Friday, June 30, 2023

CHARLES ENTERPRISES (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

 



சுபாஷ்  லலிதா  சுப்ரமணியம்  திரைக்கதை  இயக்கத்தில்  கலையரசன் , பாலு வர்கீஸ் , ஊர்வசி  நடித்த  இந்தப்படம்  2023  மே 19  அன்று  திரையரங்குகளில்  வெளியாகி  சுமார்  வசூலைப்பெற்றது , இப்போது  அமேசான்  பிரைம்  ஓ டி டி  யில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


புராதன  மதிப்பு  மிக்க  வினாயகர்  சிலை  எப்படியோ  நாயகனின்  குடும்பத்தாருக்குக்கிடைக்கிறது . பரம்பரை  பரம்பரையாக  அந்த  சிலை  அவர்கள்  வீட்டில் தான்  இருக்கிறது . நாயகன்  சின்னத்தம்பி    படத்தில்  கவுண்டமணி  போல  மாலைக்கண்  நோய்  உள்ளவர். இதனால்  மாலை  6  மணிக்கு  மேல்  இவருக்குக்கண்  தெரியாது . இந்தக்காரணத்தால்  இவருக்கு  திருமணம்  செய்ய  பெண்  கிடைக்காமல்  தள்ளிக்கொண்டே  போகிறது . இவர்  ஒரு  கடையில்  பணீயாளாக  வேலை  பார்க்கிறார் 


 நாயகனின்  கண்  ஆபரேஷனுக்கு  பணம்  தேவைப்படுகிறது . அதே  போல்  சொந்தமாக  பிஸ்னெஸ்  செய்ய  நினைக்கிறார்  , அதற்கும்  பணம்  தேவைப்படுகிறது . இந்த  நேரத்தில்  தான்  வில்லி  நாயகனிடம்  அறிமுகம்  ஆகி  ரூ 50 லட்சம்  ரூபாய்  தருகிறேன். அந்த  வினாயகர்  சிலையை  எனக்குத்தந்து  விடு  என்கிறார். நாயகன்  மறுக்கிறார்


 ஒரு  கட்டத்தில் நாயகன்  மனம்  மாறி  அந்த  சிலையை வீட்டில்  யாருக்கும்  தெரியாமல்  திருடி  ஒளித்து  வைத்து  விட்டு  வில்லியைத்தேடுகிறார் , வில்லியைக்காணவில்லை . வேறு  ஒரு  நபருடன்  சேர்ந்து  அந்த  சிலையை   இல்லீகல்  ஆக  விற்க  முனைகிறார். இதற்குப்பின்  என்ன  நிகழ்ந்தது  ? என்பதுதான்  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக   பாலு  வர்கீஸ்  ஒரு  சராசரி  இளைஞனைப்பிரதிபலிக்கிறார். திருமணத்துக்குப்பார்த்த  பெண்  செல்  ஃபோனில்  நாசூக்காக  திருமணத்துக்கு  மறுப்புத்தெரிவிக்கும்  காட்சியில்  முக  பாவனைகளை  அழகாகக்காட்டுகிறார்


நாயகனின்  அம்மாவாக  ஊர்வசி   லொட  லொட  என  பேசும்  கேரக்டர். அவருக்குப்பழக்கமான  ரோல் , ஊதித்தள்ளி  இருக்கிறார்


 நாயகனுக்கு  உதவி செய்யும்  தமிழராக  கலையரசன் . நாயகனை  விட  இவர்  வரும்  காட்சிகளில் தான்  உயிரோட்டம்  , கலகலப்பு  இருக்கிறது . ஒரு வேளை  தமிழ் நாட்டுக்காரர்  என்ற  பாசமோ  என்னமோ ? அப்பாவாக  குருசோமசுந்தரம்   குட், ஆனால்  அதிக  வாய்ப்புகள் , காட்சிகள்  இல்லை \\ வில்லி  ஆக   அபிஜா  சிவகலா   அசால்ட்  தோரணையில்  கலக்குகிறார்., வில்லிக்கு  உதவியாளராக  வரும்  மணிகண்டன்  ஆச்சாரி  கச்சிதம் , கலையரசனுக்கு  ஜோடியாக  வரும்   மிருதுளா  குட்  செலக்சன் 


ஸ்வரூப்  பிலிப்பின்  ஒளிப்பதிவு  அழகு , சுப்ரமணியன்  பின்னணி  இசையில்  கவனம்  ஈர்க்கிறார் 

கதையில்  அனைத்து  கேரக்டர்களூம்  அறிமுகம்  ஆகி  மெயின்  கதைக்கு  வரவே  50  நிமிடங்கள்  ஆகிறது , அதற்குப்பின்  ஒரு  மணி  நேரத்தில்  படமே  முடிகிறது . இன்னும்  விறுவிறுப்பாக  படத்தை  கிரிஸ்ப்  ஆக  கொடுத்திருக்கலாம் .  சின்ன  சின்ன  டைரக்சன்  டச் களில்  கவனம்  ஈர்த்தாலும்  ரொம்ப  ஸ்லோ  டிராமாவாக  நகர்வதை  உணர  முடிகிறது 


சபாஷ்  டைரக்டர்


1 போலீஸ்  ஸ்டேஷனில்  நாயகனும் , கலையரசனும்  அறிமுகம்  ஆகும்  காட்சி . முன்  பின்  பழக்கம்  இல்லாமல்  போனாலும்  மனித நேய  அடிப்படையில்  புகாரை  வாபஸ்  வாங்கும்  காட்சி 


2   வில்லியின்  தோரணையான  உடல்  மொழி \\


3    ஊர்வசியின்  பண்பட்ட  நடிப்பு \\

4  படம்  முழுக்க  ஆங்காங்கே  வரும்  நகைச்சுவை  இழைகள் 


5  படத்தின்  முழுக்கதையை  விட  டைட்டில்  போடும்போது  பாட்டில்  சொல்லப்படும்  வினாயகர்  சிலை  பின்னணி  கதை  செம  சுவராஸ்யம் 


  ரசித்த  வசனங்கள் 


1  உங்க    பேரு  சங்கீதாவா?  செல்லமா  சுருக்கி  சங்கி  என  கூப்பிடலாமா?


 அய்யோ  , வேணாம்ங்க 

2  லாட்டரிக்கடைக்காரரே!  உங்க  கடைல  விற்கற  லாட்டரில  எது  பரிசு  அடிக்கும் ?


 யோவ், அது  தெரிஞ்சா  நானே  அதை  எடுத்து  வெச்சுக்க  மாட்டேனா? 


3   ரேஷன்  கடைல  சிசிடி வி  கேமரா  சீப்  ரேட்ல  கிடைக்குமா?


4  எல்லாத்தையும்  கல்யாணத்துக்கு   முன்பே  பண்ணிட்டம்னா  கல்யாணம்  பண்ணிய  பின்  என்ன  செய்ய?


  லவ்  பண்ணலாம் \\


5   பாய்சன்  வாங்கக்கூட  கைல  காசில்லாம  கஷ்டப்பட்டு  அலைஞ்சிட்டு  இருக்கேன்  என்  கிட்டே  வந்து  பஞ்ச  உலோக  சிலை  இருக்கு  வாங்கிக்கறியா?னு  கேட்டா  எப்படி ? 


6  அவனவன்  கடவுள்  கிட்டே  வரம்  கேட்பான் , உனக்கு  கடவுளே  வரமா  கிடைச்சிருக்கே ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   மாலைக்கண்  வியாதிக்கு  இந்தியாவிலேயே   ட்ரீட்மெண்ட்  இல்லை  என்று  வசனம்  வருகிறது . இது  தவறான  தகவல்  , கோவை  அர்விந்த்  ஹாஸ்பிடலிலேயே  வசதி  இருக்கிறது . நல்ல  தரமான  சிகிச்சை 


2  நாயகனின்  அப்பா , கலையரசன்  இருவரும்  சந்திக்கும்போது   எங்கேயோ  பார்த்த  முகம்  மாதிரி  இருக்கே  என  இருவரும்  சொல்லிக்கொள்கிறார்க:ள், அதை  வைத்து  ஏதாவது  ட்விஸ்ட்  இருக்கும்  என  எதிர்பார்த்ததில்  ஏமாற்றமே


3  ஏற்கனவே   போலீஸ்  ரெக்கார்டுகளில்  கலையரசன்  பெயர்  இருக்கிறது . ஆல்ரெடி  லாக்கப்பி,ல்  போலீசிடம்  அடி  வாங்கிய  கலையரசன்  கூட  நாயகன்  சுற்றிக்கொண்டு  இருக்கிறார். போலீசுக்கு  நாயகன்  மீது  சந்தேகம்  வராதா ? 


4  இரவு  நேரத்தில்  கண்  தெரிய  டாக்டர்  தந்த  கண்ணாடியைப்போட்டுக்கொண்டு  இருக்கும்போதும்  ஏன்  நாயகன்  அவ்வளவு  தடுமாறுகிறார் ? 


5  வெயிட்டே  அதிகம்  இல்லாத  சின்ன  சிலையை  எதற்கு  காரில்  மறைத்து  வைக்க  வேண்டும் ?    வீதியில்  நிற்கும்  காரில்  ஒளித்து  வைப்பதை  விட  வீட்டில்  ஈசியாக  ஒளித்து  வைக்கலாம், அதுதான்  சேஃப்டியும்  கூட 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - ஒரே  ஒரு  இடத்தில்  லிப்  லாக்  சீன்  இருக்கிறது , மற்றபடி  யூ படம்தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சுவராஸ்யமான  ஒன்  லைன்  தான்,  ஆனால்  ரொம்ப  ஸ்லோவான  சராசரி  மெலோ  டிராமாவாகத்தந்திருக்கிறார்கள் , இன்னும்  மெருகேற்றி  இருக்கலாம்   ரேட்டிங்  2.25  / 5 


Charles Enterprises
Charles Enterprises.jpg
Official poster
Directed bySubhash Lalitha Subrahmanian
Written bySubhash Lalitha Subrahmanian
Produced byDr. Ajith Joy
Achu Vijayan
Starring
Production
company
Joy Movie Productions
Release date
  • 19 May 2023
CountryIndia
LanguageMalayalam
Box office 

Wednesday, June 28, 2023

SIRF EK BANDAA KAAFI HAI (2023)- ஹிந்தி - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா) @ ஜீ 5

   


   இது  ஒரு  உண்மை  சம்பவத்தை  அடிப்படையாகக்கொண்டு  திரைக்கதையாக  உருவான  படம் ,  டைட்டிலுக்கு  அர்த்தம் சிர்ஃப்  ஏக்  பந்தா  காஃபி ஹை = ஒரே ஒரு  (நேர்மையான )பொது ஜனம்  போதும். த  ஃபேமிலி  மேன்   வெப் சீரிஸ்  டீம்  அப்படியே  இதில்  களம் இறங்கி  இருக்கிறது . தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன போது  இது  பாசிட்டிவ்  விமர்சனங்களைப்பெற்றது  மே  23   2023  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன இப்படம் இப்போது  ஜீ 5  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி 16  வயது  ஆன  ஒரு  மைனர்  பெண். இவரது  அம்மா, அப்பாவுடன்  வசித்து  வருகிறார்.  அப்பா  ஒரு  சாமியார்  பக்தன். அந்த  சாமியாருக்காக  அந்த  ஊரில்   மக்களிடம் நிதி  திரட்டி ஆசிரம்  எல்லாம்  கட்டி நிர்வகித்து  வந்திருக்கிறார். ஒரு நாள்  சாமியார் நாயகிக்கு  பேய்  பிடித்து  இருக்கிறது , என்னிடம்  அழைத்து  வா  என்கிறார்.


தன்  அம்மா , அப்பாவுடன் சாமியாரின்  இருப்பிடத்துக்கு  சென்ற  நாயகி  சாமியாரால்  பாலியல்துன்புறுத்தலுக்கு  ஆளாகிறாள் . வெளியே  வந்து  பெற்றோரிடம்  முறையிடுகிறாள் . போலீசில்  புகார்  செய்யப்படுகிறது 


சாமியார்  மிகவும் செல்வாக்கு  மிக்கவர்  என்பதால்  ஆள் பலம், அரசியல்  பலம்  மூலம்  எல்லோரையும்  விலைக்கு  வாங்குகிறார். நாயகியின்  சார்பாக  வாதாட  இருந்த  வக்கீலையும்  விலைக்கு  வாங்குகிறார் 


இப்போதுதான்  நேர்மையான  வக்கீலான  நாயகன்  களத்தில்  இறங்குகிறார். நாயகன்  அந்த  மைனர்  பெண்ணுக்கு  நீதி  வாங்கித்தந்தாரா? என்னென்னெ போராட்டங்களை  சந்தித்தார்  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக மனோஜ்  பாஜ்பேயி  பிரமாதமாக  நடித்திருக்கிறார். வில்லனின்  ஆட்கள்  20  கோடி  ரூபாய்க்கு  அவரை  பேரம்  பேச  வரும்போது நையாண்டியுடன்  அவர்க்ளை  டீல்  செய்யும்  விதம்  அபாரம் .  வக்கீல்  தொழிலில்  உள்ள  டென்சனால்  குடும்பத்தை  சரி  வர  கவனிக்க  முடியவில்லையே  என  அவர்  கலங்கும்  இடங்கள்  செண்ட்டிமெண்ட்  டச்


பாதிக்கப்பட்ட  பெண்ணாக அட்ரிஷா  சின்ஹா பயம்  பொங்கும்  விழிகளுடன்  நேர்த்தியாக  நடித்திருக்கிறார். பெரும்பான்மையான  காட்சிகளில்  பர்தா  உடன்  வருவதால்  கண்களாலேயே  நடிக்க  வேண்டிய  கட்டாயம், கச்சிதமாக  நடித்திருக்கிறார்


வில்லன்  சாமியாராக  சூர்யமோகன் மிரட்டி  இருக்கிறார்.


தீபக்  கிங்க்ராணி  திரைக்கதை  அமைக்க அபூர்வ  சிங்க்    கார்க்கி  இயக்கி  இருக்கிறார். கோர்ட்  சீன்களில்  லைட்டிங்  பிரமாதம் அர்ஜூன்  குக்ரேதிதான்  ஒளிப்பதிவு சங்கீத்  சித்தார்த்  ராய்  பின்னணி  இசையில்  பிரமாதப்படுத்தி  இருக்கிறார்  எடிட்டர்  சுமீத்  கோடியன்  132  நிம்டங்கள் டியூரேஷன்  வரும்படி  கச்சிதமாக  ட்ரிம்  செய்து  இருக்கிறார்


குடும்பத்துடன்  பார்க்கும்படி கண்ணியமாக  காட்சிகள்  நகர்கிறது .ஜீ  5  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர்


1  பாதிக்கப்பட்ட  பெண்  மைனர்  இல்லை , மேஜர்  என  பொய்யான  டாக்குமெண்ட்  ரெடி  செய்யும் சாமியார்  தரப்பு  வக்கீல்  நாயகனிடம்  நோஸ்கட்  வாங்கும்  காட்சி  கலக்கல் ரகம். ஸ்கூல்  பிரின்சிபால்  மேடமை உசுப்பேற்றிஅவர்  வாயாலேயே  உண்மையை  வர  வைத்த  காட்சி  கிளாசிக் 


2   கோர்ட்  வாசலிலேயே  சாமியாருக்கு  எதிராக  சாட்சி  சொன்ன  ஆள்  கொலை  செய்யப்படும்  காட்சி  ப்டமாக்கப்பட்ட  விதம் 


3   மைனர்  பெண்ணை  கேள்விகளால்  துளைத்தெடுக்கும்  வக்கீலுக்குப்பாடம்  ப்கட்டும்  விதமாக  நாயகன்  ஜட்ஜையே  குறுக்குக்கேள்வி  கேட்டு  மடக்கும்  காட்சி 


4  க்ளைமாக்சில்    ராவணன் - சிவன்  கதையை  சொல்லி  சாதா  மனிதன்  செய்யும்  தப்பை  விட  சாமியார்  செய்யும்  தப்பு  எவ்வளவு  கொடுமையானது  என்பதை  விவரிக்கும்  இடம்


  ரசித்த  வசனங்கள் 


1  உண்மையான  குரு  பக்தி  என்பது  குருவை முழுமையாக  நம்பி தன்னை  ஒப்படைப்பது 


2  வக்கீல்சார் , உங்க  ஃபீஸ்  எவ்ளோ?


 பாதிக்கப்ட்ட  பொண்ணோட  சிரிப்பு 


3  போக்சோ  சட்டப்படி பாதிக்கப்பட்ட  பெண்  மைனர்  எனில்  குற்றவாளி  அந்தப்பெண்ணின்  அந்தரங்கப்பகுதியை  தொட்டாலே  அது  ரேப்  என்றே  கருதப்படும் 


4  உன்  உண்மையான  எதிரி  உன்  பயம்  தான்.பதட்டம்தான்


5 மக்கள்  அந்த  சாமியாரை  தெய்வமா  மதிக்கறாங்க , அவரையே  நீ  உள்ளே  தள்ளிட்டே, அதான்  உன்னை  விரோதியாப்பார்க்கறாங்க . இது  உனக்குப்பெருமைதான்


6  உலாக்த்துல  அவருக்கு  ஏகப்பட்ட  ஃபாலோயர்ஸ்  இருக்காங்க , சாமியார் ஹாஸ்பிடல்ஸ் கட்டி  இருக்கார் , ஸ்கூல்  கட்டி  இருக்கார்


 இதெல்லாம்  கட்டினா  ரேப்  பண்ணலாம்னு  அர்த்தமா?


7  வாழ்க்கைல  கஷ்டங்கள்  வரும்போது  பயந்து  ஓடுபவன்  கோழை ,

 வீரனாக  இருப்பதுதான்  நமது  வேலை  

முள்ளும்  சேர்ந்ததுதான்  ரோஜா , 

தைரியம்  இருந்தால்  நாம்தான்  ராஜா 


8  இந்தௌலகத்துல  எல்லாப்பெண்களும்  தங்கள்  வாழ்க்கையில்  ஒரு  முறையாவது பிசிக்கலாவோ, மெண்ட்டலாவோ   அப்யூஸ்  பண்ணப்பட்டிருக்காங்க 


9  ராவண்ன்  சீதையைக்கடத்தும்போது  ராவணனாப்போய்க்கடத்தி  இருந்தால்  அவனை  மன்னித்திருக்கலாம், ஆனால்  அவன் ஒரு  முனிவர்  வேடத்தில்  போய்  கடத்தி  இருக்கிறான்/ இதனால்  முனிவர்களுக்குப்பெரிய  பேர்  இழப்பு , இதே  மாதிரி  தான்  சாமியார்  கதையும் .. 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகியின்  வக்கீல்  நாயகியின்  வீட்டுக்கு  வெளியே  வாசலிலேயே  பார்ட்டியிடம்  டீல்  பேசுவது , ஒரு கோடிக்கு  ஒத்துக்க  முடியாது , 10  கோடி  கேட்கலாம் என  சொல்வதெல்லாம்  நம்பும்படி  இல்லை . ஒரு  லாயர்  இவ்வளவு மடத்தனமாக  பப்ளிக்காக  பேச  மாட்டார். நான்  அப்றம்  கால்  பண்றேன் என  சொல்லி  இருக்கலாம், அல்லது  மெசேஜ்  அனுப்பி  இருக்கலாம் 


2  பொதுவாக  சாமியார்கள்  பெண்ணுக்கு  மயக்க  மருந்து. அல்லது  போதை  மருந்து  கொடுத்துத்தான்  ரேப் செய்வது  வழக்கம், ஆனால்  பெண்ணின்  பெற்றோர்கள்  வெளியே  இருக்க  பெண்ணை  உள்ளே  வரச்சொல்லி  ரேப்  செய்வது  ரொம்ப  ரொம்ப  ரிஸ்க் , எப்படி அந்த  முட்டாள்  சாமியார்  வாண்டடடா  சிக்கினார் ? 


3  வில்லனான  சாமியார்  தரப்பு  வக்கீல் வாதம்  சிறப்பாக  இல்லை , பெயில்  எடுக்க  முனைவது , மைனர்  பெண்ணை  மேஜர்  என  பொய்யாக  நிரூபிக்க  முனைவது  ஆகிய  இரண்டில்  மட்டுமே  கான்செண்ட்ரேஷன்  செய்திருக்கிறர்கள் , மெயின்  கேசில்  வில்லனின்  சார்பாக   சரியாக  வாதிட  வில்லை 





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   கோர்ட்  ரூம்  டிராமா  ரசிகர்கள்  கொண்டாடும்  படம் , பெண்களுக்கான  விழிப்புணர்வுப்படம்  ரேட்டிங்  3.25 / 5 




Sirf Ek Bandaa Kaafi Hai
Bandaa Official Poster.jpg
Official release poster
Directed byApoorv Singh Karki
Written byDeepak Kingrani
Produced byVinod Bhanushali
Kamlesh Bhanushali
Vishal Gurnani
Vishwankar Pathania
Juhi Prakash Mehta
Asif Shaikh
Suparn Verma
Starring
CinematographyArjun Kukreti
Edited bySumeet Kotian
Music bySangeet-Siddharth
Roy
Production
companies
Distributed byZEE5
Release date
  • 23 May 2023
Running time
132 minutes[1]
CountryIndia
LanguageHindi

Tuesday, June 27, 2023

குமுதம் (1961) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா ) @ யூ ட்யூப்

 


  1961  ஆம் ஆண்டின் சிறந்த படமாக  ஒன்பதாவது நேஷனல்  ஃபிலிம்  ஃபெஸ்டிவலில்  விருது  பெற்ற் படம்  இது , தமிழில்  ஹிட்  ஆனதால்  தெலுங்கில்  மஞ்சி ,மனசுலு ( 1962) ,  மலையாளத்தில்  சுசீலா ( 1963) ஹிந்தியில்  பூஜா  கி ஃபூல் (  பூஜைக்கு உரிய  மலர் )  (1964 )  ரீ  மேக்  செய்யப்பட்டு எல்லா  மொழிகளிலும்  வெற்றி  அடைந்த  படம் .இது  ஒரு  ரொமாண்டிக்  மெலோ டிராமா  வாக  பிரமோ  செய்யப்பட்டாலும்  ;பின்  பாதியின்  பின்  பாதியில்  கோர்ட்  ரூம்  டிராமாவாக  இருக்கும்


   ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்   சிதம்பரத்தில்  உள்ள  வண்டலூரில்  தன்  அண்ணன்   உடன்   வசிக்கிறார். அண்ணனுக்கு  ஒரு  மகள்  உண்டு .  காலேஜ்  படிப்புக்காக  சென்னை  செல்கிறார்  நாயகன்,  இவரைப்படிக்க  வைப்பது  அண்ணன்  தான், அதனால்  அண்ணனுக்கு  நன்றிக்கடன் பட்டவர் . 


அண்ணன்  மிகவும்  பணக்கஷ்டத்தில்  இருக்கிறார். நோய்வாய்ப்பட்டு  சிரமப்படுகிறார். இதை  உணர்ந்த  நாயகன்  ஹாஸ்டலில்  தங்கிப்படித்தால்  அதிக  செலவாகும்  என  தனி  வீடு பார்த்துத்தங்க  முடிவு  செய்கிறார்


 பிரம்மச்சாரிக்கு  சென்னையில்  வாட்கை  வீடு  கிடைக்காது  என்பதால்  திருமணம்  ஆனவர்  என  பொய்  சொல்லி  ஒரு வீட்டில்  வாடகைக்கு  தங்குகிறார்


ஹவுஸ்  ஓனருக்கு  ஒரு  மகள் . நாயகனின்  டைரியைப்படித்துப்பார்த்து  உண்மை  நிலையை  அறிந்து  நாயகனைக்காதலிக்கிறார். நாயகனும்  தான். 


நாயகனின்  குணத்தைப்பார்த்து இந்த  மாதிரி  பையன்  தான்  நம்ம  மகளுக்கு  மாப்பிள்ளையா  வரனும், அவனுக்கு  மட்டும் மேரேஜ்  ஆகாம  இருந்தா  அவனுக்குத்தான்  நம்ம  பொண்ணைக்கொடுக்கனும்  என  பேசிக்கொள்கிறார்கள் . இருவரும்  காதலிப்பதை  அறிந்து  திருமணம்  செய்து  வைக்க  முடிவெடுக்கிறார்கள் .


நாயகனின்  அண்னன்  மகள்  வில்லன்  மீது  காதல்  வசப்படுகிறாள் ., வில்லனுக்கு  விழி  ஒளி  இழந்த  தங்கை  ஒன்று  உண்டு. திருமணம்  ஆகாத  பெண். வில்லனுக்கு  வேறு  ஒரு  ப்ணக்காரப்பெண்ணுடன்  தொடர்பு  உண்டு . அவள்  அனுப்பும்  பணத்தை  ஜாலியாக  செலவு  செய்து  ஆடம்பர  வாழ்க்கை  வாழ்ந்து  வருகிறான்  வில்லன்


  நாயகனின்  அண்ணன்  சீரியஸ்  ஆக  மரண  தருணத்தில்  இருக்கிறார். தந்தி  கண்டு  நாயகன்  , நாயகி , நாயகியின்  பெற்றோர்  அனைவரும்  அங்கே  போக  அண்ணன்  தன்  மகள்  திருமணத்தை  நடத்தி  வைக்க  தம்பியான  நாயகனிடம்  உறுதி  வாங்கிக்கொண்டு இறக்கிறார்  


தன்  அண்ணன்  மகள்  வில்லன்  மீது   காதல்  கொண்டதால்  குடும்பத்தாரிடம்  பேசி  சம்ப்ந்தம்  செய்ய  முயலும்போது அவர்கள்  ஒரு  கண்டிஷன்  போடுகிறார்கள் . வில்லனின்  தங்கையை  நாயகன்  திருமணம்  செய்து  கொண்டால்  நாயகனின்  அண்ணன்  மகளை  வில்லன்  திருமணம்  செய்து  கொள்வான் 


 பெண்  கொடுத்து  பெண்  எடுக்கும்  இந்த    டீலிங்க்கு  வேறு  வழி  இல்லாமல்  நாயகன்  ஒத்துக்கொள்கிறான்


இரு  ஜோடி  திருமணமும்  நடக்கிறது. ஆனால்  இரு   ஜோடிகளும்  மகிழ்ச்சியாக  வாழவில்லை.


வில்லனின்  காதலி  வில்லனுக்கு  திருமணம்  ஆனதை  அறிந்து  வில்லனை  மிரட்டுகிறாள் , வில்லன்  அவளைக்கொலை  செய்து  விடுகிறான். அவன்  ஜெயிலுக்குப்போனால்  தன்  அண்ணன்  மகள்  வாழ்க்கை  வீணாகி விடும்  என  நாயகன்  அந்தக்கொலைப்பழியை  ஏற்றுக்கொள்கிறான் 


 கோர்ட்டில் கேஸ்  நடக்கிறது . நாயகி  நாயகனுக்கு  ஆதரவாக  வக்கீலாக  வாதிடுகிறாள் .  நாயகியின்  அப்பா  நாயகனுக்கு  எதிராக  வாதிடுகிறார். இறுதியில்  என்ன  ஆனது  என்பதே  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  எஸ்  எஸ்  ஆர் . கணீர்க்குரல் .  கண்ணியமான  நடிப்பு . எளிமையான  உடல்  மொழி 


நாயகி  ஆக விஜய  குமாரி . எதார்த்தமான  நடிப்பு , கோர்ட்  காட்சிகளில்  வக்கீலாக  அனல்  பறக்கும்  வசனம்  குட் 


வில்லன்  ஆக  எம்  ஆர்  ராதா  , கலக்கல்  ஆன  நடிப்பு , கோர்ட்  சீனில்  மனம்  திருந்திப்பேசும்  நீளமான  டயலாக்கில்  அட்டகாசமான  நடிப்பு 


நாயகனின்  அண்ணன்  மகளாக  பி எஸ்  சரோஜா  கண்ணியமான  தோற்றம் . விழி  ஒளி  இழந்தவராக  வில்லனின்  தங்கையாக  நாயகன்  மனைவியாக  சவுகார்  ஜானகி .  பரிதாபம்  ஏற்படுத்தும்  தோற்றம்


கே  வி  மகாதேவன்  இசையில்  எட்டு  பாடல்கள்  செம  ஹிட்டு ., பாடல்  ஆசிரியர்கள்  கண்ணதாசன்  அண்ட்  மருதகாசி . பாட்டுக்காகவே  படம்  பார்க்கலாம் 




சபாஷ்  டைரக்டர்


1 லவ்  ஸ்டோரி  மாதிரி  ஆரம்பித்து    ஃபேமிலி  டிராமா  மாதிரி  கொண்டு  போய்  கோர்ட்  ரூம் டிராமாவாக  முடித்த  விதம்  அருமை 


2   வில்லனின்  நடிப்பு ,  நாயகி க்கான  முக்கியத்துவம்

செம  ஹிட்  சாங்க்ஸ்


1   கல்யாணம்  ஆனவரே!  சவுக்கியமா?   (  மேரேஜ்  ஆனதாக  ஹீரோ  சொன்ன  பொய்  தெரிந்து  ஹீரோயின்  கலாய்க்கும்  பாடல் ) 


2  என்னை  விட்டு  ஓடிப்போக  முடியுமா? (  டூயட் ) 


3  மாமா  மாமா  ,மாமா  , ஏம்மா  ஏம்மா  ஏம்மா  சிட்டுப்போல  பெண்ணிருந்தா ( வில்லனை  கலாய்க்கும்  பாடல் )


4  கல்லிலே  கலை  வண்ணம்  கண்டான் 


5  மியாவ்  மியாவ்  பூனைகுட்டி  வீட்டைச்சுற்றும்  பூனைக்குட்டி 


6  கல்லிலே  கலை  வண்ணம்  கண்டார் 


7   நில்  அங்கே  எண்ணமும் இதயமும் 

  ரசித்த  வசனங்கள் 


1  கடவுள்  பக்தி  எதுவரை ?  கடவுளை  நேரில்  காணும்  வரை 

 தேச பக்தி எதுவரை ? நாட்டுக்கு  சுதந்திரம்  கிடைக்கும்  வரை 


2  கல்லானாலும்  கணவன்  புல்  ஆனாலும்  புருசன்  என  பெண்கள்  வாழ்ந்தால்  நாட்டில்  பத்தினிகள்  எண்ணிக்கை  வேணா அதிகரிக்கலாம், ஆனால்  நல்ல  ஆண்கள்  எண்ணிக்கை  குறைந்து  விடும் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  போர்    அடிக்காமல்  போகும்  படம், இக்காலத்திலும்  ரசிக்க  முடியும்  படம்,  பாடல்களுக்காகவே  பார்க்கலாம் , ரேட்டிங்  3 / 5 


Kumudham
Kumudham poster.jpg
Theatrical release poster
Directed byAdurthi Subba Rao
Written byK. S. Gopalakrishnan
Produced byT. R. Sundaram[2]
StarringS. S. Rajendran
Vijayakumari
Sowcar Janaki
CinematographyR. Sampath
Edited byL. Balu
Music byK. V. Mahadevan
Production
company
Release date
  • 29 July 1961[1]
Running time
154 minutes
CountryIndia
LanguageTamil

Monday, June 26, 2023

EXTRACTION 2 (ஆங்கிலம்) - 2023 - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


2020 ல் இதன்  முதல் பாகம்  வெளியாகி  செம  ஹிட்  ஆனது. ஆனால் இரண்டாம்  பாகம்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகவில்லை , நேரடியாக  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடி டி  யில்  ஜூன் 16  முதல்  காணக்கிடைக்கிறது . இது  ஆண்டி  பார்க்ஸ்  எ4ழுதிய  நாவலின்  தழுவல் . ஒரே  ஷாட்டில்  எடுக்கப்பட்ட21  நிமிட  ஆக்சன்  சீக்வன்ஸ்  இதன்  ஹை  லைட்டாக  பேசப்பட்டது 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ரிட்டயர்  ஆன ராணுவ  வீரன். பணம்  கொடுத்தால்  அவர்களுக்காக  எதையும்  செய்து  முடிக்கும்  ஆள் . அவரிடம்  ஒரு  புது ஆள்  வந்து ஒரு  பிராஜெக்ட்  டை  ஒப்படைக்கிறான். நாயகனின்  முன்னாள்  மனைவி  அனுப்பிய  ஆள். எக்ஸ்  மனைவியின்  தங்கயை அவளது  கணவன் வீட்டிலேயே   ஜெயில்  போல்  அடைத்து  வைத்திருக்கிறான். அவள்  கூட  ஒரு  மகனும், மகளூம்  உண்டு .இப்போது  நாயகனுக்கு  அளிக்கப்பட்டிருக்கும்  பணி அவர்கள்  மூவரையும்  மீட்க  வேண்டும்


 வில்லன்  சாதாரண  ஆள்  இல்லை . அவனும்  பெரிய  படையே  வைத்திருக்கிறான். வில்லனுக்கு  ஒரு  அண்ணன்  உண்டு . நாயகன்  தன்  ஆட்கள்  இருவருடன்  சென்று  அவர்கள்  மூவரையும்  மீட்டு  வந்த  பின்  மீண்டும்  ஒரு  சிக்கல் . நாயகனின்  மச்சினியின்  மகன் அப்பா  பக்கம். அவன்  இருக்கும்  இருப்பிடத்தை  தன்  பெரியப்பாவுக்குக்காட்டிக்கொடுத்து  விடுகிறான். இப்போது  வில்லன்  நாயகனின்  இடத்துக்கு  வந்து  விடுகிறான், இதற்குப்பின்  நிகழும்  ஆக்சன்  அதகளங்கள்தான்  படமே . 


நாயகன்  ஆக க்ரிஷ் ஹேம்ஸ் ஒர்த்.  ஒன்  மேன்  ஆர்மி  ஆக  முழுக்கதையையும், ஆக்சன்  சீக்வன்சையும்  தாங்கி  நிற்பவர்  . ஆக்சன்  காட்சிகளில்  இவரது  சாகசம்  அபாரம்  என்றால்  தன்  முன்னாள்  மனைவியிடம்  மன்னிப்புக்கேட்கும்  காட்சிகளில்  கண்  கலங்க  வைக்கிறார்


நாயகனின்  ஒர்க்கிங்  பார்ட்னர்  ஆக   கோல்சிட்டா ஃபரானி, மற்றும்  அவர்  தம்பியாக   ஆதம்  பெசா . நாயகனின்  ஆக்சன்  அவதாரத்துக்கு  துணையாக  இருப்பவர்கள்  இவர்கள்  இருவரும்தான். இருவரில்   ஒருவர்  உயிர்த்தியாகம் செய்யும்  காட்சி  உருக்கம் 


நாயகனின்  முன்னாள்  மனைவியாக  ஒல்கா குரியலங்கோ  அதிக  வாய்ப்பில்லை . வந்தவரை  சிறப்பு . நாயகனின்  மச்சினி  ஆக  டினாட்டின்  படம்  முழுக்க  நாயகன்  பின்னால்  குழந்தையுடன்  ஓடி  வருவதுதான்  வேலை . கச்சிதமாக  தன்  கேரக்டரை  உணர்ந்து   நடித்திருக்கிறார்


கிரேக்  பல்டி யின் ஒளிப்பதிவில்  கண்ணாடி  மாளீகையில்  ஏரியல்  வியூவில்  சண்டைக்காட்சிகள்  அற்புதமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளது   2  மணி  நேரம்  ஓடும்  அளவு  எடிட்டிங்  பணி  கனகச்சிதம் , அதில்  ஒன்றரை  மணி  நேரம்  ஆக்சன்  ஆக்சன்  தான் 


ஜென்றி  ஜாக்மேனின்  பின்னணி  இசையில்  பரபரப்பு  தொற்றிக்கொள்கிறது. ஜோ ரிஷோ வின்  திரைக்கதையை  சாம் ஹாக்ரவே  இயக்கி  இருக்கிறார். ஒர்ஃபு  பர பரப்பான  விறு விறுப்பான  ஆக்சன்  த்ரில்லரை  வெற்றிகரமாகத்தந்திருக்கிறார்  என  சொல்லலாம்


., குடும்பத்துடன்  காணத்தக்க  இப்படம்  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 



சபாஷ்  டைரக்டர்


1  நாயகனுக்கும் , மனைவிக்கும்  இடையிலான  உறவு  முறிந்ததற்கான  காரணம்  சொல்லப்பட்ட விதம் 


2  நாயகனின்  மச்சினியின்  மகனுடன்  நாயகன், மச்சினி , பெரியப்பா  மூவரின்  தனித்தனி  உரையாடல்கள் 


3  மயிர்க்கூச்செரிய  வைக்கும்  ஆக்சன் கொரியோகிராஃபி 


  ரசித்த  வசனங்கள் 


1   நாம  அக்கறை காட்றவங்களை அவ்வளவு  சீக்கிரம்  சாகவே விட  முடியாது 


2  பெத்தவங்க  கண்  முன்னாலயே  அவங்க  குழந்தைகள்  இறந்து  போவதை  யாராலும்  தாங்கிக்கவே  முடியாது 


3  எல்லாருக்குமே  எல்லாத்துக்குமே  ரெண்டாவது  வாய்ப்புனு  ஒண்ணு  கிடைக்கனும்


4  மோசமான  ஆட்களுக்கு நடுவே  குழந்தைகளை  இந்த  அளவு  நல்லபடியா  வளர்த்த  எவ்ளோ  சிரமப்ப்ட்டிருப்பேனு  தெரியும்


5    உடைந்து  போன  இதயங்களுக்காகத்தான்  கடவுள்  இருக்கிறார்


6  எனக்காக  ஒரு  துப்பாக்கிக்குண்டு  காத்திருக்குனு  எனக்குத்தெரியும், ஆனா  அந்த  புல்லட்  உன்  துப்பாக்கில  இருந்து  கிளம்பும்னு  நான்  எதிர்பார்க்கலை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அந்தப்பையன்  ஆரம்பத்தில்  இருந்தே  அம்மாவுக்கு  எதிராகவும்,, அப்பாவுக்கு  ஆதரவாகவும்  பேசி  வருகிறான், அவன்  இருக்கும்  லொக்கேஷனைக்காட்டிக்கொடுப்பான்  என்பதை  ஏன்  நாயகனாலோ , அந்தப்பையனின்  அம்மாவாலோ  யூகிக்கமுடியவில்லை ? 


2  தன்  உயிரைப்பணயம்  வைத்து  மச்சினியைக்கப்பாற்றிய  நாயகனுக்கு  முன்னாள்  மனைவி  ஒரு  நன்றி  கூட மனதார  சொல்லவில்லை . நாயகனின்  டீமில்  ஒருவர்  இறந்ததற்கும்  வருத்தம்  தெரிவிக்கவில்லை 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - படத்துக்கு  ஏ  சர்ட்டிஃபிகேட்  கொடுக்கப்பட்டிருந்தாலும்  அது  வன்முறைக்காக  மட்டும் தான் . வேறு  விரசமான  காட்சிகள்  ஏதும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆக்சன்  பிரியர்கள்  அவசியம்  காணவேண்டிய  படம். ரேட்டிங்   2.75 / 5 



Extraction 2
Extraction 2 poster.jpg
Official release poster
Directed bySam Hargrave
Written byJoe Russo[1]
Based onCiudad
by Ande Parks
Joe Russo
Anthony Russo
Fernando León González
Eric Skillman
Produced by
Starring
CinematographyGreg Baldi
Edited by
Music by
Production
companies
  • AGBO
  • Wild State
  • T.G.I.M. Films
Distributed byNetflix
Release date
  • June 16, 2023
Running time
122 minutes
CountryUnited States
LanguageEnglish

Friday, June 23, 2023

கழுவேத்தி மூர்க்கன் (2023 ) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பொலிடிக்கல் ஆக்சன் மசாலா டிராமா) @ அமேசான் பிரைம்

   


வித்தியாசமான  க்ரைம்  த்ரில்லர்  படங்களை  தொடர்ச்சியாக  தந்து  கொண்டிருந்த  அருள்நிதி  கடைசியாக  வந்த  இரண்டு  க்ரைம்  த்ரில்லர்  படங்கள்  சரியாகப்போகாததாலோ  என்னவோ மாமூல் மசாலா  படத்தில் நடிக்க  முடிவெடுத்து  விட்டார்  போல   2019ஆம்  ஆண்டு  ஜோதிகா  நடிப்பில்  வெளியான  ராட்சசி  படத்தை  இயக்கிய சையத்  கவுதம்  ராஜ்   நான்கு  வருட  இடைவெளிக்குப்பின்  இப்படத்தை  இயக்கி  இருக்கிறார். 2023 மே  26  அன்று  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆகி  சுமாரான  வசூலையும், கலவையான  விமர்சனங்களையும்  பெற்ற  இப்படம்  இப்போது   ஜூன் 23  முதல்  அமேசான்  பிரைம்  ஓடி  டி  தளத்தில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  உயர்  ஜாதிக்கார்ர்.அவரை  விட  உயர்வில்  குறைந்த  ஜாதிக்காரர்  ஒருவருடன்  சிறு  வயதில்  இருந்தே  நெருங்கிய  நட்பில்  இருக்கிறார். நண்பனுக்கு ஏதாவது  பிரச்சனை என்றால்  உடனே  ஓடி  வருபவர் 


அந்த  கிராமத்தில்  அரசியல்வாதி  வில்லன்  ஊர்  மக்கள்  ரெண்டு  பட்டால்தான்  நமக்கு  கொண்டாட்டம்  என  முடிவெடுத்து நாயகன், நண்பன்   இருவரையும்  பிரிக்க  சதித்திட்டம்  தீட்டுகிறான்


நாயகனின்  அம்மாவுக்கு  தேர்தலில்  சீட்  கொடுத்து  நாயகனின்  அம்மாவை அடியாள்  மூலம்  தாக்கி  அந்த  தாக்குதலை  செய்தது  நாயகனின்  நண்பன்  தான்  என  பொய்யாக  பரப்புகிறான்


பிறகு  நாயகனின்  நண்பனையே  கொலை  செய்து  விட்டு  அந்தபப்ழியை  நாயகன்  மீது  போடுகிறான்.  நாயகன்  வில்லனைப்பழி  வாங்குவதுதான்  மீதிக்கதை . இதில்  க்ளைமாக்சில்  ஒரு  ட்விஸ்ட்டும்  இருக்கிறது 


நாயகன்  ஆக  அருள்  நிதி ., அவரது  மீசையைப்பார்த்தாலே  பயமாக  இருக்கிறது.  டைட்டிலும்  , நாயகனின்  கெட்டப்புமே  படத்துக்கு  எதிரி . பெண்கள்  எப்படி  தியேட்டருக்கு  வருவார்கள் ? ஆனால்    அருள்  நிதி  நடிப்பில்  குறை  வைக்கவில்லை . நாயகியுடனான  காதல்  காட்சிகளில்  பம்மும்பாதும்  சரி ,   ந்ண்பனுடன்  பாசமாகபப்ழகும்போதும் சரி   கச்சிதமான  நடிப்பு 


 நாயகியாக  துஷாரா  விஜயன். அழகிய  கண்கள் , வசீகரமான  முகம்  என  பல  பிளஸ்கள்  இவரிடம் . முதல்  பாதியில்  மட்டும் தான்  இவருக்கு  அதிக  வாய்ப்பு . காதல்  காட்சிகளில்  கெமிஸ்ட்ரி பிரமாதமாக  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது


வில்லனாக  ராஜ சிம்மன்  கவனிக்க  வைக்கிறார். நாயகனின்  அப்பாவாக  யார்  கண்ணன்.கச்சித,ம் நண்பனாக  சந்தோஷ்  பிரதாப்  பாராட்டுப்பெறும்  நடிப்பு  அவரது  காதலியாக  சாயாதேவி  மின்னுகிறார், காமெடியன்  முனீஸ்காந்த்  இதில்  குணச்சிதர  நடிப்பு. தரம் .  


இசை  டி இமான். நான்கு  பாடல்களில்  2  பாட்டு  செம  ஹிட்டு  , பிஜிஎம்மில்  நாயகன் வரும்போதெல்லாம்  பின்  பாதி  தெறிக்கிறது 


ஸ்ரீதரின்  ஒளிப்பதிவில்  நாயகிக்கான  க்ளோசப்  காட்சிகள்  அழகு   நாகூரானின்  எடிட்டிங்கில்  இர்ண்டரை  மணி  நேரம்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் 


சபாஷ்  டைரக்டர்


1  அரசியல்வாதியின்  போஸ்டர்  கிழிந்திருக்க  அந்த  கேப்  வழியே  அம்பேத்கார்  சிலை  தெரிவது டைரக்சன்  டச்


2  சாவு  வீட்டில் ,மரியாதை  செய்ய  வரும்  அனைவரும்  தனித்தனியாக  அவர்கள்  வாழ்வில்  நிகழ்ந்த  சம்பவஙளை  நினைத்துப்பார்க்கும்  காட்சியும், இழவுக்கு  வந்த  பெண்  தாரை  அடிக்கும்  காட்சியும்  டச்சிங் 


3  நாயகனின் நண்பனைக்கொன்றது  மெயின்  வில்லன்  அல்ல  என்பது  நல்ல  ட்விஸ்ட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   அவ கண்ணைப்பார்த்தா  அய்யோ  யம்மா  கருநாகப்பாம்பா கொத்துதம்மா


2  செந்தாமரை  அடி )  செந்தாமரை   சிலு  சிலு  பார்வையில் 


3   எங்கே  போனே  ராசா? 


4 நிக்கற  பொழுதுதான்  போகப்போகுதே


  ரசித்த  வசனங்கள் 


1 வெள்ளைக்காரன்  காஃபிகடைல  உக்காந்தா  எதோ  பண்ண  பிளான்  பண்றான்னு அர்த்தம், நம்ம  ஊர்க்காரன்  டீக்க்டைல  உக்காந்தா  அவன்  பண்றதுக்கு  எதுவும்  இல்லைனு  அர்த்தம் 


2   எவ்ளோ  தைரியம்  இருந்தா  உன்  க்டைல  என்னை  டீ  குடிக்கச்சொல்வே? என்ன? வெளியூர்க்காரங்க  உன்  க்டைல  டீக்குடிக்கறாங்கனு  இளக்காரமா? 


3   ஒரு  இடத்துக்கு  வர்றதுக்கு  உழைப்பதை  விட  கிடைச்ச  இடத்தை  தக்க  வைக்க  அதை  விட  அதிகமா  உழைக்கனும் 


4 ஜெயிப்பதற்கான  சூத்திரம்  மேலே  போகப்போக  கீழே  இறங்கி  வேலை  செய்யனும்


5  லோனை  வாங்கிக்கிட்டு  திருப்பிக்கட்டாத  ஆட்களுக்கு  மட்டும்தான்  லோன்  தருவாங்கனு  படிச்சு  படிச்சு  சொன்னேன், இந்தாளு  கேட்கலை 


6  சாதி  நமக்கு  சாமி  மாதிரி , உக்கார  வெச்சு  சோறு  போடுதில்ல? 


7  இந்த  மாதிரி மீசை  வைக்கறதுக்குக்கூட  குறிப்பிட்ட  ஜாதில  பிறந்திருக்கனும்


8   எங்களை  அடுத்த  கட்டத்துக்குக்கூட்டிட்டுப்போகாட்டிப்பரவால்ல, ஆனா  50  வருசம்  பின்னாடி  கூட்டிட்டுப்போய்  விட்றாதீங்க 


9 நீங்க  ஒரு  ஆள் நல்லாருக்கனும்கறதுக்காக  இந்த  மொத்த  ஜனங்களையும்  வித்துடாதீங்க 


10  லவ்  பண்றவங்க  உக்காந்து  பேச  ஊருக்குள்ளே  ஒரு  இடம்  இல்லையே? 


 ஏன்? நீ வேணா  ஊருக்கு  ஒரு  பார்க் கட்டேன்


11  ஜெயிலுக்குப்போனவங்க  எல்லாம்  திரும்ப  வந்து  சி எம்  ஆகலையா? 


 முதல்ல உன்னைக்கட்றேன்


12  போடற  சட்டைக்குத்தெரியுமா? போடற்து  யாரு?ன்னு ?  சரியான  சட்டை  போட்டா  எல்லாரும்  அழகு  தான் 


13  எதிர்ல  வர்றவங்க  நம்மைப்பார்க்கும்போதே  மரியாதையுடன்  பார்க்கனும், 20  வயசுக்குள்ளே  குறைந்தது   ஐந்து  புத்தகமாவது  படிச்சிருக்கனும்., பதில்  சொல்ல  மட்டும்  இல்ல , கேள்வி  கேட்கவும்  அறிவு  வேணும், அதுக்கு  படிச்சிருக்கனும். பதில்  சொல்ல  முடியாத  அளவுக்கு  நம்ம  கேள்விகள்  இருக்கனும் 


14  எல்லா   ஜாதிப்பிரச்சனைகளிலும்  யாரோ  ஒருவரின்  பர்சனல்  பிரச்சனைதான்  காரணமா  இருக்கும் 


15 எந்த  கலர்ல  கண்ணாடி போட்டிருக்கியோ  பார்க்கறதும்  அதே  கலர்ல  தான்  தெரியும். போட்டிருக்கும்  க்ண்ணாடியைக்கழட்டிட்டுப்பார், நிஜமான  கலர்  தெரியும் 


16  அரசியலில்  முன்னுக்கு  வரனும்னா  நமக்கு  முன்னால  போறவனை  ஏறி  மிதிச்சுப்போய்க்கிட்டே  இருக்கனும்


17  நாம  நினைச்சது  நினைச்சபடி  நடக்கும்போதுத்கான்  நாம  ஜெயிக்கறோம்னு  தெம்பே  வருது 


18  எஸ்  பி  ஆஃபீஸ்லயா  உனக்கு  டியூட்டி  போட்டிருக்காங்க ? வருமானமே  வராதே? 


19   இங்கே  ஓட்டுப்போடறதுக்கு  நல்லவனா?கெட்டவனா?ன்னு  யாரும்  பார்க்கறது  இல்லை , நம்ம  சாதிக்காரனா?ன்னுதான்  பார்க்கறாங்க 


20  பதவி  ஒரு  தடவை  கை  விட்டுப்போச்சுன்னா  மீண்டும்  வராது 


21  நல்லவன்னு  சொன்னாலும்  கெட்டவன்னு சொன்னாலும்    ஊர்  நம்மைப்பற்றித்தான்  பேசனும் 


22   அடி  வாங்கறவன்  பக்கம்தான்  நாம  நிக்கனும், அவங்க  அடிவாங்காம  பார்த்துக்கனும்


23   நல்ல  விஷயங்களை  விட  கெட்ட   விஷயங்கள்தான்  நமக்கு  அடிக்கடி  நடக்குது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனைத்தேடி  வ்ரும்  போலீஸ்  நாயகியிடம்  நீ  அவனுக்கு  கால்  பண்ணுனியா? மறைக்காத , கம்பெனி  காரன்  கிட்டே  கேட்டா  கால்  லிஸ்ட்  கொடுத்திருவான், மாட்டிக்குவே  என  மிரட்டுகிறார். போலீஸ்  சைபர்  கிரைம்  போலீஸ்  கிட்டே  தானே  அதைக்கேட்கனும்? 


2 போலீஸ் ஆஃபீசர்   நாயகனை  சுட  யத்தனிக்கையில்  ஒரு  கான்ஸ்டபிள்  எஸ்  பி  உத்தரவு  , சுடக்கூடாதுனு  சொல்லி  இருக்கார்  என்கிறார்., சரி . ஆளைத்தானே  சுடக்கூடாத்   கண்  முன்  ஜீப்பில்  தப்பிப்போகிற  ஆளின்  கார்  டயரை  சுடலாமே? 


3  முனீஸ்காந்த்  எஸ்  பி  ஆஃபிஸ்ல  அவருக்கு  முன்னால்  கெத்து  காட்டும்  காட்சி  தியேட்டரில்  கை  தட்டலை  வேணா  வாங்கி  இருக்கலாம், ஆனால்  கொஞ்சம்  கூட  யதார்த்தம்  இல்லை . நிஜத்தில்  லாடம்  கட்டி  இருப்பாங்க 

4  நாயகன்  ஒரு  கொலைக்குற்றவாளி, போலிஸ்  வலை  வீசித்தேடிக்கொண்டிருக்கிறது , அவர்  என்னடான்னா  அம்மா  கையால்  சாப்பாடு  வாங்கி  சாப்பிட்டுட்டு  இருக்கார் . கொலை  செய்யப்பட்ட  நபரின்  அம்மா வீட்டில்  வந்து  போய்க்கிட்டு  இருக்கார்.. 


5  என்கவுண்ட்டர்  லிஸ்ட்டில் இருக்கும்  நாயகன்  தலைமறைவாககாட்டுக்குள்  வாழ்கிறார். போலீஸ்  அவர்  உடைமைகளை  சீஸ்  பண்ணி  இருக்கும் ( இருக்கனும் ) ஆனால்  க்ளைமாக்ஸில்  நாயகன்  தன்  பைக்கில்  பந்தாவாக  வில்லன்  வீட்டுக்கு  வருவது  எப்படி ? 


6 க்ளைமாக்ஸ்  ஃபைட்ல  அடியாட்கள்  கூட்டம்  கூட்டமா  வர்றாங்க . மூணு  பேரு  ஒரே  சமயத்தில்  நாயகனை  அடிக்க  வரும்போது  நாயகன்  நடுவில்  இருப்பவனை  மட்டும்  உதைக்கிறார். ஸ்லோ மோஷன்ல  நல்லா  தெரியுது , அனா  மூணு  பேரும்  கீழே  விழறாங்க 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - வன்முறை  தெறிக்கிறது , கிளாமர்  காட்சிகள்  ஏதும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரெண்டரை  மணி  நேரபப்டத்தில்  முதல் ஒன்றே  முக்கால் மணி  நேரம்  பார்க்கலாம், இதற்குப்பின்  இழுவை . ரேட்டிங்  2.5 / 5 


Kazhuvethi Moorkkan
Kazhuvethi Moorkkan.jpg
Theatrical release poster
Directed bySy Gowtham Raj
Written bySy Gowtham Raj
Produced byS. Ambeth Kumar
Starring
CinematographySridhar
Edited byNagooran
Music byD. Imman
Production
company
Olympia Movies
Distributed byRed Giant Movies
Release date
  • 26 May 2023
Running time
150 minutes
CountryIndia
LanguageTamil