Thursday, July 01, 2021

AANUM PENNUM 2021 (MALAYALAM) - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி ரொமாண்டிக் ஸ்டோரீஸ்)

 3  வெவ்வேறு  சிறுகதைகள் , ஒன்றுக்கொன்று  தொடர்பில்லாதவை  அமேசான்  பிரைம் லயும்  நீம் ஸ்ட்ரீம்லயும்  ரிலீஸ்  ஆகி  இருக்கு. முதல்  கதைலயும், மூணாவது  கதைலயும்  அடல்ட்  கண்ட்டெண்ட்  இருப்பதால்  ஃபேமிலியோட  பார்க்க  முடியாது , அதனால்  ஃபேமிலில இருக்கற  எல்லாரும்  பேசி  வெச்சுக்கிட்டு  தனித்தனியாக பார்க்கவும் 


1  சாவித்திரி  -  ஹீரோயின்  போலீசால்  தேடப்படும்  ஒரு  கம்யூனிஸ்ட்  போராளி.  படத்தோட  ஓப்பனிங்  சீன்லயே  போலீஸார்  அவரை  துரத்தறாங்க , அவங்க எஸ்  ஆகி  ஒரு  கிராமத்துல  ஒரு  குடும்பத்துல  பணிப்பெண்ணா  ஜாயின்  பண்றாங்க , கதை  நடக்கும்  கால  கட்டம்  1948-1949  ஆனா  ஒயிட்  அண்ட்  பிளாக்  இல்லை  கலர் தான்.


அந்த  குடும்பத்துல   நாயகி  மேல  2  பேரு  கண்  வைக்கறாங்க , நெஞ்சம்  மறப்பதில்லைல  செல்வராகவன்  ரெண்டரை  மணி  நேரம்  இழுத்த  திரைக்கதையை  இவங்க  40  நிமிசத்துல   சொல்லி  இருக்காங்க  தன்னை  வேட்டையாடத்துடிக்கும்  2  ஆண்  மிருகங்களை  பக்காவா  பிளான்  பண்ணி  நாயகி  எப்ப்டி  வேட்டையாடுறா  என்பதே  கதை , இது  போக  நாயகி  காதலிக்கும்  ரொமாண்டிக்  போர்சனும்  உண்டு 


நாயகியா சனீப்தா  மேனன்  கேரளத்து  வனப்புடன்  போனாப்போகுதுனு  கொஞ்சம்  நல்ல  நடிப்பையும்  காட்டி  இருக்கிறார்


இது  போக  பாஞ்சாலி  சபதம்  தர்மன்  அர்ஜூனன்  குறியீடுகளும்  படம்  நெடுக  உண்டு 


2  ராச்சியம்மா 


ஹீரோயின்  ஒரு பால்காரி, ஆனா இவரோட  கேரக்டர்  ஸ்கெட்ச்  பிரமாதமா  வடிவமைக்கபப்ட்டிருக்கு ,  யாருக்கும்  பயப்படாத ஆனா  எந்த  ஆணும்  நெருங்க  முடியாத  துணிச்சலான  பெண். இவருக்கு  நாயகன்  கூட  மலரும்  அன்பு  நட்பு  காதல்  தான்  கதை 


நாயகியா  பார்வதி  அதகளம்  பண்ணி  இருக்காங்க  வெரிகுட்  ஆக்டிங். அவரோட  வாய்ஸ்  மாடுலேசன்  ,  பாடி  லேங்குவேஜ்  இரண்டும்  செம 


அம்மை  நோய்  வந்தபின்  நாயகனை  தாயாக  கவனிக்கும்போதும்  சரி ,  நாயகன்  தன்னை  விட்டுப்பிரிந்து  போய்  வேறு  ஒருவளை  ,மணந்து  குழந்தை பெற்றுக்கொண்டபோதும்  அந்தக்குழந்தை பேர்ல  தன்  சொத்துக்களை  டெபாசிட்  பண்ணி  வைத்ததாக  சொல்லும்போது  சரி  உருக்கமான  நடிப்பு .  மொத்தம்  35  நிமிசம்  படம்


3   ராணி 


ஹீரோ , ஹீரோயின்  இருவரும்  ஓப்பனிங்  சீன்லயே  லவ்வர்சாதான்  காட்டப்படறாங்க.  ஹீரோவோட  ஒரு  ஃபிரண்ட்  ஒரு  தனிமையான  இடத்தைப்பத்தி  சொல்லி  அங்கே  நாயகியை  தள்ளிட்டுப்போடா  என  ஐடியா  குடுக்கறார் (  ஆர்கானிக்  ஆர்காசம்  சாக்சம் )


 நாயகியை  நாயகன்  நைசா  பேசி  ஒதுக்குப்புறமான  அந்த  இடத்துக்கு  அழைத்து  செல்ல  தாஜா  பண்ணுவதுதான்  பாதிக்கதை 


ஹீரோயின்  சம்மதிச்சு  ஹீரோ  கூட  அந்த  பிரைவேட்  பிளேஸ்க்குப்போனபின்   ஏற்படும்  சம்பவங்களே  பின்  பாதி  திரைக்கதை 


நாயகியா  தர்சனா  ராஜேந்திரன்  கலக்கலான  முக  பாவங்கள்  ,  குறும்பு  கொப்புளிக்கும்   நடிப்பு  (  அதெப்பிடி  குறும்பை  கொப்பளிப்பது?னு  கேட்கக்கூடாது ) இந்த  தொகுப்புலயே  மிகவும்  ரசிக்க  வைக்கும்  கதை  இதுதான்  ஆனா  அநியாயத்துக்கு  நீளம்  கம்மி ,  நீலம்  அதிகம்  வெறும்  18  நிமிசம்  தான் 


சபாஷ்  டைரக்டர் 


1   கேரக்டர்ஸ்கெட்ச்  ,  ஒளிப்பதிவு  (  3  வெவ்வேறு  காலகட்டங்களை  பிரதிபலிக்கும்  மாறுபட்ட  ஷேடுகள் )   இரண்டும்  அருமை 


2    படத்தில்  வரும்  3  கதைகளிலுமே  நாயகியை  முன்னிலைப்படுத்தியது , நாயக்ர்களை  டம்மி  ஆக்கியது .  வில்லனுக்கும்  வேலை  இல்லை 


3   கேரளாவின்  வனப்பை  அள்ளி  எடுக்க  லொக்கேஷன்  செலக்சன்  ,  முதல்  கதையின்  நைட்  சீக்வன்ஸ் ,  மூன்றாவது  கதையில்  காஸ்ட்யூம்   டிசைனருக்கே  அதிக  வேலை  இல்லாமல்  செய்தது  , இரண்டாவது  கதையில்    ரொமான்ஸ்   என  கமர்ஷியல்  அம்சங்கள்  நிறைய 


  நச்  வசனங்கள் 


1   நீ  தனியாவே  இருக்கியே? உனக்குன்னு  யருமே  இல்லையா?


  ஏன்  இல்லை ?  கடவுள்  இருக்காரே? 

 உனக்கு  ஏதாவது  உடம்பு  சரி  ஆகாம  போனா  யார்  உன்னை  பார்த்துப்பா?  


  கடவுள்  பார்த்துப்பார் 


2  என்னய்யா?  ஆளே  மாறிட்டே?  உடம்பு  குண்டாகிடுச்சு ?


வயசாகுதில்ல?   நீ  மட்டும்  அப்படியே  இருக்கே? ரைட்  ரைட்  உனக்குதான்  வயசே  ஆகாதே? 


3   ஏன்  என்னை  விட்டு  போய்ட்டே?


  தப்பு  செய்யறது  தப்புனு  நீதானே  சொன்னே? 


ஓ, அதனாலதான்  வர்லையா?  நாமும் மனுசங்கதானே? தப்பு  செய்யாம  இருக்க  கடவுள்  இல்லையே? 


4   ரூம்ல  தனியா  இருப்பதும்  ஜெயில்ல  இருப்பதைப்போலத்தான் 


5   டேய் .. இதெல்லாம்  மேரேஜூக்குப்பின்  வெச்சுக்கலாமே?


 அது  ஓல்டு  ஃபேஷன்.  முன்னமே  பண்றதுதான்  லேட்டஸ்ட்  ஃபேசன்


சரி  நாம  பழமை  விரும்பிகளாவே  இருப்பமே? 


6   உன்  கூட  லாங்க் ட்ரிப்  வர  தயக்கமா  இருக்கு .  வேணா  தியேட்டருக்குப்போலாமா?  நீ  என்னென்ன  பண்ண  நினைக்கறியோ  அதை  எல்லாம்  செஞ்சுக்கோ


 அய்யோ , வீட்ல  பார்த்தா  வம்பு


  டேய்,  உன்  ஃபேமிலி  மெம்பர்ஸ்  எல்லாரும்  நமக்கு  பேக்  ரோல  உக்காந்தா  இருக்கப்போறாங்க ?


7   இந்தக்காலப்பசங்களுக்கு  சேகுவாரா  படம்  டி  சர்ட்ல  இருக்கனும்,  ஆனா   ரோமியோ  மனசு 


8  குருவாயூரப்பன்  சத்தியமா  உன்னை  ஏதும்  செய்ய  மாட்டேன்


  சரி ,  குருவாயூரப்பனுக்கு  பணி  கிட்டும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1  முதல்  கதைல  வர்ற  வில்லன்  நாயகியை  அடைய   முயற்சிக்கிறான்.  அவ  சம்மதம்  சொல்றாளா?  எதிர்க்கறாளா?  என்பதை  உணராமலேயே  எப்படி  நாள் நட்சத்திரம் ,  இடம்  எல்லாம்  சொல்லி  அங்கே  வரச்சொல்றான்?


2  அரண்மனை  மாதிரி  பங்களா  3  ஏக்கர்  கணக்கில்  இருக்கும்போது  அங்கேயே   தன்  விருப்பத்தை  நிறைவேத்திக்காம  பேக்கு  மாதிரி  தனியா  போய்  மாட்டிக்குவது  எப்படி ? 


3   பக்கவாதத்தால்  பாதிக்கப்பட்ட  அந்த  பெரியவர்  நடக்கவே  முடியாம  கை  காலை  அசைக்க  முடியாம  இருக்கார் , அவர்  கூட  நாயகியை  தப்பா  பார்க்கிறார்  என  காட்டுவது  ஓவர் .  பாக்கத்தான்  முடியும்? 


4      2வது  கதைல  நாயகன்  நாயகியை  விட்டுச்செல்ல  வலுவான  காரணங்கள்  இல்லை 


5    3  வது  கதைல  தனிமையான  இடத்துக்கு  செல்லும்   ஜோடிகள்  தங்கள்  உடைகளை  கழட்டி  பக்கத்துலயே  வெச்சுக்காம  அரை  பர்லாங்  தூரத்தில்  நிற்க  வைத்திருக்கும்  பைக்ல    எல்லா  டிரஸ்சையும்  கழட்டி  வெச்சுட்டு  போவது  நம்பும்படி  இல்லை 


6  டிரஸ்சை  சும்மா  விளையாட்டுக்குத்தான்  ஒளிச்சு  வெச்சேன்  என  அந்த  பெருசு  சொல்லும்போது  அந்த  லேடி  கண்டிக்காமல்  இருப்பது  ஆச்சரியம் 


 சி.பி  ஃபைனல்  கமெண்ட் -   ரொமாண்டிக்  ஸ்டோரீஸ்  விரும்பிப்பார்க்கும்  யூத்களுக்கான  படம்.  பிரமாதம்  எல்லாம்  இல்லை ,  மொக்கையும்  இல்லை .  பார்க்கலாம்  ரகம் , ரேட்டிங்  2. 5 / 5