Monday, August 13, 2012

டெசோவுக்குப்போட்டியாக ஜெ மாநாடா? கலைஞர் அதிர்ச்சி!!

கலைஞரின் டெசோ மாநாடு பிரம்மாண்டமான வெற்றின்னு சொன்னாரு.

. யார் சொன்னது?

 கலைஞரே தான் சொன்னாரு.. ( நன்றி - தளபதி வசனகர்த்தா)

தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் நடத்திய டெசோ மாநாட்டை தோற்கடிக்கும் வகையில் சென்னையில்  வலைப்பதிவர்கள் மாநாடு நடக்க இருக்கு..( ஆனா வை கோ மாதிரி நடக்க எல்லாம் மாட்டாங்க )


இது குறித்து ஆல்ரெடி வலை உலகில் உள்ள முக்கிய முக்காத எல்லா பதிவர்களும் போஸ்ட் போட்டுட்டாங்க.. நான் மட்டும் போடாம விட்டா கொலை பண்ணிடுவாங்க.. அதனால என் பங்குக்கு நானும் ஒண்ணு போட்டுக்கறேன்.. என்னை போடுமாறு மிரட்டிய அந்த 4 பேருக்கு நன்றி!

 இது ஒரு காக்டெயில் பதிவு.. கலக்கல் பதிவு.. அதாவது இதுவரை சென்னை பதிவர் சந்திப்பு பற்றி பலர் போட்ட பதிவில் கொஞ்சம் கொஞ்சம் சுட்டு டிங்கர் பட்டி ஒட்டி போடப்படும் பதிவு.. ஹி ஹி ( நாம எந்தக்காலத்துல சொந்தமா பதிவு போட்டிருக்கோம்?)


மிழில் ப்ளாக் எழுதுவோரில் மிக அதிக ப்ளாகர்கள் இருப்பது தமிழகத் தலைநகரம் சென்னையில் தான் ! (300- க்கும் மேற்பட்ட பதிவர்கள் சென்னையில் உள்ளதாக டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் தெரிவிக்கிறார்). பதிவர்களை தவிர்த்து ஏராள பிரபலங்கள் (VIP's) உள்ள இடமும் கூட ! இத்தனை சிறப்பான ஊரில் இதுவரை பெரிய பதிவர் திருவிழா பல்வேறு காரணங்களால் நடத்த முடியாமல் இருந்தது. அந்த குறையைப் போக்கும் வண்ணம் மாபெரும் பதிவர் திருவிழா ஆகஸ்ட் 26- நடக்க உள்ளது.

இதோ விழாவிற்கான அழைப்பிதழ்




அழைப்பிதழை காணும் போதே சென்னை மட்டுமல்லாது கோயம்பத்தூர், மதுரை. ஈரோடு, திருவள்ளூர், புதுக்கோட்டை என தமிழகத்தின் பல்வேறு ஊரில் இருக்கும் பதிவர்களும், விழாவில் முக்கிய பணிகளை செய்ய உள்ளது தெளிவாகும். இது எந்த குறிப்பிட்ட அணியும் இல்லாது பதிவர்கள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து நடத்தும் விழா.

விழா அழைப்பிதழை நேற்று ஒரே நாளில் இருபதுக்கும் மேற்பட்ட பதிவர்கள், தனி பதிவாக வெளியிட்டு தங்கள் ஒற்றுமையை காட்டினர்.
 
 
 

விழா குறித்தான சில கேள்விகளும் விளக்கங்களும் இதோ

சென்னை வாழ் பதிவர்கள் செய்ய வேண்டியது என்ன?

விழாவிற்கு நீங்கள் உங்களின் பதிவர் நண்பர்களுடன் அவசியம் வருவதே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல் ! உங்கள் வருகையை ஈ மெயில் மூலம் உறுதிப்படுத்தினால் அது மிக உதவியாய் இருக்கும்.

மேலும் விழா முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்க ஒவ்வொரு வார இறுதியிலும் நண்பர்கள் டிஸ்கவரி புக் பேலஸில் கூடுகிறார்கள். ஆகஸ்ட் 26- ஞாயிறுக்கு முன் உள்ள இரண்டு வார இறுதிகளிலும் சந்திப்பு இருக்கும். உங்களால் முடிந்தால் அவசியம் நீங்கள் வந்து இவற்றில் உங்கள் யோசனைகளை சொல்லலாம். நீங்களும் சில பொறுப்புகள் எடுத்து கொள்ளலாம்.

வெளியூர் பதிவர்கள் என்ன செய்ய வேண்டும்?

விழாவுக்கான தேதி முடிவான உடனே, பல்வேறு வெளியூர் பதிவர்களும் பயணத்துக்கான டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்து விட்டனர். உங்களின் பயண டிக்கெட்டை நீங்கள் உடனே புக் செய்யவும்.

உணவு ஏற்பாடு மற்றும் நீங்கள் தங்குவதற்கு அறை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ய உங்கள் வருகையை உறுதிபடுத்தும் தகவல் மிக மிக அவசியம் ! பல்வேறு பணிகளுக்கிடையில் விழாவை சிறப்புற நடத்த முயலும் நமது நண்பர்களுக்கு நீங்கள் வருகிற மகிழ்வான தகவலை விரைவில் சேர்ப்பியுங்கள் !

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மூத்த பதிவர்களுக்கு ...

தற்போது பதிவெழுதி வரும் அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த பதிவர்களை பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு விழாவில் உள்ளது.

உங்களுக்கு தெரிந்த அத்தகைய மூத்த பதிவர்களை எங்களுக்கு தெரிவியுங்கள். மூத்த பதிவர்கள் தாங்களாகவும் எங்களுக்கு எழுதலாம்

மூத்த பதிவர்கள் அவசியம் கலந்து கொண்டு எங்கள் அன்பை ஏற்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

விழாவில் கலந்து கொள்ளும் கவிஞர்கள் செய்ய வேண்டியது என்ன? 

விழாவின் முக்கிய நிகழ்வாக நடக்கும் கவியரங்கில் பங்கெடுக்க விரும்பும் கவிஞர்கள் தங்கள் பெயரை விழா குழுவினருக்கு மெயில் மூலம் தெரிவிக்கவும். ஆகஸ்ட் 18-க்குள் கவியரங்கில் பங்கெடுக்க விருப்பமுள்ள நண்பர்கள் தங்கள் பெயரை பதிவு செய்தால் மிக உதவியாய் இருக்கும். கவியரங்கில் பங்கெடுக்கும் கவிஞர்கள் முழுமையான பட்டியல் நண்பர்கள் வெளியிடுவர்.

விழாவில் சாப்பாடு உண்டா?

அனைவருக்கும் மதிய சாப்பாட்டிற்கும், விழா நடுவே ஸ்நாக்ஸ் மற்றும் தேநீருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவர் நண்பர் ஒருவரின் சமையல் காட்டரிங் மூலமே இந்த ஏற்பாடுகள் நடப்பது கூடுதல் மகிழ்ச்சி

விழாவில் கலந்து கொள்ள கட்டணம் உண்டா?

ஷங்கர் படம் போல பிரம்மாண்டமாய் விழா தயார் ஆகிறது. எனவே பங்களிப்பு தர விரும்பும் சென்னை நண்பர்கள்/ பதிவர்கள் விழா குழுவினரை மெயில் அல்லது தொலை பேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பங்களிப்பை செலுத்தலாம். 
 
 
 
நிகழ்ச்சி பற்றிய குறிப்பு:

தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா

நாள் : ஆகஸ்ட் 26, 2012 - ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: ​​புண்ணியக்கோட்டி திருமண மண்டபம், ​1, சக்ரபாணி தெரு விரிவு, மேற்கு மாம்பலம், சென்னை 


விழா நடக்கும் மண்டபம் வருவது எப்படி?

இந்த மண்டபம் கோடம்பாக்கம் மற்றும் மாம்பலம் இரண்டு ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் நடுவில் உள்ளது. நீங்கள் தி.நகரில் இருந்து வந்தாலும், கோடம்பாக்கத்தில் இருந்து வந்தாலும் 12C என்கிற பேருந்து ஐந்து விளக்கு நிறுத்தம் அருகே வரும். இந்த பேருந்தில் வந்தால் அருகே இறங்கி எளிதில் மண்டபம் அடையலாம்.

நீங்கள் ரயிலில் வந்தால் கோடம்பாக்கம் அல்லது மாம்பலம் வந்து, பின் இந்த மண்டபத்தை அடையலாம்.

இரு சக்கர/ நான்கு சக்கர வாகனத்தில் கோடம்பாக்கத்தில் இருந்து நீங்கள் வந்தால்:

லிபர்டி திரை அரங்கம்/ ராகவேந்திர கல்யாண மண்டபம் தாண்டி நேரே வரவேண்டும். இங்கு வந்த பிறகு ஐந்து விளக்கு ( Five Lights) என்று கேட்டால், யாருமே எளிதில் அடையாளம் காட்டுவார்கள். ஐந்து விளக்கு அருகில் வந்து  நின்றாலே, புண்ணியகோட்டி மண்டபம் தெரியும்.

தி. நகர்/ மாம்பலத்தில் இருந்து நீங்கள் வந்தால்

மேற்கு மாம்பலத்தில் இருந்து கோடம்பாக்கம் செல்கிற ரோடில் வந்து ஐந்து விளக்கை எளிதில் அடையலாம். பின் மண்டபம் எங்கு என எளிதில் விசாரிக்கலாம்.

பங்கு பெறுதல் குறித்த உறுதிபடுத்தும் தகவல் யாரிடம் சொல்வது?

இந்த விழாவில் நீங்கள் பங்குபெறுவது குறித்த உறுதிபடுத்தலை கீழ்காணும் நண்பர்களில் யாருக்கு வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்:

மதுமதி : [email protected]
பாலகணேஷ் [email protected]
மோகன் குமார் [email protected]
மெட்ராஸ்பவன் சிவகுமார்: [email protected]

அல்லது கீழ்க்காணும் நண்பர்களை தொலை பேசியில் அழைத்தும் உங்கள் வருகையை உறுதிபடுத்தலாம்:

உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
மதுமதி 98941 24021
பாலகணேஷ் 73058 36166
ஜெயகுமார் 90949 69686

பெண் பதிவர்கள் தங்கள் வருகையை சக பெண் பதிவர் சசிகலாவிடம் 9941061575 என்கிற அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டு . தெரிவிக்கலாம். உங்களுக்கான தங்கும் அறை உள்ளிட்ட உதவிகளை சசிகலா அவர்கள் செய்து உதவுவார். பெண்கள் தங்குமிடம் மற்றும் இதர வசதிகள் செய்து தர பெண் பதிவரை தொடர்பு கொள்வது அவர்களுக்கு சற்று எளிதாய் இருக்கும் என நினைக்கிறோம்.

பதிவர்களை ஈர்க்க ஏதேனும் சில விஷயங்கள் அரங்கில் இருக்கிறதா?

நிச்சயம் இருக்கின்றன. ஒன்று மட்டும் இப்போதைக்கு சொல்கிறோம்

டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அரங்கில் புத்தக கடை வைக்கிறார். அதில் பதிவர்கள் விரும்பும் அனைத்து புத்தகங்களும் 10 % கழிவில் கிடைக்கும். உங்களுக்கு குறிப்பிட்ட சில புத்தகங்கள் வேண்டுமெனில் வேடியப்பனை தொடர்பு கொண்டு சொன்னால் அந்த புத்தகங்கள் அவர் அரங்கிற்கு எடுத்து வந்து விடுவார்.
***
பல புதிய நண்பர்களை சந்திக்க, கிண்டலடிக்க, கேள்வி கேட்க, மனம் விட்டு சிரிக்க இதை விட மிகச் சிறந்த வாய்ப்பு கிட்டாது.

உங்கள் கல்லூரி காலத்தில் நடந்த விழா போல் கலகலப்பாய் நடக்க உள்ளது இவ்விழா.

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத நாளாக, இனி சென்னையில் நடக்கவுள்ள பிற பிரம்மாண்ட பதிவர் விழாக்களுக்கு துவக்கமாக இருக்க போகிறது இந்த விழா.

அவசியம் வாருங்கள். சந்திப்போம் ! பேசி மகிழ்வோம் !




          சந்திப்பில் கலந்து கொள்ளும் தோழமைகளும் கொடுக்கப்பட்டிருக்கும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.ஏனென்றால் மற்ற ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாயிருக்கும்.

இதுவரை சந்திப்பிற்கு வருவதாய் இசைந்திருக்கும் பதிவர்கள்:



ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை

அகரன்(பெரியார் தளம்) சென்னை
கணக்காயர்,சென்னை  
ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை

போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்)
சென்னை
ராசின்(நதிகள்) சென்னை 

புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை  


ராஜா(என் ராஜபாட்டை)  பூம்புகார்
நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி

       இவர்கள் மட்டுமல்லாது துபாய்  வலைப்பதிவர்கள் சார்பாக மகேந்திரன்(வசந்த மண்டபம்)   அவர்களும்  சிங்கப்பூரிலிருந்து எழுதும் தமிழ் வலைப்பதிவர்களின் சார்பாக சத்ரியன்(மனவிழி) வர்களும் வர இசைந்திருக்கிறார்கள்...
 
 
 
இனி வர ஓக்கே சொல்பவர்கள் பெயர் பிறகு அப்டேட் செய்யப்படும்
 
 
 நன்றி - மதுமதி, வீடு திரும்பல் மோகன் குமார்

6 comments:

சென்னை பித்தன் said...

சிபி-செபி சந்திப்பு ஒரு வரலாற்று நிகழ்வு!

பட்டிகாட்டான் Jey said...

செந்தில், அனைத்து தகவல்களும், கோர்வையாக தொகுத்து பதிவிட்டிருக்கிறீர்கள். நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

நன்றி நண்பரே! வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?

http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html

Kathiravan Rathinavel said...

கலக்கறிங்க போங்க, உங்களை மாதிரி அழைக்க உங்களால மட்டும்தான் முடியும்

Admin said...

உங்களுக்கே உரிய பாணியில் (தலைப்பே பரபரப்பா...)இருக்கு.அழகாக தொகுத்துள்ளீர்கள்..

கும்மாச்சி said...

பதிவர்கள் சந்திப்பு சிறப்புற வாழ்த்துகள்.