Wednesday, April 15, 2026

PENNUM PORATTUM (2026) -பெண்ணும் பொரட்டும் -மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ நெட் பிளிக்ஸ்

               

      PENNUM PORATTUM  (2026) -பெண்ணும்  பொரட்டும் -மலையாளம் /தமிழ் - சினிமா  விமர்சனம் ( காமெடி டிராமா ) @ நெட் பிளிக்ஸ் 


        அறிமுக  இயக்குனர் ராஜேஷ்  மாதவன் இயக்கத்தில்  உருவான  இந்த லோ பட்ஜெட்  படம் முழுக்க  முழுக்க  புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டு பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம் , படத்தைப்பற்றிப்பேசும் முன் பட இயக்குனர்    கடந்து வந்த பாதை பற்றிப்பார்த்து விடலாம்


பகத்  பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் (2016) படத்தில்   துணை நடிகராக அறிமுகம் ஆனார் ,தொண்டி முதலும் திரிசாக்ஷியும் (2017) படத்தில்  உதவி இயக்குனர் ஆகப்பணி ஆற்றினார் .நா  தான்  கேஸ் கொடு (2022)  படத்தில்  முக்கிய வேடம் ஏற்ற  இவர்  மரணமாஸ் (2025) படத்த்தில்  சைக்கோ  வில்லன் ஆக நடித்து கலக்கியவர் . நம்ம  ஊர்   வடிவேலு வின்  ஆரம்ப கட்ட     ஒல்லி   உருவத்துடன்  இருக்கும்  இவர்   தன உடல் மொழியாலேயே  பிரமாதமாக காமெடி செய்யக்கூடியவர் . இந்தப்படத்தில்  ஒரு  சின்ன ரோலிலும்  நடித்து  படத்தையும் இயக்கி இருக்கிறார் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு கிராமத்தில் வசிக்கிறாள் இவள் செல்லமாக ஒரு நாய் வளர்த்து வருகிறாள் அந்த நாய்க்கு  ரேபிஸ்  நோய்  தொற்று ஏற்பட்டு விட்டது என்ற வதந்தி  பரவி அந்த கிராமமே  நாயைத்துரத்தி விட  முயற்சிக்கிறது அந்த நாயை  கிராமத்து  மனிதர்கள்  துரத்துவது   காமெடியாக  ஒரு டிராக்கில் காட்டப்பட்டுக்கொண்டே வருகிறது. இது  ஒரு டிராக் 



 நாயகனுக்கு காதல் , கல்யாணம்  இவற்றில் எல்லாம்  கொஞ்சம்  கூட நம்பிக்கை இல்லை , ஆனால்  திருமணத்துக்குப்பின் நிகழ இருக்கும்  சம்பவம்  மட்டும் தனக்கு நிகழ  வேண்டும் என்று ஆசைப்படுகிறான் . தனது   ஆசையை   நாயகன் , நாயகிக்கு  வாட்சப்பில்  வாய்ஸ்  மெசேஜ்  மூலம்   சொல்கிறான் . நாயகி அந்த மெஸேஜைக்கேட்டதும்  செம  கடுப்பாகி நாயகனை லெஃப்ட்   அண்ட்   ரைட்   வாங்கி  விடுகிறாள் . இந்த மாதிரி என் கிட்டே  பேசும்   வேலை எல்லாம்  வெச்சுக்க வேண்டாம் என எச்சரித்து    வாய்ஸ்   மெசேஜ் அனுப்புகிறாள் 

இந்த  விஷயம்  கிராமம்  முழுக்கப்பறவி விடுகிறது 

நாயகனின் அம்மா  ஒரு மொய்  விருந்துக்கு  கிராம மக்களை அழைத்திருக்கிறாள் . விஜயகாந்த்  நடித்த சின்னக்கவுண்டர் படத்தில்  மொய்  விருந்து  பற்றி  தமிழ்  சினிமாவில் முதன் முதலாக ஒரு விளக்கம் வைத்து இருப்பார்கள் . வீட்டில்  திருமணம்  போன்ற நல்ல காரியங்கள் செய்யும் முன்  செலவுக்குப்பணம்  திரட்ட   கிராமங்களில்   மொய் விருந்து  வைப்பார்கள் . விருந்துக்கு  வரும் சொந்த  பந்தங்கள்  சாப்பிட்டு விட்டு  மொய்  வைத்து  விட்டு  செல்வார்கள் .


தன் மகனுக்கு இப்போதைக்குத்திருமணம்  நடக்காது  என்பதை  உணர்ந்த  நாயகனின் அம்மா  தனது  பழைய வீட்டைப்புதுப்பிக்க  ஊர்  மக்களை அழைத்து  மொய் விருந்து     வைக்கிறாள் , இந்த  விருந்தில்  கலந்து  கொள்ளும் ஊர்  மக்கள் செய்யும் காமெடி கலாட்டாக்கள்   ஒரு டிராக் .

நாயகியின்  அம்மா  விடம்  பலர்   வந்து  அந்த  வாட்ஸப்  மெசேஜை பற்றி  வத்தி  வைக்க  தன சொந்த பந்தங்களை எல்லாம்  அழைத்துக்கொண்டு  நாயகனின்  அம்மா  வீட்டுக்கு  வந்து  அந்த  மொய்  விருந்து  நடக்கும்போதே   நாயகியின்  அம்மா  கலாட்டா   செய்கிறாள் 


இதற்குப்பின்  நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான்   மீதித்திரைக்கதை 


நாயகன் , நாயகி  இருவரும்  புதுமுகங்கள் . இவர்கள்  படத்தில்   வரும்  நேரம்  கொஞ்ச  நேரம் தான் . கிராம மக்கள் செய்யும் அழிச்சியாட்டங்கள்தான் மொத்தத்திரைக்கதையுமே 

 நாயகி ஆக  ரைனா ராதா கிருஷ்ணன்  நடித்திருக்கிறார் . சந்தன  சிலை  போல   இருக்கிறார் . குறைவான  நேரமே   இவர்  திரையில்  வந்தாலும்   நிறைவான நடிப்பு 

 வைசக்த்   சுகுணன்  பாடல்கள்  எழுதி  இருக்கிறார் . கதை , திரைக்கதையை  ரவி சங்கர் எழுதி  இருக்கிறார் . சாபின் உரலிகண்டி    ஒளிப்பதிவு  செய்திருக்கிறார் . கிராமிய அழகைக்கண்  முன்   நிறுத்தி இருக்கிறார் , சாமன் சாக்கோ   எடிட்டிங்க்  செய்து இருக்கிறார் . படத்தின் ரன்னிங்க் டைம்  2 மணி நேரம் 


சபாஷ்  டைரக்டர்

1   நாயகன் , நாயகி  இருவரும்   பெயரளவிற்குத்தான் . மொத்தமே  20 நிமிடங்கள்  தான்  வருகிறார்கள் .படத்தில்  டூயட்   இல்லை . லவ் போர்சன்  எதுவும்   இல்லை . முழுக்க  முழுக்க  காமெடி தான் 

2  மொய்  விருந்தில்  கட்டு கட்டிச்செல்லும்   பெண்  குறைவான மொய் வைக்க  அதை ஒட்டி   நாயகனின் அம்மா செய்யும் அலப்பறைகள்  காமெடி கலாட்டா 

 3    நாயகனின்   அம்மா  தரப்பு ஆட்கள் , நாயகியின் அம்மா   தரப்பு ஆட்கள்  இரு தரப்பும்  சண்டை  இட்டுக்கொள்ளும்  காட்சி   காமெடி அதகளம்   என்றால்  சண்டை  முடிந்தபின்  திடீர்  என  சம்பந்தம்  செய்து கொள்வது  கலக்கல் காமெடி 

4    கிராமத்து   மக்களின் வெள்ளந்தித்தனம்,முட்டாள்த்தனம் அனைத்தையும் நையாண்டி செய்த விதம்.முகமது பின் துக்ளக் படத்தில் துக்ளக் சோ அரசியல் நையாண்டி செய்தது போல இதில் கிராமத்து மக்களின் அப்பாவித்தனம்,அறியாமையை நையாண்டி செய்த விதம்

,5 விருப்பம் இல்லாத இடத்தில் இருந்து தப்பி ஓடத்தான் இந்த உலகமே படைக்கப்பட்டிருக்கிறது என்ற வசனத்தை ஓப்பனிங்க் சீனிலும்,க்ளைமாக்சிலும் வைத்து சொல்ல வந்த கதைக்கருவை முன்னிலைப்படுத்திய விதம்


6 ஒரு நாயின் பார்வையில் மனிதர்களை ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்கும் ஐடியா ,தாட் பிராசஸ் அருமை.நாய்க்குக்குரல் கொடுத்திருப்பவர் டொவினோ தாமஸ் (தமிழ் டப்பிங் கில் வேறு ஒருவர்)

7  சகித்துக்கொள்வதற்குக்கத்துக்கறோம்,மறக்கறதுக்கும் கத்துக்கனும்

எமோசன்ஸ் வேற வாழ்க்கை வேற

இந்த இரண்டு கருத்துக்களையும் முன்னிறுத்திய விதம்.

8  நடிக ,நடிகையரின் டிராமாடிக் ஆக்டிங்கைப்பார்த்துப்பழகிய நமக்கு அச்சு அசல் கிராமிய மக்களின் யதார்த்த நடிப்பு பாரதி ராஜா படங்களை நினைவுபடுத்துகிறது.

9 கிராமத்தில் கொல்லைப்புறத்தில் இருக்கும் மனைவிக்கு கணவன் மைக் எடுத்து குரல் கொடுப்பது கலக்கல் காமெடி

10. இங்கே என்ன நடக்குது?எனக்கேட்டவரிடம் அதான் டி வி ல பார்த்துட்டு இருக்கேன் என கிராமத்து ஆள் சிசிடிவி காமராவில் பார்க்கும் சீன் செம.

11 நாயகன் நாயகியிடம் ரூம் எடுத்துத்தங்கலாம் என்று ஏன் சொன்னான் என சண்டை நிகழும்போது அதுதான் இவ்ளோ பெரிய வீடு இருக்கே?எதுக்கு ரூம் எனக்கேட்கும் சீன் வெடிச்சிரிப்பு.

12 நாய் கடிச்ச கோழிக்கு தொப்புளை சுத்தி ஊசி போடனும்.கோழிக்கு தொப்புள் எங்கே?காட்டு எனக்கேட்கும் சீன்.

13 வேகமாகப்போகும் காரில் இருக்கும் மாஸ்டர் வண்டியைத்திருப்பு என்றதும் சடன் பிரேக் அடித்துத்திருப்பும் சீனில் மாஸ்டர் அடிக்கும் கவுண்ட்டர் அட்டாக் ரகளை.

14 கிரேசி மோகன் டைப் வார்த்தை ஜாலக்காமெடி அசத்தல்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் உதா-

அவ உன் கிட்டே என்ன சொன்னா?

என்னைக்கட்டாயப்படுத்த வேணாம்.

படுத்தலை.நீ சொல்லு.


அதான் இப்போ சொன்னேனே.என்னைக்கட்டாயப்படுத்த வேணாம்னு அவ சொன்னா.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 கதை சொல்லும் பாணி புதிது என்றாலும் சிலருக்குப்பிடிக்காமல் போகலாம்.நாயகன்,நாயகி வரும் நேரம் மிகக்குறைவே என்பது சிலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

2 ஆர் பாண்டியராஜனின் நெத்தி அடி படத்தில் முதல் 14 நிமிடங்கள் கிராமத்து மக்களின் காமெடி சேசிங் சீன் தான்.அதே சீன் படம் முழுக்க வந்தால் எப்படி இருக்கும்? பலரும் என்ன இது?,கதையே இல்லை? எனக்கேள்வி எழுப்பக்கூடும்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு.ஆனால் கிராமிய வசைச்சொற்கள் இருக்கும்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான ,கலகலப்பான மாறுபட்ட நகைச்சுவைப்படம்.ரேட்டிங் 3/5


இந்தப்படம் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.பட விழாவில் டைட்டில் Girl And Fools 




Tuesday, April 14, 2026

BHARTHA MAHASAYULAKU WIGNYAPTHI (2026) (கணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்) -தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா )@ஜீ 5

                     

        பர்தா மஹாசாயுலகு  விக்யாப்தி  என்ற  தெலுங்குப்படம் 13/1/2026   அன்று  திரை அரங்குகளில்  வெளியாகி  ஹிட் ஆன படம் . இப்போது 13/3/2026 முதல் தமிழ் டப்பிங்கில்  ஜீ 5 ல்  காணக்கிடைக்கிறது 


ரஜினிகாந்த்  நடித்த வீரா,  பாலுமகேந்திரா இயக்கத்தில் மோகன் நடித்த இரட்டை  வால்  குருவி , விஜய்சேதுபதி -நயன் தாரா  நடித்த  காத்து வாக்குல ரெண்டு காதல்  உட்பட  நாம் பல படங்களில்  பார்த்த  ஒரு நாயகன் இரு நாயகி  காதல் கலாட்டா  கதை  தான் . காமெடியாக  சொல்லி இருக்கிறார்கள் .

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு பெரிய கம்பெனியின்  எம் டி . அவர்கள் கம்பெனி   தயாரித்த   புது வகை மதுவின்  சாம்பிளை  ஸ்பெயினில்  உள்ள   ஒரு கம்பெனிக்கு அப்ரூவலுக்கு  அனுப்புகிறார் . அது  ரிஜெக்ட் ஆகிறது . என்ன விஷயம் ? எதனால்  ரிஜெக்ட் ஆனது ? என்பதை அறிய   நாயகன் ஸ்பெயின்  போகிறார் 


 வில்லி தான் ஸ்பெயின் கம்பெனி யின்  எம்  டி . வில்லி க்கு  பி ஏ  வாக   ஒரு காமெடியன்  இருக்கிறான் . அவன்  வில்லிக்கு   துரோகம்  செய்து  வில்லியின்  போட்டி கம்பெனி  எம்டி இடம்  லஞ்சம்  பெற்றுக்கொண்டு  அவர்கள்  கம்பெனி ஒயினுக்கு   அப்ரூவல்   கொடுத்தது  தெரிய   வருகிறது . இதை   நாயகன்   வில்லிக்கு உணர்த்துகிறான் . வில்லி அதிர்ச்சி   அடைந்து  பி ஏ  வை டிஸ்மிஸ்  செய்கிறாள் . நாயகனை நன்றியுடன்  கிஸ்  செய்கிறாள் 


நாயகன்  - வில்லி  பழக்கம்  நெருக்கம் ஆகிறது .ஒரு நாள்  இரவு  வில்லி   நாயகனுக்கு  சரக்கு அதிகமாக கொடுத்து விடுவதால்  நாயகன்  போதையில்  வில்லி உடன்  உறவு  வைத்துக்கொள்கிறான் . விடிந்ததும்   வில்லியிடம்  நாயகன்   தான் செய்த  தவறுக்கு மன்னிப்புக்கேட்கிறான் . ஆனால்   வில்லி   பெருந்தன்மையாக  அதெல்லாம்  ஒரு தப்பும்  இல்லை . நாம் இருவரும்   போதையில்   இருந்ததால்   அப்படி  நடந்து  கொண்டோம் .  டேக்  இட்   பாலிசி  ஊர்வசி   என்கிறாள் . நாயகன்   சொந்த   ஊர்   திரும்புகிறான் . 


இப்போதான்  கதையில்  ஒரு ட் விஸ்ட் , நாயகனுக்கு ஆல்ரெடி  திருமணம் ஆகி விட்டது . நாயகிதான்   மனை வி 

நாயகி  நாயகன்  மீது  மிகுந்த  நம்பிக்கை   வைத்திருக்கிறார் . ராமர்  அவதாரம்  என்கிறார் . மிகுந்த  பொஸசிவ்னெஸ் கொண்டவர் .. அதனால்  நாயகன்   இனி நாம்   உண்டு நம் குடும்பம்   உண்டு  என்று  நிம்மதியாக  வாழலாம்   என நினைக்கிறார் .


 இந்தத்தருணத்தில்  தான்  வில்லி ஸ்பெயின் ல   இருந்து  நாயகன்  இருக்கும்  ஹைதராபாத்  வருகிறாள் .இப்போது  நாயகனுக்கு   தர்மசங்கடம் , நாயகி , வில்லி   இருவரையும்  சமாளிக்க   வேண்டும் . இதற்குப்பின்  நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை 


நாயகன்     ஆக  ரவி  தேஜா  அருமையான நடிப்பு . இவருக்கு இது  டெய்லர் மேடு  ரோல் . பல படங்களில்  அசால்ட் ஆக செய்து  விட்டார் . இருவருடன் மாறி மாறி  டூயட் பாடுவது , ஆடுவது , காமெடி செய்வது என  ஜாலியாக  செய்து இருக்கிறார் .


வில்லி ஆக  ஆஷிகா  ரங்கநாத்  முதல் பாதியில்  கிளாமர்  நாயகி ஆகவும் , பின் பாதியில்   வில்லியாகவும்  நடித்திருக்கிறார் . இவரது   முகத்தில்  வில்லித்தனம்   தாண்டவம்  ஆடுகிறது .


 நாயகி ஆக   டிம்பிள்  ஹயாத்தி   குடும்பப்பாங்கான  ரோலை  நன்றாக செய்து  இருக்கிறார் .


நாயகனின்  மச்சினன்  ஆக  சுனில்   காமெடிக்கலக்கல் ரோல் . கலக்கி இருக்கிறார் ,நாயகனின்  பி ஏ  ஆக   வெண்ணிலா  கிஷோர்  அவர்   பங்குக்குக்காமெடி செய்திருக்கிறார் 


வில்லி யின்  பி ஏ ஆக   சத்யா  இன்னும்  ஒரு காமெடியன்  ரோல்  செய்திருக்கிறார் . இவர்  ஓப்பனிங்கில் செய்யும் பில்டப்கள் செம .வில்லி யின்  சகோதரனாக வந்து  வில்லத்தனம் செய்யும்  தாரக்  பொன்னப்பா  எடுபடவில்லை


பீம்ஸ்  சிச்சுரோலியாவின்  இ சையில்  நான்கு பாடல்கள்  ,அவற்றில்   இரண்டு பாடல்கள்  ஹிட் . பிரசாத்  முரல்லாவின்  ஒளிப்பதிவில்  படம் கலர்புல்லாக இருக்கிறது . நாயகி , வில்லி , நாயகியின் தோழி  அனைவரையும் அழகாக, கிளாமராகக்காட் டி இருக்கிறது கேமரா ஸ்ரீகர்  பிரசாத்தின்  எடிட்டிங்கில்  படம்  142 நிமிடங்கள்  ஓடுகிறது கதை , திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர் கிஷோர்  திருமலா 

சபாஷ்  டைரக்டர்

1   வில்லியின்  பி ஏ  ஓவர்  விசுவாசம் காட்டி   பம்முவது  எல்லாம் செம காமெடி .வில்லிக்கு   அடிமை  மாதிரி சேவகம் செய்வது எல்லாமே  சிரிப்பு தான் 


2  ஷாப்பிங்க்  காம்ப்ளக்சில்   வில்லி , நாயகி , நாயகன்   மூவரும்  சந்திக்க நேரும்போது   வரும்   காமெடி ஸீக்வன்ஸ்  ரசிக்க   வைக்கிறது 


3  பழக்கப்பட்ட  கதை  என்றாலும்   சம்பவங்கள்   நம்மை சிரிக்க  வைக்கின்றன 


4    நாயகி ,. வில்லி  இருவரின் கிளாமர் ,  பாடல்  காட் சிகளின்   பிரம்மாண்டம்  படத்ததுக்குப்பிளஸ் 


5  காமெடிப்படத்துக்கு  மிக முக்கியமான  தேவையான  வசனகரத்தா   உள்ளேன் ஐயா சொல்கிறார் .



  ரசித்த  வசனங்கள் 


1  ஒரு சண்டை நடக்கும்போது  அவங்கவங்க  வேலையைப்பார்த்துட்டு இருந்தா அவங்க பாரீனர்ஸ் , சண்டை யை  வேடிக்கை பார்த்துட்டு இருந்தா அவங்க  இந்தியன்ஸ் 


2  அடுத்தவங்க  சண்டையைப்பார்க்கும் ஆவல்  இருப்பதால் தான் மத்த ஊரை விட தமிழ் பிக்பாஸ் செம ஹிட் 


3   எப்படிங்க ஸ்பெயினில்   எம் டி   கையைக்காலைப்பிடிச்சு 


4 தப்பு செய்யாத கணவனே இல்லை , மனைவிக்குத்தெரியாம இருந்தாப்போதும்னு பயப்படுபவன் தான் புருஷன் 


5   நான்   வேணும்னே  செய்யலை 


 ஒவ்வொரு ஆம்பளையும் ஹோட்டலில்     சாப்பிட் ட  பின் சொல்லும்   சால்ஜாப்பு  இது 


6  கடவுள்  இரண்டு கண்களை படைத்ததே  எதிர் வீட்டு ஆண்ட் டியைப்பார்க்கத்தான் .


7   நாம்  எவ்வளவு  வெயிட்   என்பதை  பல்லக்கை  விட பல்லக்குத்தூக்குகிறவங்களுக்குத்தான் நல்லாத்தெரியும் 


8 ஸ்பெயினா? பெயினா?   நீயே   முடிவு பண்ணிக்கோ 


9  பொண்ணுங்க   நம்மால ஒரு பிரச்சனை வந்தா தாங்கிப்பாங்க, நாமே ஒரு பிரச்சனையா ஆனா தாங்கிக்க மாட் டாங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   எதனால்  அப்ரூவல் ஆகலை? என்பதை  ஒரு போன் போட்டுக் கேட்டிருக்கலாம் , மெயில்  பண்ணி  இருக்கலாமே ? 


2 குடி போதையில்  தான்  தப்பு செய்ததாக  நாயகன்   க்ளைமாக்சில்  சமாளிப்பது  ஏற்புடையது  அல்ல . தனக்குத்திருமணம்  ஆனதை  எதனால்   வில்லியிடம்   மறைத்தான்  ? என்பதற்கு பதில் இல்லை 


3  நாயகன் , வில்லி   இருவரும்  ஒன்றாக   சுற்றுகிறார்கள் , அடிக்கடி  சந்திக்கிறார்கள் . ஆனால்  நாயகனிடம் வில்லி  போன்  நெம்பர்  கூட இல்லை என்பதை நம்ப முடியவில்லை . வில்லியுடன்  நெருக்கமான  உறவு நடந்த பின் தான்  போன்  நெம்பர்  வாங்குகிறான் 


4  நாயகனுடன்  உறவு  கொண்ட   பின்   வில்லி   அதை டேக்  இட்   ஈசியாக   எடுத்துக்கொள்கிறாள் , ஆனால்  நாயகன்   உடன்  சக்களத்தி  சண்டை   போடுவது  நம்ப முடியவில்லை 


5  முன்  பின்  அறிமுகம்   இல்லாத   நாயகன் , வில்லி   இருவரும் சந்திக்கும்போது  ஒரே  கலர்  டிரஸில்   இருப்பது   எப்படி ?  அதைப்பற்றி   இருவரும் சிலாகித்துக்கொள்ளவே இல்லையே ? 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நமக்குப்பழக்கமான  டூயல்  சிம்  போன் கதை தான் . காமெடி , ஆட்டம் , பாட் டம்   என ஜாலியாகப்போவதால் பார்க்கலாம் . ரேட்டிங்க்  2.5 / 5 


Bhartha Mahasayulaku Wignyapthi
Theatrical release poster
Directed byKishore Tirumala
Written byKishore Tirumala
Produced bySudhakar Cherukuri
Starring
CinematographyPrasad Murella
Edited byA. Sreekar Prasad
Music byBheems Ceciroleo
Production
company
SLV Cinemas
Release date
  • 13 January 2026
Running time
142 minutes[1]
CountryIndia
LanguageTelugu

Monday, April 13, 2026

லீடர் (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்பை ஆக்சன் திரில்லர்)


 லீடர் (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்பை ஆக்சன் திரில்லர்)


ட்ரெய்லர் பார்த்து விட்டு இது விஸ்வாசம் டைப் செண்டிமெண்ட் கலந்த ஆக்சன் மூவி என்று நினைத்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியைத்தந்திருக்கிறார் இயக்குநர்  துரை செந்தில் குமார்

.இது ஸ்பை ஆக்சன் திரில்லர்.படத்தின் பின் பாதியில் தான் அந்தத்திருப்பமே நமக்குத்தெரிகிறது.

இயக்குநர்  துரை செந்தில் குமார் சினிமா வாழ்க்கையைக்கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் சிவகார்த்திகேயன் நடித்த  எதிர் நீச்சல்(2013), காக்கி சட்டை (2015),தனுஷ் நடித்த கொடி(2016),பட்டாஸ்(2020) ,சூரி நடித்த கருடன்(2024) என 5 படங்களும் கமர்ஷியல் ஹிட்ஸ் தான் எல்லாமே.

லெஜெண்ட் என்ற தோல்விப்படம் கொடுத்த லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த இந்தப்படம் ஹிட் ஆகுமா?என்பதைப்பார்ப்போம்.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு கார் மெக்கானிக்.மனைவி இறந்து விட்டார்.ஒரே ஒரு மகள்.மகள் மீது அதீதப்பாசம் கொண்டவர்.மகள் பிறவியிலிருந்தே செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி.

கார் மெக்கானிக்காக இருக்கும் நாயகன் கார் சர்வீஸ் விட்டது சம்பந்தமாக அடிக்கடி துறைமுகத்துக்கு வருகிறார்.


தூத்துக்குடிதான் கதைக்களம்.வில்லன் தூத்துக்குடியில் துறைமுகத்தைத்தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.அங்கே சட்டத்துக்குப்புறம்பாக ஒரு கண்ட்டெய்னர் வருகிறது


நாயகி ஒரு போலீஸ் ஆபீசர்.வில்லனைப்பிடிக்க வேண்டும் என்பதை தன் லட்சியமாகக்கொண்டவர்.நாயகியின் நோக்கம் நிறைவேற சம்பந்தமே இல்லாமல் நாயகனை ஒரு சிக்கலில் மாட்ட விடுகிறார். நாயகனின் மகளைக்கடத்தி வில்லன் தான் கடத்தியதாக நாயகனை நம்ப வைத்து நாயகனை வில்லனுக்கு எதிராகத்திருப்பி விடுகிறார்

இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மொத்தக்கதையுமே.


நாயகன் ஆக லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கிறார்.முதல் படத்தில் கோட்டை விட்டதை இதில் சரி செய்து விட்டார் என்றே சொல்லலாம்.இருந்தாலும் நடிப்பில் இன்னமும் கவனம் தேவை.

நாயகி ஆக ஆண்ட்ரியா. கச்சிதம்.அவரது உயர் அதிகாரி ஆக வரும் ஷாம்  நடிப்பும் ஓக்கே ரகம்.


வில்லனாக வரும் சந்தோஷ் பிரதாப் மிரட்டி இருக்கிறார்.

நாயகன்,நாயகி,வில்லன் போக  மலையாள நடிகர் லால்,  விடிவி கணேஷ் ,ஐஸ்வர்யா பாஸ்கரன்,ஜார்ஜ் மரியான் ,அறந்தாங்கி நிஷா ,மகாநதி சங்கர் என்று ஒரு பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.அனைவர் நடிப்பும் ஓக்கே ரகம்.

ஜிப்ரானின் இசையில்  10 பாடல்கள்.பயப்பட வேண்டாம்.எல்லாம் 2 நிமிட 3 நிமிடப்பாடல்கள் தான்.பரவாயில்லை ரகம்.பின்னணி இசை  தெறிக்கிறது.

ஒளிப்பதிவு எஸ் வெங்கடேஷ்.காட்சிகளை பிரம்மாண்டமாகக்கண் முன் நிறுத்துகிறார்.பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் கில்  விறுவிறுப்பாகவே இருக்கிறது.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் துரை செந்தில் குமார்

சபாஷ்  டைரக்டர்


1 நாயகி தான் ஒரு ஸ்கெட்ச் போட்டு நாயகனை வில்லனுக்கு. எதிராகத்திருப்பி விடுகிறார் எனப்பார்த்தால் ஸ்கெட்ச் போட்டது நாயகி இல்லை ,நாயகன் என ட்விஸ்ட் கொடுத்த விதம் அருமை.

2 மகளைக்கடத்தியவர்களைப்பழி வாங்குவது மகளை மீட்பது தான் கதை என ட்ரெய்லர் பார்த்தவர்களை நினைக்க வைத்து பின் பாதியில்  3 ட்விஸ்ட்கள் வைத்தது அருமை.

3 நாயகனுக்கு ஒரு சைக்காலஜிக்கல் பிராப்ளம் இருக்கிறது.யாரைப்பார்த்தாலும் ஒருவர் போலத்தான் தோன்றும் என்ற விஷயத்தையும், மகளுக்கு செவிட்டு மிஷின் மாட்டவில்லை என்றால் காது கேட்காது என்ற  விஷயத்தையும் வைத்து க்ளைமேக்சில்  பிரில்லியண்ட் ஆக சீன் அமைத்த விதம் அருமை.

4 நாயகன் தன் மகளிடம் உன் அம்மாவிடம் பேச ஏ ஐ டெக்னாலஜி மூலம் ஒரு ஐடியா வெச்சிருக்கேன் என சொல்லும் காட்சியும் ,அதன் படமாக்கமும் டச்சிங்க்

5 ஹிந்திப்படமான கில் படத்தில் வருவது போல ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாம் அதகளம்.மேக்கிங்க் ஆகவும் நல்ல அவுட்புட்.


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1. அரதப்பழசான கதைதான். திரைக்கதை தான் கொஞ்சமாவது காப்பாற்றுகிறது


2 எனக்கு ஏழு கண்ட்டெய்னர் வேண்டும் என நாயகன் டிமாண்ட் வைத்த அடுத்த நிமிடமே  அவர் கேட்டது கிடைப்பது காதில் பூ.

3  துப்பாக்கிச்சூடு மிகப்பெரிய அளவில் நடக்க இருக்கும் ஒரு கலவர பூமிக்கு நாயகன் தன் மாமியாரை அழைத்துப்போனது எதற்கோ?

4 பின் பாதியில் ஸ்பை ஆக்சன் டீமில் இருக்கும் ஆட்கள் செய்யும் காட்சிகள் கொஞ்சம் இழுவை தான்

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வழக்கமான ஒரு ஆக்சன் மசாலாதான். லெஜெண்ட் அளவுக்கு மோசம் இல்லை.கொடி ,காக்கி சட்டை அளவுக்கு பிரமாதமும் இல்லை. ஓக்கே ரகம்.ரேட்டிங்க் 2.5/ 5

Sunday, April 12, 2026

LIK லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)


விக்னேஷ் சிவனின் முதல் படம் போடா போடி(2012) ஓக்கே ரகம்,நானும் ரவுடி தான் (2015) செம ஹிட் ,தானா சேர்ந்த கூட்டம்(2018) சராசரி,காத்துவாக்குல ரெண்டு காதல்(2022) பரவாயில்லை ரகம்.நயன் தாராவின் தயாரிப்பில் உருவான இந்தப்படம் எப்படி?என்று பார்ப்போம்.

                                 


ஸ்பாய்லர்  அலெர்ட்

கதை நடக்கும் கால கட்டம் 2040.

வில்லன் ஒரு டிஜிட்டல் உலகத்தின் முடிசூடா மன்னன்.இவர் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று ஒரு ஆப் கண்டுபிடிக்கிறார்.கல்யாண மாலை நிகழ்ச்சி மூலம் வரன் பார்ப்பது போல இந்த ஆப் மூலம் காதலர்கள் தங்கள் ஜோடிப்பொருத்தம் அறிந்து கொள்ளலாம்.


நாயகி ஒரு அரை லூஸ்.ரீல்ஸ் பைத்தியம்.வளர்ப்பு சரியில்லை.நாயகியின் அம்மாவும் சோசியல் மீடியா அடிக்ட்.லைக்ஸ் ,கமெண்ட்ஸ் தான் இவர்கள் இருவரது லட்சியம்

நாயகனின் அப்பா பசுமை உலகம் நிர்வாகி.செல்போனால் குற்றம் செய்த நபர்களை அரசாங்கம் செல் இல்லாத உலகமான பசுமை உலகத்துக்கு அனுப்புகிறது.நாயகனின் அப்பாவுக்கு செல்போன் பிடிக்காது.காரணம் அவரது மகள் செல்பி எடுத்துக்கொண்டே சாலையைக்கடக்கும்போது விபத்தில் மரணம் அடைந்தவர்.

நாயகனின் அப்பா நாயகனையும் தன்னைப்போலவே  செல் போன் யூஸ் செய்யாமல் இருக்கும்படி வளர்க்கிறார் 

நாயகன் நாயகியைப்பார்த்ததும் காதல் கொள்கிறான்.நாயகியோ எல் ஐ கே ஆப் செக் செய்வோம்.இருவருக்கும் பொருத்தம் இருந்தால் ஓக்கே  என்கிறார்.


ஆனால் ஆப் பொருத்தம் இல்லை என்று சொல்லி விடுகிறது.இதனால் கடுப்பான நாயகன் வில்லனிடம் சவால் விடுகிறான்.இந்த ஆப்  பத்து பைசாவுக்குப்பிரயோஜனம் இல்லை என்பதை நிரூபிக்கிறேன் என்கிறார்.

இடை வேளை.இதற்குப்பின் நாயகன் சவாலில் ஜெயித்தாரா?என்பது மீதிக்கதை


நாயகன் ஆக பிரதீப் ரங்கநாதன்,அதே நடிப்பு ,அதே முக பாவனை ,அதே பரட்டைத்தலை,அதே கழுவாத முகம்.ஆனால் யூத் கூட்டம் கை தட்டுகிறது. அவர் செய்யும் கூலிங்க் கிளாஸ் ஸ்டைல் எல்லாம் 1975ல் ரஜினொ செய்து விட்டார்.டான்ஸ் ஸ்டெப்ஸ் குட்.

நாயகி ஆக க்ரித்தி ஷெட்டி.இவரது ஆடை வடிவமைப்பு அருமை.காஸ்ட்யூம் டிசைனருக்கு பாராட்டு.ஆனால் நடிப்பு சுத்தமாக வரவில்லை.


வில்லன் ஆக எஸ்  ஜே சூர்யா ஆர்ப்பாட்டமான நடிப்பு.ஆனால் இடைவேளைக்குப்பின் எடுபடவில்லை.

நாயகனின் அப்பாவாக சீமான் பண்பட்ட நடிப்பு.நாயகியின் அம்மாவாக மாளவிகா ஓவர் மேக்கப்,ஓவர் ஆக்டிங்க்.

காமெடியன் ஆக யோகிபாபு ஆனால் சிரிப்பு வரவில்லை.

நாயகனின் தோழி ஆக வரும் கவுரி கிஷன் நாயகியை விட அழகாக இருக்கிறார்.தேவை இல்லாமல் இவருக்குக்கிளாமர் காட்சி எதற்கு?

ஆனந்த் ராஜ் ,சுனில் ,மிஸ்கின்,ரங்கராஜ் பாண்டே போன்ற வீணடிக்கப்பட்ட நல்ல கலைஞர்கள் பாவம்.


அனிரூத்தின் இசையில் 6 பாடல்கள்.அவற்றில் 3 செம ஹிட்.2 ஓக்கே ரகம்.பின்னணி இசை அருமை.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டம்.ராகவின் எடிட்டிங் கில்  157 நிமிடங்கள் படம் ஓடுகிறது.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் விக்னேஷ் சிவன்

சபாஷ்  டைரக்டர்

1  அனிரூத்தின் இசையில் 5 பாடல்கள் ஹிட்.பின்னணி இசை படத்தைத்தாங்கி நிற்கிறது.

2 எஸ் ஜே சூர்யா டான்ஸ் ஆடும் காட்சியில் அரங்கு அதிரும் கை தட்டல்.

3 என்னதான் பிரபுதேவா உடல் மொழி,தனுசின் முக பாவனை ,ரஜினி ஸ்டைல் என காப்பி அடித்தாலும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு அருமை

4 மாடர்ன் சென்னையை வடிவமைத்த விதம் ,அமெரிக்கரை குடை விற்பவராகக்காட்டி நக்கல் அடித்த விதம் ,ஒளிப்பதிவு பிரம்மாண்டம் ,ஆர்ட் டைரக்சன் அருமை.

செம  ஹிட்  சாங்க்ஸ்

1 தீமா தீமா

2 பட்டுமா

3 எனக்கென யாரும் இல்லையே?

4 அட வாடி

5 பூக்கட்டும்


  ரசித்த  வசனங்கள் 


1 எனக்கு உன்னை விட நீ என் மேல வெச்சிருக்கும் லவ் பிடிக்கும்,ஏன்னா என்னால இதுவரை அனுபவிச்சுப்பார்க்காத ஒரு உணர்வு அது


2 ஹார்ட் - இந்த ஒரு ஏரியா கரெக்டா இருந்தா எல்லாமே கரெக்டா இருக்கும்.

3 எவ்ளோ பெரிய பிரச்சனையா இருந்தாலும் நேருக்கு நேர் பேசினா பிராப்ளம் சால்வ்டு


4  சோஷியல் மீடியாவில் எதிரியைப்பழி வாங்க நினைச்சவனும்,அதுல வர்ற கமெண்ட்சை நோண்டி நோண்டிப்படிச்சவனும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை.

5  இவ ஏன் லூஸ் மாதிரி பேசிக்கிட்டு இருக்கா?


ஏன்னா அவ நிஜமாவே லூஸ் தான்

6  பொண்ணுங்களோட வீக்னெஸ் இன்செக்யூரிட்டி

7  டேட்டாஸ் = டைமண்ட்ஸ் 

8  ஒரு அப்பா வேணாம்னு சொன்னா அதுக்கு  100 காரணம் இருக்கும்,1000 அனுபவம் இருக்கும்

9  வெளிநாட்டுப்பானம் கொக்கோகோலாவை ஸ்ட்ரா போட்டுத்தலை  குனிந்து குடிக்கறோம்.இளநீரை அண்ணாந்து தலை நிமிர்ந்து குடிக்கிறோம்

10  நல்லவன் மாதிரி நடிக்கறதோட நிறுத்திக்குங்க,அதை நம்ப வைக்க முயற்சி பண்ண வேண்டாம்

11 உடம்பை எல்லாரும் பார்க்கற மாதிரி பார்த்துக்கோ ( ஒரு அம்மா மகளுக்குத்தரும் அட்வைஸ்,அடடா,என்ன ஒரு அம்மா கேரக்டர்)


12. இண்ட்டர்நெட்  இல்லாத இன்ப்ளூயன்சர்  வாழ்க்கை என்ன ஆகறது?

13. லவ்வர்ஸ்னா பிரேக்கப் ஆகும் ,தம்பதின்னா டைவர்ஸ் ஆகும் ,ஆனா நண்பர்களுக்குள் மட்டும் பிரிவே வராது.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 கோர்ட்ல ஜட்ஜ் முன் வில்லன் சேர் போட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பது எப்படி ?

2  ஒரு ஆப் (App)பைத் தடை பண்ண கோர்ட் சொல்லும் கண்டிஷன் மடத்தனமானது.சப்ஸ்க்ரைபர்ஸ் டபுள் ஆனா ஓக்கே ,பாதியாக்குறைந்தா தடை என்பது நகைக்க வைக்கிறது.

3 யோகி பாபு வுக்குக்காமெடி வரவில்லை.அது பரவாயில்லை,அவர் பேசும் டபுள் மீனிங் டயலாக்ஸ் ஓவர்,போட்டு வரும் பெண் வேடம் ரண கொடூரம்.

4  நாயகியைப்பார்த்ததும் நாயகனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து இதயம் துடிப்பதை நிறுத்துவது ஓவரோ ஓவர்

5  நாயகன் வில்லனிடம் இண்ட்டர்வெல் பிளாக்கில் விடும் அதே சவாலை இண்ட்டர்வெல் முடிந்து அரை மணி நேரம் கழித்து மீண்டும் விடுவது ஏன்?

6 நாயகியின் அம்மா மாளவிகாவுக்கு ஓவர் மேக்கப்.நடிப்பும் ஓவர் ஆக்டிங்க்.

7 வில்லன் மனிதர்களை வெறுப்பவன்,மனிதனை  நம்ப மாட்டான், ஆனால் அவன் கண்டு பிடித்த ஆப் க்கு மனிதனின் குரல் எதற்கு? கணிணியின் குரல் போதாதா?

8 வில்லன் நாயகியிடம் இனி அவனுடன் இணையக்கூடாது,மீறினால் அவன் உயிருக்கு ஆபத்து என மிரட்டுவது 1970 நம்பியார் கால டெக்னிக்.

9. கம்ப்யூட்டரால் வடிவமைக்கப்பட்ட ஆப் vs மனித இதய உணர்வுகள். இரண்டில் எதற்கு வெற்றி ?என்பதுதான் திரைக்கதை செல்ல வேண்டிய பாதை ,ஆனால் நாயகன் vs வில்லன் ஒன் டூ ஒன் சோலோ பைட் என மாறுவது செம காமெடி.

10 காதல் கதையில் நாயகியைப்பார்த்து ஆடியன்சுக்கு லவ் வர வேண்டும்.ஆனால் நாயகியின் முக சேஷ்டைகள்,செய்யும் காரியங்கள் பார்த்து என்ன?இவ்ளோ மட்டமான ரசனையா?என்ற எண்ணம் தான் வருகிறது


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - விக்னேஷ் சிவன் இயக்கிய 5 படங்களில் தர வரிசையில் இதுதான் கடைசி ரேங்க்.பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த நான்கு படங்களில் இது தான் கடைசி  ரேங்க்.

முதல் பாதி பரவாயில்லை ,பின் பாதி அய்யோ சாமி ,முடியவில்லை.விகடன் மார்க் யூகம் 41.குமுதம் ரேங்க்கிங் சுமார்.அட்ரா சக்க  ரேட்டிங் 2.25 /5


Love Insurance Kompany
Theatrical release poster
Directed byVignesh Shivan
Written byVignesh Shivan
Produced byNayanthara
S. S. Lalit Kumar
Starring
CinematographyRavi Varman
Edited byPradeep E. Ragav
Music byAnirudh Ravichander
Production
companies
Distributed byRed Giant Movies
Release date
  • 10 April 2026
Running time
157 minutes[1]
CountryIndia
LanguageTamil
Budgetest. 95 crore[2]
Box office9.93 crore[3]

Saturday, April 11, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10/4/2026. ஏப்ரல் 2 ம் வாரம் தமிழ்ப்புத்தாண்டு ரிலீஸ் படங்கள் ஒரு பார்வை

 இந்த வாரம் 3 நேரடித்தமிழ்ப்படங்கள்,ஒரு மலையாளப்படம் தமிழ் டப்பிங் கில். ஆக மொத்தம் 4 தமிழ்ப்படங்களும் ,2 ரீ ரிலீஸ் படங்களும் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு 10/4/2026 அன்று வெளியாக இருக்கிறது



1. LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி)

இதற்கு முதலில் எல் ஐ சி என்று தான் டைட்டில் வைத்தார்கள்.லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்பது தான் டைட்டிலின் விரிவாக்கம்.ஆனால் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி எதிர்க்கவே எல் ஐ கே ஆக்கி விட்டார்கள்.


விக்னேஷ் சிவன் + சிவகார்த்திகேயன் காம்போவில் இந்தப்படம் உருவாக இருந்தபோது அதன் கதை வேறு.எதிர் காலத்துக்குப்போய் தனக்கான மணப்பெண் யார் என்று பார்த்து வந்து நிகழ்காலத்துக்குத்திரும்பும் நாயகன் செய்யும் ரகளைகள் தான் ஒன் லைனாக இருந்தது.ஆனால் ஹீரோ மாறி விட்டார் என்றதும் கதையும் மாறி விட்டது.

இந்தப்படம் ரெடி ஆகி 18/9/2025 அன்றே ரிலீஸ் ஆக இருந்தது.பல்வேறு காரணங்களால் இதுவரை நான்கு முறை தள்ளிப்போனது.


பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து  100 கோடி கிளப் படங்கள் 3 தந்த முதல் தமிழ் சினிமா ஹீரோ என்ற அந்தஸ்தைப்பெற்றவர்.அவர் திரையில் வந்து நின்றாலே கரகோஷம் ,ஆரவாரம் தான்.

அந்தக்காலத்தில் ரஜினி செய்த ஸ்டைல்கள் ,பிரபுதேவாவின் முக பாவனைகள் ,தனுசின் உடல் மொழி. இந்த மூன்றின் கலவை தான் இவர்.

படத்தின் ட்ரெய்லரைப்பார்த்தபோது யூகிக்க வைத்த கதை.

கதை நடக்கும் காலகட்டம் 2040 (சமீபத்தில் வந்த மலையாள சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமான மரண மாஸ் படத்திலும் கதை நடக்கும் கால கட்டம் 2040)

வில்லன்  காதலர்களுக்கான ஒரு ஆப் கண்டுபிடிக்கிறான்.அந்த ஆப்பில் ஜாதகப்பொருத்தம் பார்ப்பது போல ஜோடிப்பொருத்தம் பார்க்கலாம்.வில்லனின் ஆப்  அமோக வரவேற்பைப்பெறுகிறது.

நாயகி ஒரு சோசியல் மீடியாப்பைத்தியம்.பேஸ்புக் ,இன்ஸ்டா வில் லைக்ஸ் ,கமெண்ட்ஸ்  வாங்குவதற்காக அல்லும் ,பகலும் அயராது பாடுபடுபவர். வில்லனின் புதிய ஆப் அவரது கவனத்தைக்கவர்கிறது.

நாயகன் நாயகியைப்பார்த்ததுமே மனதைப்பறிகொடுக்கிறான்.அவனுக்கு இந்த ஆப்பில் நம்பிக்கை இல்லை.

நாயகி அந்த ஆப் மூலம் நாயகனுடன் தனக்கு ஜோடி சேர பொருத்தம் இருக்கிறதா?என்று பார்க்கும்போது  பொருத்தம் இல்லை என வருகிறது.வில்லனின் சதி வேலை தான் இது.

நாயகன் வில்லனை மீறி எப்படி நாயகியைக்கரம் பிடிக்கிறான்?என்பது தான் மீதித்திரைக்கதை.

 வில்லன் ஆக  எஸ் ஜே சூர்யா ,நாயகன் ஆக பிரதீப் ரங்கநாதன் ,நாயகி ஆக க்ரித்தி ஷெட்டி  நடிக்கிறார்கள் 

சீமான் இதில் ஒரு காமெடியன் ரோல் செய்திருக்கிறார்.யோகிபாபு,சுனில்,மிஸ்கின் என்று காமெடியன்ஸ் பட்டாளம் களை கட்டும் போல் தெரிகிறது.

மாடர்ன் உலகில் நவீன விஞ்ஞானக்கண்டுபிடிப்புகளால் மன உளைச்சல் அடைந்தவர்களைப்பேணி காக்கும் தன்னார்வல சிறைக்கைதிகள் காப்பகம் நடத்தி வருபவர் தான் சீமான்.இவரது கேரக்டர் டிசைன் நித்யானந்தாவை கிண்டல் செய்வது போல் இருக்கிறது.

ரசித்த வசனங்கள்

1 வில்லன் -யார் யார் கூட சேர்ந்தா நைஸ் ,யார் கூட சேர்ந்தா நாய்ஸ் என்பதை இந்த ஆப் கண்டுபிடிச்சு சொல்லும்

2 நாயகி - ஒரு லைக் ,ஒரு கமெண்ட் ,ஒரு ஷேர் வாங்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?

3 நாயகன் - முதல்ல எல்லாம் ஜாதில ஒத்துக்கலை ,ஜாதகத்தில் ஒத்துக்கலை ,வீட்ல ஒத்துக்கலை ,நாட்ல ஒத்துக்கலை,ஊர்ல ஒத்துக்கலை,அப்பன் ஒத்துக்கலை ,ஆத்தா ஒத்துக்கலைன்னு சொல்லிட்டு திரிஞ்சீங்க,இப்போ ஆப் ஒத்துக்கலைன்னு புதுசாக்கிளம்பி இருக்கீங்களா?டிசைன் டிசைனா யோசிப்பீங்களா?எப்படி பிரேக்கப் பண்ணலாம்னு?

4 ஒரு ஹார்ட்டோட வேலையை எந்த ஒரு ஆப்பாலயும் பண்ண முடியாது.இதை ப்ரூப் பண்ணிக்காட்றேன்

படத்தில் நாயகன் ,,வில்லன் இருவர் நடிப்பும் அருமையாகத்தான் இருக்கிறது.ஆனால் நாயகியின் கேரக்டர் டிசைன் கொஞ்சம் அரை லூஸ் போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அவரை ரசிக்க முடியவில்லை.

மற்றபடி இயக்குநர் விக்னேஷ் சிவன் டச் இருக்கிறது.ஒளிப்பதிவு ,செட்டிங்க்ஸ்,ஆர்ட் டைரக்சன் பிரமாதம்.

அனிரூத் தான் இசை என்பதால் பிஜி எம் தெறிக்கும் என எதிர் பார்க்கலாம்



2. TN 2026 (தங்க நட்சத்திரம்)

சமீபத்தில் ரிலீஸ். ஆகி ஹிட் ஆன தலைவர் தம்பி தலைமையில் பட இயக்குநர் உமாபதி ராமய்யா  + சதுரங்க வேட்டை புகழ் நட்டி என்கிற நடராஜ் காம்போவில் உருவான படம்.

இந்தப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தான் நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கும்  முதல். படத்தின் தயாரிப்பாளரும் கூட

தலைவா படத்தில் டைம் டூ லீடு என்று  கேப்சன் போட்டிருந்தது போலவே இந்தப்படத்துக்கும் கேப்சன் போட்டிருந்ததால் விஜய் ரசிகர்கள் இந்தப்படத்தைக்கொண்டாடினார்கள்.ஆனால் டீசர் பார்த்ததும் இது விஜய்க்கு எதிரான படம் என்பதை உணர்ந்தார்கள்.விஜயின் அரசியல் வருகையைக்கேலி செய்யும் படம் இது.

நடிகர் விஜயின் அரசியல் வாழ்க்கையை கிண்டல் செய்யும் கதை போல் தெரிகிறது.நாயகனின் கெட்டப்,உடல்மொழி அப்படியே விஜய் யை காப்பி அடித்து இருக்கிறது.

இதில் புஸ்சி ஆனந்த் ஆக தம்பி ராமய்யா (இயக்குநர்  உமாபதி ராமய்யாவின் அப்பா),செங்கோட்டையன் வேடத்தில் எம் எஸ் பாஸ்கர் ,சீமான் வேடத்தில் ரெடின் கிங்க்ஸ்லீ. ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.


ரசித்த வசனங்கள்

1 இதுவரை உங்களைத்தவிர்த்து விட்டால் சினிமா நியூஸ் கிடையாது.இனி உங்களைத்தவிர்த்து விட்டால் அரசியல் நியூசும் கிடையாது.

2 நாட்டில் வாழனும்னு நினை.தப்பில்லை. ,நாட்டை ஆளனும்னு நினைக்கறியே?தப்பில்லை?( சீமான் விஜயைப்பார்த்துக்கேட்பது போல் வசனம்)
3 கூத்தாடியா வந்தவனை எல்லாம் தலை மேல் தூக்கி வெச்சு தலைவன் ஆக்கிக்கொண்டாடறீங்க

4 எம் ஜி ஆர் எல்லாம் கட்சி ஆரம்பிச்சதும் எப்படி சி எம் ஆனாரு?எங்க. தங்கத்தலைவனும் அதே நினைப்புல  தானே இருக்காரு?

5 ஓம் சக்தி பராசக்தி

புரிஞ்சிடுச்சு.இதுக்கு மேல ஒண்ணும் சொல்ல வேணாம்

படத்தில் நாயகன் இரு வெவ்வேறு நடிகைகளுடன் ஜோடியாக இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

கரூர் சம்பவம் ட்ரெய்லரில் இல்லை.மெயின் படத்தில் இருக்கலாம்

மொத்தத்தில் இது பரபரப்பான படமாக இருக்கக்கூடும்



3. மனிதன் தெய்வம் ஆகலாம்

இயக்குநர் செல்வராகவன் நாயகன் ஆக நடிக்க இயக்குநர்  டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி இருக்கும் படம் இது.இவர் ஏற்கனவே தூக்குதுரை,ட்ரிப்ஸ் ஆகிய படங்கள் இயக்கியவர்.

நாயகி ஆக குஷி ரவி ,கவுசல்யா,மைம் கோபி,ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.


இதன் ட்ரெய்லரைப்பார்த்தபோது நாயகன் ,நாயகி இருவரும் எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத கிராமத்தில் வாழ்கிறார்கள்.

அழகாக இருக்கும் நாயகி அழகில்லை என்றாலும் ,மாறுகண் என்றாலும் பரவாயில்லை என நாயகனை மணக்க சம்மதிக்கிறாள்.
அரசியல் புள்ளி ஆன வில்லனுடன் சாமான்யன் ஆன நாயகனுக்கு ஒரு மோதல் ஏற்படுகிறது.வில்லனை மீறி தன் ஊருக்கு நல்லது நடக்க வைப்பது தான் கதை போலத்தெரிகிறது

ரசித்த வசனங்கள்

1 முக அழகில் என்ன இருக்கு?அனுசரித்துப்போகும் வாழ்க்கையில் தான் எல்லாம் இருக்கு

2 நீ நடந்த நடைக்கு நாலு சட்டி மண் அள்ளிப்போட்டிருந்தாக்கூட ரோடு ரெடி ஆகி இருக்கும்

3 இந்த ஊரில் மருத்தவ வசதி இல்லை ,கல்வி வசதி இல்லை,லைட் வசதி இல்லை ,ரோடு வசதி இல்லை.எதுவுமே இல்லை

4 உன்னோட உண்மையை வெளிச்சத்துக்குக்கொண்டு வா.அப்போ தான் அநீதி என்னும் இருட்டு நீங்கும்

இது ஒரு லோ பட்ஜெட் படம்.கிராமத்துக்கதை.



4. பள்ளிச்சட்டம்பி  

இது ஒரு மலையாளப்படம்.தமிழ் டப்பிங் கில் வெளியாகிறது.இந்தப்படம் மட்டும் ஒரு நாள் முன்னதாக 9/4 /2026 முதல்  வெளியாகிறது.

டோவினோ தாமஸ் +கயாடு லோஹர் ஜோடியாக நடிக்க உருவாகி இருக்கும் ஆக்சன் திரில்லர் படம் இது.டிஜோ ஜோஸ் ஆண்ட்டணி தான் இயக்குநர்.

வழக்கமாக மாடர்ன் டிரசில் மாடர்ன் கேர்ள் ஆகவே வலம் வந்த கயாடு லோகர் இதில் முதல் முறையாக தாவணி அணிந்து கிராமத்துப்பெண் ஆக வருகிறார்.

முரளி நடித்த வாட்டாகுடி இரணியன் படம் போல புரட்சி வீரனின் கதை போலத்தெரிகிறது.


நாயகன் சண்டைபயிற்சி தருபவனாக வருவதால் படத்தில் ஆக்சன் சீக்வன்ஸ் அதகளம் ஆக இருக்கும் போல் தெரிகிறது.


ரசித்த வசனங்கள்

1 மனுசனால் செய்ய முடியாத காரியத்தை தெய்வத்தால் செய்ய முடியும் என்று நம்புவதும் மூட நம்பிக்கை தான்
2. அந்த மண் நீரை வெந்நீர் ஆக்க அவன் வருவான்.



5. அமைதிப்படை (1994)

இயக்குநர் மணிவண்ணன் + சத்யராஜ் காம்போவில் சத்தமே இல்லாமல்  ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்ட படம் இது.

அரசியல் நையாண்டிப்படங்களின் மைல் கல் என்று சொல்லலாம்.

இதில் நாயகன் அமாவாசை ஆக வந்து தேங்காய் பொறுக்கிக்கொண்டு இருப்பவன் ஒரு அரசியல்வாதியிடம் அல்லக்கையாக சேர்ந்து  எம் எல் ஏ ஆகி  அரசியலில் புகழ் பெறும் கதை.

இதில் சத்யராஜ் நாயகன் ,வில்லன் என இரு வேடங்களில் கலக்கி இருப்பார்.நாயகனை விட வில்லனுக்குத்தான் அதிகக்காட்சிகள் இருக்கும்

இதில் கஸ்தூரி க்கு அல்வா கொடுத்து ஏமாற்றும் சீன் உலகப்புகழ் பெற்று அல்வா தருவது என்றாலே ஏமாற்றுவது என்று ஆனது.

அரசியல்வாதி ஆக வரும் மணிவண்ணன் பிறகு சத்யராஜிடமே எடுபுடி ஆக வருவது காமெடிக்கலக்கல்.


நாயகனுக்கு ஜோடி ரஞ்சிதா ,வில்லனுக்கு ஜோடி சுஜாதா.

இந்தப்படத்தின் ஆடியோ வசனக்கேசட் அந்தக்காலத்தில் ஏராளம் விற்றது.பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆன படம் இது

பிரபல வசனங்கள்

1. அமாவாசை

அதானே உன் பேரு?

அமாவாசை நல்ல நாள் என்பதால் வந்தேன்.பட் நம்ம பேரு நாராஜ சோழன் எம் ஏ 

2 அண்ணே அப்போ தாயம்மா?

அது யாரு?

தாய் என்றாலும் ,அம்மா என்றாலும் ஒண்ணு தான்னு சொல்றான் வேற ஒண்ணுமில்ல.

3  என்னப்பா?டெபாசிட் வாங்கிடுவியா?

வாங்கினாலும் சந்தோசம் தானுங்.வாங்கலைனாலும் சந்தோசம்தானுங

பின்னே?டெபாசிட் காசு என்னுதில்ல?

4. நம்ம வார்டுல கவுண்ட்டிங்க் நடக்கட்டும்,அப்போ  தெரியும்

கள்ள ஓட்டுப்போட்டதே அங்கே தான்


இளையராஜாவின் இசையில் பாடல்களும் ஹிட் தான்.

1. சொல்லி விடு வெள்ளி நிலவே 
2. எனக்கு உன்னை நினைச்சா மஜா மஜா 

3 முத்துமணித்தேர் இருக்கு
4 வெற்றி வருது
5 அட நானாச்சு
6 அம்மா தாயே

ஒரு சுவராஸ்யத்தகவல்.நடிகர் விஜய் அமைதிப்படை மாதிரி ஒரு படம் பண்ண ஆசைப்பட்டாராம்.இந்தத்தகவலை சத்யராஜே மேடையில் பகிர்ந்தார்.



6 தாம் தூம் (2008)

12பி இயக்குநர் ஜீவா இயக்கிய படம் இது.அவர் மறைந்து விட்டார்.

முழுக்க முழுக்க ரஷ்யாவில் படமாக்கப்பட்ட படம் இது.

ஜெயம் ரவி,கங்கனாரன்வத்,லட்சுமிராய் ,ஜெயராம் நடித்த படம் இது.

நாயகன் ஒரு டாக்டர்.ஒரு மருத்துவ மாநாட்டுக்காக  ரஷ்யா போகிறார்.அங்கே ஒரு பெண்ணைக்கொலை செய்ததாக ஒரு குற்றச்சாட்டு.மொழி தெரியாத நாட்டில் போலீசிடம் சிக்கிய நாயகன் கொலையாகியைக்கண்டு பிடிப்பது தான் கதை.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஹிட்.ஆனால் படம் ஹிட் ஆகவில்லை.ஆனந்த விகடன் 39/100 மார்க் கொடுத்திருந்தது.

பொதுவாக மெகா ஹிட் ஆன படத்தைத்தான் ரீ ரிலீஸ் செய்வார்கள்.முதல் ரிலீசில் தோல்வியைத்தழுவிய படத்தை ஏன் ரீ ரிலீஸ் செய்கிறார்கள்?என்பது தெரியவில்லை.


ஹிட் சாங்க்ஸ்

1 திக்கு திக்கு
2 அன்பே என் அன்பே
3 உய்யலாலோ உய்யலாலோ
4 சகியே
5 புதுப்புது
6 ஆழியிலே