Showing posts with label சாதி. Show all posts
Showing posts with label சாதி. Show all posts

Tuesday, March 31, 2015

கொம்பன்' பிரச்சினை க்ளியர்டு - ஏப்ரல் 1 ல் முன் கூட்டியே ரிலீஸ்

'கொம்பன்' பத்திரிகையாளர் சந்திப்பு | படம்: எல்.சீனிவாசன்
'கொம்பன்' பத்திரிகையாளர் சந்திப்பு | படம்: எல்.சீனிவாசன்
'கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற இரு நீதிபதிகள் 'கொம்பன்' படத்தை இன்று பார்த்தனர். இதைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்கிரமன், கொம்பன் பட இயக்குநர் முத்தையா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தாணு : '' 'கிழக்குச் சீமையிலே' படம் மாதிரி காவியமான படம் 'கொம்பன்'. இந்தப் படத்தில் எந்த சாதிய மோதலும் இல்லை. எந்த சூழலிலும் யாரையும் இழிவுபடுத்தவேண்டும் என்று எந்தக் காட்சியும், வசனமும் இல்லை. ஆனா, ஏன் இப்படிப்பட்ட இன்னலில் சிக்கி இருக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை.'' என்று தாணு பேசினார்.
சரத்குமார்: ''படம் சென்சார் ஆனபிறகு தனிநபரோ, அமைப்போ தடை செய்வதற்கு உரிமை இருந்தால் சென்சார் என்பது எதற்காக இருக்கிறது.
மத்திய அரசின் தணிக்கைக் குழு மூலம் படம் சென்சார் ஆன பிறகு அந்தப் படத்தைப் பற்றி முடிவு செய்ய யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. இனிவரும் காலங்களில் தனிநபரோ, அமைப்போ படத்துக்கு எதிராக இதுபோன்று ஈடுபடவேண்டாம். அப்படி ஈடுபட்டால் திரையுலகத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்.
மாமனார், மருமகன், அம்மா, மனைவி என்று பாசமுள்ள சிறந்த கதையைப் படமாக சொல்லியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் எந்த சாதியையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ சொல்லப்படவில்லை. சாதிப் பிரச்சினையோ, சாதிக் கலவரமோ, தூண்டுகின்ற சம்பவமோ, வசனங்களோ இல்லை.
எல்லாத் துறைகளையும் சார்ந்தவர்கள், சிறப்பாக கணிக்கக்கூடியவர்கள் தான் தணிக்கைத் துறையில் இருக்கிறார்கள்.



பொறுப்பில்லாதவர்கள் திரைப்படங்களை எடுப்பது மாதிரியான சூழலை உருவாக்குவது தவறு என்பது எங்களின் ஒருமித்த கருத்து.'' என்று சரத்குமார் பேசினார்.
விக்கிரமன்: '' 'கொம்பன்' படத்தில் ஹீரோ எந்த சாதி என்பதைக் கூட படத்தில் சொல்லவில்லை. இரு சாதியினருக்கான மோதல் என்கிற பிரச்சினை கிடையவே கிடையாது. இந்தப் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தவறாகத் தெரிகிறது.
இதில் சாதி மோதலைத் தூண்டுவதைப் போல இருக்கிறது என்று படம் பார்த்துவிட்டு யாராவது சொன்னால் நான் திரையுலகத்தை விட்டே போய்விடுகிறேன்.'' என்று விக்கிரமன் பேசினார்.
ஞானவேல்ராஜா: '' மார்ச் 27ம் தேதி 'கொம்பன்' ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டபோது எந்த போராட்டமும், வழக்கும் இல்லை. ஆனால், 'கொம்பன்' படத்தின் வேலைகள் முடியாததால் ஏப்ரல் 2ல் ரிலீஸ் என்று திட்டமிட்டோம்.2ம் தேதி ரிலீஸ் என்றதும் அத்தனைப் பிரச்சினைகளும் பூதாகரம் ஆனது. ஏப்ரல் 10ம் தேதி படம் ரிலீஸ் என்றால் இந்தப் பிரச்சினையே எனக்கு இல்லை'' என்றார்.
பத்திரிகையாளார் சந்திப்பின்போது ஞானவேல்ராஜா உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்கலங்கினார்.
ஏப்ரல் 2 அன்று வெளியாக இருந்த 'கொம்பன்' திரைப்படம் ஏப்ரல் 1 (புதன்கிழமை) அன்று ரிலீஸ் ஆகிறது.


'கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா 'கொம்பன்' திரைப்படத்தில் சாதிய ரீதியான காட்சியமைப்போ, வசனங்களோ இல்லை என்று மறுத்திருக்கிறார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''ஏப்ரல் 1 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கொம்பன்' திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திரைப்படத்தில் எந்த ஒரு ஜாதியைக் குறிப்பிடும் வசனங்களோ, காட்சியமைப்போ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.
இதில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தியோ அல்லது குறிப்பிட்ட சாதியை தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
யூகத்தின் அடிப்படையில் 'கொம்பன்' திரைப்படத்தைப் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.
'கொம்பன்' திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன்'' என ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
'கொம்பன்' திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. ஏப்ரல் 2ல் 'கொம்பன்' திரைப்படம் வெளியாகிறது.

  • எந்த படத்தை எதிர்த்து வழக்கு போட்டா பிரபலமாக முடியுமோ அந்த படாத எதிர்த்து தான் எல்லாம் பண்ணுவாங்க.. ஒரு புது நடிகருட படமா இருந்திருந்த இத பத்தி பேசவே மாட்டாங்க !.... தட்டிய கேட்க 1000 ஜாதி பிரச்சனை நம்ம நாட்டுல இருக்கு , அதெல்லாம் விட்டுபுட்டு சினிமா படத்து மேல எங்க வழக்கு போடுறீங்க !...
    Points
    335
    about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Reegan Reegan Lecturer at lecturer in college 
      இனி வரும் காலங்களில் படத்தை தணிக்கை குழுவிடம் காண்பிபதற்கு முன்பு மாநிலத்தில் உள்ள எல்லா சாதி கட்சி மதம் சார்ந்த கட்சிகளிடம் காண்பிக்க வேன்டும் என சொல்லி போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி . ஒரு தணிக்கை குழுவினால் சான்றிதழ் வழங்கிய படத்தினை எதிர்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . எல்லாவற்றையும் விட சிறந்த ஒரு விசயம் என்னவென்றால் ஒரு படத்தை பொழுது போக்கு நிகழ்வாக பார்க்கும் பொழுது எந்த பிரச்சினையும் வர வாய்ப்பு இல்லை .
      about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Durairaj  
        திரைப்பட தணிக்கை துறையிலே இதற்கு ஆட்சேபனை எழுந்துள்ளது என்று கேள்வி. மறு தணிக்கை செய்யப்பட்டதே ஏதோ ஒரு காரணத்திற்குத்தானே. திரைப்பட துறையில் ஒரு குறிபிட்ட ஜாதியை பெருமைபடுத்தி படம் எடுப்பது இன்று நேற்றா நடக்கிறது.
        Points
        1315
        about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Parthi  
          கமல் சண்டியர் என பெயர் வைத்த உடனே வரிந்து கட்டி கொண்டு வந்த கிருஷ்ணசாமி சில மாதங்களுக்கு முன் சண்டியர் என படம் வந்த போது மட்டும் தூங்கி கொண்டு இருந்தாரா ...ஏன் பிரபலங்களின் படங்களை எதிர்த்தால் மட்டும் தான் கிருஷ்ணசாமி என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை காட்டவா
          Points
          2315
          about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
          • மாரிச்சாமி  
            பாரதி தம்பி திரு.க. கிருஷ்ணாசாமி எதிர்ப்பது ஜாதி ஏற்ற தாழ்வுகளை மட்டுமே தவிர வேருன்றும் இல்லை.....ஒரு குறிப்பிட்ட ஜாதியை மட்டும் உயர்த்தி பேசுவது சரி அல்ல.......
            about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Chandra_USA  
            ஜாதி வேறுபாடு தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. அதை சினிமாவில் கட்டினால் தவறா?
            Points
            14240
            about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
            • DuraiRaj  
              நீங்கள் சொல்வது சரிதான். சமிபத்தில் தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினாரால் 60 கொலைகள் நடந்துள்ளது. அந்த ஜாதியின் தவறை சுட்டிக்காட்டி யாராவது படம் எடுப்பார்களா?
              about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Navneeth  
              நல்லது . தேவையில்லாத விமர்சனங்கள் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு இது எல்லாம் நம் அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை போலும் ...முதலில் சண்டியர்.பின்பு விஸ்வரூபம்.அடுத்து கொம்பன் ..உழைப்பின் கஷ்டம் நம் அரசியல் வாதிகளுக்கு தெரியாது அல்லவா அதான் போலும்..அ
            நன்றி - த இந்து

            Thursday, July 04, 2013

            சாதி த்தது என்ன? தர்மபுரி இளவரசன் இறப்பு உணர்த்துவது என்ன? மக்கள் அலசல்

             

            தர்மபுரி மாவட்ட கலப்பு திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திவ்யாவின் கணவர் இளவரசன் , ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.

            காதல் திருமணத்தால் கலவரம்

            தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், காதல் திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யாவின் தந்தை நாகராஜன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 



            அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை இளவரசன் கடத்தி்ச் சென்று கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக , கணவன் இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என திவ்யா கூறியதாக தெரிகிறது. பின்னர் நேற்று இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனுவை தாய் தேன்மொழி வாபஸ் பெற்றார். வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



            ரயில் முன் பாய்ந்து தற்கொலை

            இந்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் ரயில் தண்டவாளத்தில் இளவரசன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டனர். இன்று மதியம் தண்டவாளம் அருகே தனது பல்சர் பைக்கி்ல் வந்ததகவும், பைக்கை நிறுத்திவிட்டு மதுகுடித்ததாகவும், பின்னர் ரயிலில் பாயந்து தற்கொ‌லை செய்ததாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது சட்டை பையில் இரு கடிதங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 


            தர்மபுரி: தர்மபுரி திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளவரசனின் உடல் இன்று ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சந்தேக மரணமாகவும் கருதப்படுகிறது.
            தான் இனி இளவரசனுடன் வாழப்போவதில்லை என்று திவ்யா நேற்று நீதிமன்றத்தில் கூறிய நிலையிலேயே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
            தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், தண்டவாளத்தின் அருகிலிருந்து அவரது பைக் மற்றும் கைப்பை கைப்பற்றப்பட்டதோடு, அவரது சட்டை பையிலிருந்து 2 கடிதங்கள் கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
            144 தடை உத்தரவு
            இதனிடையே இளவரசனின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதட்டத்தினால், தர்மபுரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
            முன்னதாக, தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த திவ்யாவும். நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனும் காதலித்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் காதலுக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

            இதையடுத்து, எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த விரக்தியில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் 3 தலித் கிராமங்களில் உள்ள வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

            கலப்பு திருமணத்தால் நடந்தனைந்த வன்முறை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

            இந்த நிலையில், திவ்யாவின் தாயார் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

            இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி திவ்யா உயர் நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தாயாருடன் செல்ல விரும்புகிறேன் என்றும் இளவரசனுடன் இப்போது போக விரும்பவில்லை என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து தாயாருடன் திவ்யா செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.

            இந்த நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தாயாருடன் மகள் வந்துவிட்டதால் வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தேன்மொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

            இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த திவ்யா செய்தியாளர்களிடம் பேசியபோது, எனது தந்தையின் நினைவு தொடர்ந்து இருப்பதால், இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை என்றும் அம்மாவின் முடிவுப்படி வாழ தயாராகிவிட்டேன் என்றும் கூறினார்.
            இந்த நிலையில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் இன்று பிற்பகல் 3.30மணிக்கு இளவரசன் உடலை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

            இளவரசனின் மோட்டார் சைக்கிள், கைப் பை, சட்டைப் பையில் இருந்து இரண்டு கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

            தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


             வாசகர் கருத்து 


            1. காதல் எனும் போர்வையில் அந்த மகளை பெற்றோரிடம் இருந்து பிரித்தனர்....தகப்பன் உயிர் போச்சு...இப்போது, அதே காதல் மகனை பெற்றோரிடம் இருந்து பிரித்துள்ளது......பாழாய்ப்போன காதல்............பெற்றோரின் மனதை நோகடித்து அப்படி என்ன காதல் வேண்டிக் கிடக்கு? பெற்றோரால் பிறந்த நாம், அவர்களை பகைத்து வாழ்ந்து பயன் என்ன? பெற்றோர், பிள்ளை உறவை முறிக்கும் வகையிலான காதலை யாரும் ஆதரிக்காதீர்கள்......சமூக நீதி என்று பசப்ப வேண்டாம்....பெற்றோரின் மன வலியை யாரும் சட்டை செய்வதில்லை..




            2. காமம் சில சமயம் காதல் எனும் போர்வையில் உயிர்களை காவு வாங்கி விடுகிறது...உண்மை அன்பான காதலி உயிரிழப்புக்கு பின் அணு அணுவாக வேதனைகளை தான் அனுபவிப்பாள்....வெறும் காம காதல் வேதனை தராது...மாறாக வேற்று உறவை தான் தேடும்..நல்ல உலகமடா இது...



            3. பெண்களே.....உண்மை காதல் இல்லாவிட்டால் தயவுசெய்து திருமணம் செயாதீர்...உங்கள் வேலை முடிந்ததும் இடத்தை காலி பண்ணி விடுங்கள்.... 


            4. காதலிப்பதில் உண்மையான ஆண்கள் எப்போதும் மிக கவனத்துடன் செயல்படுவது நல்லது....போன உயிர் மீண்டு வராது..எப்படி போனது என்பதை விட....இனி வராது என்பதை காதல் செய்யும் உண்மையான ஆண்மகன்கள் யோசிக்க வேண்டும்....பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே என்ற பழைய பாடல் நினைவு வருகிறது....இறந்து போன அன்பருக்காக ஆண்டவனிடம் வேண்டிகொள்வோம்... 



            5. இரண்டு பேரை பலிகொடுத்து தன் கூற்றை நிருபித்து கொண்ட "பா ம க" ஒரு நாள் இதற்கு பதில் சொல்லியாகவேனும். 


            6. பெற்றோர்கள் இளம் வயது பிள்ளைகளை பக்குவ படுத்தி வளர்க்க வேண்டும்.... 


            7. P Ramesh Ponnaih நிதானம் இல்லாத வயதில் எடுத்த விபரீத (திருமணம் உட்பட ) முடிவு பெற்றோரின் நிலை மற்றவர்களுக்கு இது ஒரு படிப்பினை . பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மற்றும் நாம் வாழும் சமூகமும் நல்ல பண்பாட்டினையும் பழக்கத்தையும் கற்றுத்தர வேண்டும் . 



            8. அது தான் இப்பொழுது தயாரிக்கும் படங்கள் எல்லாம் 80 % சமுதாயத்தை சீரலிப்பதாகவெ உள்ளன... அப்பாவை, டேய் டாடி, என்றும், எருமை என்றும் நகைசுவை காட்சிகளில் அழைப்தாக வந்தால் எப்படி இருக்கும்... முன் காலத்தில் ரெங்கா ராவ் நடித்த படங்கள், ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று சமுதாயம் கற்கும் அளவிற்கு இருக்கும்... மக்களாக பார்த்து திருந்த வேண்டும்..


            9. Devaraj சாதிகள் இல்லையடி பாப்பா என்பது உண்மை தான். ஆனால் அதனை சாதி சமய சிந்தனையில் மூழ்கி விட்ட சமுதாயத்தில் ஒரே அடியாக, ஒரே நாளில் சாதி அற்ற நிலையை உருவாக்க முடியாது. இரண்டு மரணங்கள்: ஒன்று திவ்யாவின் தந்தை தற்கொலை, அடுத்தது திவ்யாவின் முன்னாள் கணவர் மரணம். இந்த இறப்புகளை தவிர்த்து இருக்க முடியுமா? முதல் இறப்பை தொடர்ந்து நிகழ்ந்த துயரமான நிகழ்வுகள், கொடுமைகள், உடமை இழப்புகள் என பட்டியல் நீளும். இளம் தலைமுறையினர் நன்கு சிந்தித்து செயல் பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


             வெறும் உடல் ரீதியான கவர்ச்சிக்கு இடம் கொடுத்து, பின்பு வேதனை படுவதை விட. பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். சாதி யை ஒழிகின்றேன் என்று வீராப்பு பேசும் சாதிய தலைவர்கள் தங்கள் குடும்பத்தில் சாதியை ஒழித்து, நல்ல சமுதாய தலைவர்களாக மிளிர வேண்டும். படிக்கின்ற சின்ன பசங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் திரைப்படங்கள் சீர்திருத்தம் என்ற (போர்வையில் சாதியை ஒழிகின்றேன் என்று, காதல், கத்திரி காயை உருவாக்க வேண்டாம். சமுதாயம் உருப்பட உங்கள் படம் இருக்கட்டும். அல்லது நீண்ட காமிடி படம் தயாரித்து மக்களை சிரிக்க வையுங்கள்.


            நன்றி - தினமலர்

            Saturday, December 29, 2012

            சாதி பாலிடிக்ஸ் - காதல் திருமணம் என்ற பெயரில் ‘நாடகத் திருமணங்களை’ - சிவகாமி பேட்டி

            சாதி பாலிடிக்ஸ்

            ‘‘தலித் எதிர்ப்பு தவிடு பொடியாகும்!’’

            - சீறும் சிவகாமி
            ப்ரியன்

            தர்மபுரி மாவட்டத்தில் பற்ற வைக்கப்பட்ட சாதியத் தீ, இப்போது கடலூர் மாவட்டத்தையும் கலவரப் படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் தலித் அல்லாத மற்ற சமுதாயத் தலைவர்கள் (சாதிச் சங்கத் தலைவர்கள்) கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்திருப்பது இந்த விவகாரத்தில் மேலும் உஷ்ணத்தைக் கிளப்பியிருக்கிறது.  


            தமிழகத்தை நூறாண்டு காலம் பின்னால் எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்குச் செயல்படுவது உண்மையிலேயே வருந்தத்தக்கது. அரசியல் நோக்கத்துக்காக தலித்துகளை எதிர்க்கும் போக்கு தவிடு பொடியாகும்," என்று சீறுகிறார் சமூக சமத்துவப் படை கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் ..எஸ். அதிகாரியுமான சிவகாமி.
            தீண்டாமை ஒழிக்கப்பட்ட நிலையில் மகிழ்ச்சியடைய வேண்டிய தலித்துகள், பிடிக்காதவர்களைப் பழிவாங்க வன் கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பொய்ப் புகார் கொடுத்து மற்ற சமூகத்தினரைத் துன்புறுத்துகிறார்களாமே?
            அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டது என்று அரசு சொன்னதற்கு அங்கே எதிர்ப்பு கிளம்பியது. அதுபோலத்தான் நமது நாட்டின் தீண்டாமை ஒழிப்பும். சமூக தளங்களில் இன அடிப்படையில் ஏற்ற இறக்கங்கள், உயர்வு-தாழ்வு, ஏழை-பணக்காரன் என்று வேறுபாடுகள் இருக்கிறவரையில் அடிமைத்தனங்களும், தீண்டாமையும் நிலவத்தான் செய்யும். நமது நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்


             ஆனால் இருக்கிறது என்பதற்குப் பல ஆதாரங்கள் சமூகத்தில் இருக்கின்றன. பல கிராமங்களில் உள்ள இரட்டை டம்ளர் முறை தீண்டாமையின் வெளிப்பாடு இல்லையா? ஆதிக்கச் சாதிகள் தலித்துகளோடு திருமணத் தொடர்பு கூடாது என்று சொல்லுவதும் தீண்டாமைதானே! சாதியம் பல்வேறு வடிவங்களில் நிலைபெற்றிருக்கும் இந்தச் சமூகத்தில் தலித்துகள் பல தீண்டாமைக் கொடுமைகளைச் சொல்ல முடியாத வகையில் அனுபவித்து வருகிறார்கள். 20 சத தலித் மக்களுக்கு உரிய பட்ஜெட் தொகையை அரசுகள் வழங்காமலிருப்பதும் ஒருவகை தீண்டாமைதானே!

            ஆண்டாண்டு காலமாக அடக்கி வைக்கப்பட்டு சமூகத்தில் மிக பலவீனமான நிலையில் இருக்கும் தலித்துகள் பழிவாங்கும் வகையில் வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பது காழ்ப்புணர்ச்சியில் சொல்லப்படும் குற்றச்சாட்டு. அந்தக் காழ்ப்புணர்ச்சிக்குக் காரணம் ஒடுக்கப்பட்ட அந்த மக்கள் அரசு கொடுக்கும் படிப்பு, வேலை வாய்ப்பு சலுகைகளைப் பெற்று முன்னேறி வருவது தான். அடக்கப்பட்டவர்கள் அதிகாரம் பெறுவதும், வாழ்க்கையில் உயர்வதும் ஆதிக்கச் சாதிகளுக்கு வேப்பங்காயாக இருக்கிறது.



             வன்கொடுமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல் துறை தலித்துகள் பேச்சைக் கேட்டு செயல்படுவார்கள் என்று சொல்வது காவல் துறையையும் கேலிக்குள்ளாக்குகிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்த வன்கொடுமைச் சட்டம் பயன்படுத்த வேண்டிய நிலையிலும், அதை உபயோகிக்க காவல் துறை தயக்கம் காட்டுகிறது என்பதுதான். அப்படியே வழக்குப் பதிவு செய்தாலும், இறுதி வரை நீதிமன்றத் தீர்ப்புக்கு விவகாரத்தைக் கொண்டு போனால் இடையிலேயே ஏதாவது காரணம் சொல்லி வழக்கை முடித்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இந்தச் சட்டம் சரியாக அமல்படுத்தப்பட வில்லை என்பதே எங்கள் குற்றச்சாட்டு."
            காதல் திருமணம் என்ற பெயரில்நாடகத் திருமணங்களைஎதிர்க்கிறோம்; இதைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுகிறதே!
            இந்தக் கோரிக்கைக்குப் படித்த ஜனநாயக எண்ணம் கொண்ட எந்தத் தலைவரும் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்பது ஆறுதலை அளிக்கிறது. பெண்களைக் கேவலப்படுத்துவது என்று சாதிச் சங்கத் தலைவர்கள் முடிவு செய்து விட்டார்கள். பெண்ணடிமை நீடிக்கக் காரணம் சாதியம்தான் என்பது சரியாகத்தான் இருக்கிறது. பெண்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சாதிய கோட்பாடுகளுக்குள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொள்கிற நிலைப்பாடு என்பது பெண்ணடிமைத் தனத்தை நீடிக்கவே செய்யும். பதினெட்டு வயதில் நாம் பெண்களுக்கு வோட்டுரிமையே கொடுக்கும்போது அவர்கள் வாழ்வைப் பற்றி அவர்கள் தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதாகச் சாதித் தலைவர்கள் சொல்லுவது பெண்களை இழிவுபடுத்தும் போக்காகும்.

            நான் ஒரு கேள்வி கேட்கிறேன். சில ஆதிக்கச் சாதிகளில் 16 வயதில் ஒரு பெண் காதல் வயப்பட்டு கலப்புத் திருமணம் செய்யும்போது அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக மீட்டெடுத்து வந்து, அந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக தங்கள் சாதியில் திருமணம் செய்து வைக்கிறீர்களே! அப்போது நீங்கள் சொல்லும் வயது பிரச்னை எங்கே போயிற்று? ஒரு பெண்ணுக்கு தமக்கு விருப்பமான ஒரு துணையைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை இருக்கிறது. உண்மையில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டுமானால் திருமணத்தில் பெண்களுக்குள்ள உரிமைகளைச் சாதித் தலைவர்கள் மதிக்க வேண்டும். சாதியத்துக்கு உரம் போட பெண்களை உடல் மற்றும் மனரீதியில் பலவீனமானவர்கள் என்பது போல காட்டும் போக்கு சரியல்ல


             இவர்கள் எந்தவிதமான கட்டுப்பாடுகளைப் போட்டாலும், இனிவரும் காலங்களில் கலப்புத் திருமணங்களைத் தடுக்க முடியாது. இந்தச் சாதித் தலைவர்கள் பெண்களின் மீதிருக்கும் அக்கறையால் கலப்புத் திருமணத்தை எதிர்க்கவில்லை. அந்தத் திருமணங்கள் சாதிய கட்டுமானங்களைத் தகர்த்தெறிகிறதே என்ற படபடப்பில்தான் இப்படிப் பேசுகிறார்கள். பெரியாரும் அண்ணாவும் சாதிய நோய்க்கு மருந்தாகச் சொன்னது கலப்புத் திருமணங்களைத்தான். இப்படிப் பெண்களை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் சாதித் தலைவர்களை எதிர்த்து மகளிர் அமைப்புகள் ஒன்றுபட வேண்டும். பெண்ணடிமைத் தனத்தை வளர்த்துக் குளிர்காய விரும்பும் சாதித் தலைவர்களுக்கு சமுதாயம் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.





            தலித் இளைஞர்கள் மற்ற சமுதாயப் பெண்களை காதல் கல்யாணம் செய்து பணம் பறிப்பதாகவும், கைவிட்டுவிடுவதாகவும் பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது. சரியான புள்ளிவிவரம் தேவை. அது சரி, மற்ற சாதிகளுக்குள்ளே நடக்கும் காதல் திருமணங்கள் எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கின்றன என்ற புள்ளி விவரத்தையும் எடுத்துப் பார்க்கலாமே.

            திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமை. வழிகாட்டும் உரிமை பெற்றோர்களுக்கு உண்டே தவிர, வற்புறுத்தும் உரிமை கிடையாது. ஒரு பெண், ஆணுக்கு இடையில் வரும் காதல் திட்டமிட்டு வருவதல்ல. தலித் இளைஞர்கள் நாடகத் திருமணங்கள் நடத்துகிறார்கள் என்பது கடைந்தெடுத்த அவதூறு. தலித் இளைஞர்கள்தான் மற்ற சமுதாயப் பெண்களை ஈவ் டீசிங் செய்கிறார்கள் என்பதும் சரியல்ல. இத்தகைய போக்கு எல்லா சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடமும் காணப்படுகிறது என்பதுதான் சரி."


            தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்தும் வைக்கப்படுகிறதே?


            இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது. தாழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தொகுதிகள் மறு சீரமைப்பில், பல தொகுதிகளில் இத்தகைய மாற்றங்கள் நடந்திருக்கிறதே!"


            தலித்துகளுக்கு எதிராக மற்ற சமூகத்தினரின் ஒருங்கிணைப்பு எத்தகைய தாக்கத்தை நமது கிராமப்புறங்களில் உருவாக்கும்?


            பா... இழந்து போன தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்த சாதியத்தைக் கையில் எடுத்திருக்கிறது என்ற உண்மை பளிச்சென மக்களுக்குத் தெரிகிறது. மக்களின் அபிமானத்தைப் பெற்ற எந்த ஒரு தமிழகத் தலைவரும் சாதிச் சங்கத் தலைவர்களின் போக்கை ஆதரிக்கவில்லை என்பதிலிருந்து, நமது சமுதாய அமைப்பில் இதன்மூலம் எந்த ஒரு தாக்கமும் இருக்காது என்பதும் புரியவில்லையா?  

            கிராமப்புறங்களில் மக்கள் தனித்தனியே வேண்டுமானாலும் வசிக்கலாம். ஆனால் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் வாழ்க்கை முறைதான் அங்கிருக்கிறது. தற்காலிகமாக சில ஆதிக்கச் சக்திகள் தலித்துகளின் குடிசைகளை எரித்துக் குளிர்காயலாம். ஆனால் சாதியக் கட்டுமானத்தைப் பாதுகாத்து வளர்க்க, தலித்துகளை எதிர்க்கும் போக்கு நீண்ட கால நோக்கில் எடுபடாது. பிற்போக்குத்தனமான கருத்துக்களைக் கூறும் தலைவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள். அவர்கள் போடும் அரசியல் கணக்குகள் பொய்த்துப் போகும். சாதியங்களைத் துணை கொண்ட சந்தர்ப்பவாத அரசியல் கடந்த காலங்களில் சரிவையே சந்தித்திருக்கிறது."
            இந்தப் புதிய சூழலைக் குறித்து தாழ்த்தப்பட்டவர்களில் உள்ள பள்ளர் மற்றும் அருந்ததியர் பிரிவுத் தலைவர்கள் ஆவேசம் காட்டவில்லையே?

            இப்போது எங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலைச் சமாளிக்கும் திறன் எங்களுக்கே இருக்கிறது. என்றாலும், உதவி தேவைப்படும் தருணத்தில் அவர்களும் களத்தில் குதிப்பார்கள்."
            இன்றைய சூழலில் திராவிட இயக்கங்களின் செயல்பாடு எந்த வகையில் இருக்க வேண்டும்?
            தமிழகத்தை ஆளும் வாய்ப்பு பெற, திராவிட இயக்கங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. முதலில் சாதி ஒழிப்புக்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை மற்ற சமூகங்களோடு சமத்துவ நிலையில் வாழும் சூழலை உருவாக்க வேண்டும். கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் திராவிட இயக்கங்களின் போக்கு பாராட்டத்தக்கது. அதே சமயம் வன்கொடுமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் காவல் துறைக்கு உரிய பயிற்சி தேவை


             வன்கொடுமைச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை அதற்காகச் செலவழிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி நேரடியாக அவர்களுக்குச் செலவழிக்கப்படும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலிகளையும் நில உரிமையாளர்களாக மாற்றும் வகையில் விவசாய நிலம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சாதிய உணர்வுகளைக் கட்டிக் காப்பாற்றும் வகையிலும் பெண்ணடிமைத் தனத்தைக் காப்பாற்றும் வகையிலும், பெண்களின் விருப்பத்துக்கு மாறாக பெற்றோர்களால் நடத்தப்படும் திருமணங்கள் தடுத்து நிறுத்த அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."

            நன்றி - கலகி , கணேஷ்