Tuesday, March 31, 2020

தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா! எப்படி பரவியது,ஒரு அலசல்

தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா! எப்படி பரவியது, யார் மூலம் பரவியது, முதன்முறையாக முழு தகவலும்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் இதுவரை 67 பேரை தாக்கியுள்ளது என தெரியவந்துள்ளது. இவர்கள் 67 பேரும் யார்? எங்கிருந்து வந்தார்கள்? யார் மூலம் யாருக்கு பரவியது? முதலிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விவரங்களை அறிந்து கொள்வதன் மூலம் எவ்வாறு பரவுகிறது, இதை தடுப்பது எப்படி என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என கருதுகிறோம்.

#மார்ச்7 : தமிழகத்தின் முதல் நோயாளியாக ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது ஆணுக்கு கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் சென்னை விமான நிலையத்திற்கு பிப்ரவரி 28ஆம் தேதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#மார்ச்18 : இரண்டாவது நோயாளி 25 வயதான இளைஞர் டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு திரும்பியவர் என தெரியவந்தது. இவர் கடந்த மார்ச் 12ஆம் தேதி சென்னைக்கு திரும்பிய நிலையில் மார்ச் 18ஆம் தேதி அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ''

#மார்ச்__20 : மூன்றாவது நோயாளி சென்னையை சேர்ந்த 21 வயதான ஆண். இவர் அயர்லாந்து நாட்டில் இருந்து
மார்ச் 17ஆம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவர்.

#மார்ச்21 : நான்காவது நோயாளியாக 65 வயது ஆண் சென்னையை சேர்ந்தவர் இவர் நியூசிலாந்து நாட்டில் இருந்து சிங்கப்பூர் வழியாக மார்ச் 12 ஆம் தேதி சென்னை வந்தவர்.

#மார்ச்11: ஐந்து மற்றும் ஆறாவது நோயாளிகள் 69 வயது மற்றும் 75 வயதான ஆண்கள் தாய்லந்து நாட்டினை சார்ந்த மதப்பிரச்சார குழுவை சார்ந்தவர்கள். இவர்கள் ஈரோட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்பட்டனர். இவர்கள் டெல்லியிலிருந்து ஈரோட்டிற்கு டிரெயின் மூலம் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

#மார்ச்22 : ஏழாவது நோயாளியாக 25 வயது பெண் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் ஸ்பெயின் நாட்டில் இருந்து டெல்லி, பெங்களூர் வழியாக கோயம்புத்தூர் மார்ச் 15ஆம் தேதி வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#மார்ச்20 : எட்டாவது நோயாளியாக 43 வயதான ஆண். இவர் துபாயில் இருந்து மதுரை வழியாக திருநெல்வேலி திரும்பியவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

#மார்ச்_20 : ஒன்பதாவது நோயாளியாக 64 வயது பெண் சென்னையை சேர்ந்தவர். இவரும் அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்தவர் என்பது கண்டறியப்பட்டது.

#மார்ச்23 : பத்தாவது நோயாளியாக 25 வயது ஆண் சென்னையை சேர்ந்தவர். இவர் லண்டனில் இருந்து பெங்களூர் விமானத்தில் வந்து சென்னைக்கு காரில் வந்தவர் என்பது கண்டறியப்பட்டது.

#11ஆவது நோயாளியாக 48 வயதான ஆண் இங்கிலாந்து நாட்டில் இருந்து திருப்பூர் திரும்பியவர் என்பது தெரியவந்தது.

#12வது நோயாளி இவர்தான் முதல் உள்ளூர் நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மதுரையை சேர்ந்த 54 வயதான ஆண். இவர் 5 மற்றும் 6 ஆவது நோயாளிகளான மத பிரச்சார குழுவுடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மரணித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#மார்ச்24 : பதிமூன்றாவது நோயாளி 74 வயதான ஆண் சென்னை போரூரை சேர்ந்த இவர் அமெரிக்காவில் சிங்கப்பூர் வழியாக சென்னை திரும்பியவர்.

#14ஆவது நோயாளி சென்னை புரசைவாக்கத்தினை சேர்ந்த 52 வயதான பெண். இவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர் என்பது கண்டறியப்பட்டது.

#15வது நோயாளி சென்னை கீழ்கட்டளை சேர்ந்தவர். இவர் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்பியவர் என கண்டறியப்பட்டது.

#16ஆவது நோயாளி சென்னை கோட்டூர்புரத்தினை சேர்ந்த 65 வயதான ஆண் இவரும் நியூசிலாந்து நாட்டில் இருந்து சென்னை திரும்பியவர் என தெரியவந்தது.

#17ஆவது நோயாளி சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயதான பெண்.

#18வது நோயாளி 25 வயதான ஆண் சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் இவர் லண்டனில் இருந்து பெங்களூர் விமான நிலையம் வந்து சென்னை வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#மார்ச்25 : 19,20, 21, 22 நான்கு பேரும் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தவர்கள். மதப் பிரச்சாரம் செய்ய வந்து இந்தியாவில் தங்கியிருந்தவர்கள். இதில் நான்கு பேருக்கு சேலத்தில் கொரோனா உறுதியானது.

#23ஆவது நோயாளி சென்னையை சேர்ந்த 63 வயதான ஆண். இவர் மேற்கண்ட நான்கு 19-22 நோயாளிகாளான இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#24ஆவது நோயாளி 18 வயது ஆண், இவர் டெல்லியில் இருந்து வந்த இரண்டாவது நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர் என்பது கண்டறியப்பட்டது.

#25ஆவது நோயாளி 26 வயது ஆன வேலூரை சேர்ந்த இளைஞர். இவர் துபாய் நாட்டில் இருந்து இந்தியா திரும்பியவர் என தெரியவந்தது.

#26வது நோயாளியாக 63 வயதான ஆண் இவரும் ஐந்து மற்றும் ஆறாவது நோயாளிகளான தாய்லாந்து நாட்டைச் சார்ந்த மத பிரச்சார குழுவினருடன் பயணித்தவர் என்பது கண்டறியப்பட்டது.

#மார்ச்26 : 27-வது நோயாளி துபாயில் இருந்து திருச்சி திரும்பிய 24 வயது ஆண் என கண்டறியப்பட்டது.

#28ஆவது நோயாளி சென்னையைச் சேர்ந்தவர். இவர் லண்டனில் இருந்து திரும்பியவர்.

#29ஆவது நோயாளி சென்னையை சேர்ந்த 63 வயதான பெண். இவர் இருபத்தி எட்டாவது நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்.

#மார்ச்27 : 30 ஆவது நோயாளி 25 வயதான பெண் அரியலூரை சார்ந்தவர் இவர் சென்னையில் தங்கியிருந்து அரியலூருக்கு இடம்பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

#31வது மற்றும் #32வது இவர்களிருவரும் 42 மற்றும் 46 வயதான ஆண்கள். தாய்லாந்து நாட்டை சார்ந்த நோயாளிகள் ஐந்து மற்றும் ஆறுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரியவந்தது.

#33வது நோயாளி 23 வயதான ஆண் அமெரிக்காவிலிருந்து திரும்பிய 14வது நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர் என தெரியவந்துள்ளது..

#34வது, #35வது நோயாளிகள் இரண்டுபேரும் மரணமடைந்த மதுரையை சேர்ந்த 12 ஆவது நோயாளி குடும்பத்தினர் என தெரியவந்தது.

#36வது நோயாளி 73 வயதான பெண் இவர் சென்னை பம்மலை சேர்ந்தவர்.

#37வது நோயாளி இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த மதப்பிரச்சாரம் குழுவுடன் தொடர்புடையவர் என தெரியவந்தது. 19 முதல் 22 நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர் என்பது தெரியவந்தது.

#38வது நோயாளி சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 29 வயதான ஆண்.

#மார்ச்28 : முப்பத்தி ஒன்பதாவது நோயாளி தஞ்சாவூரை சேர்ந்த 42 வயதான நபர் இவர் மேற்கிந்திய தீவுகள் நாட்டில் இருந்து திரும்பியவர் என தெரிய வந்தது.

#40வது நோயாளி லண்டனில் இருந்து திரும்பிய 49 வயதான ஆண் வேலூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது

#41வது நோயாளி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 60 வயதான ஆண் என தெரியவந்துள்ளது.

#42வது நோயாளியாக சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயதான இளைஞர் இவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர் என தெரியவந்தது.

#மார்ச்29 : நாற்பத்தி மூன்றாவது நோயாளியாக கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயதான பெண். இவர் நோயாளி 26 உடன் தொடர்பில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.

#44வது, #45வது மற்றும் #46ஆவது நோயாளிகள் 58 வயதான பெண், 10 மாத குழந்தை, 51 வயதான பெண் இவர்கள் மூவரும் மேற்கண்ட 43வது நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தினர் என தெரியவந்துள்ளது.

#47வது, 48, 49 மற்றும் 50 இவர்கள் நான்கு பேரும் முறையே 45, 48, 62 மற்றும் 67 வயதான ஆண்கள். டெல்லியில் இருந்து ஈரோடு திரும்பிய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மத பிரச்சார குழுவினருடன், அதே மாநாட்டு கூட்டத்தில் கலந்துகொண்டு டெல்லியில் இருந்து ஈரோடு திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது.

#மார்ச்30 : இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

#51ஆவது நோயாளி மதுரையைச் சேர்ந்த பன்னிரண்டாவது நோயாளி குடும்பத்தினை சேர்ந்த ஆண் என்பது தெரியவந்துள்ளது

52 முதல் 55 வரை நான்கு நோயாளிகளும் அமெரிக்காவிலிருந்து திரும்பிய 42வது நோயாளியான 25 வயது மேற்கு மாம்பல இளைஞரின் குடும்பத்தினர் என்பதும், 52 வயது 76 வயது 15 வயது பெண்கள் மற்றும் 20 வயது ஆண் ஆகியோர் சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோயாளிகள் 56 முதல் 65 வரை 10 ஆண்கள் அனைவருமே டெல்லியிலிருந்து ஈரோடு திரும்பியவர்கள். ஈரோடு திரும்பிய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மத பிரச்சார குழு உடன் இருந்தவர்கள். இவர்கள் ஏற்கனவே ஈரோட்டில் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10 பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

#66வது நோயாளியாக சென்னையைச் சேர்ந்த 50 வயது பெண்மணி இவர் சென்னை பிராட்வெயை சேர்ந்தவர்

#67வது நோயாளியாக குளித்தலையை சேர்ந்தவர் இவர் டெல்லியில் இருந்து திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது.

தவ்ஹீது ஜமாத் அமைப்பு சார்பில் தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 1500 பேர் பங்கேற்றனர்.1,500 பேரில் 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் 16 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு தற்போது சிக்கல் நீடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மத பிரச்சார குழு மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலமும் அவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் மூலமும் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மற்றபடி சமூகத் தொற்று என்பது தமிழகத்தில் இதுவரை ஏற்பட்டதாக தெரியவில்லை. அரசும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், மத பொதுக் கூட்டங்களுக்கு சென்று வந்தவர்கள் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்துவதில் தனி கவனம் கொள்வதால் கொரோனாவில் இருந்து தப்பிப்பது எளிதாக இருக்கும்.

அரசு அறிவித்து கொண்டிருக்கும் தனிமைப்படுத்துதல் தனிமைப்படுத்தல் தனிமைப்படுத்துதல் என்பதை அனைவரும் கட்டாயம் பின்பற்றுவோம் கொரோனாவில் இருந்து விடுபடுவோம்.


Monday, March 30, 2020

அரசு இயந்திரம் vs அரசாங்கம் #corona

*டாக்டர். சில்வியா பிளாத் - முகநூல்......*

அரசு இயந்திரம் vs அரசாங்கம் 

#one_week_of_lock_down

கடந்த ஏழு நாட்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகள் ஆராயும் போது 
கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளன 
1. March 21st ( 283 cases  ) - 
March 22nd ( 396 cases )
Increase by 39.92 %

2. March 22nd ( 396 cases  ) - 
March 23rd ( 468 cases )
Increase by 18.18 %

3. March 23rd ( 468 cases  ) - 
March 24th ( 566 cases )
Increase by  23.43 %

4. March 24th ( 566 cases  ) - 
March 25th ( 645 cases )
Increase by  13.95 %

5. March 25th ( 645 cases  ) - 
March 26th ( 720 cases )
Increase by just 11.62 %

6. March 26th ( 720 cases  ) - 
March 27thh ( 886 cases )
Increase by just 12.30 %

7. . March 27th ( 886 cases  ) - 
March 28th ( 933 cases ; as of now from covid19india.org)
Increase by just 5.31 % as at 5 pm 28th March 2020.

Every third day it will double அப்படிங்கிற டிரெண்ட் every fourth day double ன்னு extend பண்ணி இருக்காங்க. இப்படி பண்ணுறத நோய் இன்னும் நம்ம கையை மீறிப் போக வில்லை என்பதைக் காட்டுகிறது. 

லாக் டவுன் க்கு அப்புறம் இத்தாலி, அமெரிக்கா மாதிரி நோயாளிகள் எண்ணிக்கை அப்படியே டக்குன்னு உயராமல் கொஞ்சம் ஸ்டெடியா தான் உயர்கிறது. 

உண்மையில் உலக நாடுகள் எல்லாம் இந்தியாவில் எதிர் பார்த்த அளவுக்கு இல்லாமல் இப்படி ஸ்டெடியா ஒரு வாரம் தாங்கினதே ஆச்சரியமா பார்க்கப் படுகிறது. ஏனெனில் இந்தியாவில் உள்ள சூழ்நிலைகள் இந்த வைரஸ் வெகு வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன. இருந்தாலும் இந்தியா இதனுடன் நின்று போராடும் வலிமை இன்னும் எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை.

 ஆஸ்திரேலியா கவர்மென்ட்க்கு அங்கு உள்ள மருத்துவர்கள் அனைவரும் லாக் டவுன் வேண்டும் என்று மெயில் எழுதியும் கண்டு கொள்ளாத அரசாங்கம் போல இல்லாமல் இங்கு உடனடியாக லாக் டவுன் அமல் படுத்தப்பட்டதிற்கு காரணம் இந்திய அரசு இயந்திரம் ஆகும். 

அரசாங்கம் வேறு அரசு இயந்திரம் வேறு. அரசாங்கத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அரசு இயந்திரம் அதன் நிர்வாகிகளைக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் தன்னிச்சையாக இயங்கும் வலிமை கொண்டது. இதனைக் அந்த அந்த ஏரியாவில் உள்ள மக்களின் நன்மைக்காக எந்த அளவிற்கு பயன்படுத்தலாம் என்பது மட்டுமே மக்கள் பிரதிநிதிகளுடன் இருக்கிறது. 

டெல்லி மற்றும் உத்திர பிரதேசம் அரசாங்கம் அதனுடைய வேலை வாய்ப்பு சார்ந்து வெளியே வந்த மக்களை அரவணைப்புகள் செய்யத் தவறியது ஆளும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. 

இதில் கொரோனா தொற்று செயல்பாடுகளில் தமிழ் நாடு மற்ற எந்த இந்திய மாநிலங்களின் விட மற்ற உலக நாடுகளை விட முண்ணனியில் இருப்பதற்குக் காரணம் இந்த அரசு இயந்திரங்கள் அதிகாரிகளால் திறமையாக நிர்வாகம் செய்யப் படுவது மட்டுமே காரணம் ஆகும் 

முதல் வாரத்தில் கொரோனா பற்றி நாம் அச்சப்படத் தேவையில்லை என்று சட்டசபையில் பேசி விட்டு காலையில் வெளிநாடுகளில் இருந்து சில பேர் ஊருக்குள் புகுந்து விட்டனர் என்று டிவிட் போட்டு விட்டு, அடுத்ததாக கொரோனா ஊருக்குள் மின்னல் வேகத்தில் பரவுகிறது என்று சென்ற வாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் கொடுத்த செய்திகள் யாவும் மக்களை அச்சப்பட வைத்தன என்பது மட்டும் உண்மை. 

ஆனால் இந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டில் உண்மையில் என்ன நடந்தது என்று நோக்கும் பொழுது, ஏன் மின்னல் வேகத்தில் பரவிய கொரோனா ஏன் இன்னும் கட்டுக்குள் உள்ளது என்று பார்க்கும் போது நம்முடைய அரசு இயந்திரம் காரணம் என்று தெரிய வருகிறது. 

WHO வில் உள்ள Mike Ryon பேசும் போது நீங்கள் லாக் டவுன் பண்ணுவது மட்டும் நோயைக் கட்டுப் படுத்த முடியாது. கூடவே சேர்ந்து effective public health measures வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார் 

தமிழ் நாடு Dept of Public health இந்த ஒரு வாரத்தில் இறங்கி வேலை செய்யது உண்மை. இதன் இயக்குநர் டாக்டர் குழந்தை சாமி, இந்தப் பிரிவின் கீழ் வரும் ஓவ்வொரு ஊழியரையும் களத்தில் இறக்கி விட்டு உள்ளார் . இந்த போராட்டத்தில் உள்ள ரியல் unsung ஹீரோ இவர் தான் என்று தோன்றுகிறது. 

இரண்டாவது கட்ட இறுதியிலும் மூன்றாவது கட்ட ஆரம்பத்திலும் நின்று கொண்டு இருக்கும் தமிழ் நாடு வரும் வாரங்களிலும் இந்த மாதிரியே நின்று விட்டால் நாம் எதிர் பார்த்த அளவுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படாமல், தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்று தப்பிவிடலாம் 

தமிழ்நாடு பொதுச் சுகாதாரத் துறை- Dept of public health (DPH)  தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம், எடுத்து உள்ள நடவடிக்கைகள் 

1)இந்த லாக் டவுன் கண்டிப்பாக தேவை என்று தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி ஏப்ரல் 14 ந்தேதி வரை லாக் டவுன் வாங்கியது 

2) வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் முகவரி வாங்கி அவர்களுடைய அட்ரஸ் தேடி வீடு வீடாக இவர்கள் தனிமைப்படுத்தி உள்ளார்கள் என்று நோட்டிஸ் ஒட்டியது 

3)அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த தெருவில் உள்ள மற்றவர்களுக்கு காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் இருக்கா என்று ஆய்வுகள் செய்தது. 

4)தமிழ் நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மேற்பட்ட நபர்களை இவ்வாறு தேடி ஆய்வு செய்து தனிமைப் படுத்தியது. இந்தியாவில் அதிக அளவில் நபர்களை கண்டு பிடித்து வீட்டில் தனிமைப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு தான். 

5)பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் ஒவ்வொரு 3 கிமீ அளவில் தனியாக, லாக் செய்து வீடு வீடாக சோதனை செய்யச் சென்றது. இதுவரை எந்த ஒரு உலக நாடும் இப்படி வீடு வீடாக சோதனை செய்ய செல்லவில்லை. சவுத் கொரியாவில் லாக் டவுன் செய்யாமல் கண்ணில் பட்ட அனைவருக்கும் பரிசோதனை செய்து தனிமைப் படுத்தப் பட்டது. 

6) டிரோன் மூலமும், தீயணைப்பு வண்டிகள் மூலம், தண்ணீர் வண்டிகள் மூலமும் கிருமி நாசினி மருந்துகள் தெளித்து ஊரையே மொத்தமாக சுத்தம் செய்ததது. அதுவும் Drone மற்றும் டெக்னாலஜி உதவி கொண்டு மருந்து தெளித்தது உலகிலேயே முதல் முறையாக என்று தாரளமாக சொல்லலாம் 

7)கொரோனா பாதிப்பு அடையும் High risk ஆட்கள் பற்றிய விழிப்புணர்வு ஊரில் மீடியாக்கள் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள வைத்த IEC நடவடிக்கைகள்

8) இப்படி கொரோனா பாதிப்புடன் வெளிநாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் என்று சந்தேகப் படுபவர்கள் ஊரில் கண்டறிய இயலாத போது GPS தொழில் நுட்பம் கொண்டு அவர்கள் சென்று வந்த இடங்களை கண்டறிதல் என்று ஜெர்மனியில், சவுத் கொரியாவில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் வைத்து தேடும் வேட்டை ஆரம்பித்தது 

 என்று வெளிப்படையாக சொல்லாத நடவடிக்கைகள் என்று தமிழக அரசு இயந்திரங்கள் உலகத் தரத்தில் இயங்குவது  முக்கியமாக இந்த ஒரு வாரம் கண்டிப்பாக பாராட்டுக்கு உரியது. இந்த கால கட்டத்தில் கண்டிப்பாக நாம் ஒரு பாதுகாப்பான கைகளில் இருக்கிறோம் என்று உணர வைத்தது இதனுடைய முக்கிய வேலை. 

ஆனால் சென்ற ஞாயிறு சுய ஊரடங்கு நன்றாக நிறைவேற்றி விட்டு மாலை ஐந்து மணி அளவில் அனைவரும் வெளியே வந்து கை தட்டி உள்ளே இருந்த நோக்கத்தையே கெடுத்தது போல இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து கட்டுக்குள் வைத்து இருப்பதை மக்கள் வெளியே வந்து கெடுத்து விடுவது பார்க்கும் போது நிறைய வருத்தமாக உள்ளது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி வாங்க அலை மோதிய கூட்டம் சென்ற ஒரு வாரத்தின் வேலையை கெடுத்து விட்டது என்பது மட்டும் தான் உண்மை. 

இந்த வாரம் எப்போதும் இல்லாதது விட மிக முக்கியமான ஒன்று. காரணம் போன வாரம் நாம் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் மூலம் அனுப்பி வைத்த இளைஞர்கள் மூலம் கொரோனா அதிக அளவில் பரவ வாய்ப்பு இந்த வாரம் தான்.

ஏனெனில் இந்த கிருமி பாதித்த ஐந்து முதல் ஏழு நாட்களில் காய்ச்சல் வர ஆரம்பிக்கும். சென்ற திங்கள்கிழமை சென்றவர்களுக்கு இந்த திங்கள், செவ்வாய் முதல் லேசான காய்ச்சல் மற்றும் உடம்பு வலி ஆரம்பிக்கும். எனவே ஒரு பகுதியில் நிறைய பேருக்கு காய்ச்சல், உடம்பு வலி, இருமல் போன்றவை ஒரே நேரத்தில் வந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் சொல்லவும். 

பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் உங்களை ஆய்வு செய்து தனிமைப் படுத்த வேண்டுமா என்று தீர்மானம் செய்வார்கள். 

இந்த வாரம் போன வாரத்தை விட மிகவும் விழிப்புணர்வுடன், விழிப்பாக இருக்க வேண்டும் என்ற செய்தி மிகவும் முக்கியமானது. எனவே காய்கறி வாங்கக் கூட மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை வெளியே வருவது நல்லது. ஒரு வாரமும் வெளியே வராமல் இருந்தால் அதை விட நல்லது 

இன்னும் இரு வாரங்களுக்கு இந்த மாதிரி இழப்புகள் எதுவும் இல்லாமல் தாண்டி விட்டோம் என்றால் இந்த மிகப் பெரிய ஆபத்தில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும். 

மக்கள் எல்லாம் வழக்கம் போல டிக்டாக் பார்த்துக் கொண்டும் டிக்டாக் பண்ணிக் கொண்டும் வீட்டுக்கு உள்ளேயே சந்தோசமா இருந்தா போதும். மற்றது எல்லாம் அரசாங்கமும் அரசாங்க பணியாளர்களும் பார்த்துக்குவாங்க. யாரையும் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே அனுப்பாதீங்க.  வெளியே யாரையாவது பார்த்தாலும் உள்ள போகச் சொல்லுங்க . அரசாங்கம் சொல்லுறது அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்.

#stay_at_home 

#stay_at_home 

#stay_at_home

thanks டாக்டர். சில்வியா பிளாத் - முகநூல்......

Monday, March 02, 2020

TRANCE (MALAYALAM) -சினிமா விமர்சனம்

Image result for trance movie

13.7.2012  ல் ரிலீஸ் ஆன உஸ்தாத் ஹோட்டல் எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய  அன்வர் ரஷித் 8 வருடங்களுக்குப்பின் இயக்கிய படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு . பொதுவா ஒரு படம் ஹிட் ஆனாலே அவருக்கு வாய்ப்பு குவியும் , சூப்பர் ஹிட் ஆனா கேட்கவே வேணாம், ஆனாலும் ஏனோ அவர் சில காலம் ஒதுங்கியே இருந்தார்


ஹீரோ ஸ்விக்கி டெலிவரி பாய் . பார்ட் டைம் ஜாப் ஆக மோட்டிவேஷனல் ஸ்பீக்கரா கோச்சிங் கிளாஸ் நடத்தறார், லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலி

 வில்லன்  ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஓனர் . கிறிஸ்துவ மதத்தில்  அதிசயங்கள் நிகழ்த்தும் பாஸ்டர் மாதிரி கேரக்டர்களை உருவாக்கி புகழ் பெறச்செய்து சாமான்ய மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர் 


 சுருக்கமா சொல்லனும்னா நம்ம ஊரு நித்யானந்தா ,  ஈஷா யோகா சத்குரு மாதிரி  ஃபிராடுங்களை உருவாக்கி அவங்க  மூலமா பணம் பறிப்பவர்




ஹீரோவுக்கு வில்லன் தன் அடியாள் மூலம் 6 மாசம் கோச்சிங் குடுக்கறாரு.அதுக்குப்பின் ஜெபக்கூட்டங்களில்  செட்டப் செல்லப்பா மாதிரி ஏற்கனவே செட் பண்ணி  வெச்ச ஆட்கள் மூலம் அதிசயம் நிகழ்த்துவது மாதிரி  ஊரை ஏமாத்தறார். ஜனங்க அதை நம்பி காசை காணிக்கையா அள்ளி இறைக்கறாங்க 


 ஹீரோ செம ஃபேமஸ் ஆகறார். ஆன பின்  வில்லனின் கட்டுப்பாட்டில் இருந்து அவங்களுக்கு ஏன் நாம சம்பாதிச்சுத்தரனும்?நாமே  டைரக்டா சம்பாதிக்கலாம்னு பிளான் போடறாரு.

 அதன் படி தனது புகழ் அதிகரிக்க ஒரு  டி வி சேனலுக்கு  பேட்டி குடுக்கறாரு . அந்த பேட்டி திடீர்னு லைவ் ஷோவாக மாற்றப்பட்டு ஏதாவது அற்புதத்தை இப்போ நடத்திக்காட்டுங்கனு  ஆங்க்கர் சவால் விடறார்/


தன் அனுமதி இல்லாம டி வி ஷோ ல புரோக்ராம் பண்ணி இப்படி மாட்டிக்கிட்டாரே ஹீரோ என கடுப்பாகி வில்லன் ஹீரோவைத்தலையில் தாக்க ஹீரோவுக்கு மனநிலை பாதிக்கப்படுது 


 வில்லன் ஹீரோ மாதிரி இன்னொரு ஆளை ரெடி ;பண்றார். ஓபிஎஸ் நமக்கு ஒத்து வர்லைன்னதும் ஈபிஎஸ் சை சசிகலா ரெடி பண்ணின மாதிரி 


அதுக்குப்பின் ஹீரோ தர்மயுத்தம் பண்ணி  தன் இடத்தை தக்க வெச்சாரா?
 இல்லை டிடிவி தினகரன் மாதிரி தனியா பர்ஃபார்ம் பண்ணாரா?  என்பதை க்ளைமாக்சில் காண்க 


ஹீரோவா கடவுள் தேசத்தின் இயற்கை நடிப்பு இளவல் ஃபகத் ஃபாசில். அசால்ட்டா பின்னி பெடல் எடுக்கும் நடிப்பு . மோட்டிவேசனல் ஸ்பீக்கராக ஆள் பிடிக்கும்போது பேரம் போது அப்<ளாஸ் அள்ளுகிறார்

 அவரே  கோச்சிங் கிளாசில் தடுமாறும்போது அனுதாபத்தை சம்பாதிக்கிறார்

 மேடையில் பாஸ்டராக   அதகளம் பண்ணும் காட்சிகள் அருமை 

 பின் பாதியில் வில்லனுக்கு டேக்கா கொடுப்பது கலக்கல்


 வில்லனாக டைரக்டர் கவுதம் வாசுதெவ் மேனன். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ல போலீஸ் ஆஃபீசரா வந்தவர் இதுல கார்ப்பரெட் கம்பெனி ஓனராக , ஃபிராடாக  நல்லா பண்ணி இருக்கார்

 இனி தொடர்ந்து இவரை வில்லனாக எதிர் பார்க்கலாம் 


நஸ்ரியா நசீம் வில்லி மாதிரி வந்து நாயகி மாதிரி ஆகும் கேரக்டர் ,  எப்ப பாரி தம் சரக்கு அப்டினு இருப்பது எரிச்சல் , அனா அழகிய சருமத்துக்காக அதை எல்லாம் பொறுத்துக்கலாம் ( என்ன கருமத்துக்காக அதை நாங்க பொறுத்துக்கனும் என்பவர்கள் ஸ்கிப் செய்க)

சவுபின் சாஹிர்   வழக்கமா காமெடி ரோல் பண்ணுவார் , இதுல கலக்கலான டி வி ஆங்க்கர்  ரோல், கலக்கிட்டார்

 இவர் சம்பந்தப்பட்ட பேட்டி காட்சி முதல்வன் பட அர்ஜூன் ரகுவரன்  பேட்டிக்கு இணையாக காட்சி அமைக்கப்பட்டிருக்கு 


உயிருக்குப்போராடும் தன் குழந்தையை ஹாஸ்பிடலில் சேர்க்காமல்  இரை நம்பிக்கையில்  முழுகும் கேரக்டரில்  வினாயகன் நல்லா பண்ணி இருக்கார்  ( இதே மாதிரி பிசாசு படத்தில் மிஸ்கின் ஒரு கேரக்டர் அறிமுகம் பண்ணீனார் _


ஹீரோவுக்கு பயிற்சி அளிக்கும் ட்ரெய்னராக திலீஷ் போத்தன்  அமர்க்கள நடிப்பு 

வில்லனின் கூட்டாளியாக   செம்பொன் வினோத் ஜோஷ் கனகச்சிதம்

 பின்னணி இசை குட் , ஒளிப்பதிவு  ஓக்கே  ஓப்பனிங் சீனில் வரும் கன்யாகுமரிக்காட்சிகள் ஹைக்கூ கவிதை




நச் வசனங்கள்

1   வெற்றி இலக்கை அடைய லிஃப்ட் இருக்கா?னு பாத்துட்டு இருக்காதே? படிக்கட்டுகளை நீயே உருவாக்கு 


2    நான் என் பயத்தோட சண்டை போட்டுட்டு இருக்கேன் 


3   சார் , என் பையனுக்கு மோட்டிவேசனல் கிளாஸ்  நீங்க எடுக்கஞும்
எவ்ளோ சார்ஜ் ஆகும்> 


 உள்ளூர்னா  ஒன்றரை லட்சம் வெளியூர்னா 2 லட்சம் 

 அடேங்க;ப்பா. ஓவர் சார்ஜா இருக்கே?

 சரி நீங்க சொல்லுங்க , உங்க எதிர்பார்ப்பு எவ்ளோ

 இல்ல அது சரி வராது [ 

 பரவால்ல சொல்லுங்க 

 3000  ரூபா

 சார்   ரொ,ம்ப  கம்மியா இருக்கு ,   மேல ஏதாவது போட்டுக்குடுங்க 

 ஓக்கே ஒரு டீயும் , பப்சும்

 ஓக்கே டன்


4  சராசரி மனிதனை விட  ஒரு வெற்றியாளன் 5 மடங்கு   வேகமா நடப்பான்


5  மக்களோட எமோஷன் ஒரு சக்தி வாய்ந்த போதை 


6    இவன் 40 வருச்மா இதே ஹோட்டல்ல மேனேஜரா இருக்கான்

 அடேங்க;ப்பா 

 ஆனா என் அப்பா வெய்ட்டரா சர்வரா வேலை ஆரம்பிச்சார் , இப்போ இது மாதிரி  3 ஃபைவ் ஸ்டார்  ஹோட்டலுக்கு ஓனர்



சபாஷ் டைரக்டர்


1   மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக வரும் ஹீரோ  இருவரிடம் பேரம் பேசும் காட்சி 


2  வில்லன் ஹீரோ இருவரும் முதன் முதலாக சந்திக்கும் காட்சி 


3   அல்லேலுலா ஃபிராடுத்தனங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் ஒவ்வொரு சீனும் அப்ளாஸ் தான்


 4  படம் ரொம்ப ட்ரையாக போய்டக்கூடாது என சாமார்த்தியமா நஸ்ரியா கேர்க்டரை நுழைத்த விதம்





 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1   படம்  ரொம்ப நீளம்  கிட்டத்தட்ட 3 மணி நேர,ம்  ( 10 நிமிசம் குறைவு )

2   பாஸ்டர் கேர்க்டர்களை உருவாக்கும் வில்லனுக்கு முதலிலேயே அவர் தனக்கு எதிராக திரும்புவார்  என தெரியாதா? 

3  க்ளைமாக்சில்   வில்லன்களை அதுவும் பண பலம்  படை பலம் ஆள் பலம் கொண்ட வில்லன்களை சர்வ சாதாரணமாக ஒரு சாதா ஆள் கொல்வது  ( ஹீரோ அல்ல )

4   கிறிஸ்துவ மத பிரச்சாரங்கள் ஓவர் டோஸ் , இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்

5  க்ளைமாக்சில்  நஸ்ரியா ஹீரோவை கண்டு  ஓடி வந்து  கட்டிப்பிடிப்பது அபத்தம்



 விகடன் மார்க் ( யூகம்)   43

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   3,5 ./ 5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)




 C.P.S  கமெண்ட்-Trance (மலையாளம்)− கிறிஸ்துவர்களில் சில போலி அல்லேலுயாக்களின்,பாஸ்டர்களின் முகமூடிகளை பிய்த்து எறியும் விழிப்புணர்வு கதையில் முஸ்லீம்களான பகத்பாசில்,நஸ்ரியா நசீம் நடிப்பில் மிளிர்ந்தது இந்துவான எனக்கு மகிழ்ச்சி ,வில்லனாக #GVM n #Chemban நடிப்பு அருமை, ரே − 3/ 5