Tuesday, October 07, 2014

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது ஏன்?

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெ.,வுக்கு இன்று மதியம் ஜாமின் கிடைத்தததாக தகவல் பரவியது. ஆனால் நீதிபதி தனது உத்தரவில் திடீர் அதிரடியாக ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமின் வழங்க முடியாது என தனது உத்தரவை பிறப்பித்தார்.

இன்று பரபரப்பான விவாதம் காலை முதல் நடந்து கொண்டிருந்தது. காலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெ.,வுக்கு நிபந்தனை ஜாமின் வழங்குவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக அனைத்து வக்கீல்களும், கோர்ட்டுக்கு வெளியே வந்து கூறினர். இதனையடுத்து இந்த செய்தி அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. பல மீடியாக்களிலும் ஜாமின் வழங்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அ,தி.மு.,கவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பல இடங்களில் இனிப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து சில நிமிடங்களில் நீதிபதி சந்திரசேகராவின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார், இந்த உத்தரவில் அரசு தரப்பு வழக்கறிஞர் நோ அப்ஜக்ட் செய்தாலும் , குற்றவாளிகளை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட்டுக்கு விருப்பமில்லை. அரசு வக்கீல் நிலை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஜெ., உள்ளிட்ட 4 பேரும் பெரும் ஊழல் குற்றம் புரிந்துள்ளனர். லாலுகூட பல நாட்கள் சிறையில் இருந்து தான் ஜாமின் வழங்கப்பட்டது. மனித உரிமைகளுக்கு ஊழல் எதிரானது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. இவர்களுக்கு கருணை காட்ட முடியாது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

சாதாரண குற்றவாளிகள் அல்ல: நீதிபதி சந்திரசேகரா தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:



கைதிகளை வெளியிட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என்று முதலில் கூறிய அரசு வக்கீல் திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டது வேடிக்கையாக உள்ளது. இதில் இருந்தே இது உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது. இந்த வழக்கில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. நீதிபதி குன்ஹா தெளிவான தீர்ப்பளித்துள்ளார். ஊழல் என்பது பொருளாதாரத்தை முடக்கும் குற்றம் ஆகும். இவர்கள் சாதாரண குற்றவாளிகள் அல்ல. இது போன்ற குற்றவாளிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் பல வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அவசரமாக ஜாமின் வழங்க வேண்டிய அவசியமில்லை. மேலும் ஜாமின் வழங்குவதற்கு உரிய முகாந்திரம் ஏதும் இல்லை. லாலு பிரசாத் பல மாதங்கள் சிறையில் இருந்த பின்னரே சுப்ரீம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். இதனால் இவர்களை ஜாமினில் விடுவிக்க முடியாது . இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். 




thanx -dinamalar 

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அவருடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும், ஜெயலலிதாவின் தண்டனைக்கு ரத்துக் கோரும் மனுவையும் கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதனையடுத்து, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். | விரிவாக படிக்க: உச்ச நீதிமன்றத்தை புதன்கிழமை நாடுகிறார் ஜெயலலிதா
தீர்ப்பு விபரம்:
நீதிபதி சந்திரசேகர் நீண்ட தீர்ப்பு வழங்கினார். அதில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை அவ்வளவு எளிதில் வெளியில் விடமுடியாது என்றும் இதற்கு முன்பு நடைபெற்ற ஊழல் வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட எவ்வித சாத்தியக் கூறுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
ஊழல் குற்றம் மனித உரிமைகளுக்கு எதிரானது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதாலும் இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க முகாந்தரம் இல்லை என நீதிபதி கூறினார்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
குழப்பம் ஏன்?
இதனிடையே, தீர்ப்பு விவரம் முழுமையாக வெளிவருவதற்கு முன்பே ஊடகங்களில் 'ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்' என தவறான செய்திகள் வெளியானது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதிகாரப்பூர்வ செய்தி வெளியானதும் கடும் அதிருப்தி அடைந்தனர். | படிக்க: ஜெயலலிதா ஜாமீன் வழக்குத் தீர்ப்பு: ஊடகச் செய்திகளில் குழப்பம் ஏன்?
செவ்வாய்க்கிழமை காலை 11.50 மணியளவில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கியது. பிற்பகல் 3.35 மணியளவில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி’குன்ஹா ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் தலா 4 ஆண்டு காலம் சிறையும், ரூ.10 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். அன்றைய தினமே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை பெங்களூரில் நடைபெற்றது. விசாரணையை முன்னிட்டு பெங்களூரின் சில முக்கியப் பகுதி களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முதல் மனுவாக ஏற்க மறுப்பு:
முன்னதாக, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்கக் கோரப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மனுவை முதலில் விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். ஜெயலலிதா மனுவை அவசர மனுவாக கருதி முதல் மனுவாக விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் ராம் ஜெத்மலானி கோரிக்கை விடுத்தார். ஆனால், மனுவை வரிசைப்படியே விசாரிக்க முடியும் என நீதிபதி சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துவிட்டார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு வரிசை எண் படி 73-வது வழக்காக விசாரணைக்கு வந்தது.
ராம் ஜெத்மலானி வாதம்:
ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி ராம் ஜெத்மலானி வாதிட்டார்.சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த அப்பீல் மனு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள சில தீர்ப்புகளை ஜெத்மலானி மேற்கோள்காட்டி வாதிட்டார். கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி வாதடினார்.
பவானி சிங் வாதம்:
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து எதிர் மனு தாக்கல் செய்த அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.
'ஜெயலலிதா தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக‌ இருக்கிறார்.அவரை ஜாமீனில் விடுவித்தால் இவ்வழக்கின் போக்கை மாற்றவும், தண்டனையில் இருந்து தப்பிக்கவும் முயற்சி செய்வார். மேலும், அவர் தலைமறைவாகி விடவோ, வேறு நாடுகளுக்கு தப்பி செல்லவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது'' என அவர் தெரிவித்தார்.
ஜெத்மலானி பதில்:
அதற்கு பதிலளித்த ராம் ஜெத்மலானி, "ஜெயலலிதா எப்போதும் சட்டத்தை மதித்து நடப்பவர், எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க மாட்டார்" என்றார்.
விசாரணை ஒத்திவைப்பு:
ஜெயலலிதா ஜாமீன் மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி வாதம் ஒரு மணி நேரம் வாதிட்டார். வழக்கறிஞர் பவானி சிங்கும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தனது வாதத்தை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டன. தொடர்ந்து சசிகலா, இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்தனர்.
மீண்டும் விசாரணை:
உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு ஜாமீன் மனு மீதான வாதம் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மீண்டும் 2.30 மணிக்கு வாதம் தொடங்கியது. சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 3.35 மணியளவில் ஜெயலலிதா உள்ளிட்டோர் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
ஜாமீன் மனு:
கடந்த 29-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த 1-ம் தேதி விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா, இவ்வழக்கை வழக்கமான நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டார். 




thanx - the hindu

0 comments: