Wednesday, May 09, 2012

WISHMASTER 3 - Beyond the Gates of Hell - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

ரோஸ்மில்க் தான் சின்ன வயசுல இருந்தே குடிச்சுதோன்னு கேட் விண்ஸ்லேட்டே பொறாமைப்படற மாதிரி  ஒரு ரோஸ் கலர் ஃபிகரு.. பாப்பாவுக்கு  அம்மா, அப்பா யாரும் இல்லை.. ஒரே ஒரு பாய் ஃபிரண்ட் மட்டும் தான்.. இதுல என்ன ஆச்சரியம்கறீங்களா? இந்தக்காலத்துல செல் ஃபோனும் சரி, லவ்வரும் சரி ஒண்ணு மட்டும் வெச்சிருக்கற ஃபிகரை பார்ப்பதே அரிது.. அதுவும் ஃபாரீன் ஃபிகர் வேற.. 

அப்பேர்ப்பட்ட ஃபிகர் காலேஜ்ல படிக்குது.. அந்த காலேஜ்ல நம்ம ட்விட்டர் அங்க்கிள் ஃபிரியா  யார் கிடச்சாலும் விடாதேங்கற கொள்கை கொண்ட , தினமும் 18 மணீ நேரம் டைம் லைன்ல கடலை  போடும் மாமாவை குருவாகக்கொண்ட ஒரு காலேஜ் புரொஃபசர். இவர் என்ன மாதிரி கேரக்டர்னா காலேஜ்ல கேர்ள்ஸ் தனியா சிக்குனா  பிராக்டிகல் கிளாஸ் ஃபிரீயா எடுத்து கத்துக்கொடுத்து கழட்டி விட்டுடுவார்..

 அவர் கிட்டே ஹீரோயின் மாட்டற சூழல்.. புரொஃபசர் வீட்ல ஏதோ ரத்தினக்கல் மாதிரி ஒரு மாந்திரீக கல் சிக்குது.. அதுல இருந்து அலாவுதீன் பூதம் மாதிரி கேவலமா ஒரு  சாத்தான் வெளி வருது.. அந்த சாத்தான் அந்த புரொஃபசரை போட்டுத்தள்ளிட்டு அவர் ரூபத்துல ஹீரோயின் கிட்டே பம்புது.. 

 நிற்க! இந்த இடத்துல நான் அந்த சாத்தானா இருந்தா ஃபிகரோட காதலன் வடிவம் எடுத்து மேட்டரை முடிச்சிருப்பேன்.. ராமாயணம் புராணத்துல கூட ராவணன் ராமன் அவதாரம் தானே எடுத்தாரு? இந்த இடத்துல ராமாயணத்துலயே ஒரு லாஜிக் மிஸ்டேக் இருக்கு.. அது இன்னான்னா  ராமன் அவதாரம் எடுத்ததும் ராவணன்க்கு அடுத்தவன் சம்சாரத்தை பார்க்கக்கூடாதுங்கற நல்ல எண்ணம் வந்துட்டதா வால்மீகி சொல்றாரு,.. என் டவுட் என்னான்னா  ராவணன் ராமன் அவதாரம் எடுத்ததும் ராமனோட எண்ணங்கள் ஆக்ரமிச்சதுங்கறதுதானே பாயிண்ட்.. அப்போ சீதை ராமனுக்கு மனைவிதானே.. ஏன் கையை வைக்கலை? ஹி ஹி 


http://ajcook.fan-sites.org/gallery/albums/userpics/10464/normal_wishmaster3.jpg


கம் டூ த பாயிண்ட்.. ஏகப்பட்ட சக்தி  படைச்சும் அந்த பாழாப்போன சாத்தான் ஹீரோயினையும் எதும் பண்ண முடியாம, லட்டு மாதிரி இருக்கற அவ தோழியையும் எதும் பண்ணாம எப்படி தோத்துப்போகுதுங்கற கேவலமான கதை தான் மிச்ச மீதி கதை.. 

 Jason Connery  - அப்டிங்கற நடிகர் தான்  Professor Joel Barash. ஆகவும் அவர் ரூபத்துல வர்ற சாத்தானாகவும் படம் முழுக்க வர்றார்.. கிட்டத்தட்ட ஆண்ட்டி ஹீரோ மாதிரி.. நடிப்பெல்லாம் ஓக்கே.. ஆனா தானும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேங்கற மாதிரி.. இவரும் ஹீரோயினை ஒண்ணும் பண்ணலை.. ஹீரோவையும் ஒண்ணும் பண்ண விடலை ./ போய்யாங்க்.. 

 A.J. Cook  - இதுதான் ஹீரோயின் பேரு.. நேத்துத்தான் குத்த வெச்ச அத்தை பொண்ணு மாதிரி செம ஃபிரெஷ்ஷா தான் பாப்பா இருக்கு.. படத்துல கேரக்டர் நேம்  Diana Collins - நல்ல உடல் வாகு.. நடிப்பும் ஓக்கே..  ( ஃபிகர் நல்லாருந்தா நல்லா நடிக்கலைன்னாக்கூட நம்ம கண்ணுக்கு அதெல்லாம் குறையாத்தெரியாது... 

John Novak -  இவர் தான் ஹீரோ.. டம்மி ஹீரோ நம்ம ஓ பி எஸ் மாதிரி.. கேரக்டர் பேரு The Djinn.. ஆள் இளவட்டமா இருந்தாலும் எப்பவும் வாட்டமாவே இருக்கார்.. ஹூம்.. 


http://pictat.com/i/2011/8/16/301571682455.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. நான் இருக்கற வரை எதுக்கும் நீ கவலைப்படாதே..  ( ஹீரோயின் மைண்ட் வாய்ஸ் _ டேய் நாயே , உன்னால தான் கவலையே.. )

2.  எது வரை நாங்க எல்லாம் உயிரோட இருப்போம்னு தெரியலையே?


3.  ஒரே ஃபிகர் பின்னால காலம் பூரா சுத்த நான் என்ன முட்டாளா?

 அப்போ நீ அதுக்கு வேற ஆள் பாரு.. நான் அந்த மாதிரி ஆள் இல்லை 


4.  நான் தான் நீ வணங்கற கடவுள்.. நீ என்னை வணங்கனும்.. ஆராய்ச்சி எல்லாம் பண்ணக்கூடாது.. 


5. ரொம்ப டயர்டா இருக்குடி.. 

 அப்போ சொல்றதுக்கு நிறைய மேட்டர் இருக்கா? சொல்லுடி உன் காதலனுடனான கில்மாக்கதையை

6.  நான் அவன் கிட்டே ஐ லவ் யூ சொல்லனும்னு அவசியம் இல்லை..  ஏன்னா அவன் என் ஆளே இல்லை.. டெயிலி ஒருத்தி கூட சுத்திட்டு இருக்கான்

http://images2.fanpop.com/images/photos/6000000/-The-House-Next-Door-aj-cook-6000500-852-480.jpg



7.  டொக் டொக் டொக்


 டோண்ட் கம்


 ஏம் ஐ டிஸ்ட்ரப் யூ?

 உனக்கு ஒரு தடவை சொன்னாப்புரியாதா? உள்ளே வராதேன்னு சொன்னேன்.. 

8.. ஏம்மா , சப்ஜெக்ட்ல டவுட்னே.. அது பற்றி விளக்கலாம்னு பார்த்தா ஓடறியே.. எப்படி? உனக்கு எல்லாம் க்ளியர் ஆகும்?


9. Professor: “I wish for the two women I find most attractive to be here with me right at this moment”


10. “The Sword of justice will be yours when you are ready,” 


http://www.southfilms.com/images/cache/screen_image_95660.jpg 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. கசமுச கசமுச என கேரக்டர்கள் அதிகம் இல்லாமல் ஹீரோ, ஹீரோயின், வில்லன் என 3 கேரக்டர்களே பெரும்பாலான படத்தை ஆக்ரமித்து இருப்பது போல் திரைக்கதை அமைத்தது.. எவனும் படமே புரியலைன்னு சொல்ல வழி இல்லை

2. சாத்தான்  வில்லன் புரொஃபசரை மடக்கும் சீன்கள் ரசிக்க வைப்பவை.. குறிப்பா  புரொஃபசரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற அவரது குரல்.. அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல் 2லும் மிமிக்ரி செஞ்சு சம்பவம் நடந்ததை குறிப்பால் உணர்த்துதல் கலக்கல்


3. ஒண்ணுமே இல்லாத சாதா கதையை  90 நிமிடங்கள் போர் அடிக்காமல் எடுத்துச்சென்ற விதம் 


http://static.tvfanatic.com/images/gallery/aj-cook-on-criminal-minds.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. பொதுவா அந்த ஜ்வல் பாக்சை யார் ஓப்பன் பண்றாங்களோ அவங்க தான் எஜமானன்.. பூதம் அவங்களூக்கு அடிமை..  ஆனா அதை ஓப்பன் பண்ணும் ஹீரோயினை சாத்தான் முதலாளியம்மாவாக பார்க்காமல் மேட்டர் பண்ண துடிப்பது ஏன்?

2. சாதாரண ஃபிகரை மடக்க சாதா மனிதன் மயக்க மருந்து , தூக்க மாத்திரை, போதை  மாத்திரை என ஏகப்பட்ட வழி இருந்தும் ஏகப்பட்ட மந்திர சக்தி வைத்திருந்தும் அந்த சாத்தான் ஃபிகரை மடிக்க முடியலை என்பது அவமானம் ச்சே ச்சே.. 

3. புரொஃபசரை தனியா பார்க்க ஹீரோயின் கிளம்பறப்ப ஹீரோ இரு நானும் வர்றேங்கறான்.. ஹீரோயின் யோக்கிய சிகாமணி தானே.. அதாவது நல்லவ தானே ஏன் கூட கூட்டிட்டு போகாம நீ இரு நான் தனியாப்போய்க்கறேன்னு சொல்றா? இத்தனைக்கும் புரொஃபசர் ஒரு முடிச்சவுக்கி, மொள்ல மாரின்னு தெரிஞ்சும் ஏன் நைட் டைம்ல அவன் பங்களாவுக்கு தனியா போறா.. ?

4. தன் பேச்சை கேட்காம காதலி வில்லன் பங்களாவுக்கு போய்ட்டு வந்த பின் ஹீரோ கோவிச்சுக்கவே இல்லையே? ஏன் அப்படி பம்பறான்? நானா இருந்தா பளார்னு 2 அறை விட்டு இருப்பேன் .. சாரி இலக்கணப்பிழை.. பளார் பளார்னு 2 அறை விட்டிருப்பேன்


5. சாத்தான் புரொஃபசரை கொலை பண்றதுன்னு முடிவு பண்ணிடுச்சு.. எதுக்கு அவன் கிட்டே கண்ட ராமாயணம் எல்லாம் பேசிட்டு ஜவ்வு இழுப்பு இழுக்குது.. பட்டுன்னு முடிக்கறதுக்கென்ன நோக்காடு?


சி.பி கமெண்ட் - முதல் 2 பாகம் பார்க்கற அளவு இருந்துச்சு.. இது மகா மட்டம்.. குப்பை.. போயிடாதீங்க.. 

 இதை ஈரோடு வி எஸ் பில பார்க்கலை, கலைஞர் டி வில  போன வாரம் வெள்ளிக்கிழமை நைட் 10 மணிக்கு பார்த்தேன் ஹி ஹி . 2001 ல ரிலீஸ் ஆன படம் போல 


http://www.clickceleb.com/pictures/10000/1770/30727.jpg

மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது
.
திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>

10 comments:

கோவை நேரம் said...

மாலை வணக்கமுங்க

கோவை நேரம் said...

மாலை வணக்கமுங்க

கோவை நேரம் said...

மாலை வணக்கமுங்க

கோவை நேரம் said...

மாலை வணக்கமுங்க

கோவை நேரம் said...

இன்னிக்கு என்ன நாலு போஸ்ட்?
ஏன் எதுவும் படம் ரிலீஸ் ஆகலியா

ராஜி said...

விமர்சனத்துக்கு நன்றி

Menaga Sathia said...

விமர்சனத்துக்கு மிக்க நன்றிங்க...இருந்தாலும் இது ரொம்ப ஓவர்..நான் படம் பார்த்தே ரொம்ப நாளாகுது....

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் நல்லாயிருக்கு...

R. Jagannathan said...

அக்ரமம்! 10 வருட பழசுக்கு விமர்சனமா!

ராவணன், ராமர் ‘அவதாரம்’ எடுக்க முடியாது; ராமரின் ‘வடிவம்’ தான் எடுத்திருப்பான். அந்த வடிவத்துக்கே தப்பு பண்ண விடாத அளவுக்கு பவர்!

-ஜெ.

MARI The Great said...

ரைட்டு கிளப்புங்க ..!