Friday, November 30, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 30.11.2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1.
Posted Date : 16:20 (22/11/2012)Last updated : 16:21 (22/11/2012)
செப்டம்பர் 21ம் தேதி வெளியீடு என்று விளம்பரம் செய்யப்பட்டது 'நடுவுல கொஞ்சம்  பக்கத்த காணோம்'. அப்படம் வெளியாகும் முன்பு பத்திரிகையாளர்கள், முன்னணி  இயக்குநர்கள் என படம் பார்த்த பலரும் பாராட்டினார்கள்.

அச்சமயத்தில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு தமிழகம் முழுவதும்  35 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது இப்படத்திற்கு பெரும்  எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தினை தற்போது 'ஆரோகணம்' படத்தின்  தயாரிப்பாளர் சதீஷ்குமார் வாங்கி நவம்பர் 30ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.  எனவே 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படக்குழு பத்திரிகையாளர்களை மீண்டும்  சந்தித்தது.

அங்கு பேசிய அனைவருமே இப்படம் தாமதமாக வெளியாவதில் எங்களுக்கு மிகப்பெரிய  சந்தோஷம்.தற்போது இப்படம் தமிழகம் முழுவதும் 150 திரையரங்குகளில்  வெளியாகிறது என்றார்கள்.

அப்போது பேசிய விஜய் சேதுபதி " 'பீட்சா' படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகவும்  சந்தோஷமாக இருக்கிறது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படமும் கண்டிப்பாக  வரவேற்பு பெரும் என்பதில் சந்தேகமில்லை.

உங்களுக்கு திரையிட்டு காட்டிய போது நீங்கள் கைதட்டி ரசித்தது எங்களுக்கு மிகப்பெரிய  சந்தோஷத்தினை கொடுத்தது. அச்சமயத்தில் 35 திரையரங்குகள் தான் கிடைத்தது..  அந்த நேரத்தில் படத்தினை அப்புறம் வெளியிடலாம் என்ற முடிவு எடுத்த  தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

படத்தில் சுமார் 20 நிமிட காட்சிகளை நீக்கி படத்தினை இன்னும் மெருக்கேற்றி  இருக்கிறார்கள். இப்படத்தினை தொடர்ந்து புதுமுக இயக்குனர்கள் இயக்கும் 'ரம்மி',  'சூது கவ்வும்' என வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட படங்களில் நாயகனாக  நடிக்கிறேன் " என்றார்.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக்  உரிமையையும் விற்று விட்டார்கள்.இரண்டு உரிமையையும் நடிகர் பிரசாந்தின் தந்தை  தியாகராஜன் வாங்கியிருக்கிறார்.

கோலிவுட்டில் இது ஒரு புது ட்ரென்ட்தான்.இனி நல்ல படமாக எடுத்தும் திரையிட  தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று தவிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள்,  இந்த ரூட்டிலேயே போகலாம் போல!ஈரோட்டில் தேவி அபிராமியில் ரிலீஸ் 




நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_8939.html

 http://www.vizhi.net/wp-content/uploads/2012/11/Neerparavai_12.jpg
2. நீர்ப்பறவை 

பலரும் மிக எதிர்பார்ப்போடு இருக்கும் படம் : நீர்ப்பறவை. சமீபத்து பாடல்களில் மனதை பெரிதும் கவர்வது இப்பட பாடல்கள் தான் !  


கலைஞரில் இப்படத்து பாடல்களை நிஜத்தில் பாடியவர்களே வந்து பாடிக்காட்ட,  பட காட்சிகளையும் சற்று காண்பித்தனர். கடலோர கவிதைகள் போல கடலை ஒட்டி நடக்கும் ஒரு காதல் கதையாகவே தோன்றுகிறது. கூடவே தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசமும், மீனவர் பிரச்னையும் கதையில் தொட்டு செல்ல கூடும். ஹீரோயின் சுனைனா செம அழகு. மீனுக்கு சிறு மீனுக்கு  பாடல் திரையாக்கம் லட்சக்கணக்கான சுனைனா ரசிகர்களுக்காக டெடிகேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது :)    



ரகுநந்தன் இசையில், “பரபர பறவை” என்கிற அட்டாசமான பாட்டு பாடிய  இசை அமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் குமார்    ” எல்லா மெட்டையும் கேட்டு விட்டு, இது தான் நிச்சயம் பெரிய ஹிட் ஆகும் என இந்த பாட்டை செலக்ட் செய்து பாடினேன் ” என்றார் சிரித்தவாறே. 


:"கிறிஸ்தவர்களின் மனதை புண்படும் படி பாடல் எழுதிய வைரமுத்து, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டு உள்ளது.

சீனு ராமசாமி இயக்கியுள்ள, "நீர்ப்பறவை' எனும் சினிமா படத்தில், இடம் பெற்றுள்ள பாடல்கள், கிறிஸ்தவர்களின் மனதை புண்படும்படி எழுதப்பட்டு இருப்பதாக, எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, பாடலாசிரியர் வைரமுத்து வீடு மற்றும் அலுவலகத்திற்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதன் விவரம்:"நீர்ப்பறவை' சினிமா படத்தில், கிறிஸ்தவ பெண்களை கேவலமாக சித்தரித்தும், பைபிளை இழிவுபடுத்தும் வண்ணம், பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. வசனங்களும், இழிவுபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டு இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெறால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதுl

ஈரோடு அபிராமியில் ரிலீஸ்  

பட விமர்சனம் படிக்க 


அட்ரா சக்க: நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்


-http://www.adrasaka.com/2012/11/blog-post_9009.html
 http://www.telugunow.com/wp-content/uploads/2012/10/Krishnam-Vande-Jagadgurum-t.jpg?5c1bd2
 3. Krishnam Vande Jagadgurum -  கம்யம், வேதம் படங்களை இயக்கிய க்‌ரிஷின் அடுத்த படம் Krishnam Vande Jagadgurum. தெலுங்கு தெ‌ரியாமல் மொழிபெயர்த்தால் பெய‌ரின் கடைசி எப்படிப் பார்த்தாலும் குருமா என்றே வருகிறது. எதற்கு வம்பு, ஆங்கிலத்திலே படித்துக் கொள்ளுங்கள்.இதில் கம்யம் காதல்னா சும்மா இல்லை என்ற பெய‌ரில் தமிழில் ‌ரிமேக் செய்யப்பட்டது. இரண்டாவது படமான வேதத்தை க்‌ரிஷ்ஷே வானம் என்ற பெய‌ரில் தமிழில் எடுத்தார். தெலுங்கில் சூப்பர்ஹிட்டான இரண்டும் தமிழில் ரொம்ப சுமாராகவே போனது. மூன்றாவது படத்தை தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் எடுத்திருக்கிறார் க்‌ரிஷ். நயன்தாரா, ராணா நடித்துள்ளனர். ராணாவின் முதல் தமிழ்ப் படமாக இருக்கப் போகும் இதற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.தமிழ்ல ஓங்காரம் என ரிலீஸ் ஆகுது


http://www.hamaramovie.net/wp-content/uploads/2012/10/Krishnam-Vande-Jagadgurum-Movie-stills-550x297.jpg



ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில், சீதை வேடத்தில், பவ்யமாக நடித்த நயன்தாரா தற்போது ராணாவுடன் நடித்துள்ள, கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் என்ற படத்தில் கிளாமராக நடித்துள்ளார்.
இப்படம், ஓங்காரம் என்ற பெயர் மாற்றத்துடன் தமிழுக்கும் வர உள்ளது. இதுபற்றி நயன்தாரா கூறும் போது, 
ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடம் என்பதால், அந்த கரக்டருக்கு ஏற்ப, மாறி நடித்தேன். ஆனால், சாதாரண மாடர்ன் கரக்டர்கள் என்கிற போதும், 
முழுசாக போர்த்திக் கொண்டு நடித்தால், ரசிகர்களிடம் எடுபடாது. 
அதனால் தான் ராணாவுடன் நடித்த படத்தில் கதைக்கும், காட்சிக்கும் அவசியப்பட்ட இடங்களில் சற்று கிளாமராக நடித்தேன். 
மற்றபடி, ஓவராக கிளாமர் காண்பிக்கவில்லை. தமிழிலும், அஜீத்துடன் நடிக்கும் படம், ஆர்யாவுடன் நடிக்கும், ராஜாராணி படம் ஆகியவற்றில், ரசிக்கத் தூண்டும் வகையில், கிளாமராக நடித்து வருகிறேன் என்கிறார்.
கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் என்ற படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ராணா- நயன்தாரா ஜோடி மும்பைக்கு வரவிருக்கிறார்களாம்.
 ராணா, நயன்தாரா சேர்ந்து நடித்துள்ள தெலுங்கு படம் கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்.
நயன்தாரா படுகவர்ச்சியாக நடித்துள்ள இந்த படத்தை விளம்பரப்படுத்த நாயகி, நாயகன் இருவரும் இணைந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்கிறார்களாம்.


மேலும் இப்படத்தை இந்தியில் டப் செது வெளியிடும் திட்டமும் உள்ளது என்று கூறப்படுகிறது.


இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ராணாவும், நயனும் நல்ல நண்பர்களாகி விட்டனராம். ஆனால் அவர்கள் டேட் செய்வதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் அவர்கள் மும்பை வரும்போது அங்கிருந்து கிளம்பி வேறு எங்காவது செல்லத் திட்டமிட்டுள்ளாராம் பிரபுதேவா.


நயன்தாராவைப் பிரிந்த பிறகு பிரபுதேவா மும்பையில் தங்கி இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நேரத்தில் முன்னாள் காதலியை சந்திப்பது நன்றாக இருக்காது என்று நினைக்கிறாராம்.


Krishnam Vande Jagadgurum - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/12/krishnam-vande-jagadgurum.html
 



http://www.beyondhollywood.com/uploads/2012/05/Rachel-McAdams-on-the-set-of-Passion-2013-Movie-Image.jpg
4.  THE PASSION -A young businesswoman plots a murderous revenge after her boss and mentor steals her idea.


 "Are you kidding me?" "is this a joke?" these were the questions I asked to writers, producer, director and actors who involved in this movie as well as to the critics who gave high ratings to it. Bad scenario, bad acting (excluding Rachel McAdams). This movie reminded me of the movie Room in Rome which also tried so hard make a terrible scenario to look attractive with girl to girl action. 



I'm not a movie critic or somebody who can understand from cinematography etc. I'm just a keen movie watcher who watches average of 60 movies a year. According to me this is a terrible movie and feel like this is my responsibility to warn people not to waste their time and movie to watch a beyond mediocre movie.

ஈரோட்டில் வி எஸ் பி யில் ரிலீஸ்
நன்றி - விகடன் , வல்லமை , தினமலர் , மற்றும் அனைத்து சினிமா இதழ்கள்

 http://cafebollywood.in/wp-content/uploads/mvbthumbs/img_12561_talaash-music-launch-at-red-light-area.jpg

5. talash - அமீர்கானின் தலாஷ் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரஜினி நடிக்கிறார் என்றும், இதற்காக அவருக்கு ரூ 15 கோடி சம்பளம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், தங்கள் படங்களில் ரஜினி நடிக்கிறார் என்று செய்தி பரப்புவது வழக்கமாகி வருகிறது.


இதற்கு முன் ஷாரூக்கானின் ரா ஒன் படத்தில் ஒரு காட்சியில் வந்தார் ரஜினி. ஆனால் அது ரஜினிதானா என்று கேட்கும் அளவுக்கு படு செயற்கையாக எடுத்திருந்தனர்.


அடுத்து தூம் 3-ல் ரஜினியை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்தே செய்தி வெளியிட்டுள்ளனர்.

இப்போது அமீர்கான் முறை. தனது தலாஷ் படத்தில் ரஜினியை ஒரு பாடல் காட்சியில் தோன்ற வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளாராம்.


இந்தக் காட்சியில் ரஜினி மட்டுமல்லாமல், அமிதாப், தர்மேந்திரா உள்பட பாலிவுட் பிரபலங்களும் தோன்றுவார்களாம். கபில்தேவ், சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரும் கூட இந்த பாடலில் இடம்பெறவிருக்கிறார்களாம்.


பல்வேறு நாடுகளில் உள்ள 50 லொகேஷன்களில், ரூ 50 கோடி செலவில் இந்தப் பாடல் காட்சி படமாகப் போகிறதாம்.


இந்தப் பாடலில் தோன்ற ரஜினிக்கு சம்பளம் ரூ 15 கோடி என செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், உலகிலேயே ஒரு பாடலில் தோன்ற அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமையும் ரஜினிக்கே கிடைக்கும்!


http://mimg.sulekha.com/hindi/talaash/stills/talaash-cinema-035.jpg

A cop, a housewife and a prostitute get entangled in a mystery that links their lives in unexpected ways.  


Went for Talaash screening expecting a great thriller but what i witnessed was sheer magic on screen.

Story starts with an ostensible accident of a star followed by police investigation.Chief investigation officer is played by Aamir Khan. The story of Talaash is not only about suspense element ,suspense is just a part of beautiful lesson portrayed in Talaash i.e. " Coming to terms with loss". Go with high expectations and you will be pleasantly shocked to see the brilliance.

Songs Jee le Zara and Muskanein look exceptional on screen.

Can't help,have to give it a 10/10.



Talaash - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/12/talaash.html
 





http://movieszone.in/wp-content/gallery/talaash/talaash-movie-stills-rani-mukherji-hot.jpg

1 comments:

Unknown said...

பகிர்வுக்கு நன்றி.
நேரம் கிடைத்தால் என் தளத்தையும் வந்து பார்க்கவும்.