Friday, June 13, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 13 6.2014 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

நான் தான் பாலா - நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக் மீண்டும் நாயகனாகியிருக்கும் படம் ’நான் தான் பாலா’. இதில் விவே அப்பாவி பிராமணர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ராசைய்யா என்ற படத்தை இயக்கிய கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.


வெங்கட் கிரிஷ் இசையில் அமரர் வாலி மற்றும் நா.முத்துக்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு நாளை (டிசம்பர் 28) காலை ஒன்பது மணிக்கு, கமலா சினிமாஸில் நடைபெற உள்ளது.


விவேக்கின் ஹீரோ அவதாரம் இந்த முறை வெற்றி கோட்டை தொட்டு விடும் என்றே தெரிகிறது


நான் தான் பாலா ! கேட்க்கவே கொஞ்சம் வித்தியாசமா இருக்கு இல்ல ? ஆம் நம்ம காமெடி நாயகன் விவேக் நடித்து வெளியாகாவுள்ள திரைப்படம் தான் இது. விவேக் தான் ஹீரோ அவரே மாறு பட்ட வேடத்தில் நடித்து 

கலக்கியுள்ளார். இவர் ஐயரா இல்லை ரவுடியா ? இல்லை சைலன் வில்லனா என்று தெரியாத அளவு இந்த படத்தில் ஏகப்பட்ட குழப்பம் ! 


மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள விவேக்கைப் பார்த்தால் ஒரு குட்டி கமலகாசனைப் போல இருக்கார் என்று, இந்த படப்பிடிப்பை பார்த்தவர்கள் வாயில் விரலை வைக்கிறார்கள். பல காமெடி நடிகர்கள் இப்போதெல்லாம் ஹீரோதான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறார்கள். சிவகார்த்திகேயன் முன்னேறியதைப் பார்த்து சந்தானம் ஹீரோ நடிக்க ஆரம்பிக்க, இப்ப விவேக்கும் இதில் குதித்துவிட்டார் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. 


ஜூன் 13ம் திகதி நான் தான் பாலா வெளியாகும் என்று கூறப்படுகிறது ஆனல் உண்மை நிலவரம் இதுவரை தெரியவில்லை. ஆனால் படம் சூப்பராக இருக்கும் என்று அடித்து கூற முடியும் சார் என்கிறார்கள். காமெடி கொஞ்சம், திரிலிங் கொஞ்சம், ஸிரியஸ் கொஞ்சம் என்று போட்டு தாக்கி பின்னி பெடல் எடுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.


 ஈரோடு  ஸ்ரீ கிருஷ்ணா , ஸ்ரீ நிவாசா வில்  ரிலீஸ்


2 முண்டாசுப்பட்டி-மூட நம்பிக்கையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் முண்டாசுப்பட்டி. இப்படத்தில் விஷ்ணு நாயகனாவும் நந்திதா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ராம் இப்படத்தை இயக்கியிருக்கிறார். திருக்குமரன் எண்டர்டைன்மெண்ட் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது, முண்டாசுப்பட்டி என்னும் கற்பனையான கிராமத்தில் 1947-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்தில் இருந்து அக்கிராம மக்கள் யாரும் புகைப்படம் எடுப்பதில்லை. அப்படி புகைப்படம் எடுத்தால் இறந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

புகைப்படக் கலைஞனாக இருக்கும் விஷ்ணு, தன் உதவியாளர் காளியுடன் அந்த கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள ஒருவரை புகைப்படம் எடுக்கிறான். அந்த புகைப்படத்தால் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக, நாயகனை அந்த கிராமத்திலேயே மக்கள் சிறை வைக்கிறார்கள். அதற்குப்பின் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு நாயகன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே முண்டாசுப்பட்டி படத்தின் கதை என்றார்.

மேலும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சந்தியமங்கலம் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1980களில் நடப்பதால் அவ்வூரில் உள்ள வீடுகளை அதற்கு ஏற்றார்போல் மாற்றினோம். இப்படம் மூட நம்பிக்கையை சாடுகிற படமாக இருக்காது. மூட நம்பிக்கையால் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக படமாக்கியுள்ளோம் என்றார்.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் ஜூன் மாதம் 13-ம் தேதி வெளியாகிறது.   


 ஈரோடு  தேவி அபிராமி , சண்டிகா வில்  ரிலீஸ் 

உயிருக்கு உயிராக,-- வெள்ளி விழாப்படங்களை அளித்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரிப்பில் வெளியாகவிருக்கும் இந்தியத் தமிழ் திரைப்படம். இதனை விஜயா மனோஜ்குமார் இயக்குகிறார். மாணவர்கள் கல்லூரி வாழ்க்கை முறை பற்றியும் அவர்கள் மீதான பெற்றோர்களின் கவலைப்பற்றியும் இந்தத் திரைப்படத்தின் கதை இருக்கும் என மனோஜ்குமார் கூறியுள்ளார்.


4 ‘திருடு போகாத மனசு’.
முழுக்க முழுக்க கிராமிய கலைஞர்கள் நடிக்கும் திருடு போகாத மனசு
 
அஜந்தா கலைக்கூடம் என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘திருடு போகாத மனசு’. ஒரு கிராமிய கலைஞன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வருகிறான். பிறகு அதில் எழும் பிரச்சினைகளையும் சந்திக்கிறான். இதோடு சொந்த பிரச்சினையும் சேர்ந்து விடுகிறது. இதிலிருந்து விடுபட்டு சினிமாவில் வெற்றி பெற்றானா? என்பதே படத்தின் கதை.

இப்படத்தில் முழுக்க முழுக்க கிராமியக் கலைஞர்களான செந்தில் கணேஷ், சாய் ஐஸ்வர்யா ஆகியோர் கதாநாயகன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் சத்யா, ராஜேஷ், ராஜலட்சுமி, கனகாமணி, ஆறுமுகம், தேன்மொழி போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.

இப்படத்தை செல்ல.தங்கையா என்பவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார். இவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஸ்வநாத் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் போன்ற கதாநாயகர்கள் சொந்தக் குரலில் பாடியுள்ளனர். அதே வரிசையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தையும் கதாநாயகனே பாடியுள்ளார். பாடல்கள் மண் வாசனை மாறாமல் கிராமியப் பாடல்களுக்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற இடங்களிலேயே நடைபெற்று முடிவடைந்தது. இம்மாதம் வெளிவருகிறது


ஈரோட்டில் ரிலீஸ் இல்லை


Vazhum Deivam Movie Shooting Spot Stills

5 வாழும் தெய்வம் -   இது பற்றி தகவல்கள்  கிடைக்கலை




6   THE  RAID 2  -Only a short time after the first raid, Rama goes undercover with the thugs of Jakarta and plans to bring down the syndicate and uncover the corruption within his police force.

He thought it was over. After fighting his way out of a building filled with gangsters and madmen - a fight that left the bodies of police and gangsters alike piled in the halls - rookie Jakarta cop Rama thought it was done and he could resume a normal life. He couldn't have been more wrong. Formidable though they may have been, Rama's opponents in that fateful building were nothing more than small fish swimming in a pond much larger than he ever dreamed possible. And his triumph over the small fry has attracted the attention of the predators farther up the food chain. His family at risk, Rama has only one choice to protect his infant son and wife: He must go undercover to enter the criminal underworld himself and climb through the hierarchy of competing forces until it leads him to the corrupt politicians and police pulling the strings at the top of the heap. And so Rama begins a new odyssey of violence, a journey that will force him to set aside his own life and history and take on ... 


erode  vsp



How to Train Your Dragon 2

When Hiccup and Toothless discover an ice cave that is home to hundreds of new wild dragons and the mysterious Dragon Rider, the two friends find themselves at the center of a battle to protect the peace.

 

It's been five years since Hiccup and Toothless successfully united dragons and vikings on the island of Berk. While Astrid, Snotlout and the rest of the gang are challenging each other to dragon races (the island's new favorite contact sport), the now inseparable pair journey through the skies, charting unmapped territories and exploring new worlds. When one of their adventures leads to the discovery of a secret ice cave that is home to hundreds of new wild dragons and the mysterious Dragon Rider, the two friends find themselves at the center of a battle to protect the peace. Now, Hiccup and Toothless must unite to stand up for what they believe while recognizing that only together do they have the power to change the future of both men and dragons


நன்றி - தினமணி , தினமலர் , மாலை மலர் , அதிர்வு.காம்

0 comments: