Sunday, May 01, 2016

விருத கிரி + அழகிரி =?

உடன் பிறப்பே! பழம் என்று நினைத்தேன்.காத்திருந்தேன்.அது பாழாப்போன பழம் ஆகி விட்டதே! நான் என் செய்வேன்?


============



2 கலைஞரின் இப்போதைய கவலை 234 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக 2,ம் இடத்தை யாவது தக்க வைக்க வேண்டும் என்பதே




==========



3 பழம் "தெறி"ச்சு விழுந்துடுச்சு




============



4 முரசு ஒலி முரசொலிக்கு எதிர் முகாமில்




=============




5 தலைவரது 2016 அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியவர் கேப்டன் "பிரபாகரன்" ,குறியீடு.தன் வினை தன்னை சுடும்




================



6 வாக்கு வங்கி சதவிகிதப்படி


1 அதிமுக
2 திமுக
4 பாமக
3 ம ந கூ 5 பாஜக
6 நாம் தமிழர் மற்றும் உதிரிக்கட்சிகள் ,சுயேட்சைகள்


============


7 உனக்குக்கிடைக்காதது எதிரிக்குக்கிடைத்தால் நீ செய்ய வேண்டியது அமைதி காத்தலே!,சாபம் விடுவதோ ,அங்கலாய்ப்பதோ உன் பலவீனத்தை மேலும் பறை சாற்றும்


==========


8 தானைத்தலைவர் மைன்ட் வாய்ஸ் = கிலி மயமான எதிர் காலம் என் உள்ளத்தில் தெரிகிறது. நமக்குக்கிடைக்காதது எதிரிக்குக்கிடைத்ததே என வயிறு எரிகிறது

=============

9  எதிரியைப்பழி வாங்க நூதன வழி ,அவனை நம்ப வை , அலைய விடு ,ஆசை காட்டு , பின் எதிரியின் எதிரியோடு சேர்ந்து கொள்


=================


10 வருசத்துக்கு  ஒரு தடவை தான் ஹோலிப்பண்டிகை வரும், ஆனா கோலி கிரவுண்ட்ல இறங்கினாலே அன்னைக்கு கோலி பண்டிகைதான்


=================


11 இக்கட்டான சூழலிலும்கூட நிதானத்தை,சமயோசித புத்தியைத்தவறவிடக்கூடாது என்பதற்கு நேர்மறை உதா - கேப்டன் டோனி, எதிர் மறை உதா கேப்டன் விஜய்காந்த்



==========



12 எதிரி பலத்துடன் இருக்கும்போது உனக்கு என்னென்ன கெடுதல் செய்தான் என்பதை குறித்து வைத்துக்கொள்.எதிரி பலவீனம் ஆகும்போது அதையே நீ திருப்பி செய்



===============

13 எதிரி சத்ரியன் ஆக இருக்கும்போது நீ சாணக்கியன் ஆகி விடு.எதிரி சாணக்கியன் ஆகும்போது நீ தெறி ஆகி விடு.சத்ரியனின் லேட்டஸ்ட் வெர்சன் தான் தெறி

============


14 தேங்காய் பர்பி பொம்மை போல் ஆபீசில் ஒரு பிகர் அழகா இருந்துட்டாப்போதும்.பேசி பேசி கரெக்ட் பண்ணி கடலை பர்பி பொம்மை ஆக்கிடறாங்க

=============

15 யாருக்கு உங்கள் வாக்கு கிடையாது என பப்ளிக்கா சொல்லலாம்.ஆனா யாருக்கு வாக்களிப்போம் என ஓப்பனா சொல்லக்கூடாது.


=======


16 சாய் பல்லவி யோட லவ்வர் இது என் சாய் பல்லவின்னு சொன்னா சரி எஞ்சாய் பல்லவி னு வாழ்த்தற மனசு வேணும்

=============

17 நிம்மதிவேண்டுமெனில் யாருக்கும் அதிக இடம் கொடுக்காதீர்.அதிக பட்சம் ஒரு பிகருக்கு 1 சென்ட் இடம் போதும். ஏக்கராக்கணக்கில் எழுதி வைக்காதீர்


===============


18 பொண்ணுங்க பல வகை.சிலர் தள்ளியிருந்து ரசிப்பதே சாலச்சிறந்தது.னு நினைக்கறவங்க.
சிலர் தள்ளி விட்டுடுவோம்.எப்டியோ போகட்டும்னு நினைப்பவர்கள்


=============


19 பொண்ணுங்க அன் பாலோ பண்ணினா நெட் தமிழன் ஏன் துடிதுடிச்சுப்போய்டறான்னு கண்டுபிடிச்ட்டேன்
1 பிரஸ்டீஜ் பிராப்ளம்
2,டி எம் அனுப்ப முடியாது


============


20 உடன் பிறப்பே ! விருத கிரி யை நம்பி ஏமாந்தது போதும்.அழகிரியை நம்பிஅவரை மீண்டும் களம் இறக்க முடிவு செய்து விட்டேன்


============


0 comments: