Showing posts with label aarya. Show all posts
Showing posts with label aarya. Show all posts

Monday, November 11, 2013

இரண்டாம் உலகம்

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, பி.வி.பி சினிமாஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. நவ. 22ம் தேதி வெளியாகவிருப்பதால் 'இரண்டாம் உலகம்' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.


இந்நிலையில் படத்தை பற்றி 'இரண்டாம் உலகம்' குழுவினரிடம் விச்சரித்தோம். மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில் அழகான காதலர்கள். அவர்கள் இருவரும் இன்னொரு உலகில் மருவன் - வர்ணா என்கிற பெயரில் இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள், அந்த உலகத்துக்கு எப்படி போனார்கள், அவர்களின் அனுபவம் எப்படி இருந்தது என்பதுதான் 'இரண்டாம் உலகம்' படத்தில் செல்வராகவன் சொல்லவரும் கதை.


தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம், பின்னர் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க 'மயக்கம் என்ன' படத்தினை இயக்கினார் செல்வராகவன். அப்படத்தினைத் தொடர்ந்து செல்வராகவன் மீண்டும் கையில் எடுத்த கதைத்தான் 'இரண்டாம் உலகம்'.



இப்படத்தில் தனது வேடத்திற்காக உடலமைப்பை எல்லாம் மாற்றியிருக்கிறார் ஆர்யா. அத்துடன் முதன் முறையாக இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜுடன் கூட்டணி அமைத்து புதியதொரு டீமுடன் களம் இறங்குகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவிற்கு மட்டும் நெருங்கிய நண்பரான ராம்ஜியை ஒப்பந்தம் செய்தார். முதலில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்ய செல்வராகவன் மற்றும் ராம்ஜி பயணம் செய்தார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத இடங்களைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜார்ஜியாவில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.



இதுவரை இந்திய திரையுலகில் எந்தொரு படமும் அங்கு படப்பிடிப்பு நடத்தியதில்லை. ஸ்பாட்டுக்கு போய் சேரவே சில நாட்கள் ஆகும் என்பதால் படக்குழுவில் முக்கியமானவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முக்கிய காட்சிகளை அங்கு படமாக்கிய பின் அதன் கிராபிக்ஸ் பணிகள் மும்பையில் நடந்துள்ளது.


ஜனவரி 2013ல் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லரை பார்த்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் செல்வராகவன். தெலுங்கில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், "அவதார் மாதிரியான படங்கள் இந்தியாவில் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது" என்று அவர் கூற இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



இப்படத்தின் ஒரு பாடலை உஸ்பெகிஸ்தான் நாட்டில் படமாக்கலாம் என்று விசாவிற்கு அப்ளை செய்தார்கள். ஆனால் விசா குழப்பத்தில் திரும்பி விட்டார்கள். கடைசியில் அங்கு படமாக்க இருந்த காட்சிகள் அனைத்தையுமே சென்னையில் ECR பகுதியில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கி இருக்கிறார் செல்வராகவன்.



படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடிப்பதற்குள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதர படங்களில் பிஸியாகி விட்டார். இதனால், பின்னணி இசையை மட்டும் அனிருத் அமைத்திருக்கிறார். பின்னணி இசைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்று அங்குள்ள இசை கலைஞர்களை பயன்படுத்திருக்கிறார் அனிருத்.



தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.இப்படம் தனக்கு மிகவும் பிடித்துப் போனதால் அதன் சிங்கப்பூர், மலேஷியா உரிமை வாங்கியிருக்கிறார் நடிகர் ஆர்யா.


thanx - the tamil hindu

இரண்டாம் உலகம் படத்தில் நடிகை அனுஷ்கா

Friday, May 25, 2012

நயன் தாராவுடன் காதலா? ஆர்யா பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKz5h7Joupr3U37Qylq03nhXGJV0CwM_3pIxvZsyz5C3Yhyy5DqJijorA9Oxt56CHTz-kGJhiBwnKyGQgi6r4aV9A3ZSihwdGrcSwTlCditvBDESb6XD91yuz71prX8c9a0_-qdGy8lBsx/s1600/Nayanthara+(11).jpgவேட்டை’யை முடித்துவிட்டு 'சேட்டை’யில் இறங்கிவிட்டார் ஆர்யா. நான்வெஜ் ஜோக்ஸ், டாய்லெட் காமெடி என்று இந்தியில் பட்டையைக் கிளப்பிய 'டெல்லி பெல்லி’யின் தமிழ் ரீ-மேக் இது. சந்தானம், ஹன்சிகா, அஞ்சலி என செம கலகலப்பில் இருந்த ஆர்யாவை மட்டும் தனியே தள்ளிக்கொண்டு வந்தேன்...


சி.பி - பெல்லி கில்லின்னு டைட்டில் வெச்சிருக்கலாம் அல்லது சேட்டைக்காரன்னு வெச்சிருக்கலாம் கெத்தா இருந்துருக்கும்


1. ''செம போல்டான 'டெல்லி பெல்லி’யை அப்படியே இங்கே எடுக்க முடியுமா?''



சி.பி - நாங்க எல்லாம் அப்பவே அப்படி, இப்போ கேக்கனுமா? எதை எடிட் பண்ணனும்? எதை சேர்க்கனும்னு தெரியாதா?
''கொஞ்சம் காரம் குறைச்சிருக்கோம். நான், சந்தானம், பிரேம்ஜினு காம்பினேஷன். வெடிச்சுச் சிரிக்கவைக்கும். ஆக்ஷன் சொன்னதும் யூனிட்டே சிரிச்சு உதறுது. சந்தானத்தோட சேர்ந்து சேர்ந்து எனக்கும் இப்போ காமெடி ஈஸியா வொர்க் - அவுட் ஆகுதுங்க!''


சி.பி - அது வேணா உண்மை தான், பாஸ் எ பாஸ்கரன் நல்லா காமெடி களை கட்டுச்சு, கல்லாவும் கட்டுச்சு


2. ''அதேசமயம் செல்வராகவன் படத்திலும் நடிக் கிறீங்க... அது வேற ஸ்கூல் ஆச்சே..?''


 சி.பி -அது ஸ்கூல்  இல்லிங்கோவ் சைக்கோ யுனிவர்சிட்டிங்கோவ்



''அது ஸ்கூல் இல்லை... யுனிவர்சிட்டி. 'ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பார். அவர்கிட்ட எந்த ஜாலியும் வேலைக்கு ஆகாது’னு சொல்வாங்க. ஆனா, 'இரண்டாம் உலகம்’ ஷூட்டிங்ல கேமரா ரோல் ஆகும்போது மட்டும்தான் அப்படி இருப்பார். 'கட்’ சொன்ன அடுத்த நொடியே, அவர் வேற ஆளா மாறிடுவார். உறவுகள்... நமக்குப் பரிசளிக்கிற உயரம், கொடுக்கிற துயரம்னு ரொம்ப சென்சிட்டிவ்வான கதை. எனக்கு ஜோடி அனுஷ்கா. செம ஃப்ரெண்ட்லி  பொண்ணு. எதைப் பத்தியும் அவங்ககிட்ட பேசலாம். ஒவ்வொரு நாளும் ரசனையா, திருப்தியா போகுது.''


 சி.பி - இரண்டாம் உலகம் இரண்டாம் மயக்கம் என்ன மாதிரி இல்லாம இருந்தா சரிதான்..



''3. அஜீத்கூட நடிக்கிறீங்கபோல... அதுவும் வில்லனா?''


சி.பி - இந்த மாதிரி கேள்வி கேட்டே நல்லா நட்பா இருக்கறவங்களையும் யோசிக்க வெச்சுடுங்க 
''எனக்கு அஜீத்தை ரொம்பப் பிடிக்கும். 'மங்காத்தா’வில் அறிமுக நடிகர்களோடு எந்த ஈகோவும் இல்லாம நடிச்சு இருப்பார். அவரை நான் மீட் பண்றப்போ, என் படங்களைப் பத்தி நிறைய விஷயங்கள் பேசுவார். அவரோட ஒவ்வொரு வார்த்தையுமே அவர் நம்ம மேல் வெச்சிருக்கிற அக்கறையைச் சொல்லும். இந்தத் தடவை அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். 'விஷ்ணு சொன்னார், நாம இரண்டு பேரும் சேர்ந்து கலக்குவோம்’னு சொல்லிச் சிரிச்சார். விஷ்ணுவர்தன் எனக்கு செம ஃப்ரெண்ட். அவர் தன்னோட படத்தில் என்னை ஜூனியர் ஆர்ட்டிஸ்டா நடிக்கச் சொன்னாலும் நடிப்பேன்.''



4. ''என்னங்க, எங்கே பார்த்தாலும் உங்க புது வீட்டுக்கு நயன்தாரா வந்தாங்கனுதான் பேச்சு...''



சி.பி - வந்தாரு, ஓக்கே ஆனா மறுபடியும் ரிடர்ன் போக 36 மணி நேரம் ஆச்சாம். 

''பத்து ஹீரோ, பத்து டைரக்டர்கள் வந்திருந்தாங்க... நயன்தாராவும் வந்திருந்தாங்க. ஆனா, அவங்க வந்தது மட்டும் நியூஸ் ஆகிடுச்சு. 'எங்க வீட்டுக்கு நிறையப் பேர் வந்திருக்காங்க. நீ வந்ததுதான் பரபரப்பாகிடுச்சு’னு நயன்கிட்ட சொல்லிச் சிரிச்சேன். அவ்வளவுதான்... இதுல பெரிய விசேஷம் எதுவும் இல்லை.''



சி.பி - அடேங்கப்பா மொத்தம் 21 பேரா? ஹி ஹி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw7LYX52PMopZMZ-e2bjAd9mNFPmjdnLNlB5jlkklCs3gc7tWDccfbo2KDMYpJvoBOKNnxZv5c3XUwUZHVyy-1EUgjrE-YvY5QRWBU7qbzX4IW1QZE4opdLXN0UmCu_nLihwoRsyIE2_bT/s1600/Nayanthara1.jpg

5. ''என்னங்க இது, 'வெல்கம் பேக் நயன்தாரா’னு எழுதி, கேக் வெட்டி வெல்கம் சொல்லியிருக்கீங்க... விசேஷம் எதுவும் இல்லைன்னா எப்படி?''


சி.பி - அதானே, வெல்கம் ஃபிராண்ட், வெல்கம் சைடு என ஏன் எழுதல இதை வன்மையாக கண்டிக்க்றேன் :) 







''அவங்க கொஞ்சம் அப்செட்டா இருந்தாங்க. அதனால, வீட்டுக்கு வந்தவங்களைக் குஷிப்படுத்த அப்படிப் பண்ணேன். அவ்ளோதான் பாஸ்!''


சி.பி - நயன் தாராவை குஷிப்படுத்திய ஆர்யான்னு டைட்டில் வைக்கலாமா? 
6. ''இப்பவும் நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தானே?''


சி.பி - ஆமா திக் ஃபிரண்ட்ஸ்.  



'' 'பாஸ்’ படத்துல இருந்தே பழக்கம்.  'பாஸ்’ பட ஷூட்டிங் சமயம் அவரோட செம 'லவ்’வில் இருந்தாங்க. அப்பவும் நான் ஃப்ரெண்டுதான்... இப்பவும் நான் ஃப்ரெண்டுதான்!''


7. ''உங்க ஃப்ரெண்டோட காதல் பிரிவுக்கு என்ன காரணம்னு விசாரிச்சீங்களா?''


''அதை எப்படிங்க கேட்க முடியும்? 'என்னாச்சு’னு மட்டும் கேட்டேன். 'வொர்க் - அவுட் ஆகலை’னு ஒரே வரியில் முடிச் சுட்டாங்க. காதல், கல்யாணம் எல்லாம் அவங்களோட ரொம்ப பெர்சனல்.''



சி.பி - அது என்ன ஜிம்ல போய் பண்ற எக்சசைஸா? ஒர்க் அவுட் ஆகாம இருக்க?


http://media5.onsugar.com/files/2011/06/22/5/1756/17567308/ca/nayanthara-hot-sexy-gallery-4.jpg

8. ''அப்ப ஆர்யா - நயன்தாரா நடுவில் காதல் இல்லவே இல்லையா?''


''என்னங்க... ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்களா? கிசுகிசு வருதேனு காதல், கல்யாணம்லாம் பண்றதுன்னா...  எப்பவோ நான் கல்யாணம் பண்ணியிருக்கணும். என் அப்பா - அம்மா எனக்குச் சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. நம்ம மனசுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணு வரட்டும். அப்புறம் பண்ணிக்கலாம் கல்யாணம். நாம எப்பவும் அப்பா - அம்மாவுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும். நான் இருக்கேன். அது போதும் சார்.''


சி.பி - அண்ணன் என்ன சொல்ல வர்றாருன்னா நயன்க்கு ஆறுதலா இருப்பாரு, குஷிப்படுத்துவாரு, சந்தோஷப்படுத்துவாரு. ஆனா கல்யாணம் பண்ணி படுத்த மாட்டாரு..