Showing posts with label mnmalar. Show all posts
Showing posts with label mnmalar. Show all posts

Friday, February 16, 2018

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (16/2/18) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

`நாச்சியார்'


  பெண் கெட்ட வார்த்தை பேசினால் அதை வைத்து தான் அவர் தைரியசாலி என்பதை காட்டலாம் என்பது போன்ற ஒரு தப்பான முன் உதாரணத்தை இயக்குநர் பாலா தன்னுடைய நாச்சியார் படமும் சொல்ல வருகிறாரா?


இயக்குனர் பாலா படம் என்றாலே கதையில் தொடங்கி பட ரிலீஸ் வரை அனைத்திலுமே சர்ச்சை தொடங்கிவிடும். இதற்கு நேற்று ரீலிசான பாலாவின் நாச்சியார் டீசரும் விதிவிலக்கல்ல. பாலா படம் என்றாலே அதில் "கவுச்சி" நெடி தூக்கலாகவே இருக்கும். இதை அவரின் எல்லா படத்திலும் மக்கள் உணர்ந்திருப்பார்கள். எதார்த்தத்தை காட்டினாலும், திரையில் பார்க்கும் போது அது பலருக்கு முகசுளிப்பையே தந்திருக்கிறது. தமிழ் சினிமா புரட்சியாளர், உழைக்கும் மக்களின் உண்மை வாழ்க்கையை செல்லுலாய்டு திரையில் காட்டுபவர் என்றெல்லாம் பாலா பாராட்டப் பெற்றிருந்தாலும், அவருக்கான தரத்திலிருந்து அவர் அடிக்கடி இறங்கி விடுவது யோசிக்க வைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அவருடைய படத்தில் இடம்பெறும் வசனங்களும், சரளமாக புரண்டோடும் கெட்ட வார்த்தைகளுமே. என்ன தான் நிதர்சனமாக இருந்தாலும் அதை ஏன் படம் முழுவதிலும் வைக்க வேண்டும் என்பது தான் கேள்வி

இயக்குநர் பாலாவின் `நாச்சியார்' திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று முதல்முறையாக பரபரப்பாக பேசப்படுகிறது. 52 நொடிகள் ஓடும் முன்னோட்ட காட்சியில் நாயகி ஜோதிகா பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தை ஒன்றை கூற, பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது நாச்சியார்.
காவல்துறை அதிகாரி நாச்சியார்
இளையராஜா இசையில் ஜி.வி பிரகாஷ், ஜோதிகா நடித்திருக்கும் திரைப்படம் நாச்சியார். இயக்குநர் பாலாவுக்கு நாச்சியார் 8வது திரைப்படம். இதில், நாச்சியார் என்ற காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் ஜோதிகா.
அவர் நடித்த முந்தைய திரைப்படமான மகளிர் மட்டும் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது நாச்சியர் திரைப்படத்தின் முன்னோட்டமே பெண்களை இழிவுடுத்தும் வகையில் உள்ளதாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது


இயக்குநர் பாலாவின் திரைப்படங்கள் எதார்த்த மனிதர்களையும், விளம்புநிலை மக்களின் வாழ்வியலையும் அழகாக பதிவு செய்யக்கூடியவை. 1999களில் வெளியான சேது என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் வலுவாக காலூன்றினார் பாலா. சேது படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.

படத்தின் முன்னோட்ட காட்சி கடந்த 15ஆம் தேதி யு டியூபில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை 28 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர். இதுவரை பாலா இயக்கிய திரைப்படங்களிலேயே அதிக கவனத்தை ஈர்த்த முன்னோட்டம் நாச்சியார் என்றே கூறலாம்.
இந்த முன்னோட்ட காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதற்கும், விவாத பொருளாக மாறியதற்கும் முக்கிய காரணம் ஜோதிகா பேசிய அந்த ஒற்றை வார்த்தை. ஒரு காட்சியில் காக்கி சட்டையில் வரும் ஜோதிகா எதிரே இருப்பவரை அறைந்துவிட்டு '****** பயலுக' என்று கூறியிருப்பார்.

நாச்சியார் பட முன்னோட்ட சர்ச்சை குறித்து மாதர் சங்க நிர்வாகி உ.வாசுகியிடம் கேட்டபோது, "ஒரு விஷயத்தில் நாம் ஆட்சேபணை தெரிவிப்பதற்குமுன், முழு திரைப்படத்தை பார்த்தபின்புதான் அந்த காட்சி அமைப்பு எந்த பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை கூற முடியும். ஆனால் நாச்சியார் விஷயத்தில் அவ்வாறு முழுப்படம் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை" என்றார்.
எதார்த்தம் என்ற பெயரில் பெண்களை இழிவுப்படுத்தும் எந்தவொரு சொல்லையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர், ஓர் ஆண் ஒழுக்கம் தவறும்போது இதுபோன்ற எந்தவொரு இழி சொல்லும் பயன்படுத்தப்படுவது இல்லையென்றும், இந்த சமூகமே பெண்களை வலுக்காட்டாயமாக ஒரு முறைக்குள் தள்ளிவிட்டு தற்போது பெண்களை இழிவுப்படுத்தும் அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

விளம்பர யுக்திக்காக பாலா இந்த சொல்லை இதில் பயன்படுத்தியுள்ளார் என்றும், இதைவிட கொச்சையான சொற்களை கதாநாயகர்கள் வசனமாக பேசியுள்ள போதும் ஜோதிகா என்ற ஒரு பெண், பெண்ணை இழிவுப்படுத்தும் சொல்லை பேசியிருப்பதால் இப்பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பாக பேசப்படுகிறது என்றும் வாசுகி தெரிவித்தார்.
மேலும், இயக்குநர் பாலா அவருடைய படங்களின் மூலமாக ஆர்வத்தை தூண்டலாம் அல்லது காட்சி அமைப்புகள் மூலமாக தூண்டலாம். ஆனால் ஜோதிகாவை இப்படி பேச வைத்து விளம்பரம் தேடுவது சரியான யுக்தியில்லை என்றார்.


ஈரோடு ஆனூர் , மகாராஜா ,  விஎஸ்பி ரிலீஸ்
ஜோதிகாவை கொச்சை வார்த்தை பேச வைத்து விளம்பரம் தேடுகிறாரா பாலா?: சர்ச்சையில் நாச்சியார்


2   வீரா

ரஜினி படத்தின் பெயர்களுக்கு தமிழில் செம டிமாண்ட். இப்போது வீரா என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. 

 
 
இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க, கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா மேனன் மலையாளத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தவர்.
 
வீரா பற்றி பேசிய அவர், வீரா படத்தில் வடசென்னை பெண்ணாக சென்னை தமிழ் பேசி நடித்ததாக கூறினார். 
 
சில மலையாள நடிகைகள் போலின்றி, பாடல் காட்சிகளில் தாராளம் கவர்ச்சி காட்டியிருக்கிறார். அதன் காரணமாக வீராவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தெலுங்கிலும் ஐஸ்வர்யா மேனனுக்கு ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது

veera_film

‘யாமிருக்க பயமேன் ’படத்தில் அசோஷியேட் டைரக்டராகப் பணி புரிந்த ராஜாராமன் இயக்கியுள்ள படம் வீரா. நடிகர்கள் கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணாகரன், தம்பிராமய்யா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் ராஜாராமன் கூறுகையில், 'வேண்டும் என்றே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீரா படத் டைட்டிலை  நாங்கள் பயன்படுத்தவில்லை. உண்மையில்,  இந்தப் படத்துக்கும் அதன் டைட்டிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அரசியல்வாதி மற்றும் கேங்ஸ்டர் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சில கதாபாத்திரங்கள் சர்வசாதாரணமாக கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள்.
வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து முன்னேறி வரும் அக்கதாபாத்திரங்களின் வாழ்வியலுடன் இணைந்த ஒன்று தான் அப்பேச்சுக்கள். எனவே சென்சார் குழுவினரிடம் அதை நீக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். நாளை (பிப்ரவரி 16) வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத சர்ப்ரைஸ் உள்ளது’ என்றார் இயக்குநர்.


ஈரோடு ஸ்ரீநிவாசா , மகாராஜா ரிலீஸ்
நாகேஷ் திரையரங்கம்'
'நாகேஷ் திரையரங்கம்' என்ற படத்துக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் ஆனந்த் பாபு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.
பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷ் சென்னை தி.நகரில் தனது பெயரில் ஒரு தியேட்டர் வைத்திருந்தார். தற்போது அந்த இடத்தில் திருமண மண்டபம் இயங்கி வருகிறது. இந்நிலையில் டிரான்ஸ் இந்தியா மீடியா என்ற நிறுவனம் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற திகில் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஐசக் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில் படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் 'நாகேஷ் திரையரங்கம்' வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கு முன்பாக எங்களிடம் முன் அனுமதி பெறவில்லை. இந்தப் படம் வெளியானால் எங்களது குடும்பத்திற்கு உள்ள நற்பெயர் கெடும் சூழல் உள்ளது.
மேலும் எங்கள் குடும்பத்தினரின் அனுமதியின்றி, விளம்பரத்திற்காக எனது தந்தையின் பெயரில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இதனால் படத் தயாரிப்பாளர் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கினால் இந்தப் படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ''படத்தயாரிப்பு நிறுவனம் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில்தான் படத்தை எடுத்துள்ளது. ஆனால், நாகேஷ் தியேட்டர் என்ற பெயரை அந்த நிறுவனம் பயன்படுத்தக் கூடாது எனக் கூறி நடிகர் ஆனந்த்பாபு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நாகேஷ் திரையரங்கம்’ பேய் படத்துக்கு 19 இடங்களில் தணிக்கைக்குழு வெட்டு கொடுத்துள்ளது.

நடிகர் ஆரி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் ஆஷ்னா சவேரி, அதுல்யா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் காளி வெங்கட், மாசும் சங்கர், சித்தாரா உட்பட பலர் நடித்துள்ளனர். இதுவரை வந்த பேய் படங்களிலிருந்து புதிய கோணத்தில் படத்தின் திரைக்கதையை அமைத்து இயக்கியிருக்கிறர் இசாக்.

ஏற்கனவே இவர் ‘அகடம்’ படத்தை இயக்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர். இந்தப் படத்திற்கு அவரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். படத்துக்கு நவுஷத் இசையமைத்துள்ளார். படத்தை ராஜேந்திர எம்.ராஜன் தயாரித்துள்ளார்.

ஈரோடு ஸ்ரீநிவாசா , மகாராஜா ரிலீஸ்

Image result for manushana nee tamil movie

4  மனுஷனா நீ
பிப்ரவரி 16 ந் தேதி திரைக்கு வரப்போகிறது மனுஷனா நீ! (இப்படியொரு பேரு வச்ச டைரக்டருக்கு நாலா புறத்திலிருந்தும் ‘நச நச’ போலிருக்கிறது) மெடிக்கல் கிரைம் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு தாறுமாறாக புரமோஷன் வேலைகளை ஸ்டார்ட் பண்ணியிருக்கிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கஸாலி தலைமையில் ஒரு எலும்புக்கூடு ஊர்வலத்தையே நடத்திவிட்டார்கள். அட… இதென்னய்யா கொடுமை? யெஸ்… படத்தில் வண்டி வண்டியாக கருத்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், நிஜத்திலும் சொல்லக் கிளம்பிய கஸாலிக்கு லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் செம மரியாதை. (அட… இது ஒரிஜனல் மரியாதைங்க…) ‘தலைக்கவசம் அணியுங்கள்’ என்ற வேண்டுகோள் வாசகம் அடங்கிய பேனர்கள், துண்டு பிரசுரங்களோடு இந்த எலும்புக்கூடு மனிதர்களின் ரேலியையும் நடத்தி அசத்திவிட்டார் கஸாலி. போலீஸ் அதிகாரிகளே ஆர்வத்தோடு முன் வந்து துண்டு பிரசுரத்தை வெளியிட்டது தனி அப்ளாஸ்.
இவ்வளவு நல்ல வேலைகள் செய்யும் கஸாலிக்கு அவர் படத்தின் ஹீரோயினாலேயே அநியாயத்துக்கு சங்கடம். அனு கிருஷ்ணா தவிர்த்து மனிஷா கவுர் என்ற மலேசியா நடிகையையும் நடிக்க வைத்திருக்கிறார். ஆள் முக்கால், ஆடை கால் என்கிற விகிதாச்சாரத்தோடு நடித்துத் தள்ளியிருக்கும் மனிஷா கவுரையும் சென்னைக்கு வரவழைத்து இந்த ரேலியில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால் ஹேர் டிரஸ்சர், காஸ்ட்யூமர், மேக்கப்மேன், இவர்களுடன்தான் வருவேன். ஸ்டார் ஓட்டலில் ரூம் புக் பண்ணுங்க என்றெல்லாம் அழிச்சாட்டியம் காட்டிய மனிஷா, லிஸ்ட்டை மேலும் நீட்டிக் கொண்டே போக, ‘மனுஷியா நீ. வைம்மா போனை’ என்று துண்டித்தாராம் கஸாலி.
முயல்னு நினைச்சா, முள்ளம் பன்றியா இருக்குதேங்க!

சமீபத்தில் இந்தப் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் 19 இடத்தில் கட் கொடுத்தனர். முதலில் சில காட்சிகளை அனுமதிக்க கேட்ட இயக்குனர் பின்னர் கட்களுக்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது


ஈரோட்டில் ரிலீஸ் இல்லை



நன்றி - பிபிசி தமிழ் , வெப் துனியா , தினமணி. , த தமிழ் இந்து

Friday, August 07, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 7/8/ 2015 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

1 சண்டி வீரன்
2 குரங்கு கைல பூமாலை
3 வந்தா மல
4 அழகே இல்லாத அழகான கதை
5 செல்வந்தன் ( தெலுங்கு டப்)
6 SRI MANDHUDU ( TELUGU)
7  கலை வேந்தன்  ( தெலுங்கு டப்)
8  MISSION IMPOSSIBLE ROGUE NATION
இயக்குனர் சற்குணம்
1 சண்டி வீரன்

சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ஆனந்தி முதன்முறையாக இணைந்துள்ள படம் இது. நைய்யாண்டி படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதால் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் இயக்குனர். இவர்களின் கூட்டணியில் வந்துள்ள சண்டி வீரன் எப்படி இருக்கிறான் என்பதை  விரைவில் பார்ப்போம்….
நடிகர்கள் : அதர்வா, ஆனந்தி, லால், அஸ்வின் ராஜா மற்றும் பலர்
இசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி
ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா
இயக்கம் : சற்குணம்
தயாரிப்பாளர் : இயக்குனர் பாலாவின் ‘பி ஸ்டூடியோஸ்’

பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சற்குணத்தின் இயக்கத்தில் தயாராகியிருக்கிறது சண்டி வீரன். படம் முடியும் முன்பே நல்ல லாபத்துக்கு விலை போனது. அதர்வாவுக்கு இது வெற்றி பெற்றேயாக வேண்டிய படம். கயல் ஆனந்தி நாயகி. படம் ஆகஸ்ட் 7 வெளியாகவிருக்கும் நிலையில், படக்குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தது. 

சண்டி வீரன் என்ன மாதிரியான படம்?
அனைவரும் ரசிக்கும் பொழுதுபோக்கு படமாக இதனை உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய களவாணி, வாகைச்சூடவா படங்களின் வரிசையில் சண்டி வீரனும் இருக்கும்.
பாலா படத்தை தயாரித்தது எப்படி?
முதலில் நான் பாலாவிடம் சண்டி வீரன் கதையைச் சொன்னேன். கதையை கேட்டுவிட்டு, நல்லாயிருக்கு என்றார். பிறகு படத்தை நானே தயாரிக்கிறேன் என்றார்.
அதர்வாவை யார் தேர்வு செய்தது. நீங்களா பாலாவா?
கதையை சொன்ன பிறகு, நாயகனாக அதர்வாவை நடிக்க வைக்கலாம் என்று நினைக்கிறேன் என பாலாவிடம் சொன்னேன். அவர் சரி என்றார்.
படத்தில் மலையாள நடிகர் லால் நடித்திருக்கிறாரே?
வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். சண்டக்கோழி படத்துக்குப் பிறகு அவருக்கு பெயர் சொல்கிற படமாக இது இருக்கும்.
ஆனந்தியை தேர்வு செய்தது எப்படி?
கயல் படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து அவரை தேர்வு செய்தேன்.
நாயகன் அதர்வா
இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?
எனக்கு இயக்குனர் பாலா போன் செய்து, உடனே பார்க்க வேண்டும் என்றார். நான் உடனே சென்று அவரை சந்தித்தேன். ஒரு கதை கேட்டேன், அதில் நீ நடிக்கணும் என்றார். சரி என்றேன்.
கதை கேட்காமலா?
அவர் நடிக்க வேண்டும் என்றதும் கதை கேட்காமலே சரி என்றேன். அதன் பிறகுதான் சற்குணம் படத்தை இயக்கப் போகிறார் என்பது தெரியும்.
படத்தில் உங்களின் வேடம்...?
இதில் நான் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறேன்.  கிராமியப் பின்னணியில் நல்ல கமர்ஷியல் படமாக இது உருவாகியிருக்கிறது.
சற்குணத்தின் இயக்கத்தில் நடித்தது எப்படியிருந்தது?
களவாணி படத்தைப் பார்த்து, சற்குணம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது.
நாயகி ஆனந்தி
A rhythmic village love story with action by kalavaani sarkunam

படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?
நான் இதில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். சற்குணம் இயக்கத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது.


Comedy screenplay for b ,c centre audience
2 குரங்கு கைல பூமாலை

ஒரு ஹீரோயின் வித்தியாசமான குணம் கொண்ட நான்கு பேரிடம் சிக்குவதை மையமாக கொண்டது தான் குரங்கு கைல பூமாலை படம்.
ஜெகதீஷ், கௌதம் கிருஷ்ணா ஆகியோரை ஹீரோக்களாக வைத்து ஜி. கிருஷ்ணன் எடுத்துள்ள படம் தான் குரங்கு கைல பூமாலை. படத்தில் சாந்தினி ஹீரோயினாகவும், நிஷா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சரவண சுப்பையா, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை எஸ்.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் அமீர்ஜான் தயாரித்துள்ளார்.
படத்திற்கு சாய் குருநாத் இசைப்பணியை கவனிக்கிறார்
B,c centre comedy film

3 வந்தா மல

ஆர்யாவை வைத்து ’கலாபக் காதலன்’ படத்தை இயக்கிய இகோர் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம் ’வந்தா மல’. ’இந்த காலத்து இளைஞர்களில் வாழ்க்கை எதை நோக்கிப் போய்கொண்டிருக்கிறது. இவர்களின் சமூக அக்கரை எந்த அளவுக்கு இருக்கிறது..? என்ற கேள்விகளுக்கான விடைதான் இப்படம்.


நான்கு புதுமுகங்களை வைத்து ஜனரஞ்சகமாக எடுத்திருக்கிறேன்’. குடிசைப் பகுதிதான் கதைகளம் என்பதால் நான்கு ஹீரோக்களையும் குடிசையில் வசிக்கும் மக்களோடு பழகவிட்டு அதன்பிறகுதான் படத்தை தொடங்கினேன்’ என்கிறார் இயக்குனர். இதன் இசை வெளியீட்டு விழா, சூரியன் பண்பலை அரங்கில் நேற்று காலை நடந்தது.

இதில் இயக்குனர் இகோர், இசையமைப்பாளர் சாம் டி. ராஜ், ஒளிப்பதிவாளர் மாரி வெங்கடாசலம் மற்றும் படத்தின் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

A love story for c centre audience
4 அழகே இல்லாத அழகான கதை
Andhra vijay film
5 செல்வந்தன் ( தெலுங்கு டப்)




ஆக.06 (டி.என்.எஸ்) தெலுங்கு திரைப்படமான 'பாகுபலி' தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து மேலும் சில தெலுங்குப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யபப்ட்டு வெளியிடப்படுகிறது.
அந்த வரிசையில், தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபு, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள 'ஸ்ரிமந்தடு' படம் தமிழில் 'செல்வந்தன்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நாளை (ஆக.7) முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழில் இப்படத்தினை  பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.கே.ராஜராஜா தமிழ் பதிப்பிற்கு வசனம் எழுதியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர் மகேஷ் பாபு, நடிகர் ஜகபதி பாபு, ஒளிப்பதிவாளர் மதி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர் பத்ரகாளி, ஏ.ஆர்.கே.ராஜராஜா, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தாணு, தயாரிப்பாளர்கள் சிவா, பி.எல்.தேனப்பன், கதிரேசன், ஞானவேல்ராஜா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தரணி ஆகியோர் கலந்துக்கொண்டார்கள். 
இந்த நிகழ்ச்சியில் பேசிய நாயகன் மகேஷ் பாபு, "என்னுடைய படங்கள் பல தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தாலும், இந்த படம் தான் முதல் முறையாக தெலுங்கு மற்றும் தமிழ் என ஒரே நேரத்தில் வெளியாகிறது. மக்களுக்கு பிடித்த வகையில் படம் கமர்ஷியலாக வந்துள்ளது. இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். இப்படத்தை தொடர்ந்து எனது அனைத்துப் படங்களின் இனி ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகும்." என்று தெரிவித்தார்.
செல்வந்தன் படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாக நடித்துள்ள ஜகபதி பாபு பேசுகையில், "எனக்கும் மகேஷ் பாபுவுக்கும் தமிழகம் ரொம்ப நெருக்கம், காரணம் நாங்கள் இருவரும் இங்கே தான் படித்து வளர்ந்தோம். தமிழகத்தை பொருத்தவரை நல்ல படங்களாக இருந்தால் அது வெற்றி பெறும். சிறு பட்ஜெட் படமோ, அறிமுக நடிகர்கள் என்று எதையும் பார்க்க மாட்டார்கள், படம் தரமாக இருந்தால் வெற்றியடை செய்வார்கள். அந்த வகையில் 'செல்வந்தன்' படமும் தமிழக ரசிகர்களை கவரும்." என்று தெரிவித்தார்

Telugu film by mahesh babu

6 SRI MANDHUDU ( TELUGU)


7  கலை வேந்தன்  ( தெலுங்கு டப்)

அஜய் – சனம் ஷெட்டி நடிக்கும் “கலை வேந்தன் ” ஆர்.கே.பரசுராம் இயக்குகிறார். எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படத்திற்கு “கலைவேந்தன் “ என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக அஜய் நடிக்கிறார். இவர் “அக்கு “என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். அந்த படம் பரபரப்பான படமாக பேசப்பட்டு பெரிய வெற்றியும் பெற்றது.
கதாநாயகியாக சனம்ஷெட்டி நடிக்கிறார். இவர் அம்புலி 3 D படத்தில் நடித்தவர்.மற்றும் முக்கிய வேடத்தில் கலாபவன் மணியுடன் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், காதல் சுகுமார்,ஆர்த்தி, சம்பத், நளினி, தலைவாசல் விஜய், நெல்லை சிவா, ராமச்சந்திரன் ஆதேஷ், சங்கர், யுவராணி, சாதனா, அர்ச்சனா, எஸ்.கமலகண்ணன், விஜய் ஆனந்த் ஜே.முரளிகுமார், மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்த படத்தில் இரண்டு கால்களுமே இல்லாத ஒரு பத்து வயது சிறுவன் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்ததுடன், ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறான். ஒளிப்பதிவு – எஸ்.கார்த்திக் / பாடல்கள் – சினேகன் / இசை – ஸ்ரீகாந்த் தேவா எடிட்டிங் – G. சசிகுமார் / ஸ்டன்ட் – சையத், நாக்கவுட் நந்தா நடனம் – சாந்திகுமார் / தயாரிப்பு நிர்வாகம் – இளையராஜா, மாரியப்பன் ,செல்வம்
தயாரிப்பு – எஸ்.கமலகண்ணன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.கே.பரசுராம். இவர் திரைப்பட கலூரியில் பயிற்சி பெற்றதுடன் கனடாவிலும் இயக்குனர் பயிற்சிப்பெற்றிருக்கிறார்.
Kalaivanan (30)படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…. ஓவினாம் என்ற தற்காப்பு கலையின் மாஸ்டராக பணிபுரியும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் ஏற்பட்ட காதலில் ஒரு பிரச்னை வருகிறது. இது கதாநாயகியின் பெற்றோருக்கு தெரியவர பிரச்சனை பெரிதாகிறது. இதற்கு இடையில் காதலர்களுக்கு நடுவில் வில்லனால் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது . இடையில் கதாநாயகி கொல்லப்படுகிறார்.கொலை செய்தது யார் ? என்ற வினாவுக்கு விடை பரபரப்பான திரைக்கதையின் மூலம் வெள்ளித்திரையில் வெளிச்சமாகும். ஓவினாம் தற்காப்பு கலை என்பது ஜூடோ, குங் பூ, கராத்தே இந்த மூன்றின் கலவைக்கு பெயர்தான் ஓவினாம். இந்த கலையை பயன்படுத்தி வரும் முதல் திரைப்படம் “ கலை வேந்தன் “ தான். இந்த ஓவினாம் பயிற்சி பெற்ற நூறு கலைஞர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது கலை வேந்தன் என்றார் இயக்குனர் ஆர்.கே.பரசுராம்
Violence story for c centre audience
8  MISSION IMPOSSIBLE ROGUE NATION
Wonderful action film
டாம் க்ரூஸின் மிஷன் இம்பாஸிபிள் சீரிஸின் ஐந்தாவது பாகம், மிஷன் இம்பாஸிபிள் - ரோக் நேஷன் சென்ற வாரம் யுஎஸ்ஸில் வெளியானது.


முதல் மூன்று தினங்களில் - வியாழன் ப்ரிவியூ காட்சிகளையும் சேர்த்து - 56 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. 
ப்யூரிஸ் 7, ஜுராஸிக் வேர்ல்ட் போன்ற படங்கள் முதல் மூன்று தினங்களில் 200 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வசூலிக்கையில், டாம் க்ரூஸின் படம் 56 மில்லியன் டாலர்களில் சிக்கிக் கொண்டுள்ளது. என்றாலும், இது நல்ல வசூலில் என்கிறார்கள் ஹாலிவுட் விமர்சகர்கள். 150 மில்லியன் டாலர்களில் தயாரானப் படத்துக்கு இது சிறந்த ஓபனிங் என்பது அவர்களின் கணிப்பு.
மிஷன் இம்பாஸிபிள் - ரோக் நேஷன் வரும் 7-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. தமிழில் மிஷன் இம்பாஸிபிள் - முரட்டு தேசம் என்ற பெயரில் வெளியிடுகின்றனர். 
படத்தின் சண்டைக் காட்சிகளை டர்ம் க்ரூஸ் அதிகம் டூப் போடாமல் செய்துள்ளார். சாகசக் காட்சிகள் நன்றாக உள்ளதாக விமர்சகர்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளதால் முரட்டு தேசம் தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி -தினமணி, மாலைமலர் , வெப்துனியா , ஆல் சினி வெப்சைட்

Friday, July 31, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 31/7/ 2015 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை


1 ஆரஞ்சு மிட்டாய்
2 இது என்ன மாயம்
3 சகலகலாவல்லவன் அப்பாட்டக்கர்
4 நிராயுதம்
5 SPECIAL ID #31/7/2015 ரிலீஸ்


A classical film from Vijay sethupathi
1 ஆரஞ்சு மிட்டாய்


தனுஷ், விஷால், ஆர்யாவை தொடர்ந்து தயாரிப்பு உலகில் புதிதாக களமிறங்குகிறார் விஜய் சேதுபதி.
விறுவிறுவென உச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிற விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்கிற கனவு நிறையவே இருக்கிறது. அதனாலதான் சங்குதேவன் என்ற படத்தை இன்னொரு தயாரிப்பாளரின் உதவியோடு ஆரம்பித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் பாதியில் நிற்கிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி ”ஆரஞ்சு மிட்டாய்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த முறை அவர் வேறு யாருடைய தயவையும் நாடாமல் தனியார் வங்கி ஒன்றில் கடன் வாங்கி தானே நேரடி தயாரிப்பாளராக களமிறங்குகிறாராம்.
இப்போதைக்கு விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி ஆகிய படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இது தவிர இடம் பொருள் ஏவல், புறம்போக்கு ஆகிய படங்கள் படப்பிடிப்பில் இருக்கிறது. இது முடிந்த பிறகு “ஆரஞ்சு மிட்டாய்” படத்தில் நடிப்பார் என்று தெரிய வருகிறது.


A amala paal vaseekaran film
2 இது என்ன மாயம்


தலைவா, சைவம் என தொடர் தோல்விகளை கொடுத்த விஜய் சிறிது கால ஓய்வுக்கு பிறகு விக்ரம் பிரபுவை வைத்து 'இது என்ன மாயம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.எல்.விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டமாருதம் வெற்றிப்படத்தை தொடர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம் இது.
படம் பற்றி இயக்குனர் விஜயிடம் கேட்டோம்..”இது காதல் சம்மந்தப்பட்ட படம் தான்..காதலுங்கிறது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். அது யாருக்கு வருகிறது, அவர்களுக்கு அது எந்த கால கட்டத்தில் வருகிறது என்பது தான் காதலின் மகத்துவம். ஒருவருக்கு அது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல் பூக்கிற தருணம் இனிமையானது. அதை தான் இது என்ன மாயம் பிரதிபலிக்கும். இதில் இரண்டு காலகட்டங்கள்! ஒன்று ஜாலியாகத் திரிந்த கல்லூரி வாழ்க்கை… இன்னொன்று கல்லூரி காம்பவுண்டை விட்டு வந்து நிகழ்கால வாழ்க்கையில் கடந்த கால இனிமையை நினைத்து பார்க்கும் காலகட்டம்! எனக்கு எல்லாம் மறந்து போச்சு என்று சொல்கிறவன் கூட  தனது காதலை மறக்க முடியவில்லை என்றே சொல்வான். 
அழகான காதலனாக அருண் பாத்திரத்தில் விக்ரம் பிரபு வாழ்ந்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். நான் ,நீரவ் ஷா, ஜி.வி.பிரகாஷ்குமார், நா.முத்துக்குமார் என்கிற ஒரே சிந்தனையாளர்கள் இதிலும் கை கோர்க்கிறோம் ஜெயிப்பதற்காக. இந்த வெற்றியில் மேஜிக் பிரேம்ஸ் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் மூவரும் கூட இணைந்திருக்கிறார்கள் ஜெயிப்பதற்காக”என்றார் இயக்குநர் விஜய். இப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மே 1ம் தேதி சூர்யாவின் மாஸ்' ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது அந்த படத்துடன் விக்ரம் பிரபுவின் படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Jeyam ravi's masaala film
3 சகலகலாவல்லவன் அப்பாட்டக்கர்


அஞ்சலி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘சகலகலா வல்லவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 31-ந் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இப்படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் சுராஜ் பேசும்போது, அஞ்சலி பற்றிய ரகசியங்கள் அவிழ்த்து விட்டார்.
அவர் பேசும்போது, அஞ்சலிக்கு இந்த படத்தில் அமைதியான கதாபாத்திரம். ஆனால், படப்பிடிப்பு முடிந்து 6 மணிக்கு மேல் இவரது அட்டகாசத்தை ஆரம்பித்துவிடுவார். அவருக்கென்று ஒரு சில உதவியாளர்கள் வைத்திருப்பார். அவர்களுடன் சேர்ந்து 9 மணி வரை கிரிக்கெட் விளையாடுவார்.
நாளை படப்பிடிப்பு இருக்கிறது, தற்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றால் கேட்க மாட்டார். ஒருமுறை சூரி, அவரிடம் கோபமாக பேச, அவரது ஐபோனை அஞ்சலி உடைத்துவிட்டார். இப்போது அஞ்சலியிடம் அதற்கான பணம் கேட்டு கெஞ்சி வருகிறார் சூரி என்று பேசினார்
Look like gilma film
4 நிராயுதம்


 ’நிராயுதம்’ படத்திற்காக அரை நிர்வாணமாக நடித்த சாரிகா
சென்னை,ஏப்.27 (டி.என்.எஸ்) எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படம் ‘நிராயுதம்’. சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ’ஒரு காதல் செய்வீர்’, ’காதல் செய்ய விரும்பு’, ’ரங்கா’ ’மிட்டாய்’ உட்பட பல படங்களில் நடித்தவர். கதாநாயகியாக சாரிகா நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ‘கதம் கதம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார்.


கனி இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணகுமார் ஒளிப்பதிவு செய்க்கிறார். ஆர்.ஜி.ஆனந்த் படத்தொகுப்பு செய்ய, மோகனமகேந்திரன் கலையை கவனிக்கிறார். தயாரிப்பு நிர்வாகத்தை சி.ஜெயராஜ் கவனிக்கிறார்.



கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.பி.ராஜதுரை இயக்குகிறார். படம் குறித்து கூறிய இயக்குநர் ராஜதுரை,   ”கதாநாயகன் சந்தோஷ் அமெரிக்காவிலிருந்து வரும் பந்தா பேர் வழி. சாப்ட்வேரில் பணிபுரிபவர் சாரிகா. அறிமுக நடிகரான வெங்கட் கால் டாக்சி டிரைவர். சரிகா வேலை முடிந்து நடு இரவில் வெங்கட்டின் கால் டாக்சியில் பயணிக்கிறார். அவருக்கு மயக்க மருந்து ஸ்பிரே செய்து அவளை கடத்துகிறான். கண்விழித்து பார்க்கும் போது அரை குறை ஆடையுடன் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறாள். அரை குறை ஆடையுடன், தனது ஆடைகளையும், தப்பிக்க வழியையும் தேடி ஒவ்வொரு அறையாக கடந்து வரும் போது ஒரு அறையில் ஹீரோ சந்தோஷும் அரை குறை ஆடையுடன் அடைத்து வைக்கப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள்.



அரைகுறை ஆடையுடன் இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை! ஊட்டியில் பங்களா போன்று அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.” என்றார்.



5 SPECIAL ID


Chan Chi-Lung has been an infiltrator in Cheung Mo-Hung's Hong Kong triad gang for many years. After a failure of a recent negotiation by Lung with the other three local triad gangs on behalf of Hung makes the latter suspicious of Lung's identity. Hung sets to wipe out every undercover cop in his gang and as a result many cops are caught and wiped out. Sensing the danger, Lung requests to put an end to his undercover career from his captain, Cheung. However, Cheung sends Lung to Mainland China to infiltrate a business of "Special Identity" trading instead. The business is run by Hung's best protégé, Sunny, who was Lung's previous buddy in the gang. Cheung promises to reinstate Lung's police identity in conclusion of the mission once Sunny's business breaks down. Lung agrees, and joining him are local police officer Fang Jing and her chief Lei Peng from the Mainland Chinese police force. But before they can get to Sunny, the latter suddenly vanishes leaving Lung exposed and in great ..


நன்றி - மாலைமலர் , தினமணி , ஆல் சினி வெப்சைட்