Showing posts with label ஈரோடு. Show all posts
Showing posts with label ஈரோடு. Show all posts

Friday, February 16, 2018

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (16/2/18) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

`நாச்சியார்'


  பெண் கெட்ட வார்த்தை பேசினால் அதை வைத்து தான் அவர் தைரியசாலி என்பதை காட்டலாம் என்பது போன்ற ஒரு தப்பான முன் உதாரணத்தை இயக்குநர் பாலா தன்னுடைய நாச்சியார் படமும் சொல்ல வருகிறாரா?


இயக்குனர் பாலா படம் என்றாலே கதையில் தொடங்கி பட ரிலீஸ் வரை அனைத்திலுமே சர்ச்சை தொடங்கிவிடும். இதற்கு நேற்று ரீலிசான பாலாவின் நாச்சியார் டீசரும் விதிவிலக்கல்ல. பாலா படம் என்றாலே அதில் "கவுச்சி" நெடி தூக்கலாகவே இருக்கும். இதை அவரின் எல்லா படத்திலும் மக்கள் உணர்ந்திருப்பார்கள். எதார்த்தத்தை காட்டினாலும், திரையில் பார்க்கும் போது அது பலருக்கு முகசுளிப்பையே தந்திருக்கிறது. தமிழ் சினிமா புரட்சியாளர், உழைக்கும் மக்களின் உண்மை வாழ்க்கையை செல்லுலாய்டு திரையில் காட்டுபவர் என்றெல்லாம் பாலா பாராட்டப் பெற்றிருந்தாலும், அவருக்கான தரத்திலிருந்து அவர் அடிக்கடி இறங்கி விடுவது யோசிக்க வைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அவருடைய படத்தில் இடம்பெறும் வசனங்களும், சரளமாக புரண்டோடும் கெட்ட வார்த்தைகளுமே. என்ன தான் நிதர்சனமாக இருந்தாலும் அதை ஏன் படம் முழுவதிலும் வைக்க வேண்டும் என்பது தான் கேள்வி

இயக்குநர் பாலாவின் `நாச்சியார்' திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று முதல்முறையாக பரபரப்பாக பேசப்படுகிறது. 52 நொடிகள் ஓடும் முன்னோட்ட காட்சியில் நாயகி ஜோதிகா பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தை ஒன்றை கூற, பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது நாச்சியார்.
காவல்துறை அதிகாரி நாச்சியார்
இளையராஜா இசையில் ஜி.வி பிரகாஷ், ஜோதிகா நடித்திருக்கும் திரைப்படம் நாச்சியார். இயக்குநர் பாலாவுக்கு நாச்சியார் 8வது திரைப்படம். இதில், நாச்சியார் என்ற காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் ஜோதிகா.
அவர் நடித்த முந்தைய திரைப்படமான மகளிர் மட்டும் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது நாச்சியர் திரைப்படத்தின் முன்னோட்டமே பெண்களை இழிவுடுத்தும் வகையில் உள்ளதாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது


இயக்குநர் பாலாவின் திரைப்படங்கள் எதார்த்த மனிதர்களையும், விளம்புநிலை மக்களின் வாழ்வியலையும் அழகாக பதிவு செய்யக்கூடியவை. 1999களில் வெளியான சேது என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் வலுவாக காலூன்றினார் பாலா. சேது படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.

படத்தின் முன்னோட்ட காட்சி கடந்த 15ஆம் தேதி யு டியூபில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை 28 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர். இதுவரை பாலா இயக்கிய திரைப்படங்களிலேயே அதிக கவனத்தை ஈர்த்த முன்னோட்டம் நாச்சியார் என்றே கூறலாம்.
இந்த முன்னோட்ட காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதற்கும், விவாத பொருளாக மாறியதற்கும் முக்கிய காரணம் ஜோதிகா பேசிய அந்த ஒற்றை வார்த்தை. ஒரு காட்சியில் காக்கி சட்டையில் வரும் ஜோதிகா எதிரே இருப்பவரை அறைந்துவிட்டு '****** பயலுக' என்று கூறியிருப்பார்.

நாச்சியார் பட முன்னோட்ட சர்ச்சை குறித்து மாதர் சங்க நிர்வாகி உ.வாசுகியிடம் கேட்டபோது, "ஒரு விஷயத்தில் நாம் ஆட்சேபணை தெரிவிப்பதற்குமுன், முழு திரைப்படத்தை பார்த்தபின்புதான் அந்த காட்சி அமைப்பு எந்த பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை கூற முடியும். ஆனால் நாச்சியார் விஷயத்தில் அவ்வாறு முழுப்படம் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை" என்றார்.
எதார்த்தம் என்ற பெயரில் பெண்களை இழிவுப்படுத்தும் எந்தவொரு சொல்லையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர், ஓர் ஆண் ஒழுக்கம் தவறும்போது இதுபோன்ற எந்தவொரு இழி சொல்லும் பயன்படுத்தப்படுவது இல்லையென்றும், இந்த சமூகமே பெண்களை வலுக்காட்டாயமாக ஒரு முறைக்குள் தள்ளிவிட்டு தற்போது பெண்களை இழிவுப்படுத்தும் அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

விளம்பர யுக்திக்காக பாலா இந்த சொல்லை இதில் பயன்படுத்தியுள்ளார் என்றும், இதைவிட கொச்சையான சொற்களை கதாநாயகர்கள் வசனமாக பேசியுள்ள போதும் ஜோதிகா என்ற ஒரு பெண், பெண்ணை இழிவுப்படுத்தும் சொல்லை பேசியிருப்பதால் இப்பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பாக பேசப்படுகிறது என்றும் வாசுகி தெரிவித்தார்.
மேலும், இயக்குநர் பாலா அவருடைய படங்களின் மூலமாக ஆர்வத்தை தூண்டலாம் அல்லது காட்சி அமைப்புகள் மூலமாக தூண்டலாம். ஆனால் ஜோதிகாவை இப்படி பேச வைத்து விளம்பரம் தேடுவது சரியான யுக்தியில்லை என்றார்.


ஈரோடு ஆனூர் , மகாராஜா ,  விஎஸ்பி ரிலீஸ்
ஜோதிகாவை கொச்சை வார்த்தை பேச வைத்து விளம்பரம் தேடுகிறாரா பாலா?: சர்ச்சையில் நாச்சியார்


2   வீரா

ரஜினி படத்தின் பெயர்களுக்கு தமிழில் செம டிமாண்ட். இப்போது வீரா என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. 

 
 
இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க, கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா மேனன் மலையாளத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தவர்.
 
வீரா பற்றி பேசிய அவர், வீரா படத்தில் வடசென்னை பெண்ணாக சென்னை தமிழ் பேசி நடித்ததாக கூறினார். 
 
சில மலையாள நடிகைகள் போலின்றி, பாடல் காட்சிகளில் தாராளம் கவர்ச்சி காட்டியிருக்கிறார். அதன் காரணமாக வீராவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தெலுங்கிலும் ஐஸ்வர்யா மேனனுக்கு ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது

veera_film

‘யாமிருக்க பயமேன் ’படத்தில் அசோஷியேட் டைரக்டராகப் பணி புரிந்த ராஜாராமன் இயக்கியுள்ள படம் வீரா. நடிகர்கள் கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணாகரன், தம்பிராமய்யா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் ராஜாராமன் கூறுகையில், 'வேண்டும் என்றே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீரா படத் டைட்டிலை  நாங்கள் பயன்படுத்தவில்லை. உண்மையில்,  இந்தப் படத்துக்கும் அதன் டைட்டிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அரசியல்வாதி மற்றும் கேங்ஸ்டர் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சில கதாபாத்திரங்கள் சர்வசாதாரணமாக கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள்.
வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து முன்னேறி வரும் அக்கதாபாத்திரங்களின் வாழ்வியலுடன் இணைந்த ஒன்று தான் அப்பேச்சுக்கள். எனவே சென்சார் குழுவினரிடம் அதை நீக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். நாளை (பிப்ரவரி 16) வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத சர்ப்ரைஸ் உள்ளது’ என்றார் இயக்குநர்.


ஈரோடு ஸ்ரீநிவாசா , மகாராஜா ரிலீஸ்
நாகேஷ் திரையரங்கம்'
'நாகேஷ் திரையரங்கம்' என்ற படத்துக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் ஆனந்த் பாபு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.
பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷ் சென்னை தி.நகரில் தனது பெயரில் ஒரு தியேட்டர் வைத்திருந்தார். தற்போது அந்த இடத்தில் திருமண மண்டபம் இயங்கி வருகிறது. இந்நிலையில் டிரான்ஸ் இந்தியா மீடியா என்ற நிறுவனம் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற திகில் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஐசக் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில் படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் 'நாகேஷ் திரையரங்கம்' வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கு முன்பாக எங்களிடம் முன் அனுமதி பெறவில்லை. இந்தப் படம் வெளியானால் எங்களது குடும்பத்திற்கு உள்ள நற்பெயர் கெடும் சூழல் உள்ளது.
மேலும் எங்கள் குடும்பத்தினரின் அனுமதியின்றி, விளம்பரத்திற்காக எனது தந்தையின் பெயரில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இதனால் படத் தயாரிப்பாளர் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கினால் இந்தப் படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ''படத்தயாரிப்பு நிறுவனம் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில்தான் படத்தை எடுத்துள்ளது. ஆனால், நாகேஷ் தியேட்டர் என்ற பெயரை அந்த நிறுவனம் பயன்படுத்தக் கூடாது எனக் கூறி நடிகர் ஆனந்த்பாபு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நாகேஷ் திரையரங்கம்’ பேய் படத்துக்கு 19 இடங்களில் தணிக்கைக்குழு வெட்டு கொடுத்துள்ளது.

நடிகர் ஆரி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் ஆஷ்னா சவேரி, அதுல்யா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் காளி வெங்கட், மாசும் சங்கர், சித்தாரா உட்பட பலர் நடித்துள்ளனர். இதுவரை வந்த பேய் படங்களிலிருந்து புதிய கோணத்தில் படத்தின் திரைக்கதையை அமைத்து இயக்கியிருக்கிறர் இசாக்.

ஏற்கனவே இவர் ‘அகடம்’ படத்தை இயக்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர். இந்தப் படத்திற்கு அவரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். படத்துக்கு நவுஷத் இசையமைத்துள்ளார். படத்தை ராஜேந்திர எம்.ராஜன் தயாரித்துள்ளார்.

ஈரோடு ஸ்ரீநிவாசா , மகாராஜா ரிலீஸ்

Image result for manushana nee tamil movie

4  மனுஷனா நீ
பிப்ரவரி 16 ந் தேதி திரைக்கு வரப்போகிறது மனுஷனா நீ! (இப்படியொரு பேரு வச்ச டைரக்டருக்கு நாலா புறத்திலிருந்தும் ‘நச நச’ போலிருக்கிறது) மெடிக்கல் கிரைம் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு தாறுமாறாக புரமோஷன் வேலைகளை ஸ்டார்ட் பண்ணியிருக்கிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கஸாலி தலைமையில் ஒரு எலும்புக்கூடு ஊர்வலத்தையே நடத்திவிட்டார்கள். அட… இதென்னய்யா கொடுமை? யெஸ்… படத்தில் வண்டி வண்டியாக கருத்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், நிஜத்திலும் சொல்லக் கிளம்பிய கஸாலிக்கு லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் செம மரியாதை. (அட… இது ஒரிஜனல் மரியாதைங்க…) ‘தலைக்கவசம் அணியுங்கள்’ என்ற வேண்டுகோள் வாசகம் அடங்கிய பேனர்கள், துண்டு பிரசுரங்களோடு இந்த எலும்புக்கூடு மனிதர்களின் ரேலியையும் நடத்தி அசத்திவிட்டார் கஸாலி. போலீஸ் அதிகாரிகளே ஆர்வத்தோடு முன் வந்து துண்டு பிரசுரத்தை வெளியிட்டது தனி அப்ளாஸ்.
இவ்வளவு நல்ல வேலைகள் செய்யும் கஸாலிக்கு அவர் படத்தின் ஹீரோயினாலேயே அநியாயத்துக்கு சங்கடம். அனு கிருஷ்ணா தவிர்த்து மனிஷா கவுர் என்ற மலேசியா நடிகையையும் நடிக்க வைத்திருக்கிறார். ஆள் முக்கால், ஆடை கால் என்கிற விகிதாச்சாரத்தோடு நடித்துத் தள்ளியிருக்கும் மனிஷா கவுரையும் சென்னைக்கு வரவழைத்து இந்த ரேலியில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால் ஹேர் டிரஸ்சர், காஸ்ட்யூமர், மேக்கப்மேன், இவர்களுடன்தான் வருவேன். ஸ்டார் ஓட்டலில் ரூம் புக் பண்ணுங்க என்றெல்லாம் அழிச்சாட்டியம் காட்டிய மனிஷா, லிஸ்ட்டை மேலும் நீட்டிக் கொண்டே போக, ‘மனுஷியா நீ. வைம்மா போனை’ என்று துண்டித்தாராம் கஸாலி.
முயல்னு நினைச்சா, முள்ளம் பன்றியா இருக்குதேங்க!

சமீபத்தில் இந்தப் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் 19 இடத்தில் கட் கொடுத்தனர். முதலில் சில காட்சிகளை அனுமதிக்க கேட்ட இயக்குனர் பின்னர் கட்களுக்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது


ஈரோட்டில் ரிலீஸ் இல்லை



நன்றி - பிபிசி தமிழ் , வெப் துனியா , தினமணி. , த தமிழ் இந்து

Friday, June 03, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (03/06.2016 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

விஜய் நடித்த “தெறி” இன்றுடன் 50வது நாள். உதயநிதியின் “மனிதன்”, சூர்யாவின் “24”, விஷாலின் “மருது”, சிம்புவின் “இது நம்ம ஆளு” மற்றும் தைரியமான கதைக்களத்துடன் புதுமுக இயக்குநர் விஜய்குமார் இயக்கிய “உறியடி” என்று ஒவ்வொரு வாரமும் படங்கள் ரிலீஸாகி வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றியை தக்கவைத்துவருகின்றன. இந்த வரிசையில் இந்த வார வெள்ளிக்கிழமை என்னென்ன படங்கள் ரிலீஸ்....?
1 இறைவி: 


ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வைரல் லிஸ்டில் முதலிடம் பிடிப்பது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் “இறைவி”. எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, கமலினி முகர்ஜி, அஞ்சலி, பூஜா என்று ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்டார் இப்படத்தில் நடித்திருப்பதே இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பீட்சா, ஜிகர்தண்டா தந்திருக்கும் வெற்றி இந்தப் படத்திற்கான காட்சிகளை முன்னதாகவே ஹவுஸ் ஃபுல்லாக்கிவிட்டது. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவரும் இந்தப் படத்திற்கு விவேக் ஹர்சன் படத்தொகுப்பு.  பெண்களை மையப்படுத்திய கதைக்களம் என்பதால் இறைவி என்று பெயரிட்டுள்ளார் இயக்குநர்.

2 வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்: 


விஷ்ணுவிஷால் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தை எழில் இயக்கியிருக்கிறார். விஜய் நடித்த “ துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படங்களை இயக்கியவரே எழில். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நாயகியாக நிக்கி கல்ராணி மற்றும் சூரி, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் என்று காமெடிக்கு பஞ்சமில்லாமல் நான் ஸ்டாப் அதகளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 அ...ஆ... 


சமந்தா நடிப்பில் இன்றே ரிலீஸாகியிருக்கிறது ஆ..ஆ.. என்ற தெலுங்கு படம். அல்லு அர்ஜூனின் “சன் ஆஃப் சத்தியமூர்த்தி”, பவன்கல்யாண் நடித்த “ அட்டரின்டிகி தேரிடி” என்று வெற்றிப் படங்களை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கம். சமந்தாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நித்தின் குமார் நடித்திருக்கிறார். காமெடி கலந்த ரொமான்டிக் காதல் கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது.

4 ஹவுஸ்ஃபுல் 3
அக்‌ஷய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக் , ஜாக்குலீன் ஃபெர்னாண்டஸ், நர்கிஸ் ஃபக்ரி நடிப்பில் நர்கிஸ் ஃபர்ஹத் இயக்கியிருக்கும் கலர்ஃபுல் இந்தி படம் ஹவுஸ் ஃபுல் 3 . இப்படமும் நாளை ரிலீஸ் ஆகும் படங்களின் கூட்டணியில் இணைந்துள்ளது. கமர்ஷியல், ரொமான்ஸ், காமெடி என கலக்கலாக முதல் இரண்டு சீரிஸ்களாக வெளியான இப்படம் தற்போது மூன்றாவது இன்ஸ்டால்மெண்டையும் களமிறக்க உள்ளது. ரஜினியின் 2.0 வில்லனான அக்‌ஷய் படம் என்பதால் தமிழ் நாட்டிலும் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 3’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 
ஹாலிவுட் இறக்குமதி: 


கடந்த வாரங்களில் “ஆங்கிரி பேர்ட்ஸ்”,“அலைஸ் தி வெண்டர்லேண்ட்”,“எக்ஸ் மேன்” என்று கிறங்கடித்த ஆங்கிலப் படங்களின் லிஸ்டில் இந்த வாரம் இணைகிறது 5.“நிஞ்சா டர்ட்டில்ஸ்”. ஆமைகளின் அதிரடி அதகள சரவெடியாக அனிமேஷனில் கலக்கவிருக்கிறது. குட்டிஸூக்கு நிச்சயம் பெஸ்ட் எண்டர்டெயினராக இந்தப்படம் இருக்கும். 




 6 மற்றுமொரு படம் “ ME BEFORE YOU". தமிழில் கார்த்தி, நாகர்ஜூனா நடித்த தோழா படம் போலவே, கை, கால் செயழிலந்த ஹீரோவின் மீது காதலில் விழும் நாயகி. செம ரொமான்டிக் கதையென்பதால் லவ்வர் பாய்ஸ் & கேர்ள்ஸ் கவனத்திற்கு...



போனவாரம் வந்த படங்களில் உறியடி சாதிக்கெதிரான சாட்டையடியாக அமைந்து, பேசப்பட்டது போல இந்த வாரம் எந்தப் படம் ஆச்சர்யம் கொடுக்கும் என்று பார்க்கலாம்.
இந்தப் படத்தையெல்லாம் பார்த்து முடிச்சிட்டு, அப்பாடா என்று திரும்பும்போது அடுத்த வெள்ளியும் என்ன ரிலீஸ் என்ற பட்டியலை தந்துடுவோம் பாஸ்

thanx - vikatan

Friday, March 18, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (18/3/16 ) 11 படங்கள் முன்னோட்ட பார்வை

1   புகழ்

2 விடாயுதம்

3 சவாரி

4  ஆகம்

5  என்று தணியும்


மலையாளம்

Darvinte Parinamam


Mohavalayam

Mohavalayam

Ithu Thaanda Police 

தெலுங்கு

10 Memu


ஹிந்தி

11 Kapoor & Sons

1   புகழ்

ஜெய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புகழ்’. இதில் ஜெய்க்கு ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார். இப்படத்தை ‘உதயம் என்.எச்.4’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இவர்களின் இசையில் அனிருத் பாடிய பாடல் ஒன்று ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடமே முடிந்து தணிக்கை குழுவிற்கு அனுப்பி இருந்தனர். படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி இருந்தது. இதையடுத்து இப்படம் கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை. தற்போது இப்படத்தை மார்ச் 18ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இயக்குனர் மணிமாறன் தனது ஊரில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.


2 விடாயுதம்

கொடிய விஷம் கொண்ட பாம்பை முக்கிய கதாபாத்திரமாக வைத்து, ‘விடாயுதம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. இதில் ராம் சரவணன் கதாநாயகனாகவும், ஆஸ்கார் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லினர்’ பட புகழ் தன்வி லங்கோர் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். நாகமானிசி டைரக்டு செய்து இருக்கிறார். 

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. விழாவில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- 

‘‘சாதி, மத, இன, மொழி, ஏழை, பணக்காரன் என்கிற வேறுபாடு இல்லாத உலகம் திரைப்பட கலையுலகம்தான். இந்த சினிமா உயிருடன் இருப்பது சிறு முதலீட்டு படங்களால்தான். சினிமா உயிருடன் நன்றாக இருக்க குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் நிறைய வரவேண்டும். ‘விடாயுதம்’ படத்தை சிறு முதலீட்டு படமாக எடுத்து இருக்கிறார்கள். 

சிறு முதலீட்டு படங்கள்தான் தியேட்டர்களில் அதிகமாக வெளியாகின்றன. அந்த படங்கள்தான் சினிமாவை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன. சினிமாவை நம்பி 10 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க நிறைய சிறு முதலீட்டு படங்கள் வரவேண்டும்.’’ 

இவ்வாறு அபிராமி ராமநாதன் பேசினார். 

விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க கில்டு அமைப்பின் செயலாளர் ஜாக்குவார் தங்கம், டைரக்டர்கள் ராஜ்கபூர், ஏ.வெங்கடேஷ், பாலசேகரன், நடிகர்கள் செந்தில், பிரஜன், பவர் ஸ்டார் சீனிவாசன், தயாரிப்பாளர்கள் ஜே.கே.ஆதித்யா, ஆர்.என்.ஸ்ரீஜா, மும்பை ரவிச்சந்திரன் ராஜு, இசையமைப்பாளர் மிதுன் ஈஸ்வர் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். 

‘விடாயுதம்’ என்பது பாம்பை குறிப்பது என்பதால் அதற்கு பொருந்துகிற மாதிரி படக்குழுவினர், ஒரு நல்ல பாம்பை மேடைக்கு கொண்டு வந்தார்கள். அது, படம் எடுத்து ஆடியது. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை பிடித்துக் கொண்டு போக பக்கத்திலேயே ஒரு பாம்பாட்டி நின்று கொண்டிருந்தார். தமிழ்நாடு வன இலாகா, வனவிலங்கு நல வாரியம் ஆகியவற்றின் அனுமதியுடன் அந்த பாம்பு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.

savari (N)


3 சவாரி

அறிமுக இயக்குனர் குகன் சென்னியப்பன்  கூறும் போது ' இன்றைய காலக் கட்டத்தில் நமக்கு எதிலும் வேகம் , எல்லாவற்றிலும் வேகம். படம் பார்க்கும் ரசிகர்கள் கூட வேகமான தட தட என   ஓடும் திரைக் கதை உள்ளப் படங்களைத் தான் ரசிக்கின்றனர்.ரோடு  த்ரில்லர்  என்ற புதிய பாணியில் இந்தக் கதை  எழுதப் பட்டு இருக்கிறது. புதிய தொழில் நுட்பக் கலைகளுடன் ஜொலிக்கும் இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும' என்றார்.
அடுத்த மாதம் வெளி வர உள்ள 'சவாரி'  உரிமையை பெற்று உள்ள புதிய பட நிறுவனமான Entertainment brothers நிறுவனத்தினர்  ' இணைய தளங்களில் சவாரி படத்தின்  போஸ்டர்களை கண்டதில் இருந்தே எனக்கு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கூடுதலாய் இருந்தது.எதேச்சையாக எனது நண்பர் ஒருவர் மூலம் இந்தப் படத்தின் பிரத்தியேக காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது. படம் தொடங்கிய வினாடி முதல் பரப்பான இடைவேளை வரை எனக்கு  பிரமிப்புதான்.
இடைவேளையின் போதே எப்படியாவது இந்தப் படத்தை வாங்கி விட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தேன். படம் முடியும் போது என் முடிவு தீர்மானமாய் மாறிப் போனது.இந்தப் படத்தில் உள்ள வேகம், படத்தில் பணியாற்றி உள்ள இளைஞர்களின் உத்வேகம் என்பது அவர்களை சந்தித்த பிறகுதான் தெரிந்துக் கொண்டேன்.
இயக்குனர் குகன் சென்னியப்பனின் இயக்கமாக  இருக்கட்டும்,ஒளிப்பதிவாளர்  செழியனின் நேர்த்தியான ஒளிப்பதிவாக இருக்கட்டும், மறைந்த கிஷோரின் படத்தொகுப்பில், ஜில் ஜங் ஜக்  படத்தின் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் ஆகட்டும்,படத்தின் தொழில்  நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தின்  வெற்றிக்கு உறுதுணையாக  இருப்பார்கள் என்பது நிச்சயம். படத்தை  பார்த்த வினாடியே புரிந்துக் கொண்டேன் . அடுத்த மாதம் வெளி வர உள்ள 'சவாரி 'ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் மிக மிக நம்பிக்கை உள்ளது'  என்றனர்.

4  ஆகம்

சரவணன் மீனாட்சி தொடர் இர்ஃபான் நடிக்கும் ஆகம்!

irfhanதனது முந்தையப் படங்களில் இலகுவான வேடங்களை ஏற்று நம் மனதில் இடம்பித்த இளம் கதாநாயகன் இர்ஃபான், ‘ஆகம்’ திரைப்படத்தின் மூலம் முற்றிலும் புதியதொரு வேடத்தில் தோன்ற உள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்குகிறார். ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பிரேம், ரவி ராஜா மற்றும் அறிமுக நாயகி தீக்ஷிதா என ‘ஆகம்’ தேர்ந்த நதிகளை பெற்றுள்ளது. RV சரண் ஒளிப்பதிவில், விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் சார்பில் கோட்டீஸ்வர ராஜூ தயாரிக்கிறார்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்த் கூறுயைல், “‘ஆகம்’ திரைப்படம் வேலை வாய்ப்பு சந்தையில் நடக்கும் பல கோடி மதிப்பிலான உழலை பற்றிய படம். சோஷியல் த்ரில்லர் பாணியில் வரும் இப்படத்தின் கதை பல வருடத்தின் ஆய்வுக்கு பின் எழுதப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிக்கவுள்ள அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்திற்காகவும், படத்தில் உள்ள அழ்ந்த சமுதாய கருத்துக்காகவும் ஒப்புகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பதிவு தொடங்க உள்ளோம்.
இப்படத்தில் பிரபல பிரஞ்சு நடிகை அலியோன முண்டேனு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.” எனக் கூறினார் இயக்குனரும், மாணவர்கள் மத்தியில் பிரபலமான கல்வியாளருமான முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம்.


5  என்று தணியும்

பிரபல காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நடித்துள்ள படம் ‘என்று தணியும்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பாரதிராஜா, பி.வாசு, ஜெயம் ரவி, சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் கருணாஸ் பேசும்போது, ‘பாரதி ராஜாவின் உதவியாளர் பாரதி கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் சினிமா துறை அழிந்து வருகிறது. அதை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். பெரிய தியேட்டர்களில் சிறு படங்கள் அதிகமாக திரையிடப்படுவதில்லை. இதை சரிசெய்ய வேண்டும். வாரத்திற்கு நான்கு படங்கள் வெளியாகிறது. அவை அனைத்தும் விரைவில் திருட்டி விசிடியாக கடைகளில் கிடைக்கிறது. நான் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தரராகவும் இருந்திருக்கிறேன். இப்படி விசிடிகள் வெளியானால், தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தரர்களின் நிலைமை என்ன ஆவது.

பெங்களூர் நாட்கள் என்ற படம் வெளியானது. அன்றே ஒரு இணைய தளத்தில் இப்படம் வெளியாகியிருக்கிறது. இதை யார் கேட்பது. யார் தடுப்பது. படக்குழுவினரின் உழைப்பு வீணாகிறது. இப்படியே போனால், சினிமா அழிந்து விடும். நிச்சயம் சினிமா துறையை காப்பாற்ற வேண்டும்.

மயில்சாமி நல்ல மனிதர் என்பதை நான் பெருமையாக சொல்வேன். தன்னால் முடிந்த வரை மற்றவர்களுக்கு பல உதவிகளை செய்வார். அவரின் மகன் நடித்துள்ள இப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார்.






நன்றி - தினமலர்  தினமணி மாலைமலர்

Friday, March 11, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (11/3/16 ) 13 படங்கள் முன்னோட்ட பார்வை

1 காதலும் கடந்து போகும்
2 மாப்ள சிங்கம்
3 நட்பதிகாரம் 79
4 அவியல்
5 என்னை பிடிச்சிருக்கா?
6 கதிரவனின் காதல் மழை # 11/3/2016 தமிழ்

HINDI
1 .GLOBAL BABA
2 JD
3 TERAE SUROOR
4 OK MEIN DHOKHA

ENGLISH

5  GRIMSBY
6 THE PERFECT MATCH
7 THE YOUNG MESSIAH  # 11/3/2106



1 காதலும் கடந்து போகும்

சூதுகவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 

படம் காதலும் கடந்து போகும். விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் 

மடோனா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் 

நாராயணன்

மடோனா மலையாளத்தில்  அறிமுகம் ஆன நடிகை. இதில் 

சமுத்திரக்கனி முக்கிய ரோல் ( வில்லன் ?)

ஒரு கொரியன் மூவியின் அதிகாரப்பூர்வமான  ரீ மேக் இது




இளைஞர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புகளுக்கு ஆளான ’காதலும் கடந்து போகும்’ படத்தின் டிரெய்லர் நேற்று சூர்யா அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இதுவரை 2 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றுல் மடோனா செபஸ்டியன் காமெடி மற்றும் ரொமாண்டிக் வசனங்கள் டிரெய்லரை இன்னொருமுறை பார்க்கத் தூண்டுவதை நம்மால் மறுக்க முடியாது. 
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி , மடோனா செபஸ்டியன் , சமுத்திரகனி நடிப்பில் மார்ச் 11ம் தேதி வெளியாக உள்ள படம் ’காதலும் கடந்து போகும்’. படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது, விஜய் சேதுபதி பட டிரெய்லர் என்றாலே அவரை மீறி யாரும் பெர்ஃபாமென்ஸில் பின்னி எடுத்துவிட முடியுமா பாணியில் லோக்கல் சென்னை பாஷை, அசால்ட், கெத்து என ரவுடிக்கே உரிய தோரணை காட்டுகிறார்.
’பிரேமம்’ படத்தின் செலினா கேரக்டரில் மிகச் சொற்ப சீன்களிலேயே கொள்ளை கொண்ட மடோனா செபஸ்டியன் இதில் முழுப் படமும் வந்து கிறங்கடிக்கப் போகிறார் என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. ”ண்ணா. நான் உங்களுக்கு ஒரு பழமொழி சொல்ட்டா?, இருங்க வந்து சொல்றேன்” என விஜய் சேதுபதி ஒரு பக்கம் அடடே! என சொல்ல வைத்தால், இன்னொரு பக்கம் ”மூஞ்சி லோக்கலா இருக்குல்ல இவ்ளோ தான் மேட்ச் பண்ண முடியும்” என மடோனா கலாய்ப்புகளும் படம் ரொமாண்டிக் காமெடிக் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் என்பதைக் காட்டுகிறது.
சந்தோஷ் நாரயணனின் இசையில் ”கககபோ” பாடல்  டிரெய்லருக்கு கொஞ்சம் பளிச் லுக். கூலர் போட்டுக்கொண்டு போலீஸ் லுக்கில் “ உள்ள போனாலும் அப்படியே இருக்க, வெளிய இருந்தாலும் அப்படியே இருக்க, ஒரு நல்ல தத்திக்கு உதாரணமா வாழ்ந்துட்டு இருக்க” என திடீர் எண்ட்ரி கொடுக்கும் சமுத்திரக்கனியால் படத்தில் சீரியஸ் போர்ஷன்களும் ஹெவியாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
அவ்வப்போது ”நானும் ரவுடிதான்” படத்தின் டிரெய்லர் நினைவு வருவதைத் தான் தவிர்க்க முடியவில்லை. எனினும் நலன் குமாரசாமி என்பதால் கண்டிப்பாக ‘ சூது கவ்வும்’ , ‘ பாணியில்  அடுத்த ட்ரெண்டி படமாக இருக்கும் என நம்புவோம். ”காதலும் கடந்து போகும்”  மக்களின் மனதைக் கடத்திப் போகுமா? அல்லது வெளியாகும் 10 படங்களில் இதுவும் ஒன்றாகக் கடந்து போகுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

2 மாப்ள சிங்கம்


விமல் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் மாப்ள சிங்கம். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக 3வது முறையாக அஞ்சலிநடித்துள்ளார்.
இப்படம் பல தடைகளை தாண்டி இந்த வாரம் வெளிவரவுள்ளது. நீண்ட நாட்களாக பலரும் இப்படத்தை எதிர்ப்பார்க்கையில், ரசிகர்களின் ஆவலை சற்றும் ஏமாற்றாதாம் இந்த மாப்பிள்ளை சிங்கம்.
விமலும் சமீபத்தில் ஒரு பேட்டியில், களவாணி அரிக்கியை எத்தனை பேருக்கு பிடிக்குமோ, அதை விட அதிகமானோருக்கு இந்த மாப்ள சிங்கத்தை பிடிக்கும் என கூறியுள்ளார்.

  • ‘மாப்ள சிங்கம்’ படத்துக்காக அரசியல் களம் கண்ட அஞ்சலி

1 of 1
சொந்த சித்தியுடனான பிரச்சினைக்குப் பிறகு மீண் டும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் அஞ்சலி. வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவர், தேர்தல் களத்திலும் குதிக்கவுள்ளார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கும். அவர் உண்மையான தேர்தல் களத்தில் இறங்கவில்லை. விமலுடன் இவர் நடித்து வரும் ‘மாப்ள சிங்கம்’ படத்தில்தான் அவருக்கு அப்படியொரு களம் அமைந்துள்ளது. இப்படத்தின் கதைப்படி கதாநாயகன் விமலுக்கு எதிராக இவரும் தேர்தல் களத்தில் இறங்குகிறாராம்.
‘மாப்ள சிங்கம்’ படத்தை ராஜசேகர் இயக்கி யுள்ளார். விமல், அஞ்சலி, சூரி, காளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 11ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் வழக்கறி ஞரான அஞ்சலி, விமலுக்கு எதிராக தேர்தல் களத்தில் குதிப்பதுபோன்ற காட்சி ஒன்று இடம் பெறுகிறதாம். இதில், அஞ்சலி வீர வசனங்கள் எல்லாம் பேசி அசத்தியுள்ளாராம்.
அதுமட்டுமல்லாமல், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் மிகக் கவரும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரித்துள்ளார். இப்படத்தின் தணிக்கைப் பிரதி அண்மையில் இணையத்தில் வெளியானது. எனினும் இதையும் மீறி படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் படக்குழுவினர்


3 நட்பதிகாரம் 79

மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் கலக்கியவர்ராஜ்பரத். அப்படி செல்வதை விட தம்பா என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.
இவர் முதன் முறையாக ஹீரோவாக களம் இறங்கும் படம்நட்பதிகாரம்-79. இப்படத்திற்கு சிவகுமார், சூர்யா கிரிக்கெட் வீரர் முரளி விஜய் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு அஜித் சாரின் எளிமை மிக பிடிக்கும், அதேபோல் விஜய்யின் மாஸ், விக்ரமின் உழைப்பு, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் சூர்யாவிற்கு பொருந்தும்’ 

என கூறியுள்ளார்.

கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ரவிச்சந்திரன். இவர் அடுத்து, நட்பின் பெருமையை சொல்லும் வகையில், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, 'நட்பதிகாரம்-79' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.


இதில், கதாநாயகனாக, 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் நடித்த ராஜ் பரத் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக, 'வல்லினம்' படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார். கதாநாயகிகளாக ரேஷ்மி, தேஜஸ்வி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் நிலம்பூர் இசையமைத்து இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ரவிச்சந்திரன். டி.ரவிகுமார் தயாரிக்கிறார். இந்த படத்துக்காக, இசையமைப்பாளர் தேவா பாடிய ஒரு பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படம் உருவாகி வருகிறது என்கிறார், டைரக்டர் ரவிச்சந்திரன்.

4 அவியல்

சென்னை: பீட்சா, ஜிகர்தண்டா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்தப் படத்திற்கு வைத்திற்கும் தலைப்பு என்னவென்று தெரியுமா? அவியல்.
தொடர்ந்து வித்தியாசமான படங்களைக் கொடுத்து வரும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் என்ற பெயரில் சொந்தப் படநிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிறுவனத்தின் சார்பாக பெஞ்ச் டாக்கீஸ் என்ற பெயரில் 6 குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக வெளியிட்டார், இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக 5 குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக வெளியிடவிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ், இதற்காக ரசிகர்களிடம் தலைப்பு கேட்டு ஒரு போட்டி ஒன்றையும் நடத்தியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.Karthik Subbaraj Next Movie Title Aviyal
இவரது படத் தலைப்புகள் பீட்சா, ஜிகர்தண்டா என்று உணவு சார்ந்தே இருப்பதால் ரசிகர்களும் உணவுப் பெயர்களின் பெயர்களையே தலைப்புகளாக அனுப்பி இருக்கின்றனர்.
வந்து குவிந்த தலைப்புகளில் இருந்து அவியல் என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ், இந்தத் தலைப்பை திருச்சி வாசகர் ராஜ்குமார் என்பவர் அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த முறை உலமெங்கும் இதனை வெளியிட இருப்பதால் அதிக உழைப்பு, அதிக சிரிப்பு, அதிக பொழுதுபோக்கு கலந்து இருக்கும் என்று உறுதிமொழி கொடுக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
உங்கள் அபிமானத் திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கிறது அவியல்.



5 என்னை பிடிச்சிருக்கா?


6 கதிரவனின் காதல் மழை



நன்றி - தினமலர்  தினத்தந்தி  மாலைம்லர்  வெப்துனியா  ஆல் சினி வெப்சைட்

Thursday, March 03, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (4/3/16 ) 14 படங்கள் முன்னோட்ட பார்வை

1 பிச்சைக்காரன்
2 போக்கிரிராஜா
3 சவுகார்பேட்டை
4 பக்கிபயலுக


 ஹாலிவுட்

5 LONDON HAS FALLEN

மலையாளம்
6 Machuka 
7 Appuram Bengal Ippuram Thiruvithamcore 

தெலுங்கு

8 Guntur Talkies
9 Kalyana Vaibhogame
10 Shourya
11 Shiva Ganga  ( telugu 4)

ஹிந்தி

12 Zubaan
13 Jai Gangaajal
14 Do Lafzon Ki Kahani (hindi)#4/3

# 4/3/16


1 பிச்சைக்காரன்

விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம்பிச்சைக்காரன். இப்படத்தை தரமான இயக்குனர் சசி தான் இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து சமீபத்தில் ஒரு ப்ரோமோ வீடியோ வந்துள்ளது, இதில் தியேட்டர் கார் பார்க்கிங் செய்யும் நபர், பிச்சைக்காரன் என்ற தலைப்பால் எத்தனை கஷ்டத்தை அனுபவிக்கின்றார் என்பதை கலாட்டாவாக எடுத்துள்ளனர்.
இறுதியில் விஜய் ஆண்டனியே அங்கு வர, அவரை ‘ஏன் சார் இப்படியெல்லாம் தலைப்பு வைக்கின்றீர்கள்’ என அந்த இளைஞர் திட்டுகிறார். மேலும் இப்படம் ஒரு தரமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் அதே சமயம் இயக்குனர் சசி யின் அழுத்தமான கிளைமாக்ஸ் நம்மை கலங்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

'பிச்சைக்காரன்' பாடலுக்கு எழுந்துள்ள சர்ச்சைக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்திருக்கிறார்.
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் 'பிச்சைக்காரன்'. இப்படத்தில் 'பாழா போன உலகத்துல' என்ற பாடலுக்கு சில மருத்துவர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இதற்கு விஜய் ஆண்டனி விடுத்துள்ள அறிக்கையில், "'பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு' என்ற சமூக விழிப்புணர்வு பாடலை 'பிச்சைக்காரன்' படத்தின் விளம்பர பாடலாக கவிஞர் லோகன் எழுதியுள்ளார்.
அந்த பாடலில், பண பலம் படைத்த கல்வித்தகுதி இல்லாத சிலர் தன் பண பலத்தை உபயோகித்து தனியார் கல்வி நிறுவனங்கள் சிலவற்றுக்கு லட்சத்தையும், கோடிகளையும் கொடுத்து மருத்துவர்களாகி நல்ல மருத்துவ சமுதயாத்துக்கு களங்கம் விளைவிக்கின்றார்கள் என்பதைத்தான் 'கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்' என்று பாடலாசிரியர் லோகன் குறிப்பிட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த டாக்டர்களை அவமதித்து, லோகன் அந்த பாடலை எழுதவில்லை.
இன்னும் சொல்ல போனால், கவிஞர் லோகனும், பாடலை பாடிய வேல்முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து சாதனை படைத்தவர்கள் தான்.
ஒரு வரியை வைத்து எங்கள் மீது களங்கம் கற்பிக்க வேண்டாம். இந்த பாடலை முழுமையாக கேட்டால் தான், இப்பாடல் எழுதப்பட்ட நோக்கம் என்ன, அது யாருக்காக எழுதப்பட்டது என்பது உங்களுக்கு புரியும். இந்த பாடல் மூலம், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத்த்தான் எடுத்து சொல்கிறோமே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.
ஒரு நல்ல மருத்துவன் எப்படி வாழ வேண்டும் என்று என்னுடைய முந்தைய படமான 'சலீம்'-ல் வாழ்ந்து காட்டியவன் நான். சமூகத்தின் மேல் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மேல் மிகுந்த அக்கறை எனக்கும் உண்டு.
பாடலின் அர்த்தம் சிலருக்கு சரியாக புரியவில்லை என்பதால், 'கோட்டா' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'காசு கொடுத்து' என மாற்றி விட்டோம் என்பதை தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாடலாசிரியர் லோகன் எழுதிய பாடல் வரிகள் சிலரை புண்படுத்தி இருந்தால், அதற்கு என் 'பிச்சைக்காரன்' படக்குழுவின் சார்பாக நான் விளக்கமளிக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.


2 போக்கிரிராஜா

 ராம்பிரகாஷ்ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் போக்கிரிராஜா படம் மார்ச் 4 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் சொன்ன தேதியில் படம் வெளியாகுமா? என்கிற கேள்வி இப்போது எழுந்திருக்கிறதாம். ஏனெனில் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் பி.டி.செல்வகுமாரின் தயாரிப்பில் வெளியான விஜய்யின் புலி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நிறைய நட்டம் ஏற்பட்டுவிட்டதாம்.
அதனால் அவர்களெல்லாம் ஒன்றுகூடி, எங்கள் நட்டத்துக்குப் பொறுப்பெடுத்துக்கொண்டால் மட்டுமே போக்கிரராஜாவை திரையிட அனுமதிப்போம் என்று சொல்லிவிட்டார்களாம். இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
அந்தப்பேச்சுவார்த்தையின் போது, புலி படத்தால் சுமார் ஆறுகோடிவரை நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்தத் தொகைக்கான பொறுப்பை தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டால்தான் போக்கிரிராஜாவை வெளியிடுவோம் என்று சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
இதனால் தயாரிப்பாளர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அதனால் படவெளியீடு சொன்னபடி நடந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.    

3 சவுகார்பேட்டை

மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “
இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக ராய் லட்சுமி நடிக்கிறார்.  மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜான் பீட்டர் இசையமைக்க படத்துக்கு சீனிவாசரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வி.சி..வடிவுடையான். இவர் 'தம்பிவெட்டோத்தி சுந்தரம்’ என்ற படத்தை இயக்கியதுடன், விரைவில் வெளியாக உள்ள “ கன்னியும் காளையும் செம்ம காதல் ‘படத்தையும் இயக்கி உள்ளார்.
படத்தை பற்றி இயக்குநர் வடிவுடையானிடம் கேட்டோம்…
சென்னையில் உள்ள சவுகார்பேட்டை ஜனசந்தடி அதிகமுள்ள இடம் மட்டுமல்ல… பணம் அதிகளவில் புழங்கும் இடமும் கூட.. அப்படிப்பட்ட சவுகார்பேட்டையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கதை!
காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், திகில், ஹாரர் எல்லாமும் இருக்கும் கமர்ஷியல்  படம் இது. ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று முடிவடைகிறது என்றார் வடிவுடையான்.
4 பக்கிபயலுக

மீனாட்சி அம்மன் வழங்க ஆர்.எஸ்.கே. ஸ்டுடியோ சார்பில் ஆத்தூர் சிவக்குமார் தயாரிக்கும் படத்துக்கு பக்கி பயலுக என பெயரிடப்பட்டு உள்ளது.

இதில் பாரதி, பாலாஜி, மணிகண்டன், வைவுல்லா ஆகியோர் கதையின் நாயகர்களாக அறிமுகமாகின்றனர். அனிதா, பரிமளா ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகின்றனர். கராத்தே ராஜா, பாவா லட்சுமணன், ரிஷா, முருகேசன், பகவதி பாலா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாரதி இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

வாலு வச்ச குரங்கும் சரி, நாலு பேரும் சேர்ந்த கேங்கும் சரி எங்கே போனாலும் சேட்டைதான் என்று ஊர் சுற்றிக் கொண்டு திரியும் நான்கு இளைஞர்கள் வேலை தேடி சென்னை வருகிறார்கள். ஒரு பெண்ணால் அவர்களது முன்னேற்றம் தடைபடுகிறது. அதில் இருந்து மீண்டு எவ்வாறு வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்கிறார்கள் என்பது கதை.

இதன் படப்பிடிப்பு சேலம், ஆத்தூர், மேட்டூர், ஏற்காடு போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

ஒளிப்பதிவு: பகவதிபாலா, இசை: புருஷ், பாடல்: கார்க்கி பிரியா, எடிட்டிங்: ராஜ்கீர்த்தி.



நன்றி - தினமணி  மாலைமலர் ஆல் சினி வெப்சைட்