Saturday, October 29, 2022

THE GOOD NURSE (2022) - சினிமா விமர்சனம் ( க்ரைம் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


இது  உண்மையில் நடந்த  சம்பவம். இதைப்படமாக்கும்போது எந்த  விதமான  எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ்  டெக்ரேஷன்ஸ்  எதுவும்  செய்யாமல்  ராவாக தந்திருப்பதால்  இது  பரபரப்பான   சைக்கோ  க்ரைம்  த்ரில்லராக  இல்லாமல்  ஸ்லோவாக  செல்லும்  திரைக்கதை  அமைப்பில்  இருக்கும்,  சீரியல்  கில்லரின்  கதை என்றாலும்  ரத்தம்  தெறிக்கும்  கொடூரக்காட்சிகள்  எதுவும்  இல்லாமல்  குடும்பத்துடன்  பார்க்கத்தக்க  க்ரைம்  த்ரில்லராக  இருப்ப்து  சிறப்பு 


நாயகி  ஒரு  தனியார்  ஹாஸ்பிடலில்  நர்ஸ் . இவர்  ஒரு  சிங்கிள்  மதர்.  2  குழந்தைகள்  உண்டு . இவ்ரது  இதயத்தில்  ஒரு  பிரச்சனை  இருக்கு .  இவரது  ஃபேமிலி  டாக்டர்  கொடுக்கும்  அட்வைஸ்  உடனடியாக   ஹார்ட்    சர்ஜரி  செய்தே  ஆகனும்,  எந்த  நேரத்திலும்  இதயம்  தன்  துடிப்பை  நிறுத்தி  விடலாம் என  எச்சரிக்கிறார். ஆனால்  நாயகி  ஹாஸ்பிடலில்  இன்னும்  பர்மனெண்ட்  ஆகவில்லை ,  அதற்கு  இன்னும்  4  மாதங்கள்  உள்ள்து , அதற்குப்பின்தான்  இன்சூரன்ஸ்  கவர்  ஆகும்  என்பதால்  ஆப்ரேஷன்  செய்து  கொள்வதை  தள்ளிப்போடுகிறார்


இப்போ  அந்த  ஹாஸ்பிடலுக்கு  புதிதாக  ஒரு  நபர்     பணிக்கு  வருகிறார். அவருடன்  நாயகி  நெருக்கமாகபப்ழகுகிறார். ஆதரவில்லாத  தன்  குழந்தைகளுக்கும்  ஆபத்தில்  இருக்கும்  தனக்கும்  இந்த  புதிய  நபரின் நட்பு  ஒரு  நல்ல  வடிகேல் என  அவள்  நினைக்கிறாள் .ஆனால் அவரது  வருகைக்குப்பின்  ஹாஸ்பிடலில்  மரணங்கள்  எண்ணிக்கை  அதிகரிக்கிறது .  அந்தப்புதிய  நபரின்  நடவடிக்கையில்  நாயகிக்கு  சந்தேகம்  வருகிறது  , இதற்குப்பின்  இந்தக்கதையில்  ஏற்படும்  திருப்பங்கள்  தான்  திரைகக்தை 


நாயகியாக ஜெசிகா  பிரமாதமான  நடிப்பு . அவரது  நடிப்புக்கு  கட்டியம்  கூறும் ஒரே  ஒரு  காட்சி  போதும். வீட்டில்  அவரது  குழந்தைகள்  வில்லனுடன்  பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்து  அதிர்ந்து  நீ  ரூமுக்குப்போ  என  அதட்டுவதும்  அதற்கு  வில்லன்  என்ன  ரீ ஆக்சன்  காட்டுவானோ  என  பதைபதைப்பதும்  பிரில்லியண்ட்  ஆக்டிங் 


வில்ல்னாக  எடிரெட்மனி  ஒரே  ஒரு  பார்வை  மூலமே  பயமுறுத்தும்  கேரக்டர். படத்தில்  ஒரு  சீனில்  கூட  இவர்  கொலை  செய்வதை  நேரடியான  காட்சியாக  காட்டி  இருக்க  மாட்டார்கள் . ரத்தம்  கூட   ஒரு  சொட்டு  சிந்துவது  இல்லை  , ஆனாலும்  பயம்  வரனும்., வர  வைத்திருக்கிறார். என்ன  ஒரு  அருமையான  நடிப்பு 


 புரியாத  புதிர்  படத்தில்  ஒரு  காட்சியில்  ரகுவரன்  ஐ நோ  ஐ நோ  என்ற  ஒரே  ஒரு  டயலாக்கை  37  முறை  வெவ்வேறு  பரிமாணத்தில்  சொல்வார் ( அதை  வைத்து  ஒரு  போட்டி  கூட  வைத்தார்கள் )  சிகப்பு  ரோஜாக்கள்  படத்தில்  ஸ்ரீ தேவி  கமலிடம்  என்ன  விஷயம் > என  கேட்கும்போது  சைக்கோத்தனமாக  நத்திங்  நத்திங்  என்பார்  பல  முறை . இந்த   இரண்டு  காட்சிகளுக்கும்  இணையான  ஒரு  காட்சி  இதில்  உண்டு.


 எதற்காக  இத்தனை   கொலைகளை  செய்தாய் ? என  போலீஸ்  விசார்ணை நடத்தும்போது   “ நான்  சொல்ல  மாட்டேன் “ என்ற  வ்ரியையே  திருப்பி  திருப்பி  சொல்லும்  காட்சி  அபாரம் 

நாயகி , வில்லன் , விசாரிக்கும்  போலீஸ்  ஆஃபிசர்ஸ்  இருவர் , குழந்தைகள்   இருவர்  என  ஆறு  முக்கியக்கதாபாத்திரங்களை  வைத்து  கண்ணியமான  க்ரைம்  டிராமாவை  உருவாக்கி  இருக்கிறார்கள் 

இசை  ஒளிப்பதிவு  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  குட் 


சபாஷ்  டைரக்டர்


1 க்ரைம் த்ரில்லர் , சைக்கோ  க்ரைம்  த்ரில்லர்  படங்களில்  வ்ழக்கமாக  இடம்  பெறும்  கொலை , கொள்ளை , ரத்தம் , பாலியல்  வன்முறை  என  எந்தவித  காட்சிகளும்  காட்டாமலேயே  க்ரைம்  டிராமா  எடுத்த  விதம்


2 வில்லனின்  கேரக்டர்  டிசைன். பொதுவா  வில்லன்  செய்யும்  அல்லது  செய்த  கொடூரத்தை  விஷூவலாக  கட்டித்தான்  அவனது   வில்லத்தனம்  நம்  மனதில்  பதிய  வைக்கப்படும், ஆனால்  இதில்   வில்லனின்  பார்வை , உடல்  மொழி  மூலமாகவே  பயத்தை ஏற்படுத்தியது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1 தொடர்ந்து  9  ஹாஸ்பிடலில்  பணி  புரிந்த  வில்லன்  ஒரு  இட்த்தை  விட்டு  இன்னொரு  இடம்  போகும்போது  இண்ட்டர்வ்யூவில்  இதற்கு  முன்  ப்ணி  புரிந்த  இடத்தில்  க்ளியரன்ஸ்  ச்ர்ட்டிஃபிகேட் கேட்டு  இருக்க  மாட்டாங்களா? அட்லீஸ்ட்  ஃபோன்  ப்ண்ணி  விசாரிக்க  மாட்டாங்களா? ஏன் எனில்  ஒவ்வொரு  ஹாஸ்பிடலில்  ப்ணி  ஆற்றும்போதும்    கொலைகளை  அரங்கேற்றி  இருக்கிறான்


2  வில்லன்  மீது  நாயகி  சந்தேகப்படுவது  தெரிந்தும்  ஒரு  பாதுகாப்புக்காக  நாயகியை  ஏன்  வில்லன்  கொலை  செய்யலை ? ஒரு  முயற்சி  கூட  நடக்கலை ?

3   வில்லனைக்கைது  செய்த  போலீஸ்  அவன்  உண்மையை  சொல்லவில்லை  என்றதும்  உண்மை  கண்டறியும்  சோதனைக்கு  ஏன்  உட்படுத்தலை ?


4  ஹோட்டலில்  வில்லனை  சந்திக்கும்  நாயகி அவனிடம்  வாக்கு  மூலம்  கேட்பது  நமக்கே  செயற்கையா  தோணும்போது  வில்லனுக்கு  டவுட்  வராம  இருக்குமா? சந்தேகம்  வந்து  அவன்  கோபத்துடன்  கிளம்பியதும்  ஒரு  அஞ்சு  நிமிசம்  கேப்  கூட  விடாம  போலீஸ்  அங்கே  ஆஜர்  ஆகி  நாயகியை  சந்திப்பது  மெச்சூரிட்டி இல்லாத  போலீஸ்த்னம். வில்லன்  மறைந்திருந்து  அதை கண்காணிக்க  மாட்டானா? 


5  வில்லனின்  வயதான  அம்மாவை  ஒரு  ஹாஸ்பிடலில்  சரியா  ட்ரீட்மெண்ட்  தராததால்  மர்ணிக்கிறாள். இதனால  மனநிலை  பாதிக்கப்ப்ட்ட  வில்லன்  நர்சாக  ஹஸ்பிடல்களில்  அதே  வயதுள்ள  பெண்களை  கொலை  செய்கிறான்,  அவங்க  எந்த  விதத்திலும்  அவனை  எதிர்க்கலை  என  காரணமும்  சொல்கிறான்,  இதெல்லா   நமக்கே  புரியும் போது  நாயகியும் , போலீசும்  காரணம்  தெரியாமல்  புல்ம்புவது  ஏன் ? 


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  2  மணி   நேரம்  ஓடும்  படம் , பொறுமையா  பார்க்கனும்,  ஹாஸ்பிடலில்  ஐ சி  யூ  வில்  நோயாளிகளைக்காப்பாற்ற  போரடும்  காட்சிகள்  கொஞ்சம்  போர்  அடிக்கும் .  கமர்ஷியல்  எலிமெண்ட்ஸ் இல்லாத  க்ரைம்  ஸ்டோரி . ரேட்டிங்  3 / 5 

 The Good Nurse

Director – Tobias Lindholm

Cast – Jessica Chastain, Eddie Redmayne, Noah Emmerich, Nnamdi Asomugha

 இண்டியன் எக்ஸ்பிரஸ்  Rating – 4/5


Good nurse.jpg
Official release poster
Directed byTobias Lindholm
Screenplay byKrysty Wilson-Cairns
Based onThe Good Nurse: A True Story of Medicine, Madness, and Murder
by Charles Graeber
Produced by
Starring
CinematographyJody Lee Lipes
Edited byAdam Nielsen
Music byBiosphere
Production
companies
Distributed byNetflix
Release dates
  • September 11, 2022 (TIFF)
  • October 19, 2022 (United States)
  • October 26, 2022 (Netflix)
Running time
121 minutes[1]
CountryUnited States
LanguageEnglish











   

Friday, October 28, 2022

உழவன் மகன் (1987) (தமிழ்) - சினிமா விமர்சனம் @ ஜெ மூவிஸ்

 


காண்ட்டாரா / காந்தாரா  எனும்  கன்னடப்படத்தை  சிலாகிப்பவர்கள்  எல்லாருமே  ரேக்ளா   பற்றி  குறிப்பிடத்தவறுவதில்லை.35  வருடங்களுக்கு  முன்பே   தமிழ்  சினிமாவில்  பிரம்மாண்டமான  ரேக்ளா  ரேஸ்  இடம்பெற்றிருந்தது  என்பதைப்பதிவு  செய்கிறேன். தமிழ்  சினிமா  வரலாற்றிலேயே  இன்று வரை    பிரம்மாண்டமான  ரேக்ளா  ரேஸ்  இடம்  பெற்ற  படம் இதுதான்


  திரைப்படக்கல்லூரி  மாணவர்கள்  என்றாலே  பயந்தவர்கள்  உண்டு. முன்னணி  ஹீரோக்களில்   ஃபிலிம்  இன்ஸ்டிடியூட்  ஸ்டூடண்ட்சை  நம்பி  படம்  எடுக்க  முன்  வ்ந்தது   விஜயகாந்த்தான். கமல்  கூட  இந்த  விஷயத்தில் கோட்டை  விட்டு  விட்டார். தமிழ்  சினிமா வின்  போக்கையே  திசை  திருப்பிய  பிரம்மாண்டமான  ஊமை  விழிகள் வெற்றியைத்தொடர்ந்து  ஒரு  மசாலாப்ப்டத்தை  எம் ஜி  ஆர்  ஃபார்முலாவில்  தந்த  படம். மனோஜ் கியான்  இசையில்  பாடலக்ள்  எல்லாம்  பட்டாசா  வந்திருக்கும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 கதை  நடப்பது  ஒரு  கிராமத்தில் . ஹீரோ  ஒரு  விவசாயி . அப்பா  சொல்  தட்டாதவர் அதே  கிராமத்தைச்சேர்ந்த  ஒரு  ஏழைப்பெண்ணை  காதலிக்கிறார்.வீணாப்போன  வில்லன்  விட்ட  ஒரு  வெட்டி  சவாலில்  ஹீரோவின்  அப்பா  ஒரு  வார்த்தையை  விட்டுடறார். சண்டையில்  யார்  ஜெயிக்க்றாங்களோ  அவருக்குத்தான்  அந்த  ஊர்ப்பெரிய  மனுசன்  பொண்ணு.


 இந்தப்பந்தய  விவகாரம்  தெரியாம  ஹீரோ  வில்லன்  கூட  ஃபைட்  போட்டு  ஜெயிச்சுடறார். பொண்ணு கட்ற  மேட்டர்  வெளில  வந்ததும்  ஹீரோ  பதறிடறார். 


இந்த  இக்கட்டான  சூழலில்  ஹீரோவின்  அப்பா மர்மமான  முறையில்  கொலை  செய்யப்படுகிறார். தான்  காதலித்த  பெண்ணை  திரும்ணம்  செய்யத்தடையாக  இருந்ததால்  அப்பாவையே  கொலை  செய்தார்  என ஃபிரேம்  செய்யப்பட்டு  ஹீரோ  ஜெயிலுக்குப்போறார்


இனி யார்  உங்களைக்காப்பாத்துவா? என  ஹீரோவிடம்    கேட்கும்போது  அந்த  ஆண்டவன்  தான்  வரனும்  என  ஹீரோ  வானத்தைப்பார்க்க  ஷாட்டை  அங்கே  கட்  பண்ணி  இங்கே  ஓப்பன்  பண்ணினா  இன்னொரு  ஹீரோ  அதே  விஜயகாந்த் , டபுள்  ரோல் 


 அவரு     ஹீரோவின்  தம்பி.இந்த  விஷயம்  நமக்கே  இப்போதான்  தெரியும்கறதை  விட  முக்கியம், ஹீரோவுக்கே  அப்போதான்  தெரியும்., அவர்  எப்படி   ஹீரோவைக்காப்பாத்தறார், வில்லனை  மாட்ட  வைக்கிறார்  என்பதே  பின்  பாதி  திரைக்கதை 


எம்  ஜி ஆர்  மாதிரி  பாடல் காட்சிகளில்  கைகளை  ஆட்டி நடித்தவர்கள்  பலர்.  சத்யராஜ் , எஸ்  எஸ்  சந்திரன், என  பலர்  நடித்தாலும்  விஜயகாந்த்   எம்ஜியார்  போல  நடித்தது  அல்லது  நடிக்க  முய்ற்சித்தது  இந்தப்படத்தில்தான்.  கிராமத்தான், நகரத்தான்  என  2  வேட்ங்களில்  நல்லாப்பண்ணி  இருபபார்.  குறிப்பாக  அப்பாவை  நான்  கொல்லலை, என்னை  நம்புங்க  என  ஊர்  மக்களிடம்  மன்றாடும்  காட்சியில்  புதிய  குணச்சித்திர  விஜய்காந்த்தைப்பார்க்க  முடியும் 


இவருக்கு  ஜோடியாக  ராதிகா. இருவருக்கும்  பாடி  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆனதுக்கு  முக்கியக்காரண்ம்  இருவரும்  நிஜ்  வாழ்விலும்  காதலித்ததால்தான் . இருவ்ரும்  ஜோடியாக  27  படங்களில்  நடிச்சிருக்காங்க. சைடு  வாக்கில்  வகிடு  எடுத்த  வரை  நடு  வகிடு  எடுத்து  ஹேர்  ஸ்டைலை  சிறைப்பறவை  முதல்  மாற்றியவர்  ராதிகாதான் .  . 


இன்னொரு  நாயகி  ராதா. சிட்டி  கேர்ள் .  அதிக  வாய்ப்பில்லை 


  அப்பாவாக  நம்பியார் . கச்சிதமான  நடிப்பு ,  ராதாவின்  அப்பாவாக  மலேசியா  வாசுதேவன் / வில்லனாக  ராதா  ரவி 


பாடலக்ள்  எல்லாம்  பட்டி  தொட்டி  எங்கும்  ஹிட் 


 1  பொன்னெல்  ஏரிக்கரையோரம் பொழுது  சாயுற (  ஓப்பனிங்  சாங்) 

2  செம்மறி  ஆடே  செம்மறி  ஆடே   செய்வது  சரியா  சொல்  (  ராதிகா  டூயட்) 

3  வரகுச்சம்பா  கிடைக்கலை  ஓ ஓ (  சோகப்பாட்டு)

4  மாலைக்கருக்கலிலே  மையிருட்டு  வேளையிலே .... உனை  தேடும்  தலைவன் ( டிஎம் எஸ் ) 


5   மத்தாப்பூ ( கலாய் )

6  சொல்லித்தரவா ம்ம்ம்ம்  ( கோக்கு  மாக்கு  தெம்மாங்கு )


சினிமாஸ்கோப்பில்  உருவான  இப்படம்  ஒளிப்பதிவில்  கோலோச்சிய  படம் . கதை  திரைக்கதை  வசனம்  பாடல்கள்  இணை  இசை  என  டைட்டிலில்  ஆபாவாணன்  பெயர்  வரும்போது  கைதட்டல்  தியேட்டரில்  ஒலித்ததை  மறக்க  முடியாது /. ஆர் அர்விந்த்ராஜ்தான்  இயக்கம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    செம்மறி  ஆடே  பாடல்  முழுக்க  செம்மறி  ஆட்டுக்கூட்டம்  இங்கிட்டும்  அங்கிட்டும்  போய்க்கிட்டு  இருக்கும்  பாடலின்  பல்லவியான  செம்மறி  ஆடே  வரி  வரும்போது  ம்ட்டும்  ஹீரோ  ஒரு  வெள்ளாட்டுக்குட்டியை  தோளில்  தூக்கி  வருவார். (  ஒரு  வேளை  செம்மறி  ஆடு வெயிட்  அதிகமா  இருந்திருக்கும்,  அல்லது  வெள்ளாடு  போல  சமர்த்தா  உக்காந்திருக்காம  மக்கர்  பண்ணி  இருக்கலாம்  ) 


2  ஜெயில்ல  ஒரு  கைதியைப்பார்க்கப்போனோம்னா  விசிட்டர்ஸ்  டைம்  ஒரு  அஞ்சு  நிமிசம்தான்  இதுல    ரெண்டு  பேரும்  ஊர்க்கதை  உலகக்கதை  எல்லாம்  அரைமணி  நேரம்  பேசிக்கிட்டு  இருப்பாங்க 


3  ஹீரோ  ராதாவை  முதன்  முதலா  அப்போதான்  பார்ப்பார்  , ஆனா  பாடல்  வரி  உன்னை  தினம்  தேடும்  தலைவன்னு  வரும்,  சிச்சுவேசன்  சொல்லும்போது  மாத்தி  சொல்லிட்டாங்க  போல 


4   செம்மறி  ஆடே  பாடலில்  சரணத்தில்  செவத்த  பொண்ணு  இவத்த  நின்னு  என  வரி  வ்ரும்  நிஜ  வாழ்விலும்  பட்த்தில்  வ்ரும்  கேர்க்டரும்  மாநிறம்  தான் 


5  டூயல்  ரோல்  பட்ங்களில்  இன்னொருவரை  மாறுபட்ட  தோற்றத்தில்  காட்ட  ஹேர்ஸ்டைல்   அல்லது மச்சம்  போதும்  , கண்ணில்  காண்டாக்ட்  லென்ஸ்  போட்டு  காட்டுனா  அந்த  கேரக்டரின்  அம்மாவுக்கும்  அதே  லென்ஸ்  போட்டுக்காட்டனும் 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - இப்போது  பார்த்தாலும்  டைம்   பாஸ்  மூவியாக  இருக்கும்  . பாடல்  காட்சிகளுக்ககவே  ப்டம்  பார்க்கலாம்  ரேட்டிங்  2.75 / 5   ஆனந்த  விகடன்  மார்க் 44 


உழவன் மகன்
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்அரவிந்தராஜ்
தயாரிப்புஅ. செ. இப்ராகிம் இராவுத்தர்
கதைஆபாவாணன்
இசைமனோஜ் கியான்
நடிப்புவிசயகாந்து
ராதிகா சரத்குமார்
ராதா
ராதாரவி
ஒளிப்பதிவுஏ. ரமேஷ் குமார்
படத்தொகுப்புஜி. ஜெயசந்திரன்
கலையகம்ராவுத்தர் பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர் 21, 1987
ஓட்டம்154 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Thursday, October 27, 2022

10TH CLASS DIARIES (2022) ( தெலுங்கு ) - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்) @ அமேசான் பிரைம்

 


காலேஜ்  ரீ யூனியன்  பற்றிய  கதைக்கருவை  வைத்து  தமிழில்  எடுக்கப்பட்ட  முதல்  படம் 1988ல்  ரிலீஸ்  ஆன  பறவைகள்  பலவிதம் ( ராம்கி - நிரோஷா) . 2005ல்   ரிலீஸ்  ஆன  ஒரு  கல்லூரியின்  கதை  ரீ யூனியன்  சப்ஜெக்ட்  இல்லை என்றாலும்  கிட்டத்தட்ட  பழைய நினைவுகளை  மீட்டெடுக்க  கல்லூரிக்குப்போகும்  கதை . 2018ல் ரிலீஸ்  ஆன 96  படம்  தான்  தமிழில்  மெகா  ஹிட்  ஆன  முதல்  ஸ்கூல்  ரீயூனியன்  சப்ஜெக்ட்.  அந்தப்பட  வெற்றிக்குப்பின்  பல  படங்கள்  அதே  கதை  அமைப்பில்  தயார்  ஆகியதாகத்தகவல்கள் 

இந்தக்கதைக்குத்திரைக்கதை  எழுதும்போது ஹீரோயினைத்தேடும் படலம்  ஃபைவ்  ஸ்டார் , 6  மெழுகுவர்த்திகள்,  சார்லி ( மலையாளம்) , மாறா போன்ற  படங்களின்  தாக்கம்  தெரிகிறது. ஸ்கூல்  போர்சன்  96 ,  3 ,அழகி , பள்ளிக்கூடம்  வைகாசி  பொறந்தாச்சு , ஒரு  அடார்  லவ் ( மலையாளம்) போன்ற  படங்களின்  சாயல்  தெரிகிறது . ஓப்பனிங் 20  நிமிடக்காட்சிகள்  கோகுலத்தில்  சீதை  கார்த்திக்  கேரக்டர்  ஸ்கெட்ச்  நினைவு  வருகிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  மிகப்பெரிய  தொழில்   அதிபர், கோடீஸ்வரர். அவருக்கு  கிடைக்காதது  எதுவும் இல்லை . எந்தப்பெண்ணையும்  வீழ்த்தும்  ஆற்றல்  உள்ளவர் . ஆனாலும்  அவர்  மனதில்  ஏதோ  ஒரு  குறை.  மன  நல  மருத்துவரை ப்பார்க்கிறார்.  உங்க  வாழ்க்கைல  நீங்க  அடைய  முடியாதது  ஏதாவது  இருக்கா?னு  கேட்கிறார். இல்லையே. எல்லாமே  என்  விருப்பப்படி  நடந்துட்டுதானே  இருக்கு ?   நினைச்சதெல்லாம்  கிடைச்சுடுதே? என  கேட்கிறார்


 அப்போதான்  சைக்யாட்ரிஸ்ட்   உங்க  முதல்  காதல்  எது ? அவரைப்பற்றி  சொல்லுங்க  என்றதும்  ஹீரோவுக்கு  பழைய  நினைவுகள்  எல்லாம்  வருது . அவரு  டென்த்  படிக்கும்போது  நடந்த  சம்பவங்கள்  ஃபிளாஸ்பேக்கா  ஓடுது  மனசில் 


ஸ்கூல்ல  படிக்கும்போது  ஹீரோ  சாந்தினினு  ஒரு  பெண்ணை  லவ்  பண்றார்.அந்தப்பொண்ணும்தான்.  கூட  இருக்கற  பசங்க  வேற  உசுப்பேத்தி  விட்டுட்டே  இருக்காங்க .  நீ  ஒரு  முத்தம்  கொடுடா  என  சவால்  விடறாங்க . ஸ்கூல்  காம்பவுண்ட்லயே  அந்த  சம்பவத்தை  அரங்கேற்றும்போது  சாந்தினியின்  அப்பா  அங்கே  வந்துடறார்.  பார்த்து  செம  கடுப்பாகி  பொண்ணை  அப்பவே  கூட்டிட்டுப்போய்டறார்


இங்கே  ஃபிளாஸ்  பேக்  கட்  ஆகுது . அந்தப்பெண்ணை  தேடிக்கண்டு பிடிங்க . அந்தப்பெண்  கிடைக்காம  போனதுதான்  உங்க  மன  உளைச்சலுக்குக்காரணம்   அப்டிங்கறார் 


 ஹீரோ  ஸ்கூல்  ரீ யூனியன்க்கு  பிளான்  போடறார். ரீயூனியன்ல  ஹீரோயினைத்தவிர  எல்லாரும்  கலந்துக்கறாங்க . அதுல  ஹீரோ கூடவே  எப்பவும்  இருக்கும்  இரு  நண்பர்கள்  அவங்களோட  காதலியை  சந்திக்கறாங்க . ஒரே  கலாய்ப்பு , கிண்டல்னு  போகுது 


இப்போ  ஹீரோயின்  எங்கே?னு  தேடனும். 1000  கிமீ  பயணம்  செஞ்சு  ஹீரோ  தன்   இரு  ஆண்  நண்பர்கள்  இரு  பெண்  தோழிகள்  இவர்களுடன்  பயணம்  செய்து  தேடல்  படலம்  ஆரம்பிக்கறார். இவரது  பயணம்  வெற்றி  அடைந்ததா? இல்லையா?  என்பதுதான்  திரைக்கதை 


 ஹீரொவா  ஸ்ரீகாந்த் .  ஏப்ரல்  மாதத்தில்  என்ற  படம் தான்  இவரது  நல்ல  வெற்றிப்படம். இவரது  நடிப்பும்  பிரமாதமா  இருக்கும், நீண்ட  இடைவெளிக்குப்பின்  பழைய  ஸ்ரீக்காந்த்தை  பார்த்த  திருப்தி . ஆள்  வெயிட்  போடாலம்  தொப்பை  இல்லாமல்  ஸ்மார்ட்டாக  இன்னமும்  இருப்பது   ஆச்சரியம் . நடிப்பும்  நல்லாருக்கு .  


ஹீரோயினா  சாந்தினி  கேரக்டர்ல  அவிகா  கோர். அழகான  முகம், பாந்தமான  நடிப்பு .  இவரது  க்ளைமாக்ஸ்   சீன்  படையப்பா  நீலாம்பரி  ஓப்பனிங்  சீனை  நினைவு  படுத்துது . இந்த  மாதிரி  எல்லாம்  இந்தக்காலப்பெண்கள்  இருப்பார்களா? என்ற  ஆச்சரியத்தில்  ஒரு  தெய்வீகக்காதலி  கேரக்டர்  டிசைன்  பிரமாதமாக  வடிவமைக்கப்பட்டிருக்கு 


சின்ன  வயது  சாந்தினியாக   நித்யா  ஸ்ரீ  சராசரியான  அழகுதான்  இவர்  இருக்கும்  பெஞ்ச்சில்  கூட  இருக்கும்  இரு  பெண்களும்  இவரை  விட  அழகாகத்தெரிகிறார்கள். அவ்வ்வளவு  ஏன்?  ஒட்டு  மொத்த  க்ளாசில்  இருக்கும்  எல்லாப்பெண்களுமே  இவரை  விட  அழகாகத்தான்  தெரிகிறார்கள் 


சாந்தினி  அதாவது  நாயகியின்  அப்பாவாக  நாசர்  கச்சிதமான  வில்லன்  நடிப்பு .  க்ளைமாக்ஸில்  இவர்  காட்டும்  செண்ட்டிமெண்ட்  எடுபடவில்லை 


சவும்யாவாக  அர்ச்சனா சாஸ்திரி  கலகலப்பான  நடிப்பு . நாகலட்சுமி  ஐ ஏ எஸ் ஆக   ஹிமாஜா  கச்சிதமான  கம்பீரம். 


ஆஃப்பாயில்  பார்ட்டியாக   வருபவர்  கலகலப்பான  நடிப்பு . நண்பர்கள்  அடிக்கும்  லூட்டியில் தான்  கதை  களை  கட்டுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1   ஸ்கூல்  படிக்கும்போது  எல்லாருக்கும்  ஒரு  க்ரஷ்  இருந்திருக்கும் . அதை  மீட்டு  எடுக்கும்படியான  திரைக்கதை  அமைத்தது


2  ஸ்கூல்  கலாட்டா  மற்றும்  இப்போதைய  காதல்  கலாட்டா  காட்சிகளில்  கண்ணியம்,  முகம்  சுளிக்கும்படியான  காட்சிகளோ  இரட்டை  அர்த்த  வசனங்களோ  இல்லாதது  ஆறுதல்


  ரசித்த  வசனங்கள் 


1   என்  கிட்டே  என்ன  இல்லை ? அறிவு ? பணம் ? மகிழ்ச்சி ?  வசதி ?


  மன  நிம்மதி, அதான்  இல்லைம் அது  மனிதனுக்கு  அவசியம் 


2  எந்த  ஒரு  விஷயத்தையும்  வெளில  சொல்லலைன்னா  அதுன் கனவாவே  போய்டும்


3   மனசுல  என்ன  தோணுதோ  அதை  உடனடியா  செஞ்சுடனும்  , இல்லைன்னா  அது  ஒரு  குறையாவே  தங்கிடும் 


4   உன்  முகத்துக்கு  பொண்ணுங்க  எல்லாம்  விழ  மாட்டாங்க, திருஷ்டி  பொம்மை  வேணா  விழலாம் 


5  சும்மா  பேருக்கு  சிரிச்சுட்டு  இருக்கறது  வாழ்க்கை  இல்லை , நம்ம  மனசுக்குப்பிடிச்சவங்க  கூட  வாழறதுதான்  வாழ்க்கை 


6  வாழ்க்கைல  நாம  இழந்த  ஒவ்வொரு  விஷயத்துக்கும்  ஒரு  ஆல்ட்டர் நேட்டிவ்  நிச்சயம்  இருக்கும் 


7   வாழ்க்கைல  மகிழ்ச்சியா  இருக்கறதுக்கும்  மகிழ்ச்சி  இல்லாம  இருக்கறதுக்கும்  நம்ம  மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்  தான்  காரணம் 


8  நம்ம  மனசுக்குப்பிடிச்சவங்க  நல்லாருக்கனும்னு  நினைக்கரவங்க  அவங்க  சந்தோஷமான  வாழ்க்கைல  குறுக்கிட  மாட்டாங்க 


9  ஒரு  ஃபிரண்டா  உண்மையைச்சொல்லி  உன்  சந்தோஷத்தைக்கெடுக்கறதை  விட  ஒரே  ஒரு  பொய்யைச்சொல்லி  உன்  துக்கத்தை  தள்ளிப்போட  நினைச்சோம் 


10   நம்ம  காதல்  நம்மை  விட  உலகத்துல  இருக்கற  எல்லாருக்கும்  தெரியும் 


11  செத்தாலும்  நான்  இதைக்குடிக்க  மாட்டேன், ஏன்னா  இதைக்குடிச்சா  நான்  செத்துடுவேன்


12   ஒவ்வொரு  16  வயசுப்பொண்ணும்  நினைப்பது  என்ன  தெரியுமா?  அவங்களை  சிரிக்க  வைக்கற  , எப்பவும்  சிரிச்சிட்டே  இருக்கறவன்  கூட  இருந்தா  நல்லா  சந்தோஷமா  வாழ்க்கை  இருக்கும் 

13   பொதுவா  21  வயசுப்பொண்ணுங்க  பாய்  ஃபிரண்ட்னா  சினிமா  ஹீரோ  மாதிரி  ஹேண்ட்சமா  இருக்கனும்னு  ஆசைப்படுவாங்க 


14    அதே  மாதிரி  25  வயசுப்பொண்ணுங்க  வாழ்க்கைல  நல்லா  செட்டில்  ஆன  வெல்த்தியான  பையன்   கிடைக்கனும்னு  ஆசைப்படுவாங்க 


15    ஆனா  ஒரு  பொண்ணுக்கு  40  வயசு  ஆகும்போதுதான்  எப்படிப்பட்ட  ஆண்  தனக்கு  உகந்தவன்னு  தெரிய  வரும் 


16  ஒரு  ஃபிரண்ட்  மாதிரி  கூடவே  இருந்தாப்போதும் , ஒல்ரு  பொண்ணு  லைஃப்  ஃபுல்லா   ஹேப்பியா  இருப்பா . இதைத்தான்  எல்லா   ஏஜ்  பொண்ணுங்களும்  பொதுவா  விரும்புவாங்க 


17  ஒவ்வொருவரின்  வாழ்க்கைலயும்  ஏதோ   ஒரு  திருப்தியின்மை  இருக்கும்


18   நம்ம  ரெண்டு  பேருக்கும்  நடுவே  ஒரு  கோடு  எப்பவும்  இருக்கனும், கோட்டுக்கு  அந்தப்பக்கம்  நீ , இந்தப்பக்கம்  நான், இப்படியே  எந்நாளும்  இருப்போம்



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நடு  ராத்திரில  ஒரு  டென்த் படிக்கும்  பொண்ணு  சைக்கிள்  எடுத்துட்டு  வீட்டுக்குத்தெரியாம   வெளில   போய்ட்டு  வருவது  ரொம்பவே  ரிஸ்க் . அதுக்குத்தேவையும்  இல்லை . பகலில்  போய்  செக்  பண்ணி  இருக்கலாம் 


2  க்ளைமாக்ஸ்  காட்சி  நம்ப  முடியல  ஹீரோயின்  ஒரு  ரூம்ல    ரொம்ப  நாட்களாக  அடைபட்டு  இக்ருக்கார் .  சிலந்திக்கூடு  எல்லாம்  கட்டி  இருக்கு  . சாப்பாடு  குளியல்  எல்லாம்  இல்லை . ஆனா  ஆள்  பார்க்க  நல்லாதான்  இருக்கார் இத்தனைக்கும்  அந்த  சீனில்  மேக்கப்  வேற 


3  ஹீரோயின்  தங்கி  இருக்கும்  ஹோட்டலில்  அந்த  லேடியின்  கணவர்  வேறொரு  பெண்ணிடம்  தவறாக  நடப்பதை  நாயகி  பார்ப்பது  , அதனால் நாயகியிடமே  அவர்  தவறாக  நடந்து  கொள்ள  விளைவது , அதைத்தொடர்ந்து  வரும்  காட்சிகள்  இந்தத்திரைக்கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை  



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் = ஸ்கூல்  சம்பந்தப்பட்ட  காட்சிகள்  கொஞ்ச  நேரம்தான்  வந்தாலும்  அதில்  நடித்தவர்கள்  புதிது  என்பதால்  ஒரு  அமெச்சூர்த்தனம்  நாடகத்தனம்  தெரியுது .  பின்  பாதி  திரைக்கதை  நடிப்பு  நல்லாருக்கு  . ஒரு  சராசரி  லவ்  ஸ்டோரி   ரேட்டிங்  2. 25 / 5 


10th Class Diaries
10th-Class-Diaries.jpg
Theatrical release poster
Directed byGarudavega Anji
Story byVennela Ramarao
Produced byAchut Rama Rao P.
Ravi Teja Manyam
StarringSriram
Avika Gor
Srinivasa Reddy
Vennela Ramarao
Himaja
Archana
CinematographyGarudavega Anji
Edited byPrawin Pudi
Music byScore:
S. Chinna
Songs:
Suresh Bobbili
Production
companies
Anvitha Avani Kreation
SR Movie Makers
Distributed byAjay Mysore Productions
Release date
  • 1 July 2022
CountryIndia
LanguageTelugu

Wednesday, October 26, 2022

ALA VAIKUNDAPURRAMULOO (2020) (TELUGU) -சினிமா விமர்சனம் ( வாரிசு படத்தின் ஒரிஜினல் வெர்சன்)

 


ஸ்பாய்லர் அலெர்ட்


இரண்டு  நண்பர்கள் ஒரே  இடத்தில்  பணி  புரிகிறார்கள். அதில்  ஒருவர்  நன்றாக  டெவலப்  ஆகி  பணக்காரர்  ஆகி விடுகிறார்,இன்னொருவர்  அவரிடமே  வேலைக்குப்போகிறார்.  அந்த  பணக்காரரின்  மனைவி , ,  அவர்களிடம்  வேலை செய்பவரின்  மனைவி  இருவரும்  ஒரே  சமயத்தில்  கர்ப்பம்  ஆகி  ஒரே  நாளில்    ஒரே  ஹாஸ்பிடலில்  பிரசவம்  நடக்கிறது


பணக்காரரின்  மனைவிக்குப்பிறக்கும்  குழந்தை அசைவில்லாமல்  இருப்பதைப்பார்த்து  நர்ஸ்  இறந்து  விட்டதாக  தவறாக  நினைக்கிறார். அப்போது   அந்தப்பணியாள்  தன்  குழந்தையைக்கொடுத்து  ஆள்  மாறாட்டம்  செய்து  அங்கே  வைக்கச்சொல்கிறார். அதன் படி  நர்ஸ்  செய்த  பிறகு  இறந்ததாக  நினைத்த  குழந்தை  அசைகிறது .  அப்போ  குழந்தையை  உரியவரிடம்  சேர்த்து  விடலாம்  என  நர்ஸ்  நினைக்கும்போது   அநதப்பணியாள்  அதற்குத்தடை  போடுகிறார்


 இருவருக்கும்  நடக்கும்  தள்ளு முள்ளில்  நர்ஸ்  உயரமான  மாடியில்  இருந்து  கீழே  விழுந்து  கோமாவிற்குப்போகிறார்.  இப்போ  பணியாள்  தன்  குழந்தை  தன்  முதலாளியிடம் வளரட்டும்  வசதியாக , முதலாளியின்  குழந்தை  நம்மிடம்  வளரட்டும்  என  நினைக்கிறார்.


மேலே  நான்  சொன்ன  சம்பவம்  படத்தின்  முதல்  10  நிமிடங்களில்  நடக்கிறது 


20  வருடங்கள்  கழிகிறது 


 முதலாளியிடம்  வளரும்  பணியாளின்  குழந்தை   மக்குப்பிள்ளையாகவும் , தைரியம்  இள்லாதவராகவும்  வளர்கிறது. பணியாளிடம்  வளரும்   பிள்ளை   உண்மை  பேசும்  நல்லவராகவும், துணிவு  உள்ள வாரிசு ஆகவும்  வளர்கிறது


பணக்காரரின்  உண்மையான  வாரிசுதான்  ஹீரோ . 20  வருடங்களாக  கோமாவில்  இருக்கும்  நர்ஸ்  கண்  விழித்து  ஹீரோவிடம்  உண்மையை  சொல்கிறார். இதற்குப்பின்  ஹீரோ  நடத்தும் சாக்சங்கள்  தான்  கதை 


 ஹீரோவாக  பணக்காரரின்  வாரிசாக  அல்லு  அர்ஜூன்  அமர்க்களமான  நடிப்பு . டான்ஸ் , ஃபைட்  காட்சிகளில்  பட்டையைக்கிளப்புகிறார். செண்ட்டிமெண்ட்  காட்சிகளில்   உருக  வைக்கிறார்.  காதலியிடம்  வழிவதில்  அக்மார்க்  ஆண்  முத்திரை  பதிக்கிறார்


ஹீரோயினாக  பூஜா  ஹெக்டே .  பாடல்  காட்சிகள்  தவிர  அவருக்குப்பெரிதாக  வேலை  எதுவும்  இல்லை 


‘ ஹீரோவுக்கு  அடுத்து  அதிக  காட்சிகளில்  நடிக்க  வாய்ப்பு  ஹீரோவின்  அப்பாவாக  நடிக்கும் பணியாள்  தான்.முரளி  சர்மாவின்  நடிப்பு  அதகளம்.  காலை  ஒரு  மாதிரி  சாய்த்து  சாய்த்து  நடப்பது , முகத்தில்  பேராசை  கண்களில்  வெறுப்பு  அவர்    அட்டகாசமான  முக  பாவனை, உடல்  மொழி


அவருக்கு  இணையாக  ரோகினி  அதிக  காட்சிகள்  அவருக்கு  இல்லை 


ஹீரோவின்  உண்மையான  அப்பாவாக  ஜெயராம்  ஹேர்  ஸ்டைலில்  நடிப்பில்  வசீகரிக்கிறார்.  ஹீரோவின்  உண்மையான  அம்மாவாக  தபு . இவருக்கும்  அதிக  வாய்ப்பில்லை 


நர்சாக  வரும்  ஈஸ்வரிராவ்  குறை  சொல்ல  முடியாத  நடிப்பு . இவர்கள்  போக  நவ்தீப் , சுஷாந்த்,  சுனில், நிவேதா  பெத்து ராஜ்   என  நட்சட்திரப்பட்டாளமே  இருக்கிறது 


 சமுத்திரக்கனி  வில்லனாக  வருகிறார். குணச்சித்திர  நடிப்பில் அப்பாவாக, தத்துவம்  பேசும்  போராட்டக்காரராகவே  பார்த்த  நமக்கு  அவரது  வில்லத்தனம்  என்னவோ  போல்  உள்ளது


தமனின்  இசையில்  பாடல்கள்  எல்லாமே  ஹிட் தான் . அதற்கு  அமைக்கப்பட்ட  நடனங்கள்  அருமை 


முதல்  பாதியில்  விறுவிறுப்பாக  கலகலப்பாகப்போகும்  திரைக்கதை  பின்  பாதியில்  குறிப்பாக  கடைசி  20  நிமிடங்கள்  பாசப்போராட்டமாக  இழுவை  போல்  தோன்றுகிறது . எடிட்டிங்கில்  இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 


பி எஸ்  வினோத்  ஒளிப்பதிவு  கண்ணுக்கு  இதம் .  பல  காட்சிகளில்  பிரம்மாண்டம், ஆர்ட்  டைரக்சனும்  அருமை 


இந்தப்படம்  நெட் ஃபிளிக்சில்  கிடைக்கிற்து



ரசித்த  வசனங்கள் 


1   வீட்டில்  தீபம்  எரிந்தால்  அது  அந்த  வீட்டுக்கு  மட்டும்  தாம்  வெளிச்சம்  கொடுக்கும், ஆனா  அதே  தீபம்  கோவிலில்  இருந்தால்  அந்த  ஊருக்கே  வெளிச்சம்  கொடுக்கும்


2  நான்  பொய்  சொன்னா  எனக்குத்தலைவலி  வந்துடும், உண்மை  சொன்னா  மத்தவங்களுக்குத்தலைவலி  வந்துடும் 


3   நிஜத்தை  சொல்லும்போது  மட்டும்  தான்  பயமா  இ ருக்கும்,  சொல்லாம  விட்டுட்டா  ஒவ்வொரு  நிமிசமும்  பயமா  இருக்கும் 


4 குழந்தையைப்பெத்து  எடுக்கும்போது  மட்டும்தான்  அம்மாவுக்கு  வலி , ஆனா   அதுக்குப்பின்  வாழ்நாள்  முழுதும்  அப்பாவுக்கு  வலி 


5  யோவ், என்னய்யா  கீழேயே  பார்க்கறே?  மேலே  பாரு


 சாரி  மேடம், நான்  உங்களுக்குக்கீழேதானே  வேலை  பார்க்கிறேன், மேட்சுக்கு  மேட்ச்


6  கல்யாணம்  ஆன  புதுசுல  தம்பதி  பெட்ரூம்  கதவை  சாத்துனா  அவங்க  பேசறது  வெளில  கேட்கக்கூடாதுனு  நினைக்கறாங்கனு  அர்த்தம், கல்யாணம்  ஆகி  பல  வருடங்கள்  கழித்து பெட்ரூம்  கதவை  சாத்துனா  அவங்க  ரெண்டு  பேரும்  பேசிக்காம  இருப்பது  வெளில  தெரியாம  இருக்கனும்னு  அர்த்தம் 


7  சம்பாதிக்கனும்னு  சொல்ற  பொண்டாட்டில்  எல்லாருக்கும்தான்  கிடைப்பா, ஆனா  சம்பாதிச்சது  போதும்  அப்டினு  சொல்ற  பொண்டாட்டி  சிலருக்கு  மட்டும்தான்  கிடைப்பா 


8  மேலே  இருந்து  உன்னைக்கீழே  கொண்டு  வர  25  நிமிசம்  போதும் ஆனா  கீழே  இருந்த  உன்னை  மேலே  கொண்டு  வர  25  வருடங்கள் ஆகிடுச்சு 


9  பிரச்சனையை  அப்படியே  விட்டுட்டு  வந்துட்டா  எக்சாம்  ஹால்ல  ஆன்சர்  பேப்பரை  பிளாங்க்கா  குடுத்துட்டு  வர்ற  மாதிரி   இருக்கும் , மனசுக்கு  ஒரு  நிறைவைத்தராது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ், திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


 1  பொதுவா   டெலிவரிக்கு  ஒரு  பொண்ணு  ஹாஸ்பிடல்  வருதுன்னா  அவங்க  கூட  பெண்  வீட்டு  சொந்தம்  புருசன்  வீட்டு  சொந்தம்னு  பலர்  இருப்பாங்க,  குறிப்பா  பெண்ணின்  அம்மாவோ  சகோதரியோ  கூடவே  இருப்பாங்க, ஆனா  பணக்காரப்பெண்ணான  தபுவின்  டெலிவரி  டைமில்  கண்ணுக்கு   எட்டின  தூரம்  வரை  யாரையும்  காணோம் (  அப்பதானே  குழந்தையை  மாத்த  முடியும்னு  டைரக்டர்  நினைச்ட்டார்  போல )


2    அவ்ளோ  பெரிய  ஹாஸ்பிடலில்  ஒரு  நர்ஸ்  கூட  ஃபைட்  பண்ணி  ஆள்   தள்ளிவிடறார்  அதை  யாரும்  பார்க்கலை 


3  20  வருடங்களாக  கோமாவில்  இருக்கும்  நர்சால்  நமக்கு  என்றாவது  ஆபத்து  வரலாம்  என  வில்லன்  நினைக்கவே  இல்லை , அசால்டா  நர்சை  விட்டுடறான் 


4   ஹீரோ  ஹீரோயின்  முகத்தைப்பார்த்துதான்  பொதுவா  லவ்  வர்ற  மாதிரி  காட்டுவாங்க , இதுல  ஹீரோ மிடி  போட்டுட்டு  வர்றாரு  அவரோட  தொடை  அழகைப்பார்த்து  ஹீரோ  லவ்வறாரு  என்ன  கொடுமை  சார்  இது ?  


5  மேஜர்  சுந்தர்ராஜன்  பாணில  ஜெயராம்  அடிக்கடி “  ஓக்கே   நான்  பேசறேன், ஐ  வில்  ஸ்பீக்   அப்டினு  2  மொழில  ஒரே  டயலாக்கை  எதுக்கு  பேசறாரு ?


6 ஹீரோவோட  தாத்தா  சர்ட்ல  கீழே  விழுந்த  கறை  இருக்கு , அப்படியே  சாக்கடை  மண்  எல்லாம்  ஒட்டி  சேறு  பூசி  இருக்கு, அதைப்பார்த்து  வெகுண்டு  10  நிமிசம்  ஃபைட்  போட்டுட்டு  வரூம்போது  சர்ட்  நார்மல்  ஆகிடுது , வாஷிங்  மிஷின்ல  போட்டு  டிரையர்ல    ஹாய  வெச்சு  அயர்ன்  பண்ணினாக்கூட  அவ்ளோ  குயிக்கா  ஆகாது 


சி பி எஸ்  ஃபைனல்  கமென்ட் -   ஜாலியான   கமர்ஷியல்  மசாலாவாதான்  படம்  போகுது ,  கடைசி  20  நிமிடங்கள்  மட்டும்  ஸ்லோ ,  பார்க்கலாம்  ரேட்டிங் 2.5 / 5


வாரிசு  படத்தின்  ஃபர்ஸ்ட்  லுக்  போஸ்டரில்  வந்த  போஸ்  படத்தில்   முதல்  பாதியில்  வருது  


Saturday, October 22, 2022

காதல் கவிதை (1998) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்) @ ஜெ மூவிஸ்


 ஒரு  கே  பாலச்சந்தருக்கோ , பாரதிராஜாவுக்கோ  கிடைக்காத  பெருமை  இயக்குநர்  அகத்தியனுக்கு  உண்டு . இந்திய அரசின்  சிறந்த  இயக்குநருக்கான  தேசிய  விருதைப்பெற்ற    முதல்  தமிழ்  இயக்குநர்  என்ற  பெருமைதான்  அது . 1996ல்  ரிலீஸ்  ஆன  காதல்  கோட்டை  என்ற  படத்துக்குக்கிடைத்தது. அந்தப்படத்தின்  பிரம்மாண்ட  வெற்றி  1997-1998  ஆகிய  இரு  வருடங்களில்  டைட்டிலில்  காதல்  என்ற   சொல்லை  வைத்து  34  படங்கள்  ரிலீஸ்  ஆகக்காரணமாக  அமைந்தது . 


இவரது  முதல்  படம்  மாங்கல்யம்  தந்துனானே  சுமாராப்போனாலும்  அடுத்த படமான   வான்மதி  கமர்ஷியல்  சக்சஸ். மூன்றாவது  படமான  காதல் கோட்டை  அதிரி  புதிரி  ஹிட்  ஆகி  கமர்ஷியலாகவும்  கலெக்சன்  விமர்சனரீதியாகவும்  பாராட்டுக்களைக்குவித்தது. நான்காவதாக அதே  1996ல்  குறுகிய  கால  தயாரிப்பாக  கோகுலத்தில்  சீதை  ரிலீஸ்  ஆகி  ஹிட்  ஆனது . . ஐந்தாவது  படமான  விடுகதை  ஒரு  பரிசோதனை  முயற்சி . அட்டர்  ஃபிளாப். 


ஆறாவது  படம்  அவருக்கு  புக்  ஆகறப்போ  காதல்  கோட்டை  டைப்லயே  ஒரு  கதை  ரெடி  பண்ணுங்கனு  கேட்டிருப்பாங்க  போல 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  ஒரு  பெரிய  தொழில்  அதிபர் , ஏகப்பட்ட  பிஸ்னெஸ்  பண்றவர்.  ஹீரோயினும்  வசதிதான்  , அசிஸ்டெண்ட்  கமிஷனரின்  மகள் . இருவரும்  அடிக்கடி  மீட்  பண்ணிக்கறாங்க . ஒவ்வொரு  சந்திப்பின்  இறுதியும்  மோதலில் தான்  முடியுது . 


ஹீரோ  லண்டன்  போறாரு , அங்கே  டயானா  கல்லறைக்குப்போறாரு. ஆனந்த  விகடன்  சொல்வனம் , கணையாழி  இந்த  இரண்டிலும்  கவிதை  வந்தா  அது  படைப்பாளிக்குப்பெருமை. நல்ல  நல்ல  கவிதைகள்  எல்லாம்  வரும். அதுல  வந்தாலே  ஒரு  கெத்துதான், ஆனா  தினத்தந்தி  குடும்ப  மலர்ல  மொக்கைக்கவிதைகள்  எல்லாம்  வரும்


அன்பே!  அன்னக்கொடி , உன்  இதயச்செடியில்  பூக்கும்  காம்பாக  நினைத்தேன் , நீ என்னை  வேம்பாக  நினைத்தாய்  அலட்சியம்  என்னும் அம்பால்  துளைத்தாய்... இந்த  மாதிரி  மொக்கைக்கவிதைகள்  எல்லாம்  வரும் . இதை  விட  மொக்கையா  டயானா  பற்றி  ஒரு  கவிதை  எழுதி  ஹீரோ  அந்த  சமாதில  வெச்சுட்டு  வர்றாரு. அதே  சமாதிக்கு  ஹீரோயின்   வந்து  கேவலமான  மொக்கைக்கவிதையைப்படிச்சுட்டு  ரொம்ப  சிலாகிச்சு  அதுக்கு  பதில்  கவிதை  எழுதி  வெச்சுட்டு  வருது 


அந்த  பதிலைப்பார்த்து  ஹீரோ மறுபடி ஒரு  கவிதை  எழுதி  வைக்க  என்ன  படம்  இப்படியே  இழுத்துக்குமா? என  நினைக்கும்போது    யூ டர்ன்  அடிக்குது


  காதல்  கோட்டை , மூன்றாம்  பிறை  இந்த  மாதிரி  மெகா  ஹிட்  காதல்  படங்களில்  எல்லாம்  திரைக்கதைல  ஒரு  பக்கம்  தெய்வீகக்காதல்  ஓடிட்டு  இருக்கும்  , இன்னொரு  பக்கம் ஹீரோவை  வாலண்ட்டிரியா  விரட்டி  விரட்டி  காதலிக்கும்  ஒரு  டிராக்  ஓடிட்டு  இருக்கும்


 ஆனா  நிஜ  வாழ்வில்  எனக்குத்தெரிஞ்சு  எந்தப்பெண்ணும்  ஆம்பளையைத்தேடிப்போய்  மேல  விழுந்து  விழுந்து  எல்லாம்  லவ்  பண்ணிட்டு  இருப்பதில்லை 


 ஹீரோ  ஆஃபீஸ் ல புதுசா  வேலைக்கு  சேர்ந்த  பெண்  ஹீரோவை  ஒருதலையா  லவ்வுது .ஆனா  ஹீரோ  கண்டுக்கவே  இல்லை 


ஹீரோயினும்  இந்த   ஆஃபீஸ்  பொண்ணும்  ஆல்ரெடி  தோழிகள் . ஹீரோ  கிடைக்காததால  அந்த  ஆஃபீஸ்  பொண்ணு  ஹீரோயின்  கிட்டே  இவன்  யாரையும்  காதலிக்க  மாட்டான் ,  அலைய  விடுவான்  அப்டினு  சர்ட்டிஃபிகேட்  தர்றா 


நிஜ  வாழ்வில்  நேருக்கு   நேர்  ஆல்ரெடி  சந்திக்கும்போது  எலியும்  பூனையுமா  அடிச்சுக்கிட்டு  இருக்கும்  இவர்கள்  இருவரும்  அந்த  மொக்கைக்கவிதையால   இவங்க  தான்  தான்  தேடும்  துணை  என்பது  தெரியாமல்  காதலிக்கறாங்க . இவங்க  காதல்  எப்படி  வெற்றி  பெற்றது  என்பதுதான்  திரைக்கதை 


 ஹீரோவா  பிரசாந்த் . வைகாசி  பொறந்தாச்சுனு  ஒரு  படம்  ஈரோடு  ரவில  ரிலீஸ்  ஆகி  75  நாட்கள்  ஹவுஸ்ஃபுல்லா  ஓடுச்சு . அப்பவே  பிரசாந்த்  பரபரப்பா  பேசப்பட்டாரு .  தமிழ்  சினிமாவில்  மீசை  இல்லாமல்  நடித்து  ஹிட்  படங்கள்  கொடுத்த  ஹீரோக்கள்  இருவர்தான்  1  கமல்  2  பிரசாந்த் 


  கண்டு  கொண்டேன்  கண்டு  கொண்டேன்  படத்தில்  அஜித்  ரோலில்  முதலில்  புக்  ஆனவர்  பிரசாந்த்தான்  ஆனா  ஐஸ்வர்யா ராய்  தான்  தனக்கு  ஜோடியா  வேணும்  தபு  வேணாம் என்றதற்காக  அந்த  வாய்ப்பை  இழந்தவர் (  எனக்கு  ஒரு  டவுட்  அதுதான்  ஆல்ரெடி  ஐஸ்  கூட  டூயட்  பாடிட்டமே  தபு  கூட  புதுசா    டூயட்  பாடலாம்கற  தொலை  நோக்கு  சிந்தனை  ஏன்  அவருக்கு  இல்லாம  போச்சு  தெரில , தட்  மொமெண்ட்  பெட்ரோமாக்ஸ்  லைட்டேதான்  வேணுமா? }


பிரசாந்த்  மீசை  இல்லாமல்  நடித்ததில்  மிக  அழகா  தோன்றிய  படங்கள் 3    தான்  கண்ணெதிரே  தோன்றினாள்  , ஜீன்ஸ்  ,  காதல்  கவிதை 


  ஹீரோ  நடிப்பு  நல்லாருக்கும் 


ஹீரோயினாக  இஷா  கோபிகர் . இவரது  அழகு  விசித்திரமானது . சைடு  போசில்  லாங்க்  ஷாட்டில் அழகாக  இருப்பார் , ஆனா  க்ளோசப்  ஷாட்டில்  என்னமோ  மாதிரி  இருப்பார் . இவரது    ஹேர்  ஸ்டைல்  நல்லாருக்கும் 


 ஆஃபீஸ்  லேடியாக  கஸ்தூரி . இவர்  பாடும்  தத்தோம்  தகதிமித்தோம்  பாட்டு  ரிலீஸ்  டைமில்  தியேட்டரில்  அதகளமான  ஆர்வாரத்துடன்   ஒன்ஸ்மோர்  கேட்கப்பட்ட  பாடல் . கண்ணியமாக  படமெடுக்கும்   அகத்தியன்  கிளாமரை  நம்பிய  பாடல்  அது 


ஹீரோவின்  அம்மா, அப்பாவாக  அம்பிகா  மணிவண்னன்  கச்சிதமான  நடிப்பு . அதில்  அம்பிகா  ஆரம்பத்தில்   ஹிஸ்டீரியா  வந்த  மாதிரி  கேரக்டராக  டிசைன்  பண்ணப்பட்டிருப்பார் .


 ஹீரோயின்  அம்மா  அப்பாவாக  ஸ்ரீவித்யா  - ராஜீவ் கச்சிதமான  நடிப்பு ‘’


 சார்லி  ஹீரோவுக்கு  நண்பனாக  வருகிறார் 


 படத்தில்  வில்லன்  , ஃபைட்  எதுவும்  கிடையாது 


ஓப்பனிங்கில்  ராஜூ  சுந்தரம்  -  ரோஜா  கெஸ்ட்  அப்பியரன்சில்  ஆளான  நாள்  முதலா  யாரையும்  நான்  தொட்டதில்லை  என  சூப்பர்  கிட்டான  பாடல்  உண்டு  அந்தப்பாடலில்  வரும்  “ உன்னை  நான்  கட்டிக்கிட  என்னைக்குமே  நினைச்சதில்லை  என்ற  வரி  மறைமுகமாக  அப்போது  ராஜூ  சுந்தரம்  காதலித்து  வந்த  சிம்ரனுக்கான  செய்தி  என்ற  கிசு  கிசு  உலா  வந்தது 


  ரவியாதவின்  ஒளிப்பதிவு  பிரம்மாண்டம் . இசை  இளையராஜா . 7  பாட்டில் 3  பாட்டு  செம  ஹிட்டு 



 சபாஷ்  டைரக்டர் 


1   இந்தக்கதையை  சென்னையிலேயே  எடுத்து  முடிச்சிருக்கலாம், ஆனா  லண்டன் , இத்தாலி  டோக்கியோனு    ஊர்  சுத்திப்பார்க்க  ஆசைப்பட்டு  தயாரிப்பாளர்  செலவில்  ஓ சி    டூர்  போன  சாமார்த்தியம், 


2   கதைக்கு  சம்பந்தமே  இல்லாத  ரோஜா -  ராஜூ  சுந்தரம்  சாங்கை  திரைக்கதையில்  இணைத்த  விதம் 

3  மொக்கைக்காமெடி  டிராக் ,  வில்லன் , ஃபைட்  எல்லாம்  எதுவும்  வைத்து  நம்மை  சோதிக்காமல்  இருந்தது 


ரசித்த  வசனங்கள் 


1   ஒருத்தர்  ஒரு  பிஸ்னெஸ்  பண்ணி  அதுல  நட்டம்  வந்துட்டா  வேற  யாரும்  அந்த  பிஸ்னெஸ்  பண்ண  முன்  வர்றதே  இல்லையா? அது  போலதான்  காதலும், சில  பேர்  காதலில்  தோத்துட்டாங்க  என்பதற்காக  காதலே  இல்லைனு  ஆகிடாது 


2   தங்கத்துல  செஞ்சாலும்  விறகு  விறகுதான். அது  மாதிரி  தான்  கோடிக்கணக்கா  சொத்து  வெச்சிருந்தாலும்  வீட்டுப்பெண்களை  வீட்டுலயே  அடைச்சு  வெச்சிருக்கக்கூடாது  . நாலு  இடத்துக்கு  வெளில  கூட்டிட்டுப்போகனும்


3  ஆண்கள்  பெண்களுக்கு  உதவி  பண்றப்போ  அவன்  ஜொள்ளு  கேஸ்னு  கிண்டல்  பண்றதை  எப்போ பெண்கள்  நிறுத்தறாங்களோ  அப்பதான்  உருப்படுவாங்க 


4   சில  நேரங்களில்  நாம்  சொல்வது  , செய்வது  இதெல்லாம்  பைத்தியக்காரத்தனமாத்தெரியும் , ஆனா  அதை  செஞ்சு  முடிச்ச  பின்  நம்ம  மனசுக்கு  ஒரு  திருப்தி  கிடைக்கும்   அதுதான்  ஜாப்  சேட்டிஸ்ஃபேக்சன்

 5  உங்க  கனவுல  நான்  வர  முடியாது , ஏன்னா  மத்தவங்களால  அடைய  முடியாத  கனவு நான் 


6   வீட்ல அழகான  பொண்டாட்டி  இக்ருக்கும்போது  நீங்க  இப்படி  தப்பு பண்ணலாமா? 


 ஏம்மா  மின்னல், நீ  வந்த  மேட்டரை  மட்டும்  சொல்லு , பொண்டாட்டி  அழகா? இல்லையா?னு  எங்களுக்குத் தெரியும் 


7   கடைக்காரரே   குடிக்கத்தண்ணி  கிடைக்குமா?  ‘


  பாக்கெட்ல  வேணா  வாங்கிக்குங்க 


  பாக்கெட்ல  தண்ணீர்  வாங்கினா  ஒழுகுமே?


  யோவ்  பாக்கெட்  வாட்டர்


8  சார்  நான்  வாழ்க்கைல  உயரனும்  ஹெல்ப்  பண்ணுங்க 


 உதவின்னா  ஒரு  எம் ஜி யார்  அளவு  வளர்த்து  விட்டா  போதுமா? 


9  அழகான  பொண்ணுங்களுக்கு  ரோட்ல  போற  எல்லா  வண்டிகளுமே  சொந்த  வண்டி தான்  லிஃப்ட்  கேட்டா  கிடைக்கும் 


10   அவ  காதலிக்கறது  உண்மையா  இருந்தா  இன்னைக்கு  நைட்  நல்லா தூங்க  முடியாது. அப்படி  இல்லாம  அவ  தூங்கிட்டா  அது  உண்மையான  காதலா  இருக்காது 


11  மிஸ் , இப்போ எதுக்கு  உங்க  பர்சை  வெளில  எடுக்கறீங்க > 


  யோவ்  அது  சாப்பாடு  , டிஃபன்  பாக்ஸ் 


12  தமிழ்  நாட்டோட  மக்கள்  தொகை  50  கோடி  இருந்தா  அதுல  49  கோடிப்பேரு  கவிதை  எழுதறவனாத்தான்  இருக்காங்க 


13  நான்  எப்பவோ  சொன்ன  ஒரு  பொய்க்காக  என்னை  வெறுக்கறீங்க , ஆனா  எப்பவுமே  பொய்  சொல்ற  கவிதைகளை  ரசிக்கறீங்க 


14  நான்  உங்களை  மாப்ளைனு  ஒரு  விளையாட்டுக்குத்தான்  கூப்பிட்டேன் , சீரியசா  எடுத்துக்காதீங்க 


நான்  ஒரு  பெண்ணை  ஆல்ரெடி  லவ்  பண்றதா  சொன்னேனே  அது  சீரியஸ்  தான்  விளையாட்டா  எடுத்துக்காதீங்க 


15 நான்  எழுதுன  கவிதைகளை  தர்றேன்  படிச்சுப்பாருங்க ‘


 அழகானதை  ரசிக்கலாம்  புத்திசாலித்தனம்  இருந்தா  பிரிண்ட்  பண்ணலாம் 


லாஜிக்  மிக்ஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஹீரோயின்   லண்டன்ல  டயானா  சமாதில  தன்  கைப்பட  தான்  கவிதை  எழுதி  பேப்பர்ல  வைக்கறாங்க.  அதே  ஹீரோயின்  தன்  கவிதைகளைப்படிச்சுப்பாருங்கனு  குடுத்ததும்  அவர்  கைபப்ட  எழுதுனதுதான்  .  டைப்பண்ணதுனு  சமாளிக்க  வழி  இல்லை, ஏன்னா  க்ளோசப்  ஷாட்ல  சிக்னேச்சர்  தெரியுது , அப்போ  ஹீரோவுக்கு  இரண்டும்  ஒரே  ஆள்  தான்  என்பது  தெரியலையா? 


2  ஹீரோவுக்கு  கஸ்தூரியைப்பிடிக்கலை . அதை  அவர்  ப்ரப்போஸ்  பண்ணப்பவே  தேங்காய்  உடைச்ச  மாதிரி  சொல்லி  இருக்கலாமே?  ஹோட்டலுக்கு  வாங்கனு  நடக்கடிச்சு   ஒரு  பாட்டுப்பாடி  எதுக்கு  இழுக்கனும் ?


3    கஸ்தூரி  ஹீரோவை  லவ்  பண்றதா  சொல்ற  சிச்சுவேஷன்ல  லவ்  மூட்  சுத்தமா  இல்லை , சில்க்ஸ்மிதா  ஹஸ்கி  வாய்ஸ் ல  நேத்து  ராத்திரி  யம்மா  தூக்கம்  போச்சுடி  சும்மா  அப்டினு  விரகதாபத்துல  பேசற  மாதிரி தான்  ஐ  லவ்  யூ  சொல்லுது 


4   கவிதை  பேப்பர்  வைக்கும்  ஹீரோயின்  யார்  என  கண்டுபிடிப்பது  ஈசி ,  ஹீரோ  அங்கேயே  வெயிட்  பண்ணினா  ஹீரோயின்  வரும்  வைக்கும்  பார்த்து இருக்கலாம், அதை  விட்டுட்டு  50,000  ரூபா  செலவு  பண்ணி  பிரைவேட்  டிடெக்டிவ்  ஏஜென்சி  வெச்சு  அதுக்கு  தலைவாசல்  விஜயை  புக் பண்ணி  அவருக்கு  வேற  தண்டமா சம்பளம் 


5  டயனா  சமாதில  லட்சக்கணக்கான  பூ  பொக்கேக்கள்  கவர்கள்  எல்லாம்  வரிசையா  இருக்கு , இவங்க  வைக்கற  லவ்  லெட்டர்  கரெக்டா  எப்படி  அவங்க கைக்கு  சேருது?


6  ஹீரோ  ஹீரோயின்  ரெண்டு  பேர்  எழுதுன  மொக்கைக்கவிதைகளும்  இங்க்  பேனாவில் தான்  எழுதி  இக்ருக்காங்க  லண்டன்ல  எப்பவும்  மழை  அல்லது  பனி  இருக்கும், இங்க்  அழிஞ்சிடாதா?  லெட்  பேனாவில்  எழுதி  இருக்கலாம் 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்=  சும்மா  கலாய்ப்புக்காக  கிண்டலா  சில  விஷயங்கள்  எழுதி  இருந்தாலும்  இது  ஒரு  ஹிட்  படம் , ஈரோடு  ஆனூரில் 40  நாட்கள்  ஓடிய  படம்,  பார்க்காதவங்க  பார்க்கலாம்  ரேட்டிங்  2.75  / 5   விக்டன்  மார்க்  43 







Kaadhal Kavithai
Kaadhal Kavithai poster.jpg
Poster
Directed byAgathiyan
Produced byMurali Manohar
Starring
CinematographyRavi Yadav
Edited byLancy-Mohan
Music byIlaiyaraaja
Production
company
Metro Film Corporation
Release date
  • 25 December 1998
Running time
145 minutes
CountryIndia
LanguageTamil

AMMU (2022) (அம்மு) - (தெலுங்கு) - சினிமா விமர்சனம் ( டொமெஸ்டிக் வயலனஸ்) @ அமேசான் பிரைம்

 


ஒரு  திரைக்கதை வெற்றி பெறனும்னா  அதில்  உள்ள  வில்லன்  கேரக்டர்  டிசைன்  வலுவாக  அமைக்கனும், இப்பேர்ப்பட்ட  வில்லனை  ஹீரோ  எப்படி  ஜெயிக்கப்போறார்  என்ற  எதிர்பார்ப்பு  ரசிகர்கள்  மனதில்  எழனும். தமிழ்  சினிமாவில்   வில்லனின்  கேரக்டர்  வலுவாக  அமைக்கப்பட்டு  வெற்றி  கண்ட  படங்கள்  பட்டியல்  கேப்டன் பிரபாகரன்  (வீரபத்ரன் )    பாட்ஷா  (  மார்க்  ஆண்ட்டனி)  ,  வேட்டையாடு  விளையாடு   (  இளமாறன் , அமுதன் )  

ஸ்பாய்லர் அலெர்ட் 


நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர். அவருக்கு  அவரோட  பக்கத்து  வீட்டுப்பெண்ணுடன்  திருமணம்  நடக்குது . கொஞ்ச  நாள்  திருமண  வாழ்க்கை  நல்லாதான்  போய்க்கிட்டு  இருக்கு . திடீர்னு  நாயகனின்  சுய  ரூபம்  நாயகிக்கு  தெரிய  வருது.  பணி  புரியும் இடத்தில்   ஏதாவது  பிரச்சனைன்னா  நாயகன்  தன்  கோபத்தை  மனைவி  மேல  காட்ட  ஆரம்பிக்கறார். ஒரு  கட்டத்துல  கை நீட்டி மனைவியை  பளார்னு அடிச்சுடறார்


  நாயகிக்கு  அதைத்தாங்கிக்கவே  முடியல, ஜீரணிக்கவும்  முடியல . இது  தொடர்கதை  ஆகுது .  முதல்ல நாயகி  தன் அம்மாவிடம் புகார்  ப்ண்றார்., ஆனா  அம்மா  சகித்துக்கொண்டு  வாழ், நான்  அப்படிதான்  வாழ்ந்தேன்  என்கிறார். இப்படிச்சொன்னது  நாயகிக்கு  பெரிய  அதிர்ச்சி 


தன்  மேல் கணவன்  பிரயோகிக்கும்  வன்முறை  பொறுக்க  முடியாமல்  போலீஸ்  உயர்  அதிகாரியிடம்  புகார்  கொடுக்க  நாயகி  டிஐஜி  ஆஃபிஸ்க்கு  போய்டறாங்க.,ஆனா  அங்கே  கணவன்   வந்து  சமாதானம்  பண்ணிக்கூட்டிட்டுப்போய்டறான்


இதுக்குப்பின்  நாயகி   எப்படி  தன்  கணவனை  சமாளிக்கிறாள்/ கணவனைப்பழி  வாங்க  அவர்  போடும்  திட்டம்  என்ன?  அதில்  வெற்றி பெற்றாரா? என்பது  திரைக்கதை 


நாயகன்  ரவியாக  போலீஸ்  ஆஃபீசராக   நவீன்  சந்திரா. புரியாத புதிர்  ரகுவ்ரன்  .  கல்கி  பிரகாஷ்  ராஜ் , நெஞ்சம்  மறப்பதில்லை  எஸ்  ஜே  சூர்யா போன்ற  சைக்கோ  கேரக்டர்  நடிப்பில்  பின்னிப்பெடல்  எடுத்த  நடிகர்கள்  பட்டியலில்      நவீன்  ச்ந்திராவும்  சேர்கிறார். பயமுறுத்தும்  நடிப்பு . எப்போ  இவர்  என்ன  செய்வாரோ  என  நடுங்க  வைக்கிறார். . துன்புறுத்தி  விட்டு திடீர்  என  நல்லவன்  போல் சாந்தமாக  உரையாடுவது   அருமை 


  நாயகியாக   அம்முவாக  ஐஸ்வ்ர்யா   லட்சுமி .இவரது  கேரக்டர்  பரிதாப  கொள்ள  வைக்கிறது   என்றால்  இவரது  அட்டகாசமான நடிப்பு  இதோ விருது  தேடி  வருது  என  சொல்ல  வைக்கிறது. கணவன்  முதன்  முதலாக  தன்னை  அடிக்கும்போது  காட்டும்  அதிர்ச்சி அபாரம் . அதே  போல் அம்மாவுடன்  நிக்ழும்  குளத்தங்கரை  உரையாடல்   பிரமாதம் 


நாயகிக்கு  உதவுபவராக ,  இரு கொலைகள்  செய்த  கைதியாக  பாபி சிம்ஹா  கனகச்சிதமான  நடிப்பு .போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரையே  தாக்கும்போது  ஆக்ரோசம்  காட்டுகிறார். 


நாயகியின்  அ ம்மாவாக  வரும் மாலா  பார்வதி    சில  காட்சிகளே  வ்ந்தாலும்  கவனம்  ஈர்க்கிறார். பிச்சைக்கரனாக  ஒரே  ஒரு காட்சியில்  வரும் ரகுபாபுவின்  நடிப்பும்  அருமை 


லேடி  போலீஸ்  கான்ஸ்டபிளாக வரும்  அ ஞ்சலி அமீர் , சத்யா க்ருஷ்ணா  இருவரு,ம்  தங்கள்  பாத்திரத்தை உணர்ந்து  நடித்திருக்கிறார்கள் 

சாருகேஷ்  சேகர்  இயக்கி  இருக்கிறார்.  ஆரம்பத்தில்  மெதுவாகப்போகும்  திரைக்கதை  பிற்பாதியில்  நாயகி  பழி  வாங்க  ஆரம்பிக்கும்போதுதான்  வேகம்  எடுக்கிறது . ஆனால்  அவ்ளோ  கொடுமை  செயத  கணவன்   அலுவலகத்தில்  சஸ்பென்ஸன்  வாங்கினாப்போதும்  என  நாயகி  நினைப்பது ஏனோ ? 


கணவன்  கொடுமை  செய்வதை  ஆதாரப்பூர்வமா  நிரூபிக்கனும் என  பாடம்  சொல்லித்தரும்  வகையில்  இந்த  கதைக்கருவைப்பாராட்டலாம்,


 இதே  க்தைக்கருவில்  முன்பு  வந்த  தப்பட்  ஹிந்திபடம் , நெட்ஃபிளிக்சில்  ரிலீஸ் ஆன  டார்லிங்க்ஸ்  போன்ற  படங்கள்  ஏற்படுத்திய  பாதிப்பை  விட  இந்தப்படத்தின்  திரைகக்தை  அதிக  பாதிப்பை  ஏற்படுத்தி  இருக்கிறது 


இரு  பாட;ல்கள்  நன்றாக  இருக்கிறது .அபூர்வாவின் ஒளிப்பதிவு கச்சிதம் . ராதா ஸ்ரீதரின்   எடிட்டிங்      ரெண்டே  கால்  மணி  நேரத்தில்   டைம்  ட்யூரேஷன்   கட்  பண்ணி  இருக்கு 



ரசித்த   வசனங்கள்


1    புண்ணிய்த்துக்கு  ஏத்த  பொண்டாட்டினு  சொல்வாங்க. போன  ஜென்மத்துல  நாம  எந்த  அளவு  புண்ணியம்  பண்ணி  இருக்கோமோ  அந்த  அளவு   நல்ல  பொண்டாட்டி  நமக்கு  இந்த  ஜென்மத்துல  கிடைக்கும் 


2   காமம்  ஒரு  வாரம்  இருந்தா  காதல்  ஒரு  மாசம்  இருக்கும்பாங்க , அதுக்குப்பின்  மரணத்துக்காக  காத்துட்டே  இருக்க  வேண்டியதுதான்


3    மாப்ளை  சொக்கத்தங்கம்


 அம்மா, அவரு  என்னை  அடிச்சாரு 


  நீ என்ன  தப்பு  பண்ணுனே?


 நாந்தான்  தப்பு  பண்ணி இருப்பேன்னு  நீயா  எப்படிம்மா  முடிவு  எடுத்தே?


4   நான்  இப்போ  என்ன  சொல்ல நும்னு  நீ  எதிர்பார்க்கறே? 


 இந்த  மாதிரி  நேரத்துல   ஒரு அ ம்மா  தன்  மக  கிட்டே  என்ன  சொல்லனும்னு  எனக்கு எப்படித்தெரியும் ?


 உங்கப்பா  என்னை அடிச்சப்போ  எங்க  அம்மா  எனக்கு என்ன  சொன்னாங்களோ  அதைதான் நான்  உனக்கு  சொல்லப்போறேன்


5   அப்பா  உன்னை   அடிச்சாரா?


 ஆமா,  ஒரே  ஒரு  தடவை, அதை  என்  அம்மா கிட்டே  சொன்னப்போ  புருசன்  கிட்டே  அடி  வாங்கற  முதல்  பெண்  நீ  இல்லை,  இது  எல்லாக்காலத்துலயும்  நடப்பதுதான்  , யாராலும்  மாத்த  முடியாது 


6  மொத்தக்காதலும்   எனக்குதான்  வேணும்னு  நீ  ஆசைப்பட்டா  மொத்த  வலியையும் நீதான்  ஏத்துக்கனும்


7  ஒரு  ஆம்பளை   தன்  பொண்டாட்டியை கை நீட்டி  அடிக்கக்கூடாது  , அப்படி  அடிச்சா  அவன்  கூட  வாழ  வேண்டிய கட்டாயம்  கிடையாது 


8   மாத  விலக்கு  முடிந்த  பின்  வ்ரும் 11,12,13   இந்த  மூன்று  நாட்களில்  தம்பதிகள்  சேர்ந்தா  குழந்தை  நிச்சய்ம்  உருவாகும்


9    யாரை  அடிச்சா  திருப்பி  அடிக்க  மாட்டாங்களோ  அவங்களைத்தான்  க்ரெக்டா  நீங்க  அடிக்கறீங்க,  ஏன்  மேடம்  நான்  சொல்றது  கரெக்ட்  தானே?


10 வாயை  வெச்சுட்டு  சும்மா  இருந்திருந்தா  இப்படி  நீ  அவர்  கிட்டே  அடி  வாங்கி  இருக்க  மாட்டே  இல்ல ?


  மேடம்,  நீங்க  அ மைதியா  தான்  இருக்கீங்க, ஆனா  அவர்  கிட்டே   அடி  வாங்கல? 




லாஜிக்   மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1   நாயகி  தன்  அம்மாவிடம்   தன்  க்ணவனைப்பற்றி  புகார்  பண்றாங்க . அதை கணவன்  மீன்  வாங்க  மார்க்கெட்  போய்  இருந்தப்போ  பண்ணி  இருக்கலாமே?  மாப்ளை  வீட்ல  இருக்கும்போது  யாராவது  இப்படி  அவர்  காது பட  புகார்  பத்திரம்  வாசித்து மாட்டுவார்களா? 


2   அம்மா, அப்பாவுக்கு  பை  சொல்லும்போது  நாயகி  இடதுகையா;ல சொல்றாங்க.  அது   ஏன்?  வலது  கைல  பை  சொல்வதுதானே  பண்பாடு ? (  அவங்க  இடது  கை  பழக்கம்  உள்ளவங்க  இல்லை ) 


3  நாயகி  போலீஸ்  ஆஃபீசரான  தன்  கணவனைப்பற்றி  உயர்  அதிகாரியிடம்  புகார்  சொல்ல  டிஐஜி  ஆஃபீஸ்க்கு  கான்ஸ்டபிளுடன்  வருகிறார். அங்கே  தன்  கணவனும்  ட்யூட்டிக்காக  வருவார்  , தன்னைப்பார்ப்பார்  மாட்டிக்குவோம்  என  தெரியாதா?  எழுத்து  வடிவில்  புகார்  கடிதம்  எழுதி  கான்ஸ்டபிளிடம்  தந்து    விட்டிருக்கலாமே?  


4 நாயகி  தன்  கணவ்னிடம் நீ என்னைக்கொடுமைப்படுத்துனதை  ஒத்துக்கிட்டு  ஒரு  வீடியோ  வாக்குமூலம் ரெடி  பண்ணைத்தரனும்னு  கேட்கறாங்க.  செல்  ஃபோன்  கேமராவை  ஆன் பண்ணி  வீட்ல  வெச்சாலே  அடிக்கும்போது  ரெக்கார்டு  ஆகுமே? அதை  முயற்சிக்காம கணவன் கிட்டேயே  கெஞ்சுவது  ஏன்?



சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களை  மிகவும்  கவரும்   திரைக்கதை  அமைப்பைக்கொண்ட்  படம்,   ஆனால்  ஆண்கள்  பார்த்துத்திருந்த  வேண்டிய  பட்ம் .  ரேட்டிங்  2. 75 / 5