Friday, January 30, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 30/1/ 2015 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

இசை,டூரிங் டாக்கீஸ்,பொங்கி எழு மனோகரா,கில்லாடி,தரணி.புலன் விசாரணை 2,மண்டோதரி,7th son#30 1 15 ரிலீஸ்

 1 ‘புலன்விசாரணை 2'  -   திருட்டு விசிடி, டிவிடிக்கள் தடுக்கும் புதிய முறை பற்றி இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியது:இப்ராகிம் ராவுத்தர் தயாரித்துள்ள படம் ‘புலன்விசாரணை 2'‘. பிரசாந்த், கார்த்திகா ஜோடி. வரும் 29ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இதன் திருட்டு டிவிடி வெளிவராமல் இருக்க பாதுகாப்பு தரும்படி தமிழக போலீஸ் அதிகாரி, அரசு செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆம்னி பஸ்களில் படங்கள் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டோம். அதை ஏற்று ஆம்னி பஸ் அதிபர்களை போலீசார் அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர். திருட்டு டிவிடியை தயாரிப்பவர்கள் புதுச்சேரியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கேட்டு புதுவை முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளோம். இதற்கிடையில் படங்களை திருட்டு விசிடி எடுப்பதை கண்டறிய இரண்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை புலன்விசாரணை 2ம் பாகம் படம் மூலம் இணைத்திருக்கிறோம். எந்த தியேட்டரிலிருந்து டிவிடி தயாரிக்கப்படுகிறது என்பது அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் கோட் நம்பர் மூலம் பதிவாகிவிடும். அடுத்து எந்த இடத்தில் அதை பிரதிகள் எடுக்கிறார்கள், எந்த இடத்தில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்பதும் பதிவாகிவிடும். இதன் மூலம் எளிதில் குற்றவாளியை கண்டுபிடித்துவிடலாம். இந்த முயற்சிக்காக இப்படம் வெளிநாட்டு உரிமை கொடுக்காமல் தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் கோர்ட் மூலம் அணுகி திருட்டு விசிடி பார்ப்பது குற்றம் என்ற உத்தரவையும் பெற உள்ளோம்.இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார். அ.செ.இப்ராகிம் ராவுத்தர், இயக்குனர்கள் லியாகத் அலிகான், சண்முகசுந்தரம் உடனிருந்தனர்.

291 15  ல்  ரிலீஸான


புலன் விசாரணை பாகம் 2 - சினிமா விமர்சனம்




2  இசை - 
இந்தா ரிலீஸ், அந்தா ரிலீஸ் என தள்ளிக்கொண்டே வந்த ‘இசை’ படத்தை வரும் ஜன-3௦ல் வெளியிட தீர்மானித்துவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. இன்னொரு பக்கம் ஜன-29ஆம் தேதி வெளியாகவிருந்த அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிப்போனது வேறு எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது.

இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றிபெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்போது ‘இசை’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். படமும் இரண்டு  இசையமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட கதை தான். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் இருவரும் இசையமைப்பாளர்களாக நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் சாவித்ரி நடித்துள்ளார்.


திருட்டு விசிடி, டிவிடிக்கள் தடுக்கும் புதிய முறை பற்றி இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியது:இப்ராகிம் ராவுத்தர் தயாரித்துள்ள படம் ‘புலன்விசாரணை 2'‘. பிரசாந்த், கார்த்திகா ஜோடி. வரும் 29ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இதன் திருட்டு டிவிடி வெளிவராமல் இருக்க பாதுகாப்பு தரும்படி தமிழக போலீஸ் அதிகாரி, அரசு செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆம்னி பஸ்களில் படங்கள் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டோம். அதை ஏற்று ஆம்னி பஸ் அதிபர்களை போலீசார் அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர். திருட்டு டிவிடியை தயாரிப்பவர்கள் புதுச்சேரியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கேட்டு புதுவை முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளோம். இதற்கிடையில் படங்களை திருட்டு விசிடி எடுப்பதை கண்டறிய இரண்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை புலன்விசாரணை 2ம் பாகம் படம் மூலம் இணைத்திருக்கிறோம். எந்த தியேட்டரிலிருந்து டிவிடி தயாரிக்கப்படுகிறது என்பது அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் கோட் நம்பர் மூலம் பதிவாகிவிடும். அடுத்து எந்த இடத்தில் அதை பிரதிகள் எடுக்கிறார்கள், எந்த இடத்தில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்பதும் பதிவாகிவிடும். இதன் மூலம் எளிதில் குற்றவாளியை கண்டுபிடித்துவிடலாம். இந்த முயற்சிக்காக இப்படம் வெளிநாட்டு உரிமை கொடுக்காமல் தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் கோர்ட் மூலம் அணுகி திருட்டு விசிடி பார்ப்பது குற்றம் என்ற உத்தரவையும் பெற உள்ளோம்.இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார். அ.செ.இப்ராகிம் ராவுத்தர், இயக்குனர்கள் லியாகத் அலிகான், சண்முகசுந்தரம் உடனிருந்தனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=15282&id1=3#sthash.AmX1VeQ7.dpuf
திருட்டு விசிடி, டிவிடிக்கள் தடுக்கும் புதிய முறை பற்றி இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியது:இப்ராகிம் ராவுத்தர் தயாரித்துள்ள படம் ‘புலன்விசாரணை 2'‘. பிரசாந்த், கார்த்திகா ஜோடி. வரும் 29ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இதன் திருட்டு டிவிடி வெளிவராமல் இருக்க பாதுகாப்பு தரும்படி தமிழக போலீஸ் அதிகாரி, அரசு செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆம்னி பஸ்களில் படங்கள் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டோம். அதை ஏற்று ஆம்னி பஸ் அதிபர்களை போலீசார் அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர். திருட்டு டிவிடியை தயாரிப்பவர்கள் புதுச்சேரியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கேட்டு புதுவை முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளோம். இதற்கிடையில் படங்களை திருட்டு விசிடி எடுப்பதை கண்டறிய இரண்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை புலன்விசாரணை 2ம் பாகம் படம் மூலம் இணைத்திருக்கிறோம். எந்த தியேட்டரிலிருந்து டிவிடி தயாரிக்கப்படுகிறது என்பது அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் கோட் நம்பர் மூலம் பதிவாகிவிடும். அடுத்து எந்த இடத்தில் அதை பிரதிகள் எடுக்கிறார்கள், எந்த இடத்தில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்பதும் பதிவாகிவிடும். இதன் மூலம் எளிதில் குற்றவாளியை கண்டுபிடித்துவிடலாம். இந்த முயற்சிக்காக இப்படம் வெளிநாட்டு உரிமை கொடுக்காமல் தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் கோர்ட் மூலம் அணுகி திருட்டு விசிடி பார்ப்பது குற்றம் என்ற உத்தரவையும் பெற உள்ளோம்.இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார். அ.செ.இப்ராகிம் ராவுத்தர், இயக்குனர்கள் லியாகத் அலிகான், சண்முகசுந்தரம் உடனிருந்தனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=15282&id1=3#sthash.AmX1VeQ7.dpuf

3  டூரிங் டாக்கீஸ்
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்துள்ள படம் டூரிங் டாக்கீஸ்.
இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், எஸ் ஏ சந்திரசேகரனுடன், அபி சரவணன், பாப்ரி கோஷ், ஹேமமாலினி, அஸ்வின், காயத்ரி, ரோபோ சங்கர், ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு 75 வயது இளைஞனின் சுவாரஸ்யமான சேட்டைகள்தான் டூரிங் டாக்கீஸ் திரைப்படம் என்றார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன்.
இப்படம் நாளை ரிலீசாக உள்ளது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி டூரிங் டாக்கீஸ் படத்தை இசையமைப்பளர் விஜய் ஆண்டனிக்கு போட்டு காட்டியிருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன். படத்தை பார்த்து முடித்ததும் எதுவும் பேசாமல் சென்று விட்டாராம் விஜய் ஆண்டனி. காரணம் படத்தில் வரும் ஒரு பெண் கேரக்டர் விஜய் ஆண்டனிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாம்.
இதனால் அன்று இரவு அவருக்கு தூக்கமே வரவில்லையாம். இரவு முழுக்க மனைவி தோளில் சாந்தபடியே இருந்தாராம். மறுநாள் எஸ் ஏ சந்திரசேகரனுக்கு போன் செய்து அவருடைய அலுவலகத்துக்கு சென்றதும் டூரிங் டாக்கீஸ் படம் தன்னை மிகவும் பாதித்து விட்டது என்று கூறி அழுதே விட்டாராம்.



4   பொங்கி எழு மனோகரா’


‘‘1995 காலகட்டத்தில் 23 நாட்களில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்த நிஜசம்பங்கள் தான் ‘பொங்கி எழு மனோகரா’ படத்தின் கதை’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் ரமேஷ் ரங்கசாமி. அந்த நிஜ மனிதன் வேறு யாருமல்ல; படத்தின் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி தான்!
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்ற இவர் முதன் முதலாக இயக்கியுள்ள படம் ‘பொங்கி எழு மனோகரா’. இப்படத்தில் கதையின் நாயகனாக ‘ரூ’ படம் மற்றும் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்த இர்ஃபான் நடித்துள்ளார். கதாநாயகிகளாக புதுமுகங்கள் அருந்ததி நாயர், அர்ச்சனா நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கேரக்டர் ஒன்றில் இயக்குனர் சிங்கம் புலியும் நடித்துள்ளார்.
“இந்த படத்தில் இர்பானும் – சிங்கம் புலியும் படம் முழுக்க நகைச்சுவை கடை விரித்திருக்கிறார்கள். படம் முடிந்ததும் திரையரங்கை விட்டு வெளியே வரும் ரசிகர்கள் கனத்த இதயத்துடனேயே வெளியே வருவார்கள் அப்படியொரு நெஞ்சை பிழியும் இறுதிக் காட்சி இந்த படத்தில் உள்ளது” என்கிறார் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி.
“98 சதவிகிதம் காமெடி, 2 சதவிகிதம் சீரியஸ் என்ற வகையில் இப்படம் இருக்கும்” என்கிறார் அவர்.
‘பேனியன்’ என்ற பட நிறுவனம் சார்பில் பரந்தாமன் தயாரித்துள்ள இப்படம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் படமாகியுள்ளது.
இப்படத்திற்கு சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்க, கண்ணன் இசை அமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் மாத வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.


5  கில்லாடி. 


பரத், நிலா ஜோடியாக நடிக்க ஏ.வெங்கடேஷ் இயக்கிய படம் கில்லாடி.
தயாரிப்பாளர் சந்திரசேகரன். இசை ஸ்ரீகாந்த் தேவா. கடந்த 2006ம் ஆண்டு இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. பூஜை போட்ட கையோடு வேகமாக படப்பிடிப்பையும் தொடங்கினர். கிட்டத்தட்ட முக்கால்வாசிப் படத்தை முடித்தும் விட்டார்கள். படத்தின் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் தயாரித்த பிப்.14, சுள்ளான், சபரி படங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டதால், கில்லாடி பைனான்ஸ் சிக்கலில் மாட்டி, பாதியில் நின்றது.
பரத் பலமுறை கால்ஷீட் கொடுத்தும் படம் முன்நகரவில்லை. ஒரு கட்டத்தில் பரத், நிலா, ஏ.வெங்கடேஷ் என அனைவரும் ஒத்துழைப்பு தர படத்தை 2013ம் ஆண்டு எடுத்து முடித்தனர். இதனால் படம் விரைவிலேயே ரிலீஸாகலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதுதான் இல்லை. இடையில் பலமுறை படம் ரிலீஸ் குறித்து பத்திரிகைகளில் அவ்வப்போது விளம்பரம் செய்ததோடு சரி, படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் கில்லாடி படத்தை பல கஷ்டங்களை தாண்டி தற்போது வரும் 30ம் தேதி வெளியிடுவது என்பது உறுதியாகிவிட்டதாம். ‘கில்லாடி’ படத்தின் ரிலீஸ் குறித்து நாளேடுகளில் விளம்பரங்கள் மீண்டும் தென்படுகின்றன. ஆனால் இந்தமுறை ‘கில்லாடி’ வருவது உறுதி என்கிறார்கள். இப்படம் ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ளதாம்.



தரணி  -  மூன்று மனிதர்கள்.... மூன்று காலச்சூழல்கள்... இவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் மாற்றங்கள்- தரணி என்ற பெயரில் படமாக உருவாகிறது. இந்த பயணம் எங்கு சென்று எப்படி முடிகிறது என்பது புதிய பரிமாணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
படத்தின் ஒரு பகுதி தெருக்கூத்து கலைஞர்களைப் பற்றி வருகிறது. இதற்காக புகழ் பெற்ற தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப தம்பிரானின் மகன் புரிசை கண்ணப்ப சம்பத்தையும் அவரது குழுவினரையும் நடிக்க வைத்துள்ளனர். கூத்துப்பட்டறை குமரவேல் கதையில் கதை நாயகனாக வருகிறார்.
நெடுஞ்சாலை அரி, அறிமுக நாயகன் அஜய் கிருஷ்ணா ஆகியோரும் நாயகர்களாக வருகிறார்கள். இவர்கள் மூன்றுவித தோற்றங்களில் அதிசயக்க வைக்கிறார்கள். இவர்களுடன் வருணிகா, சாண்ட்ரா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை: என்.சோன், ஒளிப்பதிவு: ஆர்.பிரகாஷ், வினோத் காந்தி, பாடல்கள் கவிஞர் முத்துலிங்கம், பழனிபாரதி, புலவர் திருவேங்கடம். தரணி படத்தை எழுதி இயக்குபவர் குகன் சம்பந்தம். தயாரிப்பு: விஜி.எஸ்.நரேந்திரன்



7மண்டோதரி  


   ஏ.தக்ஷணாமூர்த்தி வழங்க மைல் ஸ்டோன் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ மண்டோதரி”.
இந்த படத்தில் கதை நாயகனாக பா.ரஞ்சித்குமார் அறிமுகமாககிறார். இவர் வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்தவர். நாயகியாகிகளாக தாரீனா, பிரியா நடிக்கிறார்கள். இன்னொரு நாயகனாக அமர் நடிக்கிறார். மற்றும பொன்னம்பலம், பாண்டு, விசென்ட்ராய்,நாகலட்சுமி, சுபா, திருவாரூர் கருத்திருமன், கமலகண்ணன், எழுமலை, தியாகராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் இயக்குனர் ஆர்.ஷம்பத் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். படத்தை எழுதி இயக்குபவர் ஆர்.ஷம்பத். இவர் யாரது என்ற திகில் படத்தை இயக்கி இருக்கிறார். டி.மகிபாலன் ஒளிப்பதிவு செய்கியார். படம் பற்றி இயக்குனர் ஆர்.ஷம்பத்திடம் கேட்டோம்…..
மருத்துவ கல்லூரி மாணவர்களின் அஜாக்கிரதையால் கிராமத்துப் பெண் மண்டோதரிக்கு ஏற்படும் அசம்பாவிதம். அந்த மாணவர்களின் வாழ்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பது தான் கதைக்களம். திகில் படமாக மண்டோதரி படம் உருவாகியுள்ளது. கேரளா, பாலக்காடு, குமுளி, சேலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்திருக்கிறது. விரைவில் திரைக்கு வர உள்ளது மண்டோதரி என்றார் இயக்குனர் ஆர்.ஷம்பத்.
 Seventh Son Poster.jpg

8 Seventh Son is a 2014 American and Canadian and British fantasy film based on the novel The Spook's Apprentice (titled The Last Apprentice: Revenge of the Witch in America). The story centers on Thomas Ward, a seventh son of a seventh son, and his adventures as the apprentice of the Spook. It is directed by Sergei Bodrov and stars Ben Barnes, Jeff Bridges, and Julianne Moore. It features music composed by Marco Beltrami, who replaced A. R. Rahman and Tuomas Kantelinen. After having the release date shifted numerous times, the film is scheduled to be released in the United States on February 6, 2015.


thanx -  மாலைமலர் தினமணி , அனைத்து  வெப் சைட்ஸ்

1 comments:

'பரிவை' சே.குமார் said...

இசை பார்க்கலாம்....
புலன் விசாரணை 2 வையும் பார்க்கலாம்.
மற்றவை..?