Thursday, October 02, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (2 10 2014 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

யான் (ஆனூர் ,கிருஷ்ணா ,ராயல்,சீனிவாசா) ,தெரியாம உன்னை காதலிச்ட்டேன் (சங்கீதா ) BANG BANG -hindi (VSP,அபிராமி).நான் பொண்ணொன்று கண்டேன்#2


1  யான்
ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாவது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான். அப்படி இயக்குனராக மாறியுள்ளவர்களில் ஒருவர் ரவி கே. சந்திரன். பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் 'யான்'. ஜீவா, துளசி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.


2003ல் 'ஆசை ஆசையாய்' படம் மூலம் நாயகனாக அறிமுகமான ஜீவாவுக்கு அமீர் இயக்கத்தில் வெளிவந்த 'ராம்' படம்தான் சரியான அடையாளத்தைக் கொடுத்தது. அந்தப் படம் அவருக்கு நடிகராக நல்ல திருப்புமுனையைக் கொடுத்தது. அதன் பின் வெளிவந்த 'ஈ, கற்றது தமிழ்' ஆகிய படங்கள் அவரது நடிப்புத் திறமையை நிரூபித்தாலும், கமர்ஷில் வெற்றியாக 'சிவா மனசுல சக்தி, கோ' ஆகிய படங்கள் மட்டும்தான் பெற்றுத் தந்தது.


'நண்பன், என்றென்றும் புன்னகை' படங்களில் மூன்று ஹீரோக்களில் ஒரு ஹீரோவாகத்தான் நடித்திருந்தார். தனிப்பட்ட ஹீரோவாக 'கோ' படத்திற்குப் பிறகு அவர் பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'முகமூடி', கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'நீதானே என் பொன்வசந்தம்' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அதனால் ஜீவா தற்போது 'யான்' படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அதில் ஒரு சென்டிமென்ட்டும் அடங்கியுள்ளது. 'கோ' படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். அதே போல 'யான்' படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள ரவி கே.சந்திரன் இயக்கியுள்ளார். இரண்டுமே ஒரு வார்த்தைப் படங்கள். அதனால் 'கோ' வெற்றி 'யான்' படத்திலும் கிடைக்கும் என்று யாவருமே நம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.


ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாவது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான். அப்படி இயக்குனராக மாறியுள்ளவர்களில் ஒருவர் ரவி கே. சந்திரன். பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் 'யான்'. ஜீவா, துளசி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இன்னும் இரண்டு நாட்களில் இந்தப் படம் வெளியாக உள்ளது.


2003ல் 'ஆசை ஆசையாய்' படம் மூலம் நாயகனாக அறிமுகமான ஜீவாவுக்கு அமீர் இயக்கத்தில் வெளிவந்த 'ராம்' படம்தான் சரியான அடையாளத்தைக் கொடுத்தது. அந்தப் படம் அவருக்கு நடிகராக நல்ல திருப்புமுனையைக் கொடுத்தது. அதன் பின் வெளிவந்த 'ஈ, கற்றது தமிழ்' ஆகிய படங்கள் அவரது நடிப்புத் திறமையை நிரூபித்தாலும், கமர்ஷில் வெற்றியாக 'சிவா மனசுல சக்தி, கோ' ஆகிய படங்கள் மட்டும்தான் பெற்றுத் தந்தது.


'நண்பன், என்றென்றும் புன்னகை' படங்களில் மூன்று ஹீரோக்களில் ஒரு ஹீரோவாகத்தான் நடித்திருந்தார். தனிப்பட்ட ஹீரோவாக 'கோ' படத்திற்குப் பிறகு அவர் பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'முகமூடி', கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'நீதானே என் பொன்வசந்தம்' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அதனால் ஜீவா தற்போது 'யான்' படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அதில் ஒரு சென்டிமென்ட்டும் அடங்கியுள்ளது. 'கோ' படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். அதே போல 'யான்' படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள ரவி கே.சந்திரன் இயக்கியுள்ளார். இரண்டுமே ஒரு வார்த்தைப் படங்கள். அதனால் 'கோ' வெற்றி 'யான்' படத்திலும் கிடைக்கும் என்று யாவருமே நம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

- See more at: http://cinema.dinamalar.com/tamil-news/22452/cinema/Kollywood/Will-Yaan-give-victory-to-Jeeva.htm#sthash.oLIGaYkH.dpuf
 2 நான் பொன்னொன்று கண்டேன்.’


போரஸ் சினிமாஸ் பிரேம் கல்லாட், பிரின்ஸ் கல்லாட் தயாரிப்பில் சஞ்சீவ் சீனிவாஸ் இயக்கத்தில் அழகர் பொன்ராஜ் இசையமைத்திருக்கும் படம் ‘நான் பொன்னொன்று கண்டேன்.’
புதுமுகங்கள் அஸ்வின் ராஜ், அனாமிகா, யுக்தி வேல், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கதைச்சுருக்கம்
கதையின் நாயகன் தோற்றத்தால் ஒரு கள்ளிச்செடி குணத்தால் முல்லைக்கொடி.  அன்பு காட்டுவதில் அவன் தனி, அடிதடி செய்வது அவன் பணி, யார் வந்து கேட்டாலும் உதவி செய்வது அவனது குணம். பேருந்து நிலையம் அவனது தாய்வீடு. அவனை பிள்ளை என்றது ஊர். எனக்கும் அவன் ஒரு பிள்ளை என்று வளர்த்தான் ஒரு தாதா. நாயகி முள் தோட்டத்தில் பூத்த பனிரோஜா. நாயகனை ஈர்த்தது அவள் அழகு. இரண்டறக் கலந்தது அவன் மனசு.அவனது இதயக் கோயிலில் அவளைக் குழந்தையாக்கி, தாயாக்கி, தெய்வமாக்கி தினமும் கொண்டாடி வந்தான். அவளோ அவனது திருமுகம் பாராமலேயே திசைகளை அளந்து கொண்டிருந்தாள்.
அவனது, அந்தக் காதல் சொல்லப்பட்டதா? சொல்லாமலே கொல்லப்பட்டதா? என்பதே இப்படத்தின் கதை.
கதைக்களம்
படத்தில் பேருந்து நிலையம் ஒரு பின்னணியாக மட்டுமல்ல ஒரு கதாபாத்திரம் போலவே வருகிறது. நாள் தோறும் பேருந்து நிலையம் வந்து கடந்து போவது ஏராளமான பயணிகள் மட்டும்தானா? பேருந்து நிலையத்துக்குள் நடக்கும் இருட்டு உலகம் பலரும் அறியாதது. ஊர் உறங்கிய நேரத்தில் அங்கு பாலியல் தொழில், போதை மருந்து விற்பனை, திருட்டு என ஒரு நிழல் உலகம் விரிகிறது. வெளியே இருள் குவியும் நேரத்தில் அங்கு ஒரு கறுப்பு பொழுது விடிகிறது.
கட்ட பஞ்சாயத்து என்கிற பெயரில் கல்லாக்கட்டும் கூட்டம், பாலியல் தொழில், சுரண்டல்கள் என அனைத்தையும் வேடிக்கை பார்த்து உள்வாங்கிக் கொண்டு மௌன சாட்சியாக விளங்குகிற பேருந்து நிலையம்,படத்தில்  ஒரு கதாபாத்திரம் போலவே வருகிறது.அதை இப்படத்தில் அழகாகக் காட்டியுள்ளார் இயக்குநர் சஞ்சீவ் சீனிவாஸ் .
இசை மற்றும் பாடல்கள்
நான் பொண்ணொன்று கண்டேன் படத்திற்கு அழகர் பொன்ராஜ் இசையமைத்துள்ளார். மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
  • புரட்சித்தலைவரடா…. பாடலை கிருதியா எழுத சாம் பாடியிருக்கிறார்
  • இது என்ன மயக்கம்…. பாடலை நலங்கிள்ளி எழுத பென்னி ஜான் பாடியிருக்கிறார்
  • மாயா வனமோ…சாயா வனமே… பாடலை கிருதியா எழுத ஹாரிஸ் ராகவேந்திரா பாடியிருக்கிறார்
  • ஒத்தயா..ரெட்டயா.. பாடலை கிருதியா எழுத சங்கீதா பாடியிருக்கிறார்
  • அடிய என்ன விறகா…. பாடலை கிருதியா எழுத S.P.B.சரண் பாடியிருக்கிறார்
இயக்குனர் சஞ்சீவ் சீனிவாஸ் பற்றி
இவர் பிரபுதேவாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.  சிவசங்கர், லாரன்ஸ் போன்றவர்களிடமும் உதவி நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர்.
நடிகர்கள்
நாயகன் அஸ்வின்ராஜ் மாநிலக் கல்லூரியில் எம்.ஏ.படித்தவர். தடகள வீரர். மாநில அளவில் சாம்பியன்.
நாயகி அனாமிகா மிஸ் போபால், மிஸ்மத்தியப் பிரதேசம் பட்டங்கள் வென்றவர்.
வில்லன் யுக்திவேல்,  ‘பேயக்கா’ மீனா,  தேனிமுருகன், காதல் காமாட்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் சில துளிகள்
  • படத்தில் பேயக்கா என்கிற பெண்தாதா வருகிறார். சொர்ணாக்காவுக்குப்பின் இந்த பேயக்கா பேசப்படுவார்.
  • படத்தில் கஸ்தூரி ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் நட்புக்காக ஆடியுள்ளார்.
  • மொத்தம் 5 பாடல்களில் எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் ‘புரட்சித்தலைவரடா’ பாடல் பட்டையைக் கிளப்பப் போகிறது.
  • படத்தில் வரும் முக்கால் மணி நேரத் துரத்தல் காட்சி பேசப்படும் .
  • தேனி, கம்பம், மூணாறு, உசிலம்பட்டி, தேக்கடி, சென்னை,கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
இசை : அழகர் பொன்ராஜ்
பாடல்கள்: டாக்டர் கிருதியா, நலங்கிள்ளி
ஒளிப்பதிவு : சபீர் அலிகான்
ஸ்டண்ட்: ஜேசுதாஸ்
கலை: ஆனந்த்
தயாரிப்பு நிர்வாகம் :முருகேசன், கோபால்
மக்கள் தொடர்பு: S.செல்வரகு
தயாரிப்பு:
பிரேம் கல்லாட், பிரின்ஸ் கல்லாட்.
கதை, திரைக்கதை, வசனம் ,நடனம்,இயக்கம்:
சஞ்சீவ் சீனிவாஸ்
 
 
 3  தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்'.
பிரபல தொழிலதிபரும் 'வசந்த் அண்ட் கோ' நிறுவன உரிமையாளரும், வசந்த் தொலைக்காட்சி அதிபருமான எச்.வசந்தகுமாரின் இளைய மகன் வி.வினோத்குமார். இவர் இப்போது படத் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். தன்னுடைய 'டிரிப்புள் வி ரெக்கார்ட்ஸ்' (Triple V Records) என்ற  நிறுவனத்தின் மூலம் இவர் தயாரிக்கும் முதல் படம் 'தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்'. கே.ராமு இயக்கும் இப்படத்தின் கதாநாயகனாக வசந்த் விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக ரஸா நடிக்கிறார். ஸ்ரீநாத் இசையமைக்க, எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார்.



4 BANG  BANG

Bang Bang is the most anticipated film of the year so far. Starring Hrithik Roshan and Katrina Kaif, the film is a remake of the hit Hollywood film 'Knight And Day' that starred Tom Cruise and Cameron Diaz. Fox Star Studios has produced Bang Bang for a whopping budget of Rs. 140 crore (including Prints & Advertising). Bang Bang boasts of some high octane stunts never seen before in Bollywood and the cost incurred on it seems to be justified as these shots have become the most talked about scenes from the film. We decode why the most-awaited film of 2014 wouldn't be the same if it was made with a lesser budget.


THANX - ALL CINEMA MAGAZINES  DINAMALAR DINAMANI

0 comments: