Showing posts with label சென்னை சர்வதேச பட விழா. Show all posts
Showing posts with label சென்னை சர்வதேச பட விழா. Show all posts

Wednesday, January 13, 2016

திரைப்பட விழாவில் கிடைத்தது என்ன?- சினிமா ஆர்வலர்கள் கருத்து

கோப்புப் படம்
கோப்புப் படம்
சர்வதேச திரைப்படவிழாவில் எங்களுக்குக் கிடைத்தது என்ன? - பார்வையாளர்களின் கருத்துத் தொகுப்பு
இயக்குநர், நடிகர் ரவிமரியா:
கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் வளர்ச்சியடைந்து வருகிறது சென்னை சர்வதேச திரைப்படவிழா. ஒரு இயக்குநராக பல்வேறு கதையுள்ள படங்களைப் பார்த்து அவர்களது கலாச்சாரங்களை, அவர்களின் திரைக்கதை முறைகளை தெரிந்துகொள்கிறேன். ஒரு நடிகனாக இண்டர்நேஷ்னல் அளவில் எப்படி திறமையை வெளிப்படுத்துகிறார்கள், நம் இந்தியாவில் அதை நாம் எப்படிப் பயன்படுத்தமுடியும் என்பதைத் தெரிந்துகொள்கிறேன். இத்திரைப்படவிழாவை எப்போதும் நான் மிஸ் செய்வதில்லை. சினிமா வளரவும் சினிமாவுக்கான அறிவு வளரவும் இத்திரைப்படவிழா உதவுகிறது.இவ்விழாவுக்காக முன்பே படபிடிப்பு வாய்ப்புகளை மாற்றியமைத்துக்கொள்வேன்.
டி.ஜி.வைஷ்ணவா காலேஜ் மாணவர்கள்:
திரைப்படவிழாக்களுக்கு வருவதன்மூலம் எப்படி திரைத்துறையைச் சார்ந்த முக்கியமானவர்கள் வருவார்கள். அவர்கள் தொடர்புகளைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பு. தவிர எப்படி ஷாட் எப்படி வைப்பது, கேமரா எப்படி வைப்பது என்பதை தெரிந்துகொள்ள இப்படங்கள் உதவுகின்றன. எங்கள் வாழ்வில் இது ஒரு வைடல் பார்ட். இங்கு வரும் இயக்குநர்களிடம் உரையாடும் கலந்துரையாடல் நிகழ்வு முக்கியமானது. அதில் கலந்துகொள்ளும்போது எந்த பாயிண்ட் ஆப் வியூவில் காட்சிகளை வைத்தார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.
இயக்குநர் சந்தானபாரதி:
நடத்தப்பட்டது. இப்போதும் திரைத்துறையிலிருந்து எஸ்பிஎம் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் கலைஞர்கள் தவறாமல் வந்துபடங்களைப் பார்க்கிறோம். முதலில் இத்திரைவிழா பைலட் தியேட்டரிலும் ஆனந்த் தியேட்டரிலும்தான் அப்போது பெரும்பாலும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள்தான் அதிகம் வந்தார்கள். அடுத்தது திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வரத் துவங்கினார்கள். தற்போது விஸ்காம் மாணவர்கள் பெருமளவில் திரைப்படவிழாவில் வந்து கலந்துகொள்வதைப் பார்க்கமுடிகிறது. உலகஅளவில் இருந்து வரும் படங்களைப் பார்க்கலாம். அதன்மூலம் அவர்களது கலாச்சாரம், அவர்களது தொழில்நுட்பம், லேட்டாஸ்ட்டாக என்ன செய்திருக்கிறார்கள் கேமராவை எப்படி வைக்கலாம் என எல்லாவற்றையும் விஷூவலாகப் பார்த்து அனுபவித்துத் தெரிந்துகொள்ளமுடியும். கல்லூரியைவிட இங்கு அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். காரணம் இது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எப்படி விதவிதமாக எடுக்கலாம் எப்படி கேமரா கோணங்களை வைக்கலாம். இங்கு வந்து படங்களைப் பார்க்கும்போது விஷூவலாக்
இயக்குநர், நடிகர் ரமேஷ் கிருஷ்ணா:
உலகப் படங்களைப் பார்க்க ஒரு வாய்ப்பு. ஆனா அதையெல்லாம் இங்க செய்யமுடியாது. ஏன்னா மாறுபட்ட கலாச்சாரம். நமக்கு ஈரான் படங்களோட கலாச்சாரம் ஓரளவுக்குப் பொருந்தி வரும். இந்தப் படங்கள் மூலம் நல்ல விஷயங்கள் தெரிஞ்சக்கலாம். வித்தியாசமான படங்கள் பார்க்கலாம். எப்பவுமே பழைய படங்களைப் பாத்து ஒரே இடத்துல இருக்கற நமக்கு வெளியில வேறொரு பார்வை கண்ணோட்டம் நமக்கும் கிடைக்கும்.
சி.ஆர்.சரஸ்வதி(திரைப்பட நடிகை):
நான், டைரக்டர் சந்தானபாரதி, ரமேஷ் கண்ணா பிலிம் பெஸ்டிவல் ஆரம்பித்ததிலிருந்து 10 வருஷமா தொடர்ந்து வந்துகிட்டிருக்கோம்.டிவிடில படம் பாக்கலாம், தியேட்டர்ல பாக்கலாம், பிலிம் பிரிவியூல பாக்கலாம், எந்தப் படமா இருந்தாலும் சரி தியேட்டர்ல பாக்கற சந்தோஷம் டிவிடில கிடைக்காது. அதுவும் மத்த நாட்டுப் படங்கள்னும்போது அவங்க டெக்னிக்கலா எப்படி படம் பண்றாங்க. எப்படி கதை எப்படி சொல்றாங்க. அந்த நாட்டோட அழகு, அந்த நேச்சர், அந்த சீனரீஸ், படத்துல நடிக்கற கலைஞர்களோட திறமை, தொழில்நுட்ப திறமை யெல்லாம் பாக்கும்போது நிறைய விஷயங்கள் தெரிஞ்சக்கமுடியுது. எங்களைப் பொறுத்தவரையில் இந்த சீசனை என்ஜாய் பண்றோம். எல்லாப் படங்களையும் பாத்துடுவோம். இதை வழக்கமான ஒரு வேலையா வச்சிக்குவோம்.
சத்யேந்திரா (நடிகர்):
13 வருஷமா நான் பெஸ்டிவல்லுக்கு வந்துகிட்டிருக்கேன். இங்கே வந்தா இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சந்திக்கமுடியும். இந்தவருஷம் இந்த விழாவில் 120 படங்கள்வரை கவனித்தாலும் 30 படங்களிலிருந்து 35 படங்கள் வரை கவனித்துப் பார்ப்பேன். முக்கியமாக வெளிநாட்டுப் படங்களைத் திரையிட வந்திருக்கும் இயக்குநர்கள் தொடர்பான படங்களைப் பார்ப்பேன். காரணம் படம் முடிந்ததும் அவர்களோடு கலந்துரையாடுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும். இந்தப் படங்களில் என் சுவைக்கேற்ற படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறேன். நிறைய பரிசோதனை முயற்சிப் படங்கள், நிறைய சிறந்த படங்கள். குறிப்பிட்டு சொல்லணும்னா முதல் நாள் பார்த்த விக்டோரியா ஜெர்மன் படம். இப்போ நான் பாத்துட்டு வந்திருக்கிற ப்ரியமானசம். ஒரு சம்ஸ்கிருத மொழிப்படம் முதன்முதலா பாக்கறேன். நல்ல ஒளிப்பதிவில் சிறந்த நடிப்பில் சிறந்த இசை, கதகளி நடனம் என நல்லபடம் இது.
பாலாஜி தரணிதரன் ( இயக்குநர்):
நான் சென்னை திரைப்படக் கல்லூரி முடித்ததிலிருந்தே இந்த விழாவுக்கு வந்துகிட்டிருக்கேன். இங்கே என்னுடைய முதல் குறும்படம் திரையிட்டாங்க. அதுலருந்து சில ஆண்டுகளா நான் தொடர்ந்து வந்துகிட்டிருக்கேன். இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா ஷார்ட் பிலிம் எடுத்தவங்க, விஸ்காம் மாணவர்கள் என பலரும் இங்கே வந்து பாக்கறாங்க. இங்கே வந்தா ஒரு உந்துதல் கிடைக்கிறது.
ஷைலஜா:
பிலிம் ஃபெஸ்டிவல்னாலே அப்படியொரு சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம். என்னைப் பொறுத்தவரை ஒரு இண்டாக்ஸிகேட்டடு நிலையில இருக்கேன். பேஷனா ஆறாத ஒரு ரொமான்ஸ் பலபேருக்கு சினிமாமேல இருக்கும். அந்த மாதிரி எனக்கு உலகத்திலிருந்து வந்த படங்கள் மேல ஒரு ஈடுபாடு. 50க்கும் மேற்பட்ட நாடுகள்லருந்து வந்த படங்கள் இங்கே இருக்கு. என்னன்னு சொல்லத்தெறியலை. ஒருவிதமான மனநிலையில வெளிநாட்டுப் படங்களைப் பாக்கறது. அந்தப் படங்கள்ல நாம பாக்கற அரசியல், பெண்களுக்கான முக்கியத்துவம், அதப் பத்தி மணிக்கணக்கல பேசறது...
இந்தப் படத்தைப் பாத்து அதுல ஊரிப்போற ஒரு சந்தோஷம். அதப்பத்தி திரும்பத் திரும்ப பேசறது... நண்பர்களோட தொடர்ந்து பேசறது... உண்மையில் இது திரைப்பட விழா மட்டுமே கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் அது. மெயின்ஸ்ட்ரீம் படங்களைப் பாக்கும்போது ஒரு சில விஷயங்களைத்தான் பேசுவோம். ஆனால் ஒரு சர்வதேச படங்களைப் பற்றிப் பேசினால் அந்த நாடு பற்றி, அரசியல் பற்றி, கலாச்சாரம், சமூகம், விமன்னோட ஸ்டேட்டஸ் பற்றி, இளைஞர்கள் பற்றி.. விக்டோரியான்னு ஒரு படம் பார்த்தேன்.
முதல்ல பாக்கும்போது 15, 16 வயசுக்கு பேரன்ட்ஸா இருக்கறவங்க என்ன இப்படின்னு ஒரு கன்சர்ன்னு வரும். ஆனா அப்புறம் படம் நகர நகர என்ன விக்டோரியாவோட கேமரா ஒர்க், அவங்களோட பர்மாமென்ஸ் எல்லாம் மிக மிக அருமை. அந்தப் படத்தைப் பற்றியே நீண்டநேரம் பேசிக்கிட்டிருந்தோம். முன்பெல்லாம் பெஸ்டிவல்லுக்கு வர நிறைய தயக்கம் இருக்கும். ஏனா பெண்களே குறைவா இருப்பாங்க. ஆனா இப்போ நிறைய பெண்கள் நிறைய பேர் வராங்க. நாங்க எல்லாம் சிலபேர் இங்கே வாலண்டியராவும் வொர்க் பண்றது மகிழ்ச்சியா இருக்கு.
இயக்குநர் நாகா
நம்ம படங்கள் ஆஸ்கருக்கு போகலையேன்னு ஒரு வருத்தம் நமக்கு இருக்கு. ஆனா நமக்கு exposureரே கிடையாது. வெறும் பிஸினஸா மட்டுமே பாத்து பழக்கப் பட்ட நமக்கு சினிமாவை எப்படி பாக்கணும்? அதை எப்படி பேசணும்னு தெரியாது. போறபோக்குல சில படங்களைப் பாத்துட்டு கைதட்டிட்டு விசிலடிச்சிட்டு போயிடறோம். ஏன்னா சினிமாங்கறது ஒரு சக்திவாய்ந்த சாதனம், ஊடகம்... ஆனா அந்த மீடியத்துக்கு நாம பெரிய கவனம் செலுத்தறதில்லை. நாம சினிமாவைப் புரிஞ்சிகிட்டோம்னு சொல்லமுடியாது. அதனால exporsure தேவை. அதனால இளம் தலைமுறையினர் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் வரும் படங்களைப் பார்த்துவிட்டு படங்களை இயக்க முற்படவேண்டும்.
ஆரி (நடிகர்)
நான் நடிச்ச நெடுஞ்சாலை படம் முதல்முதலா 2014ல் இங்க திரையிடப்பட்டது. அதேமாதிரி மாயாவுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. இந்தத் திரைப்படவிழாவில் இங்க உங்களோட பேசற வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. தமிழில் நிறைய ஹாரர் படங்கள் வந்துகிட்டிருக்கு. ஆனா மாயா ஒரு டிரெண்ட் செட்டிங் படமா அமைஞ்சிடுச்சி. திரைப்படவிழாவில் நிறைய படங்களை வேறவேற மொழிப் படங்களைப் பாக்கற ஒரு அருமையான வாய்ப்பு. நன்றி.

நன்றி - த இந்து

Sunday, January 10, 2016

சென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி அரங்கம் | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை- 2 செம சீன் படம்

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை ஆர்கேவி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி அரங்கம் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »
காலை 9.45 மணி
The sap head/ The saphead Dir.:Buster Keaton USA| 1920| 77’
பஸ்டர் கீடன் நடிப்பில் உருவான படம். பணக்கார நிதியாளர் குடும்பத்தில் பொறுப்பின்றி வளரும் மகன், தனது பொறுப்பை உணரும் பயணமே தி சாப் ஹெட் படத்தின் கதை.
காலை 11.45 மணி
Barbara/Barbara Dir.:Nils Malmoros Denmark | 1997| 143’
கிராமங்களில் பணிபுரியும் இளம் புரோகிதர் பால். தேவாலய ஊழியத்திற்காக ஃபெரோ தீவுகளுக்குச் செல்கிறான் அங்கே இளம்பெண்ணான பார்பராவைச் சந்திக்கிறான். இருமுறை திருமணம் ஆனவளான பார்பராவின் கணவர்கள் இருவரும், சந்தேகமான முறையில் மரணித்திருக்கின்றனர். மெல்ல மெல்ல அவனையும் அறியாமல் பார்பராவிடம் காதல் வசப்படுகிறான். சுற்றியிருக்கும் மக்களின் எச்சரிக்கைக் குரல்களும், சொந்த மதக் கோட்பாடுகள் சொல்வதையும் அவனால் கேட்க முடியவில்லை. பார்பராவின் காந்தக் கண்களும், அப்பாவித்தனமும் அவனைக் கவர்ந்திழுக்கின்றன. அவர்களின் காதல், பல அபாயகரமான சோதனைகளுக்கு வித்திடுகிறது.
மதியம் 2.45 மணி
Carte Blanke/ Dir.:Jacek Lusinski Poland |2015| 106’
ஆச்சரியமான உண்மைக் கதையான கார்ட்டி பிளான்ச்சியைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. வரலாற்றுப் பாடத்தைக் கற்பிக்கும் பள்ளி ஆசிரியர் கேஸ்பர், கொஞ்சம் கொஞ்சமாகக் கண் பார்வையை இழப்பதை உணருகிறான். வேலைக்காகவும், மரியாதை போய்விடுமே என்ற பயத்திலும், எல்லோரிடம் இருந்து உண்மையை மறைக்கிறான். மரபணுக் கோளாறின் காரணமாக, மருத்துவர்களும் அவனுக்கு குறைவான நம்பிக்கையையே கொடுக்கின்றனர். சீக்கிரத்திலேயே நிரந்தரப் பார்வையற்றவனாக ஆவதற்கான வாய்ப்புகள் அதிமாக இருப்பதை உணர்கிறான் கேஸ்பர்.
உடைந்த இதயத்தோடு, தன் மேலதிகாரிகளிடம் உண்மையை மறைக்கிறான். தன்னுடைய கனவு வேலையை நல்லபடியாக மேற்கொள்ள வேண்டும்; ஆண்டின் இறுதித் தேர்வுகளுக்காக, மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும் என்பதே கேஸ்பரின் ஆசையாக இருக்கிறது. தன்னுடைய நெருங்கிய நண்பனான விக்டரிடம் மட்டும் உண்மையைச் சொல்கிறான். கூட வேலை பார்க்கும் எவாவுடன் மட்டும் நன்றாகப் பழகுகிறான் கேஸ்பர். அதே நேரத்தில் ஏதோ ஒரு ரகசியத்தைத் தன்னிடம் இருந்து மறைக்கும் மாணவி க்ளாராவுக்கும் உதவுகிறான்.
இப்படம் நோயால் துன்புறும் தனி மனிதனைப் பற்றி மட்டும் பேசவில்லை. எழ நினைக்கும் ஒவ்வொரு முறையும், விழுந்து கொண்டே இருக்கும் மனிதர்களைப் பற்றியும், ஒரு கடினமான விஷயத்தில் தேர்ச்சி அடைய வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்களைப் பற்றியும் பேசுகிறது. ஒவ்வொரு மனிதனும் வெளிக்கொணர வேண்டிய, வளர்த்துக்கொள்ள வேண்டிய சக்தியைப் பற்றியும் பேசுகிறது; வடுக்களில் இருந்தும், நம் வாழ்க்கையை அழகாய் அமைக்கவும் வழி சொல்கிறது.
மாலை 4.45 மணி
The Summer of Sangaile/ SANGAILĖ Dir.:Alanté Kavaïté Lithuania| 2015| 88’
17 வயது சங்காய்லே சாகச விமானங்களால் கவரப்படுகிறாள். உயரத்துக்கு அச்சமுறும் அவள், விமானிகள் இருக்கையில் அமர்வது வரையிலும் கூட ஒருபோதும் தையரியமாக இருந்ததில்லை. அருகிலுள்ள ஏரிக்கரை வீட்டில் பெற்றோர் இருக்க, கோடையில் நடைபெறும் ஏரோநாட்டிகல் சாகசக் கண்காட்சி விழா ஒன்றில் அவள் வயதேயான ஆஸ்டே எனும் உள்ளூர் பெண்ணை சந்திக்கிறாள். அவள் சங்காய்லே போல இல்லை. அவளது வாழ்க்கை மிகுந்த சுவாரஸ்யமாகவும் துணிச்சலாகவும் இருக்கிறது. இரு பெண்களும் காதலர்களாக மாறுகிறார்கள். சங்காய்லே தனக்கு நெருக்கமான உறவாக ஆஸ்டேவை ரகசியமாக அனுமதிக்கிறாள். அவள் விமானத்தில் பறப்பதை தனது பதின்ம காதலின் நபர் மட்டுமே ஊக்கப்படுத்துவதையும் உணர்கிறாள்.
மாலை 7.15 மணி
Ma Folie/ Ma Folie Dir.: Andrina Mracnikar Austria | 2015| 99’
ஹன்னா எனும் இளம்பெண் யான் இளைஞனைக் காதலிக்கிறாள். யானும் ஹன்னாவைக் காதலிக்கிறாள். ஆனால் அவளை நம்பவில்லை. அதற்குக் காரணம் தன் அந்தரங்கத்தை அடிக்கடி செல்போனில் எடுக்கும் அவனது செயல்தான். ஹன்னா அவனை ஒருநாள் கடுமையாகத் திட்டிவிடுகிறாள். உடனே அவன் அவளை விட்டு விலகி விடுகிறான். ஆனால் தனியாக அவளைத் விட்டுவிட்டுப் போகவில்லை.
அவனது படமாக்கல் கருவி ஒன்று அவளைக் கண்காணிக்கிறது. ஒரு அச்சுறுத்தலாகவும் தன்னையே நம்ப முடியாதவளாகவும் அவள் இருக்கிறாள். ஒரு பைத்தியக் காதலை இப்படம் பேசுகிறது. படிப்படியாக உணர்தல், நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மை, கற்பனை மற்றும் மாயை ஆகிய வெவ்வேறு பாதைகளில் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லராகவும் இப்படம் பயணிக்கிறது.


த இந்து

சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை ரஷ்ய கலாச்சார மையத் அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »
காலை 10.00 மணி
Agni Satchi Dir.: K. Balachander Tamil | 1982 | 151'
புதுக்கவிதையில் நாட்டம் உள்ள கண்ணம்மாவை மிகவும் நேசிப்பவன் அவளது கணவன் அரவிந்தன். அடிக்கடி கவிதைகள் எழுதி தன் கணவன் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துகிறாள் கண்ணம்மா. பின்னர் அவள் கருத்தரிக்கிறாள். வயிற்றிலுள்ள குழந்தைக்கும்கூட ஒரு கவிதை எழுதுகிறாள். இப்படியெல்லாம் மகிழ்ச்சியோடு வாழ்வைக் கொண்டாடும் கண்ணம்மாவுக்கு என்ன ஆனது. சிவக்குமார், சரிதா நடித்துள்ள இப்படம் பெண்களின் உணர்வுகளை மிகவும் நுட்பமாக சித்தரிக்கிறது.
மதியம் 1.30 மணி
Thakka Thakka Dir.: Sanjeev Tamil | 2015 | 141'
பாலியல் தொழிலாளியின் மகனான விக்ராந்த், தன் தாயின் அவலமான வாழ்வைக் கண்டு வளர்கிறார். ஒரு கட்டத்தில், விக்ராந்த்தின் தாய் அவர் கண்முன்னே கொல்லப்படுகிறார். அங்கிருந்து தப்பித்து சென்னையில் வளரும் அவருக்கு அரவிந்த் சிங்கின் நட்பு கிடைக்கிறது. நர்ஸ் அபிநயாவைக் காதலிக்கிறார் அரவிந்த் சிங். எதிர்பாராதவிதமாக வில்லன் ராகுல் வெங்கட் கும்ப லிடம் அபிநயா மாட்டிக்கொள் கிறார். அபிநயாவை மீட்கும் போராட்டத்தில் நண்பனை இழக்கும் விக்ராந்த், வில்லன் கூட்டத்தை எப்படி அழிக்கிறார் என்பதுதான் ‘தாக்க தாக்க’.
மாலை 4.15 மணி
Oattathoodhuvan 1854 Dir.: R. Chidambaram Tamil | 2015 | 124'
19ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் காலத்து கதை. இந்தியாவில் 1854ல் தபால் சேவை முதன்முதலாகத் தொடங்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் காடுமேடெல்லாம் திரிந்து தபாலை கொண்டுபோய் சேர்த்த மெயில் ரன்னர்களின் வாழ்க்கையில்தான் எவ்வளவு சிரமங்கள். ஈட்டி, லாந்தர், தோள்பை பார்சல் முதலானவற்றை சுமந்துகொண்டு வெகு வேகமாக அவர்கள் மலைப்பாதைகளில் ஓட வேண்டும். வழியில் உள்ள செக்போஸ்ட்களில் உரிய விவரங்களைத் தெரிவித்துவிட்டுச் செல்லவேண்டும். மெயில் ரன்னர்கள் பட்ட கஷ்டங்களைப் பேசும் இப்படம் ஒரு அழகான கதையம்சத்தையும் கொண்டுள்ளது.
மாலை 7.00 மணி
Lola/ Lola Dir.:Rainer Werner Fassbinder Germany| 1981| 113’
போர் முடிந்து பத்து வருடங்களுக்குப் பிறகு, மேற்கு ஜெர்மனியின் பொருளாதாரம் செழிக்க ஆரம்பிக்கிறது. அங்கே ஊழலில் மலிந்திருந்த இண்டோ என்னும் நகரத்தின் ஆணையராகப் பொறுப்பேற்கிறார் ஹெர் வோன் போம். நகரத்தின் வளத்தை அதிகரிக்க நினைத்து செயல்படுபவர், ஒரு நாள் தனது வீட்டு உரிமையாளரின் மகளான மேரி லூயிஸால் தாக்கப்படுகிறார். மேரியும் ஒரு லோலா என்பதை ஹெர் உணர்ந்திருக்கவில்லை.


நன்றி - த இந்து

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »
காலை 11 மணி
Song of the Horned/ Owl Dau Huduni Methai Dir.: Manju Borah Bodo| 2015| 78’
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில், கடந்த 35 ஆண்டுகளில், இதுவரை 40,000 மக்கள் மதக்கலவரங்களாலும், கிளர்ச்சியாலும் மாண்டுள்ளனர். இதில் பலர் அப்பாவிப் பொதுமக்கள். ரைமாலி, இளம் பெண், அவளுக்கு இதைப் பற்றிய விவரங்கள் தெரியும். அவள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானவள் வேறு. தனித்துவிடப்பட்ட ஒரு வீட்டில் இருக்கும் அவள், எப்படி பிரிவினையால் தூண்டப்பட்ட வன்முறை அவளது வாழ்க்கையையும், அவள் காதலனின் வாழ்க்கையையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதித்தது என்பதை நினைவுகூர்கிறாள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய, போடோ சமுதாயத்தின் நிலையை, அவர்கள் எதிர்கொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் ரீதியான பிரச்சினைகளை இந்தப் படம் பேசுகிறது. போடோ மக்களின் நம்பிக்கையின் படி, இறந்து போனவரது உடல் ஆந்தை வடிவில் திரும்ப வரும், மரத்தில் நின்று கூப்பிட்டுக் கொண்டே இருக்கும்.
படம் இந்த நம்பிக்கையை எடுத்துக் கொண்டு அதை சுவாரசியமாக உருவகப்படுத்துகிறது நடிகர்கள் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாததால் படத்தை இயக்கமுடியாமல் ஒருவருடத்துக்கும் மேலாக இயக்குநர் மஞ்சுபோரா தவித்து வந்தார். கனடாவில் நடைபெற்ற மான்ட்ரில் உலகத் திரைப்படவிழாவில் திரையிட தேர்வான படம்.
மதியம் 2.30 மணி
The Black Hen/ Kalo Pothi Dir.:Min Bahadur Bham Nepal| 2015| 90’
நேபாளத்தின் வடக்குப் பகுதியில் அப்போதுதான் தற்காலிகப் போர் நிறுத்த அறிவிப்பு செய்யப்பட்டது. போர்களால் பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தினர் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள். சிறுவர்களான பிரகாஷ் மற்றும் கிரண் என்னும் இரண்டு நண்பர்கள், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும், ஜாதியால், சமுதாய அந்தஸ்த்தால் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்தாலும், பிரிக்க முடியாத அன்புடன் இருக்கிறார்கள். பிரகாஷின் அக்கா, அவனுக்குக் கொடுத்த கோழியை வளர்த்து, அதன் முட்டைகளைக் கொண்டு பணம் சம்பாதிக்க எண்ணுகிறார்கள். ஒருநாள் எப்படியோ அந்தக் கோழி காணாமல் போகிறது. அதைக் கண்டுபிடிக்க எண்ணி, போரின் நீட்சி முடியாத, கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்றுவிடுகிறார்கள்.
மாலை 5.00 மணி
Lens/ Dir.: Jayaprakash Radhakrishnan English | 2015| 105’
படத்தின் 70 சதவீதக் கதை, இரண்டு வெவ்வேறான இடங்களில் இருக்கும், இரண்டு நபர்களின் ஸ்கைப் உரையாடல்கள் வழியாக பயணிக்கிறது. இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையில், ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் கலந்து பேசப்படுகின்றன. சுவாரஸ்யம் மிகுந்த திரில்லர் படம்.
என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் நண்பராக நடித்தவர் ஜெயப்பிரகாஷ். நடிப்பு வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருந்த காலத்தில் இப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார். ''தொழில்நுட்ப வளர்ச்சியால், அறிமுகம் இல்லாத இரண்டு நபர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் எங்கே போய் முடிகிறது, அதன் விளைவுகள் என்னென்ன என்பதே கதை'' என்கிறார் ஜெயப்பிரகாஷ்.
மாலை 7.30 மணி
Ranna Silence/ Sokoot-e-Ranna Dir.:Behzad Rafiei Iran| 2015| 86’
ஒரு ஏழு வயது சிறுமி ககோலி மற்றும் அவள் வளர்க்கும் கோழியைப் பற்றியக் கதை. அந்த கோழி போடும் முட்டைகளில் வண்ண பென்சில்களால் வரைந்து விளையாடுகிறாள் ககோலி. அவளும் அவளது சகோதரனும் இணைந்து ககோலி போடும் முட்டைகளைப் பாதுகாத்து வருகின்றனர். ஒரு நாள் இரவு ககோலி ஒரு நரியால் தாக்கப்படுகிறாள்.


நன்றி - த இந்து

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »
காலை 11.30 மணி
Pioneer Heroes/ Pionery-geroi Dir.:Natalya Kudryashova Russia| 2015| 116’
1987-ல் ஒலேகா நகரைச் சேர்ந்த கத்யாவும் ஆந்த்ரேயும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர்கள் இருவரும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவுக்காக உயிரைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டவர்கள். அவர்களின் பிற்கால வாழ்க்கையில் எல்லாமும் மாறிவிடுவதை இப்படம் காட்டுகிறது.


30 வயதைத் தொடும் அவர்களில் காத்யா ஒரு நடிகையாக இருக்கிறாள். அவள் திருமணமான இளைஞனை காதலிக்கிறாள். ஆந்த்ரே ஒரு அரசியல் விமர்சகனாக இருக்கிறான். தன்னுடைய வேலைச்சுமையிலிருந்து விடுபட வீடியோ விளையாட்டை நாடுகிறான். அவர்கள் இப்போதுள்ள தங்கள் நாட்டில் காணும் உண்மை இயல்பு வேறாகயிருக்கிறது.

மதியம் 2.00 மணி
Short Skin/ Dir.:Duccio Chiarini Italy| 2014| 86’
தனது நெருங்கிய தோழியை இரவுபகலாக நினைத்துக்கொண்டிருப்பவன் அவன். அவனுடைய தந்தையும் அவனுடைய தங்கையும் தொடர்ந்து பாலியல் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவர்கள். ஆனால் எட்வார்டோ ஒரு நுட்பமான பிரச்சனையில் இருக்கிறான். அவனுக்கு பாலியல் என்பது ஒரு மெல்லிய புண்ணாக இருக்கிறது. சுய இன்பம் அனுபவிப்பது கூட வேதனையான ஒன்றுதான் அவனுக்கு.


பல்வேறு தயக்கங்கள் அச்சங்களுக்குப் பிறகு ஒருவழியாக அறுவை சிகிச்சை ஒத்துக்கொள்கிறான். பிறகு அவனிடம் மாற்றம் ஏற்படுகிறது. அவனது விருப்பத்தை உணர்ந்த அவனது ரகசிய காதலி பியான்கா அவனை வெளியில் ஒரு இடத்திற்குச் செல்ல அழைக்கிறாள். இருவரும் செல்கின்றனர். அங்கு அவனது முயற்சி தோல்வியில் முடிகிறது. ஒரு மெல்லிய இதயம் படைத்த 17வயது இளைஞனின் ஆசைகளை வேதனைகளை மிகச் சிறப்பாக ஒரு கோடைக்கால காதல் கதையுடன் இணைத்து அழகாக கூறியுள்ள படம்.


காலை 4.30 மணி
Ang: Danpat Insaeng Iyagi/ Dir.: Naomi Kawase Japan| 2015| 113’
செண்டாரோ டொராயாகீஸ் என்ற இனிப்பினை தயாரிக்கும் சிறிய பேக்கரியை நடத்தி வருகிறான். டோகு என்ற ஒரு வயதான பெண்மணி அவனுக்கு உதவுவதாக வரும்போது வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொள்கிறான். ஆனால் அந்தப் பெண்மணி தயாரிக்கும் அன் என்ற உணவு வகை சுவை மிகுந்ததாக இருப்பதால் செண்டாரோவின் வியாபாரம் செழிக்கிறது. அதே நேராத்தில் செண்டாரோவும், டோகுவும் தங்களது கடந்த கால வாழ்க்கையைப் பற்றியும் வலியைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கின்றனர்.


உட்லண்ஸ் மாலை 7.00 மணி
Embrace of the Serpent/ El abrazo de la serpiente Dir.: Ciro Guerra Colombia| 2015| 125’
இத்திரைப்படம் 1909 மற்றும் 1940 ஆகிய இரு காலகட்டத்தில் நடைபெறும் இரு கதைகளை கூறுகிறது.அமேசானிய மதகுருவும் அவரது பழங்குடி இனத்தில் கடைசியாக உயிர்பிழைத்திருப்பவருமான கரமகாத்தே பற்றிய இருவேறு காலகட்ட கதைகள் அவை. ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி, ஒரு அமெரிக்க விஞ்ஞானி ஆகிய இருவரோடு அவர் அமேசான் காடுகளில் யாக்ரூனா எனப்படும் ஒரு புனித முறை சிகிச்சை செய்யக்கூடிய அபூர்வ செடியைத் தேடி அலைகின்றனர். 40 வருடங்களுக்கு மேலாக அவரோடு களப்பணியாற்றிய இரு விஞ்ஞானிகள் தங்கள் நாட்குறிப்புகளைத் தழுவி எடுக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பிரிவில் கொலம்பியாவிலிருந்து சென்று போட்டியிட்ட படம்

த தமிழ் இந்து

சென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை


சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை கேஸினோ அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »
காலை 9.45 மணி
The Sky Above Us/ Dir.:Marinus Groothof Netherlands| 2015| 97’
ஒவ்வொருநாளும் அவர்கள் மூவரும் மிகப்பெரிய போராட்டத்தினிடையே வேலைக்கு செல்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பெல்கிரேடில் உள்ள தேசிய தொலைக்காட்சி கட்டிடத்திற்கு அருகில் அவர்கள் வேலை செய்யும் இடம் உள்ளது. இங்குதான் நேட்டோ படையின் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. வானிலிருந்து எப்போது வேண்டுமானாலும் குண்டுகள் விழும் என்ற அச்சத்துடனேயே மூவரும் தங்கள் எளிய வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
காலை 12.00 மணி
Absolution/ Henkesi edestä Dir.:Petri Kotwica Ireland| 2015| 92’
கர்ப்பிணியான கீயா கார் ஓட்டிச் செல்ல அருகில் கணவன். நகருக்கு வெகுதொலைவில் கிராமத்து நாட்டுப்புற சாலைகளில் பாய்ந்துசெல்கிறது. திடீரென வயிறு வலிக்க மருத்துவமனையை நோக்கி செல்லும் கார் ஓர் உயிரை பலிவாங்கிவிடுகிறது. மருத்துவனைக்கு அவர்கள் செல்ல அங்கு கீயாவுக்கு ஆரோக்கியமான ஒரு குழந்தை பிறக்கிறது. அதே மருத்துவமனையில் கீயாவை அன்னா சந்திக்கிறாள். அன்னாவிடமிருந்து சாலையில் நடைபெற்ற ஒரு விபத்தைப் பற்றிய எதிர்பாராத ஆச்சரியங்களை கீயா பெறுகிறாள்.
மதியம் 2.45 மணி
Panama/ Dir.: Pavle Vuckovic Serbia| 2015| 105’
கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்புத் திரையிடல் செய்யப்பட்ட படம். ஜோவன் சாதாரணமாக எந்த வேண்டுகோளும் இன்றி மாஜாவை டேட்டிங் அழைத்துச் செல்கிறான். ஆனால் அவளது மர்மமான மற்றும் நிழலான நடவடிக்கைகளால் அவன் தொந்தரவுக்குள்ளாகிறான். அதிலிருந்து அவளை பின்தொடர்வதும் அவள் தொடர்பான வீடியோக்களைக் கொண்டும் சமூக வலைத்தளங்களிலும் அவள் இன்னொரு வாழ்க்கையை கண்காணிக்கிறான். பொய், அகங்காரம், பொறாமை மற்றும் செக்ஸ் போன்ற வலைகளில் சிக்கி தன்னை இழக்கும் ஜோவன், அவள் யார் என்று தீவிரமாக புரிந்துகொள்ள முயற்சிக்கிறான். இன்றுள்ள இளைய தலைமுறையினரின் வாழ்நிலையும் மனநிலையும் சொல்லும் படம்.
மாலை 4.45 மணி
Chronic/ Dir.:Michel Franco Mexico| 2015| 93’
டேவிட், தீராத நோயுடன் சாகக் கிடக்கும் நோயளிகளுக்கு செவிலியராக இருக்கிறான். தனது தொழிலில் அர்ப்பணிப்புடன் இருக்கும் டேவிட் தனது நோயாளிகளுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்கிறான். ஆனால் பணியைத் தாண்டி அவன் தனியாக, வினோதமான வாழ்க்கையை வாழ்கிறான்.
மாலை 7.15 மணி
Magallanes/ Dir.:Salvador del Solar Peru| 2015| 105’
மயலானஸ் ஒரு டாக்ஸி ட்ரைவர். ஒரு நாள் தனது டாக்ஸியில் ஏறும் செலினாவை அடையாளம் கண்டுகொள்கிறான். அவள் 20 வருடங்களுக்கு முன், மயலானஸ் ராணுவத்தில் இருக்கும்போது அவனது உயரதிகாரியால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளானவள். ஆனால் செலினாவுக்கு மயலானஸை அடையாளம் தெரியவில்லை. செலினாவை மீண்டும் பார்த்த தருணத்தை தன் பாவத்திலிருந்து மீள ஒரு சந்தர்ப்பமாக பார்க்கிறான் மயலானஸ். பல்வேறு உலகப்படவிழாக்களில் கலந்துகொண்ட சிறப்புமிக்க படம்


 நன்றி - த ஹிந்து

Friday, December 19, 2014

சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 19.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

Camouflage
Camouflage 
 
 
சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை ரஷ்ய கலாச்சார மையத்தில் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை. 



காலை 10 மணி
Camouflage / Krzysztof Zanussi / Poland / 1977 / 106'
மாணவர்களை எப்போதும் அச்சப்படுத்திக் கொண்டே இருந்தால் தான் மாணவருக்கும் ஆசிரியிருக்குமான உறவு சரிவர அமைந்திருக்கும் என்று எண்ணும் முதிர்ச்சியான வாத்தியார், மாணவர்களை தோழர்களாக நடத்தினால் மட்டுமே அவர்களின் திறனை முழுவதுமாக வெளிக்கொணர முடியும் என நினைக்கும் இளைஞர். இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் அடிக்கடி கருத்து மோதல் ஏற்படுகிறது. பள்ளியில் பெரிய அளவில் நடத்தப்படும் மொழியியல் போட்டியின் போது இவ்விருவரும் தீர்ப்பு சொல்லும் இடத்தில் அமர்ந்த்திருக்க இவர்களின் கருத்து வேறுபாடு போட்டியில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், குழப்பத்தையும் பற்றிய படம் தான் இது. 



மதியம் 12 மணி
Mundaspatti / Dir.:Ram / Tamil|2014|133'| TC
புகைப்படம் எடுத் துக்கொண்டால் நோய்வாய்ப்பட்டு இறந்துபோவது உறுதி என்று நம்புகிறார் கள் முண்டாசுப்பட்டி கிராமத்து மக்கள். ஆங்கிலேய ஆட்சியின்போது அந்தக் கிராமத்தில் நடந்த ஒரு அசம்பாவிதம்தான் இந்த நம்பிக்கைக்குக் காரணம். விளைவு அந்தக் கிராமத்தில் கேமராவைக் கண்டாலே தலை தெறிக்க ஓடுகிறார்கள். 




உயிரோடு இருப்பவர்களைப் படம் பிடிக்கக் கூடாது என்பதால் இறந்த பிறகு பிணத்தை அலங்கரித்து புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது அவர்கள் வழக்கம். அந்தக் கிராமத்தின் தலைவர் இறந்துபோக, அவரது பிணத்தைப் புகைப்படம் எடுக்க ஹாலிவுட் ஃபோட்டோ ஸ்டுடியோவின் உரிமையாளர் கோபியையும் (விஷ்ணு) அவன் உதவியாளரையும் (காளி வெங்கட்) அழைக்கிறார்கள். ஊர்த் தலைவர் உயிர் போகாமல் இழுத்துக்கொண்டிருக்க, அவர் இறக் கும்வரை அங்கேயே தங்கியிருந்து புகைப்படம் எடுத்துத் தரும் படி ஊர்க்காரர்கள் வேண்டிக்கொள் கிறார்கள். கலைவாணியும் அந்த வீட்டில் தான் இருக்கிறாள். அந்த ஊரிலேயே தங்கும் கோபி, கலைவாணியிடம் தன் காதலைச் சொல்கிறான். அவளுக்கும் அவனைப் பிடிக்கிறது. ஆனால் அவ ளுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி விட்டது. 



ஊர்த் தலைவர் இறந்ததும் அவர் பூத உடலைப் புகைப்படம் எடுத்துவிட்டு ஸ்டுடியோவுக்குத் திரும்புகிறான் கோபி. ஆனால் எடுத்த புகைப்படம் சரியாக விழவில்லை. அதற்குப் பதிலாக ஒரு தந்திரம் செய்கிறான். ஆனால் குட்டுவெளிப்பட்டு மாட்டிக் கொள்கிறான். ஊர்க்காரர்களின் கோபத்திற்கு ஆளாகி தண்டனை பெறும் கோபியும் அவன் நண்பர்களும் எப்படித் தப்பினார்கள், கோபியின் காதல் என்ன ஆயிற்று என்பதுதான் மீதிக் கதை. 



மதியம் 3 மணி
Thegidi / Dir.: P. Ramesh / Tamil|2014|126'| TC
கிரிமினாலஜி படித்த வெற்றிக்கு (அசோக் செல்வன்) தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஒரு நபரைப் பற்றிய தகவல்களைத் திரட்டும்படி இவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது உள்படப் பல நிபந்தனைகளுடன் வெற்றி களத்தில் இறக்கப்படுகிறான். 



குறிப்பிட்ட நபர் யார், அவர் என்ன வேலை செய்கிறார், அவர் பொழுதுபோக்கு, குடும்பப் பின்னணி, நடமாட்டங்கள் எனப் பல தகவல்களை யும் திரட்டிக் கொடுக்கிறான். நிறுவனம் பாராட்டுகிறது. மேலும் சில அசைன்மென்ட்கள் கொடுக்கப்படுகின்றன. ஒரு அசைன்மென்டின் போது அவன் சந்தேகத்துக்குரிய முறையில் மது (ஜனனி) என்னும் பெண்ணின் கண்ணில் பட்டுவிடுகிறான். அவளைப் பார்த்ததும் பிடித்துப் போவதால் அவளிடம் தன்னைப் பற்றிய தப்பபிப்ராயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெடுகிறான். 



எதிர்பாராத திருப்பமாக அவளையே வேவு பார்க்கச் சொல்லி நிறுவனம் உத்தரவிடுகிற்து. வெற்றி வேலையை ஆரம்பிக்கிறான். ஆனால் பணியின் நிபந்தனையை மீறி அவளோடு பழகி நெருக்கமாகிறான். இதை எப்படிச் சமாளிப்பது என்று கவலைப்படும் நேரத்தில் அதைவிடவும் பெரிய பிரச்சினையை அவன் எதிர்கொள்ள நேர்கிறது. 



அடுத்தடுத்து விழும் கொலைகளும் அவற்றின் பின்னணியும் வெற்றியைச் சிக்கலில் மாட்டிவிடுகின்றன. தன் காதலியின் உயிருக்கு ஆபத்து என்பதும் தெரியவருகிறது. தன்னையும் காப்பாற்றிக்கொண்டு காதலியையும் காப்பாற்றிக் கொலைகளின் மர்மத்தையும் கண்டுபிடிக்க அவன் போராடுகிறான். 


நன்றி - த இந்து

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் | 18.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை


சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை உட்லண்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை. மாலை 6.15 மணிக்கு துவக்க விழா நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து In the Name of My Daughter திரைப்படம் திரையிடப்படவுள்ளது. 



காலை 10 மணி
Brotherhood of Tears/France/Jean Baptiste Andrea /95’/2014 

 
முன்னாள் துப்பறியும் நிபுணர் காப்ரியல் செவாலியரின் வழியாகத்தான் இப்படத்தின் கதை சொல்லப்படுகிறது. 



சூதாட்டத்தில் வைத்த கடன்கள் தொடர்ந்து தோல்வி எண்ணங்களை தோற்றுவிக்க அவர் தொடர்ந்து போதையில் சிக்குகிறார். தவிர, அவருடைய பதின்ம வயது மகளும் இவருக்கு நிறைய தொல்லை தருகிறாள். ஒரு நடைப்பிணம் போல வாழும் அவர் நெருக்கடியான சூழலைக் கடக்க ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் கூட போதும் என்று நினைக்கிறார். 



இந்த நேரத்தில்தான் அவரைத் தேடி ஒரு வாய்ப்பு வருகிறது. அது நல்லதா கெட்டதா என்பதை படத்தின் பின்பாதி நமக்கு கூறுகிறது. ஒரு பூங்காவில் காத்திருக்கும் அவரைத்தேடி வரும் ஒரு வயதான மனிதர் இவர் செய்யவேண்டிய வேலை பற்றி கூறுகிறார். தொடர்ந்து அவர் கூறிய அலுவலகத்திற்கு இவர் செல்கிறார். ஒரு ஆள் கூட வேலை செய்யாத அலுவலகம் அது. ஒரு மாதிரிய சூன்யமாக இருப்பதை உணர்கிறார். ஒரு கறுப்பு சூட்கேஸ் அவரிடம் கொண்டுவந்து கொடுக்கப்படுகிறது. 



அப்போது அவருக்கு ஒரு அறிவுறுத்தல், இந்த சூட்கேஸை எக்காரணத்தைக்கொண்டும் எப்பொழுதும் எதற்காகவும் திறந்துபார்க்கக்கூடாது. அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று சூட்கேஸை கொடுத்துவிட்டு வரவேண்டும். காப்ரியல் துணிச்சலோடு அவர்கள் சொன்ன இடத்திற்கு கிளம்புகிறார், அங்கு இருக்கும் ஆபத்தை உணராமல். ஜெராமி ரேனியரின் நடிப்பில் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். 



மதியம் 12 மணி
Flapping in the middle of nowhere / Dap Canh Giua Khong Trung / Diep Hoang Nguyen / Vietnam / 2014 99' 

 
ஹூயென், டுங் என்ற இரண்டு ஆண்-பெண் விடலைகள், இதில் பெண் விடலை கல்லூரி மாணவி. ஆண் - வேலை செய்து கொண்டிருக்கிறான். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினரை விட்டு வெகுதொலைவில் ஹனாயில் வசிக்கின்றனர். போதுமான அளவுக்கு தவிர இவர்களிடம் பணம் இல்லை. இவர்கள் பொதுவாக அலட்சிய மனோபாவம் கொண்டவர்கள். டுங்கிற்கு உடலுறவு கொள்வதில் ஆர்வம் அதிகம். இதன் விளைவாக ஹூயென் கருத்தரிக்கிறாள். ஆனால் கருவைச் சுமக்க அவள் விரும்பவில்லை. டுங் அவள் எதுகூறினாலும் அதற்கு உடன்பாடாகவே இருந்தான். ஆனால் கருக்கலைப்புக்கு அவர்களிடம் பணம் ஏது? 





மதியம் 3 மணி
The Dark Valley /Austria/Andreas Prochaska/114’/2014
19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஒரு குளிர்காலம். மேற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குச் செல்லும் ரகசிய வழியில் கிரீடர் எனும் ஒரு தனியாள் குதிரையில் செல்கிறான். ஆள்நடமாட்டம் அற்ற பள்ளத்தாக்குகளின் வழியே சென்று மலையுச்சியிலிருக்கும் ஒரு ஊரை அடைகிறான். அங்கு ஒரு விதவையின் வீட்டில் தங்குகிறான். அவளுடைய மகள் கவனித்துக்கொள்கிறாள். தன்னை ஒரு புகைப்படக் கலைஞன் என்று கூறிக்கொண்டு மலைச்சூழலை படம்பிடித்துவருகிறான். 



ஆனால் அவன் இருப்பது யாருக்கும் பிடிக்கவில்லை. முக்கியமாக அந்த ஊர் தலைவனுக்கும் அவன் மகன்களுக்கும் இவனைப் பிடிக்க வில்லை. இவன் வந்தபிறகுதான் ஊர்த்தலைவனின் மகன்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். அடக்குமுறைக்கு ஆளான மக்களின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ள கிரீடர் அதற்குக் காரணமானவர்களைக் கொல்வதற்காகவே வந்திருக்கிறான் என்பது மெல்லமெல்ல மற்றவர்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்போது கிட்டத்தட்ட இவன் பலபேரை கொன்றுமுடிக்கிறான். 87வது ஆஸ்கர் அகாதெமி விருதுக்காக சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. 



மாலை 6.15 மணிக்கு துவக்க விழா நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து In the Name of My Daughter திரைப்படம் திரையிடப்படவுள்ளது/ 



In the Name of My Daughter/France/Andre Techine/116’/2014 

 
பிரென்ச் ரிவேராவில் உள்ள நீஸ் எனும் நகரில் உள்ள நட்சத்திர விடுதியின் உரிமையாளர் மேடம் ரேணி லீ ரோக்ஸ். அவளின் மகள் ஏக்னஸ் காணாமல் போனதாக தொடுக்கப்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கை மீண்டும் கொண்டுவருகிறாள். தன் மகள் கொலைசெய்யப்பட்டதாகவும் அதைச் செய்தது வழக்கறிஞர் மௌரீயஸ்தான் எனவும் புகார் தெரிவிக்கிறாள். கதை1976-க்குப் பின்னோக்கிச் செல்கிறது. 



அப்போது நட்சத்திர விடுதியின் கேஸினோ இறங்குமுகத்தில் இருந்தது. அங்கு வந்துபோய்க்கொண்டிருந்த வழக்குரைஞர் மௌரீயஸ் அதை எப்படியாவது கைப்பற்ற நினைக்கிறான். கேஸினோ உரிமையாளர் ரேணியின் மகள் ஏக்னஸுடன் நெருங்கிப் பழகுகிறான். அவளும் இவன் காதல் வலையில் விழுகிறாள். இத்தனைக்கும் அவன் நிறைய பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவன். 



பின்னர் உள்ளூர் மாஃபியா ரௌடி ஃப்ரேட்டினியின் துணையை நாடுகிறான். தாய்க்கும் மகளுக்கும் அவன் சண்டைமூட்டிவிடுகிறான். சிலநாட்களில் ஏக்னஸ் காணாமல் போகிறாள். ஏக்னஸ் லீ ரோக்ஸ் என்பவளின் உண்மைக் கதைதான் இங்கு சுருக்கமான உளவியல் ரீதியான திரைப்படமாகியுள்ளது. ரேணி எழுதிய புத்தகத்திலிருந்து இப்படத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்னதும் இப்படத்தின் இயக்கத்தில் ரேணியின் இளைய மகன் துணைநின்றதும் முக்கியமான விஷயங்கள். 

thanx - the hindu

சென்னை சர்வதேச பட விழா | ஐநாக்ஸ் | 19.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

Marussia
Marussia
சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை. 



காலை 10 மணி
Marussia/France/Russia/Natalia Saracco/82’/2014
கிழக்கு ஐரோப்பாவிலிருந்து எண்ணற்ற மக்கள் பாரீஸ் போன்ற நகரங்களுக்கு வந்துகொண்டேயிருக்கின்றனர். அங்குள்ள தங்கள் நிலங்களை விட்டுவிட்டு இங்கு வருவதற்குக் காரணம் அங்கு இனி எதிர்காலம் இல்லை என்பதுதான். லூசியாவும் அவளது சிறிய மகள் மாருஷ்யாவும் ரஷ்யாவிலிருந்து வெளியேறியவர்கள். அவர்கள் தெருக்களில் உறங்கி நாடோடிகளாக பிரான்ஸை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 



பல நேரங்களில் திக்கற்ற அவர்களின் சூட்கேஸ்கள் பரிசோதிக்கப்படுகின்றன. கட்டுப்பாடுகள் மிக்க ரஷ்ய மதகுரு ஒருவர் இவர்களுக்கு முதன்முதலாக தங்குவதற்கு இடம் தர முன்வருகிறார். அதேபோல இரண்டாவது நாள் ஒரு வீடற்றவர்களுக்தான தங்குமிடத்தில் தங்குகின்றனர். இப்படி அடுத்தடுத்து சினிமா தியேட்டரில், கட்சி ஆபீசில், இன்னொருநாள் ஒரு நடிகையோடு பெரிய ஓட்டலில் என தங்குகின்றனர். ரஷ்யாவிலிருந்து பிரான்ஸ்சுக்கு செல்லும் இவர்களின் பயணத்தைப் பேச இப்படம், பயணங்கள், இடைவெளிகள் குறித்து நிறைய அர்த்தங்களை உணர்த்துகிறது. 



மதியம் 12 மணி
Life in Fish Bowl / Zophoniassiolceland/Attila Szasz /130’/2014
நெருக்கடிக்கு முந்தைய ஐஸ்லாந்து நாட்டில் ஒரு சிறிய குடும்பத்தை வைத்து அந்த நாட்டின் பொருளாதார அரசியல் நிலைகளையும் ஆழமாக பேசியுள்ள படம். அப்பா அம்மாவால் வெறுக்கப்பட்ட ஒரு பெண் தனது குழந்தைக்காக நர்சரி வேலையைத் தவிர மற்ற நேரங்களில் செக்ஸ் வொர்க்கராகவும் சென்று பணம் சம்பாதிக்கிறாள். 



அவளுக்குப் பிறந்த மகன் ஓர் எழுத்தாளனாக மாறுகிறான். அவன் செய்துகொண்ட திருமணம் அவனுக்கு நிம்மதியைத் தராமல் சிக்கலைத்தான் தருகிறது. தன்னுடைய மகள் இறந்தபிறகு மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறான் அந்த எழுத்தாளன். ஒரு முன்னாள் கால்பந்து விளையாட்டு வீராங்கனையான அவனது மனைவி; உலக வங்கிகளில் உயர்ந்துகொண்டே போகிறது அவளது பொருளாதாரம். 



அவனோ வெளி உலகிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டு குடியில் மூழ்கிவிடுகிறான். 20 வருடங்களாக இருந்த அவன் இதேநிலையிலிருந்து இறந்தும்போகிறான். பிரமாண்டம், உணர்ச்சிப்பூர்வம், அழகியல் என எதிலும் குறையின்றி வெளிவந்துள்ள படம். 



மதியம் 3 மணி
The Moveable Feast / Zone pro site / Chen Yu-Hsun Taiwan / 2013 / 148'
தைவானின் உள்நாட்டு சுவையுணர்வுப் பண்பாட்டைப்பேசும் இந்தக் கதையை வெளிப்புற சுவைவிருந்து ஒன்று சிறப்பாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை வேளாண்மை யுகத்தில் தடம் காண முடியும். அந்தக் காலத்தில் உணவு விடுதிகள் குறைவு. எனவே திருமண வரவேற்பு, விருந்து போன்ற நிகழ்ச்சிகள் வெளி இடங்களிலோ டென்ட் போன்ற முகாம்களிலோதான் நடைபெறும். சாதாரண அடுப்புகள் மற்றும் நீளமான மேஜைகள் ஆகியவற்றுடன் விருந்து சமையல் நடைபெறும். ஒவ்வொரு உணவும் அந்த இடத்திலேயே உடனுக்குடன் தயாரிக்கப்படுவதே. 



சமையல் நடைமுறைகளை, என்ன சமைப்பது போன்றவற்றை முடிவு செய்பவர் தைவானிய மொழியில் ஸோன் ப்ரோ சைட் என்று அழைக்கப்படுவார்.அப்படிப்பட்ட விருந்துக்கு வரும் தலைமைச் சமையலாளி தனது பண்ட பாத்திரங்களுடன் வருவார். ஆனால் விதவிதமான உணவு வகைகளுடன் அவரது படைப்பாற்றலை அவர் காண்பிக்க வேண்டும். அந்த விருந்து எதற்காக நடத்தப்படுகிறதோ அதனை மையமாகக் கொண்டு வித்தியாசமான உணவுகளை சமைக்க வேண்டும். 



என்ன சமையல் பொருட்கள் கொடுத்தாலும் அவர் அந்த விருந்தின் காரணத்திற்கேற்ப வித்தியாசமான உணவு வகைகளை அவர் சமைத்தால்தான் அவரது படைப்பாற்றல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். விருந்து கொடுப்பவரும், விருந்தாளிகள் அனைவரும் முழுதும் அந்த உணவு வகைகளை நன்கு ருசித்து சாப்பிடவேண்டும் என்பதே சவால். சமையலைக் குறைகூறியே பழக்கப்பட்டவர்கள் கூட புகழ்ந்து விட்டால் அவரை ஒரு சிறந்த சமையல் காராராக ஏற்றுக்கொள்ளப்படுவார். இந்தப் படம் அத்தகைய சமையல்காரரைப் பற்றியும் தைவானிய பண்பாட்டையும் பேசுகிறது.
மாலை 5 மணி
Consequences / Silsile Ozan Aciktan / Turkey / 2014 / 106'
ஒரு கடும் கோடை இரவில் எசி என்பவர் சென்க் என்பவரின் இடத்திற்குச் செல்கிறார். ஏதோ நீண்ட நாட்களுக்கு இருவரும் பிரிந்திருந்தது போல் உணர்கின்றனர். அப்போது திடீரென ஒரு 14 வயதுள்ள கள்வன் வீட்டிற்குள் வருகிறான். அவன் பெயர் கிலிச். ஆனால் இவன் எப்படியோ குடியிருப்பிலிருந்து தப்பிச் செல்கிறான். 



சிறிது நேரத்தில் இன்னொரு கள்வன் இருட்டிலிருந்து வருகிறான். எசி அவனை கடுமையான பொருள் ஒன்றினால் தற்காப்பிற்காக தாக்குகிறார். டெய்ஃபன் என்ற அந்தக் கள்வன் பயங்கர ரத்தத்துடன் தரையில் சாய்கிறான்.
சென்க் என்ன கூறுகிறார் என்றால் டெய்ஃபன் என்ற அந்தக் கள்வனுக்கு நேர்ந்த கதிகுறித்து தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி எசியை வெளியே அனுப்பி விட்டு தனது சிறந்த நண்பரான ஃபரூக்கை உதவிக்கு அழைக்கிறாள் சென்க். 



ஃபரூக்கும் அவரது வழக்கறிஞர் மெர்வ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். ஃபரூக்கும், எசியும் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்டவர்கள் என்று தெரிகிறது. பரூக்கும் சென்க்கும் வர்த்தகக் கூட்டாளிகள். சென்க் அப்போதுதான் பட்டப்படிப்பை முடித்து விட்டு அமெரிக்காவிலிருந்து வந்து தனது புரோஜக்டில் பணி செய்ய தொடங்கியிருக்கிறார். 



இதனிடையே முதலில் வீட்டில் திருடனாக நுழைந்து தப்பிச் சென்ற கிலிச், எசியை ஒரு காரில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்கிறான். காரணம், எசி முதலில் கொலை செய்த டெய்ஃபன் என்ற திருடன் கிலிச்சின் சகோதரன். இதன் பிறகு சங்கிலித் தொடராக நிகழ்வுகள் அடுத்தடுத்து ஏற்படுகிறது. சிக்கலான நகர்ப்புற வாழ்வியல் உறவுகள் சொல்லப்படுகிறது. தொடர் நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றங்கள் சென்க், பரூக், எசி ஆகியோரது வாழ்க்கையை நிலையாக மாற்றுகிறது.
மாலை 7.15 மணி 



Hadji Sha/Iran/Zamani Esmati /97’/2014
ஹாஜ்ஜி ஷா ஐம்பது வயதுப் பெண்மணி. அவள் கடந்த 30 வருடங்களாக தன்னை ஒரு ஆணைப் போலவே நினைத்துக்கொண்டு தன்னுடைய தங்கையின் குடும்பத்தை காப்பாற்றி வருபவள். அவளுடைய வீட்டுக்கு புதியதாக குடிவரும் பாடகி ஒருத்தி தான் பாடிய பாடல்களை வெளியிடவேண்டும் என்பது அவளது ஆசை. அவர்கள் இருவரும் நல்ல தோழிகளாக இருக்கிறார்கள். 



இருவரும் பெண் என்ற அடையாளம் எவ்வளவு மோசடியானது என்பதை சிந்திக்கிறார்கள். ஆண் சமூகத்தின் அடிமைத்தளையில் சிக்குண்ட பெண்இருப்பை இருவரும் பேசிக்கொள்கிறார்கள். 



ஹாஜ்ஜி தன்னைச்சுற்றியுள்ள எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனிக்கக் கூடியவள். தன்னுடைய தங்கைக்கு வாய்த்த மருமகன் எவ்வளவு கேவலமானவன் என்பதை அவன் வரும்போதே உணர்ந்துவிட்டவன். 



இந்தக் குடும்பத்தின் நிலையை மாற்ற விரும்பி போராடாதவனாக அதில் சுகம்காணுபவனாக அவன் இருப்பதை உணர்கிறாள். தங்கையின் உடல்குறைபாடு கொண்ட பேத்தி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட விஷயம் அவளுக்குத் தெரியவரும்போது எல்லையற்ற கோபத்திற்கு தள்ளப்படுகிறாள். 


thanx - the hindu