஒரு நாயகன் இரு நாயகி  காதல் கலாட்டா  கதை  தான் . காமெடியாக  சொல்லி இருக்கிறார்கள் .

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு பெரிய கம்பெனியின்  எம் டி . அவர்கள் கம்பெனி   தயாரித்த   புது வகை மதுவின்  சாம்பிளை  ஸ்பெயினில்  உள்ள   ஒரு கம்பெனிக்கு அப்ரூவலுக்கு  அனுப்புகிறார் . அது  ரிஜெக்ட் ஆகிறது . என்ன விஷயம் ? எதனால்  ரிஜெக்ட் ஆனது ? என்பதை அறிய   நாயகன் ஸ்பெயின்  போகிறார் 


 வில்லி தான் ஸ்பெயின் கம்பெனி யின்  எம்  டி . வில்லி க்கு  பி ஏ  வாக   ஒரு காமெடியன்  இருக்கிறான் . அவன்  வில்லிக்கு   துரோகம்  செய்து  வில்லியின்  போட்டி கம்பெனி  எம்டி இடம்  லஞ்சம்  பெற்றுக்கொண்டு  அவர்கள்  கம்பெனி ஒயினுக்கு   அப்ரூவல்   கொடுத்தது  தெரிய   வருகிறது . இதை   நாயகன்   வில்லிக்கு உணர்த்துகிறான் . வில்லி அதிர்ச்சி   அடைந்து  பி ஏ  வை டிஸ்மிஸ்  செய்கிறாள் . நாயகனை நன்றியுடன்  கிஸ்  செய்கிறாள் 


நாயகன்  - வில்லி  பழக்கம்  நெருக்கம் ஆகிறது .ஒரு நாள்  இரவு  வில்லி   நாயகனுக்கு  சரக்கு அதிகமாக கொடுத்து விடுவதால்  நாயகன்  போதையில்  வில்லி உடன்  உறவு  வைத்துக்கொள்கிறான் . விடிந்ததும்   வில்லியிடம்  நாயகன்   தான் செய்த  தவறுக்கு மன்னிப்புக்கேட்கிறான் . ஆனால்   வில்லி   பெருந்தன்மையாக  அதெல்லாம்  ஒரு தப்பும்  இல்லை . நாம் இருவரும்   போதையில்   இருந்ததால்   அப்படி  நடந்து  கொண்டோம் .  டேக்  இட்   பாலிசி  ஊர்வசி   என்கிறாள் . நாயகன்   சொந்த   ஊர்   திரும்புகிறான் . 


இப்போதான்  கதையில்  ஒரு ட் விஸ்ட் , நாயகனுக்கு ஆல்ரெடி  திருமணம் ஆகி விட்டது . நாயகிதான்   மனை வி 

நாயகி  நாயகன்  மீது  மிகுந்த  நம்பிக்கை   வைத்திருக்கிறார் . ராமர்  அவதாரம்  என்கிறார் . மிகுந்த  பொஸசிவ்னெஸ் கொண்டவர் .. அதனால்  நாயகன்   இனி நாம்   உண்டு நம் குடும்பம்   உண்டு  என்று  நிம்மதியாக  வாழலாம்   என நினைக்கிறார் .


 இந்தத்தருணத்தில்  தான்  வில்லி ஸ்பெயின் ல   இருந்து  நாயகன்  இருக்கும்  ஹைதராபாத்  வருகிறாள் .இப்போது  நாயகனுக்கு   தர்மசங்கடம் , நாயகி , வில்லி   இருவரையும்  சமாளிக்க   வேண்டும் . இதற்குப்பின்  நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை 


நாயகன்     ஆக  ரவி  தேஜா  அருமையான நடிப்பு . இவருக்கு இது  டெய்லர் மேடு  ரோல் . பல படங்களில்  அசால்ட் ஆக செய்து  விட்டார் . இருவருடன் மாறி மாறி  டூயட் பாடுவது , ஆடுவது , காமெடி செய்வது என  ஜாலியாக  செய்து இருக்கிறார் .


வில்லி ஆக  ஆஷிகா  ரங்கநாத்  முதல் பாதியில்  கிளாமர்  நாயகி ஆகவும் , பின் பாதியில்   வில்லியாகவும்  நடித்திருக்கிறார் . இவரது   முகத்தில்  வில்லித்தனம்   தாண்டவம்  ஆடுகிறது .


 நாயகி ஆக   டிம்பிள்  ஹயாத்தி   குடும்பப்பாங்கான  ரோலை  நன்றாக செய்து  இருக்கிறார் .


நாயகனின்  மச்சினன்  ஆக  சுனில்   காமெடிக்கலக்கல் ரோல் . கலக்கி இருக்கிறார் ,நாயகனின்  பி ஏ  ஆக   வெண்ணிலா  கிஷோர்  அவர்   பங்குக்குக்காமெடி செய்திருக்கிறார் 


வில்லி யின்  பி ஏ ஆக   சத்யா  இன்னும்  ஒரு காமெடியன்  ரோல்  செய்திருக்கிறார் . இவர்  ஓப்பனிங்கில் செய்யும் பில்டப்கள் செம .வில்லி யின்  சகோதரனாக வந்து  வில்லத்தனம் செய்யும்  தாரக்  பொன்னப்பா  எடுபடவில்லை


பீம்ஸ்  சிச்சுரோலியாவின்  இ சையில்  நான்கு பாடல்கள்  ,அவற்றில்   இரண்டு பாடல்கள்  ஹிட் . பிரசாத்  முரல்லாவின்  ஒளிப்பதிவில்  படம் கலர்புல்லாக இருக்கிறது . நாயகி , வில்லி , நாயகியின் தோழி  அனைவரையும் அழகாக, கிளாமராகக்காட் டி இருக்கிறது கேமரா ஸ்ரீகர்  பிரசாத்தின்  எடிட்டிங்கில்  படம்  142 நிமிடங்கள்  ஓடுகிறது கதை , திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர் கிஷோர்  திருமலா 

சபாஷ்  டைரக்டர்

1   வில்லியின்  பி ஏ  ஓவர்  விசுவாசம் காட்டி   பம்முவது  எல்லாம் செம காமெடி .வில்லிக்கு   அடிமை  மாதிரி சேவகம் செய்வது எல்லாமே  சிரிப்பு தான் 


2  ஷாப்பிங்க்  காம்ப்ளக்சில்   வில்லி , நாயகி , நாயகன்   மூவரும்  சந்திக்க நேரும்போது   வரும்   காமெடி ஸீக்வன்ஸ்  ரசிக்க   வைக்கிறது 


3  பழக்கப்பட்ட  கதை  என்றாலும்   சம்பவங்கள்   நம்மை சிரிக்க  வைக்கின்றன 


4    நாயகி ,. வில்லி  இருவரின் கிளாமர் ,  பாடல்  காட் சிகளின்   பிரம்மாண்டம்  படத்ததுக்குப்பிளஸ் 


5  காமெடிப்படத்துக்கு  மிக முக்கியமான  தேவையான  வசனகரத்தா   உள்ளேன் ஐயா சொல்கிறார் .



  ரசித்த  வசனங்கள் 


1  ஒரு சண்டை நடக்கும்போது  அவங்கவங்க  வேலையைப்பார்த்துட்டு இருந்தா அவங்க பாரீனர்ஸ் , சண்டை யை  வேடிக்கை பார்த்துட்டு இருந்தா அவங்க  இந்தியன்ஸ் 


2  அடுத்தவங்க  சண்டையைப்பார்க்கும் ஆவல்  இருப்பதால் தான் மத்த ஊரை விட தமிழ் பிக்பாஸ் செம ஹிட் 


3   எப்படிங்க ஸ்பெயினில்   எம் டி   கையைக்காலைப்பிடிச்சு 


4 தப்பு செய்யாத கணவனே இல்லை , மனைவிக்குத்தெரியாம இருந்தாப்போதும்னு பயப்படுபவன் தான் புருஷன் 


5   நான்   வேணும்னே  செய்யலை 


 ஒவ்வொரு ஆம்பளையும் ஹோட்டலில்     சாப்பிட் ட  பின் சொல்லும்   சால்ஜாப்பு  இது 


6  கடவுள்  இரண்டு கண்களை படைத்ததே  எதிர் வீட்டு ஆண்ட் டியைப்பார்க்கத்தான் .


7   நாம்  எவ்வளவு  வெயிட்   என்பதை  பல்லக்கை  விட பல்லக்குத்தூக்குகிறவங்களுக்குத்தான் நல்லாத்தெரியும் 


8 ஸ்பெயினா? பெயினா?   நீயே   முடிவு பண்ணிக்கோ 


9  பொண்ணுங்க   நம்மால ஒரு பிரச்சனை வந்தா தாங்கிப்பாங்க, நாமே ஒரு பிரச்சனையா ஆனா தாங்கிக்க மாட் டாங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   எதனால்  அப்ரூவல் ஆகலை? என்பதை  ஒரு போன் போட்டுக் கேட்டிருக்கலாம் , மெயில்  பண்ணி  இருக்கலாமே ? 


2 குடி போதையில்  தான்  தப்பு செய்ததாக  நாயகன்   க்ளைமாக்சில்  சமாளிப்பது  ஏற்புடையது  அல்ல . தனக்குத்திருமணம்  ஆனதை  எதனால்   வில்லியிடம்   மறைத்தான்  ? என்பதற்கு பதில் இல்லை 


3  நாயகன் , வில்லி   இருவரும்  ஒன்றாக   சுற்றுகிறார்கள் , அடிக்கடி  சந்திக்கிறார்கள் . ஆனால்  நாயகனிடம் வில்லி  போன்  நெம்பர்  கூட இல்லை என்பதை நம்ப முடியவில்லை . வில்லியுடன்  நெருக்கமான  உறவு நடந்த பின் தான்  போன்  நெம்பர்  வாங்குகிறான் 


4  நாயகனுடன்  உறவு  கொண்ட   பின்   வில்லி   அதை டேக்  இட்   ஈசியாக   எடுத்துக்கொள்கிறாள் , ஆனால்  நாயகன்   உடன்  சக்களத்தி  சண்டை   போடுவது  நம்ப முடியவில்லை 


5  முன்  பின்  அறிமுகம்   இல்லாத   நாயகன் , வில்லி   இருவரும் சந்திக்கும்போது  ஒரே  கலர்  டிரஸில்   இருப்பது   எப்படி ?  அதைப்பற்றி   இருவரும் சிலாகித்துக்கொள்ளவே இல்லையே ? 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நமக்குப்பழக்கமான  டூயல்  சிம்  போன் கதை தான் . காமெடி , ஆட்டம் , பாட் டம்   என ஜாலியாகப்போவதால் பார்க்கலாம் . ரேட்டிங்க்  2.5 / 5 


Bhartha Mahasayulaku Wignyapthi
Theatrical release poster
Directed byKishore Tirumala
Written byKishore Tirumala
Produced bySudhakar Cherukuri
Starring
CinematographyPrasad Murella
Edited byA. Sreekar Prasad
Music byBheems Ceciroleo
Production
company
SLV Cinemas
Release date
  • 13 January 2026
Running time
142 minutes[1]
CountryIndia
LanguageTelugu

Monday, April 13, 2026

லீடர் (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்பை ஆக்சன் திரில்லர்)


 லீடர் (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்பை ஆக்சன் திரில்லர்)


ட்ரெய்லர் பார்த்து விட்டு இது விஸ்வாசம் டைப் செண்டிமெண்ட் கலந்த ஆக்சன் மூவி என்று நினைத்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியைத்தந்திருக்கிறார் இயக்குநர்  துரை செந்தில் குமார்

.இது ஸ்பை ஆக்சன் திரில்லர்.படத்தின் பின் பாதியில் தான் அந்தத்திருப்பமே நமக்குத்தெரிகிறது.

இயக்குநர்  துரை செந்தில் குமார் சினிமா வாழ்க்கையைக்கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் சிவகார்த்திகேயன் நடித்த  எதிர் நீச்சல்(2013), காக்கி சட்டை (2015),தனுஷ் நடித்த கொடி(2016),பட்டாஸ்(2020) ,சூரி நடித்த கருடன்(2024) என 5 படங்களும் கமர்ஷியல் ஹிட்ஸ் தான் எல்லாமே.

லெஜெண்ட் என்ற தோல்விப்படம் கொடுத்த லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த இந்தப்படம் ஹிட் ஆகுமா?என்பதைப்பார்ப்போம்.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு கார் மெக்கானிக்.மனைவி இறந்து விட்டார்.ஒரே ஒரு மகள்.மகள் மீது அதீதப்பாசம் கொண்டவர்.மகள் பிறவியிலிருந்தே செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி.

கார் மெக்கானிக்காக இருக்கும் நாயகன் கார் சர்வீஸ் விட்டது சம்பந்தமாக அடிக்கடி துறைமுகத்துக்கு வருகிறார்.


தூத்துக்குடிதான் கதைக்களம்.வில்லன் தூத்துக்குடியில் துறைமுகத்தைத்தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.அங்கே சட்டத்துக்குப்புறம்பாக ஒரு கண்ட்டெய்னர் வருகிறது


நாயகி ஒரு போலீஸ் ஆபீசர்.வில்லனைப்பிடிக்க வேண்டும் என்பதை தன் லட்சியமாகக்கொண்டவர்.நாயகியின் நோக்கம் நிறைவேற சம்பந்தமே இல்லாமல் நாயகனை ஒரு சிக்கலில் மாட்ட விடுகிறார். நாயகனின் மகளைக்கடத்தி வில்லன் தான் கடத்தியதாக நாயகனை நம்ப வைத்து நாயகனை வில்லனுக்கு எதிராகத்திருப்பி விடுகிறார்

இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மொத்தக்கதையுமே.


நாயகன் ஆக லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கிறார்.முதல் படத்தில் கோட்டை விட்டதை இதில் சரி செய்து விட்டார் என்றே சொல்லலாம்.இருந்தாலும் நடிப்பில் இன்னமும் கவனம் தேவை.

நாயகி ஆக ஆண்ட்ரியா. கச்சிதம்.அவரது உயர் அதிகாரி ஆக வரும் ஷாம்  நடிப்பும் ஓக்கே ரகம்.


வில்லனாக வரும் சந்தோஷ் பிரதாப் மிரட்டி இருக்கிறார்.

நாயகன்,நாயகி,வில்லன் போக  மலையாள நடிகர் லால்,  விடிவி கணேஷ் ,ஐஸ்வர்யா பாஸ்கரன்,ஜார்ஜ் மரியான் ,அறந்தாங்கி நிஷா ,மகாநதி சங்கர் என்று ஒரு பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.அனைவர் நடிப்பும் ஓக்கே ரகம்.

ஜிப்ரானின் இசையில்  10 பாடல்கள்.பயப்பட வேண்டாம்.எல்லாம் 2 நிமிட 3 நிமிடப்பாடல்கள் தான்.பரவாயில்லை ரகம்.பின்னணி இசை  தெறிக்கிறது.

ஒளிப்பதிவு எஸ் வெங்கடேஷ்.காட்சிகளை பிரம்மாண்டமாகக்கண் முன் நிறுத்துகிறார்.பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் கில்  விறுவிறுப்பாகவே இருக்கிறது.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் துரை செந்தில் குமார்

சபாஷ்  டைரக்டர்


1 நாயகி தான் ஒரு ஸ்கெட்ச் போட்டு நாயகனை வில்லனுக்கு. எதிராகத்திருப்பி விடுகிறார் எனப்பார்த்தால் ஸ்கெட்ச் போட்டது நாயகி இல்லை ,நாயகன் என ட்விஸ்ட் கொடுத்த விதம் அருமை.

2 மகளைக்கடத்தியவர்களைப்பழி வாங்குவது மகளை மீட்பது தான் கதை என ட்ரெய்லர் பார்த்தவர்களை நினைக்க வைத்து பின் பாதியில்  3 ட்விஸ்ட்கள் வைத்தது அருமை.

3 நாயகனுக்கு ஒரு சைக்காலஜிக்கல் பிராப்ளம் இருக்கிறது.யாரைப்பார்த்தாலும் ஒருவர் போலத்தான் தோன்றும் என்ற விஷயத்தையும், மகளுக்கு செவிட்டு மிஷின் மாட்டவில்லை என்றால் காது கேட்காது என்ற  விஷயத்தையும் வைத்து க்ளைமேக்சில்  பிரில்லியண்ட் ஆக சீன் அமைத்த விதம் அருமை.

4 நாயகன் தன் மகளிடம் உன் அம்மாவிடம் பேச ஏ ஐ டெக்னாலஜி மூலம் ஒரு ஐடியா வெச்சிருக்கேன் என சொல்லும் காட்சியும் ,அதன் படமாக்கமும் டச்சிங்க்

5 ஹிந்திப்படமான கில் படத்தில் வருவது போல ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாம் அதகளம்.மேக்கிங்க் ஆகவும் நல்ல அவுட்புட்.


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1. அரதப்பழசான கதைதான். திரைக்கதை தான் கொஞ்சமாவது காப்பாற்றுகிறது


2 எனக்கு ஏழு கண்ட்டெய்னர் வேண்டும் என நாயகன் டிமாண்ட் வைத்த அடுத்த நிமிடமே  அவர் கேட்டது கிடைப்பது காதில் பூ.

3  துப்பாக்கிச்சூடு மிகப்பெரிய அளவில் நடக்க இருக்கும் ஒரு கலவர பூமிக்கு நாயகன் தன் மாமியாரை அழைத்துப்போனது எதற்கோ?

4 பின் பாதியில் ஸ்பை ஆக்சன் டீமில் இருக்கும் ஆட்கள் செய்யும் காட்சிகள் கொஞ்சம் இழுவை தான்

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வழக்கமான ஒரு ஆக்சன் மசாலாதான். லெஜெண்ட் அளவுக்கு மோசம் இல்லை.கொடி ,காக்கி சட்டை அளவுக்கு பிரமாதமும் இல்லை. ஓக்கே ரகம்.ரேட்டிங்க் 2.5/ 5