கதை நடக்கும் கால கட்டம் 2010.
சம்பவம் 1
நாயகன் ஈ பி ஆபீசல் பில் கலெக்டர் ஆக வேலை பார்ப்பவர்.தினசரி வசூல் ஆகும் தொகையை அடுத்த நாள் வங்கியில் செலுத்தி விட வேண்டும்.நாயகனுக்கு ஏகப்பட்ட கடன் இருக்கிறது.ஈ எம் ஐ கட்டச்சொல்லி நெருக்குகிறார்கள்.அப்போது நாயகனுக்குத்தெரிந்தவர் ஒரு ஐடியா சொல்கிறார்.தினசரி ஒரு லட்சம் ருபாய் என்னிடம் கொடுத்தால் அடுத்த நாள் ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாயாகத்தருகிறேன்.இது போல் ஒரு மாதம் நீ ரொட்டேஷன் செய்தால் ரூ 2000 × 30 = ரூ60,000 சம்பாதிக்கலாம் என்கிறார்.
நாயகனுக்குக்கடன் பிரச்சனையால் கல்யாணம் ஆகாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதால் இந்தத்திட்டத்துக்கு ஓக்கே சொல்கிறார்.ஈ பி ஆபீஸ் பணத்தை ரொட்டேஷன் செய்கிறார்.
சம்பவம் 2 .காமெடியன் தன் அம்மாவுடன் வசித்து வருகிறான்.அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை.செக் பண்ணின டாக்டர் அம்மாவுக்குப்பெரிய வியாதி இருக்கிறது.அதிக அளவில் பணம் செலவாகும் என்று சொல்ல காமெடியன் பேஸ்புக்கில் பதிவு போட்டு உதவி கேட்கிறார்.பெரிய தொகை வசூலாகிறது.பணத்துடன் டாக்டரைப்பார்க்கப்போகும்போது டாக்டர் கூலாக சாரி.நான் தப்பா சொல்லிட்டேன்.அம்மாவுக்கு ஒண்ணுமில்லை என்கிறார்.உடனே காமெடியன் சரி வசூலான பணத்தை அவரவருக்கே திருப்பித்தந்து விடுகிறேன் என சொல்ல அம்மாவோ அந்தப்பணத்தை நாமே வெச்சுக்கலாம் என்கிறார்.இன்னமும் வசூல் ஆகும் வரை ஆகட்டும்.வந்தவரை லாபம் என்கிறார்.
சம்பவம் 3 நாயகி ஒரு வீணாப்போனவனைக்காதலித்து நம்பி ஏமாந்து கையில் குழந்தையுடன் இருக்கிறாள்.அவன் ஓடி விட்டான்.பொழைப்புக்கு இவர் ஒரு மாதிரி போர்ஜரி வேலை செய்கிறார்.அதாவது வீடு வாடகைக்கு வேண்டும் என்ற நபரிடம் போக்கியத்துக்குப்பணம் வாங்குவது போல 5 லட்சம் ரூபாய் மொத்தமாக வாங்கி ஹவுஸ் ஓனருக்கு மாதாமாதம் வாடகையை இவர் கட்டி விடுவார்.அந்தப்பணத்தை ரொட்டேஷன் விடுவார்.
நாயகன்,நாயகி,காமெடியன் இந்த மூன்று பேரிடமும் பணம் எக்கச்சக்கமாக சேர்கிறது.காமெடியனிடம் 53 லட்சம்,நாயகியிடம் 85 லட்சம் ,நாயகனிடம் 10 கோடி பணம் சேர்ந்து விடுகிறது.
இப்போது காமெடியன் ,நாயகி இருவரும் நாயகனிடம் தங்களிடம் இருக்கும் பணத்தைத்தந்து டபுள் பண்ணிக்கொடுஙக என்கிறார்கள்.
நாயகனின் நண்பர் ஒருவர் ரெகுலராக நாயகனிடம் பணம் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் ரொட்டேஷன் பண்ணுவாரே அவர் நாயகனிடம் 10 கோடி ரூபாய் வாங்கி விட்டு சிலரால் கொலை செய்யப்படுகிறார்.நாயகன் இழந்த பணத்தை மீட்க முடியவில்லை.
நாயகன்,நாயகி,காமெடியன் மூவரும் இணைந்து ஒரு ஹோட்டல் நடத்தி செட்டில் ஆகிறார்கள்.இந்த சமயத்தில் தான் நாயகியின் மகன் கடத்தப்படுகிறான்.இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை
நாயகனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார்.எப்போதும் முகத்தை இறுக்கமாகவே வைத்திருப்பது ஏனோ? காமெடிப்படத்தில் ரிலாக்ஸ் ஆக நடித்திருக்கலாம்.
நாயகியாக அன்னா பென் நடிக்க அதிக வாய்ப்பில்லை.திறமையான நடிகையை வீணடித்து விட்டார்கள்.
அம்மா,மகனாக வரும் வடிவுக்கரசி ,யோகிபாபு நல்ல கெமிஸ்ட்ரி.காமெடி நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
நாயகனின் கொலீக் ஆக வரும் விடிவி கணேஷ் நடிப்பு அருமை.கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.
ராதாரவி,அருள்தாஸ் ,சாக் ஷி வைத்யா உட்பட மற்ற அனைவரும் அவரவர் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.
அர்விந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு குட்.ஷான் ரோல்டன் இசை ஓக்கே ரகம்.பின்னணி இசை கச்சிதம்.
ஹரீஸ் துரை ராஜ் இயக்கி இருக்கிறார்.
சபாஷ் டைரக்டர்
1 அம்மா-மகன் ஆக வரும் வடிவுக்கரசி-யோகிபாபு காமெடி டிராக் பல இடங்களில் நன்கு ஒர்க் வுட் ஆகி இருக்கிறது.கலகலப்புக்கு கேரண்டி
2 நாயகன்,நாயகி இருவரும் ஜோடி கிடையாது,காதல் இல்லை என்பது ஏமாற்றம்தான் என்றாலும் மாறுபட்ட சிந்தனை.
3 ஓப்பனிங்க் சீனிலேயே நாயகியின் மகன் கடத்தப்படுவது,யாராக இருக்கும் என்று சிசிடிவி செக் செய்வது என பரபரப்பான காட்சிகள் நம்மை கதைக்குள் இழுக்கிறது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 சதுரங்க வேட்டை ,லக்கி பாஸ்கர் படங்களைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகித்திரைக்கதை அமைத்தவர்கள் அதில் வருவது போல் புதுப்புது ஐடியா யூஸ் செய்யவில்லை.ரிப்பீட்டாக ஒரே மாதிரிக்காட்சிகள் போர் அடிக்கிறது.
2 ஒரு பாடாவதி இ பி ஆபீசில் அவ்வளவு பணம் வசூல் ஆவதெல்லாம் காதில் பூ ரகம் தான்
3 மோசடி செய்யும் காட்சிகள் எதுவும் நம்பகத்தன்மையே இல்லை.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சுவராஸ்யமான ஒன் லைன் பிடித்த இந்த டீம் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டது.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.ரேட்டிங்க் 2 /5
