Wednesday, February 22, 2012

ஓ பக்கங்கள் ஞானியை, கலாய்த்த ஓஹோ பக்கங்கள் விஞ்ஞாநி சாருவை கலாய்க்கும் அஞ்ஞானி குமாரு

http://charuonline.com/blog/wp-content/uploads/sujatha-300x236.jpg 

ஞாநிக்கு பதில் எழுதுவதாகச் சொன்னீர்களே?  ஏன் இன்னும் எழுதவில்லை?” என்று கேட்டு பல கடிதங்கள் வந்துள்ளன.  ஊர் ரெண்டு பட்டா… என்ற பழமொழி தான் ஞாபகம் வந்தது.  ஞாநி பத்து நிமிஷத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டுப் போய் விட்டார்.  அதற்கு பதில் எழுதப் புகுந்தால் நான்கு ஐந்து மணி நேரம் ஆகும் போல் இருக்கிறது.  ”சாருவுக்கும் எனக்கும் ஒரே வயது” என்றார் ஞாநி.  அது மட்டும் அல்ல; அதை நிறுவுவதற்காக ”சாருவுக்கும் பைபாஸ் ஸர்ஜரி நடந்துள்ளது; எனக்கும் ஆஞ்ஜியோ நடந்துள்ளது; இதோ இந்த வாரம் இன்னொரு ஸர்ஜரி நடக்க உள்ளது” என்று பல உதாரணங்களையும் அடுக்கினார்.   இந்த ஒரு வசைக்கு பதில் சொல்லவே பத்து பக்கங்கள் எழுத வேண்டும் போல் இருக்கிறது.    ஸர்ட்டிஃபிகேட் பிரகாரம் அவருக்கும் எனக்கும் ஒரே வயதுதான்.  ஆனால்?  இந்த ஆனாலுக்குத்தான் பத்து பக்கங்கள் எழுத வேண்டும்.


சி.பி - சாருவுக்கு மனசுக்குள்ள இன்னும் சின்னப்பாப்பான்னே நினப்பு..  டீச்சர், இவன் என்னை கிள்ளிட்டான்.. அவன் என்னை அடிச்சுட்டான்.. 

சீனி கம் படம் பார்த்திருக்கிறீர்களா? 


சி.பி - இல்லண்ணே, சீன் படமா? அது?



 அதில் அமிதாப் பச்சன் 64 வயது இளைஞனாக வருவார்.  ஆம்; இளைஞன்.  தபுவுக்கு 34 வயது.  இரண்டு பேருக்கும் காதல்.  அமிதாப் லண்டனில் வசிப்பவர்.    தபுவின் அப்பாவிடம் தங்கள் காதலைச் சொல்லி சம்மதம் கேட்கலாம் என்ற எண்ணத்தில் இந்தியா வருகிறார்.  தபுவின் அப்பா ஓம் பிரகாஷுக்கு அமிதாபை விட 6 வயது கம்மி.  ஆனால் அமிதாபைப் பார்த்ததும் அவர் 90 வயதான இரண்டு கிழவர்கள் சந்தித்துக் கொண்டதைப் போல் பேசுவார்.  என்ன ஜி, வாக்கிங் எல்லாம் போகிறீர்களா?  வயசாகிப் போச்சு… நம்ம வயசுல வாக்கிங் போயே ஆகணும்… இல்லேன்னா கொலஸ்ட்ரால், ஷுகர், ஹார்ட் ப்ராப்ளம்…  இப்போவே பாருங்க… உங்க கிட்ட பேசும் போதே மூச்சு இரைக்குது…  நீங்க என்ன விட 6 வயசு மூத்தவர்னு நீனா (தபு) சொன்னா…  ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோணும்…  இல்லேன்னா அவ்ளோதான்…  சரி, என்ன குடிக்கிறீங்க… டீ தானே?  சீனி கம்?  நான்லாம் சீனியே போட்டுக்கிறது இல்லே…  நேத்து தான் ஆஞ்ஜியோ டெஸ்ட் பண்ணினேன்…  ஒரே ஒரு இடத்துல ப்ளாக் இருக்கு… ஓவர் கொலஸ்ட்ரால்…  நீங்களும் அப்பொப்போ டெஸ்ட் பண்ணிடுங்க…  வாரீஹளா.. நாளைக்கு ஃபுல் பாடி செக்கப்புக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன்…?


 சி.பி - ஆஹா, படம் செமயான தீம் போல... பார்த்துடவேண்டியதுதான்..


தபுவைப் பெண் கேட்க வந்த அமிதாபுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…


சி.பி - எக்சைல் நாவலை படிச்ச மாதிரி சப்புன்னு இருந்திருக்கும்.. ஹி ஹி 

  ஓம் பிரகாஷ் ஒரு சராசரி இந்தியனின் பிரதிநிதி.  ஞாநி தன் வயதையும் என் வயதையும் ஒப்பிட்டு மூச்சு வாங்க மூச்சு வாங்கப் பேசிய போது எனக்கு அச்சு அசல் ஓம் பிரகாஷ் கேரக்டரைப் பார்ப்பது போலவே இருந்தது.  சான்ஸே இல்லை.  என்ன ஒற்றுமை!!!



சி.பி -  உங்க 2 பேருக்கும் ஒரே குறைங்கற ஆதங்கத்துல தெரியாம சொல்லிட்டார்.. விடுங்க்ணா.. கூல்


என்னுடைய நண்பர்கள் அத்தனை பேரும் 30 வயதைத் தாண்டாதவர்கள். 


சி.பி - அண்ணன் கொள்கை எனக்கு பிடிச்சிருக்கு.. தாத்தா ஆனாலும் அண்ணனோட சிநேகம் எல்லாம் யூத்துங்க கூடத்தான்.. ஹி ஹி 



 ஒரு நண்பனோடு பெங்களூர் ஹிண்ட் பப்பில் இரவு 12 மணி வரை குடித்து விட்டு, அறைக்கு வந்து அங்கேயும் குடித்து விட்டு காலை நான்கு மணி அளவில் படுத்தேன். 


சி.பி - கேப்டனையே மிஞ்சிடுவீங்க போல, உங்களுக்கு அரசியல்லயும் நல்ல எதிர்காலம் இருக்குங்க்ணா.. ஏன்னா குடியும் ,கூத்தியும் வெச்சிருக்கிறவங்க தான் அரசியல்ல ஷைன் பண்றாங்க.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf_XPAyv6WfA1kK9tYrOQVVCanCajiO06CIa_dH0SO0vpgsw3fzVud-11Y0ncbKZqhFFIlsVB40or0S3lUyNh4QTSiU11SGTxdWl1XVEFbKAsNelH1j2rxwW7DrbbX-mhmxdf81nktTv-M/s320/charu+zero3.JPG



 காலையில் ஏழு மணிக்கு எழுந்து எக்ஸைல் நாவலை கர்ம சிரத்தையாக எழுதிக் கொண்டிருந்தேன். 

சி.பி - காலங்காத்தால ஒரு வேலை இல்லாம ஒரு மொக்கை நாவல் எழுதும் ஹோமோ மன்னவனே.. என்ன நாவல்? அது என்ன நாவல்? ஓஹோஹோ.. 



  நண்பன் 12 மணிக்கு எழுந்து வாந்தி எடுத்தான். 

சி.பி - சரக்கு அடிச்சா வாந்திதான் எடுப்பான், பின்னே வாய்ல இருந்து லிங்கமா எடுப்பான்? அவன் என்ன நித்யானந்தாவா?



 நண்பனுக்கு வயது 28.  இதையும் எக்ஸைலில் எழுதி இருக்கிறேன்.  வாசகர் வட்டக் கூட்டங்களில் நான் நண்பர்களுடன் காலை நான்கு மணி வரை நடனம் ஆடுவது சர்வ சகஜம். 


 சி.பி - உங்களைப்போன்ற நல்ல மனிதர்கள் தான் எதிர்கால இந்தியாவை வழி நடத்தி செல்ல வேண்டும்.. உங்களின் 2 லட்சம் ரசிகர்களுக்கு என் வாழ்த்துகள்

 இதை விடுங்கள்.  பைபாஸ் ஸர்ஜரி என்னிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதற்காக அந்த மருத்துவமனை செய்த காரியம்.  வெறும் மருந்து மூலமாகவே குறைக்கக் கூடியதாகவே இருந்தது என்று அதற்குப் பின் பல மருத்துவர்கள் அபிப்பிராயப் பட்டனர். 



சி.பி - லேட் பிக்கப் லத்திகாண்ணே நீங்க.. நித்யானந்தாவை பற்றி   ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு சொன்னது இதே வாய் தான்.. அப்புறம் அபாயம் போகாதேன்னு லேட்டா சொல்லுச்சு.. ஏண்ணே.. இப்படி?

 தவிர, இதுவரை நான் அந்த வலி, இந்த வலி, ஜூரம் என்றெல்லாம் படுத்ததே இல்லை. 


 சி.பி - ஓஹோ , வலி வந்தா உக்காந்துக்குவீங்களா? சிட்டிங்க் ரைட்டர் கம் சீட்டிங்க் ரைட்டர்?


 கடந்த பத்து ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் படுத்திருக்கிறேன். 


 சி.பி - ஹி ஹி ஹி ஹி நாங்க நம்ப மாட்டோம்..

 நான் யாருக்கு ஃபோன் செய்தாலும் அவருக்கு உடல்நலம் இல்லை என்கிறார்கள்.  கடந்த பத்து ஆண்டுகளில் நான் ஒரே ஒருமுறை தான் சொல்லி இருக்கிறேன்.  இது என் நண்பர்களுக்குத் தெரியும்.  என்னிடம் பணம் இல்லை.  ஆனால் இந்த ஆரோக்கியத்தை வழங்கிய இறைவனுக்கு நன்றி.



சி.பி - ஹூம், ஆண்டவனை நினைச்சாத்தான் எனக்கு பாவமா இருக்கு, அவரும் தான் பாவம் எத்தனை பாவிங்களை கவனிப்பாரு?

ஆனால் இந்த ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி என்று நாளொரு தினமும் எழுதிக் கொண்டு வருகிறேன்.  எக்ஸைல் நாவலில் பல பக்கங்களில் இந்த விபரம் உண்டு.  இதை சிரத்தையாகப் பின்பற்றினால் நீங்களும் 90 வயதில் துள்ளிக் குதிக்கலாம்.  நம் சித்தர்கள் சொல்லிக் கொடுத்த அற்புதம் இது.


சி.பி - அட.. ஆமாம்.. நீங்க கூட சித்தர்கள் ராஜ்ஜியம் பிளாக்ல நிறைய  படிச்சேன்னு ரீல் விட்டீங்களே..?


என் உடம்பு ஒன்றும் இரும்பால் செய்தது அல்ல.  ஆனால் நான் பின்பற்றும் சில வழிமுறைகளால் அப்படி இரும்பாக்கி வைத்திருக்கிறேன். 


சி.பி - இரும்படிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை?உங்க உடம்பு இரும்புன்னா ஏண்ணே ஹாஸ்பிடல் எல்லாம் போறீங்க? ஹி ஹி  மெக்கானிக் ஷாப்ல போய் சர்வீஸ்க்கு விடலாமே?




 தினமும் காலையில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் 5 கி.மீ. தூரத்தை 35 இலிருந்து 40 நிமிட நேரத்தில் நடந்து முடிக்கிறேன்.  நான் குடி கூட இல்லாமல் வாழ்ந்து விடுவேன்.  ஆனால் காஃபிக்கு அப்படி ஒரு அடிமை. 


சி.பி - காஃபிக்கு நான் அடிமை.. கிடச்ச சூஃபிக்கு நான் அடிமை.. 



 காலையில் எழுந்ததும் ஃபில்டர் காப்பி குடித்தே ஆக வேண்டும். 

சி.பி - அண்ணே, நீங்க எந்தக்காலத்துல காலைல எந்திரிச்சிருக்கீங்க? மட்டையாகி விடிகாலைலதான் தூங்குவேன், மதியம் 12 மணீக்குதான் எந்திரிப்பேன்னு நீங்கதானே சொன்னீங்க?



 ஆனால் மூன்று ஆண்டுகளாக காலை காப்பியை விட்டு விட்டேன்.  அர்க் தான் குடிக்கிறேன்.  அர்க் என்பது பசு மாட்டின் மூத்திரத்தை distill செய்தது. 

சி.பி - இலக்கிய உலகின் ராஜாஜியே!! நீர் வாழி!

 https://www.nhm.in/img/978-81-8493-204-1_b.jpg

 தண்ணீர் கலக்காமல் குடித்தால் நாக்கு வெந்து விடும்.  நாற்றத்தில் குமட்டல் வந்து விடும்.  நாலரை மணிக்குக் குடிப்பேன்.  ஏழரைக்கு எழுந்து வரும் அவந்திகாவுக்கு அப்போதும் அறையில் பரவி இருக்கும் மூத்திர நாற்றம் குமட்டல் வருகிறது என்று சொன்னதால், எக்ஸாஸ்ட் ஃபேனைப் போட்டு விட்டுக் குடிக்கிறேன்.  அவந்திகாவிடமிருந்து பாராட்டு பெறுவது ரொம்பக் கஷ்டம்.  அதுவும் நான் என்றால் ரொம்ப ரொம்பக் கஷ்டம்.  அப்படிப்பட்ட அவளே ஒருநாள் நான் இரவில் அர்க் குடிப்பதைப் பார்த்து விட்டு “உன்னைப் போல் சகிப்புத் தன்மை கொண்டவர்களைப் பார்ப்பது கடினம்” என்றாள். 

சி.பி - உங்க நாவலை எல்லாம் ரெகுலரா படிக்கற உங்க வாசகர்கள் தான் சகிப்புத்தன்மை உள்ளவங்கன்னு நினைக்கறேன்.. 



 அர்க் குடித்த அன்று காக்டெய்ல் சாப்பிடுவதில்லை.  சாப்பிட்டால் அர்க் வேலை செய்யாது.

 சி.பி - ஓஹோ.. அர்க் ஜெர்க் ஆகிடுமா?

அது மட்டும் அல்ல; அர்க் குடித்தால் அதற்குப் பிறகு ஒரு மணி நேரத்துக்குத் தண்ணீர் கூட குடிக்கக் கூடாது.  அர்க் குடித்து விட்டு, நடக்கப் போய் விட்டால் அப்போது ஒரு தாகம் எடுக்கும் பாருங்கள்… கொடுமை.  எதற்கு இவ்வளவு பாடு?  உடம்பு இரும்பைப் போல் இருக்க வேண்டும்.  நோய் நொடி வரக் கூடாது.
இந்த அர்க் என்பது நான் செய்து வரும் ஹட யோகப் பயிற்சி முறைகளில் ஒன்றே ஒன்றுதான்.  இது போல் நூறு விஷயங்கள் இருக்கின்றன.

 சி.பி - நீங்க சொன்ன ஒரு மேட்டரே  வாசம் தூக்குது.. இதுல இன்னும் 100? அவ்வ்வ்



 இன்னொரு உதாரணம், பால் கலந்த எதையும் சாப்பிடுவதில்லை.   தேநீர் என்றால், ஊட்டியிலிருந்து வரவழைத்த white tea.  இது தேயிலைச் செடியின் மொக்குகளிலிருந்து தயாரிக்கப்படுவது.  இல்லை; சரியாகச் சொன்னால், ஒரு தேயிலைச் செடி வளர்ந்து முதல் மொக்கு விடும் நிலையிலேயே எடுத்து விடுவார்கள். 

 சி.பி - அண்ணன் தேயிலைல கூட ஃபிரெஸ் தான் கேட்பாரு போல..

  இப்படி எந்தக் காரியத்திலும் ஒரு ஹட யோகியாகவே வாழ வேண்டும்.  இதனால்தான் சில சாமியார்கள் ‘அந்த’ விஷயத்தில் பெரும் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  ஸர்ட்டிஃபிகேட் வயது எனக்கு 59-ஆக இருக்கலாம். 


 சி.பி - நீங்க அம்பத்தி ஒன்பதா?ஹி ஹி

 ஆனால் 25 வயது இளைஞன் கூட என்னோடு எந்த விஷயத்திலும் போட்டி போட முடியாது.  எந்த விஷயத்திலும் என்பதை அழுத்தியே சொல்கிறேன். 


சி.பி - நீங்க, வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ் ஜே சூர்யா எல்லாம் சாதாரணமா பேசுனாலே டபுள் மீனிங் தான்னு எங்களுக்குத்தெரியாதா? இடம் சுட்டி பொருள் விளக்கனுமா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO44puUY5_K2cQ-taCFAqTtzG984L5yakjlb0gdu-2DT_dW9VQiye_bCEXXLvTeSStIpnwcGfeJdckoPjVE5-FySCGa_lbOWeVb2Jg0rsTW687ycd_VdM_7Y96RVtGhk7idz1dU9l4UXk/s220/charu-blog-pic.tif
 nivedhidhaa chaterjii
 உங்கள் வயது எழுபதா?  நான் சொல்லும் டிப்ஸைக் குறித்துக் கொள்ளுங்கள்.  ஆறே மாதத்தில் 25 வயது இளைஞனாகி விடலாம்.  காலையில் இஞ்சி; மதியம் சுக்கு; இரவில் கடுக்காய்.  எப்படிச் சாப்பிட வேண்டும்?  கொஞ்சம் மரியாதையோடு கேட்டால்தான் சொல்லுவேன்.


கூட்டத்தை மதியம் இரண்டு மணிக்கு வைத்திருப்பதையும் விமர்சித்தார் ஞாநி.  எல்லோரும் உறங்கும் நேரத்தில் வைத்து விட்டதாகச் சொன்னார்.  மைக் முன்னால் பேசிக் கொண்டிருந்தவர் என் பக்கம் திரும்பி “நீங்களும் உறங்கும் நேரம் தானே இது?” என்று கேட்டார்.  நானும் தலையை ஆட்டி வைத்தேன்.  வேறு என்ன செய்வது?  நான் பகல் நேரத்தில் தூங்கியதே இல்லை.  இரவில் வெகு நேரம் கண் விழிப்பதும் இல்லை.  நாவல் எழுதிக் கொண்டிருந்தால் இந்த விதி பொருந்தாது.  இரவு பகல் எல்லா நேரமும் எழுத்துதான்.  இல்லாவிட்டால் எக்ஸைல் போன்ற ஒரு நாவலை ஐந்தாறு மாதத்தில் எழுதி முடிக்க முடியுமா?
மேலும், நான் எக்ஸைல் பற்றிப் பேசாமல் சக எழுத்தாளர்களைத் திட்டினேன் என்றார். 


 சி.பி - அது பொய்.. முதல்ல சுய புராணம், அப்புறமா தான் திட்டல் புராணம்.. நீங்க நெம்ப நெம்ப நல்லவர்ங்க்ணே

 இரண்டு மணி கூட்டத்துக்கு அவர் வரும் போது சுமார் நான்கு மணி இருக்கும்.  அதில் தவறு இல்லை.  கூட்டம் முடிவதற்குள் வந்து விட்டால் போதும்.  முன்னாலேயே வந்து உட்கார்ந்து இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் என் கூட்டத்தில் இல்லை.  அப்படிப்பட்ட சர்வாதிகாரப் போக்குகள் என் வாசகர் வட்டத்தில் கிடையாது.  ஆனால் இரண்டு மணியிலிருந்து ஒவ்வொரு நண்பரும் பேசிய பின் நானும் பேசினேன்.  அதைக் கேட்காமல் ஞாநி  எப்படிக் கருத்து சொல்ல முடியும்?  ஆனாலும் நான் எக்ஸைல் பற்றிப் பேசவில்லை.

சி.பி - நீங்க என்னைக்கு சப்ஜெக்ட் சம்பந்தமா பேசி இருக்கீங்க? 

  ஆனால் நான் ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறேன்.    காமராஜர் அரங்கில் வாசகர் வட்ட நண்பர்கள் எக்ஸைல் பற்றிப் பேச நேரம் இல்லாமல் போய் விட்டது.  அவர்கள் பேச வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.


சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  

சி.பி - அப்பா சாமி, முடியல.. அண்ணன் மெயின் மேட்டர்க்கு வர ரொம்ப நேரம் எடுத்துக்கறாரு.. 


ஒரு பத்திரிகையில் கட்டுரை வந்து விட்டது என்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? டூ மச் என்றார் நண்பர் ஒருவர்.  ”ஒரு” பத்திரிகையில் இல்லை என்பதுதான் விஷயம்.  சென்னை, கல்கத்தா, மும்பை, தில்லி மட்டும் அல்ல; லண்டன் வாசகர்களுக்கும் சுவாரசியமாக இருக்கும்படி எழுத வேண்டும்.  இது எப்படி என்றால், தமிழ் சினிமாவில் யாருமே வட இந்தியா பக்கம் செல்ல முடியவில்லை.  நடிகைகள் மட்டுமே விதி விலக்கு.  ரஜினி, கமல், இளையராஜா யாராலும் முடியவில்லை.  சிவாஜியால் கூட முடியவில்லை.  முதல் முதலாக அதை உடைத்தவர்கள் மணி ரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும்.  பிறகு ரஹ்மான் இந்திய எல்லையையும் தாண்டி ஹாலிவுட் சென்றார்; வென்றார்.  நான் ஏஷியன் ஏஜ் லண்டன் எடிஷனில் எழுதுவது ரஹ்மான் ஹாலிவுட் படத்துக்கு இசை அமைப்பதற்கு ஒப்பாகும்.  அதனால்தான் இறைவனுக்கு நன்றி சொன்னேன். 

 சி.பி - ஏஷியன் ஏஜ் லண்டன் பற்றி மக்கள்க்கு தெரிய வந்த ஒரே ஒரு பயன் தான் இந்த கட்டுரைல..

http://gracehopper.org.in/2011/files/2011/09/Srinivasan_Charu-185x300.jpg
 charu srinivasan
 அது சரி, ரஹ்மான் இறைவனுக்கு நன்றி சொன்னால் இனிக்கிறது; நான் சொன்னால் மட்டும் கசக்கிறதா?  இதில் அடங்கியுள்ள மர்மம் என்ன?  சொல்ல முடியும்…  சாதி, மதம் பேசுகிறேன் என்பார்கள் …


சி.பி - அண்ணே, இறைவனுக்கு நன்றி சொல்ல ஓரளவுக்காவது நல்லவரா இருக்கனும்ணே.. 


Love, in pixels -ஐ எழுதும் போது அது லண்டன் எடிஷனுக்கும் போகிறது என்று எனக்கு உறைக்கவில்லை.  பிறகுதான் ஞாபகம் வந்ததும் கலவரம் ஆகி விட்டது.  எனக்கு ஆங்கிலத்தில் எழுதும் columnists யாரையும் பிடிப்பதில்லை; வினோத் மேஹ்தாவும், குஷ்வந்த் சிங்கும் மட்டுமே விதி விலக்கு.  அவர்களை நான் தாண்ட வேண்டும்.  அதனால்தான் லோக்கல் இலக்கிய பாலிடிக்ஸ் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன்.  இறைவனின் அருளால் வினோத் மேஹ்தாவையும் சர்தாரையும் தாண்டிச் செல்வேன்.  வாசகர் வட்ட நண்பர்களின் அன்பு ஒன்று போதும்.  நேற்று போரூரிலிருந்து விரால் மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார் கணேஷ் அன்பு.  அவருடைய அன்பை நான் என்னவென்று சொல்வது?  இங்கே மைலாப்பூர், ஆர்.ஏ.புரம் ஏரியாவில் விரால் மீனே கிடைப்பதில்லை என்று ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தேன்.  அதனால்தான் போரூரிலிருந்து விரால்மீனைக் கொண்டு வந்து விட்டார்.  கணேஷ் அன்புவைப் போல் சுமார் 50 பேர் இருக்கிறார்கள்.  அவர்களின் அன்பும் இறைவனின் அருளும் என் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சக்தியை எனக்குக் கொடுக்கும்…


சி.பி - இதன் மூலம் அண்ணன் தெரிவிப்பது வாசகர்கள் எது கொடுத்தாலும் அண்ணன் ஓ சி யில் வாங்கிக்க தயரா இருக்கார் என்பதே.. ஹி ஹி 


18 comments:

சசிகுமார் said...

யாருப்பா அது இங்க என்ன ஒரே சத்தமா இருக்கு...

Yoga.S. said...

விரால் மீன் நாறிடாது?????

சண்டியர் said...

யூ மீன் போஸ்ட் ஒஹோ

Unknown said...

ஏன் பாஸ்? ஏன் இந்தக் கொலைவெறி? :-)

ராஜி said...

சசிகுமார் said...

யாருப்பா அது இங்க என்ன ஒரே சத்தமா இருக்கு..
>>>
சிபி சார் யார்கிட்டயோ பேசிக்கிட்டு இருக்கார் சசி

கேரளாக்காரன் said...

Ethirkatchikalin sadhi?

ராஜி said...

சசிகுமார் said...

யாருப்பா அது இங்க என்ன ஒரே சத்தமா இருக்கு..
>>>
ஒண்ணுமில்லை சசி சிபி சார் சும்மா யார்கிட்டயோ பேசிக்கிட்டு இருக்கார்

karthikeyan.kg. said...

நண்பன் வாந்தி எடுத்தான் .
எக்சைல் புக்க படிச்சுட்டா ??

karthikeyan.kg. said...

நண்பன் வாந்தி எடுத்தான் .
எக்சைல் புக்க படிச்சுட்டா ??

மகேந்திரன் said...

கல கல
கலாயப்புல
கலகலத்துப்போன
சாருநிவேதிதா..

R. Jagannathan said...

கொன்னுட்டீங்க! சாரு பேசுவதே காமடி, வரிக்கு வரி உங்கள் கலாய்ப்பு ஓஹோ! சிரித்துக் கொண்டே படித்தேன். - ஜெ.

Unknown said...

சார் யாருங்க அது சாரு..எனக்கு இலக்கியம் தெரியாது அதான் பிளீஸ்!

முத்தரசு said...

சாரு மோருன்னு......அட போங்கையா

Anonymous said...

கல கல கலாய்ப்பு

சென்னை பித்தன் said...

கலக்கல் கலாய்ப்பு!

Anonymous said...

குட் கொஸ்டின்ஸ்.... குட் ஆன்சர்ஸ்...

Unknown said...

@விக்கியுலகம்

தென்றல் நாடகத்தில வர்ற வில்லி மாமு! ஏங்கோ செரியா சொல்லிபுட்டங்களா?

தனிமரம் said...

சாருவை நல்லாத்தான் கலாய்த்து இருக்கின்றீங்க பாஸ்!