Saturday, March 31, 2012

ஜெயா டி வி ஜாக்பாட் ஜாக்கெட்ஸ் ஒரு தரம் 2 தரம் 3 தரம் - குஷ்பூ பேட்டி காமெடி கும்மி




 1. ''சினிமாவில் மார்க்கெட் போன பின்னர்தான், நடிகர் - நடிகைகள் அரசியலில் அடி எடுத்துவைக்கிறார்கள் என்கிற பொதுவான குற்றச்சாட்டு குறித்து?''


சி.பி - விஜயசாந்தி, ரோஜா இவங்க வேணா அப்படி இருக்கலாம், ஆனா குஷ்புக்கு இன்னும் மார்க்கெட் இருக்கே? 



 ''புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மார்க்கெட் போன பிறகா அரசியலுக்கு வந்தாங்க? இல்லையே! அரசியல்ல பொறுப்புகளும் பதவியும் என்ன சும்மாவா கிடைக்குது இப்படி ஒரு தப்பான கண்ணோட்டம் உடைய எல்லாரும் அந்த எண்ணத்தை மாத்திக்கணும்!''

 சி.பி - கலைஞர் கட்சில இருந்துகிட்டே எம் ஜி ஆர் பற்றி பேசறீங்களே? உங்க கட்சில இருக்கற எத்தனையோ நடிக நடிகைகள் பற்றி சொல்லி இருக்கலாம். ஒரு முன் உதாரணத்துக்கும் சரி.. ஓட்டுக்கும் சரி, எம் ஜிஆர் எல்லாருக்கும் தேவைப்படுது


2. ''தி.மு.-வில் ஸ்டாலின் ஆசியோடுதான் நீங்கள் விறுவிறு வளர்ச்சி அடைந்துவருகிறீர்கள்என்று கொதிக்கும் எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்களின் வேதனை உங்களுக்குப் புரியவாவது செய்கிறதா திருமதி குஷ்பு அவர்களே?''


சி.பி - குஷ்பூவோட வளர்ச்சிக்கும், ஸ்டாலினுக்கும் என்னய்யா சம்பந்தம்? ஹி ஹி 

 
 ''தளபதி என்னை எப்ப ஆசீர்வாதம் பண்ணினார், அவர்கிட்ட நான் எப்ப ஆசீர் வாதம் வாங்கப் போனேன்? நீங்க தி.மு.. தொண்டர்னு வேற சொல்றீங்க? ஒரு தி.மு.-காரரா இப்படிப் பேச நீங்கவெட்கப் படணும் . சரி, கட்சியில் நான் என்ன வளர்ச்சி அடைஞ்சிருக்கேன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். அடிப்படைத் தொண்டரா இருக்கேன். அவ்வளவுதானே? மேடையில் பேசுறதுக்கு நான் பொருத்தமான ஆள்னு தலைவர் நினைக்கிறார்.


 ஒரு நடிகை என்ற முறையில் கூட்டம் வரும். அப்படி வரும் தொண்டர்களிடம் கட்சியின் கொள்கை, அரசின் மக்கள் விரோதப்போக்கு, சர்வாதிகாரம்னு நிறைய விஷயங்கள் போய்ச் சேரும்னு கட்சியில் நினைக்கிறாங்க. அவ்வளவுதான். நான் கட்சியில் சேர்ந்ததுமே பெரிய பதவி யைத் தூக்கிக் கொடுத்திருந்தா, நீங்க சொல்றதை ஏத்துட்டு இருக்கலாம். அப்படி எதுவும் நடந்ததா என்ன?''


சி.பி - அப்படி எதுவும் நடக்காதா?ங்கற நப்பாசைல தான்  மேடம் பிட்டை போட்டு பார்த்தாங்க.. இதுவரை நடக்கலை.. ஹி ஹி 

http://www.pkp.in/images/Tamil%20Star%20Families/Kushboo_Sundar%20C_Family.jpg

3. ''சினிமா, அரசியலில் பேர், புகழ் எல்லாம் சம்பாதித்துவிட்டீர்கள். ஆனாலும், இந்நாள் வரை உங்கள் நிறைவேறாத ஆசை என்ன?''

 ''நம்புவீங்களா? சென்னையில் மின்சார டிரெயின்ல வாசல்ல நின்னுக்கிட்டு காத்துல முடி பறக்க டிராவல் பண்ணணும்னு ஆசை. ஆனா, அது நிறைவேறுவதற்கான சந்தர்ப்பம் வரவே இல்லை. 'நகரம்படத்தின் ஷூட்டிங் பறக்கும் டிரெயின்ல நடந்தப்ப 'அட... நம்ம ஆசை நிறைவேறப்போகுதுனு சந்தோஷமா ஸ்பாட்டுக்குப் போயிட்டேன்


 ராத்திரி முழுக்க ஷூட்டிங். டிரெயின்ல ஏறி ஜன்னல் சீட்ல உக்காந்துக்கிட்டேன். டிரெயின் ஸ்டேஷனைத் தாண்டி அரை கிலோ மீட்டர் போகும். மறுபடி திரும்ப ஸ்டேஷனுக்கே ஓட்டிட்டு வந்திருவாங்க. இப்படியே ரெண்டு மூணு மணி நேரம் பண்ணிட்டு இருந்தாங்க. 'யப்பா... ரெண்டு மூணு ஸ்டேஷனைத் தாண்டியாச்சும் டிரெயினை ஓட்டிட்டுப் போங்கனு சுந்தர்கிட்ட சொன்னேன்


 ம்ஹும்... சார் மசியலை. 'ஷூட் பண்ண வந்திருக்கோமா... உனக்கு ஊர் சுத்திக்காட்ட வந்திருக்கோமா?’னு சிரிச்சுக்கிட்டே கேட்டார். நான் வெறுத்துப்போய் வீட்டுக்கு வந்து தூங்கிட்டேன். அன்னைக்கு ராத்திரி பறக்கும் டிரெயினை நானே ஓட்டிட்டுப் போற மாதிரி கனவு வந்தது. 'ம்க்கும்... டிரெயின்ல உக்காந்துகூடப் போக முடியலையாம்... இதுல இது ஒண்ணுதான் குறைச்சல்னு மறு நாள் எனக்கு நானே சிரிச்சுக்கிட்டேன்!''




4. ''உங்களுக்கும் நடிகர் கார்த்திக்குக் குமான ரிலேஷன்ஷிப் ரொம்ப ஸ்பெஷல்னு சொல்றாங்களே... அப்படி என்ன ஸ்பெஷல்?''  


சி.பி - தமிழனோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா  படத்தை முதல்லியே தனியா போய் பார்த்திருப்பான்.. ஆனாலும் படம் பார்த்தவன் கிட்டே கதை கேப்பான்.. ஹி ஹி 

 ''தமிழ் சினிமாவில் அறிமுகமாகறதுக்கு முன்னாடி இருந்தே கார்த்திக்கை எனக்குத் தெரியும். நான் சோழா ஷெரட்டன் ஹெல்த் கிளப்புக்குப் போவேன். கார்த்திக்கும் அங்க வருவார். அப்ப இருந்தே அவர் எனக்குப் பழக்கம். 'வருஷம் 16’ சேர்ந்து நடிச்சப்ப எங்க ஃப்ரெண்ட்ஷிப் இன்னும் இறுக்கமாச்சு


சி.பி - ஹி ஹி ஹி நெருக்கம் ஆச்சு.. இறுக்கம் ஆச்சு.. 


 அந்தப் படத்துக்கு அப்புறம் ரெண்டு வருஷம் நாங்க சேர்ந்து நடிக்கலை. அப்புறம் 'கிழக்கு வாசல்பண்ணும்போது எனக்கும் அவருக்கும் முட்டிக்கிச்சு. பெரிய சண்டை. 'இனி, உன்கூடப் படமே பண்ண மாட்டேன்னு அவரும், 'நீ நடிக்கிறேன்னா, நான் அந்தப் பட வாய்ப்பையே வேண்டாம்னு சொல்லிடுவேன்னு நானும் சொல்லிட்டுப் பிரிஞ்சிட் டோம்.  


அப்புறம் முழுசா மூணு வருஷம் நாங்க ஒரு வார்த்தைகூடப் பேசிக்கலை. மூணு வருஷ இடைவேளைக்கு அப்புறம் சேர்ந்து நடிச்ச படம்தான் 'விக்னேஷ்வர்’. அப்புறம் திரும்பவும் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். அப்போதிருந்து ஏதாவது ஒரு பிரச்னைன்னா, ரெண்டு பேரும்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்ணிக்குவோம்.


கார்த்திக், சுந்தர்கூட 'உள்ளத்தை அள்ளித் தாபடம் பண்ணிட்டு இருந்த சமயம். அப்போதான் நான் சுந்தர்கூட லவ்ல இருந்தேன். ஊட்டியில் அந்தப் பட ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்ப, நானும்  ஊட்டியில் ஒரு மலையாளப் பட ஷூட்டிங்கில் இருந்தேன். அப்ப சுந்தர்கிட்ட, 'இந்தப்பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா, உன் வாழ்க்கை அவ்வளவு அருமையா இருக்கும். நல்ல பொண்ணு. இவளை ஏமாத்தணும்னு நினைச்சா, நீதான் ஏமாந்து போவன்னார் கார்த்திக்.


சி.பி - அது வாழ்த்தா? சாபமா?


 சுந்தர், கார்த்திக்கை 'பாஸ்னுதான் கூப்பிடுவார். கார்த்திக்கைப் பத்தி யாராவது தப்பாப் பேசுனா, சுந்தருக்கு சட்டுனு கோபம் வந்திரும். எங்க குடும்பத்தில் கார்த்திக் ஒரு முக்கியமான மனிதர்!''

http://i271.photobucket.com/albums/jj121/jacktkp/JACKPOT%20PICS/1-11.jpg

5. ''ஜெ. ஆட்சியில் மக்களுக்கு நடந்த நல்லது என்ன?''


சி.பி - கரண்ட் பில் கட்ற வேலை மிச்சம், மக்கள் தொகை பெருகும் பிராசஸ் நடக்குது,கூடன் குளம் பிரச்சனையால எதிர் கால சந்ததிகளுக்கு புற்று நோய் பரிசு


 ''நானும் தமிழ்நாட்டுலதான் வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு எந்த நல்லதும் இதுவரை நடக்கலையே. எட்டு, பத்து மணி நேர பவர் கட், குழந்தைகளின் படிப்பு பாதிப்பு, போக்குவரத்து நெரிசல், விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, கடத்தல் அதிகரிப்பு. இது எல்லாம்தான் நல்லதுன்னா, தமிழகம்தான் இந்தியாவின் 'நல்லமாநிலம்!''  


6. ''அரசியல், குடும்பம், சீரியல் மூணையும் எப்படி சரிசமமா பேலன்ஸ் பண்றீங்க?''


 ''எந்த நேரத்தில் எதுக்கு முன்னுரிமை தரணும் என்பதில் தெளிவா இருக்கணும். அப்படி இருந்துட்டா, எல்லாமே ஈஸியா நடக்கும். நான் எப்பவும் குடும்பத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். ஆறு மணிக்கு மேல ஷூட்டிங் வெச்சுக்க மாட்டேன். சண்டே கண்டிப்பா லீவு. சென்னையில் இருந்தால் ஒரு நாள்கூட மிஸ் பண்ணாம, பசங்களை நான்தான் ஸ்கூலில் கொண்டுபோய் விடுவேன், கூட்டிட்டு வருவேன்.


 பொதுத் தேர்தல் பிரசாரம் சமயம்தான் என் பசங்க ளுக்கு ஃபைனல் எக்ஸாம். தலைவர், தளபதிகிட்ட அனுமதி வாங்கி, எக்ஸாம் இருந்தப்போ, பிரசார தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணி சென்னைக்கே வந்துட்டேன். ஏன்னா, என் பசங்களுக்கு இந்தி, சயின்ஸ் சொல்லித்தர நான் இருந்தே ஆகணும். உங்க குடும்ப, அலுவலகவேலைகளை இதே மாதிரி முன்னுரிமை கொடுத்துப் பிரிச்சுக்கிட்டு, ஷெட்யூல் போட்டு வேலை பார்த்தா, எவ்வளவு வேலை இருந்தாலும் ரிலாக்ஸா இருக்கலாம்!''



7. ''உங்க ஜாக்பாட் ஜாக்கெட்டுகளைப் பத்திலாம் கவிதையே எழுதியிருக்கேன். அதை எல்லாம் என்ன செஞ்சீங்க?''


சி.பி - உலகத்துலயே ஜாக்கெட் பற்றி கவிதை எழுதுன ஆள் இவர் ஒருத்தர் தான். உன் டார்கெட் என்னய்யா?

 ''டு பீ ஃப்ராங்க்... பல ஜாக்பாட் ஜாக்கெட்டுகளைப் பொது இடங்களில் அணியவே முடியாது

சி.பி - அப்போ நீங்க அணீஞ்ச இடம் பிரைவேட் இடமா? ஜெயா டி வி கூட பொது இடம் தானே? 



 ஷூட் முடிஞ்சதும் வீட்டு அலமாரியில சும்மாதான் இருக்கும். அதைத் தூக்கிப் போடவும் மனசு வரலை. ஒவ்வொண்ணும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவழிச்சுத் தைச்சது.

சி.பி - என்னமோ சொந்தக்காசுல செலவு பண்ண மாதிரி சலிச்சுக்கறீங்க?ஊரான் ஊட்டுக்காசு தானே?

 250 எபிசோடுகளுக்கு மேல ஜாக்பாட் பண்ணியிருக்கேன். அப்போ எவ்வளவு மதிப்புக்கு ஜாக்கெட்டுகள் இருக்கும்னு நீங்களே கணக்குப் போட்டுக்கங்க.

சி.பி - 250* 2*20,000 = 10,000,000  அடேங்கப்பா , ஒரு எப்பிசோடுக்கு 2 ஜாக்கெட்ட்னாலே 500 ஜாக்கெட்க்கு  ஒரு கோடி ஆகுதே



 அந்த ஜாக்கெட்டுகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும்னு எல்லாத்தையும் ஏலம் விட்டோம். வந்த பணத்தை கேன்சர் இன்ஸ்டிட்யூட், அநாதை இல்லங்கள், என்.ஜி.-க்களுக்குனு நல்ல காரியங்களுக்காகப் பிரிச்சுக் கொடுத்தோம்!''

சி.பி - பரவால்ல.. ஏதோ நல்ல காரியத்துக்கு உங்க ஜாக்கெட் பயன்பட்டதே.. அந்த வகையில் சந்தோஷம் தான்.. ஆனா எனக்கென்ன டவுட்னா அதை ஏலத்துல எடுத்தவங்க அதை அணீஞ்சு பெருமைப்பட்டுக்குவாங்களா? அல்லது மியூசியம் மாதிரி வெச்சு வாங்க வாங்க குஷ்பு ஜாக்கெட் பாருங்க அண்ணே.. இதுதான் அது.. அப்டினு அவங்க தனியா சம்பாதிப்பாங்களா?

http://www.pkp.in/images/Tamil%20Star%20Families1/Kushboo%20family.jpg


8. ''கோயில் கட்டிய தமிழர்கள், உங்களை முதலமைச்சராகவும் ஆக்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் அரசியலுக்கு வந்தீர்களா?''


சி.பி - அப்பாடா.. இதான்யா கேள்வி..  ஒரு படம் ஓடிட்டாலே அவனவன் நாற்காலி ஆசை ஆட்டி வெச்சு சி எம் கனவு காண்கறான். பல சூப்பர் ஹிட் படம் குடுத்தவங்களூக்கு அடுத்த ஜெ ஆகனும்னு ஆசை இருக்காதா? 


 ''சினிமாவுக்கு வரும்போது தமிழ்நாட்டு மக்கள் நமக்குக் கோயில் கட்டுவாங்கன்னு எதிர்பார்த்தா வந்தேன்? அரசியலுக்கும் அதேபோல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வந்திருக்கேன். என்ன நடக்கணுமோ அது நடக்கும்!''


9. ''இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (போல்டாக உண்மையைச் சொல்லுங்கள்... பார்ப்போம்!)''


 ''ஸ்பெக்ட்ரம் வழக்கு இப்ப உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கு. அதைப் பத்தி நான் பேசக் கூடாது. அந்தக் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை, பொய்னு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் தெரியும். அப்போதான் அதைப் பத்தி விவாதிக்க முடியும். இலங்கைப் போர்க் குற்றங்கள் கடும் கண்டனத்துக்கு உரிய விஷயம். இலங்கைக்கு எதிரா .நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க தி.மு.. கொடுத்த பிரஷர்தான் காரணம். இலங்கைப் போர் தொடர்பான செய்திகளைப் பார்க்கும்போதோ, படிக்கும்போதோ மனசு பதறுது. அந்தக் கொடூர கொலைகளுக்கு ராஜபக்ஷே பதில் சொல்லியே ஆகணும்!''



- அடுத்த வாரம்


''சினிமா, அரசியல் - எதில் நடிப்பது சிரமம்?''


''நீங்கள் தமிழச்சியாகவே மாறிவிட்டேன் என்கிறீர்கள். ஆனால், கவர்ச்சி உடையுடன் நமீதா பொது நிகழ்ச்சிகளில் வலம் வருவதை, 'அது அவருடைய சொந்த விஷயம்!’ என்று ஆதரிக்கிறீர்கள். இதுதான் தமிழ்ப் பண்பாடா?''


''தி.மு.-வில் மகளிர் அணிக்கு உரிய மரியாதை இருக்கிறதா?''


தொடரும் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfx2kjRgv88NJ9n8L_6rb4UdTVu1M122xcg06qjAO8Nh-t-ZRcpZyjoOX1dfuCTsYN4SuES-teSr2MQJJBSd0J_tSZt6I0lab0oF3J6BjxcJQKs87pewGz5TaPi2f6CXyLnRlz74i0u74/s1600/kushboo04.jpg


டிஸ்கி - இதன் முதல், 2 வது,3வது பாகம் படிக்க 


அதிமுக தண்ணீர் பந்தல் திறந்தா தேமுதிக ஊறுகாய் பந்தல் திறக்கும் - கேப்டன் அறிக்கை ( ஜோக்ஸ்)

1.இண்ட்டர்நேஷனல் ஃபிகர்ஸ் என நினைத்துக்கொள்ளும் சுமார் ஃபிகர்களே!நாங்கள் உங்களிடம் கடன் கேட்கப்போவதில்லை,ஏன் எப்பவும் உம்முனு இருக்கீங்க?முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வைங்க ஈஈ ஈ ஈ


----------------------------------

2. நான் 8வது படிக்கும் போதிலிருந்து மையல் (சைட் அடிக்கும் கலை)கத்துகிட்டு வரேன். இன்னும் கத்துகிட்டே தான் இருக்கேன்றது வேற விஷயம்# எ கீ


-----------------------------

3. அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கவேண்டும்-ஜெயலலிதா # தே மு தி கவினர் ஊறுகாய் பந்தல் திறக்க வேண்டும் - கேப்டன்


-------------------------------------

4. பெண் பார்க்க போறப்ப நம்மை பார்த்து பொண்ணு படறது வெட்கம், பொண்ணோட தங்கச்சி படறது நாணம்


-------------------------------

5. பல் டாக்டர் க்ளினிக் போனா அங்கே இருக்கற நர்ஸூங்க பல் தெரியாத மாதிரி கூட சிரிக்க மாட்டேங்கறாங்களே, ஏன்?


--------------------------------



6. தொலை நோக்குப்பார்வை என்பது பெண் பார்க்கப்போறப்பவே பெண்ணின் தங்கையை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து ரிசர்வ் செய்து வைப்பதே!

---------------------------

7. செவ்வாய் தோஷம் உள்ள பொண்ணுன்னா லிப்ஸ்டிக் போட்டா அலர்ஜின்னு அர்த்தமா?


----------------------------------

8. என் ஜாதகம் பார்த்து ஜோசியர் “ பல தார தோஷம் உள்ள ஜாதகம், பரிகாரம் பண்ணனும்னார்” நான் நைஸா வந்துட்டேன் ஹி ஹி 


--------------------------

9. காலைல 10 மணிக்கு அனுப்பின டி எம்க்கு நைட் 10 மணிக்கு ரிப்ளை அனுப்பி என்னை மாட்டி விட நினைக்கும் பெண் ட்விட்டரே! நற நற


-------------------------------

10. திருச்சியில் ஏப்ரல் 7 காங்கிரஸ் கட்சியின் முப்பெரும் விழா ஞானதேசிகன்# இருப்பதே முப்பது பேர்தான், நல்லா எண்ணிப்பாருங்க


------------------

11.பிரபல பெண் ட்வீட்டரிடம் உங்க மெயில் அட்ரஸ் ப்ளீஸ்னேன்.. கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்,கோவை ரயில் நிலையம், கோவைன்னு ரிப்ளை # அடங்கோ


-----------------------------------

12.  தலைவரே! வாக்கிங்க் தானே போவீங்க? ஏன் ரன்னிங்க்?


டேய் லூசு.. ரவுடிங்க என்னை கொலை பண்ண துரத்திட்டு வர்றாங்கடா


--------------------------------------

13. டாக்டர்.. வாக்கிங்க் போனா கொழுப்பு இருக்காதுன்னு சொல்றீங்க, ஆனா வாக்கிங்க் போனா உயிரே இருக்காது போல?


-------------------------------

14. கொலை நடந்தப்ப நீங்க வாக்கிங்க் போய்ட்டு இருந்ததா சாட்சிகள் சொல்லுது. புரியலையே?


 கைதி - நான் கொலை செஞ்சதே என் கூட வாக்கிங் வந்தவரைத்தான்

---------------------------------------

15. தாழ்வு மனப்பான்மையை தவிர்க்க ஃபிகர்கள் லோ ஹிப் சேலை அணியத்தேவை இல்லை ஹி ஹி

------------------------

16. கோமதியை கோம்ஸ்னு கூப்பிடலாம் தப்பில்லை, அதுக்காக யாராவது சின்மயியை சிம்ஸ்னு கூப்பிட்றாதீங்கப்பா :)


----------------------------

17. ஆபாசப்படம் பார்க்கச்சொல்லி உங்க சம்சாரத்தை வற்புறுத்தினீங்களாமே?



அவ தான் மினிஸ்டர் ஆகனும்னு ஆசைப்பட்டா


---------------------------------------

18.  என் கிட்ட ஆதாரம் இருக்கு


.. ராஜன் - என் கிட்ட ஆறு தாரம் இருக்கு, நானே அடக்கி வாசிக்கறேன்


------------------------------------

19. 6 கோடி தமிழர்கள் ரசிக்கும் படமாக ஒத்தவீடு இருக்கும்- டைரக்டர் பாலு #


அப்படி இருக்கனும்னா டைட்டில்ல குறிலை நெடில் ஆக்கி கேரளாவில் ரிலீஸ் செய்யுங்க


------------------------------------------

20. அனுஷ்கா யா‌ரென்றே எனக்கு தெரியாது -ரெய்னா...! # ஓஹோ, அப்போ நீங்க தமிழ்நாட்ல கரண்ட் இல்லாதப்ப இருட்ல அவரை பார்த்திருப்பீங்க:)

Friday, March 30, 2012

3 - திருப்பதி,திருத்தணி,பழநி - சினிமா விமர்சனம்

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/09/3-movie-dhanush-shruti-first-look-poster.jpg 

ஹீரோயின் ஸ்ருதி 17 வயசு ஜிகிடி.. ஸ்கூல்ல படிக்குது.. ஹீரோ தனுஷ் என்ன பண்ணனும்? கரெக்ட் .. அதே தான்.. பிளஸ் டூ படிக்கற பாமா.. நீ இஷ்டம்னா நான் உனக்கு மாமா.. பொண்டாட்டி பார்த்துட்டு இருந்தாலும் பரவாயில்லை.. உதட்டுல தர்றேன் ஏகப்பட உம்மா.. அப்டினு ஹீரோயினை போட்டு பிழிஞ்சு எடுக்கறாரு.. தியேட்டர்ல ஜொள்ளாறா ஓடுது.. 

 சிவ கார்த்திகேயன் மெரீனால விட்ட இடத்தை இதுல பிடிச்சுட்டாரு.. செம காமெடி.. பஞ்ச் அங்கங்கே குடுத்து அப்ளாஸ்  வாங்கறது அவர் தான்.. நாம எல்லாம் வருஷக்கணக்கா பின்னால சுத்துனாலும் கண்டுக்காதுங்க ஃபிகர்ங்க.. ஆனா இந்த சினிமால மட்டும் ஹீரோ ஹீரோயினைப்பார்த்த முதல் சீன் அல்லது 2 வது சீனே மடிஞ்சிடுதுங்க.. நற நற.. 

2 பேரும் லவ் பண்ணி முடிச்சதும் மேரேஜ் பண்ண வேண்டிய சிச்சுவேஷன்.. அதுக்குள்ள மேரேஜா? பாப்பா இன்னும் மேஜர் ஆகலையே? மைனர் தானே?ன்னு யாராவது லாஜிக் மிஸ்டெக் பார்க்கக்கூடாது.. ஏன்னா 5 வருஷம் லவ் பண்ணியே காலத்தை ஓட்டிடறாங்க.. 

 இரு தரப்பு பெற்றோர்களும் லைட்டா பேருக்கு எதிர்ப்பு தெரிவிச்சு ஓக்கே சொல்லிடறாங்க.. 2 பேருக்கும் மேரேஜ் முடியுது... இண்டர்வல்... 

இது வரை படம் செம கலாட்டாவா, ஜாலியா போனாங்காட்டி நம்மாளூங்க எல்லாம் செகண்ட் ஆஃப்ல பின்னி பெடல் எடுக்கப்போறாங்கன்னு கர்ச்சீப்/ டர்ர்கி டவல் கையில வெச்சுக்கிட்டே வேடிக்கை பார்க்க ரெடி ஆகறாங்க.. அந்தோ!!!!!! பரிதாபம்.. 

 திடீர்னு டைரக்டர் ஐஸ்வர்யா தனுஷ்க்கு செகண்ட் ஆஃப் எப்படி கொண்டு போறதுன்னு தெரியலை... கொழுந்தனார் செல்வராகவன் கிட்டே  ஐடியா கேட்கறார்.. அண்ணனைப்பற்றி சொல்லவே வேணாம்.. ரெடி ஸ்டாக் காதல் கொண்டேன்./. மயக்கம் என்ன? டி வி டி எப்பவும் கார்லயே வெச்சிருப்பார் போல.. இதை வெச்சு மேனேஜ் பண்ணீக்கம்மான்னு கொடுத்துட்டார் போல.. 



http://topbollywoodactress.com/wp-content/uploads/2011/12/dhanush_shruti_hassan_3_movie-Stills11.jpg

 செகண்ட் ஆஃப்ல இன்னா ட்விஸ்ட்னா தனுஷ் ஒரு சைக்கோ பேஷண்ட்..  பை போலார் டிஸ் ஆர்டர் ( BI POLAR DISORDER) அப்டின்னு ஒரு வியாதி.. இந்த வியாதி யாருக்கெல்லாம் வரும்னா செல்வராகவன், தனுஷ், ஆர் பார்த்திபன் வகையறாக்களூக்கு மட்டும் அடிக்கடி வரும்.. எத்தனை படம்  டப்பா ஆனாலும் சரி.. அந்த சைக்கோ கேரக்டரை மட்டும் விடவே மாட்டாங்க .

 தனுஷ் டென்ஷனா இருக்கறப்ப கூட இருக்கற நாயை கொல்றார்.. அந்த நாய் ஸ்ருதி ஆசையா வளர்த்த நாய்..  ஒரு நைட் கிளப்.. டிஸ்கொத்தே பார்ட்டிக்கு போறப்ப ஒரு ரவுடி நம்ம ஜிகிடி ஸ்ருதி கிட்டே வம்பு இழுத்திங்க்..  13 பேரை ஒத்தை ஆளா நின்னு போட்டுத்தள்ளிடறாரு... 

நாமெல்லாம் ஆஃபீஸ்ல ஒரு ஜிகிடி கிட்டே 2 நிமிஷம் கடலை போட்டாலே வீட்டுக்கு வந்ததும் நம்ம முகரக்கட்டையை பார்த்தே சம்சாரம் என்னமோ நடந்திருக்குன்னு கண்டு பிடிச்சிடும்.. ஆனா பாருங்க ஸ்ருதி ஒரு அப்பாவி.. தன் புருஷன் சைக்கோ ங்கறது தெரியவே இல்லை.. 

 ஆஸ்பிடல், ட்ரீட்மெண்ட் அப்டினு படத்துல செகண்ட் ஆஃப் ஃபுல்லா தனுஷ் அலையறாரு .... க்ளைமாக்ஸ்ல எதிர்பாராத ஒரு திருப்பம்... இது வரை ஆடியன்ஸை கொலையா கொன்னெடுத்த டைரக்டர் ஹீரோவை தற்கொலை செய்ய வெச்சிடறார்.. அவ்வளவுதான் சுபம்.. ஆடியன்ஸ் எஸ்கேப்.. 







http://tamilwire.com/images/2012/01/dhanush-sruthi-620x811.jpg


 ஹீரோ தனுஷ்க்கு அல்வா சாப்பிடற மாதிரி கேரக்டர்.. அவர் முக அமைப்பு அவர்க்கு பெரிய பிளஸ்.. மீசையை ஃபுல்லா ஷேவிங்க் பண்ணிட்டா அவர் பிளஸ் டூ ஸ்டூடண்ட்.. லைட்டா மீசை தாடி வெச்சா காலேஜ் ஸ்டூடண்ட்.. கொஞ்சம் அடர்த்தியா மீசை தாடி வெச்சா ஃபேமிலி மேன் கம் சைக்கோ.. ஆஹா செம ஐடியா மிஸ்டர் சூர்யா .. நீங்க வேஸ்ட்.. எவ்வளவு சிரமப்பட்டு வானரம் அடச்சே  வாரனம் 1000 ல கெட்டப் சேஞ்ச் செஞ்சீங்க.. தனுஷ் பார்த்து கத்துக்குங்க .. 

ஹீரோயின் ஸ்ருதி  + 2 படிக்கற பாமாவா வர்றப்ப ஆஹா.. செம .. முதல் முதல் காதலனுடன் ரைடு போகையில் உள்ளாடை அணியாத வெள்ளாடாய் சாலையின் மழையில் குண்டுங்குழியில் சைக்கிளை விட்டு குலுங்கி செல்கையில்  “ துள்ளுவதோ இளமை.. அள்ளுவதே புதுமை.. அத்தனையும் தனுஷ் திறமைன்னு பாட வைக்குது.. அவரது குரல் அவருக்கு மைனஸ் தான்.. ( உன்னை யார் குரலை பார்க்க சொன்னது?)

ஐஸ்வர்யா தனுஷ் நிஜமா டைரக்டரா வேலை பார்த்தாரா? இல்லை லைட் பாயா விளக்கை பிடிச்சு வேலை பார்த்தாரா தெரியலை.. நாமெல்லாம் சம்சாரம் கூட கல்யாண விஷேஷத்துக்கு போறப்ப நம்ம பார்வை கொஞ்சம் பிசகினாலும் அங்கே என்ன பார்வை?ன்னு டமார்னு குரல் வரும்.. கதி கலங்கி போயிடுவோம்.. ஆனா ஒரு டைரக்டரா இருந்தாலும் உள்ளூர மனைவிங்கற ஸ்தானம் இருக்கும் தானே.. எப்படித்தான் இவ்வள வு நெருக்கமா ஸ்ருதி கூட தனுஷை நடிக்க விட்டாரோ.. ஹூம் ( பொறாமை பொறாமை )

 ஸ்ருதி அழுகை காட்சிகளீல் மிகச்சிறப்பாக நடிச்சாலும் திரைக்கதையுடன் ஒன்ற முடியாததால் ஆடியன்ஸ் ஓ  என கத்தறாங்க.. 

மிகப்பிரமாதமாக எதிர் பார்க்கப்பட்ட ஒய் திஸ் கொலை வெறி பாட்டு படமாக்கப்பட்ட விதம் படு சுமார்.. ஏழையின் சிரிப்பில் படத்தில் பிரபு தேவா ஊத்திக்கினு கடிச்சுக்கலாம் பாடுவாரே அந்த டான்ஸ் ஸ்டெப்..  வேஸ்ட்..  


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9QYuUrfrt2T46uCkD9pe_0hug-CvP4jTnePfpkQWwJIJpG32JDRA72TSzI458Y8y9nhJfeNEslpreTkQRpWBt8HbFvP_do3DM_AaIs9ki11aB5bs7atOIDraSc54AmkUIhetouuOgHe4a/s1600/Dhanush%252C+Shruthi+Hassan%2527s+3+Movie+Latest+Photo+2.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  சிவ கார்த்திகேயன் தனுஷை விட பர்சனாலிட்டி என்பதால் தன் கணவனை விட அவர் டம்மியாகத்தெரிய ஐஸ்வர்யா எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலே.. ஆனா மேக்கப், கெட்டப்ல அவர் எண்ணம் ஈடேறினாலும் வசனம், நடிப்பில் அவர் பின்னிட்டார்.. வெல்டன் சிவா.. 

2. இந்தக்காலத்துப்பசங்க  எப்படி ஃபிகருங்களுக்கு ரூட் விடுவாங்க.. என்ன பண்ணுவாங்க என்பதை அப்டேட் பண்ணி இடைவேளை வரை இளமை துள்ள படம் ஆக்கி இருப்பது.. 

3. ஹீரோயின் வீட்டில் யாரும் இல்லை.. ஹீரோவை வீட்டு மொட்டை மாடிக்கு வரச்சொல்லி ரொமான்ஸ் பண்ணும் இடம் செம கிளு கிளு./.. அந்த சீனில் ஹீரோயின் போட்டிருக்கும் ரோஸ் கலர் ட்ரான்ஸ்பரண்ட் நைட்டி செம கிக் .. ( நைட்டில என்ன கிக் என கேட்பவர்கள் லாலி பாப் சாப்பிடவும் ஹி ஹி )

4. கண்ணழகா.. காதழகா, லைஃப்ல ஒயிஃப் வந்துட்டா, நீ பார்த்த விழிகள், போ அன்பே போ, ஒய் திஸ் கொலை வெறி என எல்லா பாடல்களும் ஓக்கே. இசை அமைப்பாளர்க்கு நல்ல எதிர் காலம் உண்டு.. 

5. இடைவேளைக்குப்பின் கதையின் டோன் சடார் என மாறுவதில் ஒளீப்பதிவு பின்னணீ இசையின் திகில் எல்லாம் ஓக்கே .. சைக்கோவாக தனுஷ் மிரட்டும் நடிப்பு.. அதுவும் ஸ்ருதி “ ஃபிரண்ட் எங்கே இருக்கனுமோ அங்கே இருக்கனும்” என சொல்லும்போது ஏய் என மிரட்டுகிறாரே.. கிளாசிக் நடிப்பு.. 

6. பிரபு, பானுப்ரியா, ரோகினி என குணச்சித்திர நடிப்புக்கு தேர்ந்த நடிக நடிகைகள் செலக்சன்.. அதே போல் இடைவேளைக்குப்பின் தனுஷின் நண்பராக வருபவ்ரின் நடிப்பு.. டாப்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxhWH3n2WlVB4WMCLimtmSay7qkXxHXO2hNXBMPblSkSDxOJZ7mgE7vqdHXzE9os7PhHrKnX_UsO-UAgPj9TKzr-G4H-CdWR2G_zeQ6HeI1KFUuLtXOmpXUrpMN3_MOpiXno9up8B-j_g/s1600/dhanush_shruti_hassan_3_movie_first_look_155.jpg


 இயக்குநர் பல்பு வாங்கும் இடங்கள்

1. ஹீரோ சைக்கோ ஆக என்ன காரணம்? காதல் கொண்டேன் மாதிரி ஒரு ஃபிளாஸ் பேக் சீன் வெச்சிருக்கலாம்.. திடு திப்னு சைக்கோன்னா நம்பற மாதிரி இல்லையே?

2. ஹீரோ சைக்கோ என்பது ஹீரோவின் அம்மா, அப்பாவுக்குக்கூட தெரியாது.. நண்பனுக்கு மட்டும் தான் தெரியும் என்பது நம்பற மாதிரியே இல்லை..

3. இடை வேளை வரை நடந்தது எல்லாம் ஹீரோவின் கற்பனை.. ஹீரோ - ஹீரோயின் மேரேஜ் நடக்கவே இல்லை.. ஹீரோயின் பேரண்ட்ஸ் கூட ஃபாரீன் போயாச்சு.. இனிமே தான் 2 பேரும் சேரனும்.. அதுக்கு என்ன முயற்சி எடுக்கறார் என்பது மாதிரி காட்டி இருந்தால் கூட படம் தப்பி இருக்கும்.. 

4. செகன்ட் ஆஃப்ல ஹீரோவின் ஃபிரண்ட் கிட்டே ஹீரோயின் என்ன நடந்தது? என  கேட்கையில் அவர் ஒரு ஃபிளாஸ் பேக் சொல்றார்.. ஆனா அந்த ஃபிளாஸ் பேக்ல ஏகப்பட்ட காட்சிகள் ஸ்ருதி- தனுஷ் தனியா பேசிக்கற சீன்ஸ் எல்லாம் வருதே எப்படி?

5. தனுஷ் தன் அப்பாவிடம் தன் சொத்தை எல்லாம் மனைவி பேர்ல எழுதி வைங்க என கேட்கும்போது கூட தந்தை பிரபுக்கு எந்த டவுட்டும் வர்லையே, எப்படி? அட்லீஸ்ட் ஹீரோவின் ஃபிரண்ட்ஸ்க்கு ஃபோன் போட்டாவது கேட்டிருக்கலாமே?

6. தான் ஒரு சைக்கோ என்ற மேட்டர் மனைவிக்கு தெரிய வேண்டாம்னு ஹீரோ நினைக்கறது ஓக்கே.. அதுக்காக தற்கொலை லெவல்க்கு ஏன் இறங்கனும்  ?அதுக்குப்பேசாம மனைவி கிட்டே சொல்லி ட்ரீட்மெண்ட்டே எடுக்கலாமே?

7. க்ளைமாக்ஸ் சீன்ல ஹீரோயின் ஸ்ருதி எதுக்கு சுடிதார்ல ஒரு கையை பிடிச்சுக்கிட்டே அழறார்? லோ கட் தெரியக்கூடாதுன்னா? அதுதான் படம் பூரா காட்டியாச்சே.. ஹி ஹி 




http://www.tamilkey.com/wp-content/uploads/2012/01/Aishwarya-DhanushShruthi-Hassan.jpg


 மனதில் நின்ற வசனங்கள்


1.  எந்த ஸ்கூல் படிக்கறே?

 தாங்க்யூ

 அடிங்க்

2.  ஏய்.. மேக்கிங்க் ரொமான்ஸ் @ 1st சைட்டா?

ஆமா ஹி ஹி 

 ஆனா பார்ட்டி கிட்டே “ பெருசா” 1ம் இல்லையேடா.. 

3. அந்த 2 ஃபிகர்ல உயரமா இருக்கறது  சரி இல்லை.. குள்ளமா இருக்கறது ஓக்கே

4.  அய்யய்யே.. என்னடா? உன் ஆளு டியூஷன் எல்லாம் போறா? மக்கு ஃபிகரா?

5. நான் எல்லாம் ஸ்கூல்க்கு வர்றதே பெரிய விஷயம்.. என்னைப்போய் டியூஷனுக்கு வர வெச்சுட்டியே டா..

 டேய்.. படிக்கறாடா.. 

6. எங்கப்பாவுக்கு டை எதுக்குன்னே தெரியாது.. கழுத்துல கட்டாட்டி என்ன? கைல அல்லது பாக்கெட்ல எடுத்துட்டு போங்கறாரு..

7. நூடுல்ஸ் மாதிரி ஏண்டா நெளியறே.. பழைய 5 பைசா மாதிரி ஒரு மூஞ்சி.. 

8.  அட.. இன்னைக்கு எல்லாரும் நேரத்துலயே வந்துட்டீங்களே.. 

 சார்.. நீங்க லேட்.. 

9.  காஸ் லாஸ் சொல்லு.. 

 என்னது காஸ் லாசா? ( LAWS)

 இல்லை உன்னோட மதர்ஸ் லாவா?

10.  டேய்.. நீ பேசாதே.. நீ 3 மாசமா ஃபீசே கட்டலை.. 



http://www.cinemamasti.com/wp-content/uploads/Shruthi-Hassan-3.jpg

11.  இனிமே நான் போற பக்கம் எல்லாம் ஃபாலோ பண்றது.. என் பின்னாலயே சுத்தறது ( 2ம் 1 தான் ) இதெல்லாம் இருக்கக்கூடாது.. ஓக்கேவா?

 ம்.. நீ சொன்ன படி பண்றேன்.. உன் ஃபோன் நெம்பர் குடு ஹி ஹி 

12.  ஓக்கே என் ஃபோன் நெம்பர் 483201321 ( இந்த நெம்பருக்கு அடிச்சா ஸ்ருதி எடுப்பாங்கன்னு யாரும் ட்ரை பண்ணாதீங்க ஹி ஹி ஆல்ரெடி மீ ட்ரை ..  நோ யூஸ் அவ்வ்வ் )

 ஓக்கே

 ஆமா... நோட் பண்னலை?

இந்த மாதிரி விஷயம் எல்லாம் தானாவே மனசுல பதிஞ்சுடும் ஹி ஹி 

13.  இதென்ன புது டெக்னிக்? வீட்டுக்கு முன்னால நின்னு லவ் ஆர் நாட் லவ் நு டார்ச்சர் பண்றது ?  ( எல்லாம் ஐஸ்வர்யா ராயை சல்மான்கான் செஞ்ச டார்ச்சர் தான்)


அதெல்லாம் முடியாது.. இப்பவே டெல்.. சாயங்காலம் வரை நான் ஏன் வெட்டியா உனக்காக வெயிட் பண்னனும்?

14. ஹீரோயின் - நான் இதுக்கு முன்னால யார் கூடவும் இப்படி பழகுனதில்லை ( அப்போ சித்தார்த்?)

ஹீரோ - நாங்க மட்டும் டெயிலி இதே வேலையா இருந்தோமா? 

15. ஏய்.. டாடி?

 விடு.. அதான் அவர் கிட்டே பளார்னு அறை வாங்கியாச்சில்லை?

16. அவ்ளவ் தானா? ஒரு ஐ லவ் யூ கிடையாதா?

 எனக்கு தோணும்போது சொல்றேன் 

17. டேய்.. சொன்னா நம்ப மாட்டே.. என் கன்னத்துல ஒரு கிஸ் குடுத்துட்டு ஓடிப்போய்ட்டாடா.. 

 அப்டியா? யார் கூட?

18.  டேய்.. அவளை பார்க்காம ஒரு மாதிரியா இருக்குடா.. 

 ஏன்? வயிறு சரி இல்லையா?

19.  என்னடா? உன் ஆன்சர் பேப்பர்ல கொஸ்டின் பேப்பர்ல என்ன இருக்கோ அதை அப்படியே எழுதி வெச்சிருக்கே?

 என் மேலே தப்பில்லை சார்.. எல்லாம் இவன் செஞ்ச தப்பு அவனை பார்த்து தான் எழுதுனேன்.. 


20. டேய்.. இங்கே வா.. இந்தா மேத்ஸ்ல நீ 7 மார்க் தான்

 அடேங்கப்பா .. 7 மார்க்? நான் எதிர்பார்க்கவே இல்லை சார். 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM8rpbTuS5iI7qV3XN4g3a3yfmH9NdAMRpdFwJh7AkQbyuP7M7p0A6lOq8SdCVB9AWEWjaiRu6sFNM2G82cw3wRJSw8ekK9CUaAqZW4VNlN0tGRiTN14DM7U-YX8q8hyltgmPK-qJhIFaI/s1600/Shruthi+Hassan+Hot+Photo+Shoot+Stills_05.jpg

21. நீ எதுக்கு திருப்பதி போனே?

 ம் லட்டு வாங்க.. உன் கண்ணை பார்க்காம என்னால இருக்கவே முடியல

22.  என்னை அம்மா அடிச்சுட்டாங்க.. அதான் ஓடி வந்துட்டேன்.. இப்பவே வா மேரேஜ் பண்ணிக்கலாம்.. 

 அம்மா அடிச்சதுக்கெல்லாம் மேரேஜ் பண்னனும்னா நானெல்லாம் டெயிலி மேரேஜ் பண்ணனும்

23.  டேய் என்னடா.. 

 அப்பா உங்க கிட்டே ஒரு மேட்டர் பேசனும் லைஃப் மேட்டர்.. 

 சரி சரி வா.. நம்மகிட்டே 4 கம்பெனி இருக்கு

 அப்பா மொக்கை போடாதீங்க


எங்கே தான் கத்துக்கிட்டானோ எப்போ பாரு மொக்கை போடறது/.. ஆட்டையை போடறதுன்னே நமக்கு புரியாத பாஷைல பேசிட்டு

 அப்பா நான் மேரேஜ் பற்றி பேச வந்தேன்

 ஸ்ட்ரெயிட்டா மேரேஜா? லவ் எல்லாம் பண்ணலையா? 

 அதெல்லாம் 5 வருஷம் பண்ணி முடிச்சாச்சு

அடப்பாவி

24.  எனக்கு உன் லவ் இஷ்டம் இல்லை.. 

அப்போ நீ சம்பாதிச்சதை நீயே வெச்சுக்கிட்டு தாத்தா சம்பாதிச்சதை எனக்கு இப்பவே குடு

25. என்னடி? ஃபர்ஸ்ட் நைட் இது? சேலை எங்கே? நகை எங்கே?

 ம்க்கும்.. நீ மட்டும் வேட்டி கட்டி இருக்கியா?

சரி பாலையாவது குடு.. நீயே குடிச்சுட்டா?

26./ என்னடி? அறையறே?

 போகப்போக நான் யார்னு தெரியும்?

 ம் நல்ல ஃபர்ஸ்ட் நைட்

27.  யாரும் உன்னை கஷ்டப்படுத்த விட மாட்டேன்... 

 ம் எனக்குத்தெரியும்

28.  சார்.. சுண்டல்.. வேணுமா?

 ம்க்கும்.. அவ சூப் குடுத்தா. நீ சுண்டல் குடு.. 

 விடு சார்.. இந்த பொண்ணுங்களே இப்படித்தான் சூப் குடுப்பாங்க.. எனக்குக்கூட ஒரு பொண்ணு சூப் குடுத்துச்சு சார்

 அடப்பாவி.. 10 வயசு பையன் பேச்சப்பாரு

29.  நான் சைக்கோங்கற மேட்டர் என் மனைவிக்கு தெரிஞ்சுட்டா அப்புரம் அவ கண்ல லவ் இருக்காது.. பயம் தான் இருக்கும். அதை என்னால தாங்கிக்க முடியாது

30.. அப்பா, ஒரே பாட்டுல பணக்காரன் ஆக இது என்ன சினிமாவா? லைஃப் ப்பா




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe7O3Rz6BaubcaTFQw3rm38UoDuJSHZr1vJ24sQZg_aeNMqhSw2zXnXfJJbu3t5aMCw2a0KF1DlJ6UKm3OQo8xhrnf0wdupuht76X-YRzpyqtRdQVpL0xtz1zhJxwqBjM77D8rLjMzKwn-/s1600/Shruthi+Hassan+Hot+Photo+Shoot+Stills_03.jpg


ஏ செண்ட்டர்களீல் 25 நாட்கள் ஓடும்.. பி சி செண்ட்டர்களீல் ஒரு வாரம் தான் தாங்கும்

 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

. எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

 சி.பி கமெண்ட் - இடைவேளை வரை பார்த்துட்டு திரும்பிப்பார்க்காம ஓடியாந்துடுங்க ஹி ஹி 

 ஈரோடு ஆனூர்ல படம் பார்த்தேன்

 டிஸ்கி - இந்தப்பட விமர்சன டைட்டிலுக்கான விளக்கம்.. இந்தப்படத்தை பெருசா நம்பி இருந்த ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ், ஸ்ருதி 3 பேரும் திருப்பதி,திருத்தணி,பழநி இந்த 3 திருத்தலங்களில் போய் மொட்டை அடிச்சுக்கலாம் ஹி ஹி




http://www.chitramala.in/photogallery/d/576215-1/shruthi-hassan-hot-stills+_1__001.jpg

பெண்ணுடன் குத்தாட்டம் போட்ட எம் எல் ஏ.. அசினின் விசிட்டிங்க் கார்டு .. ( ஜோக்ஸ்)

http://www.bollywood.ac/wp-content/uploads/2011/07/asin-thottumkal-hot-photo-4.jpg

1.எம் எல் ஏ வா இருக்கற நீங்க ஒரு பெண்ணோட குத்தாட்டம் போட்டிருக்கீங்களே? ஏன்?

நான் ராமன், அதனால தான் ஒரே ஒரு பெண்ணுடன் ஆடுனேன், ஹி ஹி

-------------------------------

2. அழகுதான் விசிட்டிங் கார்டு! -அசின் # கிளாமர்தான் கிரீட்டிங்க் கார்டு - நயன் தாரா 

-------------------------------

3. பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்: ஜெ., வேண்டுகோள்# எங்க பிறந்த நாளையா? உங்க பிறந்த நாளையா? மேடம்?

-------------------------------

4. சார், உங்க மெரீனா படம் ஒரு தழுவல் படம்னு சொல்றாங்களே, நிஜமா?

ச்சே,ச்சே ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் கட்டிப்பிடிக்கற சீனே இல்லையே?

-----------------------------------

5. நயன் தாரா சினிமாவை விட்டு விலகினால் நல்ல பையனாக பார்த்து கட்டி வைப்போம் - நயனின் அம்மா # குறளரசன் நல்ல பையன் - டி ஆர் 

------------------------------------


6. டியர்! நீ ஐ லவ் யூ சொன்னதும் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்..


டேய், சும்மா ரீல் விடாதே, கரண்ட்டே இல்ல, எப்படி ஷாக் அடிக்கும்?

-----------------------------------
7. சார்,உங்க முன்னாள் மனைவி நடிச்ச படம் ரிலீஸ் ஆகி இருக்கே? பார்த்தாச்சா? 

டைரக்டர் - பேரைச்சொல்லாம இப்படி பொத்தாம்பொதுவா கேட்டா எப்படி?

-------------------------------

8. எம்ஜிஆர் பிறந்த நாளை அவர் உயிருடன் இருந்தவரை கொண்டாடவில்லை, எனவே நானும் நோ - ஜெ # மேடம், அவர் எல்லாரையும் மதிச்சார்,நீங்க?

----------------------------

9. உங்க படம் மூலம் என்ன சொல்ல வர்றீங்க? 

டெயிலி  வாக் (WALK)போனா மூலம் வராது # ஒரு நடிகையின் வாக்கு மூலம்

-----------------------------

10. எதுக்காக புது வெப்சைட் ஓப்பன் பணி இருக்கீங்க? 

கட்டதுர - ஓப்பன் பண்ணனும்னா புதுசாத்தான் பண்ணனும், பழசை எப்படி? ஹி ஹி

-------------------------------

http://img.india-forums.com/wallpapers/1024x768/24337-asin-thottumkal.jpg

11. வாழ்வில் வெற்றி பெற நீங்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுங்கள்-விஜய் # உங்கள் படம் வெற்றி பெற புதுக்கதையை செலக்ட் பண்ணுங்க ஹி ஹி 

---------------------------------

12. புரொடியூசர் ஆதி மூலம் - படத்தோட மூலக்கதையை எங்கே இருந்து சுட்டீங்க? 

சார், ரிஷி மூலம், ஆதி மூலம் எல்லாம் பார்க்கப்படாது

----------------------------------

13.  மெண்டல் பாண்டினு ஏன் பெயர் வெச்சீங்க?

கட்டதுர - MEN TELL என வெச்சா பிரச்சனை வராது, WOMEN TELL  வி”மெண்டல்”னா கும்மிடுவாங்களே?

---------------------------

14.கன் ஃபைட் காஞ்சனா - காதலிக்க பொண்ணுகள ட்விட்டர்லயா தேடுவீங்க?

காஞ்சு போன ஜனா - ட்விட்டர்ல தேடுவோம், அப்புறம் குவாட்டர்ல மூழ்குவோம்

-----------------------------

15. சாகச குட்டி -நாளைக்கு ஒரு நாள் மட்டும் பெண் ட்விட்டர்கள் தங்கள் முகத்தை டிபியாக வைப்பார்களா ???

ரிஸ்க் அவங்க எடுக்க தயார்.. ஆனா நாம?

-------------------------------


We respect road rules...!!??
16. காதலர் தினத்தை எங்கே கொண்டாடலாம்? பார்க்கா? பீச்சா?

வேணாம், அங்கே எல்லாம் கூட்டமா இருக்கும், லாட்ஜ் ரூம் ஓக்கே?

-----------------------------------

17. உனக்குத்தான் மேரேஜ் ஆகிடுச்சே, எதுக்கு #SingleOnFeb14 டேக் போடறே?


பிப்-14 மட்டும் சிங்கிளா,அப்போதான் சிக்கும் ஒரு டக்கீலா

----------------------------------

18. பெண்கள் மேக்கப் போடாமல் இருந்தால் என்ன ஆகும்?


ஒரு பய சீண்ட மாட்டான், எல்லாரும் பயம் இல்லாம நிம்மதியா நடமாடலாம் :)

-----------------------------------

19. காஞ்சனா - 143 - ஐ 140-ல் எழுதி தீர்த்து விட முடியுமா? அது வாழ்ந்து தீர்ப்பது.


ஜனா- மேடம், வாழ்ந்த பிறகு தீர்த்தா பரவால்ல..)

---------------------------------

20.கவுதம் -ஏன் பொண்ணுங்களை கழுவி ஊத்துபவர்கள்  அதிகம்? .


அசோக் -ஏன்னா ஆம்பளைங்களை கை கழுவி கழட்டி விடற பெண்கள் அதிகம்

------------------------------

 http://www.bollywoodactresswallpapers.net/wp-content/uploads/2011/11/Actress-Bollywood-Asin-Thottumkal-Nice-Face-Wallpaper-500x375.jpg

Thursday, March 29, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (30.3..2012)படங்கள் முன்னோட்ட பார்வை

http://ottran.com/wp-content/uploads/Dhanush-In-3-1.jpg 


1.  3 - கொலிவுட்டில் தனுஷ், ஸ்ருதி நடித்த “3” திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திரையுலகில் ஐஸ்வர்யா தனுஷ் முதன் முறையாக தன் கணவரை வைத்து “3” படத்தை இயக்கியுள்ளார். தனுசுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இவர்களுடன் சிவகார்த்திகேயன், இளையதிலகம் பிரபு நடித்துள்ளனர்.


பள்ளிப்பருவத்தில் ஆரம்பிக்கும் காதலைப்பற்றி இயக்குனர் ஐஸ்வர்யா கூறியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


சி.பி - படத்தோட ட்ரெயிலரை பார்த்தா துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன ரெண்டையும் கலந்து கட்டி அடிச்சது போல் இருக்கு 


http://ottran.com/wp-content/uploads/04-shruthi4-300.jpg

 
“3” படத்தில் தனுஷ் பாடி அனிருத் இசையமைத்த கொலைவெறி டி பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்நிலையில் “3” படத்தின் முன்னோட்டக்காட்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


சி.பி - இந்த பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால பிக்சரைசேஷன் சரி இல்லைன்னா அதுவே நெகடிவ்வா அமைஞ்சுடும் , ரசிகர்கள் கடுப்பாகிடுவாங்க.. 

http://www.filmglitz.com/tamil/wp-content/themes/transcript/timthumb.php?src=http%3A%2F%2Fwww.filmglitz.com%2Ftamil%2Fwp-content%2Fuploads%2F2012%2F03%2Fmeeravudan_krishna_audio_launch_Stills-1.jpg&q=90&w=298&h=221&zc=1

2. மீராவுடன் கிருஷ்ணா - துவார்க மயி கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ஆர்.ஏ. விஜய் தயாரிக்கும் படம் மீராவுடன் கிருஷ்ணா. இதில் நாயகியாக ஸ்வேதா நடிக்கிறார்.ராதா, மனோபாலா, ஜிகினா ஜித்தன், ஷானா, எம்.ஆர்.ஏ. விஜய், ஆனத்ஜி, கணேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.கிருஷ்ணா இயக்குகிறார். அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார்.




இல்லறம் என்பது செக்ஸ் மட்டுமல்ல அதற்கும் மேலே புரிதல் என்கிற விஷயமும் இருக்கிறது என்ற கருவை மையமாகவைத்து இப்படம் தயாராகிறது.
 
 

கணவன்-மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் போது பிரச்சினை இல்லாத வாழ்க்கை அமைகிறது. ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் வாழ்க்கை நரகமாகிவிடும் என்ற கதை யோட்டத்தில் படம் தயாராகிறது என்றார் இயக்குனர்.
 
 
http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/meeravudan-krishna-audio-launch/wmarks/meeravudan-krishna-audio-launch18.jpg
 
 

ஒளிப்பதிவு: எம்.ஆர்.ஏ. விஜய், குகன், இசை: கே.கே. செந்தில்பிரசாத், எடிட்டிங்: சாய்சுரேஷ். 
 
சி.பி - பிரபுதேவா - ரம்லத்  நயன் தாரா கதை போல இருக்குன்னு பிரிவ்யூ ஷோ பார்த்த என் நண்பர் அசிஸ்டெண்ட் டைரக்டர் முருகன் மந்திரம் சொன்னாரு.. படம் பார்க்கலாம்னாரு 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwDgJChjITjBSn-n4VBEsgfr1FOttlF2_fy_V910mlPGeM7WSQrZ4ZGG4Xp4dF4H6U_hFKN2zkXd5PbLjZkYfxQeVot4rMAz7fESZcqBHA_Up3KO4SgiYl_i4auxpyDEqLgxYFIJzuXEw/s1600/oththa_veedu_20110814_1391703743.jpg
3. ஒத்தை வீடு -விஷ்ஷிங் வெல் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தேவ்‌ குமார் தயாரித்து வரும் படம் ‘ஒத்த வீடு’.இந்தப் படத்தில் புதுமுகங்கள் திலீப்குமார், ஜானவி ஜோடியாக நடிக்க, இவர்களுடன் வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், திரவிய பாண்டியன், நெல்லை சிவா, இமா‌ன்‌, பந்தனா, ராதா, வாமன் மாலினி, மதுரை‌ சரோ‌ஜா‌, சண்‌முகம்‌, யோ‌கி‌ தே‌வரா‌ஜ்‌ உட்பட பலர் நடித்துள்‌ளனர்‌.
 
 
பாலு மலர்வண்ணன் இயக்கும் இந்தப் படத்திற்கு வீ.தஷி இசையமைத்துள்ளார். ஸ்ரீரஞ்சன் ஒளிப்பதிவு செய்துள்‌ளா‌ர்‌. கே‌.இத்‌ரீ‌ஸ்‌, எம்‌. சங்‌கர் இருவரும்‌ இணை‌ந்‌து எடி‌ட்‌டி‌ங்‌ செ‌ய்‌துள்‌ளனர்‌.


இந்‌தப்‌ படம்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ பா‌லு மலர்‌வண்‌ணன்‌ கூறுகை‌யி‌ல்‌, “கி‌ரா‌மங்‌களி‌ல்‌ ஒத்‌த வீ‌டு பற்‌றி‌ நி‌றை‌ய கே‌ள்‌வி‌ப்‌ பட்‌டி‌ருப்‌பீ‌ர்‌கள்‌. அப்‌படி‌ ஒரு ஒத்‌த வீ‌ட்‌டி‌ல்‌ நடக்‌கும்‌ சம்‌பவம்‌தா‌ன்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌. அந்‌த ஒத்‌த வீ‌ட்‌டு தலை‌மை‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ வடி‌வு‌க்‌கரசி‌, நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. ஒரு கி‌ரா‌மத்‌து தா‌யி‌ன்‌ வெ‌ள்‌ளந்‌தி‌யா‌ன மனமும்‌, அதனா‌ல்‌ ஏற்‌படும்‌ வி‌ளைவு‌களும்‌, பி‌ரி‌வு‌ம்‌, பரி‌வு‌ம்‌ தா‌ன்‌ படத்‌தி‌ன்‌ பலமா‌ன கா‌ட்‌சி‌கள்‌.


வடி‌வு‌க்‌கரசி‌யி‌ன்‌ மகனா‌க கதா‌நா‌யகன்‌ தி‌லீ‌ப்‌குமா‌ர்‌, மகளா‌க பந்‌தனா‌ நடி‌த்‌தி‌ருக்‌கின்‌றனர்‌. ஒருவர்‌ மீ‌து ஒருவர்‌ வை‌த்‌தி‌ருக்‌கும்‌ பா‌சத்‌தை பக்‌கத்‌து வீ‌ட்‌டி‌ல்‌ இருந்‌து பா‌ர்‌ப்‌பது போ‌ல அவர்‌கள்‌ வா‌ழ்‌ந்‌து கா‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌ன்‌றனர்‌.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt70ae-3ykOohEvGL4BcOoZ1qP9G0SuH1wq8GSXioKnOiEEJS4SmYB8vdAYihCYfQXNzMPUJlXqw3MiAVExLzD6xIXzM0jaMGoImoiAi7QTOzUzNoRyG83nvw04RM-imJQ5J6iBmQ24OQ/

தி‌லீ‌ப்‌குமா‌ருக்‌கு இது முதல்‌ படம்‌ என்‌றா‌லும்‌, பல படங்‌களி‌ல்‌ நடி‌த்‌து நி‌றை‌ய அனுபவம்‌ வா‌ய்‌ந்‌த நடி‌கர்‌ போ‌ல நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. வி‌ல்‌லி‌வலம்‌ கி‌ரா‌மத்‌தி‌ல்‌ வி‌நா‌யகர்‌ கோ‌வி‌லி‌ல்‌ கி‌ரகம்‌ எடுத்‌து தெ‌ருவழி‌‌யா‌க வலம்‌ வந்‌து, அம்‌மன்‌ கோ‌வி‌லி‌ல்‌ இறக்‌கி‌ வை‌க்‌கும்‌ கா‌ட்‌சி‌ எடுத்‌த போ‌து, அந்‌த கி‌ரா‌மத்‌து மக்‌கள்‌ அனை‌வரும்‌ தங்‌கள்‌ செ‌லவி‌ல்‌ மா‌வி‌ளக்‌கு எடுத்‌து ஊர்‌வலமா‌க வந்‌து நடி‌த்‌த தோ‌டு அல்‌லா‌மல்‌, தி‌லீ‌ப்‌குமா‌ரி‌ன்‌ வீ‌ரனா‌ர்‌ ஆட்‌டத்‌தை‌ பா‌ர்‌த்‌து வி‌யந்‌து போ‌னா‌ர்‌கள்‌. அந்‌த பா‌த்‌தி‌ரமா‌கவே‌ படத்‌தி‌ல்‌ வா‌ழ்‌ந்‌து அந்‌த கதா‌ப்பா‌த்‌தி‌ரத்‌தை‌  வா‌ழ வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. சண்‌டை‌க் ‌கா‌ட்சி‌யி‌லும்‌ இயல்‌பா‌க நடி‌த்து படப்‌பி‌டி‌ப்‌பு‌ தளத்‌தி‌ல்‌ கை‌ தட்‌டலை‌ வா‌ங்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.


கதா‌நா‌யகி‌ ஜா‌னவி, மும்‌பை‌ அனுபம்‌கெ‌ர்‌ தி‌ரை‌ப்‌படக்‌ கல்‌லூ‌ரி‌யி‌ல்‌ பயி‌ற்‌சி‌ பெ‌ற்‌றவர்‌. வசனங்‌களை‌ உள்‌வா‌ங்‌கி‌க்‌ கொ‌ண்‌டு, தனது தி‌றமை‌யை‌ நன்‌கு வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. ‌ தி‌லீ‌ப்‌குமா‌ர்‌, ஜா‌னவி‌‌ இருவரது நடி‌ப்‌பு‌ தி‌றமை‌யை‌ப்‌ பா‌ர்‌த்‌து 350 படங்‌களுக்‌கு மே‌ல்‌ நடி‌த்‌த வடி‌வு‌க்‌கரசி,‌ வி‌யந்‌து, ஆச்‌சர்‌யப்‌பட்‌டா‌ர்‌.‌


கதா‌நா‌யகனி‌‌ன்‌ பெ‌ரி‌யப்‌பா‌வா‌க, சா‌மி‌யா‌டி‌ வே‌டத்‌தி‌ல்‌ எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவரவர்‌ அவரவர்‌ தெ‌ளி‌வு‌‌க்‌கு தகுந்‌த மா‌தி‌ரி‌ வா‌ழ்‌க்‌கை‌ நடத்‌துவது போ‌ல, அவரும்‌ அவரது தெ‌ளி‌வு‌க்‌கு தகுந்‌த மா‌தி‌ரி‌ பே‌சி‌ வா‌ழும்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவர்‌ அறி‌யா‌த வி‌ஷயங்‌களை‌ப்‌ பற்‌றி‌ யா‌ரும்‌ பே‌சி‌னா‌ல்‌ அவருக்‌கு கோ‌பம்‌ வந்‌து வி‌டும்‌. அப்‌படி‌ ஒரு போ‌ல்‌டா‌ன, கோ‌பக்‌கா‌ரரா‌க நடி‌த்‌து சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. அவரை‌ உசுப்‌பே‌ற்‌றும்‌   வே‌டத்‌தி‌ல இமா‌ன்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.


ஒச்‌சா‌யி‌ படத்‌தி‌ன்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளரும்‌, அந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ ஒரு முக்கி‌ய‌ வே‌டத்‌தி‌ல்‌ நடி‌த்‌த வருமா‌ன தி‌ரவி‌ய பா‌ண்‌டி‌யன்‌, இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பசுத்‌ தோ‌ல்‌ போ‌ர்‌த்‌தி‌ய பு‌லி‌ போ‌ன்‌ற ஒரு வி‌ல்‌லன்‌ வே‌டத்‌தி‌ல்‌ நடி‌த்‌து, அந்‌தப்‌ பா‌த்‌தி‌ரத்‌தை‌ வலி‌மை‌ படுத்‌தி‌ இருக்‌கி‌றா‌ர்‌.


ஆர்‌ட்‌ டை‌ரக்‌டர்‌ சண்‌முகம்‌, இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ ஒரு கோ‌பக்‌கா‌ர இளை‌ஞரா‌க நடி‌த்‌தி‌ருக்கி‌றா‌ர்‌. பு‌துமுகம்‌ பந்‌தனா‌, ரா‌தா‌, வா‌மன்‌ மா‌லி‌னி‌, மதுரை‌ சரோ‌ஜா‌ என பலர்‌ நடி‌த்‌தி‌ருக்‌‌கின்‌றனர்‌. கதா‌பா‌த்‌தி‌ரங்‌களுக்‌கு பொ‌ருத்‌தமா‌ன நடி‌கர்‌களை‌ தே‌ர்‌வு‌ செ‌ய்‌து நடி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌.




ஒரி‌ய மொழியி‌ல்‌ அறுபது படங்‌களுக்‌கு மே‌ல்‌ பணி‌யா‌ற்‌றி‌ய, ஸ்ரீரஞ்‌சன்‌ ரா‌வ் என்கி‌ற ஒளி‌ப்‌பதி‌வா‌ளரை‌, இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பயன்‌ படுத்‌தி,‌ அவரது  தி‌றமை‌யை‌ பயன்‌படுத்‌தி‌க்‌ கொ‌ண்‌டே‌ன்‌. அதே‌ போ‌ல‌ ‌ கே‌ரள அரசி‌ன்‌      சி‌றந்‌த இசை‌யமை‌ப்‌பா‌ளருக்‌கா‌ன வி‌ருது பெ‌ற்‌ற வீ‌.தஷி‌யி‌ன்‌ இசை‌யி‌ல்‌ ஆறு பா‌டல்‌கள்‌ படத்‌தி‌ல்‌ இடம்‌ பெ‌றுகி‌றது. எல்‌லாமே‌ சூ‌ழ்‌நி‌லை‌க்‌கு தகுந்‌த மா‌தி‌ரி‌ எழுதப்‌ பட்‌ட பா‌டல்‌கள்‌.

தா‌னு கா‌ர்‌த்‌தி‌க்‌ எழுதி‌ய வீ‌ரனா‌ர்‌ பா‌டல்‌ பட்‌டி‌ தொ‌ட்‌டி‌யெ‌ங்‌கும்‌ பே‌சப்‌படும்‌. அந்‌த அளவு‌க்‌கு பா‌டலி‌ன்‌ டெ‌ம்‌போ‌ இயல்‌பா‌கவே‌ அமை‌ந்‌தி‌ருக்‌கி‌றது. எனக்‌கு தெ‌ரி‌ந்‌து, வீ‌ரன்‌‌ பா‌ற்‌றிய‌ பா‌டல்‌ இதுவரை‌ வெ‌ளி‌வந்‌ததி‌ல்‌லை என நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌. அதே‌ போ‌ல பட்‌டுக்‌கோ‌ட்‌டை‌ சண்‌முகசுந்‌தரம்‌,  வா‌ட்‌டா‌குடி‌ ரா‌ஜரா‌ஜன்‌, ‌ சி‌ங்‌கப்‌பூ‌ர்‌ சொ‌.சி‌வக்‌குமா‌ர்‌, இனி‌யதா‌சன்‌ போ‌ன்‌றவர்‌கள்‌ எழுதி‌ய பா‌டல்‌களும்‌ பெ‌ரி‌ய அளவி‌ல்‌ பே‌சப்‌படும்‌. ஒரு    பா‌டலை‌ சி‌ங்‌கப்‌பூ‌ரி‌ல்‌ எடுக்‌க இருக்‌கி‌றே‌‌ன்‌.

வி‌த்‌தி‌யா‌சமா‌ன நடனத்‌தை‌ டா‌ன்‌ஸ்‌ மா‌ஸ்‌டர்‌ ஈஸ்‌வர்‌ பா‌பு‌, ரமே‌ஷ்‌ ரெ‌ட்‌டி‌‌அமை‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌‌. பரபரப்‌பா‌ன சண்‌டை‌க்‌ கா‌ட்‌சியை‌ ஸ்‌டண்‌ட்‌ மா‌ஸ்‌டர்‌ ‌ தே‌ஜா‌ பயி‌ற்‌சி‌ அளி‌க்‌க படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றே‌ன்‌.

http://www.cinemaaajtak.com/wp-content/uploads/2012/03/Janavi-At-Oththa-Veedu-Press-Meet-Event-New-Images-2-284x378.jpg


கி‌ரா‌மத்‌து கதை‌ என்‌பதா‌ல்‌, கா‌ஞ்‌சி‌பு‌ரம்‌ அருகே‌ உள்‌ள வி‌ல்‌லி‌வலம்‌  கி‌ரா‌மத்‌தி‌லும்‌, தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ அருகே‌ உள்‌ள வடசங்‌கந்‌தி‌ கி‌ரா‌மத்‌தி‌லும்‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றே‌ன்‌.

மக்‌களி‌டம்‌ நா‌ன்‌ பா‌ர்‌த்‌த வி‌ஷயங்‌களை‌ எடுத்‌து, அதை‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றே‌ன்‌. நா‌ன்‌ எதை‌யு‌ம்‌ கற்‌பனை‌யா‌க கொ‌ண்‌டு வரவி‌ல்‌லை‌. எல்‌லா‌மே‌ இங்‌கி‌ருந்‌து எடுக்‌கப்‌பட்‌டதுதா‌ன்‌. கலை‌, இலக்‌கி‌யம்‌ யா‌வு‌ம்‌ மக்‌களுக்‌கா‌கத்‌தா‌னே‌!.


இந்‌தப்‌ படம்‌ தி‌ரை‌யி‌ல்‌ ஓட ஆரம்‌பி‌க்‌கும்‌ போ‌து, முதல்‌ கா‌ட்‌சி‌யி‌லே‌யே‌  அந்‌த கி‌ரா‌மத்‌துக்‌குள்‌ செ‌ன்‌று அங்‌கு தங்‌கி‌, அந்‌தக்‌ கதா‌ப்‌பா‌த்‌தி‌ரங்‌களுடன்‌ பே‌சி‌ பழகி‌, வா‌ழ்‌ந்‌து, படம்‌ முடி‌யு‌ம்‌ போ‌து அந்‌த கி‌ரா‌மத்‌தை‌ வி‌ட்‌டு வெ‌ளி‌யே‌ வருகி‌ற உணர்‌வை‌ ஏற்‌படுத்‌தும்‌ படமா‌க ரசி‌கர்‌களுக்‌கு இருக்‌கும்‌ என நம்‌பு‌கி‌றே‌ன்‌…” என்‌று கூறி‌னா‌ர்‌.

 http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_09_w800_h537_600024.jpg
4 . ஒத்தைக்குதிரை - இந்தப்படம் ரிலீஸ் ஆகுதே ஒழிய இது பற்றி எந்த தகவலும் கூகுள்ல கிடைக்கலை.. ஒரு வேளை டப்பிங்க் படமா இருக்கலாம்.. ஆனா ஸ்டில்ஸ், போஸ்டர் எல்லாம் பார்த்தா ஏதோ கொலை கதை போல.. 

http://www.musicrooms.net/files/movies/Wrath_Of_The_Titans_355445987.jpg


5.  WRATH OF TITANS - இது  முதல் பாகமே செம டப்பாவா இருந்துச்சு.. 2 வது பாகம் நெட்ல பார்த்தவங்க அய்யோ அம்மான்னு சொல்லிட்டாங்க.. சோ எல்லாம் உஷாரா இருந்துக்குங்க..  ஈரோடு வி எஸ் பில ரிலீஸ்

போடா போடி ??- தனுஷ், 9 தாரா ?!! - வேட்டை மன்னன் சிம்பு பேட்டி காமெடி கும்மி


http://www.innisaitamil.com/images/cd_images/1323747983_vettai%20mannan.jpg


அமெரிக்கக் குளுமை இன்னமும் படிந்திருக்கிறது சிம்பு முகத்தில்!  'வேட்டை மன்னன்படத்துக்காக பின்னி மில்லில் பின்னி எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் காதல், லவ் ஆன்தம், தனுஷ், கொலவெறி, ஸ்ருதி, ஸ்டார் கிரிக்கெட், கல்யாணம்... இன்னும் நிறையப் பேசியதில் இருந்து...  


சி.பி -பின்னி மில்லுல பின்னிட்டு இருந்தாரா? எதை? ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியோட ஜடையையா?


1.  '' 'லவ் ஆன்தம்ஆல்பம் ரெடியா?''

சி.பி - லவ் பண்றவங்க எல்லாருமே தாடி வெச்சுட்டு தம் அடிக்கனும்கறதை சிம்பாலிக்கா சொல்றதுதான் லவ் ஆன்”தம்”ம்மா?



''அது ரெண்டு மாச உழைப்பு. 'ஒரு பாட்டோட நிறுத்த வேணாம். முழு ஆல்பமாவே பண்ணிரலாம்னு முடிவு பண்ணி இறங்கிட்டேன். புரொமோஷனுக்காக வெளியான ரெண்டு நிமிஷப் பாட்டுக்கே பாராட்டு அள்ளுச்சு. முழு ஆல்பத்தைச் சிலருக்கு மட்டும் போட்டுக் காமிச்சேன். 'செம சூப்பர்னு மனம் திறந்து பாராட்டினாங்க. இன்னும் ரெண்டு மாசத்துல ரிலீஸ். ரொம்பப் படபடப்பா, ஆர்வமா இருக்கு. எல்லாம் சரியா அமைஞ்சா, இந்த ஆல்பம் எனக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கித் தரும்!''


சி.பி - என்னது? சிம்பு அண்ணனுக்கு நல்ல பேரா? குறளரசன் திகைப்பு.. டி ஆர் நகைப்பு.. ஹி ஹி 


http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/10/Hansika_gangster_Vettai-Mannan.jpg
2. ''நீங்க இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க. ஆனா, 'சிம்பு ஷூட்டிங் வராம அமெரிக்கா போய் உட்காந்துட்டாரு. தயாரிப்பாளர்கள் கொதிச்சுப்போய் இருக்காங்கனுல இங்கே செய்தி பரவிக்கிடக்கு?''  

''நான் எது பண்ணாலும் தப்பாப் பேசுறவங்க கௌப்பிவிடுறதுதான் இதுவும். 'வேட்டை மன்னன்தயாரிப்பாளர்கிட்ட 'லவ் ஆல்பம்வேலைகளுக்காக அமெரிக்கா போறேன்னு முன்னாடியே சொல்லிட்டுத்தான் கால்ஷீட் தேதி கொடுத்தேன்

சி.பி - அதானே, அமெரிக்கா எப்போதான் சுத்தி பார்க்கறது?


'போடா போடிபடத்தின் வெளிநாட்டு லொகேஷன் களின் படப்பிடிப்புக்கு உடனே அனுமதி கிடைக்கலை. சரி... சென்னைக்குக் கிளம்பு வோம்னு பார்த்தா, இங்கே ஸ்டிரைக். 'கிடைச்ச நேரத்தை ஆல்பம் வேலைகளுக் குப் பயன்படுத்திக்கலாம்னு இறங்கிட் டேன். எனக்குச் சம்பளம் கொடுக்கும் எந்தத் தயாரிப்பாளரும் என்னைப் பத்தி எந்தப் புகாரும் பண்ணலை. மத்தவங்களைப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? இன்னும் எவ்வளவுதான் பேசுறாங்கனு பார்க்கலாம்!''

சி.பி - நல்ல வேளை.. நீங்க கெட்டவர்ங்கறதுக்காகத்தான் உங்க பட டைட்டிலே கெட்டவன்னு வெச்சாங்களா?ன்னு யாரும் கேட்கலை..


http://static.sify.com/cms/image//lf0tKCchiaa.jpg


3. ''என்னதான் சமாதானம் சொன்னாலும் 'போடா போடிஆரம்பிச்சு ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சே... இது அதீத தாமதம்தானே?''  



'' 'போடா போடிரொம்ப ஸ்டைலான படம். சென்னையில் எடுக்கும் படங்களுக்கு அழகு சேர்க்க வெளிநாட்டில் டூயட் வைப்போம். ஆனா, இந்தப் படம் முழுக்கவே வெளிநாட்டில் நடக்கும் கதை. 'ஹம் ஆஃப் கே ஹைன் கௌன்மாதிரி கலர்ஃபுல்லான படம்.

சி.பி -சுத்தம்.. அப்போ அந்தப்படத்தோட அப்பட்டமான தழுவலாத்தான் இருக்கும்.. கேட்டா ஜ்ஸ்ட் இன்ஸ்பிரேஷன்...பாங்க


 அப்போ எவ்வளவு வேலை இழுக்கும்? படப்பிடிப்புக்கு அனுமதி வாங்குறதே பெரிய வேலையா இருக்கு. வெய்ட் பண்ணுங்க... 'விண்ணைத் தாண்டி வருவாயாபடத்தில் என்னைப் பிடிச்ச மாதிரி, இந்தப் படத்திலும் எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்!''

சி.பி - விண்ணைத்தாண்டி வருவாயா? ஹிந்தி வர்ஷன்ல ஊத்திக்கிச்சாம்.. இதான் நல்ல சான்ஸ்.. விடாதீங்க.. ஹிந்தி ரீமேக்ல நான் நடிச்சிருந்தா சூப்பர் ஹிட் ஆகி இருக்கும்னு அறிக்கை விடுங்க.. இப்போ அது தான் ஃபேஷன்..  

http://2.bp.blogspot.com/_T1vzYiWcy7U/SMs-ocq_LAI/AAAAAAAAXjA/MdpYpjWIq0o/s1600/Podaa-Podi-Movie-stills-simbu%2B(9).jpg


4. ''முன்னாடி ஸ்டார் கிரிக்கெட்னா முதல் ஆளா நிப்பீங்க... இந்த சீஸன்ல ஆளைப் பார்க்க முடியலையே?''  


''இப்போ ஜெயிச்ச செட்ல பலரை டீமுக்குள் கொண்டுவந்ததே நான்தான். டீம் வொர்க்தான் கிரிக்கெட்டின் அழகு. ஆனா, அதைப் புரிஞ்சுக்காம சிலர் என்னை டாமினேட் பண்ணப் பார்த்தாங்க. எனக்கு எதிரா சில வேலைகள் பார்த்தாங்க. முக்கியமான முடிவுகள்ல வேணும்னே என்னைப் புறக்கணிச்சாங்க. அதான் நான் ஒதுங்கிட்டேன். ஆனா, அடுத்த முறை நிச்சயம் டீம்ல இருப்பேன். கிரிக்கெட்டையும் என் னையும் பிரிக்க முடியா துங்க!''


சி.பி - கிரிக்கெட் என்ன நயன் தாராவா?


5. ''இவ்வளவு நாள் லவ் பண்ணாம இருக்கிறது கஷ்டமா இருக்குமே?''


சி.பி - வாரத்துக்கு வாரம் வித்தியாசம் அதுதான் சிம்பு ஹி ஹி ஆ:ளை அடிக்கடி மாத்து... நம்பி வர்ற ஃபிகரை ஏமாத்து.. இதுதான் அண்ணன் பாலிசி

''இல்லைங்க... அமெரிக்காவுல என் கஸின் வீட்ல ஒரு குட்டிப் பையன் இருக்கான். அவனுக்குச் சாதம் ஊட்டுறதுல ஆரம்பிச்சு நாப்கின் மாத்துறது வரை நானே எல்லாம் பார்த்துக்கிட்டேன். அவன்கூடவே விளையாடிட்டு இருந்தப்ப, நானே என்னை ஒரு சின்னப் பையன் மாதிரி ஃபீல் பண்ணேன். அப்போதான் சட்டுனு அப்பா ஆகணும்... மகனைப் பார்த்துக்கணும்னு ஆசை வந்துச்சு.


உண்மையைச் சொன்னா, கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு நம்பிக்கையும் இல்லை; ஆசையும் இல்லை. கல்யாண வாழ்க்கை மேல சின்ன பயம்கூட இருக்கு. ஆனா, 'அப்பா ஆசைக்காகத்தான் கல்யா ணம் பண்ணிக்கலாம்னு தோணுது. அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். காதல் கல்யாணம்தான் ஆசை. அது ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். ஆனா, ஒரு வருஷத்துக்குள் காதல் வருமான்னு தெரியலை. பார்க்கலாம்!''

http://www.kollytalk.com/wp-content/uploads/2012/03/Varalaxmi-Sarathkumar-Celebrates-Womans-Day-3.jpg
போடா போடி படத்தில் வரலட்சுமி சரத்குமார் ( சரத்குமாரின் மகள்)
6. ''வீட்லயும் பொண்ணு பார்ப்பாங்களே... உங்க கண்டிஷன்கள் என்ன?''


சி.பி - என்ன புது கண்டிஷன்? எல்லாரும் சொல்றதுதான்.. பொண்ணு குடும்பப்பாங்கா இருக்கனும்.. அவங்க வீடே பேங்க்கா இருக்கனும்.. வீட்டுக்கு புருஷன் மிட் நைட்ல லேட்டா வந்தாலும் கண்டுக்கக்கூடாது.. 


''பொண்ணு அழகா இருக்கணும். நல்ல சிவப்பா இருக்கணும். ஏன்னா, எனக்கு அழகான குழந்தை வேணும். நான் சரியாப் படிக்காதவன். அதனால, பொண்ணு நல்லாப் படிச்சிருக்கணும். சினிமாபத்தி கொஞ்சம் தெரிஞ்சிருக்கணும். என்னைப் பார்த்து பயப்படக் கூடாது. தைரியமா, தன்னம்பிக்கையோட இருக்கணும். சுருக்கமா சொன்னா, ஒய்ஃப் வந்தா... என் லைஃபே மாறணும். அப்படி ஒரு தேவதையா இருக் கணும்!''




Andrea is not Simbus heroine

7. தனுஷ் மேல் கொலவெறியா?


''தனுஷோட 'கொலவெறிக்குப் போட்டியாதான் 'லவ் ஆன்தம்ஆல்பம் பண்றீங்களா?''

''ஒரு பாட்டு சந்துபொந்தெல்லாம் ஹிட் ஆகுற துக்கு, 'நாக்க முக்க’, ' போடுனு ஏற்கெனவேநிறைய உதாரணங்கள் இருக்கு. 'லூஸுப் பெண்ணேனு காதல் தோல்வி ஃபீலிங் பாட்டு டிரெண்டை ஆரம்பிச்சு வெச்சதே நான்தான். இப்போ நேரம் கிடைச்சதால், 'லவ் ஆன்தம்பண்றேன். இதை தனுஷ§க்குப் போட்டினு சொன்னா, அது தப்பு. அப்படி எல்லாம் சீப்பா நடந்துக்கிற ஆள் நான் இல்லை. சொல்லப்போனா, என் ஆல்பம் பேரைப் பார்த்து காப்பி அடிக்கிறவங்க தான் இங்கே இருக்காங்க!''


சி.பி - அண்ணன் எடுத்த படம் எல்லாம் காப்பி.. இதுல அண்ணனையும் காப்பியா? அவ்வ்வ்  .. லூசுப்பெண்ணே.. பாட்டு செம ஹிட் தான் .. ஆனா பிக்சரைசேஷன் மகா மட்டம்.



8. இப்போ தனுஷ்தான் மன்மதனா?




''வழக்கமா ஹீரோயினுடன் காதல்னு உங்க பேர்தான் அதிகமா கிசுகிசுக்கப்படும். இப்போ அந்த இடத்துல தனுஷ் இருக்காரோ?''  


''அவர் லவ் மேட்டர் பத்தி நான் எதுவும் சொல்ல முடியாது.



சி.பி - என்னாது? அவரோட லவ்வர் ஒரு மேட்டரா? என்னா பேச்சு இது ? ராஸ்கல்? ஏதோ சித்தார்த்தை 2 வருஷம் லவ் பண்ணாங்க.. அப்புறம் தனுஷை 1 வருஷம்.. இப்போ மறுபடி சமாதானம் ஆகி சித்தார்த்தை லவ்விங்.. 3 படம் ஹிட் ஆனா மறுபடி தனுஷ்க்கு ஒரு சான்ஸ் தர்றாராம் ஹி ஹி மற்றபடி அம்மணி நெம்ப நெம்ப நல்ல டைப்ப்ங்கோவ்

 
 என்னைப் பத்தி எதுவும் தப்பா நியூஸ் வர்றதில்லைங்கிற வரை எனக்குச் சந்தோஷம். முன்னாடி விகடன்லயே என்னைத்தான் போட்டு பரேடு எடுப்பீங்க. இப்போ 'வலைபாயுதேகமென்ட்டில் மட்டும்தான் நாம அடிபடுறோம். 'என்னடா பையன் எந்தத் தப்பும் பண்ணாம சும்மா இருக்கானேனு வீட்ல பயந்துட்டாங்கபோல. பரபரனு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நானும் சரினு சொல்லிட்டேன். எவ்வளவு நாள்தான் தனியாவே சுத்திட்டு இருக்கறது?''


சி.பி - விகடன் தாத்தா சைக்கிள் கேப்ல வலை பாயுதே பகுதியை விளம்பரம் பண்ணி எடுத்து அள்ளி விடறாங்க..அப்படி எல்லாம் அவர் சொல்லி இருக்கவே மாட்டார்.. இதுதான் இடைச்செருகல் ஹி ஹி 


http://www.tamilkey.com/wp-content/uploads/2011/07/nayanthara-simbu-0424-550.jpg


9. ''அப்போ உங்களைத்தான் எல்லாரும் திட்டிட்டு இருந்தாங்க. இப்போ நயன்தாரா பிரபுதேவாகிட்ட இருந்தும் விலகிட்டாங்களே?''



''யார் பண்ண தப்புக்கோ... நாம திட்டு வாங்குறது நம்ம ராசிங்க. நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு!''

சி.பி - மைன்ட் வாய்ஸ்ல எங்கே இருந்தாலும், யார் கூட இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்னு சொல்ற மாதிரி கேட்குது ஹி ஹி



10. ''நயன்தாராகூட சேர்ந்து நடிப்பீங்களா?''


''நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் 'அவங்கதான் வேணும்னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன். நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் கொண்டுவரக் கூடாது!''


சி.பி - ஆர்யா பற்றி எதுவுமே கேட்கலையே? என்ன நிருபர் நீங்க? குமுதம் பாருங்க.. இந்த வாரம்.. ஆர்யா பற்றி அண்ணன் கிட்டே கேட்டு பொளந்து கட்டி இருக்காங்க..  ( 9 தாரா யா யா யா யா யாயா-னு 6 டை, ஆர்யா ( 6 யா) பச்சை குத்தி இருக்காராம் ஹி ஹி 6 யா + 9 தாரா = 69 ஜென்மக்காதல்கள் ஹி ஹி 

http://www.extramirchi.com/gallery/albums/south/actors/Simbu_nayanthara/Simbu_nayanthara__Hogenakkal_fast2.jpg


அண்ணே.. பேப்பர் தலைகீழா இருக்கு ஹி ஹி