Saturday, August 15, 2026

Evil Dead Burn(2026)- சினிமா விமர்சனம் (சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர்

 


1981ம் ஆண்டில் The Evil Dead என்ற படம் வந்து மெகா ஹிட் ஆனது.The Evil Dead 2 1987 ல் வந்து ரசிகர்களை மிரட்டியது. மூன்றாம் பாகம் Army of darkness (1992)  பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.நான்காம் பாகம்  Evil Dead (2013) சக்கை போடு போட்டது.ஐந்தாம் பாகம் Evil dead rise (2023)மாங்கு மாங்கு என ஓடியது.இப்போது வந்திருப்பது ஆறாம் பாகம்.


ஆறு பாகங்களையும் தனித்தனியாகப்பார்த்தாலும் கதை புரியும்.ஒவ்வொரு பாகமும் தனிக்கதை தான்.கடந்த ஐந்து பாகங்களைப்பார்க்காதவர்கள் கூட ஆறாம் பாகமான இந்தப்படத்தைப்பார்க்கலாம்


முதல் ஐந்து பாகங்களில் திகிலுடன் காமெடியும் கலந்து இருக்கும்.இந்த ஆறாம் பாகத்தில் காமெடி இல்லை.முழுக்க முழுக்க திகில் தான்.

20 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் ரன்னிங் டைம் 109 நிமிடங்கள் தான்.ஒரு குயிக் வாட்ச் ஆகவே பார்த்து விடலாம்.



ஸ்பாய்லர் அலெர்ட

நாயகிக்கும்,அவளது கணவனுக்கும் ஒரு சண்டை.எந்த நாடா இருந்தாலும் புருசன் பொண்டாட்டிக்குள்ளே சண்டை இருக்கும் போல. சண்டையில். சம்சாரத்தை. ஜெயிக்க முடியாத கோபத்தில் கணவன் காரை எடுத்துட்டு வேகமாகப்போக வழி மறித்துக்கொண்டு ஒரு பெண் நிற்கிறாள்.ஆல்ரெடி இருவரைக்கொலை செய்து விட்டுத்தான் அவள் நிற்கிறாள்.இவள் சாபம் பிடித்தவள்.அவளுக்குக்கிடைத்த சாபத்தைக்கை மாற்றி விடத்தான் அங்கே நிற்கிறாள் .இது தெரியாத கணவன் அவளுடன் வாக்குவாதம் செய்ய  கணவன் இறக்கிறான்.

இறந்த கணவன் கல்லறையிலிருந்து எழுந்து வந்து தன் குடும்பத்துக்கு சாபம் கொடுக்கிறான்.

இறந்து விட்ட தன் கணவனுக்கு ஈமச்சடங்கு செய்ய நாயகி தன் குடும்பத்துடன் கூடி இருக்கிறாள்.ஆனால் நாயகியின் குடும்பமே கும்மி அடிக்கப்போகுது என்பது நாயகிக்கு அப்போது தெரியாது.

நாயகியின் மாமனார் கடைசியாக ஒரு முறை தன் மகனின் முகத்தைப்பார்க்கலாம் என்று அருகில் செல்லும்போது ஆவி அவரது உடம்புக்குள் புகுந்து விடுகிறது.நாயகி ஈமக்கிரியைகளை முடித்து விட்டு மாமியார் வீட்டுக்கே போகிறாள்.

நாயகியின் குடும்பத்தில் யார் எல்லாம் பலி ஆனார்கள்?நாயகியாவது தப்பித்தாரா?என்பது மீதி திரைக்கதை.

ப்ளோரண்ட் பெனார்ட் &  செபாஸ்டியன் வெனிசெக் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத  செபாஸ்டியன் வெனிசெக் மட்டும் தனியாக இயக்கி இருக்கிறார் 

Infested (2023) என்ற பிரமாதமான ஹாரர் திரில்லர் படத்தை இயக்கியவர் தான் இந்த செபாஸ்டியன் வெனிசக்.

இதுவரை வந்த இதன் ஆறு  பாகங்களில் முதல் பாகம் தான் டாப்.அடுத்தது இந்த ஆறாம் பாகம் தான்.

நாயகியாக சவுகீலா யாகூப் மிரட்டி இருக்கிறார்.




ஒளிப்பதிவாளர் பிலிப் லோசனோ தான் படத்தின் உண்மையான கதாநாயகன்.நம்ம ஊர் பி சி ஸ்ரீராம்,மது அம்பாட் மாதிரி ஒளிப்பதிவு ஷாட்ஸ்க்காகவே கை தட்டல் வாங்கும் ஒரு விற்பன்னர் பின்னிப்பெடல் எடுத்திருக்கிறார் கேமரா கோணங்களில்.

பின்னணி இசை தன் பங்குக்கு திகிலூட்டுகிறது


சபாஷ் டைரக்டர்

1 அப்பாவுக்கும் ,மகனுக்கும் இடையே நடக்கும் ஒரு சண்டை,,மாமியாருக்கும்,மருமகளுக்கும் இடையே நடக்கும் ஒரு சண்டை ,மீன் பிடிக்கப்போகும்போது நடக்கும் ஒரு சம்பவம் மூன்றுமே டைரக்டரின் டச் பிரமாதம் என சிலாகிக்கத்தகுந்த காட்சிகள்

2 டைனிங்க் டேபிள் சீக்வன்ஸ் ஒன்று மிரர் ஷாட்டாக  முடியும்.கலக்கலான ஒளிப்பதிவு,எடிட்டிங்

3. ஒவ்வொரு திகில் சீன்சும் சீட்டின் நுனியில் நம்மை இருக்க வைக்கும் பர பர காட்சிகள் தான்.

4 பைனல் டெஸ்டினேஷன், மிட் நைட் மீட் ட்ரெய்ன்  ,டெக்சாஸ் செயின்சா மசாக்கிர், ,ஹாஸ்டல்,ஷா, ஆகிய படங்களில் வருவதைப்போல் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குலை நடுங்க வைக்கிறது.

5 மேக்கப் பிரமாதம்.எது ஒரிஜினல் மேக்கப்?எது சி ஜி ஒர்க் என்பதைக்கண்டு பிடிக்க முடியாதபடி இருப்பது பெரிய பலம்.
6 முதல் பாதியை விட இரண்டாம் பாதி அருமை.

7 மூதாதையர்கள் சாத்தானுக்காக வழிபடும் காட்சிகள்

8 படத்தில் மொத்தமே 5 கேரக்டர்கள் தான்,ஆனால் ஐவரும் நடிப்பில் மிரட்டி விட்டார்கள்.



லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 முதல் 20 நிமிடங்கள் மிகவும் டெட் ஸ்லோ திரைக்கதை

2 கொடூரமான காட்சிகள் ,ரத்தக்களறி கொண்ட  பாடி ஹாரர் படம் என்பதால் எல்லோராலும் பார்க்க முடியாது.

3 முதல் பாகத்தில் வந்த அதே டெம்ப்ளேட் தான்.பெரிய மாற்றம் இல்லை.



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 18+. வயலன்ஸ்

cps கமெண்ட் -  திகில் பிரியர்கள் ,பாடி ஹாரர் பட விரும்பிகள் தக்க துணையுடன்   பார்க்கலாம்.ரேட்டிங்  2.5/5

Friday, August 14, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி--சூர்யா vs விஷால் மகுடம் சூடப்போவது யார் ?

 சூர்யா ,விஷால் இருவரும் தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்பதால் இது ஒரு ஆரோக்யமான போட்டியாகவே இருக்கும்.14/8/2026 வெள்ளி  அன்று. இரு படங்களும் மோதிக்கொள்கின்றன.இரு படங்களின் ட்ரெய்லரை வைத்து இரு படங்களின் கதை,திரைக்கதை என்னவாக இருக்கும்?எது ஜெயிக்கும் ?என்ற யூகப்பார்வையே இந்தக்கட்டுரை.



கறுப்பு என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டுக்குப்பின் வர இருக்கும் சூர்யா படம் என்பதால் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்க்கு மிகப்பெரிய ஓப்பனிங்க் இருக்கும்.அதே போல் மார்க் ஆண்ட்டனி(2023),ரத்னம்(2024),மதகஜராஜா(2025) என ஹாட்ரிக் ஹிட் அடித்த விஷால் படத்துக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.படத்தின் கதை,திரைக்கதை ,இயக்கம் எல்லாம் விஷால் தான் என்பதாலும் ட்ரெய்லரில் மார்க் ஆண்ட்டனி படத்தின் சாயல் இருப்பதாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.சத்யராஜ்,பானுப்ரியா நடிப்பில்  பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1992ல் வெளியான மகுடம் கதைக்கும் ,இந்தக்கதைக்கும் சம்பந்தம் இல்லை.

1. விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்



லக்கி பாஸ்கர் என்ற பிரம்மாண்டமான ஹெய்ஸ்ட் திரில்லர் ஹிட் படத்தைக்கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேமிலி எண்ட்டர்டெய்னர் இது.

ட்ரெய்லரை வைத்து யூகித்த கதை இதுதான்.

நாயகன் துப்பாக்கி சுடுவதில் கோல்டு மெடலிஸ்ட்.சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து வெல்பவன்.அவரது நோக்கம் ,லட்சியம் எல்லாமே துப்பாக்கி சுடுவதில் தான்.நாயகனின் அப்பா வால் நாயகன்  சின்ன வயதிலிருந்தே மிகவும் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டவர் .வாழ்க்கையில் வெற்றி அடைவது மட்டும் தான் முக்கியம் என்று அட்வைஸ் செய்து அப்பா வளர்க்கிறார் 

இப்போது நாயகனுக்கு 40 வயது.பிளாஸ்பேக்கில் அவருக்கு ஒரு மனைவி இருந்தாள்.இறந்து விட்டாள்.ஒரு கைக்குழந்தை இருக்கிறது.அதற்கு மிகப்பெரிய மெடிக்கல் பிராப்ளம். இருக்கிறது.குழந்தையை கவனித்துக்கொள்ளும் கேர் டேக்கராக நாயகி வருகிறாள்.

நாயகியின் கேரக்டர் நாயகனின் கேரக்டருக்கு நேர் எதிராக இருக்கிறது.வாழ்க்கையை எஞ்சாய் செய்யனும் ,ஜாலியாய் இருக்கனும். பீலிங்க்சை வெளிக்காட்டனும்,சுதந்திரப்பறவையாய். சுத்தனும்.

நாயகியின் இந்த விசித்திரமான கேரக்டர் நாயகனுக்குப்புதுசு.நாயகி ஒருதகலையாய்  நாயகனைக்காதலிக்கிறாள்.நாயகனுக்கு உள்ளூர விருப்பம் இருந்தாலும் எரிந்து விழுகிறான்.நாயகியின் காதல் கல்யாணத்தில் முடிந்ததா?இல்லையா? என்பது தான் மீதித்திரைக்கதை.


கே பாக்யராஜ் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற முந்தானை முடிச்சு + அகத்தியன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த விடுகதை. ஆகிய இரு படங்களின் கலவைதான் இந்தப்படம்.


முந்தானை முடிச்சு படத்தில் நாயகன் ஒரு கைக்குழந்தையுடன் இருப்பார்.நாயகி வம்படியாய் காதலிப்பாள்.விடுகதை படத்தில் அப்பா வயதுள்ள நாயகனை நாயகி காதலிப்பாள்.இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்தால் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் கதை ரெடி.


சூர்யாவின் கைக்குழந்தையைப்பார்க்கும்போது  நாகார்ஜூனா-அமலா நடித்த சுட்டிக்குழந்தை படத்தில் வரும் குழந்தை நினைவு வருகிறது.ஆனால் அந்தக்கதை. வேற கதை.ஹோம் அலோன் ஹாலிவுட் படத்தின் அன் அபிஷியல் ரீமேக் அது.குழந்தை செய்யும் சுட்டித்தனங்கள்,அதைப்பிடிக்க வரும் திருடன் படும் பாடுகள் தான் கதை.

இதில் மமிதா பைஜூவின் சுட்டித்தனமான நடிப்பு ,க்யூட்டான முக பாவனைகள் பிரமாதம்.சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் ஜெனிலியா கேரக்டர் போல துறு துறுப்பெண்.இவரது நடிப்பு நாயகனின் நடிப்புக்கு இணையாக இருக்கும்


நாயகனின் அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார்.நாயகனின் முதல் மனைவியாக ரவீனா டாண்டன் நடித்திருக்கலாம்.

ஜி வி பிரகாஷ் குமார்தான் இசை.பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார்.

காமெடிக்கு யோகிபாபு ,குணச்சித்திர நடிப்புக்கு நாசர் மற்றும் ஒரு நட்சத்திரப்பட்டாளமே இருக்கிறது.




ரசித்த வசனங்கள்

1 நம்ம பணம் ,ஸ்டேட்டஸ் எல்லாம் நமக்கு கவுரவமா இருக்கனும்,கர்வமா இருக்கக்கூடாது.

2 திருட்டுத்தனமா அன்பு காட்டுவார்,அது எனக்கு வேணும்னு தோணுச்சு.

3 ஒரு பையனைப்பத்தி நினைக்கும்போதே கூஸ்பம்ப் மொமெண்ட்ஸ் வரும்,தெரியுமா?

4 ரொம்ப ஒட்டாத,ஒட்டாதன்னு சொன்னேன்,இப்போப்பாரு ,எவ்ளோ கஷ்டமா இருக்குன்னு...

5 மனுசங்க பிரியறது சண்டை போடறதால் இல்லைங்க,சண்டைக்குப்பின் எப்படிப்பேசறதுன்னு தெரியாததால்தான்.

7 ஜெயிக்கறவரைக்கும் நிற்கக்கூடாது,ஜெயிச்சபின் அதைப்பத்தியே பேசிட்டு இருக்கக்கூடாது.

8 இப்போ எதுக்கு சந்திரமுகி  ஜோதிகா மாதிரி பிஹேவ் பண்றே?



மகுடம்

விஷால் முதல் முதலாக இயக்குநராகக்களம் இறங்கி இருக்கிறார்.ட்ரெய்லரில் மூன்று விதமான கெட்டப்களில் வருவதால் மூன்று  வேடங்களில் நடித்திருப்பாரோ?என பலரும் யூகித்த வேளையில் அது டபுள் ஆக்சன் தான் என்பது தெரிய வந்திருக்கிறது.அப்பா,மகன் என இரு கேரக்டர் தான்.அப்பாவின் பிளாஸ்பேக்கில் இளமைத்தோற்றம்.ஆக மொத்தம் 3 கெட்டப் ,2 வேடங்கள்.


நாயகன் ஒரு மெடிக்கல் ரெப்.நாயகனின் அப்பா மிகப்பெரிய டாண்..அப்பா கேரக்டருக்கு ஜோடியாக அஞ்சலி.இவருக்கு ஒரு ஆக்சன் சீக்வன்ஸ் உண்டு.ஒரு செமகுத்தாட்டம் கூட இருக்கிறது.

நாயகனின் அப்பா பெரிய கேங்க்ஸ்டர்.ஒரு துறைமுகத்தையே கட்டி ஆள்பவர்.பெயர் லிங்கா.அப்பா கேரக்டருக்கு. ஒரு பழைய ரீமிக்ஸ் சாங்க் இருக்கிறது.

லோகேஷ் கனஜராஜ் தான் இந்த ட்ரெண்ட்டை ஆரம்பித்து வைத்தார்.பழைய ஹிட் பாட்டைப்பின்னணியில் ஓடவிட்டு பைட் சீக்வன்சை அமைப்பது.

லிங்கா கேரக்டருக்கு ஒரு வில்லத்தனமான ஓப்பனிங்க் சீன் இருக்கிறது. எரியும் பிணத்தில் இருக்கும் தீயிலிருந்து சிகரெட்டுக்கு நெருப்பு எடுப்பது.இது புதிய பாதை படத்தில் ஆர் பார்த்திபன் ஏற்கனவே செய்தது தான் என்றாலும் இதில் இன்னமும் சுவராஸ்யப்படுத்தி இருந்தார்கள்.

மகன் கேரக்டருக்கு ஜோடி துஷாரா.

அப்பா கேரக்டருடன் ஒரு நண்பர் பிளாஸ்பேக்கில் இருக்கிறார்.ஆனால் நிகழ்காலத்தில்    வயதான அப்பா கேரக்டருடன் நண்பர் இல்லை.அப்போ பாட்ஷா படத்தில் வருவது போல நண்பரைக்கொன்றவரைப்பழி வாங்கும் கதையாக இருக்கலாம்.

சூப்பர் குட் பிலிம்சின் 99 வது படம் இது.



ரசித்த வசனங்கள்

1 கடல்ல வாழறவன் வேற,அந்தக்கடலையே ஆள்றவன்  வேற.

2 லிங்கா முடிவெடுத்துட்டா அது முடிஞ்சிடுச்சுனு அர்த்தம்.

3 அந்தப்பையன் மீது கை வெச்சுடலையே?

4 அந்த சரக்கை இறக்க மாட்டேன்,வேற யாரையும் இறக்கவும் விட மாட்டேன்.


இப்போது க்ளைமாக்ஸ்க்கு வருவோம்.விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் பேமிலி எண்ட்டர்டெய்னர் படமாக இருக்கும்,மகுடம் ஆக்சன் மசாலாவாக இருக்கும்.48 மணி நேரம் காத்திருக்கத்தான் வேண்டும்.ஒருவேளை இரண்டுமே ஹிட் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.என் கணிப்பு சூர்யா முந்திவிடுவார் என்பது.

Thursday, August 13, 2026

இதயம் முரளி (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)@Netflix


 இயக்குநர் சேரன் நடித்த ஆட்டோகிராப் (2004) 50% + முரளி நடித்த இதயம்(1991)  40% + ஷங்கரின் ஜீன்ஸ் (1998)10%  இந்த மூன்று படங்களை வைத்து ஒரு படமாக எடுத்தது தான் இந்த இதயம் முரளி


இதயம் படத்தில் படத்தின் நாயகன் தன் காதலை தான் காதலித்த  நபரிடம் சொல்ல முடியாமல் தவிப்பார்.இதில் ஆட்டோகிராப் படத்தில் வருவது போல் ஸ்கூல் லவ்,காலேஜ் லவ்,ஆபீஸ் லவ் என வெவ்வேறு கால கட்டங்களில் தான் விரும்பிய வெவ்வேறு பெண்ணிடம் காதலை சொல்ல முடியாமல்நாயகன்  தவிப்பது தான் கதை.ஜீன்ஸ் பட மேட்டர் எங்கே எப்படி வருகிறது என்பது சஸ்பென்ஸ்


ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் வெளிநாட்டில் (யு எஸ் சில்) வேலை செய்பவன்.நாயகனின் மாமா அவருக்கு போன் பண்ணி " நாளை உனக்குக்கல்யாணம்.எப்போக்கிளம்புவே?எப்போ வருவே?எனக்கேட்க  நாயகன் பிளைட்டில் கிளம்புகிறான்.

நாயகன் விமானப்பயணத்தின் போது தனது பள்ளிக்காதல்,காலேஜ் காதல்,ஆபீஸ் காதல்  என எல்லாக்காதல்களைப்பற்றியும் சொல்கிறான்.

மூன்று காதல் சம்பவங்களிலும் நாயகன் தன் காதலை யாரிடமும் சொல்லி இருக்க மாட்டார்.

திருச்சியில் நாயகன் பள்ளிப்படிப்பு படிக்கும்போது ஒரு நாயகியை சந்திக்கிறார்.காதலிக்கிறார்.ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட்.நாயகன் பார்த்தது,காதலித்தது  ஒரு. நாயகியை. நாயகிக்கு ஜீன்ஸ் படத்தில் வருவது போல் ஒரு  ட்வின்ஸ் சிஸ்டர் இருக்கிறார்.இதில் குழப்பம் நேர்கிறது.


பிறகு சென்னையில் காலேஜ் படிக்கும்போது இன்னொரு நாயகியை சந்திக்கிறார்.காதலிக்கிறார்.இங்கேயும் காதலை சொல்லவில்லை.

பிறகு நண்பனின் திருமணத்தில் எல்லோரையும்  சந்திக்கிறார்.யாரிடம் காதலை சொன்னார்.யாருடன் கல்யாணம் நடந்தது ?என்பது க்ளைமாக்ஸ்



நாயகனாக அதர்வா.இதயம் பட முரளி கேரக்டர் கலகலப்பாக ,ஜாலியாக  இருந்தால் எப்படி இருக்குமோ அது போல் இவர் கேரக்டர் டிசைன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நாயகிகளாக ப்ரீத்தி முகுந்தன் ,கயாடு லோஹர் ,நிஹாரிகா நடித்திருக்கிறார்கள்.

ப்ரீத்தி முகுந்தனின் ஆடை வடிவமைப்பு அருமை.கயாடு லோஹர் குடும்பப்பாங்காக,கண்ணியமான உடையில் வருகிறார்.

நாயகனின் நண்பனாக   இசை அமைப்பாளர் தமன் , யூ ட்யூப் பிரபலம் பரிதாபங்கள் சுதாகர் நடிப்பு கச்சிதம். நாயகனின் தாய்மாமாவாக. வரும் நட்டி யின் நடிப்பு சுமார் ரகம் தான்.

பகத் பாசில் ,சின்னி ஜெயந்த் இருவர் நடிப்பும் அருமை.

டீச்சராக வரும் ஜொனிட்டா மனதில் தங்குகிறார்.விரைவில் தனி நாயகி ஆகலாம்.

பப்லு கடுப்பேற்றும் விதத்தில் நடித்திருக்கிறார்.

டிராவிட்,ரக்சன் ஆகியோர் நடிப்பு பரவாயில்லை ரகம்.

மனோஜ் பரமஹம்சன் ,சாய் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.கண்ணுக்குக்குளுமையான காட்சிகள்.எஸ் தமனின் இசையில் 5 பாடல்கள்.ஓக்கே ரகம்.
பிரதீப் ஈ ராகவின் எடிட்டிங்கில் முதல் பாதி ஜாலி ,கலகலப்பு ,பின் பாதி இழுவை.

ரன்னிங் டைம்  164 நிமிடங்கள்..

இயக்கி இருப்பவர் ஆகாஷ் பாஸ்கரன்.




சபாஷ் டைரக்டர்


1 ஒவ்வொரு காட்சியும் கண்களில் ஒத்திக்கொள்வது போல் பிரம்மாண்டமாக எடுத்த விதம்.குறிப்பாக நாயகிகள் ப்ரீத்தி முகுந்தன்,கயாடு லோஹர் இருவரையும் அழகாகக்காட்டிய விதம் அருமை.கலர்புல் காட்சிகள்

2  யூ ட்யூப் பிரபல காமெடியனின் காமெடி டிராக் கலகலப்பு.

3 இதயம் பட ரெப்ரன்ஸ். சின்னி ஜெயந்த் மூலம் தருவதும் ,அந்த டயலாக்சும் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது

4 நைண்ட்டீஸ் கிட்சைக்கவரக்கூடிய நாயகனின் ஸ்கூல் போர்ஷன் அருமை.

5 கெஸ்ட் ரோலில் வரும் பகத் பாசிலை வைத்து பிளாஸ்பேக் சொல்லவே உங்களை நேர்ந்து விட்டிருக்காங்க என ஓப்பனிங்கில் காமெடியும் செய்து அவரை வைத்து க்ளைமாக்சில் ஒரு ட்விஸ்ட்டும் கொடுத்தது அடடா..



லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 படத்தில் பாடல்கள் அடுத்தடுத்து கேப் விடாமல் வருவது ஏனோ?இரு பாடல்களுக்கு இடையே போதிய இடைவெளி வேண்டும் என்ற அடிப்படை விதி யை பின்பற்ற வேண்டாமா?

2 யூ ட்யூப் சேனலில்  பிரமாதமாகக்காமெடி செய்யும் பரிதாபங்கள் புகழ் சுதாகர் படத்தில் அந்த அளவு குவாலிட்டி இல்லை

3. பல காட்சிகள் பல படங்களில் பார்த்ததாக இருப்பது மைனஸ். பிரெஷ் ஆக யோசித்திருக்கலாம்.

4 படத்தில் எங்குமே எமோஷனல் கனெக்ட் ஆகவே இல்லை.


 அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+


cps கமெண்ட் - முதல் பாதி கல கல ,பின் பாதி இழுவை ,திரைக்கதை ,காட்சி அமைப்புகளில் புதுமை இல்லை. ஓக்கே ரகம் தான்.பிரமாதம் எல்லாம் இல்லை.ரேட்டிங். 2.5/5

Wednesday, August 12, 2026

I,Nobody(2026)- மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லர்)

 


பிரிதிவ்ராஜ் சுகுமாரனின் சொந்தப்படம் இது.அசீப் அலி-வீணா நந்தகுமார் நடித்த .Kettiyollaanu Ente Maalakha(2019),ரொமாண்டிக் காமெடி மூவி,மம்முட்டி-கிரேஸ் ஆண்ட்டனி நடித்த Rorschach(2022) ரிவஞ்ச் திரில்லர் மூவி ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கி இருக்கும் படம் இது.ஹெய்ஸ்ட் திரில்லர் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் இது சஸ்பென்ஸ் திரில்லர் கேட்டகிரியில் தான் வரும்.


2021 ல் ரிலீஸ் ஆன ஹாலிவுட் படமான நோ படி படத்துக்கும்,இந்தப்படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

9/7/2026 முதல் கேரளாவில் ரிலீஸ் ஆன இந்தப்படம் 10/7/2026  முதல்தமிழகத்தில்  தமிழ் டப்பிங் கில் கிடைக்கிறது

நான் உங்களைப்போல் சாராரணமானவன்,வேறு யாரும் இல்லை என்பதுதான் படத்தின் டைட்டிலுக்கான அர்த்தம்.


ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன் தன்னுடைய மனைவி,இரு மகள்களுடன் வாழ்ந்து வருபவன்.நடுத்தரக்குடும்பம்.கணவன் ,மனைவி இருவரும் பணிக்கு  செல்பவர்கள்.

ஒரு நாள் நாயகன் ஒரு வேலையாக வங்கிக்கு செல்கிறான்.ஒரு மூன்று பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் அந்த வங்கியில் 17 கோடி ரூபாய் பணத்தைக்கொள்ளையடிக்கிறது.பணயக்கைதியாக வங்கியில் இருந்த நாயகனை அழைத்துச்செல்கிறது.

கொள்ளையடிக்க வந்த வண்டியிலிருந்து இன்னொரு வண்டிக்கு மாறியதும் நாயகனை விட்டு விடுகிறார்கள்.ஆனால் அவர்கள் பயணித்த வண்டி விபத்துக்குள்ளாகி கொள்ளையர்கள் மூவரும் ஸ்பாட் அவுட்.

ஆனால் கொள்ளையடித்த பணத்தைக்காணவில்லை.போலீஸ் விசாரணை நடக்கிறது.
நாயகனுக்கும் ,இந்தக்கொள்ளை கும்பலுக்கும் எதோ தொடர்பு இருக்கிறது என போலீஸ் சந்தேகிக்கிறது.இந்த சமூகமும் நாயகன் மேல்  வெறுப்பை உமிழ்கிறது.

நாயகன் இந்தப்பிரச்சனைகளிலிருந்து வெளியே வந்தாரா?அதற்காக என்னென்ன செய்தார்?என்பது மீதித்திரைக்கதை.

நாயகனாக பிரித்விராஜ் பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஒரு அமைதியான நடுத்தரக்குடும்பஸ்தனைக்கண் முன் நிறுத்துகிறார்.ஒரு கண்ணில் அடிபட்ட பின்  ஒரு மாதிரியாக ஒரு கண்ணால் பார்ப்பதை சிரமப்பட்டு உழைத்திருக்கிறார் காசி படத்தில் விக்ரம் இதே போல் உழைத்திருந்தார்.

நாயகனின் மனைவியாக பூ படப்புகழ் பார்வதி பாந்தமான ரோல்.ஆனால் அதிக வாய்பில்லை.வந்த வரை ஓக்கே.

நாயகனின் பெண் குழந்தைகளாக வரும் நட்சத்திரா ,ஐரா இருவரும்  அழகு செல்லங்கள்.

இவர்கள் போக ஹக்கீம் ஷாஜகான்,அசோகன்,மதுபால்,சந்திரன்,விஜயராகவன்,ரோனி வர்கீஸ் உட்பட அனைவரும் அவரவருக்குக்கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஜேக்ஸ்  பிஜோயின் இசையில் ஆங்கிலப்பாடல்கள்,ஹிந்திப்பாடல்கள் அதிகம்.இது எதற்காக என்று தெரியவில்லை.பின்னணி இசை கச்சிதம்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு கலக்கல் ரகம். எம்.பி ரமீசின் எடிட்டிங் கில் படம் 168. நிமிடங்கள் ஓடுகிறது.பின் பாதியில் இழுவை.இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

சமீர் அப்துல் திரைக்கதை அமைத்திருக்கிறார்.முதல் பாதி திரைக்கதையை க்ரிஸ்ப் ஆக எழுதியவர் பின் பாதித்திரைக்கதையை நம்ப முடியாத தெலுங்கு ஆக்சன் மசாலா ரேஞ்சுக்கு எழுதி விட்டார்.


நிக்சன் ஜார்ஜின் சவுண்ட் டிசைனிங் ஒர்க் பிரமாதம்.ஆக்சன் கொரியோகிராபியை மூவர்  கொண்ட குழு வடிவமைத்திருக்கிறது.அதகளமான ஆக்சன் சீக்வன்ஸ் .லிப்ட் பைட்,ஸ்ட்ரீட் பைட்,ஓப்பனிங்க் பைட் அனைத்தும் அருமை.


சபாஷ் டைரக்டர்

1 பரபரப்பான ,விறுவிறுப்பான ,கலக்கலான திரைக்கதையுடன் முதல் பாதி அருமை.ஒரு  சீன் கூட போர் அடிக்கவில்லை.

2 இடைவேளை பிளாக் சீனுக்கு முன் வரும் அமளிதுமளியான மூன்று சம்பவங்கள் செம.கவன் என்ற தமிழ்ப்படத்தில் இதே போல் இண்ட்டர்வெல் பிளாக் சீனுக்கு முன் 2 செமயான சம்பவங்கள் வரும்.

3  லிப்டில் நடக்கும் ஆக்சன் பிளாக் செம. கேமரா கோணம் செம.

4 காருக்குள் நடக்கும் ஆக்சன் சீன  கேமராவில் சுழற்றி சுழற்றிக்காட்டுவது இப்போது பேஷனாகி விட்டது.இதிலும் அப்படி ஒரு சம்பவம் எடிட்டர்,ஒளிப்பதிவாளர் இருவரும் இணைந்து கலக்கி இருக்கிறார்கள்.

5 கணவன் ,மனைவிக்குள் நிகழும் கருத்து மோதலை படமாக்கிய விதம்.

6 பேங்க் ஹெய்ஸ்ட் திரில்லரில் ஒரு காதல் விஷயத்தைப்புகுத்திய விதம்.
7 நாயகனுக்கு இளைய மகளுடனான பாண்டிங் அருமை.

8 யூ ட்யூபில் வரும் விஷயத்தை நம்பி மக்கள் எப்படி திசை திரும்புகிறார்கள் என்பதைக்காட்டிய விதம் குட்.

9 ஓப்பனிங்க் சீனில் நாயகன் வங்கிக்கு செல்லும்போது துப்பாக்கியை ஏன் எடுத்துச்செல்கிறார்?என்ற சஸ்பென்சை ஓப்பன் செய்த விதம் குட்.


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 பின் பாதி திரைக்கதை யில் சுவராஸ்யமான சம்பவங்கள் எதுவுமே இல்லை.
2 கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே இருக்கிறது என்பது ஆடியன்சான நமக்குத்தெரிந்து விடுகிறது.ஆனால் படத்தில் யாருக்கும் தெரியவில்லை.இது எடுபடவில்லை.

3 முதல் பாதியில் பிரில்லியண்ட்டாகத்திரைக்கதை அமைத்தவர்கள் பின் பாதியில் தெலுங்கு ஆக்சன் மசாலா போல் தேவை இல்லாத ஹீரோ பில்டப் பைட்ஸ்  இணைத்துத்திணித்து சொதப்பி விட்டார்கள்.
4 நாயகி தன் மகளைக்காணோம்,,பார்த்தீங்களா?எனக்கேட்பது அபத்தமான காட்சி.

5 கடை வீதியில் எல்லோரும் பார்க்கும்படி அவ்ளோ பெரிய பேக்கை நாயகன் தூக்கிக்கொண்டு வருவது ஏற்புடையதே அல்ல.

6 மினிஸ்டரைக்கிண்டல் செய்யும் காட்சி,வசனம் தேவை இல்லாத காட்சி

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+


 CPS கமெண்ட் - பிரமாதமான முதல் பாதி ,சொதப்பலான பின் பாதி ,சராசரியான சஸ்பென்ஸ் திரில்லர்.பார்க்கலாம்.ரேட்டிங் 2.5/5

Tuesday, August 11, 2026

Pritam and Pedro (2026)-ஹிந்தி/தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (சைபர் க்ரைம் காமெடி திரில்லர்)@ஜியோ ஹாட் ஸ்டார்

 

PK (2014),Sanju(2018) ,Dunki(2023) ஆகிய படங்களை இயக்கிய  ராஜ் குமார் ஹிரானி இயக்கிய வெப் சீரிஸ் இது.ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ் டப்பிங் கில் இருக்கிறது.மொத்தம் 6 எபிசோடுகள்,ஒவ்வொரு எபிசோடும் 32 டூ 37 நிமிடங்கள், ஆக மொத்தம்  மூன்றரை மணி நேரம் ஒரே அமர்வில் பார்த்து விடலாம்.இயக்குநர் ராஜ்குமார்  ஹிரானியின் மகன் வீர் ஹிரானி தான் இந்த வெப் சீரிசின் நாயகன்.




ஸ்பாய்லர் அலெர்ட்


வில்லனின் அப்பா ஒரு காலேஜில் புரொபசராகப்பணியாற்றும்போது நாயகன் அவரிடம் மாணவனாகப்படிக்கிறான்.நாயகன் ஹேக்கிங் செய்வதில் ,சிஸ்டம் உபயோகிப்பதில் வல்லுனன்.ஆனாலும் படிப்பில் சுமார் தான்.எல்லோருக்கும் முன் நாயகனை வில்லனின் அப்பா மட்டம் தட்டி அவமானப்படுத்தி விட நாயகனுக்கு செம கோபம்.

எல்லா மனிதர்களுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டு என்று குருதிப்புனலில் புகழ் பெற்ற வசனம் வருமே?அது போல் நாயகன் வில்லனின் அப்பா எதிலாவது  சிக்குவாரா?எனப்பார்த்து காத்திருக்கிறான்.அவனது ஹேக்கிங் டேலண்ட்டைப்பயன்படுத்தி அவருக்கு ஒரு இல்லீகல் அபேர் இருப்பதைக்கண்டுபிடிக்கிறான்.


வில்லனின் அப்பா ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை காலேஜில் பரப்புகிறான்.இதனால் எல்லோரும் அவரைப்பார்த்து சிரிக்கிறார்கள்.அவமானம் தாங்க முடியாமல் வீட்டுக்கு வந்தால் வில்லனின் அம்மா போனுக்கும் அந்த ஸ்டில் வந்து விட அவரும் கேவலமாகப்பார்க்கிறார்.இதனால் மனமுடைந்து வில்லனின் அப்பா தற்கொலை செய்து கொள்கிறார்.

நாயகனுக்குப்பெரிய அதிர்ச்சி.இப்படி ஆகும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.வில்லன் தன் அப்பாவின் மரணத்துக்குக்காரணமான நாயகனை வித்தியாசமான முறையில் பழி வாங்க நினைக்கிறான்.அவனது திட்டம் என்ன?  எண்ணம் நிறைவேறியதா?என்பது மீதித்திரைக்கதை.

நாயகனாக வீர் ஹிரானி அசால்ட் ஆக நடித்திருக்கிறார்.இயக்குநரின் மகன் என்பதால்  அவரது கேரக்டர் டிசைன் வலுவாக எழுதப்பட்டுள்ளது.நடிப்பும் ஓக்கே.

இன்னொரு நாயகனாக போலீஸ் ஆபீசராக காமெடி கலந்த ரோலில்  அர்ஷத் வர்சி நடித்திருக்கிறார்.சினிமாத்தனம் இல்லாத ,ஓவர் பில்டப் இல்லாத இயல்பான கதாப்பாத்திர வடிவமைப்பு இவருடையது.

வில்லனாக விக்ராந்த் மஸ்ஸி நடித்திருக்கிறார்.அதிக வாய்ப்பில்லை.க்ளைமாக்சில் ஓரளவு நடிக்க வாய்ப்பு.

இன்னொரு நாயகனாக வரும் போலீஸ் ஆபிசரின் மனைவியாக மோனா சிங் கச்சிதம்

ஸ்போர்ட்ஸ் மினிஸ்டராக  சத்யதீப் மிஸ்ரா கெத்து காட்டி இருக்கிறார்.மினிஸ்டரின் மனைவியாக  ஸ்ருதி மராத்தே கிளாமராக நடித்திருக்கிறார்.

இவர்கள் போக மற்ற அனைவரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

எடிட்டிங், இயக்கம்,தயாரிப்பு என ஆல் இன் ஆல் அறிவு ராஜாவாக ராஜ்குமார்  ஹிரானி  அசத்தி இருக்கிறார்.


பாடல்களுக்கான இசையை சாந்தனு மோய்ட்ரா வும் ,பின்னணி இசையை சஞ்சய் வந்த் ரேக்கரும், தீம் இசையை விஷால் கரானாவும் அமைத்திருக்கிறார்கள்.

சபாஷ் டைரக்டர்

1 ஓப்பனிங்க் சீனில் வரும் ஏ டி எம் கொள்ளைக்காட்சி பரபரப்பு என்றால் ஜஸ்ட் 10 நிமிடங்களில் கொள்ளையர்களைக்கண்டுபிடிப்பேன் எனப்போலீசுக்கு சவால் விடும் நாயகன் அதே போல் செய்வது பிரமிப்பு.

2  போலீஸ் ஆபீசருக்கும்,அவரது மனைவிக்கும் நடக்கும் தகறாரும் ,அதைத்தொடர்ந்து வரும் காட்சிகளும் பரபரப்பு.

3.  மினிஸ்டரின் மனைவி போன் மிஸ் ஆகுவதும் ,போலீஸ் ஆபீசர் அசால்ட் ஆக அதை டீல் செய்வதும்,சைபர் க்ரைம் செக்சனுக்கு பனிஷ்மெண்ட். போஸ்ட் பெறுவதும் காமெடி கல கல.

4.  மினிஸ்டரின் மகனை வில்லன் கடத்துவது ,நாயகன் தற்கொலை செய்து கொண்டால் தான் விடுவிப்பேன் என்று மிரட்டுவது பரபரப்பான காட்சிகள்.

5.  வில்லன் கேட்ட பணத்தை ஒரு பேக்கில் வைத்து  அவனை ட்ராக் செய்ய நாயகன் செய்யும் ஐடியா அபாரம்.

6 நாயகனும் ,போலீஸ் ஆபீசரும் அடிக்கடி பெட் கட்டிக்கொள்வது அதில் எப்போதும் நாயகனே ஜெயிப்பது சுவராஸ்யம்

7 நாயகன் ஒவ்வொரு கேசிலும்  ஹேக்கிங் மூலம் அசால்ட் ஆக வில்லனை முந்துவதைப்பார்க்கும்போது நமக்கும் ஹேக்கிங் கற்றுக்கொள்ள ஆர்வம் பீறிடுகிறது.


8 மினிஸ்டரின் மனைவியின். முன்னாள் காதலன் பழைய போட்டோக்களை வைத்து மிரட்டும்போது நாயகன் அந்தக்கேசை டீல் பண்ணும் ஐடியா அபாரம்.



ரசித்த வசனம்


காலம் மாறுது,திருடர்களும் மாறுகிறார்கள்,நாமும் மாறனும்.


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  மினிஸ்டரின் மனைவியின் போன் மிஸ் ஆகி விட்டதும் அதைக்கண்டு பிடிக்க முடியாமல் போலீஸ் ஆபீசர் அதே மாடல் ,அதே கலர் போன் புதிதாக வாங்கித்தரும் ஐடியா எப்படி ஒர்க் அவுட் ஆகும்?அந்த போனில் கால் லாக்ஸ்,கேலரி செக் பண்ண மாட்டாங்களா?புது போன் பிளாங்க்காக இருக்குமே?

2 க்ளைமாக்சில் வில்லன் வருகிறானா?என்பதை போலீஸ் பைனாகுலர் மூலம் செக் செய்வது போல வில்லனும் செய்ய மாட்டானா?

3. க்ளைமாக்சில் மினிஸ்டரின் மகன். இருக்குமிடத்தைக்கண்டு பிடித்த போலீஸ் ஆபீசர் உடனே அந்த விஷயத்தை மினிஸ்டரிடமோ ,ஹையர் ஆபீசருக்கோ போன் பண்ணி சொல்லாமல் சாதா கான்ஸ்டபிளிடம் சொல்வது,அவர் தானே கண்டுபிடித்தது போல் மினிஸ்டரிடம் நல்ல பெயர் வாங்குவது சினிமாத்தனம்.நம்ப முடியவில்லை


அடல்ட் கண்ட்டண்ட் வார்னிங்.க்ளின் யூ


CPS பைனல் கமெண்ட் - விறுவிறுப்பான ,பர பரப்பான,காமெடியான சைபர் க்ரைம் திரில்லர்  வெப் சீரிஸ். பார்க்க விரும்புகிறவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங் 3/5

Pritam and Pedro
Created byRajkumar Hirani
Written by
Dialogues byPranjal Saxena
Shashank Kunwar
Rajkumar Hirani
Directed byAvinash Arun
Starring
Theme music composer
Vishal Khurana K
Composers
Country of origin
India
Original language
Hindi
No. of seasons1
No. of episodes6
Production
Executive producer
Sanjiv Kishinchandani
ProducerRajkumar Hirani
CinematographyAvinash Arun
EditorRajkumar Hirani
Running time32–37 minutes
Production companyRajkumar Hirani Films
Original release
NetworkJioHotstar
Release3 July 2026

Monday, August 10, 2026

Uyir(2026)-உயிர்- மலையாளம்- சினிமா விமர்சனம் ( போலீஸ் புரொசீஜர் க்ரைம் மிஸ்ட்ரி திரில்லர்)


 26/6/2026 முதல் கேரளாவில் வெளியான இந்தப்படம் இப்போது ஆங்கில சப் டைட்டிலுடன் தமிழகத்தில் 3/7/2026 முதல்  ஓடிக்கொண்டிருக்கிறது.


கோப்ரா என்ற தமிழ்ப்படத்தில் நடித்த மலையாள நடிகரான ரோஷன் மேத்யூ Adi Kapyare koottanani (2015)படத்தில் அறிமுகமாகி Koode(2018),Kappela(2019),Night Drive(2021)oru thekkan  thallu case(2022),Ronth(2025) உட்பட 33 படங்களில் நடித்திருக்கிறார்.இது அவரது 34வது படம்.

                             


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் 5 வயது சிறுவனாக இருக்கும்போது தன்னுடைய் அம்மா,அப்பா,தங்கையுடன் ரயில் பிரயாணம் மேற்கொள்கிறான்.அப்போது அவன் அமர்ந்திருந்த ஜன்னலோர சீட்டைக்கேட்கும் தங்கையிடம் வாக்குவாதம் செய்து இடம் தர மறுத்து வேறு ஜன்னல் சீட்டுக்கு அனுப்புகிறான்.சில நிமிடங்களில் அவள் காணாமல் போகிறாள்.கண்டுபிடிக்கவே முடியவில்லை.தன்னால்தான் தங்கை காணாமல் போனாள் என்ற குற்ற உணர்வு பல வருடங்களாக நாயகனின் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.


இப்போது நாயகன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகப்பொறுப்பேற்கிறான்.அவனது முதல் கேசே கிணற்றில் விழுந்து இறந்து கிடக்கும் ஒரு பெண்ணின் கேஸ் தான்.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில்  தலையின் பின் பக்கம் அடித்துப்பின் கிணற்றில் தள்ளிக்கொலை செய்யப்பட்டிருக்கிறாள் எனத்தெரிய வருகிறது.

அந்தப்பெண்ணின் தோளில் ராஜூ என்று கன்னடத்தில் பச்சை குத்தப்பட்டு இருக்கிறது.

அந்தப்பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் என்பதும் ஒரு ஆளுடன் நிற்கும் போட்டோவும் கிடைக்கிறது.

நாயகன் இந்தக்கேசை விசாரிக்கும் போது அந்தப்பெண்ணுக்கு கணவன்,கள்ளக்காதலன் என இருவருடன் தொடர்பு இருப்பதை  அறிகிறான்.

இருவரில் ஒருவர்தான் கொலையாளி என்பதை யூகிக்கிறான்.


இதற்குப்பின் நிகழும் வித்தியாசமான திருப்பங்களும் ,இறந்த பெண் நாயகனின் தொலைந்து போன தங்கையா?வேறு நபரா? என்பதும் தான் மீதித்திரைக்கதை.

நாயகனாக ரோஷன் மேத்யூ பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.20 வருடங்கள் ஆகியும் தன் தங்கையை நினைத்துக்குற்ற உணர்வில் மருகுவது அருமை.போலீஸ் விசாரணையில் தேவையற்ற ஹீரோ பில்டப் எல்லாம் காட்டாமல் அடக்கி வாசித்திருக்கிறார்.


நாயகனின் மனைவியாக  அதுல்யா சந்திரா கெஸ்ட் ரோலில் வருகிறார்.ஜிம்னாஸ்டிக் ஸ்லிம் பாடியும் ,கர்லிங ஹேர் ஸ்டைலும் அவரது பிளஸ்.


மர்மமான முறையில் இறந்த பெண்ணாக ஸ்ருதிமேணன் நடித்திருக்கிறார்.இந்தக்கதையைப்பொறுத்தவரை இவர் தான் நாயகி.


ஓப்பனிங்க் சீனிலேயே பிணமாக வந்தாலும் பிளாஸ்பேக் காட்சிகள் உயிர்ப்போடு விளங்க இவரது நடிப்பும் முக்கிய அங்கம் வகிக்கிறது.இவரைச்சுற்றித்தான் மொத்தக்கதையும் பயணிக்கிறது.இவரது விழிகள் உயிர்ப்புடன் நடித்திருக்கின்றன.


நாயகியின் கணவனாக நடித்திருப்பவர் அச்சு அசல் ஒரு குடிகாரனின் உடல் மொழியை நகல் எடுத்திருக்கிறார்.


நாயகியின் காதலனாக வருபவர் நடந்த சம்பவத்தை மாற்றி மாற்றித்திரித்துக்கூறி போலீசைக்குழப்புவதில் பிரமாதப்படுத்துகிறார்.

நாயகனுடன் பணிபுரியும் சக போலீஸ் ஆபீசராக பைஜூ சந்தோஷ் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


சைஜூ மாரத் ,நிகில் கே மேணன் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத  இயக்கி இருப்பவர் பத்மகுமார்.

பின்னணி இசை மர்மம் நிறைந்த பகுதிகளுக்கு உயிர்ப்பு ஊட்டுகிறது.ஒளிப்பதிவு ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் தரம்.




சபாஷ்  டைரக்டர்


1 கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில்  தர்மாடம் போலீஸ் ஸ்டேஷன் ஏரியாவில் நடந்த உண்மை சம்பவம் இது என்பதால் உயிர்ப்புடன் இருக்கிறது.

2 கிணற்றில் விழுந்திருக்கும் நாயகியைப்போலீஸ் வலையில் மீட்கும் காட்சி தத்ரூபம்

3 நாயகியின் கணவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன் போலீசை திசை திருப்ப சொல்லும் கதை செம.

4 நாயகியின் கணவன் ராஜூ,காதலன் புவனேஷ், குழந்தைகள் இருவர் ,அரிக்கேன் விளக்கு  என நான்கு அத்தியாயங்களாகப்பிரித்து குழப்பமில்லாமல் கதை சொன்ன பாங்கு அருமை.


5 இடைவேளை ட்விஸ்ட் ,ப்ரீ க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இரண்டும் அருமை.

6 குமுதத்தில் ஒரு பக்கத்தில் முடிந்துவிடக்கூடிய சின்னக்கதை தான்,ஆனால் அதைத்திரைக்கதையாக்கிய விதம் அருமை



  ரசித்த  வசனங்கள் 

1 நீ நடிச்ச முதல் படமே இன்னமும் ரிலீஸ் ஆகலை,அதுக்குள்ளே நீ ஒரு நடிகன்கறே?

2 சாரி சார்.அவனுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்கலை 


வீட்டில் வெயிட் பண்ணுஙக,அவனே கொண்டு வந்து அவனுக்கு எதிரன எவிடென்சைத்தருவான்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ரெகுலராகக்கணவன் வீட்டுக்கு வரும் சமயம் இதுதான் என்பது நாயகிக்குத்தெரியாதா? அந்த நேரத்தில் காதலனுடன் நெருக்கமாக இருப்பது என்ன தைரியத்தில்?


2. கூலி வேலை செய்யும் ராஜூவின் வீடு அவ்ளோ விசாலமாக இருப்பது எப்படி?

3 ராஜூவைப்பிடிக்கும் சமயம்  போலீஸ் தேவை இல்லாமல் ராஜூவின் நண்பர்களுடன் சண்டை செய்வது எதற்கு?

4 நாயகியின் கணவன் என்று சொல்லிக்கொள்பவனின் ஸ்டேட்மெண்ட்டை நம்பி போலீஸ் அவனை விட்டு விடுவது எப்படி? ( நிஜ சம்பவத்தில் அப்படித்தான் விட்டார்களாம்)

5 மெயின் கதை முடிந்த பின் குழந்தைகளைத்தேடும் படலம் இழுவை. ஷாம் நடித்த 6 மெழுகுவர்த்திகள் உட்பட பல படங்களில் பார்த்தவை தான்.

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொறுமையாக செல்லும் திரைக்கதை என்பதால் பொறுமைசாலிகள் பார்க்க வேண்டிய நல்ல க்ரைம் திரில்லர் இது.ரேட்டிங் 3/5