Thursday, February 23, 2012

ரோபோ கமல் , எந்திரன் ரஜினி -ஷங்கர் ஒப்பீடு - காமெடி கும்மி

http://sirippu.files.wordpress.com/2010/01/dsc_5646.jpg 


1. 'ஷங்கர்... பார்ப்பனச் சிந்தனைகளுக்குக் கொடி பிடிக்கிறார்என்று உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் பற்றி?''

சி.பி - எதுக்கெடுத்தாலும் ஜாதியை இழுக்கறதே தமிழனுக்கு வேலையாப்போச்சு.. எல்லாத்துக்கும் தமிழ் இனத்தலைவர் கலைஞர் தான் காரணம். ஆ ராசாவை கைது பண்றப்ப அவர் ஒரு தலித் என்பதால்தான் அப்படி பண்றாங்கன்னு சொன்னாரு... தலைவர் எவ்வழி.. தொண்டர் அவ்வழி.
 
''ஒரு சாமானியனாகத்தான் என் சிந்தனைகளைப் படங்களில் பிரதிபலிக்கிறேன். 'ஜென்டில்மேன்படம் ஓப்பனிங்ல, ஹீரோ ஊட்டியில கோடிக்கணக்குல கொள்ளை அடிக்கிற மாதிரி, ஒரு ஸ்டைலான ஆக்ஷன் ப்ளாக் வரும். அவர் மேல போலீஸுக்கு சந்தேகம் வராம இருக்கணும்னும் அந்த ஆக்ஷனுக்குச் சம்பந்தமே இல்லாத எதிர் துருவத்தில் ஹீரோ இருக்கணும்னும்தான் அக்ரஹாரத்துல அப்பளம் போடுறவரா அர்ஜுனை ஸ்கெட்ச் பண்ணியிருப்பேன். ஆனா, கதைப்படி அவர் ஐயரா நடிப்பாரே தவிர, உண்மைல ஐயர் கிடையாது. இன்னும் உத்துக் கவனிச்சீங்கன்னா... ஃப்ளாஷ்பேக்ல, 'இவ்வளவு அழகா மந்திரங்களைச் சொல்றியே... நீ பிராமணன் இல்லேன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்கனு நம்பியார் சொல்வார்.

'அந்நியன்படத்துலயும் என் கற்பனைல வந்த முதல் விஷ§வல், முகத்தை மறைச்ச மாதிரி முன்னாடி நீளமா தொங்கற முடியோட இருக்கிற 'அந்நியன்கேரக்டர்தான். பொதுவா, நீளமான முடி, சர்தார்ஜிக்களுக்கு, ஐயர், ஐயங்கார்களுக்கு இருக்கிறதைப் பார்த்திருக்கேன். சர்தார்ஜின்னா நேட்டிவிட்டி அடிபடும். ஐயர் வேஷம் 'ஜென்டில்மேன் போட்டாச்சு. அதனால அந்நியனை ஐயங்காரா காட்ட முடிவு பண்ணேன். அது கதையோட, கதாபாத்திரத்தோட தேவைக்காகக் கொடுக்கப்பட்ட கலர். அவ்வளவுதான். என் மத்த ஒன்பது படங்களோட கதாநாயகர்களையும் நியூட்ரல் ஆகத்தான் காமிச்சிருக்கேன்.
நான் சாதிகள்ல உடன்பாடு இல்லாத, எல்லாரும் சமம்னு நினைக்கிற நியூட்ரலான ஆள்!''



சி.பி - வெரிகுட் ஆன்சர்.. நல்ல வேளை நம்மாளுங்க “ ஏன் சார் உங்க படத்துல பாலகுமாரன், சுஜாதா மாதிரி பிராமணர்களுக்கு வசனம் எழுத வைத்து  ஆதரவு தர்றீங்க?:ன்னு கேட்கலை. 

2.  '' 'உங்க படத்தைப் பார்த்து நாங்க மனம் திருந்திட்டோம். இப்ப நாங்க லஞ்சமே வாங்குறது இல்லஎன்று யாராவது உங்களிடம் சொல்லி இருக்கிறார்களா?''


சி.பி - அப்படி எல்லாம் பாசிட்டிவா இருந்தா யாரும் வெளீல சொல்ல மாட்டாங்க.. புலன் விசாரணை பார்த்து கொலை செஞ்சேன், நூறாவது நாள் பார்த்து ஆட்டோ சங்கர் ஆனேன்,அக்னி பாத் ஹிந்திப்படம் பார்த்து டீச்சரை கொன்னேன்னு ஆரம்பிப்பாங்க..
 ''அப்படி சாமி சத்தியமா இதுவரை யாருமே சொல்லலைங்க. சொல்லியிருந்தா, இந்நேரம் நான் பிறவிப் பலனை அடைஞ்சு இருப்பேன்.
'நீங்க இப்படி எல்லாம் படம் எடுத்துட்டா... நாங்க திருந்திடுவோமா?’
'அது... நம்மளைச் சொல்லலப்பா... லஞ்சம் வாங்குறவங்களைச் சொல்றாங்க!’
'இதுல என்ன தப்பு... எல்லாரும் பண்றதைத்தான நாங்க பண்றோம்!’
'அது சினிமாவுக்கு வேணா சுவாரஸ்யமா இருக்கலாம்... பிராக்டிகலா நடக்காது!’
- இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஃபீலிங்ல லஞ்சத்தை கன்டினியூ பண்ணிக்கிட்டு இருக்காங்க.
நாமளும் 'இந்தியன் பார்ட் 2, 3, 4, 5’-னு கன்டினியூ பண்ணிக்கிட்டு இருக்க வேண்டி யதுதான்.
ஆனா, பப்ளிக்ல நல்லவங்க, மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவங்க நிறைய பேர், 'அந்நியன்படத்தைப் பார்த்துட்டு என்கிட்ட, 'படம் பார்த்ததும் பயம் வந்துடுச்சு சார்... நாமெல்லாம் ஒழுங்கா நடந்துக்கலையோனு குற்ற உணர்வு வந்துடுச்சு. இப்பல்லாம் ரெட் சிக்னல்ல நின்னுடுறோம். 'ஸ்டாப் லைனைத் தாண்டுறது இல்லைனு சொல்லிஇருக்காங்க.
'முதல்வன்படம் வந்ததும் நிறைய இடங்கள்ல புகார் பெட்டி வெச்சதா செய்தி வந்தது. நிறைய அரசு அதிகாரிகள் டைப் ரைட்டரோட ஸ்பாட்ல போய், சரியா வேலை செய்யாதவங்களை சஸ்பெண்ட் செஞ்ச தாவும் செய்திகள் வந்தன. அந்த வகையில பிறவிப் பயன்ல ஒரு சின்ன பீஸை அடைஞ்சிட்டோம்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்!''


சி.பி - முதல்வன், இந்தியன் படங்கள் நீங்க சொல்ற மாதிரி ஒரு விழிப்புணர்வ ஏற்படுத்தியது உண்மை, ஆனா அந்நியன்ல  அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தலை..  


http://blog.endhiran.net/wp-content/uploads/2010/01/84-150x150.jpg

3. '' 'எந்திரன்படப்பிடிப்பு சமயம் ரஜினி யோடுதான் பெரும்பாலான நேரத்தைக் கழித்திருப்பீர்கள்... அப்போது நீங்கள் சொல்லி ரஜினி மாற்றிக்கொண்ட ஒரு விஷயமோ அல்லது ரஜினி சொல்லி நீங்கள் மாற்றிக்கொண்ட ஒரு விஷயமோ இருக்குமே... அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ள லாமே?''
சி.பி - இவரு அவருக்கு சம்பளத்தை செக்கா கொடுத்திருப்பாரு, அவரு படத்துல நடிக்கறேன்கரதுக்கான அக்ரீமெண்ட்ல சைன் பண்ணி டாக்குமெண்ட்ஸ் குடுத்திருப்பாரு.. அதை எல்லாம் ஷேர் பண்ண முடியுமா? சம்பளம் எவ்ளவ்னு தெரிஞ்சுடுமே?

'' 'எந்திரன்சமயத்துலனு இல்லை... அவரோட படம் பண்றதுக்கு முன்னாடியே அவர்கிட்ட இருந்து ஒரு நல்ல பழக்கத்தை நான் கத்துக்கிட்டேன். ஒரு விழாவுக்கு ரஜினி சார் வந்திருந்தார். எல்லாரும் அவரைப் போய்ப் பார்த்து 'ஹலோசொல்லிட்டு இருந்தாங்க. 'நாம போய் ஹலோ சொல்ல ணுமா?’னு சங்கோஜத்தோட, தயக்கத்தோட, கொஞ்சம் தள்ளியே நின்னுக்கிட்டு இருந் தேன். ஆனா என்னைக் கவனிச்சவர், கிட்ட வந்து, 'ஹலோ ஷங்கர்... எப்படி இருக்கீங்க?’னு கேட்டாரு. எனக்கு 'ச்சேனு ஆகிடுச்சு.
விழாக்களில் பலர் இப்படித்தான் நடந்துப்பாங்க. பக்கத்துலயே இருந்தாலும், நேருக்கு நேர் நின்னாலும், யார் முதல்ல ஹலோ சொல்றதுன்னு, யாரு நகர்ந்து கிட்ட போறதுன்னு, நீ பெரியவனா நான் பெரியவனான்னு உள்ளுக்குள்ள ஒரு பெரிய போராட்டமே நடக்கும். ஆனா, அதை வெளிக்காட்டிக்காம, கண்டுக்காம பக்கத் துல இருக்கிறவங்ககிட்ட சிரிச்சுப் பேசிட்டு இருக்கிற மாதிரி பாசாங்கு பண்ணுவாங்க. அதை உடைச்சவர் ரஜினி. அன்னைல இருந்து... என் கண்ணுக்கு முன்னால தெரிஞ்சவங்க இருந்தா... பெரியவங்களோ, சின்னவங்களோ நானே முதல்ல போய் 'ஹலோசொல்லிடுவேன்!
ஒரு தடவை ரஜினி சார்கிட்ட, நான் சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திட்டேன்னு சொன்னேன். அவரால நம்ப முடியலை. 'எவ்ளோ நாளாச்சு?’னு கேட்டார். 'அஞ்சு வருஷமாச்சுன்னேன். 'எப்டி... எப்டி?’ன்னார். நான், 'நிறுத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, முடியல. ஒரு தடவை எனக்கு மலேரியா வந்துச்சு. தினமும் ஊசி போட வேண்டியிருந்ததால நான் சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். 15 நாள் சிகரெட் பிடிக்கலை. 16-வது நாள் 'இத்தனை நாள் விட்டதை மறுபடி ஆரம்பிக்கணுமா?’னு யோசிச்சு விட்டுட்டேன். அப்புறம் ஒரு மாசம்... ஆறு மாசம்... ஒரு வருஷம்னு, அஞ்சு வருஷம் பிடிக்கலேனு சொன்னேன். ஏன்னா, 'சும்மா ஆறு மாசம், ஒரு வருஷம் விட்டா சிகரெட் பழக்கத்தை விட்டதா அர்த்தம் இல்லை. அஞ்சு வருஷம் நிறுத்தினாதான் உண்டுனு சுஜாதா சார் என்கிட்ட சொல்லிஇருக்கார். அப்புறம் ரஜினி சாரும் படிப்படியா குறைச்சு, ஒரு நாளைக்கு மூணு... அப் புறம் ஒண்ணுங்கிற அளவுக்கு வந்துட்டார்!
'எந்திரன்படத்துக்காக சிட்டி மேக்-அப் இங்கே செட் ஆகாததால, அமெரிக்கால ஸ்டேன்வின்ஸ்டன் ஸ்டுடியோவுக்கு மேக்-அப் டெஸ்ட்டுக்காகப் போயிருந்தோம். ரெண்டு நாளாகியும் அங்கேயும் செட் ஆகலை. லஞ்ச் பிரேக்ல நான் தனியா நின்னு டென்ஷன்ல டேபிளைக் குத்திக்கிட்டு இருந்தேன். என்னைக் கடந்து போன ரஜினி சார், 'இந்தப் படம் முடியறதுக்குள்ள மறுபடி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுடுவீங்கனு நினைக்கிறேன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே படம் முடியற நேரத்துல டென்ஷன் டெரா பைட்டுக்கு ஏறி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, அப்புறம் சுத்தமா விட்டுட்டேன். அவரும் விட்டுட்டார்!''



சி.பி - படிப்பவர்களுக்கு  விழிப்புணர்வை ஊட்டும் பொறுப்பான பதில், வெல்டன்..

4. ''ரஜினி, கமல்பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்... இது உங்கள் ரசிகனின் அன்புக் கட்டளை... மீறாதீர்கள் ஷங்கர்...''

'' 'இந்தியன்கதையை முதன்முதலில் ரஜினி சாருக்குத்தான் சொன்னேன் என்பது பலருக்குத் தெரியாது. கதை, திரைக்கதை, முழுமை அடையாத ஆரம்பக் கட்ட நிலையில் சொன்னதால் அதைச் செய்வதில் ரஜினி சாருக்குத் தயக்கம் இருந்தது. 'இந்தியன்படம் முடிந்து, அவருக்குப் போட்டுக் காட்டினேன். படம் முடிந்ததும் ஓடி வந்து என்னை இறுக்கிக் கட்டியணைத்து, 'சூப்பர்... சூப்பர்...’ எனத் தட்டிக்கொடுத்து, 'இப்படி எனக்கு நீங்க சொல்லவே இல்லியேஎன்று ஆச்சர்யப்பட்டார்.
நீங்கள் உற்றுப்பார்த்தீர்களானால் 'இந்தியன்தாத்தா, இன்டர்வெல் காட்சியில் உட்கார்ந்தபடியே ஈஸி சேர் பலகையால் நெடுமுடி வேணுவைத் தட்டிவிடுவார். வர்மக் கலையில் அவரை வீழ்த்திக் கீழே கிடக்கிற துண்டை எடுத்து ஸ்டைலாகத் தோளில் போடுவார். பிறகு, எழுந்து கலைந்த முடியை ஸ்டைலாகக் கோதி சரி செய்வார். இது ரஜினி சாரை மனதில்வைத்து நான் உருவாக்கிய காட்சி என்பது கமல் சாருக்குத் தெரியாது. அதை முற்றிலும் அவரது ஸ்டைலில் வேறுவிதமாகச் செய்து அசத்தி இருப்பார்.


சி.பி - அவர் எப்படி செஞ்சாரோ, ஆனா பார்க்க ரஜினி ஸ்டைலாத்தான் தெரிஞ்சுது..   ஹரே ராதா ஹரே கிருஷ்ணா படத்துல பாடல் காட்சில ஒரு இடத்துல இதே மாதிரி ரஜினி ஸ்டைல் பண்ணி இருப்பாரு, ஆனா ரஜினி எந்தப்படத்துலயும் கமல் மாதிரி நடிக்க ட்ரை பண்னதில்லை..
ரஜினி சார் இப்போதுகூட, 'நான் முதல்வன் பண்ணாததுகூட எனக்கு வருத்தம் இல்ல... 'இந்தியனைத்தான் மிஸ் பண்ணிட்டேன்!’ என்று சொல்வார்.
'ரோபோமுதலில் கமல் சாரை வைத்து எடுப்பதாக இருந்தது அனைவருக்கும் தெரியும். அதன் முதல்கட்டமாக மும்பையில் கமல் சார், ப்ரீத்தி ஜிந்தா கலந்துகொண்ட போட்டோ ஷூட் நடந்தது பலருக்குத் தெரியாது. கமல் சாரை விஞ்ஞானியாக, ரோபோவாக, வில்லன் ரோபோவாக எல்லாம் போட்டோஸ் எடுத்தோம். அப்போது, வில்லன் ரோபோ பாடல் காட்சியில் ஹிட்லர் போல், இடிஅமீன்போல் வருகிற மாதிரியாகக் கற்பனை செய்துவைத்திருந்தேன். ஒவ்வொரு கெட்-அப்பிலும் கமல் சார் கொடுத்த போஸ்களையும் எக்ஸ்பிரஷன்களையும் பார்த்து ப்ரீத்தி ஜிந்தா, மும்பை

டெக்னீஷி யன்கள் எல்லோரும் மிரண்டுபோனார்கள். அதன் பிறகு, கமல் சார் கொடுத்த தேதிகளை 'நாயக்படத்தினால் என்னால் பயன் படுத்திக்கொள்ள முடியவில்லை. நான் 'நாயக்முடித்து வந்தபோது, அவர் வேறு ஒரு படத்தில் பிஸி ஆகிவிட்டார். அந்தப் படம் எடுக்க முடியாமல் போனது. ஆனால், அவரைவைத்து எடுத்த இந்தப் படங்களைப் பார்க்கும்போதும், அவர் ரோபோ பேசுவதுபோல் பதிவு செய்திருந்த,
'ஹாய்... நான் ஒரு ரோபோ... மனித உருவம்கொண்ட இயந்திரம்...
ஸ்பீட் ஒன் கிகா ஹெர்ட்ஸ்... மெமரி ஒன் டெரா பைட்...
ஜாக்சனைப் போல் ஆடவும் தெரியும்... ஜாக்கிசானைப் போல் மோதவும் தெரியும்.
நான் கற்றது கடலளவு... கல்லாதது- மனிதனின் பொய், பொறாமை, வஞ்சகம், துரோகம்...
என்னைச் சரியாகப் பயன்படுத்தினால் நண்பன்... தவறாகப் பயன்படுத்தினால்..? ஹா... ஹா... ஹா... (வில்லன் சிரிப்பு)’
- அவருடைய கம்பீரக் குரலைக் கேட்கும் போதும் மெய்சிலிர்க்கிறது!''



சி.பி - ரோபோ படத்துல  கமல் நடிச்சிருந்தா நடிப்புல பல புதிய பரிமாணங்களை கமல் காட்டி இருப்பார் என்பது உறுதி. ஆனா கல்லா கட்ட ரஜினி தான் பெஸ்ட் சாய்ஸ்.. 



5. ''தங்கள் படங்களின் முதல் விமர்சகர் யார்?''


சி.பி - எந்தப்படைப்பாளிக்கும் முதல் விமர்சகர் அவரது மனைவியாகவோ, நெருங்கிய நண்பராகவோதான் இருக்கும்..

 ''நான்தான்! நானே என் படத்தையும் படத்துல வர்ற ஒவ்வொரு விஷயத்தையும் கிண்டல் பண்ணி, ஓட்டி, அலசி, ஆராய்ஞ்சு, பிரிச்சு மேய்ஞ்சு, பின்னிப் பெடலெடுத்து, எல்லா ஸ்கேனர்லயும் விட்டு எடுத்து, அது 'போதும் என்னை விட்டுருப்பானு கதறுன அப்புறம்தான் ரிலீஸ் ஆகுது!''


சி.பி - சார், எல்லாம் ஓக்கே , ஊழல், கறுப்புப்பணம் இந்த சர்க்கிளை விட்டு வெளீல வாங்க.. போர் அடிக்குது.. உடனே காதலன், ஜீன்ஸ், பாய்ஸ்னு இறங்கி போகாதீங்க.. புது திரைக்கதைல நீங்க கலக்கனும்.. 

- அடுத்த வாரம்...
''எழுத்தாளர் சுஜாதாவுடன் நீங்கள் படத்துக்கு வசனம் அமைக்கும் அனுபவத் தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன். சில சிரமமான சீன்களுக்கு சுஜாதா சார் பளிச் என்று நச் வசனம் பிடித்த உதாரணம் ஏதேனும்? அப்படி சுஜாதா சார் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?''
''ஒரே படத்தில் கமலையும் ரஜினி யையும் சேர்த்து இயக்கும் எண்ணம் உண்டா?''
''நீங்கள் நன்றாகக் கவிதை எழுதுவீர் களாமே? எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க ப்ளீஸ்?''


 தொடரும் 


9 comments:

சசிகுமார் said...

ஜாதி+மூட நம்பிக்கை = ????

முத்தரசு said...

வணக்கம்

ம்....

Anonymous said...

உங்க கமெண்ட் நல்லா இருக்கு, ஆனா விகடனுக்கு ஒரு நன்றி கூட இல்லையா?

இந்த வாரம் விகடன்ல வந்த உங்க ஜோக்கும் நல்லா இருந்துச்சு....

RAMA RAVI (RAMVI) said...

கேள்வி பதில்களை விட உங்க கமெண்ட் வேடிக்கையாக படிக்க சுவாரசியமாக இருக்கு.

rajamelaiyur said...

//

Blogger சசிகுமார் said...

ஜாதி+மூட நம்பிக்கை = ????
//

வளர்ச்சிக்கு தடை

rajamelaiyur said...

இன்று

எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...

Sathish said...

சூப்பர் பேட்டி !!
http://sathivenkat.blogspot.in/

Sathish said...

சூப்பர் பேட்டி !!

Marc said...

அருமை அருமை மனகவர் பதிவு வாழ்த்துகள்