கமலுக்கு உலகநாயகன் பெயர் பொருத்தமானது தான்! ஹாலிவுட் டைரக்டர்

இப்படத்தினை பிரபலபடுத்துவதற்காக இந்தியா
வந்துள்ளார் ஆங்லீ. சென்னை வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
பின்னர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அப்போது கமல் தன்னுடைய
விஸ்வரூபம் படத்தின் டிரைலரை ஆங்லீக்கு திரையிட்டு காண்பித்துள்ளார்.
கமலின் படைப்பாற்றலை பார்த்து அவரை பாராட்டினார் ஆங்லீ.
கமல் உடனான சந்திப்பு குறித்து ஆங்லீ கூறியுள்ளதாவது, சினிமாவில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். அந்த அர்ப்பணிப்பு கமலிடம் நிறைய உள்ளது. அவரின் விஸ்வரூபம் படத்தின் டிரைலரை பார்த்தேன். மொழி தெரியாதவர்கள் கூட அவரது படத்தை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். கமலுக்கு பல விஷயங்கள் தெரிந்துள்ளது. என்னைப்பற்றி கூட அவர் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். உலகம் சினிமா பற்றி அவர் நன்கு புரிந்து வைத்து இருக்கிறார். அவருக்கு உண்மையிலேயே உலகநாயகன் என்ற பட்டம் கொடுத்து இருப்பது பொருத்தமான ஒன்றுதான். அவரை சந்தித்தது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
கமலுக்கு தேசியவிருது கிடைத்தது எப்படி? பாலுமகேந்திரா ருசிகரம்!

விழாவில் டைரக்டர் பாலுமகேந்திரா, கமல்ஹாசனைப் பற்றி பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் பேசுகையில், "மூன்றாம் பிறை படத்தின் கதையை முதலில் ஸ்ரீதேவியிடம்தான் கூறினேன். அதைக் கேட்டவுடன், அவர் உருகி அழத்தொடங்கி விட்டார். பிறகு கமல்ஹாசனிடம் கதையை சொன்னேன். "எனக்கு இது சரிப்பட்டு வருமா? என்று கமல் முதலில் சந்தேகப்பட்டார். "நிச்சயமாக இது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று சொல்லி சம்மதிக்க செய்தேன். அந்த படம், கதாநாயகியை மையமாக கொண்ட படம் என்பதால், எல்லா காட்சிகளிலும் ஸ்ரீதேவியே வருவார். படத்தில் அவர் பிரமாதமாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
கமல், ஸ்ரீதேவியுடன் தோன்றுகிற காட்சிகளில் எல்லாம், "நீங்கள் நடிக்க முயற்சிக்காதீர்கள். இயல்பாக இருங்கள் என்று கமலிடம் சொன்னேன். அவரும் அதை அப்படியே செய்தார். மலையில் இருந்து கொட்டுகிற அருவி, பாறையின் மீது பட்டுத் தெறிக்கும்போது, தோன்றும் அழகே தனிதான். அதுபோல் கொட்டுகிற அருவியாக ஸ்ரீதேவி இருந்தார். பட்டுத் தெறிக்கிற பாறையாக கமல் இருந்தார். அதனால்தான் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
கமல்ஹாசன் தேடல் உள்ள ஒரு அற்புதமான கலைஞர். ஆரம்ப காலங்களில், என்னிடம் எப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார். அவரிடம் இருக்கக்கூடிய நகைச்சுவை உணர்வு, எனக்கு மிகவும் பிடிக்கும். கமல்ஹாசனை நான் ஒரு ரசிகனாகவே பார்க்கிறேன். பட்டத்து இளவரசனுக்கு முடிசூடும்போது எப்படி நாடே மகிழுமோ, அதுபோல் அவரை பாராட்டுகிறபோது, நானும் மகிழ்கிறேன், என்றார்.
விழாவில், டைரக்டர் - நடிகர் பார்த்திபன் பேசும்போது, கமல் ஒரு பரிசோதனை கூடம் போன்றவர். திரைப்படத்தின் பல்வேறு கூறுகளை, தன்னை முன்னிலையாகக் கொண்டு பரிசோதித்து பார்ப்பவர். அவர் முதல் படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 250 ரூபாய்தான். அதில் இருந்து நாள்தோறும் வளர்ந்து, இன்றைக்கு இந்த உயர்வை எட்டியிருக்கிறார். அவரே ஒரு தொகுப்புதான். அவருக்கு ஒரு தொகுப்பு நூல் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் சார்லி, சண்முகராஜா, நடிகை ரோகிணி, கவிஞர் நா.முத்துக்குமார், கு.ஞானசம்பந்தன் ஆகியோரும் கமலை பாராட்டி பேசினார்கள்.

.
The interview session was attended by several prominent film makers from the South. Kamal Haasan is a huge fan of Ang Lee's cinema and was thrilled to meet him and discuss his style of filmmaking.
After the interview, Ang Lee said he was happy that Kamal Haasan knew so much about him and his films.
"I am totally stunned by Kamal Haasan's brilliance," said the Taiwanese-born American director of Academy award winning films such as Crouching Tiger, Hidden Dragon andBrokeback Mountain.
"I never thought that he would know so much about me and my films. Inspired would be the word. He is not only an amazing actor but a great human being who knows everything about world class cinema. I am happy to have been interviewed by him," he added.
After the interview, Kamal Haasan took Lee to his office and showed him the trailer of his latest film Viswaroopam.
After watching the trailer, Lee said, "A person who is not aware of the language too can understand the movie. It's totally stunning. I am sure this movie will be a huge hit."
நன்றி - தினமலர், டெக்கான் கிரானிக்கல்
4 comments:
kamal birthday special post.thank u.
kamal birthday special post.thank u.
kamal .a true universal hero+super hero
கமல் ஒரு நொண்டிக்குதிரை. தொடர்ந்து தோல்வி படங்களை தந்ததால் இப்பொழுது 58 வயதில் பயம் தொற்றிக்கொண்டது. அதனால் தான் முஸ்லிம்களை கேவலமாக சித்தரித்து "விஸ்வரூபம்" என்ற பெயரில் படம் எடுக்கிறார்.
Post a Comment