Showing posts with label SHANKAR. Show all posts
Showing posts with label SHANKAR. Show all posts

Thursday, January 03, 2013

ஷங்கரின் ஐ பட காமெடி டிராக்கில் நான் - பவர் ஸ்டார் பட்டாசு பேட்டி

http://tamil.oneindia.in/img/2012/06/01-powerstar-srini-300.jpg 
"கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் அண்ணேன்டா!"

க.ராஜீவ்காந்தி
படங்கள் : ஜெ.தான்யராஜு
ப்பாடா... உலகம் அழியலையே!’ எனப் பெருமூச்சு விடுபவர்களுக்கு... ''அப்படி எல்லாம் உங்களை ரிலாக்ஸ் ஆக விட மாட்டேன்ல!'' என்று துள்ளித் தொடை தட்டி வருகிறார் உங்கள் 'பவர் ஸ்டார்’ கம் அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன். ஜெயலலிதா, ரஜினி, கமல், ஷங்கர், சிம்பு, சந்தானம் என்று நான் கேட்ட கேள்விகளும் சரி, அதற்கு பவர் ஸ்டார் அளித்த பதில்களும் சரி... செம சீரியஸ்தான். ஆனால், அதைப் பேட்டியாகப் படிக்கும்போது, 'இது ஜாலி பேட்டிதானே’ என்று எழும் எண்ணத்தைத் தவிர்க்க முடிகிறதா... பாருங்கள்


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/04/Anandha-Thollai-21-10-2010-0000.jpg



காலர் டியூனா 'அம்மா என்றழைக்காத’ பாட்டு வெச்சிருக்கீங்களே... வழக்குகள்ல இருந்து தப்பிக்கத்தானே?'' 


'எனக்கு அம்மான்னா ரொம்பப் பிடிக்கும். என் சொந்த அம்மா மட்டும் இல்ல... 'அம்மா’வும்தான். அவங்களுக்காகத்தான் இந்தப் பாட்டு வெச்சிருக்கேன். இன்னொண்ணு... தாயில்லாமல் நானில்லை!''



''ஆக்ச்சுவலா உங்க வயசு என்ன?''



''என் அருமைத் தம்பி சிம்புவைவிட 10 வயசு... கம்மி!''


''சார், சிம்பு கோச்சுக்கப் போறாரு?''



''அட... நீங்க வேற! என்னைப் பார்த்தாலே அவர் சிரிச்சுடுறாரு! 'எத்தனையோ பேரைச் சிரிக்கவெச்சிருக்கேன். என்னையே சிரிக்கவெச்சது நீங்கதான்’னு என்கிட்டயே சொல்லிஇருக்காப்ல. நம்ம மேல அவருக்கு ரொம்ப மரியாதை!''



''ஸோலோ ஹீரோவா பட்டையக் கிளப்பிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் மூணு ஹீரோ சப்ஜெக்ட்ல நடிச்சு உங்க பேரைக் கெடுத்துக்குறீங்க?''



''என்ன தம்பி இப்படிக் கேட்டுட்டீங்க... சந்தானம் தம்பிகூட நடிக்கிறதெல்லாம் எவ்ளோ பெரிய வாய்ப்பு. இருந்தாலும், உங்களை மாதிரி தீவிரமான ரசிகர்களுக்காக(!) சோலோவாகவும் நடிப்பேன். அப்பப்போ காம்பினேஷன்லயும் நடிப்பேன்!''



''சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்ல உங்களைக் கண்டபடி கலாய்ச்சுட்டே இருந்தாராமே?''



''சந்தானம்கூட எனக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா வந்திருக்கு. எனக்கு ஒரு தம்பி இல்லையேங்கிற ஏக்கத்தைப் பூர்த்தி செஞ்சுட்டாரு சந்தானம் தம்பி. அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, அந்தத் தம்பியே எனக்குத் தம்பியாப் பொறக்கணும்!''



''நடிக்கிறதுக்கு ஹோம்வொர்க் பண்ணுவாங்களே... நீங்க எந்தப் படத்தைப் பார்த்து உற்சாகப்படுத்திக்குவீங்க?''


'' 'பாட்ஷா’தான். அந்தப் படத்தை 30 தடவை பார்த்துட்டுதான் நடிக்கணும்கிற வெறி எனக்குள்ள வந்துச்சு!''


''உங்க ரசிகர்கள் பற்றி..?''


''என்னை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்கள்பத்தி நினைச்சாலே, எனக்குக் கண்ணீர் வந்துடும். 'உயிரை விடு’னு சொன்னா, விடுற அளவுக்கு எனக்கு ரசிகர்கள் இருக்காங்க. இவங்கள்லாம் எனக்கு எப்படிக் கிடைச்சாங்கன்னு இப்ப வரை தெரியலை. எல்லாமே பாபா வோட அருள்!''



'' 'ஐ’ படத்துல ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கிற விக்ரமுக்கு நீங்கதான் கோச்சாமே... உண்மையா?''



''ஷ்...ஷ்ஷ்... அப்படிலாம் இல்லை. இந்தப் படத்துலயும் சந்தானம்தான் எனக்கு பார்ட்னர். படம் ஃபுல்லா வருவோம். காமெடி பண்ணுவோம். கதையை வெளியே சொல்லக் கூடாதுனு ஷங்கர் சார் கண்டிச்சுச் சொல்லியிருக்காரு. அதனால கதை வேண்டாம்!''



''உங்க பாடிகார்டு எத்தனை பேர்? அவங்களுக்கு எவ்ளோ சம்பளம் தர்றீங்க?''


''எல்லாருமே பிரியப்பட்டு, 'அண்ணன்’கிற அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்காங்க. யாரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இல்லை.''



''2013-ல தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பரிசு கொடுக்கப்போறீங்க?''  



''நான் நடிச்ச நிறையப் படங்கள் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு. ஆனா, சந்தானம் தம்பி கேட்டுக் கிட்டதால நிறுத்திவெச்சிருக்கேன். சீக்கிரமே 'மன்னவன்’, 'தேசிய நெடுஞ்சாலை’, 'சீனு எம்.ஏ.பி.எல்’னு வரிசையா படங்கள் வெளிவரும்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbmzmXqjqHN4NBDi1IsW3HRA_7Elk4G50tADDzP0QtnlpEkTPm3BdHti9HTYv0T4GzrS3YynWj5YJ8ZyA5XHPaAcB16eWiiW1SEHYDBVKGK5qUtf44wT01lva1QNc3yc8h0W1peU9d9Q4/s1600/Meenakshi-srinivasan-Hot-In-Lathika-Movie-Stills.jpg


''விக் இல்லாமலேயே அழகாத்தானே இருக்கீங்க... அப்புறம் எதுக்கு டோப்பா எல்லாம்?''



''ஹலோ தம்பி... இது நேச்சுரல் முடி. நம்புங்க! நான் சில படங்களுக்காக, அந்த கேரக்டர் கேட்டுக் கிட்டதால மொட்டை அடிச்சதைப் பார்த்து எனக்கு சொட்டைத் தலைனு நினைச்சுட்டாங்க. ஆனா, இதுதான் ரியல்!''



''நீங்க ரஜினியை ஃபாலோ பண்றீங்கன்னு பார்த்தா, திடீர்னு 'விஸ்வரூபம்’ கமல் மாதிரி ஸ்டெப்ஸ் போடுறீங்களே?''


''உலக நாயகனோட யாரும் போட்டி போட முடியாது. அவர் வேற பாணி. இது பவர் பாணி!''



''நீங்க நடிக்கிற படத்துக்குனு பஞ்ச் டயலாக் யோசிச்சு வெச்சிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் சொல்லுங்க?''


''ம்ம்ம்... சூப்பர் ஸ்டாருக்குப் போட்டின்னா... அது பவர் ஸ்டார்தான்!''



''ஓ... அப்போ ரஜினி மட்டும்தான் உங்களுக்குப் போட்டியா இங்கே?''


''ஆங்... ஆமாதானே... இல்லையா? அவர்கூட போட்டி இருக்கு. ஆனா, பொறாமை கிடையாது. இதை அவரோட தீவிர ரசிகனா சொல்றேன்!''


''நீங்க நல்லவரா... கெட்டவரா?''


''அது எனக்கே தெரியலையே!'' 


நன்றி - விகடன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqqGnrsG6K2LpReTmUDWKNu7Y5pgD24S81uNtZ6FlsnNP0HC34K4mgVsd0U4ASM3NAY1_XMbYU7d2TpRdIfqDOAyQkqUgaxJbO_nJH4eTsdNmyX1EHlwZEUr5X1DiBBWctpC2R1vCwBZM/s1600/power.jpg

Monday, August 20, 2012

Bicentennial Man (1999) -ஷங்கர்-ன் எந்திரன் -ன் மூலம்- ஒரு பார்வை

http://ecx.images-amazon.com/images/I/51PBTXBTSFL._SL500_AA300_.jpg

ரோபோ, ஒரு பெண்ணை உருகி உருகிக் காதலித்தால்? பஸ்களைக் கவிழ்த்து அட்டகாசம் செய்யாமல் உணர்ச்சிகளால் நிரம்பிய சாந்தமான மனிதனாக வாழ்ந்தால்? அப்படியொரு ரோபோ படம் 1999-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது! க்ரிஸ் கொலம்பஸ் இயக்கியிருந்த அந்தப் படத்தின் பெயர் Bicentennial Man.



தமது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக ‘ஆண்ட்ரு’ என்கிற ரோபோவை வாங்கி வருகிறார் மார்ட்டின். சுட்டியாகவும் அறிவாளியாகவும் இருக்கும் ஆண்ட்ருவை, மார்ட்டினின் மூத்த மகளுக்குப் பிடிப்பதில்லை. குழந்தைகளுக்கே உரிய வெறுப்பின் காரணமாக ரோபோவை வீட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறாள். ஆனால், முயற்சிகள் தோல்வியடைகின்றன. வெறுப்பின் உச்சகட்டமாக வீட்டு மாடியில் இருந்து குதிக்கும்படி ரோபோவுக்கு உத்தரவிடுகிறாள். ஆண்ட்ரு, எஜமானியின் உத்தரவுக்குக் கட்டுப்படுகிறது. ஆண்ட்ருவின் பெரும்பகுதிகள் நொறுங்கிப் போகின்றன.



கோபமடையும் மார்ட்டின், ரோபோவை நமது குடும்ப உறுப்பினரைப் போலவே நடத்த வேண்டும் என மகள்களிடம் கண்டிப்புடன் உத்தரவிடுகிறார். ‘ரிப்பேர்’ செய்யப்பட்டு வீடு திரும்பும் ஆண்ட்ரு அந்த வீட்டின் ஒரு செல்லப்பிராணி ஆகிறது. ஒரு கட்டத்தில் இன்னொரு உறுப்பினராகவே மாறுகிறது. தவிர, மகள்களின் உற்ற தோழனாகவும் மாறிவிடுகிறது.


http://images5.fanpop.com/image/photos/25300000/Bicentennial-Man-robin-williams-25340319-2126-1433.jpg

ஒரு நாள் மார்ட்டினின் இளைய மகள் ‘லிட்டில் மிஸ்’ஸின் கைவினைப்பொருள் ஒன்றை உடைத்துவிடும் ஆண்ட்ரு, அதே போன்ற பொம்மையை, தத்ரூபமாக வடிவமைக்கிறது. ஆண்ட்ரு, சுயமாகச் சிந்திப்பதையும் அதன் க்ரியேட்டிவிட்டியையும் அறிந்துகொண்ட மார்ட்டின் ரோபோ தயாரிப்பாளர்களிடம் கொண்டு செல்கிறார். மற்ற ரோபோக்களும் ஆண்ட்ருவைப் போலத்தானா என்பதை அறிந்து கொள்வதுதான் அவரின் நோக்கம். ஆனால் ஆண்ட்ரு சிந்திப்பதை அறியும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ரோபோ சுயமாக சிந்திக்கத் தொடங்கினால் எதிர்காலத்தில் விளைவுகள் விபரீதமாகிவிடும். எனவே, ஆண்ட்ருவை அழித்துவிடுவதுதான் நல்லது என்று வாதிடுகிறார்.





ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மார்ட்டின் அதைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அதோடு நில்லாமல் மனித உணர்ச்சிகளைப் பற்றிய பாடத்தை நடத்துகிறார். ஆண்ட்ரு, உணர்வுகளால் நிறைந்த மனிதனாக மாறுகிறது. மார்ட்டினிடம் இருந்து கற்றுக் கொண்ட மர வேலைகளின் மூலமாக ஆண்ட்ரு சுயமாகச் சம்பாதிக்கிறது. வங்கிக் கணக்கு தேவைப்படும் அளவுக்குக் கொட்டுகிறது வருமானம். இந்நிலையில் தமக்கு உத்தரவிடும் எஜமானர்களிடம் இருந்து விடுதலை தேவை என்பதை விரும்பும் ஆண்ட்ரு, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு மார்ட்டினிடம் அனுமதி கோருகிறது. மார்ட்டின் வேதனையுடன் அனுமதியளிக்கிறார்.



தம்மைப் போலவே வேறு ஏதேனும் ரோபோக்கள் இருக்கின்றனவா என்பதைத் தேடி அலையும் ஆண்ட்ரு, கெலேட்டி என்னும் ஒரு பெண் ரோபோவை கண்டுபிடிக்கிறது. ஆனால் அந்த ரோபோவுக்கு ஆண்ட்ருவைப் போல திறமைகள் இல்லை. கெலேட்டியை டெவலப் செய்வதற்கு அதன் உரிமையாளருக்கு ஆண்ட்ரு நிதியுதவி செய்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மார்ட்டினின் இளையமகள் ‘லிட்டில் மிஸ்’ மரணப்படுக் கையில் இருக்கும்போது அவளைக் காண வருகிறது ஆண்ட்ரு.



அவளுக்காக, சிறு வயதில் ஆண்ட்ரு செய்து கொடுத்த பொம்மை அங்கே இருப்பதை மிகுந்த காதலுடன் பார்க்கிறது. அப்போது லிட்டில் மிஸ் கண்ணை மூடுகிறாள். இந்தச் சமயத்தில் ‘லிட்டில் மிஸ்’ஸின் பேத்தி போர்ஷியா ஆண்ட்ருவுக்கு அறிமுகமாகிறாள். அச்சு அசலாக தன் பாட்டியைப் போலவே இருக்கும் அவளிடம் ஆண்ட்ருவுக்குக் காதல் பூக்கிறது. போர்ஷியா மிகுந்த குழப்பமடைகிறாள். ஆனால் அவளின் இதயத்தை தமது காதல் மிகுந்த சொற்களால் வென்றெடுக்கிறது ஆண்ட்ரு. போர்ஷியாவும் ஆண்ட்ருவை காதலிக்கிறாள்.



அவர்களின் காதலை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தம்மை மனிதனாக அறிவிக்கும்படி உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறது ஆண்ட்ரு ரோபோ. ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு ஆண்ட்ருவுக்குச் செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டு முழு மனிதனாகிறது. பிறகு ஆண்ட்ரு மூப்படையத் தொடங்குகிறார். தமக்கும் மூப்பும் மரணமும் வரும் என்று மீண்டும் உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறார் ஆண்ட்ரு. மனித வாழ்வின் அத்தனை சிக்கல்களையும் சந்தித்துவிட்டு மரணத்தை எதிர்நோக்கும் போது ரோபோவை மனிதனாக ஏற்பதாக உலக அறிவியல் கழகம் அறிவிக்கிறது. இந்த அறிவிப்பைப் பார்த்தபடி ஆண்ட்ரு மரணிக்கிறார்; போர்ஷியாவும் ஆண்ட்ருவுடன் இறந்து போவதாக இந்தக் காதல்காவியம் முடிவடைகிறது.

http://movie2s.com/aimages/BicentennialMan.jpg



ஐசக் அஸிமவ்வின் நாவலைத் தழுவிய இந்தப் படம் ‘ரோபோ என்பது வெறும் இயந்திரம்’ என்ற பொதுவான கருத்தை அடித்து நொறுக்கியது. ஆசை, காதல், கோபம்... என அத்தனை மனித உணர்ச்சிகளையும் தமக்குள் அடக்கி வைத்திருக்கும் இன்னொரு உயிர்தான் ரோபோ என்று சினிமாவின் சாத்தியங்களைப் பயன்படுத்தி க்ளாஸிக்காக வெளிப்படுத்தியது. இந்தப் படத்தின் தழுவல்தான் ரஜினியின் ‘எந்திரன்’ என்ற பேச்சுக்கூடக் கிளம்பியது. அது இருக்கட்டும். இந்தப் படத்தின் கதை உண்மையாக நடப்பதற்கான வாய்ப்பிருக்கிறதா? நடந்துவிடக்கூடும். அறிவியலில் எதுவுமே சாத்தியம்தான். சாத்தியமாக்குவதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. அவ்வளவுதான்.



ரோபோ டான்ஸர்!


ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சில செய்தி சேனல்களில் சீனாவில் ஃப்யுஜின் என்ற இடத்தில் நடைபெற்ற ரோபோவின் நடன நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். ஸோலோ, க்ரூப் டான்ஸ் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள் ரோபோ டான்ஸர்கள். இதை எப்படி வடிவமைத்திருப்பார்கள்?



முதல் ரோபோ வலது கையை உயர்த்தும்போது மற்ற ரோபோக்களும் வலது கையை உயர்த்தினால்தான் அது க்ரூப் டான்ஸ். இல்லையேல் அது டுமீல் டான்ஸ். முதல் ரோபோ வலது கையை உயர்த்தப் போகிறதா அல்லது தலையை அசைக்கப் போகிறதா என்பதை மற்ற ரோபோக்கள் அறிந்துகொள்ள அவற்றுக்கு இடையே தொடர்பியல் (communication) மிக முக்கியம். இந்தத் துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் ரோபோக்கள் ஃப்ரொபஷனல் டான்ஸர்களாக இன்னும் சில வருடங்கள் ஆகக் கூடும். அதுவரை ஸ்ரேயாவுக்கும், தமன்னாவுக்கும் பதிலாக ரோபோவை ஆட வைத்து விடுவார்களோ என்ற கவலை தேவையில்லை.
http://all-movie-goofs.info/wp-content/uploads/bicentennial-man-movie-still-9.jpg



நன்றி - கல்கி , புலவர் தருமி

Tuesday, March 06, 2012

சுஜாதாவின் வசனம் எழுதும் ஸ்டைல் - ஷங்கர் சிலாகிப்பு பேட்டி

http://www.extramirchi.com/wp-content/uploads/2010/01/Shankar-Rajini-and-Aishwarya-Rai-at-endhiran-the-robot-on-location.jpg

1.  ''எழுத்தாளர் சுஜாதாவுடன் நீங்கள் படத்துக்கு வசனம் அமைக்கும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன். சில சிரமமான சீன்களுக்கு சுஜாதா சார் பளிச் என்று நச் வசனம் பிடித்த உதாரணம் ஏதேனும்? அப்படி சுஜாதா சார் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?''

சி.பி - சுஜாதாவின் நாவல்களில் பஞ்ச் கொடுக்கும் ஹீரோயிசம் செமயா இருக்கும்.. வரலாற்று பின்னணியில்  குமுதத்தில் தொடராக வந்த ரத்தம் ஒரே நிறம் நாவலில் கூட அப்படிப்பட்ட பஞ்ச் ஏகத்துக்கும் இருக்கும்..

 ''நாங்க வெளியூருக்கு கதை டிஸ்கஷன் போறதுக்கு முன்னாடி, 'கதை ஃபுல் லைன் ரெடியா இருக்கா, சுபம் போடற வரைக்கும்?’னு கேட்டுக்குவார். டிஸ்கஷன் ஆரம்பிச்சதும் அவர் அமைதியாக் கவனிப்பார். எந்த வசனமோ, கதையோ, காட்சிகளோ, சொல்ல மாட்டார். கதைப் போக்குல, காட்சிகள்ல ஏதாவது சிக்கல் வந்து முக்கி நிக்கிறப்போ மட்டும், எதனால சிக்கல்னு தெளிவுபடுத்தி, 'இந்த ரூட்ல யோசிங்கம்பார். அப்பப்போ சில படங்களையும் சில காட்சிகளையும் ரெஃபரன்ஸுக்கு சுட்டிக்காட்டுவார்.

தீர்க்க முடியாத பிரச்னை ஏதும் வந்தா, மறுநாள் 'Syd Field, Robert Mckee, இவங்க எல்லாம் ஸ்க்ரீன் ரைட்டிங்ல இந்தந்தப் பிரச்னை வந்தா, இந்தந்த சொல்யூஷன் சொல்லியிருக்காங்க. இதை ஃபாலோ பண்ணுங்கம்பார். டிஸ்கஷன் எங்கேயும் தேங்கித் தடை இல்லாம வேகமாப் போறதுக்கு வழிகாட்டுவார். டிஸ்கஷன் முடிஞ்சதும் சீன் ஒண்ணுல இருந்து சுபம் வரைக்கும் என்னை கேசட்ல விவரிக்கச் சொல்லி வாங்கிட்டுப் போயிடுவார்.
ஒரே வாரத்துல ஃபர்ஸ்ட் ஹாஃப் வசனம் வந்துடும். அடுத்த வாரத்துல செகண்ட் ஹாஃப் வந்துடும். செம ஃபாஸ்ட். டிஸ்கஷன்ல உள்வாங்கின அத்தனை விஷயங்களையும் தான் நினச்சதையும் சேர்த்து நிறையவே எழுதி விளாசிப் பின்னித் தள்ளியிருப்பார். சுஜாதா சார், படிச்சுக் காமிக்கும்போது அவரோட ஒன் லைனர்களை எல்லாம் கை தட்டி ரசிப்பேன். அவர் எழுதினதுல இருந்து என்னென்ன எந்த அளவுக்குத் தேவையோ எடுத்து, எனக்கு எப்படி வேணுமோ அப்படி ஒரு டிராஃப்ட் எழுதி திருப்பி அவர்கிட்ட அனுப்புவேன். அதுல அவர் ஒண்ணு ரெண்டு எக்ஸ்ட்ராவா இருக்கிற வார்த்தைகளை அடிப்பார். அசிஸ்டென்ட் டைப் பண்ணப்ப விட்டுட்ட க், ச், ஞ், சின்ன '’, பெரிய 'பிழைகளைச் சரிபண்ணி அனுப்புவார். இதான் எங்க வொர்க்கிங் ஸ்டைல்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcLqpbDprP2xq0KA8Z5aEOErP1Te8bASJprQCoaGHxgAcL60zrLuIqYk31X1X9viE0IHt9ev3Q8LTpF5WWUVH-_3ITkRV3SeC6L9mszMZ2fQMBMnz8UewyaklmztdMIeVJPbKAKoJCUNcJ/s320/sujatha_OEA_family_3.jpg
'இந்தியன் சந்துரு (கமல்): 'இந்த உலகத்துல இருக்கற எல்லா வழியும் குறுக்கு வழியா மாறிடுச்சு... இது எங்க அப்பாவுக்குப் புரியல!’
'முதல்வன்க்ளைமாக்ஸ்ல ரகுவரன்: இறக்கும்போது சொல்ற, 'That was a good interview...’
'அந்நியன்: 'தப்பு என்ன பனியன் சைஸா? ஸ்மால், மீடியம், லார்ஜ்னு... விளைவுகளோட சைஸைப் பாருங்க... எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்!’
'சிவாஜி ரஜினி சார்: (ஒரு ரூபாயைச் சுண்டி இறந்துகிடக்கும் சுமனின் நெத்தியில் அடித்து) 'இதைக்கூட நீ எடுத்துட்டுப் போக முடியாது...’
'எந்திரன் சிட்டி: 'என்னைப் படைச்சவர் டாக்டர் வசீகரன்... கடவுள் இருக்கார்...’
- இப்படிப் பல சிரமமான காட்சிகள்ல வர்ற விஷயங்களை ஒரே வரில நச்சுனு சொல்றதுல சுஜாதா சார், சுஜாதா சார்தான்!
அவர் எழுதினதுல எனக்குப் பிடிச்சது 'இந்தியன்தாத்தா பேசற, 'மத்த நாடுகள்ல எல்லாம் லஞ்சம் இருக்கு... அங்க எல்லாம் கடமையை மீறுறதுக்குத்தான் லஞ்சம்... இங்கதான் கடமையைச் செய்றதுக்கே லஞ்சம்கிற வசனம்தான்.
மொத்தப் படத்தோட விஷயமும் வீரியமும் இந்த ஒரே வரியில எவ்வளவு அழகா வந்திருக்கு பாருங்க!''


சி.பி - சுஜாதாவின் இழப்பு இலக்கிய உலகுக்கு மட்டும் அல்ல, சினிமா உலகத்துக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.. அவர் இருந்திருந்தா  இன்னும் பல சயின்ஸ் ஃபிக்சன் ஸ்டோரியும், பல நல்ல சினிமாக்களும் வந்திருக்கும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2uKhlyy1iX7zWgP1XSaf2wO__XiY7Sv10AvW7xxTXY2jAr6JvaBt9jbR5XLtUkqCClIyz76Vf_nWi2EyGGiOp-ni52RcmFCObZBwbLaAT3CU0g7hzbEM5lWDMguNMkKr7QuqcS_nOKv8/s320/rajini_kamal_05.jpg
2. ''ஒரே படத்தில் கமலையும் ரஜினியை யும் சேர்த்து இயக்கும் எண்ணம் உண்டா?''

சி.பி - அவருக்கு எண்ணம் ஆசை எல்லாம் இருக்கு.. கமல் ரஜினி கூட ஓக்கே சொல்லிடலாம், ஆனா தியேட்டர்ல ரசிகர்கள் நிலைமை? கண்டிப்பா கலவரம் தான் வரும்.. 

 '' 'சிவாஜிரிலீஸுக்கு அப்புறம் ரஜினி சாரே, 'நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படி இருக்கும்? நான் வேணா கமல்கிட்ட பேசுறேன்னு சொன்னார். 'ரெண்டு பேரும் சேரும்போது வர்ற பெரிய எதிர்பார்ப்பைத் திருப்திப்படுத்துற அளவுக்கும் ரெண்டு பேரும் கன்வின்ஸ் ஆகிற அளவுக்கு சப்ஜெக்ட்டும் அமைஞ்சா பண்ணலாம்னு நான் சொன்னேன். 'எந்திரன் பார்ட் 2’ கதையைக்கூட ரெண்டு பேரையும்வெச்சு சில சமயம் நான் கற்பனை பண்ணிப் பார்த்திருக்கேன்!
பார்ப்போம்... நாளை நமக்கு என்னவெச்சிருக்குனு யாருக்குத் தெரியும்!''


சி.பி - இதுல என்ன கவனிக்க வேண்டியதுன்னா கமலை ஹீரோவா போட்டு ரஜினியை வில்லனா போட்டாக்கூட ரஜினிதான் ஈசியா பேர் சம்பாதிக்கற மாதிரி அசால்ட்டா ஸ்டைலிஸ் ஆக்டிங்க் கொடுத்து அப்ளாஸ் அள்ளுவார்..
3. ''நீங்கள் நன்றாகக் கவிதை எழுது வீர்களாமே? எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க, ப்ளீஸ்...''
 ''அப்படியா... யார் சொன்னா..?!

- இது கவிதையானு பாருங்க!''

சி.பி - இதை எங்க ஊர்ல மொக்கைம்போம்..

4. ''சினிமாவில் ஓர் இடம் தேடித் தவித்த ஐஸ்வர்யா ராயையும் இயக்கி இருக்கிறீர் கள்... இந்தியாவின் அடையாளமாக உருவெடுத்த 'மோஸ்ட் வான்டட் அழகிஐஸ்வர்யா ராய் பச்சனையும் இயக்கி இருக்கிறீர்கள். இரு காலகட்டத்திலும் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன்?''


சி.பி - கேள்வி சுத்தி வளைச்சு என்ன கேட்க வருதுன்னா மேரேஜ்க்கு முன்னால மேரேஜ் ஆன பிற்பாடு ஃபிகர்ட்ட என்ன மாற்றம்கறதை கொஞ்சம் நாகரீகமா, சுத்தி வளைச்சு கேக்குது.. 

 
 '' 'ஜீன்ஸ்அவங்களுக்குக் கிட்டத்தட்ட முதல் படம்தான். முதல் நாள் பாடல் ஷூட்டிங்லயே டான்ஸ் ரொம்பப் பிரமாதமா ஆடினாங்க. சீன்ஸ் எடுக்கும்போது எல்லா வசனங்களையும் முதல் நாளே வாங்கிட்டுப் போய்ப் படிச்சிட்டு வருவாங்க. கஷ்டமான காட்சிகள்ல, நடிச்சுக் காட்டச்சொல்லி அதை அப்படியே ஃபாலோ பண்ணுவாங்க. சில நாள் லேட்டா வரும்போது கோபமா 'ஏன் லேட்டுனு கேட்டா, 'உடம்பு சரியில்ல... காஸ்ட்யூம் சரியில்லனு சொல்வாங்க. 104 டிகிரி ஜுரம் அடிச்சுத் துவண்டு படுத்திருப்பாங்க. 'ஷாட் ரெடின்னா, அதை வெளிக்காட்டிக்காம உடனே கேமரா முன்னாடி அற்புதமா வொர்க் பண்ணிட்டு, 'கட்சொன்னதும் பொத்துனு போய் பெட்ல விழுந்துடுவாங்க.
உலக அதிசயங்கள்ல பாட்டு எடுத்துக்கிட்டு இருக்கோம். ஒரு நாட்டுல ஷூட் முடிச்சு, சாயங்காலம் ஃப்ளைட் பிடிச்சு இன்னொரு நாட்டுக்குப் போகணும். மிஸ் ஆனா மறுநாள் மொத்த ஷூட்டிங்கும் காலி. மொத்த யூனிட்டும் ஏர்போர்ட் போய், எல்லாரோட லக்கேஜ், எக்யூப்மென்ட்ஸ்லாம் கொண்டுவந்து சேர்த்து, கஸ்டம்ஸ், இமிக்ரேஷன்னு புரொடக்ஷன் ஆளுங்க ஒரு பக்கம் குழம்பி அலைஞ்சுக்கிட்டு இருந்தப்போ, ஐஸ்வர்யா ராய் சட்டுனு எல்லாரோட பாஸ்போர்ட், டிக்கெட்லாம் வாங்கிட்டுப்போய் பத்தே நிமிஷத்துல செக் இன், போர்டிங் பாஸ், லக்கேஜ்னு எல்லாத்தையும் ஒரே ஆளா முடிச்சிட்டு வந்து நின்னாங்க. இப்ப நினைச்சுப்பார்த்தாலும், எப்படி ஒரே ஆளா அதெல்லாம் முடிச்சாங்கனு ஆச்சர்யமா இருக்கு!

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன்ல கடைசி நாள் ஷூட்டிங். கடைசி ஷாட் முடிஞ்சதும் என் காலைத் தொட்டு, 'என்னை பிளெஸ் பண்ணுங்கன்னாங்க. 'அய்யோனு நான் அலறி, எகிறி, 'மூணு படம்தான் பண்ணியிருக்கேன்னேன். 'நோ... யூ ஆர் மை டீச்சர்ன்னாங்க.
இன்னைக்கும் அதேதான். 'ஹி இஸ் மை டீச்சர்னுதான் பேட்டிகள்லயும் மேடைகள்ல யும் சொல்றாங்க. ஒரு சீனியரா ரஜினி சார் கிட்ட அவங்க காட்டுற மரியாதை, அவர் கிட்ட இருந்து எடுத்துக்கிற பிளெஸ்ஸிங்ஸ், மச்சுபிச்சுல உடல் முழுக்க சிவப்புச் சிவப்பா, தடிக்கத் தடிக்கப் பூச்சி கடிச்சும், அதை எல்லார்கிட்டயும் காட்டி சீன் போடாம, க்ரீம் போட்டு மூடி நடிச்ச டெடிகேஷன்... இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.
என் திருமண நாள் அன்னைக்கு, என் வீட்டுக்கு ரஜினி சார், ஐஸ்வர்யா ராய், சாபுசிரில், ரத்னவேல், எல்லாரும் வந்திருந்தாங்க. ஒரே அரட்டையும் சிரிப்புமா இருந்தது. சாப்பிட எல்லாரும் தயங்கிட்டு இருந்தப்போ சட்டுனு எழுந்த ஐஸ்வர்யா ராய், குழம்புல கரண்டியைப் போட்டு எல்லாருக்கும் பரிமாற ஆரம்பிச்சுட்டாங்க. சாபுவுக்கு ஆச்சர்யத்தில் பேச்சே வரலை.
ஒரு குடும்பப் பெண்ணா, இந்தியப் பெண்ணா, நடிகையா, உலக அழகியா, எல்லா வகையிலும் முழுமையானவர் ஐஸ்வர்யா ராய். அன்றும் இன்றும் மேலும் பண்பட்டவராக!''


சி.பி - ஷங்கர் உருகறதை பார்த்தா இன்னம் கூட ஒரு படத்துல  அவரை யூச் பண்ற ஐடியா இருக்கும் போல ( ஹீரோயினா நடிக்கவைக்க யூஸ் பண்ற ஐடியாப்ப்பா)

5. ''நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகம்.... ரசித்த சினிமா..?''
 ''லா..ரா. எழுதிய 'அபிதா’.
The Battle of Algiers.''
http://www.behindwoods.com/hindi-tamil-galleries/prabhu-daughter-wedding/Prabhu-07.jpg

6. ''.ஆர்.ரஹ்மானுடனான சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''
''.ஆர்.ரஹ்மான்... நான் சந்தித்தவர்களிலேயே மிகக் கடின உழைப்பாளி. இன்னொரு பக்கம் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி.
என் மகன் அர்ஜித் பிறந்ததுல இருந்து தொடர்ந்து விரல் உடையறது, தாடை உடையறது, உடல்நிலை சரியில்லாமப் போறதுனு என்னென்ன துயரங்கள் உண்டோ... எல்லாத்தையும் அனுபவிச்சுக்கிட்டு இருந்தான். வாரம் ஒரு தடவையாவது டாக்டர்கிட்ட எதுக்காகவாவது அவனை அழைச்சிக்கிட்டுப் போக வேண்டியிருந்தது. ஆறு வயசுலயே எல்லா டாக்டர் களும் மருந்துகளும் அவனுக்கு அத்துப்படி.
இதைக் கேள்விப்பட்ட ரஹ்மான், 'ஷங்கருக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ... பையனை அழைச்சுக்கிட்டு மவுன்ட் ரோடு தர்ஹாவுக்கு வரச் சொல்லுங்கனு அவர் மனைவி மூலமா என் மனைவிகிட்ட சொல்லியிருக்கார். நானும் பையனுக்குச் சரியானாப் போதும்னு போயிருந்தேன். பார்த்தா, ரஹ்மானே அவங்க அம்மாவோட தர்ஹா வுக்கு வந்திருந்தார். என் பையனுக்காக அரை மணி நேரம் ப்ரே பண்ணாங்க. மந்திரிச்சுக் கயிறு எல்லாம் கட்டினாங்க.
எவ்வளவு பிஸியானவர்? எவ்வளவு பேர் அவர் ஸ்டுடியோவில் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபி மானியா சில மணி நேரங்களை அர்ஜித்துக்காகச் செலவழிச்சது என்னை நெகிழவெச்சுக் கண் கலங்க வெச்சிருச்சு.
நம்ப மாட்டீங்க... ஆச்சர்யமான ஆச்சர்யம்! ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடி ஆகிட்டான். 'எப்படி இது சாத்தியம்னுலாம் நான் எந்த ஆராய்ச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்!''


சி.பி - ஹா ஹா அதெல்லாம் ஓக்கே , அந்நியன் படத்துல ஹாரீஸ் ஜெயராஜை மியூசிக் போடச்சொன்னப்போ குமுதத்துல வந்த பேட்டில  என்ன சொன்னீங்க? என்பதை ரீ வைண்ட் செய்யவும் ஹி ஹி  


http://tamilwire.com/images/2008/07/rajini-kamal.jpg