Wednesday, May 09, 2012

ஜூவி சர்வே - ஜெவின் ஓர் ஆண்டு கால ஆட்சி எப்படி? - ஊஊஊஊ

ஒரு வருட ஜெ. ஆட்சி... பாஸா? பெயிலா?

கடந்த சட்டசபைத் தேர்தலில் சுனாமி​யாக எழுந்த மக்களின் எதிர்ப்பு அலை, கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் இருந்து அப்புறப்​படுத்தியது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்... அமோகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டார் ஜெயலலிதா. மே 16-ம் தேதியோடு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்ய இருக்கிறார், ஜெய​லலிதா. இந்த ஒரு வருடத்தில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.


ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தாரா ஜெயலலிதா? அவர்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்பட்டதா? இந்த ஒருவருட ஆட்சியின் மீது மக்களின் மதிப்பீடு என்ன? என்று கேள்விகள் எழவே, கருத்துக் கணிப்பு நடத்த முடிவு எடுத்தோம். ஓர் ஆட்சி தன்னுடைய சிந்தனை​களை ஓரளவாவது அமல்படுத்த இரண்டரை ஆண்டுகள் ஆகும் என்றாலும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய பாதையில் இவரது ஆட்சி செல்கிறதா என்பதே இந்தக் கருத்துக் கணிப்பின் நோக்கம்.


ஜெயலலிதாவின் ஆட்சி முறை, முதல்வராக அவரது செயல்பாடு, அமைச்சர்களின் பங்கேற்பு, மின்வெட்டு, கட்டண உயர்வுகள், சட்டம் - ஒழுங்கு, இலவசத் திட்டங்கள், சசிகலா விவகாரம் என்று 18 கேள்விகளை சர்வேயில் முன்வைத்தோம். விகடன் படை  களம் இறங்கியது.

கிராமம், நகரம், மாநகரம் என  எல்லாம் புகுந்து புறப்பட்டு மக்களைச் சந்தித்து வந்தது ஜூ.வி. டீம். ஏப்ரல் 26 தொடங்கி மே 2-ம் தேதி வரை எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் 3,659 பேரிடம் வினாக்களைக் கொடுத்து விடைகளை வாங்கினோம். இதில் பெண்கள் எண்ணிக்கை மட்டும் 1,445.


சர்வே எடுக்கச் சென்ற ஜூ.வி. டீமுக்கு நிறையவே புதுமையான அனுபவங்கள். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கேட்டது, 'ஏங்க... இந்த கரன்ட் பிரச்னை எப்போங்க தீரும்?’


'எங்களுக்கு வேற எதுவுமே வேணாம். கரன்ட் மட்டும் கொடுத்தாப் போதுங்க...’ என்று, மக்கள் கெஞ்சு​கிறார்கள்.


 மின்சாரத்தை அடுத்து, பால், பஸ் மற்றும் மின்கட்டண உயர்வை மிகவும் கடுமையாகச் சாடினார்கள். காரசாரமான விமர்சனங்களை ஜெயலலிதா ஆட்சி மீது மக்கள் வைத்தார்கள். ஒரு வருடத்துக்கு முன், சிம்மாசனத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடிய மக்கள், இப்போது ஜெயலலிதா மீது அதிக ஆத்திரத்தில் இருப்பதை உணர முடிந்தது.  'இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லேப்டாப் எல்லாம் எங்களுக்கு இன்னும் கிடைக்கலை. எப்போ கொடுப்பாங்க?’ என்று ஒரு சிலரே கேட்டார்​கள். மற்ற அனைவருக்கும் மின்சாரம்தான் முதல் முக்கியத் தேவையாக இருக்கிறது.


ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி என்ற கேள்விக்கு, 'சுமார்’ என்று பதில் சொன்னவர்களே அதிகம். மின்வெட்டுப் பிரச்னையைப் பொறுத்த வரை, 'மோசம்’ என்று சொன்னவர்கள் 47.31 சதவிகிதம் பேர். 'தி.மு.க. ஆட்சியைவிட மோசம்’ என்று சொன்னவர்கள் 37.66 சதவிகிதம். மின்வெட்டுப் பிரச்னைக்கு மட்டும் 84.97 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் 'மின்’ வெப்பத்தில் இருக்கிறார்கள். மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதில் அரசின் செயல்பாடு எப்படி? என்கிற கேள்விக்கு 'அரசு உரிய அக்கறை காட்டவில்லை’ என்பதே அதிக மக்களின் கருத்து.



புதிய சட்டசபை, அண்ணா நூலகத்தை ஜெய​லலிதா முடக்கியது தொடர்பான கேள்விகளுக்கு, 'தவறு’ என்று அதிகபட்சமாக 50.23 சதவிகிதம் பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். பால், பஸ், மின் கட்டண உயர்வு பற்றிய கேள்விக்கு 'படிப்படியாக உயர்த்தி இருக்கலாம்’ என்று கருத்து சொன்னவர்கள்தான் அதிகம்.



ஜெயலலிதா ஆட்சிக்கு சாதகமாக ஒரே விஷயம்... நில அபகரிப்புப் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான். தி.மு.க பிரமுகர்கள் மீது தொடுக்கப்பட்ட அபகரிப்புப் புகார்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் 'நியாயமானது’ என்று வரவேற்கிறது தமிழகம். ஜெயலலிதா கொண்டுவந்த இலவசங்கள் ஏனோ பெரிய வரவேற்பைப் பெறவில்லை. மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் போன்ற இலவசத் திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு, 'மக்கள் வரிப் பணம்தான் வீண் ஆகிறது’ என்று 63.41 சதவிகிதம் பேர் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.


இப்படி சர்வே முடிவுகள் நிறையவே ஆச்சர்யங்​களையும் அதிர்ச்சிகளையும் உண்டாக்கி இருக்​கிறது.
(ஜெயலிதாவின் செயல்பாடுகள், சட்டமன்ற நடவடிக்கைகள், சசிகலாவோடு ஜெயலலிதாவுக்கு இருந்த உரசல், அ.தி.மு.க. ஆட்சியின் டாப் 3 பிரச்னை​கள், ஜெயலலிதாவுக்கு மக்கள் போட்ட மார்க் போன்ற சர்வே முடிவுகள் அடுத்த இதழில்...)


ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி பொதுமக்கள் சொன்ன கருத்துகளில் சில இங்கே...


சூர்யகலா, ஆரணி: ''ஒரு பெண்ணை முதல்வர் ஆக்கினால் எங்களைப் போன்ற சாதாரண மக்களின் குறை​களைத் தீர்ப்பாங்கன்னு​தான் ஓட்டுப் போட்டோம். ஆனா, அந்தம்மா ஒரேடியா கரன்ட் கட், பால் விலை ஏற்றம், பஸ் கட்டண உயர்வுன்னு எல்லாத்தையும் ஏத்திக்கிட்டே போறாங்க. நினைக்கவே வேதனையா இருக்குங்க.''


செந்தில்குமார், சேலம்: ''நிர்வாகச் சீர்திருத்தத்துக்காக நிறைய முயற்சிகள் எடுத்திருக்காங்க. அது  பாராட்டுக்​குரிய விஷயம். ஆனா, மக்களை நேரடியாகப் பாதிக்கும் பால், கரன்ட், பஸ் கட்டணங்களை ஒரேய​டியாக உயர்த்தினது, மன்னிக்க முடியாத கொடுமைங்க!''



சீனிவாசன், வேலூர்: ''பாலில் இருந்து எல்லா விலைவாசியும் அநியாயத்துக்கு ஏறிப்போச்சு தம்பி. நாங்க ரொம்பக் கஷ்டப்​படுறோம். உண்மையைச் சொல்லணும்னா, ஏன்டா ரெட்டை இலைக்கு ஓட்டு போட்டோம்னு வருத்தமா இருக்கு. எல்லாம் எங்க தலையெழுத்து!''


வேல்குமார், காரைக்கால்: ''மாற்றம் வேண்டும்னு ஒட்டுமொத்த மக்களும் ஓட்டுப் போட்டதற்கு, இவ்வளவு கடுமையான ஏமாற்றத்​தைத் தந்திருக்க வேண்டாம். மக்களுக்கு எது தேவை... எது தேவை இல்லை? எது நல்லது.. எது பாதிப்பு? என்று யோசித்து திட்டங்கள் தீட்டி இருக்க வேண்டும். நரேந்திர மோடி மாதிரி வர வேண்டும் என்று ஆசைப்படலாம். எப்படி ஆவது என்று திட்ட​மிட வேண்டும். இப்படிப் போட்டு மக்களைக் கஷ்டப்​படுத்தக் கூடாது.''



நந்தகுமார், கும்பகோணம்: ''தனிப்பட்ட விருப்பு, வெறுப்புல இவங்க கவனம் செலுத்துறதுதான் அதிகமா இருக்குது. தேர்தல் அறிக்கையில் நிறையத் தொலைநோக்குத் திட்டங்கள் அறிவிச்​சாங்க. அதெல்லாம் என்ன ஆச்சுன்னே தெரியலை''



லெட்சுமணன், தூத்துக்குடி: ''கடந்த ஆட்சியில் நடந்த ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் ஜெயலலிதாவின் ஆட்சியில் இல்லை என்பது ஆறுதல். சசிகலாவை மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்கிட்டதும், ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கை சுத்தமாப் போயிடுச்சு.''


சாந்தி, மதுரை: 'நடு ராத்திரியில கரன்ட் கட் ஆகுதுங்க. தூக்கமே இல்லை. குழந்தைகளை வச்சுக்கிட்டு ரொம்பவும் கஷ்டமா இருக்கு. இதை எல்லாம் நினைக்கும்போது, தி.மு.க. ஆட்சி எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணுது. எதிர்க் ​கட்சியா விஜயகாந்த் என்ன பண்ணிட்டு இருக்காருன்னே தெரியலை...''



முருகவேல், ஆண்டிபட்டி: ''கடந்த தி.மு.க ஆட்சியை அகற்ற என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அந்தக் குறைகளை மட்டும் உடனடியாக ஜெயலலிதா சரிசெய்திருந்தாலே நல்ல ஆட்சி என்று பெயர் எடுத்திருக்கலாம். அது எதையும் ஜெயலலிதா செய்யவில்லை. இலவசங்கள் கொடுத்துவிட்டாலே மக்கள் அமைதியாகி விடுவார்கள் என்று அவர் தப்புக் கணக்கு போட்டு​விட்டார்.''



ரஞ்சித்குமார், திருச்சி: ''மின்சாரமே இல்லாமல் மிக்ஸி, கிரைண்டர், ஃபேனை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு சொல்​லுங்க. இது எதுவும் இல்லாமல்கூட இருந்துடுவேங்க.. ஆனா கரன்ட்டை மட்டுமாவது கொடுக்கச் சொல்லுங்க. மத்த விஷயத்​தைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம்.''



கார்த்திக்,ஆற்காடு: ''ஒரு வருஷத்துல அ.தி.மு.க ஆட்சி ரொம்பப் பாடாய்ப்படுத்தி விட்டது. நிம்மதியா இருக்க முடியலை. குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கவே ஆளைக் காணோம். அது எப்ப​டிங்க சசிகலா விஷயத்துல ஜெயலலிதா அவ்வளவு சூப்பரா நாடகம் போடுறாங்க...''



காமராஜ், தர்மபுரி: ''இடைத்தேர்தலில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பிரச்னையிலும் ஜெயலலிதா அரசு காட்டி இருந்தால், தமிழகம் சுபிட்சமா மாறியிருக்கும். 'கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்கே ரெண்டு கொடுமை வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்’னு எங்க ஊருப் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க. அப்படித்தான் இருக்கு இந்தம்மாவோட ஆட்சி.''



சதீஷ்குமார், சென்னை: ''தேர்தல் அறிக்கையில் சொன்ன விஷயங்களை ஓரளவுக்கு நிறைவேற்றி இருக்கிறார்கள். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதும், ஜெயலலிதா மீது எல்லோருக்குமே நம்பிக்கை வந்தது. ஆனால், மீண்டும் அவரை தன்னோடு சேர்த்துக்கொண்டதும், அவர் மீதான நம்பிக்கை போய்விட்டது.''



வின்சென்ட் செல்வா, சென்னை: ''நில அபகரிப்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. பஸ் கட்டண உயர்வைத் தவிர்த்து இருக்கலாம். சாதாரண மக்களைத்தான் அந்த விஷயம் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதை ஏன் ஜெயலலிதா உணராமல் போனார்?''
பாகம் 2 
மக்கள் போட்ட மார்க்!

ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்து ஒரு வருடம் முடிந்ததை அடுத்து, 'ஒரு வருட ஜெ. ஆட்சி... பாஸா ஃபெயிலா? அதிர வைக்கும் ரிசல்ட்!’ என்று, கடந்த ஜூ.வி. இதழில் மெகா சர்வே வெளியிட்டோம். ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து மக்களின் மதிப்பீடு என்ன என்பதை அறிவதற்காக, 18 கேள்விகளை உள்ளடக்கிய சர்வே நடத்தினோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகரம், கிராமம் எனப் புகுந்து 3,659 நபர்களைச் சந்தித்தது ஜூ.வி. டீம். இதில் பெண்கள் மட்டும் 1,445 பேர்.   


அதில் 10 கேள்விகள் கடந்த இதழில் வெளியான நிலையில், அடுத்த 8 கேள்விகள் இந்த இதழில்... 'முதல்வராக ஜெயலலிதாவின் செயல்பாடுகள்?’ என்ற கேள்விக்கு, 'ஜெயலலிதா மாறவில்லை’ என்பதைத்தான் அதிகம் பேர் 'டிக்’ அடித்தனர். 'முந்தைய முதல்வர் கருணாநிதியின் செயல்பாட்டுடன் ஒப்பிடும்போது ஜெயலலிதாவின் செயல்பாடு...’ என்ற அடுத்த கேள்விக்கு, 'பெரிய வித்தியாசம் இல்லை’ என்றவர்கள் அதிகம்.


சசிகலாவுடன் ஏற்பட்ட பிரிவு, மீண்டும் உறவு காட்சிகளையும் சர்வேயில் கேள்விகளாகச் கேட்டு இருந்தோம். 'சசிகலாவுடனான உரசல்... பிறகு, மீண்டும் இணைந்தது?’ தொடர்பான கேள்விக்கு, 'அவர்களின் தனிப்பட்ட விஷயம்’ என்று சொன்னவர்கள் 41.46 சதவிகிதம். 'சுயநலத்தால் அரங்கேறிய நாடகம்’ என்று சொன்னவர்கள் 40.67 சதவிகிதம். இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் வெறும் 0.79 சதவிகிதம்தான்.


'சசிகலா குடும்பத்தினர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்​தியது...?’ என்ற கேள்விக்கு, 'ஜெயலலிதாவுக்குத் தெரியும்’ என்று அதிகம் பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.


'சசிகலா நீக்கம், சேர்ப்பு விவகாரத்தால் ஜெயலலிதாவின் அரசியல் இமேஜ்?’ என்ற கேள்விக்கு 'பாதிப்பு எதுவும் இல்லை’ என்கிறார்கள்.  'சசிகலாவை விட்டு ஜெய லலிதா எப்போதும் பிரிய மாட்டார்’, 'சசிகலா விவகாரத்தில் ஜெயலலிதா எடுக்கும் நடவடிக்கைகள் எப்போதுமே நாடகமாகத்​தான் இருக்கும்’ -


  சர்வே எடுக்கச் சென்ற இடங்களில் எல்லாம், மக்கள் மிகத் தெளிவாகக் இப்படிக் கருத்துச் சொன்னார்கள். ஓர் ஆண்டு ஆட்சியில் நடந்த முக்கிய விஷயங்களை எல்லாம் பட்டியல் போட்டு இதில் எது உங்களை அதிகம் பாதித்தது என்ற கேள்விக்கு அதிகபட்சமாக மின்வெட்டுப் பிரச்னையைக் குறிப்பிடுகிறார்கள்.


'ஜெயலலிதாவின் ஓர் ஆண்டு ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் எவ்வளவு?’ என்ற, மிக முக்கியமான கேள்விக்கு, 'ஜஸ்ட் பாஸ்’ என்று சொன்னவர்கள்தான் அதிகம்.  


ஜெயலலிதாவின் ஆட்சி, அவருடைய செயல்பாடு​கள், மின்வெட்டுப் பிரச்னை, பஸ், பால், மின் கட்டண உயர்வு, புதிய தலைமைச் செயலகத்தை முடக்கியது என்று அரசுக்கு எதிராக கடுமையான கருத்தை சர்வேயில் வெளிப்படுத்திய மக்கள், ஜெயலலி​தாவுக்கு ஜஸ்ட் பாஸ் என்று போட்டிருப்பது ஏன்? சர்வே ஃபாரங்களை நீட்டியதும் எல்லாவற்றுக்கும் தயங்காமல் நம் முன்பே டிக் அடித்தவர்கள், 'ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் எவ்வளவு?’ என்ற கேள்விக்கு, நீண்ட யோசனைக்குப் பிறகே பலரும் மதிப்பெண் போட்டார்கள்.


ஒரு சிலரின் கருத்துக்கள் இங்கே....


கண்ணன், சேலம்: ''கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிர​மிப்புன்னு தி.மு.க. ஆட்சியில் அனுபவிச்ச கொடுமைகளுக்கு அளவே இல்லை. இப்போது சட்டம் ஒழுங்கு சரியா இருக்கு. கட்டப்பஞ்சாயத்தும் நில ஆக்கிரமிப்பும் இல்லை. மக்கள் பயம் இல்லாம நிம்மதியா இருக்காங்க. இதுவே நல்ல விஷயம்தானே!''


குமார், கரூர்: ''சமச்சீர்க் கல்வி விவகாரத்தில் ஜெயலலிதா செய்த குளறுபடிகளை மறக்கவே முடியாது. மாணவர்கள் அனுபவிச்ச கொடுமை​யும் அதிகம். பஸ் கட்டணத்தை நினைச்சாலே, அடிவயிறு பத்திக்கிட்டு எரியுது. இதே மாதிரி ஆட்சி செஞ்சா, ஜெயலலிதா அடுத்த எலெக்ஷன்ல டெபாசிட் வாங்க முடியாது.''



ஆறுமுகம், திருவண்ணாமலை: ''தி.மு.க. ஆட்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தா, இந்த அரசு ஏதோ பரவாயில்லைன்னு சொல்லும் அளவுக்கு இருக்கு. நடுராத்திரியில கரன்ட் கட் ஆகி, தூங்க முடியாம வீதியில வந்து உட்காரும் நேரத்தில்தான், ஜெயலலிதா மீது கோபம் கோபமா வருது.''



ஜெயஸ்ரீ, திருச்சி:  ''தி.மு.க. ஆட்சியில் என்னென்ன குளறுபடிகள் செய்திருக்​கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவே முதல்வருக்கு ஒரு வருஷம் போதாது. அதை எல்லாம் சரிசெய்த பிறகுதானே, மக்கள் நலனில் அக்கறை காட்ட முடியும்? அடுத்த முறை ஆட்சிக்கு வருவதற்குள் நிச்சயம் அனைத்தையும் முதல்வர் சரிசெய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. விலைவாசி உயர்வு என்பது காலத்தின் கட்டாயம்.''


தீபக், வேலூர்: ''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராப் பக்கம் ஓடிவிட்டதாகச் சொன்னார். இப்போது நடக்கும் கொலைகளையும் கொள்ளைகளையும் பார்த்தால், வெளி மாநிலங்​களில் இருக்கும் ஒட்டுமொத்த ரவுடிக் கும்பலும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டதைப் போல இருக்கிறது. ஒண்ணும் சரியில்லீங்க...''



சொக்கலிங்கம், மதுரை: ''காவல் நிலையங்களில் அரசியல் தலையீடு இல்லை என்பது, நான் கண்கூடாகப் பார்த்த உண்மை. தமிழ், தமிழ் என்று சொன்னவர்கள் எல்லாம் செய்யாத விஷயங்களை, ஜெயலலிதா ஆக்கப்பூர்வமாகச் செய்து முடித்திருக்​கிறார். மின் வெட்டுப் பிரச்னை உள்ளிட்ட கஷ்டங்களையும் சொல்லி ஆகணும். வேப்பம்பூ பச்சடி போல இனிப்பும் கசப்பும் கலந்த ஆட்சி இது.''


சரவணன், காரைக்குடி:  ''எதிர்பார்த்த அளவுக்கு பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஏமாற்றம்தான் அதிகம். நிலஅபகரிப்பு வழக்குகளில் அதிரடிக் கைதுகள் நடந்ததைப் பார்க்கும்போது, நியாயமான நடவடிக்கை என்று நினைத்தோம்.. ஆனால், உள்ளே போனவர்கள் எல்லாம் அதே வேகத்தில் திரும்பி வந்ததைப் பார்த்தால், அரசின் நடவடிக்கை மீதே சந்தேகம்தான் வருகிறது.''



கண்பத் மோகன், சென்னை: ''சட்டம் ஒழுங்கு பிரமாதமா இருக்கிறதுன்னு முதல்வர் சொல்றாங்க. ஆனால், பட்டப் பகலில் கோடம்பாக்கம் ஏரியாவுல பொண்ணுங்க கழுத்தில் இருந்து சங்கிலியை அறுத்துட்டுப் போறாங்க. இந்த கொடுமையை எங்கே போய் சொல்றது? முதல்வர் கையில் இருக்கும் காவல்துறை என்னதான் செய்யுதுன்னே புரியலை?''


 மக்கள் கருத்து  இன் ஜூ வி ஆன் லைன்


1.Sulaiman - Saudia2 Hours ago

 
சும்மா சொல்லக்கூடாது, கடைசியில் பிட் அடிக்க வைத்து பாஸ் மார்க் போட்டு தப்பித்துக்கொண்டீர். சந்தோஷமான விசியமே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் கூட்டம் 5% அளவுக்கு குறைந்து இருப்பது தான். உங்க சர்வே எதிர்கட்சிக்கு வேணுமாலும் சந்தோஷத்தை கொடுக்கலாம், ஆனால் அந்த அம்மாவுக்கு ஒரு இம்மி அளவுக்கும் மன மாற்றத்தை ஏற்படுத்தாது.
 வேணுமானல் ஒரு எதிர்மறையான விளவை ஏற்படுத்தி உம்முடைய அலுவலகத்தில் ரைடு நடக்கலாம். ஆட்சியாளர்கள் விமர்சனங்களை எதிர்க்கொண்டு தன்னை திருத்திக் கொள்ளவேண்டும் என்ற லாஜிக் இந்த அம்மாவிடம் எதிர்பார்க முடியாது. வேலியில் போற ஓணானை வேட்டியில் விட்டாச்சு மக்களே இன்னும் ஒரு நாலுவருசத்திற்க்கு இப்படி புலம்பி தீர்கவேண்டியதுதான்.ஒரே ஒரு சின்ன நப்பாசை, அந்த பெங்களூரு தீர்ப்பு சீக்கிரம் வராதா தலைவா!!
2. Appan.
 
திமுக ஆட்சியிள் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. இப்படி நாடு இருந்தால் முன்னேற்றம் இருக்கும். ஆனால் என்ன திமுக அதிகாரத்தை எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் துஸ்பிரயோகம் செய்து விட்டார்கள். இதனால் முன்னெற்றம் இல்லாமல் பகல் கொள்ளையை திமுக செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஜெஜெ ஆட்சியில் அதிகாரம் ஜெஜெவிடமே உள்ளது. இதனால் எந்த முன்னேற்றமும், புதிய புராஜுட்டுகளும்வராது. இப்படி அதிகாரம் குவிக்கப்பட்டால் முடிவு துய்ரமே. சரிதிரத்தில் இப்படி அதிகாரம் குவிக்கப்பட்டு ஆட்சிசெய்தவர்கள் சமூகத்தில் மறக்க முடியாத வடுவை ஏர்படுத்தி உள்ளார்கள். இந்திரா காந்தி இப்படித்தான் செயள் பட்டார். இந்திய சரித்திரத்தில் ஒரு இருண்ட காலம் எமெர்ஜென்சி. அதோடு இந்திரா காலத்தில் இந்தியா மிகவும் பின் தங்கிய நாடாகிவிட்டது. தமிழகம் முன்னேற ஆயிரம் ஆயிரம் ஜெஜெக்கள் தேவை. ஒரு ஜெஜெவால் ஒன்னும் செய்ய முடியாடு. செங்கோடையன், பன்னீர்செல்வம் .. போன்றவர்கலால் காலிள்தான் விழமுடியும். நாட்டிர்க்கு என்ன வேண்டும் என்று சுயமாக சிந்தித்து செயல் பட முடியாது. 
சென்னை மேயர் சைதை துறை சென்னையஒ ஒரு உலகத்தரமான நகரம் ஆக்குவார் என எதிர்பார்த்தார்கள். கடைசியில் என்ன அயிற்று. திமுக சுபிரமணியெனே பரவாக இல்லை என்றாகிவிட்டது. ஐ.ஏ.எஸை உருவாக்கும் சைதை துறை ஏன் திறம்பட செயள்படமுடியவில்லை ?. ஏனென்றால் ஜேஜெ முதலிள் அந்தா ஆள் காலில் விழுவாரா என்று பார்ப்பார். காலிள்விழவிலை என்றால் ஒதுக்கப்படுவார். கலிள் விழும் அடிமை என்ன செய்ய முடியும் ? அவனையே காப்பாற்ற முடியவில்லை பின் நாட்டை பற்றி அவன் எப்படி நினைப்பான்.

3.Sulaiman - Saudia

 
சசிகலா சேர்ப்பு- அவர்கள் தனிபட்ட விசியம்?? - அடப்பாவிங்களா, நாங்க என்ன சர்வேயில் பெட்ரூம் மேட்டரா கேட்டோம்? 

நூற்றுக்கு நூறு போட்ட அந்த 195 பேரின் விலாசம் கொடுங்க பாஸ்.. காலில் விழுந்து கும்பிடனும்...!! 
4.Sriram
போன ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் மக்கள் எந்த அளவுக்கு மனம் மாறி நல்லவர்களாக ஆகி இருக்கிறார்கள் என்று ஒரு சர்வே எடுத்து பிரசுரித்தால் நல்லது! மக்கள் கொஞ்சமாவது மாறினால்தானே அரசு மாறும்!
5.dsad
பஸ் கட்டணத்தை நினைச்சாலே, அடிவயிறு பத்திக்கிட்டு எரியுது. ... உங்களுக்கு சம்பளம் மட்டும் வருடா வருடம் கூட்டணும் ஆனா சேவைகளுக்கு அதிகமா விலை குடுக்க மாட்டிங்க.


DIsKI -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
 
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
 
"/>a>

3 comments:

MARI The Great said...

மின்வெட்டுதான் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. ஆட்சியே மாறிப்போன பிரச்சனை ஜெ அதில் முக்கிய கவனம் செலுத்தினால் நல்லது ..!

ராஜி said...

ஹா ஹா அம்மாவை நம்பி ஓட்டு போட்டதுக்கு அம்மா தந்த, தரப்போகும் பரிசுகள் ஏராளம்.

முத்தரசு said...

சித்தப்பு ஒரு பதிவ தேத்தீபுட்டீகளே