Thursday, February 02, 2012

ரஜினி முதல்வன்ல நடிச்சிருந்தா..? ஷங்கர் ஷாக் பேட்டி - காமெடி கும்மி

http://www.extramirchi.com/gallery/albums/south/shooting/Endhiran_location/normal_Shankar,_Rajini_and_Aishwarya_Rai_at_endhiran_the_robot_on_location.jpg

1 'முதல்வன்’ படத்தில் ரஜினி நடிக்க முடியாமல் போனபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?''


சி.பி - மாஸ் ஹீரோவை வளைச்சுப்போட்டிட்ருந்தா  மாளாத காசு பார்த்திருக்கலாம், ஒரு அள்ளு அள்ளிடலாம்னு நினைச்சிருப்பாரு.. ஜஸ்ட் மிஸ்.. வேற என்ன பெரிசா நினைக்கப்போறாரு?

 '' 'முதல்வன்’ கதை ரஜினி சாருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, 'இதை இப்போ செய்ய வேண்டாம். கொஞ்ச காலம் கழிச்சு செய்யலாம். அதுக்குள்ள நீங்க 'அழகிய குயிலே’ படத்தை எடுங்க’னு சொன்னார். எனக்குப் பெரிய ஏமாற்றம். நானும் 'அழகிய குயிலே’, வேற சில கதைகளை யோசிக்க ஆரம்பிச்சேன். ஆனா, எதுலயும் என் மனசு லயிக்கலை. பத்தாவது மாச கர்ப்பத்தைச் சுமக்கும் தாயைப் போல 'முதல்வன்’ கதையைச் சுமந்துட்டு இருந்தேன். அந்தக் குழந்தை யைப் பிரசவிக்காமல் இன்னொரு கருவைச் சுமக்க நினைக்கிறது சாத்தியம் இல்லாத காரியமா தோணுச்சு. அதான் உடனே அர்ஜுனை வெச்சு முதல்வனை முடிச்சேன்!''


சி.பி - சூப்பர் ஸ்டார் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் எப்போதும் சுணக்கம் காட்டுபவரே.. கலைஞர்-ஜெ இருவரிடமும் இணக்கமா இருக்கனும்னு நினைக்கறாரு.. இந்தக்காலத்துல எல்லார்ட்டயும் நல்ல பேர் எடுக்கனும்கறதுக்காக தன்னோட சுய அடையாளத்தை தொலைச்சவங்க நிறைய பேரு, அதுல ரஜினியும் ஒருத்தர்..


'2. 'உங்கள் முதல் கதை 'அழகிய குயிலே’ இன்னும் தயாரிக்கப்படாமலேயே இருக்குனு ஒரு பேட்டியில் சொல்லி இருந்தீங்க. அதை நீங்க நினைச்சா இப்போ தயாரிச்சு இயக்கலாமே... தயக்கம் என்ன?''



சி.பி -  அவரையும் அறியாம பிரம்மாண்டம்கற லேபிள் ஒட்டிக்கிச்சு, வெளீல வர முடியல..  அவருக்குள்ள இருக்கற அந்த அழகியல் ரசனை கலையை  பிரம்மனால் வெளீல கொண்டு வர முடியாமயே போச்சு..

 '' 'அழகிய குயிலே’வை 'ஜென்டில்மேன்’ முடிச்சு ரெண்டாவதா செய்யலாம்னு கே.டி.குஞ்சுமோன் சொல்லியிருந்தார். அப்புறம், 'காதலன்’ முடிச்சுட்டு செய்யலாம்னு தலைப்பைக்கூட ரெஜிஸ்டர் செஞ்சார். ஆனா, அப்போ சந்தர்ப்பம் அமையலை. என் முதல் இரண்டு படங்களின் பரம ரசிகரான தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னமும் லஞ்சத்துக்கு எதிரான 'இந்தியன்’ படத்தை நான் இயக்குவதையே விரும்பினார். சரி, 'ஜீன்ஸ்’ முடிச்சுட்டு சொந்தத் தயாரிப்பில் 'அழகிய குயிலே’வை இயக்கலாம்னு நினைச்சேன். 
எழுத்தாளர் சுஜாதாகிட்ட இதைப் பத்திப் பேசினப்ப, 'நீங்க குயிலை எல்லாம் கடந்துவந்துட்டீங்க... இந்த வயசுல பெரிய பெரிய விஷயங் களை எல்லாம் படம் பண்ணக்கூடிய சாத்தியம் இருக்கும்போது, 'அழகிய குயிலே’வை ஆற அமரச் செய்துக்கலாம்’னார். என்னோட நண்பர்கள், நலம்விரும்பிகள் எல்லாரும்கூட, 'பாறையைத் தூக்க முடியும்போது, ஏன் முட்டையைத் தூக்கணும்’னு சொன்னாங்க. இன்னும் நான் ஆறவும் இல்லை... அமரவும் இல்லைனு நினைக்கிறேன்!''


சி.பி -  பாறையையே தூக்குன நீங்க இப்போ முட்டையை தூக்குனா என்ன? அட்லீஸ்ட் உங்க அசிஸ்டெண்ட்ஸை வெச்சாவது தூக்கலாமே? நோ டைரக்‌ஷன், ஒன்லி புரொடக்‌ஷன்கற ஃபார்முலாவுல வசந்த பாலனை வெச்சு அந்த படத்தை எடுங்களேன்..


http://tamilmovienews.in/wp-content/uploads/2011/12/shankar-vijay-nanban.jpg
3. ''மிகவும் நல்ல படங்களை 'எஸ் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் வழங்கினீர்கள்... இடையில் ஏன் இடைவெளி? மீண்டும் சொந்தத் தயாரிப்பில் ஈடுபடுவீர்களா?''


சி.பி -  நல்ல படம் எடுத்தா நல்ல பேரு கிடைக்கும் , சோறு கிடைக்குமா?



''நல்ல படங்கள் எடுக்கணும்கிற என் எண்ணத்துக்குப் பல சோதனைகள். ஒருபக்கம் நான் இயக்கும் படங்கள் என் நேரத்தையும் சக்தியையும் முழுமையா எடுத்துக்கிச்சு. இன்னொரு பக்கம் வியாபாரமும் போட்டியும் நிறைஞ்ச இந்த சினிமா உலகத்துல இத்தனை வருஷ அனுபவம் இருந்தும் கடந்த மூணு வருஷமா நான் திக்கித் திண்டாடினேன் என்பதுதான் கசப்பான உண்மை. கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் நஷ்டம்!


ஒருகட்டத்தில், இனி படங்களே தயாரிக் கக் கூடாதுங்கிற முடிவுக்கே நான் வந்துட் டேன். 'காதல்’, 'புலிகேசி’, 'வெயில்’மாதிரி யான நல்ல படங்களைத் தயாரிச்சு நான் சம்பாதிச்சதைவிட, இழந்ததே அதிகம். இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா பிரச்னைகள்ல இருந்து விடுபட்டுக்கிட்டு இருக்கேன். 'என்ன ஆனாலும் சரி... நல்ல படங்கள் எடுக்கணும்’கிற ஆசை இன்னும் என்னைவிட்டு ஒரேயடியாப் போகலை. மறுபடியும் கதைகள் கேட்க ஆரம்பிச்சு இருக்கேன். நல்ல கதைக்காக நானும் ரசனையான

தயாரிப்பாளருக்காக எங்கேயோ நல்ல கதைகளும் காத்துட்டு இருக்கோம். சரியா கமிட் ஆகிடுச்சுன்னா, அதிரடியை ஆரம்பிச்சுட வேண்டியதுதான்!''




சி.பி - வெயில் லாஸ் ஆச்சுன்னு சொல்லுங்க ஒத்துக்கலாம், ஆனா கொஞ்சம் கூட செலவே பண்ணாத காதல் படம் எப்படி லாஸ் ஆகும், செமயா ஓடுச்சே, இம்சை அரசன் 23ம் புலிகேசி ஏ , பி சி என 3 செண்ட்டர்லயும் ஓடுச்சே?இன்கம்டேக்ஸ் காரன் கிட்டே சொல்ற புலம்பல் கணக்கை நம்ம கிட்டேயும் சொன்னா எப்படி சார்? 




4. ''சங்கர் ஏன் ஷங்கர் ஆனார்?''


சி.பி -  எல்லாம் நியூமராலஜி தான், அது கோடம்பாக்கத்தை பிடித்த சாபக்கேடு.. டி ராஜேந்தர் விஜய டி ஆர் ஆனதும் சிம்பு எஸ் டி ஆர் ஆனதும்,  S V சேகர்  S Ve சேகர் ஆனதும் இந்த செண்ட்டிமெண்ட்லதான்..


 ''நான் 'சங்கர்’ ஆக இருக்கும்போது ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வருவாங்க. கிராமத்துல இருந்துலாம் வருவாங்க. எல்லாரும் என்னை 'ச்சங்கர்... ஸங்கர்’னு கூப்பிடுவாங்க. இன்னும் சிலரோ ஒரு படி மேல போய் 'ஸங்கரு... ஸங்கரு தம்பி’னு பாசமாக் கூப்பிடுவாங்க. 'சங்கர்’ல வர்ற 'ச’வை 'sa’-ன்னோ, 'cha’-ன்னோதான் உச்சரிக்க முடியுது. 'ஷங்கர்’ல இருக்குற 'ஷ’ உச்சரிப்பு வரணும்னும், 'என்னைக் கொஞ்சம் கவனிங்க (!)’ன்னும் அசோசியேட் டைரக்டரானதும் டைட்டில் கார்டுல 'ஷங்க்கர்’னு போட்டுக்கிட்டேன். 'ஓ... ரொம்ப ஓவரா அழுத்திட்டமோ’னு அடுத்த படத்துல 'க்’கை கட் பண்ணிட்டு 'ஷங்கர்’னு போட்டேன்.


'ச’வை 'ஷ’னு மாத்தினதுக்கே நீங்க இந்தக் கேள்வி கேட்கிறீங்க. இது சின்ன மாற்றம். நான் பரவாயில்லைனு சொல்ற மாதிரி, என் அசிஸ்டென்ட் ஒருத்தன் வந்துட்டு இருக்கான். பேரு 'அட்லீ’ (ஒரிஜினல் பேரு அருண்குமார்). நல்ல்ல்லாக் கவனிங்ங்ங்க!''


சி.பி -  தன்னை மற்றவங்க கிட்டே இருந்து தனித்து காட்டனும் சம் திங்க் டிஃப்ரண்ட் ஃப்ரம் அதர்ஸ்னு சொல்ல வைக்கனும்னு மனிதர்கள் படும் பாடு இருக்கே..




5. ''தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் பிரச்னைகளுக்கு, திரையுலகத்தினர் சார்பா கப் போராட்டம் நடக்கும்போது நீங்கள் அதில் முனைப்புடன் கலந்துகொள்வது இல்லையே... ஏன்?''



சி.பி -  ஒரு நல்ல படைப்பாளி போராளி ஆகனுமா?ன்னு அண்ணன் யோசிச்சிருப்பாரு..


 ''காவிரிப் பிரச்னைக்காகத் திரையுலகமே நெய்வேலியில் திரண்டபோதுகூட நானும் கலந்துக்கிட்டேனே? மேடைல பேசறப்ப, 'தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தா, இந்த தேசமே திரும்பிப் பார்க்கும். பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்க வாய்ப்பு இருக்கு’னும் சொல்லி இருந்தேன்.


அந்தக் காட்சியை அப்படியே கொஞ்சம் விஷ§வலா யோசிச்சுப் பாருங்களேன்... ஒவ்வொரு வீடு முன்னாடியும் அந்தந்தக் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருக்காங்க. கேமரா ஒரு வீட்டு வாசல்ல இருந்து ஜூம் பேக் ஆகி, தெரு மொத்தத்தையும் காமிக்குது. அப்படியே கேமரா இன்னும் மேல போய் ஹெலிகாப்டர் ஷாட்ல அந்த ஏரியா முழுசையும் காட்டுது... இன்னும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்ல மேல போய், மொத்தத் தமிழ்நாட்டையும் காண்பிக்கும்போது எப்படி இருக்... டைரக்டர்ர்ர்ர்ர்...கட்!''


சி.பி - கேட்ட கேள்வி என்ன அண்ணன் சொல்ற பதில் என்ன? நல்லா நழுவறாங்கப்பா.. அண்ணன் மீன ராசின்னு நினைக்கறேன்..



6. ''உங்களுக்குப் பிடித்த தமிழ் இயக்குநர் யார்... ஏன்?''

 ''இயக்குநர் மகேந்திரன்!
உலக சினிமாக்கள் பரிச்சயமாகாத அந்தக் காலகட்டத்திலேயே யதார்த்தமாகவும் மெல்லிய உணர்வுகளால் மனதை வருடுவதாகவும் வந்த 'உதிரிப் பூக்கள்’, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’, 'முள்ளும் மலரும்’ போன்ற படங்களின் தரத்தை நினைச்சுப் பாருங்க. சான்ஸே இல்லை!


எனக்கு அவருடைய படங்கள் எல்லாமே ரொம்பப் பிடிக்கும். 'சினிமா இயக்குநர் ஆகணும்... இதுமாதிரி  படங்களை இயக்கணும்’னு மனசுக்குள் ஒரு விதை விழுவதற்குத் தூண்டுகோலா இருந்தவர் இயக்குநர் மகேந்திரன்.


இப்போதைய இயக்குநர்கள்னு யோசிச்சா... பல நல்ல இயக்குநர்களில் எனக்கு வசந்தபாலனைப் பிடிக்கும். தனக்குனு ஒரு தனி ரூட் பிடிச்சுக்கிட்டு 'வெயில்’, 'அங்காடித் தெரு’, 'அரவான்’னு ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமான படங்களா, உலக சினிமா வரிசையில் இடம்பெறக் கூடிய அற்புதமான படங்களாக் கொடுத்துட்டு இருக்கார்!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgNEMJ2IWWb9f7akwSm3sHyUtiygf6Lxiwh5QpWZ9OgdfNaiD3yZnVCqsA8Xpip7H82dNGL6HphM82S71Yub3ZV6uDzixd0sqFARGbSzHOAnv1r_mzVMFJDbF5QLNg2NFgx5f2_7JoKrg/


7. ''உங்களுடைய பெரும்பாலான படங்கள், தனி மனித சாகசங்கள் மூலம் சமூக மாற்றம் சாத்தியம் என்பதுபோல காட்டுகின்றன. நடைமுறையில் இது எந்த அளவுக்குச் சாத்தியம்?''


 ''அண்ணா ஹஜாரே ஒரு 'இந்தியன் தாத்தா’னு விகடனும் மற்ற ஊடகங்களும் குறிப்பிட்டு இருந்தது, ஒரு ஃபிலிம் மேக்கரா எனக்கு அன்லிமிடெட் சந்தோஷம் கொடுத்துச்சு! எந்த ஒரு சமூக மாற்றமும் ஒரு தனி மனிதனின் சிந்தனையில் இருந்துதான் பிறக்குது. ஒவ்வொருவருடைய சிந்தனையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும் அதற்கு எடுத்துக்கொண்ட காலமும் வெவ்வேறு அளவுகள்ல இருக்கும். ரெண்டரை மணி நேர சினிமாவில் அதைக் கொஞ்சம் பெரிசாக் காட்ட வேண்டியிருக்கு. அவ்வளவுதான்!''


சி.பி - ஹீரோ ஒர்ஷிப் தமிழனை மழுங்கடிக்கும் கலாச்சாரம்


அடுத்த வாரம்
 
''மாட்டிக்கிட்டீங்களா... உங்கள் ஹீரோக்களில் 'தி பெஸ்ட்யார்? ஹீரோயின்களில் 'தி பெஸ்ட்யார்? நழுவாதீர்கள்... நச்செனப் பதில் சொல்லுங்கள்?''


''மாஸ் ஹீரோ, புதிதாக வந்த கிளாமர் ஹீரோயின், மிகப் பெரிய பட்ஜெட், சமூக அக்கறை என்ற கோட்டிங் தடவிய மசாலா கதை, பரவலாக பாமரனுக்குத் தெரியாத சில விநோத விஷயங்கள், சில மாடர்ன் டிஜிட்டல் பாடல், ஒரு டண்டணக்க தெலுங்கு பீட் பாடல், பத்திரிகை, டி.வி. விமர்சனங்கள் வெளிவரும் முன்னரே 'கார்பெட் பாம்பிங்முறையில் ஏகப்பட்ட பிரின்ட் போட்டு, முதல் சில நாட்களிலேயே பணத்தை அள்ளும் உத்தி... இதுதானே 'ஷங்கர் ஃபார்முலா’? விடையாக... 'நண்பன் ரீ-மேக்என்று சொல்லக் கூடாது... சென்சிபிள் பதில் தேவை ஷங்கர்ஜி!


''மணிரத்னமே கைவிட்ட 'பொன்னியின் செல்வன்புராஜெக்ட்டை பிரமாண்டமாகவும், நேர்த்தியாகவும், ஆத்தென்டிக்காகவும் எடுக்கக் கூடியவர் நீங்கள் மட்டுமே என்பது என் எண்ணம்... அப்படி ஒரு 'மேக்னம் ஓப்பஸ்எடுக்கத் துணிச்சல் இருக்கிறதா?''

தொடரும்

11 comments:

sutha said...

நன்று .........

Unknown said...

முதல்-வன்...!!!!!

Unknown said...

முதல்-வன்...!!!!!

Jaganathan Kandasamy said...

creativity power of infinite equals to cibi

Unknown said...

சார் வணக்கமுங்க!

RAMA RAVI (RAMVI) said...

நன்றாக இருக்கு.

//ஹீரோ ஒர்ஷிப் தமிழனை மழுங்கடிக்கும் கலாச்சாரம்//

நல்ல கருத்து.

Marc said...

அருமையான சுவாரசியமான பதிவு

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!அந்த அசிஸ்டெண்டு(அருண்குமார்)நல்ல வேலை அட்லீஸ்ட்(Atleast) அப்புடீன்னு பேர் வைக்கல!

Yoga.S. said...

Yoga.S.FR said...

சி.பி.செந்தில்குமார் said...
@ vikki
haa haa haa periya thangka malai rakasiyam ///தங்கமலை ரகசியம் இல்ல,சென்னிமல ரகசியம்,ஹ!ஹ!ஹா!!!!!!!!

தமிழ் பையன் said...

நன்றி: விகடன்

Rafeek said...

சில நேரங்களில் அவசர குடுக்கைதனமாக.. பொருளை அவதானிக்காமல் காமெடி கும்மி என்ற பெயரில் நீங்க போடும் அறுவை தாங்க முடியவில்லை.