Friday, August 24, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 24. 8..2012 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.jaffnacnn.com/upload-files/aug/18-Vayasu-Posters-1.jpg 

18 வயசு  - புதுமுகங்கள் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய படம் ரேணிகுண்டா. அசால்ட்டாக செய்யும் கொலைகள், அடிதடிகள், நண்பர்களின் சேர் க்கை, பெற்றோர் வளர்ப்பு என்று ஒரு புது களத்தை கையில் எடுத்து கொண்டு புதுமுக இயக்குநர் என்ற எந்த அடை யாளமும் இல்லாமல் முற்றிலும் புதுமுகங்களை வைத்து வெற்றி பெற்றவர் டைரக்டர் பன்னீர்செல்வ ம். இந்த கூட்டணி இப்போது மீண்டும் இணைந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் 18வயசு என்ற படம் வெளியாக இருக்கிறது.


18 வயசு படம் ஒரு சைக்‌கோ த்ரில்லர் நிறைந்த கதை. படம் பார்ப் பவர்களை அங்கும், இங்கும் நகரவிடாமல் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை த்ரி ல்லிங்காக உருவாக்கி இருக்கிறாராம் டைரக் டர். அதோடு ஒரு மெல்லிய காதல் கதையும் உண்டாம். குழந்தை களை ஒழுங்கா வழி நடத்தணும், சமூ கத்தில் மதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நல்ல விஷயங்கள் இந்த படத்தில் உண்டு. 


படத்தின் ஹீரோ ஜானி தோன்றும் கா ட்சிகளுக்கு எல்லாம் நிச்சயம் கைத் தட்டல் உண்டு என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவுக்கு தன்னை மாற்றிக்கொண்டு இருக்கிறார். படத்தில் மிருகத்தின் அசைவுகளையும், மனிதர்களின் இயல்புகளையும் படத்தில் வைத் துள்ளனர். 


மிருகத்தின் உணர்வு கள் அந்த ஹீரோவுக்குள் வந்து அடித்து நொறுக்கும் காட்சிகளை அற்புதமாக செய்திருக்கிறார் ஜானி. தேனியில் எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸ் 8 நாட்களாக எடுக்க ப்பட்ட து. அதில் உயிர் கொடுத்து சண்டை காட்சியில் மிரட்டி இருக் கிறார் ஜானி. மாட்டின் உணர்வு மனிதனுக்குள் வந்தால் எப்படி அடித்து நொறுக்குமோ அதைப்போ ல இரண்டு முழங்கால் மற்றும் தலைமூலம் சண்டை போட்டுள்ளா ர் ஜானி. 


இதனால் தலை நரம்பில் ஜானிக்கு லேசான பாதிப்பு ஏற்ப ட்டதாம். இருந்தும் அந்த வலியையும் பொறுத்து கொண்டு சூட்டி ங்கில் நடித்தாராம். சூட்டிங் முடிந்த பின்னரே மருத்துவமனைக்கு சென்று தக்க சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார்.ஈரொடு அபிராமி, ஆனூரில் ரிலீஸ்-இதன் விமர்சனம் படிக்க http://www.adrasaka.com/2012/08/18_24.html



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZrFsborYsZMrf8j-SHju48YbxaV7HMAHQHd-1UEtr1aZNT_8Z8z0Z7829bJShgZXqaO4uZSCGkLWkaTOolXl02pYvBD91cDFKtzCxn-mip3MvVLdvTyFk2tL-3ehXW3EI05LKxLDRIlg/s1600/05Bhumika.jpg

 2.துள்ளி எழுந்தது காதல் - தமிழில் "பத்ரி", "ரோஜாகூட்டம்" உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த நடிகை பூமிகா, தெலுங்கில் தயாரித்து சூப்பர் ஹிட்டான படம் "தகிட தகிட". தமிழில் இப்படம் "துள்ளி எழுந்தது காதல்" என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. இப்படத்தை பிரபல இயக்குநர் கிருஷ்ண வம்சியிடம் உதவியாளராக இருந்த ஸ்ரீஹரி நானு இப்படத்தை இயக்குகிறார். படத்தின் நாயகனாக ராஜாவும், நாயகியாக ஹரிபிரியாவும் நடிக்க, இவர்களுடன் 40 புதுமுகங்கள் நடிக்கவுள்ளனர். கூடவே முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூமிகாவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர்.

உயிருக்கு உயிராய் காதலிக்கும் ஒரு ஜோடி, இன்னொரு காதல் ‌ஜோடிக்கு நேர்ந்த தோல்வியை கண்டு தங்களது பாதையை மாற்றி பயணத்தை திசை மாற்றிக்கொள்கிறது. கடைசியில் அவர்களின் முடிவு என்ன என்பதே கதை. காதல் தோல்வியாலும் அதனால் ஏற்படும் விளைவுகளுமே படத்தின் கதை.

சென்னை, கடற்கரை, ஓ.எம்.ஆர்.சாலை, கோல்கொண்டா கோட்டையில் மட்டுமல்ல இமயமலை வரை போய் பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளனர். சபேஷ் முரளியின் மகன் போபோ சசி இசையமைக்கிறார், கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை ஃபிலிம் ஸ்கூல் நிறுவனம் சார்பில் அஜிதா வேல்முருகன், ராஜகிருஷ்ணகுமார் தயாரிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqvada6H2rH-Lghlwk9gIGmsnxWrfZjWZNFtBK4VI3ibCTxNllXZQOziiX5uDDe4960M-v2kejjg7Wdkn0afkz660T5XyiVFXj3myxkeGL0kPNef7S62AoF-Nf1G8o0juYqQ56inbd-1No/s1600/peruman_movie_wallpapers_04.jpg


3. பெருமான் -ரூபாய் 21 கோடி இருந்தால் நானும் ரஜினியாவேன் எனும் வசனத்தோடு தொடங்குகிறது பெருமான் திரைப்படம்.
இந்த படத்தின் சப் டைட்டில் தி ரஜினிகாந்த்.


     சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமான் படத்தின் இயக்குனர் ஜெ. ராஜேஷ் கண்ணாவிடம் தனக்கே உரித்தான பாணியில் கேட்டிருக்கிறார். கண்ணா, அதென்ன சப் டைட்டிலில் தி ரஜினிகாந்த் னுட்டு சொல்லியிருக்கீங்களே..என்று.


பெருமான் படத்தின் இயக்குனர் ராஜேஷ்,  ஒரு மூன்று நிமிடங்கள் கொடுங்கள் நான் கதை சொல்லிவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார். ஒப்புக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரொம்ப உன்னிப்பாக கதை கேட்டாராம். கேட்டபின் அவருக்கே உண்டான பாணியில் சூப்பர்ப், பென்டாஸ்டிக், எக்செலேன்ட் என்று பாராட்டிய ரஜினிகாந்த், என்னிடம் சொன்னது போலவே படத்தை நீங்கள் எடுத்தால்  படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று கூறிப் பாராட்டியதோடு, இயக்குனருக்கு அழகிய சிலை ஒன்றையும் பரிசாக அளித்தாராம்.


பெருமான் என்றால் என்ன அர்த்தம் என்று ரஜினிகாந்த் கேட்க பெருமான் என்றால் எல்லோருக்கும் மேலானவர் என்று அர்த்தம் என்றும் சொன்னாராம் இயக்குனர் ராஜேஷ். இப்படியாக உருவான பெருமான் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளில் படம் தயாராகிறதாம்.

  
சதா சுற்றித் திரியும் ஐந்து நண்பர்கள் சேர்ந்த இந்த கதை நண்பர்களுக்குள் 10 நாட்களில் நடக்கும் விறுவிறுப்பான கதையே பெருமான் திரைப்படம். இந்த 10 நாட்களில் கதாநாயகி, கதாநாயகன் நண்பர்கள் மூவர் வாழ்வில் 10 நாட்களில் நடக்கும் சுவாரஷ்யம் திரைக்கதையில் நன்றாக வந்திருக்கிறது என்கிறார் இயக்குனர். மேலும் கதாநாயகன், கதாநாயகி இயக்குனர், இசையமைப்பாளர் என்று இந்த படம் முழுக்க முழுக்க புதியவர்களின் கூட்டணி என்று சொல்லலாம்.




    செண்டிமெண்ட், நகைச்சுவை, எதிர்பாராத திருப்பங்கள், மனதை மயக்கும் பாடல்கள் என்று எல்லாமே உண்டு. இயக்குன ராஜேஷ் நான்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். இந்த பாடல்களுக்கு 21 வயதேயான விக்ரம் சாரதி இசை அமைத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பான பாடலில் அடக்கமாம். இதற்கென சில அறிய முயற்சிகளைக் கையாணடதாக சொல்லும் இசை அமைப்பாளர் விக்ரம் சாரதி, மேலும் ஒரு பாடலுக்கு பாரம்பரிய இசைக்கருவிகளை வைத்து இசையமைக்க வேண்டும் என்று வயலின், தபேலா, கடம் இவைகளைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார் விக்ரம் சாரதி.




   

http://mmimages.maalaimalar.com/Articles/2012/Feb/4a191131-2fdb-4277-8724-cda1387824c1_S_secvpf.gif

4. அணில் -  திரி டாட்ஸ் ஓசன் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக அட்வகேட் ஸ்ரீனிவாசன் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘அணில் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் கதாநாயகனாக  அணில் பரத், கதாநாயகியாக அஷ்ரித்பானு ஆகியோர் நடிக்கின்றனர். மற்றும் வினித் சங்கர், திபேஷ், திக்குபா விஜய், பிரதீபா, தனலட்சுமி, பிரியா ஆகியோர் நடிக்கின்றனர்.



இப்டத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.எஸ். 

மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு மலைக்கிராமத்தில் பிளஸ் டூ முடித்து விட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும் அணில் டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆவலுடன் உள்ளவன்.  அவனது நண்பர்கள் சிலருக்கும் வெவ்வேறான ஆசைகள்! அதேஊரில் போலீஸ் மகள் அஷ்ரித் பானு அணில் பரத்தின் நல்ல குணத்தைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறாள். 

இதற்கிடையே தனது நண்பர்களிடையே ஊடுருவிய தீவிரவாத கும்பல் ஒன்று அவர்களை தவறான பாதைக்கு திசை திருப்ப முயற்சிக்கிறது. இப்படி பயணிக்கும் கதையோட்டத்தில் அணி பரத் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டான் என்றும், அதிலிருந்து அவன் எப்படி மீண்டான் என்பதையும் சுவைபட கூறியிருக்கிறேன் என்கிறார் இயக்குனர். 

இப்படத்தின் படப்பிடிப்புக்காக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 50 நாட்கள் தங்கி இருந்து படப்பிடிப்பை முடித்துள்ளனர். மேலும் எல்லோருமே புதுமுகங்கள் என்பதால் சிறப்பு பயிற்சி அளித்து படப்பிடிப்பை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். 

இசை : எஸ்.ஆர். சங்கர், ஒளிப்பதிவு: கே. சிருஷ்டி, எடிட்டிங்:  கணேசன், நடனம்: விஜய்பாண்டி, பாடல்கள்: மோகன்ராஜன், தமிழமுதன், கவிக்குமரன் 
 http://www.mymoviemall.com/Filmimg/Thmp555Nirdoshi-Kannada-Movie-VCD-DVD-Original-2012.jpg
5. ரசகுல்லா - சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் என்ற போர்வையில் எடுக்கப்பட்ட கில்மா படம் மாதிரி தோணுது.. ட்ரெய்லரை பார்த்தாலே தேறும்னு தோணலை.

NIRDOSHI (Rasagulla) - releasing on March 26,2010 ல ரிலீஸ் ஆன கன்னட பட டப்பிங்க்

 அ
6.Shirin Farhad Ki Toh Nikal Padi - Every man's dream: an adult life in the midst of bras and panties. One look at a woman, and he knows her size. Reality check: Farhad Pastakiya, a 45-year-old golden-hearted Parsi bachelor working as a bra and panty salesman, has never found love. The only women in his life are his dominating mother Nargis and doting grandmother Siloo. 
 http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/07/Farah-Khan-Boman-Irani-In-Shirin-Farhad-Ki-Toh-Nikal-Padi.jpg
The world has given up on him, but Farhad has never given up hope. One day a 34B walks into his shop, and it's love at first sight. Shirin Fugawala, a 40-year-old, bubbly, straightforward, Parsi trust secretary, is Farhad's soul mate, but destiny intervenes in the form of a demolished water tank. All hell breaks loose as Farhad's mother Nargis realizes that her son's dream girl is her sworn enemy.ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலிஸ்
7.அவன் அப்படித்தான்- இதுவும் ஒரு கில்மா படமே..
8. வாலிபன் சுற்றும் உலகம்

எம்.ஜி.ஆர் பெயரை கெடுக்கும் போலி எம்.ஜி.ஆர் படம்

A new movie discouraging MGRs filmதமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் எப்போதுமே எம்.ஜி.ஆர்தான். தமிழ் சினிமாவின் முதல் ரியல் ஹீரோவும், கடைசி ரியல் ஹீரோவும் அவர்தான். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோவாக வலம் வந்தவர். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்றைக்கும் லட்சக்கணக்கான மக்களின் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களோடு தெய்வமாக இருப்பவர். 
அவரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சொல்லும் அவரது ரசிகர்களுக்கு அத்துபடி. இன்றைக்கும் அவரைப்போல தொப்பி அணிந்து கொண்டு, அவரைப்போல கண்ணாடி அணிந்து கொண்டு, அவரைப்போல மேனரிசத்தோடு வாழ்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர் இறந்து விட்டதைகூட நம்பாத முதியவர்கள் இப்போதும் உண்டு. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் பெயரும், அவரது வாழ்க்கை ஸ்டைலும் இன்றைக்கு பலபேரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர் புகழ்பாடுவதாக நினைத்துக் கொண்டு அவரையே கேலிக்கூத்தாக்குகிற நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் வாலிபன் சுற்றும் உலகம் என்ற பெயரில் தயாராகி உள்ள படம். சினிமாவில் அதிக தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன்.  இன்றைக்கு வெளிவரும் பிரமாண்ட பொழுதுபோக்கு படங்களுக்கு அதுதான் பிள்ளையார் சுழி போட்ட படம். இப்போதும் தமிழ்நாட்டில் எந்த தியேட்டரில் போட்டாலும் ஒருவாரம் கலெக்ஷனை அள்ளிக் கொடுக்கிற படம். அந்தப் படம் எத்தனை இடையூறுகளை சந்தித்து வெளிவந்தது.  அது எத்தனை பெரிய வெற்றி பெற்றது என்பது அந்தக் காலத்திய மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு ஜனரஞ்சக சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதனை பாடமாகவே வைக்கலாம். அப்படிப்பட்ட அற்புதமான படத்தை உல்டா செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.  எம்.ஜி.ஆர் சிவா என்பவர் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடித்திருக்கிறார். தாடி வைத்தவன் எல்லாம் தாகூர் ஆகிவிட முடியுமா? மொட்டை அடித்து கண்ணாடி போட்டவன் எல்லாம் காந்தி ஆகிவிட முடியுமா? தொப்பி வைத்து கூலிங் கிளாஸ் போட்டவன் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா. அப்படித்தான் முயற்சித்திருக்கிறார் சிவா.  எம்.ஜி.ஆர் வேடமிட்டு மேடையில் ஆடட்டும் பாடட்டும், அதனால் சிறு வருமானம் கிடைத்து பிழைத்துக் கொள்ளட்டும். ஆனால் அவரையே கேலிப்பொருளாக்கி ஒரு திரைப்படம் எடுத்திருப்பதை எப்படி சகித்துக் கொள்வான் எம்.ஜி.ஆர் ரசிகன். வாலிபன் சுற்றும் உலகம் படத்தில் சிவா எம்.ஜி.ஆர் போலவே நடக்கிறர். அவர் பல படங்களில் செய்த ஸ்டைலை இவர் ஒரே படத்தில் செய்கிறார். டூயட்டில் எம்.ஜி.ஆர் போலவே ஆடுகிறார். எம்.ஜி-.ஆரின் ஒவ்வொரு அசைவும் ஒரு ஸ்டைல் அதைப் பார்த்து பார்த்து ரசித்து வாழ்ந்தவன் அவரது ரசிகன். ஆனால் இந்தப் படத்தில் அதையே ஒரு வரைமுறையின்றி செய்து எம்.ஜி.ஆரின் ஸ்டைல், மேனரிசங்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். கதையும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் உல்டாதான். தொற்று நோய்களை குணப்படுத்தும் ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார் ஒருவர். வில்லன் கூட்டம் அந்த மருந்தின் ரகசியத்தை அழிக்க நினைக்கிறது. இதனால் வில்லன்கள் நடத்தும் தாக்குதலில் குடும்பம் பிரிகிறது. ஒரு மகன் தாயுடனும், இன்னொரு மகன் வேலைக்காரனுடனும், மகள் தந்தையுடனும் செல்கிறார்கள். பிற்காலத்தில் மூவரும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை.  http://www.sattigadu.com/wp-content/uploads/2012/06/Aachariyangal-Movie-First-Look-Posters-Wallpapers-2.jpg
9.. ஆச்சரியங்கள் - இந்தப்படத்துக்கு  என்ன விசேஷம்னா பேப்பர்ல  விளம்பரம் குடுத்து புது முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 2 மாசத்தில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படம்.   10. The Expendables 2   The Expendables 2, கோலிவூட்டில் தயாராகிவரும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாகும். Lions Gate Entertainment தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இத் திரைப்படத்தை Simon West இயக்குகிறார். வரும் ஆகஸ்ட்24 திரையிடப்படவுள்ள இத் திரைப்படத்தில் Sylvester Stallone, Jason Statham, Jet Li,Dolph Lundgren, Chuck Norris, Randy Couture, Terry Crews, Liam Hemsworth, Jean-Claude Van Damme, Bruce Willis, மற்றும் Arnold Schwarzenegger ஆகியோர் நடித்துள்ளனர். நவீன ஆயுதங்களின் வெடிப்பு சத்தங்களோடு படமாக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படத்தில் ஜெட் லீ நடிப்பதால் மரபு ரீதியான உடல் சண்டைக்கும் குறைவிருக்காது. இத் திரைப்படம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.ஈரோடு வி எஸ் பி, சண்டிகாவில் ரிலீஸ்

1 comments:

குரங்குபெடல் said...


"வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 24. 8..2012 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை"

"படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. "



"எம்.ஜி.ஆர் பெயரை கெடுக்கும் போலி எம்.ஜி.ஆர் படம்"




. . . . . . . ! ! ! ? ? ?