Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Tuesday, November 10, 2015

தூங்காவனம்'

கமலஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, மதுஷாலினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தூங்காவனம்'. ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
* தனது சரக்கை திருடிய போலீஸ் அதிகாரியின் மகனை கடத்தும் போதைப்பொருள் கும்பலின் தலைவன். சரக்கை திரும்பத் தருமாறு மிரட்டுகிறான். தன்னையும் தன் மகனையும் காப்பாற்ற போலீஸ் தந்தை போடும் திட்டமே படம் 'தூங்காவனம்'.
* கமல், த்ரிஷா, கிஷோர் மூவரும் போலீஸ் அதிகாரியாகவும், பிரகாஷ்ராஜ் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனாகவும் நடித்திருக்கிறார்கள். த்ரிஷா நடிப்பில் வெளியாக இருக்கும் 50-வது படம் இது.
* 60 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு படப்பிடிப்புகளையும் முடித்திருக்கிறார்கள். படப்பிடிப்புக்குச் சொல்லும் முன்பு படக்குழுவினர் அனைவருக்குமே நடிப்புப் பயிற்சியில் பங்கேற்றதால் தான் விரைவில் முடிக்க முடிந்தது என்கிறது படக்குழு
* தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். படத்தில் வரும் காரின் நம்பர் ப்ளேட், போலீஸ் உடை என அனைத்தையுமே மாற்றி தெலுங்கு படத்துக்கான காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
* முரட்டுத்தனமாகாவும் அதே வேளையில் ஸ்டைலாகவும் கமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். அப்போது, தமிழ் மக்களுக்காக நடைபெற்ற ஒரு போராட்டத்தில் இதே போன்றதொரு தோற்றத்தில் இருந்திருக்கிறார். கமலிடம் "உங்களது தோற்றம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்" என்று அந்த போராட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தைக் காட்டியிருக்கிறார். இயக்குநர் சொன்னதும், கமல் சரி என்று ஒப்புக் கொண்டார்.
* படப்பிடிப்பு நடைபெறும்போது எடிட்டிங்கும் அங்கேயே நடைபெற்று இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து ஒரு நாள் இடைவெளி கொடுத்திருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் முதல் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டார்கள். எடிட்டிங்கிற்கு என்று தனியாக எந்த ஒரு நாளையும் படக்குழு செலவிடவில்லை.
* ஒரு நாள் விபத்துக் காட்சிக்கு ஒப்பனை செய்ய ஒப்பனைக் கலைஞரை படக்குழுவினர் அழைக்கவில்லை. ஆனால் அந்த கலை கமலுக்குத் தெரியும் என்பதால், அவரே அன்று ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி இருக்கிறார்.
* இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் மதுஷாலினி. இப்பாத்திரத்துக்கு மதுஷாலினி இருந்தால் நன்றாக இருக்கும் என சிபாரிசு செய்திருக்கிறார் ப்ரியா ஆனந்த்.
* படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கதைப்படி கிடையாது. அப்பாடலை வைரமுத்து எழுத, கமலே பாடியிருக்கிறார்.
* ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இப்படத்துக்காக ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் பெரிய பார் செட்டப் போடப்பட்டு, அதனுள் பிரத்யேக காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு இருக்கிறது.
* இப்படத்தில் த்ரிஷாவின் வேடத்துக்கு பல்வேறு மேக்கப் செய்து பார்த்தார்கள். போலீஸ் வேடம் என்பதால் இறுதியில் எந்த ஒரு மேக்கப்பும் போடாமல் நடித்திருக்கிறார். கண்ணுக்குக் கூட மேக்கப் போடப்படவில்லை.
* 'ஸ்லீப்லஸ் நைட்' என்ற ப்ரெஞ்ச் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் 'தூங்காவனம்'. ப்ரெஞ்ச் படத்தில் பணியாற்றிய சண்டைக் கலைஞர்கள் அனைவருமே இப்படத்திலும் பணியாற்றி இருக்கிறார்கள்.
* பாரில் உள்ள சமையல் செய்யும் இடத்தில் கமல் - த்ரிஷா - கிஷோர் மோதும் ஒரு சண்டைக்காட்சி இப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது.
* படப்பிடிப்பு தளத்தில் பிரம்மாண்டமான விளக்குகள் எல்லாம் போடாமால், படப்பிடிப்பு தளமே முழுக்க விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த வெளிச்சத்தில் மொத்த படத்தையும் படமாக்கி இருக்கிறார்கள்.
* வேறு ஒரு இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் போது, இயக்கத்தில் தலையிடுவார் கமல் என்பார்கள். அது குறித்து இயக்குநர் ராஜேஷிடம் கேட்டால், "கமல் சாரிடம் இந்தக் காட்சி எப்படி வந்திருக்கிறது பாருங்கள் என்று கேட்டால், படத்தின் இயக்குநர் நீங்கள் தான், அதைப் பார்க்கத் தான் உங்களுக்கு சம்பளம் கொடுத்திருக்கிறேன்" என்று கமல் சொன்னதாக தெரிவித்தார்.
* இப்படத்துக்கான ஒலிவடிவமைப்பை லாஸ்-ஏஞ்சல்ஸ் நகரில் செய்திருக்கிறார்கள். இதற்காக ஒரு பெரும் தொகையை படக்குழு செய்திருக்கிறது.
* படத்தில் பார் காட்சிகள் அதிகமாக இடம்பெற்று இருப்பதால் சென்சார் அதிகாரிகள் 'U/A' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.
* இதுவரை கமலின் தெலுங்கு படங்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் டப்பிங் பேசியிருக்கிறார். கமல் முதன் முதலில் தெலுங்கில் டப்பிங் பேசிய படம் இது தான்.
* தெலுங்கில் நாகார்ஜுன் மகன் அகிலின் படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாவதால், 'தூங்காவனம்' தெலுங்கு பதிப்பு நவம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. அதுவரை ஆந்திராவில் இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு பதிப்புகளின் வெளியீடுமே இல்லை என்கிறது படக்குழு.
* 13 வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் கமல் - அஜித் படம் வெளியாகிறது. 'தூங்காவனம்' - 'வேதாளம்' படங்களுக்கு முன்பாக ஒரே நாளில் வெளியான கமல் - அஜித் படம் 'பம்மல் கே.சம்பந்தம்' - 'ரெட்'.

-thanx- the hindu

Thursday, October 08, 2015

'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்

'தூங்காவனம்' இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மத்தியில் கமல்ஹாசன் பேசிய போது | படம்: எல்.சீனிவாசன்
'தூங்காவனம்' இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மத்தியில் கமல்ஹாசன் பேசிய போது | படம்: எல்.சீனிவாசன்
கொஞ்சம் திட்டமிட்டால், குறைந்த நாட்களில் முழு திரைப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட முடியும் என்று 'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசினார்.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் 'தூங்காவனம்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பாடலாசிரியர் வைரமுத்து, த்ரிஷா, மதுஷாலினி உள்ளிட்ட படக்குழுவினரோடு தனுஷ், ஸ்ருதிஹாசன், கெளதம் மேனன், பாண்டிராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியது, "'தூங்காவனம்' திரைப்படம் 40 நாட்களில் எடுத்தார்கள், 30 நாட்களில் எடுத்தார்கள் என வெவ்வேறு நம்பர்கள் சொல்லப்படுகின்றன. இரண்டு மொழிகளில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். பல காட்சிகள் இருமுறை செய்யப்படுவதாகவே அமைந்தன. கார் உருளும் காட்சிகள் மற்றும் போலீஸ்காரர்கள் வரும் காட்சி என அனைத்துமே இரண்டு முறை காட்சிப்படுத்தினோம். இப்படி எல்லாமே இரண்டு முறை பண்ணியதால், இது இரண்டு படங்கள் என திண்ணமாக சொல்லலாம்.
இந்த இரண்டு படங்களையும் நாங்கள் முதலில் 52 நாட்களில் முடிக்க தீர்மானித்தோம். எடுத்த படத்தைப் போட்டு பார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்ய வேண்டியது இருந்ததால், மேலும் 8 நாட்கள் அதிகமாகின. மொத்தம் 60 நாட்களில் 2 படங்கள். பிரித்துக் கொண்டால் 30 நாட்களில் 1 படம் என்று சொல்லலாம்.
இதை ஏன் பெருமையாக சொல்கிறேன் என்றால் நானே 200 நாட்களுக்கு படம் பண்ணியிருக்கிறேன். கொஞ்சம் திட்டமிட்டால், அவ்வளவு நாட்கள் தேவையில்லை என்பது என் கருத்து. இதைச் சொல்லும் போது, பல்வேறு நபர்கள் இந்தக் காலத்தில் முடியாது என்று சொன்னார்கள். செய்யும் முடியும் என்று தீர்மானித்து, கடந்த 5, 6 வருடங்களாக ஒரு நல்ல அணியை அமைத்திருக்கிறோம்.
அந்த அணியின் வெற்றி தான் இந்தப் படம். நான் சொல்லிவிட்டேன் என்பதால் பண்ணிய படம் அல்ல. இதற்கு முன்பு 'ராஜபார்வை' என்ற படம் 55 நாட்களில் 2 படங்கள் பண்ணினோம். அத்தனை நபர்களும் சேர்ந்து உழைத்தால் கண்டிப்பாக சாத்தியம் தான்.
ஒரு சி.டி மாதிரியான வட்டை கையில் கொடுத்து இதுதான் பாட்டு என்று நிரூபிக்க வேண்டிய காலம் இல்லாமல், இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஐ-டியூன்ஸில் பாடல் வெளியாகிவிட்டது. அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது" என்று கமல்ஹாசன் பேசினார்.
இவ்விழாவின், இறுதியாக சி.டியை வெளியிட கேட்டார்கள், இல்லை அது வேண்டாம் என்று கமல் மறுத்துவிட்டார்.
'தூங்காவனம்' படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறது. அப்பாடலை வைரமுத்து எழுத, கமல்ஹாசன் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ehidu
thanx-thehinndu

Thursday, September 03, 2015

புலி படத்தின் மெயின் காமெடி ஹீரோ ரோபோ சங்கர் பேட்டி

‘மாரி’ படத்தின் மூலம் காமெடி நடிப்பில் பளிச்சென்று தெரிந்தார் ‘ரோபோ’ சங்கர். தற்போது விஜய் நடித்து வெளிவரவுள்ள ‘புலி’ படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள அவரைச் சந்தித்தோம்.
நீங்கள் எப்படி ‘ரோபோ’ சங்கர் ஆனீர்கள்?
என்னுடைய பெயர் சங்கர். நான் மதுரைக்காரன், எம்.ஏ வரை படித்திருக் கிறேன். படிக்கும்போதே நான் பாடி பில்டர். நடனக் குழுக்களிலும் இருந்துள் ளேன். ஒரு முறை வித்தியாசமாக MUSCLES நடனம் பண்ண ஆரம் பித்தேன். பிறகு உடல் முழுக்க பெயின்ட் அடித்து ரோபோ போன்று நான் ஆடிய நடனம் பிரபலமானது. அப்படித்தான் ‘ரோபோ’ சங்கர் ஆனேன். இதுவரை 42 நாடுகளில் 14,000 கலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன்.
கலை நிகழ்ச்சிகளில் இருந்து எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள்?
தொலைக்காட்சியில் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சிதான் எனக்கு அறிமுகம். அதன் மூலமாக மேலும் சில நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வந்தது. அது இன்னும் பிரபலமாக சினிமா வாய்ப்புகள் வந்தன. ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வாயை மூடி பேசவும்’ படங்களில் பெரிய பாத்திரங்கள் கிடைத்தன. ‘வாயை மூடி பேசவும்’ இயக்குநர் பாலாஜி மோகன் மூலமாக ’மாரி’ படத்தில் வாய்ப்பு வந்தது. அதன்மூலம் இப்போது எல்லோருக்கும் தெரிந்த முகமாகி இருக்கிறேன். இந்த இடத்தைப் பிடிக்க நான் நிறைய கஷ்டப்பட்டுள்ளேன்.
நான்தான் ‘மாரி’ படத்தின் நிஜ ஹீரோ என்று நீங்கள் பேசியதாக சில செய்திகள் வெளிவந்ததே?
என் வாழ்க்கையிலேயே நான் மிகவும் வருத்தப்பட்டது இந்தச் செய்தியைப் பார்த்துதான். ‘மாரி’ படத்தில் எனக்கு பெரிய வாய்ப்பு கொடுத்தவர் தனுஷ் சார். அப்படி இருக்கும்போது தனுஷ் சாரை புண்படுத்தும் விதமாக நான் அப்படி சொல்வேனா?
தனுஷ் சாரை நேரில் சந்தித்து, அந்த மாதிரி எல்லாம் நான் பேசவில்லை சார் என்றேன். அதற்கு அவர், “எனக்கு உங்களைப் பற்றி தெரியும். நீங்கள் இப்போதுதானே வந்திருக்கிறீர்கள். இதைப்போல இன்னும் நிறைய வரும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்றார். அதற்கு பிறகு 2 நாட்கள் கழித்து ஒரு தங்கச் சங்கிலியை பரிசளித்தார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் அதுதான்.
எந்த இயக்குநரின் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? எந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?
ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனித்திறமை இருக்கிறது. ஆகையால் அனைத்து இயக்குநரின் படங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். நமக்கு காமெடிதான் வரும். அதனால் காமெடிக்கு முதலில் முக்கியத்துவம் அளிப்பேன்.
‘புலி’ படத்தில் உங்களுக்கு என்ன பாத்திரம்?
அதில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்ன பாத்திரம் என்பது மட்டும் சஸ்பென்ஸ்.
எந்த நாயகனுடன் இணைந்து காமெடி பண்ண ஆசைப்படுகிறீர்கள்..
எனக்கு கமல் சார், அஜித் சார் இருவருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதே போல, நிறைய காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள், நான் யாருக்கும் போட்டி இல்லை. என் வழி தனி வழி என்று தீர்மானித்து போய் கொண்டிருக்கிறேன்.


நன்றி - த இந்து

Monday, April 20, 2015

ஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில்லர்

'மன்மதன் அம்பு' படத்தில் கமல் மற்றும் த்ரிஷா | கோப்பு படம்
'மன்மதன் அம்பு' படத்தில் கமல் மற்றும் த்ரிஷா | கோப்பு படம்
கமல்ஹாசன் - த்ரிஷா இணைந்து நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ராஜேஷ் இயக்கவுள்ளதாக தெரிகிறது. இவர், கமல் உடன் நீண்ட நாட்களாக இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
'உத்தம வில்லன்' மே 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 'பாபநாசம்' வெளியீட்டு தேதியை முடிவு செய்ய இருக்கிறார்கள். தனது அடுத்த படத்தை இயக்கி, நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல் என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில், "முதலில் தானே இயக்கி நடிப்பது என முதலில் கமல் முடிவு செய்திருந்தார். தற்போது தன்னிடம் நீண்ட நாட்களாக இணை இயக்குநராக பணியாற்றி வரும் ராஜேஷை இயக்க சொல்லியிருக்கிறார்.
'மன்மதன் அம்பு', 'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்' உள்ளிட்ட படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் ராஜேஷ்" என்று படக்குழு தெரிவித்தது.
'ஓர் இரவு' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க மொரீஷியஸ் தீவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
"இப்படத்தின் கதை குறித்து த்ரிஷாவுடன் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அவரும் இப்படத்தில் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறார். விரைவில் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்படுவார்" என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
இப்படம் முழுக்க ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாகும். உலகளவில் உள்ள முக்கிய ஸ்டண்ட் கலைஞர்களை இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் கமல்.
இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகி இருக்கிறார். கமல் - ஜிப்ரான் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும் 4-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி  -த இந்து

Monday, March 02, 2015

உத்தம வில்லன் - அப்டேட்ஸ்

கமல் நடிப்பில் வெளியாக இருக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பார்த்திபனின் நகைச்சுவையான பேச்சு, கே.பியைப் பற்றி கமல் உருக்கம், ஊர்வசியின் எதார்த்தமான பேச்சு என பல சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறின.
அவற்றின் சிறு தொகுப்பு இதோ:
* 'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவினை நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கினார். அப்போது கமல் என்ற மூன்று எழுத்துக்கு என்ன அர்த்தம் என்று தெரிவித்தார். க - கலைகளில், ம-மரணமே, ல் - இல்லாதவன் என்று பார்த்திபன் கூறினார்.
* மறைந்த இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதம் ஒலி வடிவில் திரையில் கமல் - கே.பி படங்களோடு ஒளிபரப்பப்பட்டது. அதன் இறுதியில் 'I'm Proud of you my Son', ’டேய் கமல்.. ரொம்ப பெருமையா இருக்குடா’ என்ற வரிகள் முடியும் போது மேடையில் தோன்றினார் கமல்.
* கே.பாலசந்தரைப் பற்றி கமல் பேசும் போது, அவரின் பேச்சுக்கு இடையே சில மெளனமான தருணங்கள் இடம் பெற்றன. மிகவும் நெகிழ்ச்சியான பேச்சைத் தொடர்ந்து கே.பாலசந்தருக்கு கமல் எழுதிய கவிதை ஒன்று ஒளிபரப்பட்டது. இக்கவிதையை இங்கே வாசித்தால் அழுதுவிடுவேன் என்பதால் திரையில் காணுங்கள் என்று கூறிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார் கமல்.
* கே.பி. சாரின் பாதி தான் கமல் ஆகையால் நான் அவருக்கு செய்ய நினைத்ததை கமலுக்கு செய்கிறேன் என்று கமல் காலில் விழுந்து வணங்கினார் நடிகர் பார்த்திபன்.
* நாசர், தனது மகன் கார் விபத்தின் போது ஏன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்று விளக்கம் அளித்த போது கண் கலங்கியபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் நடிகை கவுதமி. "கமல் கொடுத்த அறிவுரையின்படி நான் வாட்ஸ்-அப்பில் வந்த எனது மகனின் விபத்து படங்களைப் இன்று வரை பார்க்கவில்லை" என்று நாசர் தெரிவித்தபோது கமல் கையை உயர்த்தி 'சூப்பர்' என்று தெரிவித்தார்.
* இசை நிகழ்ச்சியின் நடுவே அவ்வப்போது கே.பாலசந்தர் 'உத்தம வில்லன்' படத்தைப் பற்றி பேசியது மற்றும் படம் உருவான விதம் ஆகியவற்றை திரையிட்டார்கள்.
* "எனது பாத்திரத்தின் பெயர் மார்க்கதரிசி. யார் எந்த மார்க்கதரிசி என்றால் என்னுடைய உண்மையான பாத்திரம் தான்" என்று கே.பாலசந்தர் தனது வீடியோ உரையில் கூறினார்.
* கமல் நடிப்பில் வெளியான படங்களில் வரவேற்பு பெற்ற பாடல்களுக்கு பார்வதி நாயர் மற்றும் பூர்ணா ஆகியோர் நடனமாடினார்கள்.
* ஊர்வசி, பார்வதி, பூஜா, ஆண்ட்ரியா ஆகியோர் மேடையில் படத்தைப் பற்றி சில தகவல்களை கூறினார்கள். ஆனால், அவர்களை கிண்டல் செய்து சிரிப்பலைகளை அள்ளியது என்னவோ பார்த்திபன் தான்.
* ஊர்வசி பேசும்போது "நான் கர்ப்பமாக இருந்ததை கமலிடம் கூறவில்லை. படப்பிடிப்பிற்கு வந்த 2வது நாளே, 'என்ன கர்ப்பமா?’ என்று கமல் என்னிடம் கேட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சில மாதங்கள் கழித்து, நான் டப்பிங் பேசும் போது கூட 3 நாட்களில் சீக்கிரம் முடிந்து விடுங்கள் என்று கூறினார். அவர் கூறியது போல எனக்கு மூன்று நாள் கழித்து பிரசவம் ஏற்பட்டது" என்றார்.
* "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடலை மேடையில் பாடினார் பார்வதி மேனன். அவரோடு தனது இருக்கையில் இருந்தவாறே "லாலா லாலா" என்று இணைந்தார் கமல்ஹாசன்.
* பார்த்திபன், நான் ஆண்ட்ரியாவிடம் இசையமைப்பாளரைப் பற்றி கேட்கப் போகிறேன் என்று கூறிய போது அரங்கில் பயங்கர சிரிப்பலை. உடனே நான் இசையமைப்பாளர் ஜிப்ரானை சொன்னேன்பா, இப்படி ஏன் என்னை மாட்டி விடுகிறீர்கள் என்று தப்பித்தார்.
* லிங்குசாமி பேசும்போது, இதுவரை நிறைய படங்களைத் தயாரித்திருக்கிறோம். ஆனால், எங்களது நிறுவனம் லோகோவில் நான்கு பேர் இருப்பார்கள். இந்த விழாவிற்கு முதன் முறையாக எனது பெரியண்ணன், சின்ன அண்ணன் வந்திருக்கிறார்கள். அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் என்று அழைத்தார். அவர்கள் இருவருமே கமலிடம் போய் அவரும் மேடைக்கு வர வேண்டும் என்று கூற, அவர்களோடு மேடை ஏறினார் கமல்.


* Single Kisske என்ற பாடலை மேடையில் பாடப்பட, திரையில் அப்பாடல் உருவான விதம் திரையிடப்பட்டது, இப்பாடலில் உங்களுக்கு ஆச்சர்யம் காத்திருக்கிறது என்று கூறினார் பார்த்திபன். அந்த ஆச்சர்யம் என்னவென்றால், அப்பாடலில் இடையே வரும் இசைக்கு கமல் ஆடிய நடனம் திரையில் காட்டப்பட்டது. அப்போது ரசிகர்கள் விசில் சத்தம் அரங்கை அதிரவைத்தது.
* இவ்வளவு பெரிய படத்திற்கு நான் இசையமைக்க காரணம் கமல் சார். அவரின் இசை ஞானம் என்னை வியக்க வைத்தது என்று தனது பேச்சில் குறிப்பிட்ட்டார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
* இளையராஜாவோடு 100 படங்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறேன். இந்த இசை ஞானம் கூட இல்லாவிட்டால் நான் மடையன் என்று தனது உரையில் ஜிப்ரானுக்கு பதிலளித்தார் கமல்
* பாடல்களைப் பற்றி மதன் கார்க்கி, லிங்குசாமி, ஞான சம்பந்தம், சுப்பு ஆறுமுகம், விவேகா, பார்த்திபன் ஆகியோருடன் கமலும் அமர்ந்து பாடல் வரிகளைப் பற்றி கலந்துரையாடினார்கள்.
* இறுதியாக இசை வெளியீட்டின் போது குறுந்தகட்டை எடுத்து வந்தார்கள். அப்போது கமல், "இந்த தகட்டை இப்போது யார் வாங்குகிறார்கள். இதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அனைவருமே இப்போது இணையத்தில் தானே பதிவிறக்கம் செய்கிறார்கள்" என்று கமல் கூறினார்.
* உடனடியாக கமல், மும்பையில் இருக்கும் ஸ்ருதியைத் தொடர்பு கொண்டு FACETIME மூலமாக கமல் வெளியிட ஸ்ருதி பெற்றுக் கொண்டார்.
* "யாருமே மொபையில் ஷுட் செய்தாதீர்கள். உங்களுக்காகவே இணையத்தில் ட்ரெய்லரை வெளியிட்டு விட்டோம். உட்கார்ந்து கண்டு களியுங்கள்" என்று ட்ரெய்லர் திரையிடும் முன்பு கூறினார் கமல்ஹாசன்.

'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்

'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பூஜா குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'உத்தம வில்லன்'. ஜிப்ரான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. லிங்குசாமி தயாரித்திருக்கும் இப்படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன் படத்தின் பாடல்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளத்தை வெளியிட, மும்பையில் இருக்கும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் FACETIME தொழில்நுட்பம் மூலம் பெற்றுக் கொண்டார்.
இசை வெளியீட்டு விழா தொடக்கத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தர் கமலுக்கு எழுதிய கடிதம் ஒலி வடிவில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் மேடையில் தோன்றினார்.
அதனைத் தொடர்ந்து கமல் பேசியது:
இந்த இசை நிகழ்ச்சிக்காக நிறைய ஒத்திகை பார்த்து வந்தேன். இப்போது பாலசந்தர் சார் பேசிய வார்த்தைகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. நான் ஒத்திகை பார்த்த அனைத்தையும் என்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை.
எனக்கு அவருக்குமான உறவு 40 ஆண்டுகளைக் கடந்த உறவு. பாலசந்தர் சாரைப் பற்றி தாமதமான நினைவுக் கூறல் என்றாலும் அவரது இறப்புக்கு பிறகு பல மேடைகளில் பேசியிருக்கிறேன். என்னைப் போல நிறையப் பேருக்கு பாலசந்தர் அவர்கள் அடையாளமாக இருந்திருக்கிறார். எனக்கு அவர் குரு அல்ல, மகா குரு.
'உத்தம வில்லன்' படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்ட போது, மறுப்பு ஏதும் சொல்லாமல் நடிக்க வந்தததுக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது போன்ற ஒரு மேடையில் அவர் இருக்க மாட்டார் என்ற விஷயம் எனக்குத் தெரியாது. அதனால், பல தகவல்களை சேகரிக்காமல் விட்டு விட்டேன். பார்த்திபன் பேசும் போது, கே.பி.சாரின் பாதிதான் கமல் என்றார். அந்த வார்த்தையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
கர்வமாக இல்லாமல் உரிமையோடு, கடமையோடு ஏற்றுக் கொள்கிறேன். அந்த உரிமையையும், கடமையையும் அங்கீகரிக்கும் விதத்தில் அவரின் நிழலாக இருந்து அவரின் பணிகளைத் தொடர்வேன்.
ரஜினியும், கமலும் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். ரஜினி கூட 'முரட்டுக்காளை' மாதிரியான படங்களில் நடித்து நடிகனாக வளர்ந்திருப்பார். ஆனால், பாலசந்தர் சார் மட்டும் இல்லை என்றால் இப்போது இருக்கிற கமல் வேறு ஒரு கமலாக மட்டுமே இருந்திருப்பேன்.
இனிமேல் நான் வாழும் வாழ்க்கையில் அவரை மறவாமல் வாழ்வதே என்னுடைய முக்கியமான பணி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


நன்றி - த  இந்து

Monday, January 26, 2015

இயக்குநர் ஷங்கருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

இயக்குநர் ஷங்கருக்கு...
தங்களின் ‘ஐ’ படம் கண்டேன். தாய்நாட்டு அகதிகளான திருநங்கைகளைப் பாலியல் வெறியர்களாக, அருவருப்பான சமூக விரோதிகளாகத் தங்கள் மனம் போன போக்கில் எப்படியும் சித்தரிக்கக்கூடிய தகுதி கொண்ட தங்களைப் போன்ற ‘மகா கலைஞர்’களின் ‘படைப்புத் திற’னுக்கு இங்கு யாரும் எந்தத் தடையும் விதிக்கப்போவதில்லை.
‘சிவாஜி’ படத்தில் போகிற போக்கில் திருநங்கைகள் மீது காறி உமிழ்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன். சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் “இப்பத்தான் ஆப்பரேஷன் பண்ணிட்டு வந்திருக்கு’’ என்று ஏளனமாகக் கூறியதும் “சீ..சீ…’’ என்று அருவருப்புடன் எங்கள் சூப்பர் ஸ்டார் விலகிச் சென்றதைத் தூசி தட்டி, தற்போது “அதற்கும் மேல” என்று பிரம்மாண்டமாய்க் காறி உமிழ்ந்திருப்பதைத்தான் பேச விரும்புகிறேன்.
படத்தின் நாயகன் விக்ரம் வில்லனைப் பார்த்து, முதல் பத்து நிமிடங்களிலேயே “டே… பொட்ட…” என்கிறார். நான் அதிர்ச்சியடையவில்லை, நானும் என்னைப் போன்ற பொட்டைப் பிறவிகளும் தமிழ் சினிமாவின் இத்தகைய தொடர் பதிவுகளால் இவற்றுக்கு நன்கு பழகியிருக்கிறோம்.
விக்ரமுக்கும்கூட இந்த வசனம் ஒன்றும் புதிதல்ல, தமிழ் சினிமாவின் நவீன பிதாமகன் என்று பாராட்டப்பட்ட பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த “சேது’’ படத்தில்கூட “ டே.. இப்பிடி பண்ணிப் பண்ணியே ஒருநாள் நீ அஜக்காவே மாறப்போற…” என்று சொன்னவர்தான்.
‘சதுரங்க வேட்டை’ என்னும் சமூக அக்கறை கொண்ட படத்தை இயக்கிய வினோத் ‘பொட்ட’ என்ற சொல்லை எளிதாகப் பயன்படுத்தி, அதைத் திரை விமர்சகர் கேபிள் சங்கர் போன்றவர்கள் சப்பைக்கட்டு கட்டும்போது, உங்களிடம் மட்டும் அந்தக் கரிசனத்தை நாங்கள் எதிர்பார்க்கவா முடியும்? 
‘பொட்டை’ என்று உங்களால் ஏளனமாக அறியப்படும் நாங்கள் உங்களது ஆண்மை பராக்கிரமத்துக்கு முன் அப்படி என்னதான் குறைந்துவிட்டோம்? உள்ளம் முழுவதும் பெண்மை குடியிருப்பதை அறிந்து எம் பாலினத்துக்கு நேர்மையாக இருக்கிறோம். திருநங்கையாகக் குடும்பத்தையும், அது தரும் அரவணைப்பையும், பாதுகாப்பையும் விட்டு வெளிவரத் துணிகிறோம்.
பெற்றோர்களின் சொத்து, சுகம் எதுவுமில்லாமல் சூன்யத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை எவரையும் சாராமல் வாழ்கிறோம். தெருவிலும், வெள்ளித் திரையிலும் ஆண் பராக்கிரமசாலிகள் சொல்லாலும், செயலாலும் எங்கள்மீது நிகழ்த்தும் வன்முறைகளைத் துணிவோடு எதிர்கொண்டு தொடர்ந்து செல்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் மேல் உங்கள் பராக்கிரமம் சிறந்ததா? அல்லது ‘பொட்டைகள்’ சோற்றில் உப்பு போட்டுத் தின்பதில்லை என்பது உங்களின் எண்ணமா?
வித்தியாசமான வில்லன் வேண்டுமென, ஒரு ஸ்டைலிஸ்டாகத் திருநங்கையை வைத்ததையும், அதுவும் உலக அழகியையே மேலும் அழகாகக் காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜானியையே (கதாபாத்திரப் பெயர் ஓஸ்மா ஜாஸ்மின்) நடிக்கவைத்ததையும் பாராட்டலாம்.
ஆனால், தான் வியக்கும், விரும்பும் விளம்பர அழகியின் வாயாலேயே ‘இந்தியாவிலேயே முன்னணி ஸ்டைலிஸ்ட்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டபோதும், முதல் பார்வையிலேயே ஓஜாஸ் மீது நாயகன் விக்ரமுக்கும், நண்பர் சந்தானத்துக்கும் அவ்வளவு கீழ்த்தரமான பார்வை ஏன் வருகிறது?
எல்லா இன்னல்களையும் கடந்து திருநங்கைகள் பலர் பல துறைகளில் சாதித்துவருகிறார்கள். ஆனாலும், அவர்கள் ஏளனத்துக்குரியவர்கள், என்பதைப் பார்வையாளர்கள் மனதில் இன்னும் ஆழமாக விதைக்கத்தானே? தமிழ் ரசிகர்களே தற்போது திருநங்கைகளைக் கலாய்க்க, ‘காஞ்சனா’ என்று அழைக்கத் தங்களை மேம்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் ‘ஊரோரம் புளிய மரம்…’ என்று பாடுவது எதனால்? 
பருத்தி வீரன்’ படம் வந்த புதிதில் ஒரு காலை வேளையில், எனது அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் சற்றும் எதிர்பாராத விதமாக 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பாதி குடித்த வாட்டர் பாக்கெட்டை எனது முகத்தில் வீசிட்டு அன்று இதே பாடலைத்தான் பாடினான். ஒரு தெருவே வேடிக்கை பார்க்க, இல்லை சிரிக்க நடுத்தெருவில் குறுகி நின்றேன். பத்தே வயது நிரம்பிய ஒரு சிறுவனுக்கு இப்படிச் செய்யச் சொல்லிக் கொடுத்தது யார்?
இன்று அதே நிலைமையில்தான் ‘ஓஜா’ஸை நினைத்துப் பார்க் கிறேன். இந்தியாவின் முன்னணி ஸ்டைலிஸ்டான தனது மதிப்பை அறியாமல் இவ்வளவு அற்பமாக முகத்துக்கு நேராகத் தன்னை அவமானப்படுத்தும் ஒருவனை ஒரு திருநங்கை விடாமல் மோகம் கொள்வாள் என எப்படி நினைத்தீர்கள்? ‘பிச்சையெடுக்கவும், பாலியல் தொழில் செய்யவும் நேர்ந்துவிடப்பட்ட பிறவிகள் இவர்கள்.. இவர்களுக்குத் தன்மானமே இருக்காது’ என முடிவெடுத்துவிட்டீர்களா? அற்பமான இந்த தர்க்கங்கள் உங்கள் பிரம்மாண்டச் சிந்தனைக்கு வரவேயில்லை இல்லையா?
திரையிலும், சுவரொட்டிகளிலும் மட்டுமே கண்ட ஒரு அழகியை, அவள் அழகி என்பதால் மட்டுமே ஒரு ஆணழகன் காதலிக்கிறார். அது உண்மையான, நியாயமான, கல்மிஷம் இல்லாத காதலாகிறது. குற்றவுணர்வாலும், பரிதாபத்தாலும் அந்த அழகியும், ஆணழகனைப் பரிசுத்தமாகக் காதலிக்க முடிகிறது. ஆனால், ஒரு திருநங்கையின் காதல் உணர்வு மட்டும் நாயகனாலும், நண்பனாலும், நாயகியாலும், படத்தில் வரும் விளம்பரப் பட இயக்குநராலும் அருவருப்பாகவே பார்க்கப்படுகிறது. இது நியாயமா?
‘9’ என்ற அறை எண்ணைக் காட்டிப் பின் ஓஜாஸைக் காட்டிய உங்கள் அரதப் பழசான, அருவருப்பான விளையாட்டை எண்ணி என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதே ‘9’ என்ற சொல்லைத்தான் எந்த அற்பனும் எங்களைச் சிறுமைப்படுத்தப் பேராயுதமாகப் பயன்படுத்துகிறான். 
இப்படத்தில் எந்த மிருகமும் துன்புறுத்தப்படவில்லை’ என்ற சட்டபூர்வ அறிவிப்புடன் தொடங்கும் படத்தில், கிடைக்கும் ஒரு வாய்ப்பைக்கூட விடாமல் பாலியல் சிறுபான்மையினர் முதல், மாற்றுத் திறனாளிகள்வரை காயப்படுத்த தங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் அளித்திருக்கிறது நமது தணிக்கைக் குழு. மிருகங்களுக்கு மனமிரங்கி மனிதர்களான எங்களை ஏலியன்களாகப் பார்க்கும் அதன் தாராள மனதைக் கண்டிக்காமல் உங்களைக் கேள்வி கேட்டு என்ன பயன்?
வாசிப்பும், பகுத்தறிவும் கொண்ட நடிகரென நவீன இலக்கிய வாதிகளும் கொண்டாடும் நடிகர் கமல், ‘பொட்டை’ என்னும் சொல்லை வெகு ஆண்மையோடு தமது பல படங்களில் பயன்படுத்தியுள்ளார், அதற்கும் மேலே, ‘வேட்டையாடு, விளையாடு’ படத்தில் திருநங்கைகளையும், தன்பால் ஈர்ப்பினரையும் மலினப்படுத்தியிருக்கிறார் எனும்போது சந்தானத்தையும் விக்ரமையும் மட்டும் என்ன சொல்ல?
தமிழ்த் திரையுலக இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், காமெடியன்கள் நினைப்பதுபோல, ஆண் பராக்கிரமசாலிகளும், பெண்களும் மட்டுமே உங்கள் ரசிகர்கள் அல்ல. உங்களால் அன்னியப்படுத்தப்பட்டு, மலினப்படுத்தப்படும் நாங்களும் உங்கள் ரசிகர் பட்டாளங்களின் ஒரு பகுதிதான்.
நாங்களும் படங்கள் பார்க்கிறோம். ரசிக்கிறோம், சிரிக்கிறோம், நீங்கள் மலினப்படுத்துவதையும் கடந்து எங்கள் உலகத்துக்குள்ளும் உங்களில் பலருக்கும் ரசிகைகள் இருக்கிறார்கள். அதற்காக எங்கள் சோற்றில் உப்பில்லை என்றுமட்டும் நினைத்துவிடாதீர்கள்.
இப்படிக்கு
லிவிங் ஸ்மைல் வித்யா 


நன்றி - த இந்து

  • karthivel  
    இது மிகவும் வேதனைகுரிய விஷயம் இதற்க்கு டைரக்டர் SANKAR ,விக்ரம் பதில் சொல்லியே ஆகா வேண்டும்
    about 8 hours ago ·   (5) ·   (1) ·  reply (0) · 
  • suresh  
    தமிழ் திரையுலகம் தொடர்ந்து உங்களை இதுபோல் சித்தரித்து வருவதால் உங்களது நியாயமான உணர்வுகளை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.இது போன்ற காட்சிகளை ரசித்ததற்காக வருத்தப்படுகிறேன். அதே திரையுலகம் மனது வைத்தால் உங்கள் மீது மரியாதையை உருவாக்க முடியும்.நிச்சயம் காலங்கள் மாறும்.
    about 9 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
  • செல்வக்குமார்  
    நமது நாட்டில் மட்டும்தான் திருநங்கைகளை படு ஏளனமாக சித்தரிக்கின்றனர்...அவர்களுக்கு இது போன்ற ஒரு குழந்தை பிறந்தால்தான்....இவர்களது குட்டம் அடங்கும்.
    about 10 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • M.AMBIKAPATHI  
    நான் இதுவரை i படம் பார்க்க வில்லை .இதை படித்தபிறகு அந்த படத்தை பார்க்க கூடாது என முடிவுசெய்து விட்டேன் .
    about 12 hours ago ·   (2) ·   (4) ·  reply (0) · 
  • Balaji  
    அந்த காட்சிகளுக்கு ரசித்து சிரித்ததற்கு வெட்க்க படுகிறேன்.... உங்கள் மனவேதனையை ஆற்ற என்ன செய்வதென்ன தெரியவில்லை
    Points
    1105
    about 12 hours ago ·   (9) ·   (0) ·  reply (0) · 
  • அபயா நடராசன்  
    எந்த ஒரு இந்திய, தமிழ் சினிமாவிலும் திருநங்கைகள் இது காறும் நல்ல முறையில் சித்தரிக்கப்படவில்லை. வெறும் நகைச்சுவை காட்சிகளில் மட்டுமே காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல குணச்சித்திர வேடம் யாரும் கொடுத்ததில்லை என்றே நான் கருதுகிறேன். முதலில் இந்த நிலை மாறவேண்டும். மகா பாரதத்தில் சிகண்டியும் ஒரு எதிர்மறை பாத்திரம்தான் அனைவரும் அறிந்ததே.
    about 15 hours ago ·   (2) ·   (0) ·  reply (1) · 
    • Logeswaran  
      Have you seen that "vaanam" movie?? Somewhat better Characterization on that movie
      about 11 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • senthil  
    உங்களின் வேதனைகளை புரிந்துகொள்ள முடியாதவர்கள் நிச்சயம் மனித தன்மை அற்றவர்கள் தான்...
    Points
    135
    about 15 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • மஞ்சூர் ராசா  
    திரைப்பட உலகம் நினைத்தால் உங்கள் மீது வலிந்து ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந்த அவலத்தை நிச்சயம் மாற்ற முடியும். மாறுவார்களா?
    Points
    590
    about 16 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • Mohamed Anwar  
    ஐ படத்தை பொறுத்தவரை ஆரம்ப காட்சியில் அந்த திருநங்கையை அறிமுகம் செய்யும் போது இந்தியாவிலே சிறந்த ஒப்பனை கலைஞராக அறிமுகப் படுத்தியிருப்பார்கள். ஆனால் அவரை முதன் முதலாக பார்க்கும் போது விக்ரமும் சந்தானமும் பாடல் பாடி கேலி செய்வது கண்டிக்க தக்கது. அந்த காட்சிக்கு காமெடி வேண்டுமென்றால் எப்போதும் போல் சந்தானம் கலாய்ப்பது போலவும் அதை விக்ரம் கண்டித்து ஓரு இரண்டு வரிக்கு அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஏதாவது வசனம் பேசுமாறு காட்சி வைத்திருக்கலாம். அதனால் அந்த திருநங்கைக்கு விக்ரமின் மேல் ஒரு ஈர்ப்பு வந்து அது காதலாக மாறி பின்பு வெறியாக மாறுமாறு காட்சிப்படுத்தியிருக்கலாம். வெறும் உடலழகினால் காதல் வருவது போல் காட்டுவது தவறு. ஏனென்றால் இங்கு காதல் வருவது ஒரு பெண்ணுக்கு அல்ல ஒரு திருநங்கைக்கு. அதனால் அது அவர்களது ஒட்டு மொத்த இனத்தை அங்கே பிரதிபலிக்கும். ஆனால் படத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் படம் முழுக்க ஒரு திருநங்கைக்கு முக்கியமான வில்லன் ரோல் கொடுத்திருப்பது. இது போன்ற தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. ( வானம்,காஞ்சனா இன்னும் சில படங்கள் தவிர)
    about 16 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) · 
  • ibrahim  
    இயக்குனர் ஷங்கரின் ai படம் migavum பாடாவதி படம். paththu பைசாவுக்கு தேராது.
    Points
    170
    about 16 hours ago ·   (2) ·   (3) ·  reply (0) · 
  • இருமேனி Irumeni  
    இரக்கம் கொள்ள வேண்டாம், ஆதரவு கூட கொடுக்க வேண்டாம். எள்ளி நகையாடாமல் இருந்தாலே போதும். அவர்களையும் வாழ விடுங்கள். அப்படி இருந்தும் ஷங்கர்கள் கண்டிப்பாக தமிழ் சினிமாவுக்குத் தேவை என்று தான் புலம்பிக் கொண்டிருக்கிறோம்.
    Points
    4145
    about 16 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • PREMKUMAR  
    இப்படி செய்யும் சினிமா வியாபாரிகளுக்கு கேளிக்கை வரி சலுகை ,,,அனைவரும் சிந்தியுங்கள்
    about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • PREMKUMAR  
    இங்கே சினிமாகாரர்கள் மனிதாபி மானம் மீறி வியாபாரம் செய்துள்ளார்கள் ,மன்னிப்பு கேட்பது சிறந்தது
    about 17 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • Mohamed Anwar  
    நமது சமுகத்தில் திருநங்கைகள் கீழ்த்தரமாகத்தான் பார்க்கப்படுகிறார்கள் என்பதும் அதற்கு மிகமுக்கிய காரணம் நம் தமிழ்சினிமாதான் என்பதும் மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் இன்று சமுகத்தில் பெரும்பாலான திருநங்கைகளின் நிலை என்ன? பொதுஇடங்களில் பிச்சை எடுப்பதும் சிலநேரங்களில் மிரட்டி பணம் புடுங்கவதும் பாலியல் தொழிலுக்கு அழைப்பதுமாகவும் தானே இருக்கிறது. இதுதானே நிகழ்கால நிலைமை. இதை மாற்றுவதற்கு அரசு எல்லா முயற்சியும் எடுத்துதான் வருகிறது. ஆனால் அவை வெற்றி பெறுவது திருநங்கைகளின் கையில்தான் இருக்கிறது. நம்நாட்டில் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுக்கவே பல நூற்றாண்டுகள் ஆகும் போது இவர்களை நமது சமுகம் அங்கீகரிப்பது அவ்வளவு சுலபமல்ல.திருநங்கைகள் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவதை முற்றிலும் நிறுத்தினால் ஒழிய அது மாறுமே தவிர இது போன்ற சினிமாக்களை கண்டிப்பதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. இரண்டு நாள் பேசிவிட்டு மறந்துவிடுவார்கள். திருநங்கைகள் தங்கள் புறத்திலிருந்து தங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். - to be continued
    about 17 hours ago ·   (6) ·   (2) ·  reply (0) · 
  • P.Padmanabhan  
    வித்யா அவர்களுக்கு, அவமனத்தை ஆழமாக் உணர்ந்து மிக அற்ப்புதமாக் வெளியிட்டுள்ளீர்கள் .உங்களுக்கு ஆதரவும் பாரட்டுக்களும். தற்காலதிரையுலகம் பணம் , புகழுக்காக மட்டுமே இயங்குகிறது. மனிதரின் நுண்ணிய உணர்வுகளுக்கு அங்கே அக்கறை யெதுவுமில்லை!
    Points
    19330
    about 19 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • THANGAMANI  
    இந்த சினிமா காரர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ .
    Points
    3475
    about 19 hours ago ·   (3) ·   (0) ·  reply (1) · 
    • nivas,,,  
      நீங்க திருந்தி எவளோ நாள் ஆட்சி,,,,
      about 12 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • THANGAMANI  
    சினிமா காரர்களுக்கு எது மனிதத்தன்மை?
    Points
    3475
    about 19 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
  • chandraa  
    DddDIRECTOR SHANKER HAD COMMITTED himalayan mistake IN THIS FILMBY DEPICTING TRANSEGENDERS IN VERY POOR TASTE
    Points
    2090
    about 22 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • Sithu Muruganandam  
    திருநங்கைகள் பிச்சைஎடுப்பதால்தான் அவர்கள் கீழ்த்தரமாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்கள் இனிமேல் பிச்சைஎடுப்பதை விட்டு விட வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும்.
    Points
    150
    about 23 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) · 
  • Anitha  
    வித்யா உங்கள் உள்ளத்தில் வடியும் ரத்த கண்ணீர் தெரிகிறது
    about 23 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • belginraja  
    இதேபோல் ரயிலில் வந்து பணம் பறிமுதல் செய்யும்(வலுகட்டாயமாக) உங்கள் நண்பர்களுக்காவும் மெரீனா கடற்கரையில் பணம் பணம் பறிமுதல் செய்தையும் நங்கைகள் நினைவில் கொள்ளலாம்.........அப்போது எல்லாம் எழாமல் இருந்த கண்டன குரல் இப்போது எதற்கு...........உங்களை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் நீங்கள்
    a day ago ·   (10) ·   (1) ·  reply (0) · 
  • chandran  
    நோ நோ. இன்னும்கூட சில பேருந்து நிலையங்களில் மற்றும் பொது இடங்களில் திருநங்கைகள் வழியில் வருவோர் போவோரிடம் தங்களுக்கே உரித்தான பாணியில் சில்மிஷங்கள் செய்து பணம் வசூல் செய்கின்றனர். பணம் இல்லை என்று மறுத்தாலும் விடாமல் தொந்தரவு செய்து மற்ற திருநங்கைகளையும் அழைத்து அந்த இடத்தில் பணம் இல்லை என்று சொன்னவர் வெட்கி தலைகுனியும் அளவுக்கு நடந்து கொள்கின்றனர். வேறு வழி இல்லாமல் பணம் தர வேண்டிய நிலைக்கு தள்ளுகிறார்கள். நன் பலமுறை இத்தகைய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். சமுதாயத்தில் இன்னும் இவர்கள் திருந்தவில்லை. யாரோ தூண்டுதலின் பேரில் வெறும் விளம்பரத்துக்காக இவ்வாறு இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது ஏற்றுகொள்ள முடியாது. இப்படி எல்லாம் இவர்களை திரைப்படங்களில் சித்தரிப்பதில் தவறில்லை
    a day ago ·   (5) ·   (4) ·  reply (0) · 
  • ikaram  
    சரிதான் சிலசமயம் திருனங்க்ய்களை கிண்டல் செய்து வரும் படங்களின் காமெடிகளை பார்த்து சிரிக்கிறோம் அதையே அவர்கள் இடத்தில இருந்து யோசனை செய்தால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனை அடையும் இந்நியவது அவர்களை கொச்சை படுத்தி படம் எடுக்காதீர்கள்
    a day ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited 
    சாட்டை அடி அடிச்சிட்டாங்க வித்யா அவர்கள். இதக்கு ஷங்கர் என்ன பதில் சொல்ல போறாரோ தெரியவில்லை. How come Shankar did not notice our Hon'ble Supreme Court's verdict on transgenders. If not, let him read it now. - "India's Supreme Court creates official third sex for eunuchs and transgenders. After two thousand years of persecution, India's two million eunuchs to be formally recognised as third sex."
    Points
    16195
    a day ago ·   (1) ·   (4) ·  reply (0) · 
  • Subhashini Vasanth at Padmavathy realty and Promoters Pvt Ltd 
    மிகவும் பாதித்த விஷயம்...
    a day ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
  • R.Ganesan  
    An excellent letter and nothing can be expressed better than the last line. Iam stunned by the intellect of Vidya and I would like to know her more.
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • Raajagreat Raaja  
    எங்கள் சோற்றில் உப்பில்லை என்றுமட்டும் நினைத்துவிடாதீர்கள். இதற்கு மேல் என்ன வார்த்தை வேண்டும்?
    a day ago ·   (1) ·   (0) ·  reply (1) · 
    • nivas,,,  
      நீங்க படத்த பார்த்துருக கூடாது,,,,,
      about 12 hours ago ·   (0) ·   (2) ·  reply (0) · 
  • Vignesh Thirumalai Rajan  
    ஷங்கர் சார் , மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த கண்டனத்துக்குரிய காட்சிகளை எடுத்துவிடலாம் அல்லது Mute செய்துவிடலாம் .ப்ளீஸ் இது மிகவும் வேதனைக்குரியது . திரைப்படங்கள் மக்களை மகிழ்விக்கவே அன்றி கஷ்டபடுத்த அல்ல.திருநங்கைகலும் நமது உடன் பிறப்புக்களே. புரிந்து கொள்ளுங்கள்.
    a day ago ·   (62) ·   (5) ·  reply (0) · 
  • m Sivashanmugam  
    இப்படத்தில் எந்த மிருகமும் துன்புறுத்தப்படவில்லை’ என்ற சட்டபூர்வ அறிவிப்புடன் தொடங்கும் படத்தில், கிடைக்கும் ஒரு வாய்ப்பைக்கூட விடாமல் பாலியல் சிறுபான்மையினர் முதல், மாற்றுத் திறனாளிகள்வரை காயப்படுத்த தங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் அளித்திருக்கிறது நமது தணிக்கைக் குழு. மிருகங்களுக்கு மனமிரங்கி மனிதர்களான எங்களை ஏலியன்களாகப் பார்க்கும் அதன் தாராள மனதைக் கண்டிக்காமல் உங்களைக் கேள்வி கேட்டு என்ன பயன்? - நான் இந்த படம் பார்க்கவில்லை ஆனால் உங்களின் இந்த கருத்து இந்த படத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட சமுகத்தை இந்த சமுகம் முடிந்த அளவிற்கு தாழ்மையாக சித்தரித்துள்ளது புரிகிறது. ஆனால் உங்களின் இந்த கருத்து யாராலும் பதில் சொல்ல முடியாத வண்ணம் சிறப்பாக உள்ளது. வாழ்க உங்கள் சிந்தனை, வளர்க உங்கள் போரரட்டம். மு சிவசண்முகம் தாரமங்கலம்.
    a day ago ·   (27) ·   (1) ·  reply (0) · 
  • pandy  
    லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கும் ,தி இந்து விற்கும் பாராட்டுகள். திருந்துங்கள் ஐயா,நாங்கள் பாவம் என கெஞ்சி கொண்டிருக்காமல், தங்களுக்கெதிரான,சொல்லியல்,கருத்தியல்களுக்கெதிராக,எழுத்தாயுதம் ஏந்திய வித்யாவுக்கு வாழ்த்துகள். திருந்தாத சில ஜென்மங்கள் இனியாவது திருந்தட்டும்.