Tuesday, March 31, 2015

கொம்பன்' பிரச்சினை க்ளியர்டு - ஏப்ரல் 1 ல் முன் கூட்டியே ரிலீஸ்

'கொம்பன்' பத்திரிகையாளர் சந்திப்பு | படம்: எல்.சீனிவாசன்
'கொம்பன்' பத்திரிகையாளர் சந்திப்பு | படம்: எல்.சீனிவாசன்
'கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற இரு நீதிபதிகள் 'கொம்பன்' படத்தை இன்று பார்த்தனர். இதைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்கிரமன், கொம்பன் பட இயக்குநர் முத்தையா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தாணு : '' 'கிழக்குச் சீமையிலே' படம் மாதிரி காவியமான படம் 'கொம்பன்'. இந்தப் படத்தில் எந்த சாதிய மோதலும் இல்லை. எந்த சூழலிலும் யாரையும் இழிவுபடுத்தவேண்டும் என்று எந்தக் காட்சியும், வசனமும் இல்லை. ஆனா, ஏன் இப்படிப்பட்ட இன்னலில் சிக்கி இருக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை.'' என்று தாணு பேசினார்.
சரத்குமார்: ''படம் சென்சார் ஆனபிறகு தனிநபரோ, அமைப்போ தடை செய்வதற்கு உரிமை இருந்தால் சென்சார் என்பது எதற்காக இருக்கிறது.
மத்திய அரசின் தணிக்கைக் குழு மூலம் படம் சென்சார் ஆன பிறகு அந்தப் படத்தைப் பற்றி முடிவு செய்ய யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. இனிவரும் காலங்களில் தனிநபரோ, அமைப்போ படத்துக்கு எதிராக இதுபோன்று ஈடுபடவேண்டாம். அப்படி ஈடுபட்டால் திரையுலகத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்.
மாமனார், மருமகன், அம்மா, மனைவி என்று பாசமுள்ள சிறந்த கதையைப் படமாக சொல்லியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் எந்த சாதியையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ சொல்லப்படவில்லை. சாதிப் பிரச்சினையோ, சாதிக் கலவரமோ, தூண்டுகின்ற சம்பவமோ, வசனங்களோ இல்லை.
எல்லாத் துறைகளையும் சார்ந்தவர்கள், சிறப்பாக கணிக்கக்கூடியவர்கள் தான் தணிக்கைத் துறையில் இருக்கிறார்கள்.



பொறுப்பில்லாதவர்கள் திரைப்படங்களை எடுப்பது மாதிரியான சூழலை உருவாக்குவது தவறு என்பது எங்களின் ஒருமித்த கருத்து.'' என்று சரத்குமார் பேசினார்.
விக்கிரமன்: '' 'கொம்பன்' படத்தில் ஹீரோ எந்த சாதி என்பதைக் கூட படத்தில் சொல்லவில்லை. இரு சாதியினருக்கான மோதல் என்கிற பிரச்சினை கிடையவே கிடையாது. இந்தப் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தவறாகத் தெரிகிறது.
இதில் சாதி மோதலைத் தூண்டுவதைப் போல இருக்கிறது என்று படம் பார்த்துவிட்டு யாராவது சொன்னால் நான் திரையுலகத்தை விட்டே போய்விடுகிறேன்.'' என்று விக்கிரமன் பேசினார்.
ஞானவேல்ராஜா: '' மார்ச் 27ம் தேதி 'கொம்பன்' ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டபோது எந்த போராட்டமும், வழக்கும் இல்லை. ஆனால், 'கொம்பன்' படத்தின் வேலைகள் முடியாததால் ஏப்ரல் 2ல் ரிலீஸ் என்று திட்டமிட்டோம்.2ம் தேதி ரிலீஸ் என்றதும் அத்தனைப் பிரச்சினைகளும் பூதாகரம் ஆனது. ஏப்ரல் 10ம் தேதி படம் ரிலீஸ் என்றால் இந்தப் பிரச்சினையே எனக்கு இல்லை'' என்றார்.
பத்திரிகையாளார் சந்திப்பின்போது ஞானவேல்ராஜா உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்கலங்கினார்.
ஏப்ரல் 2 அன்று வெளியாக இருந்த 'கொம்பன்' திரைப்படம் ஏப்ரல் 1 (புதன்கிழமை) அன்று ரிலீஸ் ஆகிறது.


'கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா 'கொம்பன்' திரைப்படத்தில் சாதிய ரீதியான காட்சியமைப்போ, வசனங்களோ இல்லை என்று மறுத்திருக்கிறார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''ஏப்ரல் 1 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கொம்பன்' திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திரைப்படத்தில் எந்த ஒரு ஜாதியைக் குறிப்பிடும் வசனங்களோ, காட்சியமைப்போ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.
இதில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தியோ அல்லது குறிப்பிட்ட சாதியை தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
யூகத்தின் அடிப்படையில் 'கொம்பன்' திரைப்படத்தைப் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.
'கொம்பன்' திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன்'' என ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
'கொம்பன்' திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. ஏப்ரல் 2ல் 'கொம்பன்' திரைப்படம் வெளியாகிறது.

  • எந்த படத்தை எதிர்த்து வழக்கு போட்டா பிரபலமாக முடியுமோ அந்த படாத எதிர்த்து தான் எல்லாம் பண்ணுவாங்க.. ஒரு புது நடிகருட படமா இருந்திருந்த இத பத்தி பேசவே மாட்டாங்க !.... தட்டிய கேட்க 1000 ஜாதி பிரச்சனை நம்ம நாட்டுல இருக்கு , அதெல்லாம் விட்டுபுட்டு சினிமா படத்து மேல எங்க வழக்கு போடுறீங்க !...
    Points
    335
    about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Reegan Reegan Lecturer at lecturer in college 
      இனி வரும் காலங்களில் படத்தை தணிக்கை குழுவிடம் காண்பிபதற்கு முன்பு மாநிலத்தில் உள்ள எல்லா சாதி கட்சி மதம் சார்ந்த கட்சிகளிடம் காண்பிக்க வேன்டும் என சொல்லி போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி . ஒரு தணிக்கை குழுவினால் சான்றிதழ் வழங்கிய படத்தினை எதிர்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . எல்லாவற்றையும் விட சிறந்த ஒரு விசயம் என்னவென்றால் ஒரு படத்தை பொழுது போக்கு நிகழ்வாக பார்க்கும் பொழுது எந்த பிரச்சினையும் வர வாய்ப்பு இல்லை .
      about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Durairaj  
        திரைப்பட தணிக்கை துறையிலே இதற்கு ஆட்சேபனை எழுந்துள்ளது என்று கேள்வி. மறு தணிக்கை செய்யப்பட்டதே ஏதோ ஒரு காரணத்திற்குத்தானே. திரைப்பட துறையில் ஒரு குறிபிட்ட ஜாதியை பெருமைபடுத்தி படம் எடுப்பது இன்று நேற்றா நடக்கிறது.
        Points
        1315
        about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Parthi  
          கமல் சண்டியர் என பெயர் வைத்த உடனே வரிந்து கட்டி கொண்டு வந்த கிருஷ்ணசாமி சில மாதங்களுக்கு முன் சண்டியர் என படம் வந்த போது மட்டும் தூங்கி கொண்டு இருந்தாரா ...ஏன் பிரபலங்களின் படங்களை எதிர்த்தால் மட்டும் தான் கிருஷ்ணசாமி என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை காட்டவா
          Points
          2315
          about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
          • மாரிச்சாமி  
            பாரதி தம்பி திரு.க. கிருஷ்ணாசாமி எதிர்ப்பது ஜாதி ஏற்ற தாழ்வுகளை மட்டுமே தவிர வேருன்றும் இல்லை.....ஒரு குறிப்பிட்ட ஜாதியை மட்டும் உயர்த்தி பேசுவது சரி அல்ல.......
            about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Chandra_USA  
            ஜாதி வேறுபாடு தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. அதை சினிமாவில் கட்டினால் தவறா?
            Points
            14240
            about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
            • DuraiRaj  
              நீங்கள் சொல்வது சரிதான். சமிபத்தில் தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினாரால் 60 கொலைகள் நடந்துள்ளது. அந்த ஜாதியின் தவறை சுட்டிக்காட்டி யாராவது படம் எடுப்பார்களா?
              about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Navneeth  
              நல்லது . தேவையில்லாத விமர்சனங்கள் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு இது எல்லாம் நம் அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை போலும் ...முதலில் சண்டியர்.பின்பு விஸ்வரூபம்.அடுத்து கொம்பன் ..உழைப்பின் கஷ்டம் நம் அரசியல் வாதிகளுக்கு தெரியாது அல்லவா அதான் போலும்..அ
            நன்றி - த இந்து

            கூந்தல் அழகிகளுக்கு ஒரு விண்ணப்பம்

            1  நடிகை  கிட்டே வாண்டடா வணக்கம் வெச்ட்டு/ வால்போஸ்டர கேட்டுட்டு “ஹய்யா  நான் நடிகைட்ட  பேசிட்டேன்”ன்னு  புளகாங்கிதப்படுவான்  நெட் தமிழன்



            ======================



            2  பொண்ணுங்க  FB ல  காலை வணக்கம்னு  டைப்  பண்ணினா   “உங்க  கையெழுத்து  அபாரம்  மேடம்”னு  சொல்ல  ஒரு  கூட்டம்  இருக்குது.டேய்  ஏண்டா இப்டி?




            ===================




            3  யோக்கியன்  ட்வீட்சை  மட்டும்  படிச்ட்டு பொய்ட்டே இருப்பான். மொள்ளமாரிங்கதான்  ஃபேக் அக்கவுண்ட்டா இருக்குமோ?னு பயப்படுவான்




            ==================





            4  என்னைப்பிடிச்சவங்க  ஆர்டி  செய்யவும்னு ஒர்  பொண்ணு  சொன்னா , என்னைப்பிடிக்காதவங்க  ஆர்டி  செய்யவும்னு பையன்  சொன்னா  ஆர் டி அள்ளும்




            =================




            தெரிவை =மீனம்மா கயல் #,தெரிஞ்சு வை




            ============



            6 யார் யார் எல்லாம் ஆள் மாத்தறாங்க?டிபி மாத்தறாங்க?ஹேன்டில் மாத்தறாங்கனு கண்டுபிடிக்கவே ஒரு குழு வெச்சுக்கனும் போல




            ==============



            7 யார் யார் எல்லாம் ஆள் மாத்தறாங்க?டிபி மாத்தறாங்க?ஹேன்டில் மாத்தறாங்கனு கண்டுபிடிக்கவே ஒரு குழு வெச்சுக்கனும் போல




            ================




            8 அன்பே! இன்று உன் கூந்தலில் அரப்பு கலந்த சிகைக்காய் வாசம் #


            இன்று உலக நுகர்வோர் தினம்
            + வாசம் பிடிக்கும் வஞ்சிநாதன் தினம்



            ================


            9

            தமிழ் மிஸ் தன்யா = அரிவை ,தெரிவை என்ன வித்யாசம்?



            லொள் மாண்புமிகு மாணவன் = 412 கிமீ டீச்சர்


            ====================

            10 அன்பே!நீ நடந்துவரும் பாதையில் நான் பூக்களை மட்டுமே போட்டு வைத்தேன்.நீ ஊசி நூல் கொண்டு ஒவ்வொரு பூவா கோர்த்துக்கொண்டே வருகிறாயே?

            ==============

            11 ஒரு பொண்ணு க்கு நல்ல சவுரி கொடுக்கும் தன்னம்பிக்கை எந்த சுயமுன்னேற்ற புத்தகத்திலும் கிடைக்காது.""


            ==================

            12 எந்த ஊர்ல எப்போ தியேட்டருக்குப்போனாலும் மொத போணி நாமாத்தான் இருக்கோம்.பூரா பயலுக்கும் பொழப்பு இருக்கும் போல்


            ================


            13 25 வருசத்துக்கு முன் மெகா ஹிட் ஆன படத்தை 10 டைம் பார்த்து சலிச்ட்டு இதையா கொண்டாடுனாங்க.மொக்கைனு சலிச்சுக்குவான் நெட் தமிழன்


            ==============

            14 பிரதி பா = ஜெராக்ஸ்பா # சபாஷ் துபாஷ்


            ===================


            15 தியேட்டருக்குள்ளே வந்ததும் லவ் ஜோடி எங்கே இருக்கோ அதுக்குப்பின் வரிசை சீட் ல உக்காந்து (2)படம் பார்க்கறக்கே ஒரு கூட்டம் இருக்கு


            ==============

            16 இந்தப்பொண்ணுங்க சன்டே கூட கோயிலுக்குப்போறாங்க.சாமிக்கு ஒரு நாள் கூட லீவ் விடமாட்டாங்க போல.பாவம்


            ============


            17 நான் 15 நிமிஷமா டி எல் பாத்துட்டிருக்கேன்.ஒரு ஜப்பான் தமிழர் 13 நிமிசத்துல 18 பொண்ணுங்களுக்கு மென்சன் போட்டு பேசிட்டிருக்காரு.2,கைல டைப்?


            ============

            18 என்னதான் பொண்ணுங்க மூக்கும் முழியுமா இருந்தாலும் அவங்க போடும் ஸ்மைலில மூக்கு இருக்காது :)
            பசங்க சுமாரா இருந்தாலும் மூக்கு இருக்கும் ;-)


            =============

            19 கூந்தல் அழகிகளுக்கு  ஒரு விண்ணப்பம்.முக்காவாசி  முகத்தை  கூந்தலே  மறைச்சிக்குது.தமிழன் எப்படி  உங்க  முகத்தை  ரசிப்பான்?


            ==================


            20  ஃபிகருக்கு பின்னாலயே  போய்  ஃபாலோபண்ணிட்டு  முன்னால  திடீர்னு  போய் நின்னு “ உங்களை  இது வரை  முன்னே  பின்னே  பார்த்ததே இல்லையே?”ங்கறான் 



            =====================

            ATM நம்பர திருப்பி போட்டா போலிஸ் வருமா?

            1  இன்னைக்கு என்ன சமையல்?



            பூரி



            தொட்டுக்க?



            இன்னொரு பூரி



            புரியல.
            குருமா எதும் செய்யல.

            ===================

            2 டேய்.பரிமளா னு எழுதச்சொன்னா பரிமலா னு எழுதி இருக்கே?


            டீச்சர்.பரிமலா லட்டு மாதிரி இருக்கும்.அதான் லட்டுக்கு வரும் ல போட்டுட்டேன்


            ===================

            3 ஒரு வரன் occupation - not working. னு இருக்கே?


            நல்லா பாருங்க மேடம்.சினிமா கதைக்கருவுக்கான knot making worker ஆக இருக்கப்போகுது


            ================

            4 மிஸ்! இப்டி டால் அடிக்கற மாதிரி டிரஸ்,நகை போட்டிருக்கீங்களே ?உங்க பேரென்ன?


            ஆண்"டாள்"


            ================

            5 அந்த ரைட்டர் கதை எழுதுனா வாசிப்பபவரை அப்டியே உள்ளே இழுத்துக்குவாராம்



            அய்யய்யோ.எப்போ திருப்பி அனுப்புவாரு?


            ===============

            6 டியர்.நீங்க எனக்குத்தெரியாம ஒரு ஆண்ட்ராய்டு போன் வெச்சிருக்கறதை கண்டுபிடிச்ட்டேன்.



            நல்ல வேளை.பயந்துட்டேன்


            =================

            7 டாக்டர்.பன்றிக்காய்ச்சல் எனக்கு குணம் ஆகிடுச்சு



            அப்டியா?பன்றி க்கு நன்றி சொல்லுங்க.எனக்கு ஒரு ஹார்லிக்ஸ் சொல்லுங்க


            ===============

            8 இன்ஸ்பெக்டர்.குறிஞ்சி மலரை 5 நாளா காணோம்



            யோவ்.அந்த மலர் பிங்க்கி யா கன்வெர்ட் ஆகி 6,நாள் ஆகுது

            ================

            9 குருவே!மனைவி நீண்ட ஆயுளோடு வாழ கணவர் விரதமிருக்கும் ஏதேனும் நோன்பு உண்டா?



            ஈரேழு 14 லோகத்திலும் அப்டி ஒரு கணவரே இல்லை சிஷ்யா!

            ==============

            10 சார்! நீங்க டெய்லி காலைல வாக்கிங் போவீங்களா? சூர்ய நமஸ்காரம் செய்வீங்களா?


            2ம் இல்லை. பொண்ணுங்களுக்கு காலை வணக்கம் வைப்பேன் FB ல



            ============


            11 ஏம்ப்பா? மேரேஜ்க்கு  முன்  அறிவோம் ஃபிகர்  போட்டுட்டு இருந்தியே, இப்போ  என்ன பண்றே?

            அரிவோம்   வெஜ்டபிள்ஸ்னு  சம்சாரத்துக்கு  எடுபுடிவேலை


            =============


            12 லவ் ஃபெய்லியர்ஆண்கள்  தாடி  வளர்ப்பதுபோல் பெண்கள்  ஏன்  சோகப்படறதில்லை?



            பொதுவா  பொண்ணுங்களுக்கு  ஆம்பளைங்களை  தாடிவிட வெச்சுதான்  பழக்கம்


            ======================


            13   சார்! ஆம்பளை  தன் ரகசியத்தை உளறிடுவானாமே? நிஜமா?

             கண்ணா! உளர்ற  மாதிரி  நடிப்பான்,அதை  பொண்ணுங்க  நம்பி ஏமாந்துடுவாங்க



            ================


            14  காதலியைவிட  அழகான பொண்ணு கிடைச்சா  இந்த காதலிய உட்டுட்டு அந்த அழகியை காதலிக்க மாட்டான் ஆண் என்பது  நிஜமா?

            ஆமா.பழைய காதலியை  விட மாட்டான்



            =================

            15  டாக்டர்! ஆ”லிவ்” ஆயில் ல சமைச்சா  நீண்ட நாள்  உயிர்  வாழலாமா? அதிர்ச்சியான நியூசா இருக்கு?

             மேடம்! நீங்க  சமைப்பீங்க  என்பதே ஷாக் நியூஷ்


            ==================


            16  மாப்ளை! பொண்ணை  நேர்ல பார்க்காமயே   அழகிய  தேவதைனு எப்டி சொல்றீங்க?


            FB ல  அழகிய  தேவதைனு அக்கவுண்ட்  வெச்சிருக்கே?



            ===================

            17  ATM நம்பர திருப்பி போட்டா போலிஸ் வருமா?


            நெம்பரை  நேரா  போட்டா  பணம் வரும். திருப்பிப்போட்டா  பாஸ்வொர்டு  ராங்க்னு  வரும், அம்புட்டுதான்


            =========================


            18    டியர்!  நான்  சாகும்போது கடைசியா  உன்  முகத்தைப்பார்க்கனும்.

            அதெப்பிடிடா  முடியும்?  புருசன்   ஒத்துக்க மாட்டானே?



            =====================


            19  மிஸ்!  ஸ்டைலுக்காகவா  சில  முடியை  மட்டும்  முன்னால  தள்ளி  விட்டிருக்கீங்க?


             யா. பின்னால  தள்ளி  விட்டா அது  ஜடை, முன்னாலன்னா ஜாடை


            ====================


            20   டியர்! தோசை ஏன் ரெண்டா பிஞ்சு இருக்கு?



            அத்தான்.தோசை "முருக"லா வேணும்னீங்களே? அதான் இது வள்ளி தோசை.இது தெய்வானை தோசை


            ===================