Thursday, April 10, 2014

ராஜேஷ் குமார் , டி ராஜேந்தர் இணைகிறார்கள்!!??

1. பஸ் ,ரயில் பயணங்களில் தனிமையான ,ஜன்னல் ஓர இருக்கை தான் பெரும்பாலானோர் தேர்வாக இருக்கிறது



==============



2 தொலைதூரப்பேருந்துப்பயணத்தில் எத்தனைமணிக்குஊர் போய்ச்சேரும்? னு கேட்டா ஓட்டுநர் சொல்லமாட்டார்.சொன்னா குறித்த நேரத்தில் போய்ச்சேரமாட்டோமாம்




===============



3 சார்.இன்னும் 54 பாலோயர் வந்தா 5000* ரீச் ஆகிடுவேன்.PLS HELP & RT.கவுண்டமணி - 4946 இருந்தப்போ என்ன செஞ்சே? அதையே இப்பவும் செய்




===============




4 என்ன ட்வீட் போடறதுனு நகத்தைக்கடிச்ட்டே யோசிக்கும் தமிழன் யாராவது ஏதாவதுு டேக் ஓப்பன் பண்ணிக்் குடுத்துட்டா மானாவாரியா ட்வீட்டி அசத்துவான்




===============




5 மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவ்க்கும் ,ரோமியோ வுக்கும் FACE VALUE முக்கியம்.முகம் அழகா இருக்கத்தேவைஇல்லை.




==================




6 புருசனுக்கு சுகர் இருந்து பொண்டாட்டிக்குஇல்லைன்னா அடிக்கடி அந்தப்புருசன் தன் பொண்டாட்டிக்கு ஸ்வீட் வாங்கித்தருவான் -கொல்லிமலை சித்தர்




===================




7 நீங்க்ள் கோபமாக்வோ ,அதீத துக்கத்திலோ இருக்கும்போது உங்கள் மனதில் எழும் எண்ணங்களை நெருக்கமானவரிடம் சொல்லி விடுங்கள்




================



8 ஏக்கராக்கணக்கில் வயல்வெளிப்பயணம்.எங்கேயோ புண்ணாக்கும் ,தவிடும் தண்ணீரில் கலக்கும் வாசம்.ஆஹா! போன ஜென்மத்துல எருமையா இருந்திருப்பேனோ?




=================



9 பஸ் ஸ்டேண்ட் டிலேயே மாவட்ட பொது நூலகம் உள்ள ஊர் தமிழ் நாட்டிலேயே அரியலூர்,விழுப்புரம்  மட்டுமே ( என நினைக்கிறேன்)




=================


10 இங்கு காணாமல் போன விமானம் ,கப்பல் ,ராக்கெட் எங்கே இருக்கு?னு மை போட்டுப்பார்த்து சொல்லப்படும் - கொல்லிமலை சித்தர்


====================

11 நீண்ட இடைவெளிக்குப்பின் ஆற்றில் நீர் வந்தால் காய்ந்த மணல் உறிஞ்சிக்கொள்வது போலே உன்னை ஒரு பிரிவுக்குப்பின் பார்க்கையில் விழிகள் நனைகின்றன


=================


12 இங்க்லீஷ் தெரிஞ்சவங்க எல்லாரும் புத்திசாலியும் இல்லை.தமிழ் மட்டுமே தெரிஞ்ச யாரும் முட்டாளும் இல்லை.


=============


13 பொண்ணுங்க கிட்டே இயல்பா பேசுனாலே போதும்.ஆனா தமிழன் சரிம்மா,சரிப்பா,இல்லடா செல்லம் அப்டினு செயற்கையா பாச மழை பொழிவான்


====================


14 4 பேர் முன் நாய்க்குட்டி மாதிரி தன் துணை குழைவதை பெண் பெருமையாகக்காட்டிக்கொள்வாள்.அவமானம் ஆணுக்கே!்


====================


15 காதலிக்கும்போதும் கம்பீரத்தை விட்டுத்தராத ஆணும் ,கோபத்திலும் நளினத்தை விட்டுவிடாத பெண்ணும் அபூர்வர்கள்



=================


16  தன் காதலன் காதல் வர்ணிப்பில் கம்பனாக இல்லாவிட்டாலும் காதல் விளையாட்டில் வம்பனாய் இருக்கவே பெண் ஆசைப்படுவாள்


===============


17 கடை வாசலில் காரை நிறுத்தி இறங்காம கடைப்பையனை வர வெச்சு ஜூஸ் குடிப்பதைக்கவுரவமாககருதுகிறார்கள் சிலர்



==================


18  ராஜேஷ் குமார் ன் முதல் க்ரைம் நாவல் நந்தினி 440 வோல்ட்ஸ் .இதை டி ஆர் படமா எடுத்தா என்ன டைட்டில் = நந்தினி என் நந்தி நீ!


=================

19 பாலா - கரகத்தை தலையில் வெச்சு ஆடறீங்க .அப்போ... 



எம் சசிகுமார் - நண்பன் கரகத்தை தட்டி விட்டு துரோகம்! அட விடு கிரகம்.வேணாம் இனி கரகம்


======================


20 ஆண்கள் ஸீன் போட்டு என் ஜென்மத்தில் நான் பார்த்ததே இல்லை.சீன் படம் போட்டா வேணா பார்ப்பாங்க


===================



0 comments: