Friday, May 09, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (9 5.2014 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1.யாமிருக்க பயமே - விண்ணைத்தாண்டி வருவாயா', 'நீதானே என் பொன்வசந்தம்' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தற்போது ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ‘யான்’ படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய டீ.கே. என்பவர் இயக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா ஆகியோர் நடிக்கின்றனர்.

முற்றிலும் மாறுபட்ட கதை அம்சமும், காட்சி அமைப்பும் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நைனிடாலில் நடந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ‘யாமிருக்க பயமே’ என பெயரிட்டுள்ளனர்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் எல்.ரெட்குமார் கூறுகையில், பயம் என்ற ஒரு வார்த்தையை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் வெளிவர இருககும் படங்களில் மிக முக்கிய படமாக இது இருக்கும் என தெரிவித்தார். 


யானை நடந்து வரும்போது மற்ற மிருகங்களெல்லாம் ஒதுங்கி வழி விடும். அதுபோல், நாளை சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்’ வெளியாக இருக்க, மற்ற எல்லாப் படங்களுமே ஒருவாரம், இரண்டு வாரம் தள்ளி வெளியாக இருந்தன. 


இந்நிலையில், அடுத்த இரண்டுவாரங்களுக்கு வெளியாகும் படங்களின் லிஸ்ட் ஒருமாதிரி முடிவாகி விட, எல்லோருக்கும் வழிவிட்டு எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் தயாரிக்கும் ‘யாமிருக்க பயமே’ ஜூன் 9-ம் தேதி வெளியாவதாக நேற்றுதான் அறிவிக்கப்பட்டது.


நேற்று மாலை திடீரென்று ‘கோச்சடையான்’ வெளியீடு தள்ளிப்போகும் செய்தி வர, அடுத்தடுத்த வார வெளியீடுகளும் குழப்பமான நிலையில், கிடைத்த கேப்பை விட்டுவிடாமல் ஒரு மாதம் முந்தி வர முடிவெடுத்து விட்டது ‘யாமிருக்க பயமே’ படக்குழு.


மணமக்களை வாழ்த்த வந்தவர் திடீர் மாப்பிள்ளையான கதை போல், யாருமே எதிர்பார்க்காமல் சில மணிநேரங்களில் முடிவாகி, 9-ம் தேதி ரிலீஸாக போட்டியே இல்லாமல், உடனே வெளியாகிறது ‘யாமிருக்க பயமே’. கிருஷ்ணா, கருணா, ரூபா, ஓவியா நடித்திருக்கும் படத்தை ‘டீகே’ இயக்கியிருகிறார்.


அவர்கள் நன்றி சொல்ல வேண்டியது ‘கோச்சடையானு’க்குதான்..!


ஈரோடு  ராயல் , அன்னபூரணி , ஸ்ரீநிவாசா வில்  ரிலீஸ் 

 
2 அங்குசம்' - தகவல் அறியும் உரிமை சட்டத்தினை மக்களிடம் எடுத்து செல்வதே "அங்குசம்' படம் .தூத்துக்குடி, : தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களிடையே கொண்டு செல்வதற்காகவே "அங்குசம்' படம் தயாரிக்கப்பட்டுள்ளது, என அதன் கதைக்கு கருவாக இருந்த சீனிவாசன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் அவர் தெரிவித்ததாவது: தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து திருச்சியை சேர்ந்த நான் தொடர்ந்து போராடி வெற்றி கண்டேன். அதற்கு நான் பல அச்சுறுத்தல்கள், உட்பட பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தேன். இதனை பத்திரிகையில் செய்தியாக வெளியிடப்பட்டது.இதனைப்படித்த இப் படத்தின் இயக்குனர் மனுக்கண்ணன், அரபு நாட்டில் இன்ஜினியரான அவர்,தகவல் அறியும் உரிமை சட்டத்தினையும், நான் பட்ட கஷ்டங்களையும், கருவாக கொண்டு படம் தயாரித்துள்ளார். இந்தப்படம் மக்களிடம் சென்று சேர வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்பதே இப்படத்தின் நோக்கமாகும். 

  தமிழகம் முழுவதும் இப்படம் திரையிடப்படவுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பார்த்து பயன் பெற வேண்டும், என அவர் தெரிவித்தார். இதன் பாடலாசிரியர் திரவியன் உடனிருந்தார்.

ஈரோடு சங்கீதா வில் ரிலீஸ்

 

3

The Tower (2012)
"Ta-weo" (original title)

On Christmas Eve at Tower Sky, an ultra-luxurious building complex, a White Christmas party is held to dazzle its equally high-end tenants and VIP guests. Dae-ho, the manager of the building and single father, is forced to cancel plans with his daughter Hana to work the event. His Christmas is saved when Yoon-hee, the food mall manager with a secret crush on Dae-ho, offers to babysit Hana during the party.


 Meanwhile, Young-ki the legendary fire chief of Yoido Station has finally promised his first holiday date night to his long suffering wife. The party is in full swing with the spectacular sight of two helicopters flying overhead just to spray snow on the partygoers and make everything perfect. When unthinkable disaster strikes, Dae-ho and Young-ki must summon all their strength and courage to save the lives of thousands but at what cost to themselves and their loved ones? 

இது ஆல்ரெடி  தேவி அபிராமியில்  ரிலீஸ் ஆகி ஓடி முடிஞ்சுது
 

4  shark returns -பழைய படம். பாலைவனத்திமிங்கலம் கற பேர்ல வருது

ஈரோடு விஎஸ்பி யில்  ரிலிஸ்

 

5   வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்-


நகைச்சுவை நடிகர் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.


பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் ஸ்ரீநாத் இயக்கத்தில் இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். சந்தானம் ஜோடியாக ஆஷ்னா சவேரி நடித்துள்ளார். பவர் ஸ்டார் இதில் கவுரவ வேடத்தில் தோன்றுகிறார். இப்படம் வரும் மே 16ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படம் நாளை மறுநாள் அதாவது மே 10ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.


‘கோச்சடையான்’ ரிலீஸ் தேதி தள்ளிப்போனதே இதற்கு காரணம். மே 9ம் தேதி ரிலீஸாகவிருந்த கோச்சடையான் திடீரென மே 23ம் தேதிக்குத் தள்ளிப் போனது நினைவிருக்கலாம். அதனால மே 16ல் வெளியாகவிருந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் ஒரு வாரம் முன்னதாகவே திரைக்கு வருகிறது.


இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான மரியாதா ராமண்ணா படம் இந்தியில் சன் ஆப் சர்தார் பெயரில் ரீமேக் ஆகி பெரிய வெற்றிபெற்றது. இதே படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சந்தானத்துடன் இணைந்து “சோலார் ஸ்டார்” ராஜகுமாரன் நடிக்கிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் இணைந்து நகைச்சுவையில் கலக்கி இருந்தனர்.


அதற்குப் பிறகு பல சர்ச்சைகளில் பவர் ஸ்டார் சிக்கியதால் அவருக்கும் சந்தானத்திற்கும் பேச்சுவார்த்தையில்லை என்று கூறப்பட்டது. எனவே, தான் பவர் ஸ்டாருக்குப் பதிலாக “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தில் சோலார் ஸ்டாரை ஒப்பந்தம் செய்து இருந்தார். ஆனால் இப்போது சோலாரும், பவரும் இணைந்து படத்திற்கு மேலும் பிரகாசத்தை தரவிருக்கின்றனர்.


ஆமாங்க, படத்தில் பவர் ஸ்டாரும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சோலார் ஸ்டார் யார் என்று பலருக்கு சந்தேகம் இருக்கலாம். அவர்வேறு யாருமில்லை. அவர் தான் தேவயானியின் கணவர் ராஜகுமாரன். அவர் ஏற்கனவே திருமதி. தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழக மக்களை அலறடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்னைக்கு மாலைல தான் தியேட்டர் புக் ஆகும்.அநேகமா அபிராமி, ஆனூர்



நன்றி - தினமலர் , தினமணீ , மாலை மலர் , ஆல் சினி வெப்சைட்ஸ்

0 comments: