Showing posts with label சர்ச்சை. Show all posts
Showing posts with label சர்ச்சை. Show all posts

Friday, April 03, 2015

கொம்பனைக்கழுவி ஊற்றிய ட்வீட்டர் வம்பர்கள்

படம்: ட்விட்டர் பதிவுகள்
படம்: ட்விட்டர் பதிவுகள்
சில பல அமர்க்கள அரங்கேற்றங்களுடன் வெளியாகியிருக்கிறது கார்த்தி நடித்த கொம்பன். முதல் நாள் முதல் காட்சி பார்த்த கையோடும், தியேட்டரில் இருந்தபடியும் கொம்பன் பற்றிய குறும்பதிவு பார்வைகளை ட்விட்டரில் தெறித்து வருகிறார்கள் ரசிகர்கள். அத்தகைய கொம்பன்தெறிப்புகளின் சாம்பில்கள் இங்கே ட்வீட்டாம்லேட்டில்...
நடிகர் விவேக் ‏@Actor_Vivek - கொம்பன் பார்த்தேன். ஒரு மாமனார் மருமகன் உறவை உணர்ச்சிபூர்வமாக சொல்லி இருக்கிறார்கள். இதில் எந்த சாதியும் இழிவுபடுத்தப்படவில்லை.
ஷாந்தனு பாக்யராஜ் ‏@imKBRshanthnu - தவறான நோக்கத்தோடு படத்தின் வெளியீட்டை சிலர் தடுத்தனர். கொம்பன் அடைந்திருக்கும் வெற்றி, தமிழ் சினிமா துறைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கிறேன்.
சி.சரவணகார்த்திகேயன் ‏@writercsk - நான் மறுபடி மறுபடி கொம்பன் வெளியீட்டைத் தடுக்கக்கூடாது எனச் சொல்வதன் காரணம்... நாளைக்கு மெட்ராஸ் போன்ற படங்களையும் இதே பாணியில் தடுப்பார்கள். :-(
கோபிகாஷேக் ‏@kobikashok - இவங்க சொல்ற மாதிரி சாதிக் கலவரம் வராது என்பது படம் பார்த்தவங்களுக்கு தான் தெரியும். #கொம்பன் ஓர் அருமையான படம்.
கொம்பன் மோக்கியா ‏@Mokiyanew - @gvprakash ப்ரோ கொம்பன் பாடல் & பின்னணி இசை சூப்பர். ஒரே வருத்தம் என்னனா? க்ளைமேக்ஸ்ல மங்காத்தா மியூசிக் போட்டுடீங்களே ப்ரோ..
பாரதி ‏@BharathiBigB - ரிலீஸ் ஆகறதுக்கு முன்னதான்யா பதற்றமான சூழல் இருந்துச்சி. இப்ப ஒரு சத்தமும் இல்ல #கொம்பன்
முத்து ‏@ViscomMuthu - கொம்பன் படத்துல ஜெயில் கைதிகளுக்கு அதிகபட்ச Punishment டா ஜில்லா படத்த போட்டு காட்றாங்க.
களபிரர் ‏@ponnumanis - கொம்பன் ஓரளவு வசூல் பண்ணினா, அதில கொஞ்சம் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு கொடுக்குறது தான் தொழில் தர்மம்.
ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - ஆக எல்லாருமா சேர்ந்து ஒரு புள்ளப்பூச்சியை அடிச்சிருக்கீங்க... அதுல உங்களுக்கு வெங்கலக் கிண்ணம் வேற வேணுமாக்கும்! #கொம்பன்
தனிக்காட்டு ராஜா ‏@Er_Thameem - உஸ்ஸ்ஸ்! இந்த கொம்பன் படத்துக்கான அரசியல் எங்கூர்ல ஆரம்பமாகுது போல... ஐநூறுக்கும் மேல போலீஸ் குவிப்பு... நல்லா வருவீங்கயா.
clash of clans ‏@thunder - என்னடா கொம்பன் படத்துக்கு இவ்ளோ எதிர்ப்பு வருதேன்னு பாத்தா : )ஓப்பனிங் சீன்ல ஜில்லா படம் + இளையதளபதி என்டராமே?? #கொம்பன்
kandasamy ‏@kandasamykk - எதற்காக இந்த படத்திற்கு தடை கேட்டார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!!
கார்க்கிபவா ‏@iamkarki - கார்த்தி கைல இருக்கிற பச்ச கயித்த தவிர பெருசா ஒண்ணும் சேதாரத்த காணோமே.... கட் பண்ணிட்டானுங்கன்னு முட்டு கொடுப்போம் #கொம்பன்
kandasamy ‏@kandasamykk - எத்தனை முறை லென்ஸ் வைத்து பார்த்தாலும் ஜாதிச்சண்டையை தூண்டிவிடும்படியான ஒரு காட்சி கூட நமக்கு தெரியவில்லை #Komban
suguna.diwakar@facebook - "முடியை வெட்டினா வலிக்காது. பிடுங்கினாதான்யா வலிக்கும். அப்படித்தான் ஒரு பொண்ணோட வாழ்க்கை!"
"ஒரு பொண்ணுக்குப் பெத்தவன் நெத்தி மாதிரி. ஆனா கட்டினவன் பொட்டு மாதிரி"
"என் பையன் இருக்கானே, அவன் கொல்லையில இருக்கிற சாணி மாதிரி. அவனை இந்த ஊர்க்காரங்க எருவா மாத்திட்டாங்க. நீதான் அந்த சாணியைப் பிடிச்சுப் பிள்ளையார் ஆக்கணும்"
- இவையெல்லாம் #கொம்பன் படம் தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ள தத்துவ முத்துகள்.
அதாரு Naveen ‏@mechnaveen1206 - கைதிகளே ஜெயிலில் இருக்கோம்னு சோகத்துல இருப்பானுங்க... அதுல அவைங்கள கூப்டு உக்கார வச்சு ஜில்லா படம் ஓட்டுறானுங்க... உஸ்ஸ் பாவம் யா #கொம்பன்
மதிஇளம்பரிதி.பெ.கொ.ப ‏@ortoncena007 - #கொம்பன் பழைய சோத்தை அழகான தட்டுல வெச்சு பரிமாறி இருக்குறாங்க!!
வாழவந்தார் ‏@Iam_SuMu - ஓஹோ! கொம்பன் படம் எப்படினு சொல்றதை வச்சி சாதி கண்டுப்பிடிக்குறாங்கடோய்!!
Qüëéñ Sāmãñthá ‏@sarath_krrish - கொம்பன் = குட்டிபுலி 2 | நண்பேண்டா = அழகுராஜா 2 | #சகாப்தம் ஏப்புடி???

Tuesday, March 31, 2015

கொம்பன்' பிரச்சினை க்ளியர்டு - ஏப்ரல் 1 ல் முன் கூட்டியே ரிலீஸ்

'கொம்பன்' பத்திரிகையாளர் சந்திப்பு | படம்: எல்.சீனிவாசன்
'கொம்பன்' பத்திரிகையாளர் சந்திப்பு | படம்: எல்.சீனிவாசன்
'கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற இரு நீதிபதிகள் 'கொம்பன்' படத்தை இன்று பார்த்தனர். இதைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்கிரமன், கொம்பன் பட இயக்குநர் முத்தையா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தாணு : '' 'கிழக்குச் சீமையிலே' படம் மாதிரி காவியமான படம் 'கொம்பன்'. இந்தப் படத்தில் எந்த சாதிய மோதலும் இல்லை. எந்த சூழலிலும் யாரையும் இழிவுபடுத்தவேண்டும் என்று எந்தக் காட்சியும், வசனமும் இல்லை. ஆனா, ஏன் இப்படிப்பட்ட இன்னலில் சிக்கி இருக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை.'' என்று தாணு பேசினார்.
சரத்குமார்: ''படம் சென்சார் ஆனபிறகு தனிநபரோ, அமைப்போ தடை செய்வதற்கு உரிமை இருந்தால் சென்சார் என்பது எதற்காக இருக்கிறது.
மத்திய அரசின் தணிக்கைக் குழு மூலம் படம் சென்சார் ஆன பிறகு அந்தப் படத்தைப் பற்றி முடிவு செய்ய யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. இனிவரும் காலங்களில் தனிநபரோ, அமைப்போ படத்துக்கு எதிராக இதுபோன்று ஈடுபடவேண்டாம். அப்படி ஈடுபட்டால் திரையுலகத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்.
மாமனார், மருமகன், அம்மா, மனைவி என்று பாசமுள்ள சிறந்த கதையைப் படமாக சொல்லியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் எந்த சாதியையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ சொல்லப்படவில்லை. சாதிப் பிரச்சினையோ, சாதிக் கலவரமோ, தூண்டுகின்ற சம்பவமோ, வசனங்களோ இல்லை.
எல்லாத் துறைகளையும் சார்ந்தவர்கள், சிறப்பாக கணிக்கக்கூடியவர்கள் தான் தணிக்கைத் துறையில் இருக்கிறார்கள்.



பொறுப்பில்லாதவர்கள் திரைப்படங்களை எடுப்பது மாதிரியான சூழலை உருவாக்குவது தவறு என்பது எங்களின் ஒருமித்த கருத்து.'' என்று சரத்குமார் பேசினார்.
விக்கிரமன்: '' 'கொம்பன்' படத்தில் ஹீரோ எந்த சாதி என்பதைக் கூட படத்தில் சொல்லவில்லை. இரு சாதியினருக்கான மோதல் என்கிற பிரச்சினை கிடையவே கிடையாது. இந்தப் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தவறாகத் தெரிகிறது.
இதில் சாதி மோதலைத் தூண்டுவதைப் போல இருக்கிறது என்று படம் பார்த்துவிட்டு யாராவது சொன்னால் நான் திரையுலகத்தை விட்டே போய்விடுகிறேன்.'' என்று விக்கிரமன் பேசினார்.
ஞானவேல்ராஜா: '' மார்ச் 27ம் தேதி 'கொம்பன்' ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டபோது எந்த போராட்டமும், வழக்கும் இல்லை. ஆனால், 'கொம்பன்' படத்தின் வேலைகள் முடியாததால் ஏப்ரல் 2ல் ரிலீஸ் என்று திட்டமிட்டோம்.2ம் தேதி ரிலீஸ் என்றதும் அத்தனைப் பிரச்சினைகளும் பூதாகரம் ஆனது. ஏப்ரல் 10ம் தேதி படம் ரிலீஸ் என்றால் இந்தப் பிரச்சினையே எனக்கு இல்லை'' என்றார்.
பத்திரிகையாளார் சந்திப்பின்போது ஞானவேல்ராஜா உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்கலங்கினார்.
ஏப்ரல் 2 அன்று வெளியாக இருந்த 'கொம்பன்' திரைப்படம் ஏப்ரல் 1 (புதன்கிழமை) அன்று ரிலீஸ் ஆகிறது.


'கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா 'கொம்பன்' திரைப்படத்தில் சாதிய ரீதியான காட்சியமைப்போ, வசனங்களோ இல்லை என்று மறுத்திருக்கிறார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''ஏப்ரல் 1 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கொம்பன்' திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திரைப்படத்தில் எந்த ஒரு ஜாதியைக் குறிப்பிடும் வசனங்களோ, காட்சியமைப்போ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.
இதில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தியோ அல்லது குறிப்பிட்ட சாதியை தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
யூகத்தின் அடிப்படையில் 'கொம்பன்' திரைப்படத்தைப் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.
'கொம்பன்' திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன்'' என ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
'கொம்பன்' திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. ஏப்ரல் 2ல் 'கொம்பன்' திரைப்படம் வெளியாகிறது.

  • எந்த படத்தை எதிர்த்து வழக்கு போட்டா பிரபலமாக முடியுமோ அந்த படாத எதிர்த்து தான் எல்லாம் பண்ணுவாங்க.. ஒரு புது நடிகருட படமா இருந்திருந்த இத பத்தி பேசவே மாட்டாங்க !.... தட்டிய கேட்க 1000 ஜாதி பிரச்சனை நம்ம நாட்டுல இருக்கு , அதெல்லாம் விட்டுபுட்டு சினிமா படத்து மேல எங்க வழக்கு போடுறீங்க !...
    Points
    335
    about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Reegan Reegan Lecturer at lecturer in college 
      இனி வரும் காலங்களில் படத்தை தணிக்கை குழுவிடம் காண்பிபதற்கு முன்பு மாநிலத்தில் உள்ள எல்லா சாதி கட்சி மதம் சார்ந்த கட்சிகளிடம் காண்பிக்க வேன்டும் என சொல்லி போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி . ஒரு தணிக்கை குழுவினால் சான்றிதழ் வழங்கிய படத்தினை எதிர்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . எல்லாவற்றையும் விட சிறந்த ஒரு விசயம் என்னவென்றால் ஒரு படத்தை பொழுது போக்கு நிகழ்வாக பார்க்கும் பொழுது எந்த பிரச்சினையும் வர வாய்ப்பு இல்லை .
      about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Durairaj  
        திரைப்பட தணிக்கை துறையிலே இதற்கு ஆட்சேபனை எழுந்துள்ளது என்று கேள்வி. மறு தணிக்கை செய்யப்பட்டதே ஏதோ ஒரு காரணத்திற்குத்தானே. திரைப்பட துறையில் ஒரு குறிபிட்ட ஜாதியை பெருமைபடுத்தி படம் எடுப்பது இன்று நேற்றா நடக்கிறது.
        Points
        1315
        about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Parthi  
          கமல் சண்டியர் என பெயர் வைத்த உடனே வரிந்து கட்டி கொண்டு வந்த கிருஷ்ணசாமி சில மாதங்களுக்கு முன் சண்டியர் என படம் வந்த போது மட்டும் தூங்கி கொண்டு இருந்தாரா ...ஏன் பிரபலங்களின் படங்களை எதிர்த்தால் மட்டும் தான் கிருஷ்ணசாமி என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை காட்டவா
          Points
          2315
          about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
          • மாரிச்சாமி  
            பாரதி தம்பி திரு.க. கிருஷ்ணாசாமி எதிர்ப்பது ஜாதி ஏற்ற தாழ்வுகளை மட்டுமே தவிர வேருன்றும் இல்லை.....ஒரு குறிப்பிட்ட ஜாதியை மட்டும் உயர்த்தி பேசுவது சரி அல்ல.......
            about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Chandra_USA  
            ஜாதி வேறுபாடு தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. அதை சினிமாவில் கட்டினால் தவறா?
            Points
            14240
            about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
            • DuraiRaj  
              நீங்கள் சொல்வது சரிதான். சமிபத்தில் தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினாரால் 60 கொலைகள் நடந்துள்ளது. அந்த ஜாதியின் தவறை சுட்டிக்காட்டி யாராவது படம் எடுப்பார்களா?
              about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Navneeth  
              நல்லது . தேவையில்லாத விமர்சனங்கள் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு இது எல்லாம் நம் அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை போலும் ...முதலில் சண்டியர்.பின்பு விஸ்வரூபம்.அடுத்து கொம்பன் ..உழைப்பின் கஷ்டம் நம் அரசியல் வாதிகளுக்கு தெரியாது அல்லவா அதான் போலும்..அ
            நன்றி - த இந்து

            Saturday, November 17, 2012

            ஸ்விஸ் பேங்க்கில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்துக்கணக்கை வெளியிட்ட கெஜ்ரிவால்

            தொடரும் சர்ச்சையில் முகேஷ் அம்பானி- விடுவதாக இல்லை கெஜ்ரிவால்




             Ambanis Deny Kejriwal S Charges

            மும்பை: சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ளனர் என்ற சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் குழுவினரின் குற்றச்சாட்டை அம்பானி சகோதரர்கள் உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் நிராகரித்துள்ளனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் சுவிஸ் வங்கியானது முகேஷ் அம்பானியின் கடிதத்தை வைத்து மீண்டும் புயலைக் கிளப்பி வருகிறார் கெஜ்ரிவால்.



            இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் பலரும் ரூ6 ஆயிரம் கோடி அளவுக்கு சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ளனர் என்பது அர்விந்த் கெஜ்ரிவால் குழுவினரின் குற்றச்சாட்டு. ஒவ்வொரு தொழிலதிபரும் எவ்வளவு தொகையை பதுக்கியுள்ளனர் என்ற விவரத்தையும் கெஜ்ரிவால் குழுவினர் நேற்று வெளியிட்டிருந்தனர்.



            முகேஷ் அம்பானி மறுப்பு


            இதனை மறுத்துள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், உலகின் எந்த பகுதியிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசுக்கோ, முகேஷ் அம்பானிக்கோ சட்டவிரோதமான எந்த வங்கி கணக்கும் கிடையாது. வழக்கமான வணிகத்தின் அங்கமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கு எச்எஸ்பிசி உள்ளிட்ட பல்வேறு உலக வங்கிகளில் கணக்குகள் உண்டு. ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. தீய சக்திகளின் தூண்டுதலால் அவை சுமத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.



            அனில் அம்பானி நிராகரிப்பு



            இதே போன்று அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டினை மறுக்கப்பட்டிருக்கிறது. ஜெனிவா எச்எஸ்பிசி வங்கியில் அனில் அம்பானிக்கு கணக்கு கிடையாது. இருப்பினும் தீய சக்திகளின் தூண்டுதலால் இத்தகைய குற்றச்சாட்டினை சுமத்தி இருப்பது வருத்தம் அளிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



            அனு டான்டன்



            இதேபோல் காங்கிரஸ் கட்சி எம்.பியான அனு டான்டன் சுவிஸ் வங்கியில் தாம் பணத்தை பதுக்கியிருப்பதாக அர்விந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதை நிராகரித்திருக்கிறார். கெஜ்ரிவால் குழுவினரின் குற்றச்சாட்டு அனைத்தும் ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளார். மேலும் தமது கணவர் இறந்துவிட்ட நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நான் ஏதும் சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார்.


            ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல், டாபர் குழுமத்தின் பர்மன் சகோதரர்கள் ஆகியோரும் இதனை மறுத்துள்ளனர்



            ஹெச்.எஸ்.பி. மன்னிப்பு ஏன்?



            இதனிடையே ஹெச்.எஸ்.பி. நிறுவனமானது இந்த ஆண்டு ஜனவரி மாதமே முகேஷ் அம்பானிக்கு ஒரு விளக்கக் கடிதத்தை அனுப்பியிருப்பதாகவும் அதில் அவரது பெய தவறாக இடம்பெற்றுவிட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது என்றும் கெஜ்ரிவால் சுட்டிக்காட்டியிருக்கிறார்.



            கம்ப்யூட்டரே தானாக தப்பு செய்ததா?



            அதாவது சுவிஸ் நாட்டின் ஹெச்.எஸ்.பி. வங்கியானது கடந்த ஜனவரியில் ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது. அதில், வெளிநாட்டில் பணம் பதுக்கியோர் பட்டியலில் முகேஷ் அம்பானியின் பெயர் இடம்பெற்றிருப்பது தவறானது. ஆனால் இந்த பட்டியலை ஹெச்.எஸ்.பி. தயாரிக்கவும் இல்லை.. கொடுக்கவும் இல்லை..


             இந்தப் பட்டியலை தயாரித்தது பிரான்சு அரசுதான். அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? பிரான்சு அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும். ஹெச்.எஸ்.பி. சர்வரில் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன என்று கூறியுள்ளதாக தெரிவித்திருக்கும் கெஜ்ரிவால், அப்படியானால் அந்த வங்கியின் கணிணியே தானாக முகேஷ் அம்பானியின் பெயரை பதிவு செய்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


            Saturday, October 27, 2012

            லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

            http://www.thehindu.com/multimedia/dynamic/00877/30MPLEENA2_877930g.jpg 

            சின்மயி குறித்த என் தரெட்ல கூட வந்து சிலர்," நீ அவளா? இவளா? பணம் வாங்கற, போற" என்று ஒரே அவதூறு. சின்மயி பற்றியும், கைது செய்யப்பட்டவரின் தொனியிலேயே கமென்ட் போடுகிறார்கள். பொது வாழ்க்கைக்கு வந்துட்டா, எந்தப் பெண்ணையும் வாயில வந்தத பேசறது செக்சிஸம் , பாலியல் அத்துமீறல் என்று கண்டித்தால், குட்டி ரேவதி போன்றவர்கள் கூட அதை இறக்குமதி கான்செப்ட் என்கிறார்கள்.



             ஒரு பார்ப்பனப் பெண்ணின் மீது நடந்த தாக்குதல்என்பதாலேயே அதை தாக்குதல் இல்லை என்று எப்படி வாதிட முடியும். இல்லை அதை கண்டிப்பதாலேயே , ஒடுக்கப்பட்டப் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறையில் அக்கறையில்லை என்பது எவ்வளவு அபத்தம். சின்மயி பேசியது கடும் தவறு தான் . அதனாலேயே அவர் மீது பாலியல் தாக்குதலை ஏவியது சரி என்று குட்டி ரேவதி போன்றவர்களே பேசுவது சகிக்க முடியவில்லை


            மனுஷ்யபுத்திரனிடம் நடந்த உரையாடலை நினைத்துப்பார்த்தாலே அருவருப்பாய் இருக்கிறது. என்ன ஒரு ஆண் திமிர். என்ன ஒரு தடித்தனம். சக மனுஷி மீது எந்த மரியாதையும் தர இயலாதபோது எதற்கு விவாதத்திற்கு வர வேண்டும்? ராஜன் லீக்ஸ் இண்டெர்நெட் செக்ஸிஸ்ட் என்றால், மனுஷ்யபுத்திரன் ஒரு இலக்கிய செக்ஸிஸ்ட். அவ்வளவு தான்!

            ஐயோ, என்னை சும்மா இருக்க விட மாட்டேங்குறாங்களே
            ஒரு பொண்ணு பார்ப்பனப் பொண்ணா இருக்கிறதனாலேயும் , பொறுப்பில்லாம அரசியல் தவறா பேசினாங்க என்பதாலும், அவர் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் செய்யலாம் என்று எப்படி தீர்ப்பளிப்பது?
            மனுஷ்யபுத்திரன் மன்னிப்பு கேட்க சொல்கிறார், இதை சின்மயியையும் அவர் தாயாரையும் பாலியில் ரீதியாக பேசுவதற்கு முன்னல்லவா செய்ய வேண்டும்,

            அப்புறம், குட்டி ரேவதி - சண்டை கோழி பிரச்சினை தொடங்கி இப்ப வரைக்கும், பேட்டி, தலையங்கம் எல்லாத்திலயும் பெண் கவிஞர்களை பற்றி செக்ஸிஸ்ட் கமெண்ட் தருகிறீர்களே? நீங்க எப்ப மனுஷ்யபுத்திரன் மன்னிப்பு கேட்க போறீங்க?


             
             இதனால், நண்பர்களுக்கு, குறிப்பாக பத்திர்கை நண்பர்களுக்கெலாம் சொல்லிக்கொள்வது, பேராசிரியர் மார்க்சும், தோழர் ஷோபா சக்தியும் என் முகநூல் நண்பர்கள் பட்டியலில் கூட இல்லை. யாருக்கும் ஏதும் கணக்கு தீர்க்கனும் என்றால் என்னிடமே கேட்கலாம். எப்போதும் விவாதத்திற்கு நான் தயாராகவே இருக்கிறேன். லீனா அதை செய்த போது ஏன கண்டிக்கவில்லை? இதை செய்தபோது ஏன மெளனம் காத்தீர்கள் என்று அவர்களிடம் எதற்கெடுத்தாலும் கேட்டுக்கொண்டிருப்பது காமெடி கூட இல்லை. செம கடி!
            • Raja Sethuramavarma your feeling so correct and good
            • Deiva Kandaswamy அப்படிப்பேச வைத்ததே ஒரு பிராமணிய சூழ்ச்சி என்றுதான் புரிந்துகொள்ளப்படுகிறது, அதுவே எதிர் கருத்துகளுக்குக் காரணமாகிறது.
            • சாத்தப்பன் நா அவர்கள் வரம்பு மீறி விமர்சித்தது உண்மைதான். ஆனால் நீங்கள் அதை மட்டும் கடுமையாக விமர்சித்துவிட்டு சின்மயியின் பெரிய தவறுகளை மென்மையாக விமர்சிப்பது வருத்தத்தைத் தருகிறது.
            • Leena Manimekalai Sathappan Nகருத்தியல் மோதலுக்கும் பாலியல் வன்முறைக்கும் வேறுபாட்டை, உங்களுக்குமா சொல்லி புரிய வைக்கணும்!
            • Venkatesh Chakravarthy நான் ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் பள்ளிமுதல் கல்லூரிவரை தேவிடியாள் வீட்டில் பிறந்தவன் என்ற ஒரு முத்திரையை அல்லது அடையாளத்தை எப்படி அந்த காலக்கட்டத்த்தில் எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியாமலே, இன்று எனக்கு எட்டிய அறிவின் உதவியுடன் கடந்து வந்து விட்டேன். எனக்கு இந்த விவாதத்தில் இருக்கும் ஒரே பயம் வசைப்பாடுபவர்களை எதிர்க்கும் அதே சமயத்தில் கண்காணிப்பு இயந்திரங்களை ஆதரிக்கின்றோமா என்பதே.
            • Leena Manimekalai எனக்கு அதில் இரண்டு வேறு கருத்துகள் இல்லை Venkatesh Chakravarthy . என்வரையில் எப்பொழுதும் வசையை, அவதூறை, பாலியல் அத்துமீறலை எழுத்தின் மூலமாகவே
              எதிர்த்திருக்கிறேன். ஆனால் அதையே ஒரு பெண் சட்டபூர்வமாக எதிர்க்க முடிவெடுத்தால், அதை ஆதரிப்பதை தவிர எனக்கு வெறு கருத்தில்லை
            • Venkatesh Chakravarthy My humble plea is, the pressure of public opinion is better than the initiation of a new law and its violent mechanisms which will have a far reaching effect in policing social networks and mobile phones. The fact that we are debating this itself unlike the times of my school or college days indicates a positive change. We must exercise patience and not rush things in a such a manner that we lose the very freedom on the basis of which such interventions become possible in the new public spheres these devices have opened up.
            • Venkatesh Chakravarthy Moreover, if such laws have come into place we must oppose it.
            • Venkatesh Chakravarthy There is a limit to all kinds of political correctness.
            • J P Josephine Baba குட்டி ரேவதி // ஒரு புகழ் பெற்ற சமூக அக்கரையுள்ள குறும்பட இயக்குனர் ஆச்சே. அப்படி சொல்வாரா?
            • J P Josephine Baba இந்த விவாதத்தில் இருக்கும் ஒரே பயம் வசைப்பாடுபவர்களை எதிர்க்கும் அதே சமயத்தில் கண்காணிப்பு இயந்திரங்களை ஆதரிக்கின்றோமா என்பதே//
            • Shankar Krishnamurthy this should be seen only as a legal re-joinder to personal abuse and attack beyond what is accepted and described in the legal framework.. no other consideration or talk should come here.. such things are only diverting the issue ..
            • Venkatesh Chakravarthy Shankar Krishnamurthy...why should we reduce it to the mere question of 'legality' as if the law is unquestionable.
            • Venkatesh Chakravarthy அதே சமயம்...சின்மையின் மீது இன்று செய்யப்படும் தாக்குதல்களையோ மற்றும் நமது பெண் கவிஞர்கள் மீது, லீனா உள்பட; பல ஆண்டுகளாக செய்யப்படும் தாக்குதல்களையோ நான் என்றும் ஆமோதித்ததில்லை. அவை எல்லாமே இன்று அதீத வீரியம் அடைந்து வரும் ஆண் ஆதிக்க போக்குகளின் கொடூரமான வெளிபாடுகள் என்பதால் அவற்றை முழுமையாக நான் கண்டனம் செய்கிறேன் என்பதையும் இங்கு பதிவு செய்வது முக்கியம்.
            • Shankar Krishnamurthy Venkatesh Chakravarthy that can be decided and judged only by the person affected Sir.. we cannot give unsolicited advice.. in the current situation she decided to go legal and she is entitled to that.. as simple as that.. whether an offence of such nature occured or not, evidences, witnesses, all such things to be decided during the trial only.. if law is questionable even for that there is a remedy in the form of challenging such laws ... many provisions of laws have been removed, amended, altered only through such remedy process
            • Venkatesh Chakravarthy "இந்தப் பெண்ணியம், பாலியல் தாக்குதல், செக்ஸிசம் எல்லாமே இறக்குமதி செய்யப்பட்ட பிழைப்புவாதங்கள்" என்று குட்டி ரேவதி போன்றவர்கள் சொல்வது சற்று வேடிக்கையாக இருக்கிறது. அப்படியேன்றால மனித உரிமை, சுதந்திரம், சுயமரியாதை இவைகளும் வெரும் பிழைப்பு வாதங்கள்மட்டும் தானா? இந்த கருத்துகள் எங்கிருந்து வந்தால் என்ன? அவை இங்கு இறக்குமதி செய்யப்படாவிட்டால் இன்று நமது கதி என்ன?
            • Shankar Krishnamurthy Universal Declaration of Human Rights in 1948 released by UN is the basic document for all rights in the world.. most countries are signatories to that including India.. even our Constitution came after that only.. we cannot take something and leave something according to our convenience..
            • Venkatesh Chakravarthy True Shankar Krishnamurthy...but we should not place any limit on the debate that is taking place on that count. Even that's a matter of legality if your prefer that phrase 'freedom of expression' as enshrined in our constitution.
            • Leena Manimekalai Filmmaker Bharathi, சின்மயி பேசியதை பிற்போக்கென்றும், தவறென்றும் , கண்டனத்திற்குரியதென்றும், தொடர்ந்து நான் சொல்லியே வருகிறேன். கைதான ராஜன் என்பவரின் தகுதி, கீழ்க்கண்ட லிங்க் ஒன்றிலிருந்தே விளங்குகிறது. 'லக்பீம' இதழில் ஜெயலலிதாவை ஆபாசமாக வரைந்திருந்த கார்டுனைவிடக் கேவலமானது அந்தக் கார்டுனுக்கு ராஜன் லீக்ஸ் கொடுத்திருந்த 'கமென்ட்'. http://www.use.com/showoriginal.pl?set=0579a6a74773f1b6118e&p=10. மேலும், இணையம் எங்கும் விரவியிருக்கும் சின்ம்யி டிவிட்டர் உரையாடலை காம்ன் சென்ஸ் இருப்பர்கள் படித்தாலெ புரியும். அவர் எவ்வளவு வக்கிரமாக தாக்கப்பட்டிருக்கிறார் என்று. எனக்கு எந்த குழப்பமும் இல்லை. உங்களை சற்று அனலைஸ் செய்து பாருங்கள். நன்றி
            • வி.சு. சத்தியமூர்த்தி தன் மீது வெறுப்பும் தன்னபிக்கைன்மையும் வரும்போது அதை மற்றொருவரிடம் தான் காட்டமுடியும் .பாட பாடல்கள் இல்லை .நடிக்க கூப்பிட்டார்கள் போகவில்லை (எந்த டைரக்ரர் கூப்பிட்டார் ) இதனால் பிரபலமாக ஒரேவழி பப்பிளிசிடி தான்.
            • Leena Manimekalai @வி.சு.சத்தியமூர்த்தி. பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லத் துணியும் எந்த பெண்ணும் உங்களைப்போன்றவர்களின் இந்த இத்துப்போன விமர்சனத்தைக் கடந்து வந்தவர்கள் தான்
            • Arunkumar Cheyyaru Rahmaniac Paaliyal comment pottadhu Rajan illa.
            • Rajan Robert Accept creative criticism,just ignore others,let them go to hell....!
            • A V Sendhil Kumar இன்டர்நெட் இல் பாலியல் பலாத்காரம் செய்பவர்களின் அம்மாவுக்கோ அல்லது சகோதரிக்காகளுக்கோ சட்டம் தண்டிக்க வேண்டும்!
            • Shoba Sakthi சின்மயி விவகாரத்தில் கவிஞர் குட்டி ரேவதி வெளியிடும் கருத்துகள் அதிர்ச்சியளிக்கின்றன. சின்மயி மீதான பாலியல் வசவு வன்முறையை வாயளவில் கண்டிக்கக் கூட அவர் தயாரில்லை.

              'சண்டை கோழி' திரைப்படத்தில் "குட்டி ரேவதி துப்பட்டாவ கையில் எடுத்துட்டுச் சுத்தறவ" என்று வரும் வசனத்திற்காக எவ்வாறு கொதித்துப் போய் போராடினார் குட்டி ரேவதி என நினைத்துப் பார்க்கிறேன். அவருக்கு ஆதரவாக தோழர்கள் திரண்டிருந்தார்கள். வசனம் எழுதிய எஸ். ராமகிருஷ்ணனின் 'தலை தரையில் உருளும்' என்றெல்லாம் எச்சரிக்கை விடப்பட்டன. நான்கூட எஸ்.ராவைக் கண்டித்து எழுதினேன்.

              இன்று சின்மயிக்கு நடந்திருப்பதோ குட்டி ரேவதிக்கு இழைக்கப்பட்டதைவிட பன்மடங்கு பெரிய பாலியல் துன்புறுத்தல். சின்மயியின் தாயார் கூட அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.

              இதை just like that என்று எப்படியாம் கடப்பது..

              'என்னங்க நடக்குது இங்க' என்று தங்கர்பச்சான் போல என்னய என் தங்கச்சிக புலம்ப வைத்துவிட்டார்கள்!
            • Shoba Sakthi சொல்ல மறந்தது: குட்டி ரேவதிக்கு ஆதரவாக பார்ப்பன சாதியைச் சேர்ந்த பெண்களும் அவர் கூடவே நிகழ்வு நடைபெற்ற மண்டபத்தில் அன்று நின்றிருந்தார்கள்.
            • Kamalam ManiMaran பார்ப்பன பெண்ணிற்கு முற்போக்கலர்களும் ஊடகங்களும் காவல்துறையும் அக்கறைபடுவதும் நேரம் ஒதுக்கி விவாதிப்பதும் ஒரு வகை. மதிப்பிற்குரிய சின்மயி அவர்களின் அதிகார வர்க்க தொடர்புகளும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.பாலியல் ரீதியிலான தாக்குதல் என்பதுகூட பார்ப்பனர் மீதான தாக்குதல் என்றவுடன் தான் எதிர்ப்பு வீரியம் பெறுகிறது.ஆனால் ஒன்று மட்டும் நிதர்சனமாக தெரிகிறது நமக்குள் இவ்வளவு விமர்சன விவாதங்களை ஏற்படுத்தி இன்றளவும் வெற்றி பெற்று வருவது பார்ப்பனர்கள் மட்டுமே.
            • Ramani Gandhan shoba sakthi+ Leena Manimekalai sonna adharkku mel vivaadhikka ondrumea illai...avargal solvadhudhaan sari.....
            • Viswanathan Subramanian அய்யா சொபா சக்தி, நீங்க தமிழச்சிக்கு எதிரா அவுத்துவிட்டத விடவா?????
            • David Jebaraj @leena manimekalai : லீனா அவர்களுக்கு, இந்த எளியவன் எழுதிக்கொள்வது, சின்மயி - ராஜன் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு எடுக்க அவர்கள் இருவருடன் குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாவது பயணித்திருக்க வேண்டும். ராஜனின் நிலைப்பாடுகள், செயல்பாடுகள், போர்க்குணம் என பலவற்றை அருகிருந்து பார்த்தவன், அதேபோல் சின்மயியின் சிறுபிள்ளைத்தனத்தையும் உடனிருந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்
               
              //சின்மயி பேசியது கடும் தவறு தான் . அதனாலேயே அவர் மீது பாலியல் தாக்குதலை ஏவியது// என்று சொல்கிறீர்களே, இக்கைது நடவடிக்கை இரு வருடங்களாக அவர்களிருவருக்குள் நடக்கும் பனிப்போரின் வன்ம வெளிப்பாடு என்பதை அறிவீர்களா??. சாதி பற்றி நானிங்கு குறிப்பிடவில்லை.

              உங்களிடம் சில கேள்விகள். பதிலளிக்க விருப்பமில்லை எனினும் முழுவதுமேனும் படித்து விடுங்கள். 
               
              1) சின்மயியிடம் ராஜன் நேரடியாக ட்விட்டரில் பேசியது ஒரேஒரு தடவை அதுவும் ஏழோ எட்டோ (கண்ணியமான) ட்விட்டுகள் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா?? http://twitoaster.com/country-in/chinmayi/exists-but-not-in-pratise-why/

              2) பெற்றோர் இல்லாமல் அனாதையாக, தானே படித்து, தானே உழைத்து அரசாங்க வேலை வாங்கி, (அதுவும் இப்போது பறிபோய்விட்டது) தன்னைப்போல் ஒரு அநாதை பெண்ணை கரம்பிடித்த ராஜனின் இன்னொரு பக்கத்தை நீங்கள் அறிவீர்களா??

              3) ட்விட்டரில் ராஜனின் எழுத்துக்களை (அ) அவரது பிளாக்கில் அவரது எழுத்தாளுமையை படித்திருக்கிறீர்களா??

              4) தமிழில் பாடி சம்பாதிக்கும் அப்பாடகி இதுவரை தமிழிலில் ட்விட்டுவதை கவுரவ குறைச்சலாக நினைப்பதை நீங்கள் அறிவீர்களா??

              5) சின்மயியின் மீது பாலியல் தாக்குதலை ராஜன் ஏவியிருக்கிறார் என்ற தொனியில் நீங்கள் பேசிவிட்டு ஆதாரமாக கார்டூன் விமர்சனத்தை தானே சொல்கிறீர்கள்? ராஜன் சின்மயியின் மீது பாலியல் தாக்குதலை ஏவியதற்கான ஆதாரம் ஏதும் உளதா??

              6) அந்த சிங்கள கார்ட்டூன் வெளியான அன்று ராஜன் ட்விட்டரில் தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்ததை நீங்கள் அறிவீர்களா?? (ஸ்க்ரீன்ஷாட் எடுத்தவர்கள் விவரமாக அதை தவிர்த்துவிட்டனர்)

              7) அதன் பின் ஒரு நாள் மன்மோகன்சிங் அணுஉலை விடயத்தில் மௌனமாகவே இருப்பதை சீண்டும் விதத்தில் 'இந்தாள் இதுக்காவது வாயத் தொறப்பாரா?' என்ற எள்ளல் தொனிக்க அக்கார்ட்டூனை பற்றி அவர் பேசியதே நீங்கள் பார்த்த அந்த ஸ்க்ரீன்ஷாட். (அது அருவருக்கத்தக்க கமன்ட் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை) அது ஒன்றை வைத்து அவரின் முழு குணநலனை எவ்வாறு கணித்தீர்கள்??

              8 ) இவ்வாறான அசிங்கமான ஒரு சில ட்விட்டுகள் தவிர்த்து, கிட்டத்தட்ட 50,000 ட்விட்டுகளுக்கும் மேல் பெண்ணியத்திற்கு, அணுஉலை எதிர்ப்பு, தமிழர் நலன், மீனவர் வாழ்வு, சினிமா என்று ட்விட்டரிலும், அவரது பிளாக்கிலும் அவர் எழுதி தள்ளிய எத்தனை எழுத்துக்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள்??

              cont...
            • David Jebaraj 9) இரு வருடங்களாக அவர்களுக்குள் நடக்கும் பனிப்போர் குறித்து கிஞ்சித்தேனும் உங்களுக்கு தெரியுமா?? (எனக்கு தெரியும்)

              10) முக்கியமாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் 'The badshas of entertainment' வகைமையில் ட்விட்டர் பிரபலங்கள் வரிசைபடுத்துகையில் சின்மயிக்கு நான்காவது இடத்தையும் அடுத்த ஐந்தாவது இடத்தில் ராஜனை தெரிவு செய்து வெளியிட்ட எடிட்டரிடம் ஆற்றாமையினால் இரு நாட்கள் அதை நீக்க சின்மயி போராடியதை அறிவீர்களா?? (இது எல்லாருக்குமே தெரியும். அவரும் ஒத்துகொள்கிறார்). நீக்கமுடியாது என்று எடிட்டர் மறுத்துவிடுகிறார். வன்மவிதை துளிர்விட்ட இடமிது http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/The-other-voices/Article1-823273.aspx

              11) ஆறு மாதங்களாக சின்மயியிடம் சமரசம் பேச நினைத்தும் அதற்குரிய ஆட்கள் கிடைக்காமல் அல்லாடிய ராஜனை உங்களுக்கு தெரியுமா?? அது சம்பந்தமான அவரின் பதிவு http://www.rajanleaks.com/2012/03/blog-post.html



              12) வழக்கு பதிவு செய்வதற்கு 15 நாட்கள் முன்பு கூட ராஜனுக்காக (ராஜனும்) நாங்கள் சின்மயி அம்மாவிடம் மன்றாடிய தொலைபேசி உரையாடலை கேட்டிருக்கிறீர்களா?? அத்தொலைபேசி உரையாடலில் வன்மம் தெறிக்க அவர் எங்களை மட்டுமில்லாது லண்டன் வாழ் ஈழத்தமிழ் பெண்ணான 'கண்ணம்மா' என்பவரை வாய்க்கு வந்தபடி பேசிய பேச்சுக்களை நீங்கள் அறிவீர்களா?? இன்னும், பாடகர் 'கிருஷ்'ஷை (சம்பந்தமே இல்லாமல்) அப்பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி அவர் வசைபாடியதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?? http://soundcloud.com/puthiyavan/singer-krish-threatened-by (இது பகுதி பேச்சு மட்டுமே)

              13) அதிகாரம் தன்பக்கம் உள்ளது என்று நிரூபிக்கும் சின்மயி, இனி அவரை எதிர்த்து யாரும் பேச யோசிக்கவேண்டும் என்று மறைமுக எச்சரிக்கை விடுகிறார் என்பதையாவது உணருகிறீர்களா?? (சமீபத்திய உதாரணம் : கொற்றவை புதிய தலைமுறை தொ.கா யில் நிகழ்த்திய விவாதத்தை எள்ளலாக குஷ்பூவிடம் விமர்சித்தது)

              14) ஜெயலலிதாவை, கருணாநிதியை இன்னும் பிற அரசியல் தலைவர்களையே இப்படி சகட்டுமேனிக்கு விமர்சிப்பவர் என்னை எப்படியெல்லாம் விமர்சித்திருப்பார் என்பதை குயுக்தியான ஆதாரங்களை கொண்டு முன்வைத்து சின்மயி விஷயத்தை திசைதிருப்புகிறார் என்பதை அறியாதவரா நீங்கள்??

              இன்னும் ஆயிரம் கேள்விகள் உள்ளன லீனா அவர்களே. உலகம் முழுவதும் உங்களைப் போன்றோர் பேசுவதை உன்னிப்பாக கேட்டுகொண்டிருக்கிறார்கள் என்பதை தயவுசெய்து கருத்தில்கொண்டு இருபக்கமும் காதுகொடுத்து கேட்டு பதிவு செய்யுங்கள். என் கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்காவிடினும் ஏதேனும் சிறு அதிர்வை ஏற்படுத்தியிருந்தால், கீழிறங்கி இன்னும் கொஞ்சம் விளக்கங்கள் கேட்டுக்கொள்ளுங்கள். எங்களிடமும் ஆயிரமாயிரம் வெடித்தழவியலா விம்மல்கள் உள்ளன...
               
              தொடர்புடைய சில இடுகைகள் : http://www.twitlonger.com/show/jobjp7 http://www.twitlonger.com/show/jp6uj3
            • Sheik Pareeth மதிப்பிற்குரிய லீனா மணிமேகலை அவர்களுக்கு.. இது குறித்து மேலும் காட்டமாக நீங்கள் விமர்சிக்கும் முன்பாக மேலே நண்பர் டேவிட் கொடுத்த லிங்க் களை பொறுமையாக படிக்கவும்.. அதன் பின்பு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.. எதையும் மேலோட்டமாக பார்த்து விமர்சிப்பது அழகல்லவே..??
            • Ajitha James ஒரு ஆண்மகனை sexist என சொல்வதும் ஆபாசம்
            • Kamal Kamal ப்ரீயாவுடு அண்ணே உண்மை விளங்காது அவர்களுக்கு,
            • Manion Ramasamy David Jebaraj Sheik Pareeth they knew chinmaye but do not know about their Cold War.if u say they will think u r justifying.
            • Shanmugam Raja சின்மயி மீது எந்தவிதமான பாலியல் தக்குதல் நடத்தப்பட்டது என்பதை,அவர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியே ஆகவேண்டும்..நண்பர் டேவிட்டின் கேள்விகள் அவருக்கான கேள்விகள் மட்டுமல்ல மணிமேகலை.. பிரபலமல்லாத,மிகச்சாதாரணமான ஒருவருக்கு இவ்வளவு ஆதரவா எனும்போதே,அவருக்கான நியாயம் அறியப்பட்டிருக்க வேண்டும்..
            • Antony Anbarasu நீங்க முதல்ல சின்மயிகிட்டே அவங்க இதுவரை டெலிட் பண்ணிருக்கு டுவிட்டுகளோட லிஸ்ட கேளுங்க ..அப்புறம் மத்தத புரிஞ்சிக்கலாம்
            • Sivasubramanian Paramanandam சகோதரி லீனா அவர்களே இவ்விடயத்தை மிக கவனமாக கையாள வேண்டுகிறேன்!
            • Jei Pandian தவறு செய்தவனை தண்டியுங்கள் - அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு ..
              பட் இங்க ராஜன் செய்த தவறு என்ன???????
              உங்களுடைய நண்பர் ஒருவர் 99 % மார்க் எடுத்து அவருக்கு உரிய சீட் கிடைக்க வில்லை என்பதற்காக நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு என்ன வேணாலும் ட்விட் போடுவீங்க,ஆனா
              ...See More
              • Mahendhiran Kilumathur பாலியல் ரீதியாக எங்களை துன்புறுத்துகிறார்கள் இந்த ஆணாதிக்கவாதிகள் என பெண்ணியவாதம் பேசும் பெண்கள் பேசுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் "அய்யா சாமி தர்மம் பன்னுங்க".... அடியேன் ஆணாதிக்க வியாதியல்ல பெண்ணியம் பேசும் பெரியாரும் அல்ல ஆண் என்பதாலேயே அடக்கி ஆளவும் பெண் என்பதாலேயே சலுகைகளை வழங்கவும் முன்வராத சராசரி மனிதன்,
              • Jayaraman Bharatwaj மகேந்திரன் கிலுமத்தூர்...........பெண்கள் யாரும் இங்கு தட்டு ஏந்தி பிச்சை கேட்டு வரவில்லை.. அவர்களின் அடிப்படை உரிமையை வாழ்வாதாரத்தின் நிலையையும் உயர்த்தவே போராடுகிறார்கள் இன்று வரையில் அது நடந்த பாடில்லை... இதில் நீங்கள் எந்த மனோநிலையில் இந்த விவாதத்தில் உங்கள் கருத்தை முன் மொழிகிறீர்கள்...? பெண் என்பதாலே அவள் பாலியல் ரீதியாய் துன்புறுத்த பட வேண்டுமா..? நாயினமாய் இருந்தாலும் பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் புணரமுடியாது...!!! அதை புரிந்து கொள்ளுங்கள்...!!!
              • Syed Abuthahir பெண் இனத்திற்கு அதிகம் போராடியவர்கள் ஆண்கள் தான்...உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை எதிர்த்த ராஜாராம் மோகன்ராய்,பெண் கல்வி,பெண் விடுதலைக்காக போராடிய பெரியார்...இன்னும் பலரை சொல்லலாம்...
              • Jayaraman Bharatwaj எதற்காக இப்போது அவர்களின் பெயர்களை சொல்லுகிறீர்கள்...? அப்போது கூட ஆண்கள் இல்லாமல் பெண்களுக்கு ஏதும் நடவாது என்று சொல்வதற்
             நன்றி - லீனா மணிமேகலை


            டிஸ்கி -

            டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



            டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


            http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

            டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

            http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


            டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

            http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


            டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

            http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


            டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

            http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html