Friday, May 25, 2012

நயன் தாராவுடன் காதலா? ஆர்யா பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKz5h7Joupr3U37Qylq03nhXGJV0CwM_3pIxvZsyz5C3Yhyy5DqJijorA9Oxt56CHTz-kGJhiBwnKyGQgi6r4aV9A3ZSihwdGrcSwTlCditvBDESb6XD91yuz71prX8c9a0_-qdGy8lBsx/s1600/Nayanthara+(11).jpgவேட்டை’யை முடித்துவிட்டு 'சேட்டை’யில் இறங்கிவிட்டார் ஆர்யா. நான்வெஜ் ஜோக்ஸ், டாய்லெட் காமெடி என்று இந்தியில் பட்டையைக் கிளப்பிய 'டெல்லி பெல்லி’யின் தமிழ் ரீ-மேக் இது. சந்தானம், ஹன்சிகா, அஞ்சலி என செம கலகலப்பில் இருந்த ஆர்யாவை மட்டும் தனியே தள்ளிக்கொண்டு வந்தேன்...


சி.பி - பெல்லி கில்லின்னு டைட்டில் வெச்சிருக்கலாம் அல்லது சேட்டைக்காரன்னு வெச்சிருக்கலாம் கெத்தா இருந்துருக்கும்


1. ''செம போல்டான 'டெல்லி பெல்லி’யை அப்படியே இங்கே எடுக்க முடியுமா?''



சி.பி - நாங்க எல்லாம் அப்பவே அப்படி, இப்போ கேக்கனுமா? எதை எடிட் பண்ணனும்? எதை சேர்க்கனும்னு தெரியாதா?
''கொஞ்சம் காரம் குறைச்சிருக்கோம். நான், சந்தானம், பிரேம்ஜினு காம்பினேஷன். வெடிச்சுச் சிரிக்கவைக்கும். ஆக்ஷன் சொன்னதும் யூனிட்டே சிரிச்சு உதறுது. சந்தானத்தோட சேர்ந்து சேர்ந்து எனக்கும் இப்போ காமெடி ஈஸியா வொர்க் - அவுட் ஆகுதுங்க!''


சி.பி - அது வேணா உண்மை தான், பாஸ் எ பாஸ்கரன் நல்லா காமெடி களை கட்டுச்சு, கல்லாவும் கட்டுச்சு


2. ''அதேசமயம் செல்வராகவன் படத்திலும் நடிக் கிறீங்க... அது வேற ஸ்கூல் ஆச்சே..?''


 சி.பி -அது ஸ்கூல்  இல்லிங்கோவ் சைக்கோ யுனிவர்சிட்டிங்கோவ்



''அது ஸ்கூல் இல்லை... யுனிவர்சிட்டி. 'ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பார். அவர்கிட்ட எந்த ஜாலியும் வேலைக்கு ஆகாது’னு சொல்வாங்க. ஆனா, 'இரண்டாம் உலகம்’ ஷூட்டிங்ல கேமரா ரோல் ஆகும்போது மட்டும்தான் அப்படி இருப்பார். 'கட்’ சொன்ன அடுத்த நொடியே, அவர் வேற ஆளா மாறிடுவார். உறவுகள்... நமக்குப் பரிசளிக்கிற உயரம், கொடுக்கிற துயரம்னு ரொம்ப சென்சிட்டிவ்வான கதை. எனக்கு ஜோடி அனுஷ்கா. செம ஃப்ரெண்ட்லி  பொண்ணு. எதைப் பத்தியும் அவங்ககிட்ட பேசலாம். ஒவ்வொரு நாளும் ரசனையா, திருப்தியா போகுது.''


 சி.பி - இரண்டாம் உலகம் இரண்டாம் மயக்கம் என்ன மாதிரி இல்லாம இருந்தா சரிதான்..



''3. அஜீத்கூட நடிக்கிறீங்கபோல... அதுவும் வில்லனா?''


சி.பி - இந்த மாதிரி கேள்வி கேட்டே நல்லா நட்பா இருக்கறவங்களையும் யோசிக்க வெச்சுடுங்க 
''எனக்கு அஜீத்தை ரொம்பப் பிடிக்கும். 'மங்காத்தா’வில் அறிமுக நடிகர்களோடு எந்த ஈகோவும் இல்லாம நடிச்சு இருப்பார். அவரை நான் மீட் பண்றப்போ, என் படங்களைப் பத்தி நிறைய விஷயங்கள் பேசுவார். அவரோட ஒவ்வொரு வார்த்தையுமே அவர் நம்ம மேல் வெச்சிருக்கிற அக்கறையைச் சொல்லும். இந்தத் தடவை அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். 'விஷ்ணு சொன்னார், நாம இரண்டு பேரும் சேர்ந்து கலக்குவோம்’னு சொல்லிச் சிரிச்சார். விஷ்ணுவர்தன் எனக்கு செம ஃப்ரெண்ட். அவர் தன்னோட படத்தில் என்னை ஜூனியர் ஆர்ட்டிஸ்டா நடிக்கச் சொன்னாலும் நடிப்பேன்.''



4. ''என்னங்க, எங்கே பார்த்தாலும் உங்க புது வீட்டுக்கு நயன்தாரா வந்தாங்கனுதான் பேச்சு...''



சி.பி - வந்தாரு, ஓக்கே ஆனா மறுபடியும் ரிடர்ன் போக 36 மணி நேரம் ஆச்சாம். 

''பத்து ஹீரோ, பத்து டைரக்டர்கள் வந்திருந்தாங்க... நயன்தாராவும் வந்திருந்தாங்க. ஆனா, அவங்க வந்தது மட்டும் நியூஸ் ஆகிடுச்சு. 'எங்க வீட்டுக்கு நிறையப் பேர் வந்திருக்காங்க. நீ வந்ததுதான் பரபரப்பாகிடுச்சு’னு நயன்கிட்ட சொல்லிச் சிரிச்சேன். அவ்வளவுதான்... இதுல பெரிய விசேஷம் எதுவும் இல்லை.''



சி.பி - அடேங்கப்பா மொத்தம் 21 பேரா? ஹி ஹி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw7LYX52PMopZMZ-e2bjAd9mNFPmjdnLNlB5jlkklCs3gc7tWDccfbo2KDMYpJvoBOKNnxZv5c3XUwUZHVyy-1EUgjrE-YvY5QRWBU7qbzX4IW1QZE4opdLXN0UmCu_nLihwoRsyIE2_bT/s1600/Nayanthara1.jpg

5. ''என்னங்க இது, 'வெல்கம் பேக் நயன்தாரா’னு எழுதி, கேக் வெட்டி வெல்கம் சொல்லியிருக்கீங்க... விசேஷம் எதுவும் இல்லைன்னா எப்படி?''


சி.பி - அதானே, வெல்கம் ஃபிராண்ட், வெல்கம் சைடு என ஏன் எழுதல இதை வன்மையாக கண்டிக்க்றேன் :) 







''அவங்க கொஞ்சம் அப்செட்டா இருந்தாங்க. அதனால, வீட்டுக்கு வந்தவங்களைக் குஷிப்படுத்த அப்படிப் பண்ணேன். அவ்ளோதான் பாஸ்!''


சி.பி - நயன் தாராவை குஷிப்படுத்திய ஆர்யான்னு டைட்டில் வைக்கலாமா? 
6. ''இப்பவும் நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தானே?''


சி.பி - ஆமா திக் ஃபிரண்ட்ஸ்.  



'' 'பாஸ்’ படத்துல இருந்தே பழக்கம்.  'பாஸ்’ பட ஷூட்டிங் சமயம் அவரோட செம 'லவ்’வில் இருந்தாங்க. அப்பவும் நான் ஃப்ரெண்டுதான்... இப்பவும் நான் ஃப்ரெண்டுதான்!''


7. ''உங்க ஃப்ரெண்டோட காதல் பிரிவுக்கு என்ன காரணம்னு விசாரிச்சீங்களா?''


''அதை எப்படிங்க கேட்க முடியும்? 'என்னாச்சு’னு மட்டும் கேட்டேன். 'வொர்க் - அவுட் ஆகலை’னு ஒரே வரியில் முடிச் சுட்டாங்க. காதல், கல்யாணம் எல்லாம் அவங்களோட ரொம்ப பெர்சனல்.''



சி.பி - அது என்ன ஜிம்ல போய் பண்ற எக்சசைஸா? ஒர்க் அவுட் ஆகாம இருக்க?


http://media5.onsugar.com/files/2011/06/22/5/1756/17567308/ca/nayanthara-hot-sexy-gallery-4.jpg

8. ''அப்ப ஆர்யா - நயன்தாரா நடுவில் காதல் இல்லவே இல்லையா?''


''என்னங்க... ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்களா? கிசுகிசு வருதேனு காதல், கல்யாணம்லாம் பண்றதுன்னா...  எப்பவோ நான் கல்யாணம் பண்ணியிருக்கணும். என் அப்பா - அம்மா எனக்குச் சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. நம்ம மனசுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணு வரட்டும். அப்புறம் பண்ணிக்கலாம் கல்யாணம். நாம எப்பவும் அப்பா - அம்மாவுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும். நான் இருக்கேன். அது போதும் சார்.''


சி.பி - அண்ணன் என்ன சொல்ல வர்றாருன்னா நயன்க்கு ஆறுதலா இருப்பாரு, குஷிப்படுத்துவாரு, சந்தோஷப்படுத்துவாரு. ஆனா கல்யாணம் பண்ணி படுத்த மாட்டாரு.. 

3 comments:

sisyan said...

இவங்களுக்கெல்லாம் வெக்கம் மானம் ஒன்னுமே.. இல்லயா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sisyan said...

இவங்களுக்கெல்லாம் வெக்கம் மானம் ஒன்னுமே.. இல்லயா?//

Copy Paste panratha vidava boss?

everestdurai said...

எல்லா புகை படங்களும் அருமை செந்தில்