Wednesday, January 13, 2016

திரைப்பட விழாவில் கிடைத்தது என்ன?- சினிமா ஆர்வலர்கள் கருத்து

கோப்புப் படம்
கோப்புப் படம்
சர்வதேச திரைப்படவிழாவில் எங்களுக்குக் கிடைத்தது என்ன? - பார்வையாளர்களின் கருத்துத் தொகுப்பு
இயக்குநர், நடிகர் ரவிமரியா:
கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் வளர்ச்சியடைந்து வருகிறது சென்னை சர்வதேச திரைப்படவிழா. ஒரு இயக்குநராக பல்வேறு கதையுள்ள படங்களைப் பார்த்து அவர்களது கலாச்சாரங்களை, அவர்களின் திரைக்கதை முறைகளை தெரிந்துகொள்கிறேன். ஒரு நடிகனாக இண்டர்நேஷ்னல் அளவில் எப்படி திறமையை வெளிப்படுத்துகிறார்கள், நம் இந்தியாவில் அதை நாம் எப்படிப் பயன்படுத்தமுடியும் என்பதைத் தெரிந்துகொள்கிறேன். இத்திரைப்படவிழாவை எப்போதும் நான் மிஸ் செய்வதில்லை. சினிமா வளரவும் சினிமாவுக்கான அறிவு வளரவும் இத்திரைப்படவிழா உதவுகிறது.இவ்விழாவுக்காக முன்பே படபிடிப்பு வாய்ப்புகளை மாற்றியமைத்துக்கொள்வேன்.
டி.ஜி.வைஷ்ணவா காலேஜ் மாணவர்கள்:
திரைப்படவிழாக்களுக்கு வருவதன்மூலம் எப்படி திரைத்துறையைச் சார்ந்த முக்கியமானவர்கள் வருவார்கள். அவர்கள் தொடர்புகளைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பு. தவிர எப்படி ஷாட் எப்படி வைப்பது, கேமரா எப்படி வைப்பது என்பதை தெரிந்துகொள்ள இப்படங்கள் உதவுகின்றன. எங்கள் வாழ்வில் இது ஒரு வைடல் பார்ட். இங்கு வரும் இயக்குநர்களிடம் உரையாடும் கலந்துரையாடல் நிகழ்வு முக்கியமானது. அதில் கலந்துகொள்ளும்போது எந்த பாயிண்ட் ஆப் வியூவில் காட்சிகளை வைத்தார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.
இயக்குநர் சந்தானபாரதி:
நடத்தப்பட்டது. இப்போதும் திரைத்துறையிலிருந்து எஸ்பிஎம் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் கலைஞர்கள் தவறாமல் வந்துபடங்களைப் பார்க்கிறோம். முதலில் இத்திரைவிழா பைலட் தியேட்டரிலும் ஆனந்த் தியேட்டரிலும்தான் அப்போது பெரும்பாலும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள்தான் அதிகம் வந்தார்கள். அடுத்தது திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வரத் துவங்கினார்கள். தற்போது விஸ்காம் மாணவர்கள் பெருமளவில் திரைப்படவிழாவில் வந்து கலந்துகொள்வதைப் பார்க்கமுடிகிறது. உலகஅளவில் இருந்து வரும் படங்களைப் பார்க்கலாம். அதன்மூலம் அவர்களது கலாச்சாரம், அவர்களது தொழில்நுட்பம், லேட்டாஸ்ட்டாக என்ன செய்திருக்கிறார்கள் கேமராவை எப்படி வைக்கலாம் என எல்லாவற்றையும் விஷூவலாகப் பார்த்து அனுபவித்துத் தெரிந்துகொள்ளமுடியும். கல்லூரியைவிட இங்கு அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். காரணம் இது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எப்படி விதவிதமாக எடுக்கலாம் எப்படி கேமரா கோணங்களை வைக்கலாம். இங்கு வந்து படங்களைப் பார்க்கும்போது விஷூவலாக்
இயக்குநர், நடிகர் ரமேஷ் கிருஷ்ணா:
உலகப் படங்களைப் பார்க்க ஒரு வாய்ப்பு. ஆனா அதையெல்லாம் இங்க செய்யமுடியாது. ஏன்னா மாறுபட்ட கலாச்சாரம். நமக்கு ஈரான் படங்களோட கலாச்சாரம் ஓரளவுக்குப் பொருந்தி வரும். இந்தப் படங்கள் மூலம் நல்ல விஷயங்கள் தெரிஞ்சக்கலாம். வித்தியாசமான படங்கள் பார்க்கலாம். எப்பவுமே பழைய படங்களைப் பாத்து ஒரே இடத்துல இருக்கற நமக்கு வெளியில வேறொரு பார்வை கண்ணோட்டம் நமக்கும் கிடைக்கும்.
சி.ஆர்.சரஸ்வதி(திரைப்பட நடிகை):
நான், டைரக்டர் சந்தானபாரதி, ரமேஷ் கண்ணா பிலிம் பெஸ்டிவல் ஆரம்பித்ததிலிருந்து 10 வருஷமா தொடர்ந்து வந்துகிட்டிருக்கோம்.டிவிடில படம் பாக்கலாம், தியேட்டர்ல பாக்கலாம், பிலிம் பிரிவியூல பாக்கலாம், எந்தப் படமா இருந்தாலும் சரி தியேட்டர்ல பாக்கற சந்தோஷம் டிவிடில கிடைக்காது. அதுவும் மத்த நாட்டுப் படங்கள்னும்போது அவங்க டெக்னிக்கலா எப்படி படம் பண்றாங்க. எப்படி கதை எப்படி சொல்றாங்க. அந்த நாட்டோட அழகு, அந்த நேச்சர், அந்த சீனரீஸ், படத்துல நடிக்கற கலைஞர்களோட திறமை, தொழில்நுட்ப திறமை யெல்லாம் பாக்கும்போது நிறைய விஷயங்கள் தெரிஞ்சக்கமுடியுது. எங்களைப் பொறுத்தவரையில் இந்த சீசனை என்ஜாய் பண்றோம். எல்லாப் படங்களையும் பாத்துடுவோம். இதை வழக்கமான ஒரு வேலையா வச்சிக்குவோம்.
சத்யேந்திரா (நடிகர்):
13 வருஷமா நான் பெஸ்டிவல்லுக்கு வந்துகிட்டிருக்கேன். இங்கே வந்தா இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சந்திக்கமுடியும். இந்தவருஷம் இந்த விழாவில் 120 படங்கள்வரை கவனித்தாலும் 30 படங்களிலிருந்து 35 படங்கள் வரை கவனித்துப் பார்ப்பேன். முக்கியமாக வெளிநாட்டுப் படங்களைத் திரையிட வந்திருக்கும் இயக்குநர்கள் தொடர்பான படங்களைப் பார்ப்பேன். காரணம் படம் முடிந்ததும் அவர்களோடு கலந்துரையாடுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும். இந்தப் படங்களில் என் சுவைக்கேற்ற படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறேன். நிறைய பரிசோதனை முயற்சிப் படங்கள், நிறைய சிறந்த படங்கள். குறிப்பிட்டு சொல்லணும்னா முதல் நாள் பார்த்த விக்டோரியா ஜெர்மன் படம். இப்போ நான் பாத்துட்டு வந்திருக்கிற ப்ரியமானசம். ஒரு சம்ஸ்கிருத மொழிப்படம் முதன்முதலா பாக்கறேன். நல்ல ஒளிப்பதிவில் சிறந்த நடிப்பில் சிறந்த இசை, கதகளி நடனம் என நல்லபடம் இது.
பாலாஜி தரணிதரன் ( இயக்குநர்):
நான் சென்னை திரைப்படக் கல்லூரி முடித்ததிலிருந்தே இந்த விழாவுக்கு வந்துகிட்டிருக்கேன். இங்கே என்னுடைய முதல் குறும்படம் திரையிட்டாங்க. அதுலருந்து சில ஆண்டுகளா நான் தொடர்ந்து வந்துகிட்டிருக்கேன். இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா ஷார்ட் பிலிம் எடுத்தவங்க, விஸ்காம் மாணவர்கள் என பலரும் இங்கே வந்து பாக்கறாங்க. இங்கே வந்தா ஒரு உந்துதல் கிடைக்கிறது.
ஷைலஜா:
பிலிம் ஃபெஸ்டிவல்னாலே அப்படியொரு சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம். என்னைப் பொறுத்தவரை ஒரு இண்டாக்ஸிகேட்டடு நிலையில இருக்கேன். பேஷனா ஆறாத ஒரு ரொமான்ஸ் பலபேருக்கு சினிமாமேல இருக்கும். அந்த மாதிரி எனக்கு உலகத்திலிருந்து வந்த படங்கள் மேல ஒரு ஈடுபாடு. 50க்கும் மேற்பட்ட நாடுகள்லருந்து வந்த படங்கள் இங்கே இருக்கு. என்னன்னு சொல்லத்தெறியலை. ஒருவிதமான மனநிலையில வெளிநாட்டுப் படங்களைப் பாக்கறது. அந்தப் படங்கள்ல நாம பாக்கற அரசியல், பெண்களுக்கான முக்கியத்துவம், அதப் பத்தி மணிக்கணக்கல பேசறது...
இந்தப் படத்தைப் பாத்து அதுல ஊரிப்போற ஒரு சந்தோஷம். அதப்பத்தி திரும்பத் திரும்ப பேசறது... நண்பர்களோட தொடர்ந்து பேசறது... உண்மையில் இது திரைப்பட விழா மட்டுமே கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் அது. மெயின்ஸ்ட்ரீம் படங்களைப் பாக்கும்போது ஒரு சில விஷயங்களைத்தான் பேசுவோம். ஆனால் ஒரு சர்வதேச படங்களைப் பற்றிப் பேசினால் அந்த நாடு பற்றி, அரசியல் பற்றி, கலாச்சாரம், சமூகம், விமன்னோட ஸ்டேட்டஸ் பற்றி, இளைஞர்கள் பற்றி.. விக்டோரியான்னு ஒரு படம் பார்த்தேன்.
முதல்ல பாக்கும்போது 15, 16 வயசுக்கு பேரன்ட்ஸா இருக்கறவங்க என்ன இப்படின்னு ஒரு கன்சர்ன்னு வரும். ஆனா அப்புறம் படம் நகர நகர என்ன விக்டோரியாவோட கேமரா ஒர்க், அவங்களோட பர்மாமென்ஸ் எல்லாம் மிக மிக அருமை. அந்தப் படத்தைப் பற்றியே நீண்டநேரம் பேசிக்கிட்டிருந்தோம். முன்பெல்லாம் பெஸ்டிவல்லுக்கு வர நிறைய தயக்கம் இருக்கும். ஏனா பெண்களே குறைவா இருப்பாங்க. ஆனா இப்போ நிறைய பெண்கள் நிறைய பேர் வராங்க. நாங்க எல்லாம் சிலபேர் இங்கே வாலண்டியராவும் வொர்க் பண்றது மகிழ்ச்சியா இருக்கு.
இயக்குநர் நாகா
நம்ம படங்கள் ஆஸ்கருக்கு போகலையேன்னு ஒரு வருத்தம் நமக்கு இருக்கு. ஆனா நமக்கு exposureரே கிடையாது. வெறும் பிஸினஸா மட்டுமே பாத்து பழக்கப் பட்ட நமக்கு சினிமாவை எப்படி பாக்கணும்? அதை எப்படி பேசணும்னு தெரியாது. போறபோக்குல சில படங்களைப் பாத்துட்டு கைதட்டிட்டு விசிலடிச்சிட்டு போயிடறோம். ஏன்னா சினிமாங்கறது ஒரு சக்திவாய்ந்த சாதனம், ஊடகம்... ஆனா அந்த மீடியத்துக்கு நாம பெரிய கவனம் செலுத்தறதில்லை. நாம சினிமாவைப் புரிஞ்சிகிட்டோம்னு சொல்லமுடியாது. அதனால exporsure தேவை. அதனால இளம் தலைமுறையினர் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் வரும் படங்களைப் பார்த்துவிட்டு படங்களை இயக்க முற்படவேண்டும்.
ஆரி (நடிகர்)
நான் நடிச்ச நெடுஞ்சாலை படம் முதல்முதலா 2014ல் இங்க திரையிடப்பட்டது. அதேமாதிரி மாயாவுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. இந்தத் திரைப்படவிழாவில் இங்க உங்களோட பேசற வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. தமிழில் நிறைய ஹாரர் படங்கள் வந்துகிட்டிருக்கு. ஆனா மாயா ஒரு டிரெண்ட் செட்டிங் படமா அமைஞ்சிடுச்சி. திரைப்படவிழாவில் நிறைய படங்களை வேறவேற மொழிப் படங்களைப் பாக்கற ஒரு அருமையான வாய்ப்பு. நன்றி.

நன்றி - த இந்து

0 comments: